Wednesday, May 29, 2019

முதுகுஎலும்பு_தேய்மானத்தை கட்டுக்குள்_வைக்கும் அற்புத_முருங்கைகீரை கஞ்சி!



செய்முறை:

இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை நன்றாக கழுவி எடுத்து ,மிக்ஸியில் அரைத்து இரண்டு லிட்டர் வரும்படி சாறாக்கி
கொள்ளவும்.

இந்த இரண்டு லிட்டர் முருங்கை சாற்றில் ஒரு கிலோ பச்சரிசி,ஐம்பது கிராம் மிளகு ,இருநூறு கிராம் பாசிபருப்பு,சிறிது,சுக்கு ,மற்றும்
ஏலக்காய் சேர்த்து, வெயிலில் காயவைக்கவேண்டும்....!!

முருங்கை சாறில் அரிசி மற்றும் இதர பொருட்கள் நன்றாக ஊறவேண்டும்...!!

இவை அனைத்தும் நன்றாக ஊறியபின்பு மறுபடியும் ஈரப்பதம் போகும் வரை வெயிலில் காயவைத்து,சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

இதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி, தினந்தோறும் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை ,
கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும்...!!

இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.

அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்....!!

இந்த கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது....!!

L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது.

இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது.

அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ,உட்கார முடியாத நிலை , முதுகு வலி, இடுப்புவலி உண்டாகும்.

அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது,
L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய,
" disc prolapse " ஆவது ...
இவை அனைத்துக்குமே முழுமையான மருந்து இந்த
முருங்கைக்கீரை கஞ்சிதான் ....!!

அதிக இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்துகொண்டுள்ள இந்த
முருங்கைக்கீரைக் கஞ்சியை
48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்..!!

இவ்வாறு சாப்பிட்டு வந்தால்,
உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும்.

இடுப்பு வலி, முதுகு வலி குணமாகிவிடும்...!!

அனைவருக்கும் பகிருங்கள்...!!
பயன் பெறுங்கள்....!!

Tuesday, May 28, 2019

ஆசனவாய்_நோய்கள்



முக அழகிற்கும், முடி அலங்காரத்திற்கும் தினமும் கவனம் செலுத்துபவர்கள் ஆசனவாய் சார்ந்த நோய்களான மலச்சிக்கல், மூலம், பவுத்திரம், சதைகள், கட்டிகள், வெடிப்புகள் ரத்தப்போக்கு ஆகியவை குறித்து அக்கறை செலுத்துவதில்லை. காரணம் கூச்சத்தினாலும், அச்சத்தினாலும் ஏற்படும் தயக்கம். ‘அறுவை சிகிச்சை அவசியம்’ என்று மருத்துவர்கள் சொல்லி விடுவார்களோ என்றுபயத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டே போய், நோயை முற்றிய நிலைச் சிக்கலாக வளர்த்து விடுகிறார்கள். ஆசனவாய் நோய்களுக்கான ஆரம்ப அறிகுறீகள் தெரிந்தவுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நலமாக்கல் எளிது.

ஆசனவாயும், மலக்குடலும் இருபுட்டங்களுக்கு நடுவில், பாலுறுப்புகளுக்கு அருகாமையில் மறைவாக அமைந்துள்ளன. சுற்றியுள்ள கொழுப்பு திசுக்களால் ஆசனவாய் பாதுகாப்பாக உள்ளது. மலமும் வாயுவும் வெளியேறும் போது மட்டும் விரிந்து மற்ற நேரங்களில் இறுக்கமாகச் சுருங்கியிருக்கும் தன்மையுள்ள சுருங்கு தசைகள் (sphincters) இங்கு உள்ளன. ஆசனவாயில் நடைபெறும் ஆபரேஷன்களை எளிய, சிறிய (Minor Surgeris) ஆபரேஷன்கள் என்றே ஆங்கில மருத்துவம் கூறுகிறது. ஆயினும் மைனர் ஆபரேஷனுக்குப் பின் பெரிய பின் விளைவுகள் (Major side effects) ஏற்படுவதை முதலில் கூறுவதில்லை.

ஆபரேஷனுக்குப் பின்பு ஆசனவாய் சுருங்குதசைகள் (Sphincter Muscles) பாதிக்கப்பட்டு மலத்தை அடக்கிக் கொள்ளும் தன்மையை இழந்துவிடுகிறது (Incontinence). சிலருக்கு மலக்குடல் அடைப்பு (Stricture) ஏற்பட்டு விடுகிறது.

மூலம் (Piles), பவுத்திரம் (Fistula in Ano), பவுத்திர சீழ்க்கட்டி (Perianal Abscess), பிளவுப் புண் (Fissure in Ano), ஆசனவாய் நமைச்சல் அரிப்பு (Anal Pruritus), தொங்குசதைக் கட்டி (Anal Polyp), மலக்குடல் & ஆசனவாய் பிதுக்கம் (Anal & Rector Prolapse), ரத்தப்போக்கு போன்றவை ஆசனவாய் சார்ந்த பொதுவான நோய்களாகும். ஆயினும் இவற்றில் எந்த நோய் ஏற்பட்டாலும் ‘எனக்கு பைல்ஸ் உள்ளது’ என்று தான் பலரும் மருத்துவர்களிடம் தெரிவிப்பதுண்டு. தீர விசாரித்தும், உடற்பரிசோதனை செய்தும், தேவையெனில் ஆய்வுக் கூட பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும் நோயையும், நோய் நிலையையும் மருத்துவர்கள் கண்டறிந்து உறுதி செய்த பின்னரே சிகிச்சை அளிக்கின்றனர்.

‘மூலம்’ என்ற நோய் தவிர்த்து பிற முக்கிய ஆசனவாய் நோய்களையும் அவற்றை நலமாக்கப் பயன்படும் ஹோமியோபதி மருந்துகள் பற்றியும் பார்ப்போம். (மூலம் தனி கட்டுரையாக விரிவாக எழுதப்பட வேண்டிய ஒன்று).

ஆசனவாய் பிளவுகள் (fissures in Ano) :

மலங்கழித்தல் என்பது இயல்பான, சிரமமற்ற உடலியல் நிகழ்வாக நடைபெற வேண்டும். மாறாக மிகக் கடினமான, வேதனை மிக்க நிலை மலங்கழிக்கும் போது ஏற்பட்டால் ஆசனவாய் பகுதி காயம்பட்டு விடும். மலச்சிக்கல் பேர்வழிகளுக்கு மலப்பாதை வழியே மிகக் கடினமான இறுக்கமான மலம் சிரமப்பட்டு வெளியேறுவதன் விளைவே ஆசனவாய் பிளவுப் புண்கள் (Cracks). இது ஆசனவாய் கிழிந்து விடும் நிலையாகும் (Tear in Anus). பிறப்புறுப்பு வழியே பிரவசிக்கும் (Vaginal Delivery) பெண்களுக்கும் ஆசனவாயில் ஏற்படும் அழுத்தங்களால் பிளவுப் புண்கள் ஏற்படக் கூடும்.

ஆசனவாய்ப் பிளவுப் புண்கள் இருப்பதற்கான முக்கிய அறிகுறி

மலங்கழிக்கும் போதும், சிலருக்கு மலம் கழித்த பின்னரும் ஆசனவாயில் கடும்வலி ஏற்படும். இந்நோயைப் பலரும் மூலம் (Piles) என்றே கருதி சிகிச்சைக்கு வருவதுண்டு. இந்நோய் தீவிர (acute) வலியுள்ள வகை. நாள்பட்ட (acute) வலியுள்ள வகை எனப் பிரிக்கப்படுகிறது. நாள்பட்ட வகையில், ஆசனவாயில் முக்கோண வடிவமுள்ள தோல் தொங்கும். இதை Sentinal Pile என்று அழைத்த போதிலும் இது மூல நோய் அல்ல.

தீவிர மற்றும் நாள்பட்ட ஆசனவாய் பிளவுப் புண்களுக்கு ஆபரேஷன் இன்றி, பக்க விளைவுகள் இன்றி ஹோமியோபதி மருந்துகள் எளிய முறையில் தீர்வு தருகின்றன. ஹோமியோபதி மருந்துகள் மனித உடலின் சீர்குலைந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. கடுகளவு தீங்கு கூட ஏற்படுவதில்லை. மிகவும் பாதுகாப்பானவை.

நைட்ரிக் ஆசிட் (Nitric Acid) என்ற ஹோமியோபதி மருந்து ஆசனவாய் பிளவுப் புண்களுக்கு ஆபரேஷனின்றி, பக்க விளைவுகளின்றி ஹோமியோபதி மருந்துகள் எளிய முறையில் தீர்வு தருகின்றன. ஹோமியோபதி மருந்துகள் மனித உடலின் சீர்குலைந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. கடுகளவு தீங்கு கூட ஏற்படுவதில்லை, மிகவும் பாதுகாப்பானவை.

நைட்டிரிக் ஆசிட் (Nitric Acid) என்ற ஹோமியோஒபதி மருந்து ஆசனவாய் பிளவுப் புண்களுக்கு அற்புத நலமளிக்கும் திறன் கொண்டது. ஆசனவாயில் கிழிபடுகிற, குத்துகிற, கொட்டுவது போன்ற, வெட்டுவது போன்ற வலி ஆசனவாயில் ஏற்படுமாயின் இம்மருந்து பேருதவி புரிவது திண்ணம். மேலும் கடினமலம், மலத்துடன் ரத்தப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கும் உடனடித் தீர்வு கிட்டும்.

ரட்டானியா (Ratanhia) என்ற ஹோமியோ மருந்தும் ஆசனவாய் பிளவு நோயில் சிறந்த நிவாரணமளிக்கக் கூடியதாக திகழ்கிறது. மலம் கழித்த பின் மலப்பாதையில் & ஆசனவாயில் அதிகளவு எரிச்சல் உணர்வும் நீண்ட நேரம் நீடிக்கக் கூடிய வலியும் காணப்படும். ஆசனவாய் வாய் வழியாக மலக்குடலுக்குள் ஒரு கத்தியையோ, உடைந்த கண்ணாடித் துண்டையோ கொண்டு செருகியது போல் வலிப்பதாக நோயாளி விவரிப்பார். ஆசனவாய் மிகவும் இறுகிவிட்டது போல (Constricted) இளகிய மலத்தைக் கூட மிகவும் சிரமப்பட்டு வெளியேற்றும் நிலை ஏற்படும். இத்தகைய நிலையில் ரட்டானியா அற்புதங்கள் நிகழ்த்தும் என்பதை ஒவ்வொரு ஹோமியோபதி மருத்துவரும் அறிவார்கள்.

இவ்விரண்டு மருந்துகள் தவிர சல்பர், பேயோனியா, கிராபைட்டீஸ், தூஜா, இக்னேஷியா, Sedun Acre போன்ற சில மருந்துகளும் ஆசனவாய் பிளவுப் புண்களை முழுமையாகக் குணப்படுத்தும் முன்னணி மருந்துகளாகத் திகழ்கின்றன.

ஆசனவாய் அரிப்பு, நமைச்சல் (PRURITUS ANO) :

ஆசனவாயைச் சுற்றித் தாங்க முடியாத அரிப்பு (Itching) ஏற்படுவதை தான் PRURITUS ANO என்கிறோம். பொது இடத்தில் இருக்கும் போது கூட ஒரு நபர் ஆசனவாயில் கை வைத்து தேய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரிப்பு இருக்கும். இதைக் காணும் பிறருக்கு அருவருப்பாக இருக்கும். ஆசனவாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கும், குடற்பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தான் இத்தகைய ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. வயிற்றுப் பூச்சிகளால் பெரும்பாலும் குழந்தைகள் தான் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சல்பர், நைட்ரிக் ஆசிட், காஸ்டிகம், லைகோ, சபடில்லா போன்ற ஹோமியோபதி மருந்துகள் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகின்றன.

தொங்குசதை (POLYP) :

மலக்குடலினுள்ளும் சில சமயம் ஆசனவாயின் வெளியேயும் தெரியும் தொங்குசதை POLYP எனப்படுகிறது. சிவப்பான ரத்தம் கசியும் சதை இது. ஆங்கில மருத்துவத்தில் இதனை POLYPECTOMY எனும் சிகிச்சை மூலம் அகற்றுகின்றனர். சிலருக்கு ஒன்றுக்கு மேல் இச்சதை இருந்தால் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இச்சதையை அறுவைச் சிகிச்சையின்றி குணமாக்க உதவும் சில முக்கிய ஹோமியோ மருந்துகள் : டுக்ரியம், பாஸ்பரஸ், தூஜா, காலிபுரோம்.

