Thursday, August 30, 2018

வெள்ளை_முடியை_கருமையாக_மாற்றும் 5 அற்புத_வழிகள்!

நரை முடி என்பது 30 வயதில் ஆரம்பிக்கும் என்பது போய், 20 வயதுகளிலேயே ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு காரணம் உபயோகப்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கலரிங், நீர், மன அழுத்தம் என பல காரணங்களை சொல்லலாம். நரை முடி வந்த பின்னும் உங்கள் முடியை கருமை நிறத்திற்கு மாற்றலாம். நீங்கள் கெமிக்கல் டை உபயோகிக்காத வரை. இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தினால் நரை முடி நாளடைவில் கருமையாக மாறும் என்பது உறுதி. தொடர்ந்து உபயோகிக்கும்போது முடி மேலும் நரைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. அவுரி + மருதாணி : அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். இதனை முடிகேற்ற அளவில் எடுத்து, சம அளவு மருதாணிபொடியுடன் அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நெறத்தில் மாறும். தேயிலை மாஸ்க் : தேயிலையை பொடியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் த்டவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் குளித்தால் நரை முடி கறுமையாக மாறும். பிராமி + கருவேப்பிலை : ஒரு கொத்து கருவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் 2 டீ ஸ்பூன் பிராமி பொடி ஆகிய்வற்றை கலந்து அரைத்துக் கொள்ளுங்கல். இந்த கலவையை உங்கள் வேர்கால்களில் படும்படி தலையில் தடவுங்கள். 1 மனி நேரம் கழித்து தலைக்கு தரமான ஷாம்பு அல்லது சீகைக்காய் உபயோகித்து குளிக்கவும். வாரம் 2 முறை பயனளிக்கும். தேங்காய் எண்ணெய் + எலுமிச்சை சாறு : தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவுங்கள். இது தலையில் ராசாயன விளைவுகளை ஏற்படுத்தி, முடியை கருமையாக்குகிறது. வாரம் இருமுறை செய்தால் கூந்தல் கருமை நிறத்தில் கட்டாயம் மாறும். நெல்லிக்காய் எண்ணெய் : ஒரு இரும்பு வாணிலியில் 1 கப் நெல்லிக்காய் பொடியை வறுங்கள். அது சாம்பலாகும் வரை வறுத்து அதில் 500 மி.லி. தேங்காய் எண்ணெயை விடவும். அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்திருங்கள். 20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். இந்த எண்ணையை குளிர வைத்து ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருங்கள். பின்னர் அதனை வடிகட்டி அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் நரை முடி நாளடைவில் கருமையாகிவிடும். மிகவும் பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.

Wednesday, August 29, 2018

மூட்டுவலி முதுகுவலி இவை இரண்டிற்குமே சித்தர்கள் சொன்ன மருந்து பூண்டுப்பால்

இன்றைய உலகில் 20 வயது இளைஞர்களிடம் கூட காணப்படுகிறது இந்த முதுகு வழி கைகால் வலி. அந்த அளவிற்கு நாம் உண்ணும் சத்தற்ற உணவுகளால் நமது உடலில் உள்ள வலிமை குறைந்து மறைந்து விட்டது. அக்காலத்தில் இருந்த மாதிரி வெளி விளையாட்டுகள் இப்பொழுது இல்லை. பொழுதுக்கும் உட்கார்ந்தே இருப்பது, பைக்கில் அதிகநேரம் பயணிப்பது போன்ற காரணங்களால் இப்பொழுது இந்த முதுகு வலியும் மூட்டு வலியும் பரவலாக அனைவருக்கும் காணப்படுகிறது. இந்த மூட்டுவலியும் முதுகு வலியும் வருவதற்கான அறிகுறி வரும்போதே அதை கட்டுப்படுத்துவதற்காக அன்றே நமக்கு சித்தர்கள் அருளிய அருமருந்து பூண்டுப் பால். பூண்டு நம் உடலில் உள்ள 75 சதவிகித பிரச்சினைகளுக்கு ஒரு அருமருந்தாகும். பூண்டுப்பால் செய்வது எப்படி ஒரு டம்ளர் பாலிற்கு பூண்டின் அளவை பொருத்து 3 அல்லது 4 பல்லுகள் தட்டி போட்டு பாலை நன்கு கொதிக்க விட வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும் பாலை இறக்கி பூண்டை நாகு மசித்து விட வேண்டும். சுவைக்காக தேவைப்பட்டால் தரமான தேன் அல்லது பனங்கற்கண்டை சேர்த்துக்கொள்ளலாம். இந்த பூண்டு பாலை, காலை மாலை என இருவேளையும் பருகலாம். சிறியவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் பருகலாம். பயன்கள் பூண்டுப்பாலை இருவேளையும் 15 நாட்கள் தொடர்ந்து குடித்துவர உங்கள் முதுகு மற்றும் மூட்டு வலி குறைவதை நன்கு உணர முடியும் அலர்ஜிநோயால் அதிகம் தாக்கப்படுபவர்களுக்கு இந்த பூண்டுப்பால் ஒரு அருமருந்தாகும் செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல மாறுதல் தெரியும் இந்த பூண்டுப்பால் நுரியீரல் அலர்ஜியை போக்குகிறது தாய்ப்பால் இல்லாத தாய்மார்கள் இந்த பூண்டுப்பாலை குடித்து வந்தால் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரக்கப் பெறுவார்கள்

நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள்

1. கருப்பு கவுணி அரிசி மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும். 9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும். 11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13. கார் அரிசி : தோல் நோய் சரியாகும். 14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும். 15. கிச்சிலி சம்பா அரிசி : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 16. நீலம் சம்பா அரிசி : இரத்த சோகை நீங்கும். 17.சீரகச் சம்பா அரிசி : அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 18. தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும். 19. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும். 20.சேலம் சன்னா அரிசி : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 21. பிசினி அரிசி : மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 22. சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 24. வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் வரும

Tuesday, August 28, 2018

கண் திருஷ்டியை எப்படி கண்டுபிடிப்பது?

கண் திருஷ்டியை எப்படி கண்டுபிடிப்பது? அதற்கு என்ன செய்ய வேண்டும? உப்புக்குளியல், கண் திருஷ்டி, கண்ணடி கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்கு கிடைக்கும்போது அதிக மனஉளைச்சல், ஆற்றாமை, பொறாமை உண்டாகி அது பொறுமலாக உருவெடுக்கிறது. இந்த தீய எண்ணம் நம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகிறது. எனவேதான் பெரியோர்கள் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்று சொன்னார்கள். எப்படி கண்டுபிடிப்பது? நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம். திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்னை காத்துக் கொண்டு இருக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும். இதன்மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம். என்ன செய்யலாம்? மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம். உப்புக்குளியல் வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம். எலுமிச்சம்பழம் வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும். கடல் நீர் வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம். திதிகள் அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

Monday, August 27, 2018

பேய்மிரட்டி பெரும் தும்பை எனும் மூலிகை

இப்போ நம்ப பேய்மிரட்டி பெரும் தும்பை எனும் மூலிகை பற்றி பார்க்க போகிறோம் இந்த மூலிகை அமானுஷ்யம் நிறைந்தவை ஒரு விளக்கில் எண்ணெய் ஊற்றி திரிக்கு பதிலாக இதன் இலையை போட்டு விலக்கு ஏற்றினால் விலக்கு நன்றாக எரியும் பௌர்ணமி நாள் மட்டுமே விலக்கு எற்ற வேண்டும் இந்த மூலிகை இலையால் அவ்வாறு செய்தால் வீட்டில் இலட்சுமி குடியேறுவாள் அனைத்து துர்சக்திகலும் வீட்டை விட்டு அகலும் பேய் பிடித்தவரை இந்த செடியின் கிளைகளை சிரிது எடுத்து வந்து பாடம் போட்டாள் பேய் இருக்கும் இடம் தெறியாமல் ஓடிவிடும் என்று சித்தர் பெருமான்கள் சொல்லியிருக்கிறார்கள் இதை மருத்துவத்தில் பயன்படுத்தும் முறையை சொல்கிறேன் இது மூட்டுவலிக்கு பெரும் பங்கு வகிக்கிறது இதில் ஏராளம் மருத்துவ குனம் உண்டு ஆனால் நான் மூட்டுவலிக்கு மட்டும் இதை பயன் படுத்துகிறேன் ஒரு தைலமாக பயன் படுத்துவது என்று சொல்கிறேன் இதற்கு தேவையான பொருட்கள் ஒரு மண்பானை வெள்ளை காட்டன் துனி நல்லேண்ணெய் ஒரு லிட்டர் முதலில் பானையில் நல்லெண்ணெயை ஊற்றி பின்பு இந்த பேய்மிரட்டி 30 இலைகள் எடுத்து அந்த எண்ணெய் நிரப்பிய பானையில் போடவும் பின்பு வெள்ளை துனியால் பானையின் வாய் பகுதியை காற்று போகாமல் இருக்கி கட்டி 20நாட்கள் வெய்யல் படும் படி வைக்கவும் எப்போதும் நாட்கள் முடிந்தவுடன் இந்த பானையில் உள்ள எண்ணெய் மிதமான தீ வைத்து நன்கு காட்சி எடுத்துக்கொண்டு வலி உல்ல முட்டி பகுதியில் கொஞ்சம் எடுத்து தேய்த்தால் உடனே வலி குறையும் இதை தொடர்ந்து செய்வதால் மூட்டுவலியில் இருந்து நிறந்தரமாக விடு படலாம் அடுத்து இதன் வேறு மறுத்துவ குனங்களை சொல்கிறேன் ரொம்ப நேரம் எழுதுவது கொஞ்சம் கஸ்டமா இருக்கு நன்றி நண்பர்களே சந்தேகம் எதுவாக இருந்தாலும் கமெண்ட் செய்யவும்

Sunday, August 26, 2018

பணம் தங்காது என்பதன் அறிகுறிகள் என்ன?

