Friday, January 31, 2020

கடவுளுக்கு வாழைப்பழம் வைத்து படைப்பது ஏன்?



♥முக்கனிகளான மா, பலா, வாழை இவற்றில் வாழைக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு.

♥ மா, பலா என்று இல்லை, இயற்கையாக விளைந்த எல்லா வகையான பழங்களிலுமே கொட்டை இருக்கும். அப்படி கொட்டை இல்லாத பழம் உண்டென்றால் அது மரபணு மாற்றப்பட்டதாகத்தான் இருக்கும்.

♥ஆனால், இயற்கையாக விளையும் பழமான வாழைப்பழத்தில் கொட்டை என்பதே இல்லை. மாறாக அதில் சிறு கருப்பு விதைகள்தான் இருக்கும்.

♥ எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் பூஜையில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் வைத்து படைக்கிறார்கள்.

♥ மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

♥ இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டுதலை முன்னிறுத்தி நாம் கடவுளுக்கு வாழைப்பழத்தை படைக்கிறோம்.

♥ அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.

♥ அது மட்டுமல்ல தேங்காய் மற்றும் வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.

♥ மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.

♥அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.

♥ இதனால் தான் கடவுளை வணங்கும்போது வாழைப்பழத்தை வைத்து வணங்குகிறோம்.

Thursday, January 30, 2020

வீட்டிற்குள் பாம்பு தென்பட்டால்.....


#கருடனை_நினைத்து .....

அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா!

ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!.......

என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்,,,,,என்று கருட புராணம் தெரிவிக்கிறது.....

மரியாதைக்குரிய_பெண்கள்:



♥எபிடியூரல் சிசேரியன் ஊசி என்பது உலகின் மிக மோசமான மற்றும் ஆபத்தான ஊசி ஆகும், ஆனால் சில தாய்மார்களுக்கு
தங்கள் குழந்தையை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்காக அதை எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை,

♥அவர்கள் நடுத்தர வயதை எட்டும்போது முதுகுவலி இடுப்புவலி தலைவலி என வேதனைகள் முடிவில்லாமல் தொடங்கியது ..

♥தினமும் வலியில், அவளால் நீண்ட நேரம் நிற்க முடியாது, நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார முடியாது. ஏன் நின்மதியாக தூங்கவும் முடியாது..

♥நம் வாழ்நாள் முழுவதும் வழிபடத் தகுந்த தெய்வம் அம்மாக்கள். ஏனென்றால் ஊசி மூலம் இதுபோன்ற வலிகளை அனுபவிக்கும் திறன் சாதாரண மனிதர்களுக்கு கிடையாது.

Wednesday, January 29, 2020

பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதுக்கு காரணம் தெரியுமா?

ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும். அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்.

ராமாயணம்_முழுவதும்_படிக்கனுமா.....


*தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவோ புண்ணியம்? எவ்வளவோ பலன்? எவ்வளவோ நல்லது? ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா?*
என்றால் ...
நிச்சயம் முடியும் எப்படி?
*காஞ்சி மஹா பெரியவரால் அருளிச் செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தார் கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30 வினாடிகளி சொல்லி முடித்து அனைத்துப் பலன்களையும் பெற்றுத் தரக்கூடியதாக நமக்கு வழங்கியுள்ளார்.*

*ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்*
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
*அங்குல்யா பரண சோபிதம்*
சூடாமணி தர்சனகரம்
*ஆஞ்சநேய மாஸ்ரயம்*
வைதேஹி மனோகரம்
*வானர சைன்ய சேவிதம்*
சர்வமங்கள கார்யானுகூலம்
*சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்*

ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்

இவ்வளவு தான் அந்த ஸ்லோகம்...முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது.
நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்கள். உங்கள் வம்சம் ராம நாமத்தால் வளரும்..........இது சத்திய வாக்கு என்று பெரியவா கூறியுள்ளார்.

நன்றி.....

பூஜை_அறையில்_சிலை_வழிபாடும்_____சிலை_அளவுகளும்.....



நமது வீட்டில் எத்தனையோ வகையான சுவாமி படங்களை எவ்வளவு பெரிய அளவில் வைத்து வழிபட்டாலும் அதற்கு சுலபமான வழிபாட்டைத்தான் நாம் மேற்கொள்கின்றோம். அதாவது அந்த சுவாமி படங்களுக்கு பொட்டிட்டு, விளக்கேற்றி, தீப, தூப ஆராதனை செய்து, சுத்தமான முறையில் வழிபடுவது அதற்கான சுலபமான முறையாக கருதப்படுகிறது.

ஆனால் சிலரது வீட்டில் சுவாமி சிலைகளை வைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். தெய்வங்கள் சுவாமி படங்களாக இருந்தால், ஒரு வகையான வழிபாட்டையும், அதே தெய்வங்கள் சிலை வடிவில் இருந்தால் அதற்கென்று ஒரு வழிபாட்டையும் நம் சாஸ்திரத்தில் உள்ளது........

முதலில் நம் வீட்டில் இருக்கும் சுவாமி சிலை 6 அங்குலத்திற்கு மேல் இருக்கக் கூடாது. 6 அங்குலத்திற்கு மேலே உள்ள சிலையை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அர்த்தமில்லை. 6 அங்குலத்திற்கு மேல் சுவாமி சிலைகளை வீட்டில் வைக்கலாம். ஆனால் முறைப்படி தினமும் செய்யவேண்டிய வழிபாட்டு முறையை அந்த சிலைக்கு கட்டாயம் செய்ய வேண்டும்.

அதாவது கோவிலில் பெரிய அளவிலான சுவாமி சிலையை எப்படி தினந்தோறும் பராமரிக்கிறார்களோ அதேபோல் நம் வீட்டிலும் முறையான பூஜை புனஸ்காரங்களை செய்து, அபிஷேகமும், நெய்வேதியமும் முறைப்படி செய்ய வேண்டும். நடைமுறை வாழ்க்கையில் வீட்டில் இப்படிப்பட்ட பூஜைகளை செய்வது என்பது சாத்தியமில்லை என்பதால் 6 அங்குலத்திற்கு மேல் உள்ள சிலையை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார்கள்.

6 அங்குலத்திற்கு கீழே உள்ள சிலைக்கு அபிஷேகங்களும், ஆராதனையும், நெய்வேதியம் தேவையில்லையா என்ற கேள்வி அனைவருக்கும் எழும்.

6 அங்குலத்திற்கு கீழே உள்ள சுவாமி சிலைக்கும் நிச்சயமாக அபிஷேகமும், நைய்வேதியம், தீபாராதனையும் அவசியம். ஆனால் தினந்தோறும் இதனை கடைபிடிக்க முடியாதவர்கள் வாரம் ஒரு முறையாவது இப்படிப்பட்ட வழிபாட்டினை செய்யலாம் என்று கூறுகிறது சாஸ்திரம்.

இதேபோல் நம் வீட்டில் இருக்கும் சிலையானது தங்கம், வெள்ளி, பித்தளை, தாமிரம், வெங்கலம் இவை ஐந்தும் கலந்த ஐம்பொன்னாலான சிலையாகவோ அல்லது இவைகளில் ஏதேனும் ஒரு உலகத்தில் செய்த சிலையாகவோ இருக்கலாம்.

#important.....
சில பேர் வீட்டில் கல்லினாலான சிலைகளை வைத்திருப்பார்கள். கல்லில் செய்யப்பட்ட 6 அங்குலத்திற்கு கீழே உள்ள சிலையாக இருந்தாலும் தினந்தோறும் அபிஷேகமும், நைய்வேத்தியமும், ஆராதனையும் மிகவும் அவசியம்.

அடுத்ததாக நம் வீட்டில் ஒரு தெய்வத்தின் சிலை ஒன்று என்ற எண்ணிக்கையில் தான் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது அம்மனுக்கு ஒன்று, சிவனுக்கு ஒன்று, விநாயகருக்கு ஒன்று, முருகருக்கு ஒன்று இப்படி இருக்கலாம்.

அம்மன் சிலை இரண்டு, முருகன் சிலை இரண்டு என்ற கணக்கில் வைத்துக் கொள்ள கூடாது என்று கூறுகிறது சாஸ்திரம். அப்படி வைத்திருப்பவர்களுக்கு பூஜை முறைகள் வேறுபடும்.

வீட்டில் அதைப் பின்பற்றுவது அவ்வளவு சுலபமல்ல. இதனால் வீட்டில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு சிலைகளை மட்டும் வைத்துக் கொள்வது நல்லது.

சிலருக்கு வீட்டில் நடராஜர் சிலை வைக்கலாமா என்ற சந்தேகம் இருந்து வரும். நடராஜர் சிலையையும் 6 அங்குலத்திற்கு கீழ் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். உங்களால் முடிந்தவரை 6 அங்குலத்திற்கு கீழே உள்ள சிலைகளுக்கு தினம் தோறும் அபிஷேகம் செய்ய முடியவில்லை என்றாலும் கூட, தினந்தோறும் நெய்வேதியம் வைப்பது மிகவும் சிறப்பானது.

பழவகைகளையோ அல்லது பேரீச்சம் பழத்தையோ அல்லது கற்கண்டு மட்டுமாவது நைவேத்தியமாக படைப்பது மிகவும் நல்ல முறை. நீங்கள் வீட்டில் தினம்தோறும் செய்யும் சாதத்தில் கூட சிறிதளவு நெய் விட்டு, எச்சில் படுவதற்கு முன்பு அந்த இறைவனுக்கு நெய்வேதியமாக படைக்கலாம்.

உங்களால் பூஜை புனஸ்காரங்களை முறையாக செய்ய முடியும் என்றால் மட்டும் வீட்டில் சுவாமி சிலைகளை வைத்துக்கொள்ளுங்கள். முடியாதபட்சத்தில் சுவாமி படங்களுக்கு மனதார செய்யப்படும் பூஜைகள் கூட அந்த இறைவனை போய்ச்சேரும்.

நன்றி,,,,,,பயனாக இருக்கும் என நினைக்கிறேன்....மற்றவர்களுக்கும் share செய்யுங்கள்.....சில சந்தேகம் தீர்ந்த மாதிரி இருக்கட்டும்.....

Tuesday, January 28, 2020

துர்வாசரும் கண்ணனும்



யமுனைக் கரையில் கண்ணனும் ராதையும் அமர்ந்திருந்தார்கள். சிலுசிலுவென்று சுகமான காற்று வீசிக் கொண்டிருந்தது. கண்ணன் தலையில் சூடியிருந்த மயில்பீலி காற்றில் படபடக்கும் அழகை ராதை ரசித்தவாறிருந்தார்.

ஆனால், கண்ணன் அக்கரையையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.""என் மேல் சிறிதும் அக்கறையில்லாமல் அக்கரையில் என்ன பார்வை?'' என வினவினார் ராதை.
"எனக்குப் பசிக்கிறது!'' என்றார் கண்ணன்..ராதையோ பதறினார்.

""அடடா! இதோ உடனடியாக நானே சமைத்து உங்களுக்கு உணவு எடுத்து வருகிறேன். அதற்கு அக்கரையைப் பார்ப்பானேன்?''

" அக்கரையிலும் ஒருவருக்குப் பசிக்கிறது!''

""யார் அவர்?'' ராதை கூர்மையாகத் தானும் அக்கரையைப் பார்த்தார். அங்கே ஆலமரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பது தெரிந்தது.

""துர்வாச மகரிஷி!'' என்றார் கண்ணன்.

""அறிவேன்! கோபத்திற்கும் அதனால் தாம் கொடுக்கும் சாபத்திற்கும் பெயர்பெற்றவர்!''
""ராதா! என் மனத்தில் நீ இருக்கிறாய். அவர் மனத்தில் நான் இருக்கிறேன்!
அவர் என் பக்தர்!''

சரி...சரி... அவருக்கும் சேர்த்தே உணவு சமைத்து எடுத்து வருகிறேன்!

அதிருக்கட்டும், உங்கள் மனதில் நான் இருப்பது பற்றி மகிழ்ச்சி. ஆனால் அங்கே நான் மட்டும் தான் இருக்க வேண்டும். என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் இருக்கக் கூடாது, ஞாபகமிருக்கட்டும்!

கண்ணன் நகைத்தார். . . . ராதை தொடர்ந்தார்.

"இப்படிச் சொன்னால் எப்படி ராதா? நான் நேசிக்கும் எல்லாப் பெண்களிடமும் உன்னைத் தானே காண்கிறேன்!

"நல்ல நியாயம் இது! உங்கள் தாயார் யசோதையிடம் சொல்லித்தான் உங்களைத் திருத்த முயலவேண்டும்!''

""தாயார் யசோதைக்கும் உனக்கும் ஒரே ஒரு வேற்றுமை தான் ராதா. என் தாய் என்னை உரலில் கட்டிப் போட்டாள். நீ உன் குரலில் கட்டிப் போடுகிறாய். என் புல்லாங்குழலை இனிமை என்பவர்கள் உன் குரலைக் கேட்காத முட்டாள்கள்''.

"போதுமே உங்கள் புகழ்ச்சி. ஆண்களுக்குப் பசிவந்தால் கூடவே கவிதையும் வரும் போல் இருக்கிறது. என்னை அதிகம் புகழவேண்டாம். எப்படியும் சாப்பாடு உறுதி!''

ராதை நகைத்தவாறே மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தார்.

"ஒரு தட்டில் உணவு கொண்டு வா, போதும். துர்வாசர் பசியாறட்டும்!''

ராதை தலையாட்டியபடி, சாப்பாடு செய்து எடுத்து வரப் புறப்பட்டார்.

ராதை உணவுத் தட்டோடு வந்தபோது யமுனை நதியில் கணுக்காலளவு நீர் தான் இருந்தது.

தானே அக்கரைக்குப் போய் முனிவருக்கு உணவு பரிமாறிவிட்டு வருவதாகச் சொல்லி நதியில் இறங்கி நடந்தார். அவரது நடையழகைப் பார்த்து ரசித்தவாறே இக்கரையில் அமர்ந்திருந்தார் கண்ணன்.

துர்வாச மகரிஷி ஞானதிருஷ்டியால் வந்திருப்பது யார் என்று உணர்ந்துகொண்டார்.

"கண்ணக் கடவுள் மேல் அழியாப் பிரேமை கொண்ட என் தாய் ராதா மாதாவா? என்னைத் தேடித் தாங்களே வந்தீர்களா தாயே?''

"உங்களுக்குப் பசிக்கிறதென்று அவர் சொன்னார். என்னைத் தாய் என்கிறீர்கள் நீங்கள்! பசிக்கும் குழந்தைக்கு உணவு தரவேண்டியது தாயின் பொறுப்பல்லவா?''

