Saturday, April 25, 2026

ஆண் வாரிசு கிடைக்க விரதம் பரிகாரம்....

 நவக்கிரகங்களின் சேர்க்கை தான் கரு உருவாக காரணமாக அமைகிறது. 


சுக்ரன், சுக்கில சுரோனிதங்களை இணைக்கிறார். இணைந்த சுக்கில சுரோனிதங்களை கருவாக மாற்றுகிறது செவ்வாய், 


உடல் உறுப்புகள் உருவாக குரு துணைபுரிகிறார். பூந்தசை தோல் போன்றவற்றை சந்திரன் உருவாக்குகிறார். 


நகம், முடி, கழிவுப்பகுதி உற்பத்திக்கு சனியும், அறிவுக்கு புதனும் காரணமாகிறார். 


நமது முன்னோர்கள் கிரகங்களின் தன்மையை அறிந்தே புதுமணத் தம்பதியரை முதல் இரவில் கூட வைத்தனர். 


அதன் பிறகும் வரும் நாட்களில் சுப நாட்களை கணித்தே தம்பதியர் கூடினர். 


அதனால் தான் ஒழுக்கமான, நோய் நொடிகள் இல்லாத, தோஷம் இல்லாத, உடல் ஊனம் இல்லாத குழந்தைகள் பிறந்தனர். 


ஆனால் இந்த கலிகாலத்தில் இந்த ஜோதிட முறைகளை பின்பற்றுவது குறைந்துள்ளதால், குழந்தை உருவாகுவதிலும், பிறந்த குழந்தையை பராமரிப்பதிலும் மருத்துவரை நாட வேண்டிய நிலையில் இன்றைய சமுதாயம் உள்ளது. 


ஒரு சிலருக்கு பெண் குழந்தைகள் பிறந்திருக்கும். எனவே, ஆண் குழந்தைக்காக தவமிருப்பர். 


அவர்கள் ஆடிப் பூரத்தன்று முறையாக விரதமிருந்து, அம்பிகையை வழிபாடு செய்தால் ஆண் குழந்தை பிறக்கும். . 


ஆடிப் பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக பச்சைப் பயிறை தண்ணீரில் நனைய வைக்க வேண்டும். 


அது நன்கு முளைவிட்டிருக்கும். அதை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். 


பின்னர் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் விரதமிருந்து இதை நம்பிக்கையோடு சாப்பிட வேண்டும். 


இந்த விரதம் இருப்பதால் வாரிசு கிடைக்க வாய்ப்பு உருவாகும். தொட்டிலில் பிள்ளை தவழ துணையிருப்பாள் அம்பிகை.

Thursday, April 2, 2026

சிறுநீரக ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகள்!

1. சிறுநீரகத்திற்கு மிகவும் பாதுகாப்பானவை:

​இந்த உணவுகள் பொதுவாக அனைவருக்கும் நல்லது:


💥ஆப்பிள் : இதில் நார்ச்சத்து அதிகம், பொட்டாசியம் குறைவு. இது வீக்கத்தைக் குறைக்க உதவும்.

💥முட்டைக்கோஸ் & குடைமிளகாய்: இவை சிறுநீரகத்திற்கு மிகவும் ஏற்றவை. இதில் வைட்டமின் சி அதிகம், ஆனால் சிறுநீரகத்திற்குச் சுமையைக் கொடுக்கும் தாதுக்கள் குறைவு.

💥தண்ணீர்: இதுதான் மிக முக்கியம். நச்சுகளை வெளியேற்ற நீர்ச்சத்து அவசியம்.

💥சால்மன் மீன் : இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலின் வீக்கத்தைக் குறைக்க உதவும்.


​2. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவை:

​சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் இதில் உள்ள சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்.


💥உருளைக்கிழங்கு மற்றும் அவகேடோ: இவற்றில் பொட்டாசியம் மிக அதிகம். சிறுநீரகம் பலவீனமாக இருந்தால், ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்து இதயப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

💥தயிர் மற்றும் முட்டை: இவற்றில் புரோட்டீன் அதிகம் என்றாலும், கூடவே பாஸ்பரஸ் சத்தும் உள்ளது. இது ரத்தத்தில் அதிகமானால் எலும்புகளைப் பலவீனமாக்கும்.

💥பயறு வகைகள் மற்றும் குயினோவா: இவற்றிலும் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் என்பதால், சிறுநீரக நோயாளிகள் மருத்துவர் ஆலோசனையின்றி இவற்றை அதிகம் உண்ணக்கூடாது.


​👆 முக்கியக் குறிப்பு:


​இந்த உணவுகள் பொதுவான ஆரோக்கியத்திற்குச் சிறந்தவை. 

ஆனால் உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சனை இருந்தால், இதை பார்த்து நீங்களாகவே முடிவெடுக்க வேண்டாம். ஏனெனில், சிறுநீரக உணவு முறை என்பது ஒவ்வொரு நபரின் ரத்தப் பரிசோதனை முடிவுகளைப் (Creatinine, GFR, Potassium levels) பொறுத்து மாறுபடும்.


​ஆனால், இதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது,  ஆரோக்கியமான சிறுநீரகம் கொண்டவர்களுக்கு இந்த உணவுகள் நல்லது, ஆனால் ஏற்கனவே சிறுநீரகப் பாதிப்பு (CKD) உள்ளவர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டில் எந்த திசையில் பணப் பெட்டி வைக்கலாம்....

வட மேற்கில் வைத்தால் 

அனைத்து வகையிலும் விரயம் அதிகமாகும் 

வடகிழக்கில் வைத்தால் 

பணப் பழக்கம் சீராகும் 

தேவையான முக்கியமான செலவுகள் மட்டும் செய்வோம் ..


தெற்கு திசையில் வைத்தால் 

மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் 

திடீர் விபத்து ஏற்பட்டு தேவையற்ற செலவுகள் உண்டாகும்.. குறிப்பாக வீட்டில் உள்ள ஆண்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்..


வடக்கு திசையில் வைத்தால் 

பணப்புழக்கம் எப்பொழுது சீராகி கொண்டே இருக்கும் மற்றும் குழந்தைகள் நல்ல விதமாக படித்து நல்ல நிலைக்கு வருவதற்கு 

இந்த பணம் உதவும் 


மேற்கு திசையில் வைத்தால் 

பல மடங்கு சேமிப்பு பெருகும் ..

கஷ்டப்பட்டு சேமிக்கும் பணம் பிற்காலத்தில் உதவக்கூடிய அமைப்பு உண்டு 


கிழக்கு திசையில் வைத்தால் 

நினைத்ததை நடத்தி முடிக்கக்கூடிய ஆற்றலை தரும் மற்றும் வருங்காலத்தில் இந்த சேமிப்பை வைத்து சாதனை செய்யக்கூடிய அமைப்பு உண்டு 


தென்மேற்கு திசையில் வைத்தால் 

பல வகையிலும் பணம் சேமிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும் 


தென்கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் உள்ள பெண்களுக்கு தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும் அல்லது கணவன் மனைவிக்கு இடையே ஈகோ என்ற அடிப்படையில் பணம் சார்ந்த விஷயத்திற்காக சண்டையிடுவார்கள்