Saturday, March 30, 2019

தெற்கு பார்த்த வீடு நல்லதா? கெட்டதா?





பொதுவாக ஒரு வீட்டிற்கு குடியேறும் முன்போ அல்லது வீட்டை வாங்கும் முன்போ, அந்த வீடு வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்பதைப் பார்த்தே எதுவும் செய்வோம். ஏனெனில் நல்ல வாஸ்துப்படி கட்டப்படாத வீடு, பணப்புழக்கத்தைக் குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என பலர் நம்புகிறார்கள்.




அதிலும் சிலர் வீட்டின் வாசல் எந்த திசையை நோக்கியுள்ளது என்பதையும் பார்ப்பார்கள். அதில் தெற்கு பக்க வீடு என்றாலே வேண்டாம் சாமி என்பார்கள். கிழக்கும், வடக்கும் தான் ராசியான வீடுகள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி சிலர் காரணம் தெரியாமலேயே புறக்கணிப்பதால், தெற்கு பக்க வீட்டில் குடிப்புகுவதற்கு பலர் அஞ்சுகிறார்கள். ஆனால் தெற்கு பார்த்த வீட்டை ஒதுக்குவது உண்மையிலேயே சரிதானா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


ஏன் பயம்?
மக்கள் தெற்கு பக்க வீட்டிற்கு செல்ல பயப்பட முக்கிய காரணமாக இருப்பது, அந்த திசை எமதர்மனுக்கு உரிய திசையாகும். இந்த ஒரு காரணத்தினால் தான் தெற்கு திசை வீட்டைப் பலரும் புனிதமில்லாததாக கருதுகிறார்கள். ஆனால் அந்த வீடு சரியான வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால், எவ்வித பிரச்சனையும் இல்லை.




பலரும் அறியாத உண்மை
பல பெரிய தொழிலதிபர்களின் வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவை தெற்கு திசை நோக்கிய படி தான் இருக்கிறது என்பது பலரும் அறியாத உண்மையாகும். இதற்கு காரணம் தெற்கு நோக்கிய வீடு சரியான வாஸ்து சாஸ்திரத்தில் அமைந்திருப்பது தான். எனவே நீங்கள் தெற்கு பார்த்த வீட்டில் இருப்பவரானால், வீட்டில் செல்வமும், ஆரோக்கியமும் மேம்பட கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வாஸ்து டிப்ஸ்களைப் படித்து பின்பற்றுங்கள்.



டிப்ஸ் #1
வாஸ்து சாஸ்திரத்தின் படி, தெற்கு பார்த்த வீட்டில் சமையலறையானது தென்கிழக்கு திசையில் அமைந்திருப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால் வடமேற்கு திசையிலாவது அமைந்திருக்க வேண்டும். இதனால் அந்த வீடு சிறப்பாகவும் புனிதமாகவும் இருக்கும்.


டிப்ஸ் #2
தெற்கு திசை பார்த்த வீட்டில் இருக்கும் படுக்கை அறை தென்மேற்கு திசையில் இருப்பது நல்லது. இந்த திசையில் படுக்கும் அறை அமைந்திருந்தால் தான், அதீத நன்மையைப் பெற முடியும். முக்கியமாக இப்படி அமைந்தால், மன அமைதி அதிகரிக்கும்.


டிப்ஸ் #3
தெற்கு பக்க வீடு இன்னும் சிறப்பாக இருக்க, வாஸ்து சாஸ்திரத்தின் படி தெற்கு பக்க சுவர், வடக்கு பக்க சுவரை விட உயரமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். இதனால் தெற்கு பக்க வீட்டின் உண்மையான பலனைப் பெறலாம்.


டிப்ஸ் #4
தெற்கு பக்க வீட்டில் கார் செட், தோட்டம், செப்டிக் டேன்க் போன்றவை, அந்த வீட்டில் தென்மேற்கு திசையில் அமைந்திருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக வீட்டின் தெற்கு பகுதியை விட வடக்குப் பகுதி காலியாக இருக்க வேண்டும்.




டிப்ஸ் #5
தெற்கு வாசல் கொண்ட வீட்டில் கிணறு எந்த பக்கத்தில் இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டுமா? கட்டாயம் கிணறு, குளம் போன்றவற்றை வீட்டின் தெற்கு பகுதியில் அமைக்கக்கூடாது.


டிப்ஸ் #6
தெற்கு பக்க வாசல் கொண்ட வீட்டில், மரங்களை வடகிழக்கு பகுதியில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் மாடி படிக்கட்டுகளை வடகிழக்கு பகுதியில் அமைக்கக்கூடாது. எனவே இதில் மிகவும் கவனமாக இருங்கள்.


அனைத்து ராசிக்காரருக்கும் நல்லதா?
தெற்கு பார்த்த வீடு அனைத்து ராசிக்காரருக்கும் நல்லதல்ல. இம்மாதிரியான வீடு ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்ம ராசிக்கார்களுக்கு மிகவும் யோகம் நிறைந்த வீடாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் இந்த திசை நோக்கிய வீட்டை வாங்கலாம் அல்லது குடிப்புகலாம்.


எது எந்த திசையில் இருப்பது நல்லது?
* சமையலறை - தென்கிழக்கு, வடமேற்கு

* பூஜை அறை - வடகிழக்கு, மேற்கு, கிழக்கு

* படுக்கை அறை - தென்மேற்கு, தெற்கு, மேற்கு

*கழிவறை - தென்கிழக்கு


குறிப்பு
தெற்கு வாசல் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள், மேற்கு வாசல் வீட்டில் குடியிருப்பவர்களிடம் சம்பந்தம் செய்து கொள்ளக்கூடாது. ஏனெனில் தெற்கும், மேற்கும் ஆகாது. இதனால் வீண் சண்டைகள், விவாதங்கள் தான் வரும். மேலும் இந்த மாதிரியான வீடு ஜாதகம் இல்லாதவர்களுக்கு மிகவும் நல்லது.

Tuesday, March 26, 2019

செல்வம் பெருக வழிமுறைகள்




1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்

2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.

3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது.

4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.


5. இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.

6. பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம். அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும். இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும்.


7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.



8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.

9. படத்திற்க்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.

10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.

11. திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும்.



12. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “ என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.

13. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும். அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது.

14. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.

இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும். அப்புறம்தான் பொருள்செல்வம்.
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!

தயவு செய்து இதை மற்றவர்களுக்கும் தெரிய படுத்தவும்

Saturday, March 23, 2019

ஏலக்காய்

நறுமணப்பொருள்களின் ராணி என்று அழைக்கப்படும் ஏலக்காய் தேநீருக்கு மணம் சேர்க்கவும், உணவுக்கு சுவை கூட்டும் பொருளாகவும், வாசனையூட்டியாகவும் பயன்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கும் பல்வேறு வகையில் பயனளிக்கிறது.

• வாய் துர்நாற்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் நிவாரணம் கிடைக்கும்.

• ஏலக்காயை மென்று சாப்பிட்டால் இருமல், நெஞ்சு சளி போன்றவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

• ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை சீர்படுத்தி, பசியைத் தூண்டும் தன்மை ஏலக்காய்க்கு உள்ளது.

• நரம்பு மற்றும் மூளையை சுறுசுறுப்படைய வைக்கும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு.

ஏலக்காய் தூளை வெந்நீரில் போட்டு கொப்பளித்தால் தொண்டைக்கட்டு, தொண்டைப்புண் போன்றவைகளில் இருந்து விரைவில் ஆறுதல் கிடைக்கும்.

Tuesday, March 19, 2019

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம்

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடலுக்குள் வேண்டாத பொருள் நுழைந்துவிட்டால், நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறி. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகின்ற ஓர் எதிர்வினை. இது, சில நேரங்களில் இதமாகவும் பல நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் மாறிவிடும். இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.

அடிப்படைக் காரணம்

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளைக் கட்டுப்படுத்த ரத்தத்தில் உருவாகும் எதிர்புரதம்தான். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடலுக்குள் நுழைந்த பின், மீண்டும் வராமல் தடுக்க இந்தப் புரதம் உருவாகி, ரத்தத்தில் காத்திருக்கும். மீண்டும், அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின் (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை, ரத்தக் குழாய்களை விரிவடையச்செய்து அங்கு உள்ள நரம்புமுனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.



பெரும்பாலான நேரங்களில் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? ‘லேண்ட்-லைன்’ போன் வேலை செய்வதைப் போன்ற இயந்திரவியல் இது. லேண்ட் லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும். இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே நரம்புதான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகின்ற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச்செல்கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், இது அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால், அரிப்பு குறைகிறது.

நச்சு அரிப்பு

அரிப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, ‘அர்ட்டிகேரியா’ (Urticaria) என்று அழைக்கப்படுகிற ‘நச்சு அரிப்பு’ நோய். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்குத் தோலில் பல இடங்களில் பூரான் கடித்த மாதிரி வீங்கிவிடும். தோல் தடித்துச் சிவந்துவிடும். சிலருக்கு இந்தத் தடிப்பு தோலில் கத்தியால் கீறியதுபோல் கோடுகோடாக இருக்கும்; இன்னும் சிலருக்கு வட்ட வட்டமாகத் தோல் தடித்துவிடும். தோலில் வெவ்வேறு வடிவங்களில் தடிப்புகள் தோன்றி மறைவதும் உண்டு.

அரிப்பின் வகைகள்

சிலருக்கு இது திடீரென வரலாம். இன்னும் சிலருக்கு நாட்பட்டும் (Chronic) வரலாம். மிகவும் லேசான அரிப்பில் இருந்து கடுமையான அரிப்பு வரை தொல்லை தரலாம். இது சில நிமிடங்களிலும் மறைந்துவிடலாம். அரிப்பு பல வாரங்கள் வரை தொடரவும் செய்யலாம். ஆறு வாரங்கள் வரை நீடிப்பது ’திடீர்’ வகையைச் சேர்ந்தது. ஆறு வாரங்களுக்கு மேல் அரிப்பு நீடிக்குமானால், அது ‘நாட்பட்ட அரிப்பு’.

தூண்டும் காரணிகள்

நச்சு அரிப்புக்கு நாம் சாப்பிட்ட உணவு ஒவ்வாதது முக்கியக் காரணி. பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல்மீன், கருவாடு, கடலை, நட்ஸ், சாக்லெட் போன்றவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். உணவுகளில் கலக்கப்படும் செயற்கை நிறமூட்டிகள், மணமூட்டிகள், பதப்படுத்த உதவும் வேதிப்பொருட்கள் போன்றவையும் நச்சு அரிப்பைத் தூண்டக்கூடியவையே. கொசுக்கடியில் தொடங்கி சிலந்திக்கடி வரை பலதரப்பட்ட பூச்சிக் கடிகள் நச்சு அரிப்பை உண்டாக்கும். சிலருக்கு, தோலை அழுத்துவதுபோல் உடைகளை அணிந்தால், அந்த அழுத்தம் காரணமாக நச்சு அரிப்பு ஏற்படுவது உண்டு. சிலருக்கு, அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பும் தடிப்பும் ஏற்படும்.

சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டு, தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால், பலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

எச்சரிக்கும் நோய்கள்

உடலில் இருக்கும் எந்த ஒரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்பு உண்டு. சொத்தைப் பல், தொண்டை அழற்சி, சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப்பாதை அழற்சி, சைனஸ் பாதிப்பு போன்றவை நச்சு அரிப்பை உண்டாக்குகின்றன. குடலில் புழு இருந்தாலும் அரிப்பு ஏற்படலாம். கர்ப்பக்காலத்திலும் குழந்தை பிறந்த பிறகும் பல பெண்களுக்கு நச்சு அரிப்பு ஏற்படுவதற்கு தைராய்டு சுய எதிரணுக்கள் (Thyroid Auto Antibodies) காரணமாகின்றன. கட்டுக்கு அடங்காத நச்சு அரிப்புக்கு முடக்குவாதம், ‘லூபஸ் எரித்திமட்டோசஸ் (Lupus Erythematosus) ஆகிய நோய்கள் காரணமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. தவிர, சர்க்கரைநோய், ரத்தசோகை, மஞ்சள்காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்னை, பித்தப்பை பிரச்னை, ஹார்மோன் பிரச்னை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’ எனும் மூளை நரம்புப் பிரச்னை, பரம்பரைத்தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த நோய்களின்போது தோலில் தடிப்பு தோன்றாது.

கோபம், கவலை, பயம், மனஅழுத்தம் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள், தங்கள் உடலில் ஒரு பூச்சி ஊர்வதுபோல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால், இவர்கள் எந்த நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் இந்த அரிப்பு சரியாகும்.

என்ன பரிசோதனை?

ரத்தப் பரிசோதனை, சிறுநீர் மற்றும் மலப் பரிசோதனை முதலில் மேற்கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து அலர்ஜியை அறிய உதவும் தோல் பரிசோதனைகள் செய்யப்படும். காரணம் தெரிந்ததும் அதற்கு ஏற்ப சிகிச்சை வழங்கப்படுவது நடைமுறை.

என்ன சிகிச்சை?

அரிப்பைக் குறைக்க ஆன்டிஹிஸ்டமின் மாத்திரைகளும் லோஷன்களும், வீக்கத்தைக் குறைக்க ஸ்டீராய்டு மாத்திரைகளும், அரிப்பைத் தடுக்க மான்டிலூகாஸ்ட் மாத்திரைகளும் தரப்படும். இவற்றை, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குச் சாப்பிட வேண்டியது மிக முக்கியம். அப்போதுதான் அரிப்பு மீண்டும் வராமல் இருக்கும்.

- எதிர்வினை தொடரும்

ஆஞ்சியோஎடீமா தெரியுமா?



அலர்ஜியின் வெளிப்பாடாகத் தோலில் தோன்றுகிற இன்னொரு முக்கிய அறிகுறி ஆஞ்சியோஎடீமா (Angioedema). இதில் தோலில் அரிப்புடன் ஏற்படுகிற தடிப்பும் வீக்கமும் பெரிதாகக் காணப்படும். அடித்தோலும் அங்குள்ள ரத்தக்குழாய்களும் சேர்ந்து வீங்குவதால் இந்த வீக்கம் பெரிய அளவில் ஏற்படுகிறது. இது நச்சு அரிப்பைப் போலவே காணப்படும் அறிகுறிதான் என்றாலும் சிறிதளவு வித்தியாசம் உண்டு. இது தோலில் எல்லா இடங்களிலும் தோன்றாது. குறிப்பாக, கண்ணுக்குக் கீழ் வீக்கம் ஏற்படும். உதடுகள் வீங்கும். சிலருக்கு கை, கால் பாதங்களிலும், பிறப்பு உறுப்புப் பகுதிகளிலும் இந்த வீக்கம் தோன்றலாம். இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்; இந்த வீக்கம் தொண்டையில் தோன்றினால், மூச்சு விட சிரமப்படுத்தும். உணவை விழுங்க முடியாது. இதை அலட்சியப்படுத்தாமல் உடனே கவனிக்க வேண்டும். தவறினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

அரிப்பைத் தடுக்க 8 வழிகள்



ஒவ்வாத உணவுகளைப் பட்டியலிட்டு அவற்றை ஒதுக்க வேண்டும்.

