Tuesday, April 30, 2019

ஆண் பெண் வசியம்"

#குருவே #துணை

"ஆண் பெண் வசியம்"

#வணக்கம்
பலரும் என்னிடம் வசிய மை மற்றும் பெண் வசிய மை எளியமுறையில் சொல்லுங்கள் ஐயா என்று கேட்டீர்கள்.
இந்த முறை மிக மிக எளியமுறையில் இருக்கும். தவறான வழியில் பயன்படுத்த வேண்டாம் .
உங்களை பிரிந்த மனைவி,காதலிக்கு உரியவர் மட்டும் பயன்படுத்துங்கள் அதுவே உங்களுக்கு நல்லது .
தவறு செய்துவிட்டு எல்லேரையும் ஏமாற்றலாம் ஆனால் நமக்குமேல் ஒருவன் இருக்கிறான் தப்பமுடியாது.

பெண் வசிய "மை"மூலிகை கருஊமத்தை

கரிநாள் அஷ்டமி இல்லாத வளர்பிறை ஞாயிற்றுக் கிழமை காலை 5 மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு குளித்து விட்டு .
விநாயகரை வணங்கி செய்ய வேண்டும். வசியத்திற்க்கு உரிய நாள் ஞாயிறு. ஞாயிறு காலை மணி 6 முதல் 7 வரை சூரிய ஓரை அதாவது ஞாயிறு ஓரை. எனவே இந்த நேரத்தில் கருஊமத்தச்செடியினை தொட்டு வணங்கி கற்பூரம் காண்பித்து. சாப நிவர்த்தி செய்து
"ஓம் சக்தி நிற்க சிவன் நிற்க சக்தியும் சிவனும் ஒத்து நிற்க சிவா"
என மும்முறை சொல்லி பின் கருஞ்சேவல் பலிகொடுத்து .
ஆணி வேரை அறுந்து விடாமல் பிடுங்கவும்.

பிடுங்கும் போது மனர்துக்குள்.

ஓம் மாயா மோகி மாகமோகி பெண் மோகம் செய் செய்.
என்று மந்திரத்தை சொல்லி பிடுங்கவும். நம் இடத்துக்கு கொண்டு வர வேண்டும். வரும் வழியில் யாரிடமும் பேசக்கூடாது. வந்து பூஜை அறையில் நமது தெய்வத்தின் முன் வைத்து விட வேண்டும்.

பின் அந்த வேரை சிறு துண்டுகளாக நறுக்கி புது சட்டியில் போடவும்.சிறிது சிற்றாமணக்கு எண்ணை விட்டு நன்கு கரியாகும்படி வறுக்கவும். வறுக்கும் போதும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே வறுக்கவும். நன்றாக கரிபோல் ஆனதும் அதனை அப்படியே குழி அம்மியில் அரைக்கவும். தேவைக்கு ஏற்ப புனுகு,கஸ்தூரி,பச்சைக்கற்பூரம், சந்தன அத்தர் விட்டு நன்றாக மைபோல் அரைத்துக் கொள்ளவும் .அரைக்கும் போது மேற்படி மந்திரத்தை சொல்லிக் கொண்டே கிழக்கு நோக்கி அமர்ந்து அரைக்க வேண்டும். அரைத்து முடித்தபின் அப்படியே டப்பியில் வழித்து வைத்துக் கொள்ளவும்.

மையை புருவ மத்தியில் நெற்றியில் கிழக்கு நோக்கி நின்று கொண்டு வைக்க வேண்டும். வைக்கும் போதும் மந்திரம் சொல்ல வேண்டும். நெற்றியில் மை இருக்கும் போதும் அடிக்கடி மந்திரத்தை உச்சரித்துக் கொள்வது நல்லது.

ஆண் வசியத்திர்க்கு செந்நாய்யுருவி செடி.
பெண் வசிய மை செய்யும் முறைதான் ஆண் வசியத்திர்க்கும். குப்பைமேனிச்செடியும் பயன்படுத்தலாம்.

முதுகு வலியும்!! மருத்துவமும்!!-- மருத்துவ டிப்ஸ்



இடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும்.

நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் – இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த “இழுப்பு” ஏற்படுகிறது.

சியாடிக்கா என்றால் என்ன? நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும்.

முழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும்.

ஆயுர்வேதத்தில் ‘கிரிதரஸி’ எனப்படும் இடுப்பு வலி வாயுவால் உண்டாகும் என கருதப்படுகிறது. தவறான அங்கஸ்திதி, முதுகுவலி, சுளுக்கு இவைகளை ஆயுர்வேதம் காரணமென்கிறது. குளிர்காலமும், மலச்சிக்கலும் ஸியாடிகா பாதிப்புகளை தூண்டிவிடும்.
அறிகுறிகள்

‘சியாடிகா’ உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம்.

இல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனது போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது.

அதனால் ஏதோ சுளுக்கு என்று நாம் அலட்சியமாக இருக்க நேரிடும். ஊசிகுத்தும் வலி, சிறுநீர் போவதை “கன்ட் ரோல்” செய்ய முடியாமல் போதல், இவை இருந்தால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். காலை நீட்டினால் வலி, நடந்தால், மாடி ஏறினால் வலி என்றிருந்தால், ஸியாடிகாவாக இருக்கலாம்.

காரணங்கள்:
• முதுகெலும்பு கோளாறுகள் இடுப்புப் பிடிப்பை தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும்.

இதனால் ஸியாடிகா ஏற்படும். இதர முதுகெலும்பு கோளாறுகளும் காரணங்கள். அதிக எடை தூக்குதல் நடப்பது, ஓடுவது, மாடிப்படிகள் ஏறுவது, இவை வலியை அதிகமாக்கும்.

• ஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்பு பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம்.

• சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும்.

• ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவைகளையும் காரணமாக சொல்லலாம்.

வீட்டு வைத்தியம்:
• விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

• பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.

• புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.

• சூடான நல்லெண்ணை + உப்பு – மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.

• விளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணை 1 தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி – இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.

• ‘வெண்நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 தேக்கரண்டி வீதம், எடுத்துக் கொள்ளவும்.
ஆயுர்வேத அனுபவம்

முதுகு வலி வந்தால், கூடவே இடுப்புப் பிடிப்பும் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவர்கள் அறிந்த அனுபவம். அதனால் முதுகு வலி சிகிச்சையுடன் இடுப்பு பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.

இடுப்பு வலிக்கு, ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பலனை தருகின்றன.

முன்னால் சொல்லப்பட்ட ஆயுர்வேத மருந்துகளும் நல்ல நிவாரணம் தருபவை.
மருந்துகளுடன் ‘வஸ்தி’ எனப்படும் எனிமா சிகிச்சை இடுப்பு வலியை இல்லாமல் செய்யக்கூடியது.

ஒரு நாள் எண்ணெய்யை உபயோகித்தும் மறுநாள் கஷாயத்துடனும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு பிழிச்சல், கடி வஸ்தி சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முதுகில் வலி இருக்கும் இடத்தில் உளுந்து மாவினால் வட்டமாக அமைத்து அதில் மூலிகை எண்ணெய் ஊற்றி செய்யும் சிகிச்சை தான் கடிவஸ்தி.

உணவு கட்டுபாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

இதர வழிகள்:
1. முன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.

2. குப்புற படுக்கக் கூடாது.

3. நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும் இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.

4. நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.

5. உங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.

6. இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.

7. ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.

8. ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.

9. படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.

10. நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

11. பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.

12. தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.

13. தரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின்னர் தூக்குங்கள்.

14. கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் அது முதுகு வலியில் போய் முடியலாம்.

15. உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.

16. பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

17. முதுகுவலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

18. பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் மலச்சிக்கல். இதை தவிர்க்கவும்.

உணவு முறை:
• குளிர் உணவு / பானங்களை தவிர்க்கவும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை தவிர்க்கவும்.
• பழைய உணவுகளை தவிர்க்கவும்.
• கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் – இவற்றை தவிர்க்கவும்.
• எள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும்.
• இரண்டு தேக்கரண்டி சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
• இரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலை பருகவும்.
• இயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியை குறைக்கும்.
• இஞ்சியும், மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்.

சிறுநீரக_செயல்யிலப்புக்கு #டயாலிஸ்_நிரந்தர_தீர்வு #ஆகுமா……❓❓❓❗❗❗



உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு.

எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை.

❓சிறுநீரகத்தின் பணிகள்:

❗நெப்ரான்:

இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை
பிரித் தெடுக்கிறது.

சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன.

மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் சீராக செயல்படவில்லையென்றால் இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும்.

தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும்.

#மேலும்………

இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் 25 சதவீதம் வரை சிறுநீரகம் பெறுகிறது.

அதிலிருந்து உடலுக்குத் தேவையான……

குளுக்கோஸ்,

அமினோ அமிலம்,

வைட்டமின்கள்,

ஹார்மோன்கள்

போன்றவற்றைத் தேக்கிவைத்துக்கொண்டு தேவையற்ற……

யூரியா,

குளோரைடு

போன்ற கழிவுப்பொருள்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியைச் சிறுநீரகம் செய்கிறது.

★அதேவேளையில்………

சோடியம்,

பொட்டாசியம்

போன்ற தாதுக்கள் அதிகரித்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது.

உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்கிறது.

'ரெனின்' எனும் ஹார்மோனைச் சுரந்து ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக்கொள்கிறது.

ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவைப்படுகின்ற 'எரித்ரோபாய்ட்டின்' எனும் ஹார்மோனைச் சுரக்கிறது.
'வைட்டமின் டி' யைப் பதப்படுத்தி 'கால்சிட்ரியால்'எனும் ஹார்மோனாக மாற்றித் தருகிறது.

இது எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. உணவுச் சத்துகளின் வளர்சிதை மாற்றப் பணிகளுக்கு உதவுகிறது. உடலில் உற்பத்தியாகின்ற நச்சுப்பொருள்களையும் வெளியேற்றுகிறது.

நாம் சாப்பிடுகின்ற மருந்து, மாத்திரைகளில் நச்சுகள் இருந்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது.

நாம் சில மாத்திரைகளைச் சாப்பிட்டதும் சிறுநீர் மஞ்சளாகப் போவது இதனால்தான்.

தினமும் இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து 150 ,180 லிட்டர் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது.

நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது.

♦சிறுநீரகப் பாதிப்பு இரண்டு வகைப்படும்:

1. உடனடி பாதிப்பு

2. நாட்பட்ட பாதிப்பு.

♦என்ன பரிசோதனைகள்?

ரத்த யூரியா அளவு.

ரத்த யூரியா நைட்ரஜன் அளவு.

ரத்த கிரியேட்டினின் அளவு.

சோடியம்,
பொட்டாசியம்,
கால்சியம் அளவுகள்.

♦பரிசோதனை முடிவுகள்:

ரத்த யூரியா அளவு, 20 - 40 மில்லி கிராம்/டெ.சி. லிட்டர் என்று இருக்க வேண்டும்.

இதற்கு மேல் யூரியா அளவு அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

ரத்த யூரியா நைட்ரஜன் சரியான அளவு 7 - 20 மி.கி/.டெ.சி. லிட்டர்.

★ரத்தக் கிரியேட்டினின் அளவு

ஆண்களுக்கு 0.7 - 1.4 மி.கி/.டெ.சி. லிட்டர்,

பெண்களுக்கு 0.6 - 1.3 மி.கி./டெ.லி.,

குழந்தைகளுக்கு 0.5 - 1.2 மி.கி./டெ.லி.,

என்று இருக்க வேண்டும். இதற்கு மேல் அளவுகள் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்
பட்டுள்ளதாகக் கொள்ள
வேண்டும்.

ரத்த யூரியா அளவும் ரத்த யூரியா கிரியேட்டினின் அளவும் பல மடங்கு அதிகம் என்றால், அது உடனடி சிறுநீரகப் பாதிப்பைக் குறிக்கும்.

★சோடியத்தின் அளவு 135 - 142 மில்லிமோல்/லிட்டர்,

★பொட்டாசியத்தின் அளவு 3.5 - 5 மில்லிமோல்/லிட்டர்,

★கால்சியத்தின் அளவு 9 - 11 மி.கி./டெ.லி.

என்று இருக்க வேண்டும்.

♦சிறுநீரகம் பாதிப்படைவது எப்படி?

★கட்டுப்படாத சர்க்கரை நோய்,

★கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம்,
#மற்றும் அதற்க்காக ஆங்கில மருந்து எடுத்தல்…

புகைபிடித்தல்,

மது அருந்துதல்,

சிறுநீரகத் தொற்றுகள்,

சிறுநீரகக் கற்கள்,

உடற்பருமன்,

காசநோய்,

வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு,

உணவு நச்சுகள்,

புராஸ்டேட் வீக்கம்,

புற்றுநோய்

போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.

இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் பிரச்னைகள் குறையும். தவறினால் நாளடைவில் எந்த வேலையும் செய்யமுடியாத அளவுக்குச் சிறுநீரகம் செயலிழந்து விடும்.

உடலில் சுத்தம் குறைவது மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரக் குறைவால் நோய்க்கிருமிகள் சிறுநீர்ப்பாதையைத் தொற்றும்போது
'*சிறுநீரக அழற்சி*' ஏற்பட்டு குளிர்க்காய்ச்சல் வரும்.

சிறுநீர் செல்லும்போது எரிச்சல் வலி ஏற்படும்.

சிறுநீர் கலங்கலாகப் போகும்.

❓யார் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்❓

நீரிழிவு நோயாளிகள்.

உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள்.

பரம்பரைரீதியாகச் சிறுநீரகப் பிரச்சினை உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள்.

சிறுநீரில் ரத்தம் கலந்து வரும் பிரச்சினை உள்ளவர்கள்.

சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருப்பவர்கள்.

அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறவர்கள்.

நீரிழிவு நோயாளிகள் சிறுநீரில் உப்பு அதிகம் போகிறது என்றால் சிறுநீரகத்தை கவனிக்க வேண்டும்.

பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் சிறு நீரில் உப்பு அதிகமாக வெளியேறினால் சிறுநீரகத்தை பரிசோதிக்க வேண்டும்.

கண்ணில் புரை (ரெடினோபதி) வளர்ந்தால் சிறு நீரகத்தையும் பரிசோதனை செய்ய வேண்டும்.

❓கவனிக்கப்படாத சிறுநீர்கர்கல் கூடா சிறுநீரக செயல்யிலப்பு செய்து விடும்.....❗❗❗

♐ சிறுநீரகக் கல் தொல்லை:

நாம் குடிக்கின்ற தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும்………

கால்சியம் பாஸ்பேட்,

ஆக்சலேட்

என்று பல தாது உப்புக்கள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும்.

சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும் போது……

சிறுநீரகம்,

சிறுநீரகக் குழாய்,

சிறுநீர்ப்பை

ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து கல் போலத் திரளும். ஒரு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும்.

இதுதான் சிறுநீரகக் கல்.

சிறுநீரில் ரத்தம் வரவே கூடாது. அப்படி வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்கலாம்.

காசநோய்,

புற்றுநோய்

போன்றவை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பாதித்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே சிறுநீரில் ரத்தம் வெளியேறினால் உடனடியாக காரணம் அறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

#என்ன_அறிகுறிகள்?

✴ சிறுநீரகம்
பாதிக்கப்பட்டால்……

சிறுநீர் பிரிவது குறையும்.
சிறுநீர் சரிவர பிரியாததால்…

மூச்சுத் திணறல்,

அதிக இருமல்,

நெஞ்சுவலி,

சளியில் இரத்தம் வருதல்,

விக்கல்,

பசியின்மை,

இரத்த வாந்தி,

நினைவிழத்தல்,

குழப்பம்,

கை நடுக்கம்,

நரம்பு தளர்ச்சி,

தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல்

வாந்தி வரும்.

தூக்கம் குறையும்.

கடுமையான சோர்வு,

உடலில் அரிப்பு,

முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் தோன்றும்

மூச்சிளைப்பு (மூச்சுவாங்கும்)

போன்ற அறிகுறிகளும் தோன்றும்.

சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கவனித்து விட்டால் நோய்க்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம்.

#டயாலிஸிஸ்..!

சிறுநீரகம் வடிகட்டியை போல செயல்பட்டு சிறுநீரகம் தொடர்ந்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

சிறுநீரகம் செயல் இழக்கும்போது ரத்தத்தில் வேதிப்பொருட்கள் சேர ஆரம்பிக்கும். இந்த வேதிப் பொருட்களை செயற்கை முறையில் இயந்திரம் மூலம் ரத்தத்திலிருந்து அகற்றுவதற்கு பெயர்தான் ‘டயாலிஸிஸ்’ இப்போது *ஹுமோ டயாலிஸிஸ்* என்ற கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரிக்கும் முறையும், *பெரிடோனியல்* டயாலிஸிஸ் என்ற வயிற்றில் இருக்கும் ஜவ்வுப் பகுதியை தண்ணீர் செலுத்தி சுத்தப்படுத்தும் முறையும் நடைமுறையில் இருக்கிறது.

சிறுநீரக செயல் இழப்புக்கு உள்ளானவர் தினசரி டயாலிஸ் செய்து கொள்வதுதான் முறையானது என்று நவீன மருத்துவம் சொல்லுகிறது. ஆனால், அதற்கு செலவு மிகவும் அதிகமாகும். வாரம் 3 தடவை டயாலிஸிஸ் உயிர் வாழத் தேவைப்படும்.

#அப்படி……

#டயாலிஸிஸ்_செய்தாலு #மரணத்தை_தள்ளி #போடலாம்_தவிர #நிறந்தர_தீர்வு_இல்லை
#மரணம்_உறுதி…!!!! ????

♦இரத்த பரிசோதனைகளில்……

Creatinine --- கிரியாட்டினின்

Urea. --- யூரியா

Uric Acid. --- யுரிக் ஆசீட்

போன்ற உப்பு சத்துகள் கூடிவிட்டால்……

சிறுநீரகப் பாதிப்பு இருப்பது உறுதி……

நவீன மருத்துவத்தின் மூலம் பழுதடைந்த கிட்னியை டயாலிசிஸ் என்ற பெயரில்
நவின கருவிகளின் மூலம்
உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்து மாற்றுவார்கள்.

டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை மரணம் உறுதி…!!!! ????

வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...

அதுவும் ஆயுள் முழுவதும்………

அப்படியே ஆயுள் முடிந்துவிடும்………

♦சிறுநீரகம் ஏன் நம் உடலுக்கு தேவை?

உங்கள் சிறுநீரகம் என்பது , இரண்டு சிறுநீரகங்களையும் சேர்த்து, உங்களின் உடலின் எடையில் 0.5% மட்டுமே..

ஆனால் சிறுநீரகங்களின் பணிஎன்பது எண்ணிலடங்காதது.

ஒரு நாளில் ஒரு நொடி கூட பணிசெய்ய சிறுநீரகம் மறப்பதில்லை.

மறந்தால் நீங்க பரலோகம்தான்.

ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் 1,000,000 நெப்ரான் என்ற சிறுநீர் வடிகட்டிகள் உள்ளன.

ஒரு நெப்ரான் சுமார் 30–55 மி.மீ நீளமுள்ளது.

நெப்ரான்களின் மொத்த நீளம் 160 கி.மீ
ஒவ்வொரு நாளும் 190 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகிறது.

இதயம் துடித்து வெளியேற்றும் இரத்தத்தில் 25% சிறுநீரகத்திற்கு செல்கிறது.

உடலின் இரத்தம் முழுவதும், ஒரு மணி நேரத்திற்கு 12 தடவையில் சென்று சுற்றி வருகிறது. .

ஒவ்வொரு நாளும் சுமார் 200 லிட்டர் இரத்தத்தை சிறுநீரகம் வடிகட்டி சுத்தம் செய்கிறது.

ஒவ்வொரு சிறுநீரகமும் தான் 80% செயலிழப்பு வரை பணிசெய்யும்.

பொதுவாக சிறுநீரகம் ஒரு நாளில் சுமார் 2 லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது.
இது நடக்காவிட்டால் உடலுக்கு ஆபத்துதான்.

சிறுநீரகம் உடலிலுள்ள நச்சுப பொருட்கள் , அதிகமான உப்பு மற்றும் யூரியாவை வெளியேற்றுகிறது.

உடலின் தாது உப்புகள் மற்றும் நீரின் அளவை சமனப்படுத்துகிறது.

உடலின் செயல்பாட்டுக்கு ஒரு சிறுநீரகமே போதும்.

♦நவீன மருத்துவத்தில் மூலம்……

சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு அவர்களின் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை
*ஹீமோடயாலிசிஸ் மெஷின்* மூலம் வெளியேற்றப்படுகிறது.

#சிறுநீரகம் #செயலிழந்துவிட்டால்……

ஆங்கில மாத்திரை,
மருந்துகளின் மூலம்
சரிசெய்ய முடியாது.

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை மெஷினுக்குள் செலுத்தினால் அது, தேவையற்ற கழிவுகளை நீக்கி நல்ல ரத்தத்தை உடலுக்குள் செலுத்தும்.

#டயாலிஸிஸ்_செய்தாலு…

மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை
மரணம் உறுதி…!!!! ????*

வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...

அதுவும் ஆயுள் முழுவதும்..

அப்படியே ஆயுள் முடிந்துவிடும்………

#நாட்டு_மருந்துக்……… கடைகளில் விற்கும் பொருட்களை வைத்தே கிட்னி பிரச்னையை சரி செய்யலாம் ஆரம்ப நிலையில் மட்டும்.

வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு மிக சிறந்த மருந்து.

செலவில்லாமல் சிரமமும் இல்லாமல் கிட்னி பழுதிலிருந்து எவ்வாறு மீள்வது?…

Creatinine --- கிரியாட்டினின்

Urea. --- யூரியா

Uric Acid. --- யுரிக் ஆசீட்

உப்பு சத்து கூடிவிட்டது

கை, கால், முகம் வீக்கம்……

இரண்டே வாரத்தில் சரி செய்யும் அற்புத மருந்து..!

டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை மரணம் உறுதி…!!!! ????

வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...

அதுவும் ஆயுள் முழுவதும்..

அப்படியே ஆயுள் முடிந்துவிடும்……

#என்ன_தலை_சுத்ததுதா…?!

சரி வராம தடுக்க சில விஷயங்களை சொல்கிறேன்...?

வந்தாலும் சரி செய்ய வழி சொல்லுகிறேன்…?

நவீன காலங்களில் கிட்னி பழுதடைந்துவிட்டால் டயாலிசிஸ் என்ற பெயரில் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்து மாற்றுகிறார்கள்.

createnine level 0.6 முதல் 1.3 வரை இருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை என்றால் அதைத்தான் கிட்னி வேலை செய்யவில்லை, கிட்னி பழுதடைந்து
விட்டது என்று கூறுகிறோம்.

அது போன்ற சூழலில் கிட்னியை மாற்ற வேண்டும் என்று கூறுவார்கள். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும்.
இது நடுத்தர மக்களுக்கு பாரமாக இருக்கும்.
அதேசமயம் வலியாலும் அவதிப்பட வேண்டியிருக்கும்.

#சிறுநீரக_செயலிழப்பு #கிட்னி_பழுதடைந்தவர்கள் #குணமடைய……❓❓❓


மூக்கிரட்டைக் கீரைச் சாறு
கால் தம்ளர்

துத்தி வேர் – பத்துகிராம்

கருஞ்சீரகம் – ஒரு விரற்கடை

அனைத்தையும் சேர்த்துத் தீநீராக்கி நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளை
குடித்துவர சிறுநீரகம் செயல்பட ஆரம்பிக்கும் படிப் படியாகக் குணமாகி முழுமையான குணம் பெறலாம்.

♦♦1, மருந்து

♦சிறுநீரகம்
கட்டி,கற்கள், அதிக உப்பு
குணமாக………

நாயுருவி வேர்,

சிறுபீளை வேர்,

சாரணை வேர்,

சிறுகீரை வேர்,

சிறு நெருஞ்சில்

ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து பால் விட்டு அவித்து உலர்த்திக் கொள்ளவும்.
பின்னர் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் காலை- மாலை இருவேளையும் ஐந்து கிராம் அளவு சாப்பிட்டுவர, சிறுநீரகக் கட்டி, சிறுநீரகக் கற்கள், ரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்றவை அதிசயமாய் குணமாகும்.

♦♦ 2, மருந்து

♦மூக்கிரட்டை கீரை சமூலம் வேருடன் ........100 கிராம்

ஓமம் ...............2 தேக்கரண்டி

ஆகிய இரண்டு பொருட்களையும்
இருநூறு மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து நூறு மில்லி கசாயமாக்கி
குடித்து வர கிட்னி செயலிழப்பு குணமாகும்.

யூரியா 80அளவுக்கு இருந்தாலும்
கிரியாட்டினின் அளவு 2 மேல் இருந்தாலும்
தினமும் அல்லது அடிக்கடி அல்லது வாரம் ஒரு முறை டயாலிசிஸ் செய்பவர்கள்
தொடர்ந்து தினமும் மூன்று வேளைகள் அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வர வேண்டும்.
மற்றவர்கள்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டயாலிசிஸ் செய்பவர்கள்
தினமும் தொடர்ந்து ஒரு வேளை குடித்து வர வேண்டும்.