மலக்குடல் பிதுக்கம் (PROLAPSE RECTUM) :

மலம் கழிக்கும் போது, மலக்குடல் முழுவதும் ஆசனவாய் வழியாக வெளியே தள்ளப்பட்டு பிதுங்கித் தொங்கும். இந்தச் சதை 3 அல்லது 4 அங்கும் நீளத்திற்குத் தொங்கும். இச்சதை பார்ப்பதற்கு அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தும். சிறு குழந்தைகளும், முதியவர்களும் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். சிறுவயதில் வரும் இந்நோய் தானாகவே குணமாவதுண்டு. பெரியவர்களுக்கு வந்தால் மலக்குடலை உள்ளே தள்ளி நிலைநிறுத்தும் RECTOPEXY அறுவைச் சிகிச்சை ஆங்கில மருத்துவத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ஹோமியோபதியில் அறுவைச் சிகிச்சை தேவையில்லை ஆலோ, இக்னேசியா, மூரியாடிக் ஆசிட், போடோ பைலம், ரூடா, அபிஸ், கல்கேரியா கார்ப், சிலிகா, செபியா, மெர்க்சால் போன்ற ஹோமியோபதி மருந்துகள் மலக்குடல் இறக்கத்திற்கு முழு நிவாரணம் அளிக்கின்றன. கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலக்குடல் இறக்கத்திற்கு போடோபைலம், ரூடா ஆகிய இருமருந்துகள் அற்புதமாக பயன் தருகின்றன.

ஆசனவாய் நோய்களுக்கு ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவங்களில் மிகச் சிறந்த தீர்வுகள் கிடைக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ரத்தப்போக்கை உடனடியாக கட்டுப்படுத்த, கடுமையான வலியிலிருந்து விரைவாக நிவாரணம் கிடைக்க, பின் விளைவுகள் நிறைந்த அறுவைச் சிகிச்சைகளைத் தவிர்க்க ஹோமியோபதி உள்ளிட்ட மாற்றுமருத்துவங்களே மிகவும் சிறந்தவை.

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?



1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

மரு" (Skin Tag) உதிர..

இன்றைய

சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம்

பரவலாக காணப்படுவது "மரு" [Skin

Tag] ஆகும். இதனை சுலபமாக

உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு

அம்மான் பச்சரிசி செடி தேவை...

அம்மான் பச்சரிசியின் இலையினை

ஒடித்தால், பால் தோன்றும். இதனை

மரு மீது பூசவும். மேலும், சில

இலைகளை ஒடித்து மரு முழுதும்

பூசவும். இது போல் தினமும் பூசி வர,

நான்கு ஐந்து தினங்களில் மரு

உதிர்ந்து விடும்.

👉 பகிரவும் .. நாம் அடைந்த இன்பம்

இவ்வையகமும் பெறட்டும் ...

Monday, May 27, 2019

புடலங்காய்

புடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார்கள். அதாவது சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், ஸ்குவாஷ் ஆகிய காய்கறிகள் அனைத்தும் இந்த குடும்பத்துக்குள் தான் வருகிறது. உலகம் முழுவதுமே பயன்படுத்தக் கூடிய காய்கறிக் குடும்பம் தான் இது. தென்மேற்கு ஆசியப் பகுதிகளில் உள்ள நாடுகளில் இருந்து தான் புடலங்காய் கண்டுபிடிக்கப்பட்டது.அதாவது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, ஸ்ரீலங்கா மற்றும் சீனா ஆகுிய நாடுகளில் தான் இந்த வகை காய்கறிகள் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வடிவம்

இந்த வகை காய்கறிகள் யாவும் தங்களுடைய ஒழுங்கமைப்பற்ற வடிவங்களின் மூலமாகத் தான் இந்த பெயர்கள் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த புடலங்காயில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

ஊட்டச்சத்துக்கள்

புடலங்காய்க்கு என்னென்ன ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்று பார்ப்போம்.புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன.இவை எல்லாவற்றையும் விட புடலங்காயில் மிக அதிகமாக நீர்ச்சத்து இருக்கிறது.

நன்மைகள்

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்மலேரியாவை நீக்கும்மஞ்சள் காமாலைக்கு தீர்வு செய்யும்இதய ஆரோக்கியம்மலச்சிக்கல் தீர்க்கும்உடல் எடையை நிர்வகிக்கும் தன்மை கொண்டதுபொடுகைப் போக்கும்உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உறுதியாக வைத்திருக்கும்.தலை முடி வேர்க்கால் சம்பந்தப்பட்ட பிரச்னையைத் தீர்க்கும்.

ரத்த சர்க்கரை

புடலங்காய் டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். புடலங்காயில் மிகக் குறைவான கலோரிகளைக் கொண்டது. குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் பருமன் ஏற்படும். அந்த பருமனைக் குறைக்கும் தன்மை புடலங்காய்க்கு உண்டு.

யானை_நமது_நண்பன்:


'யானை பாகனுக்கு யானையால் தான் சாவு' ன்னு சொல்லுவாங்க. பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல நியாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்த கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிரும். முக்கியமா... மஸ்து நேரத்துல, தலைமை பாகன்... யானை பக்கத்துல இருக்க மாட்டான். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான்.

ஒரு யானைய பழக்கும் போது அந்த யானைய சுத்தி நாலு அல்லது ஐஞ்சு கும்கிய நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு ஆளுக்கு ஒரு குச்சிய கீழ போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கி நிற்கும். அது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்ப திரும்ப செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சிய எடுத்துடாது. ஆனா அது எடுக்கற வரைக்கும் கும்கிகள் விடாது. புது யானைய தந்தங்களால் முட்டி நொறுக்கும். பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம் விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலா தயார் செஞ்ச காட்டு மூங்கில் பிரம்புகள வெச்சிருப்பாங்க. வளைச்சா வட்ட வடிவத்துல ரப்பர் மாதிரி முனைக்கு முனை முட்டும். மனுஷன் அதுல ஒரே ஒரு அடி வாங்குனா செத்துருவான். அதால அடிச்சு வெளுப்பாங்க. பிளிரும்... ரெண்டு கால்ல எழுந்து நிற்கும். ஆனா குச்சிய எடுக்காது. எடுக்குற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் விடமாட்டாங்க. கடைசியா அடி தாங்காம குச்சிய எடுத்து எந்த பாகன் கைல குடுக்குதோ, அவனைதான் அந்த யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். இனி அவனுக்கு மட்டுமே கட்டுப்படும். அவன்தான் வாழ்நாள் முழுவதும் அந்த யானைக்கு தலைமை பாகன். இப்ப யானைக்கு பிடிச்சவன தேர்ந் தெடுத்தாச்சு. இனி யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும்.

அதை பழக்கறதுகுள்ள, தும்பிக்கைய தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைச்சு... மூணு நாளைக்கு உணவு குடுக்க மாட்டாங்க. நாலாவது நாள் தன் பாகனை பார்த்து கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் குடுத்து ருசிகாட்டி, பசிய தூண்டி சொல் பேச்சு கேட்டா.. கரும்பு வெல்லம் கிடைக்கும்னு அதுக்கு உணர வெச்சு, வழிக்கு கொண்டு வருவான். அதுக்குள்ள எத்தனை அடிகள் சித்ரவதைகள் அப்பப்பா. அந்த பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி பண்ணிருவான். என்ன பயமும் பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுடாது.

கட்ட கடைசியா... என்னைக்கு அந்த யானை, பாகனை முழுசும் எந்த எதிர்ப்பும் இல்லாம, தன் முன்னங் கால்கள மடக்கி குடுத்து, அதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்குதோ... அன்னைக்கு பூஜை போட்டு கும்கிகளின் துணையோட கரோல திறப்பாங்க. பாகன் யானை மேல உட்கார்ந்து தான் கரோலை விட்டு வெளிய வரனும். அப்பதான் அது முழுசும் பழக்கப் பட்டதுக்கான அடையாளம். இதெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும். கோவை மாவட்டத்துல 13 பேரை கொன்று, கேரள அரசால் சூட்டிங் ஆர்டர் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய ரௌடி 'மக்னா' யானை, இன்னைக்கு முதுமலை கேம்ப்ல மூர்த்திங்குற பேர்ல அவ்ளோ சாதுவா இருக்கு. அந்தளவுக்கு சித்ரவதை ட்ரெய்னிங்.

மஸ்துன்னா மதம்.. நவம்பர் டூ ஜனவரி யானைகளின் இணைச் சேர்க்கை காலத்தில், நெத்தியில் இருந்து மஸ்து நீர் வடியும். பாகன் மேல் பாசம் உள்ள யானைகள், மஸ்து ஆரம்ப நிலையிலேயே பாகனை எச்சரிக்கை செய்யும். சாதாரணமா ஒற்றை கால் சங்கிலிதான் போடுவாங்க. ஆனா மஸ்து அறிகுறி ஆரம்பமாகும் போதே... ரெட்டை காலுக்கு சங்கிலி போட்ருவாங்க. சாதாரணமா அங்குசத்த பார்த்தா கட்டுப்படும் யானை, மஸ்து நேரத்துல கட்டுப்படாது. அதன் பிறகு யாரும் கிட்ட நெருங்க முடியாது. மூணு மாசமும் அதற்கு ஒரே இடம்தான். அந்த மஸ்து நீரோட வாசம், நீண்ட தூரம் வீசும். வாசம் வந்தா... எந்த காட்டு யானையும் அந்த ஏரியாலயே நிக்காது. மஸ்து நிலையில் இருக்கும் யானை வினோதமா நடந்துக்கும். தும்பிக்கையை தூக்கி தந்தத்து மேல போட்டுக்கும். பயங்கர ரெஸ்ட் லெஸ்ஸா இருக்கும். உர்ர்ர்ர் ன்னு உருமிகிட்டே இருக்கும். எப்பவும் யானை உருமல்ல இருக்கும் போது பக்கத்துல போகக் கூடாது. கோபத்தின் அறிகுறி. பார்வை வெறிச்சு இருக்கும். மண், செடி, கொடிகளை தலைமீது போட்டுக் கொள்ளும். ரொம்ப பசி எடுக்குற வரை சாப்பிடாது. மஸ்து நீரை தும்பிக்கையால தொட்டு தொட்டு ருசி பார்க்கும். அந்த சுவை யானையை மேலும் மேலும் வெறி ஏற்றும். அதனால மஸ்து நேரத்துல நூறு பேர் எதிர்ல நின்னாலும், அபார நியாபக சக்தி கொண்ட யானை, தன்னோட பாகன் மேலான பகைய தீர்த்துக்க... தன்னிலை மறந்து, வெறி கொண்டு முதல்ல அவனதான் தேடும். சிக்குனான்... அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு போட்ரும்.

சின்ன கொசுறு தகவல்:

யானைல ஆறு வகை. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானைகளை வளர்க்கவே முடியாது. நம்பக தன்மை இல்லாதது. எப்பவும் ரெஸ்ட் லெஸ்ஸா.. கொல வெறியோடவே இருக்கும். எந்த நேரம் ஆளை தூக்கும்னு கணிக்கவே முடியாது. கும்கி படத்துல வர்ற கொம்பன் யானை வகைதான் அது.

அதே போல உடம்பில் முதுகெலும்பு தூக்கிக் கொண்டு, ஆள் உட்கார முடியாத உடலமைப்பு கொண்ட யானை களையும், இடுங்கிய கண்களை கொண்ட யானை களையும், நெற்றி துருத்திய யானை களையும் வளர்க்கவே முடியாது. பயங்கர சிடு மூஞ்சி. இது அவ்வளவு ஆபத்தில்லை னாலும் கூட, கையாள்வது சிரமம். வேண்டா வெறுப்பா கட்டளைக்கு அடி பணியும். இதன் மீது துர்நாற்றம் வீசும்.

ஒழுங்கில்லாத தந்தங்கள் அல்லது ஒற்றை தந்தம் கொண்ட யானையை வளர்க்கவே கூடாது. வனத்துறை, வீட்டில் வளர்க்க அனுமதி கொடுக்காத ஒரே வகை இதுதான். காட்டு யானைகளில், இந்த ஜாதி யானைகள்தான் ஆட் கொல்லிகள். மற்ற வகைகள் வெறும் மிரட்டலுடன் விலகி போய்விடும். இது மறைந்திருந்து தாக்கும் அறிவும் குணமும் உடையது. மனுஷன பார்த்துட்டா, அனல் போல கொதிநிலைக்கு போயிடும். பயங்கர ராட்ஷசன். அது உடம்பிலிருந்து அழுகிய மாமிச வாசம் வீசும். மலைவாழ் மக்கள், இந்த யானையின் மீது வீசும் குமட்டல் வாடையை வைத்தே இது வருவதையோ, அருகில் நிற்பதையோ கண்டு பிடித்து விடுவார்கள்.

