Saturday, November 30, 2019

ஒரு_முதியோரின் டைரியில் எழுதி இருந்த ஒரு உண்மை கதை


♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வுபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார்.

♥வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே... ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது.. கடுமையா உழைத்து குடும்பத்தை பார்த்தார்...

♥இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச முடிகிறது.. வீட்டில் எது எங்க இருக்கு என அறியமுடிகிறது...

♥வீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தவர் மனைவியை கூப்பிட்டார்... மனைவி இவரை விட 8 வயது இளமையானவள்.. அதனால் 52 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தால்...

வந்து பக்கத்தில் நின்றவள் கூப்பிட்டீங்களா என பார்த்தாள்..

♥ஆமா... ஆமா.. வா உட்காரு உன்கூட மனசு விட்டு பேசி எவ்ளவு காலமாச்சு...

♥அவளும் உட்கார அவள் கையை பற்றி... ஏதோ பேச வந்தவர்... அவள் கை சொர சொரப்பாக இருக்க அவளின் உள்ளங்கையை திருப்பி பார்த்தார்.. முகங்கள் சுருங்கியது... கண்கள் கலங்கியது.. அம்மு என்னது.. கை பூரா வெட்டுக்காயமா இருக்கே... நகம் கூட வெடிச்சிருக்கே.. ஒரே தழும்பா இருக்கு என்னது.. நீ என்னய திருமணம் செய்துவரும்போது பட்டு மாதிரி இருந்தாயே.. உன் கை பளபளப்பா வழுவழுப்பா இருந்ததே என நிமிர்ந்தார்...

♥அவள் மெல்லிய சிரிப்புடன்
நா எதை என்னவென்று சொல்ல.. 35 வருசதில சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம்.. காய்கறி நறுக்கும்போது அருவாள் கத்தி கீறியிருக்கலாம்... அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம்... இப்படி எதேதோ நடந்திருக்கும்... என்றால்... மெல்லிய கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது...

♥என்னம்மு சொல்றாய் அது என்ன கையில் மேல அவ்ள பெரிய தீக்காயம் மாதிரி என்று அதிர்ந்தார்...

♥நீங்க என்னய வண்டில உள்ள கவர எடுத்துவா என 4 வருசத்திற்கு முன்னாடி ஒரு நாள் கூறினீங்க... நானும் எடுத்துவர போனன் கவர் கீழ விழ நான் எடுக்கும்போது உங்க வண்டி சைலன்சர் சுட்டுடுச்சு.. அப்பதானே வந்தீங்க... அதான் சூடா இருந்தது என்றாள்...

♥இது என்ன குழந்தையாட்டம் நீ என்கிட்ட சொல்லவே இல்லயே.. அம்மு...

♥நா சொல்லலதாங்க... எந்த காயத்தையும் நா சொல்லலங்க... அப்ப நா சொன்னா கூட நீங்க என்னய தானே திட்டுவீங்க பொறுப்பிள்ளையா ... பார்த்து நடக்கமாட்டியா... என.. என்றாள்

♥என் கண்களில் கூட படலயே அம்மு இதெல்லாம்... என்றார் வலி நிறைந்த குரலில்..

♥என்னை நீங்க அருகில சந்திக்கிறதே இரவு இருட்டில தானே அதுகூட சில நிமிடம்தான்
அப்ப எப்படிங்க என் உடல் காயங்கள் உங்களுக்கு தெரியும் என்றாள்...

♥அம்மு... அப்படி நினைக்காதே.. நமக்காக தானே நா இப்படி ஓடாய் உழைத்தேன் பசங்கள படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பினன்.. உன்னயும் ஒரு குறயும் இல்லாம பார்த்தன்... என்றார்..

♥உடல்காயங்களே உங்க கண்ணுக்கு இப்பதான் தெரியுது என் மனக்காயங்கள் உங்களுக்கு எப்பவுமே தெரியாதுங்க...

♥என்னய மன்னிச்சிடு அம்மு... பணம் சேர்க்கும் பரபரப்பில் இயந்திரமாக இருந்துவிட்டேன்..
என்று அவளின் கையை மெதுவாக அழுத்தினார்...

♥எனக்கொரு ஆசைங்க... அத இப்பவாவது கேக்கமுடியுமா ... என்றாள் குரல் சுருதி குறைவாக...

♥கேளு அம்மு... என்றார்

♥நாம திருமணமான புதிதில சில நாட்கள் நா உங்க மடியிலயும் நீங்க என் மடியிலயும் தலை வைத்து படுத்திருக்கோம்... அப்புறம் 35 வருசமா தலையனிலதான் நாம தலை வைத்து படுத்திருக்கம்... இப்ப உங்க மடியில கொஞ்சம் தலை வைத்து படுத்துக்கவா... என அம்மு கேக்க அவருக்கும் அம்முக்கும் கண்கள் கலங்கியே விட்டது... அவளை அணைத்து தன் மடியில் படுக்க வைத்தவர் குழந்தையைப்போல் அவளை பார்த்தார்.

♥மனசு நிறைய பாசம் அன்பு இருந்தாலும் அதை ஆண்களுக்கு வெளிப்படுத்த தெரிவதில்லை அதற்கான நேரம் வரும்வரை....

♥இதே போல்தான் பெரும்பாளும் எல்லா பெண்களின் வாழ்வும்.. திருமணமாகும் போது இருந்த மென்மையை அவர்களின் கை மட்டுமல்ல உடலும் மனமும் கூட இழந்து மரத்துப்போகிறது...

♥எத்தனை கணவன் மார் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின் மனக்குறைகளை கேக்கிறார்கள்.. மனம் விட்டு பேசுகிறார்கள்...

♥ஆண்களே உங்கள் மனைவியின் கையை பிடித்து பாருங்கள் எத்தனை கீறல்கள் காயங்கள் இருக்கும் என... இவை ஏன் வந்தது என கேளுங்கள்...
அவளின் மனக்காயம் வெளிவரும்.

*ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயாரின் பாதத்தை கவனியுங்கள். வருடத்திற்கு ஒரு முறைதான் காணமுடியும். இதை திருவடி சேவை என்பார்கள்.*

*ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயாரின் பாதத்தை கவனியுங்கள். வருடத்திற்கு ஒரு முறைதான் காணமுடியும். இதை திருவடி சேவை என்பார்கள்.*

சிவபுராணம் சில துளிகள்........

#நமசிவாய_வாழ்க_வாழ்க.........



சிவலிங்கத்தின் பெருமைகளைப் பற்றி "சிவபுராண'த்தில் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது.

வழிபாட்டிற்கு உகந்த சிவலிங்கத்தைத் தினமும் அபிஷேகம் செய்பவர்களும் அர்ச்சிப்பவர்களும் வாழ்வில் விரும்பியதையெல்லாம் பெறுவர் என்கிறது சிவபுராணம்!

மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை பூஜித்து வழிபடுபவர்களின் வாழ்க்கையில் அவர்களின் விருப்பங்கள் ஈடேறும். மலர்களால் அர்ச்சனை செய்பவர்கள் சித்தியடைவர்.

ரத்தினங்களால் ஆன சிவலிங்கத்தை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

பவழத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை வழிபடுபவர்கள் நிலையான செல்வத்தை அடைவார்கள்.

உலோகங்களால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை வழிபடும்போது தர்மம் செய்த பலன் கிடைக்கும்.

சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்கள் மட்டுமல்லாது சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்

சிவபெருமானுக்குக் கோயில் எழுப்புபவர்கள், தங்களது நூறு தலைமுறையில் உள்ள பிதுர்களுக்கு சிவபதவி அடையும் பாக்கியத்தைப் பெற்று தருகிறார்கள்.

சிவலிங்கம் பிரதிஷ்டை செய்பவருக்கும் முக்தி கிடைக்கும்.

சிவலிங்க பிரதிஷ்டை செய்தவரைப் பார்த்து, அதுபோல தானும் சிவலிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று விருப்பம் கொள்பவர்களின் பாவங்கள் அக்கணமே மறைந்து போகும்.

மேலும் அவர்கள் புண்ணியவான்களாகி முக்தியடைவதற்கான தகுதியையும் பெருமையையும் பெற்று விடுகிறார்கள்.

கருங்கல்லால் சிவாலயம் எழுப்புபவர்கள் ஒவ்வொரு கருங்கல்லுக்கும் ஆயிரம் ஆண்டுகள் வீதம் மொத்தக் கற்களுக்குமான ஆண்டுகள் சிவலோகத்தில் இருக்கும் பேறு பெறுகிறார்கள்....

கிருபானந்தவாரியார் சொன்ன ஒரு கதை.



🐘🐘🐘கோயில் யானை ஒன்று நன்றாக்க் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்ததாம்.🐘🐘🐘

ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம்.🐖🐖🐖🐖

🐘🐘🐘யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டதாம்.🐘🐘🐘

🐖🐖🐖அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக்கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.🐖🐖🐖

🐘🐘🐘அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டதாம்.🐘🐘🐘

அதற்குக் கோயில்யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னதாம்.🐘🐘🐘

“நான் சுத்தமாக இருக்கிறேன், பன்றியின் சேறு என் மேல் விழுந்து விடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சம்மாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகி விடும்!

👇👇👇👇
-இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நாம் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது நல்லது.

பாம்பன்_சுவாமிகள்_அருளிய_குமாரஸ்தவம்......



வாழ்வில் நடக்கும் பல்வேறு துன்பம்,பகை, நோயிலிருந்து விடுபட பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் பாராயாணம் செய்து பயன்பெறுங்கள்.
ஓம் ஷண்முக பதயே நமோ நம
(ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் ஷண்மத பதயே நமோ நம
(ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம
(ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்)
ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம
(ஓம் ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்)
ஓம் ஷட்கோண பதயே நமோ நம
(ஓம் அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் ஷட்கோச பதயே நமோ நம
(ஓம் ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் நவநிதி பதயே நமோ நம
(ஓம் ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் சுபநிதி பதயே நமோ நம
(ஓம் பேரின்பச் செல்வத்தின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் நரபதி பதயே நமோ நம
(ஓம் அரசர் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் சுரபதி பதயே நமோ நம
(ஓம் தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் நடச்சிவ பதயே நமோ நம
(ஓம் நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம
(ஓம் ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம் )
ஓம் கவிராஜ பதயே நமோ நம
(ஓம் கவியரசர் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் தபராஜ பதயே நமோ நம
(ஓம் தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்)
ஓம் இகபர பதயே நமோ நம
(ஓம் இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் புகழ்முனி பதயே நமோ நம
(ஓம் திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் ஜயஜய பதயே நமோ நம
(ஓம் மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்)
ஓம் நயநய பதயே நமோ நம
(ஓம் மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் மஞ்சுள பதயே நமோ நம
(ஓம் அழகுருவான தலைவனுக்கு வணக்கம்)
ஓம் குஞ்சரி பதயே நமோ நம
(ஓம் தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் வல்லீ பதயே நமோ நம
(ஓம் வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்)
ஓம் மல்ல பதயே நமோ நம
(ஓம் மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்)
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம
(ஓம் கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம
(ஓம் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம
(ஓம் சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் இஷ்டி பதயே நமோ நம
(ஓம் வேள்வித் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் அபேத பதயே நமோ நம
(ஓம் வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்)
ஓம் சுபோத பதயே நமோ நம
(ஓம் மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் மயூர பதயே நமோ நம
(ஓம் மயூர நாதனுக்கு வணக்கம்)
ஓம் வியூஹ பதயே நமோ நம
(ஓம் சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் பூத பதயே நமோ நம
(ஓம் பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் வேத பதயே நமோ நம
(ஓம் வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் புராண பதயே நமோ நம
(ஓம் புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் பிராண பதயே நமோ நம
(ஓம் ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் பக்த பதயே நமோ நம
(ஓம் அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் முக்த பதயே நமோ நம
(ஓம் பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்)
ஓம் அகார பதயே நமோ நம
(ஓம் அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் உகார பதயே நமோ நம
(ஓம் உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் மகார பதயே நமோ நம
(ஓம் மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் விகாச பதயே நமோ நம
(ஓம் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்)
ஓம் ஆதி பதயே நமோ நம
(ஓம் எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்)
ஓம் பூதி பதயே நமோ நம
(ஓம் சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்)
ஓம் அமார பதயே நமோ நம
(ஓம் மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்)
ஓம் குமார பதயே நமோ நம
(ஓம் குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்)...

காலண்டரில் மேல்நோக்கு கீழ்நோக்கு சமநோக்கு நாள் என குறிப்பிடப்பட்டிருக்கும் அப்படி என்றால் என்ன தெரியுமா....?


மேல்நோக்கு நாள்: உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல் நட்சத்திரங்களாகும்.

இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல் நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது.



உதாரணத்திற்கு கட்டிடம் எழுப்புவது மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பது போன்றவற்றை செய்யலாம்.



கீழ்நோக்குநாள்: கிருத்திகை, பரணி, பூரம், ஆயில்யம், விசாகம், மகம், மூலம் பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்களாகும். இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது நல்லது.



