Wednesday, October 30, 2019

#மனித காலங்களும் #கிரகங்களும்


#தெரியாதவர்கள்_தெரிந்து_கொள்ளுங்கள்!!!!
____________________________________

குழந்தை பருவம் ---- புதன் ஆளுமை

டீன் ஏஜ் பருவம் -----சுக்ரன் ஆளுமை

வாலிப பருவம் -----செவ்வாய் ஆளுமை

நடுவயது பருவம் ---குரு ஆளுமை

வயோதிக பருவம் ---சனி ஆளுமை

மேற் சொன்ன ஐந்து கிரகங்களும் #தாரா கிரகங்கள் ஆகும்,,,இவைகள் எல்லாம் நமது வாழ்வில் குறிப்பிட்ட காலகட்டத்தை (கண்களுக்கு தெரிந்து) வழிநடத்தும்.

குழந்தை கருவில் ----சூரியன், சந்திரன் ஆளுமை

இந்த இரண்டு கிரகங்களும் மண்டல கிரகங்கள்,,,,நாம் வாழும் வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள கால கட்டம் ஒரு மண்டலம் ஆகும்,,,,

குழந்தை பிறப்பு -----கேது ஆளுமை

மனிதன் இறப்பு -----ராகு ஆளுமை

இந்த இரண்டு கிரகங்களும் #சாயா_நிழல் கிரகங்கள் ஆகும்
பிறக்கும் போது என்ன என்பதும்
இறக்கும் போது என்ன என்பதும் நமக்கு தெரியாத அமைப்பு தான்,,,(நிழல் அமைப்பு)

புரியவில்லை எனில் யோசித்து படித்து பாருங்கள் நிச்சயம் புரியும்

Tuesday, October 29, 2019

வயிற்று பூச்சிகளை எளிதில் வெளியேற்றும் உணவு இதுமட்டும் தான்!



சத்துள்ள உணவை சாப்பிடும் போது மட்டுமே, நோயில்லாமல் இருக்க முடியும். ஒவ்வொரு காய்கறிகளும், பலவிதமான சத்தை தரவல்லது.
இதில், சுவையான காய்கறிகளில் ஒன்றான, புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

இதனை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்த வேண்டும்.
முதிர்ந்த புடலங்காய் கசக்கும். அதிலுள்ள விதைகளை நீக்கிவிட்டு சமைத்தல் அவசியம்.
இதில், புரோட்டின் 0.5 கிராம், கொழுப்புச்சத்து 0.3 கிராம் மற்றும் ஓரளவு விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன. புடலங்காய் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வல்லது.
புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ், கிளைகோஸைட்ஸ், ப்ளேவனாய்ட்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன.
விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது, புடலங்காயை வாங்கி கொட்டைகளை நீக்கி, கறியாக சமைத்து சாப்பிட்டால் போதும். புடலங்காய் இதயத்துக்கு பலமும், நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது.
அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.
இந்நிலைக்கு ஆளானோர், புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.
காலையில் புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து, சாறாக பிழிந்து, வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இரண்டு வேளைகள் சாப்பிட்டால் இதயம் சமநிலை பெறும்; இதயமும் பலம் பெறும்.

Monday, October 28, 2019

உங்களின் ஜாதகத்தில் சனிபகவான் இந்த இடத்தில் இருந்தால் யோகம்தான்!!



கோச்சாரத்தில் சனிபகவானின் சுப, அசுப பலன்கள் !!

🌟 சனிபகவான் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்லும் காலம் 2 1ஃ2 ஆண்டுகள் (முப்பது மாதங்கள்), 12 ராசியை சுற்றி வரும் காலம் 30 வருடங்கள். இதன்படி இன்று 3வது, 5வது, 6வது, 9வது, 10வது மற்றும் 11வது ஆகிய ராசிகளில் இருந்தால் ஏற்படும் சுப, அசுப பலன்களைப் பற்றி பார்ப்போம்.

சனிபகவான் 3வது ராசியிலிருந்தால் :

🌟 நிதிநிலைமையில் மேம்பாடு, நில வசதி, வீடு வசதி, வேளாண்மையில் நல்ல மகசூல், கால்நடைகளால் ஆதாயம், தேகநலன், வாழ்க்கையில் சகஜ நிலை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, மனோதிடம் போன்ற சுப பலன்கள் மிகுதியாக இருக்கும்.

சனிபகவான் 5வது ராசியிலிருந்தால் :

🌟 பணப்பற்றாக்குறை ஏற்பட்டு நிம்மதி குறையும். புத்திரர்களால் பிரச்சனைகள் உருவாகும். சோகம் உண்டாகும். இன்னல்கள் அதிகமாக இருக்கும்.

சனிபகவான் 6வது ராசியிலிருந்தால் :

🌟 ஆரோக்கிய மேம்பாடு ஏற்படும். எதிரிகளின் தொல்லை இருக்காது. பெண்களால் ஆதாயம் உண்டாகும். பொருளாதார வசதி பெருகும். மொத்தத்தில் சுப பலன்கள் அதிகரிக்கும்.

சனிபகவான் 9வது ராசியிலிருந்தால் :

🌟 நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரும். இதயநோய் ஏற்படும். சொந்த-பந்தத்தில் விரோதம் உண்டாகும். இல்லற வாழ்க்கையிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய நிகழ்வுகள் நடந்தேறும். செயல்பாடுகளில் தோல்வியைச் சந்திக்க நேரிடும்.

சனிபகவான் 10வது ராசியிலிருந்தால் :

🌟 நற்பெயருக்கு பங்கம் ஏற்படும். வீண்பழி உண்டாகும். புத்தியில் தடுமாற்றம் உண்டாகும். நிதியிழப்பு ஏற்படும். தொழிலில் நஷ்டம் ஏற்படும். மனக்கவலை உண்டாகும்.

சனிபகவான் 11வது ராசியிலிருந்தால் :

🌟 ஜாதகருக்கு பலவிதங்களில் ஆதாயமும், பெண்களால் நற்பலன்களும் கிடைக்கும். கொண்ட கொள்கையில் பிடிப்புடனும், உறுதியுடனும் இருப்பார். மொத்தத்தில் சுப பலன்களே அதிகமாக இருக்கும்.

Sunday, October 27, 2019

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!



1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.

அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு / நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை சுகமாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை சுகமாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

108 Kubera potri in tamil | 108 குபேரர் போற்றி


Chant
morning 10 to 1 pm

Evening 6 to 7

108 Kubera potri in tamil | 108 குபேரர் போற்றி

1. அளகாபுரி அரசே போற்றி
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி

11. ஓங்கார பக்தனே போற்றி
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
13. கனகராஜனே போற்றி
14. கனகரத்தினமே போற்றி
15. காசு மாலை அணிந்தவனே போற்றி
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
19. குருவாரப் பிரியனே போற்றி
20. குணம் தரும் குபேரா போற்றி

21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
22. கும்பத்தில் உறைபவனே போற்றி
23. குண்டலம் அணிந்தவனே போற்றி
24. குபேர லோக நாயகனே போற்றி
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
30. சங்கரர் தோழனே போற்றி

31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
32. சமயத்தில் அருள்பவனே போற்றி
33. சத்திய சொரூபனே போற்றி
34. சாந்த சொரூபனே போற்றி
35. சித்ரலேகா பிரியனே போற்றி
36. சித்ரலேகா மணாளனே போற்றி
37. சிந்தையில் உறைபவனே போற்றி
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
40. சிவபூஜை பிரியனே போற்றி

41. சிவ பக்த நாயகனே போற்றி
42. சிவ மகா பக்தனே போற்றி
43. சுந்தரர் பிரியனே போற்றி
44. சுந்தர நாயகனே போற்றி
45. சூர்பனகா சகோதரனே போற்றி
46. செந்தாமரைப் பிரியனே போற்றி
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
50. சொக்கநாதர் பிரியனே போற்றி

51. சௌந்தர்ய ராஜனே போற்றி
52. ஞான குபேரனே போற்றி
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
56. திருவிழி அழகனே போற்றி
57. திருவுரு அழகனே போற்றி
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
59. திருநீறு அணிபவனே போற்றி
60. தீயவை அகற்றுவாய் போற்றி

61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
62. தூயமனம் படைத்தவனே போற்றி
63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
64. தேவராஜனே போற்றி
65. பதுமநிதி பெற்றவனே போற்றி
66. பரவச நாயகனே போற்றி
67. பச்சை நிறப் பிரியனே போற்றி
68. பவுர்ணமி நாயகனே போற்றி
69. புண்ணிய ஆத்மனே போற்றி
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி

71. புண்ணிய புத்திரனே போற்றி
72. பொன்னிற முடையோனே போற்றி
73. பொன் நகை அணிபவனே போற்றி
74. புன்னகை அரசே போற்றி
75. பொறுமை கொடுப்பவனே போற்றி
76. போகம்பல அளிப்பவனே போற்றி
77. மங்கல முடையோனே போற்றி
78. மங்களம் அளிப்பவனே போற்றி
79. மங்களத்தில் உறைவாய் போற்றி
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி

81. முத்து மாலை அணிபவனே போற்றி
82. மோகன நாயகனே போற்றி
83. வறுமை தீர்ப்பவனே போற்றி
84. வரம் பல அருள்பவனே போற்றி
85. விஜயம் தரும் விவேகனே போற்றி
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
87. வைர மாலை அணிபவனே போற்றி
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
89. நடராஜர் பிரியனே போற்றி
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி

91. நவரத்தினப் பிரியனே போற்றி
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
95. ராவணன் சோதரனே போற்றி
96. வடதிசை அதிபதியே போற்றி
97. ரிஷி புத்திரனே போற்றி
98. ருத்திரப் பிரியனே போற்றி
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
100. வெண்குதிரை வாகனனே போற்றி

101. கைலாயப் பிரியனே போற்றி
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
104. மாட்சிப் பொருளோனே போற்றி
105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
106. யௌவன நாயகனே போற்றி
107. வல்லமை பெற்றவனே போற்றி
108. ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
108 குபேரா போற்றி போற்றி

மணலிக்கீரையின் மருத்துவ குணங்கள்.:



மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

மணலிக் கீரை, மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் மூக்கில் நீர் கொட்டுதல் குறையும்.

மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.

மணலிக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி 1 கிராம் அளவு தேன் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி குறையும்.

மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைக்குத் தேவையான சத்து கிடைக்கும்.

மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.

மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு அரைத்து நீரில் கலக்கி வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும்.

நுரையீரல் மற்றும் மார்பில் சளி குறைய மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வருவது நல்லது.

நவகிரகத்தில் #செவ்வாயின்_நன்மையான_செயல்கள்



#எந்த ஒரு கடினமான செயலையும் முன்னின்று செய்ய வைப்பார்

#சோம்பேறியாக இருக்க வைக்க மாட்டார்

#நேரம் தவறாமல் இருக்க வைப்பார்

#சொன்ன சொல்லை எப்படியாவது காப்பாற்ற வைப்பார்

#நேர்மையாக இருக்க வைப்பார்

#அடுத்தவர் பொருளுக்கு ஆசை பட வைக்க மாட்டார்

#கடினமான வேலையை உடல் உறுதியால் செய்ய வைப்பார்

#தீர்க்கமான முடிவை எடுக்க வைப்பார்

#எத்தனை பேர் எதிர்த்தாலும் ஒற்றை ஆளாக போராடி வெற்றி பெற வைப்பார்

#பல வேலையாட்களை வழிநடத்த காரணம் இவர் தான்

#சகோதர பாசத்தை கடைசி வரை காப்பாற்ற வாழ வைப்பார்

#மரியாதை உள்ள இடத்தில் தான் உங்களை பழக வைப்பார்

#பிரச்சினை என்று வந்து விட்டால் அதிரடி முடிவு எடுத்து சரி செய்ய வைப்பார்

#இயலாதவனை இருக்கிறவன் துன்புறுத்தினால் அவன் யாராக இருந்தாலும் தட்டி கேட்க வைப்பார்

#கொடுமைகளை புரட்சி செய்து அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வைப்பார்

$$$கூட்டத்தில் #கோவிந்தாவோ_ஜால்ராவோ அடிக்க வைக்க மாட்டார்,,,,,,,,,,

#எதையும் உடனடியாக செய்யவோ,பேசவோ வைப்பார்

இதுபோல் இன்னும் நிறைய உள்ளது...

இந்த பலன் எல்லாம் #செவ்வாய் கிரகம் தனது இந்த குணத்தால் ஜாதகரை வழிநடத்த கடமை பட்டவர் (பாபதுவம் மட்டும் அடையாமல் இருந்தால் போதும்)

Friday, October 25, 2019

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் நன்பர்களே!!!!!



கிரக வலிமையை கூட்டுவதற்கு #கற்கள் போட நீங்கள் விரும்பினால் #ராசிக்கோ.
நடக்கும் #திசாவுக்கோ போடக்கூடாது,,,,

உங்கள் ஜாதகபடி #லக்னாதிபதி யாரோ அவருக்கு உரிய #கற்கள் தான் போட வேண்டும்.......

அதே போல்......

