Monday, May 18, 2020

நீண்டகாலப்_பயிர்கள்_நடும்_பொழுது_கவனிக்கவேண்டிய_முக்கிய_இடைவெளிகளின்_அளவீடுகள்



☘️ #வாழை_மரம் 8 × 8

☘️ #தென்னை_மரம்  24 × 24

☘️ #பப்பாளி_மரம்  7 × 7

☘️ #மாமரம்_உயர்_ரகம். 30 × 30

☘️ #மாமரம்_சிறிய_ரகம் 15 × 15

☘️ #பலா_மரம்  22 × 22

☘️ #கொய்யா_மரம்  14 × 14

☘️ #மாதுளை_மரம்  9 × 9

☘️ #சப்போட்டா_மரம். 24 × 24

☘️ #அன்ன_மீனா_மரம். 10 × 10

☘️ #தோடை_மரம். 15 × 15

☘️ #எலுமிச்சை_மரம்  14 × 14

☘️ #திராட்சை.  9 × 6

☘️ #நெல்லி_மரம்  14 × 14

☘️ #முந்திரிகை_மரம். 14 × 14

☘️ #கறிவேப்பிலை_மரம். 7 × 8

☘️ #முருங்கை_மரம்.  12 × 12

☘️ #கராம்பு_மரம்.  18 × 18

☘️ #கறுவா_மரம்.  10 × 10

☘️ #கோபி_மரம்.  7 × 7

☘️ #கொக்கோ_மரம்.  24 × 24

☘️ #வேப்பமரம். 15 × 15

☘️ #பனைமரம். 10 × 10

☘️ #கமுகுமரம்.  7 × 7

☘️ #தேக்கு_மரம் 10 × 10

☘️ #மலைவேம்பு_மரம்.  10 × 10

☘️ #சந்தன_மரம். 15 × 15

☘️ #நாவல்_மரம்.  30 × 30

☘️ #கற்றாழை   1.5  × 2

இந்த அளவீடுகள் குறையாது கட்டாயம் இருக்க வேண்டிய அடி அளவுகள் ஆகும்

இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது

இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும்
இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும்

மர தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.

நீண்டு வளர்ந்தாலும் இதன் கேள்வி குறைவாகவே இருக்கும்

இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும்
மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.

நீங்கள் மட்டுமன்றி அனைவரும் இதுபோன்ற தகவல்களை அறிந்து கொள்ள உதவும்


Saturday, May 9, 2020

40_வகை_கீரைகளும் .. அதன் முக்கிய மருத்துவ பயன்களும்...



🌿 அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

🌿 காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

🌿 சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

🌿 பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.

🌿 கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

🌿 மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

🌿 குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

🌿 அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.

🌿 புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

🌿 பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

🌿 பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

🌿 பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

🌿 சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

🌿 வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.

🌿 முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

🌿 வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.

🌿 முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

🌿 புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.

🌿 புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

🌿 நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.

🌿 தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்.

🌿 முரங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.

🌿 முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.

🌿 பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

🌿 புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

🌿 மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

🌿 மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

🌿 முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

🌿 சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.

🌿 வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

🌿 தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

🌿 தவசிக்கீரை - இருமலை போக்கும்.

🌿 சாணக்கீரை - காயம் ஆற்றும்.

🌿 வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.

🌿 விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.

🌿 கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.

🌿 துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.

🌿 துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

🌿 காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

🌿 மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்.

🌿 நருதாளிகீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்....

#வாழ்க_நலமுடன் ....

Thursday, May 7, 2020

காலையில் இதை மட்டும் செய்யுங்க.. உங்க வீட்டில் பண மழை கொட்டும்..!!

அதிகாலையில் எழுங்கள், உடலும் மனமும் உற்சாகமாகும், அப்படி எழுவதனால், நேரம் போதவில்லை என்று பரபரப்பாக அலுவலகத்துக்கோ, பள்ளி கல்லூரிக்கோ செல்லும் வீட்டின் அங்கத்தினர்கள் அங்கலாய்க்கும், காலை நேர அவசரத்துக்கு, நிரந்தர தீர்வு அளிக்கமுடியும். இதுபோல, நிறைய அவ்வப்போது, கேட்டும் கடந்தும் வந்திருப்போம். கேட்கும்போது, மிகவும் ஆர்வமாகக்கேட்டுக்கொண்டு, மறுநாள் பார்த்தால், அதே பரபரப்பு, அதே லேட், அதே கெஞ்சல், ஏன் இந்த நிலை? காலையில் எழுவது என்ன அத்தனை கடினமா? ஏன் எழ முடியவில்லை, அதிகாலையில்? நேரந்தவறாமை என்பது, நாம் பேணிக்காக்க வேண்டிய பெருஞ்செல்வங்களுள் ஒன்று என்பதை மறந்து போனோம், பெரும்பாலான நிறுவனங்கள், ஊழியர்களின் நேரந்தவறாமையை, உயரிய குணங்களாகப் பார்க்கின்றன, அவர்கள் நேரம் தவறுவதை, கடுமையாக எடுத்துக்கொள்கின்றன. நம் முன்னோர்களும் நேரத்தின் அவசியத்தை உணர்த்தி, பல வகைகளில் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள், ஆயினும் நம்மால் கடைபிடிக்கமுடியவில்லை, விளைவு? பலவித பாதிப்புகள் நோய்கள் காலையில் எத்தனை மணிக்கு எழ வேண்டும்? வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் குடும்பத்தலைவி அல்லது தலைவர் ஆனாலும், வீட்டு வேலைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதிகாலையில் துயில் எழுவது, சிறப்பாகும். இதனால் பலவித அற்புதங்கள் உங்கள் உடலுக்கு நிகழ்கின்றன அதிகாலை என்பது எந்த நேரம்? அதிகாலை என்பது 4 மணியில் தொடங்குகிறது. நம்மில் சிலரின் அதிகாலை என்பது, ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை என்று இப்போது சொல்வது ஃபேஷனாகிவிட்டது. அப்போது நள்ளிரவு பனிரெண்டு மணியை, என்ன சொல்வார்கள்? இரவு என்றா?, இப்படித்தான் மாறிப்போய்விட்டது, இன்றைய வாழ்வியல் முறைகள். இரவில் முழிப்பு : எல்லோரும் இரவில் நீண்ட நேரம் கண்விழித்து இருக்கவே விரும்புகிறார்கள், காலையில் எட்டு மணிக்கு ஒரு இடத்துக்கு செல்லவேண்டும் என்றால்கூட, பனிரெண்டு அல்லது ஒரு மணி வரை இணைய உலாவலோ, டிவியில் திரைப்படமோ அல்லது ஏதோ ஒன்றைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிறகு அலாரம் அடித்து அடித்து ஓயும் ஏழு மணிக்கு மேல் எழுந்து, அவசரமாக குளித்தும் குளிக்காமலும், உடுத்தியும் உடுத்தாமலும், லேட்டாகிவிட்டது என்று ஓடுவார்கள். மாலை அதைப்பற்றி, என்ன வழக்கம்போல, டோஸ் விட்டாரு பாஸ் என்று பெருமையுடன் பேசிக்கொள்வரே ஒழிய, தாம் தாமதமாக எழுந்ததனால்தான், இந்தத் திட்டு, என்ற உணர்வு சிறிதும் இருக்காது, அவர்களின் பேச்சில். மீண்டும் அதேதான்ம தொடர்கதையாகும். எதனால் இப்படி நடக்கிறது? ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? குழந்தைகளை, நேரத்தில் எழ வைக்கும் பழக்கத்தை சிலர் மட்டுமே தீவிரமாகக் கடைபிடித்தார்கள், ஐந்து அல்லது ஆறுக்குள் எழும் குழந்தைகள், காலைக்கடன்களை முடித்துவிட்டு, குளித்து, சற்று உடற்பயிற்சி செய்துவிட்டு, படிக்க ஆரம்பித்து விடுவர். பின்னர் உணவு அருந்திவிட்டு, பள்ளி அல்லது கல்லூரிக்கு, சைக்கிளில் நேரத்துக்கு சென்றுசேர்வர். வாழ்வியல் முறை நேரத்துக்கு பசி எடுக்கும், உணவை சாப்பிட்டு, மாலையில் சற்றுநேரம் விளையாடிவிட்டு மீண்டும் சிறிதுநேரம் வீட்டுப்பாடங்கள் படித்துமுடித்துவிட்டு, இரவு சாப்பாடு முடித்து, ஒன்பது அல்லது பத்து மணிக்கெல்லாம் உறங்கச் சென்றுவிடுவர். என்ன ஒன்பது மணியா? அது, எங்கள் கணக்கில், மாலை நேரம், தெரியுமா, என்பார்கள் சிலர், அதனால்தான், அதிகாலை என்பது, ஏழு மணியாகத் தெரிகிறது, அவர்களுக்கெல்லாம்! தாமதமாக எழுந்தால் என்ன நடக்கும்? லேட்டாகப் போய், டோஸ் கிடைக்கும் என்பது ஒருபுறம், மறுபுறம் உடல் ஆரோக்கியம், புத்துணர்வு மற்றும் அன்றைய நாளின் செயல்படும் தன்மை மந்தமாகிவிடும். இதனால், உடல் சோர்வாகி, தளர்ந்துபோய், தூக்கக் கலக்கத்துடன் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பர். இந்த பாதிப்பால், மனம் வெறுத்து, நான் உண்மையிலேயே சீக்கிரம் எழத்தான் விரும்புகிறேன், என்னால் முடியவில்லையே, என்று வருந்துபவர்கள் என்ன செய்ய வேண்டும்? அதிகாலையில் எழ என்ன செய்யவேண்டும்? அதிகாலையில் எழுவது என்ற சிந்தனையில் உறுதியாக இருப்பதை, மனதில் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும், நாளை காலையில் ஆறு மணிக்கு எழவேண்டும், நாளை காலை ஆறு மணி, மெளனராகத்தில் கார்த்திக் சொல்வாரே, சிக்ஸ் ஓ கிளாக், ஆறு மணி, சிக்ஸ் ஓ கிளாக் என்று, அது போல. நேரத்தில் எழுவதால் உண்டாகும் நன்மைகள் : நேரத்தில் எழுவதால், மனம் புத்துணர்வு அடையும், மனம் இலகுவாகி, ஆசிரியர் நடத்தும் பாடங்கள் மனதில் பதியும் என்பதைவிட எளிதில் புரியும். பரபரப்பு இல்லாத வாழ்க்கையால், இரத்த ஓட்டம் சீராகி, உடலும் மனமும் வலுவாக இருக்கும், சிறிய விஷயங்களுக்குக்கூட உணர்ச்சிவசப்படாமல், இயல்பாக அவற்றை அணுக முடியும் மூளை திறன் அதிகரிக்கும் : இதன்மூலம், காலையில் எழவேண்டிய செயல், உடலின் கட்டளை மையமான மூளையில் பதிந்து, சரியான நேரத்திற்கு முன்பே, நம்மை விழிப்படைய வைத்துவிடும். ஆயினும் உடனே எழுந்திராமல், கண்விழித்து சற்றுநேரம், அமைதியாக இருந்தபின்னரே, எழ வேண்டும். இதனால் உறக்கத்தில் நடைபெற்ற இரத்த ஓட்டத்தின் வேகம் சீராக மாறும். அவசரமாக எழும்போது, இரத்த ஓட்டம் வேகமாகி, படபடப்பை உண்டாக்கும். மேலும் உறங்கும் இடம் காற்றோட்ட வசதியுடன், சூரிய வெளிச்சம் அறையில் ஊடுருவும்படி அமைந்திருந்தால், வெளிச்சத்தில் உங்களை அறியாமலும், எழுந்து விட முடியும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, அதிகாலையில் எழ வேண்டும் என்றால், இரவு வழக்கத்தை விட, சீக்கிரமாக உறங்கவேண்டும். ஏன் அதிகாலையில் எழ வேண்டும்? முன்னோர்கள் குறிப்பிடும் அதிகாலை நேரம் என்பது காலை மூன்று மணி முதல், ஐந்து மணி வரை உள்ள காலத்தைக் குறிப்பதாகும், இந்த காலத்துக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். வானியல் அறிவியல், இந்த நேரத்தில்தான், காற்றில், ஓசோன் அதிகம் இருப்பதாகக் கூறுகிறது. என்ன நடக்கும் இந்த அதிகாலையில்? நாம் உயிர்வாழத்தேவையான காற்றே, நமது பிராணனைக் காக்கும் பிராண வாயுவைத் தருகிறது என்பதை நாமறிவோம். அந்த பிராண வாயு, சாதாரண நேரத்தில் உள்ள காற்றில், இரண்டு அணுக்கள் என்ற அளவில் இருக்குமாம், இதுவே, பிரம்ம முகூர்த்தம் எனும் அதிகாலை வேளையில் ஓசோன் வாயுவும் இந்தக் காற்றில் கலக்கும்போது, ஓசோன் வாயுவில் உள்ள பிராண வாயுவின் அளவான மூன்றும் சேர்ந்து, ஐந்து என்ற பிராணவாயுவின் உயரிய அளவில், பஞ்சபூதங்களும் இணைந்த சக்திநிலையில் உள்ள இந்தக் காற்றினை சுவாசிக்கும்போது, மனித உடலில் உள்ள நெடுநாள் வியாதிகளும் தீரும் உயிர் வலுக்கும் : உடல் பிராணன் நிரம்பி, வலுவாகும், மேலும் அமிர்த காற்று எனப்படும் ஓசோன் கலந்த காற்றை சுவாசிப்பதனால், உடலும் மனமும் நலமாகி, தேவர்கள் எனும் உயர்ந்தநிலையை அடைவர் என்று பண்டை நூல்கள் கூறுகின்றன. அதிகாலையில், பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கும் காரியங்கள், வெற்றியைத்தரும் என்பது, பழந்தமிழர் நம்பிக்கை. அதிகாலை விழிப்பின் நன்மைகள் : உடலுக்கும் மனதுக்கும் சக்தி அளிக்கும். அதிகாலையில் நடப்பதும், ஓடுவதும், உடலின் ஆற்றலை சீராக்கி, புத்துணர்வூட்டும் செயல்களாகும். படிப்பது எளிதில் புரியும். நாள் முழுதும் புத்துணர்வாக இருக்கலாம். நேர் மறை எண்ணங்கள் : நேர்மறை எண்ணங்களுடன், செயல்களில் நேர்மை கொண்டு செயல்படும்போது, அந்த செயல், மனதில் ஊக்கத்தை ஏற்படுத்தும். குறைந்த அளவு பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொண்டாலே, அவை உடலுக்கு அதிக அளவில் செயல்படும் ஆற்றலை வழங்குவதை, நாம் உணர முடியும். சொல் பலிக்கும் : எல்லாவற்றையும் விட, அதிகாலையில் எழுபவர்கள் சொல்லும், சொல் பலிக்குமாம், அதனால், அவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும் என்பது, முன்னோர் வாக்கு. உறக்கத்தை வென்றால், இலட்சியத்தை அடையலாம்! அதிகாலையில் எழுபவனே, இலட்சியத்தை அடைகிறான்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

