Tuesday, March 31, 2026

உயர் இரத்த அழுத்தம் – “மௌன கொலைகாரன்/Silent Killer”

உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure / Hypertension) என்பது இன்றைய உலகில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு முக்கியமான உடல்நலப் பிரச்சினையாகும். இதன் ஆபத்தான தன்மை என்னவென்றால், ஆரம்ப நிலையில் இது எந்தவிதமான தெளிவான அறிகுறிகளையும் காட்டாமல் அமைதியாக உடலை பாதிக்கத் தொடங்குகிறது. இதனால் தான் இதற்கு “மௌன கொலைகாரன்” (Silent Killer) என்று பெயர் வந்துள்ளது.


இரத்த அழுத்தம் என்பது, இதயம் இரத்தத்தை உடலின் பல பகுதிகளுக்கு அனுப்பும் போது இரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தமாகும். இந்த அழுத்தம் அதிகமாகும் போது, இதயம் அதிகமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது நீண்ட காலத்தில் இதய நோய்கள், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு போன்ற பல தீவிர பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.


பலருக்கு உயர் இரத்த அழுத்தம் ஆரம்பத்தில் எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. அதனால் தான் பலர் தங்களுக்கு இந்த நோய் இருப்பதை கூட அறியாமல் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும், சில நேரங்களில் உடல் சில எச்சரிக்கை சைகைகளை வழங்கும். அவற்றை கவனமாக எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.


உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்படலாம். இது குறிப்பாக காலையில் அதிகமாக உணரப்படலாம். இதனுடன் மயக்கம் அல்லது தலை சுழலும் உணர்வும் சேர்ந்து காணப்படலாம். இது உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததற்கான அறிகுறியாக இருக்கலாம்.


மேலும், கண் முன் மங்கலான பார்வை தோன்றுவது மற்றொரு முக்கிய அறிகுறியாகும். சில நேரங்களில் திடீரென பார்வை தெளிவாக தெரியாமல் போகலாம். இது கண்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதைக் குறிக்கிறது.


நெஞ்சு வலி அல்லது நெஞ்சில் அழுத்தம் போன்ற உணர்வுகளும் கவனிக்கப்பட வேண்டியவை. இது இதயத்திற்கு அதிக சுமை ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.


கை மற்றும் கால்களில் பலவீனம் அல்லது சோர்வு உணர்வு ஏற்படுவது கூட உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். சிலருக்கு திடீரென ஒரு பக்கம் பலவீனமாக உணரப்படலாம். இது பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக்கூடும்.


இந்த அனைத்து அறிகுறிகளும் என்ன சொல்லுகின்றன என்றால், உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் அதிக அழுத்தத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றன என்பதையே. இந்த நிலையை சரியான நேரத்தில் கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.


உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். உப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்த்தல், முறையான உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தத்தை குறைத்தல், உடல் எடையை கட்டுப்படுத்தல் போன்றவை முக்கியமானவை. அதேசமயம், காலம் தவறாமல் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து வருவது மிகவும் அவசியம்.


உயர் இரத்த அழுத்தம் ஒரு அமைதியான ஆனால் ஆபத்தான நோயாகும். இதன் அறிகுறிகள் தெளிவாக இல்லாததால், விழிப்புணர்வும், தடுப்பு நடவடிக்கைகளும் மிக முக்கியம். உங்கள் உடல் தரும் சிறிய சைகைகளையும் கவனித்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். உங்கள் இதயத்தை பாதுகாப்பது உங்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்கு சமமானது.

Monday, March 30, 2026

எலக்ட்ரிக் பைக் ஓட்டினால் செலவு குறைவு என யார் சொன்னது?

 எலக்ட்ரிக் பைக் வாங்கி நொந்து போன ஒரு நண்பரின் காபி.பதிவு..


எலக்ட்ரிக் பைக் ஓட்டினால் செலவு குறைவு என யார் சொன்னது? சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக எலக்ட்ரிக் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது.


நான் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ரூ.1,65,000 ரூபாயில் TVS நிறுவனத்தின் i Qube-S என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டியை வாங்கினேன்.

நன்றாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது. 4000 கி.மீட்டருக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும்.


இதற்காக சர்வீஸ் சென்டருக்கு வண்டியை கொண்டு சென்றால் சுமார் முக்கால் மணி நேரம் காத்திருந்தால் தான் வண்டிக்கு சர்வீஸ் கார்டு போடுவார்கள்.


அதேபோல் வண்டியை திரும்ப எடுக்கும் போதும் முக்கால் மணி நேரம் காத்திருக்க வேண்டும்.


இரண்டு, மூன்று நாட்கள் கழித்து தான் சர்வீஸ் செய்து திரும்ப கொடுப்பார்கள். அதுவரை பெட்ரோல் வண்டியை பயன்படுத்த வேண்டும்.


