Thursday, November 29, 2018

நீங்கள்_எந்த_ராசிகாறர்

🔯ஸ்திர ராசிகள் ; ⚜ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம்: 🔔இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள் ....அதில் இருந்து மாறவும் மாட்டார்கள்..தப்பா இருந்தாலும் சரியா இருந்தாலும் அதில் பிடிவாதமாக இருப்பார்கள்...ரெண்டு ஸ்திர ராசிக்காரங்க சண்டையோ வாக்குவாதமோ செய்ய ஆரம்பித்தாலும் விடிய விடிய தொடரும்..எங்கும் எதிலும் நிலைத்து நிற்பார்கள் தான் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள் ...நிலையான வெற்றியை பெறுவார்கள் ....வாழ்க்கையில் ஜெயிக்காமல் ஓய மாட்டார்கள் ...வாழ்வில் ஏதேனும் ஒரு சாதனையை செய்வார்கள் 🔯உபய ராசிகள் ;; ⚜மிதுனம்,கன்னி,தனுசு ,மீனம் 🔔அப்படி செய்யலாமா இப்படி செய்யலாமா என யோசித்து கொண்டே சொதப்பி விடும் புத்திசாலிகள் ..மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் கில்லி...ஆனா இவங்களுக்கு இவங்களே வெச்சிக்குவாங்க கொள்ளி...எதிலும் இரட்டை நிலைதான்..மரம் ஏறும் போது ஒரு புத்தி இறங்கும்போது ஒரு புத்தி என்பார்களே அது இவர்களுக்கு பொருந்தும்.மனசு மாறிக்கிட்டே இருக்கும்.ஏமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.அறிவாளிகள் ,யாரையும் பார்த்தவுடன் கணிக்க கூடியவர்கள்..ஆன்மீகத்தில் ,பண விசயத்தில் சிறந்தவர்கள் ...இவர்கள் துணை இருந்தால் வாழ்வில் வெற்றி அடையலாம்.. 🔯சர ராசிகள் ; ⚜மேசம்,கடகம்,துலாம்,மகரம் . 🔔..உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு போல சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பார்கள் ..பாயிண்ட் பாயிண்ட் வரட்டும் என காத்திருந்து நெத்தியடியாக தாக்குவதுதான் இவர்கள் பாணி.எதிலும் வேகம்,விவேகம் .எல்லா விசயத்திலும் அனுபவம் உடையவர்கள்...ஊர் நாட்டாமை இவர்கள்தான் என்பதால் எல்லா பிரச்சினைக்கும் இவர்கள் நான் சொல்றேன் தீர்ப்பு என முன்னாடி ஏதாவது ஆதாயம், கிடைக்குமான்னு பார்ப்பாங்க...எப்பவும் பெரிய ஆட்களுடன் பழகத்தான் விரும்புவார்கள்..தன்னை பெரிய ஆட்களாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்..மிகப்பெரும் உலக சாதனையாளர்கள் ,மகான்கள்,உலக தலைவர்கள் இந்த ராசிகளில் பிறந்திருக்கின்றனர்.

Wednesday, November 28, 2018

சர்க்கரை நோய் இது தான் இன்றைய ஹீரோ

சர்க்கரை நோயா.? மாத்திரையோடு வாழ்க்கை ஓடுதா? கவலை ஏன் இதோ உடனடி தீர்வு.! இனி உங்கள் பக்கம் கூட சர்க்கரை நோய் வராது..! சர்க்கரை நோய் இது தான் இன்றைய ஹீரோ என்று கூட சொல்லலாம். ஏன் எனில் அனைவரையும் ஆள்கிறதே.! யாரிடம் கேட்டாலும் ஐயோ சர்க்கரை நோய் மட்டும் தான் வேறு ஒன்றும் இல்லை என்பார்கள். இவர்கள் தொடர்ந்து ஆங்கில மருந்து எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். சாப்பாடு கட்டுப் பாடுகள் இருக்கும் என்ன இருந்தாலும் ஒரு நாள் குறையும் மறு நாள் அதிகரித்து விடும். சரி இதற்கு மிக இலகுவாக அதே நேரம் எந்த வித பக்க விளைவுகளும் இன்றி சர்க்கரை நோயை குறைக்கலாம். எப்படி எதை வைத்து செய்வது என பார்த்தால் தொட்டாச் சிணுங்கி இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும். இது இல்லையே என நினைப்பவர்கள் உங்கள் தெரிந்தவர் அறிந்தவர்களிடம் கூறி தொட்டால் சுருங்கி மூலிகையை காய வைத்து தூளாக்கி அனுப்பச் சொல்லுங்கள். இது சர்க்கரை நோய்க்கு மட்டும் இன்றி இன்னும் சில நோய்களுக்கும் தீர்வாகிறது. முதலில் சர்க்கரை நோயிக்கு பார்ப்போம் காரணம் இதை குடித்தால் சர்க்கரையின் அளவு குறைந்துகொண்டே இருப்பதால் தொடர்ந்து குடிக்கவும் கூடாது. சர்க்கரை அதிக அளவில் இருந்தால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடித்து விட்டு பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.அதே போல் சிறு நீரக கற்கள், மூலம், போன்ற நோய்களுக்கும் இந்த தொட்டால் சிணுங்கி உதவுகிறது. இந்த மருத்துவ குறிப்புகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..!