விருப்பங்கள் நிறைவேற ஸ்ரீ ராகவேந்திர மந்திரம்!!!


உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர்.
அப்படி வாழ்ந்த ஒரு மகான் "ஸ்ரீ ராகவேந்திரர்" அவரை வழிபடும் மந்திரம் இது!!!

ஸ்ரீ ராகவேந்திரர் மந்திரம்....

"ஓம் வெங்கட நாதாய வித்மஹே!
ஸச் சித்தானந்தாய தீமஹி!
தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத்"

ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம்.
காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர்!!!

ஆன்மீக பூமியான தமிழ் நாட்டில் 17 ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர் தான் ஸ்ரீ ராகவேந்திரர். இவர் இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் வழிபாட்டை மக்கள் அனைவரிடமும் பரப்பும் புண்ணிய பணியை மேற்கொண்டார். மகானாகிய ஸ்ரீ ராகவேந்திரர் தன்னை சோதிக்க நினைத்தவர்களுக்கு அவர்களின் அகங்காரத்தை அடக்கி ஞானத்தை அருளினார். தன்னை உள்ளன்போடு வணங்கியவர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தினார். அப்படிப்பட்ட மகானுக்குரிய இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்!!!

முத்தமிடுவது போல் கனவு வந்தால்!....



ஒருவருக்கு மகிழ்ச்சியை தரும் ஒரு விஷயம் என்றால் அது முத்தம்தான். கனவில் நாம் கொடுத்த அல்லது நமக்கு கொடுத்த முத்தம் காலையில் நினைவு வரும்போது அனைவரின் முகத்திலும் கண்டிப்பாக ஒரு சிரிப்புஅப்படி முத்தக்கனவுகள் வந்தால் அவை நமக்கு என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்

*நீங்கள் வேறொருவரின் காதலி அல்லது காதலனை முத்தமிடுவது போல கனவு கண்டால் நீங்கள் காதலிக்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். அவரின் உறவை நினைத்து நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

*நீங்கள் அந்நியர் ஒருவரை முத்தமிடுவது போல கனவு வந்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் யாரோ ஒருவரை மிஸ் பண்ணுகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய பண்பை நீங்கள் காணவில்லை என்ற சுய கண்டுபிடிப்பை இது குறிக்கிறது.

*உங்கள் நெருங்கிய நண்பரை நீங்கள் முத்தமிடுவது போலவோ கனவு வந்தால் நீங்கள் அவர்களை போற்றி மதிக்கிறீர்கள் என்று அர்த்தம். அந்த முத்தம் உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை குறிக்கிறது.

*உங்களுக்கு பிடிக்காத ஒருவரை முத்தமிட்டால் நீங்கள் நிச்சயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது துரோகம் மற்றும் வஞ்சகம் தொடங்க போவதற்கான அறிகுறி ஆகும். நீங்கள் ஏற்க மறுக்கும் விஷயத்தையும் இது குறிக்கலாம்.

*கனவில் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியை முத்தமிட்டால் அது அவர்களுடனான உங்கள் சிறப்பு பிணைப்பைக் குறிக்கும். உங்கள் இருவருக்கும் நல்ல உறவு இருக்கிறது என்று அர்த்தம்.

*உங்கள் சொந்த காதலன்/காதலியை முத்தமிடுவது போல கனவு வந்தால் உங்களுக்கு அதிக காதல் தேவை என்று அர்த்தம். உங்கள் உறவில் போதுமான காதல் இல்லாமல் இருப்பதால் கனவு அவர்கள் மீதான உங்கள் வலுவான விருப்பத்தையும் ஆர்வத்தையும் குறிக்கும்.

*உங்கள் அம்மாவை முத்தமிடுவது போல கனவு வந்தால் வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கு பெரிய வெற்றி கிடைக்கப்போவதாக அர்த்தம். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.

*ஒரு குழந்தையை முத்தமிடுவது போல கனவு வந்தால் இது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை குறிக்கும். குழந்தை உங்கள் சொந்தமாக இருந்தால், அது அவர்கள் மீதான உங்கள் அன்பைக் குறிக்கிறது.

*நீங்கள் ஒருவரின் கையில் முத்தமிடுவது போல கனவு வந்தால் அந்த நபருடன் நீங்கள் மரியாதையையும் ஆறுதலையும் உணர்கிறீர்கள் என்று அர்த்தம். இது விசுவாசம்.

*ஒருவரை காலில் முத்தமிடுவது போல உங்களுக்கு கனவு வந்தால் மரியாதையின் அடையாளம். நபர் உங்களை கால் அல்லது காலில் முத்தமிட்டால், அவர்கள் மதிக்கிறார்கள் என்று அர்த்தம்.

*நீங்கள் யாரையாவது நெற்றியில் முத்தமிட்டால் அல்லது உங்கள் கனவில் யாராவது உங்களை முத்தமிட்டால், அவர்களின் செயல்களில் நீங்கள் அதிருப்தி அடைகிறீர்கள் என்று அர்த்தம்.

*நீங்கள் ஒருவரை கன்னத்தில் முத்தமிட்டதாக அல்லது அவர்கள் உங்களை அங்கே முத்தமிட்டுவதாக கனவு வந்தால், முத்தம் நட்பு, விசுவாசம், மரியாதை மற்றும் பயபக்தியைக் குறிக்கும்.

*நீங்கள் ஒருவரை இதழ்களில் முத்தமிட்டாலோ அல்லது அவர்கள் உங்களுக்கு முத்தமிடுவது போல கனவு வந்தாலோ நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை நேர்மையாக வெளிப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.

தாய கட்டையி்ல் விழும் எண்களின் மகிமை!


அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டு தாயம் உருட்டுதல் ஆகும்

தாயம் உருட்டும் போது 1 (தாயம்), 5, 6, 12 விழுந்தால் கட்டையை தொடர்ந்து உருட்டுவது ஏன் தெரியுமா!

தாயம் (1) சூரியனை குறிக்கும் சூரியனே பிரபஞ்சத்தின் ஆதாரம்!

5ம் எண் பஞ்ச பூதங்களை குறிக்கும் (நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி)

6ம் எண் மற்ற ஆறு கிரகங்களையும் (சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி) மற்றும்
ஆறு பருவங்களையும்
(இளவேனிற், முதுவேனிற், கார், குளிர், முன்பனி, பின்பனி )காலங்களை குறிக்கும்!

12 ம் எண் 12 இராசிகளையும் ( 12 மாதங்களையும்) குறிக்கும்

இந்த 1, 5, 6, 12 க்குறிய மேற்கண்ட அம்சங்களை ஆராய்ந்தே எதிரி நாட்டுடன் படை எடுப்பர்

அதேபோல் 2ம் எண்
இரண்டு அயனங்களை ( உத்ராயனம், தட்சிணாயனம்)

3ம் எண் முக்குண வேளையை (சாத்வீகம், ராஜஸம், தாமஸம்) குறிக்கும்

4ம் எண் நான்கு யோகங்களை (அமிர்த, சித்த, மரண, பிரபலாரிஷ்ட) குறிக்கும்

எனவே இந்த எண்களில் 1, 5 ,6, 12 பகடையில் முக்கிய அம்சமாக கருதுவதால் அந்த எண்கள் விழுந்தால் மீண்டும் தாயகட்டையை உருட்டுகின்றனரர்

Tuesday, May 5, 2020

நடராஜர் உருவான வரலாறு*



*ஸ்ரீ நடராஜர் தரிசனம்*

பிரதோஷ மந்திரம்

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ !




சோழ மன்னன் ஒருவன், சிவபெருமானின் நடனம் பற்றிய தகவலைப் படித்தான்; அந்தக் காட்சியை, சிலையாக வடிக்க எண்ணம் கொண்டான்.

தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலை யைச் செய்யும்படி வேண்டினான்; அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர்.

சிலைக்கான அச்சை வார்த்து, உலோகக் கலவையை அதில் கொட்டினர்;

ஆனால், சிலை சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும், இதே நிலை நீடித்தது. அவர்கள், மன்னனிடம் தங்கள் இயலாமையைத் தெரிவித்தனர்.

மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது. “என்ன செய்வீர்களோ தெரியாது… சிலை செய்தாக வேண்டும்.

அதுவும் இன்று மாலைக்குள் செய்தாக வேண்டும்; இல்லாவிட்டால், உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்…’ என, எச்சரித்து விட்டு போய் விட்டான்.

அவர்கள் எவ்வளவோ முயற்சித்தனர்; சிலை செய்ய முடியவில்லை.