50 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் ஓட்டுவதற்குள் இரண்டு முறை வண்டி ஆஃப் ஆகி நின்றுவிட்டது. இதற்காக ஆட்டோவில் ஏற்றி சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றேன்.


53 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் ஓட்டிய பிறகு சமீபத்தில் ஒரு பேட்டரி பழுதாகிவிட்டது.


50 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் மட்டுமே பேட்டரிக்கு வாரண்டி என்பதால் வேறு வழியின்றி பணம் கொடுத்து பேட்டரியை மாற்ற வேண்டியதாக ஆகிவிட்டது.


அதனால் கடந்த வாரம் மீண்டும் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பேட்டரியை மாற்றினேன். இன்னொரு பேட்டரியும் விரைவில் பழுதாக வாய்ப்புண்டு என்றும் தெரிவித்தனர்.


ஆக, 53 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நான் எலக்ட்ரிக் பைக் ஓட்டியதற்கு எனக்கு இதுவரை 2 லட்சம் ரூபாய் செலவு ஆகி உள்ளது. (10 ஆயிரம் கிலோமீட்டருக்கு ஒருமுறை டயர்கள் மாற்றினேன். இதையெல்லாம் கணக்கில் சேர்க்கவில்லை).


அதாவது ஒரு கிலோமீட்டருக்கு எனக்கு ரூ.3.12 செலவு ஆகியுள்ளது. அது தவிர சர்வீஸ் செய்வதற்காக கம்பெனியில் விட்டிருந்த காலங்களில் பெட்ரோல் பைக்குக்கு 7 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போடப்பட்டுள்ளது.


இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டியால் ஒரு கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் 12 பைசா செலவு ஆகி இருக்குதே இதனால் என்ன லாபம் என டிவிஎஸ் சர்வீஸ் சென்டரில் உள்ள பணியாளர் ஒருவரிடம் நான் கேட்டதற்கு,

எலக்ட்ரிக் பைக் ஓட்டினால் செலவு குறைவு என யார் சொன்னது? 


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக எலக்ட்ரிக் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தான் தவறாக கணக்கு போட்டுள்ளீர்கள் என்றார் என்னிடம்.


அவர் சொன்ன பதிலால் நான் எதுவும் பேசவில்லை.

பெட்ரோல் வாகனங்கள் எங்கு பழுதாகி நின்றாலும் உடனடியாக அருகில் உள்ள மெக்கானிக்கை வைத்து சரி செய்து விடலாம். 


ஆனால் எலக்ட்ரிக் பைக் ரிப்பேர் ஆகிவிட்டால் சர்வீஸ் சென்டருக்கு தான் கொண்டு செல்ல வேண்டும்.


என்னுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டியை நல்ல முறையில் பராமரித்தும் பேட்டரி பெயிலியர் ஆகிவிட்டது.


எலக்ட்ரிக் பைக் என்பது எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு வாங்குகிறோமோ அத்தனை ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பேட்டரிகளை மாற்றாமல் ஓடினால் மட்டுமே அது சக்சஸ்.


அப்படி யாராவது ஓட்டியிருந்தால் பதிவிடுங்கள்..

ஆகவே நண்பர்களே... பேட்டரி வாகனங்கள் என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத்தானே ஒழிய செலவு குறைவாக வரும் என கணக்கு போட்டு வண்டியை எடுத்து விடாதீர்கள்!


எலக்ட்ரிக் பைக் வாங்கி நொந்து போன ஒரு நண்பரின் காபி.பதிவு..

தவறாக பயன்படுத்தினால் ஆபத்தாக மாறும்.

 ஒரு மருந்தும் ஒரு உறுப்பும் பொருந்தாதபோது


#பராசிட்டமால் + கல்லீரல்

பராசிட்டமால் (acetaminophen) என்பது மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் குறைக்கும் மருந்தாகும்.


. அதிக அளவில் எடுத்தால், கல்லீரல் இதன் ஒரு பகுதியை நச்சுப் பொருளான NAPQI ஆக மாற்றுகிறது.


• சாதாரணமாக, glutathione எனும் #ஆன்டி-ஆக்ஸிடென்ட் இதை செயலிழக்கச் செய்கிறது. ஆனால் அது குறைந்துவிட்டால் அல்லது நிறைந்து விட்டால், NAPQI சேர்ந்து கல்லீரலை சேதப்படுத்தும்.


 ஆபத்துகள்: கல்லீரல் விஷப்பாதிப்பு, திடீர் கல்லீரல் சேதம், குறிப்பாக மதுபானத்துடன் சேர்த்து எடுத்தால் அல்லது அதிக அளவு எடுத்தால் ஆபத்து அதிகரிக்கும்.


முக்கிய தகவல்: ஏற்கனவே கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு, குறைந்த அளவிலும் ஆபத்து இருக்கலாம்.


