Tuesday, October 16, 2018

ருத்ராட்சை - சில சுவாரஸ்ய தகவல்கள்

ருத்ராட்சையை நாம் பார்த்திருப்போம். ப்ரவுன் நிற மணிகளான இவைகளை, சிவபெருமானின் பக்தர்கள் கழுத்தில் அல்லது கையில் அணிவார்கள். ருத்ராக்ஷா என்ற வார்த்தையில் இருந்து ருட்ராட்சை அதன் பெயரை பெற்றது. ருத்ராக்ஷா என்பது 'ருத்ரா' (சிவன் என்று பொருள்) மற்றும் 'அக்ஷா' (கண்கள் என்று பொருள்) என்ற வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானதே ருத்ராட்சை மரம் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் அது ருத்ராட்சை என்ற பெயரை பெற்றது. இமயமலை வட்டாரத்தில் இந்த ருத்ராட்சை மரங்கள் அதிகமாக காணப்படுகிறது. இந்த மரம் நீடித்து வாழ, குறைந்த தட்பவெப்ப நிலையும் மாசற்ற சுற்று சூழலும் இருந்தாக வேண்டும். அதனால் தான் நேபால் மற்றும் ஹிமாசல பிரதேச மலை வட்டாரங்களில் மட்டுமே இது காணப்படும். இந்த ருத்ராட்சை மரம் 100 ஆண்டு காலம் வரை நீடித்து நிற்கும். ருத்ராட்ச மணிகளை மாலையாய் கோர்த்து தொடர்ச்சியான வழிபாடுக்கு அதனை பயன்படுத்தலாம். இந்த ருத்ராட்சை மணிகள் ஒரு முகம் முதல் 21 முகங்கள் வரை கொண்டுள்ளதாகும். இருப்பினும் 1-14 முகங்கள் கொண்ட ருத்ராட்சையை மட்டுமே மனிதர்கள் அணிகிறார்கள். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. அதற்கு வியக்கத்தக்க சக்திகளும் உள்ளது. ருத்ராட்சை அணிவதால் பல வகையான நோய்கள் குணமடைந்து ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. ஒரு முக ருத்ராட்சை என்பது சிவபெருமானின் மிக நெருங்கிய வடிவமாக பார்க்கப்படுகிறது. இவ்வகை ருத்ராட்சையை அணிபவருக்கு அனைத்து வகையான சந்தோஷமும் செல்வ செழிப்பும் பெருகும். இரண்டு முக ருத்ராட்சை அனைத்து வகையான ஆசைகளையும் நிறைவேற்றும். மூன்று முக ருத்ராட்சை அறிவை நாடுபவர்களுக்கானது. நான்கு முக ருத்ராட்சை என்பது பிரம்மனின் வடிவத்தை குறிக்கும். இவ்வகை ருத்ராட்சை ஒரு மனிதனுக்கு தர்மம், அர்தா, காமம் மற்றும் மோட்சத்தை அளிக்கும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தடங்களை நீக்க ஐந்து முக ருத்ராட்சை உதவுகிறது. ஆறு முக ருத்ராட்சை முருக பெருமானை குறிக்கிறது. வலது கையில் கட்டிக் கொண்டால், பிரம்மஹத்தி பாவங்கள் போகும். அளவுக்கு அதிகமான நிதி நஷ்டம் அல்லது போதிய அளவில் சம்பாதிக்க முடியாதவர்கள் ஏழு முக ருத்ராட்சையை அணியலாம். . எட்டு முக ருத்ராட்சை பைரவரை குறிக்கிறது. இவ்வகை ருத்ராட்சை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. துரதிஷ்டவசமான விபத்துகளில் இருந்தும் காக்கும். ஒன்பது முக ருத்ராட்சை ஒன்பது வடிவிலான சக்தியை குறிக்கிறது. இவ்வகை ருத்ராட்சையை அணிபவர்களுக்கு அனைத்து விதமான சந்தோஷங்களும் வளமையும் வந்து சேரும். 10 முக ருத்ராட்சை விஷ்ணு பகவானை குறிக்கும். இந்த ருத்ராட்சையை அணிபவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் கிட்டும். பதினொன்று முக ருத்ராட்சை வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி கிட்டிட பதினொன்று முக ருத்ராட்சையை அணியவும். சந்தோஷத்திற்கும் ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் பனிரெண்டு முக ருத்ராட்சையை அணிய வேண்டும். "ஓம் க்ரோம் ஷ்ரோம் ரோம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும். விஷ்வதேவர்களை குறிக்கிறது பதிமூன்று முக ருத்ராட்சை. அதிர்ஷ்டத்திற்காக அணியப்படுகிறது இந்த ருத்ராட்சை. பதினான்கு முக ருத்ராட்சையும் சிவபெருமானையே குறிக்கும். இந்த ருத்ராட்சை உங்கள் நெற்றியை தொடுமாறு அணிய வேண்டும். பாவங்கள் நீங்க இதனை அணியலாம்.

தங்கம்

தங்கம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பதை அருதியிட்டுக் கூறமுடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கு 2600 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் தங்கத்தை பயன்படுத்தியுள்ளனர். அந்நாட்களில் எகிப்தும், லிபியாவும் தான் தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாக இருந்தன. லிபியாவில் 6-ம் நூற்றாண்டில் தங்கத்தில் காசுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டிருந்தனர். தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பளபளப்பாகவே இருக்கும். ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும் மூன்று பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த இராஜ திரவம் என்ற கலவையில் மட்டுமே தங்கம் கரையும். தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது. பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது. தங்கத்தின் உருகுநிலை 1064.43 டிகிரி செல்சியஸ் பூமியின் மேற்பரப்பில் ஒவ்வொரு 100 கோடி பாகத்தில் 3ல் ஒரு பகுதியில்தான் தங்கம் உள்ளது. இன்று புழக்கத்தில் இருக்கும் தங்கத்தில் பெரும் பகுதி வரலாற்றுக்காலத்தில் வெட்டி எடுக்கப்பட்டது. தற்போது, உலகம் முழுவதும் 15 சுரங்கங்களில் இருந்து ஆண்டுக்கு 2500 டன் தங்கம் எடுக்கிறார்கள். உலகில் அதிகமாக தங்கம் கிடைக்கும் நாடு தென்னாப்பிரிக்கா. தங்கம் அதிகமாக புழங்கும் நாடு அமெரிக்கா. உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தங்கம் கிடைக்கிறது. இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் 'கோலார்' என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. கோலார் தங்க வயல் பகுதியில் முதன்முதலில் தங்கம் எடுத்தவர் திப்பு சுல்தான். 1880ம் ஆண்டு 'ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ்' நிறுவனம் முறையாக சுரங்க வேலையை தொடங்கியது. 1986ம் ஆண்ட அரசுடமையாக்கப்பட்டது. உலகில் கிடைக்கும் தங்கத்தில் 4ல் 3 பாகம் நகை செய்யவே பயன்படுகிறது. தங்கத்தின் தரத்தை அறிய தற்போது ஹால்மார்க் பி.ஐ.எஸ் முத்திரைகள் உள்ளன. ஆனால், ஆரம்ப காலத்தில் தங்கத்தை பல்லால் கடித்துப் பார்த்து நம்பகத் தன்மையை சோதிக்கும் முறை இருந்தது. தங்கம் லேசான உலேலகம் என்பதால், பல் அடையாளம் பதிந்துவிடும். அந்த அடையாளத்தை வைத்துதான் தங்கத்தை தரம் பார்த்தனர். தங்கம் 'காரட்' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும். தங்கம் மென்மையான உலோகம் ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது வெள்ளியைக் கலந்து செய்யப்பட்ட நகை , நாணயம், பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும். மற்ற உலோகங்களைப் போல் அல்லாமல் அரிதாய் கிடைப்பதால், தங்கத்திற்கு மதிப்பு அதிகம். இதனால், வரலாற்று காலத்தில் இருந்தே ஒரு நாட்டின் பண மதிப்பை நிர்ணயிக்கும் அளவுகோலாக தங்கம் இருந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியில்தான் உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பில் உள்ளது. இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் 3 சதவீதத்தை அந்த வங்கி வைத்துள்ளது. ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்த்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது. அமெரிக்க அரசு ஒரு காலத்தில் 1 டிராய் அவுன்ஸ் தங்கம் (31.1 கிராம்) என்பதை 20.67 டாலருக்கு சமமாக வைத்திருந்தது. 19-ம் நூற்றாண்டில் பெரிய அளவில் தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், கிராக்கி அதிகரித்தது. இதனால், டாலர் மதிப்பு சரிந்துகொண்டே போனது. உடனே மேற்கொண்டு சரிவை தடுக்க ஐரோப்பிய, அமெரிக்க வங்கிகள் மார்க்கெட்டில் மாற்றம் செய்ய தீர்மானித்தன. அந்நேரத்தில் பொருளாதார சூழ்நிலைகளால் தங்கத் தொகுப்பில் சிக்கல் வந்ததால், 1968ம் மார்ச் 17ல் இரட்டை விலை முறை வந்தது. அதில் ஒன்றுதான் வெளிச்சந்தையில் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது. பின்னர், 1975ல் இந்த முறை போய், முழுக்க முழுக்க வெளிச்சந்தைப்படியே தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டதால், விலை பறக்க ஆரம்பித்தது. 1844ம் ஆண்டு முதல் 1914ம் ஆண்டு வரை 11.6 கிராம் (ஒன்றரை பவுன்) தங்கம் 21 ரூபாய் 18 காசுகளாக இருந்தது. தற்போது 22 ஆயிரத்தை கடந்துவிட்டது. தங்கத்தின் விலை உயர்வுக்கு உற்பத்தி குறைவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, தேவை அதிகரிப்பு ஆகியவை விலை உயர்வுக்கு காரணங்களாக இருக்கின்றன.

Monday, October 15, 2018

கனவுகள் சிறந்த வழிகாட்டிகள்....!