தங்கள் வாழ்வு இறுதிக் கட்டத் திற்கு வந்துவிட்டது என்று பயந்து போயிருந்த நிலையில், ஒரு முதியவரும், மூதாட்டியும் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தனர். அப்போது, சிற்பிகள் ஐந்து வகை உலோகங்களை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

அந்த பெரியவர்கள், அதைக் கஞ்சி என நினைத்து, தங்களுக்கு பசிப்பதாகவும், கஞ்சியை ஊற்றும்படியும் கேட்டனர்.

எரிச்சலில் இருந்த சிற்பிகள், “குடியுங்கள்… நிறைய குடியுங்கள். நாங்கள் சாகப் போகிறோம்; போகும் போது, உங்களுக்கு தானம் செய்த புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டு போகிறோம்…’ என்று சொல்லி, ஒரு செம்பில், நாலு அகப்பை உலோகக் கலவையை ஊற்றிக் கொடுத்தனர்.

முதியவர்கள் அதை குடித்தனர். உடனே நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையுமாக மாறி, சிலை வடிவில் காட்சியளித்தனர்.

தங்கள் உயிரைக் காக்க வந்த முதியவர்கள் சிவனும், பார்வதியும் என்றறிந்த சிற்பிகள், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

சிலை அமைந்த வரலாற்றை மன்னனுக்கு எடுத்துக் கூறினர். மன்னனும், இறைவனின் திருவருளை வியந்து, சிதம்பரத்தில் கோவில் கட்டி, பிரதிஷ்டை செய்தான்.

அந்நியர் படையெடுப்பின் போது, கோவில்களில் உள்ள சிலைகள் நொறுக்கப்பட்டன. அபூர்வமான நடராஜர் சிலை பாழ்பட்டு விடக் கூடாது என்பதால், தில்லை வாழ் அந்தணர்களும், ஆயிரத்தெட்டு மடாதிபதிகளும் சிலையைஎடுத்துக் கொண்டு, ஊர் ஊராகச் சென்றனர்.

கடைசியாக, மலையாள தேசத்துக்கு எடுத்துச் சென்று, ஒரு ஆலமரப்பொந்தில் ஒளித்து வைத்தனர்.

இதனால், அந்த ஊருக்கு, “ஆலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. அந்நியர்கள் சென்றதும், அந்தச் சிலையை அவ்வூரிலுள்ள அம்பலத்தில் (கோவிலில்) வைத்து பூஜை செய்தனர்.

அந்த இடத்துக்கு, “அம்பலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. இவ்வாறு பல்வேறு சிரமங்களைக் கடந்து, நடராஜர் சிலை உருவானது.

*சிவாலயங்களில் உள்ள நடராஜர் சன்னதிகளில், ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்*

அதில், ஆனி உத்திர நாளும் ஒன்று. இந்த நன்னாளில், நடராஜப் பெருமானை வணங்கினால், பிறப்பற்ற நிலை கிடைக்கும்.

Monday, May 4, 2020

நினைத்தது_உடனே_நிறைவேற_கோடி_நன்மைகள்_பெற_காமதேனு_வழிபாட்டை_இப்படி_செய்து_பாருங்கள்

.

கடன் வாங்காமல் வாழ்க்கையின் சக்கரமே ஓடாது என்ற நிலையில் தான் இன்று பலரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டம் எப்போது ஓயுமோ? என்ற பயமே! மனிதனின் ஆயுளை குறைத்து விடுகிறது என்பது அதிர்ச்சி தரும் சர்வே ரிப்போர்டாக இருக்கிறது. எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்? ஏன் ஓடிக் கொண்டிருக்கிறோம்? என்று தெரியாமலே எதிர்கால நன்மைகள் என்று கூறிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். இப்படியே சென்று கொண்டிருந்தால், எப்போது தான் நம்முடைய வாழ்க்கையை வாழ்வோம்? என்பது கேள்விக்குறி தான். அதற்காக இந்த ஓட்டத்தை நிறுத்தவும் முடியாது என்பதே வேதனைக்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது. உங்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த காமதேனு வழிபாடு சிறந்த தீர்வு தரும். காமதேனு வழிபாட்டையும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் இப்பதிவில் இனி காணலாம்.

காமதேனு படமோ அல்லது விக்ரஹமோ வங்கி வைத்து கொள்ளுங்கள். காமதேனு வழிபாடு, நினைத்ததை நினைத்தபடி நடத்திக் காட்டும் அற்புத வழிபாடு. காமதேனு வழிபட்டால் உங்களது வீடு சுபீட்சம் பெறும். மஹாலக்ஷ்மி கடாட்சம் நிறைந்து காணப்படும். பூஜை அறையில் சில விஷயங்களை வைத்து வழிபடுவதால் உங்களுடைய வேண்டுதல்கள் எளிதில் நிறைவேறக் கூடிய வரம் கிட்டும். அவ்வகையில் காமதேனு விக்ரஹம் வைத்து வழிபடுவதால் கேட்ட வரம் உடனே கிடைக்கும். எவ்வளவோ கஷ்டதிற்கு தீர்வு காண நாம் முறையிடும் ஒரே இடம் நம் பூஜை அறை தான். பூஜை அறையில் காமதேனு விக்ரஹம் இருப்பது நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும். விக்ரஹம் இல்லாதவர்கள் காமதேனு படத்தை வைத்து பூஜை செய்யலாம்.

காமதேனு விக்ரஹம் கன்றுடன் கூடியதாக கட்டாயம் இருக்க வேண்டும். விக்ரஹம் வைத்திருப்பவர்கள் தினமும் காமதேனுவை வழிபட்டு வந்தால், சகல சௌபாக்கியங்களும் பெறுவீர்கள். காமதேனு விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அந்த விக்ரஹத்திற்கு தினமும் பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் பாலாபிஷேகம் செய்து வருவதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக முற்றிலுமாக நீங்கிவிடும்.

காமதேனு விக்ரஹத்தின் கொம்பு பகுதியில், நெற்றிப் பகுதியில், கால்களில், மடியில் என மஞ்சள், குங்குமம் இட வேண்டும். பசுவின் கன்றிற்கும் இது போல் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். காமதேனுவிற்கு மல்லிகைப்பூ சாற்ற வேண்டும். பின்னர் உங்களின் இரு கரங்களாலும் காமதேனுவை தொட்டபடி, உங்களுக்கு இருக்கும் குறைகளை, கோரிக்கைகளை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு வேண்டி கொண்டபின் அப்படியே கைகளை எடுக்காமல், கீழே உள்ள மந்திரத்தை 54 முறை உச்சரிக்க வேண்டும்.

#காமதேனு_மந்திரம்:
🕉️ஓம் சுபகாயை வித்மஹே!
🕉️காமதாத்திரியை, சதீமஹி
🕉️தந்னோ தேனு ப்ரசோதயத்.

இந்த காமதேனு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து, பாலாபிஷேகம் செய்து வந்தால் எல்லா செல்வங்களும், பணவரவும் பெற்று குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கடன் தொல்லைகள் நீங்கும். பசுவை தெய்வமாக நினைத்து போற்றுபவர்களுக்கு எந்த விதமான கஷ்டங்களும் வாழ்வில் ஏற்படாது. பசுவிற்கு தானம் அளிப்பது ஏழேழு ஜென்மத்தில் செய்த பாவங்களையும் போக்கி விடும். கர்ம பலன்கள் குறைய தொடர்ந்து பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசுவின் கோமியத்தை வீட்டை சுற்றி தெளித்து வர எந்த கெட்ட சக்தியும் உங்களது குடும்பத்தையே நெருங்கவிடாமல் செய்யும். நோய் தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும்.

உங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள்.

எல்லோரது வீட்டிலும் கட்டாயம் இடம்பெறும் ஒரு முக்கிய பொருளாக இருப்பது புகைப்படம். புகைப்படம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நல்ல நினைவுகளை நினைவூட்டக்கூடிய அரும்பெரும் பொக்கிஷங்கள் ஆகும். இவற்றை முறையாக பராமரிப்பதில் சிலர் அதிக ஆர்வம் கொள்கின்றனர். நாம் எவ்வளவுதான் மன இறுக்கத்தில் இருந்தாலும் பழைய புகைப்படம் ஒன்றை பார்க்கும் போது மனம் அப்படியே முற்றிலுமாக மாறி விடுவதை நம்மில் பலரும் உணர்ந்திருப்போம். ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நம்மை ஆட்கொண்டு விடும் சக்தியை இப்புகைப்படங்கள் பெற்றுள்ளது. அத்தகைய புகைப்படங்களை எந்த திசையில் மாட்ட வேண்டும்? எந்தத் திசையில் மாட்ட கூடாது? ஏன் அந்த திசையில் மாட்டி வைக்கக் கூடாது? என்பதைப் பற்றி இப்பதிவில் இனி காணலாம். வீட்டில் மாட்டி வைத்திருக்கும் புகைப்படங்களில் முக்கியமாக இருப்பது திருமண புகைப்படம். திருமண புகைப்படங்கள் நல்ல அனுபவங்களையும், நம்மை சார்ந்த உறவுகளை அடிக்கடி நினைவூட்ட கூடிய ஒன்றாக இருக்கிறது. திருமண புகைப்படங்கள் வீட்டில் கட்டாயம் இடம்பெற வேண்டிய புகைப்படங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். அனைவரது கண்களிலும் தினமும் பார்க்கும் வண்ணம் இப்புகைப்படம் மாட்டி வைப்பது நல்லது. -

- முந்தைய காலங்களில் எல்லாம் வம்சா வழியாக வரும் அனைவரது புகைப்படங்களும் வரிசையாக, அழகாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும். எந்த வீட்டிற்கு சென்றாலும் இக்காட்சியை நம்மால் காண முடிந்தது. இதன் உளவியல் காரணம் மிகவும் விசித்திரமானவை. இதுபோன்று வரிசையாக மாற்றி வைக்கும் புகைப்படங்களை தினமும் காணும் பொழுது, நம் உடலில் நேர்மறை சக்திகள் ஊடுருவும் வாய்ப்புகள் உருவாகும் என்கிறது ஆய்வுகள். இச்செயல் நம்முடைய சந்ததிகளை நாம் தெரிந்து கொள்ளவும் உதவிகரமாக இருக்கும். நம் முன்னோர்களின் ஆசியும் இதன் மூலம் நமக்கு பரிபூரணமாக கிட்டும். இதேபோல் குடும்பத்தில் இருக்கும் அனைவரது புகைப்படங்களையும், உங்களது மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவூட்டும் வகையில் புகைப்படங்களை அனைவரும் காணும் வண்ணம் எந்த திசையில் வேண்டுமானாலும் நீங்கள் மாட்டி வைக்கலாம். ஆனால் இதில் புகைப்படங்கள் மாட்ட கூடாத திசை என்பது தெற்கு திசையாக இருக்கிறது. தெற்கு திசையை நோக்கியபடி உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை கட்டாயம் மாட்டி வைக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். உயிருடன் இருக்கும் நபரின் புகைப்படத்தை தெற்கு நோக்கியபடி மாட்டி வைப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அமையும். -

- இறந்தவர்களின் புகைப்படங்களை தான் தெற்கு திசையில் மாட்டி வைக்க வேண்டும் என்பது சாஸ்திரம் கூறும் முறையாக இருக்கிறது. இந்த காரணத்தினால் தான் அத்திசையில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை மாட்டி வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருமண புகைப்படங்களை எந்த காரணம் கொண்டும் தெற்கு திசையை நோக்கி மாட்டி வைக்காதீர்கள். தெற்கு திசையில் மாட்டக்கூடாது என்பது சரியா? அல்லது தெற்கு திசையை நோக்கியபடி மாட்டக்கூடாது என்பது சரியா? என்ற கேள்விகள் எழும். தெற்குத் திசையை நோக்கியபடி மாட்டக்கூடாது என்பதே சரியான பதில். முற்றிலுமாக தெற்கு திசையை தவிர்ப்பது உத்தமம். இருப்பினும் வேறு வழி இல்லாத பட்சத்தில் தெற்கு திசையை நோக்கியபடி மாட்டாமல் இருப்பது நல்லது. தெற்கு திசையை நோக்கியபடி தான் எங்களால் மாட்டி வைக்க முடியும் எனும் பட்சத்தில், நீங்கள் அந்தப் புகைப்படங்களை வேறு ஏதேனும் ஸ்டாண்டில் அல்லது செல்ஃப்களில் வைப்பதே நல்லது.