♦♦ 3, மருந்து

♦சங்கம்வேர் சோம்பு கசாயம்

சங்கம் வேர் பட்டை – 20 கிராம்,

அதிமதுரம் – 10 கிராம்,

சீரகம் – 5 கிராம்,

பெருஞ்சீரகம் (சோம்பு) – 5 கிராம்,

கொள்ளன் உலையில் கிடைக்கும் கிட்டம் 5 கிராம்.

கடைசி மருந்து இரும்பு சத்து உள்ளது. ரத்த விருத்தியை உண்டாக்கும். எல்லா சரக்குகளையும் இடித்து சட்டியில் இட்டு 2 லிட்டர் தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி அரை லிட்டராக சுண்டவைத்து வடிகட்டி காலை – மாலை ஒரு கோப்பை அளவு சாப்பிடவும்.

உப்பு சாப்பிடுவதை அறவே
40 நாட்களுக்கு நிறுத்தவேண்டும்.

40 நாட்கள் வறை மேற்கண்ட கஷாயம் சாப்பிடவும்.

பிறகு இந்துப்பை வறுத்து சேர்த்துக்கொள்ளலாம். இப்படி செய்து வர தங்கள் நோய் பூரண குணமடையும் பயப்படாதீர்கள்.



♦♦4,மருந்து

*நீர்முள்ளிக் குடிநீர்*

★தேவையான பொருட்கள்:

நீர்முள்ளி - 5 கிராம்

நெருஞ்சில் - 5 கிராம்

நெல்லி முள்ளி - 5 கிராம்

பரங்கிப்பட்டை - 5 கிராம்

மணத்தக்காளி வற்றல் - 5 கிராம்

சரகொன்றைப்புளி - 5 கிராம்

சோம்பு - 5 கிராம்

வெள்ளரி விதை - 5 கிராம்

சுரை கொடி - 5 கிராம்

கடுக்காய் - 5 கிராம்

தான்ரிக்காய் - 5 கிராம்

(காய்சுவதற்கு குடிநீர் - 1/2 லிட்டர்)

மேற்கூரிய மூலிகைகளை சிதைத்து 1/2 லிட்டர் நீரில் கலந்து நாலில் ஒன்றாய்க் காய்ச்சி வடித்துக்கொள்ளவும்.

★நீர்முள்ளிக் குடிநீர் மருத்துவ பலன்:

காய்சிய நீர்முள்ளி குடிநீரை காலை - மாலை என 50 மில்லி வீதம் பருகிவந்தால்……

நீர் எரிசல்,

நீர் கட்டு,

நீர் சுருக்கம்

கை, கால் வீக்கம்

சிறுநீர்கல்

சொட்டு மூத்திரம்.

கிட்னியில் நீர் தேக்கம் மற்றும்
நீர் நிற்பது.

சிறுநீர் பிரியாமை

போன்றவற்றிலிருந்து நிவாரனம் பெறலாம்.

♦♦5,மருந்து

*சிறுநீரக கோளாறுக்கு*

சிறியாநங்கை – 25 கிராம்

வெள்ளருகு – 25 கிராம்

ஆடுதின்னாபாளை – 25 கிராம்

அவுரி – 25 கிராம்

மஞ்சள் – 25 கிராம்

நீர்முள்ளி – 50 கிராம்

நெருஞ்சில் – 50 கிராம்

சாரணைவேர் – 50 கிராம்

சிறுபீளை – 50 கிராம்

ஆவாரம்பூ – 50 கிராம்

கீழாநெல்லி – 50 கிராம்

அருகம்புல் – 50 கிராம்

மூக்கிரட்டை– 50 கிராம்

ஆகியவற்றை ஒன்று கலந்து சூரணம் செய்துகொள்ளவும். மேற்படி சூரணத்தில் 2 கிராம் அளவு அதிகாலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர, சிறுநீரக வீக்கம், நீரடைப்பு, கல்லடைப்பு ஆகியன தீரும்.

*தொடர்ந்து சாப்பிட்டு வர*……

ரத்தத்தில் யூரியா,

கிரியாட்டின் சீரான நிலையில், வரும்.

சிறுநீரில் புரதம் ,

அல்புமின்

வெளியேறுவது தடுக்கப்படும்.

♦♦ப்ராஸ்டேட் வீக்கம்
( Prostate enlargement )

★நோயின் அறிகுறிகள்

மொத்த சிறுநீரும் வெளிவராமை.

வெளியேற்றும் சிறுநீரின் அளவு கொஞ்சம் உள்ளே தங்கி விடுவது.

மொத்த சிறுநீரும் வெளியாவதில்லை.

கட்டுப்பாடில்லாத சிறுநீர் கசிவு.

சிறுநீர் கழிக்க ஒரு பரபரப்பு.

கட்டுபடுத்த முடியாமல் சிறுநீர் கசிதல்.

முற்றிய நிலையில் சிறுநீர் சொட்டு சொட்டாக வரும்.

வேகம் குறையும் முக்கி வேகமாகப் போனாலும் மெல்ல ஒழுகும்.

சிறுநீர் சொட்டு சொட்டாக வலியோடும் எரிச்சலோடும் வரும்.

★தேவையானவை

சிறுநெரிஞ்சில் முள் ................ நூறுகிராம்

சிருகண்பீழை சமூலம் .................. நூறுகிராம்

சீரகம் ............... நூறு கிராம்

மூன்று பொருட்களையும் அரைத்து தூளாக்கி கலந்து சூரணமாக எடுத்துக் கொள்ளவும்.
இந்த சூரணத்தில்
ஒரு குழம்புக் கரண்டி அளவு சூரணத்தை எடுத்து
இரண்டு கோப்பை தண்ணீரில் போட்டுக்
கொதிக்க வைத்து
ஒரு கோப்பையாக சுருக்கி கசாயமாக்கி
வடிகட்டி குடித்துவர வேண்டும்.

கசக்காது
தேவைபட்டால் பனை வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்
அனைத்துப் பொருட்களும் நாட்டு மருந்துக் கடைகளில் தாராளமாக் கிடைக்கிறது.
தாராளமாகத் தண்ணீர் குடித்து வர வேண்டும்.

♦♦சிறுநீரகம் என்னும் kidney புத்துயிர் முறை

♦1.சிறுநீர் சூரணம்

★தேவையான பொருட்கள்

01.ஆட்டின் கிட்னிகள் மட்டும் 500 கிராம்.

02.பட்டை 10 கிராம்.

03. கிராம்ப 10கிராம்.

04.ஏலம் 10 கிராம்

05. இஞ்சி 25 கிராம்.

06.பூண்டு 25 கிராம்.

** செய்முறை

இவைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்னிர் ஊற்றி அடுப்பில் வைத்து கிட்னி நன்கு வேகும் வரை வேக வைத்து பின் நீர் சுண்ட நன்கு கிளரி இறக்கி வைத்து வெய்யிலில் நன்கு உலர்த்தி சூரணம் செய்யவும்

★★ தீரும் நோய்கள்

நோயாளியின் கிட்னியை பலப்படுத்தும்.

இத்துடன் பிராண சக்தி சூரணமும் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும் இந்த பிராண சக்தி சூரணம் திசுக்களை புதுப்பித்து சிறு நீரை பிரித்து கிட்னியை பழைய முறையில் இரத்தத்தில் உள்ள மாசுக்களை நல்ல முறையில் சிறு நீரில் வெளியேற்றிவிடும்
டயாலிஸிஸ் என்ற நவீன சிகிட்ச்சை இன்றி நோயாளியை குணப்படுத்திவிடலாம் பட்டை கிராம்பு ஏலம் இஞ்சி பூண்டு ஆகிய 5 சரக்குகளும் கிட்னியின் மாமிச கெடுதலை முறித்து விடும்

♦2.பிராண சக்தி சூரணம் செய்முறை

★தேவையான பொருட்கள்

01சிவகரந்தை(அல்லது)
கொட்டை கரந்தை

02. மஞ்சள் கரிசாலை

இரண்டும் சம அளவு சேர்த்து சூரணம் செய்து வைத்து கொள்ளவும்.

♦3. சிறுநீர் நன்றாக வெளியேறும் கல்டைப்புக்கு
சூரணம்

01.சுத்தி செய்த ரேவல்சின்னி 50 கிராம்.

02.சிறு நாகப்பூ 50 கிராம்.

03.சுத்தி செய்த
பரங்கிப்பட்டை 50 கிராம்

04. .ஏலம் 50 கிராம்

05.சீரகம் 50 கிராம்

06 பட்டை 50 கிராம்

07.சு.செ படிகாரம் 50 கிராம்

08.சு.செ.வெடியுப்பு 50 கிராம்

ஆகிய சரக்குகளை சூரணம் செய்து ஒன்றாக கலந்து
கொள்ளவும் இச்சூரணம் கிட்னி மூத்திரப்பை யில் உள்ள அழுக்குகள் வண்டல்கள் சிறு நீர் கொதிப்பு மற்றும் மூத்திராசய நோய்களை குணமாக்கி சிறு நீர் நன்றாக வெளியேறும் கல்டைப்பு நோய்கள் குணமாகும்.

♦♦ நோயாளிக்கு மருந்து கொடுக்கும் முறை…

01.நீர்குன்டி சூரணம்

02.மூத்திராசய சூரணம்

03.பிராணசக்தி சூரணம்

ஆக 3 ம் சேர்த்து திரிகடி அளவு காலை மாலை வெறும் வயிற்றில் தேன் அல்லது முள்ளங்கி சாறு ,வாழைதண்டு சாறு சிறுபீளை கசாயம் போன்ற அனுபானங்களில் கொடுக்க ஓரிரு மண்டலத்தில் நோயாளி குணமாவார்கள்.

டயாலிஸிஸ் முறைக்கு பதில் மேற்கண்ட மருந்தை கொடுத்து நோயாளியை பூரண குணமாக்கலாம்.

♦சிறுநீர் பிரியாமை நீங்க மஞ்சள் கை,கால், வீக்கம் நீங்க……

1. கடுகையும் மஞ்சளையும் சம அளவில் எடுத்தரைத்து தொப்பூளில் தடவ சிறுநீர் தாராளமாய் இறங்கும்.

♦2. நீர்முள்ளி – 50 கிராம்

நெருஞ்சில் – 50 கிராம்

பாதம்பிசின் – 50 கிராம்

மஞ்சள் – 50 கிராம்

சதகுப்பை – 50 கிராம்

1 முதல் 5 வரை உள்ள சரக்குகளை தூளாக்கி கலந்து கொள்ளவும்.

இதில் ஒரு ஸ்பூன் வீதம் காலை – இரவு உணவுக்குப்பின் சாப்பிட சிறுநீர் தாராளமாய் இறங்கும்.

♦→#மேலும் #கடைபிடியுங்கள்

1. எப்பவுமே சிறுநீரையோ, மலத்தையோ அடக்காதீங்க

2. தாகம் எப்பவெல்லாம் எடுக்குதோ அப்பவெல்லாம் தண்ணீர் குடிங்க

3. பசிச்சா மட்டும் உணவை எடுத்துக்கோங்க.

4. உணவை உமிழ்நீரோட சேர்த்து நல்லா வாயை மூடி மென்று சாப்பிடுங்க..

5. கடைகளில் விற்கின்ற பாக்கெட் அயோடின் உப்பை பயன்படுத்தாதீங்க..

தெருவுல கடல் உப்பு கொண்டு வருவாங்க.. அதை பயன்படுத்துங்க

அல்லது இந்துப்பை வருத்து பயன்படுத்தவும் பயன்படுத்துங்க.

6. பிஸ்கட், பாக்கெட்ல அடைச்சது.. கூல்ட்ரிங்ஸ் அறவே தவிர்த்திடுங்க.

7. வசதி இருக்குன்னு கடைல போய் இனிப்பு பண்டங்கள், நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டி உள்ள எந்த பொருளையும் வாங்கி சாப்பிடாதீங்க...

8. ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ணுங்க...

9. மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள் வாங்குவதை அறவே தவிர்த்திடுங்க

10. வலி மாத்திரைகளை தவிர்த்திடுங்க...
தலைவலி காய்ச்சல் வந்தா தாங்கி பழகுங்க..
வீட்டு வைத்தியமே பாருங்க.

11. உடல் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுங்க..

12. டென்ஷன் இல்லாம, சரிவிகித உணவு எடுப்பதன் மூலமே பல்வேறு நோய்களை தவிர்க்க முடியும்.

♦♦சிறுநீரகம் சீராக இயங்க சில எளிய வழிகள்……

1. ஒரு நாளைக்கு குறைந்தது
3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. குளிர் மற்றும் கோடைகாலத்தைப் பொறுத்து அருந்தும் தண்ணீரின் அளவில் மாறுபடலாம். மிகவும் குறைவாக 1 லிட்டர் தண்ணீரோ அல்லது அதிகமாக 5 – 7 லிட்டர் தண்ணீர் குடிப்பதையோ தவிர்க்க வேண்டும்.

2. சிறுநீர் கழிக்க வேண்டிய உந்துதல் வந்தவுடனேயே, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விட வேண்டும்.

3. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளையோ அல்லது வேறு ஏதாவதொரு நோய்க்கு தொடர்ந்து மாத்திரையோ அல்லது மற்ற மருந்துகளோ எடுத்தல் கூடாது. ஏனெனில் அப்படிச் செய்வது சிறுநீரகத்தின் சீரான செயல்பாட்டினை பாதிக்கும்.

4. நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவற்றின் சரியான அளவினை பராமரிப்பது மிகவும் முக்கியம்.

5. சிறு நீரகத்தில் கல் அடைப்பு பிரச்சினை உள்ளவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

6. பெரும்பாலும் கொழுப்பு அதிகம் நிறைந்த வெண்ணெய், இறைச்சி, எண்ணெய் நிறைந்த பொருட்களை தவிர்ப்பது சிறுநீரகத்துக்கு நல்லது. மேலும் சோடியம், உப்பு, கருவாடு, ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

7. தினமும் எளிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் யோகாசனப் பயிற்சிகள் சிறுநீரகம் நன்கு இயங்க உதவும்.

8. புகைத்தல், மதுப்பழக்கம் துரித உணவுகளை தவிர்த்து இளநீர், நீர்மோர், பதநீர், நீர் ஆகாரம் மற்றும் கூழ் வகைகள் போன்ற இயற்கை உணவுகளை உணவாக எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தை பாதுகாக்கும்.

ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வதன் மூலமாக சிறுநீரக சம்பந்தமான பிரச்சினைகளை வரும் முன் காக்கலாம்....

#உணவு_முறை………❓

சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.

❗சிறுநீரகம்காக்க...❓

1. சர்க்கரை வியாதியிம்,
உயர் ரத்த அழுத்தம் தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களால் சர்க்கரை வியாதியைம்
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

2. உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். நாள் ஒன்றுக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே.

#உப்பு_நிறைந்த……

ஊறுகாய்,

கருவாடு,

அப்பளம்,

உப்புக் கண்டம்,

சமையல் சோடா,

வடாம்,

வத்தல்,

சிப்ஸ்,

சாஸ்,

பாப்கார்ன்,

பாலாடைக்கட்டி,

புளித்த மோர்,

சேவு,

சீவல்,

சாக்லேட்,

பிஸ்கட்,

'ரெட் மீட்' என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளையும்,

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள்,

துரித உணவுகள்,

உடனடி உணவுகள்,

செயற்கை வண்ண உணவுகளையும்
தவிர்க்க வேண்டும்.

3. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்.

4. சிறுநீரை அடக்கி வைக்கக்கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விட வேண்டும்.

5. தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க வெளி உறுப்புகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

6. மது அருந்தாதீர்கள்.

7. தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்.

8. புகை பிடிக்காதீர்கள்.

9. தினமும் குறைந்தது 2 முதல்
3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

★காய்கறிகள்:

பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.

★பழங்கள்:

ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணி

★எண்ணெய்:

நல்லெண்ணெய்,
ஆலிவ் எண்ணைய்

❌ தவிர்க்க வேண்டியவை ;

★காய்கறிகள்:

தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு

★பழங்கள்:

வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்....

❌ எதை சாப்பிடக்கூடாது?

சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உப்பு பிஸ்கட்,

சிப்ஸ்,

கடலை,

பாப்கான்,

அப்பளம்,

வடகம்,

வற்றல்,

ஊறுகாய்,

கருவாடு,

உப்புக்கண்டம்,

முந்திரிபருப்பு,

பாதாம்,

பிஸ்தா,

கேசரி பருப்பு,

கொள்ளு,

துவரம் பருப்பு,

ஸ்ட்ராங் காபி, டீ,

சமையல் சோடா,

சோடியம் பை & கார்பனேட் உப்பு,

சீஸ், சாஸ்,

க்யூப்ஸ்

ஆகியவைகளை தவிர்க்க வேண்டும்.

கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

#குறிப்பு

♦பரிசோதனைகளில்……

Creatinine --- கிரியாட்டினின்

Urea. --- யூரியா

Uric Acid. --- யுரிக் ஆசீட்

உப்பு சத்து கூடிவிட்டால்……

நவீன கருவி (மெசின்) மூலம் டயாலிஸிஸ் செய்ய தேவையில்லை……

இயற்கையாக சரி செய்யலாம்…

நோயின் ஆரம்பநிலையிலேயே மருந்துகள் மூலம் குணப்படுத்திவிடலாம்.

இதன்மூலம் சிறுநீரகம் கெடுவதைத் தடுத்துக்கொள்ள முடியும்.

சிறுநீரக நோயாளிகளை
டயாலிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்ரமாக சரி செய்யலாம்.

டயாலிஸ் செய்து கொண்டடு இருப்பர்களுக்கு அவர்களுடைய கிட்னி சுருங்கி விடும் அதாவது சிறுநீரகம் சின்னதாக சிறுத்து விடும்.

டயாலிஸ் செய்து கொண்டடு இருப்பவர்களும் மருந்து சாப்பிட்டால் டயாலிஸ் செய்யும் எண்ணிக்கையை குறைத்து கொள்ளளாம்.
வாழ் நாளை நீட்டித்து கொள்ளளாம்.

கால்_வீக்கம்_நரம்பு_சுருக்கமா?



கால்களில் வீக்கம், நரம்பு சுருக்கம் இருந்தால் அலட்சியம் காட்ட வேண்டாம். அது ரத்தக்குழாய்களில் சிக்கலை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு வழி வகுத்து விடும்.

பிரச்னைகள் குறித்த கேள்விகளும், அதற்கான பதில்களும்

1. ரத்த நாள பிரச்னை என்றால் என்ன?

நல்ல ரத்தம் தமனி (arteries) வழியாகவும், கெட்ட ரத்தம், இதயத்திற்கு சிரை (veins) வழியாகவும் செல்கிறது. இந்த பகுதிகளிலும், திசுக்களுக்கு பிராண வாயு அல்லது சக்திக்கான பொருட்களை கொண்டு செல்லும் நுண்ணிய பிரத்யேக குழாய்களிலும், 'மால் பார்மேசன்' பாதிப்பு ஏற்பவதையே, ரத்த நாள பிரச்னை எனப்படுகிறது.

2. அதனால், எந்த மாதிரியான பாதிப்பு வரும்; ரத்தப் போக்கு இருக்கும் என்கிறார்களே?

தமனியின் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, குழாயின் சுவற்றில் பலூன் மாதிரியான வீக்கத்தை ஏற்படுத்தும். நாட்கள் ஆக ஆக பெரிதாகி, ஒரு கட்டத்தில் வெடித்து, ரத்தப்போக்கு ஏற்படும். சத்து, பிராண வாயுவை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால், அவற்றை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கை, கால்கள், உறுப்புகளை அகற்றும் நிலையும் வரும்.

3. இதற்கு, 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்யலாமா?

இதயத்திற்கு, 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்வது போன்று, ரத்தக்குழாயின் அடைப்பை நீக்க, 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்யலாம். ரத்தக்குழாய் அடைப்பு உள்ள பகுதியில், நவீன முறையில் ஊசி மூலமாக, பலூனை செலுத்தி அழுத்தம் கொடுப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யலாம். குழாய் வெடித்து ரத்தப்போக்கு வந்தால், பாதிப்புள்ள பகுதியில், ஊசி வழியாக வலைப்பின்னல் (sented craft) ஒன்றை பொருத்தி, ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்து, மேலும் வீக்கம் அடையாத வகையில் சீரமைக்கலாம்.

4. நரம்பு சுருள்வது எதனால் ஏற்படுகிறது; இந்த பாதிப்பு எல்லாருக்கும் வருமா?

அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் சிரையில், நிறைய வால்வுகள் உள்ளன. இந்த வால்வுகள் பழுதடைந்தால், வீக்கம் ஏற்படும். ரத்தக்குழாய்கள் வளையும். நரம்பு சுருள் (வெரிஸ்கோ வெய்ன்) வரும். நீண்ட நேரம் நின்று வேலை செய்வோர், அதாவது போலீஸ், ராணுவ வீரர்கள், முடி திருத்துவோர், மளிகைக் கடைகளில் வேலை செய்வோருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் வரலாம். கணுக்கால் கருப்பாகி, அரிப்பு ஏற்படும், புண் உண்டாகும். ரத்தப்போக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

5. பாதிப்புக்கு என்ன காரணம்; மரபு சார்ந்த நோயா?

பல கட்ட ஆராய்ச்சிகள் நடந்தும், சரியான காரணத்தை கண்டறிய முடியவில்லை. மரபு ரீதியாக வரலாம்; அதிக நேரம் நின்று வேலை செய்வோர், அதிக உயரம் உள்ளோருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் வரலாம். பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதை இரண்டு வகையாக சொல்கின்றனர். ஒன்று, காரணம் இல்லாமல் வருவது. இதற்கு சிகிச்சை அளிக்க முடியும். இரண்டாவது வகை, ஏதேனும் காரணங்களால் வருவது. 'டாப்ளர்' பரிசோதனை மூலம் கண்டறியலாம். கால்களில் வீக்கம் ஏற்படுதல், கால்களில் நரம்புகள் சுருண்டு காணப்படும். இவற்றை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது.

6. இதற்கு அறுவை சிகிச்சைதான் தீர்வா?; நவீன வசதிகள் உள்ளதா?

தசைகளுக்கு நடுவே உள்ள ரத்தக்குழாய்களில் (டீப் வெய்ன்) பிரச்னை இருந்தால், சிகிச்சை சாத்தியமில்லை. அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றுவதுதான் நடைமுறை. மருத்துவத்துறை வளர்ச்சியால், லேசர் சிகிச்சை, ஆர்.எப்.ஏ., (ரேடியோ பிரிக்வென்சி அபலேசன்) மூலமும், எளிதாக குணப்படுத்த முடியும். இது தவிர, 'போம்' கிளிரோ தெரபி என்ற, நவீன சிகிச்சை முறையும் உள்ளது.
சாதாரண அறுவை சிகிச்சையில், முழுவதும் மயக்கம் தர வேண்டும்; வலி இருக்கும். ஒரு மாதம் ஓய்வில் இருக்க வேண்டும். நவீன சிகிச்சை முறையில், குறித்த இடத்தில் மட்டும் மயக்கம் கொடுத்தால் போதும்; வலி இருக்காது. ஒரே நாளில் வீடு திரும்பலாம். மூன்றாம் நாள், வேலைக்கு போக முடியும். பெரிய அரசு மருத்துவமனைகளிலும், இந்த நவீன வசதிகள் உள்ளன.

7. அலட்சியம் காட்டினால், உயிரிழப்புக்கு வழி வகுத்து விடும் என்று, கூறப்படுகிறதே?
கால் வீக்கத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ரத்தக்குழாயில் உள்ள கட்டி, இதயத்தை அடைத்துக் கொண்டு, நுரையீல் செல்லும் ரத்தக்குழாய் வரை பாதிக்கும் என்பதால், சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும். அலட்சியம் காட்டினால் உயிரிழப்பு ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது நல்லது.

8. பாதிப்பு அதிகமானால் என்ன செய்ய வேண்டும்?
கால் பெரிதாக வீங்கி, அதிக வலி இருந்தால், 'பெட் ரெஸ்ட்' எடுக்க வேண்டும்; நடக்கக்கூடாது. கால்களை உயரமாக தூக்கி வைக்க வேண்டும். ரத்தம் உறையாமல் இருக்க தேவையான மருந்து, மாத்திரைகள் தர வேண்டும்.ஒரு வாரத்திற்குப்பின், 'கிரிப்' போட்டுக் கொண்டோ, ஸ்பெஷல் சாக்ஸ் போட்டுக் கொண்டோ நடக்கலாம். டாக்டரின் ஆலோசனை பெற்று, ஆறு மாதங்கள் மாத்திரைகளை தொடர்ந்தால், குணமாகிவிடும்.
ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளித்தால், முற்றிலும் குணப்படுத்தலாம். தாமதமாக சிகிச்சை எடுத்தால், முற்றிலும் குணமடைந்து கால் பழைய நிலைக்கு திரும்பும் என, எதிர்பார்க்க முடியாது.

9. அப்படியும் சரியாகவில்லை என்றால் என்ன செய்வது?
தொடர் சிகிச்சை அளித்தும், முன்னேற்றம் இல்லை என்றால், 'டாப்ளர்' உதவியுடன், ஒரு குழாயை முட்டிக்குப்பின் உள்ள ரத்தக்குழாயில் செலுத்தி, அதன் வழியாக மருந்து செலுத்தி (திராம்போ லைட்டிங் தெரபி) ரத்தக் கட்டிகளை கரைக்கலாம். அப்படி செய்யும்போது, மெயின் சிரையில், தற்காலிகமாக, பில்டர் பொருத்துவது நல்லது. மொத்தத்தில், கால்களில் வீக்கம், நரம்புகளில் சுருக்கம் இருந்தால், அலட்சியம் காட்டாமல், உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்வதே சிறந்தது.