சுய மருத்துவம் தவிர்க்க வேண்டும்.

கடுமையான ரசாயனங்களால் ஆன சோப்பைப் பயன்படுத்தக் கூடாது.

தளர்ந்த உடைகளை அணிய வேண்டும்.

குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டாம்.

சருமத்துக்கு சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.

வீட்டில் பூச்சிகள் வளர்வதைத் தடுக்க, வீட்டுச் சுவர்களில் சில வேதிப்பொருள்களைத் தடவ வேண்டும்.

குடல் புழுவுக்கு முறைப்படி மருந்து சாப்பிட வேண்டும்.

சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலை போக்கும் மருத்துவ குறிப்புகள்...!




சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் வலிக்கு பொதுவான காரணம், சிறுநீர் குழாய் தொற்று ஆகும். சிறுநீர் குழாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும்போது இந்த தொற்றுக்கள் உண்டாகும்.
இந்த சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டாகும் பிரச்சனைக்கு, தகுந்த சிகிச்சை அளிக்காமல் போனால் அது உயிருக்கே ஆபத்தை அளிப்பதாக கூட மாறலாம். எனவே இரண்டு நாட்களுக்கு மேலாக இந்த பிரச்சனை நீண்டால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

சிறுநீரில் துர்நாற்றம், சிறுநீரில் இரத்தம் கலந்து இருப்பது, வாந்தி, காய்ச்சல், கீழ் முதுகு வலி, மற்றும் அடிக்கடி குளிர் போன்றவை இருந்தால் மருத்துவரை சந்தித்து தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும்.

தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது.

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். இவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்வதோடு, அதற்கான வீட்டு மருத்துகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்றி வந்தால், சிறுநீர் கழித்தப் பின் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்.

நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம். எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்க வல்லது.

எலுமிச்சையின் 15 அழகு நன்மைகள்!


எலுமிச்சை பழம்! இதன் பயன்பாடு இல்லாத வீடே இருப்பதில்லை. எலுமிச்சையை நேரடியாகவும் சரி, பானமாகவும் சரி அல்லது எலுமிச்சை கலந்த பொருட்களாகவும் சரி, அதனை நாம் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். எலுமிச்சையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது என்று பல காலத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை வெறும் பானத்தில் கலந்து குடிக்கவும், சாலட் மீது புளியவும் மட்டுமே பயன்படுகிறது என்று நினைத்தால் அது தவறு. அதையும் மீறி இந்த சிட்ரஸ் பழம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதனால் இந்த சிறிய பழத்தில் ஒளிந்திருக்கும் பல அதிசயங்களையும், அது அழகை மேம்படுத்த உடம்பிற்கும் சருமத்திற்கும் எப்படி பயன்படுகிறது என்பதையும் இப்போது பார்க்கலாம். வெண்மையான சருமத்தை இயற்கையாக பெற… எலுமிச்சை சாற்றில் இயற்கையாக வெளுக்க வைக்கும் குணங்கள் உள்ளது. சருமத்தை இயற்கையாக வெளுக்க வைப்பதால், அது நம் சருமத்திற்கு மிகவும் பயன் அளிப்பதாக விளங்குகிறது. அதனால் தான் வீட்டில் தயார் செய்யப்படும் அழகு பொருட்களிலும் சரி, சந்தையில் கிடைக்கும் அழகு பொருட்களிலும் சரி, எலுமிச்சை சேர்க்கப்படுகிறது. இத்தகைய எலுமிச்சையை நேரடியாக சருமத்தின் மீது தேய்க்கலாம் அல்லது எலுமிச்சை அடங்கியுள்ள பேஸ் பேக்கை தடவலாம். இது கரும்புள்ளிகளையும் நாளடைவில் நீக்கும். இளமையுடன் இருக்க… உடம்பில் முதுமை தெரியும் பகுதிகளை எலுமிச்சையை வைத்து நீக்கலாம். எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், அது சருமத்தில் உள்ள சுருக்கங்களை எதிர்த்து போராடும். சரும சுருக்கங்களை நீக்க நல்லதொரு பேஸ் பேக் வேண்டுமா? அப்படியெனில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை எடுத்து, இனிக்கும் பாதாம் எண்ணெயில் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். இல்லையெனில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சிடர் வினீகரை சமமான அளவில் கலந்து, இளமை தொலையும் இடங்களில் தடவுங்கள். எண்ணெய் பசையுள்ள சருமத்தை பராமரிக்க… எண்ணெய் வழியும் சருமத்தில் முகப்பரு, கரும்புள்ளி என பல சரும பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே எண்ணெய் பசையான சருமத்திற்கு நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தின் எண்ணெய் மூலக்கூறுகளை உடைத்தெறியும். அதனால் சருமம் மென்மையாக விளங்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை தண்ணீருடன் கலந்து, அந்த கலவையை பஞ்சுருண்டையை பயன்படுத்தி முகத்தில் தடவுங்கள். அதிலும் எண்ணெய் பசை சருமத்தை கொண்டவர்கள், இதனை தினசரி செய்ய வேண்டும். சருமம் புத்துணர்வும், மென்மையும் அடைய… நற்பதமான எலுமிச்சை சாறு, சருமத்தை மென்மையாக வைக்க உதவும். அதிலும் முகத்தில், முட்டியில், முழங்கையில் எலுமிச்சை சாற்றை தடவினால், அவைகள் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். குறிப்பாக எலுமிச்சையின் தோலை முகத்தில் தேய்த்தால் அது இயற்கை தெம்பூட்டியாகவும், இறந்த செல்களை அகற்றவும் செய்யும். மேலும் பொலிவிழந்த வறண்ட சருமத்திற்கு எலுமிச்சை கலந்த எண்ணெயை உபயோகப்படுத்தலாம். அழகிய இதழ்கள் எலுமிச்சை பானம் இதழ்களுக்கும் பயனுள்ளதாக விளங்குகிறது. வறட்சி, வெடிப்பு மற்றும் வெம்புண் போன்றவைகளால் உதடு பாதிக்கப்பட்டிருந்தால், உதட்டில் எலுமிச்சை சாற்றினை தடவுங்கள். எலுமிச்சை சாற்றை பாலின் நுரை மற்றும் தேனுடன் கலந்து உதட்டின் மீது தடவலாம். அது உதட்டு பிரச்சனைகளை தீர்க்கும். அக்குள்களைப் பராமரிக்க… நண்பர்களை சந்திக்க அல்லது பார்ட்டிக்கு செல்ல வெளியே கிளம்புகிறீர்களா? அப்போது அக்குள் அசிங்கமாகவும், துர்நாற்றம் வீசுவதையும் பின்னர் தான் உணர்ந்தீர்களா? வியர்வை, வெப்பம் மற்றும் தூய்மை கேடு இவை அனைத்தும் அக்குளை கருமையடையச் செய்து துர்நாற்றத்தை கொடுக்கும். எனவே எலுமிச்சை சாற்றில் சிறிய பஞ்சுருண்டையை முக்கி, அக்குளுக்குள் தடவுங்கள். வேண்டுமெனில் எலுமிச்சையை அப்படியே தடவலாம். இனி என்ன, நீங்கள் பயமில்லாமல் ஸ்லீவ்லெஸ் சட்டையை அணியலாம். திடமான அழகிய நகங்கள் எளிதில் உடையக்கூடிய மஞ்சள் நிற நகங்களை கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் அழகு சாதனங்களில் எலுமிச்சை இருக்கும் வரை கவலைப்பட தேவையில்லை. எப்படியெனில், எலுமிச்சை சாற்றில் நகங்களை ஊற வைத்தால், நகங்கள் திடமாக இருக்கும். மேலும் இது நகங்களின் பழுப்பு நிறத்தையும் நீக்கி, அழகாக ஜொலிக்கச் செய்யும். முகப்பருவுக்கு விடை கொடுங்கள் முகப்பரு மற்றும் இதர சரும புண்களுக்கு எலுமிச்சை சாறு நல்ல மருந்தாக விளங்கும். எலுமிச்சையில் வைட்டமின் சி அடங்கியுள்ளதால், சருமத்தை அது ஆரோக்கியமாகவும் பளப்பளப்பாகவும் வைத்திருக்க உதவும். மேலும் அதில் உள்ள ஆல்கலைன் சருமத்தை, பருக்கள் மற்றும் இதர பிரச்சனைகளை ஏற்படுத்தும் பாக்டீரியாவிடம் இருந்து பாதுகாக்கும். அழகிய கரங்களுக்கு எலுமிச்சை முகத்தை போல கைகளும் அதிக அளவில் வெளிப்படும் ஒரு பாகமாகும். அதனால் அதனையும் நன்றாக பராமரிக்க வேண்டும். எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து, கைகளை மசாஜ் செய்யுங்கள். இது கைகளை சுத்தமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும். அதிலும் இது முழங்கையில் காணப்படும் கரு நிறத்தை வெளுப்பாக்கவும் செய்யும். உடல் எடை மெலிவதற்கு… எலுமிச்சையில் அதிக அளவு பெக்டின் பைபர் உள்ளது. அது பசியை போக்க உதவும். பெக்டின் உள்ள உணவுகளில் கலோரி மற்றும் கொழுப்பு குறைந்த அளவில் உள்ளதால், அது உடலுக்கு நன்மையை விளைவிக்கும். மேலும் இவ்வகை உணவுகள், உடம்பில் உள்ள இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால், உடம்பும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இது கலோரிகளை எரித்து, உடல் எடையை குறைக்கச் செய்யும். வாயை நற்பதத்துடனும் பற்களை சுத்தமாகவும் வைக்க… வாயில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை பெரிதும் உதவி புரிகிறது. மேலும் இது பல் வலி மற்றும் ஈறு வீக்கத்திற்கு நிவாரணியாக விளங்கும். வெண்ணிற மற்றும் பளிச்சிடும் பற்களுக்கு, எலுமிச்சை பழத்தை சிறிது உப்பு அல்லது பேக்கிங் சோடாவில் தொட்டு, பற்களில் தேய்க்க வேண்டும். பொடுகுகளை நீக்க… அரிக்கும் தலை அல்லது பொடுகு நிறைந்த தலை முடியுடன் வெளியில் செல்ல சங்கடமாக உள்ளதா? கவலை வேண்டாம்! தொந்தரவு அளிக்கும் இந்த பொடுகுகளில் இருந்து எலுமிச்சை காக்கும். அதற்கு தலையில் எலுமிச்சையை தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்தால், நல்ல பலன் கிடைக்கும். அழகான கூந்தலுக்கு… தலைமுடி தனிப்பட்டு தெரிய அல்லது தலைக்கு பயன்படுத்திய சாயங்களை நீக்க, ஏன் எலுமிச்சை போன்ற இயற்கையான வழிமுறைகளை நாடக் கூடாது? ஏனெனில் எலுமிச்சையை தலை முடியில் தேவையான பகுதியில் தடவி, சிறிது நேரம் சூரிய ஒளியில் நின்று காய வையுங்கள். இதனால் தடவிய பகுதி மட்டும் தனித்து தெரிவது உறுதி. மேலும் எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் அமிலம், தலை முடியில் பூசிய சாயத்தை இயற்கையான முறையில் நீக்கும். செரிமானத்திற்கு… செரிமான பிரச்சனை அடிக்கடி வந்து செல்கிறதா? அப்படியானால் எலுமிச்சை செரிமானத்திற்கு பெரிதும் உதவி புரிகிறது என்பது உங்களுக்கு நல்ல செய்தியாக விளங்கப் போவது உறுதி. அதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து, சிறிது தேனையும் கலந்து பருகலாம். இது உடலில் தேவையற்ற நச்சுத்தன்மையுள்ள பொருட்களை வெளியேற்ற உதவும். அழகுக்கு சருமம் மிகவும் முக்கியமாக உள்ளதால், மின்னும் சருமத்தை பெற ஆரோக்கியமான செரிமான அமைப்பு அவசியமான ஒன்று. எலுமிச்சையின் உடல்நல பயன்கள் எலுமிச்சையில் வேறு பல உடல்நல பயன்களும் அடங்கியுள்ளது. அதில் செரிமான அமைப்பை நன்றாக வைக்க உதவுவதோடு மட்டும் நின்று விடாமல், புண்ணான தொண்டை, நெஞ்சு எரிச்சல் மற்றும் சரும அரிப்புக்கும் நிவாரணியாக விளங்குகிறது. மேலும் புண்களை குணப்படுத்தவும் எலும்புகள் மற்றும் இணைப்பு தசைகளை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும். உடலின் திறன் அதிகரிக்க எலுமிச்சை மிகவும் உறுதுணையாக நிற்கிறது. மேலும் எலுமிச்சை எண்ணெயின் மனம் மன நிலையை ஊக்கப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும்

இயற்கை உணவுப் பொருட்களில் உள்ள மருத்து குணங்கள்!


