Saturday, May 30, 2026

ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்திரம்‌ வாராஹி மந்திரங்களில்‌ சிரேஷ்டமான ஒரு மந்திரம்‌.

 ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்திரம்‌ வாராஹி மந்திரங்களில்‌ சிரேஷ்டமான ஒரு மந்திரம்‌.


இந்த மந்திரத்தை சித்தி செய்து கொண்டால்‌ ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி நம்‌ கனவில்‌ வந்து நம்‌ பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வாள்‌.


ஜெபமுறை :


ஓம்‌ அஸ்ய ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்த்ரஸ்ய| ஈஸ்வர ரிஷிஹி |ஜகதீச்சத்தஹ |ஸ்வப்ன வாராஹி தேவதா | ஓம்‌ பீஜம்‌ |ஹ்ரீம்‌ சக்திட்டஹ ட்டஹ கீலகம்‌ ||


மூல மந்திரம்‌:-


ஓம்‌ ஹ்ரீம்‌ நமோ வாராஹி || அகோரே ஸ்வப்னம்‌ தர்ஷய ட்டஹ ட்டஹ ஸ்வாஹா ||


இதை வளர்பிறை பஞ்சமி திதி அன்றோ ,வளர்பிறை அஷ்டமி அன்றோ ஜெபிக்க ஆரம்பிக்க நன்று .


தினம்‌ 1100 உரு வீதம்‌ தொடர்ந்து 11 நாட்கள்‌ படுக்கையில்‌ அமர்ந்தவாறே ஜெபித்து அங்கேயே உறங்கி விட வேண்டும்‌.ஜெபித்த இடத்தில்‌ மாதுளம்பழம்‌,செவ்வாழைப்பழம்‌,வெண்ணை எடுக்காத தயிர்‌ சாதம்‌ நிவேதனம்‌ செய்யலாம்‌.


ஸ்ரீ வாராஹி வழிபாடு கருணாசாகரி ஓம்‌ ஸ்ரீ மகா வாராஹி பத்மபாதம்‌ நமோஸ்துதே।||


அன்னை ஸ்ரீ மகாவாராஹி ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின்‌ பஞ்சபாணங்களில்‌ இருந்து தோன்றியவள்‌.இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின்‌ படைத்தலைவி (சேனாதிபதி).


ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த வாக்குவன்மை, தைரியம்‌, தருவதோடு எதிர்ப்புகள்‌,எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும்‌ கவசமாகும்‌.அபிச்சாரம்‌ எனப்படும்‌ பில்லி,சூனியம்‌, ஏவல்களை நீக்குவாள்‌.இவளை வழிபடுபவர்கள்‌ எந்த மந்திரவாதிக்கும்‌ அஞ்சத்‌ தேவையில்லை.ஏதிரிகளின்‌ வாக்கை, அவர்கள்‌ செய்யும்‌ தீவினைகளை ஸ்தம்பனம்‌ செய்பவள்‌.வழக்குகளில்‌ வெற்றி தருபவள்‌.


மந்திர சாஸ்திரபழமொழி :- "வாராஹிக்காரனோடு வாதாடாதே" .


ஸ்ரீ வாராஹி வாக்கு சித்தி அருள்வதில்‌ ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியைப்‌ போலவே முதன்மையானவள்‌ .எனவே இவளை உபாசிப்பவர்கள்‌ யாரையும்‌ சபிக்கக்கூடாது அவை உடனே பலிக்கும்‌ ஆனால்‌ அதனால்‌ பாதிப்படைந்தவரின்‌ வேதனைக்கான பாவம்‌ விரைவில்‌ நம்மை வந்தே சேரும்‌ அதில்‌ இருந்து அன்னை நம்மைக்‌ காக்க மாட்டாள்‌.எனவே எவருக்கும்‌ அழிவு வேண்டி வணங்காமல்‌ "எதிரிகளால்‌ துன்பம்‌ ஏற்படாமல்‌ காக்குமாறு" வேண்டி வழிபட வேண்டும்‌.

