Monday, September 30, 2019

நன்றியுணர்வின் சக்தி



வெகு நாட்கள் முன்பு பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவை, பாலைவனத்தின் வெப்பத்தால் தன் உடலிறகுகள் அனைத்தையும் இழந்து உண்ணவும், பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது. தங்குவதற்கு ஒரு கூடு கூட இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் அல்லும் பகலும் வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் ஒரு ஞானி அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், "எங்கு செல்கிறீர்கள்" என்று கேட்டது. "முக்காலத்தையும் உணர்ந்த என் குருவை சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினர். உடனே அப்பறவை, "என்று என் துன்பங்கள் முடிவுறும் என்று அவரிடம் கேட்டு சொல்லுங்கள்" என்று பறவை கேட்டது.

"கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன்" என்று கூறிச் சென்றார்.

தன் குருவை அடைத்த அத்தூதர் இறைவனிடம் அப்பறவையின் பரிதாப நிலையை விளக்கிக் கூறி எப்பொழுது அதன் துன்பம் முடிவுறும் என்று கேட்டார். "இன்னும் ஏழு பிறவிகள் அப்பறவை அது அனுபவிக்கும் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். அதுவரை அப்பறவைக்கு எவ்வித இன்பமும் இல்லை" என்று குரு பதில் கூறினார்.

இதைக்கேட்டால் ஏற்கெனவே சோர்வுற்றிருக்கும் அப்பறவை மேலும் மனமொடிந்து போய் விடுமே என்றெண்ணிய ஞானி "இதற்கொரு நல்ல தீர்வைக் கூறுங்கள் ஐயா" என்று குருவை பணிந்து வேண்டினார்.

குருவும் மனமிரங்கி ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப கூறினால் நன்மை விளையும் என்று சொல்லி மந்திரத்தையும் கற்பித்தார். *அனைத்தும் நன்மைகே அனைத்திற்கும் நன்றி* என்பதுவே அந்த மாமந்திரம்.

குரு கற்பித்த மந்திரத்தை ஞானியும் அப்பறவைக்கு கூறிச் சென்று விட்டார். ஏழு நாட்களுக்குப் பின் அந்த ஞானி அப்பாலை நிலத்தைக் கடந்து சென்ற போது அந்த பறவை மிகுத்த ஆனந்ததுடன் இருப்பதைக் கண்டார்.

அதன் உடலிறகுகள் முளைத்திருந்தன. அப்பாலை நிலத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. ஒரு சிறிய நீர்நிலையும் அங்கு இருந்தது. ஆனந்ததுடன் அங்குமிங்கும் மகிழ்வுடன் அப்பறவை அலைந்து திரிந்து கொண்டிருந்தது.

குருவிற்கு மகா ஆச்சர்யம். ஏழு பிறவிகளுக்கு இன்பமே இல்லையென குரு கூறினாரே!! இன்றெப்படி இது சாத்தியமென எண்ணி அதே கேள்வியுடன் குருவை பார்க்கச் சென்றார்.

குருவிடம் கேள்வியைக் கேட்ட போது அவர் கூறிய பதில் இதுவே: "ஆம். ஏழு பிறவிகளுக்கு அப்பறவைக்கு எவ்வித மகிழ்வும் இல்லையென்ற விதி இருந்தது உண்மைதான். ஆனால் *அனைத்தும் நன்மைக்கே, அனைத்திற்கும் நன்றி* என்ற மந்திரத்தை அப்பறவை எல்லா சூழலிலும் மாறி மாறி கூறியதால் நிலைமை மாறியது.

பாலையின் சுடுமணலில் விழுந்த போது நன்றி சொன்னது.

வெப்பத்தில் வருந்தி பறக்க முடியாது தவித்த போதும் நன்றி சொன்னது.

*சூழல் எதுவாயினும் நம்பிக்கையுடன் சொன்னது*.

எனவே ஏழு பிறவியின் ஊழ்வினைப் பயன் ஏழு நாட்களில் கரைந்து மறைந்தது" என்று பதில் கூறினார்.

ஞானியும் தன் சிந்தனையிலும், உணர்விலும், வாழ்வை நோக்கும் கோணத்திலும், வாழ்வை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு மாபெரும் மாற்றம் விளைந்தது.

ஞானி அந்த மாமந்திரத்தை தன் வாழ்வில் உபயோகிக்க ஆரம்பித்தார் சந்திக்கும் எல்லா சூழல்களிலும்

*அனைத்தும் நன்மைக்கே, அனைத்திற்கும் நன்றி*

என்று உளமார கூற ஆரம்பித்தார்.

அதுவரை அவர் பார்த்திராத கோணத்தில் பார்க்க அந்த மந்திரம் உதவியது.

அதை போல் நாமும் உறவுகள், பொருளாதாரம், அன்பு வாழ்வு, சமுதாய வாழ்வு, வியாபாரம், நண்பர்கள், வேலையாட்கள், உடன் பணியாற்றுவோர் .... என அனைத்திலும், எல்லா சூழ்நிலைகளிலும், நடப்பவை அனைத்தும் நன்மைக்கே, எனவே
*நன்றி, நன்றி, என்று எல்லா நேரங்களிலும் உளமார கூறுங்கள்*.

இந்த கதையை மனைவி மற்றும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .

அவர்களது வாழ்விலும் மாபெரும் மாற்றங்கள் வரும்

இந்த எளிமையான மாமந்திரம் வாழ்வில் மாபெரும் மாற்றங்களை கொண்டு வரும்.

தன்னம்பிக்கை எவ்வளவு சக்தி மிக்கது.

தன்னபிக்கை ஊட்டும் ஒரு எளிய வார்த்தை, ஒரு எளிய சிந்தனை நமது ஊழ்வினையின் பாரத்தை கரைத்து மறையச் செய்யும் சக்தியுடையதாக இருகின்றது.

இந்த மந்திரத்தை அறியாமல்தான் பிறவி மேல் பிறவியாக கர்ம வினையைச் சுமந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்த மாமந்திரத்தை தொடர்ந்து மனதினுள் உச்சரித்து வருவோமெனில் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கி உணர்வோம்.

வாழ்க வளமுடன் !

எப்படி கரு உருவாகும்? அதன் பயணம்..!


தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்யம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். கருத்தரிக்க சரியான நாட்கள் எது? எப்படி கரு உருவாகும்? அதன் பயணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளவே இந்தப் பதிவு.

எப்படி கரு உருவாகும்? அதன் பயணம்..!

பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.

இந்த 28 நாளில் முதல் 4 – 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, ‘கருமுட்டை’.

இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை ‘பொக்கிஷம்’ என்றும் சொல்லலாம்.

இந்த கருமுட்டை 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.

14-ம் நாளில் ஏற்பட்ட உடலுறவு அல்லது அதற்கு முந்தைய நாளில் ஏற்பட்ட உடலுறவில் உள்ளே வந்த ஆண் விந்துகள் வேகமாக மேலே வருகின்றன. இந்த ஆண் விந்துகள் வேகமாக மேலே வர அதன் வால் பகுதி உதவுகிறது. இது 10 மைக்ரான் அளவே இருக்கும்.

இந்த கருமுட்டை வெளிவரும்போது சிந்துகின்ற நீர், இந்த கெமிக்கலின் ஈர்ப்பால் ஆண் விந்துக்கள் ஈர்க்கப்படும். இந்த ஈர்ப்பால் விந்துக்கள் அதைத் தேடி போய் பெண்ணின் கருமுட்டையை பிடித்துக் கொள்ளும்.

மில்லியன் கணக்கில் பெண்ணின் யோனி குழாயில் (பிறப்புறுப்பு வழியாக) விழுகின்ற விந்துகளில், வெறும் 1000 கணக்கான விந்துகள் மட்டுமே ஒவ்வொரு தடைகளையும் தாண்டி பெண்ணின் கருமுட்டை இருக்கும் இடத்தில் சேர்கின்றன.

இந்த நேரத்தில் விரல் அளவே உள்ள கரு இணைப்பு குழாயானது, நகர்ந்து சென்று கெமிக்கலின் ஈர்ப்பால், அதில் உள்ள துளைகள் வழியாக விந்துவை ஈர்த்துக்கொள்ளும். இந்த இடத்தில்தான் விந்தணுவும் கருமுட்டையும் இணை சேரும். பின்னர் இது கருவாக உருவாகும்.

கருவாக உருவான நாளிலிருந்து, 3 நாட்களுக்குள்ளே அப்படியே கரு குழாய் வழியாக நகர்த்திக்கொண்டு கர்ப்பப்பைக்குள் கருவை உட்கார வைப்பது, கர்ப்பப்பை குழாய்தான். இந்த செயல்பாடு நடக்க மயிர்கால்கள் போன்ற அமைப்பில் உள்ள ‘சிலியா’ எனப்படும் ஒன்று, மெல்ல நகர்ந்து நகர்ந்து கருமுட்டையை கர்ப்பப்பையில் சேர்க்கிறது.

கர்ப்பப்பையின் உள்ளே வந்த விந்தணுவின் அளவு வெறும் 10 மைக்ரான் அளவுதான். ஆனால், ஈர்த்தது 100 மைக்ரான் அளவுள்ள கருமுட்டை. இது இரண்டும் சேர்ந்து கருவாகி, கரு வளர்ந்து கொண்டே இருக்கையில் 130-140 மைக்ரான் அளவில் கர்ப்பப்பையில் இறங்கும். கர்ப்பப்பையில் இறங்கும்போது, கருவை ‘ஐந்தாவது நாள் கரு’ என்பார்கள்.

கர்ப்பப்பையின் உள் சவ்வோடு கரு ஒட்டிக்கொள்ளும். இந்தக் கரு வேராக இறங்கி, தாயோடு ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும். இதற்கு 6-7 நாட்கள் வரை ஆகும்.

இந்த 6-7 நாட்களில் குழந்தையின் ஹார்மோன் தாயின் ரத்தத்தில் கலக்கும். இந்த சமயத்தில் தாயின் ரத்தத்தைப் பரிசோதித்தால், கரு உருவாகியிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். ‘பாசிடிவ்’ என்ற ரிசல்ட் ரத்தப் பரிசோதனையில் தெரியும்.


ஒவல்யூஷன் பீரியடை எப்படி கணக்கிடுவது?

உங்களுக்கு எப்போது பீரியட் (மாதவிலக்கு) தொடங்குகிறது எனக் காலண்டரில் குறித்து வைக்கப் பழகி கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.

எந்த நாளில் மாதவிலக்கு வருகிறது எனத் தெரிந்து, குறித்து வைத்தால்தான் உங்களால் கருமுட்டை வெளிவரும் நாளை சரியாக கணக்கிட முடியும்.

பல பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வரும். சிலருக்கு 30 அல்லது 34 நாட்களுக்கு ஒருமுறை கூட வரலாம். பெண்களின் உடல்நிலை பொருத்து மாறுப்படும்.

உதாரணமாக,

உங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி மாதவிலக்கு முதல் நாளாகத் தொடங்கி இருந்தால், அடுத்த மாதவிலக்கு உங்களுக்கு டிசம்பர் 29-ம் தேதியில் மாதவிலக்கு வரும் என்றால் அந்த தேதியும் மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கான மாதவிலக்குக்கான காலகட்டம் (மென்சுரல் சைக்கிள்). உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி, 28 நாட்களுக்கு ஒரு முறை.

கருமுட்டை எப்போது வெளிவரும் என்றால், அடுத்த மாதவிலக்கு தொடங்கும் முன்னராக 2 வாரத்துக்கு முன்பு கருமுட்டை வெளிவரும்.

உங்களது மாதவிலக்கு சைக்கிள் 28 நாட்களுக்கு ஒருமுறை என்றால், கருமுட்டை வெளிவரும் நாள் 14-வது நாள்.

28 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் – 14-ம் நாள் கருமுட்டை வரும்

30 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் – 16-ம் நாள் கருமுட்டை வரும்

34 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் – 20-ம் நாள் கருமுட்டை வரும்

இந்த கருமுட்டை வெளிவரும் நாட்களில், அதற்கு முன் நாளன்று, உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.

இதெல்லாம் சீராக மாதவிலக்கு வருபவர்களுக்கு பொருந்தும். அவர்கள் எளிதாகக் கணக்கிட்டு கொள்ளலாம்.

சீரற்ற மாதவிடாய் வருபவர்கள்… எப்படி கருமுட்டை வெளிவரும் நாளைக் கணக்கிடுவது?


சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பவர்கள், தொடர்ந்து உங்களது மாதவிலக்கு வரும் தேதியை காலண்டரில் குறித்து வரலாம்.

உதாரணத்துக்கு, உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி 30 நாட்கள் என்றால், 16-ம் நாள் கருமுட்டை வெளிவரும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது என்பதால் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை எந்த நாளிலோ ஒரு நாள் கருமுட்டை வெளிவரலாம் என யூகித்துக் கொள்ளலாம். இந்த நாட்களில் உடலுறவு வைத்துக்கொண்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.

11-16ம் நாள் வரை என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், 11,12,13 நாட்கள் ஓரளவுக்கு கருத்தரிக்க வாய்ப்பு இருக்கும். 14,15,16 நாட்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்கும்.

இன்னும் துல்லியமாக தெரிய வேண்டும் என்றால், நீங்கள் தொடர்ந்து உங்களது மாதவிலக்கு தொடங்கும் நாளைக் குறிப்பிட்டு வந்து, உங்களுக்கான சுழற்சி எத்தனை நாளுக்கானது எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இப்படி கணக்கிடுவது மிகவும் சுலபம்தான். ஆனால், உங்களால் இப்படி கணக்கிட முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.

உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் (Play Store), பீடியட் டிராக்கர் (Period tracker, ovoluting period) என்று போட்டு தேடினால், நிறைய ஆப்கள் வரும். அதில் ஒன்று தேர்ந்தெடுத்து உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு மாதவிலக்கு வரும் நாட்களை அதில் குறித்து வைத்தால் மட்டும் போதும். இதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.

அந்த காலண்டரிலே உங்களுக்கான ஓவல்யூஷன் நாள் (கருமுட்டை வெளிவரும் நாள்) அதில் காண்பிக்கும். எந்த நாளில் கருத்தரிக்க அதிக வாய்ப்புகள், எந்த நாளில் கருத்தரிக்க குறைவான வாய்ப்புகள் என்று காண்பிக்கும்.

அப்போது நீங்கள் உடலுறவு மேற்கொண்டால் கரு உருவாக வாய்ப்புகள் அதிகம்.

எந்தக் குழப்பமும் இல்லாமல் சுலபமாக, கருமுட்டை வெளிவரும் நாளை நீங்கள் இந்த ஆப்ஸ்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். வாழ்த்துகள்…

Sunday, September 29, 2019

#இந்து_மதப்புராணத்தில் #27_வகையான_உபவாச_விரதங்கள்!


முறையாக எப்படி விரதம் இருக்க வேண்டும் என்றும், இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

#விரதங்கள்

விரதம் என்று காலை முதல் மாலை வரை உண்ணாமல் இருப்பது நமது கலாச்சாரத்தில் பலரும் கடைபிடிக்கும் விஷயம்.

மாதத்தில் ஒருநாள் விரதம் இருந்தால் நல்லது என்றும் சொல்கிறார்கள்.

சிலர் வாரத்தின் பாதிக் கிழமைகளை விரதத்திலேயே கழிப்பார்கள்.

விரதம் என்பதை பண்டைய காலத்தில் நமது முன்னோர் ‘உபவாசம் இருப்பது’ என்றுதான் சொல்லியுள்ளார்கள். உபவாசம் செய்வதன் நோக்கம் உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்துவது. மாதம் ஒருமுறை உபவாசம் இருப்பது, நம் வாழ்க்கை முறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

உபவாசம் இருப்பதன் முக்கிய நோக்கமே தன்னைத்தானே அகத்தாய்வு செய்து கொள்ளவும், நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும், மனதை புதிப்பிக்கவுமே விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

முறையாக எப்படி விரதம் இருக்க வேண்டும்? இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை,

1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.