உதாரணத்திற்கு கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட்டில் போர்வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக்கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

சமநோக்கு நாள்: அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிருகசீரிஷம், ஸ்வாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது.

உதாரணமாக சாலை அமைப்பது, சாலையில் ஓட்டக்கூடிய வாகனங்கள் வாங்குவது, வீட்டிற்கு தளம் அமைப்பது, போன்றவற்றை செய்யலாம். இப்படியாக நாட்கள் பார்த்து அந்தந்த வேலைகளை செய்தால் அது சிறப்பாக முடியும் என்பது ஐதீகம்.

நினைத்த_காரியத்தை 🌷நிறைவேற்றும் 🌷சாய்_நாதர்_விரதம்.!!



🌷நினைத்த_காரியம் 🌷நிறைவேற_ஒன்பது 🌷வியாழக்கிழமை_சீரடி 🌷சாயிபாபாவை 🌷நினைத்து_விரதம் 🌷இருந்தால், 🌷வேண்டியதைப் 🌷பெறலாம்.

நினைத்த காரியம் நிறைவேற, ஒன்பது வியாழக்கிழமை சீரடி சாயிபாபாவை நினைத்து விரதம் இருந்தால், வேண்டியதைப் பெறலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையில் வேண்டுமானாலும் பாபாவின் நாமத்தைச் சொல்லி தொடங்கலாம். எந்த காரியத்திற்காக விரதம் இருக்கிறோமோ, அதை மனதில் நினைத்து சாயிபாபாவை பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

பலகையில் மஞ்சள் துணியை விரித்து, அதன் மீது சாயிபாபா படத்தை வைத்து, சந்தனம், குங்குமம் திலகம் இட வேண்டும். படத்திற்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவிக்கலாம். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு போன்ற எதுவானாலும் நைவேத்தியமாக வைத்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி காலையும், மாலையும் சாயிபாபாவை வழிபட வேண்டும். இந்த விரதத்தை கடைப் பிடிக்கும்போது, பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் மட்டுமே உட்கொள்ள வேண்டும். நாள் முழுவதும் இதுபோல் செய்ய முடியாதவர்கள், ஒரு வேளை மட்டும் உணவு அருந்தலாம். அதே வேளையில் நாள் முழுவதும் பட்டினியாக இருந்தும் இந்த விரதத்தை மேற்கொள்ளக் கூடாது.

வீட்டிலேயே சாய்பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்து வரவேண்டும். கோவிலுக்கும் சென்று வரலாம். விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்ன பிற காரணங்களால் விரதம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இன்னொரு வியாழக் கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம். ஒன்பதாவது வியாழக்கிழமையில் 5 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம். மேற்கண்ட விதிமுறைகளின்படி விரதம் இருந்து நிறைவு செய்தால், நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும்...

🌷சாய்ராம்!!!!!

Thursday, November 28, 2019

அவள் எங்கே இருக்கிறாள்?



மதுரையிலிருந்து சென்னை செல்ல விமானத்தில் அமர்ந்திருந்தேன். பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. விமானம் கிளம்பும் முன்பே துாங்கிவிட்டேன். சில நிமிடங்களில் துாக்கம் கலைந்தது.

பக்கத்து இருக்கையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்தாள்.
''மனதில் பெரிய கேள்வியை வைத்துக்கொண்டு ஏன் இப்படி சம்பந்தமில்லாத ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறாய்?''
திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பக்கத்து இருக்கைக்காரி பச்சை புடவைகாரியாக மாறியிருந்தாள்.

''உன் கண்களுக்கு மட்டும்தான் தெரிவேன். உன் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியைக் கேள்.''

''தாயே மதுரையில் மீனாட்சியாகவும், காஞ்சியில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும், நெல்லையில் காந்திமதியாகவும், திருக்கடையூரில் அபிராமியாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் விரும்பி உறையும் இடம் என்ன?''

''முட்டாளே! நான் மதுரையிலும், காஞ்சியிலும், காசியிலும் இல்லை. மதுரை, காஞ்சி, காசி இவை எல்லாம் தான் என்னுள் இருக்கின்றன. நான் உலகத்தில் இல்லை. இந்த உலகம் தான் என்னுள் இருக்கிறது.''

''தாயே தத்துவம் வேண்டாம். உங்களுக்குப் பிடித்த இடம்?''
''வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவியடா நான்.''

''மீண்டும் தத்துவமா? பிடித்த இடம் என்னவென்று சொல்வீர்களா அதைவிட்டு விட்டு..''

''அங்கே நடக்கும் காட்சியைப் பார்''

இடம் மும்பை.
ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் முன்னிலையில் ஒரு ஆறு வயதுச் சிறுமி அமர்ந்திருக்கிறாள். மறுநாள் அவளுக்கு ஒரு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவளுடைய பெற்றோர் வெளியே காத்திருக்கிறார்கள்.

''பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லைம்மா. நீ எதுக்கும் கவலைப்படாத. நான் இருக்கேன். பாத்துக்கறேன்.''

''ஐயையே! நான் பயப்படல டாக்டர். எனக்கு ஒரு விஷயம் தெரியணும்.''

''சொல்லும்மா.''
''நீங்க என் இதயத்த திறந்து பாப்பீங்க இல்லையா?''
''ஆமாம்மா. இது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி. இதயத்தைத் திறந்து தான் செய்யணும்.. ஆனா உனக்கு வலிக்கவே வலிக்காது.''
'அதைப் பத்தி எனக்குப் பயமில்லை டாக்டர். எங்கம்மா தினமும் சாமி கும்பிடுவாங்க. ஒரு நாள் சாமி எங்க இருக்காருன்னு கேட்டேன். உன் இதயத்துக்குள்ள இருக்காருன்னு சொன்னாங்க. நீங்க என் இதயத்தைத் திறந்தா சாமியப் பாப்பீங்கல்ல? சாமி எப்படி இருக்காருன்னு எனக்குச் சொல்றீங்களா?''

திகைத்துப் போன அறுவை சிகிச்சை நிபுணர் சிறுமியை இறுக அணைத்துக்கொண்டார்.

மறுநாள் அதிகாலை.
அறுவை சிகிச்சை தொடங்கியது. அவர் நினைத்ததைவிட சிக்கல்கள் அதிகமாகவே இருந்தன. ஒரு கட்டத்தில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது. அறுவை சிகிச்சை தொடங்கி நாற்பத்தியைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இதயத்திற்குச் சென்று கொண்டிருந்த ரத்தம் நின்றுவிட்டது.

இனிமேல் அந்தச் சிறுமி பிழைக்கமாட்டாள் என்று தோன்றியது... அறுவை சிகிச்சை செய்த இடத்தைத் தைத்தபின் சிறுமியின் உடலை அவளுடைய பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். சே, என்ன வாழ்க்கை இது!

அப்போதுதான் முதல் நாள் அந்தச் சிறுமி சொன்னது நினைவிற்கு வந்தது. தன் இதயத்திற்குள் கடவுள் இருக்கிறார் என்று நம்பினாளே அவள்!

கழற்றத் தொடங்கிய முகமூடியை மீண்டும் அணிந்து கொண்டார். பலவீனமாகத் துடித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு இதயத்தைப் பார்த்துக் கைகூப்பினார்.

''இறைவா நீ இந்த இதயத்தில் இருக்கிறாய் என்று இந்தக் குழந்தை நம்புகிறது. இந்த உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் தோற்றுவிட்டேன். இனி இந்தக் குழந்தை உன் கையில். இவள் வாழ்வதும் சாவதும் உன் கையில். நான் கற்ற கல்வி, இத்தனை ஆண்டுகளில் பெற்ற திறமை அனைத்தையும் உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன். இந்தக் குழந்தை இனி உன்னுடையவள்.''

அவர் கண்களில் நீர்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவருடைய உதவியாளர் அலறினார்.

''டாக்டர் இதயம் நல்லாத் துடிக்க ஆரம்பிச்சிருச்சி. பாருங்க ரத்த அழுத்தம் கடகடன்னு ஏறுது.''

அறுவை சிகிச்சையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் நிபுணர். அதன்பின் நான்கரை மணி நேரம் சிகிச்சை தொடர்ந்தது. குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இப்போதெல்லாம் அந்த நிபுணர் கோயிலுக்குச் செல்வதில்லை. எப்போதெல்லாம் குருதியில் அமிழ்ந்திருக்கும் மனித இதயத்தைப் பார்க்கிறாரோ அப்போது எல்லாம் கைகூப்பி வேண்டிக்கொள்கிறார்.

ஒவ்வொரு முறையும் தன் கல்வி, திறமை அனைத்தையும் இறைவனின் திருவடி சமர்ப்பணம் செய்துவிட்டுப் பதட்டமில்லாமல் சிகிச்சை செய்கிறார்.

'இன்னும் பத்து நிமிடங்களில் விமானம் சென்னையில் தரையிறங்கும்' என்ற அறிவிப்பு வந்தது.

''இப்போது உனக்கே தெரியுமே, எனக்குப் பிடித்த இடம் எதுவென்று?''
''ஆம் தாயே. உங்கள் அன்பில் நம்பிக்கை உள்ளவர்களின் இதயங்கள்தான் சிறந்த திருக்கோவில்கள். 'என் செயலாவது யாதும் இல்லை. எல்லாம் அவள் செயல்' என்று அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரியும் அந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் போன்றவர்களின் திருக்கரங்களில் நீங்கள் ஜொலிக்கிறீர்கள்.

யாராவது அடுத்தவர்களுக்காக உருகிக் கண்ணீர் சிந்தினால் அந்த உப்புத் திரவத்தில் இந்த உமா மகேஸ்வரி இருப்பாள்.''

''இந்தப் பாடத்தை என்றும் மறவாதே!''

விமானம் தரையைத் தொடும் சமயத்தில் பச்சைப்புடவைக்காரி மறைந்துவிட்டாள்.

பகிர்வு

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை




1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்... நமது நலனில் என்றும் உங்களுடன்...

✿✿✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்..✿✿✿....

Wednesday, November 27, 2019

தாசி குலப் பெண்ணான "கண்டகி"

தாசி குலப் பெண்ணான "கண்டகி" என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது.

அது என்ன வென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள்.

இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை.

ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான்.
வருந்திய கண்டகி செய்வதறியாது திகைக்க, அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான்.

உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது.

அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய சிசுருஷைகள் புரிந்தாள்.

உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி. அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. வாலிபன் உயிரோடு இல்லை.

இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின் அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள்.

திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம்அற்புதம் நிகழ்கிறது.

இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு , சக்ர கதாபாணியான ஸ்ரீமந்நாராயாணன் காட்சி அளிக்கிறார்.
கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய் சொல்கிறார்.

கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் ஒரு தாயாகவும் பெருமாள் மகனாகவும் இருக்க வேண்டும் என்பது தான் அது.

அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார் ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாறவேண்டி இருப்பதால் மலையோடு சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று சொல்லுகிறார்.

சாபம் பெற்ற நாராயணன் மலையாக மாறக் கண்டகி அதே பேரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடும் கண்டகியின் வயிற்றில்தான் சாளக்கிராம கற்கள் கிடைகின்றது.
"கண்டகி நதி புராணம் "

வெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்?



வழங்கியவர்: திரு. ஜீவன கௌர ஹரி தாஸ்

வெங்காயமும் பூண்டும் காய்கறி வகையில் ஒன்றுதானே! அவற்றை ஏன் ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் நிராகரிக்கின்றனர்? அவற்றை உண்பதால் என்ன தீங்கு நேரிடும்? இவை மக்கள் எம்மிடம் வியப்புடன் எழுப்பும் கேள்விகள். வெங்காயம், பூண்டினை இஸ்கான் பக்தர்கள் மட்டுமல்லாது, ஸநாதன தர்மத்தை பின்பற்றும் அனைவரும் தவிர்க்கின்றனர். அவ்வளவு ஏன்? பௌத்தர்களும் ஜைனர்களும்கூட பூண்டு, வெங்காயத்தை நிராகரிக்கின்றனர். ஜெயின் ஓட்டல்களில் இன்றும் பூண்டு, வெங்காயம் உபயோகிக்கப்படுவதில்லை என்பது மக்கள் அறிந்த ஒன்றுதான். இவற்றை ஒதுக்குவதற்கான பின்னணியை இக்கட்டுரையில் காண்போம்.

இறையுணர்வில் நாவின் முக்கியத்துவம்
வைஷ்ணவ பரம்பரையில் ஒன்றான கௌடீய ஸம்பிரதாயத்தில் பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதே சமயம் உயர்ந்த இலக்கான தூய கிருஷ்ண பக்தியை அடைவதற்கு இடையூறாக இருக்கும் இதர விஷயங்களைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றது. கிருஷ்ண உணர்வின் முக்கிய செயல்களான திருநாம உச்சாடனம், கிருஷ்ண பிரசாதத்தை ஏற்று மதித்தல் ஆகிய சேவைகள் நாவினால் செய்யப்படுவதால், ஸேவோன் முகே ஹி ஜிஹ்வாதௌ, பக்தித் தொண்டு நாவிலிருந்தே ஆரம்பமாவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறாக, கிருஷ்ண பக்தியை அடைவதற்கு நாவே முதல்படியாகத் திகழ்கின்றது.