Tuesday, November 27, 2018

அதிமதுரம் - மருத்துவப் பயன்கள்:

* அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீரில் கலந்து குடிக்க மலச்சிக்கல் நீங்கும். * திராட்சை, அதிமதுரம் இவற்றின் கஷாயத்துடன் காய்ச்சிய பாலைப் பருகச் செய்தால், சிறுநீரத் தடையால் தோன்றிய வயிறு உப்புசம் நீங்கும். * அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில், ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலையில் அழுத்தித் தேய்த்து, சிறிது நேரங்கழித்துக் குளிக்க, தலைமுடியின் குறைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டுப் போல பிரகாசிக்கும். * கரு சுருங்கிய போதும், குழந்தை இளைத்த போதும், குமிழம் வேர், அதிமதுரம் சேர்த்துக் காய்ச்சிய பாலில் சர்க்கரை கலந்து பருகச் செய்யவும். அப்படி ஒரு மண்டலம் செய்தால் விரைவில் தீர்வு கிட்டும். * அதிமதுரம், சுக்கு இவற்றைக் கஷாயம் காய்ச்சிப் பருகச் செய்தால் அடிபடுதலால் உண்டாகும் இளைப்பு தீரும். * தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும் தன்மை கொண்டது இந்த அதிமதுரப் பொடி. * அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும். * அதிமதுரம், மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. * அதிமதுர வேரின் சிறு துண்டுகளை பாலில் அரைத்து. துளி குங்குமப்பூ போட்டு கலந்து, இந்த கலவையை தலையில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வரவும். சில வாரங்களில் முடிகள் தோன்றும். * அதிமதுரச் சாறு அல்லது கஷாயம் மிதமான பேதி மருந்தாகவும், சிறு நீரகக் கோளாறுகளுக்கும், மார்பு மற்றும் வயிற்றுக்கு கோளாறுகளுக்கும் நல்ல மருந்தாகவும் இருக்கும். * அதிமதுரத்தை இஞ்சி மற்றும் பாலுடன் கலந்து சாப்பிட சோர்வு நீங்கும். * அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். * அதிமதுரத்துடன் சமஅளவு, தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு, கால் டீஸ்பூன் தேனில் குழைத்து, சிறிது சிறிதாக சுவைத்து உண்ண, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும். * அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர, உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும். * அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 அல்லது 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், பெண்களின் இயற்கை கோளாறுகள் நீங்கும். * அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும். * ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது இந்த அதிமதுரப் பொடி. * இளமையில் போக சக்தியை இழந்து விட்ட வாலிபர்களுக்கு அதிமதுரம் ஒரு புத்துயிர் அளிக்கும் அரு மருந்தாக பழங்காலத்தில் இருந்தே பயன்பட்டு வருகிறது. * அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க, இருமல் தணியும். அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு, 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். * அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும். * அதிமதுரத்து பொடியுடன் சிற்றாமணக்கு நெய் தடவி, குன்றி இலையை ஒட்டவைக்க பிடிப்பும், சுளுக்கும் குணமாகும். * தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும். * கண்கள் ஒளிபெற அதிமதுரத்தை முலைப்பால் விட்டு அரைத்து கண்ணில் விட வேண்டும். * போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள், ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தை, பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களை அதிமதுரம் நிவர்த்தி செய்யும். * சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு அதிமதுரம், கடுக்காய், மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து இளவறுப்பாய் வறுத்து சூரணம் செய்து தேனில் சாப்பிட குணமாகும். * சோம்புச் சூரணம், அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் பருகினால் இலகுவாக மலம் வெளியாகும். உள் உறுப்புகள் சூடு தணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும். * வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். * சூட்டினால் உண்டாகும் இருமல், மஞ்சள் காமாலை, உடல் உஷ்ணம் போன்றவை தனிய அதிமதுரப்பொடி உதவும். * அதிமதுரத்துடன் தேன் கலந்து சாப்பிட சர்க்கரை வியாதி குணமாகும்.

Thursday, November 22, 2018

கதை.ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு.