1. ஒருவரின் வீட்டில் அடிக்கடி தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சனைகள் ஏற்பட்டால், வீண் செலவுகள் அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது. 2.ஒருவரை தேடி வந்த நல்ல வாய்ப்பு, திடீரென்று கை நழுவிப்போனால், அது நிதி பிரச்சனையால் துன்பம் நேரிடும் என்பதை குறிக்கிறது. 3.அளவுக்கதிமாக வாயில் எச்சில் சுரந்தால் அவர்களுக்கு பணக்கஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம். 4.வீட்டில் உள்ள வளர்க்கும் செல்லப் பிராணி திடீரென்று இறந்து விட்டால், அந்த குடும்பத்தினர் பணக்கஷ்டத்தை சந்திக்க நேரிடும். 5. ஒருவரின் கைவிரலில் உள்ள சூரிய மேடு பகுதியில் திடீரென்று மச்சம் உருவானால், அது அவர்களின் சேமிப்பு பணம் கரையத் தொடங்கும் என்று பொருள். 6.வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய் சிதறினால், அது பணப் பிரச்சனையை ஏற்படுத்தும். 7.ஒருவர் நகைகளை இழந்தாலோ அல்லது வீட்டில் நகைகள் வைத்த இடம் தெரியாமல் மறந்தால், அது பெரிய பண இழப்பை ஏற்படுத்த போவதாக அர்த்தம். #இல்லங்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருந்தால்தான் செல்வம் தங்கும். எப்போதும் பணப்பிரச்னை ஏற்படாது. அதற்கு 10 எளிய வாஸ்து குறிப்புகள் உள்ளன. 1. உரிமையை நிலைநிறுத்தும் பெயர்ப்பலகை சொந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர்ப்பலகையை வாசல் மதிலில் பதிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் பெயர்ப்பலகையை பார்த்துப் படிப்பவர்களின் மனதில் நீங்கள்தான் வீட்டு உரிமையாளர் என்று எழுகின்ற ஆக்கப்பூர்வமான உணர்வு உங்களது செல்வத்தை நிலைக்கச் செய்யும். 2. ஒளிபிறந்தால் ஓடோடி வரும் செல்வம் வீடு ஒளிமயமாக பிரகாசித்தாலே லட்சுமி கடாட்சம் பொங்கி வழியும். வீட்டு முகப்பிலும், பூஜை அறையிலும் தினசரி காலை மாலை விளக்கேற்றி வைத்தால் செல்வம் பெருகும். மங்களம் உண்டாகும். 3. மங்களம் தரும் ஸ்வஸ்திக், ஓம் பூஜை அறையிலும் பிரதான அறையிலும் மங்களத்தின் சின்னங்களான ஸ்வஸ்திக், ஓம் குறிகளை இடுங்கள். நல்ல அறிகுறிகள் தோன்றி வீட்டை வளமாக்கும். 4. கண் திருஷ்டியைப் போக்கும் எலுமிச்சை சனிதோறும் பூஜை செய்து ஒரு டம்ளரில் எலுமிச்சைப் பழத்தைப் போட்டு பூஜை அறையில் வைக்கவும். வாரந்தோறும் பூஜித்து புதிய பழத்தை வைக்கவும். இப்படி செய்தால் கண் திருஷ்டி உங்கள் இல்லத்தையும் உங்கள் குடும்பத்தாரையும் விலகி ஓடும். 5. பூஜை அறையில் புனித கங்கை நீர் புனித கங்கை நீர் அடங்கிய கலசத்தை பூஜை அறையில் வைத்தால் வீடு பரிசுத்தமானதாக விளங்கும். மங்காத செல்வம் உண்டாகும். 6. தீயசக்திகளை துரத்தும் உப்பு வீட்டின் அறை மூலைகளில் சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் உப்பு நிறைத்து வைக்கவும். தீய சக்திகளை அறவே கிரகித்து நீக்கும் தன்மை உப்புக்கு உள்ளது. 7. சரியான திக்கில் சமையலறை வாஸ்துப்படி வீட்டில் தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பதே ஆகச் சிறந்ததாகும். அது இயலாதபட்சத்தில் அதற்கு மாற்றாக வடமேற்கு மூலையில் சமையலறையை அமைக்கலாம். இருந்தாலும் தென்கிழக்கு முகமாக அடுப்பை வைத்திருக்கோமா என்பதை உறுதி செய்யுங்கள். 8. சமையலறையில் மருந்துகள் வைத்தலாகாது எந்தவொரு தீயசக்தியும் சமையலறையை அண்டவிடக்கூடாது. இதற்கு முதல்படி நோய் நிவாரணிகளான மருந்துகள் சமையலறையில் வைக்கக்கூடாது. ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் இடமான சமையலறையில் மருந்துகளை வைத்திருப்பது ஆகாது. 9. படுக்கையறையில் தேவையில்லை முகம்பார்க்கும் கண்ணாடி படுக்கையறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை அமைக்கக் கூடாது. சிலர் வீட்டில் டிரஸ்ஸிங் டேபிள் படுக்கையறையில் இருந்தால் இரவு தூங்கும்போது மறக்காமல் அதன் கண்ணாடியை திரையிட்டு மூடிவிடவும். வாஸ்துப்படி படுக்கையறையில் உள்ள கண்ணாடி பிணியையும் குடும்பத்தில் சச்சரவையும் ஈர்த்து வரும் 10. அமைதியைத் தூண்டும் மணியோசை மணி அடுக்குகளை வீட்டில் தொங்கவிட்டால் தீய சக்திகளை தவிடு பொடியாக்கும். காற்றில் எப்போதும் நல்ல சக்தியை பரப்பும் தன்மை இந்த மணிகளுக்கு உண்டு. #புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன அந்த மாதத்தைப்பற்றி நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அந்த மாதத்தில் ஏன் போககூடாது என்ற காரணத்தையும் சொல்லுகிறேன். அதனை தவிர்த்துவிடடு நீங்கள் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போங்கள் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி ஏன் போககூடாது என்ற ரணத்தைப் பார்க்கலாம் இராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் நடந்தது. பாரதபோர் மார்கழி மாதத்தில் நடந்தது. இரணிய சம்ஹாரம் புரட்டாசி மாதத்தில் நடந்தது. பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது மாசி மாதம். மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் பங்குனி மாதத்தில் நடந்தது. மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் ஆனி மாதத்தில் நடந்தது. இந்த மாதத்தில் இருக்கின்ற இடத்தை விட்டு குடிபோனால் அந்த குடும்பம் துன்பமும் துயரமும் அடையும். மேலே சொன்ன மாதங்களை தவிர்த்துவிடுங்கள்.

