Thursday, January 31, 2019

புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கு அற்புத தீர்வு தரும் கருஞ்சீரகம்.....!!

கருஞ்சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளன. பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும், நோய்களை வரவிடாமல் காக்கும் சக்தியும் கருஞ்சீரகத்திற்கு உண்டு.
சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிச்சை மருந்து கருஞ்சீரகம். கொஞ்ச காரம் நிறைந்தது. இதனை லேசாக வறுத்து கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கலாம் அல்லது இரவில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடிக்கலாம். இதன் மூலம் கேன்சரையும் தடுக்கலாம். சர்க்கரை நோயையும் தடுக்கலாம்.
* கருஞ்சீரகம் வயிற்றிலுள்ள வாயுத்தொல்லைகளை நீக்கும் திறன் கொண்டது. வயிற்றில் ஏற்படும் உப்புசம் மற்றும் இதர ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குவதோடு மட்டுமல்லாமல் இரைப்பை மற்றும் ஈரலில் கிருமி தொற்றுகளையும் போக்கும் தன்மை கொண்டது.
* கருஞ்சீரகத்தை பொடி செய்துகொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அதனுடன் சிறிது தேனும் கலந்து பருகி வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைத்து அந்த உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்.
* கருஞ்சீரகத்தை தேங்காய் எண்ணெய்யோடு காய்ச்சி ஆறவைத்து, வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் இந்த எண்ணெய்யை தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.
* கருஞ்சீரகத்தை பொடி செய்துகொண்டு அதனுடன் சிறிது தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், புற்று நோய்கள் ஏற்படாமல் காக்கும். மேலும் எலும்புகளுக்குள் இருக்கும் மஜ்ஜைகளை பலப்படுத்தி உடல் பலத்தை பெருக்கும்.
* கருஞ்சீரகத்தை வறுத்து தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்து, அதை மூக்கில் விட கடுமையான தலைவலியையும், சளியையும் போக்கும். கருஞ்சீரகம் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது.
* கருஞ்சீரக பொடியை தினமும் குளிக்கும்போது உடலிலொ தேய்த்து குளிப்பதால் சோரியாசிஸ் போன்ற தோல் சம்பந்தமான வியாதிகள் அனைத்தையும் நீக்கும். மேலும் தோலிம் ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றையும் நீக்கும்.
* ஆஸ்துமா மற்றும் இருமல் சம்பந்தமான நோயால் அவதியுறுபவர்கள், கருஞ்சீரகத்தை பொடி செய்து அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தேன் மற்றும் அரை டீஸ்பூன் அரைத்து பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சர்க்கரை நோய்க்கு மருந்து:
வெந்தயம் - 50 கிராம், கருஞ்சீரகம் - 25 கிராம், ஓமம் - 25 கிராம், சீரகம் - 25 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும். தினமும் காலை 1 ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம். ஒரு வாரத்திற்கு பின் மருத்துவரிடம் சென்று சுகர் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து கொள்ளலாம்.

Tuesday, January 29, 2019

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து,

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்டை களைப்பிற்கு சீந்திலுப்பு குருதிக்கு அத்திப்பழம் குரலுக்கு தேன்மிளகே! விந்திற்கு ஓரிதழ்தாமரை வெள்ளைக்கு கற்றாழை சிந்தைக்கு தாமரைப்பூ சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை கக்குவானுக்கு வசம்புத்தூள் காய்ச்சலுக்கு நிலவேம்பு விக்கலுக்கு மயிலிறகு வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர் நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர் வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ வெட்டைக்கு சிறுசெருப்படையே தீப்புண்ணா குங்கிலியவெண்ணை சீழ்காதுக்கு நிலவேம்பு நாப்புண்ணிற்கு திரிபலாவேலன் நஞ்செதிர்க்க அவரிஎட்டி குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான் குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர் பெரும்பாட்டிற்கு அத்திநாவல் பெருவயிறுக்கு மூக்கிரட்டை கக்கலுக்கு எலுமிச்சைஏலம் கழிச்சலுக்கு தயிர்சுண்டை அக்கிக்கு வெண்பூசனை ஆண்மைக்கு பூனைக்காலி வெண்படைக்கு பூவரசு கார்போகி விதைநோயா கழற்சிவிதை புண்படைக்கு புங்கன்சீமையகத்தி புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல் கரும்படை வெட்பாலைசிரட்டை கால்சொறிக்குவெங்காரபனிநீர் கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே உடல்பெருக்க உளுந்துஎள்ளு உளம்மயக்க கஞ்சாகள்ளு உடல்இளைக்க தேன்கொள்ளு உடல் மறக்க இலங்கநெய்யே அருந்தமிழர் வாழ்வியலில் அன்றாடம் சிறுபிணிக்கு அருமருந்தாய் வழங்கியதை அறிந்தவரை உரைத்தேனே!! 💐🌹❤🌹💐

உடல் ஏடை குறைக்க

எளிமையான வழியில் உடல் எடையைக் குறைக்க உதவும் சில வழிகள்...!! கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் கரையக்கூடிய நார்ச்சத்தான கால்சியம் பெக்டேட் உள்ளது. இந்த நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவிப் புரியும். ஆகவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸைக் குடித்து வாருங்கள். இதனால் வயிறு நிரம்புவதோடு, உடல் எடை அதிகரிக்காமல் குறைய ஆரம்பிக்கும். வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, கொழுப்புச் செல்களை உடைத்தெறிய உதவும். ஆகவே எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தால், வெள்ளரிக்காயை தினமும் சாப்பிடுங்கள். இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்கச் செய்வதோடு, உடல் பருமன் அதிகரிக்காமலும் தடுக்கும். தினசரி வேலைகளைத் தொடங்கும்முன் தக்காளி அல்லது கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்வது நல்லது. இந்த ஜுஸ் உங்கள் உடலுக்குத் தேவையான பீட்டா கரோட்டீன், ஆன்டி-ஆக்ஸிடென்ட், எலக்ட்ரோலைட்ஸ், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றைத் தருகிறது. தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர, உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும். தக்காளி இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். வெள்ளரிக்காயில் பல்வேறு நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும் பீட்டா-கரோட்டீன் மற்றும் இதர கரோட்டினாய்டுகள் உள்ளது. முக்கியமாக தக்காளி புற்றுநோய் மற்றும் இதய நோயின் தாக்கத்தைத் தடுப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கச் செய்யும். உடல் எடையைக் குறைக்க வெறும் உணவுகள் மட்டும் போதாது, உடற்பயிற்சியும் அவசியம். தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றை நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர, உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.

இந்த 7 பேர் வீட்டில் சாப்பிடுவது உங்களை நரகத்திற்கு அழைத்து செல்லும் தெரியுமா?

கருட புராணம் என்பது வேத வியாசரால் இயற்றப்பட்ட 18 நூல்களில் மிகவும் முக்கியமான நூலாகும். 279 அத்தியாயங்களையும் 18000 ஸ்லோகங்களையும் கொண்டது. இது ஒருவர் வாழும்போது எப்படி தர்மத்தை கடைபிடித்து வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்பதையும், மரணத்திற்கு பிறகான நமது வாழ்க்கையையும் உணர்த்துகிறது. கருட புராணத்தின் படி நாம் யாருடன் பழக வேண்டும், யாருடன் பழகக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி சிலரின் இல்லங்களில் சாப்பிடுவது நமது பாவக்கணக்கை அதிகரிக்கும். தவறான இவர்களின் இல்லத்தில் சாப்பிடுவது அவர்களின் பாவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்வதற்கு சமம். இவர்கள் இல்லத்தில் சாப்பிடுவது மட்டுமின்றி இவர்களுடன் பழகுவதே பாவம்தான். இந்த பதிவில் பழக தகுதியற்ற அவர்கள் யார் யாரென பார்க்கலாம். திருடன் ஒரு குற்றவாளியின் வீட்டில் எப்போதும் உணவருந்த கூடாது. திருடனின் இல்லத்தில் சாப்பிடும் போது அவன் செய்த பாவத்தின் மூலம் ஏற்படும் விளைவுகளை நாமும் அனுபவிக்க வேண்டும். தீயவழிகளில் செல்வது மட்டுமல்ல அதனால் கிடைக்கு பலனை அனுபவிப்பதும் பாவமான செயல்தான் என்று கருட புராணம் கூறுகிறது. மேலும் அந்த திருடனால் நீங்களும் ஒருநாள் பாதிக்கப்படலாம். மோசமான பெண் தெரிந்தே மோசடி, விபச்சாரம் மேலும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சமூகத்தின் பார்வையில் மட்டுமல்ல கடவுளின் பார்வையிலும் கொடுமையான பாவமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பெண்ணின் வீட்டில் ஒருபோதும் சாப்பிடக்கூடாது. இதனால் கடவுளின் பார்வையில் நீங்களும் அவரின் பாவத்தில் பங்கெடுப்பதாக கருதப்படும். கடன்காரர் அநியாய வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் கொடுமையாளர்களாக கருதப்படுகிறார்கள். அடுத்தவர்களின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி கொண்டு காரியம் சாதிக்கும் இவர்கள் அடுத்து உங்களை கூட இலக்காக்க தயங்கமாட்டார்கள். அவர்கள் வீட்டில் நீங்கள் உணவருந்தவுது உங்களின் எதிர்காலத்தில் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் என்று கருட புராணம் கூறுகிறது. மூர்க்க குணமுடையவர் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த இயலாதவர்களிடம் இருந்து எப்போதும் விலகியே இருங்கள். குறிப்பாக கோபத்தில் வன்முறையில் இறங்குபவர்களிடம் எப்பொழுதும் விலகியே இருங்கள். அவர்கள் இல்லத்தில் உணவருந்துவது மட்டுமின்றி பழகுவதையே தவிர்த்து விடுங்கள். துஷ்டர்கள் துஷ்ட குணமுடையவர்கள் மற்றவர்களை சுரண்டுவதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சி பிழைக்கும் இந்த குணமுடையவர்களிடம் எப்போதும் பழகாதீர்கள், அவர்கள் செய்யும் உதவியையும் ஏற்காதீர்கள். ஏனெனில் அவர்களின் அனைத்து செயல்களுக்கும் பின்னாலும் ஒரு சுயநலம் இருக்கும். புறம் பேசுபவர்கள் அனைத்து தீர்வுகளிலும் பிரச்சினையை காண்பவர்கள் புறம் பேசுபவர்கள். அவர்கள் குறைகளை மட்டுமே கண்டறிந்து மற்றவர்களின் மனங்களை புண்படுத்தக்கூடியவர்கள். அவர்கள் விளையாடும் மனவிளையாட்டு எப்போதும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். இவர்களிடம் பழகுவதை முடிந்தளவு தவிர்க்கவும். ஏழைகள் இந்த பட்டியலில் இவர்களின் பெயர்கள் இருக்க காரணம் பொருளாதாரத்தில் தாழ்ந்ததவர்களின் இல்லத்தில் சாப்பிடக்கூடாது என்பதல்ல. தனது சொந்த தேவைகளையே பூர்த்தி செய்ய கஷ்டப்படும் ஒருவர் விருந்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய எவ்வளவு கஷ்டப்படுவார். இறகு அவர்களை மனதளவில் காயப்படுத்தக்கூடும். அவர்களிடம் இருந்து நாம் எடுத்து கொள்வதை காட்டிலும் அவர்களுக்கு கொடுப்பதே சிறந்தது.

விரைவில் திருமணம் நிச்சயமாக ஸ்லோகம்

இத்துதியை திருமணம் ஆக வேண்டிய காளையரும், கன்னியரும் தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும். தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ணருக்மிணீ ப்ரியவல்லபவிவாஹம் தேஹிமே ஸீக்ரம்வாஸுதேவ நமோஸ்துதே. ஸ்ரீக்ருஷ்ண பூஜா கல்பம் பொதுப்பொருள்: தேவகியின் மைந்தனான கிருஷ்ணா, ருக்மிணிக்குப் பிரியமானவனே, நமஸ்காரம். எனக்கு சீக்கிரம் திருமணம் நிகழ அருள்புரிவாய் வாசுதேவனே! தங்களை வணங்குகிறேன்.

ஒரே மாதத்தில் தொப்பையை குறைக்க, சர்க்கரையோட இதை சேர்த்து சாப்பிடுங்கள்…!