மிக அழகான பதிவு. அவசியம் முழுவதுமாக படித்துவிட்டு பிறர் பார்க்க பகிருங்கள்... ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு. மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார். இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. ”வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான். நேர்காணலுக்கு கிளம்பினான். “கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன். கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது. அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான். நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன. தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற் காக குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது. குழாயை கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான். வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக மாடிப்படியில் ஏறினான். நேற்று இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது. “விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான். மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார் கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே திகைப்பு. “நமக்கு இங்கு வேலை கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது. பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான். அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன. ”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான். இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை. கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான். சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே “நீங்கள் எப்போது வேலைக்கு சேருகிறீர்கள்?” என்று கேட்டார். “இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன். ”என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார், நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம். இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கி றோம்” என்றார். அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது.வேலைக்குச் செல்லும் இடத்திற்கு அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான் மகன். அப்பா நமக்காக எது செய்தாலும் சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திறாக மட்டுமே இருக்கும்! உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலையாவதில்லை, வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன. நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால், கட்டுப்படுத்துவதால் தான், நாம் காலரை தூக்கிக்கொண்டுகண்ணாடி முன் நின்று, அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே. தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள். " ஆனால் தந்தை அப்படி அல்ல " தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார். ஒரு சொல் கவிதை அம்மா! அதே ஒரு சொல் சரித்திரம் அப்பா! தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்து விடலாம். தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லி தான் கண்டுபிடிக்க முடியும். நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக பாதுக்காவலராக தெரிகிறார். தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தை கடத்தி விடுவாள். அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தனி மனிதன் தான். எனவே தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பலனுமில்லைல்லை, பிரயோஜனமுமில்லை. பிடித்திருந்தால் பகிருங்கள்!

Wednesday, November 21, 2018

ருத்திராட்சம் பற்றிய அனைத்து விதமான சந்தேகங்களையும் இப் பதிவு தீர்த்து வைக்கும்.... முழுமையாகப் படித்துவிட்டு....அர்த்தமுடன்"அணியுங்கள்......