மாங்காய்

என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ
யாருக்கு வேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.
பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.
அவரைக்காய்
என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.
யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல்உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.
பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.
அத்திக்காய்

என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.
பீர்க்கங்காய்

என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்
யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல்,தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.
பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
கோவைக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ.
யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு.
பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.
புடலங்காய்
என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து,கந்தகச் சத்து.
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பாகற்காய்
என்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.
யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு.
யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடிசாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.
பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.
சுரைக்காய்
என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.
இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப்பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.
யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்.
யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.
பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும்,பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.
பூசணிக்காய்

என்ன இருக்கு: புரதம், கொழுப்பு
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல்பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.
யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.
கொத்தவரைக்காய்
என்ன இருக்கு : நார்ச்சத்து
யாருக்கு நல்லது : நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை,லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும்.
பலன்கள்: ருசி மட்டுமே
வாழைக்காய்
என்ன இருக்கு: கொழுப்புச் சத்து, விட்டமின் இ.
யாருக்கு நல்லது: வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும்.
யாருக்கு வேண்டாம்: வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள்சாப்பிடக்கூடாது.
பலன்கள்: உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்.
வெள்ளரிக்காய்
என்ன இருக்கு: விட்டமின் ஏ, பொட்டாசியம்
யாருக்கு நல்லது: சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவுநோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு.
பலன்கள்: உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.
சுண்டைக்காய்
என்ன இருக்கு: விட்டமின் சி
யாருக்கு நல்லது : சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல்குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம்.
பலன்கள்: கிருமிகளை, வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும்.
பலாக்காய்
என்ன இருக்கு : சுண்ணாம்புச்சத்து
யாருக்கு வேண்டாம் : வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு.
பலன்கள் : செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும்.
பப்பாளிக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம்.
யாருக்கு நல்லது : மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையைகுறைக்க
விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.
யாருக்கு வேண்டாம் : கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.
பலன்கள் :சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி§ துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக§ செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து§ உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
ந§ன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி,ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட§ நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள்§ மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப்§ புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில்§ ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல்§ போட்டு வர கட்டி உடையும்.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல்§ பூசி வர வீக்கம் கரையும்.
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச§ வலி,விஷம் இறங்கும்.
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில்§ சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
களாக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, சி.
யாருக்கு நல்லது : மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல்,பித்த
மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : தொண்டைவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து, பித்தத்தை கட்டுப்படுத்தும்.
நெல்லிக்காய்
என்ன இருக்கு : விட்டமின் சி, செல்லுலோஸ், கார்போ ஹைட்ரேட்,கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் நிகோடினிக் ஆசிட்
யாருக்கு நல்லது : பிளட் பிரஷர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
எல்லோருக்கும் உகந்த அமிர்தக்கனி.
பலன்கள் : இளமையை நீடிக்கச் செய்யும். தலைமுடி, தோல், கண் பார்வையை
பாதுகாக்கும். இதயம் நுரையீரலை வலுவூட்டும். காரட்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள்,மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள்.
யாருக்கு நல்லது : அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வைக்கு உகந்தது. உடல் பருமனாகாமல் காக்கும்.காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள்வெளியேறும்.
பீன்ஸ்
என்ன இருக்கு : புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள்.
யாருக்கு நல்லது : ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
யாருக்கு வேண்டாம் : குடைச்சல், ஏப்பம், வயிற்று வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஜீரணத் தொந்தரவு ஏற்படும்.
பலன்கள் : பித்தம் தணியும், பார்வை தெளிவு, சருமப் பளபளப்புக்கு உதவும். வாயு நீக்கும்.
பீட்ரூட்
என்ன இருக்கு: க்ளூகோஸ்
யாருக்கு நல்லது : ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும்.
யாருக்கு வேண்டாம் : சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : ரத்தத்தை வளப்படுத்தும். சுறுசுறுப்பை அளிக்கும். மேனி நிறம்பெறும்.
நூல்கோல்
என்ன இருக்கு : சுண்ணாம்புச் சத்து
யாருக்கு நல்லது : ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு, சர்க்கரை நோயாளிகளுக்கு.
யாருக்கு வேண்டாம் : உப்புச் சத்து அதிகம் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும்.
முள்ளங்கி (வெள்ளை)
என்ன இருக்கு : நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு,இரும்புச் சத்து.
யாருக்கு நல்லது : சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.
யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா நோயாளிகளுக்கு.
பலன்கள் : அதிகம் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும்.
முள்ளங்கி (சிவப்பு)
என்ன இருக்கு : கந்தகம், கால்சியம், விட்டமின் சி.
யாருக்கு நல்லது : ஹைபர் அசிடிட்டி உள்ளவர்களுக்கு.
பலன்கள்: கை, கால், மூட்டு வீக்கத்தைக் குறைக்கும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கும். மித உஷ்ணம் தரும். சிறுநீரைவெளியேற்றும்.
காலிஃபிளவர்
என்ன இருக்கு : பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ்,மெக்னீசியம், விட்டமின் ஏ, இ.
யாருக்கு நல்லது : புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
பலன்கள் : மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.
முட்டைக்கோஸ்
என்ன இருக்கு : சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ,இ.
யாருக்கு நல்லது : சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது.
யாருக்கு வேண்டாம் : பனிக்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும்.
நார்த்தங்காய்
என்ன இருக்கு : சிட்ரஸ் ஆசிட்
யாருக்கு நல்லது : அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : வயிற்றுப்புண் அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : வாயுத் தொல்லையை விலக்கி நெஞ்சுக் கரிப்பை நீக்கும். அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்தும்
ஆல்ரவுண்டர் திராட்சை:
திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில்தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது பயன்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதிலுள்ள 'குளுக்கோஸ்' விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது. இரத்த உற்பத்தியையும் செய்கிறது. மேலும்,மலச்சிக்கல்,ஆஸ்துமா,ஒற்றைத்தலைவலி என பல்முக குண ஊக்கியாய்பணிபுரிகிறது.
மருத்துவமனையாகும் எலுமிச்சை: எவரெஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய வீரர்கள் இந்தச் சாற்றைப் பருகியே சாதித்ததாக கூறினர். இதன் முக்கியசேர்க்கை 'சிட்ரிக் அமிலமும்', 'வைட்டமின் சி' யும் தான். இரத்த வாந்தியை இது நிறுத்தும். நுரையீரல், குடல், தொண்டை, ஜலதோஷம்,காலரா, உடல் பருமன், நல்ல பசி என அனைத்துத் துறைகளிலும் இது பணியாற்றி சிறந்த மருந்தகமாய் திகழ்கிறது.

மாதுளம் பழத்தின் சிறப்புக்கள்

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளது.
இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும்
பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை
அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப்போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களைஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலவீனம,நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலவீனம அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலவீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

Monday, March 18, 2019

உங்கள் வயிற்றில் பூச்சி அல்லது குடற்புழுக்கள் செய்யும் அட்டுழியங்கள் பற்றி தெரியுமா?





குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது... குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும். குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீக்க வேண்டியது அவசியமாகும். குடல் புழுக்கள் வயிற்றில் வளர தொடங்கினால் குறைந்தது ஆறு மாதங்கள் வரையாவது வளரும் தன்மை கொண்டது.


குடல் புழுக்களை குழந்தைகளுக்கு நீர்ம மருந்து கொடுப்பதாலும், பெரியவர்களுக்கு புழுவை நீக்கும் மாத்திரைகளை சாப்பிடுவதாலும் நீக்க முடியும். ஆனால் இது போன்ற மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவது கூடாது. இதனை சாப்பிடும் போது மருத்துவர் பரிந்துரை என்பது மிகவும் அவசியமாகிறது. அதுமட்டுமின்றி இது போன்ற மாத்திரைகள் கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை.


குடல் புழுக்கள் வந்த உடன் அழிப்பதற்கு பதிலாக அவை வயிற்றில் சேராமல் பாதுக்காத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. குடல் புழுக்களை அழிக்க சில இயற்கையான காய்கறிகளும், இயற்கை மருந்துகளும் உள்ளன. உடலுக்கு எந்த விதமான தீங்கும் இன்றி குடல் புழுக்களை நீக்கிவிடும் தன்மை கொண்டது. இந்த பகுதியில் குடற்புழுக்கள் எதனால் உண்டாகின்றன, அவை வராமல் பாதுகாக்க என்னென்ன வழிகள் உள்ளன.. அவற்றை போக்க உதவும் வைத்தியங்கள் பற்றியும் விரிவாக காணலாம்.


குடல் புழுக்கள் வர காரணம்
அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொல்லை அடிக்கடி வருகிறது. அசுத்தமான தெருவில், மண் தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்புழு ஏற்படுவதற்குத் துணைபோகின்றன.


குழந்தைகளுக்கு?
சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் உண்ணும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும், குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.



கழிப்பறை சுத்தம்
சுயசுத்தம் காக்கப்பட வேண்டும். சுற்றுப்புறச் சுகாதாரம் மேம்பட வேண்டும். குளிப்பறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது. கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப் பழக்கப்படுத்துங்கள்.


சுத்தம்
சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக் கூடாது. சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள். நகங்களைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும். குழந்தைகள் விரல் சூப்பக் கூடாது.


உள்ளாடைகள்
குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம். எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.



உணவு சுகாதாரம்
ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளைக் குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதில் ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு. சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.


நீரில் கழுவவும்
காய், கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் சமைக்கும், சாப்பிடும் உணவுகள் சுத்தமாகவும் நச்சுக்கள் இன்றியும் இருக்கும்.


சுத்தமான நீர்
நன்றாகக் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட உணவு வகைகளையே உண்ண வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம்.



வெளியில் செல்லும் போது..
காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும். அசுத்தமான குளம், குட்டை, ஏரி, நீச்சல்குளம் போன்றவற்றில் குளிப்பதையும் நீச்சலடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.


புண்கள் இருந்தால்..
வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். பித்த வெடிப்பு, சேற்றுப்புண் இருந்தால் உடனே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.


இறைச்சிகள்
தரமான கடைகளில் மட்டுமே இறைச்சியை வாங்க வேண்டும். மீன், இறைச்சி போன்றவற்றை நன்றாக வேகவைத்த பின் சாப்பிட வேண்டும்.


செல்லபிராணிகள்
வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கி கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.


பூண்டு
பூண்டுடை பயன்படுத்தி குடலில் உள்ள புழுக்களை வெளியேற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய், மஞ்சள், பூண்டு. ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்யில் பூண்டுகளை துண்டுகளாக்கி போட்டு வதக்கவும். இதில் கால் ஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இதை இருவேளை சாப்பிடும்போது குடல் புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். செரிமானம் சீராகும். 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்த கூடாது.


பூசணி விதை
பூசணி விதையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பூசணி விதை, தேன். அரை ஸ்பூன் அளவுக்கு பூசணி விதை பொடி எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் வெளியேறும். பெரியவர்களுக்கு அரை ஸ்பூன் பூசணி விதை பொடியும், குழந்தைகளுக்கு கால் ஸ்பூன் அளவுக்கும் எடுக்கவும். இதை 3 நாட்கள் சாப்பிடலாம். 6 மாதத்துக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வது நன்மை தரும்.


பப்பாளி விதை
பப்பாளி விதையை பயன்படுத்தி குடல் புழுக்களை வெளியேற்றும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் பப்பாளி விதை எடுக்கவும். சிறியவர்களுக்கு என்றால் அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில் தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்த்து வாரம் ஒரு முறை என 4 வாரங்கள் குடித்துவர வயிற்று புழுக்கள் வெளியேறும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வேப்பம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் நெய் காய்ந்ததும் வேப்பம் பூவை சேர்த்து வதக்கவும். இதில், நீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கடி மாதம் ஒருறை குடித்துவர குடலில் புழுக்கள் வராமல் இருக்கும்.


வேப்பம் பூ
வேப்பம் பூவை முன்னோர்கள் வாரத்துக்கு ஒருமுறை உணவில் சேர்த்தார்கள். இதனால் குடல் புழுக்கள், தொற்று கிருமிகள் வராமல் தடுக்கப்பட்டது. வேப்பம் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. வேப்பம் பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும். தரமற்ற, அதிகளவில் உணவை சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இஞ்சியை சாறாக்கி தொப்புளில் 5 சொட்டுக்கள் விட்டு, தொப்புளை சுற்றி தடவுவதன் மூலம் வயிற்று வலி குணமாகும்.


கோவைக்காய்
கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்

உங்கள் ராசி நட்சத்திரத்திற்கு ஏற்ப வாஸ்து விதிகள் மாறுமா? மேலே படியுங்கள்.....






ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து போன்றவற்றில் உள்ள பெரிய குறையே ஒவ்வொரு நிபுணரும் வெவ்வேறு கருத்துகளையும் , விதிகளையும் சொல்லுவது தான். கடைசியில் சாதாரண மனிதன் எதை கடை பிடிப்பது எதை விடுவது என்று புரியாமால் மண்டை குழம்பி நிற்கிறான் என்பது நிஜம்.

கடக, விருச்சிக, மீன ராசிக்காரர்கள் வடக்கு வாசல் இருக்கும் படி வீடு கட்டினால் நல்ல பலன் என்கிறார்கள்.

கிழக்கு வாசல், சிம்மம், மேஷம், தனுசு ராசிக்காரர்களுக்கு உகந்தது என்கிறார்கள்.

மிதுனம், கும்பம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் மேற்கு வாசலை தேர்தெடுக்க வேண்டும் என்கிறார்கள்.

ரிஷப, கன்னி மகர ராசிக்காரர்களுக்கு உகந்த வாசல் தெற்கு வாசல் ஆகும்.

அதே போல் தான் ஒவ்வொரு நட்சத்திரகாரர்களுக்கும் ஒரு திசை உகந்ததாக இருக்கும் என்கிறார்கள் சில வாஸ்து நிபுணர்கள்.

உண்மையில் வாஸ்து பார்க்கும் போது ராசி, நட்சத்திரம் போன்றவற்றைப் பார்க்க வேண்டியதில்லை என்பதே உண்மை.

ஒரே வீட்டில் பல ராசிக்காரர்களும் நட்சத்திரகாரர்களும் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாசல் வைப்பது எங்ஙனம் சாத்தியமாகும்?
குடும்பத் தலைவரின் ராசி நட்சத்திரம் பார்த்து தேர்தெடுப்பதும் தவறு தான்.

எந்த திசைப் பார்த்த வீட்டு மனையையும் வாங்கலாம். பாதகமில்லை. வடக்குப் பார்த்த மனையும் கிழக்குப் பார்த்த மனையும் விசேஷம். எந்த திசையில் வேண்டுமென்றாலும் வாசல் இருக்கலாம். தப்பில்லை.

என்ன கவனிக்க வேண்டுமென்றால்

கிழக்கில் வாசல் வைப்பதாக இருந்தால் வடக்கு சார்ந்த கிழக்கில் வைக்க வேண்டும்.

வடக்கில் வாசல் வைப்பதாக இருந்ததால் கிழக்கு சார்ந்த வடக்கில் வைக்கவும்.

தெற்கு என்றால், கிழக்கு சார்ந்த தெற்கு ,

மேற்கு என்றால், வடக்கு சார்ந்த மேற்கு என்று தேர்ந்தெடுக்கவும்.

Sunday, March 17, 2019

வினைகள் தீரும்... வியாபாரம் செழிக்கும்! தொழிலில் வெற்றி...



''பெட்டிக்கடையோ, பெரிசா வேற எந்தத் தொழிலோ... செங்கம்மா முனியப்பன் சந்நிதிக்கு வந்து, 'துணையா இருந்து வழி நடத்துய்யா’ன்னு மனசார வேண்டிக்கிட்டு ஆரம்பிச்சா, தொழில்ல ஒரு குறையும் இல்லாம ஓஹோன்னு ஜெயிச்சுடலாம்!''

நாமக்கல் மாவட்டம், பல்லக்கா பாளையத்தில் கோயில் கொண்டிருக்கும் தங்களின் காவல் தெய்வம் ஸ்ரீசெங்கம்மா முனியப்பன் மீது, இந்தப் பகுதி மக்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை இது.

செங்கம் புதர்கள் நிறைந்திருந்த இந்தப் பகுதி, சுமார் 400 வருடங்களுக்கு முன் பஞ்சத்தில் சிக்கித் தவித்தது. ஒருமுறை, பசு ஒன்று குறிப்பிட்ட ஓரிடத்தில் நின்று தானாகவே பால் சொரிந்தது.

அடுத்தடுத்து மூன்று நாட்களும் பசு பால் சொரிவது தொடர, மக்கள் அந்த இடத்தை ஆராய்ந்தனர். அப்போது ஓர் அசரீரி, 'நான் முனியப்பன். பஞ்சத்தில் தவிக்கும் மக்களைக் காக்க வந்திருக்கிறேன். இனி, இவ்வூருக்கு நானே காவல்தெய்வம்'' என்று ஒலித்தது. ஊர் மக்கள் சிலிர்த்தனர். அந்த இடத்திலேயே சிறியதாக கோயில் கட்டியவர்கள், செங்கம் புதரில் தோன்றியதால் ஸ்வாமிக்கு 'செங்கம்மா முனியப்பன்’ என்று திருப்பெயர் சூட்டி, வழிபட ஆரம்பித்தனர். அதன் பிறகு பஞ்சம் நீங்கி, ஊர் செழித்தது.