மூவகை குணங்களும் உணவுகளும்
ஸத்வம், ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களாலான பௌதிக உலகில் நாம் வாழ்கிறோம். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என இங்கு வாழும் அனைத்து ஜீவராசிகளும் இந்த முக்குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் வருகின்றனர். நாம் விரும்பி உண்ணும் உணவிலும் ஜட இயற்கையின் குணங்களுக்கு ஏற்ப மூன்று வகைகள் உள்ளன.

தமோ குணத்தை அறவே தவிர்த்து, ரஜோ குணத்தை ஒழுங்குபடுத்தி, ஸத்வ குணத்தை வளர்த்துக்கொள்வதற்காக சாஸ்திரங்களில் இத்தகைய உணவுப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

ஆயுள், ஆரோக்கியம், அறிவு, பலம் ஆகியவற்றை வளர்ப்பதும், சாறு நிறைந்ததும், ஊட்டச்சத்து மிக்கதும், இதயத்திற்கு இதமளிப்பவையுமான உணவுகள் ஸத்வ குண உணவுகளாகும்.

மிகவும் புளிப்பான, மிகவும் காரமான, எரிகின்ற உணவுகள் ரஜோ குணத்தைச் சார்ந்தவை, இவை துன்பம், சோகம், மற்றும் நோயை உண்டாக்குகின்றன.

பழையனவும், ஊசிப்போனதும், எச்சில்பட்டது மான உணவுகள் தமோ குணத்தைச் சார்ந்தவை.” (பகவத் கீதை 17.8-10)

எனவே, ரஜோ, தமோ குணங்களைச் சார்ந்த வெங்காயம், பூண்டை உட்கொள்வதால் மனம் மாசடையும், ஆன்மீக சூட்சுமங்களைப் புரிந்துகொள்ள இயலாது, மந்த புத்தி ஏற்படும்.

ஸத்வ குண உணவின் முக்கியத்துவம்
முக்குணங்களாலான இவ்வுலகிருந்து விடுபடுவதற்கு நாம் ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும், ஞானத்தை வளர்ப்பதற்கு ஸத்வ குணம் உதவியாக இருக்கும் என்பதால், ஸத்வ குணத்தை வளர்த்தல் அறிவுறுத்தப்படுகிறது. ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞானம், ஸத்வ குணத்திலே ஞானம் பிறக்கின்றது (பகவத் கீதை 14.17). ஸத்வ குணத்தில் கிருஷ்ண உணர்வை சிறப்பாக பயிற்சி செய்ய இயலும். ஒருவன் தான் இந்த உடலல்ல, ஆத்மா என்பதை உணர்வதற்கு ஸத்வ குணம் இன்றியமையாதது. எனவே, ஸத்வ குணத்தைச் சார்ந்த உணவுகளை ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து, அதன் பின்னர் அதனை பிரசாதமாக (சுத்த-ஸத்வ குணத்தில்) நாம் ஏற்க வேண்டும்.

தூய்மையான உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சாந்தோக்ய உபநிஷத் (7.26.2) கூறுகிறது, ஆஹார ஷுத்தௌ ஸத்த்வ-ஷுத்தி: ஸத்த்வ-ஷுத்தௌ: த்ருவா ஸ்ம்ருதி: ஸ்ம்ருதி-லம்பே ஸர்வ-க்ரந்தீனாம் விப்ரமோக்ஷ, தூய்மையான உணவை (கிருஷ்ண பிரசாதத்தை) உட்கொள்வதால் மனம் தூய்மை அடைகிறது. தூய்மையான மனதினால் பகவானை நினைக்க இயலும். இவ்வாறு பகவானை இடைவிடாது நினைப்பதால் அனைத்து பந்தங்களிலிருந்தும் விடுபட்டு இறைவனின் திருநாட்டிற்குச் செல்லவியலும்.” எனவே, ஆன்மீகத்தில் முன்னேற விரும்புபவர்கள் தூய்மையான உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஆன்மீக பக்குவத்தை அடைய விரும்புபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்குறித்து சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன.

இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தகாதவை
தற்கால மக்கள் நாவிற்கு அடிமையாகி, வேதப் பண்பாட்டில் புறக்கணிக்கப்பட்ட பூண்டு, வெங்காயம் உட்பட அனைத்தையும் உட்கொள்கின்றனர். வெங்காயம், பூண்டு இல்லாத (சாம்பார், சட்னி, கூட்டு, பொரியல், பச்சடி) உணவுகளைக் காண்பதே இன்று அரிதாகிவிட்டது.

பூண்டு, வெங்காயம் இவை இரண்டும் தாவரங்களே என்றும் இவற்றை இறைவனுக்கு அர்ப்பணிப்பதில் என்ன தவறு என்றும் கேட்கலாம். ஆயினும், நாம் எந்தவொரு செயலையும் சாஸ்திரங்களில் கூறியுள்ளபடியே செய்ய வேண்டும். சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து மனம்போன போக்கில் செயல்படுபவன் பக்குவத்தையோ, சுகத்தையோ அடைவதில்லை, ஆகவே, தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதற்கு சாஸ்திரங்களை பிரமாணமாகக்கொள்ள வேண்டும்,” என்று கிருஷ்ணர் கீதையில் (16.24) கூறுகிறார்.

பூண்டு, வெங்காயம் ஆகியவை சாஸ்திரங்களில் பல இடங்களில் உண்ணத்தகாத உணவுகள் என்றும், இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தகாதவை என்றும் கூறப்பட்டுள்ளதால், அவற்றை நாம் இறைவனுக்கு அர்ப்பணிப்பதில்லை. இறைவனுக்கு அர்ப்பணிக்காத எதையும் நாம் உட்கொள்வதில்லை. இதுவே ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் பூண்டு, வெங்காயத்தை உண்ணாமல் இருப்பதற்கான காரணமாகும்.

இராகுவின் தலையை மோஹினி துண்டித்தபோது சிதறிய இரத்தமே வெங்காயம், பூண்டு உருவாகுவதற்கான அடிப்படையாகும்.

பூண்டு, வெங்காயத்தின் தோற்றம்
பூண்டு, வெங்காயத்தின் தோற்றம் சாஸ்திரங்களில் பலவிதங்களில் கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு கதை:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து பெற்ற அமிர்தத்தை பகவான் விஷ்ணு (மோஹினி ரூபத்தில்) தேவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் அசுரன் இராகுவும் தேவர்களின் வரிசையில் அமர்ந்து அமிர்தத்தைப் பெற்றான். இதைக் கண்ட சூரியனும் சந்திரனும் பகவானிடம் இதைத் தெரிவித்தனர். அமிர்தம் அந்த அசுரனின் தொண்டையிலிருந்து வயிற்றிற்குச் செல்வதற்குள் பகவான் விஷ்ணு தனது சக்கரத்தினால் அவனின் தலையைக் கொய்தார். அப்போது அவனது தொண்டையிலிருந்த இரத்தம் கீழே சிந்தியது. சிந்திய இரத்தத்திலிருந்து பூண்டு, வெங்காயம் தோன்றின. அந்த இரத்தத்தில் அமிர்தம் துளியளவு கலந்திருந்த காரணத்தினால், வெங்காயம், பூண்டு இரண்டும் உண்பவர்களுக்கு சில நன்மைகளைத் தரலாம். இருப்பினும், அவை அசுரர்களின் இரத்தம் என்பதால், அவை உண்பவர்களுக்கு அசுர குணத்தை வழங்குகின்றன. அசுரனின் இரத்தத்திலிருந்து தோன்றிய காரணத்தினால், இவற்றை பகவான் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்க இயலாது.

மற்றொரு கதை: பிராமணரின் மனைவியினால் திருடப்பட்ட பசு மாமிசத்திலிருந்து வெங்காயம், பூண்டு தோன்றியதாக மற்றொரு வரலாறு கூறுகிறது. இதனால் வெங்காயம், பூண்டினை உண்பது பசு மாமிசத்தினைச் சாப்பிடுவதைப் போன்று பாவகரமானதாகும்.

சாஸ்திர மேற்கோள்
வெங்காயம், பூண்டு உண்பவர்கள் பரிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கருட புராணம் (1.96.72) கூறுகிறது. வெங்காயம், பூண்டு தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் என சிவ புராணம் (7.10.12) கூறுகிறது. தர்ம நெறிகளைக் கடைபிடிப்பவர்கள் வெங்காயம், பூண்டைத் தவிர்க்க வேண்டும் என பத்ம புராணம் (4.56), மனு சம்ஹிதை (5.5), ஹரி பக்தி விலாஸம் (8.158) ஆகிய வேத சாஸ்திரங்கள் தெளிவாக உரைக்கின்றன.

விஞ்ஞானிகளின் கூற்று
வெங்காயம், பூண்டில் மனிதர்களை மெல்லக் கொல்லும் விஷத்தன்மை கொண்ட 21 பொருட்கள் இருப்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. (உதாரணம்: டாக்டர். ரோபர்ட் சி பெக், அமெரிக்கா அவர்களின் ஆராய்ச்சி) மேலும், மனிதனின் மூளை வளர்ச்சிக்கு இவை தடையாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

வேறு சில விஞ்ஞானிகள் வெங்காயம், பூண்டினை நன்மையானவை என்றும் கூறலாம், அபிப்பிராய பேதங்கள் விஞ்ஞானிகளுக்கு மத்தியில் இருப்பது ஆச்சரியமல்ல.

பக்தர்கள் வேத சாஸ்திரங்களையும் ஆச்சாரியர் களின் வார்த்தைகளையும் ஏற்று வெங்காயம், பூண்டினைத் தவிர்க்கின்றனர்.

நடைமுறை தீர்வு
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம, ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரம் நாவிற்கு உயர்ந்த சுவையை வழங்குகிறது, இதனை நாள்தோறும் உச்சரிப்பதால் புறக்கணிக்கப்பட்ட பொருட்களின் மீதான சுவை நம்மை அறியாமல் தானாகவே சென்றுவிடும். இதனால், வெங்காயம், பூண்டை தவிர்ப்பதில் பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இருப்பதில்லை.

பக்தர்களின் ஸத்சங்க நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு, கிருஷ்ண பிரசாதத்தை உட்கொள்வதன் மூலம் வாழ்வு பிரகாசமாக மாறிவிடுகிறது. பிரகாசமான வாழ்வினால் நம்மை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியை உணர்வர்.

கிருஷ்ணருக்கு அன்புடன் அர்ப்பணித்து அதன் பின்னர் உண்ணப்படும் பிரசாதம், தாழ்ந்த சுவைகளைக் கைவிட உதவுகிறது.

பிரசாத மகிமை
கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்க முடியாது என்பதாலேயே, கிருஷ்ண பக்தர்கள் வெங்காயம், பூண்டைத் தவிர்க்கின்றனர். கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்காத எதையும் பக்தர்கள் உண்பதில்லை. பக்தர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை நடைமுறையில் காணலாம். கிருஷ்ணர் ஏற்கும் உணவுகள் அனைத்தும் அமிர்தமாகத் திகழ்கின்றன. கிருஷ்ண பிரசாதத்தை சுவைத்தவன் வேறு எதையும் சுவைக்க விரும்புவதில்லை. கிருஷ்ண பிரசாதத்தின் அமிர்தமான சுவையையும் மணத்தையும் எவரும் எளிதில் உணர முடியும்.

கைவிடுதல் எளிதானதே
ரஸ-வர்ஜம் ரஸோ பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே, உயர்ந்த சுவை கிடைக்கும்போது தாழ்ந்த சுவையில் இருக்கும் பற்றுதல் தானாகவே சென்றுவிடும்,” என்று கிருஷ்ணர் கீதையில் (2.59) கூறுகிறார். கிருஷ்ண பிரசாதம் எனும் உயர்ந்த சுவையில் நமக்கு பற்றுதல் ஏற்படும்போது, கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்படாத (பிரசாதமல்லாத) எல்லா உணவுப் பொருட்களின் மீதான பற்றுதலும் அகன்று விடுகின்றன எனும்போது, பூண்டு, வெங்காயத்தைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ!

Tuesday, November 26, 2019

ஆன்மீகத்தை நம்பாதவர்கள் யார்?????



ஜாதகத்தில் #குரு கெட்டு, லக்னம் பாதிக்கபட்டு, சனி கேதுவுடன் சேராமல், சந்திரன் பாதிக்கபட்ட ஜாதகர் ஆன்மீக விஷயங்கள் #பொய் என்பார்....

பாதிப்பு பாதிப்பு என்றால் எப்படி

#குரு பாதிப்பு
குரு ராகுவுடன் இனைவு, குரு நீசம், குரு அஸ்தமணம், குரு சுக்ரன் சேர்க்கை இவற்றில் #குரு கெட்டு போவார்....

#லக்னம் பாதிப்பு
உங்கள் ஜென்ம லக்னம் சனி, ராகு, செவ்வாய் இந்த கிரகங்களால் பார்க்கபடுவது,அல்லது லக்னத்தில் இயற்கை சுபர்கள் தொடர்பு இல்லாமல் இருத்தல்....

