Sunday, September 30, 2018

வாழை இலையில் சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா...?

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள். முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். தளிரான வாழை இலையை நெருப்பினால் ஏற்பட்ட புண், வெந்நீர் பட்டதால் உண்டான புண் ஆகியவற்றில் வைத்துக் கட்ட அந்த புண்கள் உலர்ந்து விடும். அப்போது, முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும். புண்களுக்கு துணியில் எண்ணெய் நனைத்து வைத்து கட்டும்போது, அதன் மேல் வாழை இலையையும் வைத்து கட்டி வர, அந்த துணி எண்ணெய் தன்மையுடனேயே இருக்கும். அதனால் புண் விரைவில் ஆறிவிடும். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும்

Saturday, September 29, 2018

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம். பொதுவாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றத்தை வைத்து எளிதாக உங்கள் உடல்நல மாற்றத்தை கண்டறிந்துவிடலாம். உடல்நிலை சரியில்லை எனும் போது முதலில் சிறுநீர் பரிசோதனை செய்வதற்கு காரணமும் இதுதான். நாட்டு வைத்தியம் செய்பவர்கள் கூட சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன பாதிப்பாக இருக்ககூடும் என்பதை கணித்துவிடுவார்கள். எனவே, நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அண்ணாந்து விட்டத்தை பார்ப்பதை தவிர்த்து சிறுநீரின் நிறம் சரியாக தான் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது அவசியம். 01. மந்தமாக வெளியாகுதல். உங்கள் சிறுநீர் மந்தமாக வெளிப்படுகிறது என்றால் அது உங்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முன்னறிவுப்பு ஆகும். வெள்ளை இரத்த அணுக்கள் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தால் தான் இந்த மாதிரி சிறுநீர் வெளிப்படும். 02. இரத்தம் கசிதல். சிறுநீர் கழிக்கும் போதும் சிவப்பு நிறமாகவோ அல்லது இரத்தம் கசிவது போலவோ இருந்தால் உங்கள் சிறுநீரகத்தில் கட்டிகள் இருக்கின்றன என்று அர்த்தம். உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. 03. நுரை போன்று வெளிபடுதல். சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிபடுதல், நீரிழிவு அல்லது சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். இது ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரகம் சரியாக புரதச்சத்திணை வடிகட்டாது செயல்படுவதுதான் என கூறப்படுகிறது. 04. பழுப்பு நிறத்தில். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதன் முன்னறிவிப்பு தான் சிறுநீர் பழுப்பு நிறமாக வெளிப்படுவது என்று கூறப்படுகிறது. மற்றும் பித்தச்செம்பசையின் (bilirubin) காரணமாக கூட ஒருவகையில் காரணமாக இருக்கலாம். இவ்வாறான நிற மாற்றங்கள் சிறுநீரில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவிரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். வாழை இலையின் பயன்கள் 1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். 6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். 7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும். நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே. வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளறி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும். சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம். ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது. 1. சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது? நான் படித்த ஒரு கட்டுரையில் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 75% குறையும் வரை பாதிக்கப்பட்டவர் எந்த தொந்தரவையும் உணர மாட்டார் என்று சொல்லப்பட்டிருந்தது அது உண்மையா? இது முழுக்க உண்மை. சிறுநீரகங்களைப் பொறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சிறுநீரகங்களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புக்கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள் 70-80மூ அவற்றின் வேலைத் திறனை இழக்கும் வரை நம் அடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. அதனால் ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து மிகவும் கடினமாக உள்ளது. 2. என்றாலும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை)அடையாளங்கள் என்னென்ன என்று தெரிந்தால் அதை வைத்து சிலரேனும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டத்தை அறிந்து பயன் பெற உதவக் கூடுமல்லவா? திடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற காரணங்கள்) நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் எதுவும் அறிகுறிகள் வரலாம். அவையாவன: கை, கால் முகம் வீக்கம், காரணம் தெரியாத தொடர் சோர்வு, அதிக களைப்பு, தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறுநீரில் இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி (முக்கியமாக இரவில்) சிறுநீர் கழித்தல். உண்மையில் சொல்லப் போனால் தங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ள நினைக்கும் யாரும் சில எளிய பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அவையாவன சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு. இவைகளில் ஏதேனும் கோளாறு என்றால் மட்டுமே மற்ற பரிசோதனைகள் தேவைப்படும். 3. அப்படியென்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்குமா? அப்படியல்ல. அது வரை சரியான அளவு அதாவது பகலில் 3-4 முறை இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரு முறை சிறுநீர் கழிப்பு என்று இருந்தவர்கள் திடீரென அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் அதற்கு முதல் காரணம் சிறுநீரக பையில் கிருமித் தாக்குதல்-சிறுநீரகப்பை அழற்சி (புண்) பெண்களுக்கு ஆண்களை விட இது இன்னும் அதிகம். இது எளிதில் குணபடுத்தக் கூடிய ஒரு சிறிய தொந்தரவு தான். ஆண்களுக்கு முக்கியமாக வயதானவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி (மூத்திரக்காய்) வீக்கம் சிறுநீர் அடைப்பு காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு வரலாம். எதையும் நீங்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் இதை தெளிவு செய்து கொள்ள வேண்டும். அதே போல அது வரை நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருந்த ஒருவர் காரணம் எதுவும் இல்லாமல் அடிக்கடி சோர்ந்து போவது, எளிதில் களைத்து விடுவது, கவனக் குறைவு, அதீத ஞாபக மறதி போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் அதற்கு சிறுநீரக செயலிழப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்து முன்பே சொன்னபடி சில எளிய பரிசோதனைகள் மூலம் அதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதே போல தோல் உலர்ந்து போதல், தோல் வெளுத்தல் அல்லது நிறம் மாறுதல், நமைச்சல், பசி இல்லாமல் இருப்பது, சிறுநீரகங்கள் உள்ள இருபுற விலாஎலும்புகளின் கீழ் வலி. கணுக்கால்களுக்கு கீழ் வீக்கம் (ஆரம்பத்தில்) போன்ற அறிகுறிகள் இருந்தாலும் சிறுநீரகங்களை பரிசோதித்தல் தவறில்லை. மேலும் சிறுவயதில் (35 வயதிற்கு கீழ்) உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிறுநீரகங்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் (எந்த வயதினரும்), அடிக்கடி சிறுநீரில் கிருமித் தாக்குதல் வருபவர்கள், சிறுநீரக கற்கள் வந்தவர்கள், குடும்பத்தில் வேறு யாருக்கேனும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் சிறுநீர்கங்களை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும் சரி செய்யவும் இயலும். 4. இந்த ஆரம்ப பரிசோதனைகளத் தவிர வேறு பரிசோதனைகளும் வேண்டி வருமா? மேற்குறிப்பிட்ட எளிய பரிசோதனைகளில் கோளாறு இருப்பதாக தெரிய வந்தால் அதை மேலும் உறுதி செய்த கொள்ளவும் சிறுநீரக பாதிப்பின் தன்மை. கடுமை, சில சமயங்களில் முன்னேறிய சிறுநீரக பாதிப்பினால் வேறு உறுப்புக்கள் (முக்கியமாக இதயம்) பாதிப்பு என்பதை அறிய பல்வேறு சோதனைகள் தேவைப்படலாம். (சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் பற்றி சிறுநீரகங்களுக்கான பரிசோதனைகள் என்ற கையேட்டில் விரிவாகக் காணலாம்) 5. சரி இந்த பரிசோதனைகளில் சிறுநீரக பாதிப்பூஃ- செயலிழப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இனி என்ன நடக்கும். வெறும் சிறுநீரக பாதிப்பு அல்லது ஆரம்ப சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு (சிறுநீரக ஸ்கான் செய்யும் போது அவை சுருங்காமல் இருக்கும்) அதிலும் சில வகை பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவர்களுக்கு (சிறுநீரக நுண்தமனி அழற்சி எனப்படும் பாதிப்பு) சிறுநீரக தசை துணுக்கு (கிட்னி டயாப்ஸி) என்ற ஒரு பரிசோதனை தேவைப்படலாம். இந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்து சில மருந்துகளை குறிப்பிட்ட காலம்வரை மருத்துவரின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்வதன் மூலம் சிலவகை சிறுநீரக வியாதிகளை முழுவதும் குணப்படுத்தவோ அல்லது நன்கு கட்டுப்படுத்தவோ முடியலாம். சிறுநீரக தாரையில் கிருமி தாக்குதல், சிறுநீரக பாதையில் கற்கள் உள்ளவர்கள் அதற்குரிய வைத்தியத்திற்கு பின்னரும் இவை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்வதால் இத்தொந்தரவுகள் மீண்டும் மீண்டும் வராமலும் அதனால் சிறுநீரகங்களின் செயல்திறன் பாதிக்கப்படாமலும் காப்பாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமும் சில பிரத்யேக மருந்துகளின் மூலமும் சிறுநீரக செயலிழப்பை பெருமளவு குணப்படுத்தல

உங்கள் பிறந்த திகதிக்கு ஏற்ற வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..!

ஜாதகத்தில் தனி பொருத்தம் மற்றும் பலன்கள் இருப்பதை போன்று ஒருவரின் பிறந்த திகதியை வைத்து பொது பலன்கள் மற்றும் வாழ்க்கை துணையை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். 1,10,19,28 ம் திகதியில் பிறந்தவர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் 3, 4, 5, 6, 8 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால் 1-ஆம் திகதியில் பிறந்தவர்களை திருமணம் செய்யக் கூடாது. ஏனெனில் அதனால் கௌரவப் பிரச்சனைகள், குடும்ப அன்யோன்யம் குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 2,11,20,29 திகதியில் பிறந்தவர்கள் இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 1, 3, 5, 6, 7 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் மிகவும் ஏற்றவர்கள். ஆனால் 8, 9-ஆம் திகதியில் பிறந்த பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. ஏனெனில் அதனால் அவர்களின் வாழ்க்கை நரகமாகிவிடும். 3,12,21,30 திகதியில் பிறந்தவர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் 2, 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும். 4,13,22,31 திகதியில் பிறந்தவர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் 1, 8, 5, 6 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்க்கை நல்லப்படியாக அமையும். அதுவும் 4-ம் திகதியில் பிறந்த ஆண்கள், 6-ஆம் திகதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையுமாம். உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. 5,14,23 திகதியில் பிறந்தவர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கக்கு 5, 9 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் மூலம் காதலால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். இவர்கள் 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 6,15,24 திகதியில் பிறந்தவர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் 6, 9 எண்களில் பிறந்த பெண்களை திருமணம் செய்துக் கொள்வதால் நல்ல வாழ்க்கை அமையும். ஆனால் இவர்கள் 1, 3, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. 7,16,25 திகதியில் பிறந்தவர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். ஆனால் இவர்கள் 8-ம் திகதி பிறந்தவர்களை மணந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அவர்களின் இல்வாழ்க்கை கசந்துவிடும். 8,17,26 திகதியில் பிறந்தவர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் 1, 4 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால் 2, 7, 8-ம் திகதியில் பிறந்த பெண்ணை மட்டும் திருமணம் செய்யக் கூடாது என்று கூறப்படுகிறது. 9,18,27 திகதியில் பிறந்தவர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால், இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். ஆனால், இவர்கள் 2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 ஆக வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது. ஏனெனில் அதனால் அவர்களின் வாழ்க்கை துயரமாக அமைய வாய்ப்புகள் உண்டு.