ருத்திராட்சம் பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

ருத்திராட்சம் பற்றிய சித்தர் பெருமக்களின் பாடல்களில் கூறப் பட்டுள்ள தகவல்.... வடமொழியில் ருத்ராக்ஷம் என்பதற்கு “ருத்திரனின் கண்கள்” என்பதாக பொருள் கூறப்படுகிறது. ருத்திரன் என்பது சிவனை குறிக்கிறது. “ganitrus” என்ற மரத்தின் பழத்தில் இருந்து பெறப்படும் கொட்டைதான் இந்த உருத்திராட்சம். இந்த மரங்கள் உலகின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. நேப்பாள நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே தரத்தில் உயர்ந்தனவாக கருதப் படுகிறது..! இயற்கையில் உருத்திராட்ச மணி செம்மையும், கருமையும் கலந்தேறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். கடையில் விற்பனைக்கு கிடைக்கும் மணிகள் பெரும்பாலும் மெருகேற்றப்பட்டும், சாயமேற்றப் பட்டிருக்கும். .! #ருத்ராட்ஷத்தின் - மகிமை! #ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது? சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும் #யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா? ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது. *சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.* ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். #சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே? ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம் அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது)., #பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே? பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார். #எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா? பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். *ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.* #ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா? இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம். ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும். ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. *நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.* #நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா? முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். .. இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.... #ருத்ராட்ஷத்தில் எத்தனை முகம் ? #யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்? ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும். எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார். ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும். ஒன்றிலிருந்து பதினான்கு முகங்கள் உடைய ருத்திராக்க்ஷங்களும் கிடைக்கின்றன .... ஒரு முகம் கொண்ட ருத்ராக்க்ஷம் *********************************** இதை அடைவது மிக கஸ்டமாகும் .இது பகவான் சங்கரனின் திருப்பிறப்பாக இது கருதப்படுகிரது இதை ஒரு பாா்வை பாா்த்தாலும் அல்லது ஒரு முறை இதை தொட்டாலும் , உங்களது பாவங்களை எல்லலாம் நீங்கள் இழப்பிா்கள் இதை அணிந்தால் ,சிவ தத்துவம் எங்கும் பரவியுள்ளதை ஒருவா் உணர முடியும் ஒருவா் அவரது விருப்பங்கள் பூா்த்தி அடைந்து மோச்சத்திருக்கான வழியை காணுவாா். இரண்டு முகங்கள் ******************** இரண்டு முகம் கொண்ட மணிகள் மிகவும் அபூா்வமானவை இதுவும் அதிகம் கிடைக்காது அதனால் விலை கூடுதலாக இருக்கும் இது சிவனும் சக்தியும் கூடிய அா்த்த நாாிஸ்வரா் ஸ்வரூபமாகும் இதன் கிரகம் சந்திரன் இதனை அணிவதால் விலங்குகளைக் கொன்ற கொலை பாவம் போகும் ,கொடும் பாவமான ,பசுவைக் கொன்ற கோஹத்தி தோஷம் கூட விலகிவிடும் இதை அணிபவா்கள் செல்வம் ,சந்தோசம் ,மன அமைதி,மனதை ஒருமுகப்படுத்துதல் ,குண்டலினியை (பாம்பு சக்தி) எழப்புதல் ஆகியவற்றைப் பெறுவாா்கள், மூன்று முகங்கள்:, ******************* மூன்று முகம் கொண்ட மணிகளும்"அாிதானது சாதாரணமாகக் கிடைப்பதில்லை ,இதுவும் விலை கூடுதலானதே இது "சோம சூரிய அக்கினி" எனும் சிவனின் முக்கண் வடிவானவை. சூரியன்,சந்திரன், அக்கினிதேவன் முவருமே இதற்கு அதிபதிகள் இதன் கிரகம் அங்காரகன் எனும் செவ்வாய் இதனை அணிவதால் பெண்களைக் கொன்ற பஹு ஹத்தி தோஷம் கூட விலகும் ,பலவகை பாவங்கள் எாிந்து சாம்பலாகும் ,மேலும் இதனை அணிந்தவன் அண்மீகத்தில் மிக உயா்ந்த நிலைகளை எளிதாக அடைவான் சிவன் மகில்வாா் அக்கினி தேவன் அருள் தருவாா். நான்கு முகங்கள்: ******************* இது பிரும்மாவைக் குறிப்பதாகச் சொல்ப்படுகிறது .இதை அணிந்தால் பக்தி ,செல்வம்,மகிழ்ச்சி,மோஷம்,ஆகியவற்றைப் பெறலாம் . இருள் அழிக்கப்பட்டு.அறிவுக்கூா்மை என்னும் வெளிச்சம் பிராசிக்கிறது போின்பத்தை அடையலாம்.இதன் கிரகம புதன் இதனை அனைத்த்து துறைகளிலும் உள்ள படைப்பாளிகள் அணியலாம் கல்வி , கலைதிறன்,நுண்கலைகள் வளா்ச்சிபெறும் ஐந்து முகம் கொண்ட மணிகள் ********************************** சாதாரணமாக கிடைப்பவை, விலை குறைவானவை இது காலாக்கினிருத்திர ஸ்வரூபம் "உடையது அகோரம், தத்புருஸ்ம்,வாமதேவம்,சத்யோஜாதம்,ஈசானம் எனும் சிவனின் ஜந்து முகங்கள் இதற்க்கு அதிதேவதைகள்.இதன் கிரகம் குரு இதனை அணிவதால் மாமிசம் முதலான உண்ணத்தகாத உணவுகளை உண்ட பாவம் தீரும் . பலவகை பாவங்கள் நசிந்து,சிவசாரூபம் கிகை்கும் உண்ணும் உணவில் உள்ள விஷக் குற்றங்கள் விலகும். ஆறுமுகம் : ************ ஆறுமுகம் கொண்டமணிகள் அதே போல் ஆறு முகங்கள் கொண்ட ஷண்முகா் வடிவானவை.இதன் கிரகம் சுக்கிரன் இவ்வகை மணிகளை ஆணிந்து கொண்டால் தமிழ்க் கடவுளான முருகன் அருள் பெருகும் பிராம்மணா்களை கொன்ற பழி பாவங்கள் நிங்கி அனைத்திலும் வெற்றி கிட்டும் புகழ் பெருகும் புத்தி தெளிவும் மெய்ஞானமும் பாாிசுத்தமும் வாய்க்கும். ஏழு முகம்: *********** ஏழ முகங்கள் கொண்ட மணிகளும் மிக அாிதானவை பிரம்மதேவன் கட்டளையினால்,கீழேழ உலகங்களை அதலம்,விதலம்,சுதலம்,தராதலம்,ரசாதலம்,மஹாதலம்,எனும் சப்பதலோகங்களைில் உள்ள நாகா்களின் தலை னாக இருந்து ஆயிரம் தலைகளோடு கூடிய பூமியைதாங்கிய ஆதிசேஷன் அம்சமானவை இ்வகை மணிகளை .அணிவதால் பசுக்கொலை செய்த கோஹத்தி பாவமும் போகும் . பிறா் பொன் பொருளைத் திருடிய பாவங்கள் விலகும் சப்த்தமாதாக்களின் சப்த கன்னிகளின் பேரருள் கிட்டும்.நாதோஷங்கள் நிவா்த்தியாகும் . கல்வி,நுன்கலைகள் மேம்படும் யோகசக்திகள் கைவரும்.சிலா் சப்தமாதா்களும் சப்த்தகன்னிகளும் கூட இதற்கு பிரதிதேவதை என்பாா்கள். எட்டு முகம்: ************ எட்டு முகம் கொண்ட மணிகளும் அாிதானவை எளிதில் கிடைக்காதை இ்வ் வகை மணிகள், பல்லாளேச கணபதி,வரத கணபதி,சிந்தாமணி கணபதி,மயூரேச கணபதி,சத்தி கணபதி ,மஹா கணபதி,என்று அஷ்ட கணபதி ஸ்வரூபபானவை. இதன் கிரகம் ராகு.இதனை அணிந்து கொண்டுடால் அஷ்ட வசுக்களின் ஆசிகள் கி்ட்டும்.குருவை கொண்று குருபத்தினியைத் தீண்டிய கொடும் பாவங்களும் விலகி புண்ணியம் ஏற்படும் பொன் திருடிய குற்றங்கள் நீங்கும் அஷ்டமாசித்திகளும் வாய்க்கும் அஷ்ட லஷ்மிகளின் அருள் கி்ட்டும் பல வகையில் வரும் காாியத் தகைள் அகலும் கங்கை தேிவி மகிழ்ந்து அருள் புாிவாள். ஒன்பது முகம்: *************** ஒன்பது முகம் கொண் மணிகள் கூட அவ்வளவாக கிடைப்பதில்லை கைலை மலையின் எண்திசைகளிலும்காவல் புாியும் தேவதைகளான அசிதாங்க பைரா்,ருருபைரவா்,சண்டபைரவா்,குரோதபைரவா்,உன்மத்தபைரவா்,கபாலபைரவா்,சம்ஹரபைரவா்,என்ற அஷ்ட பைரா்களின் உற்பத்திக்கு மூலகாரணன் ஆன மஹா பைரவா் ஸ்வரூபமானவைகளே இந்த ஒன்பது மகம் கொண் ருத்திராக்க்ஷமணிகள் இதன் கிரகம் கேது இதனை அணிவதால் பில்லி சூனியம் விலகும் பலவகை கொலை பாவங்கள் பாம்புகளால் வரும் துன்பங்கள் நீங்கும் நவக்கிரஹ பீடைகள் விலகி ,நவசக்திகளின் பேரருள் கிட்டும் சித்தி முக்தி எற்படும் (இடது கை மணிக்க்டில் அணிக. பத்து முகம்: ************* பத்து முகம் கொண்ட மணிகள் அாிதானவை.இம் மணிகள் மத்ஸ்ய, கூா்ம,,நிசிம்ம,வாமன,பரசுராம,ராம,பலராம,கிருஸ்ண,கல்கி,அதாரங்களின் நாயகனான விஷ்னு ஸ்வரூபமானவை இவற்றை அணிவதால் பூத,பிரேத,பைசா,பிரம்மராக்ஷசா்களால் ஏற்ப்படும் ஆபத்துகள் விலகும் ஏவல் பில்லி சுணியங்கள் வலுவிழந்து போகும்,பலவகையான பீடைகளிலிருந்து காப்பாற்றப் படுவீா்கள் . மிருகங்களால் வரும் ஆபத்துகள் விலகும் பதிணோரு முகம், ****************** பதிணோரு முகம் கொண்ட மணிகளும் அபூா்மானவை எளிதில் கிகை்காதவை இவ்வகை மனிகள் ,மஹாதேவன்,அரன்,ருத்திரன்,சங்கரன்,நீலோஹிதன்,ஈசானன்,கபாலி,சௌமியன் என்ற எகாதச ருத்திரா்களின் அம்சமானவை. இவற்றை அணிந்து கொண்டால்,பலவகை உயிாினங்கள் ,பறவைக் என பிராணிகளை கொன்ற பாவம் நீங்கும் வேதாகமங்களில் கூறப்பட்டுள்ள அஸ்வமேதாயகம் முதலான அனைத்துவிதமான யாகங்களையும்,விரதங்கள் பூஜை பண்ணியம் வரும் ,சிவஞானம் சித்திக்கும் ***************************************************************** #நம்முடைய புராதன மருத்துவ நூல்களில் சிறப்பாக சொல்லப்பட்ட இருபத்தேழ நக்ஷத்திரங்கள் பிறந்தவா்கள் அணிய வேண்டிய ருத்ராட்சம்.....! 1,அஸ்வினி = 9_2_3 முகம் 2,பரணி = 6 முகம் 3,காா்த்திகை = 1_3_11_12 முகம் 4,ரோகிணி - 2_3 முகம் 5,மிருகசீாிடம் = 3 முகம் 6,திருவாதிரை = 8_5_11 முகம் 7,புணா்பூசம் = 5 முகம் 8,பூசம் = 7 முகம் 9,ஆயில்யம் = 4 முகம் 10,மகம் = 9_2_3 முகம் 11,பூரம் = 6 முகம் 12,உத்திரம் = 1_3_11_12 முகம் 13,ஹஸ்தம் = 2_3 முகம் 14,சித்திரை = 3 முகம் 15,சுவாதி = 8_5_11 முகம் 16,விசாகம் = 5 முகம் 17,அனுஷம் = 7 முகம் 18,கேட்டை= 4 முகம் 19,மூலம் = 9_2_3 முகம் 20,பூராடம் = 6 முகம் 21,உத்திராடம் = 1_3_11_12 முகம் 22,திருவோணம் = 2_3 முகம் 23,அவிட்டம் = 3 முகம் 24,சதயம் = 8_5_11 முகம் 25,பூரட்டாதி = 5 முகம் 26,உத்திரட்டாதி = 7 முகம் 27,ரேவதி = 4 முகம் ******************************** #ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்ட பலன்கள் ? நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க. இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 4 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும். #ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா? சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்... அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர். இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும். ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,. நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே...!!! ********************** இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே? உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்? அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் ருத்ராட்சம் அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார். அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம். ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது.... அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் ருத்ராட்சம் அணிந்து அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்...! ஓம் நமசிவயநமஓம்.... ஷிவஷம்போ.... நன்றி

அனுமனின் பக்தர்களை சனி ஏன் தொந்தரவு செய்வதில்லை?