#சனிபாதிப்பு
சனி ராகுவுடன் இனைவு, சனி==செவ்வாய் மற்றும் சூரியன் தொடர்பு (சேர்க்கை, பார்வை) ,சனி நீசம் இப்படியாக இருத்தல்.....

#சந்திர பாதிப்பு
சந்திரன் அஸ்தமணம், கிரகணம்(அமாவாசை) ஆகி இயற்கை சுபர் தொடர்பு இல்லாமல் போவது, சந்திரன் செவ்வாயுடன் தொடர்பு கொள்வது,சந்திரன் ராகு மற்றும் உச்ச,நீச கிரக தொடர்பு இப்படி இருந்தால் பாதிக்கபடும்.....

இதுமட்டுமின்றி #செவ்வாய் மட்டும் ஆட்சி, உச்சம் ஆகி பிற கிரகங்கள் வலிமை இழந்து இருந்தாலும், #ஒன்பதாம் இடம் மற்றும் அதன் அதிபதி வீக் ஆன நிலையில்,,,,,,

ஜாதகம் இருக்குமேயானால்(நான் சொன்ன எல்லா விதியும் ஒன்று சேர்ந்தால்) #ஜாதகர் கடவுள் மறுப்பு மற்றும் ஆன்மீகம் #பொய் என கூறி வாழ்க்கையை நடத்துவார்...

மேற் கூறிய விதியில் ஒன்று, இரண்டு இருந்தால் ஆன்மீகம் ஒரு நேரம் #உன்மை என்றும் சில நேரம் #பொய் என்றும் கூறுவார்......

Thursday, November 21, 2019

சந்திராஷ்டமம் என்றால் என்ன; அது என்ன செய்யும்?



ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங் களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்.

சந்திரனின் முக்கியத்துவம்

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியா கும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட் டைக் குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். அதே நேரத்தில் புதன் இருக்கும் இடத்தையோ, குரு இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதில் இருந்து சந்திரனின் முக்கி யத்துவத்தை நாம் தெரிந்துகொள்ளலாம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.
சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோச்சார பலன்களைப் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கிறோம்.
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள், அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன. அந்த வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் ‘சந்திராஷ்டமம்’ ஒன்று.

சந்திராஷ்டமம்

நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ் சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன.

ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள், புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களை யும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.

எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள் ஆகும்.

வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது, அதே நேரத்தில் லாப-நஷ்டங்கள், நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும்?
சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம். இரண்டாம் இடத்தில் இருக்கும்போது: பணவரவுக்கு வாய்ப்புண்டு. பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வ ளம் மிகும்.

மூன்றாம் இடத்தில் இருக்கும்போது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள். நான்காம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய்வழி ஆதரவு.

ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள், தெய்வ பக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம். தாய் மாமன் ஆதரவு.

ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன். வீண் விரயங்கள். மறதி, நஷ்டங்கள்.

ஏழாம் இடத்தில் இருக்கும்போது: காதல் நளினங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம். பெண்களால் லாபம், மகிழ்ச்சி.

எட்டாம் இடத்தில் இருக்கும்போது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளலாம். கோயிலுக்குச் சென்று வரலாம்.

ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.

பத்தாம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், நிறை-குறைகள், பண வரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.

பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன அமைதி, தரும சிந்தனை.

பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது: வீண் விரயங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

பிறந்த நட்சத்திரம் சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி அனுஷம்
பரணி கேட்டை
கிருத்திகை மூலம்
ரோகிணி பூராடம்
மிருகசீரிஷம் உத்திராடம்
திருவாதிரை திருவோணம்
புனர்பூசம் அவிட்டம்
பூசம் சதயம்
ஆயில்யம் பூரட்டாதி
மகம் உத்திரட்டாதி
பூரம் ரேவதி
உத்திரம் அஸ்வினி
அஸ்தம் பரணி
சித்திரை கிருத்திகை
சுவாதி ரோகிணி
விசாகம் மிருகசீரிஷம்
அனுஷம் திருவாதிரை
கேட்டை புனர்பூசம்
மூலம் பூசம்
பூராடம் ஆயில்யம்
உத்திராடம் மகம்
திருவோணம் பூரம்
அவிட்டம் உத்திரம்
சதயம் அஸ்தம்
பூரட்டாதி சித்திரை
உத்திரட்டாதி சுவாதி
ரேவதி விசாகம்

Tuesday, November 19, 2019

ராம நாமம்


வீரன் ஒருவனுக்கு கடலில் நடந்து செல்ல ஆசை எழுந்தது. விபீஷணரிடம் அதை தெரிவிக்க, உடனே ஒரு இலையில் எதையோ எழுதினார். அதை அவனது இடுப்பில் கட்டிவிட்டு ‘‘இப்போது நீ தாராளமாக கடலில் இறங்கி நடக்கலாம். ஒருபோதும் மூழ்கமாட்டாய். ஆனால் எந்த சூழலிலும் நான் கட்டியதன் மீது நம்பிக்கை குறையக்கூடாது.’’

வீரனும் தலையசைத்து விட்டு கடலின் ஆழமான பகுதிக்குச் சென்றான். தரையில் நடப்பது போல இயல்பாக நடக்க முடிந்தது. ‘கடலில் மூழ்காமல் என்னாலும் நடக்க முடிகிறதே’ என்பதை எண்ணி மகிழ்ந்தான். சற்று துாரம் போனதும் ஒரு சிந்தனை எழுந்ததும் அப்படியே நின்றான். இடுப்பில் கட்டியிருக்கும் இலையில் என்ன எழுதியிருக்கிறது என எடுத்துப் பார்த்தான்.

‘ஸ்ரீராமஜெயம்’ என்ற மந்திரம் அதிலிருந்தது. ‘ஓ... ராம நாமம்தானா’ என்று ஒரு கணம் அசட்டை எண்ணம் கொண்டான். அந்த கணமே பெரிய அலை வந்து அவனை இழுத்து கடலுக்குள் போனது. தத்தளித்த அவன் ராமநாமத்தை பக்தியுடன் ஜபிக்க மீண்டும் கடல்பரப்பில் நிற்க முடிந்தது.

ஸ்ரீ ராம ஜெயம்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பன் தரிசனம் பெற்ற மகா குருசாமி M.N.நம்பியார்!



சபரிமலையை தமிழகத்தில் பிரபலமாக்கியவர் இவரே!

``சபரிமலையை முதன்முதலில் தமிழகத்தில் பிரபலமாக்கியவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளைதான். இவர்தான் சபரிமலை ஐயப்பனைப் பற்றிச் சொல்லி, எம்.என்.நம்பியார்சாமியையும் மாலை போட வைத்தவர்.

அவருக்கடுத்து ,ஒரு மாநிலத்தின் கோயிலாக இருந்த சபரிமலையை, தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடெங்கும் பிரபலப்படுத்திய புகழ் நம்பியார்சாமியைத்தான் சேரும்.

இதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட அஸ்திரம் வித்தியாசமானது. வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்பவர்கள் பிரபலங்களே.

எனவே, சபரிமலை ஐயப்பனின் மகிமையை உலகெங்கும் கொண்டு செல்வதை, தன் ஆன்மிகப் பணியாக வகுத்துகொண்ட அவர், மாலை அணிவித்து சபரிமலைக்கு அழைத்துச் சென்ற பிரபலங்கள் ஏராளம். அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்கள் கன்னிசாமியாக மாலை அணிந்து மலைக்குப் புறப்பட்டபோது, அவர்களுக்கு நம்பியார்தான் குருசாமி!

யார் குருசாமி?

60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு ஐயப்பனை தரிசித்தவர். நீண்ட காலமாக `குருசாமி’யாக பக்தர்களை ஐயப்பன் கோயிலுக்கு வழிநடத்திச் சென்றவர். இவரது நீண்ட ஐயப்பன் கோயில் பயணம், `மகா குருசாமி’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால், அவரே தன்னை `குருசாமி’ என்று ஒருபோதும் சொல்லிக்கொண்டது இல்லை. `நான் உங்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லவில்லை; உங்களுடன் நானும் பயணிக்கிறேன், அவ்வளவுதான்’ என்பார்.

அதேபோல குருசாமி யார்? என்பதற்கு புதிய விளக்கமும் தந்தார். `18 முறை சபரிமலைக்குச் சென்றவர்களெல்லாம் குருசாமியல்ல; அவர்கள் அப்போதுதான் கன்னிசாமியாகிறார்கள். இதுபோல 18 முறை கன்னிசாமியாக இருந்தவர்தான் குருசாமி’ என்று கூறி அதிரவைப்பார். அதாவது 18 X 18 = 324 வருடங்கள் சபரிமலை சென்றவர்தான் குருசாமியாக முடியும். ஐயப்பன் ஒருவரே குருசாமி, சாதாரண மனிதர்களால் அது முடியாது என்பதையே அவரது பாணியில் உணர்த்தினார்.

ஐயப்பனுக்கு சீசனா?

ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து, சபரிமலைக்குச் செல்லும் கார்த்திகை மாதத்தை `ஐயப்பன் சீசன்’ என்போம். ஆனால் அவரோ, `ஐயப்பனுக்கு ஏதுடா சீசன்... இது என்ன ஊட்டியா, கொடைக்கானலா?’ என்பார் அவர் பாணியில்.

`அந்த 41 விரத நாட்கள், நம்மை தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளும் பயிற்சி. ஒருமுறை மாலை போட்டு விட்டால், அதற்குப் பிறகு வாழ்நாள் முழுக்க நாம் ஐயப்ப பக்தர்களே. எனவே, அந்த விரதமுறை, ஐயப்பனுக்காக நாம் செய்யும் தியாகம் அல்ல. அதனால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை. அது உன்னை நல்வழிப்படுத்தி, உனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதற்காகத்தான் என்பதை உணர்ந்து, மனசாட்சிக்கு உட்பட்டு அதனை நேர்மையாகக் கடைபிடி’ என்பார்.

மாதா, பிதா, குரு...

`சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரும் தன் தாயின் கையால்தான் மாலை போட்டுக்கொள்ள வேண்டும்; பெற்றோரின் விருப்பமில்லாமல் மாலை போடக் கூடாது; முதலில் யார் உனக்கு குருசாமியாக இருக்கிறாரோ, இறுதி வரை அவருடன்தான் நீ யாத்திரை செல்ல வேண்டும். அதேபோல முதல்முறை உபயோகித்த மாலையைத்தான் இறுதி வரை பயன்படுத்த வேண்டும்’ என்பார்.

புனித யாத்திரையில் கண்டிப்பு

`எந்த இடத்தில் மாலையை போட்டுக்கொண்டாயோ, அந்த இடத்திலேயே திரும்ப வந்து கழற்றினால்தான் உனது புனித யாத்திரை நிறைவுபெறும். பம்பையில் கழற்றினாலும், வழியில் கழற்றினாலும் விரதப் பயணம் நிறைவுறாது’ என்பார். அதை அவருமே கடைப்பிடித்தார். அவருடன் வரும் சிவாஜி போன்ற மாபெரும் பிரபலங்களைக்கூட இடையிலேயே மாலையைக் கழற்றிவிட்டு, சினிமா சூட்டிங்குக்குச் செல்ல அவர் அனுமதித்தது இல்லை. இப்படி அனைவரிடமும் அன்புடன் கூடிய கண்டிப்போடு நடந்துகொள்வார் நம்பியார்சாமி.

எம்.ஜி.ஆரின் மரியாதை

நம்பியார் இருமுடி கட்டி ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும்போது, அவரது மனைவி ருக்மணிதான் நெய்த் தேங்காயில் நெய் ஊற்றி பயணத்தைத் தொடங்கி வைப்பார். அதேபோல எம்.ஜி.ஆர் உயிரோடு வாழ்ந்த காலம் வரை, அவர் அனுப்பிவைக்கும் மாலைதான் முதல் மாலையாக நம்பியாருக்கு அணிவிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வந்தது.

ஊருக்கு உபதேசம்!

'ஊருக்குத்தான் உபதேசம்' என்றில்லாமல் அவர் போதித்த விஷயங்களுக்கு அவரே முன்னுதாரணமாக அவற்றைத் தனது வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர். விரத காலங்களில் மட்டுமல்லாமல், தன் வாழ்நாள் இறுதி வரை குடிப்பழக்கம், புகைப் பழக்கம் என எந்த கெட்டப் பழக்கங்களும் இல்லாத மாமனிதர் அவர். கறுப்பு வெள்ளைக் (சினிமா) காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. ஆனால், அதற்கான எந்த தலைக்கனமும் அவரிடம் இருந்ததில்லை. திரையில் வில்லனாகத் தோன்றினாலும், நிஜத்தில் எந்த கெட்டப் பழக்க வழக்கங்களும் இல்லாத கதாநாயகனாகத்தான் வாழ்ந்தார். இவரிடம் நடிகர்கள் மட்டுமல்ல, அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன.

2008-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார் நம்பியார்சாமி. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் இந்த கார்த்திகை மாதத்தில் அவர் மரணம் அடைந்ததால், ஐயப்பனின் திருவடிகளை அவர் அடைந்ததாகவே ஐயப்ப பக்தர்களாகிய நாங்கள் நம்புகிறோம்.’