#இபுபுரோஃபேன் + வயிறு

இபுபுரோஃபேன் என்பது AINEs (Non-Steroidal Anti-Inflammatory Drugs) வகையைச் சேர்ந்தது.


• இது COX-1 எனும் என்சைமைக் குறைத்து, வயிற்றுப் பாதுகாப்பு படலத்தை (mucosa) பாதிக்கிறது.

• இதனால் வயிற்று எரிச்சல் அதிகரித்து, அமில உற்பத்தியும் கூடும்.


 ஆபத்துகள்: gastritis (வயிற்று அழற்சி), புண்கள் (ulcers), இரத்தப்போக்கு, வயிற்று வலி — குறிப்பாக காலியான வயிற்றில் எடுத்தால் அல்லது நீண்ட நாட்கள் பயன்படுத்தினால்.


முக்கிய தகவல்: ஏற்கனவே புண் அல்லது gastritis இருந்தவர்கள், அல்லது aspirin / anticoagulants பயன்படுத்துபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


இந்த மருந்துகள் சரியான முறையில் பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 தவறாக பயன்படுத்தினால் ஆபத்தாக மாறும்.


 எப்போதும் சரியான அளவைப் பின்பற்றுங்கள், சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்க்குங்கள், பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை அணுகுங்கள்.


இந்த எண்கள் உங்கள் தொலைபேசி ஆரம்ப எண்ணாக வருகிறதா?? என்ன செய்ய காத்திருக்கும்?

 

63

75

76

78

81

82

83

86

91

93

94

96

97

98


இந்த எண்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும்! 


நம்முடைய 5 வருட தொடர் ஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் 

நிறைய பேருக்கு கைகால் அசதி என்பதை தாண்டி உடல் பலவீனம், மூட்டுவலி, இரத்த அழுத்தம், இடது கை தோள்பட்டை வலி , இருதய பாதிப்பு மற்றும் மன உளைச்சல் மனவேதனை, சண்டை சச்சரவு கணவன் மனைவி பிரிவு இறப்பு ஏற்படுகிறது.. 


யோவ் சும்மா காமெடி பண்ணாத அடித்து விடாத அப்படினு நீங்கள் கமெண்ட் செய்யலாம் .. பட் உண்மை உண்மை தான்..


ஏனென்றால் பொண்டாட்டி டார்ச்சர் தாங்க முடியாத ஆட்களுக்கு டார்ச்சருக்கு தங்கள் தொலைபேசி எண் தான் காரணம் என்பது யாருக்கும் தெரியாத இரகசியம்.. 


எண்கள் நம்பர்ஸ் ஒரு மனிதனின் மனநிலையை மாற்றும் வல்லமை படைத்தது என்பதை அனுபவத்தில் உணர்கிறேன்! 


கோபம் வெறுப்பு ஈடுபாடின்மை மற்றும் மன உளைச்சலுக்கு ஆளானவர்களின் தொலைபேசி எண்களை ஆராய்ந்து பார்க்கும் போது இன்னும் பல விசயங்கள் நமக்கு புலப்பட்டது! 


பல தீராத வியாதிகளுக்கு காரணமாக எண்கள் உள்ளது என்பதும் கசப்பான உண்மை!! 


சும்மா கதை விடாதப்பானு சொல்ற அன்பர்கள் ஒரு‌ வேலை செய்யுங்கள்!!

63 அல்லது 83,86 இந்த எண்களை மனதுக்குள் சிறுது நேரம் உச்சரித்து வாருங்கள் தெரியும்!


கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

 👆​கடுமையான வெயில் நேரங்களில் இந்த உணவுகளைத் தவிர்ப்பது உடல் சூட்டைத்  தணிக்கும்.


💥​புளிக்குழம்பு, காரக்குழம்பு போன்றவை உடல் சூட்டையும் பித்தத்தையும் அதிகரிக்கும். 

​💥தொடர்ந்து காரமாகச் சாப்பிடுவது சிறுநீர்க்கடுப்பு மற்றும் சிறுநீரில் இரத்தம் வருதல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம். 

💥​ வடை, சமோசா போன்ற பொரித்த உணவுகள் மற்றும் டீ, காபி பித்தத்தை அதிகமாக்கும். 

​💥 பச்சை மிளகாய், மிளகு அதிகம் சேர்த்த உணவுகள் வயிற்றுப்போக்கு மற்றும் மலக்குடலில் எரிச்சலை ஏற்படுத்தும். 

​💥பரோட்டா, பிட்சா, பர்கர் போன்ற மைதா உணவுகள் செரிமானத்திற்கு கடினமானவை. 


👆​உங்கள் உடலைக் குளிர்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க இதை பின்பற்றுங்கள்!


​💥தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், அவ்வப்போது தண்ணீர் குடியுங்கள். 