அரசர்கள் பலரும் போருக்குப் புறப்படுமுன் இங்கு வந்து முனியப்பனை வழிபட்டு, போரில் வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள்.பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட பாளையக்காரர்கள் கோயிலை பெரிய அளவில் விரிவுபடுத்திக் கட்டியிருக்கிறார்கள். ஸ்வாமிக்கு ஆபரணங்களையும் வழங்கியிருக்கிறார்கள்.

இங்கு வந்து எலுமிச்சம்பழத்தை வேலில் சொருகி வைத்துப் பிரார்த்தித்தால், எண்ணிய காரியங்கள் நடந்தேறுமாம். வெளியூர், வெளி மாநில தொழிலதிபர்களும் தங்களின் வணிகம் செழிக்க, இங்கு வந்து செங்கம்மா முனியப்பனை வணங்கிச் செல்கிறார்கள். இந்தப் பகுதிக்கு வரும் அதிகாரிகளும் இங்கு வந்து ஸ்வாமியை வழிபட்ட பிறகே, தங்கள் பணிகளைத் தொடங்குவார்கள். அதேபோன்று, ஊருக்குள் வரும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இவரைத் தரிசித்துவிட்டே மறு காரியம் பார்ப்பார்கள்.

நெடுஞ்சாலையில் இந்தத் திருக்கோயில் அமைந்துள்ளதால், கோயிலைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், முனியப்பனைத் தவறாமல் வழிபட்டுச் செல்கிறார்கள். 'முனியப்பன் வழித்துணையாக வந்து காப்பார்’ என்பது அவர்களின் நம்பிக்கை. பிறந்த குழந்தைகளை ஸ்வாமியின் சந்நிதிக்கு எடுத்துவந்து பிரார்த்திக்கிறார்கள். இதனால் அந்தக் குழந்தைகள் தைரியமாகவும், ஆரோக்கியமாகவும், கல்வியறிவில் சிறந்தும் விளங்குவார்கள் என்பது ஐதீகம்.




இந்தக் கோயிலில் அருளும் ஒண்டி முனியப்பன், காவல் முனியப்பன் ஆகிய தெய்வங்களும் சாந்நித்தியம் மிகுந்தவர்கள். ''இவர்கள் தினமும் இரவு நேரம் குதிரையில் வலம் வந்து, ஊரைக் காக்கிறார்கள். அதனால் இன்றுவரை இந்த ஊரில் எந்தத் திருட்டும், அசம்பாவித சம்பவங்களும் நடந்ததில்லை'' என்று பரவசமும் பூரிப்புமாக விவரிக்கிறார்கள் ஊர்மக்கள்.

மார்கழி மாதம் தேர்த்திருவிழாவும், புரட்டாசி நவராத்திரியின்போது விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன. அமாவாசை, பௌர்ணமி நாட்களும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை களும் இங்கே விசேஷம்! இந்த நாட்களில் இங்கு முனியப்பனை கண்ணாரத் தரிசித்து, மனதார வழிபட்டால், தடையில்லாத முன்னேற்றமும் குறையில்லாத வெற்றியும் நம்மை வந்தடையும் என்பது உறுதி.

எந்த நாள்... உகந்த நாள்?




இந்து சாஸ்திரத்தில், மனிதன் ஒருவன் பிறப்பதற்கு முன்பிருந்தே பல்வேறு சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இறப்புக்குப் பின்னும் அவை தொடரும். இதுபோன்ற சடங்குகளையும், நாம் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் விஷயங்கள், வீடு கட்டுவது, தொழில் துவக்கம் முதலான நற்காரியங்களையும் உரிய நாட்களைத் தேர்வு செய்து அன்று ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன ஞான நூல்கள். அவை தரும் விளக்கங்களின்படி, எந்தெந்த விஷயங்களை எந்தெந்த நாட்களில் நிகழ்த்தலாம் என்பது குறித்து அறிந்துகொள்வோம்.

குழந்தைக்கு எப்போது பெயர் சூட்டலாம்?

தந்தை குழந்தையின் பெயரை அதன் காதில் மூன்று முறை கூறவேண்டும். அப்போது உறவினர்கள் அதை திரும்பச் சொல்லவேண்டும். அந்த தருணத்தில் குழந்தையின் உள்ளங்கையில் தங்கக்காசு ஒன்றை வைப்பார்கள். குழந்தை பிறந்து 10, 11, 12 அல்லது 16ம் நாளில் பெயர் சூட்டலாம்.

பெயர் சூட்டுவதற்கு உகந்த சுப கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி.

திதி: ரிக்தா திதிகள் (4, 9, 14வது திதிகள்) அஷ்டமி தவிர மற்றவை.

நட்சத்திரம்: சர, ஸ்திர, துரித, சாது நட்சத்திரங்கள் முறையே புனர்பூசம், சுவாதி, திருவோணம், அவிட்டம், சதயம், ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அசுவினி, பூசம், அஸ்தம், மிருகசீரிடம், சித்திரை, அனுஷம் அல்லது ரேவதி சிறந்தவை.

யோகம்: விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வ்யாகாதம், வஜ்ரம், வ்யதிபாதம், பரிகம் மற்றும் வைதிருதி தவிர பிற யோகங்கள் சிறந்தவை.

கரணம்: சகுனி, விஷ்டி தவிர பிற கரணங்கள் சிறந்தவை.

மேற்கண்ட யோகம் மற்றும் கரணம் அனைத்தும் சுப காரியங்களுக்கும் விலக்கப்பட்டவை. இவை தவிர மற்ற யோகங்கள், கரணங்கள் மற்றும் கிழமைகள் சிறந்தவை.

மேலும் மேற்கண்ட பஞ்சாங்க விஷயங்கள் அல்லாமல் சடங்கு வைக்கும் நாளில் பஞ்சக சுத்தி, ஜாதகரின் ஜாதகத் தன்மை, கிரகண தோஷங்கள், சங்கராந்தி மற்றும் சந்தியாகாலம் போன்றவற்றையும் கவனித்து முகூர்த்தம் குறிக்கவேண்டும்.




அன்ன ப்ராசனம் எப்போது?

இது குழந்தைக்கு முதல் முறையாக திட உணவு ஊட்டும் சடங்கு. ஆண் குழந்தைக்கு 6, 8 அல்லது 10வது மாதங்களிலும், பெண் குழந்தைக்கு 5, 7, 9 அல்லது 11வது மாதங்களிலும் இந்தச் சடங்கை செய்யலாம்.

திதி: 2, 3, 5, 7, 10, 13 அல்லது பௌர்ணமி சிறந்தது.

நட்சத்திரம்: அனைத்து சர, சாது, ஸ்திர மற்றும் துரித நட்சத்திரங்கள் சிறந்தவை.

முடி காணிக்கை எப்போது செலுத்தலாம்?

இது முதல்முறையாக முடி காணிக்கை செலுத்தும் சடங்கு ஆகும். இதை நிகழ்த்துவதற்கு 2, 3, 5, 7, 10, 11 அல்லது 13ம் திதி சிறந்தது.

நட்சத்திரம்: சர மற்றும் துரித நட்சத்திரங்கள் சிறந்தவை.

காது குத்துதல்

திதி: ரிக்தா திதிகள் (4, 9, 14) 8 மற்றும் அமாவாசை தவிர மற்றவை.

நட்சத்திரம்: சாது, துரித நட்சத்திரங்கள், புனர்பூசம், திருவோணம் மற்றும் அவிட்டம் சிறந்தவை.

புத்தாடை அணிய உகந்த நேரம்...

திதி: ரிக்தா திதிகள் மற்றும் அமாவாசை தவிர மற்றவை.

நட்சத்திரம்: சர, ஸ்திர, சாது, துரித மற்றும் விசாகம் சிறந்தவை.

பிறந்த நாள் கொண்டாட்டம்

நாம் பிறந்த ஆங்கில தேதி அல்லது தமிழ் தேதியில் பிறந்தநாள் கொண்டாடக் கூடாது. நாம் பிறந்த சந்திரமான மாதம் மற்றும் நட்சத்திர நாளில்தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும்.

பஞ்சாங்கங்களில் சைத்ர, வைசாக, பால்குன என சந்திரமான மாதங்களைக் காணலாம். தமிழ் வருட பங்குனி மாத அமாவாசை முடியும் நேரத்தில் சந்திரமான சைத்ர மாதம் தொடங்கும். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அமாவாசைகளில் அடுத்தடுத்த மாதங்கள் தொடங்கும். இந்த சந்திரமான மாதத்தையும் ஜனன நட்சத்திரத்தையும் ஜாதகரின் ஜாதகத்தில் குறித்துத் தருவது புண்ணியமாகும்.

சில நேரங்களில், ஒரே தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்பட்டு ஒரே பெயரில் இரண்டு சந்திரமான மாதங்கள் ஏற்பட்டுவிடும். இதில் முதல் மாதத்தை அதிக மாதம் என்றும், மற்றொன்றை நிஜ மாதம் என்றும் சொல்வர். இந்நிலையில் நிஜமாதத்தில் வரும் ஜனன நட்சத்திர தினத்தில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும்.

மேலும் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். நமது ஜனன நட்சத்திரம் முதல் நாள் தொடங்கி மறு நாள் வரை இருக்க வாய்ப்பு உண்டு. இந்த நிலையில், எந்த நாளில் சூரிய உதயம் முதற்கொண்டு 2 மணி, 24 நிமிடங்கள் வரை ஜனன நட்சத்திரம் உள்ளதோ, அந்த நாளில் பிறந்தநாள் கொண்டாடவேண்டும். பிறந்தநாள் விழா, வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல. அந்த விண்ணுக்கும் நம் உயிருக்கும் உள்ள தொடர்பை புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சடங்கு. இந்த நாளில் பெற்றோர், பெரியோரிடம் ஆசி பெறுதல், புனித இடங்களுக்குச் சென்று வருதல், தான தர்மம் செய்தல், பறவைகள், விலங்குகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு தானம் வழங்குதல் போன்ற தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும். அவர்கள் வயிறும் மனமும் குளிர்ந்தால், நமது வாழ்வும் வளமும் வளரும் என்பது உறுதி.

மேலும் இந்நாளில் விநாயகர் பூஜை, விஷ்ணு பூஜை, பகவதி சேவை செய்ய வேண்டும். மாணவர்கள் சரஸ்வதி பூஜை, வித்ய கோபால மந்திர அர்ச்சனை, மிருத்யுஞ் ஜெயன பூஜை செய்யவேண்டும்.

பிறந்த நாள் இன்னின்ன கிழமைகளில் அமைந்தால் இன்னின்ன பலன்கள் என்றொரு கருத்து உண்டு.

ஞாயிறு: நீண்ட தூர பயணம்

திங்கள்: நல்ல உணவு கிடைத்தல், தான்ய விருத்தி

செவ்வாய்: உடல் நலம் பாதித்தல்

புதன்: கல்வியில் ஆர்வம்

வியாழன்: ஆடை ஆபரணச் சேர்க்கை

வெள்ளி: அனைத்து வழிகளிலும் அதிர்ஷ்டம்.

சனி: பெற்றோருக்கு பாதிப்பு.

பிறந்த நாளில் உபநயனம், திருமணம், மருத்துவ சிகிச்சை, முதலியவற்றை செய்யக் கூடாது. பிறந்தநாள் எந்த கிழமைகளில் அமைகிறதோ அந்த கிழமைக்கு உரிய கிரகத்தை வழிபட, குறைகள் நீங்கி நிறைகள் கூடும்.



வித்யாரம்பம்

திதி: ரிக்தா திதிகள், 8 மற்றும் 15 தவிர மற்றவை சிறந்தவை.

நட்சத்திரம்: சர, சாது, துரித நட்சத்திரங்களும் ரோகிணி, திருவாதிரை, உத்திரம் மற்றும் விசாகமும் சிறந்தவை.

விற்பனை மற்றும் வர்த்தகம் குறித்த விவரங்கள்

மிகப்பெரிய அளவில் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிடல் மற்றும் செயல்படல், ஒப்பந்தங்களில் கையெழுத் திடல், விளம்பரப்படுத்துதல் போன்றவற்றையும் உரிய திதி, நட்சத் திரங்களில் துவங்குவது விசேஷம்.

திதிகள்: 1, 2, 3, 5, 7, 10, 11, 13 மற்றும் பௌர்ணமி சிறந்தது.

நட்சத்திரம்: சாது, துரித நட்சத்திரங்கள் சிறந்தவை.

புதிதாக கடை திறப்பதற்கு, ரிக்தா மற்றும் கிருஷ்ணபட்ச அஷ்டமி தவிர மற்ற திதிகள் சிறந்தவை. சாது, துரித நட்சத்திரங் கள் சிறந்தவை.

மருத்துவம்...

ஜனன நட்சத்திரம் அல்லது அதற்கு 3, 5 அல்லது 7வது நட்சத்திர தினங்களில் (ஜன்ம, விபத்து, ப்ரத்யக், வதம்) உடல்நலம் பாதித்தால் மிக கவனத்துடன் சிகிச்சை பெற வேண்டும்.

பய மற்றும் உக்கிர நட்சத்திர நாட்களில் உடல்நலம் பாதிக்கக் கூடாது. மேலும் மேற்படி நட்சத்திர நாட்களுடன் சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமையும் அமைந்துவிட்டால் மிகவும் எச்சரிக்கையுடன் சிகிச்சை பெற வேண்டும். நாட்பட்ட பிணிகளுக்கு சர, ஸ்திர, சாது மற்றும் துரித நட்சத்திரங்களில் சிகிச்சை பெற துவங்குவது சிறப்பு.

வழக்கு தொடுத்தல்

உரிமையை நிலைநாட்டுவதற்காக வழக்குகள் தொடுக்கும் அன்பர்கள் ரிக்தா திதி தவிர மற்ற திதிகளைத் தேர்வு செய்யலாம். சாது, துரித, ஸ்திர நட்சத்திரங்கள், ரோகிணி, உத்திரம், அவிட்டம் சிறந்தவை.

கடன் வாங்குதல்

நல்ல காரியங்களுக்காகவும், தவிர்க்க இயலாத தேவைகளுக்கா கவும் கடன் வாங்கும்போது ரிக்தா திதி தவிர மற்ற திதிகளில் அணுகலாம். கார்த்திகை, புனர்பூசம், மூலம், அவிட்டம் தவிர மற்றவை சிறந்தவை. ஜனன நட்சத்திரம் ஆகாது.

வீடு பழுது பார்க்க...

திதி: ரிக்தா திதி தவிர மற்றவை சிறந்தவை.

நட்சத்திரம்: கார்த்திகை, பூசம், மகம், பூரம், அஸ்தம், மூலம் மற்றும் ரேவதி தவிர மற்றவை. மேலும் கோச்சாரத்தில் மேற்படி நட்சத்திரங்களில் செவ்வாய் பயணிக்கும் காலமும் ஆகாது.