2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

3. பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.

6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

8. மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

9. மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

10. மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

16. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

17. ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

18. ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

19. ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.

21. ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

22. ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.

23. ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

24. இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.

25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.

26. மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

27. வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.

இந்த உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா? உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்...!!!

#என்றும்_இறைபணியில்...

நவராத்திரி_ஸ்பெஷல்


முதல் படியிலிருந்து கடைசி படி வரை எந்தெந்த பொம்மைகள் வைக்கலாம்?
நவராத்திரி ஸ்பெஷல்...!!
நவராத்திரி புரட்டாசி மாதம், ஞாயிற்றுக்கிழமை (29.09.2019) அன்று தொடங்குகிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி பத்து நாட்களுக்குக் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி ஆகும். இந்தப் பண்டிகை எல்லா மாநிலங்களிலும் வௌ;வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

நவராத்திரியின் சிறப்பே பலவிதமான, மண்ணாலான பொம்மைகளை வைத்து கொலு வைப்பது தான். அவரவர் வசதிப்படி முப்பெரும் தேவியை குறிக்கும் விதமாக மூன்று படிகளாகவோ அல்லது சக்தியின் சக்கரத்தை குறிக்கும் விதமாக ஐந்து படிகளாகவோ, சப்தமாதர்களை குறிக்கும் ஏழு படிகளாகவோ, நவகிரகங்களை குறிக்கும் ஒன்பது படிகளாகவோ வைக்கலாம்.

முதல் படியிலிருந்து கடைசி படி வரை எந்தெந்த பொம்மைகள் வைக்கலாம்?

பொதுவாக கொலுப்படிகளில் பொம்மைகளை அடுக்கும்போது, கடைசி படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை கொலுப்படியில் வைத்த பிறகு தான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும்.

முதல் படி, அதாவது கீழ் படியில் - ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்.

இரண்டாம் படியில் - இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.

மூன்றாம் படியில் - மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள்.

நான்காவது படியில் - நான்கு அறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.

ஐந்தாம் படியில் - ஐந்து அறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்.

ஆறாம் படியில் - ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள்.

ஏழாம் படியில் - சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.

எட்டாம் படியில் - தேவர்களின் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள்.

ஒன்பதாம் படியில் - பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும். இதில், சரஸ்வதிக்கும் - லட்சுமிக்கும் நடுவில் அன்னை சக்திதேவி இருக்குமாறு வைக்க வேண்டும்.

புல்லாய், புழுவாய் பிறந்து, மனிதனாகப் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற உண்மையை உணர்த்தவே, நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.

கொலு வைத்து அம்மனை வழிபடும் பெண்கள் அக்கம் பக்கத்தவர்களையும், உறவினர்களையும் அழைத்து பஜனைகள் பாடி, தாம்பூலப்பையை கொடுத்து, சுண்டல், பொங்கல் என அம்மனுக்கு படைத்த பிரசாதங்களை கொடுத்து உற்சாகமாக வழியனுப்பி வைப்பார்கள். இதன்மூலம் கொலு வைப்பவர்களுக்கும், கொலுவை பார்வையிட வந்தவர்களுக்கும் அம்மன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

திருப்பதி பெருமாளின் கருவறைப் படியைக் கடந்து தயிர்சாதம் நிறைந்த ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்தப் பிரசாதமும் செல்வதில்லை.



இந்தக் கருவறைப் படியும் சரி, மண்சட்டி தயிர்சாதமும் சரி இரண்டின் பின்னணியில் பக்திபூர்வமான வரலாறு உண்டு.

கருவறைப் படி குலசேகரப்படி என்றே அழைக்கப்படுகிறது.

யார் இந்தக் குலசேகரன்?

சேரநாட்டு திருவஞ்சைக்களத்தில் சேரர் குலத்தில் தோன்றிய அரசர்தான் குலசேகரர்.

கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோ, மாதவன் மாமன் என்றெல்லாம் சிறப்பித்துப் போற்றப்பெறும் குலசேகரர் பரந்தாமனிடம் கொண்ட பக்தியால் ஆழ்வாராகப் போற்றப் பெறுகிறார்.

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான இவர், திருமாலின் கௌஸ்துப மாலையின் அம்சமாகத் தோன்றியவர்.

சிறுவயது முதற்கொண்டே ராமபிரானின் மீதும், கிருஷ்ணரின் மீதும் அளவு கடந்த பக்தியைக் கொண்டிருந்தார்.

நல்லாட்சி புரிந்த இவருக்குப் பாண்டிய மன்னர் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.

வெற்றித்திருமகளை தன்னருகே வைத்திருந்த குலசேகரர் திருமாலின் அடியார்கள்மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார்.

ஒருமுறை ராமாயணம் உபந்நியாசம் கேட்டுக் கொண்டிருந்த போது, ராமபிரான் முனிவர்களின் தவத்தைக் கெடுக்கும் அரக்கர்களை அழிக்கப் புறப்படுகிறார் என்ற செய்தியை அறிந்ததும்,

ராமபிரானுக்கு உதவ உடனே தனது படைகளை ஆயத்தமாகும்படி கட்டளையிட்டார். அந்த அளவுக்கு ராமபிரானிடம் பக்தி செலுத்தினார்.

எப்போதும் திருமால் அடியார்களுடனே இருந்தால், நாட்டை நிர்வகிப்பது எப்படி? எனவே, இவரைச் சுற்றி இருந்த அடியவர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்த எண்ணி,

இவரது அமைச்சர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர்.

ஒருமுறை அரண்மனைக்கு வந்திருந்த அடியார்களுடன் குலசேகரர் பகவத் விஷயங்களைப் பேசிக்
கொண்டிருந்தபோது, அமைச்சர்கள் ஒரு நவரத்தின மாலையை ஒளித்து வைத்துவிட்டு, அந்த மாலையை அடியார்கள் திருடிக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள்.

அடியார்கள்மீது பழிசுமத்தியது பொறுக்கமாட்டாத குலசேகரர்,

ஒரு பானையைக் கொண்டு வரச் செய்து அதில் கொடிய விஷமுள்ள கருநாகத்தை இடச் செய்தார். பிறகு 'ராமன்மீது ஆணையாக இந்தத் திருட்டை அடியார்கள் செய்திருக்கமாட்டார்கள்' என்று நான் சொல்வது உண்மையானால், இந்தக் கருநாகம் என்னைத் தீண்டாதிருக்கட்டும்' என்று சொல்லியபடி பானைக்குள் கையை விட்டார். கருநாகம் குலசேகரரை எதுவும் செய்யவில்லை.

எனவே நடந்தது அமைச்சர்களின் சூழ்ச்சி தான் என்பதைப் புரிந்துகொண்டு, மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு, அரசப் பதவியைத் துறந்து திவ்வியதேச யாத்திரையை மேற்கொண்டார்.

முதலில் திருவரங்கம் சென்றார். அங்கு பவித்ரோற்சவ மண்டபம், மூன்றாம் மதில் உள்ளிட்ட பல்வேறு ஆலய திருப்பணிகளைச் செய்தார்.

திருவரங்கத்தில்தான் தனது அருமை மகளை ரங்கநாதருக்குத் திருமணம் செய்து மகிழ்ந்தார்.

இன்றும் சேரகுலவல்லியோடு ரங்கநாதர் காட்சி தருவதைக் காணலாம். பெரியாழ்வார் போலவே தனது மகளை அரங்கனுக்குத் திருமணம் செய்ததால் இவரும் 'மாதவன் மாமன்' எனும் பெருமை பெற்றார்.

திருமாலின் மீது பக்தி கொண்டு 105 பாசுரங்களைக் கொண்ட 'பெருமாள் திருமொழி' என்னும் பிரபந்தத்தை இயற்றினார்.

தலம்தோறும் சென்று திருமாலை வணங்கி பேறு பெற்றார். 8 வைணவத் தலங்களைத் தரிசித்துப் பாடி மங்களாசாசனம் செய்தார்.

திருமலை திருப்பதிக்குச் சென்ற குலசேகர ஆழ்வார் வெங்கடேசப்பெருமாளின் அழகில் மயங்கி பாடல்களைப் பாடினார்.

எனக்கு தேவ பதவி போன்ற உயர்ந்த பதவிகள் எதுவும் தேவையில்லை.

திருவேங்கடத்துப் பொய்கையில் ஒரு மீனாகவோ, அல்லது ஏதேனும் ஒரு தாவரமாகவோ பிறக்கமாட்டேனா என்றெல்லாம் ஏங்கிப் பாடியவர், எப்போதும் திருவேங்கடவன் கருவறைப் படியாக இருந்து தினமும் பெருமாளின் பவள வாய் அழகை தரிசிக்கும் பேறு கிடைக்காதா என்றும் ஏங்கிப் பாடினார்.

'செடியாய வல்வினைகள் தீர்க்குந்திருமாலே

நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.'

என்றெல்லாம் பாடினார்.

இவரது வேண்டுதல் பெருமாளை உருக்கியது. அதன் காரணமாகவே, குலசேகரரின் பெயரால் அந்தப் படி அழைக்கப்படும் பேறுபெற்றார்.

ஆம், இன்றும் திருமலையின் வாயிற்படி இவர் பெயராலேயே குலசேகரப்படி என்றே அழைக்கப்படுகிறது.

இந்தக் குலசேகரப் படியைக் கடந்து தயிர்சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்த வைர,வைடூரிய, தங்க, வெள்ளி பாத்திரங்கள்கூட செல்வதில்லை

தயிர் சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டி மட்டுமே குலசேகரப் படியை தாண்டி பெருமாளிடம் செல்வதன் பின்னணியில்,

ஒரு ஏழை மண்பாண்டத் தொழிலாளி, பெருமாளிடம் கொண்டிருந்த பக்தியின் மகத்துவம் அடங்கியுள்ளது.

பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி திருமலை பெருமாளின் மீது தீராத பக்தி கொண்டவன்.

இவன் செய்து தரும் மண்பாண்டங்கள் பெருமாளின் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டது.

பாண்டங்கள் செய்தது போக மீதமிருக்கும் மண்ணில் இவன் செய்து சூட்டும் மண் மலர்களை ஏற்றுக்கொண்ட பெருமாள்,

தொண்டைமான் அரசரின் தங்க மாலைகளைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லையாம்.

அத்தனை பேறு பெற்ற பீமனின் நினைவாகவே இன்றும் பெருமாளுக்கு மண்சட்டியிலேயே நைவேத்தியமாக தயிர் சாதம் அளிக்கப்படுகிறது.

ஆலயங்கள் பலவற்றை தரிசித்து மனம் மகிழ்ந்த குலசேகர ஆழ்வார்,

இறுதியாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோயில் திருத்தலம் வந்து அங்குள்ள பெருமானை தரிசித்து வைகுந்தலோகம் சென்றார்.

அரச போகங்களை எல்லாம் துறந்து அரங்கனின் சேவடிக்கே தன்னை ஒப்படைத்த குலசேகர ஆழ்வார், வைணவ அடியார்களுக்கு எல்லாம் ஓர் ஒப்பற்ற உதாரணப் புருஷர்.

ஓம் நமோ நாராயணா!!!!

கோவிந்தா ஹரி கோவிந்தா!!!

ஜடாயு



காமாந்தகன் ஒருவன், ஒரு பெண்ணை பலாத்காரமாக அபகரித்துக் கொண்டு போனான். பெண்மணி அலறினாள். அந்த நேரத்தில், உத்தமமான வீரர் ஒருவர் பறந்து வந்து, காமாந்தகனுடன் போராடி தன் உயிரை இழந்தார்.

யார் இவர்கள்? காமாந்தகன் - ராவணன். அவன் தூக்கிக்கொண்டு போன பெண் - சீதாதேவி. பறந்து வந்து தடுத்து போரிட்டுத் தன் உயிரைத்தியாகம் செய்த வீரர் - ஜடாயு. கருடனின் மூத்த சகோதரர் அருண பகவான். இவர் சூரியனின் தேரோட்டியாக இருப்பவர். அருண பகவானின் மனைவி ச்யேனி. இவர்களது மூத்த புதல்வர் சம்பாதி இளைய புதல்வர் தான் ஜடாயு. இந்த ஜடாயுவிற்கும், தசரதருக்கும் தான் நட்பு உண்டானது. சாதாரண நட்பு அல்ல பெரும் சகோதர பாசம். பெற்ற தந்தையான தசரருக்குக்கூட, ஸ்ரீராமர் கையால் பிரேத சம்ஸ்காரங்கள்(இறுதி சடங்கு) செய்யக்கூடிய பாக்கியம் இல்லை. அந்தப் பாக்கியம், ஜடாயுவிற்குத்தான் கிடைத்தது. ஏன்? எப்படி?

சகோதரர்களான சம்பாதியும் ஜடாயுவும் ஒருநாள், ‘‘உயரமாகப் பறப்பது யார்?’’ என்ற போட்டியில் பறக்கத் தொடங்கினார்கள். அண்ணனைவிட, தான் உயரத்தில் பறக்க வேண்டும் என்று ஜடாயு உயர உயரப் பறந்தது. ஒரு கட்டத்தில் சூரியனின் வெப்பக்கதிர்களின் தாக்கம் தாங்காமல், ஜடாயுவின் சிறகுகள் கருகத் தொடங்கின. தம்பியின் நிலை கண்டு சம்பாதி பதறினார் தம்பியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தம்பிக்கு மேலாக தான் பறந்தார். சூரியக்கதிர்கள் அவரின் சிறகுகளை எரித்தன. சிறகுகளை இழந்த சம்பாதி, முனிவர் ஒருவரின் (நிசாகரர்) ஆசிரம வாசலில் விழுந்தார்.

சம்பாதியின் அச்செயலால், ஜடாயு உயிர் பிழைத்தார். உயிர்பிழைத்த ஜடாயு அன்னை வாலாம்பிகை உடனுறை பவரோக வைத்தியநாதரான சிவபெருமான், முருகப்பெருமான் ஆகியோர் எழுந்தருளியிருக்கும் வைத்தீசுவரன் கோவிலைக் கண்டார். அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானையும் அம்பாளையும் மும்முறை வலம் வந்து பூஜித்தார் ஜடாயு.

அண்டர் போற்றிடுநல் வயித்தியநாத அண்ணலை
அருச்சனை புரியுமண்டு காதலினால் தீர்த்த
நீராடிவந்து மூவலம்செய்து பணிந்தான்
(புள்ளிருக்கு வேளூர் தல புராணம்)

அதன்பின் ஜடாயு, தண்டகாரணியம் வந்தார். தண்டகாரணியத்தில் ஜடாயு இருந்த வேளையில், படைகள் சூழத்தசரதர் வேட்டைக்கு வந்தார். வெயில் கொளுத்தியன் காரணமாக ஏற்பட்ட தாகத்தால் சோர்ந்து போன படைகள் ஓய்வெடுக்கத் தொடங்கின. தாகத்தால் தவித்த தசரதர் ஒரு மரத்தின் பெருத்த அடிப்பாகத்தில் தலையை வைத்துப்படுத்தார் உறங்கினார். சற்று நேரத்தில், தூக்கக் கலக்கத்தில் தன் காலின் அருகில் இருந்த பாம்புப்புற்றை உதைத்தார் தசரதர் விளைவு? புற்றில் இருந்த பாம்பு, கோபம் கொண்டு புற்றில் இருந்து வெளி வந்தது. சற்று தூரத்திலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜடாயு, ‘விசுக்’கென்று எழுந்து பறந்து, தன் கூர்மையான அலகினால் பாம்பைக் கவ்வி, அதை இரு துண்டுகளாக ஆக்கி எறிந்தது.