​💥 இளநீர், பதநீர், மற்றும் நன்னாரி சர்பத் குடிப்பது உடலுக்கு உடனடி குளிர்ச்சியைத் தரும். 🥥🍹

​💥நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். 

​💥உணவிற்குப் பிறகு அல்லது தாகம் எடுக்கும்போது குளிர்ந்த மோர் குடிப்பது வயிற்று எரிச்சலைத் தடுக்கும். 

​💥 கறுப்பு நிறத்தைத் தவிர்த்து, காற்றோட்டமான பருத்தி (Cotton) ஆடைகளை அணியுங்கள். 

​💥 தினமும் இரண்டு முறை குளிப்பது உடல் வெப்பத்தை சீராக வைக்கும். 

​ 

சரியான உணவு முறையைப் பின்பற்றி இந்த கோடையை ஆரோக்கியமாகக் கொண்டாடுங்கள். 🌞


Sunday, March 29, 2026

குளிக்கும்போது நாம் செய்யும் இந்த தவறுகள் அதிர்ஷ்டத்தை தடுக்குமா? 🚿🙏

 குளிப்பது என்பது வெறும் உடலை சுத்தம் செய்வது மட்டுமல்ல, அது நம் உள்ளத்தையும் சக்தியையும் தூய்மைப்படுத்தும் ஒரு புனிதமான செயல். நம் முன்னோர்கள் மற்றும் ஆன்மீக சாஸ்திரங்கள் குளிக்கும்போது சில குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அவை என்னவென்று இங்கே விரிவாகக் காண்போம்:


1️⃣ ஆடை கட்டுப்பாடு: குளிக்கும்போது பெண்கள் இடையாடையுடனும், ஆண்கள் இடுப்பில் துண்டுடனும் குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரம்.

2️⃣ சொற்கள்: குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்மறையான அல்லது அமங்கலமான சொற்களை ஒருபோதும் பேசக்கூடாது.

3️⃣ மௌனம்: குளிக்கும்போது யாரிடமும் பேசாமல் மௌனமாக குளிப்பது மன அமைதியைத் தரும்.

4️⃣ நீர் சேமிப்பு: நீரை வீணாக்கக் கூடாது. தண்ணீரை வீணாக்கினால் கடன் தொல்லை அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

5️⃣ சுத்தம்: ஓடும் நீரில் எச்சில் துப்புவதோ அல்லது அசுத்தம் செய்வதோ பெரும் பாவம் என்று கருதப்படுகிறது.

6️⃣ உப்பு நீர் குளியல்: கடல் நீரில் அல்லது கல் உப்பு கலந்த நீரில் குளிப்பது நம்மிடம் உள்ள திருஷ்டி மற்றும் தோஷங்களை நீக்க உதவும்.

இந்த பயனுள்ள ஆன்மீகத் தகவல்களை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்! 🔄


இந்த 3 நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்காதீர்கள்! 🚫🛀

 நமது முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு ஆழமான அர்த்தம் உண்டு. குறிப்பாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று சில குறிப்பிட்ட நாட்கள் உள்ளன. தெரியாமல் கூட இந்த மூன்று நாட்களில் எண்ணெய் குளியல் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

​❌ செவ்வாய்க்கிழமை: உடலில் வெப்பம் அதிகரித்து, தேவையற்ற கோபத்திற்கும் கடன் தொல்லைக்கும் வழிவகுக்கும்.

❌ வியாழக்கிழமை: செல்வ காரகனான குருவின் அருள் குறையக்கூடும். இது பணத்தடை மற்றும் கல்வியில் மந்தநிலையை ஏற்படுத்தலாம்.

❌ ஞாயிற்றுக்கிழமை: சூரியனுக்கும் சனிக்கும் உள்ள பகை காரணமாக உடல் நலம் பாதிப்பு மற்றும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.


​சாஸ்திரப்படி சரியான நாட்களில் குளித்து நலம் பெறுவோம்! இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். 🙏✨


Sunday, March 22, 2026

துடைப்பம் வாங்க சரியான நாள் தெரியுமா? – வாஸ்து சாஸ்திரம் சொல்லும் செல்வ ரகசியங்கள்

நாம் தினமும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க பயன்படுத்தும் ஒரு சாதாரண பொருள் தான் துடைப்பம். ஆனால் நம் முன்னோர்கள் பார்வையில் அது ஒரு சாதாரண பொருள் மட்டும் அல்ல.


வாஸ்து சாஸ்திரமும், பழமையான ஆன்மீக மரபுகளும் கூறுவதுபோல் துடைப்பம் என்பது வீட்டின் செல்வச் செழிப்புடன் தொடர்புடைய ஒரு முக்கிய பொருளாக கருதப்படுகிறது.


அதனால் தான் முன்னோர் காலத்தில் துடைப்பத்தை மரியாதையுடன் வைத்தும் பயன்படுத்தியும் வந்தனர்.