ஒச்சம் இல்லாத, நிமிர்ந்த தலை, சம அளவுகளில் அகலமாக முன் நோக்கி V வடிவில் பால் போன்ற நிறமுடைய தந்தங்கள், தேன் நிறத்தில் மின்னும் கண்கள், எப்பவும் முகத்தில் ஒரு சாந்தம், அருமையான கீழ்படிதல், வசீகரிக்கும் அழகு கொண்ட உடலமைப்பு, அடர்ந்த முடி கொண்ட வால், அழகான நகங்கள், மடங்காத காதுகள், ஆள் அமரும்படி படுக்கை போன்ற முதுகமைப்பு, நடக்கும் போது அடி மாற்றி வைக்காமல் சரியான அளவுகளில் காலை முழுவதும் தரையில் ஊன்றி நடத்தல், தன் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரித்தல், அன்புக்காக ஏங்கும், மனிதர்களுடன் முக்கியமாக குழந்தை களுடன் நன்கு பழகி, சொல் பேச்சு கேக்கும். இது பட்டத்து யானையோட சாமுத்திரிகா லட்சணம். இது போன்ற குணங்கள், பத்தாயிரத்துல ஒரு யானைக்குதான் அமையும். இதன் உடம்பில் தாமரை பூவின் நறுமணம் வீசும். முழுவதும் இந்த மொத்த குணங்களும் அமையக் கிடைக்கா விட்டாலும், இதில் மூன்றில ஒரு பங்கு குணங்கள் அமையப் பெற்ற யானைகளை தாராளமாக வளர்க்கலாம். மனிதர்களை தாக்காது.

கீழா நெல்லியின் – மருத்துவ பயன்கள்


கீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற செயல்படும் மூலப் பொருள் காண்ப்படுகின்றது. மேலும், தாவரம் முழுவதும் பொட்டாசியம் சத்து மிகுதியாக உள்ளது.

கீழா நெல்லி சிறுநீர் பெருக்கும்; விஷத்தை முறிக்கும்; இரத்த சோகையை குறைக்கும்; இரத்தத்தில் உள்ள நுண் கிருமிகளைக் கொல்லும்; பசி உண்டாக்கும்; காய்ச்சல் போக்கும்.

கீழா நெல்லி சிறு செடி வகையைச் சார்ந்தது. கீழா நெல்லி இலைகள், சிறியவை. கூட்டிலை வடிவமானவை. இரு வரிசையாக அமைந்தவை.

கீழா நெல்லி இலைகளைத் தாங்கிப் பிடிக்கும் முக்கிய நடு நரம்பின் கீழ்ப் பாகம் முழுவதும் கீழ் நோக்கிய பசுமையான சிறு பூக்களும் காய்களும் தொகுப்பாகக் காணப்படும். இதனாலேயே கீழாநெல்லி என்றப் பெயர் பெற்றது.

ஈரமான இடங்கள், வயல் வரப்புகள், பாழ் நிலங்களில் சாதாரணமாக காணப்படுகின்றது. கீழ்க்காய் நெல்லி, கீழ் வாய் நெல்லி ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு.

கீழா நெல்லி முழுத் தாவரத்தையும் பசுமையாக சேகரித்து நன்கு சுத்தம் செய்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சம் பழ அளவு ¼ லிட்டர் வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து குடித்து வர மஞ்சள் காமாலை, நீரழிவு நோய் குணமாகும். இந்தக் காலத்தில் உணவு கட்டுப்பாடு அவசியம்.

குறிப்பு: பசுமையான கீழாநெல்லி தினமும் கிடைக்கப் பெறாதவர்கள் செடியை காய வைத்து தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு ½ டீஸ்பூன் அளவு தேவையான அளவு மோரில் கலக்கி உட் கொண்டு வரலாம்.

கீழா நெல்லி வேரை அரைத்து பசும்பாலுடன் கலந்து, காலை, மாலை 3 நாட்கள் கொடுக்க உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும். விஷக் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை விலக்குவதற்கான மருந்தாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.

ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை நசுக்கி, அதனை இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை, மாலை இரு வேளைகளும் குடிக்க வெள்ளைபடுதல் தீரும்.

வயிற்றுப் புண் குணமாக ஒரு கைப்பிடி அளவு கீழா நெல்லி இலையை அரைத்து, 1 டம்ளர் மோரில் கரைத்து காலையில் குடித்து வரவேண்டும்.

தேவையான அளவு கீழா நெல்லி இலைகளை அரைத்து காயத்தின் மீது வைத்துக் கட்ட காயங்கள் குணமாகும்.

எலிக்கடி விஷம் குணமாக ஒரு பிடி கீழா நெல்லி இலைகளை எடுத்து 100 மிலி நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி, காய்ச்சிய எண்ணெயை கடி வாயில் தடவ வேண்டும். காய்ச்சி வறுத்த இலையை உட் கொள்ள வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் காலை வேளைகளில் வெறும் வயிற்றில் இவ்வாறு சாப்பிட வேண்டும்.

கீழா நெல்லி இலையை, எலுமிச்சம் பழ அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும்.

நாட்டுப் புற மருத்துவ முறையில் கீழா நெல்லி வேரை வேப்பிலையுடன் கலந்து காய வைத்து தூளாக்கி, கருப்பை தொடர்பான பிரச்சனைகள் குணமாகவும் பெண் மலட்டுத் தன்மையை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் வீட்டு விலக்கு நாட்களில் கொடுக்கிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக நமது மருத்துவ முறைகளில் கீழா நெல்லி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் சமீப காலமாக பல வெளி நாடுகளில் கீழா நெல்லி மஞ்சள் காமாலைக்கான (ஹெப்படைடிஸ்) மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் கீழா நெல்லியிலிருந்து தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றன‌.



மேலா நெல்லி

மேலா நெல்லி சிறு செடி வகையைச் சார்ந்தது. மேலா நெல்லியில், இலைக் காம்பில் மலர்களும், காய்களும் மேற்புறமாக அடுக்கப்பட்டிருக்கும். மேலாநெல்லி மருத்துவத்தில் பயன்படுகிறது. தலைவலி, நீரேற்றம், தலைக் குத்தல் போன்றவற்றையும் குணமாக்கும். மலச்சிக்கலைப் போக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாக மேலாநெல்லி முழுச் செடியை ஒரு கைப்பிடி அளவு நசுக்கி 2 டம்ளர் நீரில் இட்டு, ஒரு டம்ளராக காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் 3 நாட்கள் இவ்வாறு செய்து வரவேண்டும்

தோல் நோய்களைக் குணமாக்க நுணா..எனும் மஞ்சணத்தி எனும் மஞ்சள் நீராட்டி...



எல்லா வித நிலங்களிலும் வளரக் கூடிய சிறு மரம்..மா இலை போன்றும், எதிரடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோண சிறு கிளைகளையும் சிறிய வெண்னிற மலர்களையும் முடிச்சுமுடிச்சாக்காய்களையும் கருப்பு நிறப் பழங்களையும்உடைய மரம்..

சுமார் 15 அடிஉயரம் வரை வளரும். மரத்தின் உடபுறம் மஞ்சள் வண்ணமாயிருக்கும். அதனால் மஞ்சணத்தி என்றழைக்கப்பட்டது. பட்டைகள் தடிப்பாக இருக்கும். விதைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

தோல் நோய்களைக் குணமாக்கும்..
வெப்பம் தணிக்கும்..வீக்கம் கரைக்கும்..மாந்தம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளைத் தீர்க்கும். பசியைத் தூண்டும்.

இதன் இலை நடுவிலிறுக்கின்ற ஈர்க்குகளை எடுத்து அதனுடன் துளசி, கரிசிலாங்கண்ணி, மிளகு, சுக்கு முதலியவற்றைச் சேர்த்துக் கியாழமிட்டுவடித்துக் குழந்தைகளின் வயது கேற்றபடி கால் அரை சங்கு அளவாக விட்டுக் கொண்டு வர மாந்த பேதி நிற்கும்.

இதன் இலையை அரைத்துப் புண் சிரங்கு, ரணம் இவற்றிற்கு வைத்துக் கட்ட ஆறும். இதன் இலையை இடுத்துப் பிழிந்து எடுத்துச் சாற்றை இடுப்பு வலிக்குப் பூச நீங்கும்.

நுணா இலைச்சாறு ஒரு பங்கும், உந்தாமணி, நொச்சி, பொடுதலை ஆகிய மூன்றின் சாறும் ஒருபங்கு கலந்து 3,4 வேளை கொடுத்து வரச் சகல மாந்தமும் தீரும்.

நுணாத்தளிர், இலை, பழுப்பு சமன் சேர்த்து 35 கிராம் காட்டுச் சீரகத்துடன்ஒரு தேங்காய் அளவு அரைத்து, ஒரு லிட்டர் நல்லெண்ணையில் மெழுகு பதமுறக் காய்ச்சி எண்ணெயைப் பிரித்து பக்குவப் படுத்தவும். கல்கத்தை சுண்டையளவு காலை, மாலை பாலுடன் கலந்து கொடுக்க வயிற்றுக் கோளாறு தீரும்.

எண்ணெயை வெண்மேகத்தில் தடவ சில மாதங்களில் குணமாகும்.
நுணாக்காயையும், உப்பையும் சமன் அரைத்து அடை தட்டி உலர வைத்துப் புடமிட்டு அரைத்துப் பற்பொடியாக நாளும் பல் துலக்கி வந்தால் பற்கள் தூய்மையாகும் , பல் வலி,பல்லரணை, வீக்கம், குரிதிக் கசிவு ஆகிய நோய்கள் தீரும். சிறந்த பற்பொடியாகும்..

ஒரு கிலோ நுணாப் பட்டையை இடித்து நான்கு படி நீரில் போட்டு அரைப்படியாகச் சுண்டக் காய்ச்சவும். இத்துடன் அரைப்படி எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். இந்தக் கலவையில் ஒரு லிட்டர் எள் நெய் சேர்த்துச் சுண்டக் காயச்சி வடித்துவைக்கவும்.

இந்தத் தைலத்தை வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசி, தலைக்கும் தேய்த்து அரைமணி நேரம் சென்று குளித்து வரவும். உடலில் தோன்றும் கழலைக் கட்டிகள், அரையாப்பு கட்டிகள் மேகப்புண் ஆகியன குணமாகும். முறைசுரம், பித்தகுன்மம், படை நோய்களும் குணமாகும்.

நல்லன விளைக..

நலமெலாம் பெருகுக.

ஏன்_பன்றியை_கறியை #உண்ண_கூடாது_தெரியுமா?



பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது [ 70 ] விதமான நோய்கள் உண்டாகிறது.

😳 பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில்……❗

வட்டப்புழு (Round Worm)

ஊசிப்புழு (Pin Worm)

கொக்கிப்புழு
(Hook Worm)

போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன.

பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது.

இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான்.

இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது.

இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான்.

இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.

சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே...

"#டேனியா_சோலிய‌ம்"
Taenia solium
(pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

இந்த டேனியா சோலியம் ,அதே பகுதியில் (#Ova) தன் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை.
இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன.மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.

இத‌ய‌ம்,

மூளை,

க‌ண்,

நுரையீர‌ல்

என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசை காட்டுகின்ற‌ன.
டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம்

#திரிகூரா_திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி ,இறைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது.

இது பற்றிய ஆய்வு ஒன்று #அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி

😳❗பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.

பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

😳 பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி.❗

பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம்.

கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி.

நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.

#ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் - பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் - பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.

😳❗உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் '#மனைவியரை_மாற்றிக் #கொள்ளும்_பண்பாடு' அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் - மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் '#ஐலேண்ட் என்னும் #மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' #மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.

#மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள் வதாலும் தான் பன்றி தடை செய்யப் பட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இது உண்மையில்லை.

இது தான் காரணம் என்றால்
சாக்கடையில் புரளாமல் பண்ணைகளில் வளர்க்கப் படும் பன்றி அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்பதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.

பொதுவாக உணவுகளில் அதிகமான கொழுப்பு இருக்கும் போது அது மனித உடலுக்குக் கேடு செய்கிறது.
குறிப்பாக இதய நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதய நோயாளிகள் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றைக் கூட உண்ண வேண்டாம் என்கின்றனர்.

😲 100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பு உள்ளது.

😲 100 கிராம் மாட்டு இறைச்சியில்
5 கிராம் கொழுப்பு உள்ளது.

😞 ஆனால் 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பு உள்ளது.

சரி பாதி கொழுப்பு உள்ள பன்றியின் இறைச்சி நிச்சயம் நல்ல உணவாக இருக்க முடியாது.

மேலும் எல்லாக் கால்நடைகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடல் அதிகமாகச் சூடாகும் போது வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிப்பதுடன் உடலிலுள்ள கெட்ட நீரும் இதன் மூலம் வெளியேறுகின்றது.

ஆனால் பன்றிக்கு #வியர்வைச்_சுரப்பி* #கிடையாது. மனிதர்கள் சாதாரணமாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறார்கள். மற்ற கால்நடைகள் இதை விட அதிகமான வெப்பத்தைத் தாங்கிக் கொள்கின்றன. ஆனால் பன்றியினால் 29 டிகிரி வெப்பத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாது. வியர்வைச் சுரப்பிகள் இல்லாததே இதற்குக் காரணம்.

இதனால் தான் 29 டிகிரியை விட வெப்பம் அதிகமாகும் போது #சாக்கடையில் புரண்டு, வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறது. பன்றியின் இறைச்சியில்
மனித னுக்குக் கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. எவ்வளவு உச்ச வெப்பத்திலும் இந்தப் புழுக்கள் சாவதில்லை.