ஸ்வாமியே! சரணம் ஐய்யப்பா!

ஆரோக்கியத்தை காப்பதில் அய்யப்பனுக்கு நிகர் அய்யப்பன் தான். இது அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் கண்ணதாசன் கூறியது. உண்மையான அய்யப்ப பக்தி நம்பியார் கொண்டது தான்.

நாம் ஏன் குழந்தைகளை கோவிலுக்குச் செல்ல பழக்கப்படுத்த வேண்டும்..?


கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.

இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள்:

1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.

2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.

4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.

5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..

7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.

8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.

10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..

12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.

13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.

16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.

17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.

18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..

20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் குழந்தைகளையும் பழக்குவோம்.

அது அறிவியல் ஆகட்டும்.. எதுவாகட்டும்.... இறை சக்தி நம்மை காக்கட்டும்....

ஸ்ரீ போஜேஸ்வர் ஆலயம்.

இத்தலம் மத்திய பிரதேச மாநிலத்தில், போபால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ போஜேஸ்வர் ஆலயம். பிரம்மாண்ட சக்தி வாய்ந்த சிவலிங்கம். அடியார்களே..! ஓம் சிவாய நம 🙏

வாஸ்து பகவான்



முன்பு ஒரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தான் பெற்ற வரத்தினால் தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்தான். சிவபெருமான் மிகவும் ஆக்ரோஷமாக அண்டகாசுரனுடன் போரிட்டார் அப்போது சிவபெருமானின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது. கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி கண்ணில் பட்ட அனைத்தையும் விழுங்கியது அண்டகாசுரன் இறந்ததும் அவனின் உடலையும் உண்டது ஆனாலும் தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியது. சிவபெருமான் அந்த பூதத்திற்கு அனைத்தையும் உண்ணும் வரத்தை அளித்தார்.

இதனால் அந்த பூதத்திற்கு மூவுலகையும் அழிக்கும் சக்தி உண்டானது. இதை அறிந்த தேவர்கள் அனைவரும் பூதம் எழுந்திரிக்க இயலாதவாறு பூதத்தின் மேலேறி அமர்ந்தனர். தீராத பசி கொண்ட பூதம் பிரம்மாவிடம் முறையிட்டது. பிரம்மதேவன் அந்த பூதத்திடம் பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை உண் என்றும், சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வசிப்பவரை வாட்டு என்றும் வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்றும் வாஸ்துப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மைகளையும், மற்றவர்களுக்கு தீமையையும் அளித்து வருகிறார். வாஸ்து என்றால் வாழும் இடம் என்று பொருள். மிகச்சரியான வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது. நிம்மதி மகிழ்ச்சி பெருகும்.

வாஸ்து என்றல் என்ன?


“வாஸ்து” என்பது கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறை. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம் மக்களுடைய நல்வாழ்வுக்காகவும் அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்காகவும், கட்டப்படுகின்ற கட்டிடம் இயற்கையுடனும், இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்க வேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலமாகும்.

வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்கு பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

கட்டிடம் கட்ட ( வாஸ்து பூஜைக்கு ) ஏற்ற மாதங்கள்


கட்டடம் கட்டத் தொடங்கும்போது மனைகோலப்படுகிறது. அதை நன்மை தரும் மாதங்களில் செய்ய வேண்டும். அப்போது தான் அங்கு கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்களுக்கு நற்பலன்களாக நடைபெறும்.

மனைகோலும்வதற்கு ஏற்ற மாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் எட்டு மாதங்களிலும் மனை கோலலாம். மற்ற நான்கு மாதங்களான ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவற்றில் மனை கோலக்கூடாது.
இவற்றில் ஒவ்வொரு ஜன்ம நட்சத்திரத்திற்கும் ஆகாத சூன்ய மாதங்கள் உள்ளன. அத்தகைய மாதங்களிலும் மனைகோலக்கூடாது. வீடு கட்டுபவர் தம்முடைய ஜன்ம நட்சத்திரம் அல்லது ராசிக்கு ஆகாத சூன்ய மாதத்தைத் தெரிந்து கொண்டு அந்த மாதத்தில் மனை கோலுவதைத் தவிர்க்க வேண்டும்.

கீழே ஒவ்வொரு ஜன்ம நட்சத்திரம் அல்லது ராசிக்கு எந்தெந்த மாதம் சூன்ய மாதமாக விளங்குகிறது என்பது விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நட்சத்திரம் – ராசி – சூன்யமாடம்
அசுவினி – மேஷம் – சித்திரை
பரணி – மேஷம் – சித்திரை
கிருத்திகை முதல் பாதம் – மேஷம் – சித்திரை
கிருத்திகை 2, 3, 4, பாதங்கள் – ரிஷபம் – வைகாசி
ரோகிணி – ரிஷபம் – வைகாசி
மிருகசீரிடம் 1, 2 பாதங்கள் – ரிஷபம் – வைகாசி
மிருகசீரிடம் 3, 4 பாதங்கள் – மிதுனம் – ஆனி
திருவாதிரை – மிதுனம் – ஆனி
புனர்பூசம் 1, 2, 3, பாதங்கள் – மிதுனம் – ஆனி
புனர்பூசம் 4 ஆம் பாதம் -கடகம் – ஆடி
பூசம் – கடகம் – ஆடி
ஆயில்யம் – கடகம் – ஆடி
மகம் – சிம்மம் – ஆவணி
பூரம் – சிம்மம் – ஆவணி
உத்திரம் முதல் பாதம் – சிம்மம் – ஆவணி
உத்திரம் 2, 3, 4, பாதங்கள் – கன்னி – புரட்டாசி
அஸ்தம் – கன்னி – புரட்டாசி
சித்திரை 1, 2 பாதங்கள் – கன்னி – புரட்டாசி
சித்திரை 3, 4, பாதங்கள் – துலாம் – ஐப்பசி
சுவாதி – துலாம் – ஐப்பசி
விசாகம் 4 ம் பாதம் – விருச்சிகம் – கார்த்திகை
அனுஷம் – விருச்சிகம் – கார்த்திகை
கேட்டை – தனுசு – கார்த்திகை
மூலம் – தனுசு – மார்கழி
பூராடம் – தனுசு – மார்கழி
உத்திராடம் முதல் பாதம் – மகரம் – மார்கழி
உத்திராடம் 2, 3, 4, பாதங்கள் – மகரம் – தை
திருவோணம் – மகரம் – தை
அவிட்டம் 1, 2, பாதங்கள் – கும்பம் – தை
சதயம் – கும்பம் – மாசி
பூரட்டாதி 1, 2, 3, பாதங்கள் – கும்பம் – மாசி
பூரட்டாதி 4 ம் பாதம் – மீனம் – பங்குனி
உத்திரட்டாதி – மீனம் – பங்குனி
ரேவதி – மீனம் – பங்குனி

ஒருவர் தன்னுடைய நட்சத்திரம் அல்லது ராசிக்கு எந்த மாதம் சூன்ய மாதமாக இருக்கிறதோ அதில் மனை அல்லது வீடு வாங்கக்கூடாது. கட்டட வேலையை ஆரம்பிக்கக்கூடாது. கிரகப்பிரவசமும் செய்யக்கூடாது

தலை வாசல் அமைக்கும் முறை


எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். அதே போன்று நாம் அமைக்க இருக்கும் வீட்டிற்குத் தலைவாசல் பிரதானம். தலைவாசல் என்பது அந்த வீட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதாகும்.

1. கிழக்கு திசை பார்த்த வீடு :

கிழக்கு பார்த்த வீட்டிற்கு முன்பாக நின்று வலதுபுறம் முதல் இடப்புறம் வரை (ஈசான்ய முதல் அக்னிவரை) 9 பிரிவுகளாகப் பிரிக்க வேண்டு அதைச் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று முறையே பிரிக்க வேண்டும். இதில் சந்திரன் பகுதியிலும் மற்றும் புதன், குரு, சுக்கிரன் பகுதியிலும் தலைவாசல் அமைக்க வேண்டும்.

கிழக்கு தலைவாசல் கொண்ட இல்லத்தில் தலைவாசல் வடகிழக்குத் திசையை நோக்கி இருக்கும்படி கட்டினால் செல்வம் வளரும். தென்கிழக்கு திசை நோக்கி வாசல் அமைத்தால் பல சிக்கல்கள் உண்டாகும். நெருப்பால் அச்சம், கடன், ரோகங்கள் போன்றவை ஏற்படும்.

2. தெற்கு திசை பார்த்த வீடு :

தெற்கில் தெரு இருந்து தெற்கு திசை நோக்கித் தலைவாசல் அமைக்கும்போது, கிழக்கிலிருந்து மேற்காக வீட்டின் சுவரை ஒன்பது பகுதிகளாக்கி, கிழக்கிலிருந்து முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என ஒன்பது கிரகங்களுக்கும் பங்கிட வேண்டும். சந்திரன் அல்லது புதன், குரு, சுக்கிரன் பகுதியில் தலைவாசல் வைத்துக் கொள்வது நன்மைகள் தரும்.

தெற்குத் திசையில் தலைவாசல் இருக்கும்போது, அதற்கு நேராக வடக்கில் ஒரு வாயில் இருக்க வேண்டும். தெற்கில் மட்டும் ஒரு வாயில் அமைக்கக் கூடாது. மேற்கு வாயில் வைக்கக் கூடாது.

இந்தத் திசையில் வாயில் வைக்கும்போது வாயில் தென்மேற்குத் திசையை நோக்கி வைத்தால் பகைவரால் துன்பம், குலநாசம் அகால மரணம் போன்ற துன்பங்கள் ஏற்படும் தென்கிழக்குத் திசை நோக்கி அமைத்தால், நெருப்பால் அல்லது ஆயுதத்தால் தீங்கு எனப் பல துன்பங்கள் தரும். எனவே, சரியாகத் தெற்கு நோக்கியே அமைக்க வேண்டும்.

தெற்கு நோக்கிய வீட்டில் தெற்குப் பகுதி வீட்டை உயர்த்தி மாடி கட்டி வசித்தால் செல்வம் மிகும். தெற்கு வாசல் வீட்டிற்கு மழைநீர் மற்றும் வீட்டில் உபயோகிக்கும் நீர் முதலியவை வடக்கு நோக்கிச் செல்லும்படி நீரோட்ட வழி அமைக்க வேண்டும். கிழக்குப் பகுதியில் காலியிடம் அதிகமிருந்தால் ஆண் சந்ததி உண்டு. வடக்கில் காலி இடம் அதிகமிருந்தால் செல்வச் செழிப்பு உண்டு.

3. மேற்கு திசை பார்த்த வீடு :

வீட்டின் முன்புறம் நின்று, தெற்கு முதல் வடக்காக 9 சம பாகங்களாகப் பிரித்து, முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது என்று பங்கிட வேண்டும். சந்திரன் பகுதியிலும், குரு, புதன், சுக்கிரன் பகுதியிலும் தலைவாசல் அமைக்க வேண்டும்.

மேற்கு நோக்கிய இல்லத்தின் தலைவாசல் சரியாக மேற்கு நோக்கி அமைக்க வேண்டும். தென்மேற்கு நோக்கியோ, வடமேற்கு நோக்கியோ இருக்கக் கூடாது. தீய பலன்கள் கொடுக்கும்.

4. வடக்குத திசை பார்த்த வீடு :

வடக்குத திசை கொண்ட கட்டடங்களில் தலைவாசல் அமைக்குபோது கட்டடத்திற்கு வடபுறம் நின்று மேற்கிலிருந்து கிழக்காக 9 பாகம் செய்ய வேண்டும். முன்பு கூறியது போன்று சந்திரன் பகுதியிலும், குரு, புதன், சுக்கிரன் பகுதியிலும் தலைவாசல் அமைக்க வேண்டும்.

சூரியன் முதலாகக் கேது வரையிலான பகுதிகளில் நடைவைத்தால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.

சூரியன் – ஆதாயம் குறையும் தாய்க்கும், பிள்ளைக்கும் கருத்து
வேறுபாடு சண்டை சச்சரவுகள் உண்டு.
சந்திரன் – விருத்தியும், தாழ்ச்சியும் மாறி வரும்.
செவ்வாய் – மனைவிக்கு ஆகாது. எதிரிகள் பயம் உண்டு.
புதன் – லட்சுமி கடாக்ஷம், கல்வியறிவு மிகும்.
குரு – தனதான்ய சம்பத்து, ஆபரணச் சேர்க்கை.
சுக்கிரன் – நீண்ட ஆயுள், சுபபலன்கள், யோகபாக்கியம்
சனி – பொருள் நாசம், வழக்கு, கலகம்.
ராகு, கேது – கட்டடம் அடிக்கடி கைமாறும், தீய பலன்கள்
கொடுக்கும்.
எனவே, புதன், குரு பகுதியில்தான் வைக்க வேண்டும். மிகுந்த நன்மை பயக்கும். சுக்கிரன் பகுதி தியேட்டர்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு அமைக்கலாம். பெண்கள் ஆதிக்கம் மிகும். மற்றப் பகுதிகளில் கூடாது.

