Saturday, June 20, 2020

நீங்கள் 10 அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு....

நீங்கள் 10 அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ( KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி, முழங்கால் மூட்டு வலி, கணுக்கால் எலும்பில் வலி, குதிங்கால் வலி), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள். பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன். அதை விளக்கிக் கூறவும் கேட்டேன். அவரால் விளக்க முடியவில்லை. ஆனால் பழந்தமிழர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது. வர்ம மருத்துவத்தில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள். நீங்கள் ஒரு 10 அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸி ஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார். பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும். ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும் ( முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும், தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும். அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது. ( தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது, இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது). எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது. சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது. நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது. மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது. இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது, மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன. விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது. இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது. மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது. இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Sunday, June 14, 2020

எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும்.

#நம்மைநாமேகாப்போம். *கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள். இதுபோல் ஒருநாளைக்கு 2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது. நாட்டு மருந்து கடைகள் எல்லான்.மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையேன்னு யாரும் கவலைப்பட வேண்டாம். இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்க்ஷன் உருவாகும். அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு? அழிப்பது என மருத்துவ உலகம் விழி பிதுங்கி நிற்கிறது. அத்தகைய இந்த கொரோனா மாயாவி போல் எத்தனை புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும் மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை. மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக சேர்த்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும்....* *இஞ்சி, எலுமிச்சை, கருப்பு மிளகு எல்லாம் சர்வ சாதாரணமாக நம்ப வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில் கிடைக்கும். மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்....* *அதனால் நாட்டுமருந்து கடைகள் நிறைய மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையேன்னு கவலைப்படாதீங்க உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். இஞ்சி, மிளகு, எலுமிச்சை இந்த மூன்றும் இப்பகூட உங்க வீட்டில் இருக்கும்...* *தமிழர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அஞ்சறை பெட்டியும் ஒரு மருத்துவமனைக்கு சமானம்.அதை புரிந்து கொள்ளாமல் நாம் நமது பாரம்பரிய உணவை கைவிட்டதாலும் மேலும் எந்தெந்த பொருளை எதோடு சேர்த்து உண்டால் என்ன பலன் என்பது குறித்த புரிதல் இன்றைய தலைமுறையினர் பலருக்கு இல்லாததாலும் தான் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு வருகிறது...*

நேரம்_இருந்தால்_வாசித்து_பார்க்கலாம் #குழந்தையை_இந்த_இடங்களில்_அடிக்கவே_கூடாது… #ஏன்?

“அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க…” என்று பேச்சு வழக்கில் சொல்வது உண்டு. உண்மையில் அடி உதவுமா? குழந்தைகள் விஷயத்தில் அடிப்பது சரியா? அடித்தால் குழந்தைகளை சரிசெய்து விட முடியுமா? இதுவரை நீங்கள் நினைத்திருந்தது தவறு. ஏன் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோர், ஆசிரியர், வீட்டில் உள்ள பெரியவர் யாராக இருந்தாலும் குழந்தையை அடிப்பது என்பது குற்றம். மனிதராக பிறந்த நமக்கு உடல் ரீதியாக துன்பம் ஏற்பட்டால், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சட்டம் உள்ளதோ அதுபோல குழந்தைகளுக்கும் இருக்கிறது. குழந்தைகளது உடல் குழந்தைகளின் உரிமை. நம் உடல் நமக்கு எப்படி உரிமையோ அதுபோல அவர்களுக்கும் அதே உணர்வு உண்டு. குழந்தைகளுக்கு பிடிக்காத முறையில் அவர்களது உடலை மனதைக் காயப்படுத்துவது குற்றம். மனித உரிமைப்படி உடல் ரீதியாக துன்பப்படும் குழந்தைகள் சட்டத்தின் பாதுகாப்பை அணுக முடியும். வழக்கு கோர முடியும். முன்பெல்லாம் எங்கள் அப்பா, அம்மா அடித்து வளர்த்த பிறகு தான் நான் எல்லாம் முன்னேறினேன் எனச் சொல்லும் பலருக்கு சொல்ல வேண்டிய ஒரே பதில். முன்பிருந்த அதே மனநிலை, உடல்நிலை, வளர்ச்சி, பக்குவம், சூழல் இன்று இல்லை. இதை அவசியம் பெரியவர்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். இன்றைய குழந்தைகள் ரொம்பவே சென்ஸிடிவ். உடன் படிக்கும் தோழி பேசவில்லை என சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். அம்மா எப்போதும் அடிக்கிறாங்கன்னு, மகன் தற்கொலை செய்து கொண்டான். வகுப்பில் எல்லோர் முன்னரும் ஆசிரியர் அடித்தார் என மாணவன் தற்கொலை செய்து கொண்டான். நாம் குழந்தைகள் நம் சொத்தாக, நம் உரிமையாகப் பார்க்கிறோம். உண்மையில், அவர்கள் நம் மூலம் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மை போல அவர்களின் இயல்பு, சுபாவம், கனவு, ஒழுக்கம், நடவடிக்கை எல்லாம் ஒரேபோல இருக்கும் என எதிர்பார்ப்பது சரியல்ல. #பெற்றோர்_புரிந்துகொள்ள_வேண்டியவை முதலாக, இது அவசர உலகம். காலம் மாறிவிட்டது. குழந்தைகளின் மன வளர்ச்சி, மனப்போக்கில் மாற்றம் அதிகம். பொதுவாக உயிரினங்கள் தன்னை விட பலசாலியான ஓர் உயிரினத்தால் ஆபத்து வர நேர்ந்தால் ஏதாவது ஒரு கட்டத்தில் தன்னைத் தற்காத்து கொள்ள எதிர்க்கும். அதுபோல, குழந்தைகளும் இயற்கையாகவே 4-5 வயதில் தன்னை காயப்படுத்தும் நபரை எதிர்க்கவோ, அடிக்கவோ, தன் எதிர்ப்பினை எதாவது ஒரு முறையில் காட்டவோ செய்வார்கள். அடி உதவும் என சொல்லி வந்தது. தவறான கண்ணோட்டம். அடி என்றைக்குமே என்றுமே உதவாது. இது அனைவருக்கும் பொருந்தவும் பொருந்தாது. முக்கியமாக, குழந்தைகளுக்கு வாய்ப்பே இல்லை. அடிக்க, அடிக்க குழந்தைகள் சண்டியாக மாறுவார்கள். சண்டித்தனம் அதிக மூர்க்கத்தனமாக மாறும். அதீத இயக்கம், கோபம், வெறுப்பு, கெட்ட செயல்கள், கெட்ட எண்ணங்கள், கெட்ட சேர்கையிலும் கெட்ட செயலிலும் கொண்டு செல்லும் ஆபத்தை ஏற்படுத்தும். #அடித்தபின்_பெற்றோரின்_மனநிலை_என்ன? குழந்தையை அடித்த பிறகு எந்த பெற்றோராவது ஆனந்தமாக இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குழந்தை தெரியாமல் தன்னைத் திருப்பி அடித்து விட்டால் நிம்மதியாக இருக்க முடியுமா… அது மிக கொடுமை. அடிப்பது என்பது குற்றம். வன்முறை என்றைக்குமே தீர்வாகாது. நல்வழிப்படுத்த அன்பும் அக்கறையும் அரவணைப்பும் புரிதலுமே மிகவும் முக்கியம். எந்த காரணமோ எந்த சூழலோ பெற்றோர் குழந்தைகளை அடிப்பது சரியான முடிவாக இருக்காது. ஒரு குழந்தை ஒரு தவறை செய்தால், அந்த குழந்தையிடம் பேசாமல் இருப்பது, கொஞ்சாமல் இருப்பது என என்ன குழந்தையின் பலவீனமோ அதை நோக்கி நீங்கள் சிறிய தண்டனை வழங்கி குழந்தையை திருத்தவேண்டும். இப்படி செய்வியா என நன்றாக அடி அடித்துவிட்டு, ஒரு மணி நேரமோ அடுத்த நாளோ குழந்தையை தூக்கி கொஞ்சுவதில் ஒரு பயனும் இல்லை. இந்த நிலை குழந்தையின் நடவடிக்கையை இன்னும் மோசமாக்கும். #ஏன்_குழந்தைகளை_அடிக்க_கூடாது? #முக்கியமான_காரணங்கள்… அடிவாங்கும் குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள். சில