எந்த நாளில் துடைப்பம் வாங்க வேண்டும்?

எப்படி வைத்திருக்க வேண்டும்?

பழைய துடைப்பத்தை என்ன செய்ய வேண்டும்?


இதற்கெல்லாம் கூட வாஸ்து சாஸ்திரத்தில் தெளிவான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன.


துடைப்பம் – செல்வத்தின் அடையாளம்


வாஸ்து சாஸ்திரத்தின் படி துடைப்பம் அன்னை மகாலட்சுமியின் சின்னமாக கருதப்படுகிறது.


வீட்டில் இருக்கும் அழுக்கு, எதிர்மறை சக்தி, தீய ஆற்றல் போன்றவற்றை அகற்றுவதில் துடைப்பம் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது.


அதனால் துடைப்பத்தை மரியாதையுடன் வைத்தால் மகாலட்சுமியின் அருள் வீட்டில் நிலைத்து இருக்கும் என்று நம்பப்படுகிறது.


துடைப்பத்தை எங்கு வைக்க வேண்டும்?


வாஸ்து சாஸ்திரப்படி துடைப்பத்தை எப்போதும் பார்வைக்கு தெரியாத இடத்தில் வைத்திருக்க வேண்டும்.


வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் துடைப்பத்தை நேரடியாகப் பார்க்கக் கூடாது என்று முன்னோர் கூறியுள்ளனர்.


அதனால் துடைப்பத்தை:


கதவுக்குப் பக்கத்தில் வெளியில் வைக்கக் கூடாது


வீட்டின் நடுவில் வைக்கக் கூடாது


எப்போதும் மறைத்து வைக்க வேண்டும்


என்று கூறப்படுகிறது.


இது வீட்டின் செல்வ சக்தியை பாதுகாக்கும் ஒரு வழி என்று கருதப்படுகிறது.


துடைப்பத்தின் மீது கால் வைக்கக்கூடாது


துடைப்பம் அன்னை மகாலட்சுமியின் சின்னம் என்பதால் அதன் மீது கால் வைப்பது நல்லதல்ல என்று கூறப்படுகிறது.


அதனால் துடைப்பத்தை:


கால் படாத இடத்தில் வைக்க வேண்டும்


கவனமாக எடுத்துப் பயன்படுத்த வேண்டும்


என்று வாஸ்து கூறுகிறது.


துடைப்பத்தை தலைகீழாக வைக்கக் கூடாது


பலர் கவனிக்காமல் துடைப்பத்தை தலைகீழாக சாய்த்து வைப்பார்கள்.


ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி இது நல்லதல்ல.


இப்படி வைத்தால்:


வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும்


எதிர்மறை சக்தி அதிகரிக்கும்


என்று நம்பப்படுகிறது.


அதனால் துடைப்பத்தை எப்போதும் சரியான நிலையில் அமைதியாக வைத்திருக்க வேண்டும்.


துடைப்பத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்


வீட்டை பெருக்கும் போது துடைப்பத்தில்:


முடி


தூசி


குப்பை


போன்றவை சிக்கிக்கொள்வது இயல்பானது.


அதை அப்படியே வைக்காமல் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.


துடைப்பத்தை சுத்தமாக வைத்திருப்பது வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.


ஒருவர் வெளியே சென்ற உடனே பெருக்கக் கூடாது


வீட்டில் இருந்து ஒருவர் வெளியே சென்ற உடனே துடைப்பம் கொண்டு வீட்டை பெருக்குவது நல்லதல்ல என்று நம்பப்படுகிறது.


அதற்கு பதிலாக சுமார் ஒரு மணி நேரம் கழித்து பெருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.


இது வீட்டின் அதிர்ஷ்ட சக்தி வெளியேறாமல் இருக்க உதவும் என்று முன்னோர் நம்பினர்.


வீடு மாற்றும்போது பழைய துடைப்பம்


சிலர் வீடு மாற்றும்போது பழைய துடைப்பத்தை பழைய வீட்டிலேயே விட்டுவிட்டு செல்கிறார்கள்.


ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி இது நல்லதல்ல.


அப்படி விட்டுச் சென்றால்:


அந்த வீட்டில் இருந்த மகாலட்சுமியின் அருளையும் அங்கேயே விட்டுச் செல்கிறோம் என்று கருதப்படுகிறது.


அதனால் பழைய துடைப்பத்தை:


உடைத்து


துண்டுகளாக பிரித்து


குப்பையில் போடுவது நல்லது என்று கூறப்படுகிறது.


துடைப்பம் வாங்க சிறந்த நாட்கள்


வாஸ்து சாஸ்திரப்படி துடைப்பம் வாங்குவதற்கும் சில நல்ல நாட்கள் உள்ளன.