Sunday, May 3, 2020

எது உண்மையான பரிசு



குறிஞ்சிக் காட்டில் அழகான குரங்கு குடும்பம் ஒன்று வசித்துவந்தது. ஒரு நாள் தந்தைக் குரங்கும் தாய்க் குரங்கும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தன.


அப்பா, அம்மாவை நோக்கி ஆர்வத்தோடு ஓடிவந்தது குட்டிக் குரங்கு பிங்கி.

“பிங்கி, நன்றாக விளையாடினாயா? ஏதாவது சாப்பிடுகிறாயா?” என்று அன்போடு கேட்டது தாய்க் குரங்கு.

“அம்மா, எனக்குப் பசியில்லை.”

“இன்று வித்தியாசமான விளையாட்டு ஒன்றைச் சொல்லித் தரலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம்” என்றது தந்தைக் குரங்கு.

“ஜாலி... எனக்கும் ஒரே விளையாட்டை விளையாடி சலிப்பாக இருக்கிறது. என்ன விளையாட்டு என்று சொல்லுங்க அப்பா” என்றது மகிழ்ச்சியுடன் பிங்கி.

“இது உன் அறிவுக்கான விளையாட்டு. நாங்கள் ஒரு புதிரைக் கூறுவோம். சரியான பதிலைக் கூறினால் உனக்கு ஒரு பரிசு தருவோம்” என்றது தாய்க் குரங்கு.

“எப்படியாவது அந்தப் பதிலைக் கண்டுபிடித்து, பரிசை வாங்காமல் விடமாட்டேன்” என்று துள்ளிக் குதித்தது பிங்கி.

“தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்? இந்தப் புதிருக்குச் சரியான பதிலைச் சொன்னால் உனக்குப் பரிசு உண்டு. ஆனால் இன்று மாலைக்குள் நீ விடையைச் சொல்லிவிட வேண்டும்” என்றது தந்தைக் குரங்கு.

“இன்று மாலைக்குள் சொல்லி அந்தப் பரிசைப் பெற்றே தீருவேன்” என்று சொன்னபடியே கிளம்பியது பிங்கி.

“நண்பா, எனக்கு ஒரு உதவி செய்வாயா?” என்று பஞ்சவர்ணக்கிளியிடம் கேட்டது பிங்கி.

“என்ன உதவி வேண்டும்?”

“ஒரு புதிருக்கு விடை தெரிய வேண்டும்.”

“என்ன புதிர்?” என்று பஞ்சவர்ணக்கிளி தன் இறக்கைகளைச் சிலுப்பியபடிக் கேட்டது.

“தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்? விடை உனக்குத் தெரியுமா?” என்றது பிங்கி.


“பிங்கி, விடையை உனக்கு நாளை சொல்லட்டுமா?” என்றது பஞ்சவர்ணக்கிளி.

“எனக்கு இன்று மாலைக்குள் விடை தெரிய வேண்டுமே?” என்று பதற்றப்பட்டது பிங்கி.

“நாம் மயிலிடம் கேட்டுப் பார்ப்போம்” என்று பிங்கியை அழைத்துக் கொண்டு கிளம்பியது பஞ்சவர்ணக்கிளி.

“மயிலே எங்களுக்கு ஒரு உதவி செய்வாயா?” என்றனர் பிங்கியும் பஞ்சவர்ணக்கிளியும்.

“என்ன உதவி வேண்டும்?”

“தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்?” என்று சொல்லிவிட்டு, ஆர்வமாகப் பார்த்தது பிங்கி.

யோசித்தபடியே நின்றுகொண்டிருந்த மயில், “மழை மேகம் வருகிறது. நான் வருகிறேன்” என்று தோகையை விரித்தபடி சென்றுவிட்டது.

“எனக்கு அந்தப் பரிசு கிடைக்காதா?” என்று கவலைப்பட்டது பிங்கி.

“கவலைப்படாதே பிங்கி. பரிசு உனக்குத்தான். அதோ என் புத்திசாலி நண்பன் வருகிறான். குட்டி யானையே, புதிருக்கு விடை சொல்லி, என் நண்பனுக்கு உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது பஞ்சவர்ணக்கிளி.

“புதிர் என்ன?”

பிங்கி சொன்னவுடன், “ம்… இது ரொம்ப எளிமையான புதிராக இருக்கிறதே! இதற்காகவா இவ்வளவு நேரம் அலைந்தீர்கள்? அதோ தெரிகிறதே அந்தத் தேங்காய்தான் விடை” என்றது குட்டி யானை.

“நீ உண்மையிலேயே புத்திசாலிதான். புதிருக்கான விடையைக் கூறிவிட்டாயே! நன்றி நண்பா. உன்னுடைய நட்பு கிடைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றது பிங்கி.

“பஞ்சவர்ணக்கிளியே, ஒரு நல்ல நண்பனை அடையாளம் காட்டியதற்கும், விடை தெரிய உதவியதற்கும் நன்றி. உங்களைப் பிறகு சந்திக்கிறேன்” என்று வேகமாகக் கிளம்பியது பிங்கி.

“அம்மா, அப்பா… பரிசு எங்கே?” என்றபடியே வந்தது பிங்கி.

“புதிருக்குப் பதில் கூறாமல் பரிசு எப்படித் தர முடியும்? பதிலைக் கண்டுபிடித்துவிட்டாயா?” என்றது தாய்க் குரங்கு.

“நீங்கள் சொன்ன புதிருக்கான விடை தேங்காய் தானே?”

“சரியாகச் சொல்லிவிட்டாயே! இந்தப் பரிசு உனக்குத்தான்” என்று ஒரு பழக்கூடையை, பிங்கியிடம் தந்தது தந்தைக் குரங்கு.

“ஆஹா! பரிசை ஜெயித்துவிட்டேன்” என்று துள்ளிக் குதித்தது பிங்கி.

“பிங்கி, இந்தப் புதிருக்கு விடை தேடிச் சென்றதில் நீ கற்றுக்கொண்டது என்ன?” என்றது தாய்க் குரங்கு.

“அம்மா, நீங்கள் ஏற்கெனவே சொன்னதுபோல் வாழ்வில் வெற்றி பெற நண்பர்கள் தேவை. ஆனால் அந்த நண்பர்களும் புத்திசாலி நண்பர்களாக இருந்தால் சரியான நேரத்தில் நமக்கு உதவி, நாம் வெற்றி பெற துணை நிற்பார்கள் என்ற நல்ல பாடத்தை இன்று கற்றுக் கொண்டேன்” என்றது பிங்கி.

“பிங்கி, புதிருக்கான விடையைக் கூறியதற்காக நாங்கள் கொடுத்த பரிசைவிடவும் உனக்குக் கிடைத்த புத்திசாலி நண்பன்தான் நீ பெற்ற உண்மையான பரிசு! அதுதான் உன் வெற்றி” என்றனர் தாய்க் குரங்கும் தந்தைக் குரங்கும்.

புத்திசாலி நண்பனைப் பரிசாக பெற்ற மகிழிச்சியில் மீண்டும் துள்ளிக் குதித்தது பிங்கி.

கர்மா_என்பது_என்ன?



கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ:

ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்!

அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான்.

மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!

அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்!

அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்!

அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்!

நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.

அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்!

அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்!

அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது!

இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!

மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்!

தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்!

அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்!

அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்!

அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்! அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்!

அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால்அவனது வறுமை தீர்ந்தது!

இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்!

அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!

குரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்!.

பல சீடர்கள்
அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்!!

*குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் “இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே.. “*

நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்!

மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் .

*🌸 நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.*
*நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்.*

*எனவே நல்லதையே தேடுவோம் நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்🙏🙏🙏

கொடுப்பவனுக்கே கிடைக்கும்*



ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்தி வந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார். அவரை பார்த்த பிச்சைக்காரன் சாமி என் வாழ்க்கை கடைசிவரை இப்படிதான் இருக்குமா என்று கேட்டான். அதற்கு சாமியார் அது உன் தலையில் எழுதிய விதி. உன் கடைசி வாழ்நாள் வரை இப்படிதான் இருக்கும் என்றார். பிச்சைக்காரன், சாமி என் தலைவிதி மாறாதா, மாற நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு சாமியார் நீ சிவபெருமானை பார்த்தால் உன் தலை எழுத்து மாற வாய்ப்பு உள்ளது. அவரை போய் பார் என்றார். பிச்சைக்காரன் சிவபெருமான் பார்க்க புறப்பட்டான். வெகுநேரம் ஆகியதால் இரவு ஓய்வு எடுக்க
ஓர் செல்வந்தர் வீட்டின் கதவை தட்டி, ஐயா இன்று இரவு இங்கே தங்கி ஓய்வு எடுக்க அனுமதிக்குமாறு கேட்க, செல்வந்தர் நீ எங்கு செல்கிறாய். என்று கேட்க. அதற்கு பிச்சைக்காரன் நடந்ததை சொல்ல. செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஓர் உதவி செய்யவேண்டும் என்று கேட்க. பிச்சைக்காரன் என்ன உதவி வேண்டும் என்று கேட்க. அதற்கு செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஓர் பெண் உள்ளது. அவள் பிறவிஊமை அவள் எப்போது பேசுவாள் என்று சிவபெருமானிடம் கேட்டு எங்களுக்கு சொல்லவேண்டும் என்றனர். அதற்கு பிச்சைக்காரன் சம்மதித்து இரவு ஓய்வு எடுத்துவிட்டு காலையில் புறப்பட்டான். வெகுநேரம் கடந்த பின் ஒரு பெரியமலைவந்தது. அதை கடக்க முடியாமல் இருந்த நேரத்தில் ஒரு மந்திரவாதி அங்கு வந்தார். அவர் பிச்சைக்காரனுக்கு இந்த மலையை என்மந்திரகோல் மூலம் உன்னை கடக்க வைக்கிறேன். நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும் என்றார். பிச்சைக்காரன் என்ன உதவி என்று கேட்க. மந்திரவாதி நான் 500 ஆண்டுகளாக முக்தி அடையாமல் உள்ளேன். நீ சிவபெருமான் என் முக்திக்கு என்ன வழி என்று கேட்டு சொல்லவேண்டும் என்றார். அதற்கும் பிச்சைக்காரன் சம்மதம் தெரிவித்தான். மந்திரவாதி மலையை கடந்து பிச்சைக்காரனை விட்டு சென்றார். மீண்டும் நடக்க ஆரம்பித்தான் பிச்சைக்காரன். அப்போது ஓர் ஆறு வந்தது இந்த ஆற்றை கடந்தால் தான் சிவபெருமான் இருக்கும் இடத்திற்க்கு செல்லமுடியும். ஆற்றை கடக்க என்ன செய்வது என்று நினைத்த நேரத்தில் ஆற்றில் ஒரு ஆமை வந்தது. அது பிச்சைக்காரனிடம் விசாரித்து அதுவும் நான் உனக்கு உதவி செய்கிறேன். பதிலுக்கு நீ சிவபெருமானிடம் எனக்கு பறக்கும் சக்தி வேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டு சொல் என்று ஆற்றை கடந்து பிச்சைக்காரனை விட்டது. பிச்சைக்காரனும் ஒருவழியாக சிவபெருமான் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தான். சிவபெருமானை பார்த்து ஆசி பெற்றான். சிவபெருமான் என்னிடம் இருந்து உனக்கு வேண்டியதை கேள் என்றார்.