"எனக்குப் பசிப்பதைப் பற்றி மட்டும்தானா சொன்னார்? கண்ணனுக்கும் பசிக்குமே? அதைப் பற்றிச் சொல்லவில்லையா?''

"அதையும் தான் சொன்னார். ஆனால், நீங்கள்தான் முதலில் பசியாற வேண்டும். கணவர் காத்திருக்கலாம். குழந்தை காத்திருக்கக் கூடாது!''

ராதை இலைவிரித்து வெகு பிரியமாக உணவு பரிமாறினார். பசியின் வேகமோ உணவின் சுவையோ எது காரணமோ தெரியவில்லை. பார்க்க ஒல்லியாக இருந்த அந்த மகரிஷி, ஒரு பயில்வான் சாப்பிடுவதுபோல் வயிறாரச் சாப்பிட்டார்.

இந்தச் சாப்பாட்டு வேளையில் நடந்த இன்னொரு விஷயத்தை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை. யமுனையில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்திருந்தது. வெள்ளத்தைப் பார்த்த ராதை திகைத்தார்.

"தாயே! எப்படித் திரும்பிச் செல்வீர்கள்?'' - முனிவர் கவலையோடு வினவினார்.
""அதுதான் எனக்கும் புரியவில்லை. நான் கண்ணனாக இருந்தால் நந்தகோபர் என்னைக் கூடையில் எடுத்துச் செல்லக் கூடும். ஆதிசேஷனே வந்து மழை, மேலே படாமல் குடைபோல படம் விரித்துக் காக்கக் கூடும்.

ஆனால், நான் கண்ணனல்லவே? ராதை தானே? எனக்கு இந்த நதி வழிவிடுமா என்ன?''

""ஏன் விடாது? இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால், யமுனை வழிவிடட்டும் என்று சொல்லிப் பாருங்கள். வழி கிடைக்கும். நதியைக்கடந்து கண்ணனிடம் சென்றுவிடுங்கள்!''

ராதை கலகலவென சிரித்தார்.

"என் கண்ணெதிரே நீங்கள் வயிறார உணவு உண்டிருக்கிறீர்கள். நான் தான் இலைபோட்டுப் பரிமாறியிருக்கிறேன். அப்படியிருக்க இப்படியொரு பொய்யைச் சொல்லச் சொல்கிறீர்களே?''

""தாயே! அது பொய்யா நிஜமா என்பதை முடிவு செய்ய வேண்டியது யமுனை நதியின் பாடு.

நீங்கள் ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்? சொல்லித்தான் பாருங்களேன்!''

ராதை வியப்போடு யமுனை நதியின் கரையில் நின்று, "இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனையே வழிவிடுவாயாக!'' என்று கூறினார்.

மறுகணம் யமுனை இரண்டாகப் பிளந்து ராதை நடந்துசெல்லும் வகையில் வழிவிட்டது.

ஆச்சரியத்தோடு விறுவிறுவென்று நடந்து கண்ணன் இருக்கும் கரைக்கு வந்து சேர்ந்தார் ராதை. மறுகணம் நதி மீண்டும் இணைந்து வழிமறைத்து மூடிக்கொண்டது! ராதையின் முகம் கோபத்தால் சிவந்தது.

"என்ன ராதா? நீ அனைத்தையும் கரைகண்டவள் என்பது உண்மைதான் போலிருக்கிறது? இன்று இக்கரை அக்கரை இரண்டையும் கண்டுவிட்டாயே?''

"நான் கரைகண்ட லட்சணம் இருக்கட்டும். யமுனை இப்படி துர்வாசருக்குப் பயப்பட வேண்டாம். அவர் சபித்துவிடுவாரோ என்பதற்காக அவர் சொன்ன பொய்க்கெல்லாம் இந்த நதி துணைபோகிறது''.

கண்ணன் நகைத்தவாறே கேட்டார்,

"அப்படி என்ன பொய்க்குத் துணைநின்றது இந்த நதி?''

"இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனை வழிவிடட்டும் என்று சொல்லச் சொன்னார், என் சாப்பாட்டை வயிறாரச் சாப்பிட்ட உங்கள் பக்தர். அவர் சொன்னதைச் சொன்னேன். இந்தப் பாழும் நதி அந்தப் பொய்க்கு உடன்பட்டு வழிவிட்டிருக்கிறது. இந்த நதியை என்ன செய்தால் தகும்?''

"வா! உண்மையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த நதியை மலர்தூவி வழிபடுவோம்!''

"நீங்களுமா அதை உண்மை என்கிறீர்கள்? அப்படியானால் என் கண்ணால் பார்த்தது பொய்யா?''

"கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்யாக இருக்கலாம். தீர விசாரிப்பதுதான் மெய். துர்வாசர் உபவாசமிருந்தார் என்பது சத்தியம் தான்!

நதிகள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்கும்''.

"அது எப்படிச் சத்தியமாகும்?'' ராதை வியப்போடு விசாரித்தார்.

கண்ணன் சொல்லலானார்:

"அன்பே ராதா! எனக்குப் பசிக்கிறது என்றேன். ஆனால், ஒரு தட்டு உணவே போதும் என்றேன். நீ துர்வாசருக்கு உணவு படைத்தாய். அந்த முனிவர், தன் இதயத்தின் உள்ளிருக்கும் எனக்கு நைவேத்தியம் செய்வதான பாவனையுடன் உணவு முழுவதையும் உண்டார். அதனால் தான் நான் உண்ணும் அளவு அதிக உணவை அந்த ஒல்லியான முனிவரால் உண்ண முடிந்தது. அவர் உண்ட உணவின் பலம் என் உடலில் கூடிவிட்டது. என் பக்தர்களின் பக்தியால் தான் எப்போதும் எனக்கு பலம் கூடுகிறது. இனி நீ வற்புறுத்தினாலும் கூட என்னால் சாப்பிட முடியாது. வயிறு நிறைந்திருக்கிறது. இந்த ரகசியத்தை என் ராதை அறியவில்லை. ஆனால் யமுனை அறிவாள். அதனால் தான் அவள் விலகி வழிவிட்டாள்!''

கண்ணன் சொன்னதை, ராதை வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தார்.

"கண்ணே ராதா! எந்த மனிதன் தான் செய்யும் எந்தச் செயலையும் தன் உள்ளிருக்கும் இறைவனுக்கு சமர்ப்பணம் என நினைத்துச் செய்கிறானோ அவனை எந்தத் துன்பமும் பாதிப்பதில்லை. ஏனெனில் அவனுக்கு நேரும் துன்பத்தையெல்லாம் அவன் இதயத்தின் உள்ளிருக்கும் இறைவன் தாங்கிக் கொண்டு விடுகிறான்!''

ராதை ஒரு பேருண்மையைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் மலர்ந்து சிரித்தார்.

"ஆனால் ராதா! நான் எப்போதும் சூடாக எதையும் சாப்பிடுவதில்லை!'' என்றார் கண்ணன்.

"ஏன்?'' என்று கேட்டார் ராதை.

"நீ என் உள்ளத்தில் இருக்கிறாய். உனக்குச் சூடு பொறுக்காது!'' என்றார் கண்ணன். ராதை கலகலவென மலர்ந்து சிரித்ததைக் கேட்டு அக்கரையில் இருந்த துர்வாசரின் மனம் மகிழ்ந்தது.

*ஸ்ரீ பெருமாள் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!*

*சௌஜன்யம்..!*

*அன்யோன்யம் .. !!*

*ஆத்மார்த்தம்..!*

*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*

ஓம் ஸ்ரீ தேவராசு சுவாமிகள்



புதுச்சேரி நகரில் உள்ள முத்தியால்பேட்டையில் 1935 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை தம் திருவுடலை சுமந்தவாறு வலம் வந்துள்ளார். யாராவது வந்து அவர்களிடம் தங்கள் நோய்கள் பற்றியோ அல்லது குறைகளை சொன்னால், மண்ணை அள்ளி கையில் கொடுப்பார். அதை நெற்றியில் இடச்செய்கை செய்வார். சில அன்பர்களுக்கு வாயில் போட்டு க் கொள்ள சைகை காட்டுவார். பிணிகள் விலகி விடும்.

முத்தியால்பேட்டை நாலுமூலை உள்ள மிளகாய்ப்பழச் சாமியார் கட்டிய முருகன் கோயில் அருகில் பெரும்பாலும் காணப்படுவார். சுவாமியை ஒரே இடத்தில் பார்க்க முடியாது! வேகமாக சென்று கொண்டு இருக்கும் அவர், எந்த கடை ஓரத்திலாவது நின்று விட்டால் அன்று அந்த கடையில் அமோக வியாபாரம் நடக்கும். உணவகம் சென்று இட்லி, வடை எடுத்து விதியில் எரிந்து விட்டு செல்வார். அன்று அங்கு அமோக வியாபாரம் நடக்கும். சிறு பிள்ளைகள் சுவாமியை பின் தொடர்ந்து தெருவில் செல்வார்கள். அப்பொழுது தெருவில் இருக்கும் மண்ணை எடுத்து பிள்ளைகள் கையில் வைப்பார்கள். கையில் வெய்த மண், சக்கரையாக மாறிவிடும். பிள்ளைகள் சக்கரையாக வாயில் போட்டு கொண்டு ஓடுவார்கள். சுவாமிகள் மௌனத்தில் ஆழுந்து மகா மௌனத்தில் திலைத்து இருப்பார். யாரிடமும் உணவுக்காக கையெந்தியது இல்லை. ஒரு அன்பர் பல முறை உணவு கொடுத்தும் அந்த உணவை ஏற்கவில்லை. கடைசியில் கூழை கொடுத்துள்ளார். அதை ஒரு கொட்ட இஞ்சி காட்டி உள்ளார். அதில் உற்றிக் கொடுத்த பிறகே சுவாமி அதைப் பருகி உள்ளார். அது முதல் சுவாமிகளுக்கு கூழை கொடுத்து வந்துள்ளனர்.

ஒரு முறை, முத்தியால்பேட்டை கடை தெருவில் உள்ள பிள்ளையார் கோயிலில் சித்தரை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்றும், தலையும் உடலும் தனித்தனியாக இருப்பதாக உள்ளூர் காவல் நிலையத்தில் சிலர் புகார் செய்தனர். விரைந்து சென்று பார்த்த பொழுது, சுவாமிகள் சுகமாக உறங்கி கொண்டு இருந்தார். இதே போன்று மறுநாளும் புகார் வர, விரைந்த சென்ற காவலர்கள் -தங்கள் முன்னால் சித்தர் நடந்து செல்வதை கண்டு மிகவும் வியந்து போனார்கள். சித்தரின் சித்து வேலை என்று அறிந்து காவலர்கள் திரும்பி சென்றனர். இதன் பிறகு சித்தர் அந்த கோவிலில் படுப்பதே தவிர்த்து விட்டார். அவரது தேகம் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. அவரது நடந்துகொண்டே இருப்பார். எங்கும் ஒக்கார மாட்டார். மகா மௌனதிலயே இருந்தார். ஒரு முறை காலாப்பட்டு சாலை ஓரமாக சென்று கொண்டு இருந்தவரை ஒரு வாகனம் பின்னால இருந்து மோதியது. சுவாமி தூக்கி எரியப்பட்டு கிழே விழுந்தார். ஊர் மக்கள் அவரை தூக்க சென்றனர். பலத்த இரத்த காயங்களுடன் எழுந்த சித்தர், எதுவும் நடக்காது போன்று எழுந்து நடக்க தொடங்கினார். இதை கண்ட மக்களுக்கு ஒரே அதிர்ச்சி.

சித்தர் அங்கிருந்து மரக்காணம் வந்தார். அங்கிருந்த பேருந்து நிலையத்தில் உள்ள இட்லி கடை வைத்திருந்த ஒரு மூதாட்டியிடம் பசிக்காக கையை தட்டினார். கலையில் இருந்து வியாபாரம் ஆகாமல் இருந்ததால், சுவாமிகளை விரட்டினர் அந்த மூதாட்டி. அங்கிருந்து சித்தர் சென்று விட்டார். அன்று முழுவதும் எந்த வியாபாரமும் நடக்க வில்லை, மேலும் அந்த மூதாட்டியால் வாயை திறக்கவோ, நகரவோ முடியவில்லை. இவரை தேடி வந்த மூதாட்டியின் பேத்தி, இவரின் நிலையை கண்டு கண்ணீர் வடித்தால். அருகில் இருந்தவர்களிடம் இருந்து நடந்ததை அறிந்து கொண்ட பேத்தி, சித்தரை தேடி கண்டு பிடித்து அவரிடம் மன்னிப்பு கேட்டார். பாட்டியை குணப்படுத்தும் படி கெஞ்சினால். மனம் வருந்திய சித்தர், பாட்டியை இலேசாக தடவி கொடுத்தார். பாட்டி பழைய நிலைமைக்கு திரும்பினார்.

அங்கிருந்து சித்தர் வன்னியநல்லூர் சேர்ந்தார். அங்குள்ள நாவமரத்தடியின் கிழ் சுவாமி ஆறு நாட்கள் தங்கினார். நாவமரத்தை உற்றுப் பார்ப்பதும் வணம்குவது மாய் இருந்த சித்தரை பார்த்த ராமாயி என்ற உள்ளூர் பெண், அவருக்கு சாப்பாடு கொண்டு வந்து தந்தார். அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தான் கொண்டு வந்த கூழையாவது குடிக்கும் படி கேட்டுக்கொண்டார். சித்தரும் கூழை குடித்தார். குடித்து முடித்த சித்தர் அவளுக்கு சிறிது மண் அளித்தாராம். அதை விட்டில் வைத்த இடத்தில் நூறு ரூபாய் நோட்டு ஒன்று இருந்ததாம். தபால்காரர் மனைவியின் வாயிற்று வலியை தான் அளித்த மண்ணை பூச செய்து அந்த நிமிஷமே குணம் அடைய செய்தாரம். அவ்வூரில் வசதி மிகுந்த அம்மணி அம்மாள் என்ற வயதான அம்மையார் விட்டில் அமர்ந்திருந்தார். அம்மணி அம்மாள் சித்தரை அங்கிருந்த கம்பால் அடித்து விரட்டினார். சித்தார் மிண்டும் மரத்தடியிலே வந்து அமர்ந்து விட்டார். சித்தரை பிரம்பால் அடித்த பெண் மறுநாள் விட்டை விட்டு வெளியே சென்றவர், இன்றுவரை வீடு திரும்பவில்லை. அவர் சித்தரை அடித்தால் ஏதேனும் தண்டனை அடைந்திருக்கலாம் என்று மக்கள் நம்புகின்றனர். இறைவனை அடையும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்த சித்தர் 22-06-1948 ஆம் ஆண்டு ஆனிமாதம் செவ்வாய்கிழமை மாலை 3.30 மணிக்கு பூராட நட்சத்திரத்தில் உடற்சட்டை தூக்கி எறிந்தார். அன்று கூழ் கொண்டு வந்த எழுமலை என்ற நபரை அங்கே இருக்க சொன்னார். ஊழ் குடிக்காமல் இருந்துள்ளார். தான் சமாதி அடையும் நேரத்தில் பயங்கர சிரிபொன்றை சிரித்தார். அதன் பிறகு, அவர் உடலில் எந்த சலனமும் இல்லை.