மூளைக் காய்ச்சல்,

பன்றிக் காய்ச்சல்,

மஞ்சள் காய்ச்சல்,

இதய வீக்கம்

உள்ளிட்ட 66 நோய்கள் பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.

Sunday, May 26, 2019

நீர்க்கட்டி பிரச்சனை குணமாக எளிய மருத்துவம் ...



பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங்கிலத்தில் பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது. பல சிறிய நீர் நிரம்பிய கட்டிகள்(Cysts) கர்ப்பப்பையில் உருவாகுவதே பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்ரோம் ஆகும். தற்போது குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த நீர்க்கட்டிகள் உள்ளன. பெண்களின் மாதவிடாயும் நீர்க்கட்டி பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நீர்க்கட்டிக்கு தீர்வு காண்பதற்கு முன்பு மாதவிடாய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

மாதவிடாய்

பெண்களுக்கு கர்ப்பப்பையில் சினை முட்டைகள் உருவாகி அவை ஹார்மொன்களினால் (Harmon) சுழற்சிக்கு(cycle) உட்பட்டு உடைவதே மாதவிடாய் ஆகும்.முதல் மாதவிடாய் பதிமூன்று முதல் பதினெட்டு வயதுள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது. ஹார்மோன்களின் வேறுபாடால் மாதவிடாய் சுழற்சி(Menstrual Cycle) ஏற்படுகிறது. இந்த சுழற்சியினால் கருப்பை புறணி திடமாக தொடங்குகிறது. கருப்பை புறணி திடத்தன்மை வயதிற்கேற்பவும் மாதவிடாய் சுழற்சியின் எந்த நிலையில் இருகிறார் என்பதை பொருத்தும் வேறுபடும். மாதவிடாய் சுழற்சியின் ஆரம்பகட்டத்தில் கருப்பை புறணி திடமடைய தொடங்கும் அதே நேரத்தில் கரு முட்டையும் வளர தொடங்கும். மாதவிடாய் சுழற்சியின் பதினான்காம் நாள் முழு வளர்ச்சியடைந்த முட்டை விடுவிக்கப்படுகிறது. இது ஒவுலேஷன் (Ovulation) எனப்படும். அந்த முட்டை ஆணின் விந்தணுவிற்காக காத்திருக்கும். ஆணின் விந்தணு கருமுட்டையை அடைந்தால் கருவுறுதல் நடைபெறுகிறது. அப்போது கருவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கருப்பை புறணி வழங்குகிறது. ஆணின் விந்தணு கருமுட்டையை அடையாத பட்சத்தில் கருப்பை புறணி இரத்தமாக வெளியேறுவதே மாதவிடாய் ஆகும்.

நீர்க்கட்டியினால் மாதவிடாய் பாதிப்பு

நீர்க்கட்டியினால் மாதவிடாய் சுழற்சியில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பாளி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் உள்ளவர்களுக்கு அன்றோஜென் (Androgen insensitivity syndrome) எனப்படும் ஆண் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. அதனால் அவர்களுக்கு ஒவுலேஷன் எனப்படும் கருமுட்டையை விடுவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில்லை. அதனால் ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை அடைய முடிவதில்லை. அதனால் கருவுறுதல் நடைபெறாது. இந்த காலத்தில் பெரும்பான்மையான குழந்தையின்மை பிரச்சினைக்கு நீர்க் கட்டியே காரணம் ஆகும்.

பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் காரணங்கள்:

பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோமின் முதன்மை காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அசாதாரணமான ஹார்மோன்களின் உற்பத்தியும் பரம்பரை காரணிகளும் முதன்மை காரணிகளாக நம்பப்படுகிறது. மற்றுமொரு காரணியாக ஆன்றோஜென் எனப்படும் ஆண் ஹார்மோன் உற்பத்தி கருதப்படுகிறது. ஆன்றோஜென் ஹார்மோன் பெண் உடலில் உற்பத்தி ஆவது இயல்பு என்றாலும் நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு இது அசாதாரணமாக அதிகமாக உற்பத்தி ஆகிறது. அதிகப்படியான இன்சுலின் ஹார்மோன் ஆன்றோஜென்னின் அளவை அதிகரிக்கிறது. அதனால் மருத்துவர்கள் மேட்போர்மின்(Metformin) எனப்படும் சுகர் மாத்திரைகளை நீர்க்கட்டிக்கு அறிவுறுத்துகிறார்கள்.

நீர்க்கட்டியின் அறிகுறிகள்:

இதன் அறிகுறிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. பெரும்பாலானவர்கள் கூறும் ஒரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி(Irregular Periods). இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண் ஹார்மோனான ஆன்றோஜென் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், மார்பகத்தின் அளவு குறைதல், முடி கொட்டுதல், குரலில் வேறுபாடு, முகப்பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படுகிறது.

இனி நீர்க்கட்டிக்கான இயற்கை மருத்துவத்தை பார்ப்போம்...

நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கழற்சிக்காய், மிளகு, மோர் மருந்து...

நீர்க்கட்டி பிரச்சனைக்கு கழற்சிக்காய் ஓர் அருமையான மருந்து ஆகும். வேறு எந்த மருத்துவத்தையும் எடுக்காமல் இந்த கழற்சிக்காய் மருத்துவத்தை மட்டும் ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் நீர்க்கட்டி பிரச்சனை கண்டிப்பாக குணமாகும். கழற்சிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த கழற்சிக்காய் காயாகவும் கிடைக்கும், சில கடைகளில் பொடியாகவும் கிடைக்கும். கழற்சிக்காய் சிறிய கோலிகுண்டு அளவில் பச்சையாகவும் அல்லது வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கழற்சிக்காயின் உள்ளே முந்திரிபருப்பு போன்று ஒரு பருப்பு இருக்கும். கழற்சிக்காயை உடைத்து இந்த பருப்பை எடுப்பது மிக மிக கடினம். கழற்சிக்காயின் வெளி ஓடு அவ்வளவு கடினத்தன்மை உடையதாகும். பெரிய சுத்தியல் வைத்து அடித்து உடைக்கலாம். கழற்சிக்காயை பக்கவாட்டில் அடித்து உடைத்தால் உள்ளிருக்கும் பருப்பு உடையாமல் எடுக்கலாம்.

காலையும் மாலையும் ஒரு கழற்சிக்காய் பருப்புடன், 3 அல்லது 4 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வேண்டும். இது பச்சை பாகற்காயை மெல்வது போன்று அவ்வளவு கசப்பாக இருக்கும். மிகவும் கசப்பாக இருந்தால் நன்றாக மென்று முடித்ததும் மோர் குடிக்கலாம். முன்பே குறிப்பிட்டது போல் வேறு எந்த மருத்துவத்தையும் பார்க்காமல் ஒரு மாதம் ஒரு நாள் கூட கைவிடாமல் இந்த கழற்சிக்காய் மருந்தை உண்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை முற்றிலும் குணமாகும்...

Friday, May 24, 2019

தேங்காய் துருவி விட்டு மூடியை தூக்கி எறிபவரா நீங்கள்? இனி அப்படி செய்யாதீங்க…நரைமுடிக்கு தடைபோடும் கொட்டாச்சி…!



தேங்காய் பயன்படுத்தாத வீடுகளே இன்று இல்லை. மனைவிக்கு சமையலுக்கு உதவி செய்ய விரும்பும் கணவர்கள் கூட தேங்காய் துருவிக் கொடுப்பதைப் பார்த்திருப்போம். அப்படி தேங்காயை துருவி விட்டு நாம் வீசி எறியும் மூடியில் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது.


தலை முடியில் எண்ணெய் பசை குறைவாக இருப்பதால், இளம் வயதிலே நரை முடி பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அடர்த்தி, பளபளப்பு மற்றும் கருமையான கூந்தல் இவைகளை பெற ஒவ்வொரு பெண்ணுக்கும் பெரிய கனவே இருக்கும். அதற்கு காரணம் பெண்களின் அழகை தீர்மானிக்க கூந்தலும் ஒரு மிக முக்கிய காரணியாக விளங்குகிறது.


இது உண்மையாக இருந்தாலும் கூட அடர்த்தியான நீண்ட கூந்தல் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை. அழகான கூந்தலை பெறுவதற்கு கூந்தல் பராமரிப்புகளை பற்றி பெண்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அழகான கூந்தலை பெறுவதற்கும், அப்படியே பெற்று விட்டாலும் கூட, அவை நீண்ட நாட்களுக்கு நீடித்து நிற்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழம்பி போயுள்ளீர்களா? கவலை கொள்ளாதீர்கள், அதற்கு பல தீர்வுகள் உள்ளது.இயற்கையான முறையில் அழகிய கூந்தலை பெறுவதற்கு நீங்கள் சில வீட்டு சிகிச்சைகளை கையாள வேண்டி வரும்.


உங்கள் கூந்தல் வறண்டு போய் அதிகமாக கொட்டினால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா பெண்களே? ரசயானம் கலந்த விலை உயர்ந்த கூந்தல் பொருட்களின் பின்னால் ஓடினாலும் கூட சில நேரம் அவைகள் பயனளிப்பதில்லை.




அதனால் இயற்கையான சிகிச்சைகளை நாடுவதே சாலச் சிறந்தது. மேலும் இப்படி இயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகளில் இருந்தும் தப்பிக்கலாம் அல்லவா? அதனுடன் சேர்த்து உங்களுக்கு நல்ல பலனையும் அளிக்கும்.


கூந்தல் பிரச்சனைக்கு தீர்வாக பல இயற்கை மூலப்பொருட்கள் உள்ளது. இவைகளை கொண்டு பெண்களுக்கான கூந்தல் பராமரிப்பை கையாளுவது என்பது இயற்கையுடன் கைகோர்த்து நடத்தப்படும் ஒரு எளிய செயல்முறையே.

புதிய முறையில் கூந்தலை வளர்த்து அதனை பராமரிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் அதற்கு ஒரு சிறந்த இயற்கை மூலப்பொருள் உள்ளது.


அப்படி நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் ஒரு பொருள் தான் தேங்காய் பால். தேங்காய் பால் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். சாதரணமாக வீட்டில் கிடைக்க கூடிய பொருளாகிய அதனை கொண்டு செய்யும் சிகிச்சையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
தேங்காய் மூடிகள்
நெல்லிக்காய் ஓடுகள்
தேங்காய் எண்ணெய் -1/2 லிட்டர்
தயாரிக்கும் முறை


முதலில் தேங்காய் மூடியை நெருப்பில் சுட்டு கரியாக்க வேண்டும். பின் அதனை பொடி செய்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து, அதை வெயிலில் சில நாட்கள் வைத்து பயன்படுத்த வேண்டும். இதே முறையில், தேங்காய் ஓடுகளுக்கு பதிலாக, நெல்லிக்காய் ஓடுகளை கூட பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை
தேங்காய் ஓடுகள் கொண்டு தயாரித்த எண்ணெய்யை தலை முடிகளில் தடவி அப்படியே இருக்கலாம் அல்லது எண்ணெய் தேய்த்து சில மணி நேரம் கழித்து குளிக்கலாம்.


நன்மைகள்
இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வந்தால், நரைத்த முடிகள் மறைவதைக் காணலாம். இந்த எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.

காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?


காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.
தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.
பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.
ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.
ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.

லிங்கம்_விளக்கம்



நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரமசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது.

அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.

மேற்சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது அதாவது நிட்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம்.

லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும். லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம்.

சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு எனவும் குறிக்கப்படும்.

கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர்.

இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள #இடைமருதூர் ஆகும்.

இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள்.

நம்மிடமுள்ள மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷ பரிகார தலமாகும். வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும்.

இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர். இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.

முருகனுக்குக் காவடி எடுப்பது ஏன் தெரியுமா?



தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான்.

இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா?

அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து , தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலைச் சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க , காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான்.

முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும் , இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான்.

ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான்.

இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை 'தனக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான்.

அப்போது இடும்பன் வேறற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.

இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார்.

அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.

அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் சொல்கிறார்கள்.

எது எப்படியோ? #ஒவ்வொரு_மனிதனுக்கும் #இன்பமும்_துன்பமும் இரண்டு சுமைகளாக
#சரி_சமமாக_இருக்கிறது.

#மனிதனாகப் பிறந்த #ஒவ்வொருவரும் இந்த #இரண்டு
#சுமைகளையும்தாங்கித்தான்
ஆக வேண்டும்.

#இதற்கு_கடவுள்_பக்தி எனும் #ஆன்மீக_எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் #எளிமையாகச்_சுமக்க #உதவும்
#மையக்_கோலாக_உள்ளது என்பது மட்டும் #உண்மை.

"காக்க காக்க கனகவேல் காக்க!"
"நோக்க நோக்க நொடியில் நோக்க!"
"தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க!"