இன்று பலருக்கும் இருக்க கூடிய பிரச்சினை உடல் எடை தான். உடல் எடை கூடிவிடுவதால் எதை சாப்பிட்டாலும் எடை கூடி விடுமோ என்கிற பயமும் கூடவே ஒட்டி கொள்கிறது. பலரையும் ஆட்டி படைத்து கொண்டிருக்கின்ற இந்த உடல் எடை பிரச்சினைக்கு நம் முன்னோர்கள் பல்வேறு வழி முறைகளை கண்டு பிடித்து வைத்து விட்டனர்.
நாம் அதை இத்தனை வருடமாக பயன்படுத்தாமல் இருக்கின்றோம். அந்த வகையில் நமது வீட்டில் இருக்க கூடிய சாதாரண உணவு பொருளாக நாம் நினைத்து கொண்டிருக்கின்ற வெல்லம் நமக்கு எண்ணற்ற நன்மைகளை தருகிறதாம். உடல் எடையை மிக வேகமாக குறைக்க வெல்லத்தை ஒரு சிலவற்றோடு சேர்த்து சாப்பிட்டோ அல்லது குடித்து வந்தாலே போதும். அது மட்டுமில்லாமல் நமது உடலில் சேர கூடிய கொழுப்புகளையும் இது குறைக்கும் ஆற்றல் பெற்றது. வாங்க, இந்த சாதாரண வெல்லம் எப்படி இத்தகைய மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகின்றது என்பதை இனி தெரிந்து கொள்வோம்.
ஆற்றல் மிக்க வெல்லம்..!
நமது வீட்டில் இருக்க கூடிய உணவுகளை நாம் அவ்வளவு சாதாரணமாக நினைத்து விட கூடாது. வெந்தயம், மிளகு, இஞ்சி, மஞ்சள்… இந்த வரிசையில் வெல்லமும் சேரும். நாம் வெல்லத்தை அளவான முறையில் எடுத்து கொண்டால் நமது ஆரோக்கியம் இரு மடங்காக உயரும்.
நச்சுக்களை வெளியேற்ற
உடல் எடையை ,குறைப்பதற்கு முன் நமது உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டும். ஏனெனில், அவை தான் எடையை குறைய விடாமல் தடுக்கும் முக்கிய காரணி. இந்த நச்சுக்களை வெளியேற்றினால் எடையை எளிதாக குறைத்து விடலாம். வெல்லத்தில் உள்ள ஊட்டசத்துக்கள் இந்த நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டவை. ஆதலால், மிக எளிதில் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்றி விடலாம்.
ஆரோக்கியம் நிறைந்த வெல்லம்..!
வெல்லத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் உடலின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்ளும். மேலும், நீர்ச்சத்தை குறைய விடாமல் பார்த்து கொள்ளும். செரிமான கோளாறுகளை குணப்படுத்தினாலே உடல் எடையை நம்மால் எளிதில் குறைத்து விடலாம். அந்த வகையில், இது செரிமான பிரச்சினைக்கும் நல்ல தீர்வை தருகின்றது.
கொழுப்புகளை கரைக்க
உங்களது உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைத்தாலே தொப்பை மற்றும் உடல் எடை கூடும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். வெல்லத்தை கீழ் கூறும் உணவோடு சேர்த்து சாப்பிட்டால் கொழுப்பை சுலபமாக கரைத்து விடலாம். மேலும், மலச்சிக்களையும் இது குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாம்.
எடையை குறைக்க
உடல் எடையை ஒரே மாதத்தில் குறைக்க இந்த குறிப்பை பயன்படுத்தினால் போதும். இதற்கு தேவையான பொருட்கள்… வெல்லம் 1 சிறிய துண்டு எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் வெது வெதுப்பான நீர் 1 கிளாஸ்
தயாரிப்பு முறை…
வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை முதலில் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும். இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இதன் பலன் அதிகம். மேலும், உங்களின் தொப்பையும் குறைந்து விடும்.
சிறுநீரக பிரச்சினைகளுக்கு
சிறுநீரகத்தில் ஏற்பட கூடிய பிரச்சினைகளை தீர்ப்பது எளிதானதல்ல. ஆனால், இதனையும் சுலபமாக தீர்த்து விடுகிறது இந்த வெல்லமும் எலுமிச்சையும். இந்த நீர் சிறுநீரகத்தில் சேர கூடிய கற்களை கரைய வைக்கும் தன்மை கொண்டதாம். வெறும் எலுமிச்சை சாற்றை குடித்தாலும் இதன் பலன் அப்படியே கிடைக்கும்.
கடலை மிட்டாய்
கடைகளில் விற்க கூடிய கண்ட சாக்லேட்டுகளை சாப்பிடுவதை காட்டிலும் இந்த கடலை மிட்டாய் பல மடங்கு உங்களுக்கு உதவும். கடலை மிட்டாயில் உள்ள வெல்லம் தான் இதன் முக்கால் வாசி பயன்களுக்கு காரணம். நீங்கள் சோர்வாக உணரும் போதோ, பசியில் இருக்கும் போதோ கடலை மிட்டாய் சிறந்த தீர்வாக இருக்கும்.
காரணம் என்ன.?
வெல்லத்தினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்க சில முக்கிய ஊட்டசத்துக்களும், தாதுக்களும் தான் காரணம். முக்கியமாக ஜின்க், செலினியம், பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை தான் காரணம். இதனால் தான் வெல்லம் இவ்வளவு மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது.
அளவு முக்கியம்..!
நாம் வெல்லத்தை சாப்பிடுவதனால் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. ஆனால், இவற்றின் அளவு அதிகரித்தால் பல்வேறு பாதிப்புகள் உங்களை வந்தடையும். எனவே, 2 டீஸ்பூன் அளவிற்கு மிகாமல் வெல்லத்தை சேர்த்து கொள்ளலாம். இந்த அளவில் மாற்றம் இருந்தால் பக்க விளைவுகள் வந்து சேரும்.

Sunday, January 27, 2019

உங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்!! உங்களுக்கு இருக்கா கண்டிப்பா பாருங்க!!

சிலர் பெயர் என்பது தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான செல்வாக்கு வருத்துவதாக நம்புகின்றனர். அனால் மற்றவர்கள் பெயர் என்பதை ஒரு தனித்துவ அடையாளமாக மட்டுமே கருதுகின்றனர். உங்கள் பெயரில் உள்ள எழுத்துக்கள் உங்கள் வாழ்க்கையைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் ஒரு அர்த்தம் உண்டு, பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஆளுமைக்கு ஏற்றவாறு சிறந்த பெயரை தேடுகிறார்கள்.
பண்டைய காலங்களைப் போலன்றி, பெற்றோர்கள் இந்நாட்களில் தங்களது விருப்பமான பிரபல பெயர்கள், பிரபலமான குழந்தைகள், பழம்பெரும் தலைவர்கள் பெயர்களை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளை பெயரிடுகின்றனர்.அநேக மக்கள் பெயரைத் தாமாகவே தேர்ந்தெடுக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில், அவர்களின் பெற்றோரிடமிருந்து அல்லது குடும்பத்திலிருந்து பெயர் சூடும் விழாவில் அல்லது பிரசித்தி பெற்ற விழாக்களில் பெயர்களை தீர்மானிக்கிறார்கள்.
அந்த காலங்களில், பெயர்கள் அடையாளம் காணும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன, ஆனால் இன்றைய காலத்தில் அவை நம் மதம், சமுதாயம், சொந்த மதிப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்பாக காணப்படுகிறது.
பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் அதன் சொந்த அதிர்வுகளைக் கொண்டிருப்பதையம் அது உங்கள் ஆளுமைத் தன்மையை பாதிக்கும் என்று அறிவீர்களா? பிறப்பு முதல் மரணம் ஏன் மரணம் கடந்தும் கூட தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரே மாறாத விஷயம் பெயர். சிலர் நம் ஆன்மா பெயருடன் பிணைக்கப்பட்டு உள்ளது என்று கூட சொல்லுவார்கள்.நமது பெயர் வெறும் ஒரு அடையாளம் மட்டம் அல்ல, ஆனால் நமது வாழ்க்கை, வெற்றி மற்றும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்றாகும். நாம், உங்கள் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் அதனுடைய விளைவையும் காணலாம்.
தங்கள் பெயரில் D, M அல்லது T ஐ கொண்டவர்கள் கடுமையாக உழைக்கும் நபர்கள். அத்தகையவர்களுக்கு சொந்த தொழில் செய்ய உணர்வு உள்ளவர்கள் மற்றும் இவர்கள் ஏத்தவது சொந்த தொழில் தொடங்க முயற்சி செய்ய வேண்டும் அப்படி செய்தல் இந்த நபர்கள் பெரும்பாலும் வெற்றியைக் காணுவார்கள்.E, N, H அல்லது X கொண்டவர்களுக்கு, உங்கள் வாழ்க்கையில் பண லாபம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு எவ்வளவு பணம் சேர்ந்தாலும் அதை சேமித்து வைப்பதைப் பற்றியோ அல்லது பிறருக்கு நல்லது செய்வதையோ சமமாக நினைத்து செய்ய வேண்டும்.
ஒரு நபருக்கு தங்கள் பெயரில் V, U அல்லது W இருந்தால், இந்த மக்கள் மனித நேயமானவர்கள் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்கள். அவர்கள் யாராவது ஒருவருக்கு உதவ வேண்டிய வாய்ப்புகளையோ தட்டி கழிக்க மாட்டார்கள். அவர்கள் மிகவும் ஆழமாகவும் உணர்ச்சி ரீதியாகவும் தங்கள் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டம் தங்கள் பக்கத்தில் உள்ளது.
A, I, J Y, Q அல்லது இந்த எழுத்துக்களை ஒன்று அல்லது ஒன்றிற்கு மேல் கொண்டிருக்கும் ஒரு நபர், வெளிப்படையான லட்சியமாக இருப்பதோடு அவர்களின் வாழ் நாள் முழுவதும் இருப்பவர்கள். அவர்கள் தங்களுடைய சுதந்திரத்தை விரும்புவர்கள் மற்றும் அதைத் தடுக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவிர்க்கிறார்கள்; அது அவர்களின் மிக அன்பானவர்கள் விலகிச் சென்றால் கூட வருத்தப்பட மாட்டார்கள்.
B, R அல்லது K என்ற பெயர்களை அவற்றின் பெயர்களில் உள்ளவர்கள், இயற்கையில் மிகுந்த கவனத்துடன் இருப்பவர்கள். அவர்கள் மிகவும் சுய நலம் மிக்கவர்கள். வாழ்க்கையில் அவர்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வதால் அது எப்போதும் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கும்.உங்கள் பெயறில் C, G, S அல்லது L இருந்தால், அது நல்ல இயல்பையும் ஞானத்தையும் குறிக்கிறது. இனிமையான, அன்பான, அக்கறையுள்ள தன்மை உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்கள் வாழ்க்கை முழுவதும், நீங்கள் மக்களின் விருப்பமாக இருப்பீர்கள். இவர்களுக்கு நல்ல இசை திறமை இருக்கும்.

Wednesday, January 23, 2019

உடலுறவு கொள்வதன் பயன் 40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் உங்களுக்கு அவசியம்....

தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும்.
வாரத்திற்கு சில நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.
சளி பிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும்
செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
வாரம் சில நாள் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்.மேல்நாட்டவரின் 100% ரகசியம் இதுதான்.
ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 85% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் 95% குறைவாக உள்ளதாம்
மைக்ரேன் தலைவலி, உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல உடலுறவு கொண்டால் போதும்.
மாதத்திற்கு 10 நாளுக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் 99% கேன்சர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.
அதிக உடல்உறவு கொல்லும் பெண்களுக்கு 1. இரத்த சோகை ( தலஸ்மியா)
2. கர்பபை புற்று
4. கர்பபை நீர் கட்டி ( பைப்ராய்ட் )
5.மூச்சடைப்பு
6. கை கால் மூட்டு வழி
7. வெள்ளை படுதல்
8. உடல் சோர்வு
9.கண்பார்வை குறைதல்
10. உடல் பருமன் ஆகியவை அன்டாது.
நமது இந்திய பெண்களில் 9% மட்டுமே 40 வயதை தான்டியும் 91 சதவிகித உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் மற்றவர்கள் காரணம்? அவர்கள் 35 வயதுக்கு மேல் உடல்உறவில் ஆர்வம் கொல்வதில்லை.அதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதில்லை. இந்த தகவலை வெளியட்ட ரஸ்ய கைனகோலைஜி ஆய்வாளர்களுக்கும் இதனை மொழி பெயர்த்து இணயத்தில் பதிவு செய்த நமது மகப்பேரு மருத்துவர் திருமதி கற்பகம் ஐயங்கார் அவர்களுக்கும் நன்றி.
உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம் ஆகவே பெண்கள் ஆரோக்யமாக இருக்க உறவு கொள்ளுங்கள் கனவறோடு அவருக்கும் இது மருத்துவமாகும். இல்லறமே நல்லறம்