ஊர் மக்கள் ஒன்று கூடி அந்த இடத்தில் ஒரு சிறிய மேடை கட்டி வழிபட்டு வந்தனர். சித்தரின் சீடர்களான கோவிந்தசுவாமி மற்றும் ராஜப்பா ஆகிய இருவரின் கனவிலும், தேவரசு சுவாமிகள் தோன்றி தாம் சமாதி அடைந்த இடைத்தை உணர்த்தினார். என்றோ எடுத்த புகைப்படத்தை எடுத்து கொண்டு, உள்ளூர் மக்களின் உதவியால் சுவாமிகளின் சமாதியை கண்டு பிடித்தனர். சமாதியை நெருங்கிய சிடர்களுக்கு ஆவி வடிவில் சுவாமிகள் தரிசனம் தந்துள்ளார்

உங்கள் குழந்தைக்கு மருத்துவ கல்வி அமையுமா ஜோதிட விளக்கம்


ஒருவர் ஜாதகத்தில் 9 , 10 , 11 ல் கேது அமையப்பெற்றால் மருத்துவக்கராகனாகிய சந்திரன் உச்சம் பெற்று அமையப்பெற்றால் மருத்துவக்கல்வி அமைகிறது .
சூரியன் + செவ்வாய் இணைந்து காணப்பட்டாலும் , பரிவர்த்தனை பெற்றாலும் மருத்துவக் கல்வி அமையும் .



9 மிடம் நன்றாக இருக்க வேண்டும் . குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அமைந்தால் “ குரு மங்கள யோகம் ” ஏற்படும் .

வழக்கறிஞர் படிப்புக்கு வாக்கு ஸ்தானத்தில் குரு , புதன் , பலம் பெற்று காணப்பட வேண்டும் .
அதோடு 2 , 10 க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் பெரும் 6 மிடம் பலம் பெற்று , 6 க்கு அதிபதியும் பலம் பெற்றால் தான் வக்கீல் தொழில் உண்டாகும் .
மற்றும் 1_2 , 2 _ 9 , 2 _ 11 ஆகியோர் பரிவர்த்தனை அடைய வேண்டும் .

கலெக்டர் படிப்பு படிக்கப் 2 . 11 ஆகிய ஸ்தான்ங்களில் செவ்வாய் , சனி ஆட்சி பெற்றுக் காணப்பட்டால் தேர்வில் வெற்றி பெற்று யோகம் பெறுவார் .

செவ்வாய் பலம் பெற்றவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்களாக விளங்குவார்கள் . சூரியன் சாரத்தில் செவ்வாய் நின்றாலும் செவ்வாய் சாரத்தில் சூரியன் நின்றாலும் டாக்டர் தொழிலில் சாதனை செய்வார்கள் .

ஒருவருக்கு கல்வி தடைப்பட்டாலும் 2 , 4 , 5 க்கு அதிபதிகள் திசை நடைபெறும் போது தடைபட்ட கல்வியை மீண்டும் தொடரும் நிலை ஏற்படும் .



கோச்சாரம் கெடும் போதும் 7 ½ சனி அஷ்டமசனி நடைபெ றும் போது நன்றாக படிக்கும் மாணவர்கள் கல்வியில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடையும் நிலை ஏற்படும் .

புதன் நின்ற வீட்டிற்கு அதிபதி புதனுக்கு 1 . 4 , 7 , 10 போன்ற கேந்திரங்களில் இருந்தால் உயர்ந்த படிப்பு , பட்டப் படிப்பு ஏற்படுகிறது .
மற்றும் 2 மிடத்தில் சனி , ராகு போன்ற கிரகங்கள் அமைந்தால் கல்விக்கு தடை ஏற்படும் .

வியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்


.


வியாபார தொழில்

சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன்
பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய்
தேரிய தாதுவர்க்கம் செம்பு பொன் வெள்ளிலோகம்
கூரது பரிஷை செய்து குறைவிலா தனத்தைச் சேர்ப்பன்

விளக்கம்
சூரியனும் சனியும் கூடி ஒரு வீட்டில் நிற்கபிறந்த ஜாதகர் வியாபாரம்
செய்வதிலும் பொன் , வெள்ளி , செம்பு , பித்தளை போன்ற தாது வர்க
உலோகங்களை பரிசோதித்து அதனாலேயே அதிக தனத்தை
சேர்ப்பவனாவான் .கணக்கு முதலானவைகளில் மிகவும் சமர்த்தனம்




பெரிய பூமிக்கு அதிபதி

அறிஞனும் புகரும் கூட வவனியிலுதித்த பாலன்
பெரிய பூமிகள் சபைக்கும் பிரபல வதபனாகி
மருவிய வார்த்தை கூறி மாற்றலர் தாமொடுங்க
சரிவர வெல்லு மிக சமர்த்துளானென்னலாமே

விளக்கம்
புதனும் சுக்கிரனும் கூடி இருக்க பிறந்தவன் பூமிக்கும் பெரிய
சபைக்கும் அதிபதியாயிருந்து வார்த்தைகளால் மெய்பித்து எதிரிகளை
ஜெயிக்கும் வல்லமையுடைய சமர்த்துடையவன் ஆவான் .

யந்திர கருவி தொழில்

கதிரொடு மதியுங்கூடி கலந்தொரு ராசி நிற்க
துதி பெறு பலவாயெந்திரம் சூட்சுமக் கருவியாலும்
அதவித பாஷான்ங்க ளமைத்திடும் வல்லோனாகி
விதியுடனிருபனின்னோன் மேன்மையாமறிவுள்ளோனே



விளக்கம்
சூரியனும் சந்திரனும் எந்த ராசியிலாவது கூடியிருக்க பிறந்தவன்
பலவிதமான யந்திரக் கருவிகள் செய்பவன் ஆகவும் பாஷாணம்
வைப்பு சரக்கு முதலியவைகளை உற்பத்தி செய்பவனாகவும் மிகவும்
புத்தி கூர்மை உள்ளவனாகவும் இருப்பான் என்பதாம் .

பல பேரை மோசம் செய்வான்
என்னுமால் சனியைக்கூடி யிருந்திடமகமாய் வந்தோன்
மன்னுலகதிற் பல பேரை மயக்கியே மோசம் செய்து
துன்னுமா பொருள்கைக் கொண்டே சுகமடைந்திடுவானாகும்
உன்னித குருவின் வார்த்தை யுட்கொள்ளான் கர்வியமே

விளக்கம்
புதன் சனி கூடியிருக்க பிறந்தவன் உலகத்திலுள்ள பல பேரை மயக்கி
மோசம் செய்து அவர்கள் கையில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்வதில் கை தேர்ந்தவனம் . குரு வார்த்தையை தள்ளி விட்டு தன்மனம் போல நடப்பவன் என்பதாம் .

அதிகமான வருமானம் பெற



சம்பத்துதாரை உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு இரண்டாவது நட்சத்திரம் சம்பத்து தாரை...

இந்த சம்பத்து தாரையில்தான் அதிகமான வருமானம் வரும் இனிமையான செய்திகள் வரும்...எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும்...கேட்கும் உதவிகள் கிடைக்கும்...இதை தெரிந்து கொண்டால் இதை கடைபிடித்தால் நீங்கள் வெற்றிகரமான மனிதர் ஆகிவிடுவீர்கள் .


உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமானசம்பத்து நட்சத்திர நாளில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் 100சதவிகிதம் வெற்றியைத் தந்தே தீரும் என்பது சத்தியம்.

இதை எப்படி அறிந்துகொள்வது?
உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

Image result for மான் கொம்பு

அஸ்வினி:- இதற்கான சம்பத்து நட்சத்திரங்கள்
பரணி, பூரம், பூராடம்
பரணி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
கார்த்திகை, உத்திரம்,உத்திராடம்
கார்த்திகை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ரோகிணி, அஸ்தம்,திருவோணம்
ரோகிணி:- இதன் சம்பத்து நட்சத்திரம்
மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்
மிருகசீரிடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
திருவாதிரை, சுவாதி,சதயம்
திருவாதிரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி
புனர்பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூசம், அனுசம்,உத்திரட்டாதி
பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ஆயில்யம்,கேட்டை,ரேவதி
ஆயில்யம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
மகம், மூலம்,அசுவினி
மகம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூரம்,பூராடம்,பரணி
பூரம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திரம், உத்திராடம்,கார்த்திகை
உத்திரம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அஸ்தம்,திருவோணம்,ரோகிணி
அஸ்தம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம்
சித்திரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சுவாதி,சதயம்,திருவாதிரை
சுவாதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்
விசாகம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
: அனுசம்,உத்திரட்டாதி, பூசம்
அனுசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
கேட்டை,ரேவதி,ஆயில்யம்
கேட்டை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
மூலம், அசுவினி,மகம்
மூலம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூராடம்,பரணி,பூரம்
பூராடம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திராடம், கார்த்திகை, உத்திரம்
உத்திராடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
திருவோணம், ரோகிணி,அஸ்தம்
திருவோணம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அவிட்டம்,மிருகசீரிடம்,சித்திரை
அவிட்டம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சதயம்,திருவாதிரை,சுவாதி
சதயம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூரட்டாதி, புணர்பூசம், விசாகம்
பூரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திரட்டாதி, பூசம், அனுசம்
உத்திரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ரேவதி,ஆயில்யம்,கேட்டை
ரேவதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அசுவினி,மகம்,மூலம்

இது மட்டுமில்லாமல் உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு நான்காவது நட்சத்திரம் சேமதாரையாகும்...4,13,22 வதாக வரும் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கு நல்ல நண்பர்களாக திகழ்வார்கள் அவர்களால் உங்கள் வாழ்வில் உயர்வும் உண்டாகும்..
நான்காவது நட்சத்திரத்துக்கு உண்டான சின்னங்களை பயன்படுத்துவதால் தொழிலில் மேன்மை அடைய முடியும்..

Image result for வில் அம்பு



நட்சத்திர குறியீடுகள்:

1. அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம்.



2. பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம்

3. கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை
4. ரோகிணிக்கு தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம்



5. மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு மான் தலை மற்றும் தேங்காயின் கண்

6. திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி


7. புனர்பூசம் நட்சத்திர சின்னம் வில் மற்றும் அம்புக்கூடு
8. பூசம் நட்சத்திரத்துக்கு தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி
9. ஆயில்யத்துக்கு சர்ப்பம் மற்றும் அம்மி ஆகியவை.

10. மகம் நட்சத்திரத்துக்கு வீடு, பல்லக்கு மற்றும் நுகம்

11. பூரம் நட்சத்திரத்துக்கு கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை
12. உத்திரம் நட்சத்திர குறியீடுகள் கட்டில் கால்கள் மற்றும் மெத்தை
13. ஹஸ்தம் நட்சத்திரத்துக்கு கைகள் அல்லது உள்ளங்கை
14. சித்திரைக்கு முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள்.
15. சுவாதிக்கு புல்லின் நுனி மற்றும் காற்றில் அசையும் தீபச்சுடர்

16. விசாகத்துக்கு முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரம்

17. அனுஷம் நட்சத்திரத்துக்கு குடை, மலரும் தாமரை மற்றும் வில் வளைவு

18. கேட்டைக்கு குடை, குண்டலம் மற்றும் ஈட்டி

19. மூலம் நட்சத்திரத்துக்கு அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானை தும்பிக்கை

20. பூராடம் நட்சத்திரத்துக்கு விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்கள்21. உத்திராடம் நட்சத்திரத்துக்கு யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்

22. திருவோணத்துக்கு காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு


23. அவிட்டம் நட்சத்திரத்துக்கு மிருதங்கம் மற்றும் உடுக்கை



24. சதயத்துக்கு பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம்

25. பூரட்டாதிக்கு கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள்

26. உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்

27. ரேவதி நட்சத்திரத்தின் சின்னங்கள் மீன் மற்றும் மத்தளம்





ஜோதிடத்தில் முக்கியமான இந்த சூட்சுமங்களை படித்து அதனை உங்கள் வாழ்வில் பயன்படுத்தி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்

ஜோதிடத்தில் 12 கட்டம் 9 கிரகம் வைத்து எப்படி பலன் சொல்வது !



*ஆண்கள் ஜாதகத்தில் குரு எங்கு உள்ளாரோ அதுவே லக்னமாக வைத்து பலன் காண வேண்டும்.சனி கர்மாவை பத்தி சொல்லும் கிரகமாக பார்க்க வேண்டும்..


*சகோதரிகளை குறிக்கும் கிரகம் சுக்கிரன்.

*ஒரு கிரகத்திற்கு 2,12 ல் கிரகங்கள் இருப்பின் அக்கிரகம் வலுப்பெறுகிறது என அர்த்தம்

*சந்திரனுக்கு அடுத்து சுக்கிரன் இருப்பது யோகம்

*சனிக்கு 2ல் சுக்கிரன் இருப்பது லாபம்

*2 ல் செவ்வாய் இருப்பவர் சொல்வதெல்லாம் பலிக்கும்..ஆனால் கோபக்காரர்.

ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட வீடுதான் முதல் வீடு எனப் படும். அதாவது அதுதான் இலக்கினம் எனப்படும். நமது உதாரண ஜாதகத்தில் மகரம் தான் முதல் வீடு ஆகும். அடுத்த வீடு 2-ம் வீடு ஆகும். அதாவது கும்பம் தான் 2-ம் வீடு ஆகும். இப்படியே எண்ணிக் கொண்டு வந்தால் தனுசு தான் 12-ம் வீடு ஆகும். அதாவது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் இலக்கினத்தை முதல் வீடாகக் கொண்டு எண்ண வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில காரகத்துவம் உண்டு. அவைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பலன் சொல்ல முடியும்.

முதல் வீடு : இதை வைத்து ஜாதகருடைய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்றை அறியலாம். ஜாதகர் ஒல்லியானவரா, இல்லை பருமனானவரா, கோபம் உள்ளவரா, இல்லை சாந்தமானவரா என்றும் அறியலாம். அவர் உடல் நலத்தைப் பற்றியும் அறியலாம். அவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குப் போவாரா இல்லை தாழ்ந்த நிலைக்குப் போவாரா, என்பது பற்றியும் அறியலாம். உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடு தான். ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.