*ஆனால் மூன்று கேள்விதான் கேட்க வேண்டும் என்றார். பிச்சைக்காரன் யோசனை செய்தான். நாம் நான்கு கேள்வி கேட்கவேண்டும். சிவபெருமான் மூன்று தான் கேட்க வேண்டும் என்றார். என்ன செய்வது என்று புரியாமல் யோசனையில் இருந்தான். சற்று நேரத்தில் ஒர் யோசனை வந்தது. நாம் பிச்சை எடுத்து நம் காலத்தை ஒட்டிவிடலாம். ஆனால் அந்த மூன்று பேர்களின் பிரச்சினையையாவது தீரட்டும். என்று எண்ணி மூன்று பேரின் பிரச்சனையை சிவபெருமான் சொல்லி அதன் தீர்வையும் தெரிந்து கொண்டு திரும்பிவந்தான்.*

*_முதலில் ஆமை என் கேள்விக்கு சிவன் என்ன சொன்னார் என்று கேட்டது. அதற்கு பிச்சைக்காரன் உன் ஓட்டை நீ கழட்டி எறிந்தால் உனக்கு பறக்கும் சக்திவரும் என்றான். உடனே ஆமை தன் ஓட்டை கழட்டி பிச்சைக்காரனிடம் கொடுத்ததுவிட்டு பறந்துசென்றது. அந்த ஓட்டில் பவளமும், முத்துக்களும் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்._*

*மந்திரவாதியை பார்த்து உன் முக்திக்கு நீ செய்ய வேண்டியது அந்த மந்திரக்கோலை விடவேண்டும் என்றான். மந்திரவாதி அந்த மந்திரக்கோலை பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு முக்தி அடைந்தார்.*

*_மீண்டும் புறப்பட்டு செல்வந்தரை சந்தித்தான். செல்வந்தரிடம் உன் மகள் எப்போது அவள் மனதிற்க்கு பிடித்தவனை பார்க்கிறாளோ. அன்று அவள் பேசுவாள் என்றான் பிச்சைகாரன். மாடியில் இருந்து இறங்கிய செல்வந்தரின் மகள் அப்பா இவர் தானே அன்று இரவு வந்தது என்று கேட்டால். செல்வந்தர் தன் ஒரே மகளை பிச்சைக்காரனுக்கு மணமுடித்து வைத்தார். அன்று முதல் அவன் ஒரு செல்வந்தர் மற்றும் மந்திரகோல், இதை தவிர பவளம், முத்துகளும், அழகான மனைவியும் அமைந்து சந்தோஷமாக வாழ்ந்தான்._*

*இந்த கதையின் மூலம் நாம் அறிவது என்னவென்றால் நமக்காக கடவுளிடம் வேண்டுவதை விட பிறர் நலனுக்காக வேண்டினால் நம் துயரமும், பிறரின் துயரமும் மறைந்துவிடும்.*

*அதே போல் கடவுள் நம் தலையில் எழுதிய விதியை அவரால் மட்டுமே மாற்றி எழுதமுடியும். நம்மால் விதியை மாற்றமுடியும் என்று எண்ணி வீதிக்கு வராமல் இருந்தால் போதும்.*

*திருச்சிற்றம்பலம்*
*தில்லையம்பலம்*

பக்தியின் ரகசியம்



ஒரு ஏழை குடியானவன், குடும்ப கஷ்டங்களால் அவதிப்பட்டு வந்தான். தன்னுடைய பணிக்காக அதிகாலையில் செல்லும் அந்த ஏழை, இரவு வேளையில்தான் வீடு திரும்புவான். எனவே அவனால் தினமும் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபட முடியவில்லை.

இறைவனை வழிபட்டு தன்னுடைய துன்பங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால், வேலைப்பளு காரணமாக ஆலயத்திற்குச் செல்ல முடியவில்லையே என்று அந்தக் குடியானவன் வருந்தினான்.

ஒரு நாள் சிறிய கிருஷ்ணர் சிலையை வாங்கி வந்து, தன்னுடைய குறைகளைச் சொல்லி வழிபட்டு வந்தான். அவன் தினமும் பணிக்கு செல்லும் போதும், இரவு தூங்கும் வேளையிலும் கிருஷ்ணரின் சிலையை வணங்கினான். ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற நறுமணப் பொருட்களை வைத்து வழிபட்டான். பல மாதங்கள் ஆகியும் அவனது வறுமை அகலவில்லை.

இதனால் கிருஷ்ணரின் மீது அந்தக் குடியானவனுக்கு கோபம் வந்தது. ‘நான் தினமும் இவரை வழிபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கஷ்டத்தை இவர் கண்டுகொள்வதே இல்லை’ என்று நினைத்தவன், சந்தைக்குச் சென்று வேறு ஒரு சாமி சிலையை வாங்கி வந்தான். கிருஷ்ணர் இருந்த இடத்தில் இப்போது புதிய தெய்வத்தை வைத்த குடியானவன், கிருஷ்ணர் சிலையை அதற்கு மேல் உள்ள அலமாரியில் வைத்தான்.

பின்னர் புதிய தெய்வத்திற்கு எளிய வழிபாட்டைச் செய்தான். ஊதுபத்தியை கொளுத்தி புதிய சிலைக்கு அருகே வைத்தான். அந்த ஊதுபத்தியின் புகை மெல்ல மெல்ல, மேல்நோக்கிச் சென்று, அலமாரியில் இருந்த கிருஷ்ணரின் சிலை மீதும் பட்டது.

உடனே அந்த குடியானவன், ‘கிருஷ்ணா! இவ்வளவு நாட்களாக நான் உன்னை வழிபட்டும் எனக்கு எந்த கைமாறும் நீ செய்யவில்லை. அப்படியிருக்கையில் புதிய தெய்வத்திற்கு ஏற்றிவைத்திருக்கும் ஊதுபத்தி நறுமணத்தை மட்டும் நீ அனுபவிக்கலாம் என்று நினைக்கிறாயா?’ என்று கேட்டபடி, சிறிய பஞ்சை எடுத்து கிருஷ்ணர் சிலையின் மூக்கில் வைத்து அடைத்தான்.

அடுத்த கணமே அந்த குடியானவனின் முன்பாக வந்து காட்சிகொடுத்தார் கிருஷ்ணபிரான். மெய்சிலிர்த்தான் குடியானவன்.

‘பக்தா! என்னை மண்ணாக பாவிக்காமல், உயிருள்ளவன் என்று எண்ணி பஞ்சை வைத்து அடைத்தாயே. அந்த பக்தியால் மகிழ்ந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்றார் கண்ணன். குடியானவனின் விருப்பப்படியே அவனது வறுமையைப் போக்கி அருளினார்.

நாம் வழிபடும் இறை உருவங்களை, வெறும் கல்லாகவும், மண்ணாகவும் கருதாமல், நிஜம் என்று நினைத்தாலே இறைவன் ஓடி வந்து உதவிபுரிவான். அதுவே பக்தியின் ரகசியம்.

மோஹினி ஏகாதசி


ஏப்ரல் /மே மாதங்களில் வளர்பிறையில் தோன்றக் கூடிய மோஹினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி சூர்ய புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரா பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். ஓ ஜனார்த்தனா ஏப்ரல் / மே மாதங்களின் வளர்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் மற்றும் அந்த ஏகாதசியை கடை பிடிப்பது எப்படி? மேலும் இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன் என்ன? இவற்றைப்பற்றி எனக்கு விரிவாகக் கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ தர்மத்தின் மகனே! ஒருமுறை வசிஸ்டமுனிவர் பகவான் இராமச்சந்திரனிடம் கூறிய கதையைப் பற்றி கவனமாகக் கேள்.

நீண்ட காலத்திற்கு முன் ஒருமுறை பகவான் இராமச்சந்திரர் வசிஸ்டமுனிவரிடம் கேட்டார். ஓ மரியாதைக்குரிய முனிவரே நான் ஜனகராஜரின் மகளான சீதையை விட்டு பிரிந்திருப்பதால் மிகவும் மனவருத்தத்துடன் இருக்கிறேன். தயவு செய்து ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் மனவருத்தத்தையும் அழிக்கக்கூடிய ஒரு விரதத்தைப் பற்றி எனக்கு கூறுங்கள்.

இராமச்சந்திரரின் ஆன்மீக குருவான பெரும் முனிவர் வசிஸ்டர் கூறினார். எனதன்பு இராமா, உன்னுடைய புத்திக்கூர்மை நம்பிக்கையுடன் கலந்திருக்கின்றனது. உன்னுடைய கேள்வி எல்லா மனித சமுதாயத்திற்கும் பயனுள்ளது. உன்னுடைய மங்களகரமான திவ்ய நாமங்களை ஜெபிப்பதாலேயே ஒருவர் தூய்மையடைந்து எல்லா மங்களத்தை அடையத் தகுதி பெறுகிறார். இருந்தும் சாதாரண மக்களின் நலனுக்காக நான் ஒரு சிறந்த விரதத்தைப்பற்றி உனக்கு கூறுகிறேன். ஏப்ரல் / மே மாதங்களின் வளர்ப்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசி பிரபலமாக மோஹினி ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. மற்றும் இது மிகவும் மங்களகரமானது, இந்த ஏகாதசியை கடைபிடித்தால் ஒருவருடைய பாவ விளைவுகள் ஜட துன்பங்கள் மற்றும் மாயையின் பிடியில் இருந்து விடுபடுகின்றனர். இப்பொழுது நான் விளக்கும் இந்த ஏகாதசியின் மிக உன்னதமான தலைப்பைப் பற்றி கவனமாகக் கேள்.

புண்ணிய தீர்த்தமான சரஸ்வதி நதிக்கரையில் அழகிய நகரமான பத்ராவதி த்யுதிமனா என்ற அரசனால் ஆளப்பட்டு வந்தது. ஓ பகவான் ராமா இந்த அரசன் சந்திரவம்சத்தில் பிறந்தவன் மற்றும் அவன் பணிவுடன் நேர்மையும் உடையவன். அங்கு சிறந்த மற்றும் செல்வகரமான பகவான் விஷ்ணுவின் பக்தர் தனபாலா என்பவரும் அந்த நகரத்தில் வாழ்ந்து வந்தனர். அவர் தொழில் தர்மத்தால் ஒரு வைசியர் சாதாரண மக்களின் நலனுக்காக இந்த பக்தர் அதிக தர்மசாலைகள், பள்ளிகள், பகவான் விஷ்ணுவின் கோயில்கள், இலவச மருத்துவமனை, அகண்ட சாலைகள், மற்றும் சந்தைகளை கட்டினார். அவர் நீரும் உணவும் அளிக்க ஏற்பாடுகள் செய்தார். அவர் குளிர்ந்த குடிநீருக்காக கிணறுகளையும், தூய குடிநீருக்காக குளங்களையும் தோண்டினார். அவர் பூக்களுக்கும், பழங்களுக்கும் தோட்டம் அமைத்தார். இதுபோன்று அவர் அவருடைய செல்வத்தை மக்களின் நலனுக்காக சரியான முறையில் பயன்படுத்தி அவருடைய பெயரின் உண்மையான அர்த்தத்தை நிலைநாட்டினார். இந்த பகவான் விஷ்ணுவின் உன்னதமான பக்தர் எப்பொழுதும் அமைதியாய் மற்றவர்களுக்கு உதவி செய்து பகவான் விஷ்ணுவின் சேவையில் ஈடுபட்ட இவருக்கு சமனா, த்யுதிமனா, மேதவி, சுக்ரிதி மற்றும் த்ருஷ்டிபுத்தி, என ஐந்து புதல்வர்கள் இருந்தனர். அவருடைய மகன் த்ருஷ்டபுத்தி மிகவும் பாவப்பட்டவன். அவர் மிகவும் தாழ்ந்து தீயவர்களுடன் பழகி.