Tuesday, January 22, 2019

பிறந்த தேதிய சொல்லுங்க… உங்க அந்தரங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு பார்ப்போம்
இந்த கிரகத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் வேறுபட்ட பண்புகளை உடையவராய் இருக்கின்றனர், ஆனால் ஒரு சில ஒற்றுமைகள் உள்ளன, இவை எண்களின் அடிப்படையில் 9 வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
மக்களின் குணாதிசயங்களைப் பற்றி நிறைய பதிவுகளை நாம் பல வலைத்தளப் பக்கங்களில் படித்திருக்கலாம். ஆனால் இந்த பதிவு ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் காதல் மற்றும் திருமண விருப்பத்தைப் பற்றி கவனம் செலுத்துகிறது. சிலர் உணர்ச்சிகளோடு தொடர்பு கொண்டு இருக்கின்றனர், சிலர் நடைமுறை அன்புடன் இருக்கின்றனர், இன்னும் சிலர் அழகின் பின்னே ஓடிக் கொண்டு இருக்கின்றனர். இப்படி பல்வேறு வகை மனிதர்கள் இந்த பூமியில் நிறைந்துள்ளனர்.
பிறந்த நாள்
இவை எல்லாமே உங்கள் பிறந்த நாளைச் சார்ந்து உள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்களை 9 வகையாக பிரிப்பதை விட இது கடினமானது. ஆனால் ஒவ்வொரு நாளுக்குரிய பலன்களையும் விவரிப்பது என்பது இயலாத காரியம். நீங்கள் எண் கணிதம் கற்ற பின்னர் பிறப்பு தேதியிலிருந்து ஒரு நபரை பகுப்பாய்வு செய்யலாம். ஒரு நபரின் பிறப்பு எண், விதி எண், பெயரின் எண், ராசி, பிறந்த மாதம் மற்றும் வருடம் ஆகியவற்றை சார்ந்து அவரின் குணாதிசயம் அமைகிறது.
பிறந்த நாள் எண்கள் நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால் உங்கள் எண் 1.
நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால் உங்கள் எண் 2.
நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால் உங்கள் எண் 3.
நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால் உங்கள் எண் 4
நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால் உங்கள் எண் 5
நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால் உங்கள் எண் 6
நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால் உங்கள் எண் 7
நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால் உங்கள் எண் 8
நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால் உங்கள் எண் 9
எண் 1 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு எண் 1 க் கொண்ட நபர்கள், எப்போதும் தலைவராக இருப்பவர்கள். எதையும் முன்னடத்தி செல்பவர்கள். எண்கணித அறிவியல் படி, அவர்களின் துணையை கூட ஆளுவதற்கு முயற்சி செய்கின்றனர். அவர்களின் முடிவே எல்லாவற்றிலும் இறுதியாக நிலைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் ராசியைப் பொருத்தும் பல விஷயங்கள் அமையும் என்றாலும், அவர்களுக்கு விருப்பம் இல்லாத எந்த ஒரு செயலையும் செய்ய வைக்க யாராலும் முடியாது. காதலைப் பற்றி சொல்லும்போது, அவர்கள் காதலை கைவிட விரும்புவதில்லை. குழந்தை பருவத்தில் இருந்து விரும்பும் ஒருவரை அவர்கள் பெரும்பாலும் மணமுடிக்கின்றனர்.
எந்த ஒரு விஷயத்திலும் அவர்கள் சமரசம் செய்வதில்லை, அவர்கள் அசாதாரண மனிதர்களை விரும்புவதற்கு காரணம் அவர்களின் அசாதாரண குணம் என்று அவர்கள் உணர்கின்றனர். அவர்கள் உணர்ச்சி பூர்வமாக இருப்பதை விட, நடைமுறையை பின்பற்றுபவராக இருக்கிறார்கள். மேலும் அழகை ஆராதிக்கக்கூடியவர்கள் அவர்கள். நீண்ட நாட்கள் பிரம்மச்சாரியாக இருந்தாலும், யாரவது ஒருவர் கிடைத்தால் போதும் என்ற மனநிலை இல்லாதவர்கள். காதலில் தங்கள் துணையின் மீது எப்போதும் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கின்றனர். அவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். எப்போதும் புதிய புதிய சோதனைகளை முயற்சித்துக் கொண்டு இருப்பவர்கள். அவர்கள் எதிலும் உறுதியானவர்கள். ஒன்றாம் எண் நபரை துணையாகக் கொண்டவர்கள் தங்கள் உறவில் நிச்சயம் ஒரு விசுவாசத்தை எதிர்பார்க்க முடியும்.
எண் 2 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு 2ம் எண் நபர்கள், மிகவும் உணரச்சி மிக்கவர்கள். மனநிலையில் மாறுபாடு கொண்டவர்கள். அவர்கள் துணையுடன் மனநல ரீதியான தொடர்பு உள்ளவர்கள். அவர்கள் உடல் ரீதியான தொடர்பை விட மன ரீதியான தொடர்பு மிகவும் முக்கியம் என்று நினைப்பவர்கள். இந்த நபர்கள், உணர்திறன் அதிகம் கொண்டவர்கள் மற்றும் உயர்ந்த கற்பனைத் திறன் கொண்டவர்கள். இவர்களுக்கு அடிக்கடி மனநிலையில் மாற்றம் உண்டாவதால் இவர்களின் துணை நிலையான மனநிலையுடன் இருப்பது நல்லது. இவர்களைப் புரிந்து கொள்ளும் துணை அமைந்தால் மட்டுமே, இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் திருப்திகரமாக அமையும்.
இவர்களுக்கு சிற்றின்பத்தின் மேல் அதிக ஆர்வம் இருப்பதில்லை. காதல், ரொமான்ஸ் மற்றும் திருமணம் என்று வரும்போது இவர்கள் இதயம் சொல்லும் வழியில் மட்டுமே இவர்கள் பயணிக்கின்றனர். இதற்கு ஷாருக் கான் ஒரு சிறந்த உதாரணம். இவர் வேறு ஜாதி பெண்ணான தனது காதலி கௌரி கானுக்காக தில்லியில் இருந்து மும்பை வரை வந்தார். ஒருமுறை ஒருவரோடு இவர்கள் இணைந்து விட்டால் எளிதில் பிரிய மாட்டார்கள். இவர்கள் மன்மத கலையில் மிகச் சிறந்து விளங்குபவர்கள். இவர்களுடைய சொந்த வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதால் மட்டுமே இவர்களின் தொழிலும் நல்ல முறையில் நடக்க இயலும், காரணம், இவர்கள் சந்தோஷமாக இருந்தால் இவர்களுடைய வேலை சிறப்பாக நடைபெறும்.
எண் 3 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு காதல் மற்றும் திருமணம் என்று வரும்போது 3 ம் எண் கொண்ட நபர்களும் 1 ம் எண் நபர்களின் ஒத்த குணநலன்களைக் கொண்டிருப்பார்கள். நடைமுறையை அதிகம் பின்பற்றுபவராக இருப்பார்கள். அவர்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் பெரும்பாலும் இதயம் சொல்வதை ஏற்க மாட்டார்கள். 3ம் எண் நபர்கள் பயமற்றவர்கள். குறிக்கோள் மிகுந்தவர்கள். அவர்களுக்கான சட்டத்தை அவர்களே வகுத்துக் கொள்வார்கள். தன்னலம் மிக்கவர்கள். சிறப்பான ஒருவரை மட்டுமே மணமுடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். 2, 6, 7 மற்றும் 8ம் எண் நபர்களைப் போல் ரொமான்ஸ் அதிகம் இல்லாதவர்கள் இவர்கள்.
துணையுடன் அதிக நேரம் செலவழிப்பதை விரும்ப மாட்டார்கள். இவர்களின் முக்கிய விருப்பம் வேலை மட்டுமே. காதலில் தனது துணையின் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பார்கள். எல்லா துறையிலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவரோடு நட்பாக அல்லது உறவாக இருக்கும் நபர்கள் தங்களை இரண்டாவதாக உணரும் தன்மை கொள்பவராக இருக்கும்பட்சத்தில் இவர்களின் உறவில் எந்த ஒரு சிக்கலும் இருப்பதில்லை. 3ம் எண் நபருடன் நெருங்கி நேரம் செலவிடும்போது இந்த தன்மைகள் மிகவும் வெளிப்படையாகத் தெரியும்.
எண் 4 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு 4ம் எண் நபர்கள், வழக்கத்திற்கு மாறானவர்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்கள். ஆனால் ஜோதிடம் கூறுவதைப் போல் இவர்கள் ரொமண்டிக் தன்மை கொண்டவர்கள் அல்ல. திருமணத்தை தாண்டி பாலியல் தொடர்பு வைத்து கொள்ள விரும்புவார்கள். 4ம் எண் ஆண்கள் அனைவரும் இந்த குணத்தைக் கொண்டிருப்பதில்லை, இவர்களுள் சில ஆண்கள் மிகவும் நேர்மையானவராக இருப்பார்கள், இவர்களின் துணை இவர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பார்கள். கடலை போடும் நபராக இல்லாமல் உறவுகளில் அர்பணிப்புடன் இருக்கும் தன்மைக் கொண்டவர்கள். திருமண உறவைத் தாண்டி வெளியில் தகாத உறவு கொண்டிருந்தாலும் இவர்களின் துணையால் அதனைக் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தனது துணையுடன் அர்பணிப்புடன் விளங்குவார்கள்.
குறிப்பாக 22ம் தேதி பிறந்தவர்கள் பொதுவாக தனது துணையிடம் அதிக விசுவாசத்துடன் இருப்பார்கள். பொதுவாக 4ம் எண்கள் நபர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், எளிதில் கோபம் இவர்களை ஆட்கொள்ளும் என்பதால் திருமண முறிவு அல்லது விவாகரத்து உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். திருமணம் குறித்த முடிவுகளில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக திருமணம் மற்றும் உறவு தொடர்பான முடிவுகளில் 4ம் எண் நபர்கள் பொதுவாக அதிர்ஷ்டமில்லாதவர்கள்.
எண் 5 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு திருமணத்திற்கு முன் பல பேருடன் தொடர்பு கொள்ளும் குணம் கொண்டவர்கள் 5ம் எண் நபர்கள். இவருடைய துணை சரியானவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களுக்கு மாற்றம் மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் விருப்பம் இருப்பதால் அடிக்கடி தங்கள் காதலை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். பல திறமைகள் வாய்ந்தவர்களாக இருக்கும் இவர்கள் காதலில் புதிய சோதனைகளை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். காதலில் புதிய வழிகளை கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். உறவில் பாலியல் நோக்கத்தோடு இணைவார்கள். இவர்களின் மனம் வேகமாக வேலை செய்யும் என்பதால் அடிக்கடி தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் எப்போதும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் என்பதால் 2 ம் எண் நபரைப் போன்ற நிலையான எண்ணம் கொண்டவரை துணையாகப் பெறுவது நல்லது. மேலும் 8ம் எண் நபர் இவருக்கு நல்ல துணையாக இருப்பார்கள். 5ம் எண் நபரால் ஒரு காதலை நீண்ட நாட்கள் கொண்டு செல்ல இயலாது. உறவு மற்றும் திருமணம் என்று வரும்போது இவர்கள் நடைமுறை முடிவுகளைப் பெரிதும் எடுக்க நினைக்கின்றனர்.
எண் 6 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு எண் 6 என்பது சுக்கிரனின் எண்ணாகும். இந்த கிரகம் காதல் மற்றும் சமாதானத்திற்கான கிரகம் ஆகும். காதல் மற்றும் ரொமான்ஸ் என்று வரும்போது 6 ம் எண் நபர்கள் காந்தம் போல் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவராக இருக்கின்றனர். அவர்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பதால் அவர்களே காதலை முன்மொழிகின்றனர். 6ம் எண் நபர் எதையும் கையாளும் திறன் கொண்டவர்கள். திருமணத்திற்கு பின் மற்றொரு புதிய உறவில் ஈடுபடும் வாய்ப்புகளும் உண்டு. தனது துணையுடன் உணர்வு பூர்வமாக நெருக்கம் உண்டாகாத நேரத்தில் இது போன்ற அந்நிய உறவின் மீது ஈர்ப்பு உண்டாகலாம்.
இந்த வகை நபர்கள், மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் திருமணத்தில் நாட்டம் கொள்ள வேண்டும். 2 ம் எண் நபர்களைப் போல் பாலியல் தொடர்பில் அதிக நாட்டம் இல்லாதவர்கள் இவர்கள். உடல் ரீதியான தொடர்பை விட மன ரீதியான தொடர்பு முக்கியம் என்று நினைப்பவர்கள் இவர்கள். பொதுவாக 6 ம் எண் நபர்கள் மிகவும் அழகாக தோற்றமளிப்பதால், இவர்களைச் சுற்றி பெரும்பாலும் எதிர் பாலினத்தவர்கள் சூழ்ந்திருப்பார்கள். இவர்கள் அழகால் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் பண்பைக் கண்டு சக தோழர்கள் பொறாமைப் படுவார்கள். காதல் செய்வதில் வல்லவர்கள்.
எண் 7 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு 7 ம் எண் நபர்கள் மிகவும் குறைவாக பேசுவார்கள். எப்போதும் ஒரு வித சிந்தனை மற்றும் கனவில் இருப்பார்கள். இதனால் இவரை ரொமான்ஸ் இல்லாதவர் என்று கணிக்க முடியாது. 7ம் எண் கேதுவைக் குறிக்கும். எண்கள் 2 ன் தன்மைகளில் பல இவர்களுடன் ஒத்துப் போகும் என்பதால் இவர்களுடன் இணையக் கூடிய ஒரு சிறந்த எண் 2. 7 ம் எண் நபர்கள் பொதுவாக கனவு உலகத்தில் வாழ்பவர்கள், அவர்கள் விரும்பும் வாழ்க்கையைப் பற்றி கனவு கண்டு கொண்டு இருப்பார்கள். இவர்கள் காட்சிபடுத்தும் கனவை கவரும் அளவிற்கு இவர்களின் மனம் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இவர்கள் மன அழுத்தத்தைத் தவிர்த்து மிகவும் ரிலாக்சாக இருக்க வேண்டும்.
2 ம் எண் நபர்கள் போல், தனது துணையுடன் உணர்வு ரீதியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களின் துணையால் மோசமான முறையில் காயப்படும் வரை இவர்கள் இந்த பந்தத்தில் மிகுந்த விசுவாசமாகவும் நம்பிக்கையுடனும் இருப்பார்கள். 2ம் எண் நபர்கள் போல் இவர்களும் தொழில்முறை வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க, இவர்களின் சொந்த வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டும். எதையும் அதிதீவிரமாக யோசிக்கும் காரணத்தால், எந்த ஒரு சின்ன பிரச்சனையும் இவர்களுக்கு பெரிதாக தோன்றும். தவறான புரிதலைத் தடுக்க இவர்கள் தங்கள் துணையுடன் அடிக்கடி மனம் விட்டு பேச வேண்டும்.
எண் 8 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு 8ம் எண்கள் நபர்கள் உணர்ச்சி மிக்கவர்கள் என்றாலும் வலிமையானவர்கள். எல்லா எண் மனிதர்களையும் விட இவர்கள் மிகவும் விசுவாசமானவர்கள். ஆனால் இவர்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் எல்லோராலும் பெரிதும் துன்பப்படுவார்கள். 8ம் எண் பெண்கள் பொதுவாக தன்கள் திருமண வாழ்வில் கஷ்டப்படுவார்கள். ஆகவே இந்த எண் பெண்கள் தங்கள் ஜாதகத்திற்கு பொருத்தமான வரனைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வது நல்லது. காதலில் இருக்கும்போது மிகவும் விசுவாசத்தோடு இருப்பார்கள். காதல் மற்றும் உறவு என்று வரும்போது பெரும்பாலும் இவர்கள் நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. தங்கள் இதயம் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்கின்றனர். இவர்கள் யாரோடும் விரைவாக இணைவதில்லை, ஆனால் ஒருமுறை இணைந்துவிட்டால், தனது துணையை கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கிவிடுவார்கள்.
8ம் எண் நபர்கள் பொதுவாக 8ம் எண் அல்லது 4ம் எண் நபரோடு அதிக பொருத்தமாக இருப்பதைப் போல் உணர்வார்கள். ஆனால் இந்த இரண்டு எண்ணைக் கொண்ட நபர்களும் அதிகம் போராடுவார்கள் என்பதால் இவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் அதனை பொறுத்துக் கொண்டு போகும் தன்மைக் கொண்டவர்கள் 8ம் எண்கள் நபர்கள். ஆனால் ஆழமாக காயப்படுவதால் அந்த உறவில் இருந்து விலகும் முடிவையும் அவர்கள் எடுக்கலாம். அதனைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது. திருமண பந்தத்திற்கு சரியான ஒரு நபர் 8ம் எண் நபர்.
எண் 9 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு எண் 9 செவ்வாய்க்குரிய எண்ணாகும். இது ஒரு தீமை செய்யும் கிரகம் ஆகும். மிகுந்த ஆக்கிரமிப்பு நிறைந்தவர்கள் மற்றும் ஆற்றல் நிறைந்தவர்கள் இந்த எண்ணுக்குரியவர்கள். இவர்கள் ஒரு புறம் உணர்ச்சி மிக்கவர்கள் தான் என்றாலும் உலகம் எப்போதாவது தான் இந்த முகத்தைக் காணமுடியும். எண் 9 ன் பாலியல் தேவை வேறு எந்த எண்ணை விடவும் அதிகமாக உள்ளது, மேலும் அவை பாலியல் பொருந்தக்கூடிய தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.
உடல் இன்பத்திற்காக மட்டுமே இந்த எண் ஆண்கள் திருமண உறவைத் தாண்டி வெளியில் தொடர்பு கொள்வார்கள். இதில் உணர்வு ரீதியான ஈடுபாடு எதுவும் இருக்காது. அதே சமயம் தனது துணையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிப்பார்கள். ஆனால் குடும்பத்திற்கு வெளிய பாலியல் தொடர்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அதனை மறுக்கவும் மாட்டார்கள்