உங்கள் பிறந்த திகதி பலன்கள்

ஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று கூறி நாம் அறிந்திருப்போம். சில சமயங்களில் இராசியை வைத்து ஜோதிடம் பார்ப்பது போல பிறந்த திகதியை வைத்தும் பார்க்கும் வழக்கம் இருக்கிறது. சிலர் இயற்கையாகவே ஆளுமை திறன் கொண்டிருப்பார்கள், சிலர் உணர்ச்சிப்பூர்வமான நபராக இருப்பார், சிலர் எதை பற்றியும் துளியும் அக்கறையின்றி நான், என் வாழ்க்கை என்று இருப்பார்கள். அந்த வகையில் உங்கள் பிறந்த தேதியை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட நபர், உங்கள் குணாதிசயங்கள் என்னென்ன என்று இனிக் காணலாம்… 1 பெரிய குறிக்கோள்களை துரத்தி செல்லும் தலைமை பண்புள்ள நபர், சுயமாக, சுதந்திரமாக வேலை செய்ய விரும்பும் நபர், ஒரே மாதிரியான சுழற்சி வாழ்க்கை உங்களை விரைவாக அலுத்துப் போக வைத்துவிடும். எந்த வேலையையும் முதலில் தொடங்க முனையும் பழக்கம் இருக்கும், மற்றவர்களை ஊக்குவிக்கும் பண்பு இருக்கும். மற்றவர்களது கருத்தை ஏற்றுக்கொள்ளும் குணம் இருப்பினும், பிடிவாதமும் இருக்கும். எதையும் வேகமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கோபம் அதிகமாக வரும். 2 உணர்ச்சிப்பூர்வமாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் செயல்படும் நபர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று உற்று கருதும் நபர்கள், அமைதியான நிலை இருக்க வேண்டும் என்பதற்காக ஒத்துழைத்து போகும் பழக்கம் இருக்கும். தந்திரங்களும் செய்ய தெரிந்தவர்கள். அன்புக்குரிய நபர்களுடன் மிகவும் இணக்கமாக பழகுபவர்கள். குழந்தைத்தனம் அதிகமாக இருக்கும். எதுவாக இருப்பினும் உன்னித்து முழுமையாக அறியும் மனோபாவம் இருக்கும். 3 படைப்பு திறன் அதிகமாக இருக்கும். ஈரநெஞ்சம் கொண்டவர்கள், எழுதுவதில் திறன் அதிகமாக இருக்கும். தொழில் ரீதியாக இல்லை எனினும் மகிழ்ச்சி என்ற பெயரிலாவது உங்கள் படைப்பு திறனை பின்தொடர்ந்து செய்வீர்கள். கற்பனை திறன் அதிகம். அனைவரையும் உற்சாக படுத்துவீர்கள், உங்கள் மனநிலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். நேரத்தை வீணடிக்க விரும்ப மாட்டீர்கள். நிலைத்து நிற்கும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். 4 கடினமாக உழைப்பவர்கள், மனசாட்சிக்கு கட்டுப்படுபவர்கள், தங்களுக்கான சுயக் கட்டுபாடுகள் வரையறுத்து அதற்கு பொறுப்பேற்று வாழ்பவர்கள். குடும்பத்தின் மீது பாசமும் அக்கறையும் அதிகமாக இருக்கும். அதிகமாக உணர்ச்சிவசப்படமாட்டீர்கள். வாழ்க்கை, தொழில், உறவுகள் என அனைத்திற்கும் சரியான அளவு நேரத்தை ஒதுக்கி வாழ்பவர்கள். உடன் பணிபுரியும் நபருடன் நல்ல முறையில் வேலை செய்யும் குணாதிசயங்கள் இருக்கும். 5 சாகசங்கள், நீண்ட பயணங்கள் போன்றவற்றை அதிகம் விரும்பும் நபர்கள். எப்போதுமே ஓர் உற்சாகத்துடன் இருக்க வேண்டும் என எண்ணுவீர்கள். திறமைகள் நிறைய இருக்கும், எழுத்து, மக்களுடன் தொடர்புக் கொள்வது போன்றவற்றில் சிறந்து விளங்குவீர்கள். ஓர் இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது உங்களை பொறுத்தவரை மிகவும் கடினம். மிக விரைவாக ஓர் விஷயத்தின் மீது அலுப்பு ஏற்பட்டுவிடும். சுய ஒழுக்கும் சற்று குறைவாக இருக்கும். 6 குடும்பப்பாங்கான நபர், மக்களை திருப்திகரமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். சொந்த வாழ்க்கை மற்றும் வேலையை சமநிலையாக எடுத்து செல்வீர்கள். எந்த விதமான உணர்வாக இருந்தாலும் அதை சரியாக கையாளும் நபர், தன் எல்லை அறிந்து செயல்படும் நபர். உறவுகள் மீது அதிக கவனம் இருக்கும். மற்றவர்களுக்கு உதவும் குணாதிசயம், சுயநலம் இன்றி வாழ்பவர். 7 பெரிய மூளைக்காரர், எதையும் ஆராய்ந்து பார்க்க மனம் அலைபாயும். மனது சொல்வதை கேட்டு நடப்பவர், உணர்வு ரீதியாக யாரேனும் நெருங்க நினைத்தால் பெரிதாக நம்பமாட்டீர்கள், பொறுப்பற்ற முறையை நீங்கள் கைவிட வேண்டும், இல்லையேல் உங்களையே அது ஒருநாள் பாதிக்கும் 8 தொழில் ரீதியான திறமை அதிகம். தைரியமாக தொழில் இறங்க முனைவார்கள். கசப்பான அனுபங்கள், தோல்வி போன்றவற்றை எதிர்க்கொள்ள தயங்கமாட்டீர்கள். தலைமை வகிக்கும் தன்மை உங்களது பலம். தன்னம்பிக்கை, சுயமரியாதை, போன்றவை உங்களது நல்ல குணங்கள். எத்தனை தடைகள் வந்தாலும் நீங்கள் விடாமுயற்சியை கைவிடக் கூடாது. 9 தொலைநோக்குப் பார்வை, புதிய சிந்தனைகள், படிப்பாற்றல் போன்றவை உங்களது பலம். உங்களது சிறந்த வேலை எதுவென நீங்களாக தேர்வு செய்துக் கொள்வீர்கள். மற்றவர்களை ஈர்க்கும் தன்மை அதிகம். எதையும் பெரியளவில் செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். 10 பெரும் இலட்சியங்கள் இருக்கும், சுதந்திரம் எதிர்பார்ப்பீர்கள். வெற்றியை அடைய உங்கள் தலைமை குணம் உதவும். ஆளுமை திறன் உங்களிடம் சிறப்பாக இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்வதில் நீங்கள் கில்லாடி. 11 சிந்தனைகளும், உள்ளுணர்வும் உங்களிடம் சிறந்து இருக்கும் குணங்கள். மற்றவர்களுக்கும் நல்லது, தீயது பற்றி எடுத்துரைக்கும் குணநலம் உங்களிடம் இருக்கும். எளிதாக ஒருவரை விமர்சனம் செய்துவிடுவீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கமளிக்கும் நபராக திகழ்வீர்கள். 12 கேளிக்கை விரும்பும் நபர், அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் நபர், எழுத்தில் அதிக திறமை உள்ளவர், சூழ்நிலைகளை சிறந்த முறையில் கையாளும் நபரும் கூட. நட்பு ரீதியாக சிறந்து பழகும் நபராக நீங்கள் இருப்பீர்கள். 13 கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், சமூகம் மீது பற்று அதிகமாக இருக்கும். மிகவும் ஆழமாக அன்பு செலுத்துவீர்கள். இயற்கையை விரும்பும் நபர், ஓர் விஷயத்தில் கவனமாக செயல்படும் பண்பு உங்களிடம் இருக்கும். 14 ஒரு விஷயத்தின் மீதான விருப்பம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். விரைவாக அலுப்பு ஏற்படும், இடத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் இருக்கும். ஊரோடு சேர்ந்து வாழ்வது, பழகுவது போன்றவை உங்களுக்கு பிடித்தவை. எளிதாக சோர்வடைந்து விடுவீர்கள். வாழ்க்கையில் சில முடிவுகளை நீங்கள் ஆராய்ந்து எடுக்க வேண்டும். 15 என்ன வேலை செய்கிறீர்கள் என்பதை விட, அதை எப்படி செய்கிறீர்கள் என்பது உங்கள் சிறப்பு. கலை திறமைகள் அதிகம் இருக்கும். உறவுகளில் தீர்கமான முடிவுகளை எடுப்பீர்கள். சிறந்த துணையை தேடுவீர்கள். பெரும்பாலும் உங்கள் அன்பு, பாசம், காதல் எல்லாம் உங்கள் குடும்பத்தின் மீது தான் இருக்கும். 16 ஆன்மிகம் மற்றும் தத்துவ ரீதியான நம்பிக்கை உடையவர்கள். பார்க்காத உலகை புரிந்துக் கொள்ள, பயணிக்க விரும்புவார்கள். எதையும் செயல்முறையில் அறிந்துக் கொள்ள முயற்சிப்பார்கள், அதை மற்றவருடன் பகிர்ந்துக்கொள்ள முனைவார்கள். 17 பெரும் இலட்சியங்களை கொண்டிருப்பீர்கள், பொருளாதாரம் மற்றும் தொழில் சிறந்து விளங்குவீர்கள். படைப்பு திறன் மற்றும் தைரியம் அதிகம் இருக்கும். சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள், பெரிய திட்டங்களை எடுத்து வேலை செய்ய அதிகமாக ஈடுபடுவீர்கள். 18 பிறப்பிலேயே ஆளுமை திறன் கொண்டவர்கள் நீங்கள். அரசியல், மதம், கலை, போன்றவற்றில் உங்கள் திறமை மேலோங்கி இருக்கும். மக்களை புரிந்துக் கொள்வதில் நீங்கள் சிறந்தவர். 19 சுதந்திரமாக செயல்படும் திறன் கொண்டிருப்பீர்கள், வெற்றிபெற எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து முன்னேறி செல்லும் துணிவு இருக்கும். உங்கள் இதயத்தை முன்னோடியாக கொண்டு பயணம் செய்பவர் நீங்கள். 20 உணர்ச்சிப்பூர்வமான நபராக இருப்பினும், எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். விழிப்புணர்வு அதிகம் இருக்கும், உங்கள் உள்மனதின் எண்ணங்களை மறைத்து வைத்துக் கொள்வீர்கள், வெளிக்காட்ட மாட்டீர்கள். அழகு, காதல், நல்லிணக்கம் போன்றவற்றை பின்தொடர்ந்து நடக்கும் நபராக இருப்பீர்கள். 21 பளிச்சிடும் பேச்சு தான் உங்கள் வெற்றியின் இரகசியம். சுட்டித்தனம் உங்கள் காலடியிலேயே இருக்கும். எழுத்து மற்றும் பேச்சாற்றல் கொண்டவர். சவால்களை எதிர்கொள்ளும் நபர், சில சமயங்களில் உங்களது பதட்டம் உங்களது திறமையின் வெளிப்பாட்டை குறைத்து விடும். 22 ஒரு தொழிலை தொடங்கி அதை வளர்த்து செல்வதில் சிறந்து திகழ்வீர்கள், தலைமை பண்பு, திட்டமிடுதல் போன்றவை உங்களது பலம். அசாதாரண எண்ணங்கள் கொண்டிருப்பீர்கள். செயல்முறை மற்றும் சிந்தனைகள் குறித்த இரண்டு வகையான செயல்பாடுகளிலும் ஈடுபடுவீர்கள். மனிதநேயம் கொண்ட நபராக இருப்பீர்கள். 23 எதையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வாழ்க்கை சுவாரஸ்யமானது என்று எண்ணுபவர் நீங்கள், ஏமாற்ற பிடிக்காது, உறவுகளில் சீக்கிரம் ஒட்டிக்கொள்ளும் குணமுடையவர், கூர்மையான புத்திக் கொண்டவர், புரிதலும் அப்படி தான். 24 குடும்பம் சார்ந்து வாழ்பவர், உறவுகளுக்கு சமநிலை அளித்து திகழ்வீர்கள். உணர்ச்சி ரீதியாக காதலை ஆளுமை செய்வீர்கள். உணர்ச்சிப்பூர்வமாக உங்கள் பிரச்சனைகளை பெரிதாக்கிவிடுவீர்கள். சோகத்தில் இருக்கும் போது யாரேனும் தோள் கொடுக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும். 25 அறிவு சார்ந்து வாழ்க்கையை நடத்தும் நபர். அதே சமயம் உள்ளுணர்வுகளுக்கும் மதிப்பளிப்பீர்கள். எதையும் ஆழமாக ஆராய்ந்து செயல்படும் நபராக இருப்பீர்கள். உங்களது ஆராயும் குணம் தான் எதையும் எதிர்கொள்ள உங்களை தயார்ப்படுத்தும். 26 திறமையை வைத்து தொழில் ரீதியாக பணம் பார்க்கும் குணம் கொண்டவர். சிறந்த ஆளுமை குணம் கொண்டவர். தந்திரமாகவும், சாமார்த்தியமாகவும் காய்களை நகர்த்தும் நபர். தான் செய்யும் எந்த செயலுக்கும் ஓர் பரிசு அல்லது ஊக்கம் எதிர்பார்க்கும் நபர். 27 மற்றவரை எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். தொலைநோக்கு பார்வை கொண்டவர், பல துறை சார்ந்து ஆழ்ந்த ஞானம் கொண்டவர், மக்களை புரிந்துக் கொள்ள நீங்கள் கொஞ்சம் முதிர்ச்சி அடைய வேண்டும். அவசரப்படக் கூடாது. 28 தலைமை குணம் உங்களுக்கு கிடைத்த பரிசு. அனைவருடன் ஒத்துழைத்து வேலை செய்யும் குணம் இருக்கும். லட்சிய வெறி இருக்கும், எதையும் ஆராய்ந்து தான் செய்வீர்கள், சிறந்த முறையில் திட்டமிடுவீர்கள். எதையும் துணிந்து செய்ய ஆர்வம் காட்டுவீர்கள். 29 படைப்பாற்றலும், உள்ளுணர்வும் அதிகம். உங்கள் மனம் எதையும் காட்சிப்படுத்தி தான் செயல்படும். உடல்நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மக்களுக்கு நல்ல ஊக்கமளிக்கும் நபராக இருப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல், உங்களை பலர் பாராட்டுவார்கள். 30 கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் எழுச்சியூட்டும், அழகான மற்றும் கவர்ந்திழுக்கும் நபராக இருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரியும் நபர்களோடு எளிதாக ஒட்டி உறவாட ஆரம்பித்துவிடுவீர்கள். 31 குடும்பத்தின் மீது பாசத்தை பொழியும் நபராக இருப்பீர்கள், ஒரு வேலையை ஒப்புக்கொண்டுவிட்டால் அதை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். இயற்கையை விரும்பும் நபர், நீங்கள் கடினமாக, நீண்ட நேரம் உழைக்கும் திறன் கொண்டவர். உங்கள் மீது நீங்கள் முதலில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உயிரை கொல்லும்.. நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்

மாசடைந்த சுற்றுச்சூழல், வெளி இடங்களில் டீசல் புகையை சுவாசிப்பது என்பது போன்ற பல காரணங்களினால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. குறிப்பாக புகைப்பிடிப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சரிசெய்தால் முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம். நுரையீரலில் பிரச்சனை உள்ளது என்பதை இந்த அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ளலாம். தொடர்ச்சியாக தொண்டை வலியோ அல்லது உணவை விழுங்கும் போது வலி ஏற்படலாம், இதுதவிர உடல்வலி தொடர்ச்சியாக இருந்தாலும் நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும் எலும்புகளில் புற்றுநோய் செல்கள் பரவுவதால் இது ஏற்படுகிறது, முதுகு, தோள்பட்டை, கைகள் மற்றும் கழுத்துகளில் அதிக வலி ஏற்படும், சிலருக்கு நுரையீரலை சுற்றி கூர்மையான வலி ஏற்படும். மூச்சை உள்ளிழுக்கும் போதும், மூச்சை வெளியேற்றும் போதும் விசில் அடிப்பது போன்ற சத்தம் வரும், மூச்சுத்திணறல் காரணமாக கூட இவ்வாறு வரலாம். இருமல் ஒரு வாரத்திற்கும் மேல் இருந்து, அதிக குளிரை உடைய குளிர்காலத்தில் ஏற்பட்டால் அது சில நேரங்களில் நுரையீரல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாக அமைகிறது. தொடர்ந்து ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளும் நுரையீரல் புற்றுநோய்க்கு காரணமாகிறது, புகைப்பிடிப்பவராக இருந்தால் சோர்வு, மன அழுத்தம், முழங்கால் வலி ஏற்படும். நுரையீரல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறி குரல் வளம் பாதிப்படைவது, பொதுவாக நுரையீரல் கேன்சரால் நமது உடல் மற்றும் நரம்புகள் பாதிக்கும் போது ஏற்படுகிறது. நாம் ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறி தான் உடல் எடை குறைவது, புற்றுநோய்க்கும் மிக முக்கியமான அறிகுறியும் இதுதான், புற்றுநோய் செல்கள் உடலில் உள்ள ஆற்றலை கட்டுப்படுத்துவதுடன் சத்துக்களை வெளியேற்றுவதால் எடை குறைகிறது.