வெள்ளிக்கிழமையில் ரிஷபம் அல்லது துலாம் லக்னம்; திங்கள் கிழமையில் கடகம் லக்னம் அமையும் நேரத்தில் பழுது பார்க்கத் தொடங்க வேண்டும்.

பயணம் வெற்றி பெற...

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நாட்களில் பயணத்தைத் தவிர்க்கவும். மேலும் செவ்வாய், புதன் கிழமைகளில் வடக்கு திசையும்; திங்கள், சனியில் கிழக்கும்; வியாழனன்று தெற்கும்; ஞாயிறு, வெள்ளியில் மேற்கும் ஆகாது

தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!



சொன்னா நம்பமாட்டீங்க... திருமணமான புது தம்பதிகள் எவ்வளவு ஆரோக்கியமா இருப்பாங்கன்னு தெரியுமா? ஆம், அதற்கு காரணம் திருமணமான ஆரம்ப காலத்தில் தினமும் உடலுறவு கொள்வது தான். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு உடலுறவு கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அளவு உடலுறவானது ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்க பெரிதும் உதவியாக இருக்கும். இங்கு தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த பட்டியலைப் படித்த பின், இதுவரை வாரம் ஒருமுறை உறவு கொள்வதைத் தவிர்த்து, தினமும் உடலுறவு கொள்ள விரும்புவீர்கள். மேலும் ஆய்வு ஒன்றிலும், தினமும் உடலுறவு கொண்டால், பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளான சளி மற்றும் தலைவலி போன்றவை வராமல் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின் இப்படி தூங்குங்க... என்ன நடக்குதுன்னு அப்புறம் பாருங்க... அதுமட்டுமின்றி, சமீபத்திய ஆய்வில் நாம் ஒவ்வொரு முறை உறவு கொள்ளும் போது, நம் உடலில் ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. மேலும் இந்த ஹார்மோனானது மூளைக்கு உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யுமாறு ஒருவித சமிக்ஞையை அனுப்பும். இதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் நீங்கி, உடலானது ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும். சரி, இப்போது அன்றாடம் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!! நீங்க கொடுக்கும் முத்தம் சும்மா 'நச்'சுன்னு இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்... நோய்த்தொற்றுக்களை குறைக்கும் உடலுறவு கொள்ளும் போது, உடலில ஒருசில நல்ல ஹார்மோன்களுடன், ஒருசில சேர்மங்களும் வெளியிடப்படும். இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். நிம்மதியான தூக்கம் உடலுறவில் ஈடுபடும் நேரம் உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது வெளியிடப்படும் ஆக்ஸிடாஸின் என்னும் ஹார்மோன், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். இதய ஆரோக்கியம் அன்றாடம் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம், இரத்தமானது இரத்த நாளங்களில் சீராக உந்தப்படுவதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஹார்மோன் அளவை சீராக்கும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல் சீராக இருக்க உடலுறவு பெரிதும் உதவியாக உள்ளது. அதிலும் பெண்கள் மாதவிடாய் நெருங்கும் ஒரு வாரத்திற்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், மாதவிடாயின் போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல் இருக்கும்.

வயிற்றுப்பிடிப்பு குறையும் தினமும் உடலுறவு கொண்டால், மாதவிடாய் காலத்தில் வயிற்றுப்பிடிப்பு ஏற்படாமல் இருக்கும். இடுப்புத்தசைகள் வலிமையடையும் அன்றாடம் உடலுறவு கொண்டால், பெண்களின் இடுப்புத்தசைகளுக்கு உடற்பயிற்சி செய்தவாறு இருக்கும். இதனால் இடுப்புத்தசைகள் இறுக்கமடைந்து வலிமையாகி, கர்ப்ப காலத்தில் மிகவும் வசதியாக இருக்கும். முதுகிற்கு நல்லது தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் மற்றொரு நன்மை தான், அது முதுகிற்கு மிகவும் நல்லது. குறிப்பாக கீழ் முதுகிற்கு நல்லது. பக்கவாதத்தைத் தடுக்கும் வாரத்திற்கு இரண்டு முறைக்கு குறைவாக உறவு கொள்பவரை விட, அதிகமாக உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு, பக்கவாதம் வரும் வாய்ப்பானது குறைவாக உள்ளது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ்/எலும்புப்புரை தடுக்கப்படும் அதேப் போன்று பெண்கள் அன்றாடம் உடலுறவு கொள்ளும் போது, உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதால், எலும்பின் அடர்த்தியானது அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை வருவது தடுக்கப்படும். முதுமையைத் தடுக்கலாம் முக்கியமாக உடலுறவு கொள்ளும் போது நல்ல தூக்கம் கிடைப்பதால், முகமானது பொலிவோடு பிரகாசமாக இருப்பதுடன், முதுமை தோற்றமானது தடுக்கப்படும். பிட்டாக வைத்துக் கொள்ளும் அன்றாடம் 30 நிமிடம் உடலுறவு கொண்டால், 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ததற்கு சமம். இதனால் உடல் நன்கு ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும்.

புரோஸ்டேட் புற்றுநோய் வாய்ப்பு குறையும்
ஆண்கள் அன்றாடம் உடலுறவில் ஈடுபடும் போது, விந்தணுவானது சீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் புரோஸ்டேட் சுரப்பியில் விந்தணு தேங்குவது தடுக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால், விந்தணுவானது தங்கி, விரைவில் புரோஸ்டேட் புற்றுநோயை ஏற்படுத்திவிடும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உடற்பயிற்சி செய்தால், நோயெதிர்ப்பு மண்டலமானது ஊக்குவிக்கப்பட்டு, அதன் சக்தியானது அதிகரிக்கும். உடலுறவு கொள்வதும் ஒரு உடற்பயிற்சி போன்றதாகும். எனவே தினமும் உடலுறவு கொண்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள். சிறந்த வலி நிவாரணி உடலுறவின் போது ஆண் மற்றும் பெண்களின் உடலில் இயற்கை வலி நிவாரணியான எண்டோர்பின் என்னும் ஹார்மோனானது சுரக்கப்படும்.

மன அழுத்தத்தை போக்கும் உடலுறவு கொள்ளும் போது டோபமைன் என்னும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

விறைப்புத்தன்மை பிரச்சனை நீங்கும் அன்றாடம் உறவில் ஈடுபடும் போது, ஆண்குறியில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதால், அங்குள்ள திசுக்கள் ஆரோக்கியமாக இருந்து, விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

ஸ்டாமினாவை அதிகரிக்கும் உடலுறவானது ஸ்டாமினாவையும் அதிகரிக்க உதவும். அதற்கு தினமும் 15-30 நிமிடம் உறவில் ஈடுபட்டு, இரவில் நன்கு தூங்கினால், மறுநாள் காலையில் உடலில் ஸ்டாமினாவானது அதிகம் இருக்கும்.

தலைவலிக்கான உடனடி நிவாரணி அடிக்கடி தலைவலி வருகிறதா? அப்படியானல் உடலுறவு கொள்ளுங்கள். ஏனெனில் அப்போது உற்பத்தி செய்யப்படும் சேர்மங்களால், தலைவலியானது உடனே நீங்கிவிடும். காய்ச்சலைப் போக்கும் உடலுறவிற்கு மற்றொரு சக்தியும் உள்ளது. அது என்னவென்றால்,

உடலுறவு கொண்டால், எந்தவிதமான நோய்களும் உடலை தாக்காதவாறு பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக காய்ச்சலைப் போக்க மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக உடலுறவு கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும். மனதில் உள்ள காயங்களை சரிசெய்யும் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுறவு கொண்டால் உடனே குணமாகும். அதுமட்டுமின்றி, மனமும் ரிலாக்ஸ் ஆகி, புத்துணர்ச்சியுடன் மகிழ்ச்சியாக இருக்கும்.

Saturday, March 16, 2019

பல்லீறு நோய், பல்லீறு வீக்கம், பல் எயிறு நோய், பல்லெயிறு வீக்கம், முரசு வீக்கம், முரசு நோய், பல் ஈறுகளிலிருந்து குருதி கசிவு, பல்சுற்றி நோய்கள் எனப் பல்வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றது


சிரிக்கும் போது பளீச்சென்று அழகூட்டும் அழகுப் பொருளாக, பேசும் மொழியினை சிறப்புடன் உச்சரிக்க உதவும் சாதனமாக மற்றும் முக்கியமானதாக உண்ணும் உணவுப் பொருளினை நன்றாக அரைத்துப் பின்னர் அது சமிபாடு அடைவதற்கு உதவும் இன்றியமையாத உறுப்பாக பற்கள் உதவுகின்றன.

முரசு நோய்கள்பற்களிற்குப் பாதுகாப்புத் தரும் இழையங்கள் மற்றும் என்புகள் முதலியவற்றில் ஏற்படும் கிருமித்தாக்க மற்றும் அழற்சி நோயாகும். இது பல் ஈறுகளையும் அதனைச் சுற்றியுள்ள இழையங்களையும் பாதிக்கின்றது.நோயின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டு படிகளாக முரசு நோய்கள் காணப்படுகின்றது
1) பல்லெயிற்று அழற்சி அல்லது பல் ஈறழற்சி (Gingivitis)
2) பற்சுற்றி அழற்சி (Periodontitis)

பல் ஈறழற்சியானது குணப்படுத்தப் படாமல் மேலும் தீவிரம் அடைந்தால் பற்சுற்றி அழற்சி ஏற்படும். மேற்குறிப்பிடப் பட்டுள்ள படத்தில் பார்த்தீர்களானால் பல்லைச் சூழவுள்ளது ஈறு என்பதை அறிவீர்கள், அந்த ஈறைச் சூழவுள்ள என்புகள் இணைப்பிழைகள் ஆகியவற்றை பற்சுற்றி (periodontium) என்கின்றோம். சுருக்கமாக முரசு அல்லது ஈற்றில் ஏற்படுவது பல் ஈறழற்சி அதே நேரத்தில் அது கடுமையடைந்து அவற்றைச் சுற்றி ஏற்படுவது பற்சுற்றி அழற்சி.

பல் ஈறழற்சி (Gingivitis)

பல் ஈறுகளில் கிருமித்தாக்கத்தால் ஏற்படும் அழற்சி. முரசானது செந்நிறமாக, வீங்கிக் காணப்படும். பற்களைத் தீட்டும் போது இரத்தம் கசியும். பெரும்பாலும் இத்தகைய நோயுடையோரிற்கு வலி எடுப்பதில்லை, எனவே அதனைப் பற்றி அக்கறை கொள்ளாது உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்வதில்லை.

இது உருவாகுவதற்குரிய முன்னணிக் காரணியாக பாக்டீரியாக்கள் திகழ்கிறது. பொதுவாகவே பற்களில் முரசுகளில் ஒரு நிறமற்ற படலமாக பாக்டீரியாக்கள் படிகின்றன. பற்சூத்தை (dental caries) மற்றும் பற்சுற்றி (periodontal) நோய்களின் ஆரம்ப நிலையில் ஏற்படும் இத்தகைய படலம் பிளாக் (Dental plaque) என்று அழைக்கப்படுகிறது.

இந்தப்படலமானது ஆரம்பத்தில் இலகுவாக விரல் நகம் கொண்டு அகற்றப்படக்கூடியளவு இளகலாகக் காணப்படும். இது அகற்றப்படவில்லை என்றால் 48 மணி நேரங்களுக்குள் கடினமடைந்துவிடும். மேலும் பத்து நாட்கள் செல்கின்றது என்று வைத்துக்கொள்வோம், அதன் பின்னர் அவ்வளவுதான் பாறைக் கற்கள் போல வலிமையுடன் அகற்றவே முடியாத பற்கற்கள் (Dental Calculus or Tartar) அல்லது தாத்தார் எனப்படும் மஞ்சள் நிறமுடைய நிலையை அடைந்துவிடும். எனவே தான் நாளாந்த வாய்ச் சுகாதாரம் அவசியம். ஒழுங்காக பல் துளக்காதவிடத்து இத்தகைய சிக்கல்கள் பற்சிதைவு, பற்சூத்தை மற்றும் பற்சுற்றி நோய்களைத் தோற்றுவிக்கும்.

இத்தகைய பல் ஈறழற்சி பிளாக்கினால் ஏற்படும் ஈறழற்சி (plaque-induced gingivitis) எனக் கூறப்படுகிறது. சிகிச்சை பெறப்படாதவிடத்து இது பற்சுற்றி அழற்சியாக உருவெடுக்கும்.
பல்லின் அமைப்பைப் பற்றி மீண்டும் பார்த்தோமானால், பற்சுற்றி (periodontium) நான்கு வகை இழையங்களால் ஆனது:
1. பற்காரை : பல் வேரின் வெளிப்பகுதியைச் சூழ உள்ளது.
2. காற்றிடை என்பு : தாடையில் பற்களுக்கு ஆதாரமாக விளங்குவது.
3. ஈறு : தொடுப்பிழைய அமைப்பு
4. பல் சுற்றி இணைப்பிழை : பற்காரைக்கும் காற்றிடை என்புக்கும் இடையிலே தொடுப்பாகத் திகழ்வது.
மேற்கூறியவற்றுடன் இன்னும் சில நார்கள், இழையங்கள் சேர்ந்து ஆரோக்கியமான பற்களை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. இந்த அமைப்பினை முரசு தொடுப்புச் சாதனம் (gingival attachment apparatus) என்று அழைப்பர்.

முரசு அழற்சியின் போது பற்களுக்கும் இந்த அமைப்புகளுக்கும் இடையிலான தொடுகையானது இழக்கப்படுகிறது, ஆனால் இது தற்காலிக மாற்றமே, சிகிச்சை பெறப்பட்டால் மீண்டும் பழைய ஆரோக்கிய நிலைக்கு திரும்பி விடும். இங்கு என்புகளோ மற்றைய இழையங்களோ பாதிப்படைவது இல்லை.

காரணிகள்

பக்டீரியாக்களினால் ஏற்படும் படலம்தான் முக்கிய காரணியாகும், அதைத்தவிர வேறு காரணிகளும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமாகலாம்.
1. ஹோர்மொன்களின் மாற்றங்கள் : கர்ப்பமுற்று உள்ளபோது, பருவமடைதலின் போது, மாதவிடாய்க் காலங்களின் போது முரசானது முகவும் மெதுமையானதாகக் காணப்படுவதால் முரசழற்சி ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் பிரெட்னிசொன் (prednisone) போன்ற ஸ்டீரோய்ட் (steroid) ஹோர்மோன் மருந்து வகைகளின் நீண்ட காலப் பாவனையும் காரணிகளுள் ஒன்றாகும்.

2. ஏனைய சில நோய்கள்: நோயெதிர்ப்புச் சக்தி குறைதல் (மனித நோயெதிர்ப்புக்குறைப்பான் வைரசு – HIV) , லியுகேமியா (leukemia) எனப்படும் வெண்குருதிப் புற்றுநோய் (இது முரசின் குருதிக் குழாய்களில் மாற்றம் ஏற்படுத்துகிறது), அடுத்ததாக நீரிழிவு நோய் மிக மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.