உங்க பிறந்த தேதியை வைத்து உங்களுக்கான முகூர்த்த நாட்களை கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு தனி நபரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுவது திருமணம். வாழ்வின் முற்பகுதியில் தனி ஆளாக வளர்ந்து திருமணத்திற்கு பிறகு இருவராக இணைந்து ஒரு மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்வது தான் திருமணம்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எடுக்கும் ஒரு முக்கிய முடிவாக கருதப்படுவது திருமணம். இந்த திருமண வாழ்க்கை சீராக பயணிக்க மற்றும் உங்கள் குறிக்கோளை இதன் மூலம் எட்ட நீங்கள் எடுக்கும் முடிவு சாதகமாக இருக்க வேண்டும்.
திருமணம்
காதல் திருமணமாக இருந்தாலும், பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் திருமண தேதி என்பது மணமக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே திருமண தேதியை முடிவு செய்யும் முன் பல முறை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இதன்மூலம் ஒரு மகிழ்ச்சியான எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை மனதில் கொண்டு தேதியை முடிவு செய்ய வேண்டும். திருமண தேதியை முடிவு செய்ய நியுமராலஜி ஒரு சரியான வழியைக் கூறுகிறது.
இதன்மூலம் தம்பதிகள் ஒரு தனித்துவத்தை தங்கள் வாழ்வில் உருவாக்க முடியும். ஒரு சிறப்பான மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்க முடியும். பிறந்த தேதியின்படி, 2019ம் ஆண்டிற்கான திருமண முகூர்த்தங்களை தேர்ந்தெடுப்பதற்கான வழியை இங்கே காணலாம்.
நியுமராலஜி
ஜோதிடத்தைப் போலவே எண்கணிதமும் பழங்கால அறிவியல் மற்றும் தத்துவக் கோட்பாடுகளைக் கொண்ட ஒரு வகை ஆகும். எண்களின் அறிவியல் படி எண்கணிதம் என்னும் நியுமராலஜி வழிநடத்தப்படுகிறது. தம்பதியரின் பிறந்த தேதியைச் சார்ந்து அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை குறித்த உண்மை அறியப்படுகிறது. இந்த வழியில், இது சில அதிர்ஷ்டம் அல்லது சில தேதியுடன் தொடர்புடைய பிரச்சனைகளை உறுதிப்படுத்த உதவுகிறது.
உள்ளுணர்வு மற்றும் கணிப்புடன் தொடர்புடையதாக இன்றைய எண்கணிதம் அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் சிறந்த திருமண முகூர்த்தத்தைக் கணக்கிடுவது, உங்கள் திருமணத்தை திட்டமிடக் கூடிய சிறந்த தேதியைக் கண்டறிவதற்கு உங்களுக்கு உதவுகிறது, எனவே உங்கள் திருமண வாழ்க்கை மணமக்கள் இருவருக்கும் சிறந்த பலன்களைத் தந்து உதவுகிறது.
நியுமராலஜி எண்களை எப்படி கணக்கிடுவது? பிறந்த தேதி அடிப்படையில், எண்கணிதம் சில பொது வகைகளை வகைப்படுத்துகிறது. உங்கள் பிறந்த தேதியில் உள்ள எண்களை கூட்டுவதால் உங்கள் பிறப்பு எண்ணை அறிந்து கொள்ள முடியும். இதே முறையில் உங்கள் துணையின் பிறப்பு எண்ணையும் அறிந்து கொள்ளுங்கள். இதனால் தம்பதிகள் இருவரின் பிறப்பு எண்ணும் அறியப்படுகிறது. சிறந்த திருமண தேதிகளை அறிந்து கொள்வதற்கு இந்த இரண்டு பிறப்பு எண்களும் மிகவும் அவசியம் ஆகும்.
பிறப்பு எண்ணை எப்படி அறிந்து கொள்வது? பிறப்பு எண்ணை கண்டுபிடிக்கும் முறை – பிறந்த தேதியின் எண்கள் + பிறந்த மாதத்தின் எண்கள் + பிறந்த வருடத்தின் எண்கள்
ஒவ்வொரு பிரிவின் அனைத்து எண்களையும் கூட்டி முதலில் ஓரிலக்க எண்ணாக மாற்றம் செய்து கொள்ள வேண்டும். கணக்கிடப்பட்ட ஓரிலக்க எண்கள் மூன்றையும் கூட்டி விடையாக வரும் அந்த ஓரிலக்க எண் உங்கள் பிறப்பு எண். உதாரணதிற்கு உங்கள் பிறந்த தேதி, 15 ஜூன் 1990, உங்கள் பிறப்பு எண்ணை கண்டறியும் முறையை இப்போது காணலாம்.
15 + 06 + 1990
(1+5) + (0+6) + (1+9+9+0)
6 + 6 + 19
6 + 6 + 10
6 + 6 + (1+0)
6 + 6 + 1 = 13
1+3 = 4
15 ஜூன் 1990 ல் பிறந்தவருக்கான பிறப்பு எண் 4
இதே முறையை பின்பற்றி உங்கள் துணையின் பிறப்பு எண்ணை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
திருமண எண்ணை அறிந்து கொள்வது எப்படி? மணமகன் மற்றும் மணமகளின் பிறப்பு எண்ணை கூட்டி, ஒற்றை இலக்க எண்ணாக மாற்றிக் கொள்ளுங்கள். இரண்டு பிறப்பு எண்களையும் கூட்டுவதால் வரும் அந்த ஒற்றை இலக்க எண் திருமண எண்ணாகும்.
உதாரணதிற்கு மணமகனின் பிறப்பு எண் 4 என்று வைத்துக் கொள்ளலாம். மணமகளின் பிறப்பு எண்கள் 7 என்று வைத்துக் கொள்வோம். இவர்களின் திருமண எண் கண்டறியும் முறை எப்படி என்பதை இப்போது கீழே காணலாம்.
4 + 7 = 11
1 + 1 = 2
இந்த திருமண ஜோடியின் திருமண எண் 2.
முகூர்த்த எண்
திருமண எண்ணைக் அடிப்படையாகக் கொண்டு சிறந்த திருமண தேதியை எப்படி கணக்கிடுவது என்று தெரிந்து கொள்ளலாம்.
திருமண தேதியின் எண்களின் கூட்டல் 1 அல்லது 9 ஆக இருப்பது எந்த பிறப்பு எண்ணைக் கொண்ட தம்பதியருக்கும் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த தேதியாக கருதப்படுகிறது. உதாரணத்திற்கு, 22 நவம்பர் 2019 என்ற தேதியின் கூட்டல் எண் 9. ஆகவே இந்த நாள் மிகவும் மங்களகரமான நாளாக எல்லா நபருக்கும் விளங்குகிறது. ஆகவே, 2019ம் ஆண்டு விவாஹ முகூர்த்த தேதியை தேர்ந்தெடுப்பவர்கள், 1 அல்லது 9 ம் எண்ணை திருமண நாளின் கூட்டல் எண்ணாக இருக்கும் தேதியாக பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது.
மணமகனின் பிறப்பு எண் மற்றும் மணமகளின் பிறப்பு எண்ணின் கூட்டலான திருமண எண்ணும் திருமண தேதியின் எண்ணும் ஒன்றாக இருப்பதைப் போன்ற நாட்களைத் தேர்வு செய்வதால் நன்மை உண்டு. உதாரணதிற்கு, உங்கள் திருமண எண் 4 என்றால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் திருமண தேதியின் கூட்டல் எண்ணும் 4 ஆக இருக்கும்படி தேர்ந்தெடுக்கவும். திருமண தேதியின் கூட்டல் எண் 1 அல்லது 9 மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த எண்ணாகும். இந்த நாளில் திருமணம் புரியும் தம்பதியினர் மிகவும் சிறப்போடு வாழ்வார்கள். இந்த எண்கள் எந்த பிறப்பு எண்ணைக் கொண்டவருக்கும் பொருந்தும்.
மணமகனின் பிறப்பு எண் அல்லது மணமகளின் பிறப்பு எண்ணைக் கொண்ட திருமண நாளையும் தேர்ந்தெடுக்கலாம்.
திருமண எண், திருமண நாளை எப்படி பொருத்துவது?
திருமணம் செய்து கொள்ளும் ஜோடியின் பிறப்பு எண்களைக் கூட்டுவதால் கிடைக்கும் எண் திருமண எண் என்பதை நாம் அறிவோம்.
திருமண தேதி எண் என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் திருமண தேதியின் கூட்டல் எண்ணாகும்.
உங்கள் திருமண எண்கள் 1 என்றால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் திருமண தேதிக்கான கூட்டல் எண்ணும் ஒன்றாக இருப்பது சிறப்பு. திருமண எண்ணும் திருமண தேதிக்கான கூட்டல் எண்ணும் ஒன்றாக இருப்பது சிறப்பான திருமண தேதியாகும்.
விதி எண் மற்றும் திருமண தேதி எண் 1 ஒரு நபரின் பிறந்த நாளின் கூட்டல் எண்கள் என்பது விதி எண்ணாகும். விதி எண் 1 க் கொண்ட நபர் (1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்க 1 ஆக இருக்க வேண்டும்.
எண் 2
விதி எண் 2 க் கொண்ட நபர் (2, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்கள் 1 அல்லது 7 ஆக இருக்க வேண்டும்.
எண் 3
விதி எண் 3 க் கொண்ட நபர் (3 12, 30 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்கள் 3 அல்லது 9 ஆக இருக்க வேண்டும்.
எண் 4 விதி எண் 4 க் கொண்ட நபர் (4, 13, 22 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்கள் 1 அல்லது 7 ஆக இருக்க வேண்டும்.
எண் 5 விதி எண் 5 க் கொண்ட நபர் (5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்கள் 9 ஆக இருக்க வேண்டும்.
எண் 6 விதி எண் 6 க் கொண்ட நபர் (6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்கள் 6 அல்லது 9 ஆக இருக்க வேண்டும்.
எண் 7 விதி எண் 7 க் கொண்ட நபர் 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்கள் 1 அல்லது 2 ஆக இருக்க வேண்டும்.
எண் 8 விதி எண் 8 க் கொண்ட நபர் (8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண் 1 ஆக இருக்க வேண்டும்.
எண் 9 விதி எண் 9 க் கொண்ட நபர் (9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள்) திருமண தேதியின் கூட்டல் எண்கள் 3 அல்லது 6 அல்லது 9 ஆக இருக்க வேண்டும்.
நியுமராலஜிப்படி திருமணம் செய்யக்கூடாத தேதிகள் திருமண தேதியின் கூட்டல் எண்கள் 4, 8 அல்லது 5 என்று வரும் நாட்களில் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக திருமண தேதியின் கூட்டல் எண் 5 என்றால், அது விவாகரத்தை உண்டாக்கும் என்று பொதுவாக அறியப்படுகிறது. ஆகவே திருமண தேதியின் கூட்டல் எண் 5 வராமல் பார்த்துக் கொள்வது நல்லது

ஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்

பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. ஓருவரது கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும். பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவாக அவர்களுடைய செயல்பாடுகளின் பலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும். கிழமைகளும் பலன்களும் : ஞாயிற்றுக்கிழமை : ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு போட்டி மனப்பான்மை, ஆளுமைதிறன் இருக்கும். செல்வம் உடையவராய் இருப்பார்கள். கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள். திங்கட்கிழமை : திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமையானவர்களாகவும், இளகிய மனம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் கீர்த்திமான், தர்மவான், அபிமானி, அன்பானவன். இனிய சொற்களால் அனைவரையும் மயக்கிவிடுவார்கள். சுற்றமும், நட்பும் நிரம்ப பெற்றவர்களாக இருப்பார்கள். செவ்வாய்கிழமை : செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தின் மீது அதீத அன்பு கொண்டவர்கள். தந்திரக்காரனாய் இருப்பார். பிறருக்கு உதவுபவர்கள். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள். புதன்கிழமை : புதன்கிழமையில் பிறந்தவர்கள் இளமையான தோற்றம் கொண்டவர்களாகவும், இனிமையாக பேசுபவர்களாகவும் இருப்பார்கள். சிரித்த முகத்தினர். கல்வியறிவாளன், தெய்வபக்தி உள்ளவன், பிறரை மகிழ்விப்பவர். நயமாகவும், விகடமாக பேசி அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். தன்காரியம் நடக்க எதையும் செய்வார்கள். வியாழக்கிழமை : வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுப்பானவர்களாகவும், வசதியானவர்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார். அறநெறியில் விருப்பம் உடையவராய் இருப்பார்கள். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள். வெள்ளிக்கிழமை : வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் கலைகளில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர்பாலினத்தினரை கவரும் இயல்புடையவர். வாகனங்கள் உடையவர். உயர்ந்த காரியங்களைச் செய்பவராய் இருப்பார். அழகாக பேசுபவர், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், செயல் திறன் மிக்கவர்கள். சனிக்கிழமை : சனிக்கிழமையில் பிறந்தவர் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் போராடி வெற்றிபெறும் குணம் இருக்கும். தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள். பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள். மேலும், இவர்கள் நேர்மையாக நடக்க ஆசைப்படுவார்கள்.

உங்களின் பிறந்த நேரத்தின் படி உங்களின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது தெரியுமா?

