Friday, August 23, 2019

கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம்?


🌟 மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் வரும் ஆவணி மாதம் 6ம் தேதி வெள்ளிக்கிழமை (23.08.2019) அன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.

🌟 வெண்ணை திருடும் கிருஷ்ணரை விரும்பாத பெண்களே கிடையாது. அப்படி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் கண்ணன்.

கண்ணனின் திருப்பாதத்தை வீட்டில் ஏன் கோலமாக வரைகிறோம் தெரியுமா?

🌟 நாரத முனிவர் ஒரு சமயம் ஒவ்வொரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

🌟 அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப்பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும், ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ண பரமாத்மா.

🌟 நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன், காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் திருவடிக் கோலம் போடுகிறார்கள். கிருஷ்ணர் 8 வகையாக பக்தர்களுக்கு காட்சிதருகிறார்.

🌟 சந்தான கோபால கிருஷ்ணர் : யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

🌟 பால கிருஷ்ணன் : தவழும் கோலம்.

🌟 காளிய கிருஷ்ணன் : காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.

🌟 கோவர்த்தனதாரி : கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

🌟 ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்) : வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

🌟 முரளீதரன் : இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன், ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம்.

🌟 மதன கோபால் : அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.

🌟 பார்த்தசாரதி : அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

இவ்வாறு 8 வகைகளில் காட்சித்தரும் கிருஷ்ணரின் பாதத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். சந்தோஷத்திற்கு குறைவே இருக்காது.

கிருஷ்ணரின் பாதங்களை வீட்டில் வரைந்து, வழிபட்டு அவரின் அருளைப் பெறுவோம்...!!

Thursday, August 22, 2019

சரபேஸ்வரர்

உலகை காக்க சிவபெருமான் எடுத்த உருவம் தான் “சரபேஸ்வரர்”. ஸ்ரீ சரபேஸ்வரரை போற்றும் இந்த மூல மந்திரத்தை போற்றி துதிகளை தினமும் உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதிப்பது சிறப்பு. ஞாயிற்று கிழமையன்று உடல், மன சுத்தி செய்து கொண்டு, எத்தகைய புலால் உணவுகளையும் உண்ணாமல் அந்த தினத்தில் வரும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளான ராகு காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று சரபேஸ்வரர் சந்நிதி முன்போ அல்லது சிவபெருமான் சந்நிதி முன்போ விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, இந்த துதியை மனமார படித்தால் உங்களுக்கு எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும், சத்ரு ஜெயம் எனப்படும் எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். மந்திரிக மற்றும் துஷ்ட சக்தி பாதிப்புகளில் இருந்து விமோச்சனம் கிட்டும். நீங்கள் புது வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தாமதங்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் நடைபெற தொடங்கும். மனம் மற்றும் செயல்புரிவதில் இருக்கும் தயக்கங்கள் நீங்கி தெளிவு ஏற்படும்.

ஜென்ம நட்சத்திரம்

ஜென்ம நட்சத்திரம் என்பது நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறோமோ அதுதான் ஜென்ம நட்சத்திரம். ஒருவர் பிறக்கும் போது, சந்திரன் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்கிறாரோ அது தான் அவரது ஜென்ம நட்சத்திரமாகும்.
ஒருவர் தன் வாழ்நாளில் எப்படி இருப்பார் என்பதை நிர்ணயம் செய்வதே ஜென்ம நட்சத்திரம் தான். அதனால்தான் ஜென்ம நட்சத்திர தினத்தன்று ஒருவர் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். 12 ராசிகளுக்கும் அதன் பாதங்களை பொறுத்து 27 நட்சத்திரங்களை வகுத்துள்ளனர்.

ஒவ்வொருவரும் தங்கள் ஜன்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி...

ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை: புதிதாகக் கல்வி கற்றல், உயர் பதவி ஏற்பு, அசையும், அசையா சொத்துக்களை பார்வையிடுதல் வாங்குதல், பத்திரம் பதிவு செய்தல், யாகங்கள் செய்தல், அன்னதானம் தர்ம காரியங்கள் செய்தல், உபநயனம் செய்தல், கிரஹப்பிரவேசம் செய்தல் போன்ற காரியங்களை செய்யலாம்.

ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடாதவை: நோயாளிகள் முதன்முதலாக மருந்து எடுத்துக்கொள்ளுதல், தம்பதியருக்குத் திருமணம் செய்வித்தல், திருமணம் ஆன பெண்ணுக்கு சீமந்தம் செய்தல், சாந்தி முகூர்த்தம் செய்தல், காது குத்துதல், முடி இறக்குதல் போன்ற காரியங்களை செய்யக்கூடாது.

Wednesday, August 21, 2019

உங்களை எப்போதும் கண்காணிக்கும் 9 பேர்!



*நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம்.*

*ஏனெனில் இரண்டாவது ஆள் ஒருவருக்குத் தெரிந்தால் அதன் பெயர் “ரகசியம்”அல்ல என்பதும், அந்த ஆள் எவ்வளவுதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது வெளியே பரவ வாய்ப்பு உண்டு என்றும் நமக்குத் தெரியும்.*

*ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.*

*யார் அந்த ஒன்பது பேர்?*

*பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் (வெற்றிடம்); இது தவிர சூரியன், சந்திரன், எமன், காலம் (நேரம்).*

*பஞ்சபூதம் என்று சொல்லிவிட்டாலே, அதனுள் எல்லாம் அடங்கிவிடும். இருந்த போதிலும் சூரியனும், சந்திரனும் நன்கு தெரிந்த பிரகாசமான பொருள் என்பதால் அதைச் சேர்த்தனர். அல்லது இரவும் பகலும் — 24 மணி நேரமும்– என்று பொருள் கொள்ளவும் அவை உதவும்.*

*எமன் என்பவன் யார்? அவனுடைய கணக்குப்பிள்ளை சித்திர குப்தன் என்பர். இதன் பொருள் என்ன வென்றால் நாம் செய்யும், நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷமும் ஒரு சித்திரத்தை — படத்தை உருவாக்குகிறது. அந்தப் படம் நமக்குத் தெரியாமல் (குப்த = ரகசியமாக) இருக்கிறது. இந்த விஞ்ஞான உண்மையையே இந்துக்கள் ‘சித்திர’ ‘குப்த’ என்றனர்.*

*ஒரு கொசு நீரில் உட்கார்ந்தால் கூட நீரில் அதிர்ச்சி ஏற்பட்டு வளையங்கள் உண்டாகும். ஆனால் நமக்கு கண்ணுக்குத் தெரியாது.அது கொசுவுக்குத் தெரியும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்றால்கூட ஒரு வழித்தடம் உண்டாகும். அது நமக்குத் தெரியாது. எறும்புக்கு அந்தப் பாதை தெரியும். அதுபோல நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் ஒரு படத்தை உண்டாக்கும்; அது நமக்குத் தெரியாது; சித்திரகுப்தன் அல்லது எமனுக்குத் தெரியும்.*

*சித்திரகுபதன் அல்லது எமன் என்பவன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். நம்முடைய எல்லா நல்ல, கெட்ட செயல்கள், எண்ணங்களையெல்லாம் கூட்டிக் கழித்து, பாவ புண்ணியங்களைப் பட்டியல் போட்டுவிடுவர்.*

*நீர், நெருப்பு, ஆகாயம் முதலியன இல்லாத இடமே இல்லை. அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இந்துக்களுத்குத்தான் இந்த விஞ்ஞான உண்மைகள் தெரியும். இதுவரை வேறு யாருக்கும் அது தெரியாது.*

*நீரை மந்த்ரம் மூலம் அனுகுண்டாக மாற்றும் வல்லமை நம் ரிஷி முனிவர்களுக்கு இருந்தது. ஒரு உள்ளங்கை நீரை மந்திரம் மூலம் சாபமாகவோ வரமாகவோ மாற்றும் அரிய வித்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால்தான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தாலும், தானங்களை செய்தாலும் நீரைப் பயன்படுத்தினர். சாபம் கொடுக்கவும் வரம் கொடுக்கவும் நீரைப் பயன்படுத்தினர்.*

*நெருப்பு என்பது இல்லாமல் மனிதன் முன்னேறமுடியாது. உடம்பிலுள்ள அக்னி ஜடராக்னி. வெளியே உள்ள அக்னி சாட்சியாக திருமணம் செய்துவிட்டால் அதை மீறக்கூடாது. பழைய அரசர்கள் அக்னி சாட்சியாக உடன்படிக்கை செய்ததை நமது கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்னி சாட்சியாக கோவலன் – கண்ணகி திருமணம் செய்து கொண்டதை தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் சொல்லும். நீர் ஆறாக ஓடும்படி தாரைவார்த்து தானம் செய்ததை சங்க இலக்கியம் செப்பும்.*

*காலம் (நேரம்) என்பது நம்மைக் கவனிக்கிறது. அதை நிறுத்த யாராலும் முடியாது.* *கடிகாரம் ஓடிக்கொண்டிருபாது போல ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகிறது.*

*விண்ணில் உலவும் செயற்கைக் கோள்கள், நம் வீட்டு கொல்லைப்புறத்தைக் கூடப் படம் பிடிக்கும்; கூகுள் மேப் மூலம் நம் நண்பர் வீட்டிற்குள் யார் வந்து செல்கிறார்கள் என்பதை நம் வீட்டுக் கம்ப்யூட்டரிலேயே காணமுடியும்;* *சி.சி. டிவி மூலம் கொலைகாரனைக் கூடக் கண்டுபிடிக்கமுடியும். இன்ப்ரா ரெட் காமிரா, பைனாகுலர் மூலம் இருட்டில் நடப்பதையும் காணமுடியும். ஆனால் இவைகளிடமிருந்து தப்பிக்க வழி உண்டு. இந்துக்கள் சொன்ன ஒன்பது கர்ம சாட்சிகளிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது!!!*

*ஆகவே,*
*ஒன்பது சாட்சிகளுக்குப் பயந்து நாம் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்;*
*நல்ல காரியங்களையே எண்ண வேண்டும்.*
*ஒன்றே செய்க;* *அதுவும் நன்றே செய்க; அதையும் இன்றே செய்க..