கந்தனுக்கு அரோகரா !
கடம்பனுக்கு அரோகரா !!
வேலனுக்கு அரோகரா !!!
முருகனுக்கு அரோகரா !!!!

#அடியேன்...
#என்றும்_இறை
உணர்வோடு
💚 ஸ்ரீராமஜயம்💚

பெண்கள்_சாப்பிட_வேண்டிய_கிழங்கு!



கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்குதான். ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டுவிடாமல் இருக்கும்.

அதனால் இக்கிழங்கைக் காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள்.

இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்குகிறார்கள்.

கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.

பெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது. கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக்கூடிய இக்கிழங்கின் 100 கிராம் எடையில், புரதம் 1.2 கிராமும், தாது உப்புகள் 0.8 கிராமும், மாவுச்சத்து 18.4 கிராமும், வைட்டமின் ஏ 434 சர்வதேச அலகும், ரைபோஃபிளவின் 0.07 மி.கிராமும், கால்சியம் 50 மி.கிராமும், இரும்பு 0.6 மி.கிராமும், தயாமின் 0.06 மி.கிராமும், நிகோடினிக் 0.07மி.கிராமும் உள்ளன. கிடைக்கும் கலோரி அளவு 79 ஆகும்.

உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக்கின்றனர்.

ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென்னமெரிக்கா, தெற்கு பஸிபிக், தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தவிர்க்க முடியாத உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது. இலட்சகணக்கான ஆப்பிரிக்கர்களின் பசியைப் போக்கும் முக்கிய உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது.

குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து, இது. காரணம், உடலை வலுவடையச் செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது.

இதில் உள்ள கால்சியச்சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.

பஞ்சகாலத்தில் கை கொடுக்கும் சத்துணவும், மருந்தும் இதுவாகும். அதனால்தான் ஆப்பிரிக்கர்கள் சேனைக்கிழங்கை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையைச் சமாளிக்கிறார்கள்.

‘பி’ குரூப் மாத்திரைகளைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரைக்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம்.

அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் விளையும் சேனைக்கிழங்கு மிகவும் பிரபலமானது. அது சாதாரணமாய் இருபது முதல் நாற்பது கிலோ வரை எடை கொண்டதாய் இருக்கிறது.

தென்னமெரிக்கர்கள் இதைக் கால்நடைகளுக்கும், உணவாகக் கொடுக்கின்றனர். இதனால் அவை ஊட்டத்துடன் நன்கு வளர்கின்றன.

கடவுள் பக்தி என்றால் என்ன?



பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான்.
செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார். செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார்.

விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.
அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார்.
அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார்.
அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர். கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை.
இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று பற்றுவதே ”உண்மையான பக்தி”

இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.

தாய்ப்பால் #சுரப்பு_குறைவது_ஏன்?



பெண்கள் தாய்ப்பால் எனக்கு சரியாக சுரக்கவில்லை எனக் கருதி, தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்திவிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

பிரசவத்தின் போது 500 மி.லி மேலாக ரத்தபோக்கு இருந்திருக்கும். இன்னொன்று, ப்ளாசன்டா காரணமாகவும் குறைவான பால் சுரப்பு இருக்கும். பிரசவத்துக்கு பிறகான 3 நாளைக்கு இப்படி இருக்கலாம்.

பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம், சர்க்கரை நோய், தைராய்டு, மற்ற ஹார்மோன் குறைபாடுகள் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். அரிதான பிரச்சனை இது. மாம்மரி ஹைபோபிளாசியா எனும் தாய்ப்பால் சுரக்கும் திசுவால் சரியாக தாய்ப்பால் சுரக்காமல் போவது. மார்பகத்தில் அறுவை சிகிச்சை ஏதேனும் நடந்து இருந்திருக்கலாம். இது போன்ற பிரச்சனைகள் இருப்போர், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி தாய்ப்பால் சுரக்க மருந்துகளை உட்கொள்ளலாம்.

கருத்தடை மாத்திரைகள் முன்பு சாப்பிட்டு இருந்தாலும், ஹார்மோன் அளவு மாற்றமடைந்து தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். நிப்பிளில் வலி காரணமாக, குறைவாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும். அடிக்கடி தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும். மார்பகத்திலிருந்து பால் லீக் ஆவதில்லை என தாங்களாகவே கருதி குறைவான தாய்ப்பால் சுரப்பு என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

முன்பை விட மார்பகம் கனமாக இல்லை என்று சில பெண்கள் கருதுகின்றனர். இந்த எண்ணமும் ஒரு காரணம். குழந்தைக்கு தாய்ப்பால் அதிகமாக தேவைப்படும் எனத் தாங்களாகவே ஒரு எண்ணத்தைப் போட்டு கொள்கின்றனர். ரெகுரலாக தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தை குறைவான நேரமாக மாற்றிக் கொள்வதாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாகும்.

பெரும்பாலும் தவறான கருத்துகளும் குழப்பங்களுமே குறைவான தாய்ப்பால் சுரப்புக்குக் காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். தாய், மிகவும் குண்டாக இருந்தால் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கலாம். புகைப்பழக்கம் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். கர்ப்பக்காலத்தில் அதிக மனஅழுத்தம் இருந்திருந்தாலும், தாய்ப்பால் சுரப்பு குறைவாகும். இரும்புச்சத்து அளவு தாய்க்கு குறைந்து இருந்தாலும், தாய்ப்பால் சுரப்பு பிரச்சனை இருக்கும். சில மருந்துகளை நீண்ட காலம் தாய் உட்கொண்டு இருந்தாலும், தாய்ப்பால் சுரப்பில் பிரச்சனை இருக்கும்.

குழந்தைக்கு ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும்போது, சரியான நிலையில் நீங்களும் குழந்தையும் இருக்க வேண்டும். தாய்ப்பால் சுரப்புக்காக நீங்கள் மார்பகத்தை அவ்வப்போது அழுத்தி விடுங்கள். மார்பகத்தை அளவாக பம்ப் செய்யுங்கள். தாய்ப்பால் நன்றாக சுரக்கும். தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள். நீங்களும் குழந்தையும் நன்கு தூங்க வேண்டும். தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.

பாபா தன் குருவிடம் பெற்ற அனுபவத்தைக் கூறும்போது



”குரு மகாபலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும், ஆழமாகப் பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார். வெறும் கல், மணி இவையிரண்டுமே மெருகு ஏற்றுவதற்காகத் தேய்க்கப்படலாம். எவ்வளவு தேய்த்தாலும் கல் கல்லாகத்தான் இருக்கும். மணியோ ஒளிவிடும். இரண்டுமே மெருகேற்றுவதற்காக ஒரே செய்முறையில் தேய்க்கப்படலாம். ஆயினும் வெறும் கல், மணி போன்று ஒளிவிட முடியுமா என்ன?

ஆகவே, நான் குரு பாதங்களில் பன்னிரண்டு வருடங்கள் இருந்தேன். நான் வளரும் வரை அவர் என்னை ஒரு குழந்தை போல் பாவித்தார். உணவுக்கும் உடைக்கும் எவ்விதமான பற்றாக்குறையும் இல்லை. அவருடைய இதயம் என் மீது அன்பால் பொங்கி வழிந்தது.

அவர் பக்தியும் பிரேமையுமே உருவானவர். சிஷ்யனிடம் நிஜமான அன்பு கொண்டவர். என் குருவைப் போல குரு கிடைப்பது அரிது. அவரது சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோக்ஷத்தை விவரிக்கவே முடியாது.

ஓ! அந்த அன்பை என்னால் எவ்வாறு விவரிக்க முடியும்! அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். இருவருமே ஆனந்த மயமாகிவிடுவோம். வேறு எதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது.

இரவு பகலாக அவரது முகத்தை உற்றுப்பார்க்கவே விரும்பினேன். எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம் அவஸ்தைப் பட்டது.

அவரைத் தவிர வேறு எதன் மேலும் என்னால் தியானம் செய்ய முடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது.

என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்கு மேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்னை எப்பொழுதும் அலட்சியம் செய்தது இல்லை. கவனிக்காமல் விட்டதும் இல்லை. சங்கடங்களில் அவர் என்னை எப்பொழுதும் ரட்சித்தார்.

சில சமயங்களில் அவருடைய காலடிகளில் இருக்க அனுமதிக்கப்பட்டேன், சில சமயங்களில் கடல் கடந்து இருந்தேன். ஆயினும் எப்பொழுதும் அவருடைய கூடுகை சுகத்தை அனுபவித்தேன். அவர் என்னைக் கிருபையுடன் கவனித்துக்கொண்டார்.

தாய் ஆமை தன் குட்டிகளுக்கு எப்படி அன்பான பார்வையாலேயே உணவூட்டுகிறதோ, அவ்வழி தான் என் குருவினுடையதும். அன்பான பார்வையாலேயே தம் குழந்தைகளைப் பாதுகாத்தார். தாயே, இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் சொல்வதைப் பிரமாணமாக எடுத்துக் கொள்ளுங்கள். குரு என்னுடைய காதுகளில் மந்திரம் ஏதும் ஓதவில்லை.

அப்படியிருக்க, நான் எப்படி உங்களுடைய காதுகளில் எதையும் ஓதமுடியும்?

தாய் ஆமையின் அன்பான கடைக்கண் பார்வையே குட்டி ஆமைகளுக்குத் திருப்தியும் சந்தோக்ஷமும் கொடுக்கும். அம்மா! ஏன் உங்களை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள்? எனக்கு வாஸ்தவமாகவே வேறு எந்த உபதேசமும் செய்யத்தெரியாது.

தாய் ஆமை ஆற்றின் ஒரு கரையில் இருக்கிறது. குட்டிகளோ மறுகரையில் மணற்பரப்பில் இருக்கின்றன. அவை பார்வையாலேயே போஷிக்கப்பட்டு வளர்க்கப் படுகின்றன. ஆகவே, நான் கேட்கிறேன், மந்திரத்துக்காக வியர்த்தமாக எதற்குப்பிடிவாதம் பிடிக்க வேண்டும்.

நீங்கள் இப்பொழுது போய் ஏதாவது ஆகாரம் சாப்பிடுங்கள். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். என்னிடம் உறுதியான விசுவாசம் வைத்தால் ஆன்மீக முன்னேற்றம் தானே கைக்கு எட்டும். நீங்கள் வேறு ஒன்றிலும் நாட்டமில்லாத அன்பை என்னிடம் காட்டுங்கள். நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன். என் குரு எனக்கு வேறு எதையும் கற்றுத் தரவில்லை.

யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை. ஆறு சாஸ்திரங்களை அறிய வேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும். இதுவே குருவின் மகத்தான பெருமை. அவரே பிரம்மாவும் விஷ்ணுவும் மகேஸ்வரனும் ஆவார். குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்துகொண்டவன் மூவுலகங்களிலும் பேறு பெற்றவன் ஆவான்.”

இவ்வாறு பாபா மூதாட்டிக்கு போதனையளித்ததாக சத்சரித்திரத்தில் எழுதப் பட்டிருக்கிறது. குருவின் திருநாமத்தை தியானித்தாலே போதும். அந்த நாமத்தை எப்போதும் நினைத்தாலே போதும், அவனுக்கு அனைத்தும் கிடைத்துவிடும். இதை விட வேறு மந்திர தீட்சை தேவையில்லை என்பதே பாபா கூறியவற்றின் உட்பொருள். இதை உணராமல் நான் மந்திர தீட்சை பெற விரும்பு கிறேன் என்பது மடமை.

பாபா, பாமரர்களும் நன்மை பெறவேண்டும் என விரும்பிய இறைவன். அதனால்தான் அவர் தீட்சையை யாருக்கும் கூறாமல் எப்போதும் என்னை நினைத்துக்கொள் என்றார்.

எப்போதும் அவர் மீது மாறாத நினைவை வைத்திருக்க வேண்டும். வேறு ஒன்றிலும் நாட்டமில்லாத அன்பை தன் மீது வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த அன்பு எப்போது, எப்படி வரும் என்றால், சதாநேரமும் அவரது நாமத்தை உச்சரித்துக் கொண்டு இருக்கும் போதுதான் வரும். அவரது லீலைகளை எப்போதும் தியானித்தால்தான் வரும்.

எப்போதும் சாயி சாயி என்று சொல்வீர்களானால் உங்களை ஏழு கடலுக்கு அப்பாலும் கொண்டு சென்று சேர்ப்பேன் என்றிருக்கிறார். சிலரிடம் ராஜாராம் ராஜாராம் என்று சொல்லுங்கள் என்றிருக்கிறார். இவையெல்லாம் மந்திர தீட்சைகள்தாம். இந்த தீட்சையின் நோக்கம் நமது நல்வாழ்வு.