அரவத்தினால் எழுந்த அரவம் கேட்டு எழுந்த அரசரிடம், ஜடாயு நடந்தவற்றையெல்லாம் எடுத்துச் சொன்னார். அது மட்டுமல்ல! தசரதரின் களைப்பை குறிப்பால் உணர்ந்து, கனிகளும் நீரும் தந்து, ‘‘மன்னா! உன் களைப்பு தீர இதை உண்டு விட்டு உன் நகருக்குச்செல்!’’ என்றார். எந்த விதமான பிரதிபலனும் எதிர்பாராமல் தன் உயிரைக் காத்த ஜடாயுவை,தன் மூத்த சகோதரராக - அண்ணனாகவே ஏற்றுக் கொண்டார் தசரதர். இதன் காரணமாகவே, தசரதரின் மகனான ராமருக்குப் பெரியப்பா ஜடாயு என விரிவாகவே கூறுவார் கம்பராமாயணத்தில் கரைகண்ட தமிழ் அறிஞரான பி.ஸ்ரீ.ஆச்சார்யா.

இனி, ஜடாயுவும், ராமரும் சந்தித்ததைப் பார்க்கலாம்! வனவாசத்தின் போது, அகத்திய ஆசிரமத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ராமர்,சீதை, லட்சுமணன் மூவரும் ஜடாயுவைப் பார்த்தார்கள். ஜடாயு. அவர்களிடம் ‘‘நீங்கள் யார்?’’ எனக் கேட்டார். ‘‘மன்னர் தசரதரின் மைந்தர்கள் நாங்கள்’’ எனப்பதில் வந்தது. மகிழ்ச்சி தாங்கவில்லை ஜடாயுவிற்கு. ‘‘குழந்தைகளே! தசரதன் நலமா?’’ எனக்கேட்டார். ராமர், தசரதரின் முடிவைக்கூறினார். அதைக்கேட்டதும் ஜடாயு மூர்ச்சையாகி விழுந்தார். ராமரும் லட்சுமணரும் ஜடாயுவின் நிலைக்கண்டு, கண்ணீர் வடித்தார்கள். அவர்கள் வடித்த கண்ணீர் ஜடாயுவின் மீது விழ, ஜடாயு மூர்ச்சை தெளிந்தது.

மூர்ச்சை தெளிந்த ஜடாயு, தசரதரை எண்ணிப் புலம்பினார். ‘‘தசரதா! நீயில்லாத உலகில், சுமையாக இந்த உடம்பை வைத்துக்கொண்டு,நான் வாழ விரும்பவில்லை. நெருப்பில் விழுந்து இப்போதே இறந்து போவேன்’’ என்று பலவாறாகப் புலம்பினார். அதைக்கேட்ட ராமர் முதலான மூவரும் திடுக்கிட்டார்கள்.‘‘சத்தியத்தைக் கைவிட முடியாத தசரதர், பிள்ளைகளைக் கை விட்டார். அப்படிப்பட்ட அவரையும் தாயையும் அயோத்தி மக்களையும் கைவிட்டு வந்த எங்கள் துன்பமெல்லாம் உங்களைக் கண்டதும் நீங்கி விட்டது. இந்த நிலையில் நீங்களுமா எங்களைக் கைவிடப் போகிறீர்கள்?” என்று வருத்தத்தோடு கேட்டார்கள்.

ஜடாயு தன் நிலையை மாற்றிக்கொண்டார். ‘‘குழந்தைகளா! நான் உயிரோடு இருப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதால், நீங்கள் வனவாசம் முடிந்து அயோத்தியை அடையும்வரை, நான் உயிரோடு இருப்பேன்’’ என்றார். தனக்கு வந்த ராஜ்ஜியத்தைத் தம்பிக்காகத் தியாகம் செய்துவிட்டு வந்த ராமரைப் பற்றிய தகவல்களை எல்லாம் மனதாறப் பாராட்டி, அவர்கள் தங்குவதற்கான இடத்தைக் காண்பிப்பதற்காக ஆகாயத்தில் எழுந்து பறந்தார். தன் நிழலில் அவர்கள் நடந்து வரும்படியாகப் பறந்தார்.

பஞ்சவடியை அடைந்ததும், அங்கே அவர்களைத் தங்கும்படிச் சொல்லிவிட்டு, அரக்கர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் அந்த இடத்தில் சற்று தூரத்தில் இருந்த படியே, அவர்களைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார்.அந்தக் கால கட்டத்தில்தான், ராவணன் வந்து சீதாதேவியைக் கவர்ந்துகொண்டு போன நிகழ்ச்சி நடந்தது. சீதையின் அலறல் கேட்ட ஜடாயு, குரல் வந்த திசை நோக்கி பறந்தார். அலறுவது அயோத்தி மன்னரின் மருமகள் என்று தெரிந்து, அந்த எண்ணத்தில் போகவில்லை ஜடாயு யாராக இருந்தாலும் அந்த அபலையைக் காப்பாற்றுவது தன் கடமை என்ற நோக்கிலேயே போனார்.

அருகில் போனதும் தான் தெரிந்தது, அரக்கன் தூக்கிக்கொண்டு போனது சீதையை என்று. தன்னால் பாதுகாக்கப் படுபவளாயிற்றே! “ ஏய்! முட்டாளே! என்ன காரியம் செய்கிறாய்? நீ கெட்டுப்போவது மட்டுமல்லாமல், உன் உற்றம் - சுற்றம் என அனைவரையும் அழித்து விட்டாய்! இந்த உத்தமியை விட்டுவிடு! அழிந்து போகாதே! ‘‘இந்த சீதை உலகிற்கே தாயாக இருக்கக் கூடியவள். என்ன நினைத்து இவளைத்தூக்கிக் கொண்டு போகிறாய் ? இனிமேல் உன்னை யார் காப்பாற்றுவார்கள்?’’ என்று இடித்துக் கூறினார்.

‘ராவணன் சீதையை விடவில்லை மாறாகப் போரிடத் தொடங்கினான். அவனுக்கும் ஜடாயுவிற்கும் இடையே கடும்போர் விளைந்தது. ராவணனின் கிரீடங்கள், தோள் ஆபரணங்கள் என அனைத்தும் சிதறின. ஜடாயு, ராவணனின் தேரோட்டியை கொன்றார். ராவணன் கடுங்கோபம் கொண்டு, அரன் தந்த வாளான சந்திரகாசம் எனும் வாளால், ஜடாயுவின் சிறகுகளை வெட்டிக் கீழே தள்ளினான். ஜடாயு கீழே கிடக்க, சீதையுடன் ராவணன் சென்றான். சீதையைத்தேடிக் கொண்டு ராம - லட்சுமணர்கள் வந்தனர். வழியில் ராவணனால் சிறகுகள் சிதைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த ஜடாயுவைக் கண்டார்கள். ஜடாயுவைக் கண்ட ராமர், ஜடாயுவின் மீது விழுந்து மயக்கமடைந்தார்.

நெடுநேரம் மயக்க நிலையில் இருந்த ராமரை, அருவி நீர் கொண்டு வந்து மயக்கம் தெளிவித்தார் லட்சுமணன். மயக்கம் தெளிந்த ராமரோ, ஜடாயு இறந்து விட்டதாகவே நினைத்துப் புலம்பினார். ‘‘தசரதர்-ஜடாயு எனும் இரண்டு தந்தையருக்கும் யமனாகப் போய்விட்ட நான், இன்னும் உயிரோடு இருக்கிறேனே’’ என்று புலம்பத் தொடங்கிய ராமர், பலவாறாகப் புலம்ப, லட்சுமணரும் புலம்பினார். அந்த அழுகுரல்கள் கேட்டு,மெள்ளமெள்ளக் கண்களைத் திறந்தார் ஜடாயு. ராவணன் தலையிலிருந்த கிரீடங்களைத் தாக்கித் தள்ளிய மூக்கினால், ராம-லட்சுமணர்களை உச்சி முகர்ந்தார்.

‘‘வீரர்களே! இருவருமாக சீதையைத் தனியாக விட்டுவிட்டுப் போய் விட்டீர்களா?’’ என ஆரம்பித்த ஜடாயு, ராவணன் சீதையைக் கொண்டு போனதைச் சொல்லி முடித்தார்.கேட்டுக் கொண்டிருந்த ராமருக்குத் தர்ம ஆவேசம் வந்தது. ‘‘இப்போதே இந்த உலகை அழித்து விடுகின்றேன் பார்!’’என்று கொதித்தார். உயிர் பிரியும் அந்த வேளையிலும் ஜடாயு தன் நிலை இழக்காமல் பேசத்தொடங்கினார். ‘‘ராமா! என்ன பேசுகிறாய்? தசரதன் கைகேயி பேச்சைக் கேட்டுப் பழி ஏற்றான். நீ சீதையின் பேச்சைக் கேட்டுப் பழி ஏற்றாய். இது உம் பிழை என்பதைத் தவிர, உலகம் என்ன பிழை செய்தது?’’ என இடித்துக் கேட்கிறார்.

ஜடாயுவைத் தவிர, வேறு யாரும் இவ்வளவு உரிமையோடு முறையோடு ராமரை இடித்துப் பேசியதாகத் தெரியவில்லை. குற்றுயிரும் குலைந்துபோன உயிருமாக இருந்த நிலையிலும், இவ்வாறு பேசி ராமரை அமைதிப்படுத்திய ஜடாயு, நடந்த தகவல்களைச் சொன்னது. ஜடாயுவின் வார்த்தைகளைக்கேட்ட ராமருக்கு உள்ளம் உருகியது. ‘‘மனதை அலை பாய விடாதீர்கள்! முன்பு நீங்கள் வழிபாடு செய்த வைத்திய நாதப் பெருமான் எழுந்தருளியிருக்கும் (வைத்தீசுவரன் கோயில்) திருத்தலத்தில், உமக்கு ஈமக்கடன்களைச் செய்வேன்” என்றார்.

ராமரின் வார்த்தைகளைக் கேட்ட ஜடாயு, தரையில் கால்களைப் பரப்பியது. தலை தொங்கியது. ஆம்! ஜடாயு பூவுலக வாழ்வைத் துறந்தார். தங்களுக்காக உயிர்துறந்த ஜடாயுவிற்கு, தான் சொன்னபடியே வைத்தீசுவரன் கோயிலில், ஈமக்கடன்கள் அனைத்தையும் செய்து முடித்தார். பெற்ற தகப்பனாரான தசரதருக்குக்கூடக் கிடைக்காத பாக்கியம், ஜடாயுவிற்குக் கிடைத்தது. ஜடாயுவின் வாழ்வு, தியாக வாழ்வு.

ஸ்ரீ காலபைரவரின் பய நிவர்த்தி பைரவ மந்த்ரம்


ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை

பய நிவர்த்தி பைரவ மந்த்ரம்

ஓம் ஆபதூதாரணாய

அஜாமில பந்தனாய

துஷ்ட்ட நிக்ரஹாய

சிஷ்ட்ட பரிபால ஸ்வரூபாய

மம-தாரித்ரய-துக்கதகனாய

மம-சாப சோ பாப சல்லிய தோஷ நிவர்த்திகராய

தனாகர்ஷணாய

ஸ்வர்ணாகர்ஷணாய

சகல கார்ய அனுகூல சித்திகராய

சகல சத்ரு தோஷ நிவர்த்திகராய

சகல வியாதி பீடா நிவர்த்திகராய

ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ:

ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை

உன்மத்த பைரவர் மந்திரம் கால பைரவாஷ்டோத்ரம்
ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை

உன்மத்த பைரவர் மந்திரம்

ஓம் ஹ்ரீம் அங்க் - க்லீம் உன்மந்தானத்த பைரவ

சர்வ சத்ரு நாசய குரு குரு ஸ்வாஹா

(தீவிரமான மனநோய்கள், சித்தபிரமை, ஹிஸ்தீரியா நோய் நீங்க)

கால பைரவாஷ்டோத்ரம்

த்யானம்

ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்

த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷõகரம்

நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்

வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷத்ரஸ்ய பாலம் சிவம்

(சிவந்த ஜடையும், பரிசுத்தமான உடலும், சிவந்த தேஜஸூம், சூலம், கபாலம், உடுக்கை முதலியவற்றை தரித்து உலகத்தை ரக்ஷிப்பவரும், நிர்வாணமாகவும், நாயினை வாஹனமாகவும் கொண்டு, முக்கண்ணனாக, ஆனந்த வடிவினனாக பூத, ப்ரேத நாதனாக க்ஷத்ரங்களை ரக்ஷிப்பவராக உள்ள பைரவரை நமஸ்கரிக்கிறேன்.)

பைரவோ பூத நாதஸ்ச - பூதாத்மா - பூதபாவந:

க்ஷத்ரத: க்ஷத்ரபாலஸ்ச - க்ஷத்ரக்ஞ : க்ஷத்ரியோ விராட்

ஸ்மசான வாஸீ மாம்ஸாசீ - ஸர்ப்பராசி : ஸ்மராந்தக்ருத்

ரக்தப : பாநப : ஸித்த : - ஸித்தித : ஸித்தஸேவித :

கங்கால : கால சமந : - காலகாஷ்டா தநு : கவி :

த்ரிநேத்ரோ பகுநேத்ரஸ்ச - ததா பிங்கல லோசந :

சூலபாணி : கட்கபாணி : - கங்காளீ தூம்ரலோசந :

அபீருர்பைரவோ நாதோ - பூதபோ யோகிநீ பதி :

தநதோ தநஹாரீச : தநவாந் ப்ரீதி பாவந :

நாகஹரோ நாகபாசோ - வ்யோம கேச : கபால ப்ருத்

கால : கபாலமாலீச - கமநீய : கலாநிதி:

த்ரிலோசநோஜ்ஜவலந் நேத்ர : த்ரிசிகீ ச த்ரிலோகப :

த்ரிநேத்ர தநயோ டிம்ப : சாந்த : சாந்தஜனப்ரிய :

வடுகோ வடுவேஷஸ்ச : கட்வாங்க வர தாரக :

பூதாத்யக்ஷ : பசுபதி : - பிக்ஷúக : பரிசாரக :

தூர்தோ திகம்பர : சூரோ - ஹரிண : பாண்டுலோசந :

ப்ரசாந்த, சாந்தித : ஸித்த : - சங்கர : ப்ரிய பாந்தவ :

அஷ்டமூர்த்திர் நிதீசஸ்ச - ஞான சக்ஷúஸ் தபோமய :

அஷ்டோதார : ஷடாதார : - ஸர்பயுக்த : சிகீஸக :

பூதரோ பூதராதீச : - பூபதிர் பூதராத்மஜ :

கங்காலதாரீ முண்டீச - நாக யக்ஞோபவீதவாந்

ஜ்ரும்பணோ மோஹந : ஸ்தம்பீ மாரண : க்ஷõபணஸ்ததா

சுத்த நீலாஞ்ஜந ப்ரக்ய : - தைத்யஹா முண்டபூஷித

பலி புக்பலி புக் நாதோ - பாலோ பால பராக்ரம :

ஸர்வாபத் தாரணோ துர்கோ - துஷ்டபூதநிஷேவித :

காமீ கலா நிதி காந்த : - காமிநீ வசக்ருத்வசீ

ஸர்வ ஸித்திப்ரதோ வைத்யோ - ப்ரபுர் விஷ்ணு ரிதீ வஹி

அஷ்டோத்தரசதம் நாம் நாம் - பைரவஸ்ய மஹாத்மந:

(இதை அர்ச்சனையும், பாராயணமும் செய்வதால், இருமல், கக்குவான், இழுப்பு, காசம் முதலிய நோய்கள் அகலும்.)

ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை

#பிரதோஷ_விரதம் #இருப்பது_எப்படி?? ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️


பிரதோஷ நாள் என்பது சிவனை பழிப்பட சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பிரதோஷ நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை நந்தி தேவர் தன்னுடைய தவத்தை களைத்து சிவனை நோக்கி விரதம் இருப்பவர்களின் கோரிக்கையை கேட்டு அதை நிறைவேற்றுவார். பல சிறப்புகள் மிக்க பிரதோஷ விரதம் இருப்பது எப்படி??
☘️
பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், வளர்பிறை தேய்பிறை என இரு பிரதோஷ தினங்களிலும் விரதம் மேற்கொள்ளலாம். அப்படி விரதம் இருக்க நினைப்போர் காலையில் எழுந்து குளித்துவிட்டு அந்த நாள் முழுக்க சிவ நாமத்தையோ அல்லது “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தையோ ஜபிக்கலாம். நேரம் இருந்தால் சிவபுராணம் படிக்கலாம்.
☘️
மாலை வேலையில் சிவன் கோயிலிற்கு சென்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறந்தது. நந்தி தேவரிடமும் சிவபெருமானிடமும் நமது குறைகள் அனைத்தையும் தீர்வைக்கும்படி மனதார வேண்டிக்கொண்டு கோவிலை வளம் வந்து விரதத்தினை முடிக்கலாம்.
☘️
பிரதோஷ விரதத்தினை முடிக்கும் சமயத்தில் நம்மால் முடிந்தவரை பசியால் வாடும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குவது நமக்கு சிறப்பை சேர்க்கும். அன்னதானம் வழங்க இயலாதோர் தங்களால் முடித்த உதவியை ஏழைகளுக்கு செய்யலாம்.

🌹🌹🌻ஓம் நமச்சிவாய 🌻🌹🌹


எத்தகைய பிரச்சனையையும் எளிதில் போக்கும் சிவ மந்திரம்

மும்மூர்த்திகளில் சிவபெருமானிடம் இருந்து மட்டுமே வரங்களை எளிதில் பெற முடியும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். எவர் ஒருவர் சிவபெருமானை மனமுருகி பிராத்தனை செய்து வழிபட்டாலும் அவரது பிரச்சனைகளை சிவபெருமான் எளிதில் போக்குவார் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் சிவபெருமானை வணங்குகையில் அவருக்குரிய மூல மந்திரம் அதை ஜபிப்பது நமது பிராத்தனைக்கு வலிமை சேர்க்கும் மந்திரம் இது.

( சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே )

திருமூலர் அருளிய இந்த மந்திரமானது சிவன் மூல மந்திரமாக போற்றப்படுகிறது. நீண்டகால துன்பம் உடையவர்கள், கட்டுக்கடங்காத பண பிரச்சனை உடையவர்கள், தீராத நோய் உடையவர்கள், மன நிம்மதி இன்றி தவிப்பவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர தீராத. பிரச்சனைகள் யாவும் விரைவில் தீரும். தினமும் மந்திரத்தை ஜபிக்க இயலாதவர்கள் திங்கட்கிழமையில் ஜபிப்பது அவசியம்.

யமுனைக் கரையில் கண்ணனும் ராதையுமாக அமர்ந்திருந்தார்கள்



யமுனைக் கரையில் கண்ணனும் ராதையுமாக அமர்ந்திருந்தார்கள்,

சிலுசிலுவென்று சுகமான காற்று வீசிக் கொண்டிருந்தது,

கண்ணன் தலையில் சூடியிருந்த மயில்பீலி காற்றில் படபடக்கும் அழகை ராதை ரசித்தவாறிருந்தாள்,

ஆனால், கண்ணன் அக்கரையையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்,

""என்மேல் ஒருசிறிதும் அக்கறையில்லாமல் அக்கரையில் என்ன பார்வை?'' கேட்டாள் ராதை,

""எனக்குப் பசிக்கிறது!''

ராதை பதறினாள்,

""அடடா! இதோ உடனடியாக நானே சமைத்து உங்களுக்கு உணவு எடுத்து வருகிறேன்,அதற்கு அக்கரையைப் பார்ப்பானேன்?''

"" அக்கரையிலும் ஒருவருக்குப் பசிக்கிறது!''

""யார் அவர்?'' ராதை கூர்மையாகத் தானும் அக்கரையைப் பார்த்தாள்,

அங்கே ஆலமரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பது தெரிந்தது,

""துர்வாச மகரிஷி!'' என்றான் கண்ணன்,

""அறிவேன்! கோபத்திற்கும் அதனால் தாம் கொடுக்கும் சாபத்திற்கும் பெயர்பெற்றவர்!''

""ராதா! என் மனத்தில் நீ இருக்கிறாய். அவர் மனத்தில் நான் இருக்கிறேன்! அவர் என் பக்தர்!''

சரி...சரி... அவருக்கும் சேர்த்தே உணவு சமைத்து எடுத்துவருகிறேன்,அதிருக்கட்டும், உங்கள் மனத்தில் நான் இருப்பது பற்றி மகிழ்ச்சி,

ஆனால் அங்கே நான் மட்டும் தான் இருக்க வேண்டும்,என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் இருக்கக் கூடாது,ஞாபகமிருக்கட்டும்! கண்ணன் நகைத்தான்,

ராதை தொடர்ந்தாள்,

""இப்படிச் சொன்னால் எப்படி ராதா? நான் நேசிக்கும் எல்லாப் பெண்களிடமும் உன்னைத் தானே காண்கிறேன்!

"நல்ல நியாயம் இது! உங்கள் தாயார் யசோதையிடம் சொல்லித்தான் உங்களைத் திருத்த முயலவேண்டும்!''

""தாயார் யசோதைக்கும் உனக்கும் ஒரே ஒரு வேற்றுமை தான் ராதா,என் தாய் என்னை உரலில் கட்டிப் போட்டாள்,நீ உன் குரலில் கட்டிப் போடுகிறாய்,என் புல்லாங்குழலை இனிமை என்பவர்கள் உன் குரலைக் கேட்காத முட்டாள்கள்'',

""போதுமே உங்கள் புகழ்ச்சி. ஆண்களுக்குப் பசிவந்தால் கூடவே கவிதையும் வரும்போல் இருக்கிறது, என்னை அதிகம்
புகழவேண்டாம்,எப்படியும் சாப்பாடு உறுதி!''

ராதை நகைத்தவாறே மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தாள்,

""ஒரு தட்டில் உணவு கொண்டுவா, போதும். துர்வாசர் பசியாறட்டும்!''
ராதை தலையாட்டியபடி,சாப்பாடு செய்து எடுத்து வரப் புறப்பட்டாள்,

ராதை உணவுத் தட்டோடு வந்தபோது யமுனை நதியில் கணுக்காலளவு நீர்தான் இருந்தது,

தானே அக்கரைக்குப் போய் முனிவருக்கு உணவு பரிமாறிவிட்டு வருவதாகச் சொல்லி நதியில் இறங்கி நடந்தாள்,

அவளது நடையழகைப் பார்த்து ரசித்தவாறே இக்கரையில் அமர்ந்திருந்தான் கண்ணன்,

துர்வாச மகரிஷி ஞானதிருஷ்டியால் வந்திருப்பது யார் என்று உணர்ந்துகொண்டார்,

""கண்ணக் கடவுள் மேல் அழியாப் பிரேமை கொண்ட என் தாய் ராதா மாதாவா? என்னைத் தேடித் தாங்களே வந்தீர்களா தாயே?''

""உங்களுக்குப் பசிக்கிறதென்று அவர் சொன்னார்,என்னைத் தாய் என்கிறீர்கள் நீங்கள்! பசிக்கும் குழந்தைக்கு உணவு தரவேண்டியது தாயின் பொறுப்பல்லவா?''

""எனக்குப் பசிப்பதைப் பற்றி மட்டும்தானா சொன்னார்?

கண்ணனுக்கும் பசிக்குமே? அதைப் பற்றிச் சொல்லவில்லையா?''

""அதையும் தான் சொன்னார்,ஆனால், நீங்கள்தான் முதலில் பசியாற வேண்டும், கணவர் காத்திருக்கலாம்,குழந்தை காத்திருக்கக் கூடாது!''

ராதை இலைவிரித்து வெகுபிரியமாக உணவு பரிமாறினாள்,பசியின் வேகமோ உணவின் சுவையோ எது காரணமோ தெரியவில்லை,பார்க்க ஒல்லியாக இருந்த அந்த மகரிஷி,ஒரு பயில்வான் சாப்பிடுவதுபோல் வயிறாரச் சாப்பிட்டார்.

இந்தச் சாப்பாட்டு வேளையில் நடந்த இன்னொரு விஷயத்தை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை,

யமுனையில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்திருந்தது,வெள்ளத்தைப் பார்த்த ராதை திகைத்தாள்,

""தாயே! எப்படித் திரும்பிச் செல்வீர்கள்?''முனிவர் கவலையோடு வினவினார்,

""அதுதான் எனக்கும் புரியவில்லை,நான் கண்ணனாக இருந்தால் நந்தகோபர் என்னைக் கூடையில் எடுத்துச் செல்லக் கூடும்,

ஆதிசேஷனே வந்து மழை, மேலே படாமல் குடைபோல படம் விரித்துக் காக்கக் கூடும்,

ஆனால், நான் கண்ணனல்லவே? ராதை தானே? எனக்கு இந்த நதி வழிவிடுமா என்ன?''

""ஏன் விடாது? இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால்,யமுனை வழிவிடட்டும் என்று சொல்லிப் பாருங்கள்,வழி கிடைக்கும்,நதியைக் கடந்து கண்ணனிடம் சென்றுவிடுங்கள்!''

ராதை கலகலவென சிரித்தாள்,

""என் கண்ணெதிரே நீங்கள் வயிறார உணவு உண்டிருக்கிறீர்கள்,நான் தான் இலைபோட்டுப் பரிமாறியிருக்கிறேன்,அப்படியிருக்க இப்படியொரு பொய்யைச் சொல்லச் சொல்கிறீர்களே?''

""தாயே! அது பொய்யா நிஜமா என்பதை முடிவு செய்ய வேண்டியது யமுனை நதியின் பாடு,நீங்கள் ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்? சொல்லித்தான் பாருங்களேன்!''

ராதை வியப்போடு யமுனை நதியின் கரையில் நின்று, "இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனையே வழிவிடுவாயாக!'' என்று கூறினாள்,

மறுகணம் யமுனை இரண்டாகப் பிளந்து ராதை நடந்துசெல்லும் வகையில் வழிவிட்டது,

ஆச்சரியத்தோடு விறுவிறுவென்று நடந்து கண்ணன் இருக்கும் கரைக்கு வந்து சேர்ந்தாள் ராதை,

மறுகணம் நதி மீண்டும் இணைந்து வழிமறைத்து மூடிக்கொண்டது!

ராதையின் முகம் கோபத்தால் சிவந்தது,

""என்ன ராதா? நீ அனைத்தையும் கரைகண்டவள் என்பது உண்மைதான் போலிருக்கிறது? இன்று இக்கரை அக்கரை இரண்டையும் கண்டுவிட்டாயே?''

""நான் கரைகண்ட லட்சணம் இருக்கட்டும்,யமுனை இப்படி துர்வாசருக்குப் பயப்பட வேண்டாம்,அவர் சபித்துவிடுவாரோ என்பதற்காக அவர் சொன்ன பொய்க்கெல்லாம் இந்த நதி துணைபோகிறது''.

கண்ணன் நகைத்தவாறே கேட்டான்:
""அப்படி என்ன பொய்க்குத் துணைநின்றது இந்த நதி?''

""இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனை வழிவிடட்டும் என்று சொல்லச் சொன்னார்,என் சாப்பாட்டை வயிறாரச் சாப்பிட்ட உங்கள் பக்தர்,

அவர் சொன்னதைச் சொன்னேன்,இந்தப் பாழும் நதி அந்தப் பொய்க்கு உடன்பட்டு வழிவிட்டிருக்கிறது,இந்த நதியை என்ன செய்தால் தகும்?''

""வா! உண்மையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த நதியை மலர்தூவி வழிபடுவோம்!''

""நீங்களுமா அதை உண்மை என்கிறீர்கள்? அப்படியானால் என் கண்ணால் பார்த்தது பொய்யா?''

""கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்யாக இருக்கலாம். தீர விசாரிப்பதுதான் மெய்,துர்வாசர் உபவாசமிருந்தார் என்பது சத்தியம் தான்! நதிகள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்கும்'',

""அது எப்படிச் சத்தியமாகும்?'' ராதை வியப்போடுவிசாரித்தாள்,

கண்ணன் சொல்லலானான்:

""அன்பே ராதா! எனக்குப் பசிக்கிறது என்றேன்,ஆனால்,ஒரு தட்டு உணவே போதும் என்றேன்,நீ துர்வாசருக்கு உணவு படைத்தாய்,அந்த முனிவர்,தன் இதயத்தின் உள்ளிருக்கும் எனக்கு நைவேத்தியம் செய்வதான பாவனையுடன் உணவு
முழுவதையும் உண்டார்,

அதனால் தான் நான் உண்ணும் அளவு அதிக உணவை அந்த ஒல்லியான முனிவரால் உண்ண முடிந்தது,

அவர் உண்ட உணவின் பலம் என் உடலில் கூடிவிட்டது,

என் பக்தர்களின் பக்தியால் தான் எப்போதும் எனக்கு பலம் கூடுகிறது,இனி நீ வற்புறுத்தினாலும் கூட என்னால் சாப்பிட முடியாது,

வயிறு நிறைந்திருக்கிறது,இந்த ரகசியத்தை என் ராதை
அறியவில்லை,ஆனால் யமுனை அறிவாள்,அதனால் தான் அவள் விலகி வழிவிட்டாள்!''

கண்ணன் சொன்னதை,ராதை வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள்,

""கண்ணே ராதா! எந்த மனிதன் தான் செய்யும் எந்தச் செயலையும் தன் உள்ளிருக்கும் இறைவனுக்கு சமர்ப்பணம் என நினைத்துச் செய்கிறானோ அவனை எந்தத் துன்பமும் பாதிப்பதில்லை,

ஏனெனில் அவனுக்கு நேரும் துன்பத்தையெல்லாம் அவன் இதயத்தின் உள்ளிருக்கும் இறைவன் தாங்கிக் கொண்டு விடுகிறான்!''

ராதை ஒரு பேருண்மையைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் மலர்ந்து சிரித்தாள்,

""ஆனால் ராதா! நான் எப்போதும் சூடாக எதையும் சாப்பிடுவதில்லை!''என்றான் கண்ணன்,

""ஏன்?'' என்று கேட்டாள் ராதை.

""நீ என் உள்ளத்தில் இருக்கிறாய். உனக்குச் சூடு பொறுக்காது!'' என்றான் கண்ணன்,ராதை கலகலவென மலர்ந்து சிரித்ததைக் கேட்டு அக்கரையில் இருந்த துர்வாசரின் மனம் மகிழ்ந்தது.

ராதே க்ருஷ்ணா !