ருத்திராட்சம் பற்றிய சித்தர் பெருமக்களின் பாடல்களில் கூறப் பட்டுள்ள தகவல்.... வடமொழியில் ருத்ராக்ஷம் என்பதற்கு “ருத்திரனின் கண்கள்” என்பதாக பொருள் கூறப்படுகிறது. ருத்திரன் என்பது சிவனை குறிக்கிறது. “ganitrus” என்ற மரத்தின் பழத்தில் இருந்து பெறப்படும் கொட்டைதான் இந்த உருத்திராட்சம். இந்த மரங்கள் உலகின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. நேப்பாள நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே தரத்தில் உயர்ந்தனவாக கருதப் படுகிறது..! இயற்கையில் உருத்திராட்ச மணி செம்மையும், கருமையும் கலந்தேறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். கடையில் விற்பனைக்கு கிடைக்கும் மணிகள் பெரும்பாலும் மெருகேற்றப்பட்டும், சாயமேற்றப் பட்டிருக்கும். .! #ருத்ராட்ஷத்தின் - மகிமை! #ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது? சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும் #யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா? ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது. *சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.* ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். #சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே? ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம் அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது)., #பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே? பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார். #எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா? பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். *ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.* #ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா? இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம். ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும். ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. *நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.* #நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா? முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். .. இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.... #ருத்ராட்ஷத்தில் எத்தனை முகம் ? #யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்? ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும். எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார். ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும். ஒன்றிலிருந்து பதினான்கு முகங்கள் உடைய ருத்திராக்க்ஷங்களும் கிடைக்கின்றன .... ஒரு முகம் கொண்ட ருத்ராக்க்ஷம் *********************************** இதை அடைவது மிக கஸ்டமாகும் .இது பகவான் சங்கரனின் திருப்பிறப்பாக இது கருதப்படுகிரது இதை ஒரு பாா்வை பாா்த்தாலும் அல்லது ஒரு முறை இதை தொட்டாலும் , உங்களது பாவங்களை எல்லலாம் நீங்கள் இழப்பிா்கள் இதை அணிந்தால் ,சிவ தத்துவம் எங்கும் பரவியுள்ளதை ஒருவா் உணர முடியும் ஒருவா் அவரது விருப்பங்கள் பூா்த்தி அடைந்து மோச்சத்திருக்கான வழியை காணுவாா். இரண்டு முகங்கள் ******************** இரண்டு முகம் கொண்ட மணிகள் மிகவும் அபூா்வமானவை இதுவும் அதிகம் கிடைக்காது அதனால் விலை கூடுதலாக இருக்கும் இது சிவனும் சக்தியும் கூடிய அா்த்த நாாிஸ்வரா் ஸ்வரூபமாகும் இதன் கிரகம் சந்திரன் இதனை அணிவதால் விலங்குகளைக் கொன்ற கொலை பாவம் போகும் ,கொடும் பாவமான ,பசுவைக் கொன்ற கோஹத்தி தோஷம் கூட விலகிவிடும் இதை அணிபவா்கள் செல்வம் ,சந்தோசம் ,மன அமைதி,மனதை ஒருமுகப்படுத்துதல் ,குண்டலினியை (பாம்பு சக்தி) எழப்புதல் ஆகியவற்றைப் பெறுவாா்கள், மூன்று முகங்கள்:, ******************* மூன்று முகம் கொண்ட மணிகளும்"அாிதானது சாதாரணமாகக் கிடைப்பதில்லை ,இதுவும் விலை கூடுதலானதே இது "சோம சூரிய அக்கினி" எனும் சிவனின் முக்கண் வடிவானவை. சூரியன்,சந்திரன், அக்கினிதேவன் முவருமே இதற்கு அதிபதிகள் இதன் கிரகம் அங்காரகன் எனும் செவ்வாய் இதனை அணிவதால் பெண்களைக் கொன்ற பஹு ஹத்தி தோஷம் கூட விலகும் ,பலவகை பாவங்கள் எாிந்து சாம்பலாகும் ,மேலும் இதனை அணிந்தவன் அண்மீகத்தில் மிக உயா்ந்த நிலைகளை எளிதாக அடைவான் சிவன் மகில்வாா் அக்கினி தேவன் அருள் தருவாா். நான்கு முகங்கள்: ******************* இது பிரும்மாவைக் குறிப்பதாகச் சொல்ப்படுகிறது .இதை அணிந்தால் பக்தி ,செல்வம்,மகிழ்ச்சி,மோஷம்,ஆகியவற்றைப் பெறலாம் . இருள் அழிக்கப்பட்டு.அறிவுக்கூா்மை என்னும் வெளிச்சம் பிராசிக்கிறது போின்பத்தை அடையலாம்.இதன் கிரகம புதன் இதனை அனைத்த்து துறைகளிலும் உள்ள படைப்பாளிகள் அணியலாம் கல்வி , கலைதிறன்,நுண்கலைகள் வளா்ச்சிபெறும் ஐந்து முகம் கொண்ட மணிகள் ********************************** சாதாரணமாக கிடைப்பவை, விலை குறைவானவை இது காலாக்கினிருத்திர ஸ்வரூபம் "உடையது அகோரம், தத்புருஸ்ம்,வாமதேவம்,சத்யோஜாதம்,ஈசானம் எனும் சிவனின் ஜந்து முகங்கள் இதற்க்கு அதிதேவதைகள்.இதன் கிரகம் குரு இதனை அணிவதால் மாமிசம் முதலான உண்ணத்தகாத உணவுகளை உண்ட பாவம் தீரும் . பலவகை பாவங்கள் நசிந்து,சிவசாரூபம் கிகை்கும் உண்ணும் உணவில் உள்ள விஷக் குற்றங்கள் விலகும். ஆறுமுகம் : ************ ஆறுமுகம் கொண்டமணிகள் அதே போல் ஆறு முகங்கள் கொண்ட ஷண்முகா் வடிவானவை.