அவர் பூரண பிரம்மம். அந்த பிரம்மம் நமது நன்மைக்காக மண்ணில் இறங்கிவந்தது.. நம்மோடு இருந்தது, இப்போது இருக்கிறது.. இனி வரும் சந்ததியோடும் இருக்கும் என்ற உறுதியில் நின்றால் மட்டும் போதும். அவர் என்ன நமக்காக சொல்லியிருக்கிறார் என்பதில் சிந்தையைச்செலுத்தினால் மேலான நன்மைகள் கிட்டும்.

எப்படி ஒரு ஊருக்கு நாலு வழியிருக்குமோ அப்படி, நமது ஆன்மாவை கடைத்தேற்றுவதற்கான வழிகள் இவை என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.
உலக வாழ்க்கை வெற்றி, ஆன்ம ஈடேற்றம். இதுவே மந்திர தீட்சையின் நோக்கம்.

"ஆனந்த கோடி பிரம்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகிராஜ ! பரபிரம்மா ! சமர்த்த சன்மார்க்க சத்குருதேவ் !
ஓம் ஸீரீ சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மகராஜ்க்கு ஜெய்! ஜெய்! ஜெய் !!!

வீரபத்திரர்_யார்?



தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தினமும் ஈசனை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு 'வீரபத்திரர்' பற்றி தெரிந்து இருக்கும். என்றாலும் பெரும்பாலானவர்கள் வீரபத்திரர் பற்றியும், அவரது அவதார சிறப்புப் பற்றியும் அறிந்து கொள்ளாமலே உள்ளனர். 'சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர்' என்று ஒரே வரியில் வீரபத்திரர் பற்றி சொல்லி விடலாம்.

ஆனால் அந்த அவதார சிறப்பை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிவனின் 64 வடிவங்களில் ஒரு வடிவான வீரபத்திரர், 'அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர்' தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர். இது பற்றிய விவரம் வருமாறு:-

தீயவர்களையும், தீயச் செயல்களையும் அழிக்க சிவபெருமான் எட்டு தடவை போர்க்கோலம் பூண்டார். இந்த 8 போர்களும் 8 இடங்களில் நடந்தன. அந்த இடங்கள்தான் அட்ட வீரட்ட தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 8 நிகழ்வுகளில் 6 தலங்களில் ஈசனே நேரடியாக சென்று போரிட்டு அசுரர்களை அழித்தார். மீதமுள்ள இரண்டில் ஈசன் நேரடியாக பங்கேற்கவில்லை.

அதற்கு பதில் தன் அருட்பார்வையால் உருவான வீரபத்திரர், பைரவர் ஆகிய இருவரையும் அனுப்பி தட்சன், பிரம்மன் ஆகியோரை வதம் செய்து அருள்புரிந்தார். இதில் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி, உன்னதமான வெற்றியாகக் கருதப்படுகிறது. அந்த வெற்றி வீரவரலாறாக புராணங்களில் இடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் வீரபத்திரரின் அவதாரம் ஒப்பற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது. அது மட்டுமின்றி, வீரபத்திரர் பெற்ற வெற்றி தனித்துவம் கொண்டது. ஏனெனில் அட்ட வீரட்டங்களில் 7 வீரட்ட தலங்களில் நடந்த போர்களில், தேவர்களுக்கு உதவி செய்யவே சிவபெருமான் போர் புரிந்தார். ஆனால் வீரபத்திரரை அனுப்பி ஈசன் நடத்திய போர், தேவர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராகும்.

வீரபத்திரரின் ஆவேசத்தால் எல்லா தேவர்களும் நிலகுலைந்து போனார்கள். வீரபத்திரரால் தேவர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக தண்டிக்கப்பட்ட விதம், வீர பராக்கிரமமாகப் போற்றப்படுகிறது. இந்த பராக்கிரம கதை உங்களுக்குத் தெரிந்ததுதான். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சாவித்திரி நடித்த 'திருவிளையாடல்' படத்தில் இந்த கதை இடம் பெற்றுள்ளது.

பிரம்மனின் மகன் தட்சன். இவனது மகள் தாட்சாயினி. இவளை உலகை ஆளும் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஈசனுக்கு தட்சன் மாமனார் ஆனான், இது தட்சனை கர்வம் கொள்ள வைத்தது. அதோடு நாளடைவில் சிவனை விட தானே உயர்ந்தவன் என்று தட்சன் அகந்தை கொண்டான். ஒரு தடவை அவன் மிக பிரமாண்டமான யாகம் நடத்தினான்.

30 ஆயிரம் மகரிஷிகளைக் கொண்டு நடத்தப்பட்ட அந்த வேள்விக்கு ஈசனைத் தவிர தேவர் உலகத்தில் உள்ள அனைவரையும் அவன் அழைத்தான். சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அழைக்காமல் இந்த யாகத்தை நடத்தினான். திருமால், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அந்த யாகத்தில் பங்கேற்றனர்.

விதி வசமோ... அல்லது தந்தை பாசமோ தெரிய வில்லை. தட்சனின் மகளான தாட்சாயினியும், 'என் தந்தை நடத்தும் யாகத்தை காணச் செல்கிறேன். அனுமதி தாருங்கள்' என்று ஈசனிடம் வேண்டினாள். ஈசன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தாட்சாயினி கேட்கவில்லை. 'சிவத்தை விட சக்திதான் பெரிது' என்று சொல்லி விட்டு தட்சன் நடத்தும் யாகப் பகுதிக்கு வந்தாள்.

அங்கு வந்த பிறகு தான், ஈசனுக்கு இழைக்கப்படும் அவமானங்களை உணர்ந்தாள். தந்தை தட்சனை திருத்த அவள் செய்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. கணவர் பேச்சை கேட்காமல் வந்தததற்கு தக்க தண்டனை கிடைத்து விட்டதாக வருத்தம் அடைந்த தாட்சாயினி, அங்கிருந்த யாகக் குண்டத்தில் பாய்ந்து உயிரைப் போக்கிக் கொண்டாள்.

தாட்சாயினி மறைவு செய்தி கேட்டதும் சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். தட்சனையும், அவன் நடந்தும் யாகத்தையும் அழிக்க முடிவு செய்தார். அது மட்டுமின்றி நீதி, நெறிதவறி தட்சனுக்கு துணைபோன எல்லா தேவர்களையும் தண்டிக்கவும் அவர் முடிவு செய்தார். இதற்கு தானே நேரில் சென்று போரிடுவதற்கு பதில், தன் பிரதிநிதியை அனுப்ப தீர்மானித்தார்.

அதன்படி அவரது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெடித்துக் கிளம்பின. அதில் இருந்து வீரபத்திரர் தோன்றினார். சிவபெருமான் போலவே மூன்று கண்கள், அக்னி சடை, 8 கைகள், அந்த கைகளில் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி, நாகமாலை அணிந்து வீரபத்திரர் வெளிப்பட்டிருந்தார்.

தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற, சிவ நிந்தனை செய்த தட்சனின் யாகம் நடந்த இடத்துக்கு உடனடியாக வீரபத்திரர் விரைந்தார். முதலில் அவர் தட்சனின் தலையை வெட்டி வீசினார். இதை கண்டதும் யாக புருஷன், மான் வடிவம் கொண்டு ஓடினார். அவரையும் வீரபத்திரர் வதம் செய்தார். பிரம்மன் தலைகளும் வெட்டப்பட்டன.

தோளில் வெட்டுப்பட்ட இந்திரன், குயிலாக மாறி மறைந்தான். கையில் வெட்டுபட்ட அக்னி தேவன் கிளியாக மாறி பறந்தான். சூரியனின் பற்கள் உடைந்தன. சரஸ்வதி மூக்கு அறுக்கப்பட்டது. முப்பத்து முக்கோடி தேவர்களும் சிதறி ஓட யாகசாலை அழிக்கப்பட்டது. அப்போது திருமால், வீரப்பத்திரரை எதிர்த்தார்.

அப்போது திருமாலின் சக்கரத்தை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் உள்ள ஒரு முகம் கவ்விக் கொண்டது. இதன் மூலம் தட்சனோடு சேர்ந்திருந்த எல்லா தேவர்களும் தண்டிக்கப்பட்டனர். வீரபத்திரரின் ஆவேசத்துக்கு முன்பு இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிந்தனர்.

தாங்கள் செய்த தவறை மன்னித்து பொறுத்து அருளும் படி வேண்டினார்கள். இதையடுத்து அங்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தோன்றினார். அவர் அருளால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர். தலை இழந்த தட்சனுக்கு ஆட்டுத்தலை பொருத்தப்பட்டது.

அப்போது தட்சன், யாகசாலை இருந்த இடத்தில் தோன்றிய ஈசன், அங்கு இருந்தபடியே மக்கள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இது தான் வீரபத்திரரின் அவதார கதை.

#வீரபத்திரரை #வழிபட்டால்
#வீரம்_விவேகம், #வெற்றிகள் #தேடி_வரும்.

ஆமணக்கு எண்ணெய்யில் உள்ள அற்புத பயன்கள்....!



ஆமணக்கெண்ணெய் பொதுவாக வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப் படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் வாயுத் தொல்லைகளை விலக்க உதவுகின்றது.

ஆமணக்கு எண்ணெய், இலைகள், வேர், விதை, காய்கள் அத்தனையும் மருந்தாகப் பயன் தருகின்றன.

உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும். ஆமணக்கு இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பான மருந்து. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும்; வீக்கம் வடியும்.

பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரியாகப் பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் இடலாம்.

கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் 2 பங்கு, தேன் ஒரு பங்கு சேர்த்து உட்கொள்ள கொடுக்க வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும்.

மார்பகக் காம்புகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் புண்கள் குணமாக ஆமணக்கு எண்ணெயைத் தூய்மையான, மெல்லிய பருத்தித் துணியில் ஊறவைத்து, அதை பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட்டுவர வேண்டும்.

ஆமணக்கு இலைகள எடுத்து சின்னதா நறுக்கி, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, சூட்டுடன் வலியுள்ள முழங்கால்லயும் (arthritis), வீக்கமுள்ள இடத்திலயும் ஒத்தடமிடலாம்.

மலச்சிக்கல், பெண்களுக்கு மாதவிடாய் காலத்துல வர்ற அடிவயிறு வலி... இதுமாதிரி பிரச்சனைக்கெல்லாம் அடிவயிற்றுல விளக்கெண்ணய தடவி, அதன்மேல் வதக்கிய ஆமணக்கு இலைகளை வைத்து கட்டி வந்தா நல்ல பலன் கிடைக்கும்.

ஆமணக்கு இலையப் போட்டு காய்ச்சிய வெந்நீர வச்சு மார்பகங்கள்ல ஒத்தடம் தந்து, ஆமணக்கு இலைய வதக்கி மார்பில் கட்டிவர, பெண்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.

நவகிரகங்களில் அதிக வலுவான கிரகம் எது என்று பார்த்தால் ராகு பகவானே ஆவார்.

நவகிரகங்களில் அதிக வலுவான கிரகம் எது என்று பார்த்தால் ராகு பகவானே ஆவார்... அதே போல் ஒரு ஜாதகருக்கு 9 தசைகளிலும் மிகவும் மறக்க முடியாத ஒரு தசை இருக்க முடியும் என்றால் அதுவும் ராகு தசை தான்...ராகு போக காரகன்..இயற்கை பாப கிரகம்..ஆனால் உங்களுக்கு யோகம் தரும் அமைப்பில் இருந்து விட்டால் உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்து அழகு பார்ப்பார்..கெடுக்க வேண்டிய அமைப்பில் இருந்தால் நடு தெருவுக்கு கொண்டு வரவும் தயங்க மாட்டார்..
ராகு இல்லாததை இருப்பது போல் காட்டுவதில் வல்லவர்..கெடுக்கும் அமைப்பில் இருக்கும் போது தன் தசா புத்தி காலங்களில் ஜாதகரை பேராசைகாரனாக்கி பெரு நட்டத்தை கொடுப்பார்.அதே சமயம் நன்மை தரும் அமைப்பில் இருந்தால் நிச்சயம் முதலில் சில சிக்கல்கள் கொடுத்து பின்பு உச்சத்துக்கே கொண்டு சென்று அழகு பார்ப்பார்..உங்களுக்கு ராகு தசை நடக்கும் போது அதன் அமைப்பு ஜாதக ரீதியாக எப்படி உள்ளது என்பதை பார்த்து ஆராய்ந்து நடந்து கொள்ளுங்கள்..ஏனெனில் மனிதன் அதிக தவறுகளை செய்ய கூடிய காலம் ராகு தசையில் தான்..தவறை உணர்ந்து ஆன்மிகம் பக்கம் செல்வது அதன் பின் வரும் குரு தசையில்... நன்றி

வாந்தி எச்சரிக்கை..



16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர்.

அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது....

எங்கே வாந்தி எடுத்தால் மெத்தை வீணாகி விடுமோ என்று தம்பியுடைய வாயை தன் கையால் பொத்தி குளியலறைக்கு கொண்டு சென்றுள்ளார்...

வாந்தி எடுத்ததும் மூச்சு திணறல் எடுத்துள்ளது ....பிறகு அவனுடைய உயிர் பிரிந்து விட்டது...