இந்து மதத்தில் ஒருவரின் பிறந்த நேரம் என்பது அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. ஏனெனில் அவர்கள் பிறந்த நேரத்தை வைத்துதான் அவர்களின் ராசி, நட்சத்திரம், ஜாதகம் என அனைத்தும் கணிக்கப்படுகிறது. இதனை பொறுத்தே நமது வாழ்க்கையின் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஜாதகம் இன்றி நீங்கள் பிறந்த நேரத்தை வைத்தே உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். உண்மைதான், நீங்கள் பிறந்த நேரத்தை மட்டும் வைத்து உங்களின் குணநலன்கள், பழக்கவழங்கள் முதல் உங்கள் எதிர்காலம் வரை அனைத்தையும் கணக்கிடலாம் என்று வேதங்கள் கூறுகிறது. அதன்படி நீங்கள் பிறந்த நேரம் உங்களின் எதிர்காலத்தை பற்றி என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம். அதிகாலை 04:00 – 06:00 அதிகாலை நேரமான 4 மணி முதல் 6 மணிக்குள் பிறந்தவர்களின் ஜாதகத்தின் முதல் வீட்டில் சூரியபகவான் நிரந்தரமாக இருப்பார். உங்களுக்கு அடிக்கடி ஆரோக்கிய பிரச்சினைகள் வரும், உங்களின் தன்னம்பிக்கையை பார்த்து பலரும் பொறாமைப்படுவார்கள். உங்களின் எதிர்காலம் சூரியனை போல பிரகாசமாக இருக்கும், உங்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்தும் சற்று தாமதமாக கிடைக்கலாம் ஆனால் உங்களின் முயற்சியால் அவை எப்படியும் உங்களுக்கு கிடைத்துவிடும். காலை 06:00 – 08:00 இந்த நேரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியபகவான் 12வது வீட்டில் இருப்பார். அதனால் உங்கள் வாழ்க்கையில் பல மர்மமான நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் உங்கள் வாழ்க்கை சுவாரசியமடையும், இதனால் எதிர்பார்க்காத முடிவுகள் ஏற்படும். அமைதியான உங்கள் மனம் எப்பொழுதும் ஒழுக்கமான வாழ்க்கைமுறையையே வாழ விரும்பும். உங்களின் செலவுகளே உங்கள் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை உண்டாக்கும், எனவே நன்கு யோசித்து மமுதலீடு செய்யுங்கள். காலை 08:00 – 10:00 இந்த நேரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் நிரந்தரமாக 11வது வீட்டில் இருப்பார். இதன்படி உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகள் அனைத்தும் உங்கள் நிதி நிலையை பொறுத்தே அமையும். உங்கள் வாழ்க்கையில் பணம் முட்ட முக்கியமான பங்காற்றும். நீங்கள் நினைத்தது நடக்காதபோது அதீத மனஅழுத்தத்திற்கு ஆளாவீர்கள். உங்களின் பொறுமைதான் கடினமான சூழ்நிலைகளில் இருந்து உங்களை காப்பாற்றும். முன்பகல் 10:00 – 12:00 காலை நேரத்தின் இறுதி முடிவில் பிறந்த இவர்களின் ஜாதகத்தில் சூரியன் 10வது இடத்தில் நிரந்தரமாக வசிப்பார். சூரியன் இருக்கும் மிகவும் வலிமையான இடம் இதுதான் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தான் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை தட்டிச்செல்வார்கள். இவர்கள் மிகவும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வார்கள், அதற்காக மற்றவர்களால் பாராட்டவும் படுவார்கள். உங்கள் அதிகாரத்தை தவறான காரியங்களுக்கு பயன்படுத்துவது உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். பகல் 12:00 – 02:00 நண்பகலில் பிறந்த இவர்களின் ஜாதகத்தில் சூரியன் ஒன்பதாவது இடத்தில் வசிப்பார். இதனால் உங்கள் வாழ்க்கை பயணங்கள் நிறைந்ததாக இருக்கும். அது தனிப்பட்ட பயணமாகவும் இருக்கலாம், அலுவலக பயணமாகவும் இருக்கலாம். அவர்களின் அழகான தோற்றமும், புத்திக்கூர்மையும் கூடுதல் சிறப்புகளை அவர்களுக்கு பெற்றுத்தரும். உங்கள் வாழ்க்கை முழுவதும் அதிர்ஷ்டமும், பாராட்டுக்களும் உங்கள் கூடவே வரும். பிற்பகல் 02:00 – 04:00 பிற்பகல் நேரத்தில் பிறந்த இவர்களின் ஜாதகத்தில் சூரியன் எட்டாவது இடத்தில் வசிப்பார். நீங்கள் பணம் தொடர்பான துறையில் வேலை செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதிலும் அதிக பொறுப்பு வாய்ந்த நிலையில் இருப்பீர்கள். சூரியன் இருக்கும் இந்த இடம் உங்கள் பாலியல் வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும், விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. வாழ்க்கையின் ஒருசில காலக்கட்டத்தில் சட்டரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மாலை 04:00 – 06:00 இந்த நேரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் ஏழாவது இடத்தில் வசிப்பார். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இவர்கள் எப்பொழுதும் அதிக பொறுப்புகள் நிறைந்த இடத்தில் இருப்பார்கள். கல்யாணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் பலமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்காக பின்வாங்காதீர்கள், எனவே அதிக முயற்சி செய்யுங்கள். அதிக பேச்சு தொடர்பான வேலைகளில் பணிபுரிவது உங்களுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும். அதேசமயம் உங்களுக்கு அதிக எதிரிகள் இருக்கவும் வாய்ப்புள்ளது. மாலை 06:00 – 08:00 மாலை நேரத்தில் பிறந்த உங்களின் ஜாதகத்தில் சூரியன் ஆறாவது இடத்தில் வசிப்பார். அதன்படி உங்கள் வாழ்க்கையில் நடக்கும் பல முக்கிய நிகழ்வுகள் உங்களின் நெருங்கிய நண்பர்களை பொறுத்தும், அவர்களுடனான உங்களின் நட்பை பொறுத்தும்தான் அமையும். குடும்பம் உங்களுக்கு இரண்டாவது இடம்தான் சமூக வாழ்க்கையே உங்களுக்கு மிகவும் முக்கியம். சமூக சேவையில் அக்கறை கொண்டவராக இருப்பீர்கள். உங்களின் எச்சரிக்கை உணர்வும், கடின உழைப்பும் உங்களை வாழ்வின் உயரத்திக்கு அழைத்து செல்லும். இரவு 08:00 – 10:00 இந்த நேரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் ஐந்தாவது இடத்தில் வசிப்பார். அதன்படி உங்களுக்கு கற்பனைத்திறன் மிகவும் அதிகமாக இருக்கும். இதுவே உங்களின் ஆளுமைக்கான சிறந்த சான்றாகும். உங்களுக்கு பிடித்த துறையில் வேலை செய்யும்போதுதான் நீங்கள் நினைத்த உயரத்தை அடைவீர்கள். வெற்றியும், புகழும் உங்களை தேடிவரும், ஆனால் மற்றவர்களின் அறிவுரைக்கு மதிப்பு கொடுங்கள், இல்லையெனில் அதுவே உங்களை பிரச்சினையில் சிக்கவைக்கும். இரவு 10:00 – 12:00 இந்த நேரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் நான்காம் இடத்தில் வசிப்பார். அதன்படி நீங்கள் எப்பொழுதும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டீர்கள். நிலம் தொடர்பான வியாபாரம் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். உங்கள் வாழ்க்கையில் வரும் வெற்றி மற்றும் தோல்விகளுக்கு நீங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பாகமாட்டிர்கள். நள்ளிரவு 12:00 – 02:00 நீங்கள் நள்ளிரவிற்கு பிறகு பிறந்திருந்தால் உங்கள் ஜாதகத்தில் சூரியன் மூன்றாவது இடத்தில் வசிப்பார். அதன்படி அதிக புத்திகூர்மை வாய்ந்த நீங்கள் சாகசங்களையும், பயணங்களையும் விரும்புபவராக இருப்பீர்கள். நீங்கள் மீடியா தொடர்பான பணிகளில் இருப்பது நல்லது. உங்களின் உறவினர்களும், உடன்பிறந்தவர்களும் உங்கள் சுபாவத்தில் பல மாற்றங்களை கொண்டுவர முயற்சிப்பார்கள், எச்சரிக்கையாய் இருங்கள். மகிழ்ச்சிகரமான சமூக வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள். அதிகாலை 02:00 – 04:00 இந்த நேரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் இரண்டாவது வீட்டில் வசிப்பார். இது குடும்பம் மற்றும் நிதிநிலைமைக்கான இடமாகும். இந்திய ஜோதிட சாஸ்திரத்தின் படி இரண்டாவது வீடு உணவு மற்றும் சமையலுடன் தொடர்புடையதாகும். உங்கள் பிறந்த நேரம் இதுவாக இருந்தால் நீங்கள் உணவு தொடர்பான துறையில் முன்னேற நிறைய வாய்ப்புள்ளது.

Monday, January 21, 2019

உங்கள் காதலன்/காதலி வேறோருவருடன் தொடர்பில் உள்ளாரா? கண்டறிவது எப்படி

உறவு என்பது ஒரு அழகான பந்தம். இதில் ஏமாற்றம் வந்தால் கண்டிப்பாக சிக்கலாகி விடும். இந்த நவீன காலத்தில் கணவனும் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. நிறைய மனிதர்களை சந்திக்கிறோம், பழகுகிறோம்.
அப்படிப்பட்ட மனிதர்கள் அதோடு நின்றால் பரவாயில்லை உறவுக்குள் வரும் போது தான் ஏமாற்றமும் உறவில் நெரிசலும் உண்டாகிறது. சில பேர்கள் இந்த மாதிரியான உறவில் இருப்பதை தங்கள் மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்.
என்ன தான் அவர்கள் உங்களிடமிருந்து மறைத்தாலும் அவருடைய சில நடவடிக்கைகள் அதை காட்டிக் கொடுத்திடம். உங்கள் துணை உங்களை ஏமாற்றுகிறார் என்பதை சில செயல்களைக் கொண்டு நாம் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இதை அறிந்து கொண்டு செயல்படுவது உங்கள் எதிர்கால உறவிற்கு வழி வகுக்கும். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
தினசரி வேலையில் மாற்றம் கண்டிப்பாக கூடவே வாழும் உங்கள் துணையின் தினசரி வேலைகளை அறிந்து வைத்திருப்பீர்கள். தினசரி வேலைகளில் எதாவது மாற்றம் ஏற்பட்டால் கொஞ்சம் உஷாராக அவர்களை கவனிக்க வேண்டும். இந்த மாற்றங்களாக கூட இருக்கலாம்
வழக்கத்தை விட உங்கள் துணை கவனமாக செயல்படுதல் புதியதாக ஒரு பொழுதுபோக்கை கையில் எடுத்தல், உங்கள் இருவருக்கிடையே உரையாடல் குறைதல், திடீரென்று தனியாக வெளியே செல்ல நினைத்தல், முன்னாடியை விட அதிகமாக சண்டை இடுதல், இப்படி அவர்களை அணுகாதவாறு சில நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள், ரெம்ப ரகசியமாக சில செயல்களை கையாள ஆரம்பிப்பார்கள்.
மொபைல் போன் செயல்கள் உங்கள் துணை உங்களை ஏமாற்றுகிறார் என்றால் அவரின் மொபைல் போன் நடத்தை மாறியிருக்கும். வழக்கத்தை விட அதிகமாக மொபைல் போன் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். மெசேஜ், சேட்டிங் இப்படி எல்லாவற்றிற்கும் பாஸ்வேர்ட் போட்டு மறைக்க முயல்வார்கள். வலைதளங்களில் அதிக நேரம் நேரத்தை செலவு செய்வார்கள். அவர்களுடைய போனை தொடும் போதெல்லாம் கத்த ஆரம்பிப்பார்கள்.
விருப்பமின்மை உங்களுடன் நேரம் செலவு செய்ய விரும்பமாட்டார்கள். இதற்கு காரணம் அவர்களின் கவனத்தில் வேறு ஒருவர் இருப்பது தான். முன்னாடி இருந்த மாதிரி உங்கள் உறவில் முழு ஈடுபாட்டை காட்ட மாட்டார்கள். உங்கள் தீர்மானங்களுக்கு உதவ மாட்டார்கள்.
தங்களை நன்றாக பார்த்துக் கொள்ளுதல் அவர்களுடைய தோற்றத்தில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள். முன்னாடி இருந்ததை விட தங்கள் ஆடைகளை அணிவதில் மெனக்கெடுவார்கள். பேஷன் மற்றும் பெர்மியூம் போன்றவற்றின் சைடு சாய ஆரம்பித்து விடுவார்கள்.
ஏமாற்றுவதை அறிந்தால் என்ன செய்ய வேண்டும்
உங்கள் துணை உங்களை ஏமாற்றுவது உண்மை என தெரிந்து கொண்டால் அதை நிரூபிக்க போதிய ஆதாரங்களை வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் மறுக்க வாய்ப்புள்ளது.
இப்பொழுது சரியான முடிவு எடுக்க வேண்டிய நேரம் உங்கள் துணையுடன் அமர்ந்து இது குறித்து பேசுங்கள். வாக்கு வாதமாக இல்லாமல் உங்கள் எதிர்காலத்தை பற்றிய ஒரு நிதானமான பேச்சுவார்த்தையாக இருக்கலாம். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் இருவருக்கும் ஏற்றவகையில் ஒரு முடிவை எடுங்கள். முடிவை எடுப்பதற்கு முன் கவனமாக செயல்படுவது நல்லது.

Sunday, January 20, 2019

பிரதோஷம்

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருநடம் புரிந்து காட்சியளிக்கிறார். அப்பொழுது கலைமகள் வீணை வாசிக்க, அலை மகளான லட்சுமி தேவி பாடுகிறாள், திருமால் மிருதங்கம் வாசிக்க இந்திரன் புல்லாங்குழல் ஊதுகிறார். பிரம்மதேவர் தாளமிட தேவர்கள் முனிவர்கள் யாவரும் கைலாயம் வந்து இறைவனை வணங்குகிறார்கள் என்பது புராதன வரலாறு. ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும். இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும். இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும். எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் "சனிப் பிரதோஷம்" என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் "மஹாப் பிரதோஷம்" என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை. பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?

மன தைரியம் பெற ஸ்லோகம்!!

முன்னொரு காலத்தில் புகழ்பெற்ற குரு ஒருவர் இருந்தார். இவரிடம் இளைஞன் ஒருவன் சீடாக இருந்தான். தன்னுடைய சுற்றுப்புறத்தைப் பற்றியோ, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியோ யோசிக்க மாட்டான். குருகுலத்திற்கு வந்து போகிறவர்கள் அவனைப் பார்த்துவிட்டு, “இவன் பூமிக்குப் பாரம், சோற்றுக்குத் தெண்டம்’ என்று ஏளனம் பேசினர். அவனைப் பற்றி சுவாமிகளிடம் குறை கூறினர். சுவாமிகளின் பார்வையோ வேறுவிதமாய் இருந்தது. அவருடைய கண்ணுக்கு அந்த இளைஞன் ஞானானுபவத்தில் திளைப்பவனாகவே தெரிந்தான். அவனுடைய அறிவு தீட்சண்யத்தை அவர் சரிவரப் புரிந்து கொண்டிருந்தார். எனவே, தம்முடைய வாரிசாக அவனைக் கருதி வந்தார். அன்று நள்ளிரவு நேரம். குருநாதர், தம்முடைய மாணவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தார். அங்கே அந்த இளைஞனை தவிர மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பக்கத்தில், அவர்கள் படித்த புத்தகங்கள் கிடந்தன. அவனைத் தேடிக்கொண்டு வெளியே வந்தார் குருநாதர். அவன், கொடும்பனியில் நட்டநடு வழியில் படுத்திருந்தான். அவனருகே, ஒரு சுவடி நூல் இருந்தது. அதில் ஆங்காங்கே, அவன் எழுதிய விளக்கக் குறிப்புகளும் காணப்பட்டன. அவற்றை மேலோட்டமாய் பார்த்த குருநாதர் வியப்புற்றார். தூங்கிக் கொண்டிருந்த சீடனை தொந்தரவு செய்ய விரும்பாமல், தன்னுடைய மேலாடையை எடுத்து அவருக்குப் போர்த்தினார். சுவடிக் கட்டுடன் உள்ளே சென்றார். இரவு நெடுநேரம் வரை சீடனின் குறிப்புரைகளை அவர் அக்கரையோடு படித்தார். தமக்குள் பாராட்டிக் கொண்டார். பொழுது விடிந்தது. கண்விழித்தான் இளைஞன். பக்கத்தில் சுவடிகளைக் காணவில்லை. குருவின் மேலாடையை யாரோ அவன் மீது போர்த்தியிருந்தனர். மாணவர்களில் யாரேனும் அந்தக் குறும்புச் செயலைக் செய்திருக்க வேண்டும் என்று பட்டது. ஆனாலும், குருவின் மேலாடையை இரவு முழுதும் தான் போர்த்திக் கொண்டிருந்தோம் என்பதே அவனுக்கு நடுக்கத்தைக் கொடுத்தது. குருவிடம் மன்னிப்பு கேட்பதற்காக அவருடைய அறைக்குச் சென்றான் இளைஞன். குருநாதர் அவனை வரவேற்று, “”நீதான் இதையெல்லாம் எழுதியதா?” என்று அன்புடன் கேட்டார். “”ஐயனே! நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்!” என்று கூறியபடி, அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான். “”தன் சீடன் மற்றவர்கள் நினைக்கிற மாதிரி ஒன்றும் மந்தபுத்திக்காரன் அல்ல; அவன் ஞானவான்!” என்று எல்லாரிடமும் பெருமையாய் சொன்னார் சுவாமிகள். அன்று முதல் அந்த இளைஞனை தம்முடைய முதன்மைச் சீடராக அறிவித்தார் குரு. அந்தச் சீடர்தான் பிற்பாடு, ஸ்ரீ ராகவேந்திரர் என்று உலகோரால் வணங்கிப் போற்றப்படுபவர். ராகவேந்திரர் இயற்றிய சுந்தரகாண்ட ஸ்லோகம் படிப்போருக்கு மன தைரியம் அதிகரிக்கும். யஸ்ய ஸ்ரீஹனுமானனுக்ரஹபலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்காம்ப்ராப்ய நிஸாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷ ஸான்! அக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்யதஸகம் தக்த்வா புரீம் தாம் புன: தீர்ணாப்தி: கபிபிர்யுதே யமனமத்தம் ராமசந்த்ரம் பஜே! பொருள்: யாருடைய அருளின் வலிமையால் அனுமன் எந்தகளைப்பும் இல்லாமல் கடலைத் தாண்டி ராமனின் அன்புக்குரிய சீதையைக் கண்டாரோ, அசோக வனத்தை சேதப்படுத்தினாரோ, அட்சகுமாரன் முதலிய அரக்கர்களைக் கொன்றாரோ, ராவணனைக் கண்டு இலங்கையை தீக்கிரையாக்கினாரோ, மறுபடியும் கடலைத் தாண்டினாரோ, மகேந்திர மலையில் இருக்கும் வானரங்களுடன் சாஷ்டாங்கமாய் யாரை வணங்கினாரோ, அப்படிப்பட்ட ராமரை வணங்குகிறேன்.