Friday, September 28, 2018

இரவு தூங்கும்முன் வெங்காயச் சாற்றை 2 நிமிடம் பாதங்களில் தேயுங்கள்!

வெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளதால், இது பல்வேறு பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது. அத்தகைய வெங்காயத்தின் சாற்றை தினமும் இரவு தூங்கும் முன் பாதங்களில் தேய்த்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்து வர வேண்டும். நன்மைகள் 1.வெங்காய சாற்றில் உள்ள ஃபாரிக் ஆசிட், நம்முடைய பாதம் மற்றும் உள்ளங்கைகளின் வழியே ஊடுருவி மூளைக்குச் சென்று, மூளையின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. 2.வெங்காயத்தில் உள்ள ஃபாரிக் ஆசிட் பாதம் வழியே உறிஞ்சப்பட்டு, உடலின் தலை முதல் கால் வரை ரத்தோட்டத்தை சீராக்க உதவுகிறது. 3.குடல், சிறுநீர்ப்பை, சிறுநீரகக் கற்கள், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை தடுத்து, உடலில் உள்ள கொழுப்பை குறைத்து, பாதத்தில் உள்ள திசுக்களை ஈரப்பதத்துடன், சொரசொரப்பின்றி வைக்க உதவுகிறது. 4.கால்களில் வியர்வை அதிகரிப்பதால், ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க வெங்காயச் சாற்றை பாதங்களில் தேய்ப்பது மிகவும் நல்லது.

நோய்களை தீர்க்கும் சின்ன வெங்காயம்

தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலன் கிடைக்கும். சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். ஜலதோஷம், நெஞ்சு படபடப்பு ஆகியவற்றுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால்… ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும் உடல் சமநிலைக்கு வந்துடும்.  இதய நோயாளிகளுக்கு இப்படியான பிரச்சினைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இதை செய்யலாம். பொடியாக நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.  மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும். வெங்காயத்தில் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும். நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.  வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.  வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.  பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை  சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் இரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.  வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும். தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும். வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும். வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.  மாரடைப்பு நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம்  சாப்பிடுவது நல்லது. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும். வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும். வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும். 

கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள். பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது. கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும். இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும். கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.

வீட்டு உபயோபப் பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி அறிவோம்!!

வெந்தயம்: உடலின் வெப்பநிலையை சமன்செய்யும். கண் எரிச்சலைப் போக்கி குளிர்ச்சியை அளிக்கும். சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலியைச் சமாளிக்க நீர் மோருடன் சிறிதளவு வெந்தயத்தைக் கலந்து குடிக்கலாம் கறிவேப்பிலை: சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வருவது நல்லது. இரும்புசத்துக் குறைப்பாடு, பார்வைக் குறைபாடு, முடி உதிர்தல் ஆகியவற்றை தீர்க்கும். கொத்தமல்லி: செரிமானத்தை அதிகரிக்கும். கல்லீரலைச் சுத்தப்படுத்தும். இஞ்சி: பித்தக்குறைபாடு, சளி மற்றும் காய்ச்சலுக்கு உகந்தது. வயிற்று உபாதைகளைத் தீர்க்கும். பூண்டு: கெட்ட கொழுப்பைக் குறைக்கும். வாயுத் தொல்லைகள் உருவாகாமல் தடுக்கும். அன்றாடம் அளவுடன் சாப்பிட்டு வர புற்றுநோய்கள் வராமல் தடுக்கும். மிளகு: மிகச்சிறந்த மருத்துவ தன்மை கொண்டது. விஷத்தை முறிக்கும். தேனுடன் மிளகுப் பொடியைச் சேர்த்து சாப்பிட்டால், சளித் தொல்லையில் இருந்து விடுபடலாம். சோம்பு: வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கும். வாந்தியை நிறுத்தும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். மணமூட்டியாகச் செயல்படுவதுடன் செரிமான சக்தியையும் மேம்படுத்தும். சீரகம்: உள் உறுப்புகளைச் சீர்செய்வதால் சீரகம் என்று பெயர் பெற்றது. வயிற்றுப் புண் மற்றும் தலைசுற்றலைச் சரிசெய்யும். இரத்த அழுத்தத்தைச் சீராக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கும். மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்குமின், இதய நோய்கள் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு நல்லது. சிலவகைப் புற்றுநோய்களைத் தீர்க்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு

Thursday, September 27, 2018

அடிவயிற்று கொழுப்பை விரைவாக குறைக்க சித்தர்கள் கூறும் ஆயுர்வேத ரகசியம்!

உணவு பிரியர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றனர். இன்று நாம் ஃபாஸ்ட் பூட்ஸ் உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறோம். இதன் விளைவு உடல் பருமன் கூடி பெரிய தொப்பை அதிகரித்து விடுகின்றது. பிறகு இதனை குறைக்க பாடாய் படுகின்றோம். அடி வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்க எளிமையான சித்தர்களின் ஆயுர்வேத முறைகளை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள். உணவும் தொப்பையும்… உண்ணும் உணவில் அதிக அளவில் கொழுப்புகள் இருந்தால் அது நம் உடலில் சேர்ந்து கொள்ளும். சிறிது சிறிதாக சேர தொடங்கி பின்னாளில், வயிறு உப்பி “தொப்பை” என்ற ஒன்றை பெற்று தரும். இது ஆண்கள் பெண்கள் என தனி தனி தாக்கத்தை ஏற்படுத்தாது. இருவருக்கும் பொதுவான பாதிப்பையே தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சித்தர்களின் முறை… பண்டைய காலத்தில் மக்கள் நோய் நொடியின்றி இருந்ததற்கு சில முக்கிய காரணிகள் இருக்கிறது. சீரான உணவு பழக்கம், உடற்பயிற்சி, சித்த வைத்திய முறைகள், ஆசனங்கள் போன்றவை அவர்களுக்கு பெரிதும் உதவியது. இது சித்தர்களால் பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வந்ததாம். எலுமிச்சை ஆரோக்கியமான உடல் நிலையை தருவதில் எலுமிச்சைக்கு பெரிய பங்கு உள்ளது. தினமும் காலையில் உங்கள் நன்னாளை இந்த எலுமிச்சை சாறுடன் தொடங்குங்கள். மிதமான சுடு நீரில் சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து, 2 சிட்டிகை உப்பையும் சேர்த்து குடித்து வந்தால் அடி வயிற்றில் உள்ள கொழுப்புகள் விரைவில் குறைந்து விடும். வெந்தயம் உடல் கச்சிதமாக வைத்து கொள்ள இந்த வெந்தயம் சிறந்த முறையில் உதவுகிறது. Galactomanan என்ற முக்கிய கொழுப்பை கரைக்க கூடிய மூல பொருள் இதில் உள்ளது. தினமும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வறுத்து, பொடி செய்து நீரில் கலந்து குடித்து வந்தால் கொழுப்புகள் உடனடியாக கரைந்து நல்ல பலனை தரும். இஞ்சி நம் வீட்டிலே உள்ள பொருட்களில் முதன்மையான மூலிகையாக இந்த இஞ்சி கருதப்படுகிறது. இதில் உள்ள Gingerols என்ற மூல பொருள் ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தி, உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கி விடும். எனவே, தினமும் இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். அல்லது டீ போன்று குடித்து வாருங்கள். பூண்டு வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைக்க பூண்டு பெரிதும் பயன்படுகிறது. தினமும் 2 பல் பூண்டை காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவிலே குறையும். மேலும், ரத்த ஓட்டம் சீரடைந்து உடல் ஆரோக்கியம் நலம் பெறும்.

Wednesday, September 26, 2018

இறையன்பை வளர்ப்பதற்கான பாதை

இறையன்பை வளர்ப்பதற்கான பாதை ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே இறைவனின் இத்திருநாமங்களை உச்சரிப்பதன் மூலமாக எல்லா தரப்பட்ட பிரச்சனைகளிலிருந்தும் ஒருவர் விடுபட முடியும். உலகிலுள்ள எல்லோருக்கும் பொதுவான இந்த வழிமுறையை அனைவருக்கும் எடுத்துரைப்பதற்காக, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) ஏற்படுத்தப்பட்டது. சர்வசக்தி கொண்ட இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் இந்த நாமத்தை உச்சரிப்பவர்கள், இறையன்பை வளர்ப்பதற்கான பாதையில் விரைவாக முன்னேற்றம் அடைவர்.

Tuesday, September 25, 2018

Dolphins hires Van இல் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள் படித்து விட்டு Share பண்ணுங்கள்

Dolphins hires Van இல் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள் படித்து விட்டு Share பண்ணுங்கள் நீங்கள்? உங்களுடைய பயணத்தின் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள் 1. அடிக்கடி இந்த வானில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் சாரதி மட்டும் அல்ல, நீங்கள் எடுக்கும் சில அவசர தீர்மானங்களும் தான். அத்துடன் உங்கள் தீர்மானங்ககளை எடுக்கும் போது இதனால் வரும் பின் விளைவுகளை கொஞ்சமும் நீங்கள் சிந்திப்பதில்லை. 2. வாகனத்தை hire பண்ணும் போது வாகன சாரதி யார் என்று பாருங்கள் அத்துடன் இரவு நேர பயணம் என்றால் ஏற்கனவே அவர் இந்த ரூட் இல் இரவில் ஓடிய அனுபவம் உள்ளவரா ? அத்துடன் தொடர்ச்சியாக ஓடுபவரா என்று பாருங்கள். ஏனெனில் அனுபவம் உள்ளவர் தான் நித்திரை இல்லாமல் ஓடமுடியும். இதுதான் மிகமுக்கியமான ஒன்று. வான் condition ஐ விட driver condition ஐ பார்க்க வேண்டும் 3. வாகனத்தை hire பண்ணுவார்கள் நீங்கள் அதனால் வாகன சாரதியை உங்கள் கட்டுப்பாடிற்குள் வைத்திருக்க வேண்டும். Driver சொல்லுவற்கெல்லாம் தலை ஆட்ட கூடாது. உதாரணமாக அவர் அடிக்கடி phone கதைப்பவராக இருந்தால் நாம் அதை கட்டுப்படுத்த அறிவுறுத்த வேண்டும் 4. Maximum speed என்ற ஒன்று உண்டு எனவே அதை தாண்டி போகிறாரா என்று பார்க்க வேண்டும். 5. கூடுதலாக எந்த வான் சாரதியும் இரவு நேரத்தில் தான் பயணிக்க ஆசைப்படுவான் ஏனெனில் அவனுக்கு driving செய்வது மிகவும் இலகு. ஆனால் இங்கே தான் ஆபத்து இருக்கு, road இல் வாகன நெரிசல் இரவு நேரங்களில் மிகவும் குறைவு இதனால் இந்த சூழ்நிலை driver ஐ நித்திரை கொள்ள வழி வகுக்கும். 6. பயணிக்கும் நேரம்.??? பொதுவாக கடுமையாக நித்திரை தூங்கும் நேரம் அதிகாலை 2 மணி தொடக்கம் 5 மணி வரை எனவே எமது பயணத்தை மாலை ஒரு 5 மணி அளவில் தொடங்கினால் நாம் யாழ்ப்பாணத்தை அல்லது கொழும்பை அதிகாலை 2 மணியளவில் அல்லது அதற்க்கு முன்னர் அடையலாம். அல்லது அதிகாலை 3 அல்லது 4 மணியளவில் தொடங்கினால்பகல் 12 மணிக்கு முதல் எமது இடத்தை அடையலாம். அடிக்கடி தேநீர் அருந்த அல்லது wash room போக என வாகனத்தை நிறுத்தி செல்லுங்கள். இதனால் விபத்துக்கள் குறைய வாய்ப்புண்டு. அத்துடன் திடீர் திடீர் என முளைக்கும் புதிய van உரிமையாளர்களும் van சாரதிகளும். வெளிநாட்டில் இருந்து காசு வருமானால் எல்லாரும் யோசிக்கும் இலகு தொழில் இந்த வான் ஓட்டம். இதைவிட இது இப்பொழுத வெளிநாட்டுகாரனின் investment ஆக்கிவிட்டுது. எனவே கொஞ்சம் சிந்தித்து பயண முடிவுகளை எடுங்கள். 🙏🙏🙏

Monday, September 24, 2018

சனி பகவான் துன்பத்தை எப்போது யாருக்கு கொடுப்பார்?

சனி பகவான் யார் எல்லாம் மற்றவர்களுக்கு துன்பங்கள் செய்கிறார்களே அவர்களை தண்டிக்காமல் விடுவதில்லை. 1. நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை. 2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்பதில்லை. 3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார். 4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை. 5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார். 6. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று. 7. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை. 8. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை. 9. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை. 10. உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனிக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார். 11. ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார். 12. முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி மிகவும் பிடிக்கும். எப்படியும் சனி பிடித்துக் கொள்வார். 13. குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும். 14. விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவும் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார். 15. சுத்தம் இல்லாத இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள். ஆனால் சனிக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும். 16. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனிக்கு பிடிக்கும். 17. மாற்றான் மனையாளை நினைக்கும் சண்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனிக்கு நிகர் சனியே. 18. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார். 19. தாய்க்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார்.

நாகதோஷம் உள்ளதா என்பதை அறிந்து கொள்வது எப்படி? கட்டாயம் பகிருங்கள்!

ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களை பாம்புகள் என்று சொல்கிறார்கள். ராகு, கேது ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சர்ப்ப தோஷம் பலவித வியாதிகளை உண்டாக்கும், குழுந்தை பாக்கியம் கிடைக்காது. ராகுத் தலமாக நாகேஸ்வரம் உள்ளது. கேது தலங்களாக ஸ்ரீ காளகஸ்தி, பெரும் பள்ளம் ஆகியவை உள்ளன. இரண்டு கிரகங்களையும் வழிபடும் தலம் திருப்பேரை. தினமும் ஒன்றரை மணி நேரம் ராகு காலமாகும். இந்த நேரத்தில் நல்ல காரியங்களை மக்கள் செய்வது இல்லை. பாம்பின் தலையை ராகு என்றும் உடலைக் கேது என்றும் குறிப்பிடுகிறார்கள். ராகுவின் வரலாறும் கேதுவின் வரலாறும் கிட்டத்தட்ட ஒரே வித தன்மையை உடையன. ஸ்ரீராகு ஸம்ஹதா தேவியின் மகனாவார். தேவரும், அசுரரும் பார்கடலில் அமிர்தம் வேண்டி மந்தர மலையை மத்தாக்கி வாசுகியைக் கயிறாக்கிக் கடைந்தனர். பார் கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. கடைசியாகத் தன்வந்திரி பாற்கடலில் இருந்து எழுந்தார். அவரது கரங்களில் அமிர்த கலசம் இருந்தது. அதை அசுரர்கள் பிடுங்கிக் கொண்டனர். இந்தச் சமயத்தில் மகாவிஷ்ணு மோகினி வடிவத்தில் வந்தார். அவரைக் கண்ட அசுரர்கள் மயங்கி, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அமிர்தத்தைப் பங்கிட்டுத் தருமாறு வேண்டினர். மோகினி தேவர்களுக்கு அமிர்ததத்தைப் பங்கிட்டுக் கொடுத்து கொண்டு வந்தாள். அப்போது ராகுவும் கேதுவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் தேவர்களின் உருவம் கொண்டு அமர்ந்து அமிர்தத்தை உண்ண ஆரம்பித்தனர். அவர்கள் சாப்பிட்ட விதத்தைப் பார்த்த சூரியன், சந்திரன் ஆகியோர் அவர்கள் அசுரர்கள் என்பதை உணர்ந்தனர். இதையடுத்து மோகினி கரண்டியினால் ராகுவின் தலையை வெட்டினாள். உடனே ராகுவின் தலை ஆகாயம் சென்றது. தலையற்ற முண்டம் தரையில் வீழ்ந்தது. இதனால் அசுரர்கள் கொதித்தெழுந்தனர். தேவர்- அசுரர் போராட்டம் மிகவும் பயங்கரமாக எழுந்தது. அதில் ராகுவின் தலை சிவசிரஸில் இருக்கும் சந்திரனைக் கவ்வியது. அப்போது சந்திரனின் தலையில் உள்ள அமிர்தத்தை ராகுவின் தலை பருகியதால் ராகுவிற்குப் பல தலைகள் உண்டாயிற்று. ராகுவின் பல தலைகளைக் கண்டு தேவர்கள் பயந்தனர். சிவபெருமான் ராகுவின் தலைகளை மாலையாக்கிக் கழுத்தில் அணிந்து கொண்டார். ராகுவின் தலைகள் அமைதி அடைந்தன. தேவர்களின் பயம் நீங்கியது. ஈசனருளால் ராகு கிரகமாய் இருக்கும் தன்மையைப் பெற்றான். ராகுவை உபாசிக்க ராகுவினால் உண்டாகும் பீடைகள் போகும். ராகுவைப்போலவே கேதுவும் அமிர்தம் பட்ட காரணத்தால் உயிர் பெற்று பல வால்களைப் பெற்றான். சிவனது அருளால் கிரகமாகும் பேற்றைப் பெற்றான். கேதுவைத் திருப்திப்படுத்த மொச்சைப் பயிரைத் தானமாக அளிக்கலாம். இவரை உபாசிப்பவன் கீழான ஆசனத்தில் அமரக் கூடாது. கருகிப் போன ஆகாரங்களை உண்ணக் கூடாது. இவரை உபாசிப்பதால் அந்தஸ்து உயரும். இவர் உதித்தது, ஆடி மாதம் சுக்கில பட்சம் ஆகும். ருத்திரனுடைய நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமையாகும். இந்த விசேஷ நாட்களில் இவரை வழிபடுவது சிறப்புடையதாகும். வானில் இருக்கும் ராகுவும், கேதுவும் பின்னோக்கி நகர்வதாக அறிவியலார் கூறுகின்றனர். ஆகையால் இவ்விரு கிரகங்களையும் சாயாகிரகங்கள் என்று அழைப்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளன என்பதைப் பொறுத்து முடிவு செய்யலாம்.

உங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா? அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா!

காகம் எந்த உணவையும் தனக்கென்று சேர்க்காமல், பிற காகங்களுக்கும் கொடுத்து பகிர்ந்து உண்ணும் சிறப்பியல்பை கொண்ட பறவையாகும்.நமது அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவையாக உள்ள காகத்தை இறந்த நம் முன்னோரின் அம்சமாக கருதப்படுகிறது.அந்த வகையில் நம் வாழ்வில் காகத்தினால் ஏற்படும் ஒருசில சகுனங்களை பற்றி காண்போம். பயணத்தின் போது ஏற்படும் காகத்தின் சகுனம் என்ன? ஒருவரின் பயணத்தின் போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போனால் அது தன நஷ்டத்தையும் உண்டாக்குமாம்.வெளியில் பயணிக்கும் ஒருவரை நோக்கிக் காகம் கரைந்து கொண்டே பறந்து வந்தால், அந்த பயணத்தைத் தவிர்த்து விட வேண்டுமாம்.ஒருவர் பயணிக்கும் போது ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவூட்டும் காட்சி தென்பட்டால், அவர்களின் பயணம் இனிதாகுமாம்.வெளியில் செல்லும் போது, ஆண் மற்றும் பெண் காகங்கள் ஒன்றாக இருந்து கரைந்து கொண்டிருந்தால், அவர்களின் வீட்டில் பெண்களின் சேர்க்கை ஏற்படுமாம். ஒருவருடைய பயணத்தின் போது, அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவருடைய உடல் மற்றும் நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால், அகால மரணம் அவருக்கு நேரிடலாம்.ஒருவரின் வாகனம், குடை, காலணி ஆகியவற்றின் மீது காகம் எச்சம் விட்டால், அவர்களின் பயணத்தின் போது, உணவுக்குப் பஞ்சம் இருக்காதாம்.ஒருவர் யாத்திரைக்கு புறப்படும் போது, காகம் எந்தப் பொருளைத் தன் அலகால் கொண்டு வருகிறதோ, அந்தப் பொருளின் வகையிலான லாபம் பயணத்தில் கிட்டும்.ஒரு பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின்மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால், தன லாபம் மற்றும் பெண்களால் பல நன்மை கிடைக்குமாம். காகத்தின் செயலும் அதன் திசையின் சகுனம் என்ன? ஒருவருடைய வீட்டின் தென்கிழக்கு திசையை நோக்கிக் காகம் கரைந்தால், தங்கம் சேரும். வீட்டின் தெற்கு திசையை நோக்கி, கரைந்தால், உளுந்து, கொள்ளு போன்ற தானிய லாபம் கிடைக்கும்.தென்மேற்கு திசையை நோக்கி கரைந்தால், குதிரை, தயிர், எண்ணெய், உணவு போன்ற உணவுகள் சேரும்.மேற்கு திசையை நோக்கி காகம் கரைந்தால், மாமிச உணவு, மது வகைகள், நெல் முதலான தானியங் கள், முத்து, பவளம் போன்று கடலில் விளையும் பொருட்கள், உலர்ந்த பழ வகைகள் கிடைக்கும்.வடக்கு திசையை நோக்கி காகம் கரைந்தால் ஆடைகள், நல்ல உணவு மற்றும் வாகனங்கள் ஆகியன கிடைக்கும்.

எப்போதுமே செல்வம் கொளிக்க செழிப்புடன் இருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்!

ஜோதிடத்தின் ஒன்பதாவது ராசி தனுசு, இந்த ராசியின் அதிபதி குரு பகவான். தமிழ் மாதங்களில் மார்கழி மாதத் துவக்கம் இந்த ராசியில் தான் தொடங்கும். ஆண் தன்மை நிறைந்த தனுசு ராசி, பஞ்சபூத தத்துவங்களில் நெருப்பு ராசி என கூறப்படுகிறது. அதிகாரம் அடக்குமுறை எண்ணங்கள் இந்த ராசிக்காரர்களிடம் அதிகம் நிறைந்திருக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படும் இவர்களிடம், செல்வம் ஏதாவது ஒருவகையில் கையில் இருந்து கொண்டே இருக்குமாம். உறவினர்களை அனுசரித்து செல்வதுடன், தந்தை மற்றும் குடும்பத்தினர் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பார்கள். கம்பீரமும், கனிவும் கலந்த குரல் வளம் உடையவர்கள், பூஜைகளின் மீது அதீத நம்பிக்கை உண்டு. பலருக்கும் முன் உதாரணமாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பவர்கள், இதனால் அரசியல் தொடர்பு மற்றும் கௌரவமான பதவிகள் கிடைக்கும்.

இனிமேல் செவ்வாய் கிழமைகளில் நகமோ அல்லது முடியோ வெட்டதீங்க ஏன் தெரியுமா!

நம் முன்னோர்கள் எந்த ஒரு காரணம் இல்லாமலும் எதையும் பின்பற்றமாட்டார்கள். அந்த வகையில் செவ்வாய் கிழமைகளில் முடி அல்லது நகம் வெட்ட கூடாது என்பதற்கும் காரணம் உள்ளது. மேலும் செவ்வாய் கிழமைகளில் ஆண்கள் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்யவோ கூடாது என்று வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? துர்கை மற்றும் லட்சுமி தினம் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய உகந்த நாளாக கருதப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் சில பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. செலவு செய்ய கூடாது செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய் கிழமை. மேலும் இந்நாளில் நம்மிடம் உள்ள லட்சுமியை மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை உள்ளது. வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள் ஒரு சில வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறைதான் வீட்டை சுத்தம் செய்வார்கள். இதற்கு காரணம் வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம். செவ்வாய் கிழமைகளில் நகமோ அல்லது முடியோ வெட்டினால் என்ன நடக்கும்? செவ்வாய் கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி அன்று முடியோ அல்லது நகமோ வெட்டினால் துரதுர்ஷ்டம் வந்து விடும் என்று கூறுவார்கள். இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வரும் என்றும் கூறப்படுகின்றன. ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்வடும்.

Sunday, September 23, 2018

அனுமனை வழிபடும் போது இப்படி வழிபடுங்கள் ..! குபேரனுக்கு இணையாக வாழ்வார்களாம்..!

துளசி மாலையும் வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விஷேசமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ஸ்ரீ ராமஜெயம் அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜய ஜய ராம என்ற மந்திரத்தை 54 அல்லது 108 முறை தியானிக்க வேண்டும். அதன் பிறகு தமது பிரார்த்தனையைச் சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டின் அர்ச்சனை செய்ய வேண்டும்.கவசம் மற்றும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் வேண்டும்.மார்கழி மாதத்தில் மூல நட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை (இதுதான் ஆஞ்சநேயர் அவதரித்த திருநாள்). நட்சத்திரமும் அமாவாசையும் சேர்ந்து வராவிட்டால் அமாவாசையில் பூஜையை தொடங்குவது மிகவும் சிறப்பாகும். சித்திரையில் ஸ்ரீ ராமநவமி தினத்தில் தொடங்கலாம். மாதம் தோறும் கேட்டை நட்சத்திரத்தில், இவை எதுவும் இல்லாவிட்டால் புதன், வியாழன், சனிக்கிழமைகளில் பூஜையைத் தொடங்கலாம். அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல வியாதிகளும் விலகும். மோட்சம் பெறலாம்.

Friday, September 21, 2018

சிறுநீரக செயலிழப்புக்கு இவை மட்டும்தான் காரணம்! முடிந்தளவு தவிர்த்து விடுங்கள்?

நமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் விரைவில் பழுவடைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, இதில் பெரும்பாலும் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்களே பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சர்க்கரை நோய் ஆகும். கைக்குத்தல் அரிசியை விடுத்து, தீட்டப்பட்ட அரிசியையே நாம் உணவாக உண்கிறோம். இந்த அரிசியானது, சர்க்கரையை கட்டுப்படுத்தும் பல்வேறு சத்துக்களும் நீக்கப்பட்டது ஆகும். இதனாலேயே உடலில் சர்க்கரை அளவு உயருகிறது. எனவே, கைக்குத்தல் அரிசியையும், சிறுதானியங்களையும் உண்டால் சர்க்கரை பாதிப்பு குறைந்து, அதன் மூலம் ஏற்படும் சிறுநீரக பாதிப்பும் கட்டுப்படுத்தப்படும். சிறுநீரகப் பிரச்சனைக்கு இன்னொரு முக்கிய காரணம் உப்பு. பொதுவாக கடலில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் உப்பில் மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்திருக்கும். இவை உடலுக்கு மிகவும் தேவையான சத்துக்கள் ஆகும். ஆனால், வெண்மை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, polish செய்யப்படும் உப்பில் இருப்பது வெறும் சோடியம் குளோரைடு மட்டுமே. இதனால் உடலுக்கு எந்தவித சத்துக்கள் கிடைக்காது. மேலும், சிறுநீரகம் பழுதடையும். எனவே, தீட்டப்படாத பழுப்பு நிறத்திலான கல் உப்பை பயன்படுத்த வேண்டும். முந்தைய காலத்தில் மக்கள் கரும்புச்சர்க்கரையை பயன்படுத்தி வந்தனர். இது உடலுக்கு நன்மை தரும். ஆனால், இன்று சர்க்கரையில் உள்ள சத்துக்களை நீக்கிவிட்டு சீனியாக விற்கப்படுகிறது. இது சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்த வேண்டும். தற்போது சந்தையில் கிடைப்பவை தாவர எண்ணெய் வகைகள் ஆகும். இவற்றாலும் சிறுநீரகத்திற்கு பாதிப்பு உண்டாகும். எனவே, நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால் சிறுநீரகத்துடன், இதயமும் வலுபெறும்.

Thursday, September 20, 2018

Tsu என்று ஒரு தளம் இருப்பது உங்கள் யாருக்காவது தெரியுமா?