குறிப்பாக:


செவ்வாய்க்கிழமை


சனிக்கிழமை


இந்த இரண்டு நாட்களிலும் துடைப்பம் வாங்குவது நல்லது என்று கூறப்படுகிறது.


மேலும் தேய்பிறை நாட்களில் துடைப்பம் வாங்கினால்:


வீட்டில் செல்வம் அதிகரிக்கும்


பொருளாதார நிலை மேம்படும்


என்று நம்பப்படுகிறது.


துடைப்பத்தை தானமாக கொடுக்கக்கூடாது


வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இன்னொரு முக்கியமான விஷயம்:


துடைப்பத்தை தானமாக கொடுக்கக் கூடாது.


ஏனெனில் அது வீட்டின் செல்வ சக்தியை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.


முன்னோர்கள் சொல்லும் வாழ்க்கை அறிவு


இந்த பழமையான மரபுகள் அனைத்தும் ஒரு முக்கியமான உண்மையை சொல்லுகின்றன.


நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் மரியாதையுடன், சுத்தமாக, ஒழுங்காக வைத்திருப்பது வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் செழிப்பையும் தரும்.


அதனால் தான் முன்னோர்கள் வீட்டில் உள்ள சாதாரண பொருட்களுக்கும் கூட ஆன்மீக அர்த்தத்தை கொடுத்து வைத்தார்கள்.



Sunday, March 8, 2026

உங்கள் நகங்கள் உங்களை எச்சரிக்கின்றன..!

 🚨 உங்கள் நகங்கள் உங்களை எச்சரிக்கின்றன..!


⚪ வெள்ளை புள்ளிகள்: துத்தநாகக் குறைபாடு

🟡 மஞ்சள்: பூஞ்சைத் தொற்று

🥄 ஸ்பூன் வடிவம்: இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகை

📏 செங்குத்து கோடுகள்: B12 குறைபாடு

↔️ கிடைமட்ட கோடுகள்: நோய், ஊட்டச்சத்து குறைபாடு

🔵 நீலம் / ஊதா நகங்கள்: இதயம், நுரையீரல் பிரச்சனை

⚫ கருப்புக் கோடு: மெலனோமா எச்சரிக்கை

💅 கிளப் நகங்கள்: நுரையீரல், இதய நோய்


மாரடைப்பு/Heart Attack வருவதற்கு முன் உடல் தரும் எச்சரிக்கை அறிகுறிகள்

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலர் தங்களுடைய உடல்நலத்தை கவனிக்காமல் இருக்கிறார்கள். குறிப்பாக இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் மிகவும் ஆபத்தான ஒன்று Heart Attack (மாரடைப்பு) ஆகும். 


பொதுவாக பலர் மாரடைப்பு என்றால் திடீரென கடுமையான மார்பு வலி ஏற்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் மாரடைப்பு ஏற்படும் முன்பே உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளை வழங்குகிறது. அந்த அறிகுறிகளை சரியாக கவனித்தால் பெரிய ஆபத்துகளைத் தவிர்க்க முடியும்.


மாரடைப்பின் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று மார்பின் நடுப்பகுதியில் ஏற்படும் அழுத்தம் அல்லது வலி. சில சமயங்களில் இது கனமாக ஏதோ ஒன்று மார்பின் மீது இருப்பது போல உணர்வை ஏற்படுத்தும். இந்த வலி சில நிமிடங்கள் நீடிக்கலாம் அல்லது சில நேரங்களில் மறைந்து மீண்டும் தோன்றலாம்.


அதேபோல், மார்பில் ஆரம்பிக்கும் வலி கழுத்து, தாடை அல்லது தோள்களுக்கு பரவுவது கூட முக்கியமான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். 


குறிப்பாக இடது தோளுக்கும் கைக்கும் பரவும் வலி மாரடைப்பின் பொதுவான அறிகுறியாக கருதப்படுகிறது. சிலருக்கு கையின் உள்ள்புறமாக கீழே செல்லும் வலியும் ஏற்படலாம்.


மேலும் சிலருக்கு மேல் வயிற்றில் எரிச்சல் அல்லது வலி ஏற்படலாம். இது சாதாரண அஜீரணம் போல தோன்றலாம். அதனால் பலர் அதை கவனிக்காமல் விடுகின்றனர். ஆனால் இது சில நேரங்களில் இதய பிரச்சினையின் அறிகுறியாக இருக்கக்கூடும்.


மற்றொரு அறிகுறி கழுத்தில் இருந்து காதுகளுக்கு அல்லது தாடைக்கு பரவும் வலி. அதேபோல் இரு தோள்பட்டைகளுக்கு இடையில் அழுத்தம் அல்லது வலி ஏற்படுவதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இவை எல்லாம் இதயத்திற்கு போகும் இரத்த ஓட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டால் தோன்றும் அறிகுறிகளாக இருக்கலாம்.