வீட்டின் முன்கதவு/நுழைவாயிலுக்கான வாஸ்து சாஸ்திரம் பற்றிய முக்கிய ஆலோசனைகள்

வாஸ்து சாஸ்த்திரத்தின்படி, ஒரு வீட்டின் முன்வாசல் என்பது அந்த வீட்டின்
குடும்பத்தினர் உள்ளே சென்று வருவதற்கு மட்டும் கிடையாது, நல்ல எண்ணங்களை
மற்றும் ஆற்றலை வீட்டினுள் கொண்டு வருவதற்கான ஒரு வழியாகும். "வீட்டின்
நுழைவாயில் என்பது நிச்சயமாக ஒரு நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு
மண்டலமாகும், நாம் ஒவ்வொரு முறையும் வெளி உலகத்திலிருந்து வந்து வீட்டிற்குள்
நுழைகிறோம். எனவே மகிழ்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டங்கள் அனைத்தும் உள்ளே
நுழைவதற்கான ஒரு சரியான இடம்தான் இந்த வீட்டின் நுழைவாயில்” என்று
சொல்கிறார் மும்பையைச் சேர்ந்த வாஸ்து சாஸ்த்திர ஆலோசனை நிபுணர் நிதேன்
பர்மார். "இதன் விளைவாக, வீட்டின் நுழைவாயில் மிகவும் முக்கியத்துவம்
அளிக்கப்பட்டது, ஏனெனில் இது ஆரோக்கியம், செல்வம் மற்றும் நல்லிணக்கத்தை
ஊக்குவிப்பதோடு இவற்றை எல்லாம் உள்ளே அல்லது வெளிமண்டல ஆற்றல்
ஓட்டத்திலேயே வைத்துள்ளது. மேலும், வீட்டின் நுழைவாயில் கதவானது அந்த வீட்டை
பற்றிய ஒரு நல்ல அபிப்ராயத்தினை முதலிலேயே உருவாக்குகிறது," என்றும் அவர்
குறிப்பிடுகிறார்.
நுழைவாயில் கதவின் திசை
”நுழைவாயில் கதவானது எப்போதும் வடக்கு, வட கிழக்கு, கிழக்கு அல்லது மேற்கு
வாசலாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தெற்கு, தென்மேற்கு,
வடமேற்கு (வடக்குப் பகுதி), அல்லது தென்கிழக்கு (கிழக்குப்பகுதி) போன்ற திசைகளில்
நுழைவாயில் கதவுகளை வைப்பதை தவிர்க்கவும். தெற்கு அல்லது தென்மேற்கு
பகுதிகளில் நுழைவாயில் கதவு அமைந்திருந்தால் அதை ஒரு முன்னணி உலோக பிரமிடு
மற்றும் முன்னணி ஹெலிக்ஸை (சுருள்) பயன்படுத்தி சரி செய்திட முடியும். வடமேற்கு
திசையில் அமைந்துள்ள கதவை, ஒரு வெண்கல பிரமிடு மற்றும் ஒரு பித்தளை ஹெலிக்ஸ்
(சுருள்) மூலம் சரி செய்ய முடியும், தென்கிழக்கு திசையில் அமைந்துள்ள கதவை
செப்பினால் ஆன‌ ஹெலிக்ஸை (சுருள்) பயன்படுத்தி சரி செய்ய முடியும்," என்று பார்மார்
அறிவுறுத்துகிறார்.

வீட்டின் நுழைவாயில் கதவானது வீட்டினுள் இருக்கும் மற்ற கதவுகளை விட
மிகப்பெரியதாக இருக்க வேண்டும் மற்றும் இந்த நுழைவாயில் கதவானது கடிகார
சுற்று முறையில் திறக்கும்படி அமைந்து இருக்க வேண்டும். நுழைவாயில் கதவுக்கு
இணையாக ஒரே வரிசையில் மூன்று கதவுகளை வைப்பதை கண்டிப்பாக
தவிர்க்கவும், ஏனென்றால் வாஸ்து சாஸ்த்திரப்படி இது மிகப்பெரிய குறைபாடாக
கருதப்படுவதோடு, இப்படி கதவு வைப்பதால் அது வீட்டிற்குள் இருக்கும்
மகிழ்ச்சியினையும் பாதிக்கும்.
இதைப்பற்றி மேலும் பார்ப்பதற்கு: புதிய அடுக்குமாடி குடியிருப்பினை
தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய வாஸ்து முறைகள்
நுழைவாயில் கதவிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள்:
 நுழைவாயிலில் இருக்கும் கதவானது மரக்கதவாக இருப்பது மிகவும் சிறந்ததாக
கருதப்படுகிறது.
 தெற்கு திசை: இந்த திசையில் இருக்கும் கதவானது மரம் மற்றும் உலோகம்
இரண்டும் சேர்ந்த கலவையினை கொண்டிருக்க வேண்டும்.
 மேற்கு: உலோக வேலைப்பாடுடன் இருக்க வேண்டும்.
 வடக்கு திசைப்பக்க கதவு: அதிக அளவில் வெள்ளி நிறத்திலான வண்ணத்தில்
இருக்க வேண்டும்
 கிழக்கு: மரத்தினால் செய்யப்பட்டிருக்கவேண்டும் மற்றும் குறைந்த அளவிலான
உலோக பாகங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
நுழைவாயில் கதவினை சுற்றி செய்ய வேண்டிய அலங்காரங்கள்
ஒரு சுத்தமான வீடு, குறிப்பாக நுழைவாயில் சுத்தமாக இருக்க வேண்டும், இப்படி
இருந்தால் நல்ல எண்ணங்கள் வீட்டிற்குள் வரும். குப்பை தொட்டிகள், உடைந்த
நாற்காலிகள் அல்லது முக்காலிகள் போன்றவற்றினை வீட்டின் முன்கதவிற்கு அருகில்
கண்டிப்பாக வைக்கக்கூடாது என்று மும்பையை சேர்ந்த முழுமையான மருத்துவராகிய
(ஹோலிஸ்டிக் ஹீலர்) காஜல் ரோஹிரா எச்சரிக்கை செய்கிறார்.
"நுழைவாயிலை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் தேவையான அளவிற்கு
வெளிச்சம் இருக்க வேண்டும். நுழைவாயில் பகுதியில் வாசலுக்கு எதிர்திசையில்
கண்ணாடியினை வைக்கக்கூடாது, ஏனென்றால் இது நுழைவாயில் கதவின்
பிம்பத்தினை அப்படியே பிரதிபலிக்கும், இதனால் வீட்டினுள் வரும் நல்ல
ஆற்றலை அப்படியே திருப்பி அனுப்பி விடும்," என்று ரோஹிரா கூறுகிறார்.

டெல்லியில் இருக்கும் குடும்பத்தலைவியான தான்யா சின்ஹா, அவர் வசிப்பதற்காக
கிழக்கு பார்த்தவாறு இருக்கும் வீட்டை வாங்கும்முன் கிட்டத்தட்ட ஒரு டஜன்
அடுக்குமாடி குடியிருப்பினை நிராகரித்தார், ஏனென்றால் அவர் பார்த்த அத்தனை
வீடுகளிலும் நுழைவாயிலானது வாஸ்து சாஸ்த்திரப்படி அமைந்திருக்கவில்லை.
"என்னுடைய வீட்டின் நுழைவாயில் கதவானது மிகுந்த கலைநயமுடன்
வடிவமைக்கப்பட்டு, தங்க நிறத்தினால் பூசப்பட்டிருக்க வேண்டும். அந்த கதவில்
ஸ்வஸ்திக் வடிவமானது செதுக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அதில் தங்க நிறத்திலான
பெயர் பலகையும் அமைந்திருக்க வேண்டும். நுழைவாயிலானது எப்போதும் அழகான
வரவேற்பினை அளிக்கும்படியாக இருக்க வேண்டும் மேலும் நான் நுழைவாயிலுக்கு
அருகில் அழகான மஞ்சள் நிறத்திலான விளக்கினை வைப்பேன்," என்றும் அவர்
விளக்குகிறார்.
நுழைவாயிலில் எப்போதும் வாசக்கால் (நிலைவாயிற்படி) இருக்க வேண்டும்,
(பளிங்கு அல்லது மரத்தினால்), இப்படி வாசக்கால் வைப்பதால் இந்த
வாசக்காலானது கெட்ட சக்திகளை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு, நல்ல
சக்தியினை மட்டும் வீட்டிற்குள் அனுப்பும் என்று நம்பப்படுகிறது. நுழைவாயில்
கதவினை தெய்வீக சின்னங்களை கொண்டு அலங்கரிக்கவும், அதாவது ஓம்,
ஸ்வஸ்திக், சிலுவை, மற்றும் இன்னும் பல., மேலும் தரையில் கோலத்தினை
போட்டு அலங்கரிக்கவும், இவை எல்லாம் நல்ல சகுனங்களாக கருதப்படுவதோடு,
நல்ல அதிர்ஷ்டத்தினையும் வீட்டினுள் வரவழைக்கும்.
நுழைவாயில் கதவிற்கான வாஸ்துவில் செய்ய வேண்டியவை மற்றும்
செய்யக்கூடாதவை
 நுழைவாயிலில் எப்போதும் பிரகாசமான வெளிச்சத்தினை தரும் விளக்குகளை
வைக்கவும், சிவப்பு நிறத்திலான விளக்கினை தவிர்த்து விடவும்.
 நுழைவாயில் கதவில் தினமும் மாலைப்பொழுது நேரங்களில் விளக்கானது எரிந்து
கொண்டு இருக்க வேண்டும்.
 நுழைவாயிலில் இடமிருந்தால், பச்சை பசேல் என்ற தாவரங்கள் மற்றும் செடிகளை
கொண்டு அலங்கரிக்கவும்.
 நுழைவாயில் கதவானது 90 டிகிரி கோணத்தில் திறக்கப்பட வேண்டும், உள்ளே
வரும் வழியில் எந்தவொரு தடையும் இருக்கக்கூடாது.
 கதவில் இருக்கும் திருகுகளில் எல்லாம் எண்ணெயானது இருக்கிறதா என்பதை
தினமும் உறுதி செய்து கொள்ள வேண்டும் (கதவை திறந்து மூடும் போது
தேவையற்ற சத்தத்தினை தவிர்ப்பதற்கு), மேலும் கதவின் அனைத்து பகுதிகளும்
பளபளப்பாக இருக்க வேண்டும்.

 நுழைவாயிலில் உடைந்த மரத்துண்டுகளோ அல்லது மரச்சில்லுகளோ, அல்லது
தவறவிடப்பட்ட திருகுகளோ எதுவும் இருக்கக்கூடாது.
 கூடுதலான ஆணிகளை எல்லாம் கட்டாயம் அகற்றிவிட வேண்டும்
 எப்போதும் கதவில் பெயர்ப்பலகை இருக்க வேண்டும்.
 ஒருவேளை கதவானது வடக்கு அல்லது தெற்கு பார்த்தவாறு இருந்தால், அந்த
கதவில் உலோகத்திலான பெயர்ப்பலகை வைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
 ஒருவேளை கதவானது தெற்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு இருந்தால், அந்த
கதவில் மரத்திலான பெயர்ப்பலகை வைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

குரு சிஷ்யன்.



ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தார் வணிகர் ஒருவர். அவர் பார்க்காத ஜோதிடர்களே இல்லை. அந்த அளவுக்கு எப்போதும் ஜாதகத்தைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு அலைபவராகவே அறியப்பட்டார்.

ஒருநாள் குருநாதரையும் சந்திக்க வந்தார்.

‘‘என் ஜாதகத்தைப் பார்த்த எல்லா ஜோதிடர்களும் எனக்கு நல்ல நேரம் வந்துவிட்டதாகவே கூறுகிறார்கள். வெற்றிகள் என்னைத் தேடிவரும் என்றுதான் பலன் கூறுகிறார்கள். ஆனால், அப்படியேதும் நடக்கவில்லை. நல்லதைவிட கெட்டதைத்தான் அதிகம் சந்திக்கிறேன். வெற்றிகளைவிட தோல்விகளே அதிகமாகக் கிடைக்கின்றன. என் ஜாதகத்தில் குறையேதும் இருக்கிறதோ என கவலையாக இருக்கிறது ஸ்வாமி..’’ என்று சோகம் வடியும் முகத்துடன் கூறினார்.

அவரைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. ஆசுவாசப்படுத்துவதற்காக கோப்பையில் நீர் எடுத்துவந்து பருகக் கொடுத்தான் சிஷ்யன்.

பருகிவிட்டு தன் பரிதாப முகபாவத்தைத் தொடர்ந்தார் அந்த வணிகர்.

பேச ஆரம்பித்தார் குருநாதர்.. ‘‘ஜோதிடத்தை முழுதும் நம்பிக்கொண்டு ஜோதிடர்களைச் சந்திப்பதற்காகவே ஊர் ஊராக அலைந்து, தொலைந்துபோனால் திரும்ப வராத நிகழ்காலத்தை வீணடிப்பது தவறு. நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. சர்க்கரைப் பொங்கல் உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் அதையே சாப்பிட்டுக்கொண்டிருக்க விரும்புவீர்களா?’’ என்றார்.