இதன் கிரகம் சுக்கிரன் இவ்வகை மணிகளை ஆணிந்து கொண்டால் தமிழ்க் கடவுளான முருகன் அருள் பெருகும் பிராம்மணா்களை கொன்ற பழி பாவங்கள் நிங்கி அனைத்திலும் வெற்றி கிட்டும் புகழ் பெருகும் புத்தி தெளிவும் மெய்ஞானமும் பாாிசுத்தமும் வாய்க்கும். ஏழு முகம்: *********** ஏழ முகங்கள் கொண்ட மணிகளும் மிக அாிதானவை பிரம்மதேவன் கட்டளையினால்,கீழேழ உலகங்களை அதலம்,விதலம்,சுதலம்,தராதலம்,ரசாதலம்,மஹாதலம்,எனும் சப்பதலோகங்களைில் உள்ள நாகா்களின் தலை னாக இருந்து ஆயிரம் தலைகளோடு கூடிய பூமியைதாங்கிய ஆதிசேஷன் அம்சமானவை இ்வகை மணிகளை .அணிவதால் பசுக்கொலை செய்த கோஹத்தி பாவமும் போகும் . பிறா் பொன் பொருளைத் திருடிய பாவங்கள் விலகும் சப்த்தமாதாக்களின் சப்த கன்னிகளின் பேரருள் கிட்டும்.நாதோஷங்கள் நிவா்த்தியாகும் . கல்வி,நுன்கலைகள் மேம்படும் யோகசக்திகள் கைவரும்.சிலா் சப்தமாதா்களும் சப்த்தகன்னிகளும் கூட இதற்கு பிரதிதேவதை என்பாா்கள். எட்டு முகம்: ************ எட்டு முகம் கொண்ட மணிகளும் அாிதானவை எளிதில் கிடைக்காதை இ்வ் வகை மணிகள், பல்லாளேச கணபதி,வரத கணபதி,சிந்தாமணி கணபதி,மயூரேச கணபதி,சத்தி கணபதி ,மஹா கணபதி,என்று அஷ்ட கணபதி ஸ்வரூபபானவை. இதன் கிரகம் ராகு.இதனை அணிந்து கொண்டுடால் அஷ்ட வசுக்களின் ஆசிகள் கி்ட்டும்.குருவை கொண்று குருபத்தினியைத் தீண்டிய கொடும் பாவங்களும் விலகி புண்ணியம் ஏற்படும் பொன் திருடிய குற்றங்கள் நீங்கும் அஷ்டமாசித்திகளும் வாய்க்கும் அஷ்ட லஷ்மிகளின் அருள் கி்ட்டும் பல வகையில் வரும் காாியத் தகைள் அகலும் கங்கை தேிவி மகிழ்ந்து அருள் புாிவாள். ஒன்பது முகம்: *************** ஒன்பது முகம் கொண் மணிகள் கூட அவ்வளவாக கிடைப்பதில்லை கைலை மலையின் எண்திசைகளிலும்காவல் புாியும் தேவதைகளான அசிதாங்க பைரா்,ருருபைரவா்,சண்டபைரவா்,குரோதபைரவா்,உன்மத்தபைரவா்,கபாலபைரவா்,சம்ஹரபைரவா்,என்ற அஷ்ட பைரா்களின் உற்பத்திக்கு மூலகாரணன் ஆன மஹா பைரவா் ஸ்வரூபமானவைகளே இந்த ஒன்பது மகம் கொண் ருத்திராக்க்ஷமணிகள் இதன் கிரகம் கேது இதனை அணிவதால் பில்லி சூனியம் விலகும் பலவகை கொலை பாவங்கள் பாம்புகளால் வரும் துன்பங்கள் நீங்கும் நவக்கிரஹ பீடைகள் விலகி ,நவசக்திகளின் பேரருள் கிட்டும் சித்தி முக்தி எற்படும் (இடது கை மணிக்க்டில் அணிக. பத்து முகம்: ************* பத்து முகம் கொண்ட மணிகள் அாிதானவை.இம் மணிகள் மத்ஸ்ய, கூா்ம,,நிசிம்ம,வாமன,பரசுராம,ராம,பலராம,கிருஸ்ண,கல்கி,அதாரங்களின் நாயகனான விஷ்னு ஸ்வரூபமானவை இவற்றை அணிவதால் பூத,பிரேத,பைசா,பிரம்மராக்ஷசா்களால் ஏற்ப்படும் ஆபத்துகள் விலகும் ஏவல் பில்லி சுணியங்கள் வலுவிழந்து போகும்,பலவகையான பீடைகளிலிருந்து காப்பாற்றப் படுவீா்கள் . மிருகங்களால் வரும் ஆபத்துகள் விலகும் பதிணோரு முகம், ****************** பதிணோரு முகம் கொண்ட மணிகளும் அபூா்மானவை எளிதில் கிகை்காதவை இவ்வகை மனிகள் ,மஹாதேவன்,அரன்,ருத்திரன்,சங்கரன்,நீலோஹிதன்,ஈசானன்,கபாலி,சௌமியன் என்ற எகாதச ருத்திரா்களின் அம்சமானவை. இவற்றை அணிந்து கொண்டால்,பலவகை உயிாினங்கள் ,பறவைக் என பிராணிகளை கொன்ற பாவம் நீங்கும் வேதாகமங்களில் கூறப்பட்டுள்ள அஸ்வமேதாயகம் முதலான அனைத்துவிதமான யாகங்களையும்,விரதங்கள் பூஜை பண்ணியம் வரும் ,சிவஞானம் சித்திக்கும் ***************************************************************** #நம்முடைய புராதன மருத்துவ நூல்களில் சிறப்பாக சொல்லப்பட்ட இருபத்தேழ நக்ஷத்திரங்கள் பிறந்தவா்கள் அணிய வேண்டிய ருத்ராட்சம்.....! 1,அஸ்வினி = 9_2_3 முகம் 2,பரணி = 6 முகம் 3,காா்த்திகை = 1_3_11_12 முகம் 4,ரோகிணி - 2_3 முகம் 5,மிருகசீாிடம் = 3 முகம் 6,திருவாதிரை = 8_5_11 முகம் 7,புணா்பூசம் = 5 முகம் 8,பூசம் = 7 முகம் 9,ஆயில்யம் = 4 முகம் 10,மகம் = 9_2_3 முகம் 11,பூரம் = 6 முகம் 12,உத்திரம் = 1_3_11_12 முகம் 13,ஹஸ்தம் = 2_3 முகம் 14,சித்திரை = 3 முகம் 15,சுவாதி = 8_5_11 முகம் 16,விசாகம் = 5 முகம் 17,அனுஷம் = 7 முகம் 18,கேட்டை= 4 முகம் 19,மூலம் = 9_2_3 முகம் 20,பூராடம் = 6 முகம் 21,உத்திராடம் = 1_3_11_12 முகம் 22,திருவோணம் = 2_3 முகம் 23,அவிட்டம் = 3 முகம் 24,சதயம் = 8_5_11 முகம் 25,பூரட்டாதி = 5 முகம் 26,உத்திரட்டாதி = 7 முகம் 27,ரேவதி = 4 முகம் ******************************** #ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்ட பலன்கள் ? நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க. இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 4 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும். #ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா? சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்... அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர். இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும். ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,. நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே...!!! ********************** இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே? உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்? அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் ருத்ராட்சம் அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார். அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம். ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது.... அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் ருத்ராட்சம் அணிந்து அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்...!