தீராத நோய் தீர்க்கும் தைப்பூசம் விரதம்

தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்
1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.
3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.
4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.
5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.
6. சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார்.
7. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
8. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.
9. தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக்கிறார்கள்.
10. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.
11. தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
12. தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.
13. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.
14. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.
15. தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டான்.
16. சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.
17. தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
18. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.
19. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.
20. தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத் தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.
21. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.
22. குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. சப்த கன்னி யருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.
23. தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.
24. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.
25. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப் படுவது மலேசியாவில் மட்டுமே.
26. மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.
27. விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.
28. ஆய்குடி ஹரிராம சுப்பிரமணியர் ஆலயத்தில் தை மாதம் புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறும். அன்று பாலசுப்பிரமணியர் கருவறையை பூக்களால் நிரப்புவர். தைப்பூசத்தன்று நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம் இங்கு மிகவும் புகழ் பெற்றது.
29. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
30. நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப் பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும்.
31. நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வள்ளி மலை. வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப் படுகிறது. அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.
32. கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரி யானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெரு மாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.
33. இலங்கையில் நல்லூர் என்னும் திருத் தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடு கிறார்கள். வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள். இங்கு தைப்பூச விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.
34. மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம். இந்தக் குகைக் கோவிலின் முகப்பில் 42.7 மீட்டர் (141 அடி) உயரமுள்ள முருகப்பெருமான் அருள் புரிகிறார். இந்தச்சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழி வார்கள். இங்கு தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
35. திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் தவிமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.
36. திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத்தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர்.
37. சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூச நாள்தான். இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர்.
38. எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர். பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக்கூடாது. ‘பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது’ என்பது பழமொழி.
39.சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர். வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப்பூசத்தன்று பஜனைப் பாடலாக வள்ளி மலையில் பக்தர்கள் பாடுகின்றனர்.
40. திருவிடைமருதூரில் உள்ள காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை என்று பெயர். இதற்கு கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசத்தன்று சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் இப்பூசத் துறைக்கு வந்து, தீர்த்தவாரி கண்டு வீதி வழி ஆலயம் வருவார்கள். இக்காட்சி காணக்கிடைக்காதது. அத்துடன் இப்பூச நன்னாளில் இங்கு மூன்று நாட்கள் ஆரியக் கூத்து நடத்துவார்கள். ஆலயத்தில் அன்று விசேஷ பூஜை நடைபெறும்.

Friday, January 18, 2019

சூடு நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடித்தால் பல நோய்கள் குணமாகும் தெரியுமா?

நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா?
அப்படியெனில் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான சூழ்நிலையில் மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இயற்கை வழிகளை நாடினால் நல்ல பலன் கிடைக்கும்.
அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இங்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
அது தான் மஞ்சள் தூள் கலந்த துளசி நீர். இந்த நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பானம் தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால் பானம் ரெடி!
சளி குணமாகும்
அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இந்த நீரை குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் நுரையீரலில் உள்ள அழற்சி மற்றும் சளித் தேக்கத்தைக் குறைத்து, சளி பிடிப்பதைத் தடுக்கும்
ஆஸ்துமா
துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவும்.
சிறுநீரகம் சுத்தமாகும்
இந்த இயற்கை பானம் சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.
மன அழுத்தம் நீங்கும்
துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மலச்சிக்கல் நீங்கும்
நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வந்தால், இந்த பானம் குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சனையை உடனடியாக தடுக்கும்.
அசிடிட்டி குறையும்
துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி பிரச்சனையைக் குறைக்கும்.
அல்சர் சரியாகும்
இந்த இயற்கை பானத்தில் உள்ள மருத்துவ குணங்கள், வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்து, அல்சர் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.
செரிமானம் மேம்படும்
மஞ்சள் கலந்த துளசி நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
தலைவலி குணமாகும்
தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
புற்றுநோய்
இந்த இயற்கை பானத்தை ஒருவர் தினமும் குடித்தால், தற்போது பலரைத் தாக்கும் பல்வேறு புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். இதற்கு அவற்றில் உள்ள சக்தி வாய்ந்த பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் தான் காரணம்.
கொலஸ்ட்ரால் குறையும்
கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும்.

Thursday, January 17, 2019

பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்க

பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்..!! தனது இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டரை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
அதே நேரம் ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் மறுமுனையில் நோயளிக்கு பரிந்துரைத்தார் அதனை செய்தவாறு நோயாளி இருந்தார். எனினும் மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார். நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார் – தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார். இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம். இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்,,
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள் சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

பிறந்த தேதியை வைத்து வீட்டில் வைத்திருக்க வேண்டிய பொருள்கள்!

ஒருவர் பிறந்த தேதியைக் கொண்டு, அவர்களது குணநலன்கள், விருப்பு வெறுப்புகள் மற்றும் அவர்களது எதிர்காலத்தைக் கூற கணிக்க முடியும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் ஒருவர் பிறந்த தேதியின் படி, எந்த வகையான பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 1 ஆக இருந்தால் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 2 ஆக இருந்தால் வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த ஷோ பீஸ் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வராமல் தடுக்கும்.
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 3 ஆக இருந்தால் 3 ஆக இருந்தால், வீட்டின் வடகிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 4 ஆக இருந்தால் கண்ணாடியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக கண்ணாடியை வைத்திருக்கும் போது, அந்த கண்ணாடி முழுமையாகவும், பெரிதாகவும் இருக்க வேண்டும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 5 ஆக இருந்தால் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி படத்தை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 6 ஆக இருந்தால் வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் பணப் பெருக்கம் அதிகரிக்கும்.
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 7 ஆக இருந்தால் வீட்டின் தென்கிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் அடர் ப்ரௌன் நிற ருத்ராட்சையை வைக்க வேண்டும்.
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 8 ஆக இருந்தால் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இது கெட்ட ஆற்றலை வெளியேற்றி நல்ல ஆற்றலை வீடு முழுவதும் உலாவச் செய்கிறது.
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 9 ஆக இருந்தால் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருப்பது நல்லது.

பல்லி சொல் பலன்கள்

நமது வீட்டின் சுவர்களில் சுற்றித் திரியும் பல்லிகளை நீங்கள் உற்றுக் கவனிப்பது உண்டா..? இல்லை என்றால் இனி கூர்ந்து கவனியுங்கள். அவை ஒருவகையான சத்தம் எழுப்பும். அதிலிருந்து நலல்து நடக்கும், கெட்டது நடக்கும் இது போன்ற செய்திகளை நமது பாட்டி சோல்ல கேட்டதுண்டு. அவற்றை பற்றி பார்ப்போம்.
பல்லி கிழக்கே சொல்லுமாகில் அதன் பலம் ராகு கிரகத்தின் சாரம்சத்தை பெற்றிருக்கும். இதன் காரணமாக எதிர்பாராத ஒரு பயத்தை, அசுபச் செய்தியை இது முன்கூட்டி தெரிவிப்பதாக அர்த்தம்.
இதே கிழக்கு திசையில் அடுத்த வீட்டில் அல்லது அடுத்த மனையில் இருந்து சொன்னால் உடனடியாக ஏதோ ஒரு கெடுதல் நடப்பதாக அர்த்தம். குறிப்பாக உடல் நலம் இல்லாத பெரியவர்கள் மரணிப்பார்கள்.
தென்கிழக்கு திசையாக அக்கினி மூலையில் இருந்து கொண்டு பேசினால் உடனடியாக கலகம் வரும். இந்த நாளில் இருந்து ஒருவாரத்திற்குள் நமது இல்லத்தில் மரணச் செய்தி வந்தடையும்.
தென்திசையில் இருந்து கொண்டு சொன்னால் செவ்வாய் கிரகத்தின் சாரம் சத்தை பெறுவதால் இதன் பலன் எதிர்பாராத சுக சவுகரியங்களையும் எதிர்பாராத அதிர்ஷடத்தையும் தெரிவிக்கும்.
இந்த தெற்கு திசை அடுத்த வீட்டு அல்லது அடுத்த மனையிலிருந்தோ சொல்வதாக இருந்தால் எதிர்பாராத தோல்வி, துக்க செய்தி, எதிர்பாராத விரயம் முதலியவைகளை குறிப்பிடும்.
தென்மேற்கு மூலையாகிய நிருதி திசையில் இருந்து சொன்னால் அதற்கு புதன் கிரகத்தின் சாராம்சம் பொருந்தி யிருக்கும். இதன் காரணமாக இதன் ஜெனபந்துக்கள் வருகையும், இனஜென்ம பந்துக்கள், நண்பர்களால் நன்மைகளும் ஏற்படும்.
மேற்கு திசையில் இருந்து சொல்லுமானால் சனி கிரகத்தின் சாராம்சம் பொருந்தியிருக்கும். சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கு எச்சரிக்கையாகும்.
இதே மேற்கு திசை அல்லது வீடு அல்லது அடுத்த மனையாக இருக்குமானால் உடனடியாக கெடுதல்களும் வந்து சேருவதை எச்சரிப்பதாகும். வடதிசையாக வாயு மூலையில் இருந்து பேசுமானால் சுபச்செய்தி வரும்.

Wednesday, January 16, 2019

Purada Ekadasi,புத்ரதா ஏகாதசி 17.01.2019 (புஷ்ய (தை) மாதம் - ‍ சுக்ல‌பட்ச ஏகாதசி)