ஸ்ரீ வாராஹி எலும்பின்‌ அதி தேவதை இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும்‌,வாத,பித்த


வியாதிகளும்‌ தீரும்‌.


ஸ்ரீ மகாவாராஹியை ஆக்ஞா சக்கரத்தில்‌ தியானிக்க வேண்டு .


வழிபாட்டு முறைகள்‌ :-


புதன்‌,சனிக்கிழமைகள்‌,திரயோதசி திதி,பஞ்சமி திதி,நவமி,திருவோண நட்சத்திரம்‌ அன்றும்‌ வழிபடலாம்‌.எல்லா மாதங்களிலும்‌ வரும்‌ வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப்‌ பெறலாம்‌.


ஆடி மாதம்‌ வளர்பிறையின்‌ முதல்‌ 10 நாட்கள்‌ இவளின்‌ நவராத்திரி அந்த நாட்களில்‌ தினமும்‌ அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன்‌ பூஜிக்க வல்வினைகள்‌ யாவும்‌ தீரும்‌ என்று மந்திர சாஸ்திர நூல்கள்‌ கூறுகின்றன.


செல்வம்‌ ,அரசியல்‌ வெற்றி,பதவி,புகழ்‌ வேண்டுவோர்‌ பஞ்சமியிலும்‌,


மனவலிமை,ஆளுமை,எதிர்ப்புகளில்‌ வெற்றியடைய அஷ்டமியிலும்‌ சிறப்பாக வழிபடவேண்டும்‌.


எல்லா ஜெபங்களுக்கும்‌ கிழக்கு நோக்கியும்‌,எதிர்ப்புகள்‌ தீர தெற்கு நோக்கியும்‌ அமர்ந்து ஜெபிக்கலாம்‌.


ஆலயங்களில்‌ உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத்‌ தடைகள்‌ நீங்கும்‌.


வெள்ளைப்‌ பட்டு அணிவிக்க வாக்கு வன்மை ,கல்வியில்‌ மேன்மை உண்டாகும்‌.


மஞ்சள்‌ பட்டு அணிவிக்கக்‌ குடும்பத்தில்‌ மங்கள காரியங்கள்‌ நடைபெறும்‌,திருமணத்தடை நீங்கும்‌.


பச்சைப்‌ பட்டு அணிவிக்கச்‌ செல்வப்பெருக்கு ஏற்படும்‌.


நீலவண்ணப்‌ பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில்‌ வெற்றி கிட்டும்‌.


ஸ்ரீ வாராஹி உபாசகர்கள்‌ விளக்கிற்கு பஞ்சு,தாமரைத்தண்டு,வாழைத்திரி பயன்படுத்தலாம்‌.அதிலும்‌ தாமரைத்தண்டு திரி மிகச்‌ சிறந்தது.


நைவேத்தியங்கள்‌:-


தொலி எடுக்காத உளுந்து வடை,மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர்சாதம்‌,மொச்சை ,சுண்டல்‌,சுக்கு அதிகம்‌ சேர்த்த பானகம்‌,மிளகு சீரகம்‌ கலந்து செய்த தோசை,நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம்‌, லவங்கம்‌,பச்சைகற்பூரம்‌ கலந்த பால்‌,கருப்பு எள்‌ உருண்டை , சர்க்கரை வள்ளிக்கிழங்கு,தேன்‌ படைக்கலாம்‌.