இந்த அறிகுறிகளில் ஒன்று அல்லது பல ஒரே நேரத்தில் தோன்றினால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். தகுந்த நேரத்தில் மருத்துவ உதவி பெற்றால் உயிரைக் காப்பாற்ற முடியும்.


இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க சரியான உணவு பழக்கம், ஒழுங்கான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை குறைப்பது மிகவும் முக்கியம். உடல் தரும் சிறிய எச்சரிக்கைகளையும் புறக்கணிக்காமல் கவனித்தால் பல பெரிய ஆபத்துகளைத் தவிர்க்க முடியும்.


இந்த தகவலை உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் அறிய பகிருங்கள். உயிரைக் காப்பாற்றும் விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்.


இது போல மருத்துவ தகவல்கள பெற எமது பக்கத்துடன் இணைந்திருங்கள் (Follow)

Thursday, March 5, 2026

விதி மதி கதி விளக்கங்கள்

விதி என்பது முன் ஜென்மத்தில் 

நாம் செய்த பாவ,

புண்ணியம் காரணமாக அனுபவித்து தீர்க்கபட வேண்டிய கர்மா.

இது ஏற்கனவே நமக்காக நாம் அனுபவிக்க தீர்மானிக்கப்பட்டது.

மதி என்பது 

இந்த ஜென்மத்தில் நாம் செய்ய போகிற பாவ,புண்ணிய

கர்மா .

அதாங்க நமக்காக நாம் அனுபவிக்க

நம்மளாலேயே 

நாம் தீர்மானிக்கப் போகிற கர்மா .

நமக்கு இனி வருங்காலத்தில் நமக்கு என்ன நன்மை தீமை வரும் என்று தீர்மானிப்பது கதி 

விதிக்கு லக்னம்

மதிக்கு சந்திரன்

கதிக்கு சூரியன் 

என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்த நியதி.

பிறப்பில் இருந்து

ஒருவருக்கு விதி 

என்கிற லக்னம் 33 வயது வரை தன் கர்மாவை அனுபவிக்க செய்யும்.

மதி என்கிற சந்திரன் 

34 வயது முதல் 66 வயது 

வரை தன் கர்மாவை 

அனுபவிக்க செய்யும்.

கதி என்கிற சூரியன் 

67வயது முதல் 99 வயது 

வரை தன் கர்மாவை அனுபவிக்க செய்யும் என்று ஜோதிட சாஸ்திரம் 

வரையறுத்து உள்ளது.


விதி என்பது இறந்த காலம் 

நமக்கு தீர்மானிக்கப்பட்டது.


மதி என்பது நிகழ்காலம் 

நாமாகவே ,தீர்மானிப்பது.


கதி என்பது எதிர்காலம் 

நமக்காக தீர்மானிக்கப்போவது.

Tuesday, March 3, 2026

செல்வவளம் தரும் அட்சய பாத்திரம்.


 *காசு பணம் சேர,*

*அன்னபாக்கியம்* ( உணவு) குறையாமல் இருக்க, ஒரு நல்ல எளிமையான வழி ஒன்றை சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்காக இந்த பதிவு.


🕉️ மகாபாரதம் மற்றும் சிலப்பதிகாரம் போன்ற புராண இதிகாசங்களில், *அட்சய பாத்திரம்* என்று ஒன்றை நீங்கள் படித்திருப்பீர்கள். அக்ஷய என்ற வடமொழி சொல்லுக்கு "பெருக்குதல்" என்று பொருள்படும் . அட்சய பாத்திரம் என்பது, நாம் என்ன வேண்டுகிறோமோ ? அதை தரும் வல்லமை உடையது. ஸ்ரீ மஹாலட்சுமியின் அம்சம் நிறைந்தது.


🔯 ஐம்பொன், வெண்கலம், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களால் ஆன பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பாத்திரம் போதுமானது. இல்லாவிட்டால், சிறிய அளவிலான ஒன்றை புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள். ஐம்பொன் , வெண்கலத்தால் ஆன பாத்திரம் மிகச் சிறப்புடையது.


✡️ அந்த பாத்திரத்தின் மீது *"ஸ்ரீ ஐஸ்வர்யேஸ்வரர் திருவருள் "* 

" *அட்சய அட்சய* " 

என்ற வார்த்தைகளை பொறித்துக்கொள்ளுங்கள்.