குழந்தைகள் அடியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும். பல குழந்தைகள் கற்பனை செய்யும். மன ரீதியாக பாதிக்கும். வெறுப்பை வளர்க்கும். என்னென்னமோ எண்ணங்கள் குழந்தையின் மனதில் தோன்ற ஆரம்பிக்கும். குழப்பத்தில் மூழ்கி போவார்கள். சந்தர்ப்பம் சரியாக இல்லாமல் இருந்தால் இது குற்றத்துக்கான தொடக்கமாக மாறிபோகலாம். தூக்கமின்மை, கவனக்குறைவு, எந்த செயலில் ஈடுபட மனம் இல்லாமல் போவது, உள் காயங்கள், தன்னைவிட மற்றவை முக்கியம் தாங்களே நினைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகள் குழந்தைகளுக்கு வரும். பெற்றோருக்கும் குழந்தைக்குமான நெருக்கம் குறையும். எதிர்மறை எண்ணங்கள், செயல்கள் அதிகரிக்கும். டிவி, மொபைல், லாப் டாப் போன்றவற்றில் அதிகம் ஈடுபடும் பிள்ளைகளை அடித்துத் திருத்த முயற்சி செய்தால்… ஒன்றுமே நடக்காது… வேஸ்ட். முதலில் இதையெல்லாம் குழந்தை முன் நீங்கள் செய்துவிட்டீர்கள்… பின், குழந்தையை அடிப்பது நியாயம் ஆகாது. சில ஆய்வுகள் இப்படி சொல்கின்றன. உடல் ரீதியாக துன்பப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் குற்றவாளிகளாகவும் வன்முறை குணம் நிறைந்தவர்களாகவும் மாறுகின்றனர். குழந்தையின் மனதில் அமைதி, அன்பு, பயம் நீங்கி வன்முறை செய்து சாதித்துவிடலாம் எனத் தோன்றும் நினைப்புக்கும் முதல் காரணம் பெற்றோர்களே. அடி வாங்கும் குழந்தைகள், பழி வாங்கும் குணத்தை பெறுவார்கள். வஞ்சத்தால் கோட்டை கட்டுவார்கள். இயல்பற்ற பிள்ளைகளாக மாறிவிடுவார்கள். அடி வாங்கும் குழந்தைகள் தனக்கு நெருக்கமானவர்கள் மீது கோபம், வன்முறை, வஞ்சம் ஆகியவற்றை செலுத்துவார்கள். அடி வாங்கும் குழந்தைகள், தாங்கள் பெற்றோர் ஆனதும் தவறான குழந்தை வளர்ப்பு முறையில் ஈடுபடுவார்கள். வன்முறை அவர்களின் வாழ்வியலோடு கலந்துவிடலாம். தன் பலத்தை காட்ட முடியாமல் அடிவாங்கும் பிள்ளைகள் அந்த கோபத்தை எரிச்சலை தன்னைவிட பலம் உள்ளவர்களிடம் செலுத்தும் தூண்டுதலுக்கு ஆளாவார்கள். இது தொடக்கத்தில் சின்ன விஷயமாக இருந்தாலும் பிற்காலத்தில் ஆபத்தாகும். குழந்தைகள் மென்மையான உடல் கொண்டவர்கள். முழுமையான வளர்ச்சியை எட்டி இருக்க மாட்டார்கள். அவர்களை நீங்கள் அடிக்கும்போது தவறுதலாக எலும்பு முறிவு, கை, கால், காது, கண் பாதிப்பு, அழுது அழுது சளி, மூச்சுத்திணறல், வலிப்பு போன்றவை வரலாம். உட்கார உதவும் உடல் பாகத்தை ‘பட்டக்ஸ்’ என்று சொல்கிறோம். இது பாலியல் பாகமாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் குழந்தைகளை அடித்தால், பிற்காலத்தில் எதிர்மாறான பாலியல் உறவுக்கு குழந்தைகள் தூண்டப்படுவார்கள் எனச் சில அறிக்கைகள் சொல்கின்றன. #அடிக்காமல்_குழந்தையை_திருத்த_முடியுமா? அன்பு ஒன்றே மிகப் பெரிய ஆயுதம். அதை தீட்டிக் கொள்ளுங்கள் போதும். அன்புக்கும் செல்லத்துக்கும் வித்தியாசம் உண்டு. அன்பு, குழந்தைகளைப் பண்பானவர்களாக மாற்றும். செல்லம் கொடுப்பது, குழந்தைகளைக் கெடுக்கும். இந்த வித்தியாசம் புரியட்டும். ‘எங்கம்மாவ கேட்காம நான் இதை செய்ய மாட்டேன்’. அன்பால் வளர்க்கும் பிள்ளை சொல்வது. ‘இதை எனக்கு கொடுத்து விடு, இது எனக்கே சொந்தம்’… செல்லத்தால் வளரும் பிள்ளை சொல்வது. இரண்டும் இருவேறு குணங்களைத் தரும். அம்மாவோ அப்பாவோ தன் கண் அசைவால் கோபத்தை தெரிவித்துகூட குழந்தையை திருத்தி விட முடியும். இந்த வளர்ப்பு முறையை மிக சிறந்த முறை. இதற்கு புரிதலும் பெருந்தன்மையும் பெற்றோருக்கு வேண்டும். செம அடியை அடிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு கண் அசைவும் புரியாது நீங்கள் வாய் வலிக்க கத்தினாலும் கேட்காது. சென்சிடீவ்வான குழந்தைகளை வளர்ப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால், முடியாத காரியம் அல்ல. முயன்றால் அன்பால் அரவணைப்பால் பெற்றோரின் பண்பால் நிச்சயம் குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும். இதற்கு முதலாக நீங்கள் பண்பானவர்களாக மாறிக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக மாறிவிடுங்கள். பின் எல்லாம் சுபமே.