புத்ரதா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம். அர்ஜூனன் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதாரவிந்தங்களில் நமஸ்கரித்து, சிரத்தையுடனும் பணிவுடனும் கிருஷ்ணரிடம், " ஹே சச்சிதானந்தபரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ணா!, இப்பொழுது தை மாதம் சுக்லபட்ச ஏகாதசியைப் பற்றி கூறுங்கள்" என்று வேண்டி நின்றான். இந்தஏகாதசியின் மகத்துவம், அதன் பெயர், அன்று வழிபட வேண்டிய தெய்வம், விரத வழிமுறைகள், இவற்றைப்பற்றி எல்லாம் விரிவாகஉபதேசிக்க வேண்டும்" என்றான்.
அர்ஜூனின் வேண்டுகோளைக் கேட்ட ஸ்ரீ கிருஷ்ணர்," ஹே ராஜனே, புஷ்ய (தை) மாதம் சுக்ல பட்ச ஏகாதசி, புத்ரதா ஏகாதசி என்னும்பெயரால் அறியப்படுகிறது. முந்தைய ஏகாதசி மஹாத்மியங்களில் கூறிய பூஜை விதிகளின் படி அன்று பூஜை செய்ய வேண்டும். விரதநாளன்று வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். இவ்வுலகில் புத்ரதா ஏகாதசி விரதத்திற்கு சம்மான விரதம் வேறுஎதுவும் இல்லை. இவ்விரதம் மேற்கொள்ளுவதால் கிட்டும் புண்ணிய பலன் ஆனது ஒருவரை தபஸ்வி, வித்வான் மற்றும் தனவான்ஆக்கும் வல்லமை பெற்றது. இந்த ஏகாதசியின் மஹிமையைக் கூறும் பிரசித்தி பெற்ற கதையை உனக்கு கூறுகிறேன். கவனத்துடன்கேள்." என்றார்.
"ஒரு சமயம், பத்ராவதி நகரில் சுகேதுமான் என்னும் பெயர் கொண்ட ராஜன், ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு புத்ர பாக்கியம்இல்லாமல் இருந்தது. அவன் மனைவியின் பெயர் ஷௌவ்யா. அவளுக்குக் குழந்தை இல்லாததால், அதைப் பற்றிய கவலையில் சதாசர்வ காலமும் (அதைப் பற்றிய) கவலையுடன் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தாள். ராஜாவின் மனதையும் குழந்தை இல்லா குறையும், தனக்கு பிறகு தனக்கும், தன் மூதாதையர்களுக்கும் யார் பிண்ட தானம் அளிப்பர் என்ற கவலையும் மிகவும் வருத்திக்கொண்டிருந்தது.
அவனின் மூதாதையர்களும், இவனுக்குப் பிறகு யார் தங்களுக்கு பிண்டம் வழங்குவர் என்ற கவலையால், அழுது கொண்டே அவன்வழங்கிய பிண்டத்தை பெற்றனர். ராஜாவை சுற்றியிருந்த உற்றார், உறவினர், மந்திரி, நண்பர், ராஜ்ஜியம், யானை, குதிரை எதுவும்அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. இதற்கான ஒரே காரணம் குழந்தை இல்லை என்பது தான். புத்ரர் இல்லாமல் பித்ரு மற்றும்தேவர் கடனிலிருந்து விடுபட இயலாது. மழலைச் செல்வம் இல்லா வீட்டில் எப்போதும் இருட்டு குடி கொண்டிருக்கும்.
இப்படியாக ராஜா சுகேதுமான் இரவு - பகல் இதைப் பற்றிய சிந்தனையுடனே குழம்பித் தவித்துக் கொண்டிருந்தான். இதேசிந்தனையில் ஒரு நாள் மிகவும் துக்கமடைந்து (व्यथित) தன் உயிரைத் தியாகம் செய்தால் என்ன என்னும் எண்ணம் தோன்றியது. ஆனால்தற்கொலை செய்வது மிகவும் கோழையான செயல் மட்டுமல்ல மிகவும் பாபகரமான செயலும் ஆதலால் அத்தகைய எண்ணத்தைகைவிட்டான்.ஒரு நாள் இதே சிந்தனையில் ஆழ்ந்து குதிரையில் அமர்ந்து வனத்தை நோக்கி பயணித்தான்.
ராஜா குதிரையில் பயணத்தின் இறுதியில் வனத்தை அடைந்தான். வனத்தில் பட்சிகளையும், விருட்சங்களையும் கண்டு கொண்டேபயணித்தான். வனத்தில் மிருகங்கள், சிங்கம், குரங்குகள், சர்ப்பம், புலி இவையெல்லாம் சஞ்சரித்துக் கொண்டு இருப்பதை கண்டான். யானைகள், தன் மனைவி மற்றும் குட்டிகளுடன் ஆனந்தமாக சஞ்சரிப்பதை கண்டான். அந்த‌ வனத்தில் ராஜா வெகு துரத்தில்சிங்கத்தின் கர்ஜனை சப்தத்தையும், அழகிய மயில், தன் குடும்பத்தாருடன் குதூகலமாக நடனமாடுகிற காட்சியையும் கண்டான்.
வனத்தின் சந்தோஷமான காட்சிகளைக் கண்டதும், 'தான் ஒருவன் மட்டும் ஏன் புத்ர பாக்கியம் இல்லாமல் போனோம்!!' என்றகவலையால் ராஜாவின் துக்கம் அதிகமாயிற்று. இதே சிந்தனையில் நேரம் போனதே தெரியவில்லை. மத்தியான வேளைஆகிவிட்டதால், பசியும், தாகமும் ராஜாவை வருத்தியது.
அநேக யக்ஞங்கள், பிராமமணர்களுக்கு மதுரமான போஜனம் இவையெல்லாம் செய்தும், எனக்கு ஏன் இந்த துக்ககரமான நிலைஏற்பட்டது?' என்று சிந்தனையில் ஆழ்ந்தான். 'இத‌ற்கான காரணம் என்ன? யாரிடம் சென்று என் நிலைமையை சொல்லுவேன்?. யார்என்னுடைய அவஸ்தையை கேட்பர்?' என்று பலவிதமாக எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டான். இப்படி சிந்தனையின் வசப்பட்டராஜா தாகத்தால் தவிக்க‌ ஆரம்பித்தான். தொண்டை வறண்டு போனதால், குடிநீரைத் தேடி அலைந்தான். தேடிக் கொண்டேவந்தவனுக்கு, சற்று துரத்தில் தாமரை மலர்கள் நிறம்பிய ஒரு சரோவரம்(குளம்) தென்பட்டது. நாரை, அன்னம், முதலை, மீன்கள்ஆகியவை நீரில் ஜலக்கிரீடை செய்து வந்தன. தடாகத்தைச் சுற்றி நாலா பக்கங்களிலும் தவத்தில் ஆழ்ந்த முனிவர்களின் ஆசிரமங்கள்அமைக்கப்ப்ட்டு இருந்தன. அவ்வேளையில் ராஜாவின் வலது கண் துடித்தது. அதை நற்சகுனமாக கருதி மகிழ்ச்சியடைந்து, குதிரையில் இருந்து இறங்கி தடாகத்தின் கரையில் அமர்ந்திருந்த முனிவர்களுக்கு நமஸ்காரம் செய்து, அவர்கள் முன்னால்அமர்ந்தான்.
முனி சிரேஷ்டர் ராஜனைக் கண்டு,"ஹே ராஜன், உன்னைக் கண்டு அத்யந்த ஆனந்தமடைந்தோம். உனக்கு என்ன வேண்டும் கேள்!!." என்றார்.
ராஜா," ரிஷி சிரேஷ்டரே, தாங்கள் யார்? எதற்காக இத்தடாகத்தைச் சுற்றி பர்ணசாலை அமைத்து குடிக்கொண்டு இருக்கிறீர்கள்?." என்று வினவினான்.
முனிவர் அதற்கு," ராஜனே, இன்று குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு உத்தமமான சந்தானத்தை அளிக்கும் புத்ரதா ஏகாதசிநாளாகும். நாங்கள் விஸ்வதேவர்கள் ஆவோம். இன்றிலிருந்து ஐந்தாவது நாள் மாசி மாத ஸ்நான நாள் ஆகும். அன்று இத்தடாகத்தில்ஸ்நானம் செய்வதற்காக வந்துள்ளோம்" என்றார்.
இதைக் கேட்டதும் ராஜன்," முனி சிரேஷ்டரே!, நானும் புத்ர பாக்கியம் இல்லாமல் வருந்துகிறேன். நீங்கள் என் மீது இரக்கம் கொண்டு, எனக்கு புத்ர பாக்கியம் அருளும் வரத்தை அளிக்க வேண்டும்." என்றான்.
முனிவர்," ஹே ராஜன், இன்று அற்புதமான புத்ரதா ஏகாதசி நாளாகும். நீ இன்று விதிப்படி ஏகாதசி விரதத்தை கடைப்பிடி. பகவான்நாராயணனின் கிருபாகடாக்ஷத்தால் உனக்கு நிச்சயம் புத்ரன் பிறப்பான்." என்று அருளினார்.
முனிவரின் வார்த்தைப்படி ராஜா, அன்று ஏகாதசி விரதத்தை விதிப்படி அனுஷ்டித்து, மறுநாள் துவாதசியன்று விரதத்தை நிறைவுசெய்தான். பிறகு முனிவர்களை நமஸ்கரித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு நாட்டிற்குத் திரும்பினான். பகவான்நாராயணனின் திருவருளால் சில மாதங்களில் மகாராணி கர்ப்பம் அடைந்தாள். பிறகு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு உத்தமமானபுத்ரனை பெற்றாள். ராஜகுமாரன் வளர்ந்து அதிபராக்கிரமசாலியாகவும், தனவானாகவும், யசஸ்வியாகவும், மக்களைரட்சிப்பவனாகவும் விளங்கினான்''..
இவ்வாறு அருளிய‌ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா," ஹே அர்ஜூன்!, புத்ர பாக்கியம் வேண்டுவோர் அவசியம் புத்ரதா ஏகாதசி விரதத்தைஅனுஷ்டிக்க வேண்டும். புத்ர பாக்கியம் அளிப்பதில் இதைவிட மேலான விரதம் வேறு எதுவும் இல்லை. எவர் ஒருவர் புத்ரதா ஏகாதசிமஹாத்மியத்தை படிக்கிறாரோ, கேட்கிறாரோ அல்லது விதிப்பூர்வமாக ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கிறாரோ, அவர் சர்வநற்குணங்களும் கொண்ட உததமமான புத்ர ரத்னத்தை பெறுவார். ஸ்ரீமன் நாராயணன் அருளால், விரதத்தை அனுஷ்டிப்பவர் மோட்சப்பிராப்தியையும் அடைவார்" என்று அருளினார் .
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹ‌ரே ஹரே
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
On 18th Jan, Parana Time - 06:39 AM to 10.14 AM Ekadashi Tithi Begins - 12:03 AM on Jan 17, 2019,Ekadashi Tithi Ends - 10:34 PM on Jan 17, 2019 Hare Krishna

Monday, January 14, 2019

உங்களுடைய ராசிக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் தெரியுமா? அப்ப இத படிங்க!

உங்களுடைய ராசிக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும்? ஒருவருடைய ராசியை வைத்து அவர்களுக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் என்பதையும், எப்படிப்பட்ட வாழ்க்கை துணை கிடைக்கும் என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.
மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்கள் எந்தவொரு விஷயத்தையும் சீக்கிரமாக யோசித்து முடிவு செய்வார்கள். இவர்கள் எதையும் அதிகமாக யோசிக்காமலேயே எடுக்கும் முடிவு கூட சரியானதாகவே இருக்கும். இவர்களுக்கு இருபது வயதுக்கு மேலும் அல்லது முப்பது வயதுக்குள்ளும் திருமணம் நடக்கும்.
ரிஷப ராசி: ரிஷப ராசிக்காரர்கள் தங்களது வேலை மற்றும் வாழ்க்கையில் மிகவும் கவனமாகவும், திறமையாகவும் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் அதிக நம்பிக்கை இருக்கும். வயது என்பது இவர்களுக்கு ஒரு எண் மட்டுமே.
மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் இரு மனதாகவே இருப்பார்கள். இவர்கள் முடிவு எடுப்பதில் அதிக சிரமப்படுவார்கள். ஆனால், இவர்கள் எடுத்த முடிவில் தீர்மானமாக இருந்தால் 30 வயதிற்குள் திருமணம் நடக்கும்.
கடக ராசி: கடக ராசிக்காரர்கள் நீண்ட கால உறவு வேண்டும் என்றே நினைப்பார்கள். காதலில் புதுமைகள் வேண்டும் என்று நினைக்கும் இவர்களுக்கு 20 வயதிற்கு முன்னரே திருமணம் யோகம் வந்துவிடும்.
சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்கள் எதையும் யோசித்து, மிகச்சிறந்ததையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இவர்கள் இயற்கையாகவே ஒருவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின்னர் தான் காதலிக்க தொடங்குவார்கள். இவர்களுக்கு 20 வயதிற்கு மேல் அல்லது 30 வயதிற்கு முன் திருமணம் நடக்கும்.
கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்கள் மிகச்சிறந்த ஒருவரை கண்டால் மட்டுமே அவர் மீது காதலில் இணைவார்கள். ஆனால், இவர்களுக்கு 20 வயதிற்கு மேல் சிறந்த துணை கிடைக்கும்.
துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், இவர்கள் தனது உண்மையான துணையை கண்டுபிடிக்க சிறிது காலம் ஆகும். இவர்களுக்கு திருமண யோகம் 20 வயதிலேயே ஆரம்பித்து விடும்.
விருச்சக ராசி: விருச்சக ராசிக்காரர்கள் ஒரு மிகச்சிறந்த காதலர். அதனால் இவர்களுக்கு மனதிற்கு பிடித்த மாதிரி ஒரு நல்ல துணை எளிதில் கிடைத்துவிடும். அத்தகைய துணையை எப்போது திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு காதல், திருமணம் போன்ற விஷயங்கள் அனைத்தும் பிடிக்காத ஒன்று. எனவே இவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் பலமுறை யோசித்து நிதானமாக முடிவு செய்து கொள்வது சிறந்தது. ஆனால், இவர்களுக்கு 30 வயதிற்குள் திருமணம் நடக்கும்.
மகர ராசி: மகர ராசிக்காரர்கள் தங்களின் கடமையில் கவனமாக இருப்பார்கள். இவர்கள் மிகச்சிறந்த ஒரு நல்ல துணையாக இருப்பார்கள். இவர்களுக்கு 20 வயதிற்கு முன்னரே திருமண யோகம் ஆரம்பித்து விடும்.
கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்கள் தனக்கென்ற தனிமையான சுதந்திரத்தை விரும்புவார்கள். ஆனால், இவர்கள் துணையை தேடுவதில் அவசரப்படக் கூடாது. இவர்களுக்கு எந்த வயதிலும் ஒரு நல்ல துணை கிடைக்கும்.
மீன ராசி: மீன ராசிக்காரர்கள் காதல் மற்றும் வாழ்க்கையை பற்றி நிறைய கனவுகள் வைத்திருப்பார்கள். இவர்கள் தனது உணர்வுகளையும், யோசனைகளையும் புரிந்து கொள்ளும்படியான ஒரு நல்ல துணையை தேட வேண்டியது அவசியம். ஆனால், இவர்களுக்கு ஏற்ற துணை கிடைக்க நீண்ட நாட்கள் ஆகும்.