மருத்துவ பரிசோதனை செய்ததில்...தம்பியுடைய வாயை பொத்தியதால்...வாந்தியானது...நேரடியாக சுவாச குழாய்க்குள் சென்று மூச்சு விடும்பாதையை அடைத்ததுவிட்டது...அதனால் மரணித்துவிட்டான் அச்சிறுவன்.

அதனால சின்ன புள்ளைங்களுக்கு வாந்தி வந்தா உடனேஎடுக்கவையுங்க...இடம்,துணி,மெத்தை,இருக்கைகள் வீணாகி விடும் என்று...வாயை பொத்தி கொண்டு நீண்ட நேரம் செல்ல வேண்டாம்..

இடம் ,பொருள் அசுத்தமானால் சுத்தம் செய்திடலாம்...குழந்தையின் உயிர் போனால் .....?

#இதை_மற்றவர்களுக்கும்_பகிருங்கள்......

சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது

இதை குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள், இது மிகவும் முக்கியமானது மற்றும் சிலர் வாழ்க்கையை காப்பாற்ற முடியும்.

ஒரு ஜப்பானிய மருத்துவர் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.

1 மைக்கிரேன்

2 உயர் இரத்த அழுத்தம்

3 குறைந்த இரத்த அழுத்தம்

4 மூட்டு வலி

5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்

6 கால்-கை வலிப்பு

7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்

8 .இருமல்

9 .உடல் அசௌகரியம்

10. கொலு வலி

11 ஆஸ்துமா

12 ஹூப்பிங் இருமல்

13 .நரம்புகள் தடுப்பு

14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான
நோய்கள்

15.வயிற்று பிரச்சினைகள்

16 .குறைந்த பசியின்மை

17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

18 .தலைவலி

* சுடு நீர் பயன்படுத்துவது எப்படி? *

காலையில் எழுந்திருந்து, வயிற்று வயிற்றுக்குள் சுமார் 2 தம்ளர் சூடான நீரில் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர் குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள்.

*குறிப்பு:*
* தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும் சாப்பிட வேண்டாம்.

சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்: -

30 நாட்களில் நீரிழிவு நோய்

30 நாட்களில் இரத்த அழுத்தம்

10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்

9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்

6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு

10 நாட்களில் ஏராளமான பசி

10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்

✔ மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்

15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்

30 நாட்களில் இதய நோய்கள்

3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்

✔ 4 மாதங்களில் கொழுப்பு

✔ கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம் தொடர்ந்து 9 மாதங்களில்

4 மாதங்களில் ஆஸ்துமா

* குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!!
குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

* குளிர் நீர் 4 இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்.

* இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது. கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீரில் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.

* குளிர் நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.

* தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்*

நீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும்.

100 வயது வரை வாழ்வதற்கான பதினைந்து குறிப்புகள் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.



1.மகிழம்பூக்களை நீரில் கொதிக்கவைத்து, பாலில் கலந்து சாப்பிட, தளர்ந்த உடலும், தசைகள் வலுவாகி, உடல் முறுக்கேறி, பொலிவாகும். உடலில் தெம்பும், முகத்தில் தெளிவும் உண்டாகும்.

2.வெந்தயம்,ஓமம்,கருஞ்சீரகம் தனித்தனியே தூளாக்கி, ஒரு தேக்கரண்டி அளவில் சேர்த்து, நீரில் கொதிக்கவைத்து சாப்பிட, உடலில் உள்ள கெட்டவை எல்லாம், வியர்வை,சிறுநீர் மற்றும் கழிவுகள் மூலம் வெளியேறும். மேலும், சருமம் பொலிவாகும், கண்பார்வை, இதயம் சீராகும். உடல் சோர்வின்றி இயங்கும். 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட, வியாதிகள் தீரும்.

3.கடுக்காய்த்தோல், நெல்லிக்காய் வற்றல் மற்றும் பச்சரிசியுடன் மஞ்சள் பொடி சிறிது மிளகுத்தூள் கலந்து, தண்ணீரில் ஊறவைத்து அரைத்தபின், இந்தக்கலவையை உடம்பில் தடவி குளித்துவர, அடிக்கடி வியர்வையடைவது விலகி, வேர்க்குருவும் அணுகாது.

4.மலச்சிக்கலால் காலை வேளைகளில் அவதிப்படுவோர், கடுக்காய்த் தோலை அல்லது கடுக்காய் தூளை, சிறிது வெந்நீரில் கலக்கி குடிக்க, மலம் இளகி, உடனே வெளியேறும்.

5.உடலின் வியாதி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, முளை கட்டிய தானியங்கள், கடலைப்பருப்பு சுண்டல், எள் அடை, கீரை கடைசல் உணவில் அடிக்கடி சேர்த்துவர, உடல் வளம் தரும் துத்தநாகம், மக்னீசிய உள்ளிட்ட தாதுக்கள் உடலில் சரிவிகிதத்தில் கலந்து, உடல்நலம் காக்கும்.

6.ஆலைச்சர்க்கரை, அயோடின் சேர்த்த உப்பை அறவே தவிர்க்க, உடல் நலம் சீராகும். பனை வெல்லம், அல்லது தேன் கலந்து பானங்கள் பருகலாம், பனங்கற்கண்டும், உகந்ததேயாகும். மனிதனின் கண் பார்வைக்கு தொடர்புடையது உப்பு, எனவே, உடலுக்கு நலம்பயக்கும் பாறை உப்பு என அழைக்கப்படும் இந்துப்பை உணவில் பயன்படுத்திவர, கண் பார்வை இயல்பாகும்.

7.வீடுகளில் கொசுக்களை விரட்ட, வேப்பிலை,நொச்சியிலை,துளசி இலைகளை காயவைத்து, ஒரு சட்டியில் வைத்து நெருப்பு மூட்டி, படுக்கையறையில் மாலை வேளைகளில் வைத்துவர, கொசுக்கள் ஒழியும். இத்துடன் சிறிது சந்தனம் சேர்க்க, நல்ல நறுமணம் கமழும்.

8.கோடைக்காலங்களில் வெளியில் செல்ல நேர்கையில், வெயிலில், அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்து கண்ட பானங்களைப்பருகி உடல் நலம் கெடுவதைத் தவிர்க்க, வீட்டிலிருந்து வெளியில் புறப்படுமுன், ஒரு டம்ளர் நன்கு கடைந்த மோரில், சிறிது இந்துப்பு இட்டு, குடித்துவிட்டு வெளியில் கிளம்ப, கடும் வெயிலில் அலைந்தாலும், உடலுக்கு தாகம் ஏற்படாது, உடல் அலுப்பும் தோன்றாது,

9.கண்களின் வீக்கம்,கண் எரிச்சல், சூடு, மற்றும் மங்கிய கண்பார்வைக்குறைபாடுகள் நீங்க, நந்தியாவட்டை மலர்களை இரவில் படுக்குமுன், கண்களில் சிறு பருத்தித்துணியால் நெகிழ்வாகக்கட்டிக்கொண்டு உறங்கிவர, கண்களின் வீக்கம், பார்வைக்குறைபாடு விரைவில் சரியாகும்.

10.தினமும் காலை வேளைகளில் நடை பயிற்சி செய்வது, உடலுக்கு பலம் சேர்க்கும், உடலின் நச்சுக்கள், வியர்வை வழியே வெளியேறும். பல்லாயிரம் ரூபாய்கள் செலவு செய்து வீட்டில் வாங்கிவைத்திருக்கும் நடைப்பயிற்சி இயந்திரங்கள் மூலம் செயற்கை நடைப்பயிற்சி செய்வதைவிட, பைசா செலவின்றி, வெளியில், சுத்தமான காற்றில் காலாற நடந்தபடியே, செய்யும் நடைப்பயிற்சியே மேலானது.

உடலுக்கு அதிகம் நலமும் தருவது. நடைப்பயிற்சி இயந்திரங்கள் வெறுமனே, உடலின் கலோரிகளை மட்டுமே குறைக்க முயலும், உடலின் மொத்த இயக்கத்தையும் சீராக்கி, உடல் சமநிலையைப் பேண, காலாற நடந்து மேற்கொள்ளும் நடைப்பயிற்சியே, துணைபுரியும்.🥀🍂

11.மாதமொருமுறை ஆயில் புல்லிங் எனும் "நல்லெண்ணை" மூலம் காலைவேளைகளில், வாய் கொப்புளித்துவர, சுவாசபாதிப்புகள்,வாய்ப்புண்கள், வாய் துர்நாற்றம் மற்றும் தொண்டை சதை அழற்சி வியாதிகள் யாவும் தீரும். உடலுக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சி தரும்.மேலும், நாட்டுச்செக்கு எண்ணை உபயோகிக்க, நலன்கள் அதிகமாகும்.

12.வாரமொருமுறை, மொபைல்,தொலைகாட்சி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு விடுமுறை அளித்துவிட்டு, குடும்ப உறுப்பினர்களுடன், வீடுகளை தூய்மைசெய்தல், உற்சாகமாக உரையாடுதல், மனைவிக்கு சமையலில் உதவி செய்தல், நம் கைப்பட, குழந்தைகளின் துணிகளை சலவை செய்தல், மாலையில் அருகில் உள்ள இயற்கை அமைதி தவழும் இடங்களுக்கு [ அவை அதிகம் பக்தர்கள் வராத ஒரு கோவிலாகவோ அல்லது ஆளரவமற்ற ஒரு கிராமத்து சாலையாகக்கூட இருக்கலாம் ] ஒரு சிறிய வெளிப்புற உலா சென்றுவர, மனமும் உடலும் ஒருங்கே உற்சாகமாகும்.

அன்றைய தினம், சாட் வகை நொறுக்குத்தீனிகள் தவிர்த்து, வீட்டில் முளைகட்டிய தானியங்களால் செய்த சுண்டலோ, வடை உள்ளிட்ட சிறுதானியங்களில் செய்த தின்பண்டங்களை எடுத்து சென்றோ சாப்பிடலாம்.

13.குடும்ப உறுப்பினர் குரலுக்கு மதிப்பு கொடுங்கள், அவர்கள் கூறுவதை பொறுமையாக முழுவதும் காது கொடுத்து கேளுங்கள், சமயங்களில் உங்களிடம் கிடைக்கும் தீர்வைவிட, தகவல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணமே, அவர்களுக்கு அதிக விருப்பமாக இருக்கக்கூடும். எனவே, அவர்களின் உணர்வுகளை மதித்து நடந்து, அவர்களின் தன்னம்பிக்கை வளர, நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள் என்று அவர்கள் உத்வேகம் கொள்வர்.

14.உடற்பயிற்சி, யோகா என்று பலவகைகளில் உடல் நலன் சீராக்க முயல்வதைவிட, தினமும் காலை வேளைகளில், பத்து பதினைந்து முறை "தோப்புக்கரணம்" போட்டுவர, அகமும் புறமும் பொலிவாகும். உடல் நலமும் சீராகி, மனதில் நச்சு எண்ணங்கள் விலகி, எண்ணங்களில் வலிமையையும், எடுத்த செயல்களில் விரைந்து முடிக்க ஆற்றலும் உண்டாகும்.

15.பேருந்து, இரயில்களில் பயணம் செய்யும்போது, வயதானோர், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, எழுந்து இடம் கொடுங்கள்.வாகனங்களில் செல்லும்போது, வயதானோர் நடந்துசெல்கையில் அவர்களை ஏற்றிச்சென்று, வாய்ப்பிருந்தால் அவர்கள் சேருமிடம் கொண்டுசேருங்கள்.🌺🌸

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்




சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.



மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.


கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.


சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.


பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.

வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.


சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

“ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து”


தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.

இவ்வாறென அனைத்து நோய்களையும் தீர்க்க சீரகம் ஒன்றே போதுமென்றால் இவற்றை தீர்க்க நீங்கள் வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய அவசியமே இல்லை.அப்படியென்றால் உங்கள் பணமும் மிச்சமாகும்

வலிமையுடன் வாழ 40 குறிப்புகள்.

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.

30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

மோருடன் எதை கலந்து குடித்தால் எந்த நோய் குணமாகும், தெரியுமா உங்களுக்கு?



* கறிவேப்பிலை இலைகளை மோர் சேர்த்து அருந்தி வர உடல் எடை குறையும்.

* மோர் மற்றும் கேரட் போட்டு அரைத்து குடித்து வர உடல் இளைக்கும்.

* ஓமத்தை மோரில் கலந்து குடிக்க அஜீரணம் குறையும்.

* கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து மோருடன் கலந்து சாப்பிட்டால் எந்த விஷக் கடியாக இருந்தாலும் விஷம் இறங்கும்.

* புளியாரைக் கீரை, வெந்தயம் அரைத்து மோரில் சாப்பிட்டால் வாய்ப்புண் குறையும்.

* பெருங்காயத்தை பொரித்து தூள் செய்து அரை தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

* 200 மி. லி மோரில், வறுத்த சீரகம் மற்றும் சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

* சீரகபொடியை மோரில் கலந்து குடிக்க வயிற்று கடுப்பு குறையும்.