Tuesday, June 9, 2020

வேர்கடலை கொழுப்பு அல்ல...! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை…!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் *போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம்.* எனவே *நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.* தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். *கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம்.* இல்லையேல் *கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.* *நீரழிவு நோயை தடுக்கும்:* நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் (osteoporosis) வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். *பித்தப் பை கல்லைக் கரைக்கும்:* நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. *இதயம் காக்கும்:* நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. *இளமையை பராமரிக்கும்:* இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது. *ஞாபக சக்தி அதிகரிக்கும்:* நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. *மன அழுத்தம் போக்கும்:* நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது *கொழுப்பை குறைக்கும்* தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது. இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. *அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:* உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் *நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள்.* இதன் காரணமாக *குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.* கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடி இருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. *கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:* *பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.* இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் *பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.* பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக *பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்* ஏற்படுவதையும் தடுக்கிறது. நிறைந்துள்ள சத்துக்கள்: *100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.* கார்போஹைட்ரேட்- 21 மி.கி. நார்சத்து- 9 மி.கி. கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி. புரதம்- 25 மி.கி. ட்ரிப்டோபான்- 0.24 கி. திரியோனின் – 0.85 கி ஐசோலூசின் – 0.85 மி.கி. லூசின் – 1.625 மி.கி. லைசின் – 0.901 கி குலுட்டாமிக் ஆசிட்- 5 கி கிளைசின்- 1.512 கி விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி. காப்பர் – 11.44 மி.கி. இரும்புச்சத்து – 4.58 மி.கி. மெக்னீசியம் – 168.00 மி.கி. மேங்கனீஸ் – 1.934 மி.கி. பாஸ்பரஸ் – 376.00 மி.கி. பொட்டாசியம் – 705.00 மி.கி. சோடியம் – 18.00 மி.கி. துத்தநாகச்சத்து – 3.27 மி.கி. தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம். போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது. *பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:* நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