மாதுளம்பழம்‌ மிகச்‌ சிறப்பு. ஸ்ரீ மகா வாராஹியின்‌ மூல மந்திரம்‌:-


ஓம்‌ ஐம்‌ ஹ்ரீம்‌ ஸ்ரீம்‌ ஐம்‌ க்லெளம்‌ ஐம்‌ ||


நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||


அந்தே அந்தினி நமஹ


ருந்தே ருந்தினி நமஹ


ஜம்பே ஜம்பினி நமஹ


மோஹே மோஹினி நமஹ


ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ)


சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம்‌ சர்வேஷாம்‌


சர்வ வாக்சித்த சக்ஷூர்‌ முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம்‌ குரு குரு சீக்ரம்‌ வச்யம்‌,ஐம்‌ க்லெஎம்‌ ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம்‌ அஸ்த்ராய ப்பட்‌ ||


ஸ்ரீ மகாவாராஹியின்‌ அங்க தேவதை -லகு வார்த்தாளி உபாங்க தேவதை :-ஸ்வப்ன வாராஹி


பிரத்யங்க தேவதை :திரஸ்கரணி


ஸ்ரீ லகு வார்த்தாளி மூல மந்திரம்‌ :-


லூம்‌ வாராஹி லூம்‌ உன்மத்த பைரவி பாதுகாப்யாம்‌ நமஹ


இவள்‌ ஸ்ரீ மகாவாராஹியின்‌ அங்க தேவதை ஸ்ரீ மஹாவாராஹி மந்திரம்‌ ஜெபிக்க இயலாதவர்கள்‌ லகு


வாராஹி மந்திரத்தை ஜெபித்து வரலாம்‌.இது எல்லா


நிலைகளிலும்‌ பாதுகாப்பாக விளங்கும்‌. ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மூல மந்திரம்‌ :-


ஓம்‌ ஹ்ரீம்‌ நமோ வாராஹி கோரே ஸ்வப்னம்‌ ட்ட:


ட்ட: ஸ்வாஹா| அல்லது


ஓம்‌ ஹ்ரீம்‌ நமோ வாராஹி அகோரே ஸ்வப்னம்‌ தர்சய


ட்ட: ட்ட: ஸ்வாஹா||


இவள்‌ ஸ்ரீ மகாவாராஹியின்‌ உபாங்க தேவதை.இவளை உபாசனை செய்தால்‌ நமக்கு வரும்‌ நன்மை,தீமைகளைக்‌ கனவில்‌ வந்து அறிவித்து நம்மைக்‌ காப்பாள்‌.இம்மந்திரத்தை நியமங்களுடன்‌ உறங்கும்‌ முன்‌ 11 நாட்கள்‌ தொடர்ந்து தினமும்‌ 1100 முறை ஜெபித்து வந்தால்‌ 11 நாட்களுக்குள்‌ அன்னை ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி கனவில்‌ வந்து நம்‌ மன விருப்பங்களை நிறைவேற்றி பிரச்சனைகளைத்‌ தீர்ப்பாள்‌.இவளுக்குப்‌ பிடித்த நைவேத்யம்‌ இளநீர்‌.


ஸ்ரீ திரஸ்கரணி மூல மந்திரம்‌ :-


ஓம்‌ நமோ பகவதி திரஸ்கரணி மஹாமாயே| மஹாநித்ரேோசகலபசுஜன. மனஸ்‌ கக ச்ரோத்ரம்‌ திரஸ்கரணம்‌ குரு குரு ஸ்வாஹா||


இவள்‌ மாயைக்கு அதிபதி .இவளை வழிபட மாயை நீங்கும்‌.மனகுழப்பங்கள்‌ தீரும்‌.


குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள்‌ :-


1.வாக்கு வன்மை,சபைகளில்‌ பேர்‌ பெற,கல்விஞானம்‌


பெற:-


ஓம்‌ ஸ்ரீம்‌ ஹ்ரீம்‌ க்லீம்‌ நமோ வாராஹி|


மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||


2.எதிரிகளால்‌ தீமை ஏற்படாதிருக்க :-


ஓம்‌ சத்ருசம்ஹாரி| சங்கடஹரணி| மம மாத்ரே [ஹ்ரீம்‌ தும்‌ வம்‌ சர்வாரிஷ்டம்‌ நிவாரய|சர்வ சத்ரூம்‌ நாசய நாசய ||