Saturday, September 28, 2019

ஷீர்டி சாய் பாபா 108 போற்றி



ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:

ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:

ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:

ஓம் சேஷ சாயினே நம:

ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:

ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:

ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:

ஓம் பூதாவாஸாய நம:

ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:

ஓம் காலாதீதாய நம:

ஓம் காலாய நம:

ஓம் காலகாலாய நம:

ஓம் காலதர்பதமனாய நம:

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:

ஓம் அமர்த்யாய நம:

ஓம் மர்த்யாபயப்ரதாய நம:

ஓம் ஜீவாதாராய நம:

ஓம் ஸர்வாதாராய நம:

ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:

ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:

ஓம் அன்னவஸ்த்ரதாய நம:

ஓம் ஆரோக்ய÷க்ஷமதாய நம:

ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:

ஓம் ருத்திஸித்திதாய நம:

ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:

ஓம் யோக÷க்ஷமவஹாய நம:

ஓம் ஆபத்பாந்தவாய நம:

ஓம் மார்க்பந்தவே நம:

ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:

ஓம் ப்ரியாய நம:

ஓம் ப்ரீதிவர்தனாய நம:

ஓம் அந்தர்யாமினே நம:

ஓம் ஸச்சிதாத்மனே நம:

ஓம் ஆனந்தாய நம:

ஓம் ஆனந்ததாய நம:

ஓம் பரமேச்வராய நம:

ஓம் பரப்ரம்ஹணே நம:

ஓம் பரமாத்மனே நம:

ஓம் ஞானஸ்வரூபிணே நம:

ஓம் ஜகத பித்ரே நம:

ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:

ஓம் பக்தாபயப்ரதாய நம:

ஓம் பக்த பாராதீனாய நம:

ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:

ஓம் சரணாகதவத்ஸலாய நம:

ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:

ஓம் ஞான வைராக்யதாய நம:

ஓம் ப்ரேமப்ரதாய நம:

ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:

ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:

ஓம் கர்மத்வம்சினே நம:

ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:

ஓம் குணாதீத குணாத்மனே நம:

ஓம் அனந்த கல்யாண குணாய நம:

ஓம் அமித பராக்ரமாய நம:

ஓம் ஜயினே நம:

ஓம் துர்தர்ஷா÷க்ஷõப்யாய நம:

ஓம் அபராஜிதாய நம:

ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:

ஓம் அசக்யராஹிதாய நம:

ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:

ஓம் ஸுருபஸுந்தராய நம:

ஓம் ஸுலோசனாய நம:

ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:

ஓம் அரூபாவ்யக்தாய நம:

ஓம் அசிந்த்யாய நம:

ஓம் ஸூக்ஷ்மாய நம:

ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:

ஓம் மனோவாக தீதாய நம:

ஓம் ப்ரேமமூர்த்தயே நம:

ஓம் ஸுலபதுர்லபாய நம:

ஓம் அஸஹாய ஸஹாயாய நம:

ஓம் அநாதநாத தீனபந்தவே நம:

ஓம் ஸர்வ பாரப்ருதே நம:

ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:

ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:

ஓம் தீர்த்தாய நம:

ஓம் வாஸுதேவாய நம:

ஓம் ஸதாம் கதயே நம:

ஓம் ஸத்பராயணாய நம:

ஓம் லோகநாதாய நம:

ஓம் பாவனானகாய நம:

ஓம் அம்ருதாம்சவே நம:

ஓம் பாஸ்கரப்ரபாய நம:

ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:

ஓம் சத்ய தர்ம பராயணாய நம:

ஓம் ஸித்தேச்வராய நம:

ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:

ஓம் யோகேச்வராய நம:

ஓம் பகவதே நம:

ஓம் பக்தவத்ஸலாய நம:

ஓம் ஸத்புருஷாய நம:

ஓம் புரு÷ஷாத்தமாய நம:

ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:

ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:

ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:

ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:

ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:

ஓம் வேங்கடேசரமணாய நம:

ஓம் அத்புதானந்தசர்யாய நம:

ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:

ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:

ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:

ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:

ஓம் ஸர்வமங்களகராய நம:

ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:

ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:

ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:

மங்களம் மங்களம் மங்களம்

ஆதிவிநாயகர்....


கஜமுகாசுரன் என்ற அசுரனை அழிக்க சிவபெருமான் நடத்திய திருவிளையாடளின காரணத்தால் மணித முகம் துண்டிக்கப்பட்ட பின்பு யானை முகம் பொருத்தப்பட்டு கஜமுகாசுரனை கடும் போரிட்டு அழித்தார் விநாயகர்.
மகிழ்ந்த சிவபெருமான் தலதர்ப்பண்புரி என்ற இடத்தில் ஆதி விநாயகராக மணித முகத்தோடு வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடித்து வைத்து இடது கையை காலின் மீது வைத்தும் வலது கையை சற்றே சாய்த்து அபய முத்திரை காட்டும் படியும் காட்சி தர அருள் செய்தார்.

இந்த மந்திரத்தை ஆறுமுறை உச்சரித்தால் ஈராயிரம் முறை சிவநாமம் சொன்னதற்கு சமம் -சான்றோர்கள்

""பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவ மஹாலிங்க மத்திய சுணாஸே””

மேலேயுள்ள இந்த மந்திரத்தை ஆறுமுறை உச்சரித்தால் ஈராயிரம் முறை சிவநாமம் சொன்னதற்கு சமம் -சான்றோர்கள்

இந்த தகவலானது ஶ்ரீ லிங்கோத்பவர் ஆலயத்தில் சிவபக்தர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

பிரதோஷ நேரம்...
ஓம் நந்தி பகவானே போற்றி...
ஓம் நமசிவாய... 🌹🌹🌹🌹

சாஸ்திர விதிகளின்படி, எந்தப் பூஜையும் பொன்னும் மலர்களும் தக்ஷிணையும் ஸமர்ப்பணம் செய்யப்படாமல் நிறைவு பெறாது. இதை நித்தியவழிபாடு செய்தவர்கள் அறிந்திருந்தனர்.


மன்னனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்யும்போதும் பாதபூஜை செய்யும்போதும் குடிமக்கள் பரிசுகளையும் வெகுமதிகளையும் கொண்டுவருகின்றனர். அதுபோலவே குரு பூஜைக்கும் தட்சணை ஸமர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.

தட்சணை கொடுப்பவர்கள் உயர்ந்த பதவியை அடைகின்றனர். பொருளை தக்ஷிணையாகக் கொடுப்பவர்கள் உயர்ந்த ஞானத்தை அடைகிறார்கள்; பொன்னை தக்ஷிணையாகக் கொடுப்பவர்கள் மனத்தூய்மையை அடைகிறார்கள்; என்று வேதம் மொழிகிறது.

அரைத்த சந்தனத்தை தெய்வத்திற்குப் பூசுவதால் மங்களம் உண்டாகிறது. அக்ஷதை ஸமர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகிறது. மலர்களும் தாம்பூலமும், செல்வத்தையும் அஷ்ட ஐசுவரியங்களையும் அளிக்கின்றன. அதுபோலவே,தட்சணைநிறைந்த செல்வத்தை அளிக்கிறது.

எப்படிச் சந்தனமும் அக்ஷதையும் மலர்களும் தாம்பூலமும் பூஜை திரவியங்களில் முக்கியமானவையோ, அப்படியே தக்ஷிணையும் சுவர்ணபுஷ்பமும் மிகுந்த செல்வத்தை அடைய முக்கியமானவை.

தெய்வபூஜைக்கு தட்சணை அவசியமானது; ஒரு விரதத்தை முடிக்கும்போதும்தட்சணைகொடுக்கப்படவேண்டும்.

'ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்தம்’ என்று ஆரம்பிக்கும் மந்திரத்தை ஓதி, ஒரு தெய்வத்தின் பூஜையில் தட்சணை அளிக்க வேண்டுமென்பது வழக்கமாக இருக்கும்போது, ஒரு ஞானியைப் பூஜை செய்யும்போது ஏன் தட்சணை கொடுக்கக்கூடாது?

ஒரு மஹானை தரிசனம் செய்யப் போகும்போது அவரவர்களுடைய ஞானத்திற்கேற்றவாறு பலவிதமான எண்ணங்களுடனும் நோக்கங்களுடனும் மக்கள் செல்கின்றனர். இது விஷயத்தில் ஒருமையை எதிர்பார்க்கமுடியாது.

ஆனால், பாபாவினுடைய வழிமுறைகள் பிரமிக்கத்தக்கவை. கே­லி செய்யவும் வம்பு பேசவும் வந்தவர்கள், அவர்களுடைய துர்புத்தி அழிக்கப்பட்டு பாபாவின் சரணகமலங்களைத் தொழுவதற்குத் தங்கிவிட்டனர். சிலருக்கு அவ்வளவு பாக்கியம் கிடைக்காவிட்டாலும், தங்களுடைய நடத்தைக்காக அனுதாபமாவது படுவார்கள். நேரடியான அனுபவம் பெற்று, அஹங்காரத்தை விலக்கிவிட்டு நம்பிக்கையை திடமாக்கிக் கொள்வார்கள்.

இவர்களனைவரும் இவ்வுலக வாழ்க்கையில் உழலும் சாதாரண மக்களே.தட்சணைஅளிப்பதால் அவர்கள் மனத்தூய்மை அடைய வேண்டுமென்றே பாபா விரும்பினார்.

Friday, September 27, 2019

அவிநாசி_சிவனின்_அற்புதங்கள்........ #அனைவரும்_படிக்கவும்_அற்புதம்........


""இது கோயிலுக்குள் இருக்கின்ற ஒரு சாதாரண தீர்த்தக் கிணறுதானே? இதைப் போய் கங்கை என்று சொல்கிறீர்களே...?''- பதஞ்ஜலி முனிவரிடம் இன்னொரு ரிஷி இப்படிக் கேட்டார். பதஞ்ஜலி புன்னகைத்தார். ""நண்பரே! காசியில் விஸ்வநாதர் இருக்கின்றாரே, அந்தச் சிவலிங்கத்தின் வேர் ஒன்று தென் கோடி வரை நீண்டு, இதோ இந்தக் கோயிலில் இன்னொரு சிவலிங்கமாக முளைத்திருக்கிறது. அதுதான் நாம் பார்க்கின்ற அவிநாசி லிங்கம். காசி விஸ்வநாதருக்கு இணையான மூர்த்தி என்பதால் இந்தச் சிவனுக்கு, "வாராணஸிக் கொழுந்து' என்றொரு பெயரே உண்டு. இந்தக் கிணற்றையும், "காசிக் கிணறு' என்றுதான் சொல்வார்கள்'' என்றார் பதஞ்ஜலி.

ஆனால் சக முனிவருக்கு முழு நம்பிக்கை வரவில்லை. அதை உணர்ந்த பதஞ்ஜலி, தன் கையிலிருந்த தண்டத்தை எடுத்து காசிக் கிணற்றில் போட்டார். பிறகு, ""போகலாம் வாருங்கள்'' என்று நண்பரை அழைத்தார்.

இருவரும் பல மாதங்கள், பற்பல கோயில்களாகத் தரிசித்துக் கொண்டேபோய் கடைசியில் வாராணஸி என்றழைக்கப்படும் காசி மாநகரை அடைந்தார்கள். அங்கே கங்கையில் நீராட இறங்கினார்கள். அப்போது அந்தப் புண்ணிய நதி, தன் அலைக்கரங்களால் பதஞ்ஜலியின் தண்டத்தை சுமந்து வந்து அவரிடமே சேர்ப்பித்தது. இதைப் பார்த்த பதஞ்ஜலியின் நண்பர், வியப்பால் கை குவித்தார். காசிக் கிணற்றில் உள்ள தண்ணீர், கங்கை நீர்தான் என்ற பேருண்மையை உணர்ந்தார். அவர் மனதும் கங்கா பிரவாஹம் ஆகி, அவருடைய கண்களிலும் ஆனந்த கங்கை பொங்கியது. இப்படிப்பட்ட புண்ணியக் கிணறு இருக்கும் ஆலயம் அவிநாசியில் உள்ளது.

அவிநாசியில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற அற்புதங்களைப் பட்டியலிட்டு மாளாது.

கேரள நாட்டு அந்தணன் ஒருவன், பாவங்களால் பேய் வடிவம் பெற்றான். இங்கே வந்து வணங்கியதும் தேவ வடிவம் பெற்று சிவலோகம் சேர்ந்தான்.

குருநாத பண்டாரம் என்பவர், தனது பூஜையில் சிவலிங்கம் வைத்து அன்றாடம் வழிபடுவார். அரசாங்க அதிகாரிகள், பண்டாரத்தின் மகிமை தெரியாமல் அந்த லிங்கத்தைப் பிடுங்கி அவிநாசி ஆலயத் தெப்பக் குளத்தில் எறிந்தனர். பிற்பாடு அங்குள்ள பெரிய மீன் ஒன்று அந்தச் சிவலிங்கத்தை வாயில் ஏந்தி வந்து பண்டாரத்திடம் சேர்ப்பித்தது.

கொங்கு நாட்டை வீர விக்கிரம குமார சோளியாண்டான் ஆண்டு கொண்டிருந்தபோது மந்திரவாதி ஒருவன் அவிநாசியப்பரின் தேர்ச் சக்கரங்களை மந்திரங்களால் நகராதபடி செய்தான். அப்போது அந்த ஊரில் இருந்த வள்ளல் தம்பிரான் என்ற அருளாளர், அவிநாசி இறைவனை மனதார தியானித்து நான்கு சக்கரங்களிலும் திருநீற்றை வீசினார். மந்திரக் கட்டு நீங்கி, தேர் நகர்ந்தது. இது கண்டு மகிழ்ந்த சோளியாண்டான், "வருடா வருடம் தேர் திருவிழாவன்று வள்ளல் தம்பிரானுக்குத்தான் முதல் மரியாதை. தம்பிரானின் காலத்துக்குப் பின் அவருடைய வாரிசுகளுக்கு அந்த மரியாதை வழங்கப்படும்'' என்று அறிவித்தான். இன்றும் தம்பிரானின் வாரிசுகள், தேர்த் திருவிழாவன்று முதல் மரியாதை பெறுகின்றார்கள்.

இப்படித் தோண்டத், தோண்ட அற்புதச் சம்பவங்களாகவே அள்ளித் தரும் அவிநாசியில், சைவ சமயக் குரவர்களில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் செய்த அருஞ்செயல், என்றென்றும் சைவ மக்களால் வியந்து கூறப்படும் விஷயமாகும்...

ஒரு சந்தர்ப்பத்தில் சோழநாட்டுத் தலங்களை தரிசித்துவிட்டு திருப்புக்கொளியூருக்கு (அவிநாசி) வந்தார் சுந்தரர். ஆலயத்தில் உள்ள அவிநாசி அண்ணலைக் காண்கின்ற ஆவலோடு அடியார்கள் புடை சூழ கோயிலை நோக்கி விரைந்தார்.

அப்போது ஒரே வீதியில் இருந்த எதிரெதிர் வீடுகளில் ஒன்றில் மேள சப்தமும், மற்றொன்றில் அழுகை ஒலியும் கேட்டது. ""என்ன இது...?'' என்று உள்ளூர் மக்களிடம் விசாரித்தார் சுந்தரர். அவர்கள், ""ஐயனே! அழுகை ஒலி கேட்கின்ற வீட்டுத் தலைவரின் பெயர் கங்காதரர். அவருக்கு அவிநாசிலிங்கம் என்ற பெயருடைய மகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நாலு வயதாகும்போது, இதோ மங்கள மேளம் கேட்கிறதே, இந்த வீட்டிலிருக்கும் தனது நண்பனோடு பக்கத்திலுள்ள தாமரைக் குளத்துக்குப் போனான். அங்கேதான் அந்தப் பரிதாபகரமான சம்பவம் நடந்துவிட்டது.

இரண்டு சிறுவர்களும் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கங்காதரரின் பிள்ளை அவிநாசிலிங்கத்தை முதலை ஒன்று இழுத்து விழுங்கிவிட்டது. அதைப் பார்த்த அவனுடைய நண்பன், அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்துவிட்டான்.

இந்தச் சோகம் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. முதலையிடமிருந்து தப்பிய பாலகனுக்கு இன்று பூணூல் அணிவிக்கும் விழா நடத்துகிறார்கள். "தங்கள் வீட்டுப் பிள்ளையும் உயிரோடிருந்தால் அவனுக்கும் உபநயனம் நடத்தியிருப்போமே?' என்று கங்காதரரின் குடும்பத்தார் சிலர் அழுது கொண்டிருக்கிறார்கள்'' என்றனர்.

சுந்தரர் வந்திருக்கும் செய்தி கங்காதரரின் காதுகளிலும் விழுந்தது. அவர் உடனே தன் மனைவியை அழைத்துக் கொண்டு பரபரவென்று வீதிக்கு ஓடி வந்தார். சுந்தரரின் பாதங்களில் விழுந்து பணிந்தார். முக மலர்ச்சியோடு கை குவித்தார்.