அனுமனின் பக்தர்களை சனி ஏன் தொந்தரவு செய்வதில்லை? சனியின் ஆதிக்கமும்!.. அனுமனின் வழிபாடும்!... நவகிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை, சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும் சனி பகவான் தருவார். பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சனியின் விளைவுகளை எதிர்கொள்ளும் ஒரு கால கட்டம் வரும். ஏழரை சனி மற்றும் சனி மஹாதசை ஆகியவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் சனி கிரகம் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களை ஏற்படுத்தும் காலங்களாகும். ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவான் ஆட்டிபடைப்பார் என்ற கருத்தானது தவறானது ஆகும். ஒருவர் பிறந்த ஜாதகக் கட்டத்தின் பல்வேறு வீடுகளில் சனி கிரகத்தின் நிலையைப் பொருத்ததாகும். சனியின் மோசமான அமைப்பு, மனிதனை இன்னல்கள் நிறைந்த ஒரு உலகிற்குள் தள்ளும். ஆனால் ஒரு லாபகரமான அமைப்போ ஒரு மனிதனுக்கு முடிவில்லாத வளங்களையும், வெகுமதிகளையும் பெற்றுத் தரும். ஒரு மனிதனுக்கு ஜாதகப்படி சனி பகவானின் தாக்கம் இருக்கும் போது, அவர் அனுமனை வணங்க வேண்டும் என்று சொல்வதுண்டு. இறைவன் அனுமன் சங்கட மோச்சன் என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால், அவர் தன் பக்தர்களை அனைத்து விதமான சங்கடங்களிலிருந்தும் விடுவிக்கிறார். சங்கடம் என்பதன் மொழியாக்கம், தொந்தரவுகள் அல்லது பிரச்சனைகள் என்பதாகும். இறைவன் அனுமன், குழந்தையாக இருந்த போது சூரியனை சுவையானப் பழம் என்றுத் தவறாகக் கருதி, பிடித்து சாப்பிட முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சூரிய பகவான், தேவர்களின் தலைவனான இந்திரனை அணுகினார். இந்திரன் தன் வஜ்ஜிராஸ்திரத்தால் குழந்தை அனுமனைத் தாக்கினார். இதனால் குழந்தையின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த காயமே அனுமன் என்ற பெயருக்குப் பின்னால் உள்ள காரணமாகும். இறைவன் அனுமனின் பக்தர்களை சனி ஏன் தொந்தரவு செய்வதில்லை? இறைவன் அனுமன் தனது கல்வியைக் கற்று முடித்த பிறகு, குருவான சூரிய பகவானிடம், குருதட்சணையாக அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். சூரிய பகவான் குருதட்சணை எதுவும் வேண்டாமென்று கூறிவிட்டார். ஆனால் அனுமன் வற்புறுத்தவே, பின்னர் சூரிய பகவான் தன் மகனான சனி தேவனின் கர்வத்தை அழிக்குமாறு அனுமனைக் கேட்டுக் கொண்டார். அனுமன் சனி லோகத்திற்கு சென்று, சனி தேவனைப் பார்த்து அவரது வழிகளைத் திருத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் சனி தேவனோ கோபம் கொண்டு, இறைவன் அனுமனின் தோளின் மீது தாவி ஏறி, தனது முழு பலத்தையும் கொண்டு, அனுமனைத் தாக்க முயற்சித்தார். இறைவன் அனுமன் தனது உருவத்தை மிகப் பெரியதாக அதிகரித்துக் கொள்ளத் தொடங்கினார். அவர் மிகப்பெரிய உருவமாக ஆன பிறகு, தோளிலிருந்த சனி பகவான் மேற்கூரையில் இடித்துக் கொண்டு நசுங்கினார். அது அவருக்கு அளவில்லாத வலியை ஏற்படுத்தியது. யாராலும் தப்பிக்க முடியாததாகக் கருதப்பட்ட சனி தேவனின் கர்வம் உடைந்தது. சனி தேவன் அனுமனிடம் மன்னிப்புக் கோரி, தனது சக்திகளால் அனுமனின் பக்தர்களை ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டேன் என்ற வரத்தை அளித்தார். ராம் ராம் ராம்

உடலில் காணப்படும் தோஷத்தின் அறிகுறிகளும் பரிகாரங்களும்

உடலில் காணப்படும் தோஷத்தின் அறிகுறிகளும் பரிகாரங்களும் (இது ஒரு தேவரகசியம்) 1. உடல்கனம் கொடுத்தல் ஆஞ்சநேயர் , சாஸ்தா , நரசிம்மர் , அய்யனார் போன்ற தெய்வத்தின் குற்றத்தால் ஏற்பட்ட தோஷம் இந்த தோஷ நிவர்த்திக்கு குறிப்பிட்ட தெய்வத்திற்கு அபிஷேகம் அர்ச்சனை நைவேத்தியம் செய்ய தோஷ நிவர்த்தி . 2. உடல்தகதகவென்று எறிவது போல் தோன்றல் குல தெய்வத்திற்கு வருஷ கணக்கில் பிரார்த்தனை நிறைவேறாத குற்றம் . இதை நிவர்த்தி செய்ய குடும்பத்து டன் குல தெய்வ கோவிலுக்கு சென்று ஆசார அனுஷ்டானப்படி பிரார்த்தனை செய்தல் 3. தலை ஊரல் எடுத்தல் முடி இறக்க வேண்டி தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்தபின் இறக்காமல் இருக்கும் குற்றத்தால்தோஷம் இதை நிவர்த்தி செய்ய கோவிலுக்கு சென்று முடி இறக்க வேண்டும் 4. இடது கண் துடித்தல் சிவன் கோபத்தால் ஏற்பட்ட தோஷம். இதை நிவர்த்தி செய்ய சிவ ஆலயத்திற்கு பிரதோஷம் தோறும் ஓர் ஆண்டு வரை விளக்கிற்கு எண்ணெய் ஊற்றி அர்ச்சனை அபிஷேகம் செய்ய வேண்டும் 5. வலது கண் துடித்தல் விஷ்ணு கோபத்தால் ஏற்பட்ட தோஷம். இதை நிவர்த்திக்க தொடர்ந்து 9 திருவோண நட்சத்திரங்களில் துளசியால் விஷ்ணுவை அர்ச்சனை செய்து பாயாசம் சுதர்சன ஹோமம் நெய்வேத்தியம் செய்ய வேண்டும் . 6. உள்ளங்கை ஊரல் தெய்வத்திற்கு பிராத்தனை செய்து எடுத்து வைத்த பணத்தை செலவு செய்த தோஷம் இதை நிவர்த்தி செய்ய செலவு செய்த பணத்தை போல் போல் எட்டு மடங்கு பணத்தை எடுத்து பிராத்தனை செய்த தெய்வ கோவிலுக்கு சென்று போட்டுவிட்டு மீதி பணத்தை கோயில் அபிஷேகத்திற்காக செலவு செய்ய வேண்டும் . 1. உள்ளங்கால் ஊறல் சங்கடமான சமயத்தில் தெய்வத்தை வேண்டிய பின் சங்கடம் நிவர்த்தியாகாமல் போனதால் தெய்வத்தை திட்டிய செய்த தோஷம். இதை நிவர்த்தி செய்ய தெய்வ சன்னிதானத்தில் அங்க பிரதட்சனம் செய்து மன்னிப்பை கோர வேண்டும் 8. முகம் வியர்த்தல் மாரியம்மனுக்கு பிரார்த்தனை செய்வதாக வேண்டிய பின் அதை மறந்த தோஷம். இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய மாரியமமனுககு பொங்கலிட்டு குங்குமததால் தொடர்ந்து 5 நாட்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் 9. தாகம் எடுத்தல் பிதுர் தோஷம் இறந்து போன தகப்பர் வழியில் உள்ளவர்களையும் இறந்து போன தாயாரையும், வருஷா வருஷ இறந்து போன தினத்தில் நினைத்து அதற்குரிய சடங்குகளை நிறைவேற்றாத தோஷம். இதை நிறைவேற்ற வருடத்திற்கு ஒருமுறை இறந்த மாத திதியில் அல்லது. அது தெரியா விட்டால் அமாவாசையில் சிரார்தம் செய்து பிதுர்களை நினைத்து வணங்க வேண்டும். அன்றைய தினம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேணடும் அனைதானம் செய்தாலும் தோஷ நிவர்த்தி ஆவதோடு பிதுர்களின் ஆசீர்வாதம் என்றும் கிடைத்து . 