#லக்னாதிபதி, மற்றும் #யோகம் செய்ய கூடிய கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் நடக்கும் திசா #அவயோக கிரகமாக இருந்தால் யோக ஜாதகமாக இருந்தாலும் நன்மை கிடைக்க பெறாது

கிரகங்களின்_முக்கிய_காரணிகள்_நமக்கு



உலகில் நாம் அனைவரும் ஏதோ ஒன்றை வாழும் காலத்தில் இழந்து கொண்டு தான் இருக்கிறோம்....

அது என்ன????

கிரகங்கள் மூலம் தான் நாம் இழக்கிறோம், பெறுகிறோம்....

கிரகங்கள் எதற்காக எதனை இழக்க வைக்கும்........

#குரு-------கற்றதை பிறருக்காக இழத்தல்
#புதன்------பெறுவதற்காக இழத்தல்
#சுக்ரன்-----சந்தோஷத்துக்கு இழத்தல்
#செவ்வாய்---உண்மைக்காக இழத்தல்
#சனி-------சுயநலத்திற்காக இழத்தல்
#சந்திரன்----பாசத்திற்காக இழத்தல்
#சூரியன்---- கௌரவத்திற்கு இழத்தல்
#ராகு-------வீம்புக்கு இழத்தல்
#கேது-------அனைத்தும் இழத்தல்
(உயிரை தவிர)

புரிந்து கொள்ள சிரமமாக இருந்தால் திரும்ப படித்து சற்று யோசித்து பாருங்கள் உணர முடியும்.....

வெற்றி_தோல்வி



வாழும் வாழ்க்கையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் வெற்றி_தோல்வி என்பதெல்லாம் சகஜமான ஒன்றாகும்.....

1)
அதில் யாரெல்லாம் சுய விருப்பத்தால் தனித்து இயங்கி நன்மை_தீமையை அடைபவர்கள் யார்?????

மேஷம்
கடகம்
விருச்சிகம்
தனுசு
கும்பம்
மகரம்
மீனம்

இந்த #ராசி_லக்ன காரர்களே பெரும்பாலும் தனித்து இயங்கி அவர்களின் #வெற்றி_தோல்வியை அவர்களே பெற்று கொள்கிறார்கள்......

2)
மற்றவர்களை சார்ந்து,மற்றவர்களுக்காக, மற்றவர்கள் முடிவுக்கு இயங்கி தனக்கான #வெற்றி_தோல்வியை வாழ்க்கையில் பெறுபவர்கள் யார்????

கன்னி
ரிஷபம்
துலாம்
மிதுனம்

இந்த #ராசி_லக்ன காரர்களே

3)
தனித்தும் இயங்க தெரியும், பிறருக்காகவும்,பிறரை சார்ந்தும் இயங்க தெரியும்,

அப்படி இயங்கும் போது #வெற்றி_தோல்வி, #நன்மை_தீமையை யார் அடைவார்கள் என்றால்???

சிம்மம்

#ராசி_லக்ன காரர்களே

Monday, October 21, 2019

நாம் யாருக்கேனும் தீங்கு இழைத்தால் அதற்கான பலனை பின்னாளில் நாம் அனுபவித்தே தீர வேண்டியிருக்கும். இதுதான் கர்மநியதி.


கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது, அதுவே இக்கதையாகும். முனிவர் ஒருவர் காட்டில் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த பசுவும், கன்றும் அருகே புல்லை மேய்ந்து கொண்டிருந்த நேரத்தில், கன்றின் மீது அம்பு ஒன்று பாய்ந்தது. அக்கன்று துடிதுடித்து இறந்தது.

இறக்கும் தருவாயில் அக்கன்றின் வேதனைக் கதறல் கேட்டு முனிவர் தியானம் கலைந்தது. அவர், இறந்த கன்றையும், தாய்ப்பசு கண்ணீருடன் நிற்பதையும் பார்த்தார். அம்பு எய்தி பசுவைக் கொன்றவனைத் தேடினார்.

அப்போது ஒரு வீரன் கையில் வில்லுடன் அங்கு வந்தான். அவன்தான் அம்பை எய்திருக்க வேண்டும் என முனிவர் கண்டுபிடித்தார். அவரது கோபம் அந்த வீரன் மீது சாபமாக அமைந்தது. "சிறு கன்றின் மீது அம்பு எய்தி கொன்றவனே! அதற்கான கர்மபலனை நீ அனுபவித்தே தீரவேண்டும்! உனக்கு முடிவுகாலம் வருகையில், உன் தேரில் நின்று நீ போர் புரிகையில், தேரின் சக்கரங்கள் மண்ணுக்குள் புதையும். அந்த நேரமே உனக்கு மரண நேரமாய் அமையும் என்பதை உணர்வாயாக!" என்றார்.

அந்த வீரன் தான் கர்ணன். கன்றைக் கொன்ற தன் செயலால் வருந்தினான் கர்ணன். ஆனாலும், கர்மவினையின் செயல் இது என தன்னை தேற்றிக் கொண்டான். அந்த முனிவர் கூறியபடியே பாரதப் போரில் கர்ணனின் மரணம் நிகழ்ந்தது.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக பலன் உண்டு. ஆகையால், நாம் செய்யும் செயல் யாரையும் பாதிக்காதபடி இருக்கவேண்டும்.

நன்றும் தீதும் பிறர் தர வாரா.✍🏼🌹

நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள் !!!



🌿நமக்கு தெரிந்த பல பிரசித்திப்பெற்ற கோவில்களிலுள்ள நமக்கே தெரியாத அதிசயங்கள் பற்றி காண்போம் :

1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.

8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.

9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.

12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.

13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.

14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.

15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.

16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.

17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.

18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.

19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.

20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது.

21. எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.

22. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.

🙏🕉🙏🕉🙏🕉

விடை தெரியாத ஆறு கேள்விகள் :



1.எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் திடீரென அகால மரணம் அடைவது ஏன் ?

2. யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று கவனமாக இருப்பவர்கள் அதிகமாக காயப்படுத்தப்படுவது ஏன் ?

3. சுற்றமும் நட்பும் ஏராளமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?

4. இளகிய மனதுடன் பிறருக்கு உதவியவர்கள் ஏமாற்றப்படுவது ஏன்?

5. எந்தவித வீண் செலவும் செய்யாதவர்கள் சிலர் பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பது ஏன்?

6. அகம்பாவமும் ஆணவமும் அலட்சிய மனோபாவமும் கொண்ட சிலர் செலவந்தராக இருப்பது ஏன் ?

அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை நம் ப்ராரப்த கர்மா. இது சாமானியர் அனைவருக்கும் பொருந்தும். விசேஷமாக சரணாகதி செய்து மோக்ஷத்தை எதிர்பார்த்திருக்கும் முமுக்ஷூவுக்கு இதன் மூலம் பகவான் நம் கர்மாவை கழித்துக் கொடுக்கிறார் என்று அர்த்தம். இன்னொரு பிறவி எடுத்து கழிக்க வேண்டியதை பகவான் பரம கருணையோடு இப்பிறவியிலேயே கழித்து விட்டு தன்னை வந்து அடையும் படி செய்கிறான். இதன் காரணமாக சரணாகதி பண்ணியவனின் துன்பங்கள் பல்மடங்கு பெருகியது போல் தோன்றலாம். ஆனால் அதுவும் பகவானின் பெருங் கருணையே. இது புரிந்த சரணாகதனுக்கு இந்த துன்பங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் பெற ஒரு விளையாட்டு வீரர் எத்தனை தியாகங்கள் செய்கிறார்? ஒரு நாலு வருடம் தான் அதற்கு மதிப்பு. அதன் பிறகு உலகம் அவரை மறந்தே போகும். இந்த அல்ப விஷயத்துக்கே இந்தப் பாடுபட மனம் இசைகிறது என்றால் நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற ஏன் சிறு துன்பங்களை மனம் ஏற்றுக் கொள்ளக் கூடாது? இந்த கண்ணோட்டத்தில் தான் கண்ணன் கீதையில் சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிப்பாய் .

ஆன்மிக_கதை...



அயோத்யாவை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதியில் "ரத்னாகர்" என்னும் கொள்ளையன் வாழ்ந்து வந்தான்... வனத்தின் வழியாக செல்லும் யாத்ரீகர்களை கொன்று அவர்களின் செல்வங்களை கொள்ளையிட்டு வாழ்ந்து வந்தான்...

நாரத மகரிஷி அவ்வழியே பயனித்த போது, அவரைத் தடுத்தான் ரத்னாகர்,

ரத்னாகர் : ஏய் உன்கிட்ட இருக்கிறத எல்லாம் என்கிட்ட கொடுத்துடு, உன்ன உயிரோடு விட்டுரேன்"

நாரதர் : "ஏனப்பா, நானோ ஒரு முனிவன், உன்னிடம் கொடுக்க, என்னிடம் என்ன இருக்கிறது? என்னை விட்டு விடு...

ரத்னாகர் : அதெல்லாம் விட முடியாது, என் அப்பா, அம்மா, பொண்டாட்டி, பிள்ளைங்க, எல்லாம் சாப்பிட்டு 3 நாளாச்சி, உன்கிட்ட இருந்து எதாச்சும் கொண்டு போனாதான் இன்னைக்கு எங்களுக்கு சாப்பாடு, அதனால மரியாதையா உன்கிட்ட இருக்கிறத குடுத்துடு, இல்ல உன்ன கொன்னுடுவேன்...

"உன்னிடம் இருப்பதை கொடு, உன்னிடம் இருப்பதைகொடு , என்று கேட்கும், கொள்ளையன் ரத்னாகரை பார்க்கும் போது ஏனோ பரிதாபம் தோன்றியது நாரதருக்கு... எனவே, தன்னிடம் இருக்கும் ஞானத்தை அவனுக்கு தர முடிவெடுத்தார், "ரத்னாகரா, நீ வேண்டியபடி என்னிடம் இருக்கும் மிக உயர்ந்த ஒன்றை உனக்கு தருகிறேன், ஆனால் அதற்கு முன் என் கேள்விகளுக்கு பதிலளி...

ரத்னாகர் : என்ன கேள்வி? சீக்கிரம் கேளும்...

நாரதர் : கொள்ளை அடிக்கும் பொருளை என்ன செய்வாய்?

ரத்னாகர் : என் குடும்பத்தினரோடு பங்கிட்டு உண்பேன்...

நாரதர் : அப்படியா? சரி கொள்ளையடித்த பொருளை பங்கிட்டு கொள்ளும் உன் குடும்பத்தார், கொலை, கொள்ளையால், உன் தலையில் நீ சுமந்திருக்கும் பாவ மூட்டையையும் பங்கிட்டு கொள்வார்களா?

ரத்னாகர் : யோவ் முனிவரே, என்ன கேள்வி இது? செல்வத்தை, சுகத்தை பங்கிட்டு, பெற்றுக் கொள்பவர்கள், பாவத்தை பெற்று கொள்ள மறுப்பார்களா? நிச்சயம் நான் செய்கின்ற பாவங்களின் பங்கையும் பெற்றுக் கொள்வார்கள்...

நாரதர் : நிச்சயமாகத்தான் சொல்கிறாயா?

ரத்னாகர் : ஆம், கண்டிப்பாக பெற்றுக் கொள்வார்கள், அதிலென்ன சந்தேகம்? முதலில் உன்னிடம் இருப்பதை கொடு...

நாரதர் : இல்லை ரத்னாகரா, எதற்கும் அவர்களிடம் கேட்டுவிடேன், நீ சென்று கேட்டு வா, நான் இங்கேயே காத்திருக்கிறேன்...

ரத்னாகர் : ஓஹோ! நான் அந்த பக்கம் சென்றதும் இந்தப் பக்கம் திட்டமிடுகின்றாயா?

நாரதர் : நிச்சயமாக இல்லை, நான் இங்கேயே உனக்காக காத்திருப்பேன்...

ரத்னாகர் : யோவ்! உம்மை நம்ப முடியாதய்யா, நீர் ஒடிவிட்டால்?

நாரதர் : ரத்னாகரா! நான் ஒரு முனிவன், கொடுத்த வாக்கை மீற மாட்டேன், அதோடு இன்று, இங்கு எனக்கு நிறைய வேலையிருக்கிறது, எனவே சென்று வா...

ஒரு முடிவோடு கூறினார் நாரத மகரிஷி...

ரத்னாகரன் சென்று குடும்பத்தாரிடம் கேட்டான் , "நான் உங்களுக்காக கொள்ளையடிக்கிறேன், வழிப்பறி செய்கிறேன், அதனால் ஏற்படும் பாவத்தை பங்கிட்டு கொள்வீர்களா?

பெற்றோர் : மகனே, உன்னை பெற்று, சிறு வயதில் இருந்து வளர்த்து இருக்கிறோம், அதற்கு பிரதி உபகாரமாகவே, நீ இப்போது எங்களை காப்பாற்றுகிறாய், இது உன் கடமை, எனவே நீ உன் கடமையை செய்வதனால் ஏற்படும் பாபத்தை நாங்கள் பங்கிட மாட்டோம்...

மனைவி :
என்னை காப்பதாக வாக்களித்து மணம் புரிந்தீர், எனவே தமது பாவங்களில் எனக்கு பங்கில்லை.