இரண்டாவது வீடு : இது குடும்பத்தைக் குறிக்கிறது. பணவரவு, செலவு போன்ற பொருளாதாரத்தையும் இது குறிக்கிறது. அதைத்தவிர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், Securities போன்ற சொத்துக்களையும் கூறலாம். ஆடை, அணிகலன்களையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். வங்கியில் உள்ள பண நிலைமை, Promisery Notes, போன்றவற்றையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம் என்றும் அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப் பேசுவாறா, அல்லது கடினமாகப் பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா அல்லது திக்கிதிக்கிப் பேசுவாறாஎன்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவர் கண்ணாடி அணிபவரா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம். பொதுவாக எந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிப்பன நல்லதையே செய்யும். தீய கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு விடும். உதாரணமாக 2-ம் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. அதில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனி ஒரு பாவ கிரகம் அல்லவா! சனி எதையும் குறைவாகவும், தாமதமாகவும் கொடுப்பார். குடும்பம் சிறியதாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் குறைவாகவும் இருக்கும். என்ன- புரிகிறதா?

மூன்றாம் வீடு : இந்த வீட்டைக் கொண்டு ஒருவரின் இளைய சகோதரம், ஒருவரின் தைரியம், அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம். கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். இந்த வீட்டில் கேது இருப்பாரேயாகில் அவர் கலகங்களை விளைவிப்பவை என்றும் கூறலாம். இன்னும் நகைச்சுவையாகக் கூறப்போனால் அவரைக் "கலியுக நாரதர்" எனவும் கூறலாம். உடல் பாகங்களில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம், ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது. இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர் மிக்க தைரியசாலியாக இருப்பார். ஏனெனில் செவ்வாயானவர் வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக் கொடுப்பவர் செவ்வாய் தான். அங்கே சனி இருந்தால் அவர் அவசரப் படாமல் நிதானத்துடன் செயல் படுவர். யோஜனை செய்து தான் முடிவு எடுப்பார். அவசரப் பட மாட்டார்.

நான்காம் வீடு : இது தாயாரைக் குறிக்கும் வீடு. கல்லூரிவரையிலான படிப்பு, வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள், பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த நாலாவது வீடுதான். ஒருவருக்கு 4-ம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார் என்க் கொள்ளுங்கள். அவர் நிச்சயமாக வீடு கட்டுவர். ஏனெனில் செவ்வாய் பூமிகாரகன். பூமிகார கனான செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்பந்தப் பட்டதால் அவர் நிச்சயம் வீடு கட்டுவர். இதே செவ்வாய் 9-ம் வீட்டு அதிபதி எனக் கொள்வோம். இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும். ஏன்? 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது. செவ்வாய் பூமிகாரகனாகி, 9-ம் வீட்டையும் குறித்து , ஸ்திரசொத்துக்களைக் குறிக்கும் வீடான 4-ம் வீட்டில் இருக்கிறார். ஆக இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும் எனக் கூறலாம். என்ன புரிகிறதா?

5-ம் வீடு : இதை புத்திர ஸ்தானம் என்று அழைப்பார்கள். இதைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கல்லாம். அதாவது போன ஜென்மத்தில் ஒருவர் நல்லது செய்தவரா இல்லையா என்று இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஒருவருக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லயா என்றும் முடிவு செய்யலாம். ஒருவருக்குக் கலைத்துறையில் நாட்டம் இருக்கிறதா அல்லது இல்லயா என்பது பற்றியும் இந்த வீட்டைக்கொண்டு முடிவு செய்யலாம். அதே போன்று, சினிமா, டிராமா, லாட்டரி, குதிரைப்பந்தயம், ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் காதலித்துத் திருமணம் செய்வாரா இல்லையா என்பது பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஆன்மீக வாழ்க்கையையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம். வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம்.

6-ம் வீடு : கடன், வியாதி, உண்ணும் உணவு , வேலை செய்யும் இடம், ஒருவருடைய வேலைக்காரர்கள் ஆகிய வற்றையும் இந்த வீட்டைக் கொண்டு சொல்லலாம். கவலைகள், துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். இலக்கினாதிபதி புதன் 6-ம் வீடான கும்பத்தில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். புதன் 1-ம் வீட்டிற்கு அதிபத்யாகி 6-ம் வீட்டில் இருக்கிறார். அவர் உடல் நிலையில் நிச்சயமாகக் கோளாறு இருக்கும். ஏனெனில் புதன் 1-ம் வீட்டையும் 6-ம் வீட்டையும் குறிக்கிறார். ஆக இவர் உடலில் ஏதோகோளாரு இருக்கிறது எனக் கொள்ள வேண்டும். சரி! 2-ம் வீட்டின் அதிபதி சுக்கிரன் 6-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 6-ம் வீடு Employment என்று சொல்லுகின்ற வேலையைக் குறிக்கிறது. 2-ம் வீடு தனத்தைக் குறிக்கிறது. ஆகவே இவர் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பர் எனக் கொள்ளலாம். இவ்வாறாக 6-ம் வீட்டிலுள்ள கிரகம் மற்ற எந்த வீட்டுடன் சம்மந்தம் கொண்டுள்ளதோ அதை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்.

7-ம் வீடு : திருமணத்தைக் குறிக்கும் வீடு இதுதான். வியாபாரத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் மரணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். பிரயாணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் ஜாதகத்தில் 7-ம் வீட்டில் சனி இருக்கிறது எனக் கொள்ளுங்கள். சனிதான் எதையும் தாமதப் படுத்துபவர் ஆயிற்றே! ஆக இவருக்குத் திருமணம் தாமதம் ஆகும் எனக் கூறலாம். உதாரணமாக கடக இலக்கினக்காரர் ஒருவருக்கு 7-ம் இடமான மகரத்தில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனியானவர் 7-ம் வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. 7-ல் இருக்கிறார். அவர் திருமணத்தைத் தாமதப் படுத்துவதோடு சில சங்கடங்களையும் திருமணத்திற்குப் பிறகு கொடுப்பார். ஏனெனில் சனி 8-ம் வீட்டிற்கும் அதிபதியல்லவா! சரி! சனிக்குப் பதிலாக 6-ம் வீடு, 9-ம் வீட்டிற்கு அதிபதியாகிய குரு இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். திருமண வாழ்வு எப்படி இருக்கும்? 6-ம் வீடு என்பது 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு அல்லவா! திருமண வாழ்வு சுகப்படாது. பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.

8-ம் வீடு : ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு இது தான். பிதுரார்ஜித சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ் ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான். ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம். துன்பம், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும் வீடு இதுதான். இந்த வீட்டை "துஸ்தானம்" எனக் கூறுவர்கள். 8-ம் வீட்டில் சனி இருந்தால் ஒருவருக்கு தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். குரு இருந்தாலும் தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். பொதுவாக 8-ம் வீட்டில் உள்ள கிரகங்களோ, அல்லது 8-ம் வீட்டிற்கு அதிபதியோ தங்கள் தசா, புக்திகளில் நல்லதைச் செய்யாதென்பது பலரின் அபிப்பிராயம்.
9-ம் வீடு : தகப்பனர், போன ஜென்மத்தில் ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள், ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக 9-ம் வீட்டில் ஒருவருக்கு சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருக்கிறது எனக் கொள்ளுவோம். நிச்சயமாக அவருக்குத் தகப்பனார் அனுசரணையாக இருக்க மாட்டார். 9-ம் வீட்டைத் தவிர சூரியனின் நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சூரியன் பிதுர்காரகனல்லவா? 9-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருக்குமேயாகில் அந்த வீட்டின் காரகத்துவங்கள் எல்லாம் கெட்டு விடும்.

10-ம் வீடு : ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றையும் இதைக் கொண்டேதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு அரசியல் நல்லபடியாக இருக்குமா அல்லது இருக்காதா என்றும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். இதைக் கர்மஸ்தானம் என்றும் கூறுவார்கள். தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். ஒருவரின் எஜமானர், அரசாங்கம் இவைகளையும் இந்த வீடுதான் குறிக்கிறது.

11-வது வீடு : இதை லாபஸ்தானம் என்று கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக் கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப் பற்றியும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில் இருந்தால் புத்திரத்தால் லாபம் எனக் கொள்ளலாம். அதே 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 10-ல் இருந்தால் நல்ல ஜீவனம் எனக் கொள்ளலாம். அதே போல் 11-க்குடைய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக் கொள்ள வேண்டும்.

12-வது வீடு: இதை மோட்ச ஸ்தானம் என்று சொல்லுவார்கள். இதை விரய ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும். துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், ஆகியவையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். மறைமுக எதிரிகளையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாசம், உள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.

நாம் மேலே 12 வீடுகளின் முக்கியமான காரகத்துவங்களை மட்டும் பார்த்தோம். இது ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குப் பயன் படும். இந்த ஆரம்ப கட்டத்தைக் கடந்தவர்கள் "பிருஹத் ஜாதகம்", "பலதீபிகை", "உத்திரகாலாம்ருதம்" ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான் ஜோதிட அறிவு விருத்தியாகும்.

ஜாதகரை_கிரகங்கள்_இப்படிதான்_செயல்பட_வைக்கும்.



லக்னம் எதுவானாலும்@
---------------------
தனித்து பிற கிரகம் இருப்பது(லக்னத்தில்).....

🌏அந்த கிரகம் ஜாதகரை வழிநடத்தும் விதம்.🌍

லக்னத்தில் 💎#குரு💎 இருந்தால் எந்த நிலையிலும் ஜாதகர் நெறி தவறமாட்டார்.

லக்னத்தில் 💎#சூரியன்💎 இருந்தால் உலகமே எதிர்த்தாலும் தான் செய்வதை செய்துவிடுவார்.

லக்னத்தில் 💎#சந்திரன்💎 இருந்தால் அனைவரிடத்திலும் பாசம்,அன்பு காட்டுவார்.

லக்னத்தில் 💎#சனி💎 இருந்தால் எப்போதும் மற்றவரிடம் இருந்து தள்ளியே இருப்பார்.

லக்னத்தில் 💎#சுக்ரன்💎 இருந்தால் எந்த விஷயத்திலும் அசால்ட்டாக இருப்பார்.

லக்னத்தில் 💎#புதன்💎 இருந்தால் எந்த சூழ்நிலையிலும் தப்பித்து விடுவார்.

லக்னத்தில் 💎#செவ்வாய்💎 இருந்தால் எவருக்கும் பயப்படாமல் எந்த வேலையும் முடித்தும் காட்டுவார்.

ராகு கேது பிற கிரகங்களை சார்ந்தே பலன் தரும்.

இங்கு பிற கிரகம் சமம் என்ற அளவில் மட்டுமே இந்த பலனை செய்கிறது.
பகை,நீசம் பெற்றால் பலன் மாறிவிடும்.

(உ.ம் கடகம் லக்னம் செவ்வாய் என்றால் அதுவும் புனர்பூசம் 4ம் பாதம் என்றால் செவ்வாய் இந்த செயலை செய்ய முடியாது)...

அபசகுனம்_என்று_எண்ணி_இவர்களை________ஒதுக்க_வேண்டுமா???



சிலர் மனதளவில் நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் குறை கூறும் அளவிற்கு எந்த விதமான தீய செயலிலும் ஈடுபடமாட்டார்கள்.

மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர்களாக கூட இருப்பார்கள். இப்படிப்பட்ட நல்ல மனிதருக்கான எல்லா நல்ல குணங்களையும் உள்ளடக்கியவர்களாக இருந்தாலும்கூட, சகுனம் என்று வந்துவிட்டால் அவர்களது குணம் தவறாக மாறிவிடுகிறது.

எப்பேர்ப்பட்ட நல்ல குணங்களை கொண்டவர்கள் கூட இந்த சகுனத்தை ஏன் பார்க்கிறார்கள் என்பதுதான் நமக்கு புரியவில்லை.

சகுனம் என்ற பெயரில் அடுத்தவர்கள் மனதை புண்படுத்துவது என்பது மிகவும் தவறான செயல். நம்மை அறிந்தோ அறியாமலோ நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சில தவறுகளை பற்றி தான் இந்த பதிவு.....
............................

நம் சமூகத்தில் முதலாவதாக அபசகுனமாக கூறப்பட்டு ஒதுக்கி வைக்கப்படும் இடத்தில் இருப்பவர்கள் #கைம்பெண்கள்.

இவர்களை #விதவைகள் என்று கூறுவார்கள். காலமும் நேரமும் சூழ்நிலையும் ஒரு பெண்ணை இந்த நிலைமைக்கு ஆளாக்குகிறது. ஆனால் இதில் அந்தப் பெண் செய்த பாவம் தான் என்ன?

அந்தப் பெண்ணை அமங்கலமானவல் என்று கூறி சில பேர் அவர்களது கையால் பூ வாங்குவதை கூட தவிர்த்துவிடுவார்கள்.

கோவில் வாசலில் பூ விற்கும் பெண் கைம் பெண்ணாக இருந்தால், அவர்களை விட்டு அடுத்த கடைக்கு பூ வாங்க சென்று விடுவார்கள். இது எவ்வளவு பெரிய பாவச்செயல் என்று சிலருக்கு இன்றளவும் புரிவதில்லை.

அனைவரும் இந்த தவறை செய்கிறார்கள் என்பது கூற்று அல்ல. சிலர் செய்யும் தவறை சுட்டிக் காட்டத்தான் இந்த பதிவு. இப்படிபட்ட கைம் பெண்களிடமிருந்து பூவை வாங்கி சாமிக்கு செலுத்தக்கூடாது என்றும் அல்லது சுமங்கலிப்பெண்கள் கைம் பெண்களிடமிருந்து பெற்ற பூவினை தலையில் சூட்டிக் கொள்ளக் கூடாது என்றும் எந்த சாஸ்திரத்திலும் கூறப்படவில்லை.

கைம் பெண்களாக இருந்தாலும் அவர்களிடமிருந்து நாம் வாங்கிய பூவினை அந்த இறைவனுக்கும் சூட்டலாம். சுமங்கலிப் பெண்களும் சூடிக் கொள்ளலாம் என்பதுதான் உண்மை. நீங்கள் இந்தத் தவறை செய்பவர்களாக இருந்தால் இனி மாற்றிக்கொள்வது நல்லது.

இதேபோல் நல்ல காரியத்திற்கு செல்லும்போது சிலபேர் கைம்பெண்கள் எதிரே வந்தால், செல்லாமல் நின்று விட்டு உள்ளே வந்து தண்ணீர் அருந்தி விட்டு செல்வார்கள். இதுவும் தவறான ஒரு செயல் தான்.

அடுத்ததாக குழந்தை இல்லாதவர்கள், கணவனிடமிருந்து பிரிந்து வாழ்பவர்கள், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் முதிர்கன்னிகளாக இருப்பவர்கள் இவர்களையெல்லாம் சுபவிசேஷங்களில் இருந்து தள்ளி வைப்பது தவறான செயல்.

இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் இவர்கள் வேண்டி வர வைத்துக்கொள்வது இல்லை. அவர்களது பிறந்த நேரமும், காலமும், விதியும் சேர்ந்துதான் இவர்களை இப்படி மாற்றி விடுகிறது.

இவர்கள் தொட்ட காரியம் துளங்காது என்று யாரும் நம்பிவிட வேண்டாம். இப்படிப்பட்டவர்களில் சிலர் மிகவும் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார்கள்.

சுபநிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் இவர்களை ஒதுக்கி வைப்பதும், இவர்களது மனது நோகும் படி நடந்து கொள்வதும் ஒரு பாவச் செயலாக கருதப்படுகிறது.

கைம் பெண்கள், குழந்தை வரம் இல்லாதவர்கள், கணவனை விட்டு சூழ்நிலை காரணமாக பிரிந்தவர்கள், முதிர்கன்னிகள் இவர்களது கண்களில் இருந்து கண்ணீர் வர ஒருபொழுதும் நாம் காரணமாக இருக்கக் கூடாது.

பொது இடங்களில் மற்றவர்களுக்கு தரக்கூடிய மரியாதையை இவர்களுக்கும் தருவதுதான் நாகரீகம்

. சிலபேர் இவர்களிடமிருந்து ஆசிர்வாதம் கூட பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அபசகுனமாக நினைப்பார்கள். தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் எல்லாம் அபசகுனம் கொண்டவர்கள் என்ற நினைப்பை மனதில் வைத்திருப்பவர்கள் இனி உங்களது எண்ணத்தை மாற்றி கொள்ள வேண்டும்.....இனி இவர்களை சுப நிகழ்ச்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டாம். இப்படிப்பட்ட பாவச் செயலை அறியாமலும் கூட இனி நீங்கள் செய்யாதீர்கள்.

நன்றி.........

குடும்ப உறவுமுறைகளும் கடவுளும்

Monday, January 27, 2020

விநாயகப் பெருமானின் திருக்கல்யாண வரலாறு ! ! !


இந்து கடவுளான விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். எந்த கோயில்களுக்கு சென்றாலும் அங்கு விநாயகரை முதல் கடவுளாக வைத்திருப்பார்கள், அதுமட்டுமா அனைத்து தெருக்களிலும் விநாயர் சிலையை வைத்து வணங்குவார்கள்.

விநாயகரிடம் வரம் வாங்குவது கஷ்டம், ஆனால் கொடுத்த வரத்தை திரும்பி வாங்கமாட்டார் என்பது ஐதீகம்.

விநாயகருக்கு திருமணம் ஆகிவிட்டது, திருமணம் ஆகவில்லை என்று இரு கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

சிவபெருமான், பார்வதி தேவியின் இரண்டாவது புதல்வனான விநாயகருக்கு, பிரஜாபதி விஸ்வரூபனின் இரண்டு அழகிய புதல்விகளான புத்தி மற்றும் சித்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தெய்வீக சிற்பியான விஸ்வகர்மா ஒரு அழகிய திருமண மண்டபத்தை வடிவமைத்து, திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். விநாயகருடனான புத்தி மற்றும் சித்தியின் திருமணத்தை சிவபெருமானும் பார்வதி தேவியும் கண்டு களித்தனர்.

விநாயகருக்கு புத்தியின் மூலமாக லாபா என்ற மகனும், சித்தி மூலமாக சுபா என்ற மகனும் பிறந்தார்கள்.

இப்படி ஒரு கதையிருக்க, மற்றொரு கதையாக விநாயகருக்கு யானை தலை என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள எந்த பெண்ணும் ஒப்புக்கொள்ளவில்லை.

மற்ற அனைத்து கடவுள்களுக்கும் துணைவி இருந்த போது, தமக்கு மட்டும் இல்லையே என்பதால் அவருக்கு கோபம் ஏற்பட்டது.

ஏற்படுத்த தொடங்கினார். திருமண சடங்கின் ஒரு பகுதியாக தேவர்கள் மணப்பெண்ணின் வீட்டை நோக்கி செல்லும் பாதைகளில் எலிகளை விட்டு குழியை தோண்ட சொன்னார்.

இதனால் தேவர்கள் அனைவரும் தங்களின் திருமணத்தின் போது எண்ணிலடங்கா பிரச்சனைகளை சந்தித்தார்கள்.

விநாயகரின் நடவடிக்கைகளால் சோர்ந்து போன அவர்கள் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு பிரம்மனிடம் முறையிட்டார்கள்.

அதனால் விநாயகரின் மனதை குளிர வைக்க புத்தி (செல்வமும் வளமும்) மற்றும் சித்தி (அறிவும் ஆன்மீக சக்தியும்) என்ற இரு அழகிய பெண்களை பிரம்மன் உருவாக்கினார்.

விநாயகரை திருமண செய்து கொள்ள பிரம்மன் அவர்களை அனுப்பினார். அன்று முதல் விநாயகர் மனம் குளிரும் படி நடப்பவர்களுக்கு புத்தி மற்றும் சித்தி அவர்களின் அருளும் கிடைக்கும் என்று இந்து புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !

சாணக்கியர் உரைத்த வெற்றிக்கான தந்திர குறுக்கு பாதைகள் பற்றி தெரியுமா?


மௌரிய பேரரசின் ஒரு முக்கிய பங்காற்றியவர் சாணக்கியர். இன்றைய அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள தக்ஷஷிலாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் சார்ந்த துறையில் பணியாற்றியவர். நீதி சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம் போன்ற சிறந்த படைப்புகளை இந்த உலகதிற்கு அளித்த தத்துவ ஞானி. இவரது படைப்புகள் 1915இல் தான் கண்டுபிடிக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சாணக்கியரின் தந்திரம் பற்றி நம்மில் அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரை போன்ற அறிவுடையோர் தத்துவங்களை ஏற்பதால் நாமும் நம் வாழ்வில் ஏற்றம் பெறலாம். இந்த உலகம் ஜெய்த்தவர்களை தான் திரும்பி பார்க்கும். தோற்றவர்களை ஏளனம் மட்டுமே செய்யும். தட்டி கொடுக்க ஒரு கை நமக்கு இருந்தால் போதும் எட்டி பிடிக்க ஒரு வானம் பத்தாது. உன்னால் முடியும் என்ற சொல்லை கேட்டாலே போதும் ஒரு புதிய உத்வேகம் வந்து விடும் மனதிற்குள். அது தான் மாயை. சிறிய தீப்பொறி போதும் காட்டையே சாம்பாலக்க. அது போல தான் சிறிய வழிகாட்டுதல் போதும் அனைத்தையும் நம் வசப்படுத்தி விடலாம். - Advertisement - வாழ்க்கையில் ஜெய்க்க நேர்மை தேவை தான். ஆனால் தந்திர வழிகளும் தேவைப்படுகிறது. யாரையும் பாதிக்காத எந்த தந்திரமும் ஒரு மகத்தான மந்திரமே. இந்த தந்திரத்தை பற்றி சாணக்கியர் என்ன கூறுகிறார் என்று இப்பதிவில் காண்போம் வாருங்கள். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதை மற்றவர்கள் காணும் விதத்திலும் நீங்கள் காணும் விதத்திலும் வித்தியாசம் இருக்குமாறு மாற்றி கொள்ளுங்கள். உங்களுக்கான தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கி கொள்ளுங்கள். யாரையும் பின் தொடராதீர்கள். போட்டி என்று வந்துவிட்டால் எப்போதும் மற்றவர்களை சந்தோஷப்படுத்த நினைக்காமல் உங்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். யாரையும் 100% திருப்தி படுத்திவிட முடியாது. இலக்கை அடையும் போது அங்கு கருணைக்கு வேலை இல்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உங்களை சுலபமாக இவ்வுலகம் தோற்கடித்துவிடும். செல்வம் இல்லாதவர்களை உலகம் துச்சமாக நினைக்கும், அலட்சியபடுத்தும், தூக்கி எரிந்து விடும். செல்வம் பெற்ற ஒருவன் என்ன கூறினாலும் அதை நிஜம் என்று உலகம் நம்பும். செல்வம் படைத்தவன் மென்மேலும் செல்வத்தை சேர்த்து கொண்டே போக முடியும். இல்லாதவன் தன்னை காத்து கொள்ளவே பெருமளவு போராடுவான். எனவே செல்வம் இல்லையென்றாலும் அதை வெளியில் கட்டி கொள்ளாமல் தந்திரமாக இருந்து சாதிக்க வேண்டும். வெற்றி பெற்ற யாவரும் ஒரு காலத்தில் பல அவமானங்களை சந்தித்தவர்களே என்பதை எண்ணி பார்க்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை சரியான பாதையா? என்று நிச்சயம் ஒரு முறைக்கு ஆயிரம் முறை சிந்தித்து அதன் பின் அதை நோக்கி பயணிக்க வேண்டும். அவ்வாறு பயணிக்கும் பயணத்தில் கண்ணை மூடி கொண்டு குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் அல்லாமல் 360 டிகிரி கோணத்தில் சுற்றியும் உங்களது பார்வை இருக்க வேண்டும். எந்தெந்த வழிகளில் எல்லாம் உங்களுடைய இலக்கிற்கான குறிப்புகள் தென்படுகிறதோ அவற்றையெல்லாம் சேகரித்து கொள்ள வேண்டும். மனதை ஒருமுகபடுத்தி எந்த குழப்பமும் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்று உரைக்கின்றார். நீங்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்காவிட்டால் அதை எண்ணி கவலைபடக்கூடாது. கவலைப்படுவதால் எதுவும் மாறிவிட போவதில்லை. அறிவுடையோர் நிச்சயம் இதை செய்யமாட்டார்கள். முயற்சியை காட்டிலும் விடாமுயற்சியே வெற்றியை தேடி தரும். தொடர்ந்து சிந்தித்து கொண்டே இருங்கள். கவலைபட்டு உடலையும், மனதையும் பலவீனமாக்கினால் வெற்றியை ஈட்ட முடியாது. உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? செய்யும் அந்த செயலினால் விளைய இருக்கும் விளைவுகள் என்னென்ன? நீங்கள் செய்ய இருக்கும் அந்த செயல் எந்த அளவிற்கு பயனுடையது? இதை பற்றிய தெளிவான அலசல் செய்து கொள்ளுங்கள். பிறரை ஏமாற்றுபவர்கள் உங்களையும் ஏமாற்ற தயங்க மாட்டார்கள். அத்தகையவர்களிடம் இருந்து சற்று தள்ளி இருப்பது தான் அறிவு. நமக்கு தெரிந்தே சில தவறுகள் நாம் செய்து விடுவோம். அதற்கு காரணம் விரைவாக யோசிக்கும் ஆற்றல் இல்லாமையே. விரைவாக சிந்திக்க வேண்டும். அறிவாக செயலாற்ற வேண்டும். யோசிப்பதில் நேரத்தை செலவிடுபவர்களால் எதையும் சரியாக செய்ய முடியாது. அந்த தகுதியை நீங்கள் தான் வளர்த்து கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தில் முடிவெடுத்த பின்னர் பின்வாங்க கூடாது. அதனால் விளையும் பிரச்சனைகளை கையாள்வதில் உறுதி கொள்ள வேண்டும். பின் வாங்குபர்களால் வெற்றி பெற முடியாது என்கிறார் சாணக்கியர். உங்களின் பலவீனம் உங்களை தவிர வேறு ஒரு நபருக்கு தெரியவே கூடாது. ஒரு செயலில் ஈடுபடும் போது நேர்மறை விமர்சனங்கள் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் இரண்டையுமே எதிர்கொள்ள வேண்டும். நேர்மறை விமர்சனங்களால் தலைக்கனம் கொண்டும், எதிர்மறை விமர்சனங்களால் துவண்டும் போகாமல் உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் கருத்தில் கொண்டு தொடர்ந்து சென்றால் வெற்றி எளிதில் வந்தடையும். உங்களுக்கு கீழ் உள்ளவர்களை எடை போடுவதில் தவறு செய்து விடாதீர்கள். கீழே தானே இருக்கிறார்கள் நம்மை என்ன செய்ய முடியும் என்று ஒருபோதும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. அது வெற்றியின் தூரத்தை அதிகரிக்கும் ஒரு முட்டாள் தனமான செயல் என்று சாணக்கியர் உரைக்கிறார்.

பிரதோஷ விரதம் தொடங்க உகந்த நாள்




சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.

பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம்.

பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

சிவபெருமான் விஷம் குடித்தது சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.

நித்திய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாதப்பிர தோஷம், மகாப்பிரதோஷம், பிரயைப்பிரதோஷம் என பிரதோஷம் 5 வகைப்படும்.

தினமும் அதிகாலை சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்பு, நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள காலம் நித்திய பிரதோஷம் ஆகும்.

சுக்லபட்ச சதுர்த்தியின் மாலை நேரம் பட்ச பிரதோஷமாகும்.

கிருஷ்ணபட்ச திரயோதசி தினத்தை மாத பிரதோஷம் என்கிறார்கள்.

பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.

பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் இருக்க இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.

இரவும்,பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத்காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே போல பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் அந்த நேரம் பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டது. நாளடைவில் அது பேச்சு வழக்கில் "பிரதோஷ காலம்'' ஆகிவிட்டது.

பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும். சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வந்தால், ஈசுவரனிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.

பிரதோஷ நாட்களில் தவறாது விரதம் இருந்து வழிபட்டால் கடன், வறுமை, நோய், பயம், மரண வேதனை நீங்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்து.

பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.

பிரதோஷ கால விரதம் தொடங்குவோர் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது மகா உத்தமம்.

பிரதோஷ நேரத்தில் பெருமாள் கயிலாய மலையில் இருப்பதால், பிரதோஷ நேரத்தில் பெருமாள் கோவில்களில் திரை போட்டு மூடி இருப்பார்கள்.

சிவபெருமானுக்கு_உகந்த_அபிஷேக #திரவியங்களும்_கிடைக்கும்_நன்மை



#வலம்புரிச் சங்கு அபிஷேகம்:

சிவபெருமானுக்கு மிகவும் உவப்பானது வலம்புரிச் சங்கினால் செய்யப்பெறும் அபிஷேகம். வலம்புரிச் சங்கில் மகாலட்சுமியும் குபேரனும் வாசம் செய்வதாக ஐதீகம். வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், தீவினைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

#விபூதி அபிஷேகம்

விபூதியால் அபிஷேகம் செய்தால், இன்ப வாழ்க்கையும் மோட்சமும் கிடைக்கும்.

#கரும்புச் சாறு

கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கி, ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.