தீண்டப்படாத பெண்ணுடன் அக்ரம சம்மந்தம் வைத்திருந்தான். அவன் சூதாடுவதிலும், மது அருந்துவதிலும், சந்தோஷப்பட்டான். மேலும் அவன் மற்ற உயிர்களை கொல்வதிலும், துன்புறத்துவதிலும் மகிழ்ச்சிப் பெற்றான். இதுபோன்று அவன் மிக பாவகரமான செயல்களில் ஈடுபட்டான். விரைவில் அவன் மிக உன்னத தந்தையின் குரூரமான மகனாக மாறி குடும்பத்திற்கு அவப்பேராக விளங்கினான். அவன் ஒரு போதும் தேவர்களுக்கும். விருந்தாளிகளுக்கும் மூதாதையர்களுக்கும் பிராமணர்களுக்கும் மரியாதை செலுத்தியதில்லை. அவன் எப்போதும் பாவ காரியங்களை செய்ய நினைத்துக் கொண்டு மிக தாழ்ந்த வாழ்வை வாழ்ந்துவந்தான். இந்த பாவப்பட்ட த்ருஷ்டபுத்தி தன் தந்தையின் செல்வங்களை தேவையற்ற செயல்களில் செலவழித்தான். அவன் எப்போதும் பாவப்பட்ட உணவை உட்கொண்டு எப்போதும் மது அருந்துவதில் ஈடுபட்டான். ஒருநாள் தன் மகன் ஒரு விபச்சாரியின் மேல் கையை போட்டுக் கொண்டு பொது இடத்தில் வெட்கமில்லாமல் போய்க் கொண்டிருந்ததை பார்த்து தனபாலன் மிகவும் துன்பப்பட்டார். அதே நாள் அவனுடைய மகனை வீட்டை விட்டு வெளியேற்றினார். அதன் பிறகு த்ருஷ்டபுத்தி தன் தந்தை, தாய், சகோதரர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பாசத்தை இழந்தான். அவன் சாதிச் சமுதாயத்திலும். உன்னத சமுதாயத்திலும் தாழ்த்தப்பட்டு அனைவரும் வெறுப்பவனாய் ஆனான்.

தன் தந்தையின் வீட்டிலிருந்த வெளியேற்றப்பட்ட பிறகு த்ருஷ்டபுத்தி தன் சொந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் விற்று தன் பாவ காரியங்களை தொடர்ந்தான். விரைவில் அதுவும் முடிவுக்கு வந்தது. சரியான உணவு உண்ணாததால் அவன் உடல் மெலிந்து சோர்ந்து காணப்பட்டான். அவன் ஏழையானதை அறிந்து அவனது நெருங்கிய நண்பர்கள் அவனை விட்டு விலகி அவனை பலவாறு பழித்தனர். இப்போது த்ருஷ்டபுத்தி மிகவும் வெறுப்படைந்தான். அவனிடம் உணவோ பணமோ இல்லை. அவன் பசியால் மிகவும் சோர்ந்து போனான். அதனால் அவன் தனக்குத்தானே நான் இப்போது என்ன செய்வது? எங்கு செல்வது? எதனால் நான் பிழைக்க முடியும்? என்று கேட்டுக் கொண்டான்.

இவ்வாறு கூறிக்கொண்ட பிறகு அவன் தான் பிழைப்பதற்கு திருடுவதைத் தவிர வேறு வழியில்லை என நினைத்தான். திருடவேண்டும் என்ற எண்ணத்துடன் அவன் ஊர்முழுவதும் திரிந்தான். சில சமயங்களில் அரசரின் காவலாளிகள் அவனை கைது செய்வார்கள். அவருடைய அப்பாவின் செல்வாக்கால் அவனை விடுவித்தனர். இவ்வாறாக பலமுறை கைது செய்யப்பட்டு விடுதலை அடைந்தான். அவன் மறுமுனை ஒரு பெரிய திருட்டிற்காக கைது செய்யப்பட்டான். அவன் அரசரிடம் அழைத்துச் செல்லப்பட்டு கடும் தண்டனைக்கு ஆளானான். அரசர் கூறினார். ஓ பாவப்பட்ட மூடனே, இனிமே நீ உன் பாவகாரியங்களால் இந்த இராஜ்ஜியத்தில் இருக்க முடியாது. நான் இப்போது உனனை விடுவிக்கிறேன். ஆனால் நீ இந்த இராஜ்ஜியத்தை விட்டு வேறு எங்காவது செல் என்றார்.

த்ருஷ்டபுத்தி மறுமுறை தண்டனைக்குள்ளாவதற்கு பயந்து இராஜ்ஜியத்தை விட்டு வெளியேறினான். அவன் நெடுந்தூரம் சென்று ஓர்அடர்ந்த காட்டிற்குள் சென்று விட்டான். அந்த காட்டிலும் அவன் பசியாலும் தாகத்தாலும் வாடினான். அதன்பின் அவன் மிருகங்களையும் பறவைகளையும் கொன்று அவற்றின் மாமிசத்தை அப்படியே உண்டான். இவ்வாறாக அவன் காட்டில் பலவருடங்கள் ஒரு வேடனைப் போல் கையில் வில்லும், அம்பும் வைத்துக்கொண்டு, மிருகங்களைக் கொன்று பாவ காரியங்களில் ஈடுபட்டு வந்தான். த்ருஷ்டபுத்தி எப்போதும் புரியாதவனாய் பேசப்பட்டு வாழ்ந்து வந்தான். ஆனால் ஒரு நாள் தன்னுடைய முந்தைய புண்ணியச் செயல்களால் அவன் பெரும் முனிவரான கவுந்தின்ய முனிவரின் ஆசிரமத்திற்கு காட்டை சுற்றிப் பார்க்கும் போது வந்தான்.

அது வைகாசி (ஏப்ரல் / மே) மாதமாகும். மற்றும் பெரும் முனிவரின் கவுந்தின்யர் கங்கையில் நீராடிவிட்டு ஆசிரமத்திற்கு வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மனவருத்தத்துடன் பாவங்களுடன் இருந்த திருஷ்டபுத்தி முனிவரின் ஆடையில் இருந்து வந்த ஒரு துளி நீரை தொட்டான். உடனே த்ருஷ்டபுத்தி தன் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டான். அவன் கைகட்டி மரியாதையுடன் கவுந்தியை முனிவரிடம் கேட்டான். ஓ சிறந்த பிராமணரே நான் மிகவும் பாவப்பட்ட மனிதன் நான் செய்யாத பாவமே கிடையாது. இப்போது என்னைப் போன்ற மனிதர்கள் எளிமையாக கடைப்பிடிக்கக்கூடிய ஒரு மிகச் சிறந்த விரதத்தைப் பற்றி கூறுங்கள். நான் கணக்கில்லாத பாவச் செயல்கள் செய்திருப்பதால் என் வீடு, செல்வம், உறவினர்கள் மற்றும் நண்பர்களை இழந்துள்ளேன். நான் அறியாமைக்கடலில் மூழ்கியுள்ளேன் என்றான்.

த்ருஷ்டபுத்தியின் இந்த வாக்கியங்களைக் கேட்டபிறகு மற்றவரின் துன்பத்தை பார்த்து பெருமுனிவர் கவுந்தின்யர் துன்பமடைந்தார். நான் எனக்கு மிகக்குறைந்த நேரத்தில் உனது பாவங்களை அழிக்கக்கூடிய ஒருமுறையைக் கூறுகிறேன். இதை கவனமாகக் கேள். ஏப்ரல் / மே மாதங்களின் வளர்பிறையில் தோன்றக்கூடிய மோஹினி ஏகாதசி பெருமலை அளவுள்ள பல பிறவிகளின் பாவங்களைக்கூட அழிக்க கூடியது. அதனால் நீ நம்பிக்கையுடன் இந்த ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும். பெரும் முனிவரிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட த்ருஷ்டபுத்தி மிகவும் மகிழ்ச்சியடைந்து முனிவர் கூறிய விதிமுறைகள்படி ஏகாதசியை கடைபிடித்தான். ஓ அரசர்களில் சிறந்தோனே! இந்த மோஹினி ஏகாதசியை அனுஷ்டித்தால் மிகவும் பாவப்பட்ட த்ருஷ்ட புத்தி எல்லா பாவ விளைவுகளிலிருந்து விடுபட்டு, ஒரு திவ்ய உடலைப் பெற்று கருடரின் மேல் விஷ்ணுவின் தாமதத்திற்கு சென்றான். ஓ இராமச்சந்திரா, இந்த விரதம், ஒருவரை எல்லாவிதமான மாயையிலிருந்தும், அறியாமை என்னும் இருளிலிருந்தும் விடுவிக்கின்றது. புண்ய தீர்த்தங்களில் நீராடுவதாலும், தானமளிப்பதாலும், யாகங்கள் செய்வதாலும் வரும் புண்ணியம் இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் வரும் பலனிற்கு ஈடாகாது

ஏகாதசி அன்று செய்ய வேண்டியதும்,
செய்யக் கூடாததும் என்ன ?
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஏகாதசி முழுவதும் பகவானின் நாமம் சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரக மந்திரமான “
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே”
எனும் மஹாமந்திரத்தைத் குறைந்தது-108-16×108- 25× 108-சுற்று உச்சரிப்பது மிகவும் சிறந்தது. ஏகாதசி அன்று அவசியம் கோயிலுக்குச் சென்று ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும். ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை நூல்களை படிப்பதும், கேட்பதும் மிகவும் நல்லது.
ஏகாதசி அன்று சினிமா செல்வதோ, பரமபதம் ஆடுவதோ, வீண் பேச்சுக்களில் காலத்தை விரயம் செய்வதோ அல்லது வீணாக உறங்குவதோ விரதத்திற்கு சற்றும் உதவாது. தவிர, திருமணம் போன்ற உலக காரியங்களை ஏகாதசி அன்று தவிர்ப்பது நல்லது

Saturday, May 2, 2020

வத்தப்பழம் water Mellon வாங்கும் போது நல்ல முற்றிப்பழுத்து இனிப்பாக இருக்கக்கூடிய பழம் வாங்குவதற்கு வாங்கும் போது அவதானிக்க வேண்டியவை

அசைவம் உண்பதால் வரும் பாவங்களும் / அதன் விளைவுகளும்





🐐தன்னுடைய சொந்த வாழ்விற்காக, மற்ற உயிர்களைக் கொல்லக்கூடிய கொடூரமான நபரை கொன்றுவிட வேண்டும் என்றும், அவ்வாறு கொல்வது அவனுக்கு நன்மை பயக்கும் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (1.7.37) கூறுகின்றது. ஏனெனில், ஓர் உயிரைக் கொல்வதால் அவன் அடையும் பாவத்திலிருந்து அந்த தண்டனை அவனைக் காப்பாற்றும் என்று குறிப்பிடுகிறது.

🐓கலி எனும் பாவ புருஷன் குடியிருக்கும் நான்கு இடங்களில் மாமிசம் உண்ணும் இடமும் ஒன்றாகும். (ஸ்ரீமத் பாகவதம் 1.17.38) மாமிசம் உண்ணும் இடத்தில் கருணை மனப்பான்மை அடியோடு அழிவதால், கலியின் கேடுகள் அவ்விடத்தினை அடைகிறது. கலி வீற்றிருக்கும் இடத்தில் அமைதியும் உண்மையான மகிழ்ச்சியும் இருக்க முடியாது என்பதால், மாமிசம் உண்பவர்களிடத்தில் அமைதியும் உண்மையான மகிழ்ச்சியும் நிச்சயம் இருப்பதில்லை. மேலும், அப்பாவி மிருகங்களை தனது சொந்த மகிழ்ச்சிக்காக கொன்று உண்பவன் இப்பிறவியில் மட்டுமின்றி மறுபிறவியிலும் மகிழ்ச்சியடைய மாட்டான் என்று மனுசம்ஹிதை (5.54) கூறுகின்றது.