Thursday, November 15, 2018

கருகருவென நீளமாக கூந்தல் வளர வேண்டுமா..

கருகருவென நீளமாக கூந்தல் வளர வேண்டுமா..? கொய்யா இலையை இப்படி பயன்படுத்துங்க..! தலைமுடி உதிர்தல் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாருக்கும் ஏற்படும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. தலை முடி உதிர்தல் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு பல்வேறு உத்திகளை கையாள்வதில் பெண்கள் கில்லாடிகள். இந்த விடயத்திற்கு பணம் செலவழிக்காமலேயே தீர்வு காண முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், கொய்யா இலையை உபயோகித்தே தலை முடி உதிர்தல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். கொய்யா இலையில் உள்ள விட்டமின்-பியானது தலை முடி வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றது. கொய்யா இலையானது தலை முடியின் வேர்ப்பகுதியை வலுவாக்கி தலை முடி உதிர்வதை தடுக்கின்றது. மேலும் கொய்யா இலையில் உள்ள விட்டமின்-ஏ, லைக்கோப்பின் மற்றும் பைபர் என்பன தலை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி புரிகின்றது. தலை முடிக்கு கொய்யா இலையை உபயோகிப்பதன் மூலம் பெறப்படும் நன்மைகள் 01. இளவயதிலேயே சொட்டை ஏற்படுவதென்பது பலருக்கு மனக்கக்ஷ்டத்தை ஏற்படுத்தும் விடயமாகும். எனினும் கொய்யா இலையை பயன்படுத்துவதன் மூலம் தலை முடி உதிர்வது தடுக்கப்படும். 02. ஒருவருக்கு தலைமுடி உதிர்வதென்பது பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடும். மனஅழுத்தம், பதற்றம், சுகாதாரமற்ற உணவுப் பழக்கவழக்கம் மற்றும் ஹோர்மோன் சமமின்மை போன்றவை இதற்கான சில உதாரணங்களாகும். எனினும், கொய்யா இலையானது மேற்குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைவதுடன் முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகின்றது. 03. நாம் உபயோகிக்கும் ஷhம்பூக்கள், சூரிய ஒளிக்கதிர்கள் அல்லது வளி மாசு காரணமாகவும் நமது மண்டை ஓடு பாதிப்படையக் கூடும். அதன் விளைவாக முடி உதிர்தலும் ஏற்படும். எனினும், கொய்யா இலையை உபயோகிப்பதன் மூலம், மண்டை ஓடு ஈரலிப்பாக மாற்றப்படுவதுடன் தலை முடி உதிர்தலும் தடுக்கப்படும். அதுசரி, மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு கொய்யா இலையை எவ்வாறு தயார் செய்து கொள்வது? தேவையான பொருட்கள் 01. ஒரு லீட்டர் தண்ணீர் 02. ஒரு கைப்பிடி கொய்யா இலை செய்முறை கொய்யா இலைகளை முதலில் நன்கு கழுவிக் கொள்ளவும். பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி அதில் கொய்யா இலைகளை இட்டு நன்கு கொதிக்க விடவும். குறித்த தண்ணீரை 20 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும் அல்லது பாத்திரத்தில் உள்ள தண்ணீர் அரைவாசிக்கு வற்றும் வரை கொதிக்க விடவும். பின்பு இலையை வடித்தெடுத்து அந்த நீரை வேறு பாத்திரத்தில் ஊற்றி ஆற விடவும். எவ்வாறு பயன்படுத்துவது? நாம் தயாரித்த தண்ணீரால் தலை முடியை கழுவுவதற்கு முன்னதாக தலை முடியை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் விரல்களினால் குறித்த கலவையை மண்டை ஓடு, வேர்ப் பகுதி மற்றும் அடிப் பகுதியில் பூசி நன்கு மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும். பின்பு சாதாரண தண்ணீரால் அதனை நன்கு கழுவி விட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

மண்டலம் பற்றிய தகவல்

48 நாள் என்பது ஒரு மண்டலம் இது ஒரு கணக்கு. இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் என்றும் சொல்லலாம் .. சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா ? அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன. அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா ? அதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும். என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை. இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர்.. நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா ? அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம். ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும கவனிப்போம்.... கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள்> 9+12+27=48 எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை. எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் ( ஒரு மண்டலம் ) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன. இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். அதே போல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும் ( மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத ) கை கூடுகின்றன. நம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள். ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....! அறிவியல் உண்மை விளங்கும்.

மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்.

குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன. சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும். இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள். குறிப்பு 1 : கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும். குறிப்பு 2 ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம். குறிப்பு 3 ; ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும். குறிப்பு-4 : வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும். குறிப்பு- 5 : மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம். குறிப்பு- 6 : கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும். குறிப்பு- 7 : வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஆன்மீக தகவல்

#தோஷம்_நீங்க - #ஏற்ற #வேண்டிய_தீபங்கள் 1. ராகு தோஷம் - 21 தீபங்கள் 2. சனி தோஷம் - 9 தீபங்கள் 3. குரு தோஷம் - 33 தீபங்கள் 4. துர்க்கைக்கு - 9 தீபங்கள் 5. ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள் 6. திருமண தோஷம் - 21 தீபங்கள் 7. புத்திர தோஷம் - 51 தீபங்கள் 8. சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள் 9. காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள் 10. களத்திர தோஷம் -108 தீபங்கள் #வலம்_வருதல் 1. விநாயகர் - 1 அல்லது 3 முறை 2. கதிரவன் (சூரியன்) - 2 முறை 3. சிவபெருமான் - 3, 5, 7 முறை (ஒற்றைப்படை) 4. முருகன் - 3 முறை 5. தட்சினா மூர்த்தி - 3 முறை 6. சோமாஸ் சுந்தர் - 3 முறை 7. அம்பாள் - 4, 6, 8 முறை (இரட்டைப்படை) 8. விஷ்ணு - 4 முறை 9. இலக்குமி - 4 முறை 10. அரசமரம் - 7 முறை 11. அனுமான் - 11 அல்லது 16 முறை 12. நவக்கிரகம் - நவகிரகங்கள் நம்மை சுற்றுகின்றன அதனால் நாம் அவர்களை சுற்ற தேவையில்லை 13 பிராத்தனை - 108 முறை * மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது. #அஷ்டமி, #நவமி, #அமாவாசை, #பவுர்ணமி, #மாதப்பிறப்பு, #சோமவாரம், #சதுர்த்தி (#பிரதோசம் ) #போன்ற #நாட்களில் #வில்வ #இலை #பறிக்கக்கூடாது. இதற்கு முதல் நாள் மாலையிலேயே வில்வ இலை பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். * மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது. ... * கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது. * விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது. * தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது. * கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது. #வணங்கும்_விதி பிரம்மா , விஷ்னு , சிவன் இம்மூவரை வணங்கும் போது , சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும். மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும். குருவை வணங்கும் போது , நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும். அரசரையும் , தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும். ... பிராமணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும். தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும். மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.பூமியில் நெடுஞசாண் கிடையாக வணங்க வேண்டும். ஆனால் பெண்கள் , மாதா , பிதா , குரு , தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது..

Thursday, November 8, 2018

விமானத்தில் குழந்தைகள் இறப்பு எதனால் ஏற்படுகிறது?

விமானத்தில் குழந்தைகள் இறப்பு எதனால் ஏற்படுகிறது?.. பெற்றோர்களே கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை வளர்ப்பு என்னும் விஷயம் அனைத்து பெற்றோரும் முழுதாக அறிந்திருக்க வேண்டிய ஒரு விஷயம்; குழந்தைகளுடன் விமானத்தில் பயணிக்கும் பொழுது பெற்றோர்கள் தங்களை அறியாமல் செய்த தவறால் குழந்தைகள் உயிர் இழந்து உள்ளனர். சமீபத்தில், ஏன் இன்று கூட இது போன்ற சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்து உள்ளது. அமெரிக்காவில் இருந்து குழந்தையுடன் விமானத்தில் பயணித்த தம்பதியர் கட்டார் வழியாக ஹைதராபாத்தை அடைந்து உள்ளனர். ஹைதராபாத்தில் இறங்கிய பின் குழந்தையின் உடல் நிலை சீராக இல்லை என மருத்துவ பரிசோதனை செய்த போது, மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறி உள்ளனர். எதனால் குழந்தை இறந்தது? என்ன நடந்தது? தவறு யாருடையது போன்ற கேள்விகளுக்கான விடையையும், குழந்தைகளுடன் விமானத்தில் பயணிக்கும் பொழுது பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் இந்த பதிப்பில் படித்து அறியலாம். குழந்தையுடன் பயணிக்கலாமா? குழந்தைகளுடன் விமானத்தில் நிச்சயமாக பயணிக்கலாம்; அதில் எந்த வித தவறும் இல்லை. அதனால் எந்த ஒரு அபாயமும் நேரப்போவதும் இல்லை. குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை! பெற்றோர்கள், குழந்தைகளுடன் விமானத்தில் பயணிக்கும் பொழுது என்ன நடக்க வாய்ப்பு உள்ளது, பயணத்தின் பொழுது என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி அறிந்து செயல்பட வேண்டும். விழிப்புணர்வு இல்லை.. இந்த ஹைதராபாத் சம்பவம் மட்டும் அல்ல, இதற்கு முன்னும் கூட ஒரு தம்பதியர் தங்களின் குழந்தையை விமான பயணத்தின் பின் இழந்து உள்ளனர். இது போன்ற சம்பவம் முன்னாலும் நடந்து உள்ளது; இப்போதும் நடந்து வருகிறது. இதை பற்றிய விழிப்புணர்வு பெற்றோருக்கு இல்லாததனால் தான் இந்த குழந்தைகள் பரிதாபமாக தங்கள் உயிரை இழந்து உள்ளனர். எதனால் இறப்பு நேர்கிறது? குழந்தைகளுக்கு விமான பயணத்தின் பொழுது தாய்மார்கள் பாலூட்டும் பொழுது, அல்லது உணவு ஊட்டும் பொழுது சரியான முறையை கடைபிடிக்காததால் தான் பெரும்பாலுமான நேரங்களில் இந்த மாதிரியான குழந்தைகளின் உயிர் இழப்பு ஏற்படுகிறது. சாதாரண நிலையில் சாப்பாடு அளிப்பதற்கும், அதாவது தரையில் இருந்து சாப்பாடு அளிப்பதற்கும் – ஆகாயத்தில் பறக்கும் பொழுது சாப்பாடு ஊட்டுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. இந்த வித்தியாசத்தை பெற்றோர்கள் அறிய தவறியதால் தான் இந்த குழந்தைகள் உயிர் இழந்து உள்ளனர். சரியான முறை எது? விமான பயணத்தில், விமானம் டேக் ஆஃப் நிலையில் இருக்கும் பொழுதோ, லேண்டிங் ஆகும் பொழுதோ, சரியற்ற உயரத்தில் மாறி மாறி பறந்து செல்லும் பொழுதோ குழந்தைக்கு உணவு ஊட்ட கூடாது; மீறி ஊட்டினால், குழந்தையின் உடலில் உணவை ஏற்றுக் கொள்வதில், செரிப்பதில் என பல பிரச்சனைகள் ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழக்க நேரிடும். படுக்க வைப்பதால்.. குழந்தைக்கு உணவு அழுத்த பின், உடனே உங்கள் மேல் அல்லது சீட்டில் குழந்தைகள் படுத்து கொள்வதால் அல்லது குழந்தையை நீங்கள் படுக்க வைப்பதால் குழந்தையின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஏற்கனவே உணவு ஊட்டியதால் ஏற்பட்ட ஆபத்து மேலும் தீவிரமடைகிறது. இது போன்று தரையில் இருக்கும் பொழுது குழந்தையை சாப்பிட்ட பின் உடனடியாக படுக்க வைத்தால் கூட குழந்தையின் உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும். முன்னோர் வாக்கு! இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிந்து தான் நம் முன்னோர்கள் குழந்தைக்கு உணவு ஊட்டிய பின் அது ஏப்பம் விடும் வரையில் நிமிர்த்தி வைத்து இருந்து, குழந்தை ஏப்பம் விட்ட பின் தான் அதனை படுக்க வைக்க வேண்டும் என்று அன்றே கூறி சென்றுள்ளனர்; இதையே தான் இன்று ஆய்வாளர்களும் குழந்தைகளை பரிசோதித்து விட்டு கூறியுள்ளனர். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் ஏனோ தானோ என்று எதையும் சரியாக செய்யாமல் இருந்தால், செய்ய தவறினால் இது போன்ற இழப்புகள் நேரிடலாம். SIDS – காரணம்! SIDS என்னும் திடீர் குழந்தை இறப்பு என்னும் பிரச்சனைக்கு கூட இந்த உணவு ஊட்டிய பின் நடக்கும் நிகழ்வுகள் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சந்தேகின்றனர். குழந்தைகளை சாப்பிட்ட பின் உடனடியாக படுக்க வைப்பது நுரையீரல் மற்றும் இருதயத்தில் அழுத்தத்தை குடுக்க காரணம் ஆகும். இதனால் குழந்தையின் இருதயம் மற்றும் நுரையீரல் அழுத்தத்தை சந்திக்கிறது. இந்த விளைவுகளால் குழந்தையின் உடல் நிலை மேலும் தீவிரமடையலாம். குழந்தை தாயின் மார்பில் பால் குடித்தாலும் கவனமாக இருக்க வேண்டும்; பாட்டிலில் பால் அளித்தால் அதிக கவனமாக இருக்க வேண்டும். என்ன செய்வது? குழந்தைகளின் தேவையற்ற உயிர் இழப்புகளை தவிர்க்க, பெற்றோர் தங்கள் தவறை திருத்தி கொள்ள விமான பயணத்தில் சில விதிகளை கடைபிடிக்க வேண்டும். பயணம் குறுகிய நேரம் கொண்டதாக இருந்தால், கிளம்பும் முன் அல்லது பயணம் முடிந்த பின் குழந்தைக்கு உணவு அளிக்கும் வகையில் ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும்; நெடிய பயணமாக இருந்தால் விமானம் ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்து, அந்த உயரத்திலேயே கொஞ்ச நேரம் பயணிக்கும் என்று உறுதி செய்து கொண்ட பின் குழந்தைக்கு உணவு ஊட்டலாம் இவ்வாறு ஊட்டிய பிறகும் ஊட்டிய உணவு குழந்தையின் வயிற்றை அடைந்து செரிமானம் ஆகும் வரை குழந்தையை உயர்த்தி பிடித்து, குழந்தை ஏப்பம் விட்டதும் அதனை உட்காரவோ படுக்கவோ வையுங்கள்!