‘‘அப்படியானால் ஜோதிடத்தைப் பொய் என்று சொல்கிறீர்களா ஸ்வாமி?’’ என்று திருப்பிக் கேட்டார் வணிகர்.

‘‘அப்படியில்லை’’ என்றார் குரு. தொடர்ந்து ஆழமாகப் பேசினார்.. ‘‘கோள்களை அடிப்படையாகக் கொண்டதுதான் ஜோதிட சாஸ்திரம். தன் தவ வலிமையால் ஒன்பது கோள்களையும் சிறைப்பிடித்தவன் ராவணன். கோள்களைப் படிக்கட்டுகளாக்கி அவற்றின் மீதேறி சிம்மாசனம் அமர்ந்தவன். அவனது கதி என்ன என்பது தெரியும்தானே!’’.

நிமிர்ந்து உட்கார்ந்தான் சிஷ்யன்.

குரு தொடர்ந்தார்.. ‘‘ஜோதிட சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவன் சகாதேவன். அவன் குறித்துக்கொடுத்த நாளில்தான் போருக்குப் போனான் துரியோதனன். அவனது கதி என்ன என்பதும் தெரியும்தானே!’’.

நிமிர்ந்து உட்கார்ந்தார் அந்த வணிகரும்.

குரு பிரவாகம் தொடர்ந்தது.. ‘‘நூற்றுக்கணக்கானோர் உங்கள் ஊரில் வணிகம் செய்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் முந்தி நின்று நீங்களே எப்போதும் வெற்றியாளராக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும், அதற்காக ஜோதிடர்களைச் சந்திப்பதும் பேராசை மட்டுமல்ல.. முட்டாள்தனமும்கூட. உங்கள் ஜாதகம் அருமையாக இருக்கிறது என ஜோதிட சாஸ்திரம் கூறலாம். நீங்கள் சந்தித்த ஜோதிடர்களும் கூறலாம். ஆனால், உங்களோடு களத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கானோரின் ஜாதகங்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதை நீங்கள் சந்தித்த ஜோதிடர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லையே! அத்தனை பேரின் ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தானே யாருக்கு பலாபலன்கள் அதிகமாக இருக்கின்றன என்று கூற முடியும். மற்றவர்களின் ஜாதகங்களை மட்டமாக எடுத்துக்கொண்டு, நீங்கள் மட்டுமே எப்போதும் வெற்றியாளர் என்று கூறுவது எப்படி சரியானதாக இருக்க முடியும்..’’.

குருநாதர் பேசப்பேச.. குழம்பிப்போனார் அந்த வணிகர்.

‘‘கர்மவினைக்கான பலன்களை ஜோதிட சாஸ்திரம் மூலம் அறியலாம். ஆனால், அதனை அறிந்துகொள்வதால் எவ்வித உபயோகமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஜாதகத்தின்படி கோள்கள் ஒருவனுக்குச் சாதகமாக இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அதனைத் தெரிந்துகொண்ட அலட்சியத்தாலும் முயற்சியின்மையாலும் அவன் தனக்கான வெற்றி வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

ஜாதக அடிப்படையில் ஒருவனுக்கு நேரம் சரியில்லை என்று எடுத்துக்கொள்வோம். ஆனாலும்.. உழைப்பும் விடாமுயற்சியும் அவனை வெற்றியாளனாக ஆக்கும். இதைத்தான் விதியை மதியால் வெல்லமுடியும் என்கிறார்கள். ஆக.. ஜோதிடம் உண்மை. உழைப்பும் விடாமுயற்சயும் அதை விடவும் உண்மை’’ என்றார் குரு.

‘‘ஒப்புக்கொள்கிறேன் ஸ்வாமி. ஜோதிடர்களைச் சந்திப்பதற்காக ஊர் ஊராகச் சென்றிருக்கிறேன் நான். அதற்காக விரயம் செய்த நாட்களை வியாபாரத்தைக் கவனிப்பதற்குச் செலவு செய்திருந்தால் நிச்சயம் இப்போதிருப்பதைவிட நல்ல நிலையை அடைந்திருப்பேன்’’ என்று கூறிவிட்டு குருவை வணங்கினார் வந்திருந்த வணிகர்.

சிஷ்யனுக்கும் அருமையான பாடம் கிடைத்தது.

Monday, November 18, 2019

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!




* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!

* பித்தத்தைப் போக்கும்......!

* உடலுக்குத் தென்பூட்டும்......!

* இதயத்திற்கு நல்லது......!

* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!

* கல்லீரலுக்கும் ஏற்றது......!

* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!

* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!

* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!

* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!

*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்......!

* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!

* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!

* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!

* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!

* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!

* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!

* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!

* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!

* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....

படித்துவிட்டு அதிகம் பகிருங்கள்...!

என்றும் உங்களுடன் ,

7 1/2 (((மற்றும்))) அஷ்டம சனி காலங்களில் நாம் உணருவது ,,,,,,,,



நமக்கும் மீறி ஒரு சக்தி உண்டு

ஜோதிடம் உன்மை,,,,அதில் ஏதோ ஒரு மிகப் பெரிய உண்மை உள்ளது

பணம் என்றால் என்ன

பாசம் என்றால் என்ன

தான் என்னும் அகந்தை அழிவது

நாம் எடுக்கும் முடிவு மட்டும் சரி ஆகாது

அடுத்தவரை மதிக்க வேண்டும்

கடவுள் இருக்கிறார்

உறவுகள் என்றால் என்ன

நம்பிக்கை துரோகம் இப்படி தான் நடக்குமோ

போராசை பட கூடாது

ஒவர் பில்டப் உடம்புக்கு ஆகாது

ஏமாற்று வேலை என்பது என்ன

யார் நல்லவர், கெட்டவர்

வாக்குறுதி வீணாகி போவது

நம்பினோர் கை விடுவது

முன்னேற்றம் ஒரே நாளில் நடக்காது

அவசர முடிவு ஆபத்து தரும்

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மண வருத்தம் நடக்கும்

இதுபோன்ற இன்னும் சில முக்கிய படிப்பினைகள் கிடைக்கும்,,,,மேற் சொன்ன காலகட்டத்தில்

இதை உணர்ந்தவர்கள் ,,,,,,,#ரிஷபம்_மேஷம்
#விருச்சிகம்_தனுசு

உணர்ந்து கொண்டு இருப்பவர்கள்
#மகரம்

உணர போகிறவர்கள்,,,,
#மிதுனம்_கும்பம்_கடகம்

இதை தருவது #சனிபகவான்

தீர்வு,,,,,,,இருப்பது போதும் என்றால் பிரச்சினை இல்லை........

கார்த்திகை மாத முதல் சோமவாரம்

சந்திரனின் சாபம் போக்கிய கார்த்திகை சோமவார விரதம்..

சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.

கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் இருந்தாலும், அவற்றில் சிறப்பான விரதமாக கடைப்பிடிக்கப்படுவது கார்த்திகை சோமவார விரதமாகும். சிவபெருமானை நினைத்து செய்யப்படும் இந்த விரதம் ஈசனின் அருளைப் பெற சிறந்த வழியை ஏற்படுத்தித் தரும் விரத முறையாகும். திங்கட்கிழமை என்பது சோம வாரம் என்று அழைக்கப்படுகிறது. சிவனை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ள ப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது.

இந்த விரதத்தை கார்த்திகை முதல் சோமவார த்தில் இருந்து சோமவாரம் அனைத்தும் கடை ப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிப்பது சிறப்புக்குரியதாகும். இல்லையெனில் 1, 2, 3, 12, 14 ஆண்டுகள் விரதம் அனுஷ்டிப்பேன் என்று சங்கல்பம் செய்து விரதத்தை தொடங்க வேண்டும்.

சந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்ல பட்ச அஷ்டமி திதியில்தான். பெரியவன் ஆன தும், ராஜசூய வேள்வி ஒன்றை நடத்தி, பெரும் புகழை அடைந்தான். சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தனது 27 பெண்களை யும் சந்திரனுக்கு மணம் முடித்து கொடுத்தான். ஆனால் சந்திரன், 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள்.

பெண்களின் வருத்தத்தை அறிந்த தட்சன், சந்திரனை வரவழைத்து, ‘'அனைத்து பெண்க ளிடமும் அன்பாக இரு’' என்று கூறினான். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘'அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போவாய்’' என்று சாபம் கொடுத்தான்.

தட்சனின் சாபத்தால், தான் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மா விடம் சென்று முறையிட்டான். அவரோ சிவபெ ருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தி னார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடி யில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.

சந்திரன், சிவபெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ‘ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.

விரதம் இருக்கும் முறை :

சோமவார விரதத்தை கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவ தும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லை யென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.

ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்க வேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.

கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.

பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கி ய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்ப து நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப் பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் பாவங்கள் அகலும், நோய் அண்டாது என்பது ஐதீகம்.

ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..

Sunday, November 17, 2019

ஸ்ரீ கால பைரவர் சஷ்டி கவசம் சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர் திருஷ்டியால் காக்கும் காலபைரவர்

ஸ்ரீ கால பைரவர் சஷ்டி கவசம் சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர் திருஷ்டியால் காக்கும் காலபைரவர்

அகிலம் போற்றும் அஷ்டபைரவர் அன்பால் காக்கும் ஆனந்ததபைரவர்

சொர்ணம் தருவார் சொர்ண பைரவர் சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்

சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர் சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்

ஸ்ரீ காலபைரவரை வழிபட்டு வாழ்வில் மேன்மை அடைவோம் .ஓம் பைரவா போற்றி

ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை



பைரவர் சஷ்டி கவசம்

வணங்குவோர்க்கு வாழ்வு தரும்

வாழ்த்துவோர்க்கு வசதி தரும்

போற்றுவோர்க்கு புகழ் தரும்

தூற்றுவோர்க்கும் இன்பம் தரும்

நினைத்தாலே இன்பம் தரும்

நீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே!