Tsu என்று ஒரு தளம் இருப்பது உங்கள் யாருக்காவது தெரியுமா? இதுவும் facebook போல ஒரு சமூக வலையமைப்புதான் ஆனால் facebook ற்கும் இதற்குமிடையிலான வித்தியாசம் என்ன தெரியுமா ? நம் ஒவ்வொருவரையும் பயன்படுத்தி facebook விளம்பரதாரர்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தை சம்பாதிக்கிறார்கள் ஆனால் அதன் முதுகெலும்பான உங்களுக்கு எந்த விதமான இலாபமும் கிடைப்பதில்லை. இந்த இடத்தில் தான் வேறுபடுகிறது Tsu இவர்கள் உங்களைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளும் இலாபத்தில் 90% ஐ உங்களுக்கே தந்துவிடுகிறார்கள். அத்துடன் இங்கும் facebook ல் நீங்கள் செய்யும் அத்தனை விடயங்களும் இருக்கின்றன. மொத்தத்தில் Tsu என்பது ஒரு பணம் காய்க்கும் மரம் என்றே சொல்லிக்கொள்ளலாம். இணைந்துகொள்வது எப்படி? Tsu வில் நீங்களாக இணைந்துகொள்ள முடியாது உங்களுடைய நண்பர்கள் யாராவது ஏற்கனவே இந்த வலையமில் இணைந்திருந்தால் அவர்களுடைய அழைப்பில் தான் நீங்கள் இணைந்துகொள்ள முடியும். மேலும் கீழுள்ள இணைப்பின் மூலம் இலகுவாகவும் இணைந்துகொள்ளலாம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக இணைந்துகொள்ளுங்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க காலப்போக்கில் இணைய முடியாது போகலாம் . பணம் சம்பாதிப்பது எப்படி? மிகவும் இலகு இங்கு பணம் சம்பாதிப்பதற்கு நீங்கள் விசேடமாக எந்த வேலையையும் செய்யவேண்டியதில்லை. பேஸ்புக்கில் வழமையாக என்ன செய்கிறீர்களோ அதையே இங்கே செய்தால் சரி அதாவது நாம் பேஸ்புக்கில் பதிவுகளை(Status) இடுவது படங்கள் போடுவது Like செய்வது, Share செய்வது போன்றவற்றைத்தான். உங்களுடைய பதிவுகளை உங்கள் நண்பர்கள் பார்க்கும்போது, பகிரும்போது இப்படி எது செய்தாலும் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் நண்பர்களுக்கும் பணம் கிடைக்கும். தரமான விடயங்களை பகிருங்கள். உண்மையில் அங்கே நடப்பது என்ன? பேஸ்புக்கில் காட்டப்படுவது போல உங்கள் பதிவுகளை பார்வையிடுபவர்களுக்கு கூடவே விளம்பரங்களும் காட்சிப்படுத்தப் படும் இப்படி காட்டப்படும் விளம்பரங்களுக்காக Tsu விளம்பரதாரர்களிடமிருந்து பெறும் பணத்தில், இலாபத்தில் 10% மட்டும் தாங்கள் எடுத்துக்கொண்டு மிகுதி 90% ஐ அந்த இலாபத்திற்குக் காரணமான உங்களுக்கே தந்துவிடுகிறார்கள் (Facebook எம்மை பயன்படுத்தி பெறும் 100% இலாபத்தையும் தாமே எடுத்துக்கொள்கிறார்கள் ) Tsu விற்கும் மற்றய வலையமைப்புகளுக்குமிடையேயுள்ள வித்தியாசத்தை விளக்கும் மற்றுமொரு உதாரணம். உங்கள் பணத்தை பெற்றுக்கொள்வது எப்படி? நீங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானம் $600 (600 US Dollar) களுக்கு அதிகமாக இருந்தால் வரி (Tax) சம்பந்தமான விடயங்களுக்காக அதற்குரிய ஆவணங்களை அவர்களுக்கு அளிக்கவேண்டும் மற்றும்படி உங்கள் வருமானம் $600 USD க்கு குறைவெனில் சாதாரணமாக காசோலையாகவே பெற்றுக்கொள்ளலாம். மாதிரி காசோலை. ஒரு உறுப்பினரின்(உங்களைப்போல) இடைமுகப்பு. பேஸ்புக்கில் இத்தனைநாளாய் இணைந்திருந்து பெற்றது ஒன்றுமில்லை ஆயினும் பேஸ்புக்கை விட்டு இங்கு மாறுவது சற்றுக் கடினமாக இருக்கிறதா? கவலையை விடுங்கள் அந்தக் குறையை தீர்ப்பதற்கும் Tsu ஒரு வழியை உங்களுக்குத் தந்திருக்கிறது. ஆம் அதாவது நீங்கள் உங்களுடைய Facebook, Twitter, LinkedIn போன்ற தளங்களிலுள்ள கணக்குகளையும் Tsu வுடன் இணத்துவிட்டால் போதும் பின்பு Tsu வில் என்ன பதிவை இட்டாலும் அது உடனே உங்களுடைய மேற்கூறிய தளங்களிலுள்ள நண்பர்களுடனும் வழக்கம்போல பகிரப்படும். இனி என்ன கவலை...? இணைந்துபாருங்கள் உங்களுக்கே புரியும். நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் அவர்களையும் உங்களது அழைப்பின்மூலம் Tsu வில் இணைத்துக்கொள்ளுங்கள். அதிக அதிகமாக நண்பர்களை சேர்த்து அதிக இலாபத்தை பெற்றிடுங்கள். இறுதியாக கீழே உள்ள தகவல்களையும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.

தினமும் 5 நிமிடம் இதை முகத்தில் தடவினால், பருக்கள், தழும்புகள் மாயமாய் மறையும்!

தினமும் 5 நிமிடம் இதை முகத்தில் தடவினால், பருக்கள், தழும்புகள் மாயமாய் மறையும்! இக்காலத்தில் அகத்தோற்றம் மட்டுமின்றி, புறத்தோற்றமும் முக்கியம். ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் அழகை மேம்படுத்த சருமத்திற்கு பல பராமரிப்புக்களை கொடுக்கின்றனர். ஆனால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, அது கெமிக்கல் கலந்த பொருட்களாக இருந்தால், சருமத்தில் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கத் தான் செய்யும். ஆகவே இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால் தான், முகப்பரு, கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவற்றை போக்க முடியும். இங்கு ஓர் அற்புதமான மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தினமும் சருமத்திற்கு பயன்படுத்தினால், நிச்சயம் உங்கள் சரும பிரச்சனைகள் மாயமாய் மறைந்து, அழகு கூடும். தேவையான பொருட்கள்: பேக்கிங் சோடா – சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீஸ்பூன் தேன் – சிறிது எலுமிச்சை – 1/2 தயாரிக்கும் முறை: ஒரு டம்ளரில் பாதி நீரை நிரப்பி, அதில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மற்றொரு பௌலில் பேக்கிங் சோடா போட்டு, அத்துடன் கலந்து வைத்துள்ள வினிகர் நீர் சிறிது மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, அதோடு எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பயன்படுத்தும் முறை 1 முதலில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும். பயன்படுத்தும் முறை 2 பின்பு தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். நன்மைகள்: இந்த மாஸ்க்கை போடுவதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, முகப்பருக்கள் மற்றும் கருமையான தழும்புகள் நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் இருக்கும்.

Wednesday, September 19, 2018

2018க்கு குருபெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு எப்படி?

ராசி பலன்கள்:குருபகவான் இப்போது வக்ரகதியில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வக்ர நிவர்த்தி அடைகிறார். துலாம் ராசியில் உள்ள குருபகவான் புரட்டாசி மாதம் 25ஆம் தேதியன்று அக்டோபர் 11ஆம் தேதியன்று விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம். குருப்பெயர்ச்சிக்கு இன்னும் 2மாதங்கள் இருக்கும் போதே பலன்கள் எழுத இப்போதே என்ன அவசரம் என்று யோசிக்க வேண்டாம் தீபாவளிக்கு போக இப்போதே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போல குரு பெயர்ச்சி பலன்களையும் படித்து முன்னதாகவே பரிகார தலங்களுக்கு செல்ல திட்டமிடுங்கள். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களே அதிக பலனடையும். குரு பகவான் தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும், செல்வ வளத்திற்கும் பொருள் சேமிப்பிற்கும் காரணகர்த்தா. குரு பகவான் மாபெரும் சாதனைகளைச் செய்ய வைத்து மனிதனை மாணிக்கமாக திகழ வைப்பார். நாட்டை ஆளவைப்பார், நல்லோருடன் சேர வைப்பார். புது புது உத்திகளைக் காண வைப்பார் ஆன்மீக சுகத்திற்கு காரகராகவும் திகழ்கிறார். இந்த குரு பெயர்ச்சி ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனை தருகிறது. இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும் தற்சமயம் நடைபெறும் தசா-புக்திக்கு தக்கவாறும் உள்ள பலன்களே நடைபெறும். மேஷம் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் துடிப்பாகவும் மிகுந்த வீரத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் எதிலும் முதலிடத்தை பிடிப்பது ஒன்றே உங்களின் தலையாய நோக்கமாகும். வீரமும் தைரியமும் கோபமும் ஆக்ரோஷமும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளவர்கள் நீங்கள். வீர தீரம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் அக்டோபர் மாதம் முதல் 8 ஆம் இடத்திற்கு செல்கிறார். அஷ்டமத்தில் குரு அவ்வளவாக நல்லதில்லை. ஆனாலும் குரு பகவான் பார்வை ராசிக்கு 12 ஆம் இடம் 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடங்களின் மீது விழுவதால் பல நன்மைகள் நடக்கும். தனவரவு இருக்கும், சுக சந்தோஷங்கள் அதிகரிக்கும். சுப விரையங்கள் அதிகம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது பேச நேரம் ஒதுக்குங்கள் சண்டைகளை தவிர்க்கலாம்.சாப்பாட்டு விசயத்தில் கவனமாக இருந்தால் வயிறு கோளாறுகளையும், நோய்களையும் தவிர்க்கலாம். வியாழக்கிழமை குருபகவானுக்கு அர்ச்சனை செய்யலாம். ரிஷபம் சுக்கிரன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மிகவும் மென்மையானவர்களாகவும் மற்றவர்களை அனுசரித்து நடக்க கூடியவர்களாகவும், வசீகரப் பேச்சினால் பிறரை கவரக் கூடியவர்களாகவும் இருப்பிர்கள். நினைத்த காரியத்தை செம்மையாக முடிக்கும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் இருக்கும் குருபகவான் ராசிக்கு 7வது வீட்டில் அமர்வது சிறப்பான அம்சம். கல்யாண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும் மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். இது காதல் மலரக் கூடிய ஒரு காலம் ஆகும். காதல் உறவுகள் வலுப்படும். அதுவே திருமணத்தில் முடியக் கூடிய நல்ல நேரம் ஆகும். பொருளாதார உயர்வு இருக்கும், தீராத பிணிகளும் தீரும். நம்பிக்கையிழந்து வாழ்க்கையை ஓட்டியவர்களுக்கு எல்லாம் இனி எல்லாமும் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை இந்த குரு பெயர்ச்சி கொடுக்கும். மிதுனம் புதன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாகவும்,சகிப்பு தன்மையும்,பொறுமையும் உடையவர்களாகவும் எல்லா காரியங்களையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தான அதிபதியான குரு ராசிக்கு 6வது வீட்டில் அமர இருக்கிறார். 6 ஆம் இடம் சுப ஸ்தானம் இல்லை. குரு பகவான் 10,12 ஆம் இடம் மற்றும் 2 ஆம் இட தன ஸ்தானத்தை பார்வையிடுகிறார். பணம் அதிகமாக வந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். திருமண வாய்ப்புகள் தாமதப்படும். தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபட நன்மைகள் அதிகம் நடக்கும். கடகம் சந்திரனின் ஆதிக்கம் பெற்றவர்கள் நீங்கள் உங்கள் ராசிநாதன் சந்திரன் பதினைந்து நாட்கள் வளர்பிறையாகவும், பதினைந்து நாட்கள் தேய்பிறையாகவும் உலவி வருவார். குருபகவான் இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் உள்ள குருபகவான் அக்டோபர் மாதம் முதல் 5வது வீட்டிற்கு செல்கிறார். குருபகவான் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு 9ஆம் இடம், 11வது இடத்தையும் பார்வையிடுகிறார் குருபகவான். காதல் கனியும் காலம், திருமண வாய்ப்புகளும் கைகூடி வரும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து குருபகவானை வழிபடலாம். சிம்மம் சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே… உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் இருந்த குருபகவான் அக்டோபர் மாதம் முதல் ராசிக்கு 4வது வீட்டில் அமரப்போகிறார். குருபகவான் ராசிக்கு 8ஆம் இடம், 10ஆமிடம், 12வது இடத்தையும் பார்வையிடுகிறார். வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். காதல், திருமண விசயங்களில் அவசரப்பட வேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். கடன் வாங்கவோ,கொடுக்கவோ வேண்டாம். தென்திட்டையில் எழுந்தருளும் குருபகவானை வணங்க நல்லதே நடக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாமல் ஆலோசனை செய்து முடிவு செய்யவும். கன்னி புதன் பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட புத்திசாலித்தனம் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருபகவான், முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் அமர உள்ளதால் சிறு சிறு பயணங்கள் ஏற்படும். வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருந்த குரு 3வது இடத்திற்கு செல்வதால் வார்த்தைகளில் கவனம் தேவை. குரு பகவான் ராசிக்கு 7வது வீடு, 9வது வீடு 11வது இடத்தை பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சியினால் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும், கடன் தொகை வசூலாகும். துலாம் அன்பும், காதல் உணர்வும் கொண்ட துலாம் ராசி நேயர்களே… இது நாள் வரை உங்கள் ராசியில் இருந்த குரு பகவான் அக்டோபர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்திற்கு செல்கிறார். குரு பகவான் ராசிக்கு 6வது இடம் 8வது இடம், 10வது இடத்தை பார்வையிடுகிறார். குரு பெயர்ச்சியினால் வீட்டில் அமைதி நிலவும், உல்லாச பயணம் செல்லக்கூடிய நேரம், சிலருக்கு பணி செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும், பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாழக்கிழமையன்று ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கலாம். விருச்சிகம் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே. இதுநாள் வரை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருந்த குருபகவான், அக்டோபர் மாதம் முதல் ராசிக்குள் வந்து அமர்கிறார். உங்கள் ராசிக்கு 5வது வீட்டிலும், 7வது வீட்டிலும், 9வது வீட்டிலும் குருவின் பார்வை விழுகிறது. பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். குரு பகவானை வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வரலாம். குரு 5ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5மிடத்தை பார்ப்பபதால் திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். உங்கள் குழந்தைகளின் மேல் படிப்பிற்காக செலவுகள் அதிகரிக்கும். தாய் வழியில் தன வரவு வரும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். குரு 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7மிடத்தை பார்ப்பதால் வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் நல்ல உறவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தனுசு அறிவாற்றலும், திறமையும் கொண்ட தனுசு ராசிக்காரர்களே இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் இருந்த குரு பகவான், ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். சுப விரைய செலவுகள் ஏற்படும். குரு பகவான் 4 ஆம் இடம் 6 ஆம் இடம் மற்றும் 8 ஆம் இடத்தை பார்க்கிறார். பண வரவுக்கு பஞ்சமில்லை அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். காதல் விவகாரங்கள் கை கூடுவதில்லை கொஞ்சம் ஒத்திப்போடவும். அவ்வப்போது உடல் களைப்பு ஏற்படும் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடவும். உங்கள் ராசிக்கு 4 ம் வீடு பூமி வீடு,வாகனம் சுகம் கல்வி,தாய் ஆகிய ஸ்தானங்களை குரு பார்ப்பதால் அதன் அடிப்படையில் யோகங்கள் வரும்.சகல காரியங்கள் சித்தி பெறும். உங்கள் ராசிக்கு 6ம் பாவத்தை குரு பார்ப்பாதல் கடன் சுமை குறையும்.நோய் நொடி நீங்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும். உங்கள் ராசிக்கு 8ம் பாவத்தை குரு பார்ப்பதல் வழக்கு வெற்றிகள் சாதகமாகும். பயம் நீங்கும். எதிர்பாராத வகையில் பண வரவு வரும். காலங்கள் மாறும் காட்சிகள் மாறும். குருபகவானை சரணடைய நல்லதே நடக்கும். மகரம் உங்கள் ராசிக்கு 10ம் பாவத்தில் சஞ்சாரம் செய்த குரு பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானமான சிம்மத்தில் சஞ்சரிக்க உள்ளார். 11ம் பாவம் என்பது மூத்த சகோதரர்கள், வித்தை, லாபம், நட்பு, மன ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். உங்கள் ராசிக்கு 11ம் பாவத்தில் குரு வரும் பொழுது முழுமையான யோகத்தைச் செய்யும் என்பது பழமையான ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் ராசிக்கு 3ம் பாவத்தை குரு 5ம் பார்வையாக பார்ப்பாதல் வீரம்,போகம் துணிவு துணைவர் பலம், ஆயுள்பலம், எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். உங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். திட்டங்கள், ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். லாப ஸ்தானத்தில் உள்ள குருபகவானால் பதவி உயர்வு கிடைக்கும் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகம் அதிகரிக்கும். கும்பம் ராசிக்கு 9ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 10 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 2 ஆம் இடம் 4 ஆம் இடம் மற்றும் 6 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். பத்தாமிடத்து குரு ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டது என்பது பாடல். கடந்த காலத்தில் குரு 9ல் நல்ல இடத்திலிருந்து நன்மைகளை அடைந்தவர்கள் பத்தில் குரு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலையையும் உருவாகும். குரு பகவான் 5ம் பார்வையாக 2மிடமான வாக்கு வித்தை குடும்ப ஸ்தானத்தை பார்க்க போவதால் சொன்ன சொல்லை காப்பாற்றலாம். குடும்பத்தில் சந்தோஷங்களைப் பார்க்கலாம். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். பத்தில் உள்ள குரு பதவியை ஒன்றும் நாசம் செய்ய மாட்டார் கவலை பட வேண்டாம். நன்மையே நடக்கும். மீனம் இது வரை உங்கள் ராசிக்கு 8ல் இருந்த குரு இப்பொழுது ராசிக்கு 9ம் இடத்திற்கு மாற இருக்கிறார். உங்கள் ராசி நாதனான குருவே உங்கள் ராசியை பார்க்கிறார். அது மிகவும் நல்லது. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, ஓடிப் போனவனுக்கு ஓன்பதில் குரு என்பார்கள். உங்கள் ராசி நாதன் குரு 5ம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்க போவதால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். குரு 7ம் பார்வையாக. ராசிக்கு 3 ம் இடத்தை பார்க்க போவதால் தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு. பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு பெயர்ச்சிக்கு பரிகாரமாக ஆலங்குடி சென்று குருவுக்கு பிரீதி செய்வதும், திருச்செந்தூர் சென்று கடலில் குளித்து முருகப் பெருமானை வழிபாடு செய்து வர நல்ல பலன்கள் கிடைக்கும்.

புரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் மகத்துவம் தெரியுமா?

சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையில் விரதமிருந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து வணங்கினால் சனி தோஷம் நீங்கும். புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டின் சிறப்பு புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு. திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். விரதம் இருப்பதால் உண்டாகும் நன்மைகள் திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். புரட்டாசி சனிக்கிழமையில் திருமாலை வணங்கி வந்தால் நன்மை சுற்றி உள்ள திமைகள் முற்றிலும் அகலும்.

இந்த இலையில் டீ போட்டு குடித்தால் அதிசயம் நிகழுமாம்!

அனைவரும் பிரியாணி சாப்பிடும் போது அவற்றின் இலைகளை நாம் ஒதுக்கி வைக்கிறோம். ஆனால் அத்தகைய பிரியாணி இலையில் புரதம் – 7.61 g வைட்டமின் எ – 206% வைட்டமின் சி – 77.5% பொட்டாசியம் – 529 mg சோடியம் – 23 mg ஜின்க் – 33% இரும்புசத்து – 537% போன்ற நிறைய ஊட்டசத்துக்கள் உள்ளது. மேலும் பிரியாணி இலையை உணவில் மட்டும் சேர்த்து கொள்ளாமல், அவற்றை முக மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். என்றும் இளமையுடன் இருக்க பிரியாணி இலைகள் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலின் செயல்பாட்டை சீராக வைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் இவை முக சருமத்தில் உள்ள செல்களை மறு உற்பத்தி செய்து முகத்தை இளமையாக வைக்க உதவுகின்றன. முடி உதிர்வை தடுக்க இன்றைய கால மாற்றங்களினாலும் பல்வேறு வாழ்வியல் சூழலாலும் முடியின் ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தினமும் பிரியாணி இலை டீயைப் பருகி வந்தால் முடி உதிர்வு தொல்லையை முற்றிலும் நிறுத்த உதவி செய்யும். பொடுகு பிரச்சினையைப் சரிசெய்ய பொடுகு பிரச்சினையைப் குணப்படுத்த பிரியாணி இலையை நீருடன் கொதிக்க வைத்து, வடிகட்டி கொள்ளவும். பின் அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம். சரும எரிச்சலைப் போக்க 5 காய்ந்த பிரியாணி இலைகளை எடுத்து 2 கப் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். பின்பு இந்த நீரில் எரிச்சல் கொண்ட சருமத்தை கழுவினால் சரும எரிச்சல்கள் நீங்கும். பாம்பு கடியை குணமாக்க பிரியாணி இலைக்கு இயற்கையாகவே பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது. இதன் இலை ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கள் தன்மை கொண்டது. எனவே தோலில் ஏதேனும் கிருமிகள் இருந்தாலும் அழித்து விடும். பேன் தொல்லையைப் போக்க பிரியாணி இலைகளை நீரில் கொதிக்க விட்டு, வடிகட்டி பின் அதனை தலைக்கு அலச பயன்படுத்தினால் தலையில் உள்ள பேன் தொல்லை விரைவிலேயே நீங்கும்.

வாழைப்பழம்

முக்கனிகளில் ஒன்று வாழை. உலகின் விலைகுறைவான அதேசமயம் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளில் ஒன்று வாழைப்பழம். பலரும் விரும்பி சாப்பிடும் வாழைப்பழம் நமக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது. வருடம் முழுவதும் கிடைக்கும் வாழைப்பழத்தை எப்போது வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பல காலமாக அனைவருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் வாழைபழத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியமானதா என்பதுதான்? நம்மில் பலருக்கும் இரவு சாப்பிட்டவுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். ஆனால் சிலர் இதனை ஆரோக்கிய கேடு என்கிறார்கள். ஆயுர்வேதம் என்ன கூறுகிறது? ஆயுர்வேதம் என்ன கூறுகிறது என்றால் இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது ஆபத்தானது அல்ல. ஆனால் இதனால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடும்போது உங்களுக்கு சளி மற்றும் இருமல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதேபோல இது செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன் உங்களை சோம்பலாகவும் உணரச்செய்யும். ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும்போது சளி, இருமல் மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்ற அனைவரும் வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது அவர்களுக்கு அதிக பயனை அளிக்கும். சர்க்கரை அளவு மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது வாழைப்பழத்தில் மிகக்குறைந்த அளவே சர்க்கரை உள்ளது. இரவு உணவு என்பது அன்றைய நாளின் முடிவுக்கு மட்டுமின்றி அடுத்த நாளின் சுறுசுறுப்பான தொடக்கத்திற்கும் அவசியமானது. எனவே இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது உடலில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. எனவே அடுத்தநாள் காலை சுறுசுறுப்பாகவே தொடங்குவீர்கள். எடையை அதிகரிக்காது ஒரு வாழைப்பழத்தில் 105 கலோரிகளே உள்ளது. ஒருவேளை நீங்கள் 500 கலோரிகளுக்கு குறைவாக உள்ள இரவு உணவை சாப்பிட விரும்பினால் இரண்டு வாழைப்பழங்களும் ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலும் அதற்கு மிகசிறந்த தேர்வாக இருக்கும். பசியை கட்டுப்படுத்துகிறது ஒருவேளை இரவு நேரங்களில் உங்களுக்கு பசித்தால் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை விட ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் மற்ற நொறுக்குதீனிகளில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கும். இவை உங்கள் இரவு நேர உறக்கத்தை கெடுக்கக்கூடிய ஒன்றாகும். இனிப்பான இந்த வாழைப்பழம் உங்கள் பசியை விரட்டக்கூடிய ஒன்று, அதேசமயம் வைட்டமின்களும், நார்சத்துக்களும் நிறைந்த ஒரு பழமாகும். யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? மொத்தத்தில் இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது என்பது ஆரோக்கியமானதுதான். ஆனால் அது அனைவருக்கும் அல்ல. ஏனெனில் வாழைப்பழத்தில் லேடக்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு அலர்ஜிகளை ஏற்படுத்தக்கூடும். அதேசமயம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

கடன் பிரச்சனை தீர வீட்டில் இந்த இரண்டு பொருள் மட்டும் இருந்தால் போதும்!

பொதுவாக ஒரு நல்ல நாள் பார்த்து கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கமாட்டோம் என்பது நம்பிக்கையாகும். அதற்காக சில பரிகாரங்கள் உள்ளது அது என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். கடன் பிரச்சனை தீர சில பரிகாரங்கள் ஒவ்வொரு வெள்ளியும் காலையில் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகைகடைக்கு சென்று மஹாலட்சுமியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வரவும். பின்பு அந்த உப்பை ஒரு பாத்திரத்தில் போடவும். இவ்வாறு ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலட்சுமி  வரவிற்கு குறைவே இருக்காது. வெள்ளிக்கிழமை காலை 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லட்சுமி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய்நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும். வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்சனை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம். எவ்வளவு பணம் வந்தும் சேமிக்க முடியவில்லை என கவலையில் உள்ளோர்  தங்களின் உடைகள் வைக்கும் பீரோ மற்றும் பணம் வைக்கும் இடங்களில் கரு நீல துணியை விரிப்பாக உபயோகித்து வர பண விரயம் நிற்கும். பண பிரச்சனைகளால் மிகுந்த அவதிக்கு ஆளானோர், ஒரு வெள்ளியன்று யாரும் பார்க்காத நேரத்தில் வேப்ப மரம் ஒன்றில் சிறிய துளையிட்டு அதில் சிறிய சதுர வடிவ  வெள்ளியை வைத்து பின்பு மூடி விடவும். முன்னேற்றம் பின்பு கண் கூடாக தெரியும். காமாட்சி அம்மனை, ஒரு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டு புடவை சாற்றி வழிபடுவோர்க்கு, நிச்சயம் கடன் சுமையில்.இருந்து மீட்டு, மன நிறைவான வாழ்க்கை உருவாகும்.

இந்த ஒரு பொருள் போதும் ஆஸ்துமா பிரச்சனைக்கு உடனடி தீர்வு!