சுந்தரருக்கோ வியப்பு... ""இன்ப மகனை இழந்த அந்தப் பெற்றோர் நீங்கள்தானா?'' என்றார். உடனே கங்காதரரும், அவருடைய மனைவியும், ""ஆமாம் ஐயனே! ஆனால் நடந்தது நடந்துவிட்டது. அதையே நினைத்து வருந்தி என்ன பயன்? உங்கள் அருமை, பெருமைகளைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உங்களை நேரில், அதுவும் நாங்கள் வாழ்கின்ற அக்ரஹாரத்திலேயே தரிசிப்போம் என்று கனவிலும் நினைத்ததில்லை. மகன் போனால் என்ன? மகான் நீங்கள் இருக்கிறீர்களே?'' என்று அன்பு பொங்கக் கூறினார்கள்.

இயல்பிலேயே இளகிய மனம் படைத்த சுந்தரர், அவர்களுடைய அன்பை நினைத்து அகம் குழைந்தார். ""உங்கள் பிள்ளை அவிநாசி லிங்கம் என்னுடன் வராமல் இந்த ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் அவிநாசி லிங்கத்தை தரிசிக்க மாட்டேன். வாருங்கள்! உங்கள் அன்பு மகன் இறந்த குளத்தைக் காட்டுங்கள்'' என்று ஆணையிட்டார்.

சுந்தரமூர்த்தியின் வேகத்தைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அவரை தாமரைக் குளக்கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போனதும் தனது கைகளில் வெண்கலத் தாளத்தை (ஜால்ரா) எடுத்தார் சுந்தரர். ""எற்றான் மறக்கேன்'' என்று ஆரம்பித்து உள்ளங்களை உருக்கும் தேவாரப் பதிகம் ஒன்றை பாடத் தொடங்கினார்.

""புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!
கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே'' என்று இறைவனை நோக்கி உணர்ச்சி பொங்கக் கேட்டார். அப்போது தாமரைக் குளத்திலே திடீரென்று நீர் பெருகியது. அதன் மேற்பரப்பைக் கிழித்துக் கொண்டு ஒரு பெரிய முதலை கரையை நோக்கிப் பாய்ந்தது. கரையருகே வந்ததும் தனது அகன்ற வாயை மேலும் அகற்றித் திறந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த முதலை உண்ட பாலகன், ஏழு வயது நிரம்பிய இளஞ் சிறுவனாய் முதலையின் வாயிலிருந்து வெளிப்பட்டான். கரையில் நின்றிருந்தவர்களைப் பார்த்து ஒரு கணம் மருண்டான்; பிறகு மலர்ந்தான். ஓடோடி வந்து, ""அப்பா! அம்மா! அப்பா! அம்மா!'' என்று அரற்றியபடி தன் பெற்றோர்களைக் கட்டித் தழுவி கண்ணீர் பெருக்கினான்.

கங்காதரரும், அவருடைய துணைவியாரும் கதறித் தீர்த்தார்கள். ""கண்ணே அவிநாசி! இதோ இங்கு நிற்கிறாரே இந்த அருளாளர்! இவர்தானடா உனக்கும், எங்களுக்கும் பிரத்யட்ச அம்மையப்பர். அவர் காலைக் கட்டிக் கொள்ளு'' என்று உணர்ச்சி ததும்ப, தட்டுத் தடுமாறிச் சொன்னார்கள்.

அவிநாசிலிங்கம் என்ற அந்தச் சிறுவன், ஆனந்தம் பொங்க சுந்தரரின் திருவடிகளைத் தொழுதான். ""எங்கள் குலக் கொழுந்தை மீட்டுத் தந்த குல தெய்வமே!'' என்று கூவியபடி கங்காதர அய்யரும் , அவரது மனைவியும் சுந்தரரின் பாதங்களில் வேரற்ற மரம்போல விழுந்தார்கள்.

ஊர், இந்த அற்புதத்தைப் பார்த்து வாயடைத்து நிற்கவில்லை; மாறாக வாயார, ""சுந்தரர் வாழ்க! ஆரூரான் வாழ்க! தம்பிரான் தோழர் வாழ்க! எங்கள் தலைவர் வாழ்க!'' என்று கர்ஜித்தது.

சுந்தர மூர்த்தி நாயனார், அவர்களின் வாழ்த்தொலியை புன்முறுவலோடு ஏற்றபடி அவிநாசிலிங்கம் என்ற அந்தச் சிறுவனை அணைத்துக் கொண்டார். அடியார் கூட்டம் பின் தொடர அவிநாசி அப்பரின் ஆலயத்துக்குள் நுழைந்தார். பதிகங்கள் பாடினார். இறைவனுக்கு நன்றி சொன்னார்.

பிறகு மறுபடியும் அக்ரஹாரத்துக்கு வந்தார். எதிர் வீட்டில் கொட்டிக் கொண்டிருந்த மேளக்காரரை அழைத்து கங்காதர வீட்டிலும் மங்கள வாத்தியம் முழங்க வைத்தார். சிறுவன் அவிநாசிக்கு அவரது கண் முன்னாலேயே பூணூல் கல்யாணம் நடந்தது.

""திருவாரூரில் பிறக்க முக்தி. அருணாசலத்தை நினைக்க முக்தி. சிதம்பரத்தைத் தரிசிக்க முக்தி. காசியில் இறக்க முக்தி. ஆனால் அப்பன் அவிநாசியைப் பற்றி வாயாரப் பேசினாலே முக்தி'' என்பார்கள் பெரியோர்கள்.

ஓம் நமசிவாய

சந்தேகம் என்பது மிகவும் கொடிய நோய். சந்தேககம், சந்தோஷத்தின் எதிரி. இதற்கு மஹாபாரதத்திலேயே உதாரணம் உள்ளது.

●மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது..

சந்தேகம் என்பது மிகவும் கொடிய நோய். சந்தேககம், சந்தோஷத்தின் எதிரி.
இதற்கு மஹாபாரதத்திலேயே உதாரணம் உள்ளது.

கவுவரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் யுத்தம் நடக்கப் போவது உறுதியாகிவிட்டது. இதை நன்கு அறிந்த கிருஷ்ண பரமாத்மா, துரியோதனிடம் சமாதான துாது சென்றான். யுத்தம் வந்தால், கவுரவர்கள் பக்கம், பீஷ்மர், துரோணர், அவர் மகன் அஸ்வத்தாமன், கர்ணன் என பல மாபெரும் வீரர்கள் சண்டையிடுவார்கள் என, பரமாத்மாவுக்கு தெரியும்.
அதிலும், அஸ்வத்தாமன் சாகா வரம் பெற்றவன். சீரஞ்சீவியான அவன், துரியோதனன் பக்கம் சேனாதிபதியாக களம் இறங்கினால், பாண்டவர்களால் எப்படி வெற்றி பெற முடியும் என, பரமாத்மா ஆலோசித்தான்.

அஸ்தினாபுரத்துக்கு சென்ற பரமாத்மா, திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன், பீஷ்மர், என பலரையும் சந்தித்து வணக்கம் தெரிவித்தான்.
அஸ்வத்தாமனை பார்த்த கண்ணன், அவனை தனியாக அழைத்தான், இதை துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அஸ்வத்தாமனிடம் நலம் விசாரித்த கிருஷ்ணன், தன் விரலில் இருந்த மோதிரத்தை நழுவ விட்டான். அது பூமியில் விழுந்தது. அதை குனிந்து எடுத்தான் அஸ்வத்தாமன். கிருஷ்ணனிடம் மோதிரத்தை தர போன அஸ்வத்தாமனிடம், வானத்தை காட்டி கிருஷ்ணன் பேசினான், அஸ்வத்தமானும் வானத்தை பார்த்தான்
பின், கிருஷ்ணனின் விரலில், மோதிரத்தை அணிவித்தான் அஸ்வத்தாமன்.

இதை பார்த்த துரியோதனன், 'நான் கவுரவர்கள் பக்கம் இருந்நதாலும், பாண்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவேன். இது இந்த பூமி மற்றும் வானத்தின் மீது சத்தியம்' என, கிருஷ்ணனிடம், அஸ்வத்தாமன் கூறியதாக, துரியோதனன் கருதினான்.
இந்த சந்தேகத்தால், அவனை, கடைசிவரை சேனாதிபதியாக, துரியோதனன் நியமிக்கவில்லை. 17ம் நாள் யுத்தத்தில், துரியோதனன் பீமனால் தாக்கப்பட்டு, கால்கள் தொடைகள் உடைந்து, யுத்தகளத்தில் இருந்தான், அப்போது, அவனை அஸ்வத்தாமன் சந்தித்தான்,
'நான் சிரஞ்சீவி வரம் பெற்றவன்; என்னை சேனாதிபதியாக நியமித்திருந்தால், யுத்தத்தின் முடிவு மாறியிருக்கும்' என்றான் அஸ்வத்தாமன். அதற்கு துரியோதனன், 'நீதான், பாண்டவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என கிருஷ்ணனிடம் சத்தியம் செய்து கொடுத்தாயே' என, கேட்டான்.
'யார் சத்தியம் செய்தது' என, கேட்ட அஸ்வத்தாமனிடம், கிருஷ்ணன் துாது வந்த போது நடந்த சம்பவத்தை தெரிவித்தான் துரியோதனன். இதை கேட்ட அஸ்வத்தமான் விரக்தியில் சிரித்தான்.
'கிருஷ்ணனின் விரலில் இருந்த மோதிரம் கீழே விழுந்தது. அதை தான் எடுத்து கொடுத்தேன். சத்தியம் எதுவும் செய்யவில்லை. என் மீது சந்தேகப்பட்டு, உன் தோல்வியை தேடி கொண்டாய். அப்போதே இது பற்றி என்னிடம் கேட்டிருந்தால், நடந்தது தெரிந்திருக்கும். இதுவும், அந்த கிருஷ்ணனின் விளையாட்டுதான்' என்றான் அஸ்வத்தாமன்.

●உண்மைதான்; சந்தேகம் ஏற்பட்டால், அது பற்றி சம்பந்தபட்டவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் துரியோதனன் போல், தோல்வியை தழுவ வேண்டியது தான்.●

Thursday, September 26, 2019

கிருஷ்ணர் வெண்ணெயைத் திருடியது ஏன்...???



கண்ணன் கடவுள்தானே அவன் நினைத்தால் பாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற முடியாதா....???

அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர் வீட்டில் வெண்ணெயைத் திருடித் தின்ன வேண்டும்....???

பாலைத் தண்ணீரில் விட்டால் தண்ணீருடன் கலந்து விடும். வெண்ணெய்யோ தண்ணீரில் ஒட்டாமல் மிதக்கும். ஆகவேதான் அவர் பாலைத் திருடாமல் வெண்ணெயை திருடினார்....

வெண்ணெய் என்பது மோரிலிருந்து கடைந்தெடுக்கப்படுவது.

அதாவது அதுதான் பாலின் சாராம்சம்.

இந்த உலகம் நிரந்தரமானதல்ல,

வைகுண்டலோகமே நிரந்தரம் என்பதை உணர்ந்து.....

இந்த உலக வாழ்க்கையில் ஒட்டாமல் வெண்ணெயை போலிருந்தால் கிருஷ்ணர் அப்படிப்பட்டவர்களைத் திருடிச் செல்வார்.

இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது என்று எண்ணுபவர் தண்ணீரில் கலந்த பாலாக இருக்கின்றனர்.

வெண்ணெய்யைப் போன்று எப்படி உலகத்தோடு ஒட்டாமல் வாழ்வது...

ஒரு வாத்து தண்ணீரில் வாழ்ந்தாலும் அதன் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை.

உப்புத் தண்ணீரில் மீன் வாழ்ந்தாலும், உப்பு அதன் உடம்பிற்குள் சேர்வதில்லை.

தாமரை தண்ணீரில் வளர்ந்தாலும் அதன் இலையின் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை.

அதேபோல ஒருவன் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் பற்றில்லாமல் வாழ வேண்டும்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்...

Wednesday, September 25, 2019

லட்சுமி கடாட்சம் வேண்டுமா ? 108 இடங்களில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சொல்லப்படுகின்றது.


மகாலட்சுமி வாசம் செய்யும் 108 பொருட்களையும் ,இடங்களையும்,சுத்தமாகவும் பொக்கிஷமாகவும் அந்தந்த பொருட்களுக்கேற்ப மரியாதையும் மகிமையை புரிந்து செயல்படுங்கள் விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் லட்சுமிதேவியானவள், உங்கள் இல்லத்திலும்ஸ்ரீனிவாச பெருமாளோடு நிரந்தர வாசம் செய்ய மனம் இசைவாள் ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம்

இறைவனை சிந்தித்து வாழும் மக்கள் அனைவரும் விரும்புவது, லட்சுமி கடாட்சத்தைத் தான். லட்சுமியின் அருள் கிடைத்து விட்டால், அனைத்து செல்வங்களும் வந்து சேர்ந்து விடும் என்பது ஐதீகம். விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் லட்சுமிதேவியானவள், 108 இடங்களில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த 108 இடங்கள் எவை என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரி சங்கு. மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம். கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக்சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை. கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங்கிழங்கு, ஆல விழுது. தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை. திருநீற்று பச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல்,



விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு. நெற்கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை. கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண். நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானை கொம்பு மண், ஆல அடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை. கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல் இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல். படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, வாசல் நிலை, நெற்றி.

ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம்

Tuesday, September 24, 2019

முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க.!!*


மஹாளய பட்ச காலத்தில், முன்னோர், நம் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு, வீட்டிற்கு திரும்பி வந்து ,முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.
துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும். இதனால் அந்த பித்ருக்களுக்கு ,விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில், தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள்.

அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும்.
முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை, இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான், பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து, கங்கையை பூமிக்கு வரவழைத்து ,தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான்.

நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து, முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.

விரதங்களில் தலையாயது ஏகாதசி விரதம்



சமஸ்கிருத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று எனப்பொருள்படும். இங்கு அமாவாசையிலிருந்து மற்றும் பௌர்ணமியிலிருந்து பதினொன்றாவது நாளாகும். இந்நாளில் விரதம் இருப்பதை எல்லா சாஸ்த்திரங்களும் வலியுறுத்துகின்றன. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது அதிமுக்கியமானதாகும். ஏனெனில் மற்ற விரதங்களை கடைபிடிக்காவிட்டால் பாவங்கள் ஏதும் உண்டாவதில்லை. ஆனால் ஏகாதசி விரதத்தைக் கடைபிடிக்காவிட்டால் கொடூரமான பாவங்கள் செய்த கர்மம் உண்டாகும். பிரம்மன் படைத்த உயிர்களில் கொடூரமான பாவங்களையே அங்கங்களாக கொண்ட பாவ புருஷனும் ஒருவன். மக்களைப் பாவச்செயல்களில் செலுத்தி கொடூரமான நரகத்தில் செலுத்துவதே அவனுக்கு விதிக்கப்பட்ட வேலை.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முறை எமலோகம் சென்று பார்த்த போது அங்கு உயிர்கள் தங்களுடைய பாவ விளைவுகளினால் கொடூரமான நரகங்களில் துன்புறுவதைக் கண்டார். அவர்களிடம் கருணைகொண்ட பகவான் கிருஷ்ணர் ஏகாதசியின் மகிமையை அவர்களுக்கு எடுத்துரைக்க அதை அவர்கள் கடைபிடித்த உடனே பாவங்களிலிருந்து விடுபட்டு சொர்க்க லோகங்களை அடைந்தனர். அது முதல் ஏகாதசி மகிமையால் எல்லோரும் புண்ணியபுருஷராக மாற சொர்க்க லோகம் நிரம்பியது. நரகங்கள் வெறிச்சோடி காலியாகவும் ஆயின. பாவப்புருஷனுக்கு துளியும் வேலையில்லாமல் போனது. இதனால் பாவப்புருஷன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் முறையிட அதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏகாதசி அன்று தானிய, பருப்பு (அரிசி, நவதானியங்கள், பருப்புவகைகள், பயறுவகைகள், இட்லி,தோசை, சப்பாத்தி, பூரி, உப்புமா, கடுகு, உளுந்து தாளித்தது, காய்கறிகளில் பீன்ஸ், அவரை, மொச்சைவகையறா) இந்த வகை உணவுகளை உண்பவர் உன் வசப்பட்டு கொடூரமான பாவங்கள் செய்த கர்மம் உண்டாகும் என்று வரமளித்தார்.