பிள்ளைகள் :
இன்று எம்மை நீர் ஆதரித்தால், நாளை உமக்கு முதுமை வரும் காலத்தில், உம்மை நாங்கள் ஆதரிப்போம், எனவே நீர் செய்யும் பாவங்களில் நாங்கள் பங்கேற்கமாட்டோம்...

அனைத்தையும் கேட்டு அதிர்ந்தான் ரத்னாகர், பூமியே பாதத்திலிருந்து நழுவுவது போல இருந்தது... எந்த குடும்பத்தின் நலனுக்காக ஊரை கொள்ளையடித்தானோ, அதர்மங்களை புரிந்தானோ, அக்குடும்ப உறுப்பினர்கள், அவன் செய்த பாவங்களில் பங்கேற்க மறுத்துவிட்டனர்... இதுவே நிதர்சனம்...

ரத்னாகர் கண்ணீருடன் திரும்பி வருவதை கண்ட நாரத மகரிஷிக்கு எல்லாம் தெளிவாக விளங்கியது... ரத்னாகர், மனமொடிந்து, "சாமி! நீங்க சொன்னது நெசந்தான்னு எனக்கு இப்பதான் புரியுது, என்னை காப்பாத்துங்க" என்று நெடுஞ்சான்கிடையாக மகிரிஷி நாரதர் காலில் விழுந்தான், பாதம் பணிந்தவனுக்கு, முன்னர் கூறியபடி, தன்னிடமிருந்த ஞானத்தை வழங்கிட எண்ணினார், ஆம் கிடைத்தற்கரிய, மோட்சம் தரவல்ல மந்திரமான "ராமா " நாமத்தை உபதேசித்தார், ஆனால் ரத்னாகர் அதுவரை செய்த பாபாங்களின் விளைவால், அவனால் புனிதமான "ராம" நாமத்தை மனத்தில் இருத்தவோ, உச்சரிக்கவோ இயலவில்லை...

எனவே, நாரத மகரிஷி, ரத்னாகரனுக்கு, "மரா மரா" என்று தொடர்ந்து உச்சரிக்குமாறு அறிவுறுத்தினார்... ஆம், ரத்னாகரனின் கர்ம வினையை, தன் புத்தியால் வென்றார்... "மரா மரா" என்று சொல்லும் போது நாளடைவில் அது "ராம ராம" என்று மாறிவிடும்...

நாரதர் சென்ற பின், மரத்தடியில் அமர்ந்து, தொடர்ந்து ஜபித்தார், பல நூறு ஆண்டுகள் கழிந்தது, ரத்னாகரரை சுற்றி புற்று வளர்ந்தது, தவம் தொடர்ந்தது...

இறுதியில், பிரம்மதேவர் தோன்றினார், ரத்னாகர், புற்றை பிளந்து கொண்டு எழுந்த போது, "வால்மீகி " என்றார் பிரம்மதேவர், (சமஸ்கிருதத்தில், எறும்பு புற்றுக்கு, வால்மீகம் என்று அர்த்தம், புற்றை பிளந்து, பூமியின் மைந்தனாக மறுபிறப்பு போல தோன்றியமையால் வால்மீகி என்றழைக்கப்படுகிறார்...)

பின், பிரம்மதேவர் வால்மீகி மகரிஷிக்கு, முக்காலமும் உணரும் வரத்தோடு, இராமாயணத்தை இயற்றும் வாய்ப்பையும் வழங்கினார்...

#ஜெய்_ஸ்ரீ_ராம்...

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..! முழுமையாக படித்து பாருங்கள்


1) படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்
2) பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்
3) விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்
4) காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .
5)கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .
6) கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .
7) நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .
8) உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .
9) இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்
1O) அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .
11)மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..
12) துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .
12)அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .
14) பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .
15) குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .
16) கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .
17) அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .
18) இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .
19) கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .
2O) அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .
21) நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் .
22) அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..
23) என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை
பழக்கம் இல்லாத காரணமும் தான் ...
24) காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .
24) பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது
25)சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .
26) குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .
27) ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .
28) சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .
29) அதன் படி உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .
எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .
3O) சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .
31) கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,
33) உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.
34) கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .
35) தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .
36) பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .
இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .
மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .
நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..
மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....
கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....
நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .
இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .
(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.
தாகத்தை ஏற்படுத்தும் உள் நாக்கு லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.
சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .
உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

சின்னி

இதன் இலை, கிழங்கு மருந்தாகப்
பயன்படுகின்றன. இதன் இலைக்கு வண்டு
கடி நஞ்சு நீக்குதல், இடுமருந்தை முறித்தல்,
ஓடுகின்ற வாத நோயை போக்குதல், மந்தம்
அனைத்தும் குணமாக்கும் தன்மைக் கொண்டது.

வண்டு கடித்தால் சிலருக்கு அமாவாசை நாட்களில்
உடலில் தடிப்பு ஏற்படும். அரிப்பும் இருக்கும். அவர்
களுக்கு சின்னி இலையை கைப்பிடி அளவு எடுத்து,
ஒரு பூண்டு, பத்து மிளகு ஆகியவற்றைச் சேர்த்து
அரைத்து மூன்று நாட்கள் தொடர்ந்து காலை, மாலை
இரு வேளை கொடுத்து வந்தால் குணமாகும். மருந்து
சாப்பிடும் நாட்களில் பத்தியமாக உப்பு, புளி நீக்க
வேண்டும்.

இடு மருந்து என்று சொல்கின்ற வசிய மருந்து உண்ட
வர்கள் தனது சுய சிந்தனையை இழந்துக் காணப்படு
வார்கள். இவர்களுக்கு சின்னி இலைச்சாறு அத்துட
ன் தண்ணீர் கலந்து 50-மி.லி கொடுத்தால் வாந்தி
ஏற்படும். அப்போது அதனுடன் வசிய மருந்தும் வந்து
விழும். மேலும் அந்த மருந்து செரித்து இரத்தத்தில்
கலந்திருந்தால் மூன்று நாட்களுக்கு காலை வேலை
யில் மட்டும் கொடுத்து வந்தால் நஞ்சு முறிந்து பழை
ய நிலைக்கு வருவார்.

சின்னியின் கிழங்குப் பன்றிகறிக்கு நிகரான குளிர்
ச்சிமிக்கது. இதை ஆவியில் வேகவைத்து மாலையில்
உண்டு வந்தால் மூலம் குணமாகும். ரத்த கசிவு நிற்கு
ம்.

மலச்சிக்கலுக்கு சின்னி இலைப்பொடி 5-கிராம்,
நிலாவரை 30-கிராம், கடுக்காய் 15-கிராம் எடுத்து
அனைத்தையும் இடித்து சூரனம் ஆக்கி சலித்து இரவு
படுக்கப் போகும் முன் 2-கிராம் அளவு இளஞ்சூடான
நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இதனால் மலம்
எளிதாக வெளியேறும். இது ரோஸ்லோ என்ற பெயரில் சித்த மருந்தாக கடைகளில் கிடைக்கிறது.
இதை வாங்கி 3-கிராம் அளவு நாள்தோறும் பயன்
படுத்தலாம். இலையை அரைத்து தேள்கடித்த இடத்தில் வைத்து கட்டினால் விஷம் இறங்கும்.

வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.

குலதெய்வத்திற்கு எந்த விளக்கு ஏற்றி வழிபடுவதால் பலன் கிடைக்கும்...?


எந்த ஒரு தெய்வத்தின் அருளை பெற வேண்டுமானாலும் முதலில் குலதெய்வத்தின் அருளை பெறுவது அவசியம். இவ்வளவு சக்தி வாய்ந்த குலதெய்வத்திற்கு எந்த விளக்கு ஏற்றி வழிபடுவதால் பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். நீங்கள் கேட்டது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதில் உங்கள் குலதெய்வத்தை தவிர வேறு எந்த தெய்வமும் நிறைவேற்றாது.



வாழ்க்கையில் எல்லாமே நல்லபடியாக நடக்கவேண்டும் தடைகள் நீங்கவேண்டும் என்று நினைத்தால், நாம் குலதெய்வத்திற்கு மாவிளக்கு ஏற்றுவது சகலவித நன்மைகளை பெற்றுத் தரும்.

பெரும்பாலும் வீட்டில் விளக்கு ஏற்றும்போது, பித்தளை, வெள்ளி, மண் விளக்குகளை ஏற்றி வழிப்படுவோம். ஆனால் குலதெய்வத்திற்கு கண்டிப்பாக மாவிளக்குதான் ஏற்றவேண்டும்.



மாவிளக்கு தயாரிக்க பச்சரிசியை ஊறவைத்து இடித்து அல்லது அரைத்த பின் சலித்து, இதனுடன் வெல்லம் பாகு எடுத்து அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் பிசைந்து மாவிளக்கு செய்யலாம். இதனுடன் சிறிது நெய் சேர்த்துக்கொள்வது நல்லது.



இந்த விளக்கை மாதம் வரும் பெளர்ணமி நாள்களில், இல்லை என்றால் வருடத்துக்கு ஒரு முறையாவது குலதெய்வத்திற்கு வாழை இலையில் மாவிளக்கு ஏற்றி, படையலுடன் வழிபடுவது சிறப்பானது. இவற்றை இரட்டையாக தீபம் போடுவது நல்ல பலன்களை பெற்றுத் தரும். அதிலும் பசு நெய் போட்டு ஏற்றுவது உத்தமம்.



வீட்டில் கணவன்-மனைவி இடையே சண்டை சச்சரவு அதிகம் இருந்தாலும் உடனே தீர்வு உண்டாகும், குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பேர் புகழுடன் செல்வம் உண்டாக்கும் எனவும் கூறப்படுகிறது. உங்களுக்கு தீராத பிரச்சினைகள் இருந்தால் அதை தீர்த்துவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

Sunday, October 20, 2019

சூரியனை ஏன் வணங்க வேண்டும்?*



காலையில் எழுந்ததும் சூரியனை பார்த்து வழிபடுவது நன்மையளிக்கும். விடியலை வா வா என்று அழைத்து கொண்டு வருபவர் சூரியன். அனைவருக்கும் முதலில் வணக்கம் சொல்லி எழுப்புவதும் சூரியன் தான். நவகிரகங்களில் முதலில் இருப்பவர் சூரியன்.

இ‍ன்னும் பலவிதமாக சூரியனை பற்றி சொல்லலாம். அப்படிப்பட்ட சூரியனை அனைவரும் காலையில் வணங்குவது ஏன்?

மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள், இறக்க கூடியவர்கள், நோய் நொடியில் விழக்கூடியவர்கள், தவறு செய்யக்கூடியவர்கள், மிகப் பெரிய ஆபத்துகளுக்கு ஆளாகக்கூடியவர்கள்.

சூரியனால் மனிதனுக்கு பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை பூமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. நல்லது செய்கின்ற கிரகங்களையும், சூரியனையும், சந்திரனையும் வழிபடுவதில் தவறொன்றுமில்லை.

சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்வதுபோல் அர்த்தம். கடவுளின் பேச்சாக, குணமாக, உருவமாக, வடிவமாக சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன.

கடவுளை கண்ணால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுகின்றனர்.

சூரியனை வணங்குவதால் நமது உடலிற்கும், மனதிற்கும்
புத்துணர்வு மற்றும் மன அமைதி கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காலையில் ஒரு 5 நிமிடம் மன அமைதியுடன் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் சூரியனை பார்த்து தியானம் செய்தால் போதும். அதன் பலனை உணர முடியும்.

*ஓம் சூர்ய தேவாய நம...*

*🙏🌸நோய்கள் நீக்கும் பானு சப்தமி விரதம் - இன்று ஞாயிறு சூரிய வழிபாடு செய்ய மறக்காதீங்க🌸🙏*

*நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரியனை வழிபட்டால் நோய்கள் நீங்கும் எதிரிகள் தொல்லை ஒளியும். சூரியனுக்கு உகந்த தினம் ஞாயிறு. அதுவும் சப்தமி திதியும், ஞாயிற்றுக் கிழமையும் ஒன்றாக வரும் நாள் பானு சப்தமி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது. இன்று அக்டோபர் 20ஆம் பானு சப்தமி தினம் தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள். பானு சப்தமி இன்று நாம் செய்யும் பூஜைகள், மந்திரங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக்கூடியவை.*

*இன்று விரதமிருந்து சூரியனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.*

*உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது.*

*ஞாயிறு இன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும் சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய .கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.*

*சனியும் சூரியனும்*
*பெற்றோர்களை* *வழிபட்ட சனிபகவான்*

*சூரியனின் புதல்வரான சனீஸ்வர மூர்த்தி தம் பெற்றோர்களுக்குப் பாத பூஜை ஆற்றும் திருநாளே ஞாயிறு, சப்தமியும் கூடும் நாள். தினமும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பிரபஞ்சத்தை வலம் வரும் சூரியத் தேரை ஓட்டுகின்ற அருணன் ஞாயிறும் சப்தமியும் கூடும் பானுசப்தமி நாளில் அருணோதய சக்திகளைச் சூரிய சக்தித் திரவியங்களாக நிரவுகின்றார். சனீஸ்வர மூர்த்தி ஈஸ்வரப் பட்டம் பெற்றவுடன், சர்வேஸ்வரனை வணங்கியவுடன், தமக்கு ஆசிகள் அளித்த பெற்றோர்களான சாயா தேவி சமேத சூர்ய மூர்த்தியைச் சாஷ்டங்கமாக வீழ்ந்து வணங்கிப் பூஜிக்கின்ற திதியே பானு சப்தமித் திதி.*

*ராமர் வழிபட்ட பானு சப்தமி*
*ராமர் செய்த சூரிய பூஜை*

*சூரிய குலத்தைச் சேர்ந்த ஸ்ரீராமர், பானு சப்தமி நாட்களில் ஸ்ரீமன் சூரிய நாராயண விஷ்ணு ஸ்வாமிக்கான பூஜைகளைச் சூரிய மண்டலத்தில் விஸ்தாரமாக நடத்திப் பூஜிக்கின்றார். ஸ்ரீராமர் பானு சப்தமி நாட்களில், 108 சிவலிங்க மூர்த்திகளுக்கு பூஜைகளை நடத்தி ஸ்ரீமத்சூரிய நாராயண மூர்த்தியின் திருஅருளைப் பூவுலகிற்கு பெற்றுத் தருகிறார். ஸ்ரீராமர் பானு சப்தமி நாளில் சிவ பூஜை ஆற்றிய தலமே கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் 108 சிவாலயம் ஆகும். இங்கு உள்ள சூரிய மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். பானு சுதாகரர் என்ற நாமம் தாங்கி தினமும் 108 சிவலிங்க பூஜைகளை ஆற்றி, நவகிரகங்களுக்கு எல்லாம் அதிபதியான பேற்றைப் பெற்ற மூர்த்த வடிவுகளுள் ஒருவர்.*

*பானு சப்தமியின் சிறப்பு*
*முன்னோர்கள் ஆசி*

*காலையில் எழுந்து நதியில் நீராடி நித்திய பூஜை மற்றும் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல வந்துசேரும். இன்று அக்டோபர் 20ஆம் பானு சப்தமி தினம் தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது சூரிய கிரகணம் முடிந்த பிறகு செய்யும் தர்ப்பணத்துக்கு ஒப்பானது. இந்த தினத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நதி தீரத்தில் நீராடி சூரிய வழிபாடு செய்தல், தானம் செய்தல் ஆகியவை பல்வேறு நலன்களைக் கொண்டு வரும். மற்ற தினங்களில் செய்யும் தான தர்மங்களை விடவும் இந்த தினத்தில் செய்யும் தானத்துக்கு ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும்...*

*பகிர்தல் ஒரு மிகச் சிறந்த பண்பாடு மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்*

*அனைவருக்கும் பகிருங்கள்*

Saturday, October 19, 2019

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருந்து



சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான்😡

அவர்களுக்காக ஒரு பதிவு!

விரலை வெட்ட வேண்டாம்:👌

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷

மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.🏨

இதற்கு கண்கண்ட மருந்து👀

ஆவாரம்_இலை 🌿🌿🌿🌿🌿🌿🌿

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!

வலம்புரி சங்கின் மகிமைகள்


ஒரு வீட்டில் வலம்புரி சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குபேரன் அருள் இருக்கும். வீட்டில், பில்லி, சூனியம், ஏவல்கள் நெருங்காது.

* ஒரு வீட்டில் வலம்புரி சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குபேரன் அருள் இருக்கும். மேலும் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தர வாசம் செய்வாள்.

* வலம்புரிச் சங்கில் தீர்த்தம் இட்டு, துளசி இலையைப் போட்டு பூஜித்து பின்னர், அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதையே தர்ம சாஸ்திரம், ‘சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்’ என்று விளக்குகிறது.


* வலம்புரி சங்கில் வைத்த தீர்த்தத்தைக் கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும்.

* கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில், நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.

* நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, ‘பேதாண்டப் பெதுவி’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.

* வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை வலம்புரிச் சங்கில் இட்டு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.

* செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி, திருமணம் நடைபெறும்.

* பவுர்ணமி தோறும் வலம்புரிச் சங்குக்கு, குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்து வர கடன் பிரச்சினைகள் தீரும். வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றி வழிபட்டாலும் கடன் பிரச்சினை அகலும்.

* சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு கொண்டு பூஜிக்கப்படும் வீட்டில், பில்லி, சூனியம், ஏவல்கள் நெருங்காது.

* நாம் வழிபடும் தெய்வத்திற்கு வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்வதால், 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம்.

* பிறந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்தால், வலம்புரிச் சங்கில் நீர் ஊற்றி, அதில் ருத்ராட்சம் இட்டு, அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட காய்ச்சல் நீங்கும்.

* பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு, அதில் வலம்புரிச் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவு பஞ்சம் ஏற்படாது.

வலம்புரி சங்கு !
திருவிதாங்கூர் கொடியில் உள்ள வலம்புரிச் சங்கு

செயற்கை வலம்புரி டிரைட்டன் சங்கு வகைச் சங்கு. வலம்புரிச் சங்கு அரிதானது என்பதால் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன. சந்தையில் இவை போலிச் சங்குகள் என அடையாளப்படுத்தப்படுகின்றன.
வலம்புரிச் சங்கு (Dakshinavarti Shankh) என்பது சங்குகளில் ஒரு அரிய வகை ஆகும். இது இந்து நம்பிக்கைகளில் மிகப் புனிதமான சங்காகவும், வளத்தையும், நலத்தையும் தருவதாக கருதப்படுகிறது. இந்த நம்பிக்கைகளின் காரணமாக வலம்புரிச் சங்குகளைப் பெருந்தொகை அளித்து வாங்குபவர் உள்ளனர். இச்சங்கு திருவிதாங்கூர் கொடி, கேரள அரசு சின்னம், சிக்கிம் அரசு சின்னம் போன்றவற்றில் இடம்பெற்றுள்ளது.

நம்பிக்கைகள் !

வலம்புரிச் சங்குகள் கடற்கரைக்கு வந்து முத்துகளைக் கொட்டிவிட்டுச் செல்லும் என்றும், வலம்புரிச் சங்கு தானே முழங்கும் என்றும் நம்பிக்கை நிலவிவந்தது. வலம்புரிச் சங்கிலிருந்து விலையுயர்ந்த முத்து கிடைக்கும் என்ற நம்பிக்கை சங்க காலத்திலிருந்தே உள்ளது. சிலப்பதிகாரத்தில் வலம்புரியீன்ற நலம்புரி முத்தம் (27-244), மாசறு பொன்னே வலம்புரி முத்தே ( 2:73), வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும், வலம்புரியொரு முத்தன்ன (பெருந்தொகை 1712:25-27) வலம்புரி முத்து என்னும் கருதுகோள் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இடம்பெற்றுள்ளன.

தோன்றும் விதம்!

இடம்புரி, வலம்புரிச் சங்குகளானது வெண் சங்கு என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவை. சங்குகள் கருமுட்டையாக வளரத் தொடங்கும்போது செல் பிளவுறும் கோணம் நேர் குறுக்காக அமையாமல் சற்று சாய்வாக அமைகிறது. அடுத்த பிளவுகள் முந்தைய பிளவின் சாய்கோணத்தில் அமைவதால் பிளவு நிலைகள் ஆரச்சுற்றில் நிகழ்கின்றன. புரிச்சுற்றின் அடிப்படையில் இதன் உடல் அமைவதால் அதை அடியொற்றி மேல்தோடும் அமைந்துவிடுகிறது. கருசெல் பிளவின் சாய்கோணம் இடது, வலது என விலகுவதற்கு இதன் மரபணுக்களே காரணம். இடம்புரி செல்பிளவு இயல்பானது. மரபணுவின் சடுதிமாற்றம் காரணமாகவே வலம்புரிச் சங்கு உருவாகிறது. மரபணு சடுதிமாற்றம் வெகு அரிதாக நிகழ்வது என்பதால் வலம்புரிச் சங்கும் அரிதாகவே கிடைக்கிறது.

வகைகள் !

வலம்புரி சங்கு உயர்வானது என்றாலும் அதைவிட உயர்வான சங்கு சலஞ்சலம்; சலஞ்சலத்திலும் உயர்வான சங்கு பாஞ்சசன்யம் என்று மக்கள் கருதினர். ஆயிரம் இடம்புரிச் சங்குக்கு இணையானது ஒரு வலம்புரி; ஆயிரம் வலம்புரிக்கு ஒரு சலஞ்சலம்; ஆயிரம் சலஞ்சலத்துக்கு நேரானது ஒரு பாஞ்சசன்யம் என்ற கருத்துக்கள் நிகண்டுகளில் கூறப்பட்டுள்ளன] சலஞ்சலத்தின் உள்ளே வெள்ளி நிறத்தில் இருக்கும் மூன்று கோடுகள் மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்று சில சம்ஸ்கிருத நூல்கள் சொல்கின்றன. என்றாலும் இன்றுவரை சலஞ்சலம், பாஞ்சசன்யம் என்பதாக விவரிக்கப்படும் சங்குகளை எவரும் கண்டதில்லை!

வலம்புரிச் சங்குகள் மேலான சக்தியைக் கொண்டவை என்பதற்கு சான்று எதுவுமில்லை வலம்புரிச் சங்குகள் இடம்புரிச் சங்கு போலன்றி மிக அரிதாகக் கிடைப்பவை என்பது மட்டும் உண்மை.

குரு சிஷ்யன்



"நாளை காலை உனக்குப் பாடம் இல்லை. வேறு ஒரு உயர்வான பணி காத்திருக்கிறது. உணவு தயார் செய்ய உனக்கு கூடுதல் நேரம் தேவைப்படும்" என்றார் குருநாதர். புருவம் உயர்த்தினான் சிஷ்யன்.

"நகரத்தில் இருந்து விருந்தினர்கள் இருவர் நம்மைச் சந்திக்க வருகிறார்கள். அவர்கள் பசியோடு வரக்கூடும். அவர்களுக்கும் சேர்த்து காலை உணவு சமைக்க வேண்டும்" என்றார் குரு.

பாடம் படிப்பதைவிட சமையல் செய்வது உயர்வான செயலா என்ன! எரிச்சலடைந்தான் சிஷ்யன். ஆனால், எதுவும் பேசாமல் இடம் பெயர்ந்தான். மறுநாள் காலை உணவுக்கு என்ன சமைக்கலாம் என யோசிக்க ஆரம்பித்தான்.

அருகே இருந்த கிராமத்துக்குச் சென்று தேவையான பொருட்கள் வாங்கிக்கொண்டான் சிஷ்யன். ஆசிரமத்தின் பின்புறம் இருந்த தோட்டத்தில் வேண்டிய அளவு காய்கறிகள் பறித்துக்கொண்டான்.

விடிந்தது. வழக்கமான கடமைகள் முடிந்ததும் சமையல் வேலைகளில் மும்முரமானான். திட்டமிட்டிருந்தபடி உணவு வகைகளைத் தயார் செய்தான். அவனுக்கும் குருவுக்கும் வழக்கமான உணவு. விருந்தினர்களுக்காக சிறப்பான சாப்பாடு.

விருந்தினர்கள் வந்தனர். நகரத்தில் வசிக்கும் தம்பதியர் அவர்கள். அவ்வப்போது வந்து குருவிடம் ஆசி பெற்றுக்கொண்டு திரும்புவார்கள்.

குருவின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தனர் இருவரும். அவர்கள் முகத்தில் புன்னகை தொலைந்திருந்ததை அறிந்தார் குரு. காரணத்தை அவர்களே சொல்வார்கள் எனக் காத்திருந்தார். அப்படியே நடந்தது.

"எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறாள் இவள். அதனால் எனக்கும் இவளுக்கும் தினமும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கிறது. வாழ்க்கை நிம்மதியாக இல்லை ஸ்வாமி" என்றான் கணவன்.

"ஸ்வாமி.. நான் நல்லதுக்குத்தானே என் கருத்துகளைச் சொல்றேன். அதை இவர் ஏற்றுக்கொள்வதே கிடையாது" என்றாள் மனைவி.

"நாலு இடங்களுக்குப் போய்வரும் நானும், சமையல்கட்டிலேயே அடைந்து கிடக்கும் இவளும் சரிசமமாகுமா? கொஞ்சமும் உலக அனுபவமில்லாத இவளால் எப்படி சரியான ஆலோசனைகள் கொடுக்க முடியும் ஸ்வாமி?" என்றான் கணவன்.

"இப்படித்தான் என்னை எப்போதும் மட்டம் தட்டிக் ண்டே இருக்கிறார் இவர்" எனக்கூறி கண்களைக் கசக்கினாள் மனைவி.

பிரச்னை புரிந்துவிட்டது குருவுக்கு. ஓரமாக நின்றிருந்த சிஷ்யனுக்கு, இந்தப் பிரச்னையை எப்படித் தீர்க்கப்போகிறார் தனது குருநாதர் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமானது.

எதிரே இருந்த கணவனை ஏறிட்டார் குருநாதர். "நீ என்னைச் சந்திக்க வருவதாக எப்போது முடிவெடுத்தாய்?"

"இன்று காலையில் தோன்றியது. உடனேயே உங்களுக்குத் தகவல் அனுப்பினேன்" என்றான் அவன்.

"அலுவலகத்தில் அன்றன்றைய பணிகளை எப்போது திட்டமிடுவாய்?"

"தினமும் காலையில் அலுவலகம் சென்றதும் முதல் வேலையாக அன்றைய பணிகளைத் திட்டமிட்டுக்கொள்வேன். அதன்படியே நடப்பேன்" என்றான் அவன்.

பார்வையை அவனது மனைவியின் பக்கம் திருப்பினார் குரு. கேள்வியையும்.

"எந்த நாளில் என்ன உணவு சமைப்பது என எப்படி நீ திட்டமிடுகிறாய்?" என்றார்.

"நகரத்தில் நடக்கும் வாரச் சந்தைக்குச் செல்வேன். அடுத்த வாரம் முழுவதும் என்ன சமையல் செய்ய வேண்டும் என்பதை அப்போதே திட்டமிட்டுவிடுவேன். ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து விடுவேன். அடுத்த நாள் என்ன சமைப்பது என முதல் நாள் இரவிலேயே முடிவு செய்து, அதற்கான காய்கறிகளை எடுத்துச் சுத்தம் செய்து தயாராக வைத்துக்கொள்வேன். மற்ற பொருட்களையும் தேவையான அளவில் எடுத்து கண்ணில் படும்படி வைத்துக்கொள்வேன். மாவு அரைக்க வேண்டுமென்றால், முந்தைய நாள் மாலையிலேயே அரைத்து வைத்துக்கொள்வேன்" என்றாள் அவள். இதையெல்லாம் ஏன் இவர் கேட்கிறார் என அவளுக்கு வியப்பாக இருந்தது.

குவளையில் இருந்த நீரை எடுத்துப் பருகினார் குருநாதர். அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலோடு அமைதியாக இருந்தனர் மூவரும்.

கணவனை கனிவுடன் நோக்கினார் குரு. "நமக்காகச் செய்துகொள்ளும் பணிகளைவிட பிறருக்காகச் செய்யும் பணிகளே போற்றுதலுக்குரியவை. அர்ப்பணிப்போடு செய்யும் தவம் போன்றது அடுத்தவர்களுக்காக உணவு தயாரிக்கும் செயல். உன் மனைவி உனக்காகச் சமையல் செய்வது, உன் அலுவலகப் பணிகளைவிட உயர்வானதுதான்".

நிமிர்ந்து உட்கார்ந்தாள் மனைவி.

குரு தொடர்ந்தார். "அன்றன்றைய பணிகளை அன்றன்று காலையில் திட்டமிடும் உன்னைவிட, அடுத்த வார சமையலை இந்த வாரமே திட்டமிட்டுத் தயாராகும் உன் மனைவி எந்த விதத்தில் குறைவானவள்? தொலைநோக்குப் பார்வையுடன் தயாராவது, சரியானதை முதல் நாளிலேயே திட்டமிடுவது, கவனம் சிதறாமல் சமையல் செய்வது, பாசத்தையும் ஏழாவது சுவையாக உணவில் சேர்ப்பது.. இப்படி உன் அலுவலகப் பணிகளுக்குத் தேவையான ஆற்றலை விடவும் அதிக ஆற்றல் தேவைப்படுவது இவளது சமையலறைப் பணிகளுக்குத்தான். உன் பணிக்கு வார விடுமுறை உண்டு. ஆனால், இவளுக்கு விடுமுறை இல்லை. உன் பணிக்கு ஓய்வடையும் காலம் வரும்.ஆனால், இவளது சமையல்கட்டு சேவைக்கு ஓய்வுக்காலம் கிடையாது. தவிர, உன் முடிவுகள் எல்லாமே பொருள் சார்ந்ததாகவே இருக்கும். ஆனால், உன் மனைவியின் முடிவுகள் உன் உடல் நலன் சார்ந்ததாகவும் இருக்கும். அதனால், உன் மனைவியின் ஆலோசனைகளை நீ ஏற்பதனால் உனக்கு நன்மைகள் விளையும் வாய்ப்புகளே அதிகம்" என்றார் குரு.

மனைவிக்கு மகிழ்ச்சி. கணவனுக்குத் தெளிவு. சிஷ்யனின் சிந்தனையில் மலர்ச்சி!

ஐப்பசி மாதம் .



இந்த நாட்களை மறந்து விடாதீர்கள் !!
ஐப்பசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்?

⭐ ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதத்தில் சிறப்புமிக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பௌர்ணமியில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம், தீபாவளிப் பண்டிகை, கந்தசஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பல்வேறு சிறப்புகள் நிறைந்துள்ளது.

ஐப்பசி பௌர்ணமி :

⭐ சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

⭐ எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது.

⭐ சிறப்புவாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று நமது குறைகளை நீக்கி பேறு அடையலாம்.

ஐப்பசி சதயம் :

⭐ ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மா மன்னர் ராஜராஜசோழன். அவரை சிறப்பிக்கும் வகையில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

வளர்பிறை ஏகாதசி :

⭐ ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி 'பாபாங்குசா" என்று அழைக்கப்படுகிறது.

⭐ இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை அகலும், பசிப்பிணி நீங்கும், பாவ விமோச்சனம் பெறலாம்.

தேய்பிறை ஏகாதசி :

⭐ ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி 'இந்திரா ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது.

⭐ இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்.

கடைமுகம் :

⭐ ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது.

⭐ ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர். இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்பர்.

⭐ ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.

தீபாவளி :

⭐ தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பட்ச பிரதமை நாட்களில் கொண்டாடப்படுகிறது.

கந்த சஷ்டி :

⭐ கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.

எது_கெடும் ????



01) பாராத பயிரும் கெடும்.

02) பாசத்தினால் பிள்ளை கெடும்.

03) கேளாத கடனும் கெடும்.

04) கேட்கும்போது உறவு கெடும்.

05) தேடாத செல்வம் கெடும்.

06) தெகிட்டினால் விருந்து கெடும்.

07) ஓதாத கல்வி கெடும்.

08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.

09) சேராத உறவும் கெடும்.

10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.

12) நயமில்லா சொல்லும் கெடும்.

13) கண்டிக்காத பிள்ளை கெடும்.

14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.

15) பிரிவால் இன்பம் கெடும்.

16) பணத்தால் அமைதி கெடும்.

17) சினமிகுந்தால் அறமும் கெடும்.

18) சிந்திக்காத செயலும் கெடும்.

19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.

20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.

22) முறையற்ற உறவும் கெடும்.

23) அச்சத்தால் வீரம் கெடும்.

24) அறியாமையால் முடிவு கெடும்.

25) உழுவாத நிலமும் கெடும்.

26)உழைக்காத உடலும் கெடும்.

27) இறைக்காத கிணறும் கெடும்.

28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.

29) இல்லாலில்லா வம்சம் கெடும்.

30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.

32) துணையில்லா வாழ்வு கெடும்.

33) ஓய்வில்லா முதுமை கெடும்.

34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.

35) அளவில்லா ஆசை கெடும்.

36) அச்சப்படும் கோழை கெடும்.

37) இலக்கில்லா பயணம் கெடும்.

38) இச்சையினால் உள்ளம் கெடும்.

39) உண்மையில்லா காதல் கெடும்.

40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.

42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.

43) தூண்டாத திரியும் கெடும்.

44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.

45) காய்க்காத மரமும் கெடும்.

46) காடழிந்தால் மழையும் கெடும்.

47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.

48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.

49) வசிக்காத வீடும் கெடும்.

50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.

52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.

53) பொய்யான அழகும் கெடும்.

54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.

55) துடிப்பில்லா இளமை கெடும்.

56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.

57) தூங்காத இரவு கெடும்.

58) தூங்கினால் பகலும் கெடும்.

59) கவனமில்லா செயலும் கெடும்.

60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு

Wednesday, October 16, 2019

மருத்துவ ஜோதிடம். செவ்வாய் தரும் நோய்கள்:


ஜோதிடத்தில் செவ்வாய் க்கு தனி இயல்பு உண்டு.ரத்த ஓட்டம், ரத்தம், தசைகள், தசை நார்கள் ,ஆணுறுப்பு என உடலில் உள்ள பல விஷயங்களுக்கு செவ்வாயே காரகம் வகிக்கிறார்.

ஒருவர் தனது வாழ்க்கையை எவ்வளவு ஆரோக்கியமாக பலசாலியாக வாழ போகிறார் என்பதை செவ்வாய் தான் முடிவு செய்வார்.ஆயினும் அவருக்கும் நோய்களை கொடுக்கும் அமைப்புகள் உள்ளன.

வாகன விபத்தில் ரத்தம் வழிந்து ஏற்படும் காயங்கள் செவ்வாயால் தரப்படுபவை.தசை நார் கிழிதல்,தசை பிடிப்பு, ரத்தம் தொடர்பான நோய்கள் அனைத்தையும் செவ்வாயால் தர முடியும். கொடிய பாபதன்மை உள்ள செவ்வாய் மூளையில் ரத்த கட்டி போன்ற நோய்களை தருவார்.

மற்றொரு பக்கம் தற்கொலைக்கும் ஒருவரை செவ்வாயால் தூண்ட இயலும்.பொதுவாக தற்கொலைக்கு காரகம் வகிக்கும் கிரகங்கள் ராகு கேதுக்கள் தான் என்றாலும் தற்கொலைக்கான காரணம் என்பதை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை விரக்தி,பயம், அவமானம். இதில் செவ்வாய் அவமானம் காரணமாக செய்து கொள்ளும் தற்கொலைகளுக்கு காரணம் ஆவார். ஏனெனில் தன்மானத்தை பெரிதாக கருதும் அனைவரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.

இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவாக மட்டும் பார்ப்பது நல்லது.குறிப்பாக ஜோதிட ஆர்வம் அதிகம் கொண்டவர்கள் இதை படிக்கும் போது இது தொடர்பான மேலும் தகவல்கள் கிடைக்க பெற்று மருத்துவ ஜோதிடம் என்னும் பிரிவு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மற்றபடி இது யாரையும் பயமுறுத்தும் பதிவுகள் அல்ல.

......நன்றி........

ஒரு குட்டி கதை:



ஆஞ்சநேயரின் பரம பக்தர் ஒருவருக்கு சொக்கட்டான் விளையாட ஆசை! தன்னுடன் சேர்ந்து விளையாட ஆஞ்சநேயரே வரவேண்டும் என விரும்பினார். எனவே, மனமுருகி ஆஞ்சநேயரைப் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய ஆஞ்சநேயரும் பக்தரது விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒப்புக் கொண்டார்.

ஆனாலும் ஒரு நிபந்தனை விதித்தார்.

"நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன். எனவே, தோற்றால் நீ வருத்தப்படக் கூடாது!'' என்றார் அஞ்சனை புத்திரன். பக்தரும் சம்மதித்தார் இருவரும் விளையாட ஆரம்பித்தனர். பக்தர், ஒவ்வொரு முறையும் "ஜெய் அனுமான்" என்ற படியே காய்களை உருட்டினார்".

ஆஞ்ச நேயர் ''ஜெய் ராம்" என்றபடி காய்களை உருட்டினார். ஒவ்வொரு முறையும் பக்தனே வெற்றி பெற்றான். "சரி அடுத்த முறை ஜெயிக்கலாம்!" என்று ஆஞ்சநேயர் மீண்டும் மீண்டும் விளையாட வெற்றி பக்தனின் பக்கமே! மனம் வருந்திய ஆஞ்ச நேயர் "ஸ்வாமி, தங்கள் நாமத்தை உச்சரித்தும் எனக்கு தோல்வியா...?" என்று ராமரிடம் பிரார்த்தித்தார்.

அவர் முன் தோன்றிய ராமன், "ஆஞ்சநேயா... நீ, என் பக்தன் ஆதலால், உன்னிடம் என் சக்தி இணைந்துள்ளது. அவனோ உனது பக்தன். ஆதலால், அவனது சக்தியுடன் நம் இருவரது சக்தியும் இணைந்து விடுகிறது. இதுவே அவனது வெற்றிக்கு காரணம்!'' என்றார்...

ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏

சஷ்டியப்தபூர்தி சதாபிஷேகத்திற்கு போனாலும் அந்த தம்பதிகள் கையில் பணமாகவே கொடுக்கவேண்டும், சம்பிரதாயங்களை கடந்து, அவர்கள் மனம் குளிர செய்வோம்

சஷ்டி அப்தபூர்த்திக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்...
ஆனால் சதாபிக்ஷேகம் செய்து கொள்ளும் முதியவர்களுக்கு பணமாகத் தருவதே சிறந்தது

ஒரு உண்மை சம்பவம்

80 வயது முடிந்தது அந்த தம்பதியருக்கு
சதாபிஷேகம். வெகு விமரிசையாக. சுற்றமும் நட்பும் அந்த தம்பதியருக்கு புடவை வேஷ்டி என்று எடுத்து சபையில் அவர்களுக்கு கொடுத்து ஆசீர்வாதம் பெற்று சென்றனர். தடபுடலாக நடந்து முடிந்தது. மறுநாள் காலையில் அந்த பெரியவர் அருகில் உள்ள கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு எதிரில் உள்ள அரச மரத்தினடியில் அமர்ந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு இளம் தம்பதியினர் அவரிடம் அய்யா நாங்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் கோவிலுக்கு வந்தோம். நடை சாத்தியிருக்கிறது. எங்களுக்கு காத்திருக்க நேரம் இல்லை. உங்களை பார்த்தவுடன் உங்களிடம் ஆசி வாங்கலாம் என்று வந்தோம். எங்களை அசீர்வதிப்பீர்களா என்று கேட்டவுடன் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தவராக காலில் விழுந்த தம்பதியரை வாழ்த்திட்டு தான் கொண்டுவந்த துணிப்பையில் கையை விட்டு ஒரு 10 ரூபாய் நோட்டை எடுத்து அவர்களிடம் கொடுத்து தம்பி என் காலில் விழுந்து வணங்கிய உங்களுக்கு கொடுப்பதற்கு என்னிடம் இதை தவிர வேறு எதுவும் இல்லை. ஆகையால் இதை முழு மனதோடு கொடுக்கிறேன் பெற்றுக்கொள்வீர்களா என்று கேட்டு அந்த 10 ரூபாயை நீட்டினார்.

அவர்களும் அதை பெற்றுக்கொண்டு மிக மகிழ்ச்சியோடு சொன்னது அய்யா கோவிலில் சாமியை வழிபட்ட திருப்தி எங்களுக்கு கிடைத்திருக்கிறது. அந்த சாமியே ஆசீர்வதித்தை போல் உணர்ந்தோம் என்று சொல்லி அவர்கள் கொண்டுவந்த பையினுள்ளிருந்து ஒரு கவரை எடுத்து அந்த கவரை பெரியவரிடம் நீட்டி "அய்யா நாங்கள் கோவிலுக்குள் சென்றபோது நடையடைக்கப்பட்டிருந்தது கண்டு சற்று வருத்தமாக இருந்தது. அரை மணி நேரம் ஆகும் என்று சொன்னார்கள். நாங்கள் எங்கள் அவசரத்தை சொல்லவே உடனே அங்கிருந்த ஒருவர் உங்களை காட்டி அவருக்கு நேற்று தான் 80 கல்யாணம் அமோகமாக நடந்திருக்கிறது.

அவரிடம் சென்று வாழ்த்து பெற்று செல்லுங்கள் என்றார். சாமியே சொன்ன மாதிரி இருந்தது என்று சொல்லி இந்த கவரை உங்களின் 80 கல்யாணத்திற்கு எங்களின் அன்பளிப்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூற அந்த பெரியவரும் ஏற்றுக்கொண்டார். அந்த தம்பதியரும் விடை பெற்று கொண்டு சென்றனர். அவர்கள் சென்றபின் அந்த பெரியவர் அந்த கவரை பிரித்தார் 50 ரூபாய் புது நோட்டு கட்டு ஒன்று பிரிக்கப்படாமல் இருந்தது. அதை பார்த்ததும் அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. அதோடு முதல் நாள் மாலை நடந்தது அவர் கண்முன் வந்தது. சதாபிஷேகம் முடிந்த கையோடு வந்திருந்த அனைவரும் சென்றுவிட்டனர்.

அமெரிக்காவில் இருந்து வந்த பையன் மருமகள் பேரக்குழந்தைகள் இருவரும் மறுநாள் அதிகாலை புறப்பட தாயாராகி கொண்டிருந்தனர். அப்போது அந்த பெரியவரின் நீண்ட நாளைய நண்பர் ஒருவர் வந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரின் முகத்தில் படர்ந்த கவலையை பார்த்தவர் ஏம்பா நல்ல ஜம்முன்னு உன்னோட சதாபிஷேகம் முடிஞ்சது ஆனா நீ ரொம்ப கவலையா இருக்கிற மாதிரி தெரியுது என்ற உடன் அவர்களில் நீர் வழிந்தது. பின் அவர் சொன்னார் ஜோரா நடந்தது எல்லோரும் வந்து நிறைய புடவை வேஷ்டி பூ பழங்கள் ஸ்வீட் உலர் பழங்கள் என்று கொண்டுவந்து கொடுத்தார்கள் ஒரு சிலர் ஏதோ கவர்கள் கொடுத்தார்கள். ஆனால் நாளை ஊர் திரும்பும் என் பேர குழந்தைகளுக்கு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை. வந்திருந்த ஒரு சில கவர்களில் இருந்த 600 ரூபாயை நம் வீட்டில் வேலை செய்யும் பேசியம்மா வுக்கு 300 ரூபாயும் கோவில் உண்டியலில் வேண்டிக்கொண்ட படி 300 ரூபாயும் கொடுத்து விட்டேன்.

வங்கியில் உள்ள பணத்தை எடுக்காமல் இருந்தால் தான் இந்த மாத மருந்துக்கு உண்டான பணத்தை ஆன்லைனில் கட்டி மருந்தை வீட்டிற்கு வரவழைத்து கொள்ள முடியும். பையனிடம் கேட்பதற்கு மிகவும் கூச்சமாக உள்ளது. வீட்டு வாடகை சாப்பாடு மருந்து செலவு என்று பையன் தான் பணம் அனுப்புகிறான். அதில் பெரிதாக ஒன்றும் மீதம் பிடிக்க முடியவில்லை. அப்பிடி சேமிக்கும் பணமும் ஒரு சில கல்யாணங்களுக்காகவும் மளிகை சாமான்கள் காய்கறி என்று செலவாகி விடிகிறது. இந்த நிலையில் இதுபோன்ற function களில் வரும் எல்லோரும் புடவை வேஷ்டி என்று எடுத்து கொடுத்தால் அவ்வளவு புதுசு உள்ளே அடுக்கி வைத்திருக்கிறார்கள் எங்களுக்கு அதை கட்டிக்கொள்ள ஆயுசு பத்தாது. வருபவர்கள் இதை யோசிச்சு இனிமே இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களால் முடிந்ததை பணமாக அந்த தம்பதிகளிடம் கொடுத்தால் இது போன்ற பேரன் பேதிகளுக்கு கொடுக்கவும் என் மனைவி காய்கறி பூ என்று வாசலில் வரும் வியாபாரிகளிடம் வாங்க கைசெலவிற்கும் எனக்கு கோவில் உண்டியலில் என்னால் முடிந்ததை போடவும் அப்படியே கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களை என்றாவது ஒரு சில நாள் காசு போடவும் தெரு முனை தள்ளு வண்டி கடைகளில் என்றாவது வாய்க்கு ருசியாக ஏதாவது வாங்கி சாப்பிடவும் உதவியாகவும் யார் கையையும் எதிர்பார்க்காமல் இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் செய்யுங்கள் என்று நாம் எப்படி சொல்வது.

பையனிடம் இதற்க்கு மேல் கேட்பதற்கும் சங்கடமாக உள்ளது என்று கூறி முடித்தார். வந்த நண்பர் அவர் சொன்னதை கேட்டு வருத்தத்தோடு சென்றார். செல்லும்போது அவர் அந்த பெரியவரிடம் இனி இது போன்ற விழாக்களில் நானும் இதுபோல் செய்கிறேன். சஷ்டிப்பதபூர்தி சதாபிஷேகம் போன்ற எல்லா விழாக்களுக்கு தம்பதிகள் கையில் பணமாக கொடுப்பதை வழக்கமாக்கி கொள்கிறேன். இது இதுவரையில் எனக்கு தோணவில்லை என்று கூறி சென்றார்.

இப்போது கோவில் வாசலில் அமர்ந்த
அந்த பெரியவர் நிமிர்ந்து பார்த்தார். நடை திறந்து தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. அந்த பெரியவர் அந்த புதுமண தம்பதியர் போன திசையையும் ஆடவன் சன்னிதானத்தில் தெரிந்த கற்பூர ஜோதியையும் மாறி மாறி பார்த்தார். அவர் கண்களில் ஆனந்த கண்ணீர் இரண்டாவது முறையாக.

இது எனக்கு கிடைத்த ஒரு பாடம். இனி எந்த சஷ்டியப்தபூர்தி சதாபிஷேகத்திற்கு போனாலும் அந்த தம்பதிகள் கையில் பணமாகவே கொடுக்கவேண்டும், சம்பிரதாயங்களை கடந்து, அவர்கள் மனம் குளிர செய்வோம் என்ற உறுதி மனதில் ஏற்பட்டது.

Tuesday, October 15, 2019

அணுவும் ஆன்மீகமும்🌹


சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மும்மூர்த்திகள் யாரென்றே தெரியாமல் கதையளக்கும் அறிவிலிகளுக்கு இதோ திருமூலரின் விளக்கம்.

மும்மூர்த்திகளின் வடிவமாக கருதி வணங்கப்படும் சிவலிங்கம் அதற்கான விளக்கத்தை கொடுக்கிறது.

சிவலிங்கம் என்பது அணு அமைப்பை விளக்கும் உருவகம். இவ்வுலகில் எல்லாமும் அணுக்களால் ஆனவையே.

ஒரு அணு என்பது நடுவில் புரோட்டான்கள்+ நியூட்ரான்களால் ஆன ஒரு உட்கரு மற்றும் அந்த கருவை வட்டப் பாதையில் சுற்றி வரும் எலெக்ட்ரான்கள்.

🌻 புரோட்டான்கள் - நேர் மின் சக்தி கொண்டவை

🌼 எலெக்ட்ரான்கள் - எதிர் மின் சக்தி கொண்டவை

🌺 நியூட்ரான்கள் - சமநிலை மின் சக்தி கொண்டவை.

#நியூட்ரான்களின்_வேலை:

நேர் மின் சக்தி கொண்ட புரோட்டான்கள் ஒன்றை ஒன்று விலக்கிக் கொள்ளாமல் அவற்றின் இடையில் நின்று நடுநிலை வகித்து அணு கருவை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது.

#புரோட்டான்களின்_வேலை:

எதிர் மின் சக்தி கொண்ட எலெக்ட்ரான்கள் சிதறி ஓடாமல் அவற்றை தன் நேர் மின் சக்தியால் இழுத்து வைத்திருப்பது.

#மையவிலக்கு_விசை:

எதிர் எதிர் மின் சக்தி கொண்ட புரோட்டான்களும், எலெக்ட்ரான்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து விடாமல் தடுப்பதற்காக எலெக்ட்ரான்களை வட்டப் பாதையில் வேகமாக சுற்ற வைப்பது.

#எலெக்ட்ரான்களை_ஏன்_இப்படி_தனித்து #சுற்ற_வைக்க_வேண்டும்?

ஏனெனில் எலெக்ட்ரான்கள் தான் இரண்டு அணுக்களை இணைத்து ஒரு மூலக்கூறை உருவாக்குகின்றன.

இந்த விளக்கம் இக்காலத்து விஞ்ஞானிகள் விளக்கம். வேதகாலத்தில் இது எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது?

நியூட்ரான்கள்(Neutrons) = மகேஸ்வரன்
புரோட்டான்கள்(Protons) = விஷ்ணு
எலெக்ட்ரான்கள்(Electrons) = பிரம்மா
மைய விலக்கு விசை(Centrifugal force) = சக்தி

#மகேஸ்வரன்_அல்லது_சிவன்(Neutron):

அணுவின் மையத்தில் நடுநிலை வகித்து அதை கட்டுகோப்பாக வைப்பதால், சிவன் தவக் கோலத்தில் இருப்பதாக கூறுகிறோம்.

#விஷ்ணு(Proton):

எதிர் மின் சக்தியை சிதறவிடாமல் 'காக்கும்' நேர் மின் சக்தி அதனால் விஷ்ணு 'காக்கும்' கடவுள் என்கிறோம்.

#பிரம்மா(Electron):

அணுக்களை இணைத்து மூலக்கூறுகளை 'படைப்பவர்'. அதனால் பிரம்மாவை 'படைப்புக்' கடவுள் என்கிறோம்.

#சக்தி (Centrifugal force):

அணுக்ளை இயக்கி மூலக்கூறுகளை உருவாக்கும் போது அந்த சக்தியை 'ரேணுகா' என்று அழைக்கிறோம். 'ரேணு' என்றால் மூலக்கூறு.

#அணுசக்தி:

ஒரு அணுவின் உட்கருவில் உள்ள நியூட்ரான்கள் தாக்கப்படும் போது சக்தி பலமடங்கு பெருகி அணுசக்தியாக(Nuclear power) மாறும். அது பேரழிவை உண்டாகும். அந்த அணு சக்தியே 'காளி' என்று அழைக்கப்படும். சிவனை 'அழிக்கும்' கடவுள் என்கிறோம். இதையே நாம் சிவனுடைய யோக நிலை கலைந்தால் அவர் ருத்ர தாண்டவம் புரிவதாகக் கூறுகிறோம். இதையேதான் சிவனுடைய தவம் கலையும் போது அவருடைய நெற்றிக்கண் தீப்பொறியை உமிழ்ந்து அழிப்பதாகக் கூறுகிறோம்.

நியூட்ரான்கள் அதாவது சிவன் அமைதியாக இருக்கும் போது அணுவை இயக்கி மூலக்கூறுகளை உருவாக்கும் போது ரேணுகாவாகவும், சிவன் தாக்குதலுக்கு உள்ளாகும்போது அணு சக்தியாக உருவெடுத்து காளியாக மாறுவதாலும் சக்தியை சிவனில் பாதி என்று பொருள் படும்படி சக்தி சிவனுக்கு 'மனைவி' என்கிறோம்.

சிவலிங்கம் = அணு(Atom)
முட்டை வடிவ ஆவுடையார் = அணு உட்கரு( சிவனும் விஷ்ணுவும்)(Nucleus={Protons + Neutrons})
வட்ட வடிவ பீடம் = பிரம்மா (Electrons)
அந்த பீடத்தில் உள்ள மூன்று வட்ட வடிவ கோடுகள் = சக்தி(Centrifugal force)

ஓம் நமச்சிவாய

மருத்துவ ஜோதிடம்: கேது தரும் நோய்கள்:



ஜோதிடம் என்பது திருமணம்,வேலை, நல்ல காலம்,குழந்தை பாக்கியம் போன்ற சுப விஷயங்களுக்கு தான் பார்க்க படுகிறது என்றாலும் நாம் நோய்,மரணம்,கடன்,அவஸ்தை,அவமானம் போன்ற தீய விஷயங்களையும் அறிந்து கொள்ள பயன்படவே செய்கிறது.அந்த வகையில் நவகிரகங்கள் அனைத்திற்கும் அதன் காரக ஆதிபத்திய ரீதியிலும் கிரக சேர்க்கை மற்றும் பார்வை அடிப்படையிலும் நோய்களை கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே நான் முயற்சிப்பது விழிப்புணர்வு தானே தவிர பயமுறுத்த அல்ல.ஜோதிடத்தில் முதன்மையான பலம் கொண்டவர் கேது.அவருக்கு சில நிலைகளில் ஜாதகருக்கு நோய்களை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.என்னென்ன நோய்கள் என்பதை பார்ப்போம்.

கேது கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அனைத்திற்கும் காரகம் வகிப்பவர்.எனவே உடலில் கிருமிகள் ,பூச்சிகள் மூலம் ஏற்படும் நோய்கள் மற்றும் நோய் தொற்றுக்கள் அனைத்திற்கும் கேதுவே காரணம்.அதேபோல் விஷ ஜந்துக்கள் மூலம் ஏற்படும் நோய்கள், உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீண்ட நாள் நோய் ஏற்பட்டு உடல் மெலிந்து காணப்படும் விஷயங்களுக்கு கேது தான் காரகர்.அதேபோல் கடைநிலையில் மருத்துவர்களே கைவிட்ட நிலையில் வரும் அனைத்து மர்ம நோய்களையும் கேதுவே வழங்குவார்.மன அழுத்தம் தன்னை தானே அழித்து கொள்ளுதல் போன்ற விஷயங்களுக்கும் கேதுவே காரணமாவார்.

கேது பாதகாதிபதி தொடர்பு,ஆறாம் மற்றும் எட்டாம் அதிபதி தொடர்பு அல்லது பகை கிரக சேர்க்கை பெற்றால் நோய் கொடுப்பார்.சற்று கவனமாக இருக்க வேண்டும் அவரது தசா புத்தி காலத்தில்.ஏனெனில் கண்ணுக்கு தெரியாத நோய்களை அல்லவா தருவார்.

எனவே அவரவர் சுய ஜாதகத்தில் கேதுவின் நிலையை அதன் தசா புத்தி வரும் போது ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

நாம் இங்கே இதை விழிப்புணர்வுக்காகவே இந்த பதிவை போடுகிறோம்.யாரையும் பயமுறுத்தும் நோக்கம் இல்லை. எதிர்மறையாக அமைப்புகள் இருந்தாலும் ஜாதகருக்கு நேர்மறையாக எடுத்து சொல்லி நல்ல முறையில் அவரை காப்பாற்றுவதே ஒரு ஜோதிடருக்கு அழகு.ஆயினும் எல்லா கிரகங்களும் தன்னுடைய தசா புத்தி காலத்தில் நன்மை செய்வது இல்லை என்பது நாம் அறிந்த உண்மை.

Prevention is better than cure என்னும் ஆங்கில பழமொழி சொல்வதை போல வருமுன் காப்பது சிறந்தது என்ற அடிப்படையில் பதிவிட்டுள்ளோம். பிற கிரகங்கள் தரும் நோய்கள் குறித்தும் நாம் விரிவாக பார்ப்போம்.

.......நன்றி.........

Monday, October 14, 2019

சொர்க்கம் பூமியில் தான் இருக்கிறது..

வீடு குளிர்ச்சியடைய வேண்டுமா?? விளக்கெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்..

அதிக ஆக்ஸிஜன் வேண்டுமா?? எள்ளெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்..

தொற்று நோய் கிருமிகள் அழியவேண்டுமா?? வேப்பெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்..

பேன் தொல்லை பொடுகு ஸ்கின் அலர்ஜி போக வேண்டுமா??
ஆண்டுக்கு ஒருமுறை ஏதாவதொரு கோவிலுக்கு சென்று மொட்டை அடியுங்கள்..

இது சைனஸ் மற்றும் நுரையீரல் பிரச்சினை உள்ளவர்களுக்கு..
மார்கழி மாதம் முப்பது நாட்களும் விடியற்காலை எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு நடந்து சென்று அரசமரத்தை சுற்றிவிட்டு விநாயகரை வழிபட்டுவாருங்கள்...

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் ஆன்மீகத்தின் வாயிலாக நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள்.

யாரும் நமக்கு விளக்கவேண்டியதில்லை..

மார்கழி மாதம் கடைசியில் தான் சொர்க்கவாசல் திறக்கும்..

சொர்க்கம் பூமியில் தான் இருக்கிறது..

கேன்சருக்கான புதிய இயற்கை மருந்து

சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும் குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.

Bitter gourd in hot water can help you. No matter how busy u r, u need to read this, then spread to friends and others. Spread the love.

பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.

Hot bitter gourd can kill cancer cells!

சூடான பாகற்காய் சுடுநீர் .....கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது.

Cut 2-3 thin slices of bitter gourd n put in a glass, pour hot water, water will become alkaline (alkaline). Drink every day. For anyone, it will be useful.

பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்.

Hot water bitter gourd will emit an anti-cancer substance. This is a new development in the world of natural medicine, useful in treating cancer.

பாகற்காயில் உள்ள கேன்சர் நோயினை எதிர்க்கும் மருத்துவ பொருளினை சுடு தண்ணீரில் வெளியேற்றி விடும். இயற்கை மருத்துவத்துறையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

Hot water bitter gourd extract will affect the cyst and tumor. Already proven, it can help various kinds of cancer.

இந்த பாகற்காய் இரசமானது கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் மீது தீவிரமாக செயல்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபனமாகியுள்ளது. மேலும் இது பல்வேறு வகையான புற்றுநோய்களையும் தீர்க்க உதவுகிறது.

Using bitter gourd in treating cancer, it will only kill the malignant cells of the tumor. It will not affect healthy cells.

நாம் இந்த பாகற்காய் இரசத்தினை தொடர்ந்து பயன்படுத்தும் அது புற்றுநோய் கட்டியில் தீவிரமாக பரவக்கூடிய செல்கள் மீது அதிதீவிரமாக செயல் பட்டு Malignant எனப்படும் வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. தவிர பாதிக்கப்படாத மற்ற செல்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.

In addition, amino acids and polyphenol oxidase in bitter gourd, can balance high blood pressure, blood circulation, reduce blood clotting and can prevent the occurrence of deep vein thrombosis.

இது மட்டுமல்லாமல் பாகற்காயில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் பாலிஃபினல் ஆக்சைடுகள் நமது உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தினை சமன் செய்கிறது. இரத்த நாளங்களில் சீரான இரத்த ஓட்டத்தினையும், நாளத்தில் உள்ள இரத்த அடைப்புகளையும் சீர்செய்கிறது.

🙏🏻💖
After you hv read this, send it out to family n friends. Spread love! Must take good care of your health.

Friday, October 11, 2019

கெளரி விரதமும் அனுஷ்டிக்கும் முறையும்..



ச‌கல சௌபாக்கியங்களும் நல்கி எமக்கு எதுவித துன்பமும் ஏற்படாது “(பாது) காப்பு” தரும் காப்பு விரதம் – கேதார கௌரி விரதம்

ஆண்டு தோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஸ்ண பட்சத்து சதுர்த்தசியீறாக (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன.
இவ் விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர். மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிக்கின்றனர். விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.

சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்நாரிஸ்வரியாகவும், அர்த்த நாரீஸ்வரராகவும் ஒன்றாகி விரதமே கேதார கௌரி விரதமாகும்.

“கேதாரம்” என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய “கௌரி’ இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப் பெயர் உண்டாயிற்று. சிவனுக்கு சமமான நிலையில் சக்திஅமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது.

தென்நாட்டுச் சைவம் எனப்போற்றப்படும் சைவ சித்தாந்தம் கூறும் பரம்பொருள் சிவனாகும். சிவனின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் பல இருந்த போதிலும் கேதார கௌரி விரதம் பலவகையிலும் சிறப்புடைய விரதமாகக் கொள்ளப்படுகின்றது. பக்தர்கள் இவ்விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும், புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.

இதனை விட சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பதும், இவ் விரதத்திற்கு வழங்கப்படும் அடுத்த சிறப்பாகும். ஆண், பெண் என்ற வேறுபாடோ, வயது வேறுபாடோ இன்றி, வாழ்க்கையின் எந் நிலையில் இருப்போரும் இவ் நோன்பினை தமக்கு வேண்டிய வரங்களை வேண்டி அனுஷ்டித்து இக, பர இன்பத்தினைப் பெற்று இன்புற்று வாழ வழி செய்கின்றது. இத்தகைய சிறப்பு பெற்ற “கேதார கௌரி விரதம்’ பற்றி ஓர் புராண வரலாறு உண்டு.

கைலயங்கிரியின் சிகரத்தில் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் உமதேவி சமேதராய் விளங்கும் பரமசிவன் பக்த கோடிகள் தரிசிக்கும் பொருட்டு தேவசபையில் வீற்றிருக்கின்றார். அங்கே தேவவாத்தியங்கள் முழங்க கிருதாசி, மேனகை முதலிய தேவமாதர்கள் நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். அதிலே நடன ஸ்திரீகளில் சவுந்தர்யம் மிக்கவளாகிய அரம்பையானவள் அற்புதமான நடன விசேடங்களை நடித்துக்காட்டுகிறாள்.

அப்போது அந்தரங்க பக்தராகிய பிருங்கி மகரிஷி பக்தியோடு விசித்திரமான விகட நாட்டியம் ஒன்றை ஆடிக் காட்டுகிறார். பார்வதியும் அங்கே இருக்கின்றாள். தேவர்கள் ஆனந்தத்தால் சிரித்து மகிழ்கின்றார்கள். பார்வதக்குகை அச் சிரிப்பொலியால் கலகலவென எதிரொலிக்கின்றது. பரமசிவனும் பிருங்கியின் நாட்டியத்தில் மூழ்கித் திளைத்து மகிழ்கிறார். பரமசிவன் அனுக்கிரகமும் பிருங்கி மகரிஷிக்குக் கிடைக்கிறது. அதைக் கண்டு சபையிலுள்ளோர் பிருங்கி மகரிஷியை கௌரவித்து பாராட்டுகிறார்கள்.

இவ்வேளை பிரம்மா, விஷ்ணு, தெய்வேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், அட்டதிக்குப் பாலகர்களும், முனிவர்களும், பதினெண்ணாயிரம் ரிஷிகள் என்போரும் இருவரையும் மூன்று தடவை பிரதர்சனம் செய்து வணங்கிச் சென்றனர்.

ஆனால்; அந்த நேரத்தில் பிருங்கி மகரிஷி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கினார். (வண்டின் உருவம் பெற்றதால் இம் முனிவர் “பிருங்கி முனிகள்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்). பிருங்கி என்றால் வண்டு.

பிருங்கி ரிஷியின் இச்செய்கையைக் கண்டு கோபமுற்ற பார்வதிதேவி, பரமேஸ்வரனிடம் காரணம் கேட்க, பரமேஸ்வரனும் அர்த்தபுஷ்டியான ஒரு புன்முறுவலுடன் பின்வருமாறு கூறினார். தேவி! பிருங்கி முனிவர் உலக இன்பத்தை நாடுபவர் அல்ல. மாறாக மோட்சத்தை நாடுபவர். மோட்சத்தை நாடும் அவர் உலக இன்பங்களை நல்கும் உன்னை வணங்காது மோட்சத்தை நல்கும் என்னை வணங்கியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே தேவி எனக்கூற, இதனைக் கேள்வியுற்ற லோகமாத மேலும் கோபமுற்றவளாக எனது சக்தி இல்லாமல் மோட்சத்தை நாடும் உங்கள் பக்தரான பிருங்கி முனிவர் மோட்சத்தை அடைய முடியாது என்பதுடன் இங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைத்து தனது இருப்பிடத்தைக் கூட அண்ட முடியாது அவ்வாறான சக்தியைக் கொடுக்கும் என்னை ஏளனம் செய்தாய்.

ஆதலால் “நிற்க முடியாமல் போகக் கடவாய்’ என முனிவருக்கு சாபம் கொடுத்தார். நிற்க முடியாது சக்தி அனைத்தையும் இழந்த முனிவர் தள்ளாடியவாறே நிலத்தில் விழப் போனார். இந்நிலையில் என் பக்தனைக் காப்பாற்றுதல் என் தர்மம் எனக் கூறி பிருங்கி முனிவரின் கையில் தண்டு (ஊன்றுகோல்) ஒன்றை சிவன் கொடுத்தார். தண்டினைப் பெற்றுக் கொண்ட முனிவர் சிறிது சக்தியைப் பெற்றவர் போல் லோகநாயகனுக்கு கோடானு கோடி வணக்கம் என மீண்டும் பரமேஸ்வரனை மட்டும் வணங்கி தனது ஆச்சிரமத்தை அடைந்தார்.

இதனைக் கண்ட லோகமாதாவுக்கு மேலும் கோபம் உண்டாகின்றது. பிருங்கி முனிவர் மட்டுமன்றி தனது கணவரான பரமேஸ்வரனும் தன்னை அவமதித்து விட்டார் என்ற கொடிய கோபத்தில் மற்றவர்கள் முன்பு என்னை அவமதித்த உங்களுடன் இனி நான் வாழப் போவதில்லை எனக் கூறி கைலையை விட்டு நீங்கிப் பூலோகத்துக்கு வருகிறாள். வால்மீகி மகரிஷி சஞ்சரிக்கிற பூங்காவனத்தில் ஓர் விருட்சத்தின் அடியில் அமர்ந்திருக்கிறாள்.

ஆனால் ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவியின் திருப்பாதங்கள் அவ்வனத்தில் பட்டதும், மரஞ் செடி, கொடிகள் எல்லாம் புத்துயிர் பெற்று தளிர்த்தன. மல்லிகை, முல்லை, மந்தாரை, பாரிஜாதம் போன்ற செடிகள் பூத்துக் குலுங்கியதுடன் அவற்றின் நறுமணம் வனத்தின் நாற்றிசையும் வீசுவதைக் கண்ட வால்மீகி மஹாரிஷி; தனது ஞானக் கண்ணால் தனது ஆச்சிரமம் அமைந்துள்ள வனத்தில் பரமேஸ்வரி எழுந்தருளி உள்ளதைக் கண்டார்.

முனிவர் பார்வதி தேவி எழுந்தருளியுள்ள வில்வமரத்தடிக்கு வந்து, ஆச்சரியத்துடன் தேவியை நோக்கி மும் மூர்த்திகளிலும் முதற் பொருளே! லோக மாதாவே! முக்கண்ணரின் தேவியே! முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தேவியே! தாங்கள் பூலோகம் வந்து சிறியோனின் பர்னசாலை அமைந்துள்ள வனத்தில் எழுந்தருளி இருப்பதற்கு யான் என்ன தவம் செய்தேனோ எனக் கூறி, அன்னையை மெய்சிலிர்க்க வணங்கி, தாயே! தாங்கள் பூலோகம் வந்ததற்கான காரணத்தை அடியேன் அறிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லையே? என வினாவி மீண்டும் வணங்கி நின்றார்.

அதற்கு பார்வதி தேவி “பிருங்கி முனிவரின் அலட்சியத்தால் கோபமுற்ற நான் பிரியக் கூடாத என் நாதனை விட்டுப் பிரிந்து மிகவும் நீண்ட தூரம் வந்து விட்டேன் என தனது தவறை உணர்ந்து கவலையுடன் கூறினார்.

வால்மீகி முனிவர் பரமேஸ்வரியை தனது ஆச்சிரமத்திற்கு அழைத்துச் சென்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இருக்கையில் அமரச் செய்து தினமும் வணங்கி வந்தார். இவ்வேளை பார்வதிதேவியானவள் வால்மீகி முனிவரை நோக்கி எனது அறிவீனத்தால் என் சுவாமியைப் பிரிந்து இங்கே (தற்போது தென் இந்தியாவில் உள்ள மாங்காட்டு அம்மன் ஆலயம்) வந்து விட்டேன். எனவே இவ்வுலகில் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத ஒரு விரதத்தினை அனுஷ்டித்து இறைவனை மீண்டும் அடைந்து ஆறுதல் அடைய விரும்புகின்றேன். எனவே, அவ்வாறான விரதம் இருப்பின் கூறும்படி கேட்டார். அதற்கு வால்மீகி பின்வருமாறு கூறினார்.

தாயே! இவ்வுலகில் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத விரதம் ஒன்று உள்ளது. அதனை மெய்யன்புடனும் பயபக்தியுடனும் அனுஷ்டித்தால் விரத முடிவில் பரமேஸ்வரனின் அருள் பூரணமாக கிடைக்கப் பெறுவீர்கள் எனக் கூறி, அத்தகைய சிறப்புப் பெற்றதும் யாராலும் இதுவரை அனுஷ்டிக்கப்படாததுமான விரதம் “கேதார கௌரி விரதம்” எனக் கூறி இவ்விரதத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய விரத நியதிகளை பின்வருமாறு கூறுகின்றார்.

புரட்டாதி மாதம் சுக்கிலபட்ச தசமி தொடக்கம் ஐப்பசி மாதத்துக் கிருஷ்ண பட்சத்துத் தீபாவளித் திருநாளான அமாவாசை வரை 21 நாள்கள் பிரதி தினமும் நீராடி சுத்தமான ஆடை அணிந்து ஆலமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து 21 வாழைப்பழம், 21 பாக்கு, 21 மஞ்சள், 21 அதிரசம், நோன்பு நூல் என்பவற்றை நைவேத்தியமாகப் படைத்து வழிபடல் வேண்டும் என்று கூறினார். சிவனை மனதில் தியானம் செய்து விதிப்படி வணங்கியதால் 21 ஆம் நாள் அம்பிகையின் விரதத்தில் மகிழ்ந்து அம்பாளின் முன் தேவ கணங்கள் புடைசூழ ரிஷபவாகனத்தில் பூலோகத்தில் அம்பிகையின் முன் காட்சி கொடுத்து தனது இடது பாகத்தை ஈஸ்வரிக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வர மூர்த்தம் பெற்று கைலாயம் சென்றார்.

இவ்விரத முடிவில் 21 இழையினால் ஆன காப்பை ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக் கையிலும் முழங்கையிற்கும் தோள்பட்டைக்கும் இடையில் கட்டுதல் வேண்டும். மேலும் முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் “பாரணம்’ பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது.

இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று, அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார். எனவே நாமும் இவ் அரிய நோன்பினை நோற்று பரம் பொருளின் பூரண கடாட்சத்தினைப் பெற்று “வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமாக!’

கேதாரகௌரி விரதம அனுட்டிக்கும் முறை:

கேதாரகௌரி விரதம் ஆலயத்தில் அனுஷ்டிப்பவர்கள் கேதாரகௌரி விரத ஆரம்பதினத்திலன்று கௌரி அம்பிகை சமேத கேதீஸ்வரநாதரின் சன்னிதானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கும்பத்தின் முன்பதாக அமர்ந்திருந்து பூசை வழிபாட்டிற்குரிய வலதுகையில் ஞானவிரலாகிய மோதிரவிரலில் தர்ப்பைப் பவித்திரம் அணிந்து சிவாச்சாரியர் மூலம் உங்கள் பிறந்த நட்சத்திரம் பெயர் ஆகியவற்றைக் கூறி குடும்பத்தவர் அனைவரது நன்மைகளுக்காகவும் விரத பூஜைகளை நடாத்துவதாகச் சங்கற்பம் செய்து ஸ்ரீ வரசித்தி விநாகர் வழிபாட்டுடன் ஆரம்பித்தல் அவசியமாகும்.

விரத தினங்களிலே பகலில் உணவு தூக்கம் ஆகியவற்றைத் தவிர்த்து, பழச்சாறு பால், நீர்மோர் ஆகியவற்றைமடடுமே அருந்தி தெய்வசிநதனையுடன் கழித்து, மாலையில் ஆலயத்தில் கௌரி மீனாட்சி சமேதரான கேதீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பாக நடைபெறும் அபிஷேக ஆராதனைகளிலும், அர்த்தநாரீஸ்வரராக இறைவனுக்கு நடைபெறும் அர்சனை வழிபாடுகளிலும் கலந்துகொள்வதுடன், கும்பத்தில் 21 தினங்களாக பூஜையில் வைக்கப்பட்டுள்ள, இருபத்தொரு இழைகளினால் உருவாக்கப்பெற்றுள்ள நோன்புக்கயிற்றில் இருக்கும் 21 முடிச்சுக்களுக்குமுரிய (கிரந்தி பூஜை) சிறப்பு மந்திரங்களை குரு மூலம் உபதேசமாகக் காதினால் கேட்டு அதனை திரும்ப உங்கள் வாயினால் பக்தியுடன் உச்சரித்து அதன்பின்னர் சிவலிங்கப்பெருமானை சிவலிங்காஷ்டக ஸ்தோத்திரத்துடன் கையில் பூவும் நீரும் ஏந்தி பிரதட்சிணம்செய்து கும்பத்துக்கு மலர்சொரிந்து வழிபடுவது அவசியமாகும்.

இன்றியமையாத காரணங்களினால் தினமும் வரமுடியாவிடின் இயன்ற தினங்களில் வந்து தவறவிட்ட பிரதட்சிண நமஸ்காரங்களையும் குறைவின்றி நிறைவேற்றிப் பூர்த்தி செய்வது அவசியமாகும். இறுதி நாளன்று பழைய நோன்புக்கயிற்றினை நீக்கிப் புதிய நோன்புக்கயிற்றினை கேதாரிகௌரி ரட்சைக் காப்பாக ஆண்கள் குருமூலம் வலது கையிலும், பெண்கள் குருமூலம் அல்லது கணவர் மூலம் அல்லது சுமங்கலிகள் மூலம் இடது கையில் அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம். அன்றையதினம் பூரணமான உபவாசமாக இருந்து மறுநாள் பாரணம் செய்வது மிகவும் உத்தமம்.

ஒருசிலர் ஆரம்பதினத்தில் வந்து சங்கல்பம் செய்து விரதத்தைத் தொடங்கிப் பின் இறுதி மூன்று தினங்களில் அனைத்து பிரதட்சிண நமஸ்காரங்களையும் செய்து முடித்து குருவழிபாட்டுடன் நோன்புக் கயிறு வாங்கி அணிவர். பழைய காப்புக் கயிறை நீர் நிலைகளில் போடவும். பெண்களுக்கு இறுதி நாளில் ஆலயத்திற்கு வந்து பூர்த்தி செய்ய இயலாது, மாத விலக்கினால் தடங்கல் ஏற்பட்டால் அசுத்தமான மூன்று தினங்களும் ஒருவேளை உணவுடன் விரதமாக இருந்து நான்காம் நாள் மங்கள ஸ்நானம் செய்து ஆலயத்தில் வந்து பிரதட்சண நமஸ்காரங்களை நிறைவு செய்து காப்பு அணியலாம். இதற்காக இன்னொரு அமாவாசை வரும் வரை காத்திருப்பது அவசியமில்லை.

இவ்விரதத்தை ஏனைய ஒருசில விரதங்களைப்போல இத்தனைவருடகாலம் மட்டுமே அனுஷ்டிக்கவேண்டுமென்ற நியதி கிடையாது. தொடர்ந்து அனுஷ்டிக்கும்போது வயோதிபத்தினால் தளர்ச்சியடைந்தவர்களும் நோயுற்று உடல் நலிவடைந்வர்களும் காலையிலேயே பக்தியுடன் பூஜைவழிபாடுகளை நிறைவேற்றி உச்சிப்பொழுதில் பால் பழம் அதிரசம் பலகாரங்களை உட்கொள்வதும் தவறல்ல.

ஆலயத்திற்குசெல்ல இயலாது இருப்பவர்கள்; அல்லது ஆலயம் இல்லாத ஊரில் வசிப்பவர்கள்:

புரட்டாதி மாதம் சுக்ல பட்ட தசமியில் இவ்விரத்த்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும். தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து பூக்கள், வில்வம் முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரை அன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்கள் வைத்து, தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.

தமது ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் தமது குடும்பத்தவரின், ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, குடும்ப அன்னியோன்னிய அபிவிருத்தி, மனச்சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் பெருகவும், குழந்தைகளின் கல்வி, உத்தியோகம் பெறவும், சுபமங்கள திருமணம் கைகூடவும், குழந்தைப் பாக்கியப்பேறுகள் கிட்டவும் இவ்விரதத்தை இயன்றவரை விடாது அனுஷ்டிப்பது உத்தமம் ஆகும். இவ்வாறு கௌதம முனிவர் விரதமஹிமையை உலக மாதாவாகிய கௌரிதேவிக்கு உபதேசம் செய்ய, அதைக்கேட்டு அன்னை கேதாரேஸ்வரப்பெருமானை நினைந்து தவமிருந்து வழிபட, இறைவன் காட்சிகொடுத்து தேவிக்குத் தனது இடப்பாகத்தைக் கொடுத்து தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரனாகி “உமையொருபாகன்” என்னும் சிறப்புத் திருநாமத்தைப் பெற்றார் என்பது வரலாறு.

தேவியின் வேண்டுதலினால் இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் அனைவருக்கும்; தம்பதிகள் சேமமாக இருத்தலும், பிணிநீங்கலும், வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும், கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.