10. நாக்கு பல்லில் கடி விழுதல் : சர்ப தோஷம் . இந்த தோஷத்திற்கு சர்ப நாக பிரதிஷ்டை , தில ஹோமம் சாஸ்திரப்படி தெரிந்து செய்ய வேண்டும் 11. மூக்கு ஊரல் பிறர் சொத்தை அபகரித்த தோஷம். இந்த தோஷ, நிவர்த்திக்கு வீட்டுக்கு வரும் பிச்சைகாரர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் முடிந்ததை இயன்ற அளவு கொடுக் வேண்டும் 12. காது ஊரல் , தெய்வ சொத்தை அபகரித்த தோஷம். இந்த நிவர்த்திக்கு ஆயுள் முழுவதும் அபிஷேகத்திற்கு ஜலம் கொடுக்க வேண்டும் திருகார்த்திகை தோறும் 108 விளக்கு தீபம் ஏற்ற வேண்டிய எண்ணெய்க்கு ஆகும் செலவை கொடுத்து சங்கடசதுர்த்தி தோறும் விநாயகருக்கு தோப்பு கரணம் போட்டு அர்ச்சனை செய்து, செய்த தவறுக்கு மன்னிப்பு கோர வேண்டும் 13. முதுகு ஊரல் : கிரக தோஷம். உடனடியாக வேறு வீடு மாறுவதால் தோஷ நிவர்த்தியாகும். வயிறு ஊரல் விருஷ தோஷம் . ஒவ்வொரு கிரகத்திற்கும் கிரஹ விருட்சங்களாக மா, , பலா தென்னை இலுப்பை புளி, நெல்லி, அரசு, அத்தி, ஆல், கொய்யா, எலுமிச்சை, வாழை முதலியவை இருக்கும் இவற்றை காரணமின்றி வெட்டியும், விலைக்கு வித்தும் தண்ணீர் விடாமல் அதை பட்டு போக விட்டும் பச்சை மரத்தை வெட்டி அதை எரி பொருளாக பயன்படுத்துவதாலும் ஏற்பட்ட தோஷம் பலஜாதி விருட்சங்கள் இருந்தாலும் கிரக விருட்சத்தை வெட்டுவதால் தோஷம் இதை நிவர்த்தி செய்ய உங்கள் கிரக விருட்சம் எது என்பதை கேட்டு தெரிந்தும் அவ்விருட்சத்தை வீட்டில் வளர்க்க தோஷம் நீங்கும் 15. உடம்பு புல்லரித்தல் திருப்பதி வெங்கடாசலபதி தோஷம். திருப்பதிக்கு வேண்டி பிரார்த்தனை செய்து அதை நிறைவேற்றாமல் இருக்கும் தோஷ நிவர்த்திக்கு 7 வீடுகளில் பிச்சை த்ெது திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய வேண்டும் விஸ்ணு சகஸ்ர நாமம் சொல்லவேண்டும் 16. ஏழுமலையானுக்கு உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை செலவு செய்த தோஷம் 7 கிரகஸ்தர்கள்,7 சுமங்கலிகள் 7 தெருக்களில் 7 வீடுகளில் மடி ஏந்தி பிச்சை எடுக்க வேண்டும் எடுத்த அரிசி பணத்தில் பிரார்தனை நிறைவேற்ற வேணடும். எவ்வளவு வசதியானவர்களாக இருந்தாலும் திருப்பதி வெங்கடேசபெருமாளை தரிசனம் செய்வதற்கு பிச்சை எடுப்பது வாங்குவது விஷேஷமான ஒன்றாகும். பிச்சை எடுத்து திருப்பதி செல்வதால் ஒருவனுக்கு உள்ள தான் என்ற அகங்காரமே இல்லாமல் போக வேண்டும் என்ற எண்ணதினாலும் தன்னை மிஞ்சினவன் எவனும் இல்லை என்ற எண்ணமே மானிடனுக்கு வரக கூடாது என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்ற கருத்துக்கு இணங்க பிச்சை எடுத்து திருப்பதி செல்வது விசேஷம் என பெரியோர்களால் கூறப்படுகிறது 17. மயக்கம் வரும்போல் தோன்றுதல் துர்தேவதைகளால் ஏற்பட்ட நிவர்த்தி செய்ய ஊர் எல்லையில் உள்ள எல்லை தெய்வத்திற்கு பலி பூஜை செய்ய தீரும் 18. உடலில் மாறி மாறி தினவு எடுத்தல் : நவகிரக தோஷம் , இந்த நவகிரக தோஷம் நிவர்த்திக்கு நவகிரக ரச்சை கட்டி கொள்ளுதல், நவகிரக அர்ச்சனை செய்தல், நவதான்யம், தானம் கொடுத்தல், ஹோமம் நவகிரகம் ஹோமம் செய்தல் , நவரத்தின மோதிரம் அணிந்து கொள்ளுதல் , நவகண்டிமாலை தரித்து கொள்ளுதல், 19. புஜம் வலித்த ல் : முருகனுககு காவடி பிரார்தனை எடுப்பதாக செய்தபின், அதை செய்யாத தோஷம் . முருகன் கோயிலுக்கு பூசம், விசாகம் , ஆகிய கிருத்திகை நட்சத்திரங்களில் காவடி எடுத்து பிரார்த்திக்க தோஷம் நிவர்த்தியாகும் 20.இருமல் வருதல் அபலை ஸ்திரிகளை கெடுத்த தோஷம். பிரசவ காலத்தில் கர்ப்பஸ்திரிகள் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்வதுடன் , அனாதை பெண் திருமணத்திற்கு பண உதவி செய்ய .வேண்டும் 21. கொட்டாவி வருதல் துர்மரணம் அடைந்த சுமங்கலி தோஷம், பெண மீது ஊற்றி நெருப்பு வைத்து விஷ மருந்து வைத்து கொன்றது.தூக்கு போட்டு கொன்றது . கிணற்றில் தள்ளி கொன்ற பாவம் ஆகியவைகளால் ஏற்படும் தோஷத்திற்கு நிவர்த்தி, இல்லை . இந்த விதமாக சுமங்கலி பெண் கொன்றவர்கள். நாய் மலத்தில் 7 ஜெர்மம் முழுவாக பிறப்பார்கள் . மாமியார் கொடுமை, மதினியின் கொடுமை தாங்க முடியாமல் தானாக உடலை எறித்து கொண்டும் விஷம் அருந்திக் கொண்டும், தூக்கு போட்டுக் கொண்டும் கிணற்றில் விழுந்து இறந்த துர்மரணம் அடைந்த சுமங்கலி, கொடுமைப்படுத்தப்பட்ட மாமியார். மதினியர் உயிருடர் இருக்கும்வரை அவர்களே ஆவிரூபமாக அடைநது , எசஷிணி உருவம் அடைந்து பாடாத பாடு படுத்தும். இந்த தோஷ நிவர்த்திக்கு ஆயுள் முழுதும் வெள்ளிக்கிழமை தோறும் சுமங்கலியை அழைத்து மங்கள பொருள்களை கொடுத்து அன்னமிட்டு உபசரிக்க வேண்டும் 22. தும்பல் வருதல் பட்சி தோஷம் இதற்க்கு பறவை களுக்கு உணவு அளித்தால் தோஷம் நீங்கும் 23.அபனா வாயு வெளிப்படல் : தர்ம சொத்தை அபகரித்த தோஷம். இந்த தோஷதிற்கு தினசரி கூன், குருடு, செவிடு போன்ற அங்க குறைபாடு உள்ளவர்களுக்கு அன்னமிட வேண்டும். கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் வைக்க வேண்டும் 24. உடல் நடுங்கல் : வீட்டில் உள்ள விக்கிரகங்களுக்கு பூஜை செய்யாத தோஷம் இத்தோஷ நிவர்த்திக்கு குடும்ப வழக்கப்படி பூஜை செய் வேணடும். அப்படி முடியாத நிலையில் அவ்விக்கிரஹங்களை குல குருவி அனுமதி பெற்று கோவில்களிலோ அல்லது பஜனை மடத்திலே வைதது முடிந்த அளவு பூஜை சிலவுக்கு பணமும் கொடுக்க வேண்டும் அல்லது அனுஷ்டானம் உள்ளவர்கள் விரும்பிக் கேட்டால் தானம் கொடுத்து விடலாம் 25. உடல் எரிவது போல் தோன்றல் கர்பிணி பெண் தோஷம். குடும்பத்தில் சிறு வயதில் எதிர்பாராத விதமாக கர்பிணி பெண் இறந்தால் குடும்பத்தை காப்பதாக ஐதீகம் வருஷத்திற்கு ஒருமுறை அல்லது நவராத்திரி சமயம் இந்த பெண் பெயரால் ஏழை கன்னிப் பெண்ணுக்கு பாவாடை சட்டை மங்கலப் பொருள் கொடுத்தால் தோஷ நிவர்த்தியாகும் 26. மூக்கடைத்தல் துர்மரண தோஷம். குடும்பத்தில் அற்ப ஆயுளில் இறந்தவர்கள் , இடி , விழுநது இறந்தவர்கள் அக்கினி பிரவேசம் செய்து இறந்தவர்கள் , செய்வினை ஆவி தண்ணீர் விஷம், கயிறு இவைகளால் இறந்தவர்கள விஷ ஜந்துக்களால் இறந்தவர்கள் , வெட்டு பட்டு இறந்தவர்கள் , கர்பமாய் இருந்து இறந்தவர்கள் ஆகியவர்களாலும் , துஷ்ட மிருகங்களிடமிருந்து தப்பு முடியாமல் இறந்தவர்களாலும், மேற்படி தோஷம் ஏற்படுகிறது. இப்படி இறந்தவர்களுக்கு குறிப்பிட்ட காலங்களில் அவர் அவர்களின் குல, மத, அனுஷ்டாத்குரிய கிரியைகளை செய்தால் தோஷ நிவர்த்தியாகும் 27. உமிழ் நீர் வாயில் அதிகமாக சுரத்தல் பிறர் சொத்துக்கு அக்னி மூலம் ஆபத்து உணடாக்கிய தோஷம். இத்தோஷத்திற்கு குளம் , கிணறு வெட்டுவது அல்லது அதற்கு பண உதவி செய்வது கோயில் அபிஷேகத்துக்கு தண்ணீர் கொண்டு விட்டாலும் நிவர்த்தி ஆகும் 28. கண் எரிச்சல் பிசாசு பிடித்த தோஷம். இதை நிவர்த்தி செய்து பிசாசு ஒட்டுபவர்கள் உதவியோ , அதர்வண வேதம் தெரிந்தவர்கள் உதவியையோ நாடி பரிகாரம் செய்யவும் . அது முடியாதவரகள் திருச்சி அருகில் உள்ள குண சீலம் என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயிலில் தங்கவும் 29. உடலில் எறும்பு கடித்தல் : செய்வினை தோஷம் வேண்டாதவர் குடும்பத்தை துர்தேவதைகளின் உதவியால் செய்வினை (அல்லது) அபிசார தோஷம் செய்வித்தல், இதை நிவர்த்தி செய்ய விஷயம் தெரிந்த மந்திரவாதியை நாட வேண்டும் 30. உடம்பில் ஈ உட்காருதல் உடம்பில் ஈ உடகாருதல் புத்திர தோஷம் இத்தோஷ நிவர்த்திக்கு ஜாதகத்தை அறிந்து ஆராய்ந்து பரிகாரம் செய்ய வேண்டும் .