Wednesday, June 3, 2020

வைகாசி விசாகம்

தீராத நோயும் பகையும் கடனும் தீர முருகனுக்கு விரதம் இருங்க வேத ஜோதிடத்தில் அசுவினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களில் விசாகம் நட்சத்திரம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். குருபகவானின் ஆதிக்கத்தில் வரும் நட்சத்திரம். இந்த ஆண்டு வைகாசி விசாகம் குருவின் அருள் நிறைந்த வியாழக்கிழமையில் வருவது சிறப்பு. வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். எதிரிகள் பயம் அகலும், தீராத நோய்கள் தீரும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பகை விலகி பாசம் பெருகும். இன்று 108 முறை ஜெபிக்கவும் முருகன் மூல மந்திரம் : ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ வைகாசி விசாக தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும். அசுரர்களை அழிக்க சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான் என்கின்றன புராணங்கள். விசாக நட்சத்திர நாளில் முருகனை விரதம் இருந்து வழிபடுவோருக்கு அல்லல்கள் தீரும். துன்பங்களும் துயரங்களும் நீங்கும். குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவைகளை தானம் செய்தால் பிள்ளை வரத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திர பாக்கிய கிடைக்கும் குலம் தழைக்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு விசாகம் விரதம் முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் விரும்பியது நடக்கும். கொரோனா வைரஸ் லாக்டவுனால் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் முருகனை நினைத்து வீட்டிலேயே விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும். விநாயகரை வழிபட்டு முருகனின் படத்தை பூஜை அறையில் வைத்து கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்.

Monday, June 1, 2020

உடலுறவு கொள்வதன் பயன் 40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் உங்களுக்கு அவசியம்....

தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும். வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள். செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும். சளி பிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும் தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். தினம் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்.மேல்நாட்டவரின் 100% ரகசியம் இதுதான். ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 85% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் 95% குறைவாக உள்ளதாம் மைக்ரேன் தலைவலி, உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல உடலுறவு கொண்டால் போதும். மாதத்திற்கு 20 நாளுக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் 99% கேன்சர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். அதிக உடல்உறவு கொல்லும் பெண்களுக்கு 1. இரத்த சோகை ( தலஸ்மியா) 2. கர்பபை புற்று 4. கர்பபை நீர் கட்டி ( பைப்ராய்ட் ) 5.மூச்சடைப்பு 6. கை கால் மூட்டு வழி 7. வெள்ளை படுதல் 8. உடல் சோர்வு 9.கண்பார்வை குறைதல் 10. உடல் பருமன் ஆகியவை அன்டாது. நமது இந்திய பெண்களில் 9% மட்டுமே 40 வயதை தான்டியும் 99 சதவிகித உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் காரணம்? அவர்கள் 35 வயதுக்கு மேல் உடல்உறவில் ஆர்வம் கொல்வதில்லை.அதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதில்லை. இந்த தகவலை வெளியட்ட ரஸ்ய கைனகோலைஜி ஆய்வாளர்களுக்கும் இதனை மொழி பெயர்த்து இணயத்தில் பதிவு செய்த நமது மகப்பேரு மருத்துவர் திருமதி கற்பகம் ஐயங்கார் அவர்களுக்கும் நன்றி. உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம் ஆகவே பெண்கள் ஆரோக்யமாக இருக்க உறவு கொள்ளுங்கள் கனவறோடு அவருக்கும் இது மருத்துவமாகும். இல்லறமே நல்லறம்