#எலுமிச்சம்பழச் சாறு

எலுமிச்சம் பழச்சாறினால் அபிஷேகம் செய்தால், எதிரிகள் அச்சம் நீங்கி, பகைமைகள் விலகும்.

#இளநீர்

இளநீரால் அபிஷேகம் செய்தால், இன்பமான வாழ்வு கிடைக்கும்.

#பஞ்சாமிர்தம்

பழங்கள், தேன், கற்கண்டு ஆகியவை சேர்த்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், உடலும் உள்ளமும் வலிமைபெறும்.

#தேன்

தேனால் அபிஷேகம் செய்தால், இசை வல்லமை கிடைக்கும்.

#பால்

பாலால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கும்; ஆரோக்கிய உடல் நலத்துடன் ஆயுள் நீடிக்கும்.

#தயிர்

தயிரால் அபிஷேகம் செய்தால், நல்ல குழந்தைகளைப் பெறலாம்.

#நெய்

நெய்யால் அபிஷேகம் செய்தால், முக்தியைத் தரும்.


கோயிலாக இருந்தால், அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்யச் சொல்லலாம். முறைப்படி வீட்டிலேயே சிவலிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள், அவரவர் விரும்பும் பலனுக்கு ஏற்ற அபிஷேகப் பொருள்களைக்கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

சிவனும்_______மூன்று_உடம்பும்



கடவுளை அன்புடன் நேசிப்பது என்பது கடவுளைத் தெரிந்து கொள்வதாகும். கடவுளைத் தெரிந்து கொள்வது என்பது அவர் உங்கள் மீதுள்ள அன்பை உணர்ந்து கொள்வதாகும்.

பரமேஷ்வரரின் ஒளியுடம்பை நாம் ஞானப் பார்வையில் பார்க்க இயலும். அது நமது சொந்த ஆன்ம உடம்பைப் போன்று அதே மாதிரி வடிவமைப்பில் இருக்கும்.

ஆனால் நமது ஆன்ம உடல் இன்னும் முதிச்சியடையாமல் இருப்பதால் அது ஒளிகுன்றி இருக்கும். இறைவன் ஆதி ஆன்மாவாக தனியம்சமாக நாதனாகவும் படைப்பவனாகவும் இருக்கும் தன்மையை பல வடிவங்களாய் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சைவர்கள் நடராஜர் வடிவமாகவும்,
வைணவர்கள் விஷ்ணு வடிவமாகவும், சாக்தர்கள் தேவி வடிவமாகவும் சித்தரித்துள்ளனர்.

சிவபெருமானின் மூன்று பூரணத்துவத்தைப் புரிந்துகொள்ள ஒரு முழுமையான மாம்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மேலே தோல் இருக்கிறது, அடியில் கனி இருக்கிறது, உள்ளே கொட்டை இருக்கிறது. இருப்பினும் அது ஒரு முழுப் பழமாக இருக்கிறது.

தோல்பகுதியே சிவனின் உடம்பு என்றால், கனியாக இருப்பது அவரது சச்சிதானந்த மனம், கொட்டைப் பகுதியே அவரின் உள்ளார்ந்த சாரமாகும்.

சிவபெருமானுக்கு மூன்று பரிபூரண நிலைகள் உண்டு. அது இங்கே ஒரு முழு வட்டமாய் காணப்படுகிறது.

1) சிவலிங்கமே அவரின் யாவும் கடந்த நிலை.

2) நடராஜரின் நடனமே அவரின் படைப்பு.

3) பராசக்தியே யாவற்றிலும் நிறைந்து நிற்கும் அருளுணர்வு/சக்தியாகும்.

நன்றி,,,ஈசனே.....

ஆஸ்துமா_விற்கு....#எளிய_பயிற்ச்சி #முறை_வைத்தியம்.


பலருக்கும்பயன் தரும் பதிவு:

பொதுவாக மருத்துவர்கள் தான் நோயாளிகளுக்கு கற்றுத் தருவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இப்போது நீங்கள் படித்து பகிர இருப்பது. ஒரு நோயாளி மருத்துவருக்கு கற்றுத் தந்த அனுபவ உண்மை.

அதாவது மருத்துவர் ஒருவர் ஒரு பழைய ஆஸ்துமா நோயாளியை பல மாதங்களுக் குப் பிறகு சந்திக்க நேர்ந்தது. அவர் 52 வயதுடைய ஆண்.

அவர் மருத்துவம் பார்த்துக் கொண்ட காலங்களில் ஆஸ்துமா நோய் குறிகுணங் கள் ஓரளவு கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது அவர் கிட்டத்தட்ட ஆஸ்துமாவில் இருந்து பூரண குணம் கண்டிருப்பதைக் காண முடிந்தது.

அம் மருத்துவரே அவரிடம் பெரிய மருந்துகள் எதுவும் சாப்பிட்டீர்களா? என்று விசாரித்த போது..........அப்படி மருந்து எதுவும் சாப்பிடவில்லை என்றார்.

இடையில் ஒரு வயது முதிர்ந்த சாதுவை சந்திக்க நேர்ந்தது. அந்த சாதுவிடம் எனது பிரச்சனையை கூறினேன்.
அவரோ..."உனது பிரச்சனைக்கு அவசரத்து க்கு எந்த முறை மருத்துவம் ஆனாலும் எடுத்துக்கொள்.கூடவே நான் சொல்லும் ஒரு பயிற்சியை மட்டும் அன்றாடம் பழக்கப் படுத்து" என்றார்.

அந்த சாது சொன்ன பயிற்ச்சி என்ன என்பதை நாமும் பார்ப்போம்:

அன்றாடம் காலையில் குளிக்கும் போது. ..

1) அன்றாடம் தலைக்கும் சேர்த்து குளி.

2) வெந்நீர் வேண்டாம். அதிக குளிர்ச்சி இல்லாத பச்சை தண்ணீரில் குளி.

3) பொதுவாக குளிக்க ஆரம்பிக்கும் முன்பு உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் தண்ணீரில் நனைத்த பிறகு வாயில் தண்ணீர் விட்டு கொப்பளித்து உமிழ்ந்து, முகம் கழுவிய பிறகு குளிக்க துவங்க வேண்டும்

4) குளிக்கும் முன்பு வாயில் ஒரு மடக்கு தண்ணீர் விட்டு வாயை மூடிக்கொண்டு குளிக்க வேண்டும். குளித்து முடிக்கும் வரை மூடிய வாயைத் திறக்கக்கூடாது.

5) குளித்து முடித்து உடல் முழுவதும் துவட்டி ஈர உடை அவிழ்த்து வேறு உடை இடுப்பில் உடுத்திய பிறகு வாயில் உள்ள நீரை உமிழ்ந்து விட்டு ,ஒரிரு முறை தண்ணீர் விட்டு வாய் கொப்பளித்து விட்டு பின்னர் சகஜமான சுவாசத்திற்கு வரவேண்டும்.
இவ்வளவு தான் உனக்கு பயிற்சி. இதையே பழக்கமாக்கிக் கொள்.....என்றவர்.

பணம் செலவு இல்லை. இதுக்கென்று தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை.
அதாவது குளிக்கும் முழு நேரமும் வாயி னால் சுவாசிப்பதைத் தவிர்த்து மூக்கினால் மட்டுமே சுவாசிப்பதை கட்டாயமாக்கும் ஒரு பயிற்சி தான் இது.

ஆரம்பத்தில் இது கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால் பழகப்பழக எளிமையாக பழக்கப்படும்.இதைமட்டும் பழக்கப்படுத்து என்று சொன்னார் அந்த சாது.

நம்பிக்கையுடனும், வைராக்கியத்துடன் சாது கூறிய பயிற்சியைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் மிகச் சிரமமாக இருந்தது.சில நேரங்களில் மூக்குக்குள் தண்ணீர் போய் மூச்சு விட பரிதவித்து இருக்கிறேன்.இடையி டையே வாய் நீரைத்துப்பி வாய் மூலமாக சுவாசித்து இருக்கிறேன். இருந்தாலும் சாது கூறியது பொய்யாக இருக்காது என நான் என்ன தவறு செய்கிறேன் என்று யோசித்து பார்த்தேன்.....

எனக்கு ஒரு சூட்சுமம் புரிந்தது..

அதாவது தலையில் இருந்து தண்ணீர் வடியும் போது மூச்சை உள் இழுக்கும் (பூரகம்)போது தான் மூக்குக்குள் தண்ணீர் போய் சிரமப்படுத்துகிறது. தண்ணீர் வடியும் போது சுவாசத்தை வெளியே விடுவதில் (ரேசகம்) சிரமம் ஒன்றும் இல்லை என புரிந்து கொண்டேன்.

எனவே சுவாசத்தை நன்றாக உள் இழுத்ததும் தலையில் தண்ணீர் ஊற்றினேன். தண்ணீர் வடியும் போதே சுவாசத்தை மூக்கின் வழி மெதுவாக வெளியே விட்டேன். என்ன ஒரு
ஆச்சரியம் குளிக்கும் போது மூக்கு வழி சுவாசம் எளிமையானது.

இப்படியே கடந்த ஆறு மாதமாக இந்தப் பயிற்சியை எனது அன்றாடப் பழக்கம் ஆக்கிவிட்டேன். தற்போது எனக்கு ஆஸ்துமா பிரச்சனை இல்லை என்று சொல்லி முடித்தார் அந்த பழைய ஆஸ்துமா நோயாளி.

இல்லை, இல்லை தற்போது அவர் நோயாளி இல்லை.

எனக்கு ஆச்சரியமும், ஆர்வமும் அதிக மானது, என்றார்...அவர் சொல்லியதைக் கேட்ட அம்மருத்துவர்.

எனது புரிதல்.....

நுரையீரலை அதன் இயற்கையான தொழி லான சுவாசித்தின் மூலமாகவே வலிமைப் படுத்த இது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கருதினேன்.

நானே குளிக்கும் போது இதைக்கடை பிடிக்கத் தொடங்கினேன். சிரமம் இல்லை. நுரையீரல் வலிமை பெறுவதாக உணர்கி றேன், நம்புகிறேன். இன்றைய சூழ்நிலையில் எப்பொழுதும் மூக்கின் வழியாகவே சுவாசிக்க வேண்டும் என்ற உண்மையை உணர்த்த உதவுகிறது....என்றார் மருத்துவர்.

பொதுவாக நமது உடலில் தசைகளுக்குத் தெரிந்த, செய்ய முடிந்த ஒரே தொழில் சுருங்குதல் மட்டுமே அல்லவா. சுருங்கும் அல்லது எதிர்வினை தசைகளுக்காக சுருங்காமல் நெகிழ்ந்து கொடுக்கும்.

தசைகளுக்கு தாமாகவே நீள அல்லது விரியத் தெரியாது. உடல் முழுவதும் இயங்கிக்கொண்டு இருப்பதால் தசைகள் மாறி மாறி சுருங்கிக் கொண்டே இருக்கின் றன. அதனால் வெப்பம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. ஆக குளிர்வித்தல் அவசியமாகிறது.

குளிர்ச்சியானது....... தசைகளை அதன் இயற்கை தொழிலான சுருங்கும் தொழில் சிறப்பாக நடை பெற உதவுகிறது.

சூடு ,வெப்பம் தசைகள் இயற்கை தொழிலான சுருங்கும் தன்மையைச் செய்ய விடாமல் எதிரான செயலைச் செய்விக் கிறது..ஆக குளித்தல் /குளிர்வித்தல் என்பது தசைகளை வலிமை படுத்த அவசியம் என்பது புரிகிறது.

நன்றி: முகநூல் பகுதி.

கோவிலில் வழிபடும் முறைகள்



⚜குளித்து, சுத்தமாக கோவிலுக்கு செல்ல வேண்டும்.

⚜ கோவிலில் உள்ள குளத்தில், அல்லது அங்குள்ள தண்ணீர் குழாயில், கைகால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லவும்,

⚜ கோவிலிற்கு வெறுங்கையுடன் செல்லாமல் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் பூ ஆகியவற்றை வாங்கி செல்ல வேண்டும்.

⚜முதலில் கோபுரத்தை வணங்கிவிட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும்,

⚜ கொடிமரம் பலிபீடம் நமஸ்கரிக்க வேண்டும்,

⚜ சிவன் கோயில் என்றால் விநாயகரை முதலில் வணங்க வேண்டும்,

⚜ பெருமாள் கோயில் என்றால், கருடாழ்வாரையும் முதலில் வணங்க வேண்டும்,

⚜ கோவில் பிரகாரத்தை வலம் வர வேண்டும்,

⚜ கோவில் படியை தொட்டு நெற்றி புருவத்தில் மோதிரவிரலால் சற்று அழுத்த வேண்டும்,
படியை
தாண்டி செல்ல வேண்டும்,

⚜இறைவனுக்கு முன்னால் இருபுறமும் இருக்கக்கூடிய துவாரபாலகர் களிடம் அனுமதி பெற வேண்டும்,

⚜ சிவன் கோயில் என்றால்

சிவனை முதலில் தரிசிக்க வேண்டும்

பின்னர் அம்பாளை தரிசிக்க வேண்டும்,

⚜ பெருமாள் கோயில் என்றால்

தாயாரை முதலில் சேவிக்க வேண்டும்,

பின்னர் பெருமாளை சேவிக்க வேண்டும்,

⚜சிவன் கோவில் என்றால் வில்வத்தாலும்,

⚜பெருமாள் கோவில் என்றால் துளசியாலும்

அர்ச்சனை செய்ய வேண்டும்.

⚜ சிவன் கோயில் என்றால் தீபாராதனையை கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும்

⚜ பெருமாள் கோவில் என்றால் தீபாராதனையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

⚜தீபாராதனையின் போது கண்களை நன்றாக திறந்து இறைவனை நன்றாக தரிசனம் செய்ய வேண்டும்,
கண்களை மூடிக்கொள்ள கூடாது.

⚜ கோவிலில் உள்ள எந்த சாமி சிலைகளையும் தொட்டு வணங்குதல் கூடாது,

⚜ கொடிமரத்திற்கு முன்னால் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி தரிசனம் செய்ய வேண்டும்

⚜இறைவனுக்கு முன்னால் எதிரெதிரே நின்று தரிசிக்கக் கூடாது

⚜இறைவனுடைய கடைக்கண் பார்வை குளிர்ச்சியான பார்வையே நன்மை ,

⚜விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, 3 தோப்புக்கரணம் போட வேண்டும்.

⚜விநாயகரை ஒரு முறையும்,

⚜சூரியனை 2 முறையும்,

⚜ அம்பாளையும், விஷ்ணுவையும் 4 முறையும்,

⚜ ஆஞ்சநேயரை 5 முறையும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

⚜மூலவருக்கு அபிஷேகம் நடந்தால், பிரகாரத்தை சுற்றக்கூடாது.

⚜ அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.