இழந்ததெல்லாம் மீண்டுவரும்

'தைரியலட்சுமி துணையிருந்தால் இழந்ததெல்லாம் மீண்டுவரும்... ஆதி லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என்று, மகா லட்சுமி எட்டு திருவடிவங்களில் எட்டு வகையான செல்வங்களை நமக்கு அருள்கிறாள் என்பது ஐதீகம். இந்த எட்டு லட்சுமிகளில் ஒருவரின் அருள் மட்டும் நமக்குக் கிடைக்கவில்லை என்றால், மற்ற லட்சுமியரின் அருளும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். மற்ற லட்சுமிகள் நம்மை விட்டு விலகினாலும், ஒரு லட்சுமி மட்டும் நம்மை விட்டு விலகவே கூடாது. அந்த லட்சுமி யார் தெரியுமா? அதுபற்றி பின்வரும் விக்கிரமாதித்யன் கதை நமக்கு விவரிக்கிறது... கன்னியாபுரியை ஆட்சி செய்து வந்த ராஜா பர்த்ருஹரி, வாழ்வின் மீது கொண்ட விரக்தியினால் தனது அரசப் பதவியைத் துறந்துவிட்டுத் தவம் செய்ய காட்டுக்குச் சென்றுவிட்டான். பர்த்ருஹரியின் விருப்பப்படி அவருடைய தம்பி விக்கிரமாதித்யன் அரியணை ஏறினான். பட்டி அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டான். விக்கிரமாதித்தன் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்துகொண்டு வந்தான். நாடு அனைத்து வளங்களுடனும் செழித்துச் சிறந்திருந்தது. மக்கள் அனைவரும் கவலை என்றால் என்னவென்றே தெரியாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அவனுக்கும் சோதனைக் காலம் தொடங்கியது. அவனுடைய கிரகநிலைகள் மாறத் தொடங்கின. அதுவரை அவனுக்கு அனைத்து அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்கிக்கொண்டிருந்த கிரகங்கள் அனைத்தும் அவனுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கின. கிரக நிலைகள் மாறத் தொடங்கியதுதான் தாமதம். அவனுக்கு அருள்புரிந்துகொண்டிருந்த அஷ்ட லட்சுமியரும் ஒவ்வொருவராக அவனை விட்டு விலகத் தொடங்கினார்கள். விக்கிரமாதித்யனின் நாட்டை விட்டு முதலில் வெளியேறியவள் ஆதிலட்சுமி. அவள் விலகிச் சென்றதுதான் தாமதம், நாட்டில் எங்குப் பார்த்தாலும் கொள்ளை நோய் பரவியது. நோயின் தாக்கத்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்து போனார்கள். ஆதிலட்சுமி விலகியதால் ஏற்பட்ட இந்த நிலை மாறுவதற்கு முன்பே அடுத்ததாக தான்ய லட்சுமி வெளியேறினாள். நாட்டில் மிகப்பெரிய பஞ்சம். ஒருவேளை உணவுக்கே அனைவரும் கஷ்டப்படும் நிலை உருவானது. அரண்மனையில் சேர்த்து வைத்திருந்த உணவு தானியங்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் தீர்ந்து போனது. அடுத்து வெளியேறியவள் தன லட்சுமி. சேர்த்து வைத்திருந்த செல்வம் அனைத்தும் கரைந்து போனது. இவர்களைத் தொடர்ந்து கல்விக்கு உரிய வித்யா லட்சுமி, வெற்றி தேடித் தரும் விஜயலட்சுமி, குழந்தைப் பேறு அளிக்கும் சந்தான லட்சுமி, நற்பாக்கியம் அளிக்கும் கஜ லட்சுமி என்று ஒவ்வொருவராக விலக, விலக விக்கிரமாதித்யனின் நாட்டிலும், அவனது அரண்மனையிலும் வறுமையும் கவலையும் சூழ்ந்தது. தனக்கு அருள் புரிந்துகொண்டிருந்த அஷ்ட லட்சுமிகள் ஒவ்வொருவராக விலகிக் கொண்டிருந்ததைக் கண்ட விக்கிரமாதித்யன் செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தான். அவனது மனதில் கவலைகள் சூழத் தொடங்கின. தைரியம் அவனை விட்டு விலகத் தொடங்கியது. தைரிய லட்சுமியும் தன்னைவிட்டு விலகிக் கொண்டிருப்பதை உணர்ந்த விக்கிரமாதித்யன் ஓடிச் சென்று தைரிய லட்சுமியின் கால்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, தாயே... அனைத்து லட்சுமிகளும் என்னை விட்டு நீங்கினாலும் பரவாயில்லை. ஆனால், தாங்கள் என்னை விட்டு ஒரு நாளும் நீங்கக் கூடாது. தாங்கள் உடன் இருந்தால் இழந்தவை அனைத்தையும் மீண்டும் பெற்றுவிடுவேன் நான். தைரியத்தையும் நம்பிக்கையையும் நான் வாழ்க்கையில் ஒரு நாளும் இழக்கக் கூடாது. அதற்குத் தாங்கள் எப்பொழுதும் எனக்குத் துணையிருக்க வேண்டும்" என்று மன்றாடினான். விக்கிரமாதித்யனின் வேண்டுதலைக் கேட்டு மனமுருகிய தைரியலட்சுமி, அவனுடன் இருப்பதற்கு ஒப்புக்கொண்டாள். வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தாலும் தைரியத்தை இழக்காத விக்கிரமாதித்யன் மீண்டும் கடுமையாகப் போராடி இழந்த அனைத்துச் செல்வங்களையும் பெற முயற்சி செய்தான். பட்டியை அழைத்து வேறு தலைநகர் அமைக்க இடத்தைத் தேடக் கட்டளையிட்டான். அப்படி அவன் தேடிச் செல்லும்போதுதான் காட்டில் பொய்கை ஒன்றையும், அதன் கரையில் ஆலமரத்தடியில் இருந்த காளி கோயிலையும் கண்டான். அங்கே எவன் ஒருவன் ஆலமரத்தின் ஏழு விழுதுகளையும் ஒரே வெட்டில் வெட்டி, காளி தேவியின் கோயிலுக்கு முன் இருக்கும் சூலத்தில் விழுந்து உயிர்த் தியாகம் செய்கிறானோ அவனுக்குக் காளி தேவியின் பூரண அருள் கிடைக்கும்' என்று ஓர் ஏட்டில் எழுதி இருந்ததைப் பார்த்தான் பட்டி. அந்தத் தகவலை விக்கிரமாதித்யனிடம் தெரிவித்தான். காளிக் கோயிலுக்குச் சென்ற விக்கிரமாதித்யன் தனக்குத் துணையாக இருக்கும் தைரிய லட்சுமியையும், காளி தேவியையும் வேண்டிவிட்டு ஏழு விழுதுகளையும் ஒன்றாகச் சுருட்டி ஒரே வெட்டில் வெட்டிவிட்டு, சூலத்தின் மீது பாய்ந்தான். சூலம் மீது விழுந்து தன்னைக் காளிக்குப் பலி கொடுப்பதற்கு வேண்டிய மன உறுதியை அளித்தவள் அவனுடன் இருந்த தைரிய லட்சுமியே. சூலத்தில் விழுவதற்கு முன்பே அவனைத் தாங்கிப் பிடித்த காளி தேவி, அவனுடைய உயிரையும் காப்பாற்றி, அவனுக்கு வேண்டிய வரங்களையும் அளித்தாள். காளி தேவியின் அருள் கிடைத்ததும் மற்ற லட்சுமிகள் ஒவ்வொருவராக அவனிடம் திரும்பி வரலானார்கள். படை திரட்டி வெற்றிகளைக் குவித்தான். செல்வம் அவனிடம் குவியத் தொடங்கியது. சகல சௌபாக்கியங்களும் அவனைச் சேரத் தொடங்கின. இதற்குப் பிறகுதான் விக்கிரமாதித்யன் உஜ்ஜைனி என்ற மாபெரும் நகரத்தை அமைத்து ஆயிரம் ஆண்டுகள் நல்லாட்சி நடத்தினான். இந்திரலோகம் சென்று பதுமைகள் காவல் காக்கும் சிம்மாசனத்தைக் கொண்டு வந்து அதில் அமரவும் செய்தான். விக்கிரமாதித்யனைப் போன்றுதான் நமது வாழ்க்கையிலும் கிரகங்களின் திசைகள் மாறும். செல்வம், வெற்றி, கல்வி என்று அனைத்தும் விலகி நமது நிலை தாழலாம். ஆனால், வாழ்க்கையில் எந்த நிலைக்கு நாம் தாழ்ந்தாலும் நமது தைரியத்தை மட்டும் விட்டுவிடக் கூடாது. தைரிய லட்சுமியின் துணை இருந்து, மனதில் தைரியத்தை மட்டும் நாம் இழக்காமல் இருந்தால் மற்ற அஷ்ட லட்சுமிகளின் அருளைப் பெற்றுவிடலாம். எனவே, அடுக்கடுக்கான சோதனைகள் வந்து நம்மைத் துன்புறுத்தினாலும், நாம் தைரியத்தை மட்டும் விட்டுவிடவே கூடாது.... வாழ்க வளமுடன்...

Saturday, August 25, 2018

தமிழ்நாட்டின் முதன்மைகள்

தமிழ்நாட்டின் முதன்மைகள் 1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930) 2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி 3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி 4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21) 5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990) 6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001) 7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688) 8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர் 9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார் 10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன் 11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975) 12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996) 13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த் 14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை 15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி 16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ் 17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS 18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண் 19. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள் 20. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி 21. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி 22. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண் 23. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசகவதம் (1916) 24. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931) 25. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும் 26. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம் 27. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873) 28. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882) 29. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930) 30. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856) 31. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு) 32. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு) 33. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்) 34. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் 35. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர் 36. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி) 37. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்) 38. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ) 39. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934) 40. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது) 41. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர் 42. மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம் 43. மிகப் பெரிய தேர் – திருவாரூர் கோயில் தேர் 44. மிகப் பழமையான அணை – கல்லணை 45. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை,முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை) 46. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்) 47. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்) 1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும் 2. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்: 1. நீலகிரி மலை 2. ஆனை மலை 3. பழனி மலை 4. கொடைக்கானல் குன்று 5. குற்றால மலை 6. மகேந்திரகிரி மலை 7. அகத்தியர் மலை 8. ஏலக்காய் மலை 9. சிவகிரி மலை 10. வருஷநாடு மலை 3. தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்: 1. ஜவ்வாது மலை 2. கல்வராயன் மலை 3. சேர்வராயன் மலை 4. பச்சை மலை 5. கொல்லி மலை 6. ஏலகிரி மலை 7. செஞ்சி மலை 8. செயிண்ட்தாமஸ் குன்றுகள் 9. பல்லாவரம் 10. வண்டலூர் 4. தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்: 1. ஊட்டி 2. கொடைக்கானல் 3. குன்னுர் 4. கோத்தகிரி 5. ஏற்காடு 6. ஏலகிரி 7. வால்பாறை 5. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்: 1. தால்காட் கணவாய் 2. போர்காட் கணவாய் 3. பாலக்காட்டுக் கணவாய் 4. செங்கோட்டைக் கணவாய் 5. ஆரல்வாய்க் கணவாய் 6. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – சேர்வராயன் மலை (1500 – 1600 மீ) 7. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – ஆனை மலை (2700 மீ) 8. முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும் காவேரி – 760 கி.மீ தென்பெண்ணை – 396 கி.மீ பாலாறு – 348 கி.மீ வைகை – 258 கி.மீ பவானி – 210 கி.மீ தாமிரபரணி – 130 கி.மீ தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்: குற்றாலம் – திருநெல்வேலி பாபநாசம் - திருநெல்வேலி கல்யாண தீர்த்தம் - திருநெல்வேலி ஒகேனக்கல் – தருமபுரி சுருளி – தேனி திருமூர்த்தி – கோயம்புத்தூர் கும்பக்கரை – தேனி 10. தமிழகத்தின் முக்கிய நதிக்கரை நகரங்கள்: மதுரை – வைகை திருச்சி – காவிரி ஸ்ரீரங்கம் – காவிரி மற்றும் கொள்ளிடம் திருநெல்வேலி – தாமிரபரணி வேலூர் - பாலாறு

Friday, August 24, 2018

மூதாதையர்கள் சாப்பிட்ட உணவுகள்

நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான். ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம். கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும். தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும். கரி சலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும். இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன. பசும்பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச்செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த் தன்மை உடையது. நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. சீதக்காய்ச் சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும். உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் சவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும். பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும். பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவை குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது. சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்திரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?

தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு. உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. நான்கு பேர் மத்தியில் உயரமான ஒருவர் நிற்கும் போது இயல்பிலேயே உயரமானவர் மனதில் உயர்ந்த மனப்பான்மையும் குட்டையானவர் மனதில் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. மேலும் உயரமானவர்கள் தலைமைப் பண்பை எளிதில் வளர்த்துக்கொள்ள அவர்களின் உயரமே காரணமாக அமையும் சூழ்நிலைகளும் உண்டு. உயரம் பாரம்பரியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. கூர்ந்து நோக்கினால் தந்தையைப் போன்ற உயரத்தை ஆண் பிள்ளைகளும் தாயை போன்ற உயரத்தை பெண் பிள்ளைகளும் அடைகிறார்கள். தந்தை உயரமாக இருக்கும் சமயத்தில் மகன்கள் அதைவிட சற்று உயரமாகவும் தாய் குட்டையாக இருந்தால் மகள் அதைப் போன்றே குட்டையாகவும் வளர வாய்ப்புண்டு. மரபணுக்களால் ஒருவரின் உயரம் தீர்மானிக்கப்பட்டாலும் நம் முயற்சிகளின் மூலமும் குழந்தைகளின் உயரத்தை அதிகப்படுத்தலாம். உயரத்தை அதிகப்படுத்துவதில் சத்தான உணவு வகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. சரிவிகிதத்தில் தயாரிக்கப்படும் பானங்கள், மீன் எண்ணை, வைட்டமின் ஏ மற்றும் டி கொண்ட மாத்திரைகள், புரோட்டின் நிறைந்த எல்லா உணவுப் பொருட்கள் ஆகியவை உயரத்தை அதிகப்படுத்த வல்லவை. புரோட்டின் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டதன் மூலம் ஜப்பானியர்களின் சராசரி உயரம் தற்போது அதிகரித்துள்ளது. உணவோடு உடற்பயிற்சிகளும் சேர்ந்தால் விரைந்து உயரத்தை அதிகரிக்கலாம். ஓடுதல், கயிறு தாண்டுதல், உட்கார்ந்து எழுதல், உயரத்தில் உள்ள கம்பிகளை பிடித்து தொங்குதல், கதவில் கால்களை முன்னோக்கி மடக்கி கொண்டு தொங்குதல் போன்ற பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்பித்தால் விரைவில் உயரமாக வளர்ந்து விடுவார்கள். ஆனால் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி குழந்தைகள் உயரமாக வளர காரணமாக அமைந்தாலும் பிற்காலத்தில் ஏதேனும் பின் விளைவினை ஏற்படுத்திவிடும். எனவே அளவான உடற்பயிற்சி அளிப்பது நல்லது. குழந்தைகள் உயரம் குறைவாக இருப்பது போல் தோண்றினால் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது மருத்துவரிடம் கூறி வயதுக்கேற்ற சராசரி உயரம் தம் குழந்தைகளுக்கு உள்ளதா என்று சோதித்துக் கொள்ளலாம். சராசரி உயரத்திற்கு குறைவாக இருந்தால் உடனடியாக உணவு அளித்தலையும், உடற்பயிற்சியையும் ஆரம்பிக்கலாம். குட்டையாக இருப்பவர்கள் குறுகிய மனதையும், உயரமாக இருப்பவர்கள் உயர்ந்த, பரந்த மனப்பான்மையையும் உயர்ந்த இலட்சியங்களையும் கொண்டிருப்பதாக உளவியல் கருத்து. எனவே உயரமானவர்களாகவும் உயர்ந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குங்கள்.

Thursday, August 23, 2018

காலா காலமாக தொன்று தொட்டு கடைப்பிக்கப்படுவது

1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது 2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது. 1. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. ஏன தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள். 2. அளவிற்து அதிகமாக உண்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. 3. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். 4. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. 5. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. 6. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. 7. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. 8. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. 9. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். 10. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். 11. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது 12. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. 13. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது. 14. சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. 15. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். 16. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம். 17. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. 18. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது. 19. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. 20. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. 21. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;. 22. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. 23. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். 24. வெள்ளித் தட்டில் இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும். 25. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. 26. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ;ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. 27. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. 28. அதே போல் முதலில் கீரையோ வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். வாழ்வில் செய்யக்கூடாதவை 1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது. 2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது. 3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது. 4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. 5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது. 6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது. 7. கர்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது. 8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது. 9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும். 10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது. 11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது. 12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது. 13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது. 14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. 15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது. மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது. வாழ்க வளமுடன்....

இந்த வலியால் துடித்திருக்கிறீகளா

இந்த வலியால் துடித்திருக்கிறீகளா? உங்களின் காலிற்கு கீழே உள்ளது இதற்கு மருந்து சிறுநீரக கல் உருவாகி அது சிறுநீர் குழாய்க்கு வந்து வெளியேற முடியாமல் ஏற்படுத்தும் வலியானது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த சிறுநீரக கல் உருவாவதற்கு தவறான உணவு பழக்கங்களும், போதுமான அளவு நீர் அருந்தாதும் என்று சொல்லப்பட்டாலும், மனித இரத்தத்தில் யூரிக் என்ற அமிலத்தின் அளவு 6 மில்லிகிராம் இருக்க வேண்டுமாம். ஒருசிலருக்கு இந்த அளவு அதிகரிக்கும்போது, சிறுநீரகங்கள் அதை வெளியேற்றுவதால் சிறுநீர் பாதையில் படிகங்களாக படிவதுண்டு. மேலும் அளவுக்கதிகமாக நம் உடலில் சேரும் கால்சியமும் சிறுநீர் கற்களாக மாறும் அபாயமும் உண்டு. சிறுநீரக கல்லின் அளவை பொருத்து, அறுவை சிகிச்சை அல்லது மருந்து மாத்திரை களில் குணப்படுத்தப்படுகிறது. ஒருநாளைக்கு 5 முதல் 6 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்,வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது, தக்காளி ,உப்பு இவைகளை உணவில் குறைத்து கொள்வது, போன்றவையெல்லாம் நாமாக இந்த சிறுநீரக கல்லிற்கு எடுத்துக்கொள்ளும் மருத்துவ முறைகளாகும். நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் ஒருமுறையேனும் நெருஞ்சில் முள்ளால் குத்து வாங்கியிருப்போம். அதுதான் இந்த சிறுநீரக கல் அடைப்பிற்கு ஒரு சிறந்த அருமருந்தாகும். உண்ணும் முறை நன்கு செழித்து முளைத்திருக்கும் சிறு நெருஞ்சில் செடியை வேருடன் 100 கிராம் அளவு எடுத்துக்கொள்ளுங்கள். அதனோடு கொத்தமல்லி விதைகள் 10 கிராம் சேர்த்து, அதில் தேவையான அளவு நீர் விட்டு நன்கு காய்ச்சி பாதியளவு வந்ததும் அதை வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். அதை தினமும் காலை மாலை இருவேளையும் 60 மில்லி வீதம் குடித்து வந்தால்,உங்கள் சிறுநீரக கல் தூள் தூளாக மறைந்துவிடும். நெருஞ்சில் மேலும் குணப்படுத்தும் மற்ற நோய்கள் பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் தொற்று, சிறுநீருடன் இரத்தம் வருதல், பெண்களின் கர்ப்பை நோய்கள், சிறுநீரக சம்பத்தப்பட்ட அனைத்து நோய்களும், வெட்டை, உடல் சூடு போன்றவைகளும் குணமாகும். நெருஞ்சில் மூலிகையை பற்றி நிறைய தேடி தெரிந்துகொண்டு உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தி குனமாகுங்கள் skp

இயற்கை விவசாயம் மருந்து

அமிர்த கரைசல் பச்சை பசுஞ்சாணம் -10kg பசுவின் கோமியம் -10லிட் நாட்டு சர்க்கரை -250g தண்ணீர் -100lit இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும். பிரம்மாஸ்திரா மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம். அக்னி அஸ்திரம் புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம். சுக்கு அஸ்திரா சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம். பீஜாமிர்தம் தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன. ஜீவாமிர்தம் பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம். கனஜீவாமிர்தம் பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும். நீம் அஸ்திரா நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம். மீன் அமினோ அமிலம் ‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது

Wednesday, August 22, 2018

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

** *பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!* *அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது *கடுக்காய் பொடி* குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கரா பொடி* தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பொடி* சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். *நவால் பொடி* சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. *வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. *தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. *துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. *ஆவரம்பூ பொடி* இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். *கண்டங்கத்திரி பொடி* மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. *ரோஜாபூ பொடி* இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். *ஓரிதழ் தாமரை பொடி* ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா. *ஜாதிக்காய் பொடி* நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். *திப்பிலி பொடி* உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. *வெந்தய பொடி* வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *நிலவாகை பொடி* மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். *நாயுருவி பொடி* உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. *கறிவேப்பிலை பொடி* கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு. *வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *திரிபலா பொடி* வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். *அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். *துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. *செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. *கரிசலாங்கண்ணி பொடி* காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. *சிறியா நங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. *கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. *முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது *கோரைகிழங்கு பொடி* தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. *குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. *பொன்னாங்கண்ணி பொடி* உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. *முருஙகைவிதை பொடி* ஆண்மை சக்தி கூடும். *லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. *வாதநாராயணன் பொடி* பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். *பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். *வாழைத்தண்டு பொடி* சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. *மணத்தக்காளி பொடி* குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். *சித்தரத்தை பொடி* சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. *பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும். *சுக்கு பொடி* ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. *ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. *கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். *வெட்டி வேர் பொடி* நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். *வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். *நன்னாரி பொடி* உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது. *நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். *பிரசவ சாமான் பொடி* பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. *கஸ்தூரி மஞ்சள் பொடி* தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். *பூலாங்கிழங்கு பொடி* குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். *வசம்பு பொடி* பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். *சோற்று கற்றாலை பொடி* உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். *மருதாணி பொடி* கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். *கருவேலம்பட்டை பொடி* பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும் இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..? 1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். 3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும். 4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். 5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். 6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். 7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

பிரதோஷம்

பிரதோஷம்*சிவ சிவ சிவாயநம* *நாளை சிவபெருமானை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும்* 👉 பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. 👉 பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். *விரதமுறை :* 👉 பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறு பூசி சிவ நாமத்தை ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் மாலை பிரதோஷம் முடியும் வரை உணவை தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனின் அருள் கிடைக்கும். *பிரதோஷ பலன்கள் :* 👉 தினந்தோறும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை நேரத்தில் சிவனை தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். 👉 சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். 👉 பிரதோஷ பூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். 👉 காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம். 👉 பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். மேலும், தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனைகள் தீரும். போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும். 👉 பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். 👉 பிரதோஷம் திங்கட்கிழமையில் வரும்போது சோம பிரதோஷம் என்றும், சனிக்கிழமையில் வரும்போது சனிப் பிரதோஷம் என்றும் கூறுவர். இவ்விரண்டு பிரதோஷ நாட்களும் மிகச் சிறப்பானது. *நமச்சிவாய வாழ்க*

Tuesday, August 21, 2018

மூளையை_கடுமையாக பாதிக்கும்_பத்து பழக்கவழக்கங்கள் !