உங்கள் துணையின் உண்மை தன்மையை அறிய

தங்கள் துணையிடம் அநேகமாக பெரும்பாலானவர்கள் எதிர்ப்பார்க்கும் பண்பானது உண்மை. சிலர் தங்களது உறவில் உண்மையாக இருப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் கணவன் அல்லது மனைவி அல்லது இருவருமே கள்ள உறவை வைத்திருக்கலாம். ஆனால் பயப்படும் அளவிற்கு இல்லாமல் அந்த எண்ணிக்கை மிகவும் குறைவே. உங்க இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாங்களான்னு பாத்துரலாமா??? முற்காலத்தில் நம் துணையால் நாம் ஏமாற்றப்பட்டால், அது மீண்டும் நடக்காமல் தடுக்க முயற்சி செய்வது முக்கியமாக கருதப்படும். இதனை மனதில் வைத்துக் கொண்டு, உண்மை என வந்து விட்டால் எந்த ராசிக்காரர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள் என்பதைப் பார்க்கலாமா? இதை பார்க்கும் போது யார் அதிகமாக ஏமாற்றுகிறார்கள் என்பதையும் பார்க்க தானே வேண்டும்
மேஷம்: அந்தளவிற்கு நம்ப முடியாது சார்பில்லாமல் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களான இவர்கள் தங்கள் செயல்களுக்கான விளைவுகளை முழுமையாக கருதுவதற்கு முன்னதாகவே செயல்பட தொடங்கி விடுவார்கள். துணிகரமான செயல்களின் மீது தீராத பசியை கொண்டவர்கள் இவர்கள். அதனால் பல காதலர்களையும் பல உறவுகளையும் கொண்டிருப்பவர்கள் இவர்கள். உங்கள் துணையானவர் மேஷ ராசிக்காரர் என்றால், நீங்கள் திடமாக, செயல்களுக்கு தயாராக, ஆச்சரியங்களை எதிர்நோக்கி இருக்க வேண்டும். தொடர்ச்சியான காலத்திற்கு ஒரே அமைவுமுறையில் ஒட்டி கொண்டு வாழ்வதை அவர்கள் வெறுப்பார்கள். அதனால் உங்களது மேஷ ராசி துணை உங்களுடன் எப்போதும் நெருக்கமாக இருக்க வேண்டுமென்றால், காலத்திற்கேற்ப அவ்வப்போது மாற்றங்களை கொண்டு வாருங்கள். அவர்கள் வேகத்திற்கு உங்களால் ஈடுகொடுக்க முடியாமல் போகும் போது தான் அவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள்
ரிஷபம்: முழுமையான நேர்மை உங்கள் துணை ரிஷப ராசிக்காரர் என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் தான் அனைத்து ராசிக்காரர்கள் மத்தியில் மிகவும் நேர்மையானவர்கள். நிலைத்தன்மையை நம்பும் ரிஷப ராசிக்காரர்களை தீவிரமாக சார்ந்திருக்கலாம், நம்பலாம். தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் இவர்கள். திருமணம் அல்லது அது சார்ந்த உறவு தடைகளும் இதில் அடக்கம். சில ரிஷப ராசிக்காரர்களால் தங்கள் உறவை கைவிட கஷ்டமாக இருக்கும். அதற்கு காரணம் தாங்கள் விரும்புபவர்கள் தங்களையும் அதே போல் காதலிக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். ஒரு வேளை நீங்கள் அவர்கள் மீது சந்தேகப்பட்டால் அவர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது.
மிதுனம்: அந்தளவிற்கு நம்ப முடியாது இந்த இரட்டையர் ராசிக்காரர்கள் துணிச்சல் மிக்கவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள். உற்சாகத்துடன் இருப்பதை நம்பும் இவர்கள் சில நேரங்களில் ஆபத்தானவர்களாகவும் திகழ்வார்கள். குறும்புக்காரர்களான இவர்கள் விளையாட்டு விளையாடுவதை விரும்புவார்கள்; மனதோடு விளையாடும் விளையாட்டையும் சேர்த்து. மிதுன ராசிக்காரருடன் நீங்கள் டேட்டிங் செய்தால், இரட்டையர் ராசிக்காரரான அவர் ஏழரையை இழுத்து விடுவார். ஒரு துணைக்கு மேலானவர்களை மாற்றிக் கொள்ளும் திறனை படைத்தவர்கள் இவர்கள். மேலும், உறுதியில்லாதவர்கள் இவர்கள். அதனால் ஒரு காதலை வந்த வேகத்தில் கழற்றி விடக்கூடியவர்கள். நீங்கள் அமைதியானவரா, நெகிழ்வு தன்மை இல்லாதவரா, அல்லது குறை கூறுபவரா? அப்படியானால் உங்களை ஒரு மிதுன ராசிக்காரர் விரும்புவது பெரிய அதிசயம் தான். உடல் ரீதியான அல்லது மன ரீதியான அல்லது உணர்ச்சி ரீதியான நிலையான தூண்டுதலே அவர்களுக்கு தேவையானது
கடகம் : முழுமையான நேர்மை இந்த ராசிக்காரர்கள் ஏறுமாறான, பாதுகாப்பின்மை அற்ற, குடும்ப பற்று சார்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் வீட்டையும், குடும்பத்தையும் தான் பெரிதும் விரும்புவார்கள். ஆழமான உணர்ச்சி ரீதியான பந்தம் இல்லாதவரை அவர்கள் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள். உறவில் இருக்கும் போது கிடைக்கும் பாதுகாப்பு உணர்வை தான் அவர்கள் பெரிதும் நம்புவார்கள். அதனால் தங்களின் துணையை உடனடியாக தன் குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுவார்கள். உணர்ச்சி ரீதியான வலியால் அவர்கள் மூழ்கும் உணர்வை பெற்றாலே ஒழிய, கடக ராசிக்காரர்கள் தங்களின் உறவை அவ்வளவு சுலபத்தில் உடைக்க மாட்டார்கள். தங்களுக்கும் தங்களின் துணைக்கும் இடையே ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்க்கவே அவர்கள் முற்படுவார்கள். உங்கள் நம்பிக்கையை ஒரு போதும் அவர்கள் பாழாக்க மாட்டார்கள்.
சிம்மம்: அந்தளவிற்கு நம்ப முடியாது காட்டின் ராஜாவான இவர்கள் பல்வேறு காதலர்கள் மற்றும் உறவுகளை கொண்ட நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பார்கள். சிம்மம் என்பது கச்சிதமான ராசிக்காரர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
சரியான துணைக்காக எதிர்ப்பார்ப்பவர்கள் இவர்கள். துரதிஷ்டவசமாக சில உறவுகள் கச்சிதமாக அமையும். ஆனால் அந்த உறவு தனக்கு ஒத்து வராது என சிம்மராசிக்காரர் நினைத்து விட்டால், வளமுள்ள நிலத்திற்கு அவர் எளிதில் தாவி விடுவார். இவர்களின் நம்பிக்கைக்கு விலையுண்டு – இவர்களுடனான உறவில் நீங்கள் நீடிக்க வேண்டுமானால் இவர்களின் பெருமையை நீங்கள் அடிக்கடி பாராட்டியாக வேண்டும். சுலபமாய் நாடகத்தை நடத்துபவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். அதனால் உங்கள் காதலை அவர்களிடம் நிரூபிக்க நீங்கள் என்ன தான் ஒற்றை காலில் நின்றாலும், லேசில் மசிய மாட்டார்கள் இவர்கள்.
கன்னி: அந்தளவிற்கு நம்ப முடியாது கன்னி ராசியின் பெயரை வைத்து அவர்களை நம்பி விடாதீர்கள். அதற்கு காரணம் கன்னி ராசிக்காரர்கள் என்பவர்கள் துறவிகளை தவிர மற்ற அனைத்தும் ஆவார்கள். நேர்மையையும் உண்மையான நெருக்கத்தையும், எதையும் விட பெரிதாக மதிப்பிடுவார்கள். ஆனால் அவர்களின் உறவு அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் மற்றொரு உறவை நிலைநிறுத்த அவர்கள் பயப்படுவதில்லை. நண்பர்கள் மற்றும் காதலர்களுக்கு அவர்கள் பெரிதும் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் அது அவர்களுக்கு சௌகரியத்தை அளிக்கும் வரையில் மட்டுமே. உறவு நிலைக்க வேண்டுமே என எண்ணி அதற்காக அவர்கள் மெனக்கெடுவார்கள் என நீங்கள் எதிர்ப்பார்க்காதீர்கள். விவரங்களின் மீதும், விஷயங்களை சொதப்பாமல் செயல்படுத்துவதிலும், அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதே தான் ஏமாற்றுவதிலும் பொருந்தும். இந்த ராசிக்காரர்கள் ஏமாற்ற தொடங்கியதை உங்களால் அறிந்து கொள்ள கூட முடியாது.
துலாம்: முழுமையாக நம்பலாம் பொதுவாக குதூகலமான காதலராக இருக்கும் இவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும், உண்மையானவர்களாகவும் இருப்பார்கள்.உங்களை வழிபாட்டு பொருளாக கருதுவார்கள் உங்கள் காதலரான துலாம் ராசிக்காரர்கள். நல்லது கெட்டது அனைத்திலும் உங்களுடன் துணையாக இருந்து உங்களை காதலிப்பார்கள். உங்கள் உறவு இறந்து போனாலும் கூட அவர்கள் உங்களுடன் இருப்பார்கள். அவர்களின் உறவில் பிரச்சனை என்ற அசிங்கமான தலை உள்ளே நுழையும் போது, இவைகளை தீர்க்க துலாம் ராசிக்காரர்கள் தங்களது சிறிய உலகத்திற்குள் நுழைவார்கள். பிரச்சனையை சமாளிக்க இப்படியொரு நியாயமான அணுகுமுறையை எடுப்பதால், பிரச்சனையை தீர்க்க முடியாது என அவர்களை சமாதானப்படுத்த முடியாது. மேலும், ஜோடியாக இருக்கையில் துலாம் ராசிக்காரர்கள் மிகவும் சிறந்தவர்களாக திகழ்வார்கள். துலாம் ராசிக்காரர்களின் நேர்மையை பரிசோதிக்க சமுதாய வலைத்தளம் மூலம் முயற்சி செய்து பாருங்கள்.
விருச்சிகம்: ஆச்சரியமூட்டும் வகையில் நம்பலாம் தீவிர நம்பிக்கைக்கு புகழ் பெற்றவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். இருப்பினும், உச்சகட்ட ராசியாக, உங்கள் மீதுள்ள மரியாதையில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடுகளவு குறைவு ஏற்பட்டாலும், அவர்கள் வேறொரு காதலை நாடி சென்றிடுவார்கள். பரஸ்பர நம்பிக்கை தான் நேர்மைக்கான இரும்புக்கர சான்று. விருச்சிக ராசிக்காரர்களுடனான உறவு கடினமாக இருப்பதற்கு காரணங்கள் உள்ளது – தான் தான் எப்போதும் சரி என நினைப்பவர்கள் அவர்கள். அதனால் மன்னிக்கும் குணம் அவர்களிடம் குறைவாகவே இருக்கும். தங்கள் பக்கம் தான் தவறு என்பதை அவர்கள் உணர்ந்தால், “மறப்போம் மன்னிப்போம்” என்பது அவர்களை பொறுத்த வரை மிகவும் கஷ்டமாகும்.
தனுசு: அந்தளவிற்கு நம்ப முடியாது பொதுவாகவே தனுசு ராசிக்காரர்கள் உங்கள் துணையாக இருந்தால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். இவர்களுக்கு விதிமுறைகள் என்றாலே பிடிப்பதில்லை. குறிப்பாக கணவன் மனைவி உறவில் ஏற்படும் கட்டுப்பாடுகளும் கூட இதில் அடக்கம். இந்த ராசிக்காரர்கள் பல வகைகளை முயற்சிக்க விரும்புவார்கள். செக்ஸ் மற்றும் உறவுகளில் துணிகரமான செயல்களில் ஈடுபட முக்கியமாக விரும்புவார்கள். உங்களைக் காயப்படுத்த அவர்கள் ஏமாற்றுவதில்லை. இருப்பினும் உங்களுடனான உறவை துண்டிக்க இந்த செயலை அவர்கள் வேண்டுமென்றே செய்யலாம். இத்தகைய சுதந்திர விரும்பியானவர்கள் மீது ஏற்கனவே காதலில் விழுந்து விட்டால், அவர்களுக்கென தனிப்பட்ட இடத்தை, சுதந்திரத்தை அவர்களுக்கு அளியுங்கள்
மகரம்: முழுமையாக நம்பலாம் மகர ராசிக்காரர்கள் நிலைத்தன்மையை விரும்புபவர்கள்; குறிப்பாக உறவுகளின் மீது. எந்த வடிவிலான வெற்றிக்கும் கடின உழைப்பும், தீர்மானமும் தேவை என்பதை உணர்ந்தவர்கள் பெரும்பாலான மகர ராசிக்காரர்கள். இந்த இரண்டை பார்த்தும் பயப்படாதவர்கள் இவர்கள். எப்போதும் போல அவர்களின் உறவிலும் தடைகள் ஏற்படும் போது, அதனை சீர் செய்யும் பொறுமையை மகர ராசிக்காரர்கள் கொண்டிருப்பார்கள். எதிலாவது அட்டை போல் ஒட்டிக்கொள்வதற்கு சிறந்த உதாரணமாக இவர்களை கூறலாம். அதனால் லேசில் எதையும் விடு விட மாட்டார்கள். ஒவ்வொரு உறவுமுறை தடையும் ஒரு கற்றல் வாய்ப்பாகும். அதனால் உறவுமுறை மேம்படும் அல்லவா?
கும்பம்: அந்தளவிற்கு நம்ப முடியாது தனுசு ராசிக்காரர்களைப் போலவே, ஒரு உறவில் நிலைத்து நீடிக்க கும்ப ராசிக்காரர்களையும் தைரியமாக சவாலுக்கு அழைக்கலாம். தனுசு ராசிக்காரர்களைப் போலவே, ஒரு உறவில் நிலைத்து நீடிக்க கும்ப ராசிக்காரர்களையும் தைரியமாக சவாலுக்கு அழைக்கலாம். நீங்கள் சுவாரசியமானவராக, அற்புதமானவராக, கொஞ்சம் மர்மமானவராக இருந்தாலொழிய அவர்களின் தேவைகளை உங்களால் அவ்வளவு எளிதில் திருப்தி படுத்த முடியாது. சார்பில்லாமல் இருக்கும் இவர்கள் வழக்கத்திற்கு மாறானவர்கள். இந்த ராசிக்காரர்கள் மீது காதலில் விழும் பலரும் திருமண பந்தம் அல்லது தீவிர உறவை தவிர்த்து விடுவார்கள். அதற்கு காரணம் அவர்களின் சலிப்பூட்டும் தன்மை. இந்த ராசிக்காரர்களிடம் திறந்த புத்தகமாக இருப்பது உங்களை அதிக தூரம் அழைத்து செல்லாது. அதற்கு காரணம் அவர்களுக்கு எளிதில் சலிப்பு தட்டி விடும். அவர்களின் சிறந்த சொத்துக்களின் ஒன்று தான் அவர்களின் நேர்மை. அதனால் அவர்கள் உங்களை ஏமாற்றினாலும் கூட, அவர்கள் சுத்தமாக இருப்பார்கள்.
மீனம்: அந்தளவிற்கு நம்ப முடியாது மிகவும் உணர்ச்சி பூர்வமான ராசிக்காரர்கள் தான் மீன ராசிக்காரர்கள். மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் உள் உணர்வுகளோடு போரிடுவார்கள். மீன ராசிக்காரர்கள் இரட்டை பண்புடையவர்கள்
அதாவது மொத்த துறவி அல்லது மொத்த பாவிகள். மீன ராசிக்காரர்கள் தங்களது சொந்த கற்பனை உலகத்தில் வாழ்வார்கள். அதனால் நிஜ உலகின் தேவைகளை கையாளுவதில் அவர்கள் சிரமப்படுவார்கள். இதில் உறவுகளும் அடக்கம். காதலரோ அல்லது உறவோ தங்களின் கற்பனை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் அவர்கள் சுலபத்தில் ஏமாற்றம் அடைவார்கள். தங்கள் அலைவரிசைக்கு ஒத்துப்போகிறவர்களுடன் தான் அவர்களின் கவனம் நீடித்து நிற்கும்.

கருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..! ட்ரை பண்ணி பாருங்க..

வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும்,பின்பே ஸ்கேன் செய்து பார்க்க முடியும், மனிதன் செய்யும் சில தவறுகளால் அரசு அதையும் தடை செய்து விட்டது.ஆனால் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே கரு உண்டான கணத்தில் இருந்தே குழந்தையின் பாலினத்தை துல்லியமாக கண்டறியும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்துள்ளனர்.
ஒரு பெண் மூச்சு விடும் நாசியின் பக்கங்களை வைத்தும், அந்த பெண் குழந்தையை சுமக்கும் போது எந்த கையை ஊன்றி மேலே எழுகிறார் என்பதை வைத்தும் இன்னும் இது போன்று நிறைய முறைகளில் இதற்கு முன் இருந்தவர்கள் கணித்தனர்.
“கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி வற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ் சிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும் பிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடு வூமை”
என்ற அகத்தியர் அருளிய இந்த பாடலில் கரு உண்டான காலத்தில் நாசியில் ஓடும் மூச்சுக் காற்றை வைத்தே குழந்தையின் பாலினத்தை நம்மால் கணிக்க முடியும் என்பது தான் இந்த பாடலின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் செய்தி.அதாவது மூச்சுக் காற்றானது வலது புற நாசியில் ஓடினால் ஆண் குழந்தை எனவும், இடது புற நாசியில் ஓடினால் பெண் குழந்தை எனவும், மூச்சுக்காற்று சீராக இல்லாமல் இருப்பின் பிறக்கும் குழந்தை குருடு, ஊமை போன்ற குறைபாட்டுடன் பிறக்கும் என்பதே இதன் விளக்கம்.
இதே போன்று குழந்தை கருவில் உண்டான தேதியில் இருந்து என்னென்ன உறுப்புகள் எந்தெந்த மாதங்களில் உருவாகும்,கருவில் குழந்தை உருவான தேதில் இருந்து பிறக்கும் நாள்,குழந்தை குறைபாடு, கருச் சிதைவு, மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, திருநங்கையாக பிறப்பது போன்ற எண்ணற்ற செய்திகளை துல்லியமாக கொடுத்துச் சென்றுள்ளனர்,
மேற்கத்திய மோகத்தினாலும், தமிழை தாழ்வாக நினைப்பதாலும், கடவுள் மறுப்பு கொள்கைகளினால் சித்தர் பாடல்களை நாம் புறக்கணிப்பதாலும் இது போன்ற அறிய விசயங்களை நாம் தவற விடுகின்றோம்.இவை அனைத்தும் அவர்களின் மெய்ஞானத்தால் தோன்றியவையே, சித்தர் பாடல்களை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தால் உலக அளவில் தமிழ் மக்களுக்கு மேலும் அங்கிகாரம் கிடைக்கும் என்பதே உண்மை.