⚜நமது வேண்டுதல்களை யெல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும்.

⚜அதற்கு பிறகு வேறெந்த சன்னதியிலும் சிவன் நாமம்,

⚜நாராயண நாமம் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது.

⚜ஆலயத்திற்குள் ஒருவரை ஒருவர் கும்பிடக்கூடாது.

⚜ஏனெனில், கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும்.

⚜ சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது.

⚜ கோவிலில் கொடுக்கக்கூடிய குங்குமம், விபூதி,
கைகளில் மாற்ற
கூடாது,
மோதிரவிரலால் அணிந்துகொள்ள வேண்டும்

கிழக்கு முகமாக நின்று
அல்லது வடக்கு முகமாக நின்று,
இட்டுகொள்ள வேண்டும்,

⚜ இறைவன் சன்னதிக்கு முன்னால் அனுமதி கொடுத்தால்,
இறைவனை பற்றி பாடுவது மிகவும் சிறப்பு,

⚜ ஒருவர் இறைவனை தரிசனம் செய்யும்பொழுது குறுக்கே செல்லுதல் கூடாது,
இடையூறாக இருக்கவும் கூடாது,

⚜இறைவனின் முன் காயத்திரி மந்திரம் சொல்வது மிகவும் சிறப்பு,

⚜ கோவிலில் கொடுக்கக்கூடிய விபூதி , குங்குமத்தை, தூய்மையான எதுவும் எழுதாத வெள்ளை பேப்பரில் மடித்து வைத்துக் கொள்வது சிறப்பு,

⚜நியூஸ் பேப்பர் மற்ற தேவையற்ற செய்திகள் உள்ள பேப்பரில் விபூதி குங்குமம் மடித்து வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது,

⚜ஆலய வளாகத்திற்குள் அசுத்தம் செய்தல், குப்பையை போடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.

⚜கோவிலிலிருந்து பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.

⚜சண்டிகேஸ்வரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடக்கூடாது.

⚜சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேஸ்வரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.

⚜சிவன் கோவிலில் காலபைரவரையும்,

⚜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அணுகாது.

⚜ சிவன் கோயிலில் கொடிமரத்து முன் விழுந்து கும்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்து பின்னர் வீட்டிற்கு செல்ல வேண்டும்,

⚜ பெருமாள் கோயிலில் கொடிமரத்து முன் விழுந்து கும்பிட்டு விட்டு நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும், உட்காரக்கூடாது,

⚜கோவிலுக்கு சென்றுவிட்டு நேரே வீட்டிற்கு செல்ல வேண்டும்,

⚜ இப்படியெல்லாம் கடவுளை அனுஷ்டித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

குலதெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்?


சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7x7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம்.

அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்க்கத்தை அடைகின்றது என்று நம்புகிறோம். அது போலத்தான் இறுதிக் காலமாக 13 என்ற அந்த காலத்தைக் குறிக்கும் விதத்தில் 49 ஜென்ம காலமான 13 ஜென்மத்துடன் ஒரு வம்சம் முடிவடைகின்றது என்று நம்பப்படுகின்றது. அதாவது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குலதெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு.

ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஏழேழு ஜென்மங்களுக்கு மேல் எந்த வம்சத்தினரும் இருக்க மாட்டார்கள். ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஓம் நமசிவாய

இறைவன் நினைத்தால்...



ஒரு ஊரில் இளைஞன் ஒருவன் வறுமை நிலையில் வாடிக்கொண்டு வேலைவாய்ப்பின்றி சுற்றிக் கொண்டிருந்தான்.

மாலைப் பொழுதில் அவ்வூரிலுள்ள விநாயகர் ஆலயத்தில் அமர்ந்து அங்கிருக்கும் தேங்காய் வாழைப்பழம் சுண்டல் என பக்தர்கள் இறைவனுக்கு படைத்த பொருள்களை உண்டு வாழ்ந்து வந்தான்.

அதேபோல் ஒரு நாள் மாலைப் பொழுதில் தன் துயரநிலையை எண்ணி விநாயகரிடம் முறையிட்டு வேண்டிக் கொண்டான்.

அதே நேரத்தில் ஒரு பக்தர் ஒருவர் விநாயகருக்கு படையல் செய்து நூற்றி ஒரு ரூபாய் காணிக்கையாக வைத்து விட்டு சென்று விட்டார்.

இதை பார்க்க அந்த இளைஞன் அப்பனே விநாயகா எனக்கு ஏதாவது ஒரு சுய தொழில் தொடங்க வழி செய். இந்த நூற்றிஒரு ரூபாயை நான் உன்னிடம் கடனாக பெற்றுக்கொண்டு ஒரு சிறிய தொழில் தொடங்குகின்றேன் அதில் வரும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கை உனக்கு அளிக்கிறேன் என்று வேண்டிக் கொண்டு அந்த பணத்தை எடுத்துக் கொண்டான்.

இறைவனிடத்தில் பெறப்பட்ட அந்தப் பணத்தைக் கொண்டு சிறிய அளவில் பால் வியாபாரத்தை ஆரம்பித்தான்.

விநாயகர் அருளால் பெறப்பட்ட பணம் அல்லவா அது. அவனது தொழில் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது நல்ல ஒரு லாபத்தையும் கொடுத்து கொண்டிருந்தது.

முதல் மூன்று மாதம் அதில் வரும் லாபத்தை மூன்றில் ஒரு பங்கை கோயிலின் உண்டியலில் செலுத்தி வந்தான்.

கொஞ்சம் கையில் பணம் புழங்கவே அந்த இளைஞனுக்கு திருமண ஆசை வந்தது. விநாயகரிடம் சென்று முறையிட்டான் அப்பனே விநாயகா எனக்கு திருமணம் செய்ய ஆசை உள்ளது ஆகவே உனக்கு அளிக்கும் பங்கை சேர்த்து என்னுடைய திருமண செலவுக்கு எடுத்துக் கொள்கிறேன் என்றான்.

இளைஞனுக்கும் திருமணம் நடந்தது. வாழ்க்கை சூழலில் தனக்கு வாழ்வளித்த விநாயகப்பெருமானை முற்றிலும் மறக்க ஆரம்பித்தான்.

இருந்தாலும் கருணைக்கடல் அல்லவா விநாயக பெருமான். அந்த இளைஞனின் வாழ்க்கை சூழலுக்கேற்ப. பால் கறக்க ஒரு மாடு என்ற வகையில் அமைத்துக் கொடுத்து அதை ஒரு பெரும் பசுமாட்டு பண்ணையாக மாற்றி அவன் வாழ்க்கையில் வளம் சேர்க்க ஆரம்பித்தார்.

ஆனால் அந்த இளைஞனுக்கு பணம் சேர சேர தீய பழக்கங்களும் நாளடைவில் வந்து சேர்ந்தது.

தான் செய்து வந்த பால் தொழில் கலப்படம் செய்ய ஆரம்பித்தான். அதோடு மட்டுமல்ல அந்தப் பணத்தைக் கொண்டு ஊதாரித்தனமாக செலவு செய்யக் கற்றுக் கொண்டான் (மது , சூது, மாது) , தன் இல்லத்தரசி கூறும் நல் வழிகளையும் உதாசீனம் செய்தான்.

தான் செய்துவரும் தொழிலில் மூன்றில் ஒரு பங்கை விநாயகருக்கு அளிப்பதாக கூறிய வாக்கையும் தவறிவிட்டான்.

நல்ல வழிகளை மேம்படுத்துவதுதான் இறைவன் செயல். தவறான வழி முறையில் செல்வோரை எப்படி திருத்துவது என்று இறைவனின் கணக்கு ஒன்று உள்ளது.

அந்த இளைஞனுடைய தொழிலின் கலப்படமும், மது சூது மாது என்று அவன் ஊதாரித்தனமாக நடந்து கொண்டதையும் ஊர் அறிய ஆரம்பித்தது.

படிப்படியாக அவனுடைய தொழில் நலிவுற்றது. கடனாளியாக ஆக்கியது இருக்கும் கறவை மாடுகளை எல்லாம் விற்று விதி அவனை பழைய நிலைக்கு ஆளாக்கியது.

மீண்டும் பழைய நிலைக்கு ஆளாகிய அவன் தன் மனைவி மக்களோடு தன்னை தன் வாழ்க்கைக்கு வழி வகுத்துக் கொடுத்த விநாயகர் ஆலயத்திற்கு திரும்பிச் சென்றான்..

விநாயகப் பெருமானிடம் தான் செய்த தவறுகளை மன்னித்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்குமாறு கதறி அழுதான்...

இளகிய மனம் கொண்டவர் அல்லவா ? விநாயகர்....

விநாயகர் காலடியில் கதறி அழுது எழுந்த போது . அந்த இளைஞன் மனைவி மடியில் மீண்டும் ஒரு நூறு ரூபாய் தாள். மூலதனமாக வைத்து பிழைத்துக்கொள். அந்த ஆலயத்தில் இருந்து அசரீரியாக குரல்...

நம்பிக்கையுடன் அந்த இளைஞனின் மனைவி...

இறைவன் அமைத்துக் கொடுத்த வாழ்க்கையை வளமோடும் நலமோடும் நேர் வழி கொண்டு வாழ்க்கைச் சூழலை அமைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்....

அல்லது இறைவன் கணக்கு வேறு வழியாக அமையும்..

சனி பகவான் பாதிப்புகளில் இருந்த தப்பிக்க...


* சனிக்கிழமை தோறும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்

* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.

* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.

திருஷ்டி கழிய என்ன செய்ய வேண்டும்?


நாம் நேரமும்,காலமும் சரியாக இருந்தால் கூட மற்றவரின் திருஷ்டி(கண்ணுரு) பார்வை நம்மை வீழ்த்தகூடும்.திருஷ்டி கழிய எளிய பரிகாரம் என்னவென்றால்..,

எலுமிச்சையை நான்காக கீறிக்கொள்ளுங்கள், உள்ளே குங்குமம் வைத்து குடும்பத்தினர் தலையை இடமிருந்து வலமாக மூன்றுதடவை,வலமிருந்து இடமாக மூன்று தடவை சுற்றி தரையில் சாறு பிழிந்து விட வேண்டும். பின்பு நான்கு துண்டுகளையும் நான்கு மூலைக்கு ஒன்றாக வீசி விட வேண்டும்.

இரவு நேரத்தில் திருஷ்டி கழிக்க தாம்பல தட்டில் சூடம் ஏற்றி குடும்பத்தினர் தலையை இடமிருந்து வலமாக மூன்றுதடவை,வலமிருந்து இடமாக மூன்று தடவை சுற்றி வாசலில் போட வேண்டும்.

மேற்கண்டவாறு செய்தால் கண்டிப்பாக நம் மீது இருக்கும் திருஷ்டி குறையும்.

செல்வ வளம் பெருக செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன தெரியுமா....?



வீட்டில் ஒருவர் மாறி ஒருவருக்கும் தொடர்ந்து உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆண்மிக மையங்களிலோ பகல் வேலையில் மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்து வந்தால், அவர்களின் குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம் திருதியை நட்சத்திரம் வருகின்ற நாளில் இதைச் செய்தால் முழு பலன்கள் உண்டு.

வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து சென்றால் விபத்துக்கல் நேர்வதைத் தடுக்கலாம். காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்றை தொடர்ந்து பார்த்து வந்தால் செல்வ வளம் பெருகும்.



இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும். வீட்டை சுர்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பணபுழக்கம் உடனடியாக உயரும்.



நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேலையில் பறவைகளுக்கு இனிப்பு உணவு வழங்கி வந்தால், வீண் விரயம் கட்டுப்படும்.

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?



செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி:

உலக மக்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் பட்டியலில் இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள்!

பணப் பற்றாக்குறை, சண்டைகள், முரண்பாடுகள், இயற்கையின் சீற்றம் இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தோனேஷியா, இந்தியா, மெக்ஸிகோ நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என்ற பட்டியலில் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளார்கள்.

பணத்தைக் கொண்டு மகிழ்ச்சியை வாங்க முடியாது என்பதை இந்த ஆய்வு நிரூபித்து இருக்கிறது. மிக முன்னேறிய நாடான அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்கள் அத்தனை சந்தோஷமாக இல்லையாம்.

*மக்களின் மகிழ்ச்சியை எது நிர்ணயிக்கிறது?*

நல்ல சாப்பாடு ஒருவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கலாம்; கேர் ஆப் பிளாட்பாரம் என்றால் தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தால் மகிழலாம். இதனால் தெரிய வருவது யாதெனில், மகிழ்ச்சி என்பது ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பொறுத்தது அல்ல. ஒருவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு விஷயம் இன்னொருவருக்கு மகிழ்வைக் கொடுக்காமல் போகலாம்.

ஆனால் இந்த ஆய்வின்படி குடும்ப அமைப்பு – நிலையான, புரிதலுடன் கூடிய உறவுகள் – ஒருவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்ற ஒரு ஆச்சர்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது.

*சந்தோஷத்திற்கான 10 மந்திரங்கள் இதோ…*

*1.மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்*

இதற்குக் காரணம் நம் வழிதான் சிறந்தது என்று நாம் எண்ணுவது; மற்றவர்களின் தனித்தன்மையை உணர மறுப்பது. இதனால் நம் அமைதி குலைகிறது; நமக்கு நாமே ஆபத்துக்களை, எதிரிகளை உருவாக்கி கொள்ளுகிறோம்; நம்மைப்போல் மற்றவருக்கும் சிந்திக்கக்கூடிய திறன் உண்டு; அவர்களது சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் முடிவு எடுப்பார்கள்; அவர்களாகவே வந்து கேட்டால் அன்றி மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

*2. மன்னிப்போம் மறப்போம்!*

இந்த மனோபாவம் அமைதியான வாழ்க்கைக்கும் உறவுகள் நிலைக்கவும் மிகவும் தேவையான ஒன்று. யாரோ எப்போதோ நம்மை காயப்படுத்தி இருப்பார்கள்; ஒரு முறை நடந்ததை திரும்பத்திரும்ப நினைத்து நம் அமைதியை இழக்க வேண்டாமே! பழைய, ஆறிப்போன புண்களைக் கிளறிவிடுவானேன்? தூக்கம் கெட்டு, இரத்த அழுத்தம் அதிகமாகி, குடல் புண்கள் ஏற்பட்டு நம் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளுவானேன்?

*3. பிறரது அங்கீகாரத்தை எதிர்பார்க்காதீர்கள்*

யாருமே யாரையுமே அனாவசியமாக புகழுவதில்லை. நீங்கள் பதவியில் இருக்கும்போது சல்யூட் அடிப்பவர்கள், அதிகாரம் போனவுடன் உங்களையும், நீங்கள் செய்த நல்ல காரியங்களையும் மறந்து விடுவார்கள். இப்படிப்பவர்களிடம் அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஏன் ஏமாற வேண்டும்? உங்கள் கடமையை பலன் பாராமல் நல்ல மனதுடன் செய்யுங்கள்.