#காலையில்_உணவு #உண்ணாமல்_இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும். #மிக_அதிகமாகச் #சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். #நிறைய_சர்க்கரை #சாப்பிடுதல்: இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. #தூக்கமின்மை நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்டகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். #மாசு_நிறைந்த_காற்று மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும். #புகைபிடித்தல் மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. #மூளைக்குவேலை #கொடுக்காமல்_இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. #தலையை_மூடிக்கொண்டு #தூங்குவது தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள், சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. #நோயுற்ற_காலத்தில் #_மூளைக்குவேலை #கொடுப்பது உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. #பேசாமல்இருப்பது அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

சக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் மிக எளிதில் ஆற்றக்கூடிய பூ

சக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் மிக எளிதில் ஆற்றக்கூடிய பூ! நித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது. புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது. நித்திய கல்யாணி பூவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நித்திய கல்யாணி பூக்கள், சீரகம். 5 முதல் 10 நித்திய கல்யாணி பூக்களை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தம் சீராகும். நாள்பட்ட புண்கள் சீக்கிரம் ஆறும். நித்திய கல்யாணி இலை, பூ ஆகியவற்றில் இருந்து புற்றுநோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய்க்கு மருந்தாகிறது. நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. நித்திய கல்யாணி பூக்களை பயன்படுத்தி புற்றுநோயாளிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நித்திய கல்யாணி பூக்கள், கருஞ்சீரகம். நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். புற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும். நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், நித்திய கல்யாணி இலை. ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும். தலையில் ஏற்படும் பொடுகுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். பொடுகு இருந்தால் அரிப்பு ஏற்படும். தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது. இதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கவும். இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.

Friday, August 17, 2018

நகைச்சுவை துணுக்குகள் 1

கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்? மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ. என்னதான் `Google' பெரிய வெப்சைட்டா இருந்தாலும். சொப்ன சுந்தரி"யை யாரு வச்சிருந்தாங்கன்னு கண்டுபிடிச்சி சொல்ல முடியுமா ? டெக்னாலாஜி இன்னும் ரொம்ப வளரனுமங்க ! மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல! கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா? மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க? மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்ட்டான். நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...! அதைத்தான் சொல்லிட்டான்...! மனைவி: ஹூம்...உங்களுக்கு என் மேல பிரியமே இல்ல..... கணவன்: அதுசரி....அப்ப நம்ம புள்ளைங்க ரெண்டையும் நான் கூகுள்ல இருந்தா டவுண்லோட் பண்ணுனேன்.....? விமானம் ஒன்று ராக்கெட்டைப் பார்த்து கேட்டது, ஹே,,,நீ எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது. ராக்கெட் சொன்னது அழகிய குரலில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ...... 'மின்சாரம் தாக்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?'' ''அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!'' "டாக்டர் சார்! என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!" "ஏன் என்னாச்சு?" "அது ஒண்ணுமில்லை டாக்டர் என் கூந்தலில் இயற்கையாகவே மணம் இருக்கா இல்லையான்னு மோந்து பார்த்தார்!" "எங்க கடைல துணி வாங்குனா கிழியவே கிழியாது சார்!" "அப்படியா? அப்போ எனக்கு 2 மீட்டர் வேணும்னா எப்படி கிழிச்சு குடுப்பீங்க?" "நான் வனஜாவை லவ் பண்ற விஷயத்தை ஊர்ல இருக்கற எல்லார்ட்டயும் சொல்லிட்டேன்" "அப்புறம் ஏன் சோகமா இருக்கே?" "இன்னும் வனஜாகிட்டே சொல்லலையே?" கணவன்: கடைசி முறையாக கேட்கிறேன், கிளம்புகிறாயா? இல்லையா? மனைவி: நானும் எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இதோ வந்துடுறேன்னு.. இருங்க.. நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர். டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது? நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம். நிருபர்: உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க? நடிகை: நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான். "கண்டக்டரே, அடுத்த ஸ்டாப்பில் நான் இறங்கணும்." "அதை ஏன்யா எங்கிட்ட சொல்றே, அதோ ட்ரைவர் தூங்கிட்டிருக்கார், எழுப்பி அவர் கிட்டே சொல்லு." அண்ணன்: ரூமை மூடிக்கிட்டு ஏன் மருந்து சாப்பிட்டாய்? தம்பி: டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார். "ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!" "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்." "என்னப்பா காபியில 'ஈ' செத்துக்கிடக்குது...?" "ஸ்பெஷல் காபியிலதான் சார் 'ஈ' உயிரோட இருக்கும்" எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்தவர் என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப நேரம் திரு திருன்னு முழிச்சுகிட்டு இருந்தார் அப்புறம்? நான் தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்…! "பொண்ணு பார்க்க வந்த பையன் சொன்னத கேட்டதும் பொண்ணு வீட்டுக்காரங்க அவனுக்கு பைத்தியம்னு பொண்ணு கொடுக்க மாட்டேனுட்டாங்க." "அவன் அப்படி என்ன சொன்னான்?" "நான் கொஞ்சம் தனியா பேசணும். பரவாயில்லையா?"னு சொன்னான். வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு தூக்கிட்டீங்க? ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க 'டிபன் ரெடியா?'ன்னு கேட்டா 'நேத்தே ரெடி'ங்கறான்! "அந்தக் கல்யாணத்துல ரொம்ப 'ஈ' மொய்க்குது, ஏன்?" "ஏன்?" "அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்.." "நீங்கள் எப்போதும் என்ன சோப் உபயோகிக்கிறீங்க?" "நான் எப்போதும் சோப் உபயோகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான்" பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க.. பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்.... மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க? மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்ட்டான். நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...! அதைத்தான் சொல்லிட்டான்...! அமெரிக்க நகர் ஒன்றில், ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் 'குட் வ்னிங் சார்..'அவர் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..' செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கல்கிரயம் இல்லைன்னு நகை வாங்கினது தப்பா போச்சு!" "என்னாச்சு?" "பேங்க்ல அடகு வைக்கப் போனப்ப இது தங்கமே இல்லைனு சொல்லிட்டாங்க" "செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு..?" "சின்ன சத்தம் கேட்டாகூட உடனே முழிச்சுப்பேன் சார்!" சீரியல், சினிமா இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எடுக்கறவங்க அழுதா அது சினிமா. பாக்கறவங்க அழுதா அது சீரியல் இந்த மிச்சர் பாக்கெட் என்ன விலை? பத்து ரூபா. லூசுன்னா எவ்ளோ? எல்லாருக்கும் ஒரே விலை தான்பா. "மகனிடம் தந்தை, யாரிடம் பேசினாலும் டி.டா போட்டு மரியாதை குறைவா பேசக்கூடாது?" "சரி, டா டி" உமா: ஆபீசுக்கு போகும்போது உன் கணவர் 'குட்நைட்'ன்னு சொல்லிட்டுப் போறாரே...எதுக்கு? ரமா: அங்க போய் தூங்கத்தானே போறார். "நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?" "போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்." "என்னத்த ரொம்ப நேரமா தேடுறீங்க... கண்ணாடியப் போட்டுக்கிட்டுத் தேட வேண்டியதுதானே?" "அந்தக் கண்ணாடியத்தான் எங்கே வச்சேன்னு தேடிக்கிட்டுருக்கேன்!" தமிழ் ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க? மாணவர்கள்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே" சிரிங்கன்னு, அதான்...... "என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!" "பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?" தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்.. மாணவன்: டேய் மச்சான், 'figure' டா! ஒருவர்: சாமி... உங்க சிஷ்யனை ஏன் துரத்திட்டீங்க...? சாமியார்: பெண் பக்தர்களை வசியப்படுத்துவதில் என்னையே மிஞ்சிட்டான். அதான். டாக்டர்: நான்தான் உங்களுக்கு கால் ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர்! நோயாளி: அப்ப மீதி முக்கால் ஆபரேஷனை யார் பண்ணுவாங்க? சென்னை ஹோட்டலில்.. "மதுரை மல்லிப்பூ இட்லி கேட்டு 1 மணி நேரம் ஆகுது... இன்னும் வரலையே...?" "மதுரை என்ன பக்கத்துலய இருக்கு.. உடனே கெண்டு வர.." மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்.. அப்பா : Very Good.., பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல சாதிக்க போற.. ... மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்.. ..... :P "தலைவரே! நீங்க இப்ப சொன்னது நூத்துக்கு நூறு உண்மை...!" "சரியான ஜால்ராய்யா நீ! இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை... கொட்டாவிதான் விட்டேன்...!"

Friday, August 3, 2018

முகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சளின் தன்மைகள் கஸ்தூரி மஞ்சள் என்பது இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதமாகும் . சருமம் எதிர்பார்க்கும் எல்லா முக்கிய தன்மைகளும் கஸ்தூரி மஞ்சளில் உண்டு. மாசு, சூரிய ஒளி பாதிப்பு, தூசு, அழுக்கு மற்றும் வெப்பம் காரணமாக ஏற்படும் ஒவ்வாமை போன்றவற்றால் உண்டாகும் அழற்சியைப் போக்கி சருமத்தை பாதுகாக்கிறது. கஸ்தூரி மஞ்சள் ஒரு அற்புதமான அன்டி ஆக்சிடென்ட் ஆகும். பால் – 2 ஸ்பூன் முல்தானிமிட்டி – 2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் – 2 ஸ்பூன் மூன்றையும் மிக்ஸ் பண்ணி பேஸ்டாக்கி முகத்தில் அப்ளை பண்ணி 10 நிமிடத்தின்கு பின் கழுவவும். கடலை மாவு முல்தானி முட்டிக்கு ஒரே குணங்கள் உண்டு. உங்கள் சருமத்திற்கு தேவையான புத்துணர்ச்சியைத் தர உதவுவது பால். பால் உங்கள் சருமத்தின் உள்ளிருந்து மிருதுவாக்கி, ஒவ்வொரு துளையையும் ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. காய்ச்சாத குளிர்ந்த பால் , கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் முல்தானிமிட்டியுடன் சேர்க்கப்படுவதால், அதன் குளிர்ச்சி சருமத்தில் நீடித்து நிற்க உதவுகிறது. இதனால் சருமம் மிருதுவாகவும் மென்மையாகவும் மாறுகிறது. தக்காளி விழுது, மற்றும் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கஸ்தூரி மஞ்சள். தக்காளி ஒரு சிறந்த ப்ளீச். இது ஒரு மென்மையான பொருள். சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தை சேதத்தில் இருந்து மீட்க தக்காளி உதவுகிறது. பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. மேலும் ஒரு நறுமணத்தை சருமத்திற்கு கொடுக்கிறது.