🦆 உணவிற்காகவும் நாவின் சுவைக்காகவும், விலங்குகள் மற்றும் பறவைகளைக் கொல்லும் கொடிய மனிதர்கள் நரக வேதனையினை அனுபவிக்க வேண்டும்; இவர்கள் கும்பீபாகம் என்னும் நரகத்திற்கு எம தூதர்களால் தூக்கிச் செல்லப்பட்டு, அங்கே கொதிக்கும் எண்ணெயில் போடப்படுகின்றனர் என்று ஸ்ரீமத் பாகவதம் (5.26.13) கூறுகின்றது.


🐓மேலும், மிருகவதையை அனுமதிப்பவர், மிருகத்தைக் கொல்பவர், மாமிசத்தை விற்பவர், வாங்குபவர், சமைப்பவர், பரிமாறுபவர், உண்பவர் ஆகிய அனைவரும் பாவிகளாகவே கருதப்படுவார்கள் என்று மனுசம்ஹிதை (5.51) குறிப்பிடுகிறது. மேலும், எந்த மிருகத்தை ஒருவர் உண்கிறாரோ, அந்த மிருகம் அதன் மறுபிறவியில் அந்த மனிதனை உண்ணும் என்றும் மனு சம்ஹிதை (5.55) கூறுகிறது

🐖மற்ற உயிர்களைத் துன்பப்படுத்தும் மனிதர்கள், வேதங்களை ஓதினாலும் தவங்கள் செய்தாலும் தான தர்மங்கள் செய்தாலும் ஸ்வர்கத்திற்குச் செல்ல இயலாது என்றும், அஹிம்சையே மிகப்பெரிய புண்ணியம், பெரும் தவம், பெரும் தானம் என்றும் பத்ம புராணம் (3.31.25-28) குறிப்பிடுகிறது.

🐇மிருகங்களும் நம்மைப் போலவே உண்கின்றன, உறங்குகின்றன, இனப்பெருக்கமும் செய்கின்றன; ஆனால் அவை சற்று அறிவு குறைந்து காணப்படுவதால் அவற்றைக் கொல்லலாம் என்று கருதுவது முட்டாள்தனம். நமது குடும்பத்தில் இருக்கும் சகோதரர் ஒருவர், அறிவிற் குறைந்தவராக அல்லது சற்று இயலாதவராக இருந்தால், அவரைக் கொல்லலாமா? அத்தகு கொலை நாட்டின் சட்டத்தினால் எவ்வாறு குற்றமாக கருதப்படுமோ, அவ்வாறே விலங்குகளைக் கொல்வதும் கடவுளின் சட்டத்தினால் குற்றமாக கருதப்படுகிறது.

மிருகங்களை பலி கொடுக்கலாமா?
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🐏 அசைவ உணவு உண்பவர்களில் சிலர், விலங்குகளை சில கோயில்களில் வைத்து பலியிட்டு உண்கின்றனர். அவ்வாறு உண்பதால் பாவங்கள் தங்களை தீண்டாது என்றும் நினைக்கின்றனர். ஆனால் அஃது உண்மையல்ல. கொலை செய்பவர்கள் நிச்சயம் அதற்கான பலனை அனுபவித்தேயாக வேண்டும், அதிலிருந்து தப்பிக்க இயலாது. பின்னர் ஏன் சில கோயில்களில் மிருகங்கள் பலியிடப்படுகின்றன?

🦙 அசைவ உணவு உண்ண விரும்பும் கீழ்நிலை மக்களை ஓரளவிற்காவது கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த மிருக பலிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதன்படி, ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று மிருக பலியில் ஈடுபடுபவன், இயற்கையாகவே இதர நாள்களில் மாமிசம் உண்பதிலிருந்து தடுக்கப்படுகிறான்; அதாவது, அவனது பாவத்தின் அளவு குறைக்கப்படுகிறது. மேலும், தனது கண்களுக்கு முன்பாக விலங்குகள் கொல்லப்படுவதைக் காணும்போது, மாமிசம் உண்பதற்கான ஒருவனது எண்ணம் குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, “மிருகமே, நான் உன்னை இந்த பிறவியில் கொல்கிறேன், நீ என்னை மறுபிறவியில் கொலை செய்துகொள்ளலாம்,” என்ற பொருளுடன்கூடிய மந்திரத்தை கேட்டுக்கேட்டு, அவன் திருந்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

🐐ஆனால், இன்றைய நிலையோ தலைகீழாக உள்ளது. கோயிலுக்குச் சென்று மிருக பலி கொடுப்பவர்கள் யாரேனும் இதர நாள்களில் மாமிசம் உண்ணாமல் உள்ளனரா? முறையான மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றதா? அதன் அர்த்தங்கள் புரிந்துகொள்ளப்படுகின்றதா? நிச்சயம் இல்லை.

யாகத்தில் பலி கொடுத்தல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🐂 பலி கொடுப்பதில் மற்றொரு வகை: யாகத்தில் பலி கொடுத்தல். அஸ்வமேத யாகத்தில் குதிரையும் கோமேத யாகத்தில் பசுவும் பலியிடப்படுவது வழக்கம்; யாகத்தின் வெற்றி என்பது அதனை நடத்தும் முனிவர்களைப் பொறுத்ததாகும். உயர்ந்த முனிவர்களால் நிகழ்த்தப்படும் மாபெரும் யாகங்களில் மந்திரங்கள் முறையாக உச்சரிக்கப்பட்டனவா என்பதை சோதிக்கும் பொருட்டு, அதன் இறுதியில் மிருகங்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. மந்திரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், அந்த மிருகம் மானிட உடலை ஏற்பதை அங்கு கூடியிருப்பவர்கள் நேரில் காண முடியும்; மந்திரங்கள் சரியாக இல்லாவிடில், மிருகம் மடிந்துவிடும், முனிவர்கள் அதற்கான பாவத்திற்கு ஆளாவர். சரியான முறையில் மந்திரங்களை உச்சரிக்கும் தகுதி வாய்ந்த முனிவர்கள் இல்லாத காரணத்தினால், இத்தகு யாகங்கள் கலி யுகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன

🐂 மிருக பலி கொடுப்பதில் இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கையில், மனம்போன போக்கில் பலி கொடுப்பவர்களுக்கு கொடூரமான பாவங்களே பலனாகக் கிட்டும்.

தாவர உணவு உண்பது பாவமில்லையா?
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌾 பெரும்பாலான அசைவ உணவு பிரியர்கள் எழுப்பும் கேள்வி: தாவர உணவு உண்பது மட்டும் பாவமில்லையா? அதுவும் உயிர்கள்தானே?
***************************************

🌾 ஆம். தாவரங்களை உண்பதும் பாவமே. இருப்பினும், ஓர் உயிர் மற்றோர் உயிரைச் சார்ந்து வாழ்வதே இயற்கையின் நியதி, ஜீவோ ஜீவஸ்ய ஜீவனாம், என்று ஸ்ரீமத் பாகவதம் (1.13.47) குறிப்பிடுகிறது. அதன்படி, மனிதனுக்கென்று விதிக்கப்பட்டுள்ள உணவு தாவர உணவாகும். மிருகங்களுக்கு அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப, தாவர உணவோ இறைச்சியோ இயற்கையால் விதிக்கப்பட்டுள்ளது; மிருகங்கள் இயற்கையின் நியதியை மீறுவதில்லை. புலி புல்லைத் தின்பதில்லை, பசுவும் மாமிசத்தை உண்பதில்லை. அதுபோலவே, மனிதனும் இயற்கை நியதிக்கு உட்பட்டு தாவர உணவை உட்கொள்வதற்கு அனுமதிக்கப்படுகிறான்.

🍋 மேலும், மிருகங்களுடைய உணர்வு வளர்ச்சியானது தாவரங்களின் உணர்வைக் காட்டிலும் பல நூறு மடங்கு அதிகமானது என்பதால், ஓர் உருளைக்கிழங்கை நிலத்திலிருந்து எடுப்பதற்கும் ஓர் ஆட்டினைக் கொல்வதற்கும் பரந்த வித்தியாசம் உண்டு. சுருக்கமாகக் கூறினால், விலங்கைக் கொல்லும்போது ஏற்படும் பாவம், தாவரங்களை உண்பதால் ஏற்படும் பாவத்தைவிட பல நூறு மடங்கு அதிகமானதாகும்.

🍎அவ்வாறு இருப்பினும், தாவரங்களும் உயிர்வாழிகளே என்பதால், அவற்றை உண்பதும் உயிர்க் கொலையைப் போன்றதே என்பதால், தாவர உணவு உண்பவர்கள்கூட உண்பதற்கு முன்பாக, அந்த உணவினை பகவானுக்கு அர்ப்பணித்து, பிரசாதமாக உண்ணும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அர்ப்பணிக்காத உணவை உண்பவன் பாவத்தையே உண்கிறான் என்று பகவத் கீதை (3.13) கூறுகின்றது. மேலும், உணவை கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக ஏற்பவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான் என்றும் கூறப்படுகிறது.

🌽 ஆகையால், தாவர உணவை உண்பவர்களின் பாவம் குறைவான பாவம் என்றபோதிலும், அதிலிருந்தும் விடுபட, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து உணவை பிரசாதமாக ஏற்க வேண்டும் என்பது சாஸ்திர விதி.

பால், பசுவின் இரத்தமாயிற்றே?
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

அசைவ உணவு பிரியர்களின் மற்றொரு வாதம்: பால், பசுவின் இரத்தமாயிற்றே, எவ்வாறு உண்ணலாம்?
***************************************

🐄 மனிதர்களின் அன்றாட தேவைக்கும் ஸத்வ குணத்தின்படி வாழ்வதற்கும் பால் மற்றும் பால் பொருட்கள் இன்றியமையாத உணவாக சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. சாஸ்திரங்களின் பரிந்துரை ஒருபோதும் பிழையாகாது. ஒரு செயல் பாவமா புண்ணியமா என்பதை நாம் நமது சொந்த அறிவைக் கொண்டு தீர்மானிக்கக் கூடாது, தீர்மானிக்கவும் இயலாது. பால் மற்றும் பால் பொருட்களினால் ஸத்வ குணம் மேலோங்கி, நல்ல குணங்களும் நல்ல எண்ணங்களும் வளர்ச்சி பெறுகின்றது என்பதை நடைமுறையில் ஒவ்வொருவரும் உணர முடியும்.

🐂 இயற்கையின் அமைப்பால், பசுவானது தனது கன்றின் தேவைக்கு அதிகமாகவே பாலைச் சுரக்கின்றது. அதிகப்படியான அந்த பாலை கன்று குடித்தால், கன்றுக்கு தீமையே உண்டாகும்; கறக்காமல் விட்டால் பசுவிற்கு துன்பத்தை தரும். அதுமட்டுமின்றி, பாலை பசுவிடமிருந்து கறப்பதால் யாரும் பசுவைக் கொல்வதில்லை. ஓர் உயிரைக் கொன்று பெறப்படும் இரத்தத்தையும் பாலையும் மூடர்கள் மட்டுமே சமன்படுத்துவர்.

🐄 ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழு தாய்மார்கள் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அதில் பசுவும் ஒன்றாகும். ஒவ்வொரு குழந்தையும் தாயின் பாலைக் குடித்தே வளர்கிறது. தாயின் பாலை அருந்தும் குழந்தை தாயைக் கொல்வதாக அர்த்தமில்லை; அதுபோலவே, பசுவின் பாலை அருந்துபவர்கள் பசுவைக் கொல்வதாக அர்த்தமில்லை. மேலும், தாயை கால காலத்திற்கும் காப்பாற்ற வேண்டிய கடமை குழந்தைக்கு இருப்பதைப் போலவே, பசுவையும் கால காலத்திற்கும் காப்பாற்ற வேண்டிய கடமை மனித சமுதாயத்திற்கு உள்ளது.