*4. பொறாமை வேண்டாம்*

எல்லோருடைய வாழ்க்கையுமே முன்பே எழுதப்பட்ட ஒன்று. நீங்கள் பணக்காரன் ஆகவேண்டும் என்று இருந்தால் கட்டாயம் பணம் உங்களிடம் குவியும்; இல்லை என்றால் இல்லை. உங்களின் அதிருஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம் இரண்டுக்கும் வேறு யாரும் காரணம் அல்ல. மற்றவர்களுடைய அதிருஷ்டத்தை பார்த்துப் பொறாமை வேண்டவே வேண்டாம். பொறாமைப் படுவதால் எதுவும் மாறப் போவதில்லை; மன அமைதிதான் குலையும்.

*5. சூழ்நிலைக்கு ஏற்ப மாறுங்கள்*

குல்லாய்க்குத் தகுந்தவாறு தலையை வெட்டுவதா? தலைக்கு தகுந்தவாறு குல்லாவை வெட்டுவதா? எது விவேகமான செயல்? சூழ்நிலைக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக் கொள்ளுவதால், பாதகமான சூழல் கூட சாதகமாக மாறும் அதிசயத்தை உணரலாம்.

*6. சரி செய்ய முடியாததை பொறுத்துக் கொள்ளுங்கள்*

நம் அன்றாட வாழ்வில் பல விஷயங்கள் நம் கட்டுப் பாட்டில் இல்லாதவை. இவற்றை பொறுத்துக் கொள்ளுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? கஷ்டங்களை பொறுமையுடன் எதிர்கொள்ளுவதால் மன உறுதியும் எந்தவிதமான சூழ்நிலையிலும் நிதானம் தவறாமல் நடந்து கொள்ளும் பக்குவம் வரும்.

*7. உங்கள் எல்லையை தெரிந்து கொள்ளுங்கள்*

எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டும் என்றோ, என்னால் முடியும் என்று காட்டவோ ஏகப்பட்ட பொறுப்புகளை தலையில் சுமக்காதீர்கள். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு: Don’t bite more than you can chew என்று. நாம் எல்லோரும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய பழமொழி இது. பொறுப்புக்களை நிறைவேற்றிய பின் இருக்கும் நேரத்தை இறைவனை பிரார்த்திக்கவும், தியானம் செய்யவும், சுயப் பரிசோதனை செய்யவும் பயன் படுத்துங்கள்.

*8. தினமும் தியானம் பழகுங்கள்*

தியானம் மன அமைதியைக் கொடுப்பதுடன், பலவிதமான மன உளைச்சல்களிலிருந்தும் நம்மை காக்கிறது. அரை மணி நேரத் தியானம் மீதி இருக்கும் 23 ½ மணி நேரத்திற்கு நம்மை அமைதிப் படுத்தும். சின்னச் சின்ன விஷயங்கள் நம்மை அலை பாய வைக்காது. அரை மணி நேரம் உட்கார முடியுமா? எத்தனை வேலை இருக்கிறது என்று நினைக்காமல் தியானம் செய்யுங்கள்; உங்களது செயல் திறன் தியானத்தினால் பன்மடங்கு அதிகரிக்கும்.

*9. மனதை எப்போதும் ஆக்க பூர்வமான வழியில் செலுத்துங்கள்*

மனம் காலியாக இருக்கும் போது தான் வேண்டாத எண்ணங்கள் வந்து குடியிருக்கும். உங்களுக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கை தொடர்ந்து செய்து வாருங்கள். சமூக நற்பணி அல்லது பக்கத்தில் தேவைப் படுபவர்களுக்கு உதவுதல் என்று ஏதாவது செய்து கொண்டே இருங்கள். இதனால் உங்களுக்கு பண வரவு இல்லாமல் போகலாம்; ஆனால் இவையெல்லாம் ஆத்மாவிற்கு நன்மை அளிப்பவை.

*10. எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடாதீர்கள்*

ஒரு காரியத்தை எடுத்தால் உடனே செயல் பாட்டில் இறங்குங்கள். இப்போது செய்வதா, அல்லது பிறகா என்று குழப்பம் வேண்டாம். காலம் பொன்னானது. வீண் செய்யாதீர்கள். ஒரு முறை தோல்வி வந்தால் மனம் உடைய வேண்டாம். உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். முடிந்து போன விஷயத்தை நினைத்து புலம்பாதீர்கள். வருத்தப் படாதீர்கள். நடந்து முடிந்தது முடிந்ததுதான்.

*கடந்த காலத்தை மாற்றி எழுத முடியாது; ஆனால் எதிர்காலம் நம் கையில் அதை ஆக்கபூர்வமாக மாற்றலாம்*

மகிழ்ச்சியாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது; இருப்போமா ?

இருப்போம்! இருப்போம்! இருப்போம்!

*மகிழ்ச்சியாக இருப்போம்!*

குடும்பத்தில் அமைதி நிலவி வளம் பெற ஜல தீபத்தை இப்படி ஏற்றுங்கள்.


ஜலம் என்றால் தண்ணீர் என்று பொருள்படும். ஜல தீபம் என்பது தண்ணீரை கொண்டு ஏற்றக் கூடிய ஒரு தீபம் ஆகும். நீரினால் நெருப்பை கொண்டு விளக்கேற்றி வைப்பதால் பஞ்ச பூதங்களின் ஆற்றலும் இந்த தீபத்திற்கு இருக்கும். ஜல தீபம் குபேரனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். எனவே இது குபேர ஜல தீபம் என்றும் போற்றப்படுகிறது. இந்த விளைக்கை ஏற்றுவதால் இல்லத்தில் செல்வம் தங்கும். எதிர்மறை சக்திகள் அண்டாது. குடும்பத்தில் அமைதி நிலவும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜல தீபத்தை எப்படி ஏற்றுவது என்று இப்பதிவில் இப்போது காணலாம்.

ஒரு அழகிய தட்டை எடுத்து மலர்களால் அலங்கரித்து கொள்ளவும். அதன் மேல் கண்ணடியாலான சிறிய அளவிலான பவுல் அல்லது மட்பாண்டத்தாலான சிறிய பானையை வைத்து கொள்ளலாம். அதில் ஜலம் இரண்டு பங்கு ஊற்றி கொண்டு அதன் மேல் நல்லெண்ணை ஒரு பங்கு ஊற்றவும். நல்லெண்ணை இல்லையேல் நீங்கள் உபயோகிக்கும் பூஜைக்கு உகந்த எண்ணெயை ஊற்றி கொள்ளலாம்.

இப்போது எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும். நீரும் எண்ணெயும் சேராது அல்லவா? அதன் மேல் பஞ்சு திரி இரண்டை ஒன்றாக திரித்து எண்ணெயில் தோய்த்து வைத்து கொள்ளவும். திரி மூழ்காமல் இருக்க வெற்றிலை வைக்கலாம். அந்த வெற்றிலையின் மேல் திரியை வைத்து பின்னர் தீபம் ஏற்றலாம். அல்லது ஜல தீபதிற்கு என்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் திரிகளை வாங்கி வைத்து கொண்டு அதிலும் ஏற்றலாம். திரி நீரில் மூழ்காமல் இருக்கவே இந்த வழி முறைகளை கையாள்கிறோம்.

இந்த தீபத்தை வியாழன் அன்று மாலை ஏற்றுவது சிறந்தது. குபேர பகவானுக்கு உகந்த கிழமை வியாழன் ஆகும். எனவே வியாழன் மாலை ஏற்றி விட்டு அதனை வெள்ளி, சனி வரை அணையாமல் மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும்படி பார்த்து கொள்ளவும். சனிக்கிழமை மாலை பூஜை முடிந்தவுடன் நீக்கி விடலாம். அந்த ஜோதியின் நிழல் இல்லத்தில் இருக்கும் எல்லா கெட்ட சக்திகளையும் ஒழித்து விடும். அனைத்து தேவதைகளின் அருளும் கிட்டும். நீரின்றி எதுவும் இல்லை. அத்தகைய நீரில் ஏற்றும் தீபமானது சிறப்பு வாய்ந்தது தான். மிகவும் எளிமையாக அனைவரும் பின்பற்றக் கூடிய சிறப்பு மிகு வழிமுறையும் தான்.

இவ்வாறு உங்களால் முடிந்த அளவிற்கு தொடர்ந்து செய்வதால் எண்ணற்ற பலன்கள் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கப் பெரும். வீட்டில் இறையருள் முழுமையாக நிறைந்திருக்கும். அந்த ஜோதியை பார்ப்பதால் மனதில் ஒருவித சாந்தம் குடிகொள்ளும். மனம் ஒருநிலைபடும். மன இறுக்கம் தளர்ந்துவிடுவதை நீங்களே உணர்வீர்கள். குடும்பத்தில் எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுபீட்க்ஷம் உண்டாகும். லக்ஷ்மி குபேர பூஜை நீங்கள் செய்வதானால் அந்த பூஜையில் சிறப்பம்சமாக இந்த விளக்கை ஏற்றி வழிபடலாம்.

எந்த பூஜையையும் நாம் முழு மனதுடன் ஆத்மார்த்தமாக பக்தி சிரத்தையுடன் மேற்கொள்வதால் மட்டுமே அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். மனதில் நல்ல எண்ணங்கள் விதைத்து தன்னலம் கருதாமல் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும். குடும்பம் நோய் நொடி இன்றி நலமுடன் இருக்க வேண்டும். மனித உயிர் ஒவ்வொன்றும் இறையருள் பெற்று சகல வளமும் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விளக்கேற்றுங்கள். வளம் பெறுங்கள்.

சந்திர பலம் உள்ள நாட்கள்🌼 தேடினாலும் எளிதில் கிட்டா பதிவு 🌼எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்



🌼நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.

🌼நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.

🌼பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.

🌼நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:

🌼அஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼மிருகசீரிஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼திருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼புனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼ஆயில்யம் : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம்.

🌼மகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼அஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼சித்திரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼சுவாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼விசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼அனுஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼கேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼மூலம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼திருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼சதயம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼உத்திரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼ரேவதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டா ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼மேற்கண்டவாறு அந்த அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும்.🌼

உபதேசங்கள்


------------------------------
🎀01. தூங்கும் முன் மோசமான பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம்.
---------------------------------
🎀02. உங்கள் இடது கையால் குடிக்க, சாப்பிடவோ வேண்டாம்.
------------------------------
🎀03. உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.
---------------------
🎀04. உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்.
------------------------------
🎀05. காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும்.
------------------------------
🎀06. கழிவறை உள்ளே எச்சில் துப்பக் கூடாது.
------------------------------
🎀07. கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது.
------------------------------
🎀08. உங்கள் கால்சட்டையை உட்கார்ந்து அணியவும்.
------------------------------
🎀09. கடினமானதை பற்களைக் கொண்டு கடிக்கக் கூடாது.
------------------------------
🎀10. சூடான உணவை ஊதி சாப்பிடக் கூடாது.
------------------------------
🎀11. மற்றவர்களின் தவறுகளை பார்க்க வேண்டாம்.
-----------------------------
🎀12. உங்கள் நண்பர்கள் பற்றி கதைகள் பேச வேண்டாம்.
------------------------------
🎀13. உங்கள் நண்பர்களை விரோதம் கொள்ள வேண்டாம்.
------------------------------
🎀14. உங்கள் நண்பர்கள் பற்றி சந்தேகம் வேண்டாம்.
------------------------------
🎀15. சாப்பிடும் போது உணவை நுகரக்கூடாது.
------------------------------
🎀16. மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி தெளிவாக பேசுங்கள்.
------------------------------
🎀17. தனியாக பயணம் செய்ய வேண்டாம் .
------------------------------
🎀18. உங்கள் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.
------------------------------
🎀19. உங்களை பற்றி பெருமை கொள்ள கூடாது.
------------------------------
🎀20. உணவை குறைக்கூற வேண்டாம்.
------------------------------
🎀21. பெருமை வேண்டாம்.
------------------------------
🎀22 வறுமையின் போது பொறுமை காக்கவும்.
------------------------------
🎀23. நல்ல விஷயத்திற்காக உதவி செய்யுங்கள்.
------------------------------

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு.


◆நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

◆கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?

◆ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் கஷ்டம் ஏற்படுகின்றது?

◆கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?

போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு.

சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக இருந்த போதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.

வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானம் மற்றும் பிராத்தனையிலும் செல விட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.

அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தன்னுடைய இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும் செய்யும்
குணமுடையவனாக அவனிருந்தான்.

அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.
இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு
சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.

இதன் காரணமாக ஒரு கட்டத்தில் அவர்கள்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.
கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன் மீது தனது பக்தி உண்மையாய் இருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்
கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும்
என்ற சவாலுக்கு இழுத்தான்.

இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான். போட்டியின் கடைசி நாளும் வந்தது. அன்று வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு. அதிகமான பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான்.

வரும்வழியில் களைப்பு தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ உருத்துவது போல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத செல்வம் புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான். இதன் இடையே வயலில் வேலை செய்து கொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன படுத்த படுக்கை ஆக்கிவிட்டது விதி.

இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது
அசிங்கம் என்று சித்தனின் மனைவி அவனை விட்டு நீங்கினாள். தன் நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து கொள்ள முடியவில்லை.

எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னே உள்ள கிணற்றில் குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன் வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும் மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க தோனவில்லை, மாறாக சண்டை போட தொடங்கினான். தன் ஆதங்கத்தையும்
ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.

அனைத்தையும் பொருமையுடன் கேட்டு கொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அனைத்து கொண்டார்.அந்த அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். பின்பு கடவுள் பேச தொடங்கினார், சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில் வித்தனை விட கொடுமை காரனாக இருந்தாய்.

நீ உன் மனைவியை மதித்தது கூடகிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான்,
அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.

என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்த்தில் அதிகம் நானே ஏற்றுகொண்டேன்,. மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே அனுபவிக்கின்றாய்.

ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும்.

வித்தனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.

அவன் செய்த அனைத்து புண்ணியங்களும்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ
அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி நடக்க விருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து
தெரிந்து கொள் என்று சில அறிவுரைகளை கூறி மறைந்தார் கடவுள்.

நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது.அவனது நெருங்கிய
உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது
சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும்
சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன் கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும்
பரித்துக் கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.

தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே
தங்க செய்து உதவினான்.

ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது
நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. அது நல்லதாக இருந்தால்
நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.

ஓம் சாயி ராமா......