நிறைய கனவுகள் அர்த்தமற்றதாகவே இருந்து விடும். ஆனால் ஒரு சில கனவுகள் மட்டும் விழித்த பின்பும் மறந்து விடாமல், அந்தக் கனவு எனக்கு எதையோ சொல்லியது போன்றதொரு உணர்வை ஏற்படுத்தியது, அது என்னவாக இருக்கும் என்று அன்று முழுவதும் ஆழ்மனத்தில் ஒரு தேடலோடு காத்திருக்கும். அது போலத்தான் அன்றும் என் உள்ளுணர்வு கொடுத்த உந்துதலில் நான் கண்ட கனவின் பலனைக் கண்டறிய இணையத்தில் எனது கனவு சொல்ல வந்ததைத் தேடும் படலத்தைத் தொடர்ந்தேன். இதோ.....நான் கண்ட கனவுக்கு பலனும் கிடைத்தது. இதே போன்று என்றாவது என் போலவே கனவு கண்டு தேடும் பலருக்கோ அல்லது ஒரு சிலருக்கோ....எனது இந்தப் பதிவு உபயோகமாயிருக்கும் என்ற எண்ணத்தில், நான் படித்ததை இணைக்கிறேன். இதைத் தொகுத்தவர்களுக்கு எனது நன்றிகள். கனவுகளும் அதன் பலன்களும் இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும். நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம் 1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். 2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும். 3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். 4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும். 5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும். 6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள். 7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம். 8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம் நற்பலன் தரும் கனவுகள் 9. ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு. 10. வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். 11. கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். 12. விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும். 13. திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும். 14,ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.v இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். 15. சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். 16. நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும். 17. தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும். 18. இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும். 19. திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும். 20.தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும். 21. உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும். 22.கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும். 23. ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும். 24. மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். 25. கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும். 26. மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும். 27. வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும். 28. மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும். தீய பலன் தரும் கனவுகள் 29. பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும். 30. தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும். 31. எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும். 32.எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும். 33.இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள். 34.பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும். 35.புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும். 36. குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும். 37.நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார். 38. ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும். 39. நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும். 40. முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும். 41. முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும். 42,சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும். 43.பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள். 44.காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும். இரவில் காணும் கனவுகளுக்கே பலன் தரும் நிலையாகும் பகற்கனவு பலன் தராது 1,)சந்திரனை,சூரியன் பிடிப்பதாகக் கனவு கண்டால்-யோகம் தரும் 2,)பழமரங்கள்,மலைப்பிரதேசம் இவைகளில்-யோகமாகும் 3,)மரங்கள் பழங்கள் அதிகமாக இருக்க மாமரம்,புளியமரம் பாக்குமரம் தென்னைமரம் இவற்றில் காய்களும் நிறைந்திருக்க-செல்வம் சேரும் 4,)எதிலும் ஏறுவதாகக் கனவு கண்டால்-உயர்நிலை பெறுவார்கள் 5,)ஆற்றுநீரை, கடல் அலையைப் பிடிப்பதாகக் கனவு கண்டால்-செல்வம்சேரும் 6,)பெற்றோர்,நண்பர்களை,மக்களைப்பிடிப்பதாக கனவு கண்டால்-புகழ் பெறுவார்கள் 7,)மதுகுடிப்பதாகவும்,தாசிகளுடன் உறவு கொள்வதாகவும் கனவு கண்டால்-மகிழ்ச்சியான காலமாகும் 8,)வெள்ளைப் பட்டு அணிந்த அழகான பெண்ணைக் கண்டால்-செல்வம்சேரும் 9,)அருவருப்பான மனிதர்கள், காகம், மீன், இரத்தம், விலைமாதர் இவர்களைக் கனவில் கண்டால்-செல்வம்சேரும் 10,)இளம் பெண், மாலை அணிந்து வெள்ளை உடை அணிந்து, வாசனைப்பொருட்களை படுக்கையில் அணிந்து, அமர்ந்திருந்தால்-புகழ்பெறும் காலம் 11,)இளம் பெண் தாமரை மலர் ஏந்தி வருவதைப் பார்த்தால்-அதிர்ஷ்டம் வரும் காலம் 12,)காளைமாடு அரசன், பசு,குதிரை,பிடிப்பதாகக் இவைகளைப் கண்டால்-மேன்மை பெறும் குடும்பம் 13,)சேவல்,தரும் ஆபத்து மிருகங்கள்,பெரிய மரம்,பறவை தங்கநிற இவைகளைப் பிடிப்பதாகக் கண்டால்-பெறும் காலம் அதிர்ஷ்டம் 14,)அரசனுடன் இருப்பதாகவும் தேவர்களுடன் பேசுவதாகவும் கண்டால்-உயர்வடையும் நிலையைத் தரும் 15,) வீடு கட்டுவதாகவும்,மரம் நடுவதாகவும், பண்ணை அமைப்பதாகவும் கண்டால் கனவு-புகழ்பெறுவார்கள் 16,)மலர்.தாமரை,வெள்ளைப்,பூமாலை,ஆபரணம் இவைகளைப் பெறுவதாகக் கண்டால்-பெறும்புகழ்பெருவார் 17,)மாம்பழம்,பசு சாணம்,இவைகளைக் கண்டால்-பெறும் காலம் அதிர்ஷ்டம் 18,)பனங்கள் குடிப்பதாகக் கண்டால் கனவு-பெறலாம் லாபம் 19,)காளையை ஓட்டிச் செல்வதாகவும் காரில் தனியாக ஓட்டிச் செல்வதாகவும் குதிரையைச் செலுத்துவதாகவும் கண்டால்-பெறும் அதிர்ஷ்ட காலமாகும் 20,)மிருகங்களுடன் சண்டையிடுவதாகக்கண்டால் அதிர்ஷ்டமான காலமாகும் 21,)பால் குடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம் 22,)பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால்-கனவு அதிர்ஷ்டம் கூடிவரும் காலமாகும் 23,)வெள்ளைநிறப்பாம்பு கையில் கடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம் ஒரு மாதத்திற்குள் 24,)துண்டிக்கப்பட தலை இரத்தம் கொட்டுவதாகக் கண்டால்-சேரும் செல்வபெறுக்கு 25,)இளமைக் காலம் முதுயாவதாகக் கனவு கண்டால்-அதாவது கிழவராவதாக கண்டால் நீண்ட ஆயுள் தரும் வரும் விபத்தால் ஆபத்து நீங்கிவிடும் 26,)திருக்கோவிலை அலங்காரம் செய்வதாகக் கனவு கண்டால்-காத்திருக்கிறது நல்ல அதிர்ஷ்டம் 27,)வெள்ளை பசு,வெள்ளை ஆடை,இவைகளைக் கண்டால்-நிச்சயம் வெற்றி 28,)வீடு எரிவதாகவும் தானியம் சேமிப்பதை கண்டால்-செல்வம்சேரும் 29,)தங்கச்சிலையாக-தான் மாறுவதாகக் கண்டால் கண்டம் விலகிவிடும் புகழ்சேரும் 30,)சாதம், பழவகைகள், ஆறு, கடல், தயிர், பால், நெய், மாங்கனி, சீனிவெல்லம், பாயசம், தண்ணீர்க்குடம், சாமரம், இரத்தம். சமைத்த மாமிசம், இவைகளைக் கையில் பிடித்தாலும் சுவைத்தாலும் வேதம் ஓதுவதைக் கேட்டாலும்-செல்வம் சேரும் 31,)தெய்வம், குரு, சாது, இஷ்ட தெய்வம், நல்வார்தை இவர்களுடன் பேசுவதாகவும், பாம்பு, கடிப்பதாகவும் பூச்சி கடிப்பதாகவும், பெண்களுடன் பேசுவதாகவும் கனவு கண்டால்-விளையும் நன்மை விரைவில் 32,)பணம், சாதம், வெற்றிலை, பாக்கு, தானியம், இவைகளைப் பெறுவதாகவும், சாதத்தை உண்பதாகவும், தான் பால் அபிஷேகம், செய்யப்படு வதாகவும் கனவு கண்டால்- விரைவில் லாபம் பெறுவார்கள் 33,)பிணைக்கைதியாக ஆக்கப்படுவதாகக்தான் கட்டுப்படுவதாக, கண்டால்-தேறிவரும் உடல்நலம்... தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன் ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பிரச்சனைகள் விலகும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். வறண்ட குளம் இருப்பது போல கனவு கண்டால், புதிய செலவுகள் அதிகம் உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல தகவல்கள், பணம் சம்மந்தபட்ட தகவல்கள் வர தாமதமாகும் அல்லது அதில் ஏதாவது தடைகள் உண்டாகும். குளத்தில் அதிக தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பெரிய இடத்தில் இருந்து ஆதரவும் அவர்களாலே பல நன்மைகளும் உண்டாகும். வெகுநாட்களாக இருந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். குளத்தில் தாமரை பூக்கள் இருப்பது போல கனவு கண்டால், பணவரவு உண்டாகும். கடன் சுமை குறையும். நல்ல நல்ல நண்பர்களின் ஆதரவினால் வியபார விருக்தியும் குடும்ப ஒற்றுமையும் ஏற்படும். குளத்தில் கால் கழுவுவதை போல கனவு கண்டால், தரித்திரம் விலகி முகதில் புதிய உற்சாகம் ஏற்படும். நாள்பட்ட வியாதிகளால் ஏற்பட்ட பணவிரயமும், உடல் பலவீனமும் அகலும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செல்வீர்கள். குளத்தில் இருக்கும்போது முதலை உங்கள் காலை பிடிப்பது போல கனவு கண்டால், எடுக்கும் முயற்சியில் வெற்றியை பெறுவீர்கள். இருந்தாலும் சிறிய பிரச்சனைகளையும் தடைகளையும் சந்திக்க நேரும். அதை மனதைரியத்தோடு சமாளித்தால் லாபகரமாக அமையும். குளத்தில் குளிப்பது போல கனவு கண்டால், இறைவனால் ஏற்படும் நன்மைகளை யாராலும் தடுக்க முடியாது. உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரும் வெற்றியும் யாராலும் பறிக்க இயலாது. அடுப்பு கரி வைரமாகும் ஆனால் வைரம் மறுபடியும் அடுப்புகரி ஆகாது. அதுபோல வெற்றியை பெற்ற நீங்கள் தோல்வியை சந்திக்க மாட்டீர்கள். தண்ணீரில் தத்தளிப்பது போல கனவு கண்டால், புதியதாக அறிமுகமான நட்பால் சிரமம் ஏற்படும். பணவிரயமும் உண்டாகும். நெருங்கிய உறவினர்களால் மனசங்கடங்கள் இருக்கும். திடீர் தனலாபமும் ஏற்படும். அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல கனவு கண்டால், பணவரவு இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். செல்வாக்கு உயரும். தண்ணீரில் உங்கள் வீடு இருப்பது போல கனவு கண்டால், செல்வம் உங்கள் இல்லம் தேடி வரும். உறவினர்களால் தொல்லையும் வீண் அலைச்சலும் ஏற்படும். நண்பர்களால் நன்மையும் பணவரவும் இருக்கும். தண்ணீரில் மூழ்குவது போல கனவு கண்டால், குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். பசுவை தேடி கன்று வருவது போன்று எப்போழுதோ செய்த நன்மைகளின் பலன்கள் உங்களுக்கு இப்போழுது கிடைக்கும். செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால், உங்களுக்கு நன்மை செய்யவே பிறந்தவர்கள் போல் சிலர் உங்களை தேடி வந்து உதவுவார்கள். அவர்களால் மனம் குளிர்ச்சியடையும். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். களைப்பாக இருப்பது போல கனவு கண்டால் என்ன பலன் களைப்பாக இருப்பது போல கனவு கண்டால், வெற்றிக்காக போராடி கொண்டு இருந்த நீங்கள், வெற்றி பெரும் காலத்தின் அருகில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று உணருங்கள். அதற்கான முயற்சிகளை இன்னும் வேகமாகவும் விவேகமாகவும் செய்தால் வெற்றி கனி உங்கள் கையில். எல்லோரும் உறங்குவது போல கனவு கண்டால், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் அந்தஸ்துக்கு வருவீர்கள். உயர்வான பலன்களை பெறுவீர்கள். பயணம் செய்வது போல கனவு கண்டால் என்ன பலன் வாகனத்தில் பயணம் செய்வது போல கனவு கண்டால், பொழுதுபோக்கான விஷயங்களில் அதிகம் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். புகழ் மங்கி இருந்தவர்கள் புகழின் உச்சிக்கே போவீர்கள். வாகனத்தை தள்ளி கொண்டு போவது போல கனவு கண்டால், பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் அவதிப்பட்டு கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு உதவ சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள். இரும்பு கனவில் வந்தால் என்ன பலன் இரும்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், உங்களை விட்டு பிரிந்தவர்கள் உங்களை தேடி வருவார்கள். வியபாரத்தில் எதிர்பாராத நன்மையும் லாபமும் ஏற்படும். உங்கள் மனதை மாற்ற சிலர் முயற்சிப்பார்கள். ஆனால் நன்மையுடன் முன்னேறி வரலாம். இரும்பை உடைப்பது போல கனவு கண்டால், பல நாட்கள் வாட்டி எடுத்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். ஆனால் வெற்றி உங்கள் பக்கமே ஏற்படும். சிந்திக்கும் ஆற்றலும், நிதான போக்கும் உண்டாகும். உடன் இருப்பவர்களால் மனநிம்மதி குறையும். இரும்பை வாங்குவது போல கனவு கண்டால், எதிர்பாராத சங்கடங்கள் வேலையில் சிரமங்கள் உண்டாகும். பணவிரயம் சந்தோஷம் குறையும். எச்சரிக்கையாக நடந்து கொள்வதே நல்லது. இரும்பை பிடித்து கொண்டு இருப்பது போல கனவு கண்டால், நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உங்களுக்கு உதவ பலர் முன்வருவார்கள். பொருளாதர நெருக்கடியிலிருந்து தப்பிப்பீர்கள். கைவிட்டுபோக இருந்த பொருட்களை காப்பாற்றி விடுவீர்கள். கனவில் அந்தனனைக் கண்டால் நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். தலப் பயணம் மேற்கொள்ள நேரும். புண்ணிய ஆலய வழிபாடு, புனித நீராடல் நிகழும். கனவில் அரசனைக் கண்டாலும், அரசரோடு தொடர்பு கொண்டாலும் நல்ல செல்வாக்காகும். மதிப்பும், உயர்வும் உண்டாகும். அரசர் போன்ற பெரும் பதவியில் உள்ளோரைக் கண்டாலும் இப்பலன் பொருந்தும். அமைச்சரோடு தொடர்பு கொள்வது போன்றோ அல்லது உரையாடுவது போன்றோ கனவு கண்டால், விரைவில் பதிவை உயர்வு கிடைக்கும். தொழில் துறையில் உள்ளவர்களுக்குத் தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். கனவில் அயல் நாட்டவர் தோன்றினால் அயல் நாட்டு வானிகத் தொடர்பு உண்டாகும். அயல் நாட்டிலிருந்து பொருள் வரவு உண்டு! அயல் நாட்டுத் தூதுவரைக் கனவில் கண்டால், புதியவர் ஒருவரின் தொடர்பு உண்டாகும். தாம் அயல் நாட்டுத் தூதுவராக நியமிக்கப்பட்டது போல் கனவு கண்டால் புதிய தொழிலில் அல்லது புதிய வணிகத்தில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். அதிசயமான - விந்தையான மனிதரைக் கனவில் கண்டால் தொழிலில் ஏமாற்றங்கள் உண்டாகும். நம்பிக்கை மோசடி உண்டாக வாய்ப்புண்டாகும். அறிஞரைக் காண்பது போலவோ, அல்லது அறிஞரோடு உரையாடுவது போலவோ கனவு கண்டால் அறிவுப் பெருக்கம் உண்டாகும். காடுகளிலும் மலைகளிலும் வாழக்கூடிய மலைவாசிகள் அல்லது ஆதிவாசிகள் கனவில் தோன்றினால், புதிய புதிய வருமானம் உண்டாகும். பழைய கடன் அடைபடும். நாடோடிகளையும், நரிக்குறவர்களையும் கனவில் கண்டாலும் இப்பலன் பொருந்தும். பிறர் ஒரு பொருளை ஏலம் விடுவது போலக் கனவு கண்டால், அவ்வாறு கனவு காண்பவர் வேலையில்லாதவராக இருந்தால் உடனே வேலை கிடைக்கும். அவ்வாறு கனவு கண்டவர் வேலையில் உள்ளவராக இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். பிறரைத் தான் ஏமாற்றுவது போல் கணவு கண்டால் எதிர்காலம் ஏற்றமுடையதாக அமையும். அவ்வாறு கனவு காண்பவர் வியாபாரியாக இருந்தால், வியாபாரம் ஏற்றம் பெரும். ஆடுகளைக் கனவில் காண்பது மிகவும் நல்லது. இவ்வாறு கனவு காண்பவர் ஒரு தொழிலில் ஈடுப்ட்டிருப்பவரானால், அத்தொழிலில் நல்ல முன்னேற்றமும், நல்ல இலாபமும் உண்டாகும். தொழிலில் ஈடுபடாதவராக இருந்தால், இக்கனவைக் கண்டபிறகு தயங்காது தொழ்லில் ஈடுபட்டு நல்ல இலாபம் அடையலாம். செம்மறியாடும், வெள்ளாடும் கலந்து நிற்பதைப் போலக் கனவு கண்டால் புத்திரப் பேற்றினை அடையலாம். ஆனால் அக்குழந்தை அற்ப ஆயுளில் மறைந்துவிடும். எருதுகளைக் கணவில் காண்பது எதிர்காலம் நன்மையுடையது என்பதனைக் குறிக்கும். னவில் எருதுகள் வண்டியில் பூட்டப்பட்டிருந்தால், இருக்கின்ற துன்பங்கள் நீங்கி எதிர்காலம் நன்மையாக அமையும். ஓர் எருது, தன்னைத் துரத்தி வருவது போலக் கனவு கண்டாலோ, அல்லது தன்னை முட்டித் தள்ளுவது போலவோ, அல்லது தன்னை முட்டித்தள்ளிக் காயம் உண்டானது போலக் கனவு கண்டாலோ தன்னைத் தாக்க எதிரிகள் தருணம் நோக்கி இருக்கின்றனர் என்பதைக் குறிக்கும். மலையை கனவில் கண்டால் என்ன பலன் மலை ஏறுவது போல கனவு கண்டால், சாதிக்கும் காலம் இது என உணர்ந்து, முயற்சிகளை செய்து வெற்றியும் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உடல் நலம் சுகம் ஏற்படும். மலையில் இருந்து விழுவது போல கனவு கண்டால், ஏதோ பெரிய ஆபத்து உங்களை நெருங்கி வருவதாக அர்த்தம். எச்சரிக்கையாகவும், புத்திசாலிதனத்துடனும் நடந்து கொண்டால் பாதகத்தில் இருந்து தப்பிக்கலாம். மலையை உடைப்பது போல கனவு கண்டால், பிரச்சனைகள் எல்லாம் தவிடுபொடியாகும். நிலையான அந்தஸ்துக்கு வருவீர்கள். உங்கள் செயலில் மந்த நிலை விலகி சுறுசுறுப்பு உண்டாகும். புகை கனவில் வந்தால் என்ன பலன் வீட்டில் சாம்பிரானி புகை போடுவது போல கனவு கண்டால், இல்லத்தில் கஷ்டங்கள் விலகும். தொழில் துறையில் இருந்த கடன்களை அகற்ற நல்ல வழிகள் கிடைக்கும். புதிய நட்பால் மேன்மையும் பழைய நட்பால் சங்கடங்களும் மாறி மாறி ஏற்படும். சிகரேட் பிடிப்பது போல கனவு கண்டால், மனதில் நீண்ட காலமாக இருந்த கவலை விலகும். பிரியமானவ்ர்களின் மனசங்கடத்திற்கு ஆளவீர்கள். சுறுசுறுப்பு குறையும். நெருப்பு கனவில் வந்தால் என்ன பலன் நெருப்பு உங்களை சுற்றி எரிவது போல கனவு கண்டால், உடல் பலவீனத்தால் அவதிப்பட்டு இருப்பவர்கள் அந்த பலவீனம் இருக்கும் இடம் தெரியாமல் உங்கள் உடலுக்கு புதிய தெம்பும் பலமும் கிடைக்கும். உங்கள் செயலுக்கு யாராவது இடைஞ்சல் செய்து கொண்டு இருந்தால், இனி அவர்களால் தொல்லைகள் இருக்காது. நெருப்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், முன் கோபத்தால் பெரிய வாய்ப்பை நழுவவிடுவீர்கள். ஆகவே எதற்கும் கோபப்படாமல நிதானமாக சிந்தித்து பேசுவது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் இருந்தால் லாபத்தை சம்பாதிப்பீர்கள். குடும்பத்தில் இறந்துபோன மூத்தோர்கள் கனவில் வந்தால், வீட்டில் திருமணம் போன்ற காரியம் கைகூடும். வீடு தீப்பிடித்து எரிந்தால் அந்தத் தெருவில் அல்லது வீட்டில் அல்லது உறவுகளில் யாரேனும் பெண்ணொருத்தி பூப்பெய்தப் போகிறாள். விதவைப் பாட்டிகள் வந்தால்- மகமாயி, பச்சிளம் பெண் குழந்தைகள் வந்தால்-கன்னிமார்கள். அன்னதானப் பந்தியில் சாப்பிடுவது மாதிரி வந்தால்- முருகன் அமுது (அன்னதானம்)போடச் சொல்கிறார், மாலை அலங் காரத்துடன் கும்பம் வந்தால் கல்யாணம், பனங்காய் மாதிரி புடைத்த தோள்களுடன் கருத்தமுறுக்கு மீசை, சூலமேந்தி வந்தால் நமக்கு கெடுதல் நினைத்தவர்களைப் தெய்வம் பழி வாங்குதல் அல்லது எதிரிக்கு மரணம் நேரும்... எனது அனுபவத்தில் மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு கனவின் பலனும் சரியாகத் தான் இருக்கிறது. இன்னும் வித விதமான கனவுகள் வரலாம். அதன் பலன் இதில் இல்லாமலும் இருக்கலாம். இருப்பினும், சாதாரணமாக நாம் காணும் பல கனவுகளின் பலன்களாக இதன் மூலம் அறிந்து கொள்ளுங்களேன். இன்னும் சொல்வார்கள், கனவென்பதே நமது ஆழ்மன எண்ணங்களின் வடிகால் என்று . அவைகள் தான் கனவுகளாக வந்து போகின்றது என்றும் ஓர் எண்ணம் உண்டு. எது எப்படி இருந்தாலும், கனவுகள் இல்லாத நித்திரை என்பது வெகு சிலருக்கே சாத்தியம். தங்கள் கனவுகள் பலிக்க எனது வாழ்த்துக்கள்...!

Sunday, October 14, 2018

அடிக்கடி இரவில் தூக்கத்தில் விழிக்கிறீர்களா?

அப்படியானால் வயிற்றில் புழுக்கள் அத அழிக்க இத செய்ங்க! தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா? உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிறதா? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா? அப்படியானால் உங்கள் வயிற்றில் புழுக்கள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து மாசடைந்த சுற்றுச்சூழலில் வாழ்ந்து வந்தால், ஒருவரது உடலில் எளிதில் புழுக்கள் நுழைந்துவிடும். கீழே ஆயிரம் வருடங்களாக நம் முன்னோர்கள் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்க மேற்கொண்டு வந்த சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி, உங்கள் குடலையும், உடலையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். கற்றாழை கற்றாழை இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரைக் குடித்து வர வேண்டும். குறிப்பாக இந்த நீரை குழந்களுக்கு குடிக்கக் கொடுப்பது நல்லது. இதனால் அவர்கள் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து, உடலில் இருந்து வெளியேற்றப்படும் தேங்காய் தேங்காய் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தேங்காயில் வலிமையான ஆன்டி-பாராசிடிக் பண்புகள் உள்ளன. இவை குடலில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றிவிடும். எனவே தினமும் காலை உணவின் போது 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடுங்கள். தேங்காய் சாப்பிட்ட 3 மணிநேரத்திற்கு பின், 375 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடியுங்கள். பூண்டு பூண்டில் ஆன்டி-பாராசிடிக் பண்புகள் உள்ளன. இது அனைத்து வகையான குடல் புழுக்களையும் அழிக்க உதவும். மேலும் பூண்டில் சல்பர் அதிக அளவில் உள்ளது. பூண்டில் ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலில் இருந்து நுண்ணுயிரிகளை நீக்க உதவும். குடலில் புழுக்கள் அதிகமாக இருந்தால், மலப்புழையில் கடுமையான அரிப்பை சந்திக்க நேரிடும். அந்நேரத்தில் பூண்டு பற்களை அரைத்து, வேஸ்லின் சேர்த்து மலப்புழையைச் சுற்றி தடவுங்கள். இதனால் மலப்புழையில் உள்ள புழுக்களின் முட்டையை அழித்து, அரிப்பைக் குறைக்கும். மேலும் தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன் மூலம், புழுக்களில் இருந்து விடுபடலாம். பப்பாளி ஆயுர்வேதத்தில் குடல் புழுக்களை அழிக்க பப்பாளி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் முக்கியமான நொதிப் பொருள் தான் காரணம். ஆகவே பப்பாளிக் காயை துருவி சாறு எடுத்து, 1 டேபிள் ஸ்பூன் சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் நீர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். 2 மணிநேரம் கழித்து, 250 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால், விரைவில் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறும். பூசணி விதைகள் பூசணி விதைகளில் உள்ள குகுர்பிடாசின், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை முடக்கி, உடலில் இருந்து முழுமையாக வெளியேற்றும். முக்கியமாக பூசணி விதைகள் நாடா புழுக்கள் மற்றும் உருளைப்புழுக்களை அழிக்க உதவும். அதற்கு பூசணி விதைகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடி செய்து ஜூஸ் உடன் கலந்து உட்கொள்ளலாம். சில மணிநேரங்கள் கழித்து, பாலில் சில துளிகள் விளக்கெண்ணெய் கலந்து குடியுங்கள். இதனால் குடல் முழுமையாக சுத்தம் செய்யப்படும். வேப்பிலை வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் புழுக்களை அழிக்கும் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இது வயிற்றில் வளரும் புழுக்களை அழிப்பதோடு, உடலில் உள்ள இதர கிருமிகளையும் அழித்து, உடலில் இருந்து வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும். கேரட் கேரட்டுகளில் உள்ள பீட்டா-கரோட்டின், உடலில் இருந்து புழுக்களை வெளியேற்றும். இதில் உள்ள வைட்டமின் ஏ, புழு முட்டைகளை கரையச் செய்துவிடும். மேலும் கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும். கிராம்பு கிராம்பில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் புழுக்களை அழிக்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. இது வயிற்றில் உள்ள புழு முட்டைகளை அழிக்க உதவுவதோடு, உடலில் இருந்து அந்த புழுக்களையும் வெளியேற்றும். ஆகவே உங்கள் உணவுகளில் கிராம்பு பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், ஒரு கிராம்பை தினமும் வாயில் போட்டு மென்று விழுங்குங்கள். மஞ்சள் மஞ்சள் குடல் புழுக்களில் இருந்து விடுபட உதவும் அற்புத பொருளாகும். மஞ்சளில் ஆன்டி-செப்டிக், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். மேலும் மஞ்சள் வயிற்று உப்புசத்தை குறைக்க உதவும் மற்றும் குடல் புழுக்களுக்கான அறிகுறிகளையும் நீக்க உதவியாக இருக்கும். வால்நட்ஸ் தோல் கருப்பு நிற வால்நட்ஸ் தோலை அரைத்து சாறு எடுத்து, குடிப்பதன் மூலம், வயிற்றில் உள்ள அதிகப்படியான குடல் புழுக்களில் இருந்து விடுபடலாம். ஆயுர்வேதத்தில் பெரும்பாலும் இந்த ஜூஸ் படர்தாமரையைப் போக்க பயன்படுத்தப்படும். ஓமம் ஓமம் கூட குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். ஓம விதைகளில் தைமோல் ஏராளமாக உள்ளது. இது வயிற்றில் வளரும் புழுக்களின் வளர்ச்சியைத் தடுத்து வெளியேற்றும். ஆயுர்வேதத்தில் வயிற்றுப் புழுக்களை அழிக்க, ஓம விதைகளை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. மாதுளை மரப் பட்டை மாதுளை மரப்பட்டையை நாம் இதுவரை பயன்படுத்தி இருக்கமாட்டோம். இருப்பினும் மாதுளையின் மரப்பட்டை, இலைகள் மற்றும் தண்டு போன்றவை ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. மாதுளையின் மரப்பட்டையில் புனிசின் என்னும் அல்கலாய்டு ஏராளமான அளவில் உள்ளது. இது வயிற்றில் வளரும் நாடாப்புழுக்களை அழித்து வெளியேற்றக் கூடியது. அதற்கு மாதுளை மரப்பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரை ஒரு நாளைக்கு மூன்று வேளை குடிக்க, குடல் புழுக்கள் அழிந்து வெளியேறும். கிரேப்ஃபுரூட் விதை சாறு இது சுகாதார உணவு கடைகளில் ஜூஸ் வடிவில் விற்கப்படும் அற்புதமான குடல் புழுக்களை அழிக்க உதவும் பொருள். இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், குடல் புழுக்களை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும். நீர் பூசணி/வெள்ளை பூசணி வெள்ளைப் பூசணிக் காயின் விதைகளை நீரில் நன்கு கழுவி, வெயிலில் உலர்த்தி, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை தேங்காய் பாலில் கலந்து குடித்து வந்தால், புழுக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, உடலில் இருந்து வெளியேற்றப்படும். குறிப்பாக இது நாடாப்புழுக்களை வெளியேற்ற பெரிதும் உதவியாக இருக்கும். மூங்கில் இலை மூங்கில் இலைகள் குடல் புழுக்களை அழிக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மூங்கில் இலைகளை அரைத்து சாறு எடுத்து, தினமும் சிறிது குடிக்க வேண்டும். இப்படி செய்தால், விரைவில் குடல் புழுக்கள் அழிந்து வெளியேறுவதோடு, இனிமேல் குடல் புழுக்கள் வராமலும் இருக்கும்

Facebook பேஸ்புக் பார்ப்பதால் ஊழியர்களுக்கு உற்சாகம் பிறக்கிறது.

அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் எந்நேரமும் கம்ப்யூட்டரை பார்த்து கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அச்சமயத்தில் அவர்களின் மனதில் ஒரு வித இறுக்கம் தோன்றுகிறது. இதனை தவிர்ப்பதற்காக பல்வேறு காலகட்டங்களில் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு உத்திகளை கூறியுள்ளனர். உதாரணமாக ஒரு மணிக்கு ஒரு தடவை ஐந்து நிமிடம் கம்ப்யூட்டரை பார்ப்பதை தவிர்த்தால் மூளை சுறுசுறுப்படையும் என தெரிவிக்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில் பேஸ் புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணையதளங்களை ஊழியர்கள் பார்ப்பதால் அவர்களின் வேலை சுறுசுறுப்பாக உள்ளது எனஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலை கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பெரிண்ட் கோகர் தெரிவித்துள்ளார். இதற்காக 300 ஊழியர்களிடம் அவர் ஆய்வை நடத்தினார், அதில் 20 சதவீதம் பேர் மேற்கண்ட இணையதளங்களை காண்பதாகவும், அதனால் பணிச்சுமையால் ஏற்படும் சோர்வில் இருந்து விடுபட்டு உற்சாகம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tuesday, October 9, 2018

நவராத்திரி

துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி என்ற தேவதைகளின்பொருட்டு புரட்டாசி மாதம் வளர்பிறையின் முதல் நாளிலிருந்து ஒன்பது நாள் கொண்டாடப்படும் திருவிழா நவராத்திரி ஆகும். இந்த ஆண்டு இன்று (அக்டோபர் 9ஆம் தேதி) ஆரம்பமாகும் நவராத்திரி அக்டோபர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியை முன்னிட்டு இன்று கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள். கலசம் வைத்து அதில் தேவியை எழுந்தருள வைத்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானது. நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். இது நவராத்திரி வழிபாட்டின் சிறப்பான அம்சமாகும். நவராத்திரியை அடுத்து வரும் பத்தாம் நாள் விஜயதசமி எனச் சிறப்பித்துக் கூறப்படும் இத்தினத்தில் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குதல், கலைப்பயிற்சிகளைத் தொடங்குதல் என்பன நடைபெறும். விஜய தசமியன்று ஆயுத பூஜை நடத்தப்படும். முற்காலத்தில் நவராத்திரி விரத காலத்தில் “தேவி மகாத்மியம்” என்ற நூலைப் பாராயணம் செய்யும் வழக்கம் பேணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் சகலகலாவல்லி மாலை முதலான நூல்களைப் பாராயணம் செய்யும் வழக்கம் உள்ளது. இதோ சகலகலாவல்லிமாலையை பாடியும் தேவியரை துதிப்போம். பாடல் 1 வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! பாடல் 2 நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே பாடல் 3 அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! பாடல் 4 தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! பாடல் 5 பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என் நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக் கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே பாடல் 6 பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும் விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே பாடல் 7 பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால் கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே! பாடல் 8 சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர் செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும் கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே பாடல் 9 சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே பாடல் 10 மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! நவராத்திரி பெரும்பாலும் பெண்கள் அனுட்டிக்கும் விரதமாகும். நவராத்திரி வகைளில் சாரத நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பன முக்கிய மானவை ஆகும். வசந்த காலத்தில் நிகழும் நவராத்திரி வழிபாடு வசந்த நவராத்திரி எனப்படும். இது சிலாபத்திலுள்ள முன்னேஸ்வர ஆலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது. காலத்தில் நிகழும் நவராத்திரி வழிபாடு சரத் காலத்தில் நிகழும் நவராத்திரிவழிபாடு சாரத நவராத்திரி எனப்படும். இது புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை தொடக்கம் நவமி வரை உள்ள ஒன்பது தினங்கள் அனுட்டிக்கப்படும் தனிச்சிறப்புடைய விரதமாகும். ஏனைய விரதங்களில் பெரும்பாலானவை ஒரு தெய்வத்தின் அருள் வேண்டி நோற்கப்படுன்றது. ஆனால் நவராத்திரி முத் தெய்வங்களின் அருளை வேண்டி முக்கியமாக வீரம், செல்வம் கல்வி என்பவற்றை வேண்டி நோற்கப்படும் கூட்டு விரதமாகும். நவராத்திரி காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும் முப்பெரும் தேவியர்களுக்கு விசேட அபிஷேகம், பூஜை என்பன நடாத்தப்படும். நவராத்திரி காலங்களில், ஸ்ரீதுர்கைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமை ராகுகாலவேளையிலும் நவராத்திரியிலும் ஸ்ரீதுர்கைக்கு புடவை சார்த்தி வணங்கினால், வாழ்வில் எல்லா துக்கங்களும் விலகும். சிறுமியரை அம்பிகையாக பாவித்து வழிபடுவது வழக்கமாகும். வீடுகளில் கொலு வைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேஷமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மைகள் வைத்து இக்கொலு அலங்கரிக்கப்படுகிறது. 5, 7 அல்லது 9 என்ற ஒற்றைப்படையாகப் படிகளின் எண்ணிக்கையை வைத்து கொலு அமைக்கப்படுகிறது. அருகிலேயே கும்பம் வைத்து சுவாமிப்படங்களையும் மாட்டி அணையா விளக்குகள் ஏற்றி ஒன்பது நாட்களும் விதவிதமான பட்சணங்களை நைவேந்தியம் செய்து பூஜிப்பது வழக்கத்தில் உள்ளது. நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். ஓம் பொன்னே போற்றி! ஓம் மெய்ப்பொருளே போற்றி! ஓம் போகமே போற்றி! ஓம் ஞானச் சுடரே போற்றி! ஓம் பேரின்பக் கடலே போன்றி! ஓம் குமாரியே போற்றி! ஓம் குற்றங்களைவாய் போற்றி! ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி! ஓம் பேரருட்கடலே போற்றி! ஓம் ஆற்றல் உடையாய் போற்றி! ஓம் அருட்கடலே போற்றி! ஓம் ஆனந்த அறிவொளி போற்றி! ஓம் இருளகற்றுவாய் போற்றி ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி! ஓம் ஈயும் தயாபரி போற்றி! ஓம் மங்கள நாயகியே போற்றி. ஓம் சக்தி

Friday, October 5, 2018

கடவுளின் அவதாரத்தின் குணநலன்கள்

* சாஸ்திரங்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் இருக்க வேண்டும். * கடவுளுக்கென்று இருக்கும் சில அங்க அடையாளங்கள், உடலில் இருக்க வேண்டும். * அழகு, அறிவு, செல்வம், வலிமை, புகழ், துறவு ஆகிய ஆறு ஐஸ்வர்யங்களையும் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும்; இந்த ஐஸ்வர்யங்களில் அவரை மிஞ்சுவோர் யாரும் இருக்கக் கூடாது. * நினைத்ததை சாதிக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும், அதற்காக மற்றவரை நாட வேண்டிய தேவையில்லாதவராக இருக்க வேண்டும். * மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாத அசாதாரணமான செயல்களைச் செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். * எல்லாவற்றையும் படைத்து, கட்டுப்படுத்தி, பராமரிப்பவராக இருக்க வேண்டும்.

Thursday, October 4, 2018

மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் நான்கு அறிகுறிகள்

மாரடைப்பு என்பது பயங்கரமானதொன்றாகும். எனினும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னதாக எமது உடலில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து மாரடைப்பு ஏற்படப் போகின்றது என்பதனை அறியலாம். அவை மாரடைப்பு ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவோ, சில நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது சில நிமிடங்களுக்கு முன்னதாகவோ ஏற்படலாம். அதனை கருத்திற் கொண்டு நாம் வைத்தியரை தக்க நேரத்தில் நாட வேண்டும். அதுசரி, அந்த அறிகுறிகள் என்னவென்பது தொடர்பில் இப்போது பார்ப்போம். 01. மாரடைப்பு ஏற்படப் போகின்றது என்பதற்கு அறிகுறி காட்டும் வகையில் அதிகபடியான பதட்டம் ஏற்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். 02. அடி வயிறு, கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படின் அவதானமாக இருத்தல் வேண்டும். இதைத் தொடர்ந்து குறித்த நபருக்கு பசி ஏற்படுவதும் குறைவடையும். இது மாரடைப்பிற்கான அறிகுறி என்பதை நினைவில் கொள்ளுங்கள். 03. சிலருக்கு அதிகபடியான இருமல் ஏற்பட்டு இரத்தம் வெளியேறும். சிலருக்கு மூச்சிரைப்பு மற்றும் தொடர்ச்சியான இருமல் என்பன ஏற்படும். இது போன்ற தருணங்களில் அலட்சியமாக இருக்கக்கூடாது. 04. சிலருக்கு தாடை, முதுகுப்புறம், தோல்கள், கைகள் மற்றும் அடி வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படும். இது சாதாரணமாகத் தோன்றினாலும் பாரதூரமான விளைவுகளைக் கொண்டு வரக் கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், பின்வரும் அறிகுறிகளை மாரடைப்பிற்கான முக்கிய அறிகுறிகளாகக் கருத முடியும். 01. குளிருதல் போன்ற உணர்வு 02. குமட்டல் 03. தலைசுற்று 04. மார்பு பகுதியில் வலி 05. சுவாசிப்பதில் சிரமம்.

குருபகவான் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

குரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும்,நவக்கிரகங்களில் ஒருவரும் ஆவார்.இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார்.இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு.இவர் நான்கு வகையான வேதங்களையும் ,அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களைச் செய்து தேவர்களின் குருவாக மாறினார்.அத்துடன் வசிஷ்டேஸ்வரரை வணங்கி நவக்கிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழகிரகம் ராஜ கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இவருக்கு அந்தணன் ,அமைச்சன், அரசன், ஆசான்,ஆண்டாளப்பான்,குரு,சிகிண்டிசன், சீவன்,சுரகுரு,தாராபதி,தெய்வமந்திரி, நற்கோள்,பிரகஸ்பதி,பீதகன்,பொன்னன், மறையோன், வேதன்,வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன. குருபகவானின் பரிபூரண அருள் வேண்டுபவர்கள் எல்லா சிவன் கோவில்களிலும் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மஞ்சள் ஆடை அணிவித்து கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து வணங்கி வழிபடலாம். " ஓம் பிம் சிவய வசி குரு தேவாய நம " என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லிவர தடைகள் நீங்கும். குருவின் அம்சங்கள் *********************** 😊 கிழமை :- வியாழன் 😊 தேதிகள் :- 3, 12, 21, 30 😊 நட்சத்திரங்கள் :- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி 😊 நிறம் :- மஞ்சள் 😊 ரத்தினம் :- கனக புஷ்பராகம் 😊 தானியம் :- கொண்டைக்கடலை 😊 உலோகம் :- தங்கம் 😊 ஆடை :- தூய மஞ்சள் 😊 ராசி :- தனுசு, மீனம் 😊 உச்ச ராசி :- கடகம் 😊 நீச்ச ராசி :- மகரம் #ஸ்லோகம் " இணக்கமாம் மகிழ்ச்சி இன்பம் இயலுறும் புத்தி யுக்தி வணக்கமாம் கல்வி மேன்மை வருந்தனம் மகிழ்ச்சி புண்யம் துணக்கமாம் பந்துவாகித் துலங்கிடச் சுகங்கள் நல்கும் கணக்கனாம் எந்தை பாதம் கழலடி சென்னி வைப்பாம்." வியாழக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் குருபகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

Tuesday, October 2, 2018

சனிபகவானிடம் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை.

இந்து கடவுள்களில் மிகவும் முக்கியமானவராகவும், கோபக்காரராகவும் கருதப்படுபவர் சனிபகவான். இவரின் கோரப்பார்வைக்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சூரிய பகவானின் மகனான சனி பகவான் சிவபெருமானின் தீவிர பக்தன் ஆவார். அவரின் தூய்மையான பக்திதான் அவருக்கு சிவபெருமானின் அருள் மூலம் இவ்வளவு சக்திகளை பெற்று தந்தது. இறந்த பிறகு செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும் பணியை எப்படி எமதர்மன் செய்கிறாரோ அதேபோல வாழும்போதே செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும் பணியை சனிபகவான் செய்து வருகிறார். தவறே செய்யாமல் இருப்பது என்பது மனிதர்களால் இயலாத ஒன்று, ஆனால் நம்முடைய சில குணங்கள் நம்மை சனிபகவானின் கோபப்பார்வையிலிருந்து பாதுகாக்கும். எப்படிப்பட்ட குணங்கள் சனிபகவானின் கருணைப்பார்வையை உங்கள் பக்கம் திருப்பும் என்பதை இங்கு பார்க்கலாம். சனிபகவான் நாம் அனைவரும் நினைப்பது போல சனிபகவான் தீமைகளை மட்டுமே வழங்கக்கூடிய கடவுள் அல்ல. பல நன்மைகளை வழங்கக்கூடியவர். அவர் வழங்கும் தண்டனை என்பது நமது கர்மபலன்களை பொறுத்ததே. அவரிடம் இருந்து அருளையும், கருணையையும் எதிர்பார்ப்போமேயானால் அதற்கு நம்மிடம் சில தகுதிகள் இருக்க வேண்டும். அந்த தகுதிகள் இருப்பவர்களை சனிபகவான் சோதிக்கமால் விடுவது மட்டுமின்றி அவர்கள் வாழ்க்கையில் உயரவும் அருள்புரிவார். தூய்மை சுத்தம் உள்ள இடத்தில்தான் செல்வம் பெருகும். சனிபகவான் நம்மிடம் விரும்புவதும் அதைத்தான். நம் அன்றாட வாழ்வில் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். காலையில் எழுவதில் தொடங்கி, குளிப்பது, சாப்பிடுவது வீடு மற்றும் பணியிடங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது என அனைத்திலும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். சுத்தம் இல்லாத இடத்தில்தான் சனிபகவான் தன் கோபப்பார்வையை வீசுவார். உழைப்பு தான் ஆசைப்பட்டது கிடைக்க வேண்டுமெனில் அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். உழைப்பவர்களுக்கு மட்டுமே சரியான நேரத்தில் உதவிகளும், வாய்ப்புகளும் கிடைக்கும். சோம்பேறித்தனத்தை சனிபகவான் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார். உழைக்க நீங்கள் தயாராக இருந்தால் அதற்கேற்ற பலனை தர சனிபகவான் தயாராக இருப்பார். நேர்மை இன்று மிகவும் அரிதான குணமாகிவிட்ட ஒன்று நேர்மையாக இருத்தல். இந்த காலகட்டத்தில் நேர்மையாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் அவ்வாறு இருக்கும்போது அதற்கு கிடைக்கும் பலன்களே தனிதான். உண்மையை பேசுபவர்களுக்கு சனிபகவான் எப்பொழுதும் துணையிருப்பார். உண்மையை பேசும்போது உங்களுக்குள் எழும் நிம்மதி மற்றும் அமைதி நீங்கள் பொய் சொல்லி சொகுசாய் வாழ்ந்தாலும் கிடைக்காது. பொறுமை சனிபகவான் நமது பொறுமையை சோதிக்க பல சோதனைகளை வழங்குவார். உங்களுடைய விடாமுயற்சியை தொடர்ந்து மீதி பாரத்தை சனிபகவானிடம் விட்டுவிடுங்கள். பொறுமையாக விடாமுயற்சியுடன் இருக்கும்போது சரியான நேரத்தில் உங்களுக்கான பலனை சனிபகவான் வழங்குவார். உண்மையை எதிர்கொள்ளுதல் சனிபகவான் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும், அதற்கு காரணம் யார் என்பதையும் உங்களுக்கு உணர்த்துவார். அந்த உண்மையை நேரடியாக சந்தித்து எதிர்கொள்ள வேண்டும், அதை தவிர்த்து அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்கும் செயல்களை செய்யக்கூடாது. உண்மையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் வழியாகும். நல்ல செயல்கள் சனிபகவான் பிறர் மீது இரக்கப்படுபவர்களையும், மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களையும் அதிகம் விரும்புவார். இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவி செய்வதை விட சனிபகவானை கவரும் எளிய வழி எதுவும் இல்லை. பிறரை மதிக்காமலோ, தீய செயல்களில் ஈடுபட்டாலோ சனிபகவான் தரப்போகும் துன்பங்களை சந்திக்க தயாராக இருங்கள். ஒழுக்கம் அனைத்திற்கும் மேலாக நம்மிடம் இருக்கவேண்டிய ஒரு அடிப்படை தகுதி ஒழுக்கம். ஒழுக்கம் இல்லாதவர்கள் சனிபகவானின் அருளை பெற முயற்சிப்பதே வீண். தனிமனித ஒழுக்கத்திலிருந்து சமூகத்தில் ஒழுக்கத்துடன் வாழ்வது வரை அனைத்துமே உங்களின் வளமான வாழ்க்கைக்கு முக்கியம்தான். சனிபகவானால் ஏற்படும் சோதனைகள் சனிபகவான் உங்களை சோதிக்க வேண்டுமென சோதித்துவிட்டால் உங்களை அனைத்து வழிகளிலும் துன்பத்திற்கு உள்ளாக்குவார். குடும்பத்தில் சண்டை, சோம்பேறித்தனம், பணியிடங்களில் பிரச்சினை, வாழ்க்கையில் அமைதியின்மை, மனஅழுத்தம், படிப்பில் கவனம் குறைதல், கடன் தொல்லை என நீங்கள் வாழும் வாழ்க்கையே நரகமாகிவிடும். சனிபகவான் வழங்கும் நன்மைகள் சனிபகவானின் கருணை பார்வைக்கு தேவையான தகுதிகள் உங்களுக்கு இருப்பின் நீங்கள் பெறப்போகும் பலன்கள் எண்ணற்றவை. அதிர்ஷடம், பதவி உயர்வு, புத்திகூர்மை, கற்பனைத்திறன், கடன் தொல்லையிலிருந்து விடுதலை என உங்களுக்கு சகல நன்மைகளையும் வழங்கக்கூடியவர் சனிபகவான். எப்படி வணங்க வேண்டும்? சனிபகவானை வணங்க வேண்டிய முக்கிய நாள் சனிக்கிழமை ஆகும். எனவே சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி ” ஓம் ஷங் சனீஸ்வராய நமக ” என்னும் மந்திரத்தை கூறி வழிபடவும். சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும், ஆஞ்சநேயரை வழிபடவும், சனிக்கிழமைகளில் கருப்பு அல்லது அடர் நீல நிற ஆடைகளை அணியவும், சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னமிடவும்.

வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவரும்?…

வாஸ்து சாஸ்திரமானது ஒரு வீட்டில் இருக்கும் கதவுகளின் எண்ணிக்கையை வைத்து, அதற்கான பலன்கள் அமைகிறது என்று கூறுகிறது. எனவே ஒரு வீட்டில் இருக்கும் கதவுகளின் எண்ணிக்கையும் அதற்கான பலன்களும் இதோ. இரண்டு கதவுகள் – நல்ல பலன்கள் கிடைக்கும். மூன்று கதவுகள் – எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். நான்கு கதவுகள் – நீண்ட ஆயுள் கிடைக்கும். ஐந்து கதவுகள் – அடிக்கடி நோய்கள் மூலம் பாதிப்புகள் ஏற்படும். ஆறு கதவுகள் – புத்திர பாக்கியம் கிடைக்கும். ஏழு கதவுகள் – ஆபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எட்டு கதவுகள் – வீட்டில் செல்வம் அதிகரிக்கும். ஒன்பது கதவுகள் – நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பத்து கதவுகள் – பணமும் பொருளும் வீடு தேடி வரும். குறிப்பு. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பலன்களும் வீட்டின் சுற்று சுவரில் உள்ள கதவுகளின் எண்ணிக்கைக்கு பொருந்தாது.

இரவு தூங்கும்முன் வெங்காயச் சாற்றை 2 நிமிடம் பாதங்களில் தேயுங்கள்!

வெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளதால், இது பல்வேறு பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது. அத்தகைய வெங்காயத்தின் சாற்றை தினமும் இரவு தூங்கும் முன் பாதங்களில் தேய்த்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்து வர வேண்டும். நன்மைகள் 1.வெங்காய சாற்றில் உள்ள ஃபாரிக் ஆசிட், நம்முடைய பாதம் மற்றும் உள்ளங்கைகளின் வழியே ஊடுருவி மூளைக்குச் சென்று, மூளையின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. 2.வெங்காயத்தில் உள்ள ஃபாரிக் ஆசிட் பாதம் வழியே உறிஞ்சப்பட்டு, உடலின் தலை முதல் கால் வரை ரத்தோட்டத்தை சீராக்க உதவுகிறது. 3.குடல், சிறுநீர்ப்பை, சிறுநீரகக் கற்கள், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை தடுத்து, உடலில் உள்ள கொழுப்பை குறைத்து, பாதத்தில் உள்ள திசுக்களை ஈரப்பதத்துடன், சொரசொரப்பின்றி வைக்க உதவுகிறது. 4.கால்களில் வியர்வை அதிகரிப்பதால், ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க வெங்காயச் சாற்றை பாதங்களில் தேய்ப்பது மிகவும் நல்லது.

எளிமையான வீட்டு இயற்கை மருத்துவ குறிப்புகள்!

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். 6. வாயு தொல்லை வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும். 7. வயிற்று வலி வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும். 8. சரும நோய் கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும். 9. மூக்கடைப்பு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். 10. கண் எரிச்சல், உடல் சூடு வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். 11. வயிற்றுக் கடுப்பு வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். 12. பற் கூச்சம் புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும். 13. வாய்ப் புண் வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும். 14. தலைவலி பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும். 15. வயிற்றுப் பொருமல் வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். 16. அஜீரணம் ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும். 17. இடுப்புவலி சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும். 18. வியர்வை நாற்றம் படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும். 19. உடம்புவலி சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும். 20. ஆறாத புண் விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். 21. கண் நோய்கள் பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும். 22. மலச்சிக்கல் தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும். 23. கபம் வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும். 24. நினைவாற்றல் வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். 25. சீதபேதி சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும். 26. ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும். 27. பூச்சிக்கடிவலி எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும். 28. உடல் மெலிய கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும். 29. வயிற்றுப்புண் பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். 30. வயிற்றுப் போக்கு கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். 31. வேனல் கட்டி வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும். 32. வேர்க்குரு தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம். 33. உடல் தளர்ச்சி முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும். 34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம். 35. தாய்ப்பால் சுரக்க அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். 36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும். 37. எரிச்சல் கொப்பளம் நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது. 38. பித்த நோய்கள் கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும். 39. கபக்கட்டு நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும். 40. நெற்றிப்புண் நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும். 41. மூக்கடைப்பு இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது. 42. ஞாபக சக்தி வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும். 43. மாரடைப்பு சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம் 44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். 45. கை சுளுக்கு கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும். 46. நீரிழிவு அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும் 47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். 48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன் புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம் 49. உடல் வலுவலுப்பு ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும். 50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும். எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும். கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். இயற்கை முறைக்கு மாறுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம். – இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஒரே வாரத்தில் பித்தப்பை கற்களை கரையச் செய்யும் ஒரு சீன வைத்தியம் தெரியுமா?

பித்தக்கற்கள் உருவாவதால் இவை பித்தத்தை பித்தப்பை மற்றும் கல்லீரலில் இருந்து வெளியேற்றும்.இதனால் மஞ்சள் காமாலை ஏற்படும். இதனை 7 நாட்கலீல் கரையச் செய்ய அற்புத சீன மருத்துவம் கை கொடுக்கும். பித்தக்கற்கள் உடலில் சேரும் கொழுப்பு மற்றும் உப்புகளின் காரணமாக பித்தப்பையில் உருவாகும்.கல்லிரலுக்கு அடியில் பேரி வடிவில் அமைந்துள்ள உறுப்பே பித்தப்பை ஆகும்.பித்தப்பையில் உள்ள பித்த நாளங்கள் பித்தத்தை கொண்டு செல்கிறது.உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதற்கு நமது செரிமான அமைப்பு ஒரு திரவத்தை உற்பத்தி செய்கிறது.கல்லீரலில் இருந்து பித்தப்பை வரை இந்த திரவம் செல்கிறது. நீங்கள் பித்தக் கற்களுடன் எந்த அறிகுறிகளும் இன்றி வாழும்போது அவை பித்தப்பையில் அடைப்பை ஏற்படுத்தி விடும்.இதனால் வலி,குமட்டல் மற்றும் அபாயகரமான தொற்று ஆகியவற்றை ஏற்படுத்தும். பித்தக்கற்கள் உருவாவதால் இவை பித்தத்தை பித்தப்பை மற்றும் கல்லீரலில் இருந்து வெளியேற்றும்.இதனால் மஞ்சள் காமாலை ஏற்படும். இதனை 7 நாட்கலீல் கரையச் செய்ய அற்புத சீன மருத்துவம் கை கொடுக்கும். சீன மருத்துவம் : சீன மருத்துவர் டாக்டர்.லாய் சியு நன் என்பவர் பித்தக்கற்களை விரைவில்,எளிதாக நிரந்தரமாக நீக்க ஒரு அற்புதமான இயற்கை முறைகளை கண்டறிந்தார்.இந்த இயற்கை முறை சிறந்த முடிவுகளை கொடுத்து உள்ளது. நீங்கள் பித்தக்கற்கள் இருப்பதை உணர்ந்தால் டாக்டர்.லாய் பரிந்துரை செய்துள்ள பின்வரும் முறைகளை பின்பற்றி அவற்றை அகற்றலாம். 1-5 நாட்கள் : இந்த சிகிச்சை முறையில் முதல் 5 நாட்களுக்கு 4 டம்ளர் ஆப்பிள் சாறு குடிக்க வேண்டும் (அ) 4-5 ஆப்பிள் சாப்பிடலாம் உங்கள் விருப்பத்திற்கேற்ப.ஆப்பிள் சாறு பித்தக்கற்களை மென்மையாக்கி விடும். இந்த 5 நாட்களில் சாதாரணமாக சாப்பிட வேண்டும். 6 வது நாள் : ஆறாம் நாளில் இரவு உணவை சாப்பிட வேண்டாம்.மாலை 6 மணிக்கு சூடான நீரில் எப்சம் உப்பு (மெக்னீஷியம் சல்பேட்) ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து அருந்த வேண்டும்.8 மணிக்கு இதே போன்று மறுபடியும் குடிக்க வேண்டும். மெக்னீஷியம் சல்பேட் பித்தத்தை தோல்வி அடைய செய்கிறது.இரவு 10 மணிக்கு அரை கப் ஆலிவ் எண்ணெய் (அ) எள் எண்ணெய் எடுத்து அரை கப் எலுமிச்சை சாறுடன் நன்றாக கலந்து அதை குடிக்க வேண்டும். இந்த எண்ணெய் கற்கள் உராய்வதைத் தடுக்கும். ஏழாவது நாள் : அடுத்த நாள் காலையில் (ஏழாம் நாள்) உங்கள் மலத்தில் பச்சை நிறக் கற்கள் தென்படும்.வெளியேறும் கற்கள் மிதக்கின்றன.அவை 40 முதல் 50 வரையோ (அ) 100 எண்ணிக்கையிலோ இருக்கும் என்று பலர் கண் கூடாக கண்டுள்ளனர் என்று நன் சியு கூறுகிறார். பித்தப்பை ஆரோக்கியம் : இருப்பினும் பித்தக்கற்கள் இருக்கக்கூடிய எந்த அறிகுறிகளும் இல்லை என்றாலும் இந்த முறையை பின்பற்றலாம்.இதனால் பித்தப்பை சுத்தமாக இருக்கும் என்று சீன மருத்துவர்கள் கற்றுத் தெரிந்துள்ளனர். அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…

இரு புருவங்களுக்கு மத்தியில் அழுத்தம் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா?

தினமும் செய்யும்போது நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இது ரத்த நாளங்களை தூண்டுகிறது. சரும நோய்களுக்கு நல்ல பலனைத் தருகிறது.அக்குப்ரஷர் எனப்படும் உடலில் கொடுக்கப்படும் அழுத்தம் சீன மருத்துவமுறை. அவர்களின் பழங்கால மருத்துவ சிகிச்சைகளில் மிகவும் முக்கியமானது இந்த அக்குபிரஷர் சிகிச்சை.உடலில் இருக்கும் குறிப்பிட்ட புள்ளியில் அழுத்தம் தரப்பட்டு தூண்டப்படுவதால் நமது உடல், தம்மை தாமே குணப்படுத்தும். உடலில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு மர்மபுள்ளிகள் உண்டு.கண்டுபிடித்து அழுத்தம் தருவதால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அந்த மாதிரியான அழுத்தப் புள்ளிகளைப் பற்றி இங்கு காணலாம். அக்குப்பிரஷரின் நன்மைகள் : அக்குபிரஷர் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. வலிகள் குறைகின்றது. மன அழுத்தம் மற்றும் உடல் வலிகளிலிருந்து நிவாரணம் தருகிறது. அக்குபிரஷரினால் எல்லா வியாதியை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் அதன் தீவிரத்தை குறைக்கும்போது நோய்கள் விரைவில் குணமாகும். நமது தலையில் இருக்கும் மிக முக்கியமான புள்ளிகளும், அங்கு தரப்படும் அழுத்தத்தால் வரும் நன்மைகளையும் பார்க்கலாம். கண்களுக்கு இடையில் : புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் இடத்தை மூன்றாவது கண் என்று சொல்வார்கள். அந்த இடத்தில் இருக்கும் புள்ளி கண், மூக்கு, புருவம் போன்றவற்றிற்கு மையப் புள்ளியாக விளங்குகிறது. செய்யும் முறை : முதல் முறையில் ஆள்காட்டி விரலால் மூன்றாவது கண் இடத்தை 60 நொடிகளுக்கு அழுத்த வேண்டும். இரண்டாவது முறையில் ஆள்காட்டி விரலால் இரு புருவங்களுக்கு மத்தியில்அழுத்தி வட்ட வடிவில் (விரலை எடுக்காமல்) அழுத்தம் கொடுங்கள். நன்மைகள் : உங்களுக்கு மைக்ரைன் இருந்தால் குணமாகும். தினமும் செய்யும்போது நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இது ரத்த நாளங்களை தூண்டுகிறது. சரும நோய்களுக்கு நல்ல பலனைத் தருகிறது. இரு கண்களின் ஓரத்தில், அதாவது மூக்கின் தண்டு ஆரம்பிக்கும் பகுதியில் அழுத்தம் தர வேண்டும். இதற்கு பேம்பூ ப்ரஷர் என்று பெயர். உங்களின் ஆட்காட்டி விரலால் கண் மற்றும் மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் அழுத்தம் கொடுங்கள். ஒரு நிமிடம் வரை தர வேண்டும். அல்லது லேசாக வட்ட வடிவில் அங்கு மசாஜ் செய்ய வேண்டும். தலையின் பின்பகுதியில் : தலையில் அடிப்பாகத்தில் இருக்கும் இந்த இரு புள்ளிகளுக்கு நினைவுத்திறனின் வாசல் என்று பெயர். ஞாபக சக்தியை அதிகப்படுத்துகிறது. முதலில் பின்னந்தலையின் அடிப்பகுதியிலுள்ள இந்த இரு புள்ளிகளையும் விரல் நுனிகளால் அழுத்தம் தர வேண்டும். பின்னர் விரல் முட்டிகளால் அந்த புள்ளிகளில் மசாஜ் செய்ய வேண்டும். நன்மைகள் : தீராத தலைவலி குணமாகும். தலையில் நீர் கோர்த்திருந்தால் அதற்கு நல்ல பலன் தரும். தலை சுற்றல், கழுத்தில் விறைப்புத் தன்மை, கழுத்து வலி போன்றவை குணமாகும். அனைவருக்கும் பகிருங்கள்! 

கால் விரல்களை வைத்தே ஒருவரை பற்றி கணிக்க முடியும்! உங்க கால் விரல் இப்படி இருக்கா?

ஒருவரின் கால் பாதத்தில் இருக்கும் விரல்களை வைத்தே அவர்களின் உறவுமுறை, அவர்களின் உடல் நலம் பற்றி கூட கணிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? பெரு விரல் மற்ற விரல்களை விட பெரு விரல் பெரிதாக இருப்பவர்கள் படைப்பு திறம் மிக்கவர்களாக இருப்பார்கள். எல்லா வித பிரச்சனைகளுக்கும் இவர்கள் புத்திசாலிதனமாக தீர்வை எடுப்பார்கள். அதே சமயத்தில் மற்ற விரல்களை விட பெரு விரல் சிறிதாக இருப்பவர்கள் ஒரே நேரத்தில் பல விடயங்களை செய்வார்கள். திறம்பட பிரதிநிதிப்படுத்தக்கூடிய பல திறமையான இவர்களுக்கு இருக்கும். இரண்டாம் விரல் இரண்டாம் விரல் பெரிதாக உடையவர்கள் தரமான தலைவர்களாக விளங்குவார்கள். இவர்களுக்கு படைப்பு திறன் அதிகம் இருக்கும். இரண்டாம் விரல் சிறிதாக உடையவர்கள் எதையுமே சுமையாக பார்பார்கள். ஆனாலும் அந்த விடயங்களை இணக்கமாக கையாள்வார்கள். மூன்றாம் விரல் மூன்றாம் விரல் மற்றதை விட பெரிதாக இருப்பவர்கள் பணியில் தனித்துவமாகவும், துடிப்பாகவும் இருப்பார்கள். இதுவே சிறிதாக இருப்பவர்கள் அதிக ஓய்வாகவும், வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள். நான்காவது விரல் நான்காவது விரல் பெரிதாக இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். அதுவே விரல் சுருண்டிருந்தால் அவர்கள் உறவு முறையில் மகிழ்ச்சி இருக்காது. நான்காவது விரல் சிறிதாக இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். சிறிய விரல்கள் எல்லா விரல்களும் சிறிதாக இருப்பவர்கள் குழந்தை தனமாக இருப்பார்கள். எந்தவொரு பொறுப்பை விரும்பாமல் இருக்கும் இவர்கள் எளிதில் எல்லாவற்றுக்கும் சலித்து கொள்வார்கள் விரல் அளவு விரல்கள் ஒன்றன் பின் ஒன்றாக பெரிதாக இருப்பவர்கள் முறைப்படியான துல்லியமாக எல்லாவற்றையும் செய்வார்கள். நட்புக்கு விசுவாசமாகவும் இவர்கள் திகழ்வார்கள்.

நீங்கள் மதியம் தூங்குபவரா ? இந்த நோய்க்கான அபாயம் உண்டு எச்சரிக்கை!

மதியம் தூங்குபவரா நீங்கள்? இந்த நோய்க்கான அபாயம் உண்டு எச்சரிக்கை!! நிறைய பேர் மத்தியானம் ஆனதுமே கண்கள் சுழற்றி தூக்கம் போடுவார்கள். அரை மணி நேர தூக்கம் என்றால் பாதகமில்லை. ஆனல் 40 நிமிடங்களுக்கும் மேலாக தூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சில பெண்கள் மதியம் தூங்குவதை ஒரு வேலையாகவே செய்வார்கள். அவர்கள் இந்த கட்டுரையைப் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும். உடல் வேலைகளால் அலுப்பு வரும்போது மதியம் தூங்கும் குட்டித் தூக்கம் உடலுக்கு புத்துணர்வையும், மனதிற்கு உற்சாகத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 40 நிமிடங்களுக்கு மேலாக நீங்கள் தினமும் தூங்கினால் சர்க்கரை வியாதிக்கான ஆபத்து ஏற்படும் . ஆராய்ச்சி : தினமும் குறைந்தது 45- 1 மணி நேரம் தூங்கினால் 45 % பேருக்கு உடல் பருமன், சர்க்கரை வியாதி வரும் ஆபத்து உண்டு என ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. டோக்கியோ பல்கலைக் கழகம் : டோக்கியோவிலுள்ள யமடா டோமாஹைட் என்ற பல்கலைக் கழகத்தில் நடந்த ஆய்வில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களை ஆய்வில் ஈடுபடுத்தினர். 40 நிமிடத்திற்கு மேல் : இதில் 40 நிமிடங்களுக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு தூக்கம் சர்க்கரை வியாதி வரவில்லை. ஆனால் 45- 1 மணி நேரத்திற்கும் தூங்கியவர்கள் பெரும்பாலோனோருக்கு சர்க்கரை வியாதி இருப்பது தெரிய வந்துள்ளது. சர்க்கரைவியாதி பல நோய்க்கு அஸ்திவாரம் : சர்க்கரை வியாதி பல நோய்களுக்கான இணைப்பு சங்கில் என கூறலாம். கண் பார்வை குறைபாடு, நரம்பு கோளாறு, சிறு நீரக செயலிழப்பு மற்றும் இதய நோய் என பல வியாதிகள் சர்க்கரை வியாதியால் உருவாகும் மதிய தூக்கமும் காரணம் : இதற்காக மதியம் தூங்குபவர்களுக்கு எல்லாம் சர்க்கரை வியாதி வந்தே தீரும் என்று அர்த்தம் இல்லை. எப்படி உடல் பருமன், உணவுப் பழக்கம், மரபு ஆகியவை சர்க்கரை வியாதிக்கு காரணமாகிறதோ அதுபோல் மதிய தூக்கமும் ஒரு காரணம் என்று கிளாக்ஸோ மருத்துவமனையின் சிறந்த வளர்சிதை நோய்க்கான மருத்துவ வல்லுநர் நவீத் சட்டார் கூறுகிறார் இந்த ஆய்வின் இறுதியில் அதிக நேரம் மதியம் தூங்குபரகளுக்கு சர்க்கரை வியாதி மட்டுமல்ல, பல நோய்களுக்கும் வித்தாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

ஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உறுதி மொழிகள்!

1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான். 2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள். 3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன். 4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும். 5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும். 6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன். 7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன். 8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன். 9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன். 10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன். 11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.

உங்கள் வீட்டு பணப்பெட்டியில் இதெல்லாம் இருக்கிறதா?

உங்கள் வீட்டில் பணம் வைத்துள்ள பணப்பெட்டியில் வைக்கவேண்டிய சில பொருட்கள்…. முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிறு, மல்லிகைப் பூ, ஏலக்காய், பச்சைகற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு அதிகரிக்கும். உங்களின் வீட்டுப் படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடாது. அப்படி இருப்பது மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும். அவ்வாறு இருந்தால் இரவில் மூடி வைத்து விடுவது நல்லது. சிறிது கல் உப்பை ஒரு கின்னத்தில் போட்டு, கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்துக் கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும். வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும். தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம். இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும். கோயில் கொடிமரம், கோயில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது. இது பல்வேறு வியாதிகளால் பாதிப்பு ஏற்பட்டு, தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள். இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று. இதற்குப் பரிகாரம்: வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம், கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும். மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று. முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்துச் செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம்?

கனவுகள் என்பது பன்மடங்கு தன்மையை கொண்டதாகும். நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை. அதனை சரியான வழியில் நாம் கவனமாக புரிந்து கொண்டால், அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான பல்வேறு நுண்ணறிவுகளை நாம் பெறலாம். தூங்கும் போது ஆளை அமுக்கும் ‘அமுக்குவான் பேய்’ பற்றி தெரியுமா? இறந்து போன சொந்தமோ அல்லது நண்பனோ ஏன் நம் கனவில் வருகிறார்கள் என்ற கேள்விக்கு உளவியல் ரீதியாகவும் ஆன்மீக நிலைப்பாடுகளிலும் பதிலளிக்க வேண்டி வரும். இங்கு இறந்தவர்கள் உங்கள் கனவில் வருவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? இறந்த ஆன்மாக்கள் உங்களை தொடர்பு கொள்ள ஏன் கனவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள் இறந்த பிறகு, இறந்தவர்களுக்கு நுண்ணியம் வாய்ந்த சக்தி கிடைக்கும். நீங்கள் விழித்திருக்கும் நிலையில் இருப்பதை விட தூக்கத்தில் தான் அவர்கள் உங்களுடன சுலபமாக தொடர்பு கொள்ள முடியும். நீங்கள் விழித்திருக்கும் போது, உங்களது ஐம்புலன்களும் வேலை செய்து கொண்டிருக்கும். அதனால் தங்களை இறந்த ஆன்மாக்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறது என்பதை மிக உயர்ந்த ஆன்மீக பீடத்தை அடைந்தவர்களை தவிர மற்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது. மறுபுறம், கனவுகளின் போது, நுட்பமான செய்திகளுக்கு நம் மனது அதிகமாக செவி சாய்க்கும். அதனால் தான் இறந்தவர்கள் உங்களை கனவில் தொடர்பு கொள்ளும் முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இறந்தவர்களை பற்றி கனவு காண்பதற்கான உளவியல் காரணங்கள் இறந்தவர் உயிருடன் இருந்த போது அவருக்கு செய்ய வேண்டியதை சரியாக செய்யவில்லையே என்ற குற்ற உணர்வு அல்லது மன வருத்தம் உங்களை வதைக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு கனவுகளில் இறந்தவர்கள் தோன்றலாம். அவர்களின் இறப்பு உங்களுக்கு அதீத பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தால், அவர்களை நீங்கள் கனவில் காணலாம். அப்படிப்பட்ட சூழலில், நம் ஆழ்மனதில் ஆழமாக வேரூன்றிய நம் உணர்வுகளின் வெளிப்பாடே கனவுகள். இறந்தவர்களைப் பற்றி கனவு காண்பதற்கான ஆன்மீக காரணங்கள் இறந்து போன சொந்தக்காரரோ அல்லது நண்பனோ உங்கள் கனவில் தோன்றுவதற்கு ஆன்மீக காரணமும் உள்ளது. சில சமயம், இறந்து போன ஆன்மாவிற்கு, பூமியில் வாழும் தன் சந்ததி வழியாக ஏதேனும் உதவி தேவைப்படலாம். மேலும், உங்கள் உதவி மூலமாக யாரையாவது பலி தீர்க்க நினைக்கலாம், அல்லது குடும்பம்நண்பர்கள் வட்டத்தில் யாருடனாவது தொடர்பு கொள்ள நினைக்கலாம். முதலில் கூறியது முதன்மையான காரணமாக கருதப்பட்டாலும், இரண்டாவதாக கூறியது மிக அரிதானதே. ஆன்மீக கனவை புரிந்து கொள்வது எப்படி?ஒரு கனவு குறைந்தது மூன்று முறைக்கு மேலாக வந்தால், அதனை ஆன்மீக சார்ந்த கனவாக கூறலாம். இறந்த ஆன்மாவிற்காக நீங்கள் ஏதாவது செய்வீர்கள் என உங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தால், அது உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்யும். இறந்த பிறகு சாந்தி கிடைக்க, அல்லது தடைகளை நீக்க உங்களிடம் அதற்கான உதவியை சுட்டிக் காட்டலாம். அகால மரணம் அடைந்தவர்கள் ஏன் கனவில் வருகிறார்கள்? நீண்டகாலமாக நோய்வாய் பட்டிருத்தல் அல்லது இயற்கையான வழிகளில் மரணிப்பவர்களுக்கு அவர்களின் மரணத்தை எதிர்நோக்க முடியும். அதனால் இறந்த பிறகு அவர்கள் பாதையில் செல்ல அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் எதிர்பாராத தருணங்களில் கொடூர மரணங்களை சந்தித்தவர்கள், மன ரீதியாக சாவிற்கு தயாராக இருந்திருக்க மாட்டார்கள். அதனால் இறந்த பிறகு அவர்களால் சாந்தி அடைய முடியாது. சாந்தியைப் பெறும் நோக்கில் அவர்கள் உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள. மறைந்த ஆன்மாக்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்? முதல் கட்டமாக, அவர்களின் நினைவில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமென்றாலோ அல்லது அவர்களின் நினைவு உங்களை வாட்டுவதை தவிர்க்க வேண்டுமென்றாலோ, ஸ்ரீ குருதேவா தட்டா மந்திரத்தை தொடர்ச்சியாக ஜெபிக்கவும். இறந்த குடும்ப உறுப்பினர் அடிக்கடி கனவில் தோன்றினால், நாராயண நாகபலி அல்லது திரிபிண்டி ஷ்ரதா போன்ற சடங்குகளை மேற்கொள்ளலாம். அத்தகைய சடங்குகளில் சாஸ்த்ரிகள் ஓதும் மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இறந்த ஆன்மாக்கள் சாந்தியடைய அது பெரிதும் உதவும். – இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!

பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?

குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம். இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது.மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும் சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்குகுங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும் குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும். குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை,நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும். சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்.

நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்க விரும்பினால், இச்செயல்களை மாலையில் செய்யாதீர்கள்!

அமைதியான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ நமது சாஸ்திரங்கள் சில குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்துகின்றன. நம் ஒவ்வொருவருக்குமே மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அந்த ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதற்கு நாம் செய்யும் சில தவறுகளையும் தவிர்க்க வேண்டும். இக்கட்டுரையில் ஒருவர் அதிர்ஷ்டசாலியாக இருக்க விரும்பினால், மாலை வேளையில் அல்லது சூரிய அஸ்தமனத்தின் போது செய்யக்கூடாத சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றைத் தவிர்த்து வாருங்கள். உணவு உண்பது மாலையில் சூரிய அஸ்தமனத்தின் போது உணவை உண்பது ஆரோக்கியமானது அல்ல. இது வயிற்று உபாதைகளை உண்டாக்கும். சாஸ்திரத்தின் படி, இது வீட்டில் செலவுகளை அதிகரிக்குமாம். இருப்பினும், மாலையில் தாங்க முடியாத அளவில் பசி என்றால், பழங்கள் அல்லது பழச்சாறுகளை உட்கொள்ளுங்கள். சுத்தப்படுத்துதல் சூரிய அஸ்தமனத்தின் போது, வீட்டை சுத்தம் செய்யும் பழக்கத்தைத் தவிர்த்திடுங்கள். லட்சுமி தேவி நம் வீட்டில் எப்போதும் இருக்க வேண்டுமானால், மாலை வேளையில் கடவுளை பூஜித்து வணங்குங்கள். உடலுறவு மாலை வேளையில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சாஸ்திரத்தின் படி, தேவலோகத்தில் உள்ள லட்சுமி தேவி மாலையில் பூமியை நோக்கி வருவதால், இம்மாதிரியான செயலில் ஈடுபட்டால், லட்சுமி தேவி உங்கள் வீட்டு பக்கமே வரமாட்டாள். மேலும் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டால், வீட்டில் பணப் பிரச்சனை அதிகரிக்கும். தூக்கம் மாலை வேளையில் தூங்குவது அறவே செய்யக்கூடாத செயல்களுள் ஒன்று. ஏனெனில் இது மனநிலையை மந்தப்படுத்தி, நினைவுத் திறனை பலவீனமாக்கி, வயிற்றுப் பிரச்சனையால் அவஸ்தைப்படச் செய்யும். இலைகளைப் பறிப்பது மாலை வேளையில் செடியில் இருந்து இலைகளைப் பறித்தால், அது வீட்டில் வறுமையை வரவழைக்கும். குறிப்பாக துளசி செடியில் இச்செயலை செய்தால், குடும்ப சூழ்நிலை மோசமாகும். – இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க தினமும் காலை இதை செய்யுங்கள்!

சூரிய உதயத்திற்கு முன்பான விடியற்காலையினை உஷத்காலம் என சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அவ்வேளையில் உஷஸ் என்னும் பெண் தேவதை நம் வீட்டிற்கு வாசம் செய்கிறார், இதனையே நாம் திருமகள் வருவதாக குறிப்பிடுகிறோம். எனவே அதிகாலையிலே விழித்தெழ வேண்டும். இந்த நேரத்தில் தூங்குபவன், எவ்வளவு செல்வ செழிப்புடன் இருந்தாலும் மகாலட்சுமி அவனை விட்டு விலகி விடுவார். இதனையே சீரியோதயே சாஸ்தமயே ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம் சாஸ்த்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமகளின் தோற்றம் தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலைக் கடைந்தப் போது அதில் வந்த பல்வேறு பொருள்களுடன் திருமகளும் வந்தார். திருமகளின் பெயர் மற்றும் வடிவங்கள் திருமகளிற்கு பத்மா, பத்மப்பிரியா, பத்மசுந்தரி, கமலா, ஐஸ்வர்யா, பார்கவி, ஸ்ரீதேவி என பல பெயர்கள் உள்ளன. திருமகள் வடிவம் அஷ்டலட்சுமிகளாக சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிலட்சுமி தான்யலட்சுமி தனலட்சுமி தைரியலட்சுமி சந்தானலட்சுமி கஜலட்சுமி விஜயலட்சுமி வித்யாலட்சுமி திருமகளுக்காக வரலட்சுமி நோன்பினைக் கடைப்பிடித்தால் நாம் நினைத்தது அனைத்தும் நிறைவேறும். லட்சுமி கடாட்சத்தினைப் பெற தினமும் விடியற்காலையில் எழுந்து, குளித்து விளக்கேற்றி, வலதுகையில் விளக்குடனும் இடதுகையில் ஊதுபத்தியுடனும் வாசலில் நின்று ”ஓம் ஸ்ரீ வாமேச ரிஷியெ நமஹ” எனும் மந்திரத்தினை உச்சரிக்க வேண்டும். வீட்டில் நெல்லிக்காய் மரம் வளர்த்து, தினம் துளசிமாடத்தில் விளக்கு ஏற்றினால் திருமகள் வாசம் செய்வார். நம் வீட்டில் பணப்பெட்டியினை தென்மேற்கு திசையில் வைத்து கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அல்லது வடமேற்கு திசையில் வைத்து கிழக்கே பார்த்து அமைத்தால் பணவரவு கூடும். – இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத நெகடிவ் வார்த்தைகள்!

குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி இப்போது பார்க்கலாம். 1. எந்தச் சூழ்நிலையிலும் ‘நீ ஒரு கெட்ட பையன் (பெண்)’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்கு மாறாக, ”நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா? இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா?” என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும். 2. ‘நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை’ என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் யாருமே பயனற்றவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மற்றவர்களோடு ஒப்பீடு செய்யும்போது, சகோதர, சகோதரிகளின் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படும். வாழ்வில் பெரிதாக தோல்வி அடைந்ததாக நினைப்பார்கள். இது, சக குழந்தைகளிடையே பிரச்னையை ஏற்படுத்தும். 3. எதற்கெடுத்தாலும் ‘நோ’ சொல்லாதீர்கள். ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, ‘இல்லே, முடியாது, நோ’ போன்ற வர்த்தைகளை சட்டெனப் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் பெற்றோர் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். குழந்தை கேட்கும் விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், ‘அப்புறம் பார்க்கலாம், இது ஏன் தேவையற்றது’ என விளக்குங்கள். 4. ‘என்னோடு பேசாதே’ என்ற வார்த்தை வேண்டாம். பேசுதல், அரவணைத்தல் மூலமே பெற்றோர் – குழந்தைகள் பிணைப்பு பலப்படுகிறது. எனவே, ‘‘என்னோடு பேசாதே’’ என முகத்தில் அடிப்பது போல பேச்சைத் துண்டிக்காதீர்கள். குழந்தைகள் மனதில் உள்ள விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் அனுமதியுங்கள். அதில் உடன்பாடில்லாத விஷயங்களை உங்கள் பேச்சு, வார்த்தை, முகபாகங்களால் வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாக பேசுவது, விவாதிப்பதைத் தவிர்த்து, ‘உன் வார்த்தைகளால் ’அப்செட்’ ஆகிவிட்டேன்’ என சொல்லுங்கள். இதன் மூலம், உங்களுடன் எப்படிப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள். 5. பையன்கள் இதைச் செய்ய கூடாது? பெண்கள் அதைச் செய்ய கூடாது என சொல்லக் கூடாது. குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்வது பல சமூகப் பிரச்னைகளை குறைக்கும். வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகளை வகுக்கக் கூடாது. இருபாலின குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். இது, பெண்களுக்கான வேலை, இது பையன்களுக்கான வேலை எனப் பிரிக்க கூடாது. வீட்டு வேலையில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினத்தவரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள். 6. ‘அப்பா வரட்டும் உனக்கு இருக்கு, உங்க மிஸ்கிட்டே சொல்லிடறேன்’ போன்ற வார்த்தைகள் கூடாது. குறிப்பாக, அம்மாக்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள். இது தாயின் இயலாமையின் வெளிப்பாடே. ஆசிரியரையும் அப்பாவையும் பயமுறுத்தும் பிம்பமாக உருவாக்குவது அவர்கள் மீது பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் பயத்துடன் கழிக்கும் சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர்கள். குழந்தைகள் தவறு செய்யும்போது, அந்த விஷயத்தை அப்பாவிடம் அவர்களே தெரியப்படுத்தி திருத்திக்கொள்ள அனுமதியுங்கள். 7. ‘உன்னை மாதிரி ஒரு பிள்ளையை யாருக்குமே பிடிக்காது. யாருமே உன்னை வெச்சுக்க மாட்டங்க’ போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. எடுத்துக்காட்டாக, குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால், ‘கத்தாதே… வெளியே போ!’ என்று நாமும் கத்தாமல், ‘மெதுவாகப் பேசுங்கள். அல்லது வெளியே விளையாடுங்கள்’ என்று கூறலாம். உங்கள் குழந்தை சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், எதனால் என்பதை ஆராய்ந்து சரிசெய்யுங்கள். – இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

இரவில் தூக்கம் வர நீண்ட நேரம் ஆகிறதா?

1 மணிநேரத்திற்கு முன் இந்த பானம் குடிங்க. நிம்மதியான தூக்கம் வரும். மதிய வேளையில் சாப்பிடும் அளவுக்கு அதிகமான உணவு மற்றும் மோசமான செரிமானம் போன்றவை தான் மாலை வேளையில் வயிற்று பிரச்சனையால் அவஸ்தைப்படச் செய்யும். அதுமட்டுமின்றி, இவை இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதில் இடையூறை ஏற்படுத்தும் மற்றும் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். இப்படி தூக்கத்தைத் தொலைப்பதில் இருந்து விடுபட, இரவில் படுக்கும் முன் தேங்காய் பாலில் மஞ்சள், இஞ்சி கலந்து குடித்து வாருங்கள். இதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். சரி, இப்போது அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காண்போம். தேவையான பொருட்கள்: இஞ்சி பவுடர் – 1 டீஸ்பூன்தேங்காய் பால் – 2 கப்மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்தேன் – 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி: நிறைய ஆய்வுகளில் இஞ்சியில் உள்ள ஏராளமான மருத்துவ குணங்கள், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சரிசெய்யும் என கண்டறியப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மாதவிடாய் கால வலிகள், குடலியக்க பிரச்சனைகள், ஒற்றைத் தலைவலி, உயர் கொலஸ்ட்ரால், ஆஸ்டியோபோரோசிஸ், சர்க்கரை நோய், குமட்டல் மற்றும் வாந்தி, புற்றுநோய், எடை குறைவு போன்றவற்றை இஞ்சி குணப்படுத்தும். தேங்காய் பால்: தேங்காய் பாலில் வளமான அளவில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளது. இதனால் இது புரோட்டீன் இழப்பைக் குறைக்கும், செரிமான பிரச்சனைகளைத் தடுக்கும், திசுக்களின் பாதிப்பை குணப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் கொழுப்புக்களைக் கரைக்கும். மஞ்சள்: மஞ்சளில் ஆன்டி-செப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ளதால், பழங்காலமாக இது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மூட்டு வலிகள், உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது, அல்சரைக் குணப்படுத்துவது, செரிமான பாதையில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை. மிளகு: மஞ்சளுடன் மிளகை சேர்க்கும் போது, மஞ்சளில் உள்ள முக்கிப் பொருளான குர்குமினை உறிஞ்சும் செயல் துண்டப்படும். தேன்: தேன் வெறும் சுவையூட்டி மட்டுமின்றி, மருத்துவ குணங்கள் நிறைந்த சக்தி வாய்ந்த மருத்துவ பொருளும் கூட. இத்தகைய தேன் தூக்கமின்மையைப் போக்கும், ஆற்றலை அதிகரிக்கும், சோர்வைப் போக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக்கும். தயாரிக்கும் முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் தேனைத் தவிர்த்து, அனைத்து பொருட்களையும் போட்டு, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் கிளறி இறக்கி, தேன் கலந்து குடிக்க வேண்டும். உட்கொள்ளும் முறை: இந்த கலவையை தினமும் இரவில் படுக்கும் முன் 1 மணிநேரத்திற்கு முன் குடித்து வந்தால், மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள் மற்றும் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நன்மைகளும் கிடைக்கும். அனைவருக்கும் பகிருங்கள். 

விரைவில் குழந்தை பாக்கியம் பெற இயற்கை வைத்தியம்!

மாதவிலக்கு கோளாறுதான் குழந்தை பேறு தள்ளி போக காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்திய முறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம். இப்ப எல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு! மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும். மாதவிலக்கு கோளாறுதான் காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்தியமுறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம். அரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு… இல்லேன்னா, பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க. மாதவிலக்கான நாட்களிலிருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டு வந்தா, கண்டிப்பா பலன் கிடைக்கும். இன்னொரு வைத்தியமும் இருக்கு! பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய்… இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க. இதை சூடு பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கான முதல் மூணு நாட்களில் காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு. உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாவதில் பிரச்சனை வரும். தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாட்களிலேயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க. சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும். – அனைவருக்கும் பகிருங்கள்.

கால் விரலை வெச்சு உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம் தெரியுமா?

உலகில் இதய நோயால் ஏராமானோர் மரணத்தை சந்திக்கின்றனர். இதற்கு தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான் காரணம் என்று சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. மேலும் இன்றைய காலத்தில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து வருகின்றனர். சரி, உங்கள் இதயம் ஆரோக்கியமா தான் இருக்கா? அதைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையில் உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை கண்டறிய உதவும் ஓர் எளிய வழியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதய ஆரோக்கியம் ஒவ்வொருவரும் தங்களின் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் திடீரென்று மாரடைப்பால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கலாம். புதிய ஆய்வு சமீபத்திய ஆய்வு ஒன்றில், யாரால் கையால் கால்களை மடக்காமல் கால்விரல்களைத் தொட முடிகிறதோ, அவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கண்டறியும் முறை முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்களை நீட்டி, பின் கையால் கால்விரல்களைத் தொட வேண்டும். அப்படி உங்களால் தொட முடிந்தால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். அமெரிக்க ஆய்வு அமெரிக்காவின் வடக்கு டெக்ஸாஸில் மேற்கொண்ட ஆய்வில், 20-83 வயதிற்குட்பட்ட சுமார் 526 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் ஒவ்வொருவரையும் கால்களை மடக்காமல் கையால் கால்விரல்களைத் தொடுமாறு செய்தனர். அமெரிக்க ஆய்வு அமெரிக்காவின் வடக்கு டெக்ஸாஸில் மேற்கொண்ட ஆய்வில், 20-83 வயதிற்குட்பட்ட சுமார் 526 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் ஒவ்வொருவரையும் கால்களை மடக்காமல் கையால் கால்விரல்களைத் தொடுமாறு செய்தனர். இரத்த அழுத்தம் மற்றும் இதய செயல்பாடு இப்படி ஒவ்வொருவரும் முயலும் போதும், அவர்களது இரத்த அழுத்தம் அளவிடப்பட்டது மற்றும் அவர்களின் தமனி மற்றும் இதயத்தின் செயல்பாடும் கூர்மையாக கண்காணிக்கப்பட்டது. ஆய்வு முடிவு இந்த ஆய்வின் இறுதியில், இதய பிரச்சனைகள் உள்ளவர்களால் கால் விரல்களைத் தொட முடியாமல் இருப்பது தெரிய வந்தது. நல்ல நிலை இந்த முறையால் நேராக அமர்ந்து, கால்விரல்களைத் தொட முடிந்தால், இதயம் நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை முடியாவிட்டால், உங்கள் இதய நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளது என்றும், இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருப்பது போல் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். -இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் வெற்றியடைய குபேர முத்திரை!

வாழ்க்கையில் நினைத்த காரியங்களில் வெற்றி பெற பெரு விரல் நுனியுடன் சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை இணைப்பதே குபேர முத்திரை ஆகும். அதிகமாய் அழுத்தம் தராது.விரல்களை சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம். இந்த முத்திரையானது நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தியாக மாற்றமடையும். இதன் மூலம் வாழ்வு வளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறார். அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாகக் கருதபடுபவர் குபேரன். குபேர முத்திரையை செய்வதன் மூலம் விரும்பிய வளங்களைப் பெறலாம். எனவேதான் இந்த முத்திரையை குபேர முத்திரை என்று அழைக்கிறார்கள். செய்முறை: பெருவிரல்,சுட்டுவிரல்,நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளும் ஒன்றாகத் தொடும்படி இணையுங்கள். பிற இரண்டு விரல்களும் மடித்து உள்ளங்கையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும்.இந்த முத்திரையைச் செய்யும்முன் நீங்கள் எதைபெற விரும்புகிறீர்களோ அதைக் குறித்து தீவிரமாக மனதில் சிந்தனை செய்யுங்கள்.சில நிமிடங்களுக்குப் பின் இந்த முத்திரையைச் செய்தபடியே அந்தச் சிந்தனையைத் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் செய்வது மிகச் சிறந்த பலங்களைத் தரும். முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடியே கூட இந்த முத்திரையை செய்யலாம்.அமரும் முறையை விட இந்த முத்திரையைப் பொறுத்தவரை நாம் விரும்புவது எதுவோ அது குறித்த ஒரு முகமான தீவிரமான சிந்தனையே மிக முக்கியமாகும். எவ்வளவு நேரம்? *குறைந்தபட்சம் பத்து நிமிடங்கள் என ஒரு நாளில் மூன்று முதல் நான்கு தடவைகள் வரை செய்யலாம். *ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 45 நிமிடங்கள் வரை செய்யலாம்,அதற்கு மேல் வேண்டாம். *ஆல்பா மைண்ட் கண்ட்ரோல் முறையில் சிறு சிறு விஷயங்களை அடைய (உதாரணமாக ஒரு துணி வாங்கச் செல்கையில் விரும்பிய நிறத்தில் துணி அமைய, டிரெயின் டிக்கெட் ரிசர்வ் செய்யச் செல்லும் போது டிக்கெட் கிடைக்க என சிறு சிறு அன்றாடத் தேவைகளுக்கும்)இந்த முத்திரையைப் பயன் படுத்தலாம் இவற்றுக்காச் குபேர முத்திரையை ஒரு சில நிமிடங்கள் செய்தாலே போதுமானது. எப்படி வேலை செய்கிறது? பெருவிரல், சுட்டு விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் இணைக்கும் போது கீழ்காணும் நிகழ்வுகள் நடை பெறுகிறது. *நெறுப்பு, காற்று, ஆகாயம் ஆகிய மூன்று பஞ்சபூதங்கள் தூண்டப்படுகின்றன. *மனிபூரகச் சக்கரம், அனாஹதம், விஷுதி, ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகிண்றன. *செவ்வாய்,குரு(வியாழன்), சனி, ஆகிய கிரகங்களின் சக்திகள் அதிக அளவில் உடலினுள் கிரகிக்கப்படுகின்றன. *இந்த மூன்று விரல்களோடு இணைக்கப் பட்டுள்ள சக்தி ஓட்டப் பாதைகள் தூன்டப்படுகின்றன. இத்தனையும் நிகழும் போது, நமது ஆழ்மனம்(Sub consious mind) விழித்தெழுகிறது. நாம் எதை வேண்டுமென தீவிரமாகச் சிந்திக்கிறோமோ அந்த எண்ணம் நம் ஆழ் மனதில் ஆழமாகப் பதிகிறது. உதாரணமாக நீங்கள் ஒரு புதிய தொழிலைத் துவங்கும் போது இந்தத் தொழில் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு முகமாக தீவிரமாகச் சிந்தித்தபடி குபேர முத்திரையைச் செய்யும்போது அந்தச் சிந்தனை உங்கள் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. ஆழ்மனதில் ஒரு சிந்தனையை விதைத்து விட்டால் அதைச் செயலாக்கும் வழிமுறைகளை உங்களது உள்ளுணர்வு உங்களுக்குக் காட்டிக் கொண்டேயிருக்கும்.நாம் உறங்கும் போதும் கூட ஆழ்மனது உறங்குவதுயில்லை.அதில் விதைக்கப்பட்ட சிந்தனையைச் செயலாக்குவது எப்படி என திட்டங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கும். ஹிப்னாடிசம்,மெஸ்மரிசம், போன்ற கலைகளும் இதையே செய்கின்றன, நமது புற மனதை (Consious Mind) ஹிப்னாடிசம் மூலம் தூங்க வைத்து ஆழ்மனதில் எண்ணங்களை விதைப்பதே ஹிப்னாடிசத்தின் அடிப்படை. குபேர முத்திரையில் எந்தவிதமான மந்திரமும் கிடையாது. நமது எண்ணங்களை ,விருப்பங்களை நமது ஆழ்மனதில் பதிய வைக்கும் ஒரு தந்திர வழியே (Tantra)இந்தக் குபேர முத்திரை! பலன்கள். *நினைத்த காரியங்களில் வெற்றி பெறலாம். *வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம். – அனைவருக்கும் பகிருங்கள்

வீடு தேடிவரும் மகாலட்சுமி

வரலட்சுமி பூஜை செய்ய முடியாதவர்கள் மனம் உருகி வெள்ளிக்கிழமை பூஜை, வைபவ லட்சுமி பூஜை, குபேர லட்சுமி பூஜை என்று செய்து லட்சுமியை வீட்டிற்கு என்றும் அழைக்கலாம். வீடு தேடிவரும் மகாலட்சுமி ஒரு சமயம் லட்சுமி தேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வீடு, வீடாக சென்றாள். ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது. மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி, அந்த இல்லத்தரசி ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தாள். வாசலில் நின்ற லட்சுமியைப் பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள். மனையைப் போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். அந்த அம்மாள் இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடக்கிறது. அதாவது லட்சுமி தேவி எங்கும், எப்பொழுதும் வேண்டுமானாலும் வருவாள். வரலட்சுமி பூஜை செய்ய முடியாதவர்கள் மனம் உருகி வெள்ளிக்கிழமை பூஜை, வைபவ லட்சுமி பூஜை, குபேர லட்சுமி பூஜை என்று செய்து லட்சுமியை என்றும் அழைக்கலாம்.

நீண்ட ஆயுள், ஆரோக்யம் அருளும் ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம்

அபூர்வ ஸ்லோகம் உலகையே புரந்தருளும் அற்புத இயற்கை சக்தி சூரியன். புராணத்தைப் பொறுத்தவரை பராக்கிரமசாலியான அனுமனுக்கே குருவாக அமைந்து நவவியாகரணங்களைக் கற்பித்தவர் சூரியன். ராவணனுக்கெதிரான போரில் மனத்தளவிலும், உடல் ஆரோக்யத்திலும் தளர்ச்சியடைந்திருந்த ராமனை, சூரியனைப் போற்றும் ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள்தான் புத்துணர்வு ஊட்டி புது பலம் கொடுத்து முழு வேகத்துடன் ராவணனை எதிர்கொண்டு வெற்றியும் பெறச் செய்தது. அந்த சூரியனைப் போற்றி மகிழத்தக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்; நீண்ட ஆயுள் கிட்டும்; உடலில் ஆரோக்கியம் சீர்படும்; புத்தி சிறக்கும். யாக்ஞவல்க்ய மஹரிஷியால் இயற்றப்பட்டது இந்த ஸ்தோத்திரம். ஸ்ருணுஷ்வ முனிஸார்தூல ஸுர்யஸ்ய கவசம் ஸுபம் ஸரீராரோக்யதம் திவ்யம் ஸர்வ ஸௌபாக்ய தாயகம் ஓ முனிச்ரேஷ்டா! சரீரத்திற்கு ஆரோக்யத்தைக் கொடுக்கக்கூடியதும், சிறந்ததும், ஸர்வ பாக்கியங் களைக் கொடுக்கக்கூடியதும் மங்களகரமுமான சூரிய கவசத்தைக் கேளும். தேதீப்யமானமுகுடம் ஸ்புரம்மகரகுண்டலம் த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்ரோத்ர மேததுதீர்யேத் மிகவும் பிரகாசிக்கின்ற கிரீடத்தையுடையவரும், ஒளிவீசும் மகர குண்டலங்களை அணிந்தவரும், ஆயிரக்கணக்கான கிரணத்தையுடையவருமான சூரியபகவானை தியானம் செய்து இத்துதியை ஜபிக்க வேண்டும். ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேமிதத்யுதி: நேத்ரே தினமணி: பாது ஸ்ரவணே வாஸரேஸ்வர: என் தலையை பாஸ்கரன் ரட்சிக்க வேண்டும். என் நெற்றியை அளவற்ற ஒளிபொருந்தியவன் காக்கவேண்டும். கண்களை தினமணியானவன் ரட்சிக்க வேண்டும். காதுகளை உலகுக்கே ஈஸ்வரனான சூரியன் ரட்சிக்க வேண்டும். க்ராணம் கர்மக்ருணி: பாது வதனம் வேதவா ஹன: ஜிஹ்வாம் மே மானத: பாது கண்டம் மே ஸுரவந்தித: என் மூக்கை வெப்பமுள்ள கிரணமுள்ளவன் ரட்சிக்க வேண்டும். என் முகத்தை வேதங்களையே குதிரைகளாகத் தன் தேரில் பூட்டிக்கொண்ட ஆதவன் காக்க வேண்டும். என் தொண்டையைத் தேவர்களால் பூஜிக்கப்பட்டவன் ரட்சிக்க வேண்டும். ஸ்கந்தௌ: ப்ரபாகர: பாது வக்ஷ: பாதுஜனப்ரிய: பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர: என் தோள்களை ஒளி மிகுந்தவன் செய்கிறவன் காக்க வேண்டும். மார்பை ஜனங்களுக்குப் பிரியன் ரட்சிக்க வேண்டும். கால்களை பன்னிரண்டு உருவமுள்ளவன் (பன்னிரு ஆதித்யர்கள்) ரட்சிக்க வேண்டும். அவயங்களையும் எல்லாவற்றையும் ஈஸ்வரன் ரட்சிக்க வேண்டும். ஸுர்யரக்ஷாத்மகம் ஸ்தோத்ரம் லிகித்வா பூர்ஜபத்ரகே ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வ ஸித்தய: யாரொருவர் சூர்ய ரட்சா ரூபமான இந்த ஸ்தோத்திரத்தை பூர்ஜபத்திரத்தில் (மரத்தின் பட்டை) எழுதித் தன் கையில் தரித்துக் கொள்கிறானோ அவனுக்கு எல்லா ஸித்திகளும் வசமாகயிருக்கும். ஸுஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக்யோதீதே ஸ்வஸ்த்தமானஸ: ஸ ரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம் ச விந்ததி. யார் நன்கு ஸ்நானம் செய்து இத்துதியை ஜபம் செய்கிறாரோ, யார் ஏகாக்ர சித்தத்துடன் இத்துதியை அத்யயனம் செய்கிறாரோ அவர் ரோகமற்றவராயும், நீண்ட ஆயுளை உடையவராயும் சுகத்தையும், பலத்தையும் அடைகிறார். இந்த ஸ்தோத்திரத்தைத் தவிர கீழ்க்காணும் சூரிய மங்கள ஸ்லோகத்தையும் சூர்ய காயத்ரி மந்திரங்களையும் உடன் ஜபித்து வரலாம்: சூர்ய மங்கள ஸ்லோகம் பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்வரங்முக: சத்ருர் பார்க்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம் பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி, காச்யப கோத்ரம், நவகிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் எனக்கு எல்லா மங்களத்தை அருளட்டும்சூர்ய காயத்ரி மந்திரங்கள் (இவற்றை உளமாற ஜபிப்பதால் கண் பார்வைக் கோளாறுகள் எல்லாம் முற்றிலும் நீங்கிவிடும்) ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி தன்னோ சூர்ய ப்ரசோதயாத் ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்ய ப்ரசோதயாத் ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாஜ்யோதிஸ்சக்ராய தீமஹி தன்னோ சூர்ய ப்ரசோதயாத் ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத் ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாதேஜாய தீமஹி தன்னோ சூர்ய ப்ரசோதயாத் ஓம் ஆதித்யாய வித்மஹே மார்தாண்டாய தீமஹி தன்னோ சூர்ய ப்ரசோதயாத் ஓம் லீலாலாய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத் ஓம் பிரபாகராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

ஞாயிற்றுக்கிழமையில் இதை மட்டும் செய்ங்க.. செல்வம் கொட்டோ கொட்டுனு கொட்டுமாம்!

திரி நம் முன்னே மாட்டிக்கொண்டால், உண்மையிலேயே மனதுக்குள் நாம் எவ்வளவு சந்தோஷப்படுவோம். அப்படி உங்களுடைய எல்லா எதிரிகளையும் வீழ்த்த வேண்டுமா? அப்படியென்றால் ஞாயிற்றுக்கிழமையில் விரதமிருந்து சூரிய பகவானை வழிபடுங்கள். எப்பேர்ப்பட்ட எதிரியாக இருந்தாலும் சூரியனைப் போல நின்று அவர்களை காலி செய்து விடலாம். சூரியபகவான் நீங்கள் எதிரியை வீழ்த்த நினைத்தால், சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள். சூரியன் தான் மிகப்பெரிய நட்சத்திரம். இந்த பிரபஞ்சத்துக்கே ஆற்றலைத் தரக்கூடியவர். இந்த சூரியனை வழிபட்டவர்களுக்கும் அவர் நிச்சயம் போதுமான ஆற்றலைத் தந்து வெற்றிபெறச் செய்வார் என்று நம்புங்கள். சூரிய விரத விதிமுறைகள் சூரிய விரதம் இருக்கலாம் என்று முடிவு செய்தீர்களென்றால், காலையில் சூரிய உதயத்துக்கு முன் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் தலைமுழுகி குளிக்க வேண்டும். நீங்கள் பூஜை செய்யப்போகிற இடத்தை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அர்ச்சனை தட்டை தயார் செய்து கொள்ளுங்கள். அதில், கொஞ்சம் அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆராதனை விளக்கை ஏற்றிக் கொண்டு, அதை சூரியன் உதிக்கும் திசை நோக்கி வைத்து, ஒரு சிறிய சொம்பில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து சூரிய பகவானை நோக்கி வழிபட்டுக் கொண்டே, அந்த அர்ச்சனைத் தட்டின் மீது தீர்த்தம் போல தெளித்து விடுங்கள். விரத சாப்பாடு பூஜை முடிந்தவுடன் நீங்கள் சாப்பிட வேண்டியது ஏதேனும் இனிப்பு வகையாக இருக்க வேண்டும். குறிப்பாக, வெல்லம் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பை சாப்பிடலாம். அதன்பின் மாலை வரை தண்ணீர், பால் தவிர வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. கண்டிஷன் காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் விரதம் இருந்துவிட்டு, மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக, நன்கு சாப்பிட்டு விட வேண்டும். ஒருவேளை நீங்கள் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக சாப்பிடவில்லை என்றால், கட்டாயம் அன்றைய நாள் முழுக்க சாப்பிடக்கூடாது. அடுத்த நாள் காலை சூரிய உதயத்துக்குப் பின்னர் தான் சாப்பிட வேண்டும். பசு சாணம் தங்கமான கதை ஒரு ஊரில் மூதாட்டி ஒருவர் தினமும் அதிகாலை எழுந்து குளித்து சூரியனை வழிபடுவது வழக்கம். அப்போது தான் பூஜை செய்யும் இடத்தை பசுவின் சாணம் கொண்டு முழுகுவார். அவரிடம் சொந்தமாக பசு கிடையாது. பக்கத்து வீட்டின் பசுவிலிருந்து தான் சாணம் எடுத்து வருவார். இது தொடரவே, இதைப் பார்த்த பொறாமை கொண்ட பக்கத்து வீட்டுக்காரி, அன்றைக்கு இரவே தன்னுடைய பசு மாட்டை பிடித்து வீட்டுக்குள்ளே கட்டிப்போட்டு விட்டார். அடுத்த நாள் அதிகாலை எழுந்து, சாணம் எடுக்கப்போன மூதாட்டிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பசுவை காணவில்லை. சாணம் கிடைக்காத கவலையில், சோகமாகத் திரும்பிய பாட்டி, அன்றைக்கு பூஜை செய்யவில்லை. அன்றிரவு அவருடைய கனவில் தோன்றி, சூரிய பகவான் ஏன் நீ எனக்கு பூஜை செய்யவில்லை என்று கேட்டாராம். அதற்கு அந்த பாட்டி நடந்த கதையை முழுக்க விவரித்தாராம். அதன்பின், சூரியன் அந்த பாட்டிக்கு ஒரு பசு மாட்டை கொடுத்தாராம். அது முழுக்க தங்கமாக சாணத்தை போடும் மாடு. இது அந்த பாட்டிக்குத் தெரியாது. வெளியில் பசு மாட்டைக் கட்டியிருந்தார். அதை எப்படியுா அந்த பக்கத்துவீட்டு பெண் கண்டுபிடித்து விட்டாள். எப்படியாவது இன்று பசுவை மாற்றிவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாள். ஆனால் அதற்குள் மழை வருவது போல் இருக்கவே, பாட்டி பசுவை தன்னுடைய வீட்டுக்குள் கட்டிவிட்டார். அன்றிரவு வீட்டுக்கள்ளு பசு சாணம் போட்டது. அப்போதான் அந்த பாட்டிக்கு இந்த பசு சாணத்தை தங்கமாகப் பொடுகிறது என்பது தெரிய வந்தது. அதற்கு இதைக்கண்டு எரிச்சலடைந்த பக்கத்து வீட்டுப்பெண், தன்னுடைய கணவனை அழைத்து உடனடியாக, அரசனிடம் போய் அந்த பாட்டியின் பசுவை பற்றி சொல்லிவிட்டு வா எனறு கட்டளையிட்டாள். அதேபோலவே அவரும் செய்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அரசன் உடனே அந்த பசுவையும் பாட்டியையும் அழைத்து வரும்படி காவலர்களுக்கு ஆணையிட்டார். அவர்களும் அழைத்து வரவே, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அபபோது நடந்த கதையை பாட்டி சொன்னார். ஆனால் அரசன் நம்பவில்லை. யாரிடம் கதை சொல்லுகிறாய் என்று சொல்லி அந்த மாட்டை பிடிங்கிக் கொண்டார். அன்றிரவு அந்த அரசனின் கனவில் சூரியபகவான் தோன்றி, நாளை காலையில், அந்த பசுவை பாட்டியிடம் கொடுத்துவிடு, இல்லையேல் உன்னுடைய சாம்ராஜ்ஜியத்தையே அழித்து விடுவேன் என்று கூறினாராம். உடனே பயந்து போன ராஜா பாட்டியின் வீட்டுக்கு தானே நேரில் சென்று பசு மாட்டைக் கொடுத்துவிட்டு தானும் ஆசி பெற்று வந்தாராம். விரத மகிமை இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?… தன்னை எதிர்க்கும் எதிராளி அரசனாகவே இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து சூரிய பகவானை வழிபட்டால், எதிரிகள் வீழ்ந்து போவார்கள். அத்தகைய மகத்துவம் வாய்ந்ததுதான் இந்த ஞாயிற்றுக்கிழமை சூரிய விரதம்.