* முள்ளங்கி சாறுடன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி வர வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் புள்ளி குறையும்.

* கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட மஞ்சள் காலை குறையும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் சேர்த்திக்கொள்ள பித்த சூடு தணியும்.

* வில்வ இலைகளை பொடி செய்து,பசு மோரில் ஒரு ஸ்பூன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்திகரிக்கபட்டு, தோல் நோய் குறையும்.

* மோரில் சிறிதளவு வெங்காயச்சாறு விட்டு குடிக்க இருமல் குறையும்.

Thursday, May 23, 2019

பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள் ...



1.கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.

2.கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில்,எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும் .

3.பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்,ஆனால்
பூரியில் இதற்க்கு நேர் எதிராக நடக்கும்.

4.இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.

5.இந்த கோயிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ மறப்பதில்லை .

6.இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும்.
ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை.
மீந்து போய் வீணானதும் இல்லை.

7.இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம்.

8.சிங்கத் துவாராவின் முதல் படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது .
ஆனால் ...
அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும் . இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.

வெந்தயம்_மருத்துவ_பயன்கள்:-

#

இந்த வெந்தயம் பலவகையான உடல்நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வாக உள்ளது அது என்னென்ன என்பதை இங்கு அறியலாம்.

#இதயஆரோக்கியம்:

வெந்தயம் அடிக்கடி உட்கொண்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுத்து, பிற்காலத்தில் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

#தோல்நோய்கள்:

நமது தோல்களில் கிருமி தொற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் சில பூச்சி கடிகளால் கொப்பளங்கள் புண்கள் போன்றவை ஏற்படுகின்றன. இதற்கு வெந்தயத்தை உலர்வாக அரைத்து தூளாக்கி அதனுடன் கஸ்தூரி மஞ்சளை கலந்து இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, அரிப்புகள் புண்கள் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர நோய் குணமாகும்.

#செரிமானகோளாறுகள்:

ஒரு மனிதனுக்கு செரிமான உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருந்தாலே அவன் எந்த நோய்களும் அண்டாமல் நலமாக இருக்க முடியும். உண்கின்ற உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு வெந்தயத்தை நன்றாக அரைத்து விழுதாக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

#நீரிழிவு:

கணையத்தில் இன்சுலின் என்கிற சுரப்பில் கோளாறு ஏற்படுவதால் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. வெந்தயம் மற்றும் வெந்தய கீரைகளை அடிக்கடி உண்ண நீரழிவு ஏற்படாமல் தடுக்கும் ஏற்கனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதன் தீவிரத்தன்மையை கட்டுக்குள் கொண்டு வரும்.

#சிறுநீரகம்:

ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருட்களை வெளியேற்றும் செயல்களை செய்வது சிறுநீரகங்கள். வெந்தயம் ஊற வாய்த்த நீரையோ அல்லது வெந்தையதை வேகவைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும். மூத்திரக்கடுப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.

#வயிற்றுபுண்கள்:

ஜுரம் மற்றும் நெடுநாட்கள் மருத்துவமனைகளில் இருந்தவர்கள் பல மருந்துகளை உட்கொண்டு அவர்களின் உணவுக்குழாய் மற்றும் ஜீரண உறுப்புகளில் புண்கள் ஏற்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் அரசி கஞ்சியில் சிறிது வேகவைத்த வெந்தயத்தை கலந்து உட்கொண்டு வர உடல் பலம் பெரும். வயிற்று புண்களும் குணமாகும்.

#தலைமுடி:

தலைமுடி உச்சந்தலையை வெளிப்புற சீதோஷணங்களிலிருந்து காக்கிறது. ஆனால் இன்று பலருக்கும் தலைமுடி உதிர்வது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. நீரில் ஊறிய சிறிது வெந்தயத்தை பசுந்தயிரில் கலந்து அரைத்து, தலையில் நன்றாக தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரத்திற்கு பின்பு தலைக்கு ஊற்றிக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர முடி உதிர்வு பிரச்சனைகளை நீக்கும். முடி மென்மையாகும்.

#தாய்ப்பால்சுரப்பு:

புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு அந்த பெண்கள் வெந்தயத்தை தினமும் இருவேளை உணவுகளில் உட்கொண்டு வர தாய்ப்பால் நன்கு சுரக்கும். அந்த தாய்ப்பாலை அருந்தும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டாகும்.

#புற்றுநோய்_தடுப்பு:

வெந்தயத்தில் உள்ள பல இயற்கை வேதி பொருட்கள் புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுக்க வல்லது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இதை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள புற்று நோயின் தீவிர தன்மை குறையும்.

#மாதவிடாய்_பிரச்சனைகள்:

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் இந்த மாதவிடாய் இயற்கையானதே. ஆனால் சில பெண்களுக்கு மட்டும் இது வலி நிறைந்ததாக மாறி விடுகிறது. இப்படியான வலி நிறைந்த காலத்தில் இரவு நேரத்தில் சிறிது வெந்தயங்களை அரைத்து சாப்பிட்டு சிறிது நீரை அருந்திவர குணம் கிடைக்கும்.

கைப்பேசியை_எப்படி_பயன்படுத்த #வேண்டும்...? #தெரிந்து_கொள்வோமே!



1. அலைபேசியை இடதுபுற காதில் வைத்து பேசுவது தான் நல்லது.

2. சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால் அப்படியே எடுத்து பேசுதல் கூடாது.
அதுவே சைனா மொபைல் என்றால் ஆபத்து அருகில்.

3. மொபைலில் கடைசி ஒரு புள்ளி சார்ஜ் இருக்கும் போது பேசுவது கூடாது. ஏனென்றால் அப்போதுதான் ரேடியேசன் அதிகம் இருக்கும். கதிர்வீச்சு பாதிப்பு மிகுதியாக இருக்கும்.

4. ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்து விட்டு மொபைலில் பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்தி விடும்.

5. மொபைலில் அழைப்பு வரும் போது தான்ரேடியேஷனும் இருக்கும்.ரிங் ஒசையை விட வைப்ரேட் மோடில் வைத்து இருப்பது அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தும். சைலன்ட் மோடும் ஆபத்து விளைக்க கூடியது தான்.

6. சட்டைப் பையில் வைப்பதை விட பேன்ட் பாக்கெட்டில் மொபைலை வைத்துக் கொள்ள வேண்டும்.

7. நீங்கள் உபயோகிக்கும் மொபைலில் பேசும் போது காதின் பக்கம் சூடாகிக் கொண்டே போனால் அந்த மொபைலை கை கழுவி விடுதல் நல்லது.

8. ஸ்மார்ட் மொபைலில் ரேடியேஷன் குறைப்பதற்கான கருவிகள் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும்.

9. குழந்தைகளிடம் மொபைலை கொடுத்து பேச வைத்தல். அதனை பார்த்து ரசித்தல் கூடவே கூடாது.

10. எந்த நேரமும் மொபைலில் பேசி கொண்டே இருப்பதும் நரம்பு மண்டலத்தை தாக்கும். தலைவலி அடிக்கடி வரும் இதுவே அதன் அறிகுறி.

11. பெண்கள் மொபைலை தனியாக ஒரு உறையில் வைத்து கைப்பையில் வைத்துக் கொள்ளுதல் நல்லது.

12. பெண்கள், மாணவியர் தங்கள் மொபைல் எண்களை அறிமுகமில்லாதவர்களிடம் கொடுக்க கூடாது.

13.உயர்கல்வி பயிலும் மாணவியர் முகநூல், வாட்ஸ் அப்பில் உறுப்பினராகி கல்வியையும், வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்ள கூடாது.

13. பொதுவாக பெயருடன் வரும் அழைப்புகளை மட்டுமே பேசுதல் பெண்களுக்கு நல்லது. அறிமுகம் இல்லாத அழைப்புகள், மிஸ்டு கால்களை எடுத்துப் பேசாமல் இருப்பது நல்லது.

14. வாடகை பெரிதாக கிடைக்கும் என எண்ணி நமது வீட்டு மாடிகளில் டவர் அமைக்க அனுமதிக்க கூடாது.
குறிப்பிட்ட சுற்றளவில் ரேடியேஷன் அதிகமாக இருக்கும்.டவர் அமைந்துள்ள வீட்டின் கீழேயும் ரேடியேஷன் அதிகமாக இருக்கும்.கேன்சர் போன்ற நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.

15. வண்டி ஓட்டுனர் கண்டிப்பாக பேச கூடாது , வண்டிய நிறுத்திவிட்டு பேசலாம்

பலி பீடத்தை தொட்டு வணங்கினால் தோஷம் பிடிக்கும் பலி பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்


எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும்.

பொதுவாக பலி பீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும்.

திருப்பதி போன்ற ஆலயங்களில் பலி பீடத்துக்கும் தங்க கவசம் போர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலி பீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.

சரி.... பலி பீடம் என்றால் என்ன?

பலி பீடம் என்றதும் 90 சதவீதம் பேர் மனதில் கோழி, ஆடு போன்றவைகளை பலி கொடுக்கும் இடமா என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் வேத காலத்தில் நம் முன்னோர்கள் வேள்வித்தூணாகவும், விலங்குகளை பலியிடும் மேடையாகவும் இருந்தவை தான் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக உருமாறி இன்று கொடி மரமாகவும், பலி பீடமாகவும் வடிவெடுத்துள்ளன என்று சொல்கிறார்கள். எனவே தான் பலி கொடுக்கும் இடம் பலி பீடம் என்ற எண்ணம் பலரது மனதிலும் பதிந்துள்ளது.

இதை உறுதிபடுத்துவது போல கிராமங்களில் இன்றும் கோவில் ஆண்டு திருவிழாக்களின் போது பலி பீட மேடையில் ஆடு, கோழிகளை பலி கொடுத்து விடுவதைப் பார்க்கலாம். இது தவறு.

ஆனால் ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன.

அந்த ஆலயங்களில் பலி பீடங்களில் உயிர்கள் பலி கொடுக்கப்படுவது இல்லை. அதற்கு பதில் நம்மிடம் உள்ள மோசமான குணங்களை அங்கு பலியிடுகிறார்கள்.

அதெப்படி குணத்தை பலியிடுவது என்று நினைக்கிறீர்களா? மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கலாம்.

இப்படி கெட்ட குணத்துடன் கருவறை பகுதிக்கு நாம் சென்றால் கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார்.

எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால்தான் கடவுள் பக்கம் செல்ல முடியும்.

எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது நாம் நல்ல மனிதனாக மாறி விடுவாம்.

இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடமானது உயரியமானது. இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன.

பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும்.

பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன.

பலி பீடத்தை பொதுவாக பத்ரலிங்கம் என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவமலம், பலி பீடத்தில்தான் ஒதுங்கியிருக்கும்.

எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘‘நான்’’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும்.

சிலர் எல்லாமே நம் ஒருவரால்தான் நடக்கிறது என்ற இறுமாப்புடன் இருப்பார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிட வேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். அந்த வழிபாடு எப்படி இருத்தல் வேண்டும் தெரியுமா? ஆலயத்தின் கருவறை வடக்கு, மேற்கு திசையை பார்த்தப்படி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும்.

மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.

அதுபோல பலிபீட வழிபாட்டை ஒரு தடவை, இரண்டு தடவை மட்டும் செய்து விட்டு நிறுத்தி விடக் கூடாது. 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும். அந்த சமயத்தில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் 6 கெட்ட குணங்களை பலியிடுவதாக எண்ண வேண்டும்.

பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும், ஆசீர்வதிக்கும். பலி பீடத்தை பலி நாதர் என்றும் சொல்வார்கள்.

பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடமாக கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்கு சமமாகும்.

பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது.

(திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது 8 திசைகளிலும் இந்த பெயர்களில் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன) இந்த எட்டு திக் பாலகர்கள் ஆலய பரிவார தேவதைகள் ஆவார்கள். எனவே இவர்களுக்கு அன்னம், தீர்த்தம் இடுதல் போன்றவைகளுக்கு பலி பீடங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த 8 பலி பீடங்களும் ஒவ்வொரு கோவிலின் ஆகம விதிகளுக்கு ஏற்ப கோவில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் அமையும். பொதுவாக தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.

சில கோவில்களில் பல பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதையே இது காட்டுகிறது.

சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத்திருப்பார்கள்.

அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும். பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால்... நம்மிடம் உள்ள தேவையற்ற காமம் போய் விடும். ஆசை போய் விடும். கோபம் போய் விடும். தீராத பற்று போய் விடும். நெறி பிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது. உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சகக் குணம் வரவே வராது.

ஆக பலி பீடம் மனிதனை... மனிதனாக மாற்றுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும்.

கோவிலில் கோபுர வாசலுக்கு கொடிமரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர்.

இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்று ஆகமங்கள் சொல்கின்றன.