இங்கு புற்றுநோய் உள்ளவர்களுக்கு முரசு அழற்சி வருமா என்ற கேள்வி கேட்கப்பட்டால், குருதி சம்பந்தமான வெண்குருதிப் புற்று நோய் மட்டுமே காரணியாக உள்ளதுதான் இற்றைவரை அறியப்பட்டுள்ளது. வெண்குருதிப் புற்றுநோய்க் கலங்கள் முரசில் ஊடுருவல் செய்வதால் ஏற்படும் முரசழற்சியானது முரசில் இருந்து இலகுவாக இரத்தம் கசிவதை ஏற்படுத்துகிறது. இதன் போது பக்டீரியாத் தாக்கமும் ஏற்பட்டால் அதனை எதிர்த்துப் போரிடும் தன்மை இழந்த நிலையில் முரசழற்சி தீவிரமடைகிறது. இத்தகையோரில் தூரிகை கொண்டு பல் துலக்கும் போது எப்பொழுதும் இரத்தம் கசியும், இத்தகைய இரத்தக்கசிவு நிற்பதற்கு மிக கூடுதலான கால அவகாசம் தேவைப்படும் (வெண்குருதிப் புற்றுநோய் உள்ளோரிற்கு குருதி உறைய நீண்ட நேரம் எடுக்கும்) இதனைத் தவிர்க்க தூரிகையால் பல் துலக்காது பற்களை மெல்லிய துணி கொண்ட அல்லது பஞ்சு கொண்டோ துடைத்துக்கொண்டு வாயினை பல் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப குளோர்கெக்சிடின் (chlorhexidine) போன்ற கலைவைகளின் உதவியுடன் வாய் கொப்பளித்தல் நன்று. வெண்குருதிப் புற்றுநோய் தீவிரம் மறையும் தருணத்தில் முறையான வாய்ச் சுகாதாரம் முரசுக்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவரும்.

3. மருந்து வகைகள்: ஏற்கனவே நோயெதிர்ப்புச் சக்தி குறைதல் ஒரு காரணியாகின்றது எனப் பார்த்தோம், சில மருந்துகளால் ஏற்படும் நோயெதிர்ப்புச் சக்திக் குறைபாடும் ஒரு காரணி என்பதை மறக்கக்கூடாது.
• வலிப்பு நோய்களுக்குப் பயன்படுத்தும் மருந்துகள் டிலண்டின் (Dilantin), பெனிடோய்ன் (Phenytoin)
• இதய நோய்களிற்குப் பாவிக்கும் மருந்து Procardia (Nifedipine)
• உறுப்பு மாற்ற சிகிச்சையின்போது பாவிக்கும் சைகிளோஸ்போரின்(Cyclosporine)
• கருத்தடை மாத்திரைகள்
போன்றவை முரசு இழையங்கள் அபரிதமாக வளரக் காரணமாகிறது, இதனால் பிளாக்கை (கிருமி வன்படலத்தை) அகற்றல் கடினமாகிறது எனவே ஈறு அழற்சி உருவாகிறது.

4. உயிர்ச்சத்துக்கள் குறைபாடு: உயர்ச்சத்து சி அல்லது அஸ்கொர்பிக் அமிலம் ( Vitamin C or Ascorbic acid) குறைபாடு ஸ்கேர்வி (Scurvy) எனப்படும் முரசு கரைதல் நோயைத் தோற்றுவிக்கிறது. இதனைத் தவிர நியாசின் உயிர்ச்சத்தும் முரசு அழற்சி ஏற்பட ஒரு காரணியாகிறது, எனினும் இன்றைய சமூகத்தில் இத்தகைய குறைபாடுகளால் ஏற்படும் ஈறு அழற்சி மிகக் குறைவானதே.

5. பழக்க வழக்கங்கள்: ஒவ்வாத பழக்கங்களான புகைப்பிடித்தல் முரசு அழற்சியை உருவாக்குவதுடன் அது குணமாவதையும் தடுக்கிறது. நாளாந்த ஒழுங்கான பற்சுகாதாரம் இவற்றைத் தடுக்கும்.

6. பரம்பரை பல் வியாதிகள்.

7. பூஞ்சான் (பங்கசு – Fungus) வகைகளின் தாக்கம்: பொதுவாக வாய்க்குழியில் பூஞ்சான்கள் மிகக்குறைவானதாகவே காணப்படும். நீண்ட நாட்களாக நுண்ணுயிர் எதிர்ப்பான் (antibiotics) மருந்துகளை உபயோகிப்பதால் கண்டிடாத் தாக்கம் (candidiasis) எனப்படும் பங்கசு நோய் நாக்கில் மற்றும் முரசுக்களில் படலமாகப் பரவ வாய்ப்புள்ளது.

8. மேலும் முற்றிலும் வெளிக்கொணரப்படாத பற்களால் பல்சுற்றி முடியழற்சி (pericoronitis) ஏற்படுகின்றது. இது பெரும்பாலும் கீழ் ஞானப்பற்கள் உருவாகும்போது, முரசானது பல்முடியினை மூடுவதால் வீக்கம் ஏற்பட்டு உருவாகும். சிறிதளவே வெளியே நீட்டப்பட்ட பற்களின் இடைவெளியில் உணவுக்கூறுகளும், பக்டீரியாக்களும் சேருவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.

நோய் அறிகுறிகள்:
• முரசு வீக்கம்
• சிவந்த அல்லது ஊதா நிற ஈறுகள்
• தொடும் போது வலி
• பற்தூரிகை கொண்டு பல் துலக்கும் போது இரத்தக்கசிவு ஏற்படல்.
• கடினமான உணவுப்பொருள்களை உண்ணும் போது ( உதாரணமாக ஒரு ஆப்பிளைக் கடிக்கும் போது) இரத்தக் கசிவு ஏற்படல்
• தொடர்ச்சியான வாய் துர்நாற்றம், வாயில் ஒருவித சுவைத்தன்மை ஏற்படல்.
• பற்களுக்கும் முரசுக்கும் இடையில் இடைவெளி ஏற்படல் , பற்களில் ஆட்டம் காணப்படல்இந்தப் படத்தில் புள்ளித்தன்மையும் (வெள்ளை அம்புக்குறி) புள்ளித்தன்மை அற்றுப்போய் காணப்படலும்(நீல அம்புக்குறி) காணலாம்.



இவற்றைத்தவிர சாதாரண முரசில் காணப்படும் புள்ளித்தன்மை (stippling) (படத்தில் காண்க) அற்றுப்போகலாம் இதனால் முரசானது பளபளப்பான தன்மையைப் பெறும். எனினும் புள்ளித்தன்மை அற்றுப் போதல் நோய்க்கான காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது, ஏனெனில் ஆரோக்கியமான பற்களுடைய சிலருக்கு புள்ளித்தன்மை இல்லாமல் இருக்கலாம். ஏற்கனவே புள்ளித்தன்மை இருந்து பின்னர் அது மறைந்தால் அது நோயால் ஏற்பட்டது எனக் கருதலாம்.

சிகிச்சை
சிகிச்சையின் முக்கிய நோக்கம் இடைவெளி உருவாக்கி பிரிந்த முரசையும் பற்களையும் சேர்ப்பதுடன் முரசுகளில் ஏற்பட்ட வீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், நுண்ணங்கிகளுக்கு எதிரான சிகிச்சையுடன் மேலும் நோயானது தீவிரமடைதலைத் தடை செய்தல். எவ்வளவு விரைவில் ஆரம்பநிலையில் சிகிச்சை பெறப்படுகிறது அவ்வளவுக்கு பற்களின் ஆரோக்கியநிலை மீளப்பெறப்படும்.
• பற்களை சுத்தமாக வைத்திருப்பதுடன் பற்றீரியாக் கிருமிகள் உண்டாதற்கான மூல காரணத்தை கண்டு பிடித்து அகற்றுதல்
இதனை பல் மருத்துவரிடம் ஒழுங்காக அணுகுவதால் நிறைவேற்றலாம்.
• விற்றமின் குறைவால் உண்டாகியிருந்தால் அதற்கான விற்றமின் மாத்திரைகளை எடுத்தல்.
• சிற்றிரஸ் பானங்கள், வலிமையான உணவுகள், கார உணவுகள், மதுபானங்கள், சிகரெட்டு போன்றவை இயன்றவரை தவிர்த்தல்.
• செயற்கையான பற்கள், குருதி வடிதலை மிகைப்படுத்தும். ஆகவே இவற்றை உணவை உட்கொள்ளும் போது மட்டும் போட்டுக் கொள்ளுங்கள்.
• நீரில் தோய்ந்த பஞ்சையோ, அல்லது மெல்லிய துணியையோ குருதி வடியும் ஈறில் சிறிது நேரத்திற்கு வைப்பதன் மூலம் குருதி கசிவதை நிற்பாட்டலாம்.
• மென்மையான பற் தூரிகை கொண்டு பற்களை துலக்கலாம். உப்புத் தண்ணீர், அல்லது அல்ககோல் அல்லது குளோர்கெக்சிடின் சேர்ந்த வாய் கொப்புளிக்கும் திரவம் கொண்டு வாயை சுத்தப்படுத்தல். காலையும், மாலையும், உப்புக் கலந்த இளஞ் சுட்டு நீர் கொண்டு, வாயை கொப்பளிப்பதன் மூலம் சவ்விலுள்ள வீக்கத்தை குறைத்து சுற்றோட்டத்தை ஒழுங்காக்கலாம்.

மருத்துவ சிகிச்சை முறைகள் அறுவைச்சிகிச்சை அற்றதாகவும், அறுவைச்சிகிச்சை உடையதாகவும் காணப்படுகிறது.

அறுவைசிகிச்சை அற்ற முறை
• திறமை மிக்க பல் மருத்துவரின் உதவியுடன் பற்களைச் சுத்தம் செய்தல்: தாத்தார் நிலைக்கு அடைந்த வன்மையான பிளாக்கானது தொழில் நெறிஞரின் உதவி கொண்டே அகற்றப்பட முடியும்.
• படலம் நீக்கலும் (Scaling) பல்வேர் மட்டப்படுத்தலும் (root planing) : இவை பல்மருத்துவரால் விசேட உபகரணம் கொண்டு செய்யப்படும் ஆழ்ந்த சுத்தப்படுத்தும் முறையாகும். படலம் நீக்கலில் பிளாக்கும் தாத்தரும் அகற்றப்படும் அதே நேரம் பல்வேர் மட்டப்படுத்தலில் பல்வேரின் மேற்பகுதியின் கரடுமுரடான பகுதிகள் சீரானதாக்கப்படுகிறது, இதன்மூலம் பல்வேரும் முரசும் மீண்டும் சேர்வது இலகுவாவதுடன் பாக்டீரியாக்கள் படிவது தடுக்கப்படுகிறது.


படலம் நீக்கல் நவீன மருத்துவத்தில் மீயொலிப் படலம் நீக்கல் கருவி மூலம் செயற்படுத்தப்படுகிறது. (Ultra Sonic scaling)
இந்தச் செயன்முறைகளுடன் பாக்டீரியாக்களை அழிக்கும் முறையாக நுண்ணுயிர் எதிர் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. உ-ம்: க்ளோர்கெக்சிடின் ஐதரசன் பெரோக்சைட்டு போன்ற வாய் கொப்பளிக்கும் திரவங்கள், மெட்ரானிடசோல், டொக்சிசைக்கிளின் குளிசை மருந்துகள். மேலும் புளோரைட் கொண்ட பற்பசையும் பக்டீரியாவுடன் போராட உதவுகிறது.
கவனிக்கப்படாத பல் ஈறழற்சி ஆபத்தில் முடியும் என்பதை மறக்கக்கூடாது.
தடுக்கும் முறைகள்
• ஏற்கனவே கூறியது போல நாளாந்த பற் சுகாதாரம்.
• கல்சியம், புளோரைட் கொண்ட பற்பசை
• கல்சியம் நாளாந்தப் பாவனை பேணுதல்
• உயிர்ச்சத்துக்கள் சி போன்றவை குறையாமல் பேணுதல்
• பல் மருத்துவரிடம் குறைந்த பட்சம் வருடத்திற்கு இரு தடவை செல்லுதல்
உசாத்துணைகள்
1. Merck. Gingivitis. Merck manual. [இணையம்] http://www.merck.com/mmhe/sec08/ch115/ch115b.html.
2. Wikipedia. Gingivitis. Wikipedia. [இணையம்] 2010. http://en.wikipedia.org/wiki/Gingivitis.
3. WebMD. Oral Health Guide. WebMD. [இணையம்] http://www.webmd.com/oral-health/guide/ … toms-types.
4. eMedicineHealth. gingivitis article . eMedicineHealth. [இணையம்] http://www.emedicinehealth.com/script/m … 936&page=1.
5. http://www.procini.com/images/diseases.jpg. http://www.procini.com. [இணையம்] http://www.procini.com/images/diseases.jpg.
6. Ann, Dr.Lee. Procedures. drleeannhovious. [இணையம்] http://www.drleeannhovious.com/index.html

பிரகாசமான வாழ்க்கைக்கு தினமும் தீபம் ஏற்றுங்கள்


தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், அவர் மெய் உணர்வைப் பெற முடியும் என்று அப்பர் கூறியுள்ளார். காலை, மாலை இரு நேரமும் விளக்கு ஏற்றப்படும். வீடுகளில் பிரச்சினைகள் வராது. புண்ணியமும், ஞானமும் அதிகரிக்கும். எனவே தினமும் தீபம் ஏற்றுங்கள். அந்த தீப வழிபாடு எப்படி இருந்தால் நாம் மேலும் சிறக்க முடியும் என்பதை நமது மாலை மலர் மருத்துவர் டாக்டர் கமலிஸ்ரீபால் தனக்கே உரிய பாணியில் இங்கு தொகுத்து அளித்துள்ளார்.

தீப ஜோதி நமோஸ்துதே
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
ஆன்ம ஜோதி ரூப

- என இறைவனையும், ஆன்மாவையும் ஜோதி ரூபமாக ஒளி பிரகாசமாக வழிபட்டு வரும் முறையை நம் முன்னோர் பண்டைய காலத்திலிருந்தே வழிமுறை படுத்தி உள்ளனர். எந்த மதத்திலும் ‘தீப ஒளி’ ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்த ஒரு நல்ல நிகழ்வும் விளக்கு ஏற்றியே தொடங்கப்படுகின்றது. வீட்டிலும் சரி, கோவில்களிலும் சரி காலையும், மாலையும் தீபங்கள் ஏற்றுவது நமது கலாசாரம்.

திருவண்ணாமலை தீப தரிசனத்தினை வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிக்காத இந்து இருப்பது அரிது.
தீபம் புற ஒளியினை மட்டும் தருவதில்லை. தீபத்தினை வழிபடும் பொழுது வழிபடுபவரின் ஆன்ம ஒளியும், ஞான ஒளியும் கூடுகின்றது. ஏனெனில் தீபம் அதாவது அக்னி இருள், அழுக்கு இரண்டினையும் நீக்கி பரவி அனைத்தையும் தன் மயமாகவும், ஒளி மயமாகவும் ஆக்கி விடும். ஆகவேத்தான் நம் முன்னோர்கள் சூரியன், சந்திரன், அக்னியை வழிபட்டு வந்துள்ளனர்.
கோவில்களில் அணையா விளக்குகள் ஏற்றி வைப்பர். சுற்று விளக்கு, லட்ச தீபவிளக்கு என்று தீபத்தினை ஏற்றி போற்றி வழிபடுவர். வீடுகளில் அன்றாடம் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவர். வீட்டுக்கு வரும் மருமகளை ‘விளக்கேற்ற வந்தவள்’ எனப் போற்றுவர்.