🍨அந்த அட்சயபாத்திரத்தை பஞ்சகவ்வியம் அல்லது கோமியம் கொண்டு சுத்தி செய்து. அதன் பின்பு பால் கொண்டு சுத்தி செய்து விட்டு, அதில் வீட்டில் உள்ள அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ,கோதுமை உள்ளிட்ட நவதானியங்களை தயார் செய்து கொண்டு,


 🌝வளர்பிறை, வெள்ளிக்கிழமை, காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுக்கிர ஓரையில் " *அட்சய அட்சய* " தனம் தானியம் அநேகம் அநேகம் என்று கூறிக்கொண்டே நிரப்புங்கள். அதன்மீது ஒரு வெள்ளி மகாலட்சுமி நாணயம் ஒன்றும், உங்களால் முடிந்த அளவு சில்லறை நாணயங்களையும் வைத்து பூஜை அறையிலோ அல்லது சமையல் மேடையில் வைத்து நீங்கள் வீட்டில் பூஜை செய்யும் நேரத்தில், அட்சய பாத்திரத்திற்கும், தூபம் தீபம் காட்டுங்கள். அப்பொழுது "தனம் தான்யம் சம்பத்து தேஹிமே சதா " என்றோ அல்லது "தனம் தானியம் அநேகம் அநேகம் " ஸ்லோகத்தை உச்சரிக்க தன தானிய சம்பத்து உண்டாகும்.


🍅இப்படி செய்து வர உங்கள் வீட்டில் உணவிற்கு பஞ்சம் இருக்காது, மேலும் உங்கள் நியாயமான கோரிக்கைகளை அந்த அட்சய பாத்திரத்திடம் வைக்க, அந்தக் கோரிக்கைகள் வெகு விரைவில் நிறைவேறும். 


பேராசை கூடாது.


🐄🦜மாதம் ஒருமுறை, அதில் உள்ள அரிசி மற்றும் தானியங்களை ஊற வைத்து,  வெல்லம் கலந்து பசுவிற்கு கொடுக்கலாம் அல்லது பறவைகளுக்கு உணவாக அளிக்கவும்.

மீண்டும் புதிய தானியங்களை அதில் நிரப்பி வைக்கவும்.

உங்கள் இல்லத்தில் எப்போதும் தன தானிய சம்பத்து நிறைந்திருக்கும்.


வாழ்க வளத்துடன்


தயவு செய்து ஷேர் செய்யுங்கள், அனைவரும் பயன் பெறட்டும்.

தனுசு ராசிக்காரர்களே... உங்கள் அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போகிறது!

 💎

வாழ்க்கையில் அடுத்த லெவலுக்குப் போகணுமா? தடைகள் எல்லாம் தவிடுபொடியாகணுமா? இதோ உங்களுக்காக பழமையான லால் கிதாப் (Lal Kitab) சொல்லும் ரகசியப் பரிகாரங்கள்! 🔮👇


✨தனுசு ராசிக்காரர்களுக்கான லால் கிதாப் பரிகாரங்கள்:


✅ துரதிர்ஷ்டம் விலக: தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விடுங்கள். கஷ்டங்கள் கரைந்து போகும்! 🌊🪙


✅ தந்தையின் ஆசி: அப்பாவின் படுக்கை, ஆடைகள் அல்லது அவர் பயன்படுத்திய பொருட்கள் உங்களுக்குப் பெரிய அதிர்ஷ்டத்தைத் தரும். அதை அலட்சியம் செய்யாதீர்கள்! 👴✨


✅ தர்மமே தலைகாக்கும்: வாசலுக்கு வந்து பிச்சை கேட்பவர்களிடம் 'இல்லை' என்று சொல்லாதீர்கள். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், புண்ணியம் சேரும்! 🙏🧡


✅ ஆலய வழிபாடு: திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு நெய், தயிர் அல்லது கற்பூரம் வாங்கிக் கொடுங்கள். வாழ்வு பிரகாசிக்கும்! 🪔🙏


✅ மஞ்சள் மகிமை: உங்கள் வீட்டு வாசலில் மஞ்சள் நிறப் பூக்கள் பூக்கும் செடிகளை வளர்க்கத் தொடங்குங்கள். அதிர்ஷ்டம் தானாகத் தேடி வரும்! 🌼🏡


✅ ஆன்மீக பலம்: வியாழக்கிழமைகளில் ஹரிவம்ச புராணம் படிப்பதும், அரச மரத்தை சுற்றி வந்து வழிபடுவதும் உங்கள் வாழ்வையே மாற்றும்! ✨🌳


✅ முக்கியமான ஒன்று: யாரையும் ஏமாற்றாதீர்கள், பொய் சாட்சி சொல்லாதீர்கள். நேர்மையே உங்கள் பலம்! ⚖️💯


🌟 மாஸ்டர் டிப்ஸ்: வாழ்வில் ஒரு முறையாவது ஹரித்துவார் சென்று கங்கையில் புனித நீராடுங்கள். உங்கள் சந்ததிக்கே அது நல்வாழ்வைத் தரும்! 🕉️🌊


இந்தத் தகவல் உங்கள் தனுசு ராசி நண்பர்களுக்குப் பயன்படும் என நினைத்தால், உடனே SHARE செய்யுங்கள்! 🔄