கால்_நரம்பை_இழுக்கும்_சியாட்டிக்கா_பிரச்னை

#..

‘#சியாட்டிக்கா’

(Sciatica)... கேட்பதற்கு வேடிக்கையான, புதிதான ஒரு வார்த்தையாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் பிரச்னை ஏற்படுத்தும் வலி வார்த்தையில் அடக்க முடியாதது. ‘கால் திடீர்னு மரத்துப்போகுது... தொடைப்பகுதியில இருந்து சுளீர்னு ஏதோ ஒண்ணு இழுக்குற மாதிரி வலி, பின்கால் வரைக்கும் நீளுது’ என்பார்கள் பாதிக்கப்பட்டவர்கள். 40 வயதைத் தாண்டிய பெண்கள்தான் இந்த சியாட்டிக்காவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

“சியாட்டிக்கா என்பது, முதுகில் ஆரம்பித்து, காலின் பின்பகுதியில் குதிகால் வரை நீளும் ஒரு நரம்பின் பெயர். உடலில் உள்ள நரம்புகளிலேயே, மிக நீளமான ஒற்றை நரம்பு சியாட்டிக்காதான். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், கால் வலுவிழப்பது,

சோர்வு, உணர்வின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். அண்மைக்காலமாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்தப் பிரச்னைக்கு ஆளாவது அதிகமாகியிருக்கிறது.. கால் மரத்துப்போவது இதன் மிக முக்கியமான அறிகுறி. இந்தப் பிரச்னை இருப்பதை முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், எளிதாக குணப்படுத்திவிடலாம். பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து, சிகிச்சை முறைகளும் மாறும்’’

சியாட்டிக்கா வருவதற்கான காரணங்கள்...

* முதுகெலும்பின் அசையும் மூட்டுகளில் வீக்கம் உண்டாவது.

* எலும்புகளுக்கு இடையே இருக்கும் ஜவ்வு விலகி பாதிப்படைவது.

* கருவுற்றிருக்கும் பெண்களின் கர்ப்பப்பை பலவீனமாக இருப்பது.

* வயது முதிர்வு காரணமாக ஏற்படும் டிஸ்க் ஸ்பாண்டிலோஸிஸ் (Disc spondylosis).

* எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பவர்கள்.

* தசைகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்கள்

இந்தப் பிரச்னைகளில் ஏதோ ஒன்று ஒருவருக்கு ஏற்படும்போது தண்டுவடத்தை ஊடுறுவும் நரம்புகள் அழுத்தம் பெற்று சுருங்கத் தொடங்கும். ரத்த ஓட்டம் பாதிப்படையும். இதனால், நரம்பு வலுவிழந்து, தன் வேலையைச் செய்ய முடியாமல் திணறும். நாளாக ஆக, இந்த நரம்பில் வலி எடுக்கத் தொடங்கும்.

சியாட்டிக்கா ஏற்படுத்தும் வலி...

* ஏதோவொரு காலின் பின்பகுதியில் வலி, எரிச்சல் உணர்வு ஏற்படும். சில நேரங்களில், இரண்டு கால்களிலும் வலி ஏற்படலாம்.

*எழுந்திருப்பதற்கும் அமர்வதற்கும் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். நிற்கும் நேரத்தைவிட, உட்கார்ந்திருக்கும் நேரத்தில் வலி அதிகமாக இருக்கும்.

* ஆரம்ப நாள்களில், முதுகின் கீழ்ப் பகுதியில் வலி எடுக்கும். பலரும் இதனைச் செரிமானக் கோளாறு எனவும், வாயுப் பிரச்னை எனவும் நினைத்துக் கடந்துவிடுவார்கள். இந்தப் பிரச்னை தொடர்ந்தால், காலில் வலி அதிகமாக ஆரம்பிக்கும். நரம்பை இழுப்பது போன்ற உணர்வு மேலிருந்து கீழ்வரை இருக்கும். அப்போதும் கவனிக்காமல் விட்டுவிட்டால், தொடைப்பகுதி மரத்துப்போகும். பிரச்னை மோசமான நிலையை அடைந்துவிட்டதற்கான அறிகுறிதான் இது. இவையெல்லாம் ஏதாவது ஒரு காலில்தான் ஏற்படும். சிலருக்கு, இரண்டு காலிலும் ஏற்படலாம்.

* முதுகு எலும்பு முடியும் இடத்திலும், கால்களின் பின்புறத்திலும் குத்துவது போன்ற உணர்வு இருக்கும்.

சிகிச்சைகள்...

பல காரணங்களால் இந்தப் பிரச்னை ஏற்படும் என்பதால், எம்.ஆர்.ஐ மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனை செய்வார்கள். அப்போதுதான் உடலில் என்ன பிரச்னையால் இது ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறியலாம். பெரும்பாலும் ஃபிஸியோதெரபிதான் இதற்கான சிகிச்சையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தீர்க்க முடியாத, குணப்படுத்த முடியாத பிரச்னையாக இது உருவெடுக்காது. உணவு, வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் செய்வது, கைவைத்தியம் சில நேரங்களில் கைகொடுக்கும். உதாரணமாக, ஒத்தடம் தருவது; தேவையான அளவுக்கு ஓய்வு எடுப்பது; தினமும் உடற்பயிற்சி செய்வது முதலியவை இந்தப் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க உதவலாம். ஆனாலும், வலி குறைய வேண்டும் என்பதற்காக வெந்நீர் ஊற்றுவது, அதிகச் சூட்டில் ஒத்தடம் கொடுப்பது போன்ற சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூடாது. வெகுநேரம் நின்றுக்கொண்டே வேலை செய்பவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும். அவர்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொண்டால், இந்தப் பிரச்னையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிவாரணம் பெறலாம்.

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தி'ல் என்னென்ன சேர்ப்பார்கள்?


அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.

`அஷ்டபந்தனம் என்றால் என்ன?’’

''கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகம நியதி. அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.

உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள்.

அஷ்டபந்தனம் தயாரிப்பதற்காகவே தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது.

'கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி

செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது

நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து

ஆக்கல் அட்டபந்தனம் ஆம்'

இந்த மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்த வசதியாக இருக்கும்.

இந்த மூலிகை மருந்துகளைக் கலந்து இடிப்பதற்கான பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தப் பொருள்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்குக் கால அளவுகள் உண்டு. அஷ்டபந்தனம் தயாரிப்பவர்களின் வாக்கு, மனம், செயல் இவையாவும் இறைச் சிந்தனையிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.

முருங்கை பூவின் மகத்துவம்...



முருங்கைப் பூ எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொருள். இது அரிய மருந்தாகவும் பயன்படுகிறது.

* குறிப்பாக ஆண்கள், ஆண்மை அதிகரிக்கும் தாதுவை இது அதிகளவில் கொண்டுள்ளது.

இப்படிப் பட்ட முருங்கைப் பூவில் என்ன நலன்கள் இருக்கின்றது என்பதைப் காணலாம்…

* முருங்கைப் பூவைப் பயன்படுத்தினால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

* உடல் உறுப்புகள் சீரான முறையில் வளர்ச்சியடையும்.

* அதிகமான பித்தத்தை போக்கும்.

* இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும்.

* கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும்.

* இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

* 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது.

இதை வெள்ளெழுத்து என்பார்கள்.

* இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

* முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

* அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

* சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

* ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

*சிலருடைய உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல காணப்படும்.

* அத்தகையவர்கள் ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களைச் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டியளவு அளவு பசு நெய் விட்டு வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் ஏழே நாட்களில் உடல் சூடு தணிந்து சம அளவை அடையும்.

* ஒரு பிடி அளவு முருங்கைப் பூவை சுத்தமாக ஆய்ந்து அலம்பி, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி கற்கண்டு தூள் போட்டுக் கலக்கி மாலை 6 மணிக்கு சாப்பிட்டால் உடல் வலுப்பெறும் தாது விருத்தியாகும். முருங்கைப் பூவுடன் முருங்கைப் பிஞ்சையும், தோலுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வெப்பம் தவிர்த்து ஆண்மை பெருகும்.

* முருங்கைப் பூவை அரைத்து வீக்கங்கள் மீது பற்றுப்போடலாம். ஆஸ்து மாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று விழுங்கலாம்.

* இரவு நேரத்தில் முருங்கைப் பூவை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை பூவின் சாறை 2 துளிகள் வீதம் கண்களில் விட கண் வலிகள் நீங்கும்.

* விரை வீக்கம் சுருங்க, முருங்கைப் பூவை அவித்து விரை மீது மூன்று நாட்கள் கட்டினால் நீர் வற்றி சுருங்கி விடும்.

* பிரண்டை, முருங்கைப் பூ, பொடியாக நறுக்கப்பட்ட தேங்காய் மூன்றையும் வகைக்குக் கைப்பிடியளவு எடுத்து மூன்றையும் ஆவியில் வேக வைத்து அம்மியில் வைத்து நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்துக் குடித்து வர வயிற்றுவலி குணமாகும்.

* முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

* முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

* முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

* முருங்கைப் பூ நீர்த்துப்போன விந்துவை கெட்டிப்பட செய்யும் பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப்பெற செய்யும்.

#காதலில்_வெற்றி பெற மற்றும் சுகமான #தாம்பத்திய_வாழ்க்கைக்கு


வலது கை கட்டைவிரலில் வெள்ளியிலான எந்த உருவங்களும் பதிக்காத வெள்ளி மோதிரத்தை மேற்கண்ட தேவைகள் உள்ள ஆண் /பெண் அணிந்து வர, நியாயமான காதலில் வெற்றி தரும்.

மற்றும் கணவன் மனைவி இடையே அன்னியோனியம் ஏற்படும்- சுகமான திருமண வாழ்வு தரும்.

#படித்ததில்_பிடித்த_பதிவு.

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?



கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol.

80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை.

சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

கொலஸ்ட்ராலின் தன்மைகள்...

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.

கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.

நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.

எது நல்ல கொலஸ்ட்ரால்?

LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த LDL – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு Atherosclerosis என்று பெயர்.

ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein).

கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.

Total Cholesterol <—>200 mgm%
மொத்த கொலஸ்ட்டிரால்
LDL Cholesterol <—>100 mgm%
குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
VLDLCholesterol <—>30 mgm%மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
Triglycerides <130 mgm%
முக்கிளிசரைடுகள்
HDLP Cholesterol <50 mgm %
மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்
மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும்.

10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.

குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு.

மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது.

இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.

கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்..

பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)
எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.
ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.

இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது.

இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.

கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.

பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.

ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.

அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது.

இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும்.

ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.

ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.

இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.

ஒமேகா 3 உள்ள உணவுகள்
மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்
ஒமேகா 6 உள்ள உணவுகள்
சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.

எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?

நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.

கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம்
நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:

· சீரான உடற்பயிற்சி
· உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
· புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.
· மது அருந்துவதைத் தவிர்ப்பது
· அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.
· அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.
· பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .
· யோகாசன பயிற்சி செய்வது,
· தியானப் பயிற்சி செய்வது.

*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*

ஒரே_வாரத்தில்_எடை_இழக்க 25 எளிய குறிப்புகள்.



நான் 1- வாரத்திற்குள் பிகினி உடை
அணிவதற்கு என் உடம்பை ஒல்லியாக்கி
ஒரே மாதிரி மாற ஆசைப்படுகிறேன் !!!
நாம் அனைவராலும் இதை செய்ய
முடியுமா...? எடை இழக்க என்று வரும்
போது, துரதிஷ்டவசமாக, ஒரு
கட்டுப்பாடான உணவு முறையை
எப்போதும் பின்பற்ற முடிவதில்லை.

கூடுதல் பவுண்டுகளை ஒரு
ஆரோக்கியமான வழியில், ஒரு
வாரத்திற்குள் குறைக்க முடியும்
என்றால் மிகவும் நன்றாக இருக்கும் அல்லவா...? ஆம் இதோ உங்களுக்கான
வழிமுறைகள்!!
ஒரே வாரத்தில் எடை இழக்க கூடிய
உணவு முறை திட்டம்:
இங்கே எடை இழப்பதற்கான வார உணவு
திட்டத்திற்கான 25 எளிய குறிப்புகள்
உள்ளன:

1. கலோரிகளை குறைக்கவும்:
நீங்கள் உங்கள் கலோரியை குறைக்க
தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில்
பாதி அல்லது ¾ அளவே எடுத்துக்
கொள்ளுங்கள். இது நீங்கள்
அவசியமான ஒன்றாகும்.

2. தண்ணீர் நிறைய குடியுங்கள்:
தண்ணீர் எடை இழப்பதற்கு ஒரு முக்கிய
பங்கு வகிக்கிறது. நீங்கள் அதிக தண்ணீர்
குடிப்பதால் இது உங்கள் வயிற்றை
நிரப்பியே வைத்திருக்கிறது.
அடிப்படையில் தினமும் சுமார் 4
முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிப்பது
உடம்பிற்கு மிகவும் நல்லது. ஒரே
வாரத்தில் எடையை குறைக்க உதவும்
குறிப்பில் இதுவும்
அத்தியாவசியமான ஒன்றாகும்.

3. ஒரு போதும் உணவை தவிர்க்க
கூடாது:
சாப்பிடாமல் இருந்து விட்டால் எடை
குறைந்து விடாது! நீங்கள் ஒரு
வேளை உணவை சாப்பிடாமல்
இருக்கும் போது,, உங்கள் பசியின்
அள்வு அதிகரிப்பதோடு, அடுத்த
முறை உணவை உண்ணும் போது
தேவைகதிகமாக, இன்னும்
அதிகமாகவே உண்பீர்கள்.

4. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்:
படுக்கையில் படுத்துக் கொண்டே
தொலைக்காட்சி பார்ப்பதால் உங்கள்
எடை குறைந்து விடாது! எழுந்து
வெளியே வந்து உங்கள் வேலையை
தொடங்குங்கள். மேலும் உங்கள்
கலோரிகளை எரிக்க வேண்டும்
என்றால் கட்டாயம் நீங்கள் உடற்பயிற்சி
செய்ய வேண்டும். நீங்கள் வேகவாம
எடையை குறைக்க வேண்டும் என்றால்
ஒரு நாளைக்கு இரண்டு முறை நீங்கள்
உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள்
இதற்கு உடற்பயிற்சி கூடத்திற்குதான்
செல்ல வேண்டும் என்ற அவசியம்
இல்லை. சில வீடியோக்கள் அல்லது
யோகா மூலமாகவோ அல்லது
உங்களுக்கு பிடித்த
உடற்பயிற்சிகளையோ நீங்கள் முயற்சி
செய்து பார்க்கலாம்!

5. கார்பனேட் நிரம்பிய பானங்களைத்
தவிருங்கள்:
இது உங்களுக்கு மிகவும் அவசியமா
என்ன தேவையில்லைதானே!
கார்பனேட்டட் நிறைந்த பானங்களில்
சோடா அதிகம் உள்ளதால், இதை நீங்கள்
குடிப்பதால் உங்கள் உடலில் நச்சுகள்
அதிகம் சேர்ந்து உங்கள் எடை
அதிகரிக்கும் என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது.

6. உங்கள் உணவில் பழங்கள் மற்றும்
காய்கறிகளை அதிகம் சேர்க்கவும்:
வறுத்த உணவு மற்றும் தேவையற்ற
சிற்றுண்டிகளுக்கு பதிலாக, புதிய
பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம்
சேர்த்துக் கொள்ளவும். இவற்றில் அதிக
அளவு நார்ச்சத்தும் மற்றும் நீர்ச்சத்தும்
உள்ளது. பழங்களில் நமது உடலிற்கு
தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது
என்பதை யாராலும் மறுக்க
முடியாது.

7. நீங்கள் தினமும் உணவு உட்கொள்ளும்
அளவினை குறைத்துக் கொள்ளவும்:
எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே
இருந்தால் உங்கள் வயிறு வெடித்து
விடும். எனவே நீங்கள் வயிறு முட்ட
சாப்பிடாமல் பாதி அளவிற்கு
சாப்பிடுவது நல்லது.

8. அதிக நார்ச்சத்தும் மற்றும்
குறைவான கார்போஹைட்ரேட்டும்
சேர்க்கவும்:
உங்கள் உணவில் கார்போஹைட்ரேட்டை
விட ஃபைபர் / நார்ச்சத்து ஆதிக்கம்
செலுத்த வேண்டும். ஒரு வாரத்தில்
நார்ச்சத்தானாது எடை இழக்க எப்படி
உதவுகிறது என்ற கேள்விக்கு இது
ஒரு அத்தியாவசிய பதில், இது உங்கள்
உடலில் இருந்து நச்சுகளை
சுத்தமாக்கி மேலும் எளிதாக
செரிமானம் அடைய உதவுகிறது.

9. உங்கள் உணவில் காய்கறி சூப் அதிகம்
சேர்க்கவும்:
ஆராய்ச்சி முடிவின் படி, உங்கள்
உணவில் புதிய காய்கறி சூப் அதிகம்
சேர்த்து கொள்வதால் கலோரியானது
குறைந்து எடையானது எளிதில்
குறைக்கிறது என்று காட்டுகிறது.

10. நுகரப்படும் கலோரி
எண்ணிக்கையை கவனத்தில்
கொள்ளுங்கள்:
எப்போதும் நீங்கள் ஒரு நாள் எவ்வளவு
கலோரி அளவு சாப்பிடுகிறீர்கள்
என்று ஒரு எண்ணிக்கை வைத்துக்
கொள்ளுங்கள். இதற்கு ஒரு நல்ல வழி
நீங்கள் தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள்
என்று ஒரு நாட்குறிப்பில் குறித்து
வைத்துக் கொள்ள வேண்டும்.

11. சரியான அளவு தூக்கம் தூங்க
வேண்டும்:
ஒரு நல்ல இரவு தூக்கத்தை பெற நீங்கள்
உணர வேண்டியதும் அதற்கு செய்ய
வேண்டியதும் என்ன. நீங்கள் ஒவ்வொரு
நாளும் 8 மணி நேரம் நன்கு தூங்க
வேண்டும். சரியான தூக்கத்தினால்
சரியான வளர்சிதை மாற்றம் ஏற்படும்
மற்றும் ஒரு நல்ல வளர்சிதை மாற்ரம்
நீங்கள் எடை இழக்க உதவி செய்கிறது.

12. உங்கள் உணவில் புரதம் நிறைந்த
உணவை அதிகம் சேர்க்கவும்:
புரதம் நிறைந்த உணவுகள் உங்கள்
தசைகளுக்கு மிகவும் நல்லது.
கொழுப்பானது சுலபமாக நமது
உடலில் தசைகளுக்குல் சென்று
விடும் எனவே இதை சரி செய்ய நன்கு
வேலை செய்வதோடு, உங்கள் அன்றாட
உணவில் புரதம் நிறைந்த உணவுகளை
ஒரு நல்ல அளவில் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.

13. 3 முறை அதிகமான உணவு அல்லது
5 முதல் 6 எண்ணிக்கை வரையிலான
சிறிய அளவுஉணவு?
ஒரே மாதிரி தினமும் 3 வேளைகள்
அதிகமாக உண்பதை விட,
நாளொன்றுக்கு சிறிய அளவில் 5
அல்லது 6 முறை பிரித்து உண்பது
நல்லது. நீங்கள் ஒவ்வொரு முறை
சாப்பிடும் உணவில் குறைவான
அளவு கலோரி கொண்டிருக்க
வேண்டும் என்பதை நினைவில்
கொள்ளுங்கள்.

14. நொறுக்குத் தீனியை தவிர்க்கவும்:
நொறுக்குத்தீனி உங்கள் பசியின்
அளவை அதிகரிப்பதோடு, நீங்கள் எடை
இழப்பதற்கான முதல் எதிரியும் கூட.
நிறைய பேர் கண்ட நேரங்களில்
கொறிப்பதையும், நிறைய நொறுக்கு
தீனி தின்பதையும் தவிர்ப்பதில்லை.
நீங்கள் உண்மையிலேயே எடை இழக்க
வேண்டும் என்று விரும்பினால்,
நொறுக்கு தீனி தின்பதை முதலில்
நிறுத்துங்கள்.

15. உடற்பயிற்சி செய்து முடித்த
பிறகே சாப்பிடுங்கள்:
எப்பொழுதும் உங்கள் வேலையை
முடித்த பிறகே சாப்பிட வேண்டும்
என்று நினைவில் கொள்ளுங்கள். நீங்கள்
தினமும் காலை உடற்பயிற்சி செய்பவர்
என்றால் இதை செய்து முடித்த பிறகே
உங்கள் காலை உணவை உண்ணுங்கள்.

16. உங்கள் தட்டின் அளவை
குறையுங்கள்:
பெரிய தட்டு கொண்டு சாப்பிட்டால்
உங்கள் கலோரியின் அளவும்
அதிகமாகும். எனவே முதலில் நீங்கள்
சாப்பிடும் தட்டின் அளவினை
குறைத்து சிறிய தட்டினை
பயன்படுத்துங்கள். எப்போதும் தட்டு
நிறைய போட்டு சாப்பிட கூடாது.

17. எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும்:
எண்ணெய் உணவுகளில் அதிக அளவில்
கலோரிகள் இருக்கின்றன. எனவே
முடிந்த வரை எண்ணெய் உணவுகளை
பயன்படுத்துவதை தவிருங்கள்.

18. உருளைக்கிழங்கு அதிகம்
சாப்பிடுவதை தவிர்க்கவும்:
எடை இழக்க சில திட்டங்களையும்,
டயட்டில் இருப்பவர்களுக்கும்
உருளைக்கிழங்கு நல்லதில்லை.
டயட்டில் இருக்கும் போது
ஒருபோதும் உருளைக்கிழங்கை
பயன்படுத்த கூடாது.
உருளைக்கிழங்கில் அதிக அளவு
கலோரியும், கார்போஹைட்ரேட்டும்
உள்ளன.

19. வெண்ணெய், நெய் அல்லது சீஸ்
இவற்றை தவிர்க்கவும்
இந்த பொருட்களில் அதிக அளவு
கொழுப்பு நிறைந்து உள்ளன. நீங்கள்
விரைவாக எடை இழக்க வேண்டும்
என்றால், இந்த பொருட்களை கட்டாயம்
உங்கள் உணவில் சேர்க்க கூடாது.
வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் உணவில்
தயிர் சேர்க்கலாம், இதில் புரதம் அதிக
அளவில் உள்ளது.

20. பழச்சாறுகள் குடிப்பதை விட முழு
பழங்களாக தேர்வு செய்து
சாப்பிடுவது நல்லது:
பழச்சாறில் இருக்கும் ஊட்டச்சத்தை விட,
முழு பழங்களில் அதிக அளவு
ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.
பழங்களை சாறு எடுத்து
பயன்படுத்துவது வெறும் சர்க்கரை
தண்ணீர் பயன்படுத்துவதற்கு சமம், எனவே
அப்படியே பழமாக சாப்பிடுவது நல்ல
பயன் அளிக்கும்.

21. உங்கள் உணவிற்கு முன் தண்ணீர்
குடிக்கவும்:
நீங்கள் உணவு சாப்பிடும் முன் தண்ணீர் 2
டம்ளர் குடித்து உங்கள் வயிற்றில்
இருக்கும் சில இடைவெளியை
நிரப்பிக் கொள்ள வேண்டும். இப்படி
செய்வதால் நீங்கள் உட்கொள்ளும்
உணவின் அளவு குறையும்.

22. 2 நாட்களுக்கு ஒரு முறை உங்கள்
எடையை கண்காணிக்கவும்:
ஒரு நல்ல எடை இயந்திரத்தை கொண்டு,
2 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து
உங்கள் எடையை பரிசோதித்து
பார்க்கலாம். இப்படி செய்வது மிகவும்
நல்லது, அன்றாடம் உங்களின் எடை
குறைகிறதா அல்லது அதிகமாகிறதா
என்று நங்களே கண்காணிப்பில் வைத்து
இருக்கலாம். இது உங்களின்
நடவடிக்கைகளை தொடர்ந்து
கண்காணித்து உங்கள் பிஎம்ஐ மற்றும் BMR
யை நன்றாக வைத்து இருக்கும்.

23. டயட்டில் இருந்து ஒரு போதும்
விலகி இருக்க வேண்டாம்:
நீங்கள் டயட்டை சரியாக கடைபிடித்தால்
நல்ல முடிவுகள் எப்போதும்
உங்களுக்கே.
சரியான உணவு முறை திட்டம்:

24. எடை குறைப்பில் கலோரிகள் ஒரு
முக்கிய பங்கை வகிக்கின்றன. எந்த
அளவிற்கு விரைவில் உங்கள் உடலில்
7000 கலோரிகள் சேர்கிறதோ,
அப்போது உங்களின் எடை 1 கிலோ
கூடுதலாகி விடும். உங்கள் உடலில்
ஒரு வாரத்தில் 7000 கலோரிகளை
எரிக்கிறீர்கள் என்றால் அதே நேரத்தில்
உங்கள் எடையும் 1 கிலோ குறைந்து
விடும். அதிக கலோரிகளை எரித்து
விரைவாக எடை குறைக்க வேண்டும்
என்ற குறிக்கோளுடன் செயல்படுங்கள் –

25. தக்காளி, பச்சை காலிபிளவர்,
வெள்ளரிக்காய், திராட்சைப்பழம்,
ஆரஞ்சு, செலரி, பாதாமி, கேரட்,
ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், தர்பூசணி,
போன்ற சில பழங்கள் மற்றும் காய்கறிகள்
பயன்படுத்துவதன் மூலம் உங்கள்
கலோரியை விரைவாக எரிக்க
முடியும். இதை நீங்கள் உங்கள் உணவில்
சேர்ப்பது மிகவும் நல்ல முடிவு.

இங்கே இரண்டு வெவ்வேறு கலோரி
அளவு உணவு திட்டம் இருக்கிறது.
நீங்கள் 85 கிலோ கீழே இருந்தால் 1200
கலோரி அளவுள்ள உணவு முறையை
பின்பற்றவும், இல்லையெனில் 1800
கலோரி அளவு உணவு முறையை
பின்பற்றவும்.... பின்பற்றுவீர்களா... நண்பர்களே.

#நம்மை நாம் அறிவோம்...!!!



1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது,
விழிப்புணர்வு அற்ற தியானம்.
தியானம் என்பது,
விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.

#பெண்களுக்கு_அடி #வயிறு_வலித்தால் #பல_கோணங்களில் #அதை_ஆராய #வேண்டியுள்ளது.……???!!!!


முதலில் வலியின் தன்மைகள் குறித்து அவர்களிடம் கேட்டு அறிய வேண்டும்.

வலி எத்தனை நாட்களாக உள்ளது, எந்தப் பகுதியில் அதிகம் உள்ளது,

எப்போது வருகிறது,

என்ன செய்தால் கூடுகிறது,

எப்போது குறைகிறது,

வயிற்றுப்போக்கு உள்ளதா,

வாந்தி உள்ளதா,

மலச்சிக்கல் உள்ளதா,

மாதவிலக்கு சரியாக வருகிறதா,

பசி எடுக்கிறதா,

திருமணமானவர்களா

குழந்தைகள் உள்ளதா,

வேறு நோய்கள் உள்ளதா

என்பவைபற்றி மருத்துவர் கேட்டு தெரிந்து
கொள்வார்.

பின்பு வயிற்றைப் பரிசோதித்துப் பார்ப்பார் . அழுத்தினால் வலி உள்ளதா என்று கேட்பார். உள்ளே கட்டிகள் உள்ளதா என்றும் ஆராய்வார்.
அடி வயிற்றுப் பகுதியில் சில முக்கிய உறுப்புகள் உள்ளன. அவற்றில் பிரச்னை உண்டானால் வலிக்கலாம்..

அனேகமாக எல்லா பெண்களுக்கும் மாதவிலக்கு காலத்தில் அடி வயிறு வலி உண்டாவது இயல்பு. இந்த வலி சிலருக்கு கடுமையாகவும் இருக்கும். சிலருக்கு மாதவிலக்கு வருமுன்பு வலிக்கும். சிலருக்கு அது வரும்போது வலிக்கும். சிலருக்கு அது முடிந்தபின்பும் வலிக்கலாம்.இந்த வலியால் சில பெண்கள் பணிக்கு செல்லவும் முடியாது. சிலருக்கு ஊசி தேவைப்படும். வேறு சிலருக்கு வலி குறைக்கும் மாத்திரைகள் தேவைப்படும்.

♦இனி அடி வயிறு வலிக்கான வேறு காரணங்களை ஆராய்வோம்.

#சிறுநீர்
தொடர்புடையவலி

இது இரண்டு வகையானது. முதல் வகையில் சிறுநீரக கற்கள் உண்டாக்கும் வலி. அடுத்து சிறுநீரில் கிருமித் தொற்று உள்ளதால் உண்டாகும் வலி. இதை சிறுநீரில் அழுக்கு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு.

#குடல்
தொடர்புடைய வலி.
கருப்பை , சினைப்பை , கரு வெளியேறும் குழாய் தொடர்புடைய வலி.

♦இனி இவை ஒவ்வொன்றயும் விரிவாகாக் காண்போம்.

★சிறுநீரகத் தொடர்புடைய அடி வயிறு வலி.

பெண்களுக்கு சிறுநீரில் கிருமிகள் தொற்று எளிதில் உண்டாகும். இது உண்டானால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் வலியும் ஏற்படும். அதோடு அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வார்கள்.

கிருமித் தொற்று மேல்நோக்கி பரவினால் சிறுநீரகத்தில் தொற்று உண்டாகி அங்கு சீழ் பிடிக்கலாம்.இதை பைலோநெப்ரைட்டிஸ் ( Pyelonephritis ) என்பர். இது உண்டானால் இடுப்பு வலியுடன் குளிர் காய்ச்சலும் ஏற்படும்.

கடுமையான வலி இடுப்பிலிருந்து கீழ் நோக்கி பரவினால் அது சிறுநீரகக் கல்லைக் குறிக்கும் வலி. சிலர் வாந்தியும் எடுப்பார்கள். சிறுநீர் பரிசோதனையில் இரத்தம் தென்படும். மலச்சிக்கலும் உண்டாகும்.

சிலருக்கு சிறுநீர்ப்பையில் கிருமித் தொற்று காரணமாக் அழற்சி உண்டாகி வலி உண்டாகும்.
சிறுநீர் தொடர்புடைய வலி உண்டானால் சிறுநீரகப் பரிசோதனையுடன், தேவைப்பட்டால் எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்டு பரிசோதனைகள் தேவைப்படும்.இவை மூலம் கற்கள் உள்ளதா என்பது நிர்ணயம் செய்யலாம்.

★குடல் தொடர்புடைய வலி

மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் அடி வயிறு வலியை உண்டுபண்ணும். வயிறு உப்பலும் வீக்கமும் சிலருக்கு உண்டாகலாம்.
மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறி மாறி உண்டானால் அது குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome ).

மலத்தில் இரத்தம் இருந்தால் அல்லது வெறும் இரத்தமாக வெளியேறினால் அது மூலம் தொடர்புடையது.
கருப்பு நிறத்தில் அல்லது தார் போன்று மலம் வெளியேறினால் அது குடல் புற்று நோயின் அறிகுறி. உடன் மருத்துவரைப் பார்த்து மேற்கொண்டு பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.

★அடிவயிற்றின் வலது பக்கம் வலிப்பது குடல் வால் அழற்சியைக்
( அப்பன்டிக்ஸ் ) குறிப்பிடும். இத்துடன் காய்ச்சல், வாந்தி உண்டாகும்.

★கருப்பை, சினைப்பை,
கரு வெளியேறும் குழாய் தொடர்புடைய
அடி வயிறு வலி.

அடிவயிற்றின் இடது அல்லது வலது பக்கம் வலிப்பது சினைப்பையைக் குறிக்கும். அதில் நீர்க் கட்டிகள் இருக்கலாம்.

மாதவிலக்கின்போது உண்டாகும் வலி கருப்பையிலிருந்து வரும் வலியாகும்.
சில பெண்களுக்கு உடல் உறவின்போது வலி உண்டாகும்.
கருப்பையில் பைப்ரைட் கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ் , அழற்சி,.போன்ற
வற்றிலும் அடிவயிறு வலி உண்டாகும்.

★கருப்பையில் புற்று நோய் வளர்ந்தாலும் வலி உண்டாகும்.

கருச் சிதைவு,
கரு வெளியேறும் குழாயில் கரு வளர்ச்சி போன்றவற்றில் அடி வயிறு கடுமையாக வலிக்கும். இவற்றுக்கு உடனடி அவசர சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
கருப்பை வாயில் அல்லது கழுத்துப் பகுதியில் அழற்சி அல்லது புற்று நோய் இருந்தாலும் அடி வயிறு வலிக்கும்.

ஆகவே பெண்களுக்கு அடி வயிறு வலி உண்டாவது பல்வேறு காரணங்களால் இருக்கலாம். அறிகுறிகள், பரிசோதனைகள் மூலமாகவே மருத்துவர் வலியின் காரணத்தை நிர்ணயம் செய்ய முடியும்.,

#வெறும்_வாய்வு_வலி, #சூட்டு_வலி_என்று……

எண்ணிக்கொண்டு நோயை வளரவிடக்கூடாது.

துவக்கத்திலேயே மருத்துவப் பரிசோதனையின் வழியாக காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

அதன்பின் அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்வதே நல்லது.

அக்குபஞ்சர் மருத்துவம்.



அக்குபஞ்சர் நாடிப் பரிசோதனையின் மூலம் மட்டுமே ஒரு நோயாளியின் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமான அந்த ஒரே ஒரு புள்ளியின் ரகசியத்தை அறிந்து செயல்பட முடியும்.

மருந்தில்லா மருத்துவம் அக்குபஞ்சர்

இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதா, அலோபதி, ஹோமியோபதி என பல மருத்துவமுறைகள் இருந்தாலும், உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த மூத்த குடியாம் தமிழ் குடியில் போகர், தேரையர், கோரக்கர் காலத்திலே தோன்றிய தொன்மையான மருந்தில்லா மருத்துவ முறை தான் அக்குபஞ்சர். அகில உலகிலும் இன்று தமிழ் மணத்துடன் வாழும் அக்குபஞ்சரை பற்றி பார்ப்போம்.

அக்குபஞ்சர் என்பது மருந்தில்லா மருத்துவமுறை. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய பழமையான சிகிச்சையாகும். மனித உடலானது ஐம்பூதங்களால் ஆனது என நம் முன்னோர்கள் சொல்வார்கள். அது போல மனித உடலில் 14 உயிர்சக்தி, 12 இரட்டை பாதைகள் உள்ளன. 76000 அக்குபஞ்சர் புள்ளிகள் மனித உடலில் உள்ளது.

நம்முன்னோர்கள் முன்பே நாடிபிடித்து நோய்களை கண்டறிவதில் வல்லவர்களாக திகழ்ந்துள்ளனர். நம் உடலில் உயிர் சக்திகள் மாறுபடும் போதும், ஆற்றல் குறையும் போதும் நோய் உண்டாகிறது.

முதலில் நாடிபரிசோதனையில் எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது என்பதை கண்டறிய முடியும். இரண்டாவது அந்த உறுப்பின் இயக்கத்தை வைத்து எந்த உறுப்பின் இயக்கம் பாதிக்கின்றது என்பதை கண்டறியவேண்டும். மூன்றாவது அந்த பாதிப்பை சரிசெய்யும் புள்ளியையும், நான்காவது அந்த புள்ளியை எதற்காக தேர்வு செய்தோம் என்பதிலும் நமக்கு தெளிவு வேண்டும். ஐந்தாவது அந்த புள்ளி நோயை எவ்வாறு சரி செய்கிறது என்பதில் தெளிவு வேண்டும்.

ஆறாவது அந்த புள்ளிக்கும் நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன என்பது தெரிய வேண்டும். ஏழாவது அந்த புள்ளி குணமாக்கும் என்பதில் நமக்கு தீவிரமான உறுதிவேண்டும். நாடி பரிசோதனையை காலையில் மட்டுமே செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் எதுவும் சாப்பிடாமல் மட்டுமே பரிசோதனை செய்யவேண்டும்.

ஒன்று அல்லது இரண்டு ஊசிகளுக்கு மேலாக பயன்படுத்தக்கூடாது. மருந்து மாத்திரைகளை கண்டிப்பாக நிறுத்த வேண்டும் ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்களுக்கு பின்னர்தான் அடுத்த சிகிச்சை தர வேண்டும். அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொள்ளும் போது எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்தவேண்டாம். பிற மருந்துகள், சிகிச்சைகளை பயன்படுத்தக்கூடாது.

அக்குபஞ்சர் நாடிப் பரிசோதனையின் மூலம் மட்டுமே ஒரு நோயாளியின் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமான அந்த ஒரே ஒரு புள்ளியின் ரகசியத்தை அறிந்து செயல்பட முடியும்.

“ஒரு நோயாளி ஒரு சமயத்தில் கூறக்கூடிய அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமான ஒரே ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் சுகமளிக்க முற்படுபவர் மட்டுமே உண்மையான அக்கு பஞ்சர் நிபுணர் ஆவார்.

உயிர் ஆற்றலை நேர்மறை, எதிர்மறை ஆற்றல்களாக சீன முறையில் "யின், யான்" ஆகப் பார்க்கிறது அக்குபஞ்சர். இவற்றின் இணைவுதான் இயக்கம். ‘யின்’ என்பது பெண். பெண்மை, குளிர்ச்சி, கருமை என வகுக்கப்பட்டுள்ளது. யான் என்பது ஆண். ஆண்மை, வெப்பம், உறுதி, வெளிச்சம் என வகுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களுக்கு இடையிலான சமன்குலைவு, நோய் என வரையறுக்கப்பட்டுள்ளது.

உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் பரிசீலனை செய்து சிகிச்சை தருவதுதான் அக்குபஞ்சர். இதில் பயன்படுத்தப்படும் ஊசி ஆத்மாவையும் தொடுகிறது.