சிவனுக்கு உகந்த மரம் வில்வ மரம். தெய்வீக மரமாக கருதப்படும் வில்வ மரம், எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டு இருந்தால் அதை மகாவில்வம் என்பார்கள். நமது முன்னோர்கள் ஆன்மிகம் என்ற பெயரில் மருத்துவத்தையும், அறிவியலையும் பிணைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டனர். காலப்போக்கில் அது மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. காலம் மருவிய பின்பு மனிதனின் இடை சொருகல்களில் பல அறிவியல் சார்ந்த விஷயங்களும், மருத்துவம் சார்ந்த விஷயங்களும் கண்மூடித்தனமான காரியங்களாக மாறிவிட்டது. இந்த வகையில் இப்போது வில்வத்தை சிவனுக்கு அணிவிக்கும் மாலையாகவும், பூஜைக்கு வைக்கப்படும் பொருளாகவும் மட்டுமே பெரும்பாலானோர் எண்ணுகின்றனர் அதில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. மகரந்தத் தூள்கள் கொண்டது வில்வம் என கூறப்படுகிறது. வில்வமர நிழல், காற்று இவற்றிலும் கூட மருத்துவ சக்தி இருக்கிறது… வில்வ மரத்தின் இலை, காய், கனி, வேர், மரப்பட்டை, பூ அனைத்தும் பல்வேறு வகையில் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது. மணமூட்டி துவர்ப்பி, குளிர்ச்சியுண்டாக்கி, மலமிளக்கி, பசி ஊக்கி போன்ற குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மருத்துவ பயன்கள் வில்வ இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு குவளை நீரில் ஒரு கரண்டி சாறைக் கலந்து குடிக்க காய்ச்சல், சளி தீரும். வில்வ இலைகளை நீரிலிட்டுக் காய்த்து வடிகட்டி நீரை நாள்தோறும் காலையில் ஒரு அவுன்ஸ் வீதம் குடித்து வர ஆஸ்துமா, மலச்சிக்கல் குணமாகும். வில்வக்காயை உடைத்துச் சதையை அரைத்து எருமைத் தயிரில் கலந்து அருந்த வயிற்றுக் கடுப்பு, கழிச்சல் தீரும். வில்வக்காயின் சதையை பசும்பால் விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்துவர கண் எரிச்சல், தலைச்சூடு மாறும். வில்வப்பழத்தை நீரில் குழைத்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குணமாகும். இதன் வேரை நீரிலிட்டுகாய்த்து கசாயமாக்கி அருந்த வயிற்றிலுள்ள அமீபியா கிருமிகள் அழியும். வில்வ வேர்க் கசாயம் காய்ச்சலை குணப்படுத்தும். இதன் இலைத்தளிர்களை சட்டியிலிட்டு வதக்கி இளஞ்சூட்டில் கண்களின் மேல் ஒத்தடம் கொடுக்க கண்வலி, கண்சிவப்பு தீரும். வில்வப் பழச்சதையை உலர வைத்து பொடியாக்கி சிறிதளவு பொடியுடன் சர்க்கரை சேர்த்து உண்ண சீதபேதி, பசியின்மை தீரும். பழத்தை பிசைந்து பாலில் கலந்து கற்கண்டு சேர்த்து காய்ச்சி சாப்பிட பித்தம், குமட்டல், நெஞ்சு எரிச்சல் குணமாகும். வில்வ வேர்ப்பட்டையை அரைத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட தாது பலப்படும். பழச்சதையை நீரில் கலந்து சர்க்கரையை சேர்த்து அருந்தி வர மற்ற பழச்சாறு போலவே சுவையாக இருக்கும். வில்வப்பழச்சாறு குடலை பலப்படுத்தும், மலச்சிக்கலை மாற்றும். மூச்சு நோய்களைக் குறைக்கும். வில்வப்பழச்சாறு உடலை பலப்படுத்தும், கண் நோய்களைக் குணப்படுத்தும்.

இவைகளை ஏன் வீட்டில் வைத்திருக்கக்கூடாது எனத் தெரியுமா?

இதை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு வீட்டில் எந்த மாதிரியான தெய்வ சிலைகள் அல்லது படங்களை வைத்திருக்கக்கூடாது என்று தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒவ்வொருவரது வீட்டிலும் தெய்வ சிலைகளும், படங்களும் இருக்கும். ஆனால் வீட்டில் தெய்வ சிலைகள் மற்றும் படங்களை வைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில வகையான சிலைகள் அல்லது படங்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்று கூறுவார்கள். உங்களுக்கு வீட்டில் எந்த மாதிரியான தெய்வ சிலைகள் அல்லது படங்களை வைத்திருக்கக்கூடாது என்று தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். தொடர்ந்து படியுங்கள். ருத்ர வடிவம் வீட்டில் ருத்ர தாண்டவம் ஆடுவது போன்ற தெய்வ சிலைகள் அல்லது படங்களை வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், வீட்டில் அச்ச உணர்வு அதிகரிப்பதோடு, எதிர்மறை ஆற்றல்களும் வீட்டைச் சூழ்ந்திருக்கும். கிழிந்த நாள்காட்டி வீட்டு சுவற்றில் கிழிந்து இருக்கும் தெய்வ படங்கள் கொண்ட நாள்காட்டியை வைத்திருந்தாலும், அது வீட்டில் வறுமையை அதிகரிக்குமாம். ஆக்கிரோஷமான தெய்வ படங்கள் எதிரியை அழிப்பது போன்று ஆக்கிரோஷமாக இருக்கும் தெய்வ படங்களை வீட்டில் வைத்து பூஜிக்கக்கூடாது. இதுவும் ஒரு வகையான ருத்ர நிலை தான். இம்மாதிரியான படங்களை வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் நெருக்கடி அதிகரிக்கும். ஒரே மாதிரியான கடவுள் பூஜை அறையில் ஒரே மாதிரியான தெய்வ சிலைகள் அல்லது படங்களை வைத்து பூஜிக்கக்கூடாது. குறிப்பாக அவைகளை அருகருகிலோ அல்லது எதிரெதிரிலோ வைக்கவே கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இவ்வாறு செய்தால், வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும்.

யோனி பொருத்தம் என்பது என்ன?

திருமணத்தில் முக்கியமாக பத்து பொருத்தங்கள் பார்ப்பார்கள். இதில் ஒரு சில பொருத்தங்கள் மிகவும் அவசியம். அதில் ஒன்று தான் யோனி பொருத்தம். இது தான் கணவன்- மனைவி வாழ்வில் தாம்பத்திய உறவு சிறக்குமா? இல்லையா? என்பதை கூறும் பொருத்தம் ஆகும் நட்சத்திர வாரியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு வகையிலான விலங்குகளை பொருத்தப்பட்டு கூறுகிறார்கள். யோனி நட்சத்திரம் எப்படி பார்ப்பது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்கின் யோனி இருக்கிறது என்று கூறுகின்றனர். இதில் எந்த இரண்டு நட்சத்திரத்தை குறிக்கும் விலங்குகளின் யோனி சேரும், சேராது என வகை பிரித்து பட்டியலே இருக்கிறது. யோனி பகை நட்சத்திரங்கள் குரங்கு – ஆடு : பூராடம், திருவோணம் – பூசம், கிருத்திகை சிங்கம் – யானை : அவிட்டம், பூரட்டாதி – பரணி, ரேவதி குதிரை – எருமை : அஸ்வினி, சதயம்- சுவாதி, அஸ்தம் பசு -புலி : உத்திரம், உத்திராடம், விசாகம்- சித்திரை, உத்திரட்டாதி எலி – பூனை : மகம், பூரம் – ஆயில்யம், புனர்பூசம் பாம்பு – எலி : ரோகிணி, மிருகசீரிஷம்- மகம், பூரம் கீரி- பாம்பு : உத்திராடம்- ரோகினி, மிருகசீரிஷம் மான் – நாய் : கேட்டை, அனுஷம்- மூலம், திருவாதிரை நட்சத்திரங்களும் யோனி வகைகளும் அஸ்வினி – தேவ ஆண் குதிரை பரணி – மானுஷ ஆண் யானை கிருத்திகை – ராஷஸ பெண் ஆடு ரோகிணி – மானுஷ ஆண் நாகம் மிருகசீரிஷம் – தேவம் பெண் சாரை திருவாதிரை – மானுஷ ஆண் நாய் புனர்பூசம் – தேவம் பெண் பூனை பூசம் – தேவம் ஆண் ஆடு ஆயில்யம் – ராஷஸ ஆண் பூனை மகம் – ராஷஸ ஆண் எலி பூரம் – மானுஷ பெண் எலி உத்திரம் – மானுஷ பெண் எருது அஸ்தம் – தேவம் பெண் எருமை விசாகம் – ராஷஸ ஆண் புலி அனுஷம் – தேவம் பெண் மான் கேட்டை – ராஷஸ ஆண் மான் மூலம் – ராஷஸ பெண் நாய் பூராடம் – மானுஷ ஆண் குரங்கு உத்திராடம் – மானுஷ பெண் மலட்டு பசு திருவோணம் – தேவம் பெண் குரங்கு அவிட்டம் – ராஷஸ பெண் சிங்கம் சதயம் – ராஷஸ பெண் குதிரை பூரட்டாதி – மானுஷ ஆண் சிங்கம் உத்திரட்டாதி – மானுஷ பெண் பசு ரேவதி – தேவம் பெண் யானை

ஒல்லியான முடியை அடர்த்தியாக மாற்ற‌ வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க!

இன்றைய காலத்தில் தலைமுடியின் உதிர்வால் நிறைய பேருக்கு எலி வால் போன்று தலைமுடி உள்ளது. இப்படி அடர்த்தி இழந்து இருக்கும் முடியை அடர்த்தியாக்குவதற்கு பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் பல முயற்சிகளை எடுத்திருப்பார்கள். குறிப்பாக பல எண்ணெய்களை வாங்கி தலைக்கு பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் நம் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது, மன அழுத்தம், மோசமான டயட் போன்றவை. இவைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், தானாக முடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் மாஸ்க்கை தலைக்கு போட்டு வந்தால், தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும். விளக்கெண்ணெய் விளக்கெண்ணெயில் ரிசினோலியிக் அமிலம் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் மயிர்கால்களை வலிமைப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுக்கும். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன் முட்டை மஞ்சள் கரு – 1 தயாரிக்கும் முறை: ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து அடித்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்தும் முறை: பின் அந்த கலவையை தலையில் மயிர்கால்களில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, பின் தலையில் ஒரு பிளாஸ்டிக் கவரையோ அல்லது ஹேர் கேப்பையோ அணிந்து, 2-5 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி அலச வேண்டும். எத்தனை முறை பயன்படுத்தவும்? இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை என 2 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், தலைமுடியின் அடர்த்தியில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணபீர்கள்.

Tuesday, September 18, 2018

சனிபகவானிடம் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை.

இந்து கடவுள்களில் மிகவும் முக்கியமானவராகவும், கோபக்காரராகவும் கருதப்படுபவர் சனிபகவான். இவரின் கோரப்பார்வைக்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சூரிய பகவானின் மகனான சனி பகவான் சிவபெருமானின் தீவிர பக்தன் ஆவார். அவரின் தூய்மையான பக்திதான் அவருக்கு சிவபெருமானின் அருள் மூலம் இவ்வளவு சக்திகளை பெற்று தந்தது. இறந்த பிறகு செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும் பணியை எப்படி எமதர்மன் செய்கிறாரோ அதேபோல வாழும்போதே செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும் பணியை சனிபகவான் செய்து வருகிறார். தவறே செய்யாமல் இருப்பது என்பது மனிதர்களால் இயலாத ஒன்று, ஆனால் நம்முடைய சில குணங்கள் நம்மை சனிபகவானின் கோபப்பார்வையிலிருந்து பாதுகாக்கும். எப்படிப்பட்ட குணங்கள் சனிபகவானின் கருணைப்பார்வையை உங்கள் பக்கம் திருப்பும் என்பதை இங்கு பார்க்கலாம். சனிபகவான் நாம் அனைவரும் நினைப்பது போல சனிபகவான் தீமைகளை மட்டுமே வழங்கக்கூடிய கடவுள் அல்ல. பல நன்மைகளை வழங்கக்கூடியவர். அவர் வழங்கும் தண்டனை என்பது நமது கர்மபலன்களை பொறுத்ததே. அவரிடம் இருந்து அருளையும், கருணையையும் எதிர்பார்ப்போமேயானால் அதற்கு நம்மிடம் சில தகுதிகள் இருக்க வேண்டும். அந்த தகுதிகள் இருப்பவர்களை சனிபகவான் சோதிக்கமால் விடுவது மட்டுமின்றி அவர்கள் வாழ்க்கையில் உயரவும் அருள்புரிவார். தூய்மை சுத்தம் உள்ள இடத்தில்தான் செல்வம் பெருகும். சனிபகவான் நம்மிடம் விரும்புவதும் அதைத்தான். நம் அன்றாட வாழ்வில் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். காலையில் எழுவதில் தொடங்கி, குளிப்பது, சாப்பிடுவது வீடு மற்றும் பணியிடங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது என அனைத்திலும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். சுத்தம் இல்லாத இடத்தில்தான் சனிபகவான் தன் கோபப்பார்வையை வீசுவார். உழைப்பு தான் ஆசைப்பட்டது கிடைக்க வேண்டுமெனில் அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். உழைப்பவர்களுக்கு மட்டுமே சரியான நேரத்தில் உதவிகளும், வாய்ப்புகளும் கிடைக்கும். சோம்பேறித்தனத்தை சனிபகவான் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார். உழைக்க நீங்கள் தயாராக இருந்தால் அதற்கேற்ற பலனை தர சனிபகவான் தயாராக இருப்பார். நேர்மை இன்று மிகவும் அரிதான குணமாகிவிட்ட ஒன்று நேர்மையாக இருத்தல். இந்த காலகட்டத்தில் நேர்மையாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் அவ்வாறு இருக்கும்போது அதற்கு கிடைக்கும் பலன்களே தனிதான். உண்மையை பேசுபவர்களுக்கு சனிபகவான் எப்பொழுதும் துணையிருப்பார். உண்மையை பேசும்போது உங்களுக்குள் எழும் நிம்மதி மற்றும் அமைதி நீங்கள் பொய் சொல்லி சொகுசாய் வாழ்ந்தாலும் கிடைக்காது. பொறுமை சனிபகவான் நமது பொறுமையை சோதிக்க பல சோதனைகளை வழங்குவார். உங்களுடைய விடாமுயற்சியை தொடர்ந்து மீதி பாரத்தை சனிபகவானிடம் விட்டுவிடுங்கள். பொறுமையாக விடாமுயற்சியுடன் இருக்கும்போது சரியான நேரத்தில் உங்களுக்கான பலனை சனிபகவான் வழங்குவார். உண்மையை எதிர்கொள்ளுதல் சனிபகவான் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும், அதற்கு காரணம் யார் என்பதையும் உங்களுக்கு உணர்த்துவார். அந்த உண்மையை நேரடியாக சந்தித்து எதிர்கொள்ள வேண்டும், அதை தவிர்த்து அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்கும் செயல்களை செய்யக்கூடாது. உண்மையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் வழியாகும். நல்ல செயல்கள் சனிபகவான் பிறர் மீது இரக்கப்படுபவர்களையும், மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களையும் அதிகம் விரும்புவார். இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவி செய்வதை விட சனிபகவானை கவரும் எளிய வழி எதுவும் இல்லை. பிறரை மதிக்காமலோ, தீய செயல்களில் ஈடுபட்டாலோ சனிபகவான் தரப்போகும் துன்பங்களை சந்திக்க தயாராக இருங்கள். ஒழுக்கம் அனைத்திற்கும் மேலாக நம்மிடம் இருக்கவேண்டிய ஒரு அடிப்படை தகுதி ஒழுக்கம். ஒழுக்கம் இல்லாதவர்கள் சனிபகவானின் அருளை பெற முயற்சிப்பதே வீண். தனிமனித ஒழுக்கத்திலிருந்து சமூகத்தில் ஒழுக்கத்துடன் வாழ்வது வரை அனைத்துமே உங்களின் வளமான வாழ்க்கைக்கு முக்கியம்தான். சனிபகவானால் ஏற்படும் சோதனைகள் சனிபகவான் உங்களை சோதிக்க வேண்டுமென சோதித்துவிட்டால் உங்களை அனைத்து வழிகளிலும் துன்பத்திற்கு உள்ளாக்குவார். குடும்பத்தில் சண்டை, சோம்பேறித்தனம், பணியிடங்களில் பிரச்சினை, வாழ்க்கையில் அமைதியின்மை, மனஅழுத்தம், படிப்பில் கவனம் குறைதல், கடன் தொல்லை என நீங்கள் வாழும் வாழ்க்கையே நரகமாகிவிடும். சனிபகவான் வழங்கும் நன்மைகள் சனிபகவானின் கருணை பார்வைக்கு தேவையான தகுதிகள் உங்களுக்கு இருப்பின் நீங்கள் பெறப்போகும் பலன்கள் எண்ணற்றவை. அதிர்ஷடம், பதவி உயர்வு, புத்திகூர்மை, கற்பனைத்திறன், கடன் தொல்லையிலிருந்து விடுதலை என உங்களுக்கு சகல நன்மைகளையும் வழங்கக்கூடியவர் சனிபகவான். எப்படி வணங்க வேண்டும்? சனிபகவானை வணங்க வேண்டிய முக்கிய நாள் சனிக்கிழமை ஆகும். எனவே சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி ” ஓம் ஷங் சனீஸ்வராய நமக ” என்னும் மந்திரத்தை கூறி வழிபடவும். சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும், ஆஞ்சநேயரை வழிபடவும், சனிக்கிழமைகளில் கருப்பு அல்லது அடர் நீல நிற ஆடைகளை அணியவும், சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னமிடவும்.

வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவரும்?…

வாஸ்து சாஸ்திரமானது ஒரு வீட்டில் இருக்கும் கதவுகளின் எண்ணிக்கையை வைத்து, அதற்கான பலன்கள் அமைகிறது என்று கூறுகிறது. எனவே ஒரு வீட்டில் இருக்கும் கதவுகளின் எண்ணிக்கையும் அதற்கான பலன்களும் இதோ. இரண்டு கதவுகள் – நல்ல பலன்கள் கிடைக்கும். மூன்று கதவுகள் – எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். நான்கு கதவுகள் – நீண்ட ஆயுள் கிடைக்கும். ஐந்து கதவுகள் – அடிக்கடி நோய்கள் மூலம் பாதிப்புகள் ஏற்படும். ஆறு கதவுகள் – புத்திர பாக்கியம் கிடைக்கும். ஏழு கதவுகள் – ஆபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எட்டு கதவுகள் – வீட்டில் செல்வம் அதிகரிக்கும். ஒன்பது கதவுகள் – நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பத்து கதவுகள் – பணமும் பொருளும் வீடு தேடி வரும். குறிப்பு. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பலன்களும் வீட்டின் சுற்று சுவரில் உள்ள கதவுகளின் எண்ணிக்கைக்கு பொருந்தாது.

Monday, September 17, 2018

தயவு செய்து அதிகமாக பகிரவும் !!

தயவு செய்து அதிகமாக பகிரவும் !! இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோயை (Blood-Cancer) முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... அந்த மருந்தின் பெயர் *"Imitinef Mercilet"* ஆகும். இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கப்படுகிறது... அணுக வேண்டிய முகவரி : Cancer institute Adyar, East Canal Bank Road, Gandhi Nagar Adyar, Chennai-600020 Land Mark, Near Michael School. PHONE : ☎ 044 -24910754 ☎ 044 -24911526 ☎ 044 -22350241 நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்... frnzz plz pass this msg... to all ! பல பேர் பார்க்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள் !! இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி... இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே... ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம். அக்கறையுடன் இதனை FORWARD செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...

பூண்டு

பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும். இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும். தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். இரத்த அழுத்தத்தை சீராக்கும். உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும். எலும்புகளின் வலிமை அதிகரிக்கும். அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும். உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கும்.

Sunday, September 16, 2018

வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்

*வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள், குறிப்பாக நாற்பது வயதைத் தொட்டவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்.*_ *- கண்களின் பார்வை மங்கும்* *- காதுகள் கேட்கும் திறன் குறையும்* *- ஞாபக மறதி வரும்* *- பல் கொட்டும்* *- வாய் பேச கொளரும்* *- மூச்சு விடச் சிரமம் வரும்* *- சாப்பாடு செரிக்காது* *- மலச்சிக்கல் வரும்* *- கை வலி வரும்* *- இடுப்பு வலி வரும்* *- கால் வலி, கால் பாத வலி வரும்* *- நடக்க, நிற்கச் சிரமம்* *- சிறுநீர் கழிக்க சிரமம்* *- மலம் கழிக்க சிரமம்* *- இரவில் தூக்கம் வராது* *- இனிப்பு நீர், இரத்த கொதிப்பு வரும்* *- உடலுக்குப் பல வகையான நோய்களும் தொந்தரவுகளும் வரும்.* *- இன்னும் பல...* *இப்படி, எந்தப் பன்னாடையாவது சொன்னால். கண்டிப்பாக நம்பாதீர்கள்.* *வயதானால் நோய்வரும் என்று எந்த இயற்கையின் சட்டமும் கிடையாது.* *உங்களைப் படைத்தது இறைவன் அல்லது இயற்கை, என்று எதை நீங்கள் நம்பினாலும்* *உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறது*. *உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.* *அதனால் எவனாவது வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்.* *உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள்.* *மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.* *எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.* *எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.* *எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.* *மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.* *மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.* *நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்:* *முதுமை என்று எதுவும் இல்லை.* *நோய் என்று எதுவும் இல்லை.* *இயலாமை என்று எதுவுமில்லை.* *எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.* *சிந்தனையை மாற்றுங்கள்.* *ஆரோக்கியமாக வாழுங்கள்.* *நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.* _*மரணம்*_ *மனிதனின் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?.😀* *அவன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை அழைத்து. நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். போய் வருகிறேன். சந்தோஷமாக வாழுங்கள் என்று. தன் குடும்பத்தினரிடம் விடை பெற்று. மகிழ்ச்சியாக உடலைத் துறக்க வேண்டும்.😌* *யாருடைய மரணமும், மரண படுக்கையிலோ, மருத்துவ மனையிலோ நடக்கக் கூடாது.* *சிந்தனையை மாற்றுங்கள்.* *நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்.* *எல்லாத் தொந்தரவும் பறந்து போகும்.*

தினமும் ஐந்து மிளகு சாப்பிடுவதால் என்ன பயன்?

சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும். நான்கு பூண்டு பல்லுடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து, சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கை வழியில் நீக்கும். கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம். சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும்.

Thursday, September 13, 2018

படித்ததில் பிடித்தது.

♥படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும் ♥பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும் ♥விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம் ♥காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில் ஒற்றி கொள்ளவேண்டும் . ♥கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் . ♥கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை இதை தான் எரிச்சல் என்பார்கள் . கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் . ♥நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது . ♥உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும் இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் . ♥இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் . உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும் ♥அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது . ♥மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி .. ♥துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான் எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் . ♥அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் . ♥பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது . ♥குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் . ♥கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் . ♥அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் . ♥இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது பார்த்து உண்ணவேண்டும் . ♥கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் . வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் . ♥அடுத்து மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் . ♥நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் . ♥அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் .. ♥என்னை பொறுத்தவரையில் அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை பழக்கம் இல்லாத காரணமும் தான் ... ♥காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது . ♥பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது ♥சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் . ♥குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் . ♥ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் , இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை . ♥சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும் மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் . ♥அதன் படி உணவு முறைகளான இவைகள் .. நக்கி சாப்பிடுவது , சப்பி சாப்பிடுவது கடித்து சாப்பிடுவது உறிந்து சாப்பிடுவது என்று 4 வகையாக பிரிக்கலாம் . ♥எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது . ♥சித்தர்கள் சொல்வது உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில் அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் . ♥கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும் சக்கரை நோய் வராது, ♥உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும். ♥கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் . ♥தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் . ♥பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை என்று சொல்கிறது . ♥இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும் என்று சொல்கிறார் . ♥மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில் தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள் நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து நோய்களை அறியலாம் . ♥நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் .. ♥மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம் அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை , இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் .... ♥கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் .... ♥நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் . ♥இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை . ♥(குளிர்ச்சி தேவை ) இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள் ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது. ♥தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது. ♥சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது . ♥உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம் சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

Wednesday, September 12, 2018

மருத்துவ குணம் நிறைந்த ஒரு அற்புத மூலிகை துளசி:

துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி நஞ்சுகளை வெளியேற்றும். கெட்ட கொழுப்பை நீக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். ஜீரண கோளாறு உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி துளசி சூரணத்தை 1 தேக்கரண்டி தேனில் கலந்து காலை இரவு உணவிற்கு பின்பு சாப்பிட்டு வந்தால், அந்த தொந்தரவு குறையும். வாய்புண், வாய் நாற்றம் கொண்டவர்கள் துளசி இலையை மென்று வாய் கொப்பளிக்க வேண்டும். சிறுநீரகத்தில் உண்டாகும் அதிகப்படியான யூரிக் ஆசிட்டை வெளியேற்றும் சக்தியும் துளசிக்கு இருக்கிறது. சிறுநீரக கல், சிறுநீரக தொற்று போன்றவைகளையும் இது குணப்படுத்தும். துளசி சிறந்த கிருமிநாசினியாக செய்படுகிறது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகளால் உண்டாகும் நோய் தொற்றுகளை அழிக்கும். துளசி கஷாயம் தொடர்ந்து சாப்பிட்டால் யானைக்கால் நோயின் வீரியம் குறையும். துளசி ரத்ததில் ஆக்சிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். நரம்புகளை வலுவாக்கும், மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும். இதனால் இளமைத் துடிப்பும், இளமையும் துளசியால் பாதுகாக்கப்படுகிறது. துளசி, சுக்கு, பனை வெல்லம், பால் சேர்த்துத் தயாரிக்கப்படும் டீயை அருந்த சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாகும். துளசி வேரைப் பொடித்து நெய்யோடு கலந்து அருந்த ஆண்மை அதிகரிக்கும். தேள் கடிக்கு துளசிச் சாறுடன் வேப்ப இலைச்சாறு, மிளகு சேர்த்து அருந்தி, கடிவாயில் பூச நஞ்சு முறிவு ஏற்படும்.

1979 ம் வருடம்..

திருவனந்தபுரம் கடற்கரை ஓரத்தில் பெரிய மனிதர் தோரணையில் இருந்த ஒருவர் அமர்ந்து பகவத்கீதையை படித்து கொண்டிருந்தார்.. அப்போது நாத்திக இளைஞன் ஒருவன் அருகில் வந்து அமர்ந்தான்.. அந்த வயதானவரை பார்த்து இந்த விஞ்ஞான உலகில் முட்டாள்கள் தான் இந்த பழம் பஞ்சாங்கமான பகவத் கீதையை படிப்பார்கள் என கிண்டல் செய்தான். இதை படித்த நேரத்தில் அறிவியலை கற்றிருந்தால் இன்னேரம் நீங்கள் உலகப்புகழ் அடைந்திருக்கலாம் என்றான்... அந்த வயதானவரோ தம்பி நீ என்ன படித்திருக்கிறாய் ? என்றார்.. இளைஞன்... நான் கொல்கத்தாவில் படித்து அறிவியல் பட்டதாரி ஆனேன்...தற்போது பாபா அணு ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்துள்ளேன் என்றான்... நீங்களும் இப்படி வீணா கீதையை படித்து பொழுதை கழிப்பது விடுத்து அறிவியல் ஆராய்ச்சி யில் ஈடுபடலாமே என்றான்.. பதில் பேசாமல் சிரித்து கொண்டே அந்த முதியவர் எழுந்தும் எங்கிருந்தோ வேகமாக நாலு பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை சுற்றி நின்றனர்..விலையுயர்ந்த கார் ஒன்று மெல்ல உருண்டு வந்து அவர் பக்கத்தில் நின்றது.. அதிர்ந்து போன இளைஞன் ஐயா நீங்கள் யார்? என்றான்.. அதற்கு அவரோ சிரித்து கொண்டே நான் விக்ரம் சாராபாய்... பாபா அணு ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் என்றார்... அந்த நேரத்தில்13 பாபா அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன..அத்தனைக்கும் தலைவர் இவரே.. இப்பொழுது அதிர்ந்து போன இளைஞன் தடாலென சாராபாய் கால்களில் விழுந்தான்... சாராபாய் சிரித்து கொண்டே கூறினார்... தம்பி.. ஒவ்வொரு படைப்பின் பின்னும் ஒரு படைப்பாளி இருக்கிறான்.. அது மகாபாரத காலமாக இருந்தாலும் சரி..இந்த விஞ்ஞான யுகமாக இருந்தாலும் சரி...கடவுளை மறக்காதே. இன்று நாத்திகர்கள் அறிவியல் யுகமென ஆட்டம் போடலாம்.. ஆனால் வரலாறு சொல்லும்.. அறிவியலை உருவாக்கியது கடவுள் நம்பிக்கையாளர்கள் தான்..என்று இறைவன் என்பது ஒரு முடிவில்லா உண்மை.... அதை உணர்த்து பாருங்கள்..துன்பம் தொலைந்தோடுவதை காண்பீர்கள் என்றார்.. .... நமது படிப்போ ... பட்டமோ ... பதவியோ ... நம் தகுதியை நிர்ணயிப்பதில்லை என உணர்வோமாக.....