ஆனால் சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் நெய், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை, நிலக்கடலை எண்ணெய், காய்கனிகள், பழங்கள், பால்,தயிர் போன்றவற்றை பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.

ஏகாதசிக்கு முந்திய நாளான தசமி அன்று பகல் மட்டும் உணவு உட்கொண்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர் கூட அருந்தாவர்கள் துளசி தீர்த்ததையும், மற்றவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசி விரத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிகமிக முக்கியம் ஆகும் இல்லாவிடில் விரதம் இருந்த முழுபலன் கிடைப்பதில்லை.
ஏகாதசி அன்று செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்
குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை சொல்வது அதிலும் குறிப்பாக கலியுக தாரகமந்திரமான
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே
ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
என்ற மந்திரத்தை 108 முறை (ஒரு சுற்று) சொல்ல வேண்டும். இதுபோல குறைந்தபட்சம் 25 சுற்றுகள் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். மற்றும் பகவத்கீதை, ஸ்ரீமத்பாகவதம் போன்ற பகவான் சம்பந்தமான புத்தகங்களை படிக்கவும். ஏகாதசி அன்று சினிமா பார்ப்பது, பரமபதம் ஆடுவது, வீண் பேச்சு பேசி காலவிரயம் செய்யகூடாது.

நிர்ஜலஏகாதசி (பாண்டவ அல்லது பீம ஏகாதசி ) அன்று முழுவிரதம் இருந்தால் மற்ற 24 ஏகாதசின் பலனையும் அடையலாம்

வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி ) அன்று முழுவிரதம் இருந்தால் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்
சுலபமாக முக்திப் பாதையைக் காட்டுகிறார்.

ஏகாதசி விரதம் பற்றிய தகவல்கள்

🍎🍌🍊🍌🍐🍐🍊🍊🍋🍋🍎

ஜீவ கோஸ்வாமியின் பக்தி ஸந்தர்ப்ப நூலில் ஸ்கந்த புராணத்தில் இருந்து ஒரு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது . ஏகாதேசியன்று தானியங்களை உண்பவன் தனது தாய், தந்தை, சகோதரர் மற்றும் ஆன்மீக குருவை கொலை செய்தவனாகின்றான் என்றும், அவன் வைகுண்ட லோகத்திற்கு ஏற்றம் பெற்றால் கூட வீழ்ச்சியடைகின்றான் என்றும், அங்கே எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏகாதேசியன்று தானியங்கள், பருப்பு வகைகள் உள்பட அனைத்து தினசரி உணவும் விஷ்ணுவிற்கு சமைக்கப்படுகின்றன, ஆனால் அந்த விஷ்ணு பிரசாதத்தினைக்கூட ஏகாதசியன்று ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வைஷ்ணவர் அறிவுறுத்தப்படுகிறார். பகவான் விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்படாத எந்த உணவுப் பொருட்களையும் வைஷ்ணவன் ஏற்ப்தில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஏகாதசியன்று விஷ்ணுவிற்கு அர்பணிக்கப்பட்ட மகா பிரசாதத்தினைக்கூட வைஷ்ணவன் தீண்டக் கூடாது ; அத்தகு பிரசாதம் அப்படியே வைக்கப்பட்டு மறுநாள் உண்ணப்படலாம். பகவான் விஷ்ணுவிற்கு நைவேத்தியம் செய்யப்பட்டதாக இருந்தாலும், ஏகாதசியன்று எந்த வகையான தானியத்தையும் ஏற்பதிலிருந்து ஒருவன் கண்டிப்பாகத் தடை செய்யப் படுகிறான்.

(பொருளுரை / ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / ஆதிலீலை / 15. 10 )

Monday, September 23, 2019

பாபங்களுக்கான வியாதிகள்: -கருட புராணம்


1 யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர். மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார்.

2 எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார்.

3 விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால் தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார்.

4 கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு சுயரோகத்தால் துன்பப்படுவார்.

5 விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார்.

6 தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர் கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார்.

7 பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர் நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார்.

8 மற்றவர் வீட்டை தீயினால் எரித்தவர் உடலில் கொப்பலங்களுடனும் உடல் எரிச்சலுடன் அவதியுறுவார்.

9 பொருள்களில் கலப்படம் செய்தவர்கள் வாய்வு தொல்லையால் அவதிப்படுவார்.

10 மற்றவர்களை தொடர்ந்து உதாசினப்படுத்தப்படுபவர், கொடுரமான செயல்களை குழந்தைக்கு செய்தவர் சொரி, சிரங்கு மற்றும் தோல் நோயால் கஷ்டப்படுவார்.

11 ஆபாச நடனங்களை பார்க்கிறவர்கள், ஆபாச பாடல்களை கேட்பவர்க்கு காதில் சீழ் வடிதல், காது இரைச்சல், காது கேளாண்மை நோய்க்கு ஆட்படுபவர்.

12 பெற்றோர் பேச்சை கேட்காதவர், பெற்றோரை நீதிமன்றத்துக்கு அழைத்து அவமானப்படுத்துபவர் பார்வை குறைவு நோய்க்கு ஆளாவர், வெண்குஷ்டத்தினால் துன்புறுவர்.

13 வழக்கறிஞர்கள் உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி தண்டனை பெற்றுக் கொடுத்தால் நிற குறைபாடு நோய், கண்புரை நோய், ஞாபக சக்தி குறைவு நோய்க்குள்ளாவார்கள்.

14 இரக்கமற்ற முறையில் மனிதர்களை கொள்வதற்காக அணு ஆயுதங்களை கண்டுபிடிப்பவர்கள் பலவித கொடிய நோய்க்கு ஆளாவார்கள். மரமாக பிறந்தால் கூட மரத்தில் துளையிட்டு பூச்சிகள் குடியிருந்து மனிதனுக்கு பயன்படாமல் வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டு சாம்பலாக மறு பிறவி எடுப்பார்.

15 வரும் நோயாளியிடம் கடுஞ்சொற்களை பயன்படுத்தும் மருத்துவர், உபயோகமில்லாத மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்பவர், அதிக கட்டணம் வசூலிப்பவர் பெண்ணாக பிறப்பெடுப்பார், கருவறையிலே நோயுடன் ஜனிக்கிறார், பிரசவ காலத்தில் மிகவும் துன்பப்படுபவர், பெரும்பாலும் குழந்தை அழிந்துவிடும்.

16 சந்நியாசம் அடைந்த பின் மக்களை ஏமாற்றுபவர் மலட்டு தன்மையுடன் பிறந்து, சந்தோசமில்லா வாழ்க்கையை அடைந்து, மனக்குறையுடன் பிறப்பார்

17 சாதுவான பிராணிகளை துன்புறுத்துபவர் அனைத்து பற்களை இழந்தவராகவும், கொண்டைப்புண் உடையவராகவும் பிறப்பார்.

18 சிறையில் உள்ளவர்களை துன்புறுத்துபவர் வாதம் மற்றும் நரம்புத் தளர்ச்சி நோயால் பீடிக்கப்படுவார்.

19 தெய்வ நம்பிக்கை இல்லாதவர், சாதுக்களையும் இதிகாசங்களையும் புறம் பேசுபவர் ஊமையாக பிறக்கிறார், தொண்டையில் புற்று நோய் உள்ளவராகிறார்.

20 ஏழை எளிய மக்களின் பொருள்களை வழிப்பறி செய்பவர் சாப்பிட்ட உணவே விஷமாக மாறும் இதன் மூலம் உயிரழப்பு கூட ஏற்படலாம்.

21 புராதன சின்னங்களை அளிப்பவர், புத்தகங்களை நெருப்பிலிட்டு எரிப்பவர் வாய்வுத் தொல்லை மற்றும் புற்று நோயால் அவதிப்படவார்.

22 உடன் பிறந்த சகோதரர் சகோதரிகளை மிரட்டுபவர் மலட்டுத் தன்தையுடன் பிறக்கிறார்.

23 வேலை அதிகம் வாங்கி குறைந்த ஊதியம் கொடுப்பவர் ஆஸ்துமா, மூளைக்காய்ச்சல், தலைச்சுருட்டி வாதம்.

24 காய்கறிகள் மற்றும் பழங்களை திருடுபவர்கள், கெட்டுப்போன தானியங்களை புதுப்பிப்பவர்கள் பற்கள் விகாரமாகவும், கண்புரை நோயுடனும் பிறப்பார்.

25 கொள்ளை லாபம் சம்பாதிப்பவர், கள்ள சந்தைக்காரர் உடல் பருமன், வயிறு கோளாறு மற்றும் யானைக்கால் வியாதியால் பிடிக்கப்படுவர்.

26 பசியோடு வந்த விருந்தினருக்கு வசதியிருந்தும் உணவளிக்க மறுப்பவர் வயிற்றுப்புண் மற்றும் வயிறு உபாதையால் துன்புறுவர்.

27 தனக்கு கீழ்படிந்துள்ள பணியாளர்களை கேவலமான வேலை செய்ய சொல்வது, தேவையில்லாமல் தண்டிப்பது போன்ற செயல்களை செய்பவர் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், அடிக்கடி மயக்கமடைவது போன்ற நோய்க்கு ஆளாவார்.

28 பொதுமக்கள் சொத்துக்களை சுயநலத்திற்கு பயன்படுத்துபவர், தவறான கணக்குகளை அளிப்பவர்கள் தொற்று நோய்க்குள்ளாவார்கள்.

29 காரணமில்லாமல் மனைவியை அடிக்கும் கணவர், குழந்தைகளை அடிக்கும் பெற்றோர் நெஞ்சுவலி, பல்வலிக்கு உள்ளாவார்கள்.

30 ஆண்மீக வாழ்க்கை வாழ விரும்பும் குழந்தையை உலக வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்தும் பெற்றோர் சுவாசக் கோளாறுகளால் பீடிக்கப்படுவார்கள்.

வீட்டில் செல்வம் அதிகரிக்க மீன் தொட்டியை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்று தெரியுமா?




பல கலாச்சாரங்களில் மீன் தொட்டி அதிர்ஷ்டம் கொட்டும் ஒன்றாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, இதை வீட்டில் சரியான இடத்தில் வைப்பதன் மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கலாம். மேலும் பலருக்கும் வீட்டில் மீன்களை வளர்க்க பிரியம் இருக்கும்.


உங்கள் வீட்டிலும் மீன் தொட்டி இருந்தால், இக்கட்டுரையை உடனே படியுங்கள். ஏனெனில் வீட்டில் மீன் தொட்டியை வைத்திருந்தால், ஒருசிலவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து, வீட்டில் வறுமையை அதிகரிக்கும்.

சரி, இப்போது வீட்டில் மீன் தொட்டி வைப்பவர்கள், மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து காண்போம்.


விஷயம் #1
வீட்டில் எப்போதும் மீன் தொட்டியை சமையலறையில் அல்லது படுக்கை அறையில் வைத்திருக்கக்கூடாது. இதனால் வீட்டில் பண இழப்பு தான் ஏற்படும்.

விஷயம் #2
வீட்டில் மீன் தொட்டியை கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் வைப்பதே மிகவும் சிறந்தது. வாஸ்துவின் படி, இப்படி வைப்பதால், குடும்பத்தினரிடையே அன்பு அதிகரிக்கும்.


விஷயம் #3
ஃபெங் சூயி படி, மீன் தொட்டியில் குறைந்தது 9 மீன்கள் இருக்க வேண்டும். அதிகப்பட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.

விஷயம் #4
மீன் தொட்டியில் உள்ள மீன்களின் நிறமும் முக்கியமானது. அதில் 8 மீன்கள் சிவப்பு, ஆரஞ்சு அல்லது கோல்டன் நிறங்களிலும், ஒரு மீன் கண்டிப்பாக கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.

விஷயம் #5
மீன் தொட்டியில் கருப்பு மீன் இருந்தால், அது வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை முற்றிலும் உறிஞ்சிவிடும். ஒருவேளை அந்த கருப்பு மீன் இறந்துவிட்டால், அது வீட்டில் உள்ள அனைத்து கெட்ட சக்திகளையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தம்.

விஷயம் #6
வீட்டினுள் நுழையும் போது, மீன் தொட்டி எப்போதும் இடது பக்கத்தில் இருப்பதே நல்லது.

விஷயம் #7
நன்கு ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக மற்றும் சுட்டித்தனமாக இருக்கும் மீன்களை தொட்டியில் வளர்த்தால், அது வீட்டினுள் செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

விஷயம் #8
மீன் தொட்டியை வீட்டின் தென்கிழக்கு பகுதியில் வைத்தால், அது அளவுக்கு அதிகமாக கண்டதை பற்றி சிந்திப்பதைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.

விஷயம் #9
ஒருவேளை மீன் இறந்துவிட்டால், அதை நீக்கிவிட்டு, அதே நிறத்தில் மற்றொரு மீனை தவறாமல் வாங்கிப் போடுங்கள்.

விஷயம் #10
மீன் தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்து, சுகாதாரமாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

Wednesday, September 18, 2019

பல கோடீஸ்வரர்களை உருவாக்கிய பிரம்ம முகூர்த்தம் ...



முக்கியத்துவமும், பலன்களும்!

பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றிக் கூறும்போது,
அதிகாலையில் எழு!
பல நன்மைகளைத் தரும், என சாஸ்திரங்கள் கூறுகின்றன!

வைகறைப் பொழுதில், சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை.
இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தன்மை அளிக்கின்றன. உற்சாகத்தையும் கொடுக்கின்றன.
கண்கள் ஆரோக்கியத்தையும் உடல் வலிமையும் பெறுகின்றன.
அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்!.

சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன!

இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். சத்தம் இல்லாமலும், பரபரப்பு இல்லாமலும், காரியங்கள் சிறப்பாக முடியும்.
உடலுக்கும், உள்ளத்துக்கும், ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும்!

உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகின்றதாம். இதனாலேயே விடியற்காலை உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கி சாய்வதால், அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவதால் விசேஷமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது.

கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர், நீதி அரசர், சனி பகவான்:

அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
பிரம்ம முகூர்த்தம் என்பது எல்லாமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் வேலை செய்ய வேண்டும்.
பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால், நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால்தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறுகிறது!

சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.

பிரம்ம முகூர்த்தம் என்பது, பிரம்மா எனப்படும் நான்முகனை குறிக்கின்றது. படைக்கும் தொழில் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதி அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் மற்றும் வீடு கிரகபிரவேசம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது!

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் அனைவரும் அறிந்திருப்பார்கள்.
இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் இணைந்து மறுபிறவிதானே எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறுபிறவி பெறுவதை சிருஷ்டி படைத்தல் என்று சொல்லலாம்.
இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா
எனவே, இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்!

பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது.

இந்த நேரம் எப்போதுமே சுபவேளைதான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம், சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்!

தெய்வீகத்தன்மை இருக்கக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்தம். ஒவ்வொரு நாள் காலையிலும் 4 மணி முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தமாக எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் வாழ்வில் மாற்றத்தை சரி செய்ய லட்சுமி கடாக்ஷத்துடன், நினைத்த காரியங்களை நிறைவேற்ற, நீங்கள் இந்த பிரம்ம முகூர்த்தத்தைப் பயன்படுத்தலாம்!

நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை மீண்டும், மீண்டும் நினைப்பதற்கும் மந்திரம் யந்திரம் தந்திரம் நோக்கி நீங்கள் செல்ல வேண்டும் என்றால் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நேரம் பிரம்மமுகூர்த்தம்!

அதுபோல் நமது மனதில் இருக்கும் எண்ணங்களை வைப்பதற்கான நேரம் தான் இந்த பிரம்மம் உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பிரம்ம முகூர்த்த தினம் தினமும் காலையில் தொடர்ந்து எந்த விஷயங்களை செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும்.

சாதித்திருக்கக் கூடிய மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் அனைவருமே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் எழுந்து செயல்பட ஆரம்பிக்கிறார்கள்.
அவர்கள் மட்டுமல்ல ஆதிக்கால தமிழர்கள் அனைவருமே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில்தான் செயல்பட ஆரம்பிப்பார்கள். ஆரம்பிப்பது சரியாக இருந்தால் முடிவும் சரியாக இருக்கும் .

ஆரம்பிக்கும் நேரம் நேரம் பிரம்ம முகூர்த்தம் ஆக இருந்தால், நம் வாழ்வில் வெற்றி இடம்பெறும்.

ஆகையால் சூரியனுக்கு முன் எழுந்து, சூரியனை விட உயர்ந்த வாழ்க்கையை நீங்கள் நிச்சயம் அடைய முடியும். பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 4 மணி முதல் 6 மணி வரை கடைபிடியுங்கள் வளமும் நலமும் பெற்று வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!

“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”



முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.

வீட்டில் பப்பாளி மரம் கறிவேப்பிலை மரம் வளர்க்க கூடாது ,பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் பாதிப்படைய செய்யும்.

வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது.

வடக்கு பார்த்து சாப்பிடக்கூடாது.

மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் சாப்பிடக்கூடாது.

நெல்லிக்காய் ,அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.

நகம் ,முடி வியாழன், வெள்ளி, சனி, முடி வெட்டுதல் நகம் வெட்டுதல் கூடாது.

திங்கள் கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரை தண்ணீர் முதல் கொண்டு ஏதும் சாப்பிடக்கூடாது.

சனிக்கிழமை காலை ஆறுமணி முதல் ஏழு மணிக்குள் சுத்தமான நல்லெண்ணெய்யை ஆண்கள் இடது காலிலும் பெண்கள் வலது காலிலும் தடவினால் பணம் வந்துகொண்டே இருக்கும்.

வியாபாரம் தொழில் செய்யும் இடத்தில் ஐந்து முக ருத்ராட்சம் வைத்து பூஜித்தால் வியாபாரம் தொழில் அமோகமாக நடக்கும்.

வீட்டில் மல்லிகை செடி வில்வம் துளசி வளர்க்க பெரும் செல்வம் ஏற்படும்.

தினமும் மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேரும்.

வீட்டின் வாசற்படியில் நற்பவி என்று எழுதிவைத்தால் நன்மைகள் வந்து சேரும்.

மயில் தோகையை வீட்டில் வைக்க பற்பல நன்மைகள் உண்டாகும்.

ஏகாதசி நாள் அன்று விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

வாழ்க வளமுடன் வாழ்க .

Tuesday, September 17, 2019

புரட்டாசி பிறந்தது,புண்ணியம் பூக்குது!



மாதம் முழுமையும் மாக விஷ்ணுவை வணங்கி நீண்ட ஆயுள்.நீங்கா செல்வம்,சிறந்தகல்வியை பெறவும், முப்பெரும் தேவியரை வழிபடும் நவராத்திரி விரதம்,அனந்த சப்தமி விரதம்(சூரியன்),கோஷ்பாத திரிதியை விரதம்,பார்வதிபரமேஸ்வரர் விரதமான கஜகவுரி விரதம்,கேதாரகவுரி விரதம்,துளசிகவுரி விரதம்,ஸ்ரீஉமாவிரதமும், தேய்பிறை அஷ்டமி சம்பகாஷ்டமி விரதம்,இப்படி பல தெய்வ வழிபாடுகள் நிறைந்தது புரட்டாசி புண்ணியமாதமாகும

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான். சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்

Monday, September 16, 2019

செவ்வாய்க்கிழமைகளில் மறந்தும் கூட இவற்றை செய்து விடாதீர்கள்! சாஸ்திரம் கூறும் நம்ப முடியாத உண்மை!




செவ்வாய்கிழமை முடியோ, நகமோ வெட்டினால் செல்வம் சேராது மாறாக துரதிஷ்டமும் நோயும் வரும் என ஜோதிட ரீதியாக சொல்லப்படுகின்றது.


செவ்வாய் மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு. அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும்.

ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும்.

தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

செவ்வாய் பகவான் பூமா தேவிக்கும் மகாவிஷ்ணுவிற்கு மகனாக அவதரித்தவர் என்கிறது புராணம். செவ்வாய்க்கு மங்களகாரகன், குஜன் என்ற பெயரும் உண்டு. கு என்றால் பூமி, ஜன் என்றார் பிறந்தவர். மத்திய பிரதேசத்தின் தலைநகரான உஜ்ஜைனில் அமைந்துள்ள மங்களநாதர் சிவாலயம், செவ்வாய் அவதரித்த தலமாகும்.


இதனால் இது அங்காரக ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் தலமாக கருதப்படுகிறது.

நாட்டின் பல இடங்களில் செவ்வாய்க்கு கோவில்கள் இருந்தாலும், செவ்வாய் பிறந்த தலமாக உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் உள்ளதால், இங்குள்ள வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

செவ்வாய் பகவான், செந்நிற மேனி, புன்னகை பூத்த முகம், நான்கு கைகள், கதை, சக்தி ஆயுதம், சூலம் ஏந்தி வரத முத்திரையுடன் விளங்குபவர்.

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆலயத்தில் செவ்வாய் பகவான், மங்களநாதர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியாக காட்சியளிக்கிறார். பொதுவாக சிவன் கோவில்களில் மூலவருக்கு எதிரில் நந்தி சிலை இருக்கும். ஆனால் இங்கு மங்களநாதர் கருவறையின் முன்பு செவ்வாய் பகவானின் வாகனமாக கருதப்படும் ஆடு உருவம் வைக்கப்பட்டுள்ளது.

அந்தகாசுரன் என்ற அரக்கன் சிவனை நோக்கி தவமிருந்தது வரம் பெற்றான். அதாவது எனது ரத்தம் தரையில் விழும் போது அதில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும் என்பதுதான் அந்த வரம், அதை கொடுத்தார் சிவன்.

அந்த வரம் பெற்ற அரக்கன் எல்லாரையும் கொடுமைப் படுத்தினான். ஒருமுறை சிவனை எதிர்த்து போரிட்டான்.

பல ஆண்டுகள் நடந்த போரில் சிவனின் உடல் பகுதியில் இருந்து விழுந்த வியர்வை சொட்டுக்கள் மூலம் பூமி பிளந்தது, செவ்வாய் உருவானது என்கிறது புராணம். அந்தகாசுரனின் ரத்தத் துளிகளை உள்வாங்கிக் கொண்டதால் செவ்வாய் சிவப்பாக காணப்படுகிறாராம்.

செவ்வாய்கிழமைகளில் மங்களகரமான செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். ஏனெனில் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது எனவேதான் அன்றைய தினம் முடி, நகம் வெட்டக்கூடாது என்கின்றனர்.


செவ்வாய்க்கிழமை மகாலட்சுமி நம் வீடு தேடி வரும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பணத்தை தானமாக கொடுக்க மாட்டார்கள். அன்றைய தினம் உப்பு, தயிர் கூட தானமாக தரக்கூடாது அப்படி கொடுத்தால் மகாலட்சுமி நம்மை விட்டு சென்று விடுவார் என்பது ஐதீகம்.

பொதுவாக செவ்வாய்கிழமை வீடு துடைக்கவோ, ஒட்டடை அடிக்கவோ கூடாது. விளக்கு துடைக்கவோ, விளக்கவோ கூடாது. அப்படி செய்தால் லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாராம்.

அதே போல நகமோ, முடியோ வெட்டக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதிஷ்டம் போய் துரதிர்ஷ்டம் குடியேறும் என்றும் சொல்கின்றனர். அப்படி மீறி முடி வெட்டி ஷேவிங் செய்தால் வாழ்நாளில் எட்டு மாதங்கள் குடியேறுமாம்.

செவ்வாய் பகவன் ரத்தக் காரகன். ரத்தத்தில் இருந்து முடி வளர்கிறது. செவ்வாய்கிழமைகளில் முடியை வெட்டினால் ரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படுமாம்.

அதே நேரம் சனியின் தாக்கம் குறைந்து செவ்வாயின் தாக்கம் அதிகரித்து பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் ஜோதிடர்கள்.



திருமாங்கல்ய_தாரணம்| #மாங்கல்யம்_தந்துனானே #மம_ஜீவன_ஹேதுனா….!!! #கெட்டிமேளம்_கெட்டிமேளம் என்று சொல்லுவதோடு, தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர்.

#

சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி விரலை ஆட்டி “கெட்டி மேளம் , கெட்டி மேளம்” என்கின்றனர்.

அதோடு இருக்கைகளை விட்டு எழுந்து பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர்.

மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மேடையின் அருகாமைக்கு விரைகின்றனர்.

வீடியோகிராபரும், போட்டோகிராபரும் மணமக்களை சுற்றி சூழ்ந்து இருக்கும் உறவினர் நண்பர்களிடம் “சார் , கொஞ்சம் வியூ கொடுங்க” என்று கோருகின்றனர்.

இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில் கெட்டி மேளம் முழங்க வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் தான் இருக்கும் பரபரப்பில் தாலியை மணப் பெண்ணின் கழுத்தில் கட்டுகிறார் மணமகன்!

மேல தாள ஓசை ஒருபுறம், உறவினர் நண்பர்களின் உரையாடல்கள்…

இப்படிப் பரபரப்புக்கு நடுவிலே கவனிக்கப் படாமல் போவது இந்திய சமுதாயத்தின் மிகச் சிறந்த நாகரிக சிந்தனையான இந்த செய்யுள்,

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

புரோகிதரும் இந்த மந்திரத்தின் அர்த்தததையோ, அதன் முக்கியத்துவத்தையோ சொல்லிக் கொடுப்பதில்லை.

எல்லோரும் ஹாப்பியா ஒருத்தரை ஒருத்தர் கங்கிராஜுலேசன் பண்ணிண்டு இருக்கா, நாம ஏன் அர்த்தம் பொருள் எல்லாம் சொல்லி டிஸ்டர்ப் பண்ணனும், நாமளும் ஜோதியிலே கலப்போம் என்கிற ரீதியில் எத்தனையோ சடங்குகளில் ஒன்றாக இந்த மந்திரத்தையும் சொல்கிறார்.

இந்த மந்திரம் எந்த ஒரு தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை.

இந்த மந்திரம் மணமகன் தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது.

இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.

இந்திய சமுதாயத்தில் ஒரு மனிதனுக்கு இன்றியமை யாததாக உள்ளது எது என்றால் அது அவன் மனைவியே!

மற்ற ஆட்சி, அதிகாரம், செல்வங்கள் , நில புலம், காடு , கழனி, வாய்க்கால் வரப்பு, தோட்டம் தொரவு…

உள்ளிட்ட எல்லாவற்றியும் இழந்து அவன் நடுத் தெருவிற்கு வந்தாலும் அவனை அன்பு செய்து அர்ப்பணித்த மனைவி அவன் அருகில் இருந்தால் அவன் கடைத்தேறி விடுவான்.

சோழ நாட்டின் மிகப் பெரிய பணக்கார வணிகக் குடும்பங்களில் ஒன்றில் பிறந்தவன் கோவலன்.

ஆசையின் பாதையில் மயங்கி விட்டதால் சொத்து பணம், தொழில், புகழ், நண்பர், உறவினர் அனைவரையும் இழந்து விட்டான்.

அந்தோ என்னும் கையறு நிலைக்கு வந்து விட்டான். யாருமே அவனுக்கு உதவி இல்லை.

யாருமே அவனை நம்பவில்லை. அவனுக்கு கடன் கொடுத்தால் , உதவி செய்தால் … அந்தப் பணத்தையும் மாதவி போன்றவரிடம் கொடுத்து விடுவான் என்று பலரும் எண்ணி இருக்கக் கூடும்.

அதனால் நல்லவர்கள் கூட அவனை விட்டு விலகி விட்டனர்.

யாரையும் நெருங்கி உதவி கேட்கும் மன நிலையிலும் அவன் இல்லை.

உதவி கேட்கும் தகுதியைக் கூட தான் இழந்து விட்டதாக கருதி விட்டான்.

வாழ்க்கையே அவனுக்கு முடிந்து விட்டது. தொழில், பணம் , உற்றார் , நண்பர் அனைவரையும் இழந்து விட்டான். நம்பிக்கையை இழந்து விட்டான்.

உணமையிலே கோவலனின் நிலை பரிதாபமானது.

ஆனால் அந்த நிலையிலும் அவனைக் கை விடவில்லை ஒருத்தி , அவனது கடந்த காலச் செயல்களால் அதிகம் பாதிக்கப் பட்டவள்.

அவளைப் பார்த்து அவன் காதல் மொழி பேசவில்லை, அவளை உதறிச் சென்று வேறு பெண்ணிடம் காதல் செய்தவன், அவளை தனிமையில் வாட விட்டவன், அப்படிப் பட்ட கோவலன், எல்லாவற்றையும் இழந்து ஒன்றும் இல்லாமல் வந்த போது, அவனிடம் முழு அன்பைப் பொழிந்து, அவன் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நம்பிக்கை வூட்டி, அவனுக்கு பொருளீட்ட தன்னுடைய சிலம்பையும் கொடுத்து அவன் வாழ்க்கையில் புதிய புத்துணர்ச்சியை அளித்திருக்கிறாள். உயிர் இருந்தும் உயிரற்ற நடை பிணமாக இருந்த கோவலனுக்கு உயிர் அளித்த உத்தமி கண்ணகி. கற்ப்புக்கரசி கண்ணகியே கோவலனின் தெய்வம். //

பார்வதி, சீதை, கண்ணகி, நளாயினி, சாவித்திரி …. இவர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு வாழும் தெய்வங்களாக உள்ள அன்பு மனைவியறாலே இந்திய சமுதாயம் வாழுகிறது!

திருமணத்தின் போது மணமகன், தன வாழ்வில் மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு சிறப்புகளுடைய என வாழ்க்கை துணைவியே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்த “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…. !”

மம ஜீவன ஹேதுனா – என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி இருப்பவளே

(மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா- இன்றியமையாத(வளே)

மாங்கல்யம் தந்துனானே– இந்த மங்கல நானை

கண்டே பத்னாமி – உன் கழுத்தை சுற்றி அணிவித்து (நம் உறவை உறுதி செய்கிறேன்)

சுபாகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே

த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!

(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத – ஆண்டு , சதம் – நூறு)

இந்த மந்திரம் மனித வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும் .

இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல் காப்பாற்றப் படும்.

இந்த மந்திரத்தை கணவன், திருமண நாளன்று மட்டும் சொல்லாமல் ஒவ்வொரு நாளும், காலையில் எழுந்தவுடன் தன் மனைவியிடம் சொல்வது இன்னும் சிறப்பாகும்.

தன்னுடைய உடல் பொருள் ஆவி உள்ளிட்ட அனைத்தையும் தனக்கு வழங்கிய, தன் வாழ்க்கையில் இன்றியமையாதவ்ளாகக் கிடைத்த மனைவியின் உறவைக் குறிக்கும் மாங்கலயத்தை தினமும் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டியது, கணவன் செய்ய வேண்டிய செயலே என்றால் அது மிகையல்ல !