3.செல்வவளம்‌ பெருக:-


க்லீம்‌ வாராஹமுகி [ஹ்ரீம்‌ சித்திஸ்வரூபிணி | ஸ்ரீம்‌


தனவசங்கரி தனம்‌ வர்ஷய ஸ்வாஹா| 4.சர்வ சித்திகளும்‌ செல்வமும்‌ பெற :-


ஸ்ரீம்‌ பஞ்சமி சர்வசித்திமாதா மம கிரகம்‌ மே தனசம்ருத்திம்‌ தேஹி தேஹி நம||


5.எல்லா வகையான பயமும்‌ நீங்க :-

ஓம்‌ ஹ்ரீம்‌ பயங்கரி| அதிபயங்கரி|ஆச்சர்ய பயங்கரி| சர்வஜன பயங்கரி|சர்வ பூதப்‌ பிரேத பிசாச பயங்கரி [சர்வ பயம்‌ நிவாரய சாந்திர்ப்பவது மே சதா[||


6.வறுமை நீங்க :-


ஓம்‌ ஸ்ரீம்‌ க்லீம்‌ ஹ்ரீம்‌ நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம்‌ த்வம்சய த்வம்சய॥


ஸ்ரீ மகாவாராஹியின்‌ பன்னிரு திருநாமங்கள்‌:மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள்‌,ஜெபிக்க இயலாதவர்கள்‌ யாவரும்‌ கீழ்க்காணும்‌ ஸ்ரீ மஹாவாராஹியின்‌ 12 நாமங்களைக்‌ காலையில்‌ குளித்து முடித்ததும்‌ சொல்லி வணங்க அவள்‌ அருள்‌ துணை நிற்கும்‌.


1.பஞ்சமி 2.தண்டநாதா 3.சங்கேதா 4.சமயேச்வரி 5.சமயசங்கேதா 6.வாராஹி 7.போத்ரிணி 8.சிவா 9.வார்த்தாளி 10.மகாசேனா 11.ஆக்ஞா சக்ரேச்வரி 12.அரிக்னீ

ஸ்ரீ வாராஹி மாலையில்‌ உள்ள பாடல்கள்‌ யாவும்‌ மிகுந்த மந்திர சக்தி உடையவை .சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத்‌ தெரியாதவர்களும்‌, மற்றும்‌ யாவரும்‌ நலம்‌ பெற வேண்டி ஸ்ரீ வாராஹி மாலையில்‌ உள்ள 32 பாடல்களையும்‌ தினம்‌ படித்து வரலாம்‌.அல்லது அதில்‌ உள்ள ஒவ்வொரு பாடலும்‌ ஒரு குறிப்பிட்ட பலனைத்தரும்‌ அதில்‌ உங்கள்‌ தேவைக்கான பாடலை மட்டும்‌ தேர்ந்தெடுத்துத்‌ தினமும்‌ படித்து வரத்‌ தேவை நிச்சயம்‌ நிறைவேறும்‌.


காரியசித்தி ஏற்பட,பயம்‌ நீங்க மற்றும்‌ பல காரியங்களுக்கும்‌ சிறப்பு பூஜை,யந்திர,மந்திர ஹோமம்‌ ரக்ஷை, உள்ளது ஸ்ரீ அச்வாரூடா , ஸ்ரீ அபராஜிதா மந்திரங்கள்‌ ,அரசாங்க காரியங்களில்‌ வெற்றி தருவதுடன்‌ ,எத்தகைய வழக்கு, எதிர்ப்புகளையும்‌ தீர்க்கும்‌ பதிப்பின்‌ நீளம்‌ கருதி இத்துடன்‌ ஸ்ரீ மஹாவாராஹி உபாசனை பற்றிய விளக்கத்தை நிறைவு செய்கிறேன்‌.


வராஹி உபாசனை பல நன்மைகளையும்‌ ,உடனடி பலனையும்‌ தருவது.இதில்‌ பல பிரயோக ரகசியங்கள்‌ உள்ளன.எனவே, முறைப்படி சாப நிவர்த்தி செய்து தீக்ஷை பெற்று ஜெபிப்பது உத்தமம்‌.

கருணாசாகரி ஓம்‌ ஸ்ரீ மஹா வாராஹி பத்மபாதம்‌ நமோஸ்துதே।|


வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம்‌|| வார்த்தாளி வார்த்தாளி வார்த்தாளி ரக்ஷமாம்‌ ||


ஓம் சிவ சிவ ஓம் 🪷🙏🏻.

Thursday, May 28, 2026

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பாதாம், உலர் திராட்சை! - எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும்?

 பாதாம் மற்றும் உலர் திராட்சை ஆகிய இரண்டுமே உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை எப்போதும் இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடுவதே ஆகச்சிறந்த முறையாகும். 


ஒரு கைப்பிடி அளவு, அதாவது தோராயமாக 5 முதல் 8 பாதாம்பருப்புகளை இரவில் ஊறவைத்து, காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பாதாமைத் தோலுடன் சாப்பிட்டால், அதில் உள்ள 'டானின்' என்ற வேதிப்பொருள் ஊட்டச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுத்துவிடும். 


உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த காலை உணவாகும்.


பாதாமைப் போலவே இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உலர் திராட்சையை ஒரு நாளைக்கு 10 முதல் 15 வரை ஊறவைத்துச் சாப்பிடலாம். 


இது இரத்த சோகையை நீக்கி, செரிமானத்தை மேம்படுத்தும். எனினும், இதில் இயற்கைச் சர்க்கரை அதிகமிருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதனை மருத்துவரின் ஆலோசனைப்படி மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். 


காலையில் வெறும் வயிற்றில் இந்த இரண்டையும் சேர்த்துச் சாப்பிடுவது, நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான அசாத்திய ஆற்றலை வழங்குவதுடன் உடலின் வளர்சிதை மாற்றத்தையும் (Metabolism) சீராக்குகிறது.

Wednesday, May 20, 2026

பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி?

 கல்லை வணங்குகிறார்கள் என்று கேலியும் கிண்டலும் செய்யும் அனைவருக்கும்  இது சமர்ப்பணம்!

ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்


கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. 


கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். 


சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. 


அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள். 


கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்.


சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது "சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது. 


அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். 


ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். 


இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். 


இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். 


அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.


48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள். 


அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம். 


இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம். 


ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம். 


பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும். 


இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். 


இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது. 


எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.


சரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். 


நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். 


தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும். 


அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும். 


அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும். 


6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள்,  பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்..." என்றார். 


தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறையைப்பற்றி சுந்தரேச சர்மா சிவாச்சாரியார் அவர்கள் கூறும்போது "இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப்பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள். 


இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள். 


பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது. 


புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். 


இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது. 


தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது. 


அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது. 


பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது. 


ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது. 


இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது" என்றார்.


கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை. 


அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது. 


மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன.

எலும்பு ஒட்டி இலை

 எலும்பு ஒட்டி இலைகளின் பொடியானது, ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகை மருந்தாகும். 


இது எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்பு முறிவுகளைக் குணப்படுத்தவும், மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், மற்றும் அழற்சியைக் குறைக்கவும் உதவும் திறனுக்காக மிகவும் மதிக்கப்படுகிறது .


ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்தப் பொடியானது, எலும்பு அடர்த்தியைப் பராமரிக்கவும், மூட்டு வலியைப் போக்கவும், மற்றும் ஒட்டுமொத்த தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் ஒரு இயற்கையான வழியாகும்.


எலும்பு ஒட்டி இலைப் பொடியின் பலன்கள்:


எலும்பு வலிமையை ஊக்குவிக்கிறது – எலும்பு அடர்த்தியை மேம்படுத்தவும், எலும்பு முறிவுகள் குணமாகவும் உதவுகிறது.


மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது – விறைப்பைக் குறைத்து, நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.


அழற்சி எதிர்ப்புப் பண்புகள் – 

மூட்டு வீக்கத்தையும் வலியையும் இயற்கையாகவே தணிக்கிறது.


தசைகளையும் தசைநார்களையும் வலுப்படுத்துகிறது – காயங்களிலிருந்து விரைவாக மீள உதவுகிறது.


கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது – எலும்பு மற்றும் மூட்டு நலனுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.


நோய் எதிர்ப்பு சக்தியையும் உயிர்ச்சக்தியையும் அதிகரிக்கிறது – உடலின் ஒட்டுமொத்த வலிமையையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.


எலும்பு ஒட்டி இலை பொடியை எப்படி பயன்படுத்துவது


தினமும் 1 தேக்கரண்டி பொடியை வெந்நீர், தேன் அல்லது பாலுடன் கலந்து உட்கொள்ளவும் .


எளிதாக உட்கொள்வதற்கு சூப்கள், சட்னிகள் அல்லது கறிகளில் சேர்க்கலாம்.


எலும்பு மற்றும் மூட்டுப் பராமரிப்புக்கான ஆயுர்வேத எண்ணெய்கள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது .


எலும்பு முறிவுகள், மூட்டுவலி, எலும்புப்புரை அல்லது விளையாட்டுக் காயங்கள் உள்ளவர்களுக்கு ஏற்றது .


எலும்பு ஒட்டி இலை தூளின் பயன்கள் 

எலும்பு முறிவு சிகிச்சை: 


உடைந்த எலும்புகளை விரைவாக ஒன்றிணைக்க இந்த இலை உதவும்.


எலும்பு வலுப்பெற: 

எலும்புகளை பலப்படுத்தும் ஆற்றல் கொண்டது.


மூட்டு வலி நிவாரணம்: 


முழங்கால் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளைக் குறைக்கும்.

வீக்கம் குறைத்தல்: 


கை, கால், இடுப்பு எலும்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.


இரத்தக் கட்டிகள் நீக்கம்: 

உடலின் இரத்தக் கட்டிகளை குணப்படுத்த உதவும்.


முதுகு தண்டுவட பாதிப்பு சரிசெய்தல்: 

முதுகு தண்டு மற்றும் முதுகு தண்டுபட பாதிப்புகளை நிவர்த்தி செய்யும்.


காமதேவன்_வசிய_விபூதிமந்திரம்_பிரியோகிக்கும்_முறை

 இதை பெண் வசியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக வசிய நேறிமுறைக்கு உட்பட்டு கணவன் மனைவிக்கு ஒற்றுமைக்கு மட்டுமே இதை செய்யவேண்டும் 

தவறாக பயன்படுத்தினால் பலன் இழந்து பாவம் சேரும்.


காமதேவன் என்பது மனோதிடம்அல்லது மனோசக்தி மூலமாக எதிர் பாலினத்தை வசீகரித்து தன் வயப்படுத்துவதும் 

காமத்தின் அதிபதியாக விளங்கும் ஓர் தமிழரின் கடவுள்.

இவருக்கு ராகவிருந்தன், அனங்கன், கந்தர்வன், மன்மதன், மனோசித், ரதிகந்தன்', மதனன், புஷ்பவனன், மாறன் புஷ்பதானுவன், வசந்தன் போன்ற பிற பெயர்களும் உண்டு.


காம தேவன் வில்லம்பு எய்திய ஒரு அழகான இளைஞனாக சித்தரிப்படுகிறார். அவருடைய "வில்" கரும்பால் ஆனது,

அதனுடைய"நாண்"

தேனீக்களால் உருவாக்கப்பட்டது,

காம தேவனின் அம்பு ஐந்து வித நறுமண மலர்களால் ஆனது.

காம தேவனின் வாகனம் கிளி.

காமதேவனுக்குரிய பருவம் வசந்த காலம்.


காதலின் தெய்வமாக காமதேவனை குறிப்பிடுகிறார்கள்.

"காமம்" என்ற சமஸ்கிருத சொல்லுக்கு அன்பு, ஆசை, சிற்றின்பம், ஏக்கம் என

பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன.


மன்மதன் அல்லது காமதேவனின் மூலம், உலகின் மிகப் பழையநூலான ரிக்வேதத்தில் ஆசையே (காமம்) பிரபஞ்சத்தின் வித்து என்னும் அற்புதமான பாடல் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் இருக்கிறது.


அதன் பிறகு

அதர்வ வேதம், காமனை கடவுள் நிலைக்கு உயர்த்துகிறது. இறைவனின் லீலா விநோதம்தான் இந்த உலகின், மனித இனத்தின் படைப்பு,

அவர் மனதில் எழுந்த ஆசையே, விருப்பமே பிரபஞ்சமாக உருவானது.


அறிவியலோ மாபெரும் வெடிப்பு (BIG BANG)

பிக் பாங் ஏற்பட்டு தான் பிரபஞ்சம் தோன்றியது என்று கூறுகின்றது. ஆனால் அதற்கு முன் என்ன இருந்தது....?

ஏன் பெர்ம் வெடிப்பு ஏற்பட்டது என்பதற்கு விஞ்ஞானத்தால் விடைகூற முடியவில்லை.


பிரஜாபதி பரமேஷ்வரன் (சிவன்) என்ற சித்தர் தான் உலகின் முதல் விஞ்ஞானி ஆவார்.


அவர் ரிக்வேதத்தில் சொல்லும் மந்திரத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிப் பாடி வியக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு சித்தர் பாடியது உலகின் முதல் நாகரீகம்,

திராவிடிகா தேசத்தில் தோன்றியதை மெய்ப்பிக்கிறது.


"ஆரம்பத்தில் காமம் (ஆசை) இருந்தது


மனதின் மூல வித்து அதுவே;


ரிஷிகள் உள்ளத்தில் எழுந்த ஞானத்தால் தேடி,


இல்லாத ஒன்றில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்"


–ரிக் வேதம் 10-129.


ஆகவே காமமே ஆரம்பநிலை என்பது நமக்கு உறுதியாகப்படுகிறது.

அந்த காமனுக்கு அதிபதி காமதேவம் ஆனால் அவருக்கு உருவமில்லை 

உருவமற்றவர்.


இவரை வைத்து எப்படி வசியம் விபூதி பிரயோகம் செய்யலாம் என்பதை பற்றி இனி தெரிந்துகொள்வோம் வாங்க...


மந்திரத்தை கவனிக்கவும் 


"அரி ஓம் ஐயும்கிலியும் பவ்வும் சவ்வும் அநங்கவேள் காமா, ஆனந்தக்காமா, நானுன்னை வேண்டி நாவினாலழைக்கிறேன்,

ஓடி வா காமா, உல்லாசக்காமா, அந்திக்காமா, சந்திக்காமா, உச்சிக்காமா, உருவிலாக்காமா, நான் நினைத்த ஸ்திரீ ஏழு சுத்துக்கோட்டை இரும்புச் செப்புக் கதவிற் குள்ளிருந்தாலும், மூன்றுலோகம் பாதாளத்தின் கீழிருந்தாலும்,

எடுத்து முறித்தோடுகாமா, இன்னாள் மகள் இன்னாளை அங்கமயக்கி, அறிவைக்கலக்கி, உள்ளமுறுக்கி, உன்மத்தாக்க, அன்னமருந்தாமல், ஆடையுடுக்காமல், தாய் தந்தையரை வேம்பாக்கி, தன்னை நினைத்தவர்மேல் மயலாக்காமா வேசங்காட்டி கரித்திடு,

மோகாவேசமூட்டி முரித்திட்டு,

அவள் பாயில் படுத்தாலும் பாம்பாய் புறளவே, நாய்போலலைந்து, நரிபோல வோலமிட்டு பேய்போல பினத்திட பிடரியை பிடித்திழுத்துவாக்காமா..


அ இ உ எ ஒ ஐயும்கிலியும் 

சிவயநம

யநமசிவ 

மசிவயந 

வயநமசி

நமசிவயத்தாலே நடித்துவா காமா,

சீக்கிரம் சீக்கிரம் வாக்குத்தா 

வசீகரந்தா என் பூஜையை பெற்றுக்கொள்

எனதிஷ்டபடி செய் 

செல் செல் ஆகாசத்துக்குள்ளே அரண்டு உருண்டு திரண்டு பறந்தோடிவந்து, கண்ணிழுந்த காராம் பசுவைபோல வந்து 

இன்னான் காலை கவ்வ கைவசப்படுத்தச் சுவாஹா"


இந்த மந்திரத்தை சித்தி செய்த பின் 


இதற்கு யந்திரம் ஒரு ஆண்

உருவம் வரைந்து 

வலது கண்டத்திற்கு நேர் "ஐயும்"

இடது கண்டத்திற்கு நேர் "கிலியும்"

வலது துடையில் "மவ்வும்"

இடது துடையில் "சவ்வும்"

நெற்றி அகண்டத்தில் "இ"

உந்தியில் "உ" என்று விபூதியில் எழுதி பூஜை செய்து பிரியோகம் செய்தால் 

வசியம் கைக்கூடும்.

நன்றி.

Saturday, May 16, 2026

வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள்...

பாட்டி வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது. வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் காரணம்.


இரத்தம் சுத்தமாகும்


வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துமாம்.


பாக்டீரியாக்களை அழிக்கும்


வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுமாம்.


இதய ஆரோக்கியம்


வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படுமாம். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாமாம்.


கழுத்து வலி, காது வலி


நீங்கும் பாதங்களில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து தூங்கினால், இதுவரை மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்குமாம்.


வயிற்று பிரச்சனைகள்


முக்கியமாக வயிற்றுப் பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடுமாம். அதுமட்டுமின்றி சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடுமாம்.


குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள்


உங்களுக்கு குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும். எப்படியெனில் வெங்காயத்தை பாதத்தில் வைக்கும் போது உடலினுள் ஒருவித வெப்பம் உருவாகி, அதனால் பல்வேறு பிரச்சனைகள் நீங்குமாம்.


துர்நாற்றமிக்க பாதம்


உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுமாயின், தினமும் பாதங்களில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் போய்விடுமாம்.


சளி, காய்ச்சல்


சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவராயின், வெங்காயத்தை இரவில் படுக்கும் போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகுமாம்..

Sunday, May 3, 2026

தேனீரில் சேர்க்க வேண்டிய ஆரோக்கிய பொருட்கள்

 ##தேனீர் பிரியர்களுக்கு ஒரு ஆரோக்கியமான செய்தி!☕🍃


நம்மில் பலருக்கு ஒரு கோப்பை தேனீர் இன்றி பொழுது விடிவதில்லை. அந்தத் தேனீரை வெறும் சுவைக்காக மட்டுமின்றி, ஆரோக்கியம் தரும் அருமருந்தாகவும் மாற்ற முடியும்.


### **தேனீரில் சேர்க்க வேண்டிய ஆரோக்கிய பொருட்கள்:**


 * **சீரகம்:** மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும்.


 * **ஏலக்காய்:** வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு போன்ற உபாதைகளைத் தடுக்கும்.


 * **மஞ்சள்:** ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன், சருமத்திற்குத் தனிப் பொலிவைத் தரும்.


 * **கிராம்பு:** உடல் சூட்டைத் தணித்து புத்துணர்ச்சி அளிக்கும்.


 * **இஞ்சி:** பித்தம் மற்றும் அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை ஊக்குவிக்கும்.


"ஒரு கோப்பை தேனீர், ஓராயிரம் ஆரோக்கிய நன்மைகள்."


அடுத்த முறை தேனீர் தயாரிக்கும் போது, இதில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்து உங்கள் ஆரோக்கியத்தை ஓர் **அழகோவியமாக** மாற்றிக் கொள்ளுங்கள்! ✨