முட்டை உண்ணலாமா?
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🥚 முட்டையைத் சைவ உணவு என்று கூறி அதனை உண்பவர்கள் ஏராளமானோர். ஆனால் உண்மையில் முட்டைக்கும் தாவர உணவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முட்டைகளை உண்பது கருக்கொலைக்குச் சமமாகும். மேலும், குறுகிய காலத்தில் அதிக முட்டைகளைப் பெறுவதற்காக, கோழிப் பண்ணைகளில் கையாளப்படும் கொடிய பாவங்கள் நிச்சயமாக அந்த முட்டைகளிலும் அதை உண்பவர்களிடமும் வந்து சேர்கிறது. முட்டையிட்டு முடிந்தவுடன் அந்தக் கோழிகள் கொல்லப்படுகின்றன, அந்த கொடிய பாவத்திற்கு முட்டை உண்பவர்களும் உடந்தையாகின்றனர்.

🐓🥚 சிலர், கோழிப் பண்ணைகள் உருவாக்கும் குஞ்சு பொறிக்காத முட்டைகளை மட்டுமே நாங்கள் உண்கிறோம், இதில் என்ன பாவம் என்பர். ஆனால் இந்த முட்டைகள் கோழிகளின் மாதவிடாய்க்குச் சமமானது என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஒவ்வொரு மாதமும் வேண்டாத விஷயங்கள் எவ்வாறு மாதரால் வெளியேற்றப்படுகிறதோ, அவ்வாறே குஞ்சு பொறிக்காத கோழியும் தன்னுடைய கழிவுகளை முட்டையின் வடிவில் வெளியேற்றுகின்றன. இதுவே குஞ்சு பொறிக்காத முட்டையின் ரகசியம்

கொன்றால் பாவம்
தின்றால் போகுமா?
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🐐 அசைவ உணவை உண்பதில் இவ்வளவு பிரச்சனைகள் பாவங்கள் இருக்கும்போது, சிலர் முட்டாள்தனமாக, “கொன்றால் பாவம், தின்றால் போச்சு” என்று உளறுகின்றனர். இந்த பேச்சுக்கு, மக்களின் மூடத்தனத்தைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை. கொன்று தின்பதால், மேன்மேலும் பாவத்தைச் சேகரிக்கின்றோமே தவிர, பாவத்தைக் களைதல் என்பது சாத்தியமே இல்லை. எந்தவொரு சாஸ்திரத்திலும் அவ்வாறு கூறப்படவில்லை. கொன்றால் பாவம், தின்றால் போச்சு என்னும் வாதங்கள், நாவினைக் கட்டுப்படுத்த இயலாத நயவஞ்சகர்களின் வார்த்தைகளாகும். இதில் துளியளவும் உண்மையில்லை.

🦀 அசைவ உணவுப் பிரியர்கள் இதுபோன்ற போலியான பழமொழிகளை உருவாக்கி தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்ள முயற்சி செய்யலாம். ஆனால் அத்தகு சமாதானங்கள் உண்மையான பலனைக் கொடுக்குமா? நிச்சயமாக இல்லை. சினிமாக்காரர்களும் நாஸ்திகர்களும் பாடல்களை வேண்டுமானால் எழுதலாம், ஆனால் பாவம் என்றும் பாவ விளைவைக் கொடுத்தே தீரும்.


🐢 நீங்கள் கொல்வதால் விளையும் பாவம், அந்த உயிர்வாழி உங்களைத் திண்ணும்போது போகலாம்; அல்லது அந்த பாவத்திற்காக நீங்கள் நரகத்திற்குச் சென்று, உங்களுடைய சதையை நீங்களே திண்ணும்படி சித்ரவதை செய்யப்படுவீர்களே, அப்போது வேண்டுமானால் போகலாம். எனவே, கொல்வதால் விளையும் பாவம், அதைத் தின்பதால் நிச்சயம் போகாது; மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும். போலியான பழமொழிகளை நம்பி ஏமாற வேண்டாம்.

அசைவ உணவை விடுவதற்கு வழி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🐐 மாமிசத்தை பிரதான உணவாக உண்டுவந்த மேலை நட்டவர்கள்கூட, இன்று மாமிச உணவின் கெடுதிகளை உணர்ந்து அவற்றை பெருமளவில் கைவிட்டு வருகின்றனர். எனவே, அசைவ உணவினைக் கைவிடுவது என்பது ஒன்றும் கடினமான செயல் அல்ல.

🐟 சிலர் அசைவத்தின் கெடுதிகளை அறிந்தும்கூட, அதனைக் கைவிட முடியாமல் தவிக்கின்றனர்; பலர் உணர்ச்சிபூர்வமாக சிறிது காலம் கைவிட்டுவிட்டு, வாய்ப்பும் சூழ்நிலையும் அமையும் போது மீண்டும் தொடர ஆரம்பித்து விடுகின்றனர். நீண்ட காலமாக அசைவ உணவை உண்டதால் ஏற்பட்ட பாவங்களின் ஆதிக்கமே இதற்கு காரணமாக அமைகிறது. குறிப்பாக, நம் ஆழ்மனதில் அசைவத்தின் மீதான ஆசை முழுமையாக மாறாததும் காரணமாகும்.

👅👻 இந்த பாவத்திற்கு முதல் முக்கியக் காரணகர்த்தா யார் என்றால், நாக்குதான். ஆம்! ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி நாக்குதான். நாக்கை மட்டும் கட்டுப்படுத்திவிட்டால் அனைத்து முயற்சிகளும் வெற்றியே! “நாக்கு அடக்க முடியாததும் ஆற்றல் வாய்ந்ததுமாகும். இந்நாக்கை வெல்வது மிகவும் கடினமானது. ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கருணையுடன் பிரசாதத்தினை வழங்கி நாம் நமது நாக்கை அடக்குவதற்கு உதவுகிறார். இந்த பிரசாதத்தை ஏற்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தை பாடிப் புகழுங்கள். இதுவே நாக்கை வெல்லும் எளிய வழியாகும்.”

🍁ஆம். உண்மையே! பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய நாமத்தை உச்சரித்ததாலும், அவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதத்தை உண்டதாலும் இலட்சக்கணக்கான பேர் எந்தவொரு சிரமமும் இன்றி அசைவத்தை வென்றுள்ளனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்திலும் பிரசாதத்திலும் எண்ணற்ற சக்திகள் அடங்கியிருக்கின்றன. எனவேதான், கருட புராணம், “சிங்கம் கர்ஜிக்கும்போது சிறு விலங்குகள் பயந்து ஒடுவதுபோல், பாவங்கள் அனைத்தும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கும்போது நம்மை விட்டு விரைவில் நீங்குகின்றன” என்று குறிப்பிடுகிறது. கிருஷ்ண பக்தி, கிருஷ்ண பிரசாதம் என்னும் உயர்ந்த சுவையை அனுபவிப்பதால், தாழ்ந்த சுவைகள் தானாக விலகிவிடும் என்று பகவத் கீதையும் (2.59) குறிப்பிடுகிறது

பாவகரமான உணவுகளைத் தவிர்ப்போம்! கிருஷ்ண பிரசாதத்தினை ஏற்போம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

#குழப்பமான_பிரச்சனைகளுக்கு_தீர்வு_காண_1_எலுமிச்சை_பழம்_போதும்.



பொதுவாகவே குழப்பமான பிரச்சனைகள் என்றாலும், தீர்க்கவே முடியாத பிரச்சனைகள் என்றாலும், கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனின் பாதங்களை போய் சரணடைவது தான் இயல்பு. சில பேருக்கு வாழ்வில் ஏற்படும் குழப்பமான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் இருப்பதனாலேயே தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும். இப்படிப்பட்ட மன குழப்பத்தினால் இரவில் தூக்கம் சரியாக வராது. இரவில் நன்றாக தூக்கம் வரவில்லை என்றால், பகலில் செய்யும் வேலையில் ஆர்வம் காட்ட முடியாது. ஆர்வம் இல்லாமல் செய்யும் எந்த வேலையும் வெற்றியை தொடாது. இப்படி இருக்க, இந்தப் பிரச்சினைக்குச் சுலபமான ஒரு தீர்வு உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே கல் உப்புக்கும், எலுமிச்சை பழத்திற்க்கும் கெட்ட சக்தியை ஈர்த்துக் கொள்ளும் சக்தி அதிகமாக உள்ளது என்பதை நம்மில் பலர் அறிவோம். எலுமிச்சை பழம் என்றால் குறிப்பாக அம்மனுக்கு மிகவும் உகந்தது. முடிந்தவரை உங்களுடைய குலதெய்வம் அம்மனாக இருந்தால், அது எந்த அம்மனாக இருந்தாலும் சரி. அந்த குலதெய்வத்தின் மடியில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய மனக் குழப்பங்கள் அனைத்தும் தீர வேண்டும். நிம்மதியான தூக்கம் வேண்டும். மன அமைதி வேண்டும் என்றவாறு வேண்டிக்கொண்டு, அந்த எலுமிச்சம் பழத்தை அர்ச்சனை செய்து பெண்களாக இருந்தால் உங்கள் முந்தானையில் அந்த பழத்தை வாங்கவேண்டும். ஆண்களாக இருந்தால் மேலே போடும் அங்கவஸ்திரம் துணியில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

உங்களுடைய குலதெய்வம் அம்மனாக இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் வீட்டு அருகில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவிலுக்கு சென்று இப்படி செய்து வரலாம். வாங்கிய எலுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். குறிப்பாக செவ்வாய்க்கிழமை செய்தால் நல்ல பலன் உண்டு. அன்று சுத்தபத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம். அசைவம் சாப்பிடக்கூடாது. பூஜை அறையில் எலுமிச்சை பழத்தை தரையில் படும்படி வைக்கக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் கைநழுவி அந்த எலுமிச்சை பழத்தை தரையில் விட்டுவிடக்கூடாது.

செவ்வாய்க்கிழமை இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு, நீங்கள் தூங்கும் அந்த அறையில் நான்கு திசைகளிலும் நான்கு வெள்ளை காகிதங்களை வைத்து, அந்த காகிதத்தின் மேல் ஒரு கைப்பிடி அளவு உப்பை வைத்து, அந்த உப்பின் மேல் பக்கத்தில், அம்மன் கோவிலில் இருந்து வாங்கி வந்த எலுமிச்சம்பழத்தை நான்காக வெட்டி, குங்குமம் தடவி, நான்கு திசைகளிலும் நீங்கள் வைத்திருக்கும் பேப்பர் கல் உப்பின் மேல் இந்த பழத்தை, வைத்துவிட வேண்டும்.

மறுநாள் காலை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கட்டி, கால் படாத இடத்தில் தூரமாக போட்டுவிட வேண்டும். பரிகாரம் இவ்வளவுதான். இதை நம்பிக்கையாக செய்யும் பட்சத்தில் மிக மிக நல்ல பலன் உண்டு. உங்களுக்கு அந்த தினம், அதாவது பரிகாரத்தை செய்யும் அந்த இரவு கெட்ட கனவுகள் வரலாம். அல்லது வித்தியாசமான உணர்வினை நீங்கள் அடையலாம்.

எப்படியாக இருந்தாலும் உங்களுக்கு பிடித்த கஷ்டம் உங்களை விட்டு நீங்கி விட்டது என்பதைக் குறிப்பதாக தான் அர்தம். இந்த பரிகாரத்தை செய்த மறுதினமே எந்தவித மன கஷ்டமும் இல்லாமல் நிம்மதியான தூக்கம் உங்கள் கண்களை தழுவும். உடனடியாக பலன் தரக்கூடிய பரிகாரம் இது. பிரச்சினைகளுக்கான தீர்வினை எடுப்பதற்கான மன தைரியமும் அதிகரிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.