விளக்குகள் பல வகைப்படுகின்றன.

அகல் விளக்கு - சர்வ மங்கலங்களையும் அளிக்கும்
வெண்கல விளக்கு - தோஷங்களை நீக்கும்
செம்பு விளக்கு - மனதில் அமைதி தரும்
பித்தளை விளக்கு- குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும்
வெள்ளி விளக்கு - அமைதி நிலவும்
தங்க விளக்கு - ஆயுள் நீட்டிக்கும்
எவர்சில்வரில் விளக்கு ஏற்றுவதில்லை.

அதே போன்று விளக்குகள் குத்து விளக்கு, தூண்டா மணி விளக்கு, காமாட்சி விளக்கு, பாவை விளக்கு என பிரிவுபடும். இதில் குத்து விளக்கினை பிரம்மா, விஷ்ணு, சிவன் சேர்ந்த ரூபமாகக் கூறுவர்.

விளக்கேற்ற எண்ணெய் வகைகள் :

நெய் பயன்படுத்தினால் - சுகமும், ஞானமும் அதிகரிக்கும்
நல்லெண்ணை - பீடா பரிகாரம்
இலுப்ப எண்ணெய் - கடன் தொல்லை நீங்கும்
ஆமணக்கு எண்ணெய் - சகல சம்பத்தும் கிடைக்கும்
தேங்காய் எண்ணெய் - கணபதி, குல தெய்வ ஆசீர்வாதம் கிடைக்கும்
ஐந்து எண்ணெய் கலந்தும் ஏற்றலாம்.

திரி வகைகள் :

பருத்தி பஞ்சு திரி - வீட்டில் மங்களம் நிலைக்கும்
தாமரைத்தண்டு - செல்வம் சேரும்,முன் வினை பாவம் நீங்கும்
வாழைத்தண்டு - தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும்
புதுமஞ்சள் வண்ண துணியில் திரி - திருமண தடை நீங்கம் புது வெண்மை
துணி திரி - சுகவாழ்வு, குடும்ப நலம்
வெள்ளெருக்குத் திரி - தன லாபம் அளிக்க வல்லது.

தீபம் ஏற்றும் முறை :

ஒருமுகமாக ஏற்றினால் - மத்திமம்
இரு முகம் - குடும்ப ஒற்றுமை ஏற்படும்
மூன்று முகம் - பிள்ளைகள் மேன்மை
நான்கு முகம் - சொத்து சேரும்
ஐந்து முகம் - செல்வ நிலை உயரும்

விளக்கு ஏற்றும் திசைகள் :

கிழக்கு - லட்சுமி கடாட்சம் ஏற்படும், துன்பம் விலகும்
வடகிழக்கு - தான தர்மங்கள் செய்வர்
மேற்கு - பகை தீரும், கடன் நீங்கும்
தென் கிழக்கு - அறிவு பெருகும்
வடக்கு - காரிய சித்தி ஏற்படும்
வடமேற்கு - ஒற்றுமை நிலவும்.

தெற்கு புறமாக விளக்கு ஏற்றக்கூடாது.

மகா கணபதிக்கு தேங்காய் எண்ணெயும், பெருமாளுக்கு நல்லெண்ணையும், சிவபிரானுக்கு இலுப்ப எண்ணெயும், நெய்யும், முருகனுக்கு நெய்யும், சந்தன எண்ணெய்யும் உகந்தது.

இறைவனோடு நம்மை நேரடியாக சம்பந்தப்படுத்துவது தீப வழிபாடுதான்.

குளித்து சுகாதாரமான ஆடை அணிந்து தலையினை பிரித்து விடாமல் பின்னியோ, முடிந்தோ வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
காலையில் 4.30-6 மணிக்கும் மாலையில் 5.30 - 6 மணிக்கும் பொதுவில் விளக்கேற்ற உகந்த நேரங்கள்.

அன்றாடம் பூஜை அறையில் தரையை சுத்தம் செய்து அரிசி மாவில் கோலம் இட்டு செம்பு தட்டுகளின் மேல் விளக்கினை வைத்து குங்குமம் இட்டு விளக்கேற்றி பூ வைத்து வழிபட வேண்டும்.

விளக்கினை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி அன்று சுத்தம் செய்யலாம். செவ்வாய், புதன், வெள்ளி அன்று சுத்தம் செய்யக்கூடாது.
சீயக்காய், வெந்தயம், பயத்தம்பருப்பு, பச்சரிசி, எலுமிச்சை தோல், அரைத்த மாவு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். எலுமிச்சை சாறு பூசலாம். தேங்காய் நார் கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான ப்ரத்யேக துணி கொண்டு நன்கு துடைக்க வேண்டும்.

டி.வி. பார்த்துக் கொண்டோ, பிறரிடம் பேசிக் கொண்டோ, ரேடியோ கேட்டுக் கொண்டோ விளக்கு ஏற்றாதீர்கள். விளக்கு ஏற்றுவது என்பது அங்கு இறை சக்தியினை கொண்டு வருவது. இது விளையாட்டு சமாச்சாரமல்ல. முழு கவனத்தோடு செய்யுங்கள். அக்னிக்கு என்று ஒரு மாபெரும் சக்தி உண்டு. ஒவ்வொரு மனிதனுள்ளும் அக்னி இருக்கின்றது. அந்த உள் ஒளியும், தீப ஒளியும் உங்கள் கவனத்தால் ஒன்று பட வேண்டும்.

ஊதுவத்தி, சாம்பிராணி காண்பியுங்கள். பொதுவில் கற்பூரம், ஊதுவத்தி இவற்றினை விளக்கின் தீபத்திலிருந்தே ஏற்றுகின்றனர். இது மிகவும் தவறானது. விளக்கினை ஏற்றவும், கற்பூரம், ஊதுவத்தி இவற்றினை ஏற்றவும் தீபக்கால் என்ற தனி விளக்கினை பயன்படுத்துங்கள். நெருப்பு குச்சி, ஊதுவத்தி என எந்த அக்னியையும் வாயால் ஊதி அணைக்காதீர்கள். அது மிகத் தவறானது. விளக்கேற்றி, பூ சாற்றி, ஊது வத்தி காண்பித்து உங்களால் முடிந்த நைவேத்தி யங்களை வையுங்கள்.

நைவேத்தியம் செய்யும் பொழுது மணி அடிக்க வேண்டும். சுத்தமாக கழுவிய கிழியாத வெற்றிலை, கொட்டை பாக்கு நன்கு கனிந்த கழுவிய பழங்கள் போன்றவை வழக்கத்தில் இருப்பவை. கோவிலிலும் சரி வீட்டிலும் சரி பூஜைக்கு தேங்காய் உடைப்பது ஐதீகம். தேங்காய் இறைவனுக்குத் தன்னையே சமர்ப்பிப்பதற்குச் சமம். மன அகங்காரத்தினை உடைப்பதற்குச் சமம். தேங்காயில் அனைத்தும் சுத்தமானது உபயோகப்படுவது சிறிதளவு தேங்காயே அதிக ஊட்டச்சத்தினைத் தருவது.

இதன் காரணமே விசேஷ நாட்களில் தேங்காய் வைத்துக் கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அத்தகைய தேங்காய் கண்ணுக்கு மேல் உச்சி தவிர நன்கு நாசினை உரித்து எடுத்து விடுங்கள். தேங்காயை நன்கு கழுவி தேங்காய் வெட்டு கல்லில் முறையாய் உடையுங்கள். இளநீரை நைவேத்தியத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். சிறிதும் நார் இல்லாமல் எடுக்க வேண்டும். ஏனோ தானோ என்று பிய்ந்த நாருடன் தேங்காயினை நைவேத்தியம் செய்யாதீர்கள்.

பாயாசம், வடை போன்ற நைவேத்தியங்களை சுட சுட சுகாதார முறையில் கொடுங்கள். அதே போன்று பூக்களை நீண்ட காம்புகளுடன் வைக்காதீர்கள். மாலை போல் அணிவித்தால் சாமி படங்களின் கண்களை மறைக்காது இருக்க வேண்டும். விளக்கிற்கு சுற்றி விடலாம். விளக்கை சுற்றி அலங்கரிக்கலாம்.

உதிரிப் பூக்களை பக்கெட் நீரில் நன்கு கழுவி எடுத்து சுத்தமான துணியில் ஒற்றி எடுப்பது நல்லது.
அது போன்று தீபம் சுடராய் இருக்க வேண்டும். திகு திகுவென்று கட்டுங்கடங்காமல் தீபம் எரியக்கூடாது. பொதுவில் ஸ்லோகங்கள் சொல்லும் பொழுது ஓரிரு கிராம்பு அல்லது ஏலக்காய் மென்று விழுங்கிதான் இறைவனின் நாமங்களைச் சொல்லுவர். ஏனெனில் சொல்லும் வாய் கூட நல்ல மணத்தோடு இருக்க வேண்டும் என்பதே இதன் கருத்து.

தீபத்தினை தூண்டி விட சிறிய வெள்ளிக் குச்சியினையோ அல்லது சுத்தமான சிறிய இலையின் காம்போ உபயோகிக்க வேண்டும்.
தீபம் ஏற்றும் பொழுது பின் வாசல் கதவை மூடி வைக்க வேண்டும். முன் வாசல் கதவை திறந்து வைக்க வேண்டும்.
வேண்டுதல் முடிந்த பிறகு கற்பூர ஆரத்தியோ, நெய் தீப ஆரத்தியோ காண்பிக்க வேண்டும்.

தீபத்தினை சாந்தி செய்ய பூ, பால் ஒரு துளி பயன்படுத்தலாம். இவ்வளவு செய்திகளும் தீபத்தின் முக்கியத்துவத் தினை மேலும் நன்கு அறிந்து கொள்வதற்காகவே சொல்லப்பட்டது. தீபாவளி என்பதன் பொருளே தீபங்களின் ஒளி கொண்டு கொண்டாடப்படும் பண்டிகை என்பதுதான். முதல் நாள் இரவு பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது.

அன்று தீபங்கள் ஏற்றுவதும் வீட்டில் பண்டிகை சாப்பாடு என வீடு களை கட்டும். மறுநாள் விடியற்காலை சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் குளியல் செய்து சாமி அறையில் வைத்துள்ள புது துணியில் மஞ்சள் தடவி உடுத்தி விளக்கேற்றி பூஜை செய்வர். தீபாவளி லேகியம், பட்சணம் என தீபாவளி பண்டிகையின் மகிழ்ச்சியே தனிதான்.

பலர் ‘கேதார கவுரி விரத’ பூஜையினை மாலையில் செய்வர்.

அமாவாசையும் சேருவதால் அதற்கான பூஜையும் சேரும். அநேகர் தீபாவளி மாலை அன்று குபேர லட்சுமி பூஜை செய்வர். வீடுகள் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். பெரியோர்களின் ஆசிகளை குடும்பத்தினர் பெறுவர். இரு நாட்களிலும் சைவ உணவினையே சாப்பிடுங்கள். இத்தகு தீபாவளி நன்னாளில் தீபம் ஏற்றுவதின் அரிய பலன்களை அறிந்து தீபங்கள் ஏற்றுங்கள்.

இல்லத்தில் திருமகள் குடியேற





ஆன்மீகத்தில் சில நம்பிக்கைகள் பின்பற்றபடுவதால் இனிய வாழ்க்கை அமையும் என கூறப்படுகிறது.


1. நாள்தோறும் வீட்டின் முன் கோலம் போட வேண்டும்.

2. அதிகாலையில் நீராடி இறைவனை வழிபடுதல்.


3. சூரிய உதயத்தின் போது, சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுதல்.

4. தேவாரம், திருவாசகம் அல்லது தித்திக்கும் தெய்வீகப் பாடல்களில் ஏதேனும் ஒரு பாடலை தினமும் படித்தல்.


5. தங்களது வருமானத்தில் ஒரு சதவீதமாவது சமூகப் பணிகளுக்கு செலவிடுதல்.

6. அன்னதானம், வஸ்திர தானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுதல்.

7. வாரத்திற்கு ஒருமுறை வீட்டை கழுவியோ, மொழுகியோ சுத்தம் செய்தல் வேண்டும்.

8. வருடத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வெள்ளையடிக்க வேண்டும்.

9. வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

10. ஆலய வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுதல்.

இவற்றை பின்பற்றி வந்தால் மனம் மகிழும் இனிய வாழ்க்கை அமையும்.

இவைகளை கடைபிடித்தால், அஷ்ட லஷ்மிகளும் உங்கள் இல்லத்தில் குடியேறி ஐஷ்வர்யங்களை வழங்குவார்கள்

பாழடைந்த வீடுகளை பராமரிக்காமல் விட்டால்?





போதுமான பணம் இல்லாத காரணத்தினால் நீண்ட காலமாக கட்டப்படாமல் பாழடைந்த நிலையில் விடப்பட்ட கட்டடங்களெல்லாம் அப்படியே இருந்ததென்றால் அதில் எதிர் சக்திகளெல்லாம் குடிகொண்டுவிடும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?






பொதுவாக, "சிறுகக் கட்டிப் பெருக வாழ்" என்று ஒரு பழமொழி உண்டு. கட்டுவதிலேயே பரந்துபட்டு கட்டாமல் இருந்தால் நல்லது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். பரந்து (பெரிதாக) கட்டினால் அதில் இரண்டு அறைகள் பூட்டி வைத்திருக்கும். அப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். கட்டியதனைத்தும் பயன்பாட்டிற்கு வரவேண்டும்.



ஒரு வீடு என்று கட்டுகிறோம், அது அரை செண்ட்டாக இருந்தாலும் சரி, ஐந்து செண்ட்டாக இருந்தாலும் சரி அத்தனையையும் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தாம இருக்கக் கூடாது. பயன்படுத்தாமல் இருக்கும் போது அதில் எதிர்மறை சக்திகள் குடிகொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சாதாரணமாகவே விட்டுவிட்டாலே புழு, பூச்சியெல்லாம் வருகிறது அல்லவா, அது நமது கண்ணுக்குத் தெரிந்திருக்கிற மாசு. கண்ணுக்குத் தெரியாத மாசு காஸ்மிக் கதிர்கள் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, நாம் பயன்படுத்தாம இருக்கிற இடத்தில் ஒரு நெகட்டிவ் ஃபார்மாகும். அதிலும் பாழடைந்த வீடுகள், இடங்களெல்லாம் வைத்துக் கொள்ளக்கூடாது. அது நமது சந்ததிகளை மிகவும் பாதிக்கும்.

இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு தம்பதி வந்திருந்தார்கள். ஈரோட்டுக்காரர்கள். பாரம்பரியமாகவே பணக்காரர்கள். நான்கு தலைமுறையாகவே நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்து 9 வருடங்கள் ஆகிறது. குழந்தை பாக்கியமே கிடையாது. மருத்துவர்களிடம் எல்லாம் இருவருமே பரிசோதித்துக் கொண்டார்கள். இருவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.


பிறகு பிரஸ்னம் பார்க்கும் போது, பூர்வீக சொத்து ஒன்று முடங்கிக் கிடக்கிறது. அதை வந்து நீங்கள் சரியாக பராமரிக்காம விட்டிருக்கிறீர்கள் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ஆமாம், யாருமே இல்லை, பூட்டிக் கிடக்கிறது. அங்கு போய் தங்கிவிட்டு வந்தாலும் உடம்பு முடியாமல் போய்விடுகிறது என்று சொன்னார்கள்.

சரி, அதை எதற்கு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை இடித்துவிட்டு புதிதாக கட்ட ஆரம்பியுங்கள் என்று சொன்னேன். அதற்கு அவர்கள், அதை இடிக்கக் கூட முடியாமல் போய்விட்டது என்றார்கள். பிறகு அவர்களுடைய நட்சத்திரம் வைத்து ஜாதகம் கணித்து தேதி குறித்துத்துக் கொடுத்து அந்த நாளில் வேலையைத் தொடங்கினால் சரியாகிவிடும் என்று சொன்னேன்.

இந்த மாதிரியான இடங்களை இடித்துவிட்டு ஒரு ஆறு மாதம் சூரியக் கதிர்கள், மழை எல்லாம் படும்படி விட்டுவிட வேண்டும். இப்படி விட்டுவிட்டால் அங்கிருக்கும் நெகட்டிவ் ஃபோர்ஸ் எல்லாம் விலகும். அந்த மண்ணுக்கும் பாஸிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும். அதன்பிறகு அவர்கள் கட்ட ஆரம்பிப்பது நல்லது.


ஆக மொத்தம் பராமரிக்கப்படாத வீடுகள், பாழடைந்த பங்களாக்கள் இவைகளெல்லாம் இருக்கக்கூடாது. அது இருந்தால் பாதிப்பு இருக்கும். குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் இருந்தால், யாராவது ஒரு பிள்ளையை அந்த நெகட்டிவ் பாதிக்கும். அதனால் அதைச் செய்துவிடுவது நல்லது.

ஆனால் பண வசதியே இல்லாதவர்கள் என்ன செய்வது? அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா?

இல்லாதவர்கள், அந்த இடத்தை சுத்தப்படுத்தி, விளக்கேற்றி வைக்கலாம். அவர்களுக்குத் தெரிந்த ஸ்லோகங்கள், எந்த மதத்தவர்களானாலும் அவர்களுக்குள்ள வழிபாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது. பூட்டியே வைக்காமல் இருந்தாலும் நன்றாக இருக்கும்

வாஸ்து படி குழந்தைகள் படிக்கச் சிறந்த இடம் எது?





இன்றைய நவீன காலகட்டத்தில் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியமான ஒன்றாகும். ஒரு வீட்டில் குழந்தைகளுக்கென படிக்க ஒரு தனி அறை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமாகும்.




எனவே, இந்த அறையை அமைக்கும் முன் கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.

ஒரு வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறையை வடகிழக்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும் .


இந்த அறையில் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும்.


குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிக்க வேண்டும். இந்த அறையில் கனமான பொருட்களை வைக்ககூடாது.

மேலும் இந்த அறையின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அலமாரி, பரண்கள் போன்றவற்றை அமைக்ககூடாது.

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..





கடந்த பல ஆண்டுகளாக நடத்திய நீர் பற்றிய ஆராய்ச்சியில், மனிதர்களுக்குத் தேவைப்படும் உயிர்ப்பாற்றலைக் கிரகித்து, அதனை மனிதர்களுக்கு வழங்கும் திறனைத் தண்ணீர் தன்னுள்ளே கொண்டிருப்பதால் உடல் நலத்தைப் பொறுத்தவரை தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.





சக்தி ஊட்டப்பட்ட நீரில் குளிப்பது நன் மருந்தாகக் கருதப்படுகிறது. மனித உடம்பானது தோலின் மூலம் பிராண சக்தியை வெகுவேகமாகக் கிரகிப்பதாகக் கூறப்படுகிறது. பிராண சக்தியைப் பெற நீங்கள் ஒருநாள் முழுவதும் குடிக்கும் மொத்த நீர் இரண்டு லிட்டர் என்றால் பத்து நிமிடக் குளியலின் மூலம் அதே அளவு பிராண சக்தியைப் பெற முடியும்.


எனவே மிகுந்த சக்தி வாய்ந்த நீரைத் பயன்படுத்தி குடும்பத்தில் உள்ள எல்லோரும் நல்ல உடல் நலனைப் பெற ஒரு வீட்டில் / கட்டடத்தில் வசிக்கும் அனைவரும் ஆழ் துளை கிணறு மூலம் பெறும் நீரைத் தேக்கி வைக்க, அந்த வீட்டின் / கட்டடத்தின் மேல் தளத்தில் நீர்த் தேக்க தொட்டி (Over Head Tank) அமைப்பது உண்டு. அவ்வாறு அமைக்கப்படும் நீர் தேக்கத் தொட்டி சரியான முறையில் அமைக்க வேண்டும்.

* ஒரு வீட்டில் / கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் / கட்டடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.


* ஒரு வீட்டில் / கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் / கட்டடத்தின் வடகிழக்கு / வடமேற்கு / தென்கிழக்கு மூலையில் கண்டிப்பாக வரக் கூடாது.

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!



பஞ்சபூதங்களில் ஒன்றான "நிலம்" மனிதன் வாழ்வின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. வாஸ்துவில் தென்மேற்கு மூலையே நிலத்திற்கு ஒப்பிட்டு கூறப்படும். இந்த மூலையை "நைருதி மூலை/குபேர மூலை" என்றும் கூறுவர்.





தென்மேற்கு மூலையே ஒரு இடத்தின் ஆற்றல் களமாக கருதப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு கட்டடத்தின் தென்மேற்கு பகுதியில் வாசலோ அல்லது எந்த ஒரு திறப்போ அமைக்ககூடாது.

அடிப்படையில் நாம் வாழும் பூமியானது நேராக இல்லாமல் தன் அச்சிலிருந்து 23.5 டிகிரி கிழக்காக சாய்ந்துள்ளது. பூமி இப்படி இருப்பதால் தான் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வரமுடிகிறது.


மேலும் பூமி, சூரியனை சுற்றிச் செல்லும்போது, பூமியின் மேற்பரப்பில் ஈசான்ய பகுதி சற்று தாழ்ந்தும், தென்மேற்கு பகுதி உயர்ந்தும் உள்ளதால் தான், நாம் நம் வீட்டினை அமைக்கும்போது தென்மேற்கு மூலையை உயரமாகவும், வடகிழக்கு மூலையை பள்ளமாகவும் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?




ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது.




ஒரு சிலர் 3 வாசல் வைத்து வீடு அமைப்பார்கள். இதில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். முடிந்த வரை கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் வாசல்கள் அமைப்பது நலம். தெற்கு பகுதியில் வாசல் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால் வாஸ்து பார்த்து அதனை அடைக்கலாம்.

தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைக்கக் கூடாது. ஒரு சில வீடுகளில் 100% தெற்கில் வாசல் அமையும். அதனால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது

வாஸ்துபடி நமது வீட்டை எப்படி அமைக்கலாம்....




இன்றைய சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை.





பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரத்திற்கு சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளைகளை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர்மறை சக்திகூடும்.

* எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள். அது நமக்கு கஷ்டங்களையும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசையில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல்ஸ் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடலாம்.

* கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்கள். அனைத்து நன்மைகளும் வந்து சேரும். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.



* படுக்கை அறை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.

* குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதால், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.

* சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசை யில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது

குலதெய்வம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய சொல்ல வேண்டிய மந்திரம்...!





குலதெய்வம் என்பது பெரும்பாலும் ஒரு பரம்பரையில் பல தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்து, மறைந்த ஆண் அல்லது பெண்ணை கடவுளாக பூஜித்து வணங்கப்படும் தெய்வமாகும். ஒரு குடும்பத்தை எப்பேர்ப்பட்ட துன்பங்களிலிருந்தும் காக்கும் சக்தி குலதெய்வ வழிபாட்டிற்கு உண்டு.
இந்த குலதெய்வங்கள் எங்கோ ஒரு கிராம கோவிலில் மட்டுமே இருக்கவேண்டும் என்பதில்லை. நமது வீட்டிலும் குலதெய்வத்தை குடிகொள்ள செய்ய முடியும். அதற்கு நம் முன்னோர்கள் சில வழிமுறைகளை வகுத்துள்ளனர். அவற்றை பின்பற்றுவதால் நமது வீட்டில் நம்முடைய குலதெய்வம் வாசம் செய்ய தொடங்கி நமக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.



குல தெய்வம் வீட்டில் தங்க வழிமுறை ஒரு கலச சொம்பு பாத்திரத்தில் வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய் போன்றவற்றில் சிறிதளவு சேர்த்து அதில் கொஞ்சம் பன்னீர் ஊற்றவேண்டும். பன்னீர் எந்த அளவிற்கு ஊற்றுகிறோமோ அதே அளவிற்கு சுத்தமான நீரை ஊற்றி வைக்க வேண்டும். பின்பு அந்த சொம்பு பாத்திரத்தை நூல் கொண்டு சுற்ற வேண்டும். நூல் சுற்ற தெரியாதவர்கள், கடைகளில் கலச சொம்பிற்கு கட்டும் சிறியளவு பட்டு துணியை வாங்கி, அத்துணியை சொம்பின் மீது சுற்றிவிடவும்.

பின்பு உங்கள் பூஜையறையில் ஒரு மரப்பலகை அல்லது பீடத்தை வைத்து, அதில் தலைவாழை இலையை போட்டு, அதில் பச்சரிசி ஒரு ஆழாக்கு அளவு பரப்பி, அதில் இந்த கலச சொம்பை வைக்க வேண்டும். இந்த சொம்பிற்குள் வெற்றிலைகள் அல்லது மாவிலைகளை செங்குத்தாக வைத்து, அதற்கு நடுவில் ஒரு வாழைப்பூவை நுனி பகுதி மேல்நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.

மந்திரம்: ஓம் பவாய நம | ஓம் சர்வாய நம | ஓம் ருத்ராய நம | ஓம் பசுபதே நம | ஓம் உக்ராய நம | ஓம் மஹாதேவாய நம | ஓம் பீமாய நம | ஓம் ஈசாய நம என்கிற மேலே உள்ள மந்திரத்தை 108 முறை துதித்தவாறு வில்வ இலைகள், ஊமத்தம் பூக்கள் கொண்டு கலசத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.


இப்பூஜையை மூன்று நாட்களுக்கு மட்டும் செய்தால் போதும். பூஜை முடிந்த பிறகு கலசம் வைக்கப்பட்ட பச்சரிசியை சமைத்து சாப்பிடலாம். பூஜைக்கு வைக்கப்பட்ட வாழைப்பூவையும் பக்குவம் செய்து சாப்பிடுவது நல்லது. கலசத்தில் உள்ள நீரை நமது வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அந்நீர் மீதம் இருந்தால் நாம் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். மேற்க்கண்ட முறையில் பூஜை செய்பவர்களின் இல்லத்தில் அவர்களின் குலதெய்வம் நிரந்தரமாக வாசம் செய்து நமக்கு நல்லருள் புரியும்

குபேர பொம்மையை எந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் தெரியுமா..!




அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும்.
வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.



கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.

கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.

குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.

சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும். புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். எனவே இதை இழிவு படுத்தவோ அவமதிக்கவோ கூடாது.

வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்!




தெற்கை விட வடக்கிலும், மேற்கை விட கிழக்கிலும் அதிக காலியிடம் விட்டு வீடு கட்டினால் செல்வம் பெருகும், வியாபாரம் விருத்தி அடையும், குழந்தைகளால் புகழ் மேலோங்கும்.


வடக்கு, கிழக்கு, வடகிழக்கு போன்ற திசை மாடியில் நீர்த்தொட்டி அமைப்பது உடல் ஆரோக்கியம் பெருக செய்யும்.


வடக்கு, வடமேற்கு பகுதியிலோ அல்லது வீட்டில் அடுத்து வட கிழக்கிலோ தொழுவம் அமைப்பது நல்லது. வடக்கு, கிழக்கு பகுதியில் விலைக்கு வரும் பூமியை வாங்கலாம். தெற்கு, மேற்கு பகுதியை தவிர்க்கவும்.

தலைவாசலுக்கு குத்தல் வருவது போல் குளியலறை, கழிப்பறை அமைக்கக்கூடாது.

எப்படிப்பட்ட வீடாக இருந்தாலும் நடைப்பாதையில் கழிவறை அமைக்கக்கூடாது.

வீட்டுத் தாழ்வாரம் வீட்டை விட உயரமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் ஒற்றை தாழ்வாரம் அமைத்து, சுற்றிலும் சுவர் வைத்து, வாயில் விடுவது நல்லதல்ல, இதனால் வம்சவளர்ச்சி குறைபாடு ஏற்படலாம்.

சமையல் அறைக்கு முன்னால் வடக்கு, அல்லது கிழக்கில் கழிப்பறை, குளியலறை அமைப்பதை தவிர்க்கவும். இது பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

தெருவின் மட்டத்திற்கு தாழ்ந்த மனையில் வசிப்பது செல்வதை குறைத்து நோய் ஏற்படுத்தும்

சனி தோஷம் விலக சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்!




சித்தர்களாலும், முனிவர்களாலும், ரிசிகளாலும் இறைவனின் அருளால் தங்கள் ஞாலத்தால் கண்டறிந்த தெய்வீக கலைகள்தான் மணி, மந்திரம், அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும். இவை ஜோதிடம், மந்திரம், மருத்துவம் எனப்படும்.



இப்பெரும் கலைகளினால் மனித குலம் இன்று வரை மனம், உடல், வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட்டு பெரும் நன்மை அடைந்து வருகின்றன. மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக் கிரகங்களின் பார்வை ஒரு காரணம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை. அவை ராகு, கேது, சனி ஆகும். இவைகளில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவான்தான்.

சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர். இறைவனாகிய சிவ பெருமானையே ஒரு கணம் பிடித்ததால்தான் சனி ஈஸ்வர பட்டம் கிடைத்து சனீஸ்வரன் ஆனார். இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரிதன்னில் சனி பகவான் ஏறி நின்று கொண்டு அறிவுதனை தலை கீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி, நல்லவர்களை கெட்டவர்களாகவும் கெட்டவர்களை நல்லவர்களாக காட்டி புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார்.

சனீஸ்வர தோஷம் விலக மந்திரம்:

“ஓம் கிலி சிவ” என்ற மந்திரத்தை 128 முறை 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் ஜெபித்து வர சனி தோஷம் விலகும்

எந்த திசையில் தலை வைத்து படுக்கவேண்டும் என்று சித்தர்கள் கூறுவது




மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.





இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் உடலில் சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.