அறுவைசிகிச்சை இல்லாமல் எப்படி நோய்களை குணப் படுத்த முடியும்? எப்படி அது சாத்தியம்? என்று கேட்கிறார்கள் மனித உடலில் நகம், முடி ஆகியவை வெட்டி எடுக்ககூடிய உறுப்புகள். மற்றவைகளை வெட்டக்கூடாது. அப்படி அறுவைசிகிச்சை முறையில் நீக்குவது தீர் வாகாது அது மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.அக்கு பஞ்சர் முறையில் கத்தியில்லா பைபாஸ், பித்தக்கல், கிட்னி கல் ஆகியவற்றை இயற்கையாகவே அக்குபஞ்சரில் வெளியேற்றமுடியும். அக்குபஞ்சர் மனம், உடல் ஆற்றல் என மூன்றையும் மேம்படுத்தி நோய்களை நிவர்த்திசெய்கிறது

சர்க்கரை நோய்,பிரசர் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு அளிக்கமுடியும்.நாம் சீனி,மைதாவால் செய்யப்பட்ட ரொட்டிகள், பாஸ்ட் புட்,பிராய்லர் கோழி, ரசாயனம் கலந்த உணவுவகைகளை தவிர்க்க வேண்டும். நம்முன்னோர்கள் போல் உணவே மருந்து என்ற முறைக்கு வர வேண்டும். தானியம், பழங்கள், கைகுத்தல் அரிசி, இயற்கை முறையில் விளைந்த காய்கறி போன்றவைகளை உட்கொண்டு,யோகா, அடிப் படை உடற்பயிற்சிகளை செய்தாலே சர்க்கரை நோயை விரட்டலாம்.

அக்குபஞ்சரில் இயற்கையாகவே இன்சுலினை தூண்டி நிரந்தர தீர்வு அளிக்க முடியும். இருமல், சளி, வயிற்றுவலியை ஒரே நாளில் குணப்படுத்தலாம். நாடிபிடித்து, நோய்களின் அறிகுறியை கண்டறிந்து ம், மயிரிழை ஊசிகளை புள்ளிகளில் குத்தியும் நோய் பாதிப்பை கண்டறிந்து இவற்றின் தன்மையை பொறுத்து ஆரம்ப காலத்தில் நோய்பாதிப்பு இருந்தால் விரைவாகவும்,நீண்டகாலமாக இருந்தால் தாமதமாகவும் பக்க விளைவு இல்லாமல் நிரந்தர தீர்வை அக்குபஞ்சரால் அளிக்க முடியும்.

எந்த ஒரு குண்டூசியையும் இந்த மருத்துவத்துக்கு பயன்படுத்தலாம் என்று யாரும் தயவுசெய்து முயன்றுவிடவேண்டாம். அது மிகவும் ஆபத்து. அக்குபஞ்சருக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஊசிகளை மட்டுமே சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பொதுவாக, அக்குபஞ்சர் ஊசி 0.5 இன்ச்சிலிருந்து 7 இன்ச் வரை கிடைக்கிறது.

இந்த ஊசிகளில் சிரிஞ்ச் போல துளைகள் இருக்காது. அதனால் இந்த ஊசிக்குள் ரத்தம் தாங்காது. எனவே ரத்தத்தின் மூலம் பரவும் வியாதிகள் இந்த ஊசிகளினால் பரவாது என்பது நல்ல விசயம். இருந்தாலும், ஒருவருக்கு உபயோகிக்கப்படும் அக்குபஞ்சர் ஊசிகள் அடுத்தவருக்கு உபயோகிக்கப்படுவதில்லை. அக்குபஞ்சர் ஊசிகள் காப்பர், வெள்ளி, என்று வெவ்வேறு உலோகங்களில் கிடைக்கிறது.

அக்கு பஞ்சர் சிகிச்சையால் குழந்தைகளை பாதிக்கும் ஆப்டிசைசம், கற்றல்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு ஆகியவைகளை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

உதாரணமாக நாம் இரவு உணவாக பப்ஸ், முட்டை, சிக்கன் 65, பால் என்று அனைத்தையும் ஒரே வேளையில் உட்கொள்ளும் போது அஜீரணகோளாறு ஏற் படும் .அதனால் ஒவ்வாமை உண்டாகி வாந்தி மூலம் உடலில் இருந்து வெளியேற்ற முயலும்.இதை நாம் அறி யாது நாம் மாத்திரைகளை உண்போம் . மாத்திரையை ஏற்க உடல் வயிற்று போக்காக வெளியேற்ற முயலும். நாம் அதனை தடுக்க மீண்டும் மாத்திரைகளை உட்கொள்வோம் இப்படி தொடர்ந்து உடலில் ஆற்றலை நாமே சிதைக்கிறோம் அது கூடாது.நாம் பாதிப்புகளை அடுத்த கட்டத்துக்கு தான் கொண்டு செல்கிறோம்.

அதற்கான வேர்களை தேடுவதில்லை. பூசிமொழுக மட்டுமே செய் கிறோம். ஆனால் அக்குபஞ்சரில் நோய் நாடி நோய்முதல் நாடி என நோய்பாதிப்புகள் உள்ள புள்ளிகளை அறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.அக்குபஞ்சரில் மட்டுமே ஒரு பாதிப்புக்கு மருத் துவம் அளித்தால் தொடர்புடைய பிற பாதிப்புகளையும் நீக்குகிறது.

உயிர்கொல்லி நோய்களான எய்டஸ் பாதிப்பின் வீரியத்தை வெகுவாக கட்டுப்படுத்தமுடியும்.

இறுதியாக இன்றைய நவீன உலகில் மருந்தே உணவாக மாறியதால் நாம் நம் முன்னோர்களின் சிறுதானியம், காப்பர் பானை தண்ணீர், மண்பானை சமையல்,பூச்சிகொல்லியில்லா உணவுகளை உட்கொண்டு நோயினை விரட்டுவோம். அக்குபஞ்சர் மருத்துவத்தை முறையாக கற்ற மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.பக்கவிளைவு இல்லாத ஆதிகாலத்து மருந்தில்லா முறையான அக்குபிரசர் மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை முறைகளை மீண்டும் மக்கள் வெகுவாக நாடிவருகின்றனர்.

செயற்கையால் ஏற்பட்ட வியாதிகள் இயற்கையாக சரியாகும் என்ற நம்பிக்கை நமக்குள் வர வேண்டும்! அதற்கு நாம் இயற்கை முறையில் சரிசெய்ய முயல வேண்டும்!.

பஞ்சபூதங்களால் ஆன உடலில் நோய் ஏற்பட்டால் அதனை அக்கு பஞ்சர் சிகிச்சையால் விரட்டுவோம். மருந்தில்லா மருத்துவம் நிச்சயம் மலரும் இயற்கையோடு இரண்டற கலந்து இணைந்து வாழ்வோம். ஆரோக்கியமான உலகை படைப்போம்.

Wednesday, April 24, 2019

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!



1) படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

2) பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

3) விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்

4) காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .

5)கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .

6) கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை இதை தான் எரிச்சல் என்பார்கள் .கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .

7) நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும். இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .

உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சூடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குள்ளே வைக்கும். இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .

9) இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்.

1O) அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .

11)மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..

12) துரியோதனன் போருக்கு போகும் முன் தன் தாயிடம் ஆசி பெற செல்கிறான். எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .

12)அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .

14) பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .

15) குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .

16) கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்து இருக்கிறாள் .

17) அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .

18) இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .

19) கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்கு தான் .

2O) அடுத்து மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும்.

21) காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது. வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .

22) பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது.

23)சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .

24) குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .

25) ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .

26) சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெறிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .

27) அதன் படி உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .
எந்த உணவை எப்படி சாப்பிடலாம் என்று முறை இருக்கிறது .

28) சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .

29) கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்.
சர்க்கரை நோய் வராது,

30) உள்ளங்கையில் நீர் ஊற்றி உறிந்தால் பல அற்புதங்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.

31) கைகளை பற்றி சில விவரங்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

32) தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சாப்பிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .

33) பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .

இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .

மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் ஊற்றி அதில் மருந்துகளை குழைத்து உண்ண சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .

நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையாளங்களை வைத்து நோய்களை அறியலாம் ..

மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் மூலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....

கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....

நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .

இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சூடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது.
இந்த சூடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்கு ஈரம் தேவை .

(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்.
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சூடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடையே நீர் அருந்தகூடாது.

தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நனையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.

சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .

உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும். ஆகவே கால்களை மடக்கி கைகளில் நீர் ஊற்றி ஏதாவது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

Tuesday, April 23, 2019

எளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள்



கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன ?:

கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு.

இந்த வயதுகளில் இல்லை எனறால் குழந்தை பிறக்காதா?

அப்படி இல்லை. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.

சில புள்ளி விவரங்கள்:

30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 91% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். 35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,84% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். 40 வயதில், 44% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 64% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா?:

இதுவும் ஓரளவுக்கு முக்கியமே, ஆனால் பெண்ணின் வயது அளவுக்கு முக்கியமானது அல்ல. இதற்குக் காரணம், பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன.

இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும்.

ஆண்கள் பற்றிய புள்ளி விவரம்:

20–39 வயதில், 90% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். 40–69 வயதில், 50% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். 80 வயதிற்கு மேல், 10% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

கருமுட்டை உற்பத்தியாகும் காலம்:

பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (ஃபேலோபியந் ட்யூப்) வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ஒவ்யுலேஶந்) என்று பெயர்.

கர்ப்பம் தரிக்க ஏதுவான நாட்கள் எவை:

எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது தான் இதற்கு முக்கியம். கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18- 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேர வேண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் (ஃபேலோபியந் ட்யூப்) விந்து இருக்க வேண்டும். ஆணின் விந்து (ஸ்பர்ம்) சராசரியாக 3 – 5 நாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.

உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது?:

உங்கள் முட்டை வெளி வரும்போது, அதாவது ஒவுலஷன் (ovulation) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும். முட்டை வெளியீடு காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது? இந்த நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

1. உங்கள் பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (ஸர்விகல் ம்யூகஸ்) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும்.

2. மேலும், உங்கள் மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிக்கும் (பெல்லி க்ரம்ப்ஸ்), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (ஸ்பாடிங்க்), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும்.

3. முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (டிஜிடல் தர்மாமீடர்) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். இதற்கான பட்டியல் மாதிரிகளை இப்போது இணையங்களிலேயே தருகிறார்கள். இதன் மாதிரியை நீங்கள் இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

4. உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளியீடு (ஒவ்யுலேஶந்) நாள் சரியாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும்.உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளியீட்டு நாள். இது தவிர ஒவ்யுலேஶந் டெஸ்டிங் கிட்ஸ் போன்ற பொருட்கள் இப்போதெல்லாம் புழக்கத்தில் உள்ளன. அவை உங்கள் சிறு நீரில் உள்ள ஹார்மோன் அளவைக் கொண்டு உங்கள் முட்டை வெளியீட்டு நேரத்தை சரியாக சொல்லி விடும்.

கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும்?:

உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (பாபி ஆயில்) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (லூப்ரிக்யான்ட்) பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்குறியை சுத்தம் செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அடிக்கிறார்கள்.இதை வெஜைநல் Douche என்று ஆங்கிலத்தில் என்று சொல்லுவார்கள். நீங்கள் கருப்பிடிக்க எனஈகும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத் திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

சூட்சுமசக்தி



*சூட்சும சக்திகளும் நமது உடலும், சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!*

*1. நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம் செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.*

*நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது.*

*2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.*

*3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.*

*4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.*

*5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.*

*6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.*

*7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.*

*8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.*

*9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.*

*10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.*

*11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது.*

*12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.*

*13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே ஆகும்.*

*14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.*

*15. நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.*

*16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.*

*17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.*

*18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.*

*19. ஒரு மனிதனை புண்படச் செய்வது நூதனமான கொலைக்கு சமம்.*

*20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.*

*21. நாம் விஞ்ஞான அறிவை மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.*

*22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.*

*23. வலி என்பது உடலின் மொழி.*
*அதை ஒரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.*

*24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.*

*25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.*

*26. உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனதுடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல் நோயுறுகிறது.*

*27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.*

*28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.*

*29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.*

*30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.*

*31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.*

*32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.*

*33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும்.*

*34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.*

*35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது.*

*36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.*

*37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடக்கவும்.*

*38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.*

*39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.*

*40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.*

*41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.*

*42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.*

*43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.*

*44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.*

*45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.*

*46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.*

*47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.*

*48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.*

*49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.*

*50. தூக்கம் என்பது,*
*விழிப்புணர்வு அற்ற* *தியானம்.*

*தியானம் என்பது,*
*விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.*

*சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!*