பக்தர் பரவசமுற பலன்தரும்

பைரவர் திருவடியே கதி

சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர்

திருஷ்டியால் காக்கும் காலபைரவர்

அகிலம் போற்றும் அஷ்டபைரவர்

அன்பால் காக்கும் ஆனந்ததபைரவர்

சொர்ணம் தருவார் சொர்ண பைரவர்

சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்

சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர்

சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்

வருக வருக வடுகபைரவா வருக

வளம் தர வருக வஜ்ரபைரவா வருக

வருக வருக உக்கிர பைரவா வருக

உவகைதர வருக உலக பைரவா வருக

பைரவி போற்றும் பைரவா வருக

ஆனந்த நடனா ஆனந்த பைரவா வருக

ஆணவம் அழிக்கும் ஆக்ரோஷ பைரவா வருக

ஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக

காலத்தின் நாயகா கால பைரவா வருக

கலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக

நலம் தரும் நரசிங்க பைரவா வருக

நாளும்காக்கும் நாக பைரவா வருக

கோபம் போக்கும் கோவிந்த பைரவா வருக

ஞாலம் போற்றும் ஞான பைரவா வருக

தாகம் தீர்க்கும் தராபாலன பைரவா வருக

மோகம் போக்கும் முண்டனப்பிரபு பைரவா வருக

அவலம் போக்கும் அஸிதாங்க பைரவா வருக

குவலயம் காக்கும் குரோதன பைரவா வருக

உலகம் புரக்கும் உன்மத்த பைரவா வருக

திருவருள் புரியும் திகம்பர பைரவா வருக

சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக

ருசியான உணவு தரும் ருருபைரவா வருக

சந்தோஷம் தரும் சம்கார பைரவா வருக

பித்தம் போக்கும் பீஷண பைரவா வருக

வருக வருக வரமருளும் வரத பைரவா வருக

தருக தருக தாராளமாய் தரும் தயாள பைரவா வருக

பருக பருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக

பெருக பெருக செல்வம் தரும் பிசித பைரவா வருக

நடனம் புரியும் நர்த்தன பைரவா வருக

சதிராடும் சர்பப பைரவா வருக

ஆட்டமாடும் ஆனந்த பைரவா வருக

பாட்டுபாடும் பர்வத வாகன பைரவா வருக

சுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்

முப்புரமெரி செய் முக்கண்ணும்

முகவழகுகூட்டும் நாசியும்

சீற்றம் காட்டும் சிங்க பல்லும்

இடது செவியில் பெண்ணாபரணமும்

இன்பமூட்டும் இளநகையும்

அழகிய தோளும் அற்புத அழகும்

மார்பில் பஞ்சவடி தரும் எழிலும்

எழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்

இளமை காட்டும் வாலிபமும்

மணிஒசை தரும் கிண்கிணியும்

கையிலே கபாலமும் சூலமும்

தோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்

ஏற்றம் தரும் தோற்றமாய்

பத்தினி பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்

பரவசம் தர வருகவே வருகவே

மெய் உணவு கேட்ட மெய்யடியாரே

உய்ய வழிகாட்டும் உத்தமரே

பொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே

சேய் மகிழ விரைந்து வருவீரே

ஆணவ பிரமன் ஆர்ப்பரிக்க

அன்னை பார்வதி மனம் நொந்திடவே

ஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிகிளம்பி

அச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்

தலையொன்று துண்டான பிரமனும் சாபமிட்டான்

தாயுமானவன் சிரித்தபடி ஏற்றான்

கையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றிடவே

பூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே

கற்றவர் போற்றும் காசியாம்

பாவம் போக்கும் பத்ரிநாத்தாம்

எங்கும் திரிந்தான் பரமன்

காசியிலே கபாலம் கையை விட்டுபோனதே

கபாலம் நீங்கிடவே விசுவநாதரை வணங்கிட்டார்

காசியிலே நின் ஆட்சி நிலைக்கட்டுமென்றார்

கால பைரவராய் ஈசனிருந்திட்டான்

காலமெல்லாம் இன்னல் தீர்த்திட்டான்

மூலப்பொருள் யாரென ஓர் தேடல் நடந்திட்ட வேளையிலே

ஜீவப்பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே

பொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்

கிள்ளியெடுத்திட்டான் அத்தலைதனை

வீடுதேடியொரு வேளையிலே

பிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே

ஐந்தில் ஒருதலையே தூற்றியதாம்

தூற்றிய துஷ்டதலையினை கிள்ளிட்டான் ஈசனுமே

எத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்

அகங்காரம் கொண்டோர் ஆணவமுள்ளோர்

அழிந்திடத் தான் வேண்டுமென்றே

பிரிம சிரம் துண்டித்தான் எம்பிரானே

பத்ரிநாத்திலே பிரம்மகபாலம் தெறித்துவிழுந்ததாம்

காசியிலே கபாலம் கையைவிட்டகன்றதாம்

கண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்ததாம்

மலையனூரில் பரமேஸ்வரின் காலில் மிதிபட்டதாம்

எல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிட்டார் பைரவர்

முனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்

அன்னமளப்பவனுக்கே அன்னமிட்டாள் அன்னபூரணி

ஆண்டியாய் அகிலம்மெலாம் சுற்றிவந்தார் பரமனே

இரத்தபிட்சை பெற்றிட வைகுண்டமேகினார்

இடையிலே வந்த விச்வக்சேனர் சூலத்தில் சிக்கிட்டார்

விஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்

கபாலமே நிறையவில்லை மயங்கிவிட்டார் மஹாவிஷ்ணு

கண்ணான கணவன் மயங்கிவிழவே

கதறி அழுதிட்டாள் மஹாலட்சுமி

கணவனுயிரை தருமாறு சாவித்திரியானாள்

மணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ

மாண்டவர் மீண்டால் மகிழ்வாரன்றோ

மாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்

பத்து அவதாரமெடுத்து பகைவரையழித்தே

இரத்த மளித்து கபாலம் நிரப்பிடுவேன் என்றார்

அந்தகாகரனென்னும் புதல்வனும் அகரனானான்

அகிலத்தையே ஆட்டி படைத்தான்

அன்னையுருவு கண்டு ஆசைபட்டான்

அவனை அழித்து அல்லல் அகற்றினார்

மணி மல்லர்கள் செயிதிட்ட கொடுமை அதிகம்

இனியொரு விதி செய்தே மக்களை காக்க

கனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே

மதிகெட்டவர்களை அழித்திட்டார்

முண்டன் என்றொரு கொடியவன்

கண்டபடி தந்தான் துன்பங்களை

அண்டம் நடுங்க ஆட்டிப்படைத்தான்

பிண்டமாய் வீழ்த்தினார் பைரவரே

எண்ணங்களிலே மாற்றம் தரும்

இதயத்திலே எழுச்சி தரும்

அடியவருக்கு அருள் புரியும்

பைரவ புராணத்தை பாடிடுவோம்

காலத்தின் நாயகன் கால பைரவனென்றே

ஜோதிடமும் ஆன்மீகமும் கூறிடுமே

விதியும் அவனே வெற்றியும் அவனே

வேதமும் அவனெ வேதநாயகனும் அவனே

அட்டவீரட்ட தலங்கள் அற்புத தலங்கள்

ஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்

அம்பலவாணன் பைரவருபமான இடங்கள்

அகிலத்தோரை காத்திட்ட தலங்கள்

தெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்

ஐந்து முக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்

எத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரே தெய்வம்

அத்துனை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே

எங்கும் பைரவர் எதிலும் பைரவர்

என்றோதி மகிழும் நெஞ்சோர் வாழ்க

ஐந்துதலையரசே ஆகாசபைரவரே

அல்லல் நீங்கிட வருவீரே

தலைதனை தரபாலன பைரவர் காக்க

கேசந்தனை கேசர பைரவர் காக்க

நெற்றிதனை நிர்பய பைரவர் காக்க

கண்ணிரெண்டும் கதாதர பைரவர் காக்க

செவிதனை ஸ்வஸ்கந்த பைரவர் காக்க

நாசிதனை நர்த்தன பைரவர் காக்க

வாய்தனை வஜ்ர அத்த பைரவர் காக்க

நாக்கினை நானாரூப பைரவர் காக்க

கழுத்தினை கராள பைரவர் காக்க

தோள்தனை திரிநேத்ர பைரவர் காக்க

கைகளிரெண்டும் கபாலபூடண பைரவர் காக்க

மார்பினை மந்திரநாயக பைரவர் காக்க

விலாவினை விருபாச பைரவர் காக்க

வயிறுதனை விஷ்ணு பைரவர் காக்க

இடுப்பினை இரத்தபிட்சா பைரவர் காக்க

மறைவுப்பகுதிதனை மங்கள பைரவர் காக்க

தொடைகளிரெண்டும் திரிபுராந்தக பைரவர் காக்க

முழங்கால்களை முத்தலைவேல் பைரவர் காக்க

பாதம்மிரண்டும் பரம பைரவர் காக்க

விரல்களனைத்தும் விஜய பைரவர் காக்க

இன்னல்தரும் இதயநோய் போக்குவாய் போற்றி

சங்கடம்தரும் சர்க்கரை நோய் போக்குவாய் போற்றி

சீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய் போற்றி

உயிர்கொல்லி நோய் போக்குவாய் போற்றி

உன்மதம் போக்குவாய் போற்றி

குருட்டை நீக்குவாய் போற்றி

கர்ப்ப தோஷம் போக்குவாய் போற்றி

உஷ்ணரோகம் போக்குவாய் போற்றி

ஒவ்வாமை அகற்றுவாய் போற்றி

இளைப்பு நோய் நீக்குவாய் போற்றி

சளித்தொல்லை போக்குவாய் போற்றி

சருமத்தொல்லை நீக்குவாய் போற்றி

விஷ பயம் போக்குவாய் போற்றி

பொய்சூது பொல்லாங்கு நீக்குவாய் போற்றி

விலங்குகள் தொல்லை போக்குவாய் போற்றி

பகைமையை அழிப்பாய் போற்றி

உடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய் போற்றி

அன்னையின் அகம் மகிழ்விப்பாய் போற்றி

தந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய் போற்றி

முன்னோர்க்கும் நலம்தருவாய் போற்றி

நல்லதொரு துணைதருவாய் போற்றி

துணையின் துன்பம் களைவாய் போற்றி

சந்தானபாக்கியம் தருவாய் போற்றி

புத்திரதோஷம் போக்குவாய் போற்றி

கடன்தொல்லை நீக்குவாய் போற்றி

களிப்புடன் வாழ்விப்பாய் போற்றி

என்றும் புகழ் தருவாய் போற்றி

ஏற்றம்பெற செல்வம் தருவாய் போற்றி

பொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய் போற்றி

பில்லி சூன்யக்கொடுமை போக்குவாய் போற்றி

கெட்டவர் சதிதிட்டம் அழிப்பாய் போற்றி

பேய்,பிசாசு கொடுமை தீர்ப்பாய் போற்றி

சேட்டைகள் போக்கும் சேத்திர பாலனே வருக

பாசமிகு பைரவமுர்த்தியே வருக

காலனைவிரட்டும் கால பைரவா வருக

ஸமயோசித புத்தி தரும் சமயபைரவா வருக

கயவர்களுக்கு காலனாகும் காலாக்கினிபைரவா வருக

பாவிகளையழிக்கும் பாதாள பைரவா வருக

சுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவா வருக

சந்ததிதரும் சந்தான பைரவா வருக

ஆபத்தை நீக்கிடும் ஆதிபைரவா வருக

சிவபக்தியூட்டும் சிவஞான பைரவா வருக

வெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவா வருக

நிராயுதபாணிக்கும் நிம்மதிதரும் சூலாயுதபாணி பைரவா வருக

சுற்றம் காக்கும் சுவேட்சர பைரவா வருக

தடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவா வருக

விசாலமனம் தரும் விசாலாஷ பைரவா வருக

சம்சாரவாழ்வுதரும் சம்சார பைரவா வருக

குறைவிலா செல்வம் தரும் குபேர பைரவா வருக

கல்வி உயர்வுதரும் கபால பைரவா வருக

மேன்மைதரும் மேகநாத பைரவா வருக

சோதனை நீக்கும் சோமசுந்தர பைரவா வருக

கற்பனை வளம் தரும் மனோவேக பைரவா வருக

அவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவா வருக

சங்கடம் நீக்கும் சசிவாகன பைரவா வருக

பூதபைசாத்தினை விரட்டும் சர்பூத பைரவா வருக

தண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக

காதலில் வெற்றிதரும் காமராஜ பைரவா வருக

லாபம் தரும் லோகபால பைரவா வருக

பூமிசெல்வம்தரும் பூமிபால பைரவா வருக

ஆற்றல்தரும் ஆகர்ஷண பைரவா வருக

கண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்டபைரவா வருக

அந்தகரையும் காக்கும் அந்தக பைரவா வருக

தட்சணை பெறுவோருக்குமருளும் தட்சிண்பித்தித பைரவா வருக

வித்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவா வருக

அதிர்ஷ்டம் தரும் அதிஷ்ட்ட பைரவா வருக

பிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக

குலம்காக்கும் குல பைரவா வருக

சர்வமும் தரும் சர்வக்ஞ பைரவா வருக

ஈனனையும் காக்கும் ஈசான பைரவா வருக

சிம்மமாய் வாழ்விக்கும் சிவாராஜ பைரவா வருக

சீறிய சிந்தனைதரும் ஸீதாபாத்ர பைரவா வருக

கர்மவினை போக்கும் காலநிர்ணய பைரவா வருக

குற்றம் களையும் குல பால பைரவா வருக

சடுதியில் காத்திடும் வடுகநாத பைரவா வருக

கோரவடிவு மாற்றும் கோரநாத பைரவா வருக

புத்திதரும் புத்திமுக்தி பலப்ரத பைரவா வருக

லட்சுமி கடாட்சம் தரும் லலித ராஜ பைரவா வருக

நிறைவான வாழ்தரும் நீலகண்ட பைரவா வருக

சிக்கல் தீர்க்கும் சீரிட பைரவா வருக

கஷ்டத்தில் காத்திடும் கால ராஜ பைரவா வருக

பிதுர்க்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக

மண்டலம் போற்றும் ருண்ட மால பைரவா வருக

விருப்பமானவற்றை தரும் விஸ்வருப பைரவா வருக

சலியாத வாழ்வுதரும் பிரளய பைரவா வருக

கத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ர பைரவா வருக

பட்டினிபோக்கும் பயங்கர பைரவா வருக

எதிர்ப்பழிக்கும் மகாரெளத்ர பைரவா வருக

சோபித வாழ்வு தகும் சோமராஜ பைரவா வருக

பீடுநடைபோடவைக்கும் பிரேசத பைரவா வருக

பூர்வீக சிற்ப்புதரும் பூத வேதாள பைரவா வருக

ரத்த பாசம் தரும் ரத்தாங்க பைரவா வருக

பசிக்குணவு தரும் பராக்கிரம பைரவா வருக

வினைகள் தீர்க்கும் விக்ன ராஜ பைரவா வருக

நிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாண பைரவா வருக

சக்திக்கு பாதியுடல்தந்த சச்சிதானந்த பைரவா வருக

அட்டாமாசித்திதரும் ஓங்கார பைரவா வருக

பைரவப்ரியர் போற்றும் சிவ பைரவா வருக

பண்ணாரிதாசனும் போற்றும் பாலபைரவா வருக

ராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜபைரவா வருக

முந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவா வருக

பார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்

பக்தரை காக்கும் நல்லதொரு கவசம்

சண்முகசுந்த்தரம் பாடிய கவசம்

நவபைரவர் அருளும் நற்கலசம்

பைரவ சஷ்டி கவசம் இதனை

செப்பிடுவோர் ஜெகமாள்வர்

ஓதுவோர் ஒங்குபுகழ் பெறுவர்

கூறுவோர் கூற்றனை வெல்வர்

வாசிப்போர் வாழ்வுதனை பெறுவர்

பாடுவோர் பார்போற்ற பவனி வருவர்

சொல்வோர் சொத்துக்களை பெறுவர்

கேட்போர் கேடான நோய் நீங்கிடுவர்

சரணம் சரணம் பைரவா சரணம்

சரணம் சரணம் ஸம்ஹார சரணம்

சரணம் சரணம் திருவடி சரணம்

ஓம் பைரவா போற்றி

ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை