Tuesday, December 31, 2019

முள்ளங்கியின் நன்மைகள்....




நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. கிழங்கு வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு வெப்பம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு.

அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான உயிர்ச்சத்துக்களும் (vitamin) தாது உப்புக்களும் உள்ளன.

முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.

முள்ளங்கியின் நறுமணம்...

முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும்.

சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், எரியம் (phosphorus) அதிகம் காணப்படுவதால்தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

குழந்தைகளின் தடிமன் போக்கும் பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் தடிமன், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.

இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும் சிறுநீர் பிரச்சினை தீரும்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி.

சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.

முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது.

முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது. அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது.

அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது...

கர்ப்பப்பை காக்கும்... ஆயுள் கூட்டும்... குழந்தையின்மை போக்கும்... வாழைப்பூ!


குலை வாழையைத் தலைமகளோடு ஒப்பிடுகிறார்கள், தமிழர்கள். அப்படியென்றால், எந்த அளவுக்கு நமக்கு வாழைப்பூ பயன்படுகிறது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது.பூ

`வாழைப்பூ மூலஇரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்

கோழைவயிற்றுக்கடுப்பு கொல்காசம்-அழியனல்

என்னஏரி கைகால் எரிவுத் தொலைத்துடலில்

மன்னவளர்க் குந்தாது வை'

- அகத்தியர் குணபாடத்தில் வாழைப்பூவின் பயன்கள் பற்றிப் பாடலாக எழுதி வைக்கப்பட்டுள்ளது.

சரி, வாழைப்பூவின் பயன்கள் பற்றிப் பார்ப்போமா!

இன்றைக்கு மனிதகுலத்தை வாட்டும் நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்று. இந்த நோய் வந்தவர்கள் வாழைப்பூவைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

சிலருக்கு மலம் வெளியேறும்போது கூடவே ரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை, மருத்துவ உலகம் 'ரத்த மூலம்' என்ற பெயர் வைத்து அழைக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்த மூலம் விரைவில் குணமாகும்.

வாட்டி வதைக்கும் வெயிலால், பலருக்கு உடல்சூடு ஏற்படும். சிலருக்கு இயற்கையிலேயே உடல் சூடாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கடைந்து, அதனுடன் சிறிது நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால், உடல்சூடு தணியும்.

அதேபோல், இப்போது உள்ள ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளால் பலரையும் பாதித்திருக்கும் பிரச்னை அஜீரணக் கோளாறு. இதனால் வயிற்றுக்கடுப்பு, சீதக்கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து, அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால், வயிற்றுக்கடுப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பெண்களுக்கு வாழைப்பூ பெரும் வரப்பிரசாதம் என்றேச் சொல்லலாம். கர்ப்பப்பைக்கு வாழைப்பூ மிகவும் நல்லது. மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, அதிக உதிரப்போக்கு உண்டாகும். அப்போது அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், ரத்தப்போக்கு கட்டுப்படும். அதோடு, உடல் அசதி, வயிற்றுவலி, சூதக வலி குறையும். நாளடைவில் மறையும்.

அதேபோல், பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்னை வெள்ளைப்படுதல். இதனால், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே, இத்தகைய பிரச்னை உள்ளவர்கள், இதை நல்ல பக்குவத்தோடு ரசம் செய்து சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் வெளியேறிவிடும். வாழைப்பூ ரசம் சாப்பிட, வறட்டு இருமலும் மறைந்து விடும்.

அதேபோல், கை, கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து, அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால், குணம் கிடைக்கும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால், உடல் பலம் பெறும்.

சிலர் குழந்தையின்மையால் மிகுந்த மனவேதனைக்கு ஆட்படுவர். அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்.

வலிப்பு நோய் தீர:-



வேப்பெண்னை 2லிட்டர் பூண்டு தோல் உரித்தது 100கிராம் வசம்பு சுக்கு தலா25கிராம் சட்டியில் வேப்பெண்ணையை விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் எரிக்கவும் எண்ணைசூடேரும் போது நசுக்கிய பூண்டை கொஞ்சம் கொஞ்சமாக கலக்கவும் அதிகமாக போட்டால் எண்ணை பொங்கி விடும் பிறகுவசம்பு சுக்கு பொட்டு கிளரவும் போட்ட மருந்து கருப்பு நிறமடைந்ததும் இறக்கவும் இதை காலை மாலை அரை டம்ளர் பாலில் சிறுவருக்கு 5சொட்டு பெரியவர்களுக்கு 10 சொட்டு சாப்பிட தரவும் இந்த எண்ணையை சாப்பிட ஆரம்பைத்தவுடன் வலிப்பு நிற்கும் 48 நாள் தரவும் பத்தியம் குளிக்க மற்றும் குடிக்க வெந்நீர் அசைவ உணவு தவிர்க்கவும் இம் மருந்து குழந்தைகளின் மார்பு சளியை நீக்கும்

சிறுநாகப்பூ



சிறுநாகப்பூவால் ஆண்குறித் தளர்வு நீக்கி, விந்து விரைவில் வெளியாவதும், சிறுநீரில் கலந்து வெளியாவதையும், மார்க்கந்தப்பிய ஆவிருதவாதம். மருத்துவ பரிசோதனைக்கும் அப்பாற்ப்பட்ட உடல் சோர்வு, காசரோகம் இவற்றை விலக்கும் '
இதை எமது ஆண்மைக்கான மருந்தில் SEX+ சேர்கிறது.

சிறுநாகப்பூ பொடியை தனித்தே தேன், சர்க்கரை, வெண்ணெய் இவற்றில் மத்தித்து சாப்பிட வயிற்றிலுண்டான வாயு, நீரடைப்பு, ஸ்திரீகளுக்குண்டாகும் உதிரச்சிக்கல் முதலியவை நீங்கும்.

கை கால் பாதம் விரல்களில் ஏற்படும் நரம்புவலிகளை அஷ்டசூரணத்துடன் கசாயமாக அருந்த வலி தீரும்.
பசுந்தயிரில் சிரிது பொடியை கலந்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை குணமாகும்.
பச்சவெண்ணெயுடன் கலந்து கால் கைளில் தேய்க்க எரிச்சல் அடங்கும்.
சதகுப்பையிலையுடன் சேர காய்ச்சலைப் போக்கும்.

உடலில்_இரத்தத்தின்_அளவை_அதிகரிக்கும்_அற்புத_உணவுகள்!!!



உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும்.

குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சி) அதிகம் ஏற்படும். இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டால் நகங்கள் மற்றும் சருமம் வெளுத்துப் போய் இருப்பதோடு, அதிகப்படியான சோர்வு, இரத்த அழுத்த குறைவு, தலைவலி, மூச்சுத்திணறல், கவனச்சிதறல் போன்ற பல அறிகுறிகள் தென்படும்.

இரத்த சோகையானது இரும்புச்சத்து குறைபாடு, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, வைட்டமின் பி12 குறைபாடு போன்றவற்றால் ஏற்படும். மேலும் இது முற்றினால், நரம்பு பாதிப்பு ஏற்படும். ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம். இங்கு உடலில் உள்ள இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

#கருப்பு_எள்ளு :-

இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை உணவின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது எள்ளு மிட்டாய் வாங்கியும் சாப்பிடலாம். இதனால் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.

#பேரிச்சம்_பழம் :-

பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இரவில் 2-3 பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு சாப்பிட்டு வருவது நல்லது.

#ஆப்பிள் :-

ஆப்பிளில் கூட இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவையும் அதிகம் உள்ளது. அத்தகைய ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை நீங்கும்.

#வாழைப்பழம் :-

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி, இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இரத்த சோகை மட்டுமின்றி, வேறு சில நன்மைகளும் கிடைக்கும்.

#உலர்_திராட்சை :-

உலர் திராட்சையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.

#பீட்ரூட் :-

பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்த ஊறும் என்று சொல்வார்கள். ஏனெனில் பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

#வெல்லம் :-

வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரைக்கு பதிலாக, டீ போன்ற பானங்களில் வெல்லத்தை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.

#தேன் :-

தேனில் இரும்புச்சத்து மற்றும் இதர வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து கலந்து, குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

#நெல்லிக்காய் :-

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.

#பார்ஸ்லி :-

பார்ஸ்லியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் வளமையாக நிறைந்துள்ளது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள். இதில் வைட்டமின் சி மற்றும் இதர வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், இவை இரத்தம் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும்.

#சிட்ரஸ்_பழங்கள் :-

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சையில், இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சி வளமையாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

#மாதுளை :-

மாதுளையில் இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் மற்ற கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை குணமாகும்.

#தக்காளி :-

தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபைன் போன்றவை வளமையாக நிறைந்துள்ளது. இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டால் மட்டும் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியாது, இரும்புச்சத்தை உறிஞ்சும் வைட்டமின் சி நிறைந்த உணவையும் சேர்த்து வந்தால் தான் இரத்தத்தின் அளவு அதிகரிக்க முடியும்.

#பச்சை_இலைக்_காய்கறிகள் :-

பச்சை இலைக் காய்கறிகளான பசலை கீரை, அரைக்கீரை, சிறு கீரை போன்றவற்றை டயட்டில் சேர்த்து வருவதன் மூலம், உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

Monday, December 30, 2019

நம்முடைய தோஷத்தை நாமே சில செயல்களால் போக்க முடியும் !!



1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட #சுக்ரதோஷம் படி படியாக குறையும்.
இந்த விவரத்தை மாற்றியும் செய்யலாம், படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும் குடிநீர் காலையில் மீதம் இருந்தால் செடிகளுக்கு விடலாம். குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்.

2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது #சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.

3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் #சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.

4.ஆசான் ,வேதம் படித்தவர், நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு செல்ல இயலாதவர்களுக்கு பொருள் கொடுத்து உதவுவது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதி யருக்கு பொருள் கொடுத்து உதவுவது , #குருவின் ஆசிகள் கிடைக்கும்.

5.சிதிலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல் #தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் , கவர்ச்சியும் கொடுத்துவிடும்.

6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும், பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது,தொழுநோய் /கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது #சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும்.

7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல், இல்லாதவர் களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் #செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும்.

8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) #புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில்,மேன்மையான வாழ்க்கையை கொடுக்கும்.

9.நாகங்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,இறந்த நாகத்தின் உடலை கண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,
குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது #ராகு_கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .

( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான். தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )

10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கிக் கொடுப்பது, வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது #தேவர்களை சாந்தி படுத்திவிடும் இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.

இவைகளே பொதுவானவை.

இவைகளை வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. தெரிந்துசெய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்.

கோயிலில் வணங்கும் முறைகள்:📖🎑 🚩🧘‍♂



⚜#கோயிலுக்கு_செல்லும்போது அக்கோயிலின் ஸ்தல வரலாறை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

⚜ உடல், ஆடை,மனம் எல்லம் தூய்மையாக இருக்க வேண்டும்.

⚜ பிரதான நுழைவாயில் வழியாகவே உள்ளே செல்ல வேண்டும்

⚜ மூடியிருக்கும் கோயிலில் வெளியிலிருந்து சாமி கும்பிட்டுக் கூடாது. வாகணங்களில் சென்றபடியே கடவுளை வணங்கக் கூடாது. அது கடவுளை அவமதிக்கும் செயலாகும்.

⚜வெறும் கையுடன் கோயிலுக்கு செல்லக்கூடாது. பழம், பூ, எண்ணெய், காணிக்கை இதில் எதாவது ஒன்றை வலது கையில் கொண்டு செல்ல வேண்டும்.

⚜தர்மம்: முதலில் கோயிலுக்கு வெளியில் பிச்சையிட்டு பின் கோயிலுக்குள் செல்ல வேண்டும். கோயிலில் வணங்கி வெயிலியில் வரும் பொது பிச்சையிடக் கூடாது.

⚜ கை, கால்களை அலம்பிக் கொள்ள வேண்டும்.

⚜கோபுர தரிசனம்: கோபுர தரிசனம் கோடி புண்ணியம், முதலில் கோயில் கோபுரத்தை கண்ணராத் தரிசிக்கவும். ஆண்கள் தலைக்குமேல் இரு கைகளையும் குவித்தும். பெண்கள் மார்புக்கு நேரே கைகளை குவித்தும் வணங்கவேண்டும்.

⚜ அஞ்சிநேயர், அதிகார நந்தி போன்ற காவல் தெய்வங்களை வணங்கிவிட்டு கோவிலுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

⚜கொடி மரம்: அதன் பிறகு, கொடி மரத்தின் பக்கத்தில் சென்று. கொடி மரத்திற்கு வலது பக்கமாக, தரையில் விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும். வேண்டுதல்களை கொடி மரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். கொடி மரம் இல்லாத கோவில்களில் பிள்ளையாரை துதித்து விட்டு பிரகாரத்துக்குள் நுழையா வேண்டும்.

⚜பலிபீடம்: பலி பீடத்திற்கு அருகில் சென்று வணங்கி நம்மிடமுள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாத்சரியும் என்னும் ஆறு தீய குணங்களை பலி கொடுத்ததாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

⚜ அம்மன் கோயில் பலி பீடத்தில் சிறிது உப்பு, மிளகைக் கொட்டி பிராத்தனை செய்தால் நோய்கள் தீரும் என்பது ஐதீகம். உரு எனப்படும் மனித உருவ பொம்மைகள் மற்றும் கண், கை, கால்கள் உடல் உறுப்பு பொம்மைகளை காணிக்கை அளித்தால் நோய் நிவாரணம் பெறும்.

⚜பலி பீடத்தை குறைத்தது மூன்று முறை அல்லது ஐந்து முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.

⚜தெய்வ வாகனம்: அடுத்தப்படியாக இருப்பது உள்ளே உள்ள மூலவருக்குரிய வாகனம்.

⚜ சிவபெருமான் என்றல் நந்தி,

⚜பெருமாள் என்றல் கருடன்,

⚜அம்பாள் என்றல் சிம்ம வாகனம் இவை எல்லாம் உள்ளே உள்ள மூர்த்தியை நோக்கியவாறு இருக்கும். நாம் கடவுளையும் வாகனத்தையும் சேர்த்தே வழிபட வேண்டும்.

⚜ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தில் உள்ள மூலவருக்கும், எதிரில் உள்ள நந்திக்கும் இடையில் விழுந்து வணங்குவதோ, குறுக்கே செல்வதோ கூடாது.

தெய்வ வாகனங்களில் மூக்கில் இருந்து வரும் காற்று மூலவருக்கும் போய் உயிர்நிலை தருவதாக ஐதீகம்.

⚜தெய்வ வாகனங்களின் வாலை பக்தியுடன் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

⚜கன்னிமூலை கணபதி: கன்னிமூளையுள்ள விநாயகரை முதலில் ஒரு பிரதட்சணம் செய்து வணங்க வேண்டும் பிள்ளையாரை வனங்கும்போது
தோப்புகரணமிட்டு
, நெற்றி பொட்டுகளில் லேசாகக் குட்டிக் கொள்ள வேண்டும்.

இதனால் காது மற்றும் முக்கிய ஜீவப் புள்ளிகள் தூண்டப்பட்டு, புத்துணர்வு கொள்வதாக விஞ்ஞானம் சொல்கிறது. விநாயகப் பெருமானுக்கு சிதறு தேங்காயைப் பெண்கள் உடைக்கக் கூடாது.

⚜பிரகாரங்களை வலம்வரம்போது: வேகமாக நடக்கக்கூடாது. கர்ப்பிணிப்பெண் தலையில் எண்ணெய்க் குடம் ஏந்தி நடந்தால் எப்படி அடிமேல் அடி வைத்து நடப்பார்களோ அதுபோல மெல்ல நடக்க வேண்டும்...🚩🧘‍♂

⚜ திருக்கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நேரத்திலும், மூடியிருக்கும் நேரத்திலும், திருவிழாவில் சுவாமி உலா வரும் நேரத்திலும் கோவிலில் தெய்வத்தை வணங்குவதோ, பிரதட்சணம் செய்வதோ கூடாது.

⚜அபிஷேகம் நடந்தால் பிரகாரத்தை சுற்ற கூடாது, அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.

⚜ விநாயகருக்கு ஒரு பிரதட்சணமும்,

⚜லிங்கம், முருகன், தக்ஷிணாமூர்த்தி, அம்மன் போன்ற மூர்த்திகளுக்கு மூன்று பிரதட்சணமும்,

⚜ விஷ்ணுவுக்கும் தாயாருக்கும் நான்கு பிரதட்சணமும்,

⚜அரச மரத்திற்கு. ஏழு பிரதட்சணம் செய்ய வேண்டும்.

மதியத்திற்கு மேல் அரச மரத்தை சுற்ற கூடாது. சுற்றி வரும் போது பலி பீடத்துக்கு வெளியே சுற்றவும். காலைப் பிரதட்சணம் நோயைத் தீர்க்கும். மத்தியப் பிரதட்சணம் விருப்பங்களை நிறைவேற்றும். மாலை பிரதட்சணம் பாவங்களை நாசம் செய்யும். இரவு பிரதட்சணம் மோட்சம் தரும். பிரதட்சனை முறை கடிகார முள் சுற்றும் திசையில் இருக்க வேண்டும்.

⚜ பிரதோஷ நாளன்று மட்டும் லிங்கத்தை வலமும் இடமும் மாறி மாறி வந்தி வழிபட வேண்டும்.

⚜துவரபலகர்கள்: மும்முறை சுற்றி வந்ததும் கருவறை மண்டபத்துக்குள் நுழைந்து. துவாரபாலகர்களின் முன் சென்று, இறைவனை தரிசிக்க அனுமதி தந்து அருளுங்கள் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். 🚩🧘‍♂

சிவன் கோயிலாக இருந்தால் முதலில் சிவனையும் பிறகு அம்பாளையும் வணங்க வேண்டும். பெருமாள் கோவிலில் முதலில் மகாலக்ஷ்மியை வணங்கி, பிறகு பெருமாளை வணங்க வேண்டும்.

⚜மூலவரை வணங்குதல்: பெருமாளை துளசியால் அர்ச்சித்து வணங்கும்போது கண்களை மூடி நிற்காமல் முதலில் பாதம், அபய, வரத, ஹஸ்தங்கள், நேத்திரம், முகம், ஆயுதங்கள் என ஓவ்ஒரு பாகமாகக் கூர்ந்து கவனித்து, இறைவனின் உருவத்தை கீழிருந்து மேலாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

⚜அம்பாள் என்றல், முதலில் கண்கள், மாங்கல்யம், அபய, வரத, ஹஸ்தங்கள், அலங்காரம், பாதம், என மேலிருந்து கீழாக தரிசித்து. தாயாரைப் பிரியதோடு பார்க்கும் குழந்தை போல மனம் உருகி தரிசிக்க வேண்டும்.

⚜ நாக சிலைகள், புற்றும், இருக்கும் ஸ்தலமானால், முதலில் அவற்றை வணங்கிவிட்டு அம்மனைத் தொழ வேண்டும்.

⚜பிரசாதம்: அர்ச்சனை செய்து, ஆரத்தி காட்டியதும் பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ளவேண்டும். பிரசாதம், தீர்த்தம், சடாரி, நைவேத்தியம் போன்றவற்றைப் பெற்றுக் கொண்டு வருவது நல்லது.

⚜விபூதி, குங்குமம் போன்ற பிரசாதங்களை கோயில்களின் தூண்களில் பூசுவதோ, திர்தத்தை தரையில் சிந்த விடுவதோ கூடாது.

அதனால் தான் தீர்த்தம் பெரும் சமயம் கைகளுக்குக் கீழே புடவையோ அல்லது மேல் துண்டையோ வைத்துக் கொள்கிறோம்.

⚜நவக்கிரகங்கள்: பெருமாள் கோவில்களில் நவக்கிரக வழிபாடு இல்லை.

⚜ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கினாலே நவக்கிரங்களை வணங்கிய பலன் கிடைக்கும்.

⚜சிவன் கோவில்களில் நவக்கிரங்களுக்கு தனி சந்நிதி இருக்கும்.

மூலவரைத் தரிசித்து வெளியே வந்ததும், நவக்கிரக தரிசனம் செய்து ஒன்பது முறை பிரதட்சணம் செய்வது நலம்.
சண்டிகேஸ்வரர்: சிவன் கோயில்களில், கடைசியாக வணங்க வேண்டியவர் சண்டிகேஸ்வரர் ஈசனத்தில் அமர்ந்திருக்கும் சண்டிகேஸ்வரரை தரிசித்து வழிபாடு புரத்தியடையும்படி வேண்டி கொள்ள வேண்டும்.

சண்டிகேஸ்வரர் எப்போதும் சிவ தியானத்தில் இருப்பதால் அவர் சந்நிதியில் மூன்று முறை வலது கையால் இடது கை நடுவில் தடவி வணங்க வேண்டும்.

⚜கோயில்களில் செய்யக் கூடாதவை:

⚜ கோயிலை அசுத்தம் செய்யக் கூடாது. எச்சில் துப்பக்கூடாது, தூங்கக் கூடாது,

⚜ நம்மைவிட சிறியவர் கையிலிருந்து விபூதியை எடுத்து நாம் தரிக்கக் கூடாது.

⚜ கோயிலுக்குள் மற்றவர்களுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது,

⚜ மற்ற கோயில்களை ஒப்பிட்டு பேசுதல் கூடாது. சத்தமாக சிரிக்க கூடாது, மொபைலில் பேசவும் கூடாது.

⚜கோயில்களில் இருந்து வீடு திரும்பும்போது: சிவன் கோயிலாக இருந்தால் சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து சிவகனங்களை அங்கேயே விட்டு செல்ல வேண்டும்.

⚜பெருமாள் கோயிலாக இருந்தால் உட்காராமல் வீட்டிற்குச் சென்றால் லட்சுமி தேவி நம்முடன் வருவதாக ஐதீகம்.

⚜பிரதான துவராபைகர்களை மறுபடியும் மணசீகமாக சேவித்து உத்தரவு பெற்றுக் கொண்டு, மறுபடியும் கொடி மரத்திற்கு எதிரில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வெளியில் வர வேண்டும்.

⚜நேராக நம் வீட்டிற்கு செல்ல வேண்டும், வேறு எங்கும் போக கூடாது. வீட்டிற்கு சென்றதும் கால்களை கழுவக்கூடாது , கோவிலை விட்டு வீட்டினுள் அப்படியை செல்ல வேண்டும்.

⚜ அப்போது தான் கடவுளிடம் நாம் கோவிலில் வேண்டிய வரம் நேராக நமது இல்லத்தில் நிலைத்து இருக்கும் .இதுவே கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள் ஆகும்.🔯 🚩🔯

இந்துக்களின் காலக்கணக்கு

இந்துக்களின் காலக்கணக்கு,
உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்..

கி.பி.1947 - பாரத சுதந்திரம்
கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்
கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்
கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்
கி.பி 58 - சாலி வாகன சக வருசம்
கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்
கி.மு 509 - புத்தர் தோற்றம்
கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்
கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்
கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்
கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்
கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்
கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்
கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம்
கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம்
கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம்
கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம்
கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு
கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!

குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...

அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!

வயதான கிழவனையும் வாலிபன் ஆக்கும் மூலிகை பற்றி தெரியுமா?



உலகில் கோடிக்கணக்கான மூலிகைகள் இருந்தாலும் ஒரு சில மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம்...
அப்படிப்பட்ட மூலிகைகளில் ஒன்று தான் கருவேலம்!

இதன் அனைத்து பகுதிகளும் பயன் தரக்கூடியது!
முக்கியமாக இந்த மரத்தின் பிசின்!

பிசினை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வர வீரியம் அதிகரிக்கும்...
பற்கள் கெட்டியாக கருவேலம் கொட்டைகளையும்,பாதாம் கொட்டையின் தோலையும் கருக்கி உப்புடன் கலந்து பல் தேய்த்து வர மிகுந்த பலன் கிடைக்கும்...
இதன் கொழுந்தை பாலில் கலந்து சாப்பிட அஜீரண கோளாறு நீங்கும்...
இந்த மரத்தின் பிசினில் கால்சியம், மக்னிசியம், பொட்டாசியம், சிறிதளவு மாலிக் அமிலம், சர்க்கரை சாம்பல் பொருட்களும் உள்ளன...
முடிந்த அளவு கருவேல மூலிகையை ஏதாவது ஒரு வகையில் உடலுக்கு கொடுப்பது சிறப்பானது...!

அட்டமா சித்திக்கள்:



1. அணிமா
2. மஹிமா
3. லஹிமா
4. கரிமா
5. பிராத்தி
6. பிரகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்

அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர். இந்தச் சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்
அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.

அணிமா:
பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வ ரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.

பிராத்தி:
எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

ஈசத்துவம்:
ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

வசித்துவம்
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.
திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

இதுதான் இறைவன் இயங்கும் நமது மனித உடல்*

*

*70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலப் பொருள்கள் (தனிமங்கள்)*

*1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்*
*2. கார்பன் 16 கிலோ கிராம்*
*3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்*
*4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்*
*5. கால்சியம் 1.0 கிலோ கிராம்*
*6. பாஸ்பரஸ் 780 கிராம்*
*7. பொட்டாசியம் 140 கிராம்*
*8. சோடியம் 100 கிராம்*
*9. குளோரின் 95 கிராம்*
*10. மக்னீசியம் 19 கிராம்*
*11. இரும்பு 4.2. கிராம்*
*12. ஃப்ளூரின் 2.6 கிராம்*
*13. துத்தநாகம் 2.3 கிராம்*
*14. சிலிக்கன் 1.0 கிராம்*
*15. ருபீடியம் 0.68 கிராம்*
*16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்*
*17. ப்ரோமின் 0.26 கிராம்*
*18. ஈயம் 0.12 கிராம்*
*19. தாமிரம் 72 மில்லி கிராம்*
*20. அலுமினியம் 60 மில்லி கிராம்*
*21. காட்மியம் 50 மில்லி கிராம்*
*22. செரியம் 40 மில்லி கிராம்*
*23. பேரியம் 22 மில்லி கிராம்*
*24. அயோடின் 20 மில்லி கிராம்*
*25. தகரம் 20 மில்லி கிராம்*
*26. டைட்டானியம் 20 மில்லி கிராம்*
*27. போரான் 18 மில்லி கிராம்*
*28. நிக்கல் 15 மில்லி கிராம்*
*29. செனியம் 15 மில்லிகிராம்*
*30. குரோமியம் 14 மில்லி கிராம்*
*31. மக்னீசியம் 12 மில்லி கிராம்*
*32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்*
*33. லித்தியம் 7 மில்லி கிராம்*
*34. செஸியம் 6 மில்லி கிராம்*
*35. பாதரசம் 6 மில்லி கிராம்*
*36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்*
*37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்*
*38. கோபால்ட் 3 மில்லி கிராம்*
*39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்*
*40. வெள்ளி 2 மில்லி கிராம்*
*41. நியோபியம் 1.5 மில்லி கிராம்*
*42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்*
*43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்*
*44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்*
*45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்*
*46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்*
*47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்*
*48. தால்வியம் 0.5 மில்லி கிராம்*
*49. இண்டியம் 0.4 மில்லி கிராம்*
*50. தங்கம் 0.4 மில்லி கிராம்*
*51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்*
*52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்*
*53. வாளடியம் 0.11 மில்லி கிராம்*
*54. தோரியம் 0.1 மில்லி கிராம்*
*55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்*
*56. சமாரியம் 50 மில்லி கிராம்*
*57. பெல்யம் 36 மில்லி கிராம்*
*58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.*

*மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.*

*மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று போய்விடுகிறது.*

*கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும் ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.*

*உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம்.*

*இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.*

*உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.*

*விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை.*

*தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.*

*நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன.*

*இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.(MI@55)*

*நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!!*

*உடலின்மொழி:*

*1. உடல் - உணவை கேட்கும் மொழி - பசி*

*2. உடல் - தண்ணீரை கேட்கும் மொழி - தாகம்*

*3. உடல் - ஓய்வை கேட்கும் மொழி - சோர்வு, தலைவலி*

*4. உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.*

*5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்*

*6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி - வாய் கசப்பு மற்றும் பசியின்மை*

*7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி*

*8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி*

*9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி*

*10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை*

*11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்*

*12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்*

*13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்*

*எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம்.*

*உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.*

*நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.*

*நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.*

*அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.*

நன்றி 🙏🙏🙏

குளிருக்கு பயந்து இரவில் கோலம் போடுவது சரியா?... தவறா?...



🔯 மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று கூறுவார்கள். இந்த மாதத்தில் சூரியன் குருவின் வீட்டில் (தனுசு) இருப்பார். இதன் காரணமாக சூரியக் கதிர்கள் பரவுவதற்கு முன் ஒரு தனி சக்தி உண்டாகும்.

🔯 இதன் காரணமாகவே அதிகாலையில் எழுந்து கோலமிட வேண்டும். அப்போது பெய்யும் பனிப்பொழிவானது நள்ளிரவில் பெய்யும் பனியைவிட மென்மையானதாக, தாக்கம் குறைந்ததாக, விஷத்தன்மையற்றதாக இருக்கும்.

🔯 எனவே, சூரியக்கதிர் பரவுவதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடும்போது மார்கழி மாத தட்பவெப்பநிலைக்கு உடல் ஒத்துப்போகும். பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். மாறாக பனிப்பொழிவுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் உடல்நலம் மேம்படாது.

🔯 சீதோஷண நிலையை, வாழும் சூழலுக்கு தகுந்தாற்போல் அமைத்துக் கொள்ளவே, வாசலில் கோலமிட்ட பின்னர் விளக்கு வைத்து வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விளக்கு வைப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் வீட்டை கதகதப்பாக வைக்க உதவும். சீதோஷண நிலையும் சமனடையும்.

🔯 மார்கழிப் பனியில் மண்ணும் குளிரும், தை பனியில் தரையும் குளிரும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, வாசலில் கோலமிட்டு சாணத்தில் பூசணிப்பூவை வைப்பதன் மூலம் பனியால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

🔯 நமது வழிபாடுகள் அனைத்துமே இயற்கையுடன் ஒத்துப்போகும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மார்கழி, தை மாதங்களில் வீட்டிற்கு அருகிலேயே பூசணிப்பூ, செம்பருத்தி உள்ளிட்ட பூ வகைகள் கிடைக்கும். அவற்றை சாணத்தின் மீது வைத்தால் நீண்ட நேரம் வாடாமல் இருக்கும்.

🔯 சாணத்தின் மீது வைக்கப்படும் பூசணிப்பூ வெளியேற்றும் வாசனை பனிக்காற்றில் கலந்து சிறந்த கிருமி நாசினியாகத் திகழும் என்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

🔯 எனவே, இரவில் கோலமிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாலையில் ஓசோன் வாயுக்கள் அதிகம் வெளியேறும். அந்த நேரத்தில் கோலமிடுவதால், சுவாசப் பிரச்சனைகள் தீரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

அஷ்டமி, நவமி என்றால் என்ன தெரியுமா ? அறிந்து கொள்ளுங்கள் !!



ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும்.
சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்?
நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.
துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?
சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண்டது.
பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

சஷ்டி என்றால் ஆறாம் நாள்.
சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?
அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.
தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.
ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.
திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.
சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது.

*தத்துவம்:* *#பெண்கள் #வாயை #மூடிக்கொண்டு #இருந்தாலே #பாதி #செலவு #குறைந்துவிடும்...!*

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான்.

மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.
மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள்.
'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார்.
'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள்.
ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்.
எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி.

மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தாள்.
அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன்.
அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான்.
இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.
அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான்.
மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.
'பேராசைக்காரன்...! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம்.
அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி!
அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால்கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது' என்றான்.
இதனால் இன்னும் மனம் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.
இப்பொழுது மகாராணி தனது வாயை மூடிக் கொண்டாள்.

😂😂😂😂😂😂😂😂

எல்ல நோய்களுக்கும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து!



மருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து.

வெந்தயம். – 250 gm
ஓமம் – 100 gm
கருஞ்சீரகம் – 50 gm
மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது,இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது,இருதயம் சீராக இயங்குகிறது,சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.

உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது,எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது,கண் பார்வை தெளிவடைகிறது,

நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது,மலச்சிக்கல் நீங்குகிறது,நினைவாற்றல் மேம்படுகிறது,

கேட்கும் திறன் அதிகரிக்கிறது,பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது,ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.,இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்.

Sunday, December 29, 2019

சிவனின் ஐந்து முக தத்துவத்தில் தத்புருஷம்



சுவாதிஷ்டானம் சக்கரம்

சிவனின் ஐந்து முக தத்துவத்தில்
தத்புருஷம்

பஞ்சபூதத்தில்-நிலம்

கிரக தத்துவத்தில்-சூரியன்+செவ்வாய்

ராசியில்-ரிசபம் +கன்னி

திதியில்
பிரதமை-சஷ்டி-ஏகாதசி

கிழமை-ஞாயிறு +செவ்வாய்க்கிழமை

பஞ்சபட்சியில்-வல்லூறு

திசையில்-கிழக்கு

நிறம்-பொண் நிறம்

உடற்கூறு தத்துவத்தில்
மர்ம உறுப்பு (இனப்பெருக்க உறுப்பு)

கடவுள்-பிரம்மா(வளர்பிறை)
,, -சரஸ்வதி (தேய்பிறை)

இனம்-வளர்பிறை-ஆண்
தேய்பிறை-பெண்

மந்திரம்- நமசிவாய

சூட்சுமம்-நமக்கு கடை
பிரபஞ்சத்திற்கு-தலை

கோசம்-நங்

பீஜம்-அங்

விந்து -அங்

நாதம்-நங்

உச்சாடனம்-ஓம் ஸ்ரீம் கிரீம் அங் நங் ஸ்ரீங்

தொடரும்

சரணாகதி_எப்படி_செய்ய_வேண்டும்?



மகாபாரத யுத்தம் உறுதியான நிலையில் கிருஷ்ணரிடம்இந்த உதவி வேண்டும் என்று துரியோதனன் பகவான் கிருஷ்ணரின் வீட்டிற்கு சென்றார் அந்த நேரத்தில் பகவான் உறங்கிக் கொண்டிருப்பது போல் செய்து கொண்டிருந்தார்

அவருடைய கால் அருகில் ஒரு ஆசனமும் அவருடைய தலை அருகில் ஒரு ஆசனமும் இருந்து
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கால் அருகில் அமர விரும்பவில்லை எனவே அவருடைய தலை அருகில் போய் அமர்ந்து கொண்டான்

அடுத்தது அர்ஜுனன் வந்தான் அவன் பகவான் திருவடியின் பக்கத்திலேயே உட்கார்ந்து விட்டான் பகவான் கண்விழித்தவுடன் அர்ஜுனனை முதலில் பார்த்தார் எதற்காக வந்தாய் என்ன வேண்டும் என்று கேட்டார்

துரியோதனன் சொன்னான் நான் தான் முதலில் வந்தேன் பகவான் கூறினார் நான் முதலில் பார்த்தது அர்ஜுனனை தான்

யார் பகவானின் திருவடியில் அமர்கிறார்கள் அவர்களைத்தான் பகவான் காப்பார்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைவிட உயர்ந்தவனாக கருதுபவர்கள் அவருக்கும் அவருடைய பக்தர்களுக்கு தொந்தரவு செய்பவர்களை அவர் கண்டுகொண்டதே இல்லை

அடுத்தது பகவான் கூறினார் இரண்டு பாகங்களாக பிரிக்கப்படுகின்றது

ஒன்று என்னுடைய 7 அக்ஷௌரணி படைகள் மற்றொன்று நான் மட்டும் எந்த ஆயுதமும் ஏந்தாமல் ஒருபுறம் இருப்பேன் இதில் எது வேண்டும் என்று கேட்டார்

அர்ஜுனன் பகவானை தேர்ந்தெடுத்தான் பகவான் இருக்கும் இடத்தில் அசாதாரணமான வலிமை நியாயம் செல்வம் மற்றும் அனைத்துவிதமான வீரர்களும் இருக்கும் என்பது பகவத் கீதையில் உறுதி செய்யப்பட்டுள்ளது

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சரணடைந்தவரை எந்த நிலையிலும் தவிக்க விட்டதே இல்லை

அவர்களுக்கு எல்லாவிதமான நலன்களை வழங்கினார் எனவே தான் பகவான் பக்தர்கள் பகவானை மட்டுமே சரணடைகிறான்

சரணடைதல் என்பது பகவான் கிருஷ்ணரிடம் எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி அவர் மட்டுமே தன்னைக் காப்பார் என்பது போல் இருப்பதாகும்

ஒரு பச்சைக்குழந்தை தன் தாயைத் தவிர வேறு ஒன்றும் அறியாதது போல

முழுமுதற் கடவுள் பகவான்
கிருஷ்ணரிடம் சரணடையும் முறை ஹரி–பக்தி–விலாசத்தில் (11.676) விவரிக்கப்பட்டுள்ளது:
சரணடைதலில் 6 லக்ஷணங்கள்

ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப:
ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம்
ரக்ஷிஷ்யதீதி விஷ் வாஸோ
கோ ப்த்ருத்வே வரணம் ததா:
ஆத்ம–நிக்ஷேப-கார்பண்யே
ஷட்-விதா ஷரணாகதி.

1.ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப: -- கிருஷ்ண பக்திக்கு சாதகமானதை மட்டும் ஏற்க வேண்டும்

2.
ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம்--கிருஷ்ண பக்திக்கு பாதகமானதை விட்டுவிட வேண்டும்

3.ரக்ஷிஷ்யதீதி விஷ் வாஸோ --பகவான் கிருஷ்ணர் மட்டுமே தன்னைப் பாதுகாப்பார் என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும்.

4.கோப்த்ருத்வே வரணம் ததா: -- பகவான் ஸ்ரீகிருஷ்ணரை மட்டுமே தன்னுடைய பாதுகாவலனாக நினைக்க வேண்டும்

5.ஆத்ம–நிக்ஷேப- பகவான்ஸ்ரீகிருஷ்ணரிடம் தன்னையே முழுமையாக ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்
ஆத்மாவை உடலில் தக்க வைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. கிருஷ்ணர் அதனைப் பார்த்துக் கொள்வார்.

6.கார்பண்யே --தன்னை எப்போதும் ஆதரவற்றவனாகவும் தனது வாழ்வின் முன்னேற்றதிற்கான ஒரே ஆதரவு கிருஷ்ணரே என்றும் அவன் நினைக்க வேண்டும்.

ஷட்-விதா ஷரணாகதி.-- இந்த 6 தான் சரணாகதியின் லக்ஷணம்

சரணாகதி என்றால்,பகவான் ஸ்ரீகிருஷ்ணருடைய பக்தித் தொண்டிற்கு இறுதியில் தன்னை வழிநடத்தக்கூடிய மதக் கொள்கைகளை ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். சமூகத்தில் தன்னுடைய நிலைக்கு ஏற்ற குறிப்பிட்ட கடமையை ஒருவன் நிறைவேற்றலாம், இருப்பினும், அவன் தனது கடமையைச் செய்து கிருஷ்ண உணர்வின் நிலைக்கு வரமாட்டான் என்றால், அவனது செயல்கள் அனைத்தும் வீணாகிவிடுகின்றன.
கிருஷ்ண உணர்வின் பக்குவநிலைக்கு ஒருவனைக் கொண்டுச் செல்லாத எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்.

எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லா கஷ்டங்களிலிருந்தும் கிருஷ்ணர் தன்னைப் பாதுகாப்பார் என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும்.

ஆத்மாவை உடலில் தக்க வைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. கிருஷ்ணர் அதனைப் பார்த்துக் கொள்வார்.

தன்னை எப்போதும் ஆதரவற்றவனாகவும் தனது வாழ்வின் முன்னேற்றதிற்கான ஒரே ஆதரவு கிருஷ்ணரே என்றும் அவன் நினைக்க வேண்டும்.

பூரண கிருஷ்ண உணர்வுடன் பகவானின் பக்தித் தொண்டில் ஒருவன் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட உடனேயே, அவன் ஜட இயற்கையின் எல்லா களங்கங்களிலிருந்தும் விடுபடுகின்றான். ஞானத்தை விருத்தி செய்தல், யோக முறையின் படி தியானம் செய்தல் போன்ற பற்பல தூய்மைப்படுத்தும் வழிகளும் தர்மங்களும் இருக்கின்றன என்றாலும், கிருஷ்ணரிடம் சரணடைபவன் பல்வேறு முறைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. கிருஷ்ணரிடம் எளிமையாக சரணடைதல்,v அவனை தேவையற்ற கால விரயத்திலிருந்து காக்கும். இதன் மூலம், அவன் உடனடியாக எல்லா முன்னேற்றத்தையும் அடைந்து, எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடலாம்.

நள்ளிரவில்_கோயில்_நடைதிறப்பது_நியாயமா?



இரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிற்காக கோவில் கதவுகள் திறக்கப்படுகின்றன. இந்த நள்ளிரவு நாடகம் நியாயமா?

இதற்கு சமய ஆகமங்கள் சம்மதிக்கின்றனவா? ஆகம விதிகளைத் தளர்த்தும் அளவிற்கு இந்த நிகழ்வில் ஏதாவது சிறப்பு இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கு விடைகாண, நம் ஆலய வழிபாட்டு முறையை விவரிக்கும் ஆகமங்கள், பூஜை நேரத்தை எப்படி நிர்ணயம் செய்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

கோயில்களில் தினம் தோறும் செய்யப்படும் பூஜைகள் நித்தியக் கிரியை என்றும், விசேஷமாக நடத்தப்படும் பூஜைகள் நைமித்திக பூஜைகள் என்று ஆகமங்கள் குறிக்கின்றன. இதில் நித்திய பூஜைகள் எந்தக்காலத்தில் நடத்தப்படவேண்டும் என்று ஆகமங்கள் தெளிவாக விளக்கியுள்ளன.

உஷத்காலம் : சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் தொடங்கி, சூரிய உதயம் வரை உள்ள காலம். சூரிய உதயம் 6 மணி என்றால் அதிகாலை 4.30 முதல் 6 மணிவரை உஷத்காலம் (ஒரு நாழிகை 24 நிமிடங்கள்)

கால சந்தி : சூரியோதையம் முதல் 10 நாழிகை வரை கால சந்தி. சூரிய உதயம் வரை உள்ள காலம். சூரிய உதயம் 6 மணி என்றால் காலை 6 முதல் 10 மணிவரை கால சந்தி.

உச்சிகால : சூரியன் உச்சத்தில், அதாவது தலைக்கு நேர்மேலே இருக்கும் காலம் பொதுவாக மதியம் 11.30 முதல் 12.30 வரை உள்ள காலம் உச்சி காலம். இந்தப் பூஜைக்குப் பின் கோயில் நடை அடைக்கப்பட வேண்டும்.

சாயரக்‌ஷை : சூரிய அஸ்தமனத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் தொடங்கி, சூரிய அஸ்தமனம் வரை உள்ள காலம். சூரிய அஸ்தமனம் 6 மணி என்றால் மாலை 4.30 முதல் 6 மணிவரை சாயரக்க்ஷை.

இரண்டாம் காலம் : சூரிய அஸ்தமனம் முதல் மூன்றே முக்கால் நாழிகை வரை உள்ள காலம். சூரிய அஸ்தமனம் 6 மணி என்றால் மாலை 6 முதல் 7.30 மணிவரை சாயரக்க்ஷை.

அர்த்த யாமம் : கோயில் நடை அடைப்பதற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் தொடங்கி கோயில் நடை அடைப்பதுடன் முடிவடையும். இந்தக் காலம் இரவு 7.30 முதல் 9 வரை.

இந்தக் காலங்கள் காமிக ஆகமம் மற்றும் பல ஆகமங்களில் குறிக்கப்பட்டுள்ளன. ஆகம விதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கோயில்களில், இந்த விதிகளின்படியே பூஜைகள் நடத்தப்படவேண்டும்.

கால நேரம் தவிர, இறைவனுக்குப் படைக்க வேண்டிய நைவேத்யம், அர்ச்சிக்க வேண்டிய மலர்கள், அபிஷேகிக்க வேண்டிய திரவியங்கள் என்று அனைத்துமே ஆகமங்கள் தெளிவாக விளக்கியுள்ளன.

சித்திரை முதல் பங்குனி வரை இறைவனுக்கு பயன்படுத்த வேண்டிய மலர்களை புட்பவிதி என்ற நூலில் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப் பிரகாசர் குறிப்பிட்டுள்ளார். இவரது சீடர் குரு ஞான சம்பந்தரே தருமபுர ஆதீனத்தை ஸ்தாபித்தார்.

காலையில் 4.30 க்குத்தான் கோயில் நடை திறக்கப்பட வேண்டும், இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட வேண்டும் என்பது ஆகம விதி.

இந்த விதியை மீறி தமிழ்ப்புத்தாண்டான சித்திரை ஒன்றை வரவேற்கக்கூட கோயில் நடையை நாம் உஷத்காலத்திற்கு முன் திறப்பதில்லையே!

இந்த விதியை மீறி, கிறிஸ்தவப் புத்தாண்டிற்கு இரவு 12 மணிக்கு கோயில் நடை திறப்பது நியாயமா?

அர்த்த யாம பூஜை முடிந்தபின், இறைவனை சிவிகையில் சுமந்து, கோயிலை வலம் வந்து பள்ளியறையில் அம்மையின் அருகில் கொண்டு அமர்த்தியவுடன், அம்மன் சன்னிதியைத் திரையிட வேண்டும். திரையிட்டபின் பள்ளியறை பூஜை, பால், பால் பாயாசம், வடை நைவேத்தியத்துடன் செய்யப்பட்டு, தாம்பூலம் சமர்ப்பிக்கப்படும். அது சமயம் தோத்திரப் பாடல்கள் பாடி, வாத்தியம் இசைக்கப்படும். அதன் பின் பள்ளியறைக்கதவுகளை சிவாச்சாரியார் மூடி அந்தச் சாவியை பைரவர் சன்னிதியில் கொண்டு சமர்பிப்பார். பின்னர் கோயிலை மூடி சாவியை வாயில் காப்பாளரிடம் கொடுப்பார்.

இது போலவே கோயில் நடையைத் திறக்கும் விதியும் ஆகமங்களில் திட்டவட்டமாகக் குறிக்கப்பட்டுள்ளது. சிவாச்சாரியார் காலையில் எழுந்து நீராடிவிட்டு, தனது அனுஷ்டானங்களை முடித்துவிட்டு ஆலயம் செல்ல வேண்டும். துவாரபாலர் மற்றும் நந்தி தேவரைப் பிரார்த்தனை செய்து அனுமதி பெற வேண்டும். அதன் பின் சகளீகரணம் செய்து, சாமான்யார்க்யம் கூட்டி அந்த நீரைத் தன் மீதும் பூஜா பொருட்கள் மீதும் தெளித்து சுத்தி செய்த பின்னரே சிவாச்சாரியார் பூஜை செய்யும் தகுதியைப் பெருகிறார்.

தகுதிபெற்ற சிவாச்சாரியார் காப்பாளரிடம் சாவியை வாங்கி கோயிலைத் திறந்து, பைரவர் சன்னிதிக்குச் சென்று, பொரி நைவேத்யம் செய்து பள்ளியறைச் சாவியை முத்திரையால் எடுக்கவேண்டும். அதன்பின் எல்லா சன்னிதிகளையும் திறக்கவேண்டும். திறந்தபின் பள்ளியறைக்குச் சென்று வாத்திய கோஷங்கள் முழங்க திருப்பள்ளி எழுச்சி பாடவேண்டும்.

அச்சமயத்தில் சிவாச்சாரியார் துவார பூஜை செய்து காலகாலனின் அனுமதியைப் பெறவேண்டும். திறவுகோல் நுழையும் துவாரத்தை பிந்துவாக நினைத்து அர்ச்சனை செய்து திறவுகோலை நாத வடிவமாக நினைத்து சிவ சக்தி மந்திரம் சொல்லிக்கொண்டு பள்ளியறைக் கதவைத் திறக்க வேண்டும்.

திறந்தபின் புனிதமான தீர்த்தத்தை தெளித்து நிர்மால்யம் களைய வேண்டும். அதன் பின் பாவனையால் இறைவனை ஸ்நானம் செய்வித்து அது தொடர்பான சடங்குகளைச் செய்து, இறைவனை வெளியே எடுத்துவர அனுமதி கோரி நிற்கவேண்டும். பின்னர் இறைவனை சிவிகையில் ஏற்றி கோயிலை வலம் வந்து மூலவர் அருகில் வைத்து, பூவை எடுத்து மூலவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் உஷத்கால பூஜை செய்யவேண்டும்.

காலையில் கோயிலைத் திறக்கும் கால நிர்ணயத்தைவிட, அதைத் திறக்கும் விதியும், நடை அடைக்கும் விதியும் பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைந்துள்ளன. இவைகள் அனைத்தையும் மீறுகிறது நள்ளிரவில் நடை திறக்கும் ஆங்கில மோகம்.

ஆகம விதிகளை, ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களில் மீறுவது மகா பாபமாகும். இந்தப் பாவத்திற்கான அபராதங்கள் மிகக்கடுமையானது மட்டுமல்ல அது நாட்டிற்கும், மக்களுக்கும் கேடு விளைவிக்கும் என்பதையும் ஆகமங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.

நம்மைப் பொருத்தவரை வேத, ஆகம விதிகளே இறுதியானது.

ஆகமங்கள் மட்டுமின்றி, மருத்துவவ ரீதியாகவும் இந்த நள்ளிரவு நடை திறப்பு உகந்தது அன்று.

சீன மருத்துவ முறையில், நம் உடலின் உறுப்புகள் அதிக ஆற்றலுடன் இயங்கும் நேரம், குறைந்த ஆற்றலுடன் இயங்கும் நேரம் என்று உறுப்புக்களின் இயக்கம் பற்றியும் அதை வைத்து மருத்துவம் செய்யும் முறையும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சீன உடல் உறுப்பு கடிகாரம் (Chinese organ body clock) ஒரு நாளை 12 ஆகப் பிரித்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு உடல் உறுப்பு ஆதிக்கம் செலுத்தும் என்றும், அந்த உறுப்பையும், ஆதிக்கம் செலுத்தும் நேரத்தையும் குறிப்பிட்டுள்ளது.

அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை நுரையீரல் ஆற்றல் மிகுந்து இயங்கும் நேரம். இந்த நேரத்தில் நுரையீரலிலிருக்கும் நச்சுத்தன்மையான கழிவுகள் தளரும். இந்நேரத்தில் பிராண சக்தியை உடலுக்குள் சேகரித்தால், உடலுக்கு நன்மை பயக்கும். எனவே மூச்சுப் பயிற்சிக்கு இது உகந்த நேரமாகும். காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடலின் நேரம். உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற, குடலை இயக்கச் சரியான நேரம் இது. இந்த நேரத்தில் குளித்தல், தண்ணீர் குடித்தல் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

இந்த முதல் நான்கு மணி நேரத்தில் தான் ஆலயம் திறக்கப்பட்டு, தியானம், மூச்சுப்பயிற்சி, சந்தியாவந்தனம் போன்ற கர்மாக்களும் செய்யப்படுகின்றன. இரவு 9 முதல் 11 மணி வரை நாளமில்லா சுரப்பிகளின் (endocrine/ triple warmer) செயல்பாடு ஓங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்கினால், உடல் ஆற்றலைச் சேமிக்க உதவிகரமாக அமையும்.

இதன் பின் வரும் 2 மணி நேரங்கள் அதாவது இரவு 11 முதல் 1 மணி வரை பித்தப்பையின் நேரம் அதன்பின் வரும் 2 மணி நேரம் அதாவது இரவு 1 முதல் 3 வரை உள்ள நேரம் கல்லீரலின் ஆதிக்கம் மிகுந்த நேரம். இவ்வேளைகளில் தூங்காமல் இருந்தால் பித்தப்பை இயக்கக் குறைபாடு மற்றும் இரத்த சுத்திகரிப்பில் பாதிப்பு ஏற்படும். இதனால் மறு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியாது.

இந்த இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலான நேரம், பள்ளி அறை பூஜையுடன் நாள் முடிவுக்கு வந்தபின், உறக்கத்தை இன்றியமையாததாகக் காட்டுகிறது.

நம் ஆகமங்களில் சொல்லப்பட்ட விதிகளைக் கடைபிடித்தால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம் என்பதை வழிமொழிகிறது சீன மருத்துவம். இதில் ஆச்சரியமொன்றுமில்லை, இந்தச் சீன மருத்துவத்தை வளர்த்த சித்தர் போகர்தானே பழனி மலையில் முருகனை ஸ்தாபித்தார்.

விஞ்ஞானமும், மெஞ்ஞானமும் உஷத்காலத்தில் ( அதிகாலை 4.30-6.00) தான் கோயில் நடை திறக்க வேண்டும், அர்த்தஜாமத்தில் (இரவு 9 மணி) கோவில் நடை அடைக்கப்பட வேண்டும். அர்த்த ஜாமத்திற்கும், உஷத்காலத்திற்குமிடையே எந்தச் செயல்பாடும் கூடாது என்று அறுதியிட்டுக் கூறியபின் நள்ளிரவில் கோயிலைத் திறந்து வழிபாடு நடத்துவதும், பூஜைகள் செய்வதும் நியாயமா?

சூரியனின் இயக்கத்தையும், சந்திரன் மற்றும் கோள்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் பூர்வமாகக் காலத்தை கணிக்கும் நாம், எந்த அறிவியல் அடிப்படையுமின்றி, மதத்தின் அடிப்படையில் மட்டுமே அனுசரிக்கப்படும் புத்தாண்டிற்காக ஒரு புகழோங்கிய பாரம்பரியத்தை பலி கொடுப்பது நம் பண்பாட்டையும், மேன்மையையும் அழிப்பதற்கு ஒப்பாகாதா?

சித்தர்களின் குரல்

அனுமனும் சனியும்



உக்கிரமாக நடந்த போரில், இந்திரஜித் தொடுத்த சக்தி அஸ்திரத்தால் இலக்குவன் மயக்கமுற்று வீழ்ந்தான். அவன் உயிர் பிழைக்க சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வர அனுமன் இமயமலை நோக்கிப் புறப்பட்டான்.

அனுமனைத் தடுக்கும் நோக்கில் ராவணன், காலநேமி என்ற அரக்கனை அனுப்பினான். ஆனால், அவனை வதம் செய்தான் அனுமன். எனவே, ராவணன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சனியை அழைத்து, உன் பார்வை பட்டாலே அனுமன் போகும் காரியம் தடைபடும்" என்று சொல்ல, சனி தயங்கினான்.

கோபமடைந்த ராவணன், துணியால் மூடியிருந்த சனியின் வலது கண்ணைத் திறந்தான். சனியின் முதல் பார்வை ராவணன் மீது விழுந்தது. அதுவே அவனது அழிவுக்கான தொடக்கத்தைச் சொன்னது.
வேறு வழியின்றி சனி புறப்பட்டான்.

சஞ்சீவி மூலிகையைக் கண்டுபிடிக்கத் தாமதமாகும் என்றபடியால் அனுமன் அந்த மலையையே தூக்கிக்கொண்டு இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். இடையில் சனி வருவது அனுமனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் பார்வை தன் மீது படுவதற்கு முன்பாகவே, அவனை ஒரே அடியில் கீழே சாய்த்து அவன் முகம் தன்னைப் பார்க்காத வகையில் இடது காலால் அவன் தலையை நிலத்தோடு அழுத்திவிட்டான். வலது காலால் சனியின் கால் பகுதியை அழுத்தினான். அனுமனின் பிடியில் சிக்கிய சனி, என்னை விட்டு விடுங்கள். உங்கள் கட்டளைப்படி செய்கிறேன்" என்று அலறினான்.

இனி, எக்காலத்திலும் ராம நாமத்தை சொல்லுபவர்கள் மீது உன் பாதகப் பார்வை படவே கூடாது" என்று அனுமன் கூற, சனியும் ஒப்புக் கொண்டான்.

அதன் பின்னர் சஞ்சீவி மூலிகையால் இலக்குவன் மயக்கம் தெளிவுற்றதும் போரில், இராவணன் வீழ்ந்ததும் தெரிந்த புராண வரலாறு.

இராவணன், சனியைத் தாக்கிய இடம் பாலாற்றங்கரையில் உள்ள ஆம்பூர் நகரத்தை ஒட்டி இருக்கும் மலைப்பகுதியான ஆனைமடுவில் என்பது அந்தப் பகுதியில் நிலவி வரும் செவிவழிச் செய்தி. கி.பி. 1486ம் ஆண்டு கிருஷ்ண தேவராயரின் தளபதியான உத்தர ரங்கனாதன், ஆற்காடு நவாபுடன் போரிட்டான். ஆம்பூருக்கு அருகிலிருக்கும் உம்மராபாத் என்ற இடத்தில் போர் நடந்தது. போரில் நவாப் தோற்றான். அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆம்பூரில் ஆஞ்சநேயருக்கு ஒரு கோயிலைக் கட்டினான் உத்தர ரங்கனாதன் என்பது வரலாறு.

இன்று ஆம்பூர் நகரின் நெருக்கடியான பகுதியில் இருக்கிறது அந்தக் கோயில். அவருக்கு, ‘வீர ஆஞ்சநேயர்’ என்றும், ‘பெரிய ஆஞ்சநேயர்’ என்றும் திருநாமம். பதினொரு அடி உயரத்தில் சனியை தனது கால்களில் போட்டு அடக்கி வைத்திருக்கும் தோற்றத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.

பாரம்பரிய ஆகம அமைப்புகள் இல்லாத சற்று வித்தியாசமான கோயில். உள்ளே நுழைந்ததும் பன்னிரண்டு அடி உயர தீபத் தூண் ஒன்று இருக்கிறது. பக்தர்கள் காரிய சித்திக்காக வேண்டிக் கொண்டு அதில் விளக்கேற்றுகிறார்கள்.
விளக்குத் தூண் தாண்டி கோயிலின் உள்ளே நுழைந்தால் ஆஞ்சநேயரை நேர்க்கோணத்தில் தரிசிக்க முடியாது. அக்கோணத்தில் மூலஸ்தானத்தில் ஆஞ்சநேயர் சுதைச் சிற்பமாகத்தான் இருக்கிறார். சனியை காலால் அழுத்திக்கொண்டிருக்கும் வீர ஆஞ்சநேயர், சுதை ஆஞ்சநேயருக்கு வலது பக்கத்தில் ஒதுங்கியே நிற்கிறார். மூலஸ்தானத்துக்கு அருகில் வந்தால்தான் வீர ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைக்கும்.

சுதை ஆஞ்சநேயர் இருந்த இடத்தில் முன்பு பாம்பு புற்று இருந்ததாகவும், ஒருமுறை பாலாற்று வெள்ளத்தில் அது கரைந்து போனதாகவும் சொல்கிறார்கள். பின்னர் காஞ்சி மகாபெரியவர் வழி காட்டுதலில் சுதை ஆஞ்சநேயர் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டார். கி.பி. 1400களில் கோயில் கட்டப்பட்டதாக வரலாறு சொன்னாலும் கி.பி. 242லேயே ஆஞ்சநேயர் சுயம்புவாக அங்கு தோன்றிவிட்டார் என்று கல்வெட்டு இருக்கிறது.

சனி பகவானை தனது கட்டுப்பாட்டுக்குள் ஆஞ்சநேயர் கொண்டு வந்த ஸ்தலமாக இருப்பதால், சனி கிரக தோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க சிறந்த பரிகார தலமாக இது விளங்குகிறது. ஹனுமன் ஜயந்தி, ஸ்ரீராமநவமி ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.

மாட்டுப் பொங்கல் நாளன்று இஸ்லாமிய மக்கள் சிலரும் கோயிலுக்கு வெளியே வழிபாடு செய்கிறார்களாம்.

கோலக்காய், வடை, வெற்றிலை மாலை ஆஞ்சநேயருக்குப் பிடித்தது என்பதால், தினசரி இவற்றில் ஏதாவது ஒன்றோடு காட்சியளிக்கிறார் ஆஞ்சநேயர். தமிழக இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் பகலில் அன்னதானம் நடக்கிறது. இஸ்லாமிய ஏழை பெண்களும் அங்கு சாப்பிட்டு மனநிறைவடைகிறார்கள்.

ஜெய் வீர ஆஞ்சநேயா!

Saturday, December 28, 2019

கிரகங்கள் வக்கிரம் அடைவதை பற்றி யாரும் அச்சம்கொள்ள தேவையில்லை. பல ஜோதிடர்களிடமிருந்து பல்வேறுபட்ட கருத்துக்கள் தனது அனுபவங்களாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக பல ஜோதிடர்களும் தங்களுக்கு அனுபவங்களுக்கேற்பவே ஒருவருக்கொருவர் முரண்பட்ட தங்களது கருத்துக்களையே இதுவரை கூறியுள்ளனர்.

இவ்வாறுதான் தற்போது நானும் கூறியுள்ளேன். இங்கே ஒரு வித்தியாசமாக மூலநூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களோடு எனது நிலையான அனுபவத்தையும் கூறியுள்ளேன்.

இதுதொடர்பாக உங்களது அனுபவத்தையும் கருத்தையும் தாராளமாக பதிலிடலாம்.

பல கிரகங்கள் வக்கிரம் பெற்றவர்களே பிரதமர்களாகவும், முதல்வராகவும், அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்துள்ளார்கள்.
வேண்டுமென்றால் VVIP களின் ஜாதகங்களை தேடி ஆராய்ந்து பாருங்கள். புதன் வக்கிரம் பெற்றவர் புகழ்பெற்ற ஜோதிடராகவும்,கவிஞராகவும், விஞ்ஞானியாகவும், சாப்ட்வேர் துறை வல்லுனராகவும் இருப்பதை காண்கிறோம்.

சுக்கிரன் வக்கிரம் பெற்றவர் கலைத்துறையில் உச்சநிலையில் இருப்பதை பார்க்கிறோம்.

உலகிற்கு விம்சோத்திரி தசாமுறையை கொடுத்த பராசர முனிவரும் வக்கிர கிரகங்கள் காலம் தாழ்த்தி பலன்தரும் என்றுதான் கூறியுள்ளார். வக்கிர கிரகங்கள் எதிர்பலனை செய்யும். அதாவது வலு குறைந்த கிரகங்கள் அதிகமாக வலுவடையும். அதாவது உச்சத்தை தவிர மற்ற கிரகங்கள் வலு குறைந்த கிரகங்களே. இவை வலுவடையும். உச்ச கிரகங்களுக்கு வக்கிரமடைந்தால் நீச பலமடையும். இது சனி செவ்வாய்க்கு சில நேரம் நல்லதுக்கூட.( உச்சநிலையில்) அது சில இடங்களில் மட்டுமே பலன்தரும்.

மகாகவி காளிதாசர் வக்கிரம் ஆன கிரகங்கள் உச்சத்திற்கு சமமான பலம் தரும் என்கிறார். ( நீசக்கிரகம் உட்பட)
இதற்கு விதிவிலக்கையும் அவரே கூறியுள்ளார்.
அந்த ஒரே ஒரு விதிவிலக்கு உச்ச கிரகம் வக்கிரம் பெற்றால் நீசபலனை தருமென்று தெளிவாகத்தானே கூறியுள்ளார்.

சாராவளியில் மன்னர் கல்யாணவர்மரும் ,பலதீபிகை ஆசிரியர் மந்தரேஸ்வர முனிவரும் வக்கிர கிரகங்கள் அதிகமாக பலமடைவதாகத்தான் கூறியுள்ளனர்.
அதனால் கவலை வேண்டாம்.

தீமை செய்யும் பாவக்கிரகங்கள் மட்டும் வக்கிரம் ஆகக்கூடாது. ஏனென்றால் வக்கிர கிரகங்கள் அதிக பலம் பெற்று தீயபலனை அதிகமாக தருவார்கள். ஆட்சி,நட்பு போன்ற நிலையில் உள்ள பாவக்கிரகங்கள் வக்கிரம் ஆனால் அதிக பலம் பெற்று தனது தீயக்காரகத்தை அதிகரித்து தரும்.

பல தோசங்கள் நீங்கி யோகங்கள் பெறக்கூட வக்கிரம் காரணமாக இருக்கும்.( முடக்கு,திதிசூன்யம் போன்ற சில்லரை தடைகள்)

வக்கிரமான கிரகம் காலம் தாழ்த்தி அதிக பலன்களையே தரும்.( அது நல்ல பலனா தீயபலனா என்பதைதான் ஜோதிடர்கள் ஆதிபத்திய காரகத்துவத்தை பொருத்து கண்டுபிடிக்க வேண்டும்.

ஏன் கிரகங்கள் வக்கிரம் ஆனால் அதிபலம் பெறுகின்றன?

உச்சக்கிரகத்தை தவிர மற்ற கிரகங்கள் வக்கிரம் ஆவதால் உச்சக்கிரகத்திற்கு சமமான வலிமையை பெறுகின்றன. அதாவது உச்சம் 100 மதிப்பெண்,மூலத்திரிகோணம்,80 மதிப்பெண், ஆட்சி 50 மதிப்பெண்,நட்பு 40 மதிப்பெண் ,பகை 20 மதிப்பெண்கள், நீசம் 0 மதிப்பெண்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது வக்கிரம் ஆன கிரகங்கள் தனது எதிர்நிலையான 100 மதிப்பெண்களை அடையும். அதாவது வலுவற்ற கிரகங்கள் வலுவடையும்.

ஆனால் உச்சம் பெற்ற கிரகங்கள் ஏற்கனவே 100 சதவீதம் வலுவுடன் இருப்பதால் அதன் எதிர்நிலையான பலமற்ற நிலையான நீசத்திற்கு சமமான வலிமையை அடையும்.

இப்போது புரிந்திருக்கும்.

ஏன் காளிதாசர் வக்கிரம் பெற்ற கிரகங்கள் உச்சத்திற்கு சமமான வலிமையை அடையும் என்று கூறியுள்ளார் என்று.

இதைதான் மகரிஷி பராசர முனிவர் வக்கிரம் பெற்ற கிரகம் எதிர்மறையான பலன்களை காலம் தாழ்த்தி செய்யும் என்கிறார்.

ஆட்சி பெற்ற கிரகம் வக்கிரம் ஆனால் என்ன பலன் தருவார். இதுதான் தற்போது பலரும் என்னிடம் கொண்டுள்ள கேள்வி.

அதாவது சுபக்கிரகங்கள் வக்கிரம் பெற்றால் அதிகமான வலிமையை பெற்று தனது காரகத்துவத்தை வலிமையாக தருவார்கள்.

குரு ஆட்சியாகி வக்கிரமானால் உயிர்காரகத்துவமாட புத்திரகாரகத்துவத்தை தாமதப்படுத்துவார். செல்வத்தை தருவார். மார்க்,பாதகாதிபதியாக குரு இருந்து வக்கிரமானால் உயிர்காரகத்துவமான மரணம் தவிர்க்கப்படும்.

சுக்கிரன் வக்கிரமானால் தனது உயிர்காரகத்துவமான மனைவி,கணவனை பாதிப்படைய செய்து வண்டி,வாகனம்,வீடு தரும்.

புதன் வக்கிரமானால் தனது உயிர்காரகத்துவமான மாமன் வகையறாக்களை கெடுத்து மற்ற காரகபலன்களான ஜோதிடம்,விஞ்ஞானம்,கணிதம் போன்றவற்றையும் ஆதிபத்தியத்தையும் வலிமையாக தருவார்.

சனி,செவ்வாய் உச்சமாகாமல் வக்கிரமானால் காரகரீதியில் தீயபலன் தருவார்கள் என வடமூல நூலான சாராவளி தெளிவாகவே கூறிவிட்டது.

சரி.
வக்கிரகிரகங்கள் அதிபலமடைந்து தனது உயிர்காரகத்தை இழக்கின்றன அல்லது பாதிக்கின்றன. ஆனால் பொருள்காரகத்துவத்தையும் ஆதிபத்திய பலனையும் அதிகமாக வழங்குகின்றன என்றுக்கூறி முடிக்கிறேன்.

Friday, December 27, 2019

இந்த பொருளை பர்சில் வைத்தால் உங்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டும்.

இந்த காலத்தில் யாருக்குத்தான் அதிர்ஷ்டம் என்றால் பிடிக்காமல் இருக்கும். எவ்வளவு தான் வியர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருந்தாலும் சிலசமயம் அதிர்ஷ்டத்தின் பக்கம் நம் எண்ணம் திரும்புவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஒவ்வொருவரும் அதிர்ஷ்டத்தை ஏதாவது ஒரு ரூபத்தில் எதிர்பார்த்துக் கொண்டுதான் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். உங்களை நோக்கி அதிர்ஷ்ட மழை பொழிய வேண்டுமா? இந்த பொருளை உங்களது பர்சில் வைத்துக் கொள்ளுங்கள் போதும். உங்களுடைய மணிபர்சில் எந்தெந்த பொருட்களை வைத்தால் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் திரும்பும் என்பதை பார்ப்போம். முதலில் நீங்கள் உபயோகப்படுத்தும் பர்ஸ் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அதில் கருமை நிறம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கருமை நிற பர்ஸ்களை உபயோகிக்க வேண்டாம் அது அதிர்ஷ்டத்தை தராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். - Advertisement - பொதுவாக அதிர்ஷ்ட சின்னமாக கருதப்படும் ஸ்வஸ்திக் அல்லது நட்சத்திரம் இந்த சின்னங்களைக் கொண்ட பொருளை அல்லது படத்தை வைத்துக் கொள்ளலாம். தெய்வ உருவ படங்களில் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கக்கூடிய லட்சுமிதேவி அல்லது குபேரன் படங்களை திறந்தவுடன் தெரியுமாறு வைத்துக் கொள்ளலாம். குபேர எந்திரத்தில் குறிப்பிட்ட எண்கள் இருக்கும் அதனை பரிசில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டத்தை வரவழைக்க முடியும். கிராம்பு, சோம்பு, பட்டை, ஏலம், பச்சை கற்பூரம் இவை ஐந்தும் கலந்த ஒரு சிறிய மூட்டையை பர்சில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டத்தை வரவழைக்க முடியும். இதன் வாசம் லக்ஷ்மி கடாட்சத்தை உண்டு பண்ணும். கோமதி சக்கரம் மற்றும் சோலி இவைகளை பரிசில் வைப்பதன் மூலமும் பணத்தை ஈர்க்க முடியும். சிறிய அளவில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருப்பது நல்லது. உங்களுடைய மணி பர்சை பின் பாக்கெட்டில் வைப்பதை தவிர்த்து பாருங்கள். மேலும் எந்த விதமான சிறிய ஆயுதம் சார்ந்த பொருட்களை வைக்க கூடாது. அரச இலையை பர்சில் வைத்தால் குறிக்கோள் வெற்றியடையும். நினைத்த செயல் வெற்றிகரமாக நிறைவேறும். மயில் இறகு வைத்து கொள்ளலாம் அதன் மூலம் மென்மையான மற்றும் அமைதியான மன நிலையில் இருக்க முடியும். தொலைபேசி எண்களை குறிக்க அல்லது சிறிய காலண்டர் போன்றவற்றை பர்சில் வைத்து கொள்ளும் பழக்கம் இருந்தால் அவை பச்சை நிறத்தில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். பச்சை நிறத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கிறது. ஒவ்வொரு முறை சம்பளம் வாங்கும் போதும் நீங்கள் வைத்திருக்கும் பார்சிலிருந்து முதலில் ஒரு சிறிய தொகையையாவது தானத்திற்கு அல்லது தெய்வத்திற்கு செலவிடுங்கள். இவை தெய்வ கடாட்சத்தை உங்கள் மீது பரப்பி அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் ஒரு எளிய வழியாகும்.

யாவரும் தெரிந்துகொள்ள வேண்டிய "கெர்ப்போட்டம்" பற்றிய அருமையான பதிவு



கருவோட்டம் அல்லது கெர்ப்போட்டம்
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள்
இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்துகொண்டுள்ளனர்

தினசரி காலண்டரில் கெர்போட்ட நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா..?

நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது கெர்போட்டஆரம்பம் என்று இருப்பதை பார்தது இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள்

சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும்போதுலாம் கெர்போட்ட நிவர்த்தி என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள்

இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல

உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை

அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரிய வழி மாதங்கள் பின்பற்றப்படுகிறது

இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்

அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில்

சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது

இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்

இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்

அதாவது,

மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள்

இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள் ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால்

ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும்

இந்த கர்போட்டம் டிசம்பர் 29, 2019 முதல் ஐனவரி 11, 2020 வரை அமைகிறது

ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம்லாம் தெரியாது இல்லையா

எனவே,

மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் கர்போட்டம் என்று நினைவில் வைத்து கொள்வார்கள்

இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள். எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்

மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள்

எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்

இன்றய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது

இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி (ஆற்று / ஏரிப்பாசனம் இல்லாத வானம் பார்த்த பூமியில் விளையும் பயிர்) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்

நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில் கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்

ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று மழைவரும் நாட்களை தெரிந்து கொள்ள வானிலை அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம

புதுமையின் மோகத்தில் எத்தணை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!

Thursday, December 26, 2019

குப்பைமேனி பயன்கள்


சித்த மருத்துவத்தில் பல்லாயிரக்கணக்கான மூலிகைகளை பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை மனிதர்கள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிகளில் வளரும் மூலிகைகளாக உள்ளது. ஆனால் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும், அவர்களுக்கு அருகாமையிலேயே பல அற்புத மருத்துவ குணங்களை கொண்ட மூலிகைகள் இருக்கின்றன. அப்படி ஒரு மூலிகையான குப்பைமேனி செடியை பற்றியும், அதன் பயன்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். குப்பைமேனி பயன்கள் வீக்கம் எதிர்பாராத விதமாக உடலில் நமக்கு எங்காவது அடிபடும் போது அப்பகுதி சிலசமயம் அளவுக்கதிகமாக வீங்கிவிடுகிறது. அப்படியான சமயங்களில் குப்பைமேனி செடிகளின் இலைகளை ஒரு கையளவு பறித்து, நன்றாக அரைத்து வீக்கம் உள்ள பகுதிகளில் பற்று போட்டு வந்தால் வீங்கம் மட்டும் கடுமையான வலி போன்றவை குறையும். - Advertisement - குடற்புழு குடலில் குடற்புழு எனப்படும் தீங்கு ஏற்படுத்தும் உயிரிகள் சில வகை உணவுகள் மூலம் நமது உடலுக்குள் நுழைந்து குடல்களில் தங்கிவிடுகிறது. இந்த குடற்புழு பிரச்சனை பெரியவர்களை விட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. குப்பைமேனி இலைச்சாறு தினமும் இருவேளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குடற்புழு பிரச்சனை நீங்கும். கிருமிநாசினி குப்பைமேனி இலைகள் உடலுக்கு நன்மை பயக்கும் காரத்தன்மை, ரசாயன தன்மை கொண்ட இயற்கை வேதிப்பொருட்கள் நிறைந்ததாகும். குப்பைமேனி இலைகளின் சாற்றை சொறி, சிரங்கு, படை, தோல் அரிப்பு போன்ற தோல் சார்ந்த பாதிப்புகளின் தடவி வந்தால் அதிலிருக்கும் நுண்கிருமிகள் அழிந்து, நல்ல குணம் ஏற்படும். தோலில் தொற்று கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் காக்கும். விஷக்கடி நகரங்களை விட கிராமங்களில் இயற்கை வளம் மாற்று மரம், செடி கொடிகள் அதிகம் இருப்பதால் பாம்புகளும் அங்கு அதிகம் இருக்கிறது. விஷ பாம்புகள் பலவகை இருந்தாலும் “கண்ணாடி விரியன்” பாம்பின் விஷம் மிகவும் சக்திவாய்ந்தது. இப்பாம்பினால் கடிபட்டவர்களுக்கு குப்பைமேனி இலைகளை நன்றாக நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால், விஷம் உடலில் வேகமாக பரவுவதை நிறுத்தும். புண்கள் எப்போதாவது ஏற்படும் சில காயங்கள் சில நாட்களில் புண்களாக மாறிவிடுகிறது. ரசாயனங்கள் நிறைந்த மருந்துகளை இந்த புண்களுக்கு தடவுவதற்கு பதிலாக குப்பைமேனி இலைகளை நன்றாக அரைத்து புண்களின் மீது பற்று போட்டு வந்தால் நீண்ட நாட்களாக ஆறாத புண்களும் விரைவிலேயே ஆறும். தழும்புகள் ஏற்படுவதையும் குறைக்கும். வயிறு இன்றைய காலங்களில் பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் குப்பைமேனி இலைகள் சிலவற்றை பச்சையாகவோ அல்லது அந்த இலைச்சாறு துளிகள் சிறிது அருந்திவந்தாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீரிழிவு நீரிழிவு நோயாளிகள் சில சமயங்களில் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல், தங்களுக்கு விருப்பமான உணவுகளை அதிகம் சாப்பிட்டு விடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடலை பாதிக்கிறது. குப்பைமேனி இலைச்சாறு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். மலேரியா மலேரியா என்பது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு நோயாகும் சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிடின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக்கூடியது மலேரியா நோய். இந்த நோய்க்கான ஆங்கில வழி மருந்தை உட்கொள்ளும் போது குப்பைமேனி இலைகள், சாறு போன்றவற்றை மருந்தாக உட்கொண்டு வந்தால் இந்நோய் கூடிய விரைவில் குணமாகும். நோய் எதிர்ப்பு குப்பைமேனி இலைகள் பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலிலி இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது. முடிநீக்கம் பெண்கள் சிலருக்கு உடலில் ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படும் பிரச்சனைகளால் முகத்தில் தேவையற்ற இடங்களில் முடிகள் உதிக்கின்றன. குப்பைமேனி இலைகளை மஞ்சள் தூள் மற்றும் கோரை கிழங்கு பொடியுடன் சேர்த்து முகத்தில் தடவி,அது காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும். இது போன்று தொடர்ந்து செய்து வர தேவையற்ற முடிகள் முளைப்பதை தடுக்கலாம்.

தக்காளி பழத்தின் அற்புத நன்மைகள்



நம் அன்றாட சமையலில் தக்காளியை ஒரு பொருளாக, உணவின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கிறோம். ஆனால் அந்த தக்காளியில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றது என்பதை சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். சில சமயங்களில் விலை கூடினால் கூட அதை அவசியமாக வாங்கிவந்து சமையலுக்கு சேர்த்துக் கொள்வோம். சமையலுக்கு ருசியை கொடுக்க அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தக்காளி. சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்காகவும் தான். அப்படி என்ன பெரிய முக்கியத்துவம் இந்த தக்காளியில் உண்டு என்பதை பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக காண்போமா. தக்காளியில் அடங்கியுள்ள சத்துக்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். - Advertisement - பளபளப்பான சருமத்திற்கு தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும். உறுதியான எலும்புகள் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்தானது தக்காளி பழத்தில் அதிக அளவில் உள்ளது. இதை தினந்தோறும் நாம் சாப்பிட்டு வருவதன் மூலம் நம் எலும்புகள் உறுதியாக்கப்படுகின்றன. மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை இதன் மூலம் நாம் தவிர்க்கலாம். நீரிழிவு தக்காளியில் உள்ள குரோமியம் அதிகமாக உள்ளதால் இது நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. புற்றுநோய் வராமல் தடுக்க தக்காளிக்கு இயற்கையாகவே புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி உள்ளது. நம் உடம்பில் உள்ள அணுக்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தக்காளியில் அதிக அளவு உள்ளது. இதனால் கர்ப்பப்பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வாய் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். கண் பார்வைக்கு தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது கண் பார்வையை மேம்படுத்துகிறது. மாலைக்கண் வியாதி வராமல் தடுக்கிறது. குணப்படுத்தவே முடியாத கோளாறாக இருக்கும் மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை இந்த தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் தடுக்கலாம். சிறுநீரகக் கற்கள் பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கும் தக்காளியை சிறுநீர் கற்கள், பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் அதன் விதையுடன் சாப்பிடக்கூடாது. விதையை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும். விதை இல்லாமல் சாப்பிடும் தக்காளியின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கலாம் என்று சில ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மென்மையான கூந்தலுக்கு தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது. தக்காளி சாப்பிடுவதால் நம் கூந்தலானது வளர்ச்சியடையாது. ஆனாலும் நமக்கு இருக்கும் கூந்தலானது அழகாக மாறும். கடுமையான வலி சிலருக்கு முதுகு எலும்பும், தோள்பட்டை களிலும் கடுமையான வலி ஏற்படும். இப்படிப்பட்ட வழியினை நீக்க தக்காளி ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பயோஃபிளேவோனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் வலி ஏற்படாமல் தடுக்கின்றது. உடல் எடையை குறைக்க தக்காளியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தானது அதிக அளவில் உள்ளது. இதனால் நம் உடல் எடையை குறைக்க இது உதவியாக உள்ளது. தக்காளி கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள பொருளாகவும் இருக்கிறது. இதனால் எடையை குறைக்க டயட்டில் உள்ளவர்கள் தினந்தோறும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிப்பது மிகவும் சிறந்தது. தக்காளியில் சில அழகு டிப்ஸ் உங்களின் சருமம் மென்மையாக இருக்க வேண்டுமென்றால் தக்காளி விழுதுடன் சிறிதளவு தயிர் சேர்த்து, முகத்தில் தடவி ஃபேஸ் மாஸ்க் போட்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி வந்தால் சருமம் மென்மையாக மாறும். தக்காளி விழுதுடன் சிறிதளவு ரவை சேர்த்து உங்கள் முகத்தை மசாஜ் செய்து வந்தால் உங்கள் முகம் அழகாக ஜொலிக்கும். உங்கள் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறைய தக்காளி பேஸ்ட்டுடன், உருளைக்கிழங்கு சாறு ஒரு ஸ்பூன் சேர்த்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் முகம் பிரகாசமாகும். உங்கள் முகம் சப்பையான தோற்றத்தை விட்டு, பூசினால் போல் தோற்றமுடைய தக்காளியை தோல், விதை நீக்கி விட்டு விழுதாக தயார் செய்து கொள்ளவும். முகத்தில் ஆலிவ் ஆயிலை முதலில் தடவிக்கொள்ள வேண்டும். பின்பு இந்த தக்காளி விழுதை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு கழுவி விடலாம். இப்படி வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Wednesday, December 25, 2019

பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி" என்கிற வாக்கின்படி சிம்மராசிக்கார்கள் திகழ்வார்கள்

" பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி" என்கிற வாக்கின்படி சிம்மராசிக்கார்கள் திகழ்வார்கள் இவர்கள் பார்ப்பதற்கு சதாரணமானவராக தென்பட்டாலும் இவர்கள் ஒரு செயலில் இறங்கிவிட்டால் அதில் வெற்றியை காணாமல் பின்வாங்கமாட்டார்கள் தன்னம்பிக்கையின் உருவமாக விளங்கும் சிம்மராசிக்காரர்கள் வாழ்கையில் தங்களுக்கு எவ்வளவு துக்கமும் துயரங்களும் தோல்விகளும் கண்டாலும் அவ்வளவு எளிதில் துவண்டுபோகமாட்டார்கள் அதேபோல் எப்படி சூரியன் இந்த பிரபஞ்சத்தின் நலனுக்காக தன்னையே எரித்துகொண்டு ஒளியை தருகிறதோ அதேபோல் பிறரை வாழ்வைப்பதற்காக தன்னை தானே வருத்திகொள்பவர்களும் இவர்களே அதேபோல் என்றும் தனிமையை விரும்பும் சிம்மராசிக்காரர்கள் "தனி காட்டு ராஜாவாகவே வளம்வருவார்கள். அதேபோல் நல்ல உடல்வாகு மற்றும் தேஜஸான தோற்றம் கொண்ட சிம்மராசிக்காரர்கள் வீரத்தில் பராக்கிரமசாலியாக திகழ்பவர்கள் இவர்களே அதேபோல் ஆளுமைபண்பு மற்றும் நிர்வாகத்திறனில் சிம்மத்திற்கு இணை சிம்மமே அதேபோல் இவர்களை அவ்வளவு எளிதில் நெருங்கமுடியாதுங்க எதிரிகளின் கண்களுக்கு நெருப்பாய் திகழும் சிம்மராசிக்காரர்கள் அவர்களை அடித்து துவம்சம் செய்வதில் இவர்களுக்கு இணை இவர்களே அதேபோல் ஒரு நாட்டையே வழிநடத்தும் பண்பு இவர்களுக்கு உண்டுங்க " மக்களின் தொண்டே மகேசன் தொண்டு " என்பது பொல் வழிநடத்திச் செல்பவர்களும் இவர்களே அதேபோல் வெளிப்படையாக குணம் மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்களும் இவர்களே...

(தொடரும்)...

உங்கள் கனவில் கண்டதற்க்கு என்ன பலன் என்று அறிந்துகொள்ளுங்கள்.☀



பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. அந்த வகையில் நமது கனவில் வரும் விடயங்களுக்கான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நாம் பிறரை அடிப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை ஏற்படும். மேலும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள், புகழ் பன்மடங்கு பெருகும். தான் அடிபட்டு காயமடைந்திருப்பது போல் கனவு கண்டால், தன அபிவிருத்தி உண்டாகும். எனினும் கத்தி, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நன்மையான பலன் தராது. உங்களுக்கு பழி ஏதேனும் வந்து சேரும்.
பிரதமர், ஜனாதிபதி போன்றோர்களுடன் அறிமுகம் ஆவது போல் கனவு கண்டால், சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தும், மதிப்பும் உண்டாகும். மணமாகாத இளம்பெண்கள் மேற்சொன்ன படி கனவு கண்டால், அவளை மணம் முடிக்க போகும் வருங்கால கணவன்,அப்பெண்ணின் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதி மிக்கவனாக இருப்பான் என கொள்ளலாம். அரச குடும்பத்தாருடன் பழகுவது போன்ற கனவு வந்தால், உங்களின் நண்பர்கள் மூலமாக பண உதவி கிடைக்கும்.
அப்சரஸ் பெண்கள்: அப்ஸ்ரஸ் எனப்படும் தேவலோகப் பெண்களை ஆண்கள் தங்களின் கனவில் கண்டால், எதிர்பாராத நன்மைகள் அவர்களுக்கு உண்டாகும். திருமணமாகாத பெண்களின் கனவில் வந்தால் விரைவில் அப்பெண்களுக்கு திருமணம் நிகழும். திருமணமான பெண்கள் கனவில் வந்தால் மிகுந்த பொருள் வரவு உண்டு.
அழகற்ற பெண்: அழகு இல்லாத பெண் ஒருத்தியை, திருமணமாகாத ஒரு ஆண்மகன் கனவில் காணும் பட்சத்தில், அதற்கு நேர்மாறான பலனாகமிகவும் அழகான பெண் அந்த ஆணுக்கு மனைவியாக அமைவாள்.

அதிசயமானவர்: பார்ப்பதற்கு விந்தையான மனிதன் அல்லது நூதனப் பொருட்கள் உங்கள் கனவில் வந்தால், எதிர்வரும் தீமையைச் சுட்டிக்காட்டும் அறிகுறியாகும். நம்பிக்கை மோசடி – ஏமாற்றம் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகமாகும்.
சண்டை: அடிதடி, தகராறு, சண்டை சச்சரவுகளில் நீங்கள் சிக்கிக் கொண்டு தவிப்பது போல் கனவு வந்தால், உங்கள் வாழ்க்கை அமைதியானதாக உங்களை சுற்றியிருக்கும் எல்லோருடனும் சுமுக உறவு கொண்டதாக அமையும். சண்டையில், பிறர் நம்மை அடிப்பது போன்று கனவு கண்டால் நமக்கு பகைவர்கள் இல்லை என்று எடுத்து கொள்ளலாம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து உங்களுக்கு நண்பர்களாக மாறும் சூழல் உண்டாகும்.
அழுகை: ஒருவர் வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால், அவரது வாழ்க்கையில் பல இடையூறுகள் ஏற்படலாம்.
ஆபத்து: உங்களுக்கு ஏதேனும் ஆபத்து, தொல்லைஏற்படுவதாக கனவு கண்டால், பலன் அதற்கு நேர்மாறாக வாழ்க்கை மகிழ்ச்சியானதாக, நிம்மதியுடையதாக அமையும். மற்றவர்கள் ஆபத்தில் சிக்கியிருப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் தொந்தரவுகள் உண்டாகும்.
அரிசி: ஒருவர் அரிசியைக் கனவில் கண்டாலோ அல்லது சந்தையில் வாங்கி வருவது போன்று கனவு கண்டாலோ அவர் செய்யும் தொழில் அபிவிருத்தி அடைந்து மிகுந்த தனலாபம் ஏற்படும்.
அன்னப் பறவை: கனவில் காணும் விலங்குகளும் பட்சிகளும் விநோதமாக காட்சி தருவது உண்டு. அவ்வகையில், கறுப்பு நிற அன்னப் பறவையைக் காண்பது அவ்வளவு நன்மையானது என கூற முடியாது. விடலை பருவ வயதில் உள்ள ஓர் இளைஞன் கனவில் கறுப்பு நிற அன்னம் தோன்றுமானால், அவன் வாழ்வில் பெரும் ஏமாற்றங்களுக்கு, விரக்திகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும் எனலாம். மேலும் அந்த இளைஞனின் தன்மானத்துக்கு இழுக்கும், அபவாதமும் உண்டாகும்.

திருமணமாகாத இளம் பெண் ஒருத்தியின் கனவில் கறுப்பு அன்னத்தைக் வந்தால், வெகு விரைவில் அப்பெண் ஏதேனும் வருத்தத்துக்கு உரிய செய்தியைக் கேட்க நேரிடலாம். அதே சமயம் வெள்ளைநிற அன்னத்தைக் காண்பவர் வாழ்க்கை மகிழ்ச்சியும், இன்பங்களும் அதிகம் நிறைந்ததாக இருக்கும்.

ஆசிரியர்: உங்களுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்களில் எவரேனும் ஒருவரை கனவில் காணும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் வளங்கள் அனைத்தும் அமோகமாகப் பெருகும். பண வரவும் அதிகரிக்கும்.
இறந்தவர்கள்: நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பெயரும், மிக சிறப்பான புகழும் உண்டாகும் என்பது பொருள்.

ஒருவருக்கு அவர்களின் இறந்து போன தாய்-தந்தையர் கனவில் தோன்றுவார்களேயானால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்திருக்கிறார்கள் என்று பொருள். இது பலரின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவ உண்மையாகும்.

தான் இறந்துவிட்டதுபோல் ஒருவருக்குக் கனவு வருமானால், அது நன்மைகளையே குறிப்பிடும் என எடுத்து கொள்ளலாம். சுக வாழ்க்கை உண்டாகும். உங்களின் உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு வந்தால், அவருடைய துன்பங்கள் வெகு விரைவில் நீங்கும் என்பதைக் குறிக்கிறது.

உங்கள் நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு வந்தால், வெகு விரைவில் ஏதேனும் நற்செய்தி ஒன்று வரும் என்பது பொருள்.

ஒரு நபரின் குழந்தைகள் இறப்பதுபோல் கனவு வந்தால், அவருக்கு வரவிருக்கின்ற பேராபத்து ஒன்றைக் குறிப்பிடும். தன்னுடைய மனைவி இறந்து விட்டாற் போல் கனவு உண்டானால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிப்பிடும். ஒருவரின் இறந்து போன மனைவி, விண்ணுலகில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால், அவரின் வாழ்க்கை நிம்மதியாக அமையும். அதே நேரம் ,மறைந்த மனைவியின் முகம் துயரம் தோய்ந்ததாக இருப்பின் வாழ்க்கை நிலையற்றதாக மாறும்.

கோயில்: நமது கனவில் இறைவன் வாழும் கோயிலைக் காண்பது நன்மையான பலன்களைத் தரும். செய்யும் தொழில், வியாபாரம் முன்னேறும். நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். மக்களுக்கு சேவை புரியும் அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகை செய்யும். புனித யாத்திரைகள் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். அதே நேரம் பாழடைந்த அல்லது தெய்வ விக்ரகம் இல்லாத கோயிலைக் கனவில் காண்பது நல்லதல்ல. அத்தகைய கனவு நீங்கள் முயற்சிக்கும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டம் போன்ற பலன்களை தரும்.

நீங்கள் கோயிலில் நுழைந்து இறைவனை வழிபடுவதுபோல் கனவு தோன்றும் எனில், ஈடுபடும் செயல்களில் முதலில் சில தடங்கல்கள் ஏற்பாட்டாலும் முடிவில் அந்த இறைவனின் அருளால் அனைத்தும் நன்மையாகவே முடியும்.

கனவில் கோயில் மணியோசையைக் கேட்பதாக உணர்ந்தால், அதற்கும் சில பலன்கள் உண்டு. கோயில் மணியோசை ஒரே சீராக ஒலிப்பது போல் உணர்ந்தால் பிள்ளையில்லா தம்பதிகளுக்கு குழந்தைச் செல்வம் உண்டாகும். பணவரவும் அதிகரிக்கும். ஆனால் கோயில் மணியோசை சீரற்றதாக ஒலிப்பது போன்று உணர்ந்தால் உங்கள் வாழ்வில் பல சிக்கல்கள் உருவாவதோடு பண விரயமும் ஏற்படும்.

ஆலமரம்: உங்கள் கனவில் ஆலமரத்தைக் கண்டால், நீங்கள் செய்கின்ற தொழில் மேலும் அபிவிருத்தி ஆகும். பொருள் வரவும், உங்களின் சுற்றத்தார் இணக்கமும், பாசமும் உண்டாகும்.

ஆசிர்வாதம்: உங்களை விட வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் உங்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் கனவு கண்டால், நீங்கள் செய்யும் தொழிலில் மேன்மையும், மிகுந்த பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேரும்.

ஆரஞ்சு: கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் காண்பவருக்கு, எதிர்பாராத பொருளிழப்பு ஏற்படும். நோய் அல்லது விபத்தில் உடலில் காயம் உண்டாகலாம். உங்கள் மீது வீண் பழி சுமத்தப்பட்டு அவப்பெயர் ஏற்படக்கூடும்.

இஞ்சி: உங்கள் கனவில் இஞ்சியைக் கண்டால், உங்களுக்கு நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும்.

இனிப்பு: ஒருவர் தனது கனவில் இனிப்பான பலகாரங்களைக் காண்பது மிகவும் நல்லதாகும். ஏனெனில் உங்களின் வருங்கால வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பதற்கான அறிகுறி அதுவாகும்.

இளைப்பு: ஒருவர் தான் உடல் இளைத்து விட்டது போல் கனவு காண்பது, அவரது குடும்பத்தின் நிலை மேன்மையுறும் என்பதற்கான அறிகுறியாகும்.

இரும்பு: இரும்பை கனவில் காண்பவருக்குப் பொதுவாகவே மனோவலிமை அதிகமிருக்கும். ஆனாலும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். சிலருக்கு கஷ்டங்கள் வந்து நீங்கும். வேறு சிலருக்கு, தரித்திர நிலையை உண்டாக்கும். இரும்பைத் தொட்டு கையில் எடுப்பது போல் கனவு காண்பது சிறந்த பலனை தராது.
கன்று ஈன்ற பசு: பசு கன்று போடுவதைக் கனவில் காண்பது நல்லதல்ல. துன்பங்கள் அதிகம் வந்து சேரும். ஆனால் கன்று ஈன்ற பசுவைக் காண்பது உங்களுக்கு அதிக செல்வ வளத்தை ஏற்படுத்தும்.
உத்தியோகம்: நீங்கள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் உங்களுக்கு நற்காலம் நெருங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்பதை இது குறிக்கும்.
நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது போல் கனவு கண்டால், அவ்வாறே நிஜத்தில் நடக்கலாம். அல்லது நீங்கள் ஏதேனும் நிர்வாகத் தவறுகள் செய்து அதனால் உயரதிகாரிகளின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும். வருங்கால உயர்வுகளும் பாதிக்கக்கூடும். தொழில் செய்பவர்கள், அதில் பிரச்னைகள் எழுவதாக கனவு கண்டால், அவர்களின் தொழிலில் சிக்கல்கள் ஏற்படலாம்.

உழவு: ஒருவர் தாமே உழவுத் தொழில் செய்வது போல் கனவு கண்டால், அவரது வாழ்க்கையில் வளங்கள் பெருகும் என்பது பொருள்.

கோயில் விழா: கோயில் உற்சவம், தேரோட்டம் போன்ற கோயில் திருவிழாக்களைக் கனவில் கண்டால் விரைவில் உறவினர் ஒருவரின் மரணச் செய்தியைக் கேள்வியுற நேரிடலாம்.

உண்ணல்: நீங்கள் மட்டும் தனித்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் சில துன்பங்கள் உண்டாகும். உங்கள் உறவினர்களைப் பிரிய நேரிடும். செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படும். அதே நேரம் இத்தகைய கனவு காண்பவர் விவசாயியாக இருப்பரானால் அவரின் வயலில் விளைச்சல் மோசமாக இருக்கும்; குடும்பத்தில் சச்சரவுகள் அதிகமாகும்.

நீங்கள் பலருடன் சேர்ந்து விருந்தில் உண்பது போல் கனவு கண்டால், பணியில் பதவி உயர்வு ஏற்படும். திருமணம் ஆகாதவர்கள் இந்தக் கனவைக் கண்டால் விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்கள் விருந்து சாப்பிட்டு மகிழ்வது போல் கனவு கண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என பொருள்.

ஊற்று: கலங்கல் அற்ற தூய்மையான நீர் ஊற்றைக் உங்கள் கனவில் கண்டால்,உங்கள் வாழ்க்கையில் எத்தகைய கடினமான துன்பமும் ஏற்படாது. ஆனால், கலங்கிய சுத்தமற்ற நீர் ஊற்றை கனவில் காண்பது உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் கஷ்டங்களைக் குறிப்பிடும்.

எதிரிகள்: உங்கள் கனவில் உங்கள் எதிரிகளைக் கண்டால், மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். கனவு காண்பவருக்கு எதிராக சதித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன என்பதை இக்கனவு குறிப்பிடும்.

எலும்பு: கனவில் எலும்பைக் காண்பது விசேஷம் என கூறப்படுகிறது. எலும்பில் சதைத்திரள் சற்று ஒட்டியதாக உள்ள எலும்பைக் கண்டால் விரைவில் அவர் செல்வந்தர் ஆவார் என்று பொருள். ஒரு மனிதனின் எலும்பைக் கண்டால், மூதாதையர் வைத்துச் சென்ற சொத்து அவரை வந்தடையும் என்று பொருள்.

ஓட்டம்: நீங்கள் ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு காண்பது, நிகழ்கால நிலைமை மேன்மை அடையும் என்பதை உணர்த்தும் அறிகுறியாகும். உங்களின் தொழில், வியாபாரங்கள் அபிவிருத்தியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஏற்படும்

எண்ணெய்: எண்ணெயை தனியாக அல்லது அதை தேய்த்துக் குளிப்பதாக கனவு ஏற்படக்கூடாது. அவ்வாறு கனவு வந்தால், வெகு விரைவில் அக்கனவை காண்பவர் நோயால் பாதிக்கக்கூடும். ஆனால் நெடுநாள் நோயாளிகள் மேற்படி கனவைக் கண்டால், அவரது நோய் விலகி உடல் ஆரோக்கியமுடையதாக மாறும் நிலை உண்டாகும்.

ஏழ்மை நிலை: கனவில் ஒருவர் தாம் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து விட்டாற்போல கண்டால், எதிர்பாராத வகையில் அவருக்கு திரண்ட செல்வம் வந்து சேரும். எல்லா வகையிலும் முன்னேறி உயர் நிலையை அடைவார்.

ஏமாற்றம்: ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டது போல் கனவு கண்டால், அவருக்கு தீமைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வஞ்சக சூழ்ச்சிகளுக்கு அவர் ஆளாகி செல்வம் இழக்க நேரிடலாம்.

ஏலக்காய்: கனவில் ஏலக்காயைக் காணும் நபர், பிறரால் அதிகம் மதிக்கப் பெறும் நிலையை அடைவார். அதே நேரம் ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால், அவருக்கு மிகுந்த செல்வம் வந்து சேரும் என்பது பொருள்.

எழுத்தாணி அல்லது எழுதுகோல்: எழுதுவதற்கு பயன்படும் பேனா போன்ற பொருள்களைக் உங்கள் கனவில் கண்டால், கடிதப் போக்குவரத்தால் உங்களுக்கு பொருள் வரவு வரக்கூடும் என்று பொருள்.

எழுதுதல்: ஒருவர் தான் எழுதிக் கொண்டிருப்பது போல் கனவு கனவு கண்டால், அவருக்கு விரைவில் நற்செய்திகள் வரும் என பொருள்.

ஒட்டடை: உங்கள் வீட்டுச் சுவரில் அல்லது கூரையில் அடர்த்தியாக ஒட்டடை இருப்பது போல கனவு கண்டால், குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படும் என பொருள்.

கன்றுக்குட்டி: கன்றுக்குட்டியைக் கனவில் காண்பவர்களுக்கு, செல்வ சேமிப்பு அதிகரிக்கும்.

காதணிகள்: நீங்கள் கனவில் காதணிகளைக் கண்டால், உங்களுக்கு பொன் நகைகள் பலவும் உரிதாகும் என பொருள் கொள்ளலாம்.

கடல்: கனவில் கடலைக் காண்பவர்கள், சிறிது முயற்சி செய்தால் வெளிநாடுகளுக்குப் போவதற்கான வாய்ப்பு எளிதாக கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது. அல்லது வெளிநாட்டினாருடன் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு பெரும் பொருள் ஈட்டுவர். பிற நாட்டின் உறவுடைய அலுவலகங்களில் உங்களுக்கு வேலை கிடைக்கும் எனவும் பொருள் கொள்ளலாம்.

கண்டங்கள்: ஆபத்து உண்டாக்கும் கண்டங்களில் சிக்கிக் கொள்வதுபோல கனவு காண்பது நன்மையையே தரும். ஆனால், பிறர் கண்டங்களால் பாதிக்கப்பட்டது போல, கனவு காண்பது கெடுதலானது. திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், இப்படி கனவு கண்டால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

ஹோம குண்டம்: உங்கள் கனவில் ஹோமம் எனப்படும் வேள்விக் குண்டம், ஹோமத் தீ முதலானவற்றைக் கண்டால், நீங்கள் தெய்வ அருள் பெற்றவராகி பல்வேறு நற்பேறுகளையும் பெறுவீர்கள் என்பது பொருளாகும்.

கஷ்ட காலம்: நீங்கள் கஷ்ட திசையில் சிக்கித் தவிப்பதுபோல் வரும் கனவு, அதற்கு நேர்மாறான பலனாக உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உயர்வையும், புகழையும் உண்டாக்கும்.

கற்பூரம்: கற்பூரம் எரிவதுபோல் கனவு கண்டால், பிறருக்காக வழக்குகளில் சாட்சி சொல்லவோ அல்லது ஜாமீன் கொடுக்கவோ நேரிடலாம் என பொருள் கொள்ளலாம்.

புலி,சிங்கம் போன்ற வனவிலங்குகளை நாம் வேட்டையாடி வெற்றி பெறுவதுபோல கனவு வந்தால், நமக்கு வந்த எதிர்ப்புகளை முறியடித்து நாம் வெற்றி பெறப்போகிறோம் என்று அர்த்தம்.
கனவில் முயல்கள் துள்ளிக்குதித்து விளையாடுவதுபோல கனவு வந்தால், நாம் சொந்த ஊருக்குச் சென்று, நம் உறவினர்களைச் சந்திப்போம். இல்லாவிட்டால், அவர்கள் நம்மைப்பார்க்க வரப்போகிறார்கள் என்று பொருள்.

நரி கனவில் வந்தால், சொந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரில் பிழைப்பு நடத்தவேண்டி வரும்.
குதிரை கனவில் வந்தால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குதிரையின் மீது ஏறி சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

பசுக்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போல கனவு வந்தால், புதிய சொத்துக்கள் வாங்குவோம்.
காளை மாடு துரத்துவது போல கனவு வந்தால், வீண் பிரச்னைகள் வந்துபோகும்.
ஆடுகள் நம் கனவுகளில் வந்தால், புதிதாக காரோ, பைக்கோ வாங்கப்போகிறோம் என்று நாம் அறியலாம்.

பாம்பு கனவில் வந்தால், பெரிய அளவில் நமக்குத் தொல்லை தந்து வந்த கடன் பிரச்னைகள் நம்மை விட்டு விலகும்.
நாய்கள் குரைப்பது போல கனவு வந்தால், வீண்பழி வந்து சேரும்.
குரங்குகள் கனவில் வந்தால், வீட்டிலோ, நண்பர்களிடமோ தேவையற்ற வாக்குவாதங்கள் வரும். கடன் பிரச்னை அதிகரிக்கும்.

யானை நமது கனவில் வந்தால், நமக்குப் பெரும் செல்வம் ஏதோ ஒரு வகையில் கிடைக்கப்போகிறதென்று பொருள். யானையின் மீது உட்கார்ந்துகொண்டு சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு பதவிஉயர்வு கிடைக்கலாம். சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கலாம்.
மயில் அகவுவது போல கனவு வந்தால், கணவன் மனைவி இடையே அன்பு மிகுதியாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வானத்தில் கூட்டமாகப் பறவைகள் பறந்துசெல்வது போல கனவுகள் வந்தால், நெடுநாட்களாக நமக்கு இருந்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகும். புதிய பதவி தேடி வரும். புகழ் கூடும்.
கிளிகள் பறந்து, மரத்துக்கு மரம் செல்வது போல கனவு கண்டால், பால்ய நண்பர்களைச் சந்தித்து உரையாடுவீர்கள். மனம் ரொம்பவே லேசாகிப்போகும். புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

சிவாய நம

அனுமன் ஜெயந்தி... சனி தோஷம் நீங்க... வாயு புத்திரனை வணங்குங்கள்...!! அஞ்சனை மைந்தன்... அனுமன் வழிபாடு...!!


நமது புராணங்கள், இதிகாசங்களில் எத்தனையோ வீர புருஷர்கள் இருந்தாலும், ஒரு சிலர் மட்டும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் மக்களின் மனதில் தங்களின் சிறந்த குணங்களால் நிலைத்து நிற்கின்றனர். அப்படிபட்ட ஒரு காவிய நாயகன்தான் 'ஸ்ரீ ஆஞ்சநேயர்" ஆவார்.

மேலான குணங்கள் அனைத்திற்கும் உதாரணமாக இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறந்த மார்கழி மாதம் மூலம் நட்சத்திர தினம் 'அனுமன் ஜெயந்தி" தினமாக கொண்டாடப்படுகிறது. ராமாயண காவியத்தில் ஈடுஇணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுர்யம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் அனுமன்.

இன்றைய தினம் அனுமன் ஜெயந்தியாகும். அனுமனின் மகிமைகள் எண்ணிலடங்காதவை. அஞ்சனை என்னும் கந்தர்வப் பெண்ணிடம் வாயுவின் அனுக்கிரகத்தால் உதித்ததால் ஆஞ்சநேயர் எனப் பெயர் பெற்றார்.

அனுமன் ஒரு தெய்வ பிறவி ஆவார். அவர் சிவபெருமானின் வடிவானவர். தன் இளம் வயதிலிருந்தே அனைத்து வகையான கலைகளையும் கற்று தேர்ந்தவர். எனவே அவருக்கு 'சுந்தரன்" என்கிற பெயரும் உண்டு. பிரம்மச்சர்யத்திற்கு உதாரணமானவராக இருப்பது ஸ்ரீ ஆஞ்சநேயர்தான்.

இறவா வரம் பெற்ற சிரஞ்சீவிகளில் ஆஞ்சநேயரும் ஒருவர். இலங்கையிலிருந்து சீதையை வணங்கி அனுமன் விடை பெற்றுக் கொள்ளும்போது சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஓர் இலையைக் கிள்ளி அனுமன் தலையில் போட்டு வாழ்த்தியதால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து நாம் அவரது ஆசியைப் பெறலாம்.

மகத்தான சக்தி கொண்ட ஆஞ்சநேயரின் அவதார தினமான மார்கழி மூல நட்சத்திர தினத்தில், அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, உணவு நீர் ஏதும் அருந்தாமல் அருகிலுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

ஆஞ்சநேயரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :

ஆஞ்சநேயரை வழிபடுவதால் உங்கள் வாழ்வில் ஏற்படும் துக்கங்கள், கஷ்டங்கள் நீங்கும். பீடைகள் ஒழியும். கிரக தோஷங்கள் குறிப்பாக சனி கிரக தோஷங்கள் நீங்கும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீக பாதிப்புகள் நீங்கும்.

தொழில், வியாபார முடக்க நிலை நீங்கி நல்ல லாபம் கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தை பேறு மற்றும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்ற நன்மைகள் கிடைக்கும்.

அவருக்கு ஸ்ரீ ராம ஜெயம் எழுதி மாலையாக போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் குழந்தை பாக்கியமும், துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும், வெற்றிலை மாலை சாற்றினால் திருமணத்தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

ராம நாமம் கேட்கும் இடங்களில் அனுமன் அமர்ந்திருப்பார் என்பது ஐதீகம். ராமபிரானின் சேவகன் அனுமனை அவதரித்த நாளில் வணங்கினால் தொல்லைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அனுமன் ஜெயந்தியான இன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அனுமனை விரதம் இருந்து வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை ஓரளவு குறைத்துக்கொள்ள நமக்கு வழிபிறக்கும்.