Tuesday, August 20, 2019

நீதி_சாஸ்திரம்

.

இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.

1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. மதுபோதையில் இருக்கும் போது.

இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.

1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.

இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.

1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.

இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.

1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.

விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.

ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.

இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்..

Monday, August 19, 2019

திருமண முகூர்த்த நேரம் குறிப்பது எப்படி?


திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான் முகூர்த்த நாள் குறிப்பதும் முகூர்த்தம் என்பது மூனே முக்கால் நாழிகை( ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும்).ஒரு குழந்தையின் எதிர்காலம், ஆரோக்கியம், புகழ், ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல முகூர்த்த நாள் மற்றும் நேரம் பார்ப்பது அவசியமாகும்.

மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் காணாமல் போய்விடும்.குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது குரு பலம் ஏற்படும்.திருமணத்திற்கு ஒருவருக்கு குருபலமோ,விதியோ இருந்தால் போதும்.மணமக்கள் இருவருக்கும் குருபலம் இல்லாத சமயத்தில் இவர்களுக்கு சுக்ரன், அல்லது 2, 7, 11 ம் அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்விக்கலாம்.

வைகாசி, ஆனி, ஆவணி மற்றும் தை, ,பங்குனிமாதங்ளை தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி மற்றும் திரயோதசி உள்ள நாட்கள் சிறப்பானவை.இரு கண்ணுள்ள நாட்களான புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறந்தது. ஒரு கண்ணுள்ள நாட்களான ஞாயிறு மற்றும் திங்கள் பாதி சிறந்தது. குருட்டு நாட்களான செவ்வாய் சனியை தவிர்ப்பது நல்லது.

அக்னி ராசிகளான சிம்மம் மற்றும் மேசம் முகூர்த்த லக்னமாக இல்லாமல் இருப்பது சிறப்பு.முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம் சுத்தமாக இருப்பின் நல்ல கணவன் மனைவி அமையும்எட்டாம் இடம் சுத்தமாயின் நீடித்த திருமணபந்தம். 12ம் இடம்
சந்தோசத்தை குறிக்கின்றது. ஆக 2,7,8ம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் மற்றும் எட்டாம் இடத்தை குரு அல்லது சுக்ரன் பார்க்கலாம். இந்த இடங்களில்இவர்கள் யாரும் இருக்கக்கூடாது.

12 ராசிக்காரர்களின் குண நலன்கள்.


மேஷம்:
இந்த ராசி. இயற்கையிலே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும், வைராக்கியமும் மிக்கது. எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பர். வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக கொண்டிருப்பவர்கள். அவசரக்காரர்கள் என்று உலகத்தால் சொல்வார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. எப்படித்தான் தாயின் வயிற்றில் இருந்தீர்கள் என்று சொல்லித்திரிவார்கள். இவர்கள் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யாவிட்டால் தூக்கம் வராது, மூக்கிற்கு மேல் கோபம் தான் வரும். தந்திரசாலிகள் மட்டுமல்ல, தைரியசாலிகளும் கூட இவர்கள்.

ரிஷபம்:
இந்த ராசிக்காரர்கள் அமைதியானவர்கள். ஆர்ப்பாட்டம் செய்ய ஆசை இருந்தாலும் செய்ய துணிவில்லாதவர்கள். தோற்றத்தால் மற்றவர்களின் எண்ணங்களை மாற்றம் காணச் செய்யும் ரிஷபந்தார்கள் சீற்றம் இல்லாமல் பேசும் தன்மை பெற்றவர். கூட்டங்களுக்கு மத்தியில் இவர்கள் நிற்கும் பொழுது இவர்களை கோட்டீஸ்வரர் என்றே மதிக்கும் அளவிற்கு தோற்றப் பொழிவு இருக்கும். எடுக்கும் முயற்சியில் பின் வாங்கமாட்டார்கள். வாகன யோகம் அதிகம் பெற்றவர்கள். ஆடை அணிகலன் அணிவதில் அதிகம் பிரியம் உள்ளவர்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகம் இருக்கும். உறவினர்களைவிட நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். எல்லாம் விதிப்படி நடக்கிறது என்று சொல்வார்கள். இவர்களின் நட்பு விட்டம் பெரியதாக இருக்கும். தலைமை பதவி தக்க சமயத்தில் வந்து சேரும். இவர்கள் வாழ்க்கை ஏற்றம் இறக்கமாகவே இருக்கும்.

மிதுனம்:
இந்த ராசிக்காரர்கள் அதிக அளவு மூளை பலம் உள்ளவர்கள். அதிக புத்திசாலித்தனத்தையும், மிகச்சிறந்த நிர்வாகம் தன்மையும் உடையவர்கள். சங்கீதம், ஆடல் பாடல் ஆகியவற்றில் விருப்பமும் நல்ல மனோசக்தியும் உடையவர்கள். புதுமை செய்வதிலும் புரட்சி செய்வதிலும் புகழ் கொடி நாட்டும் இவர்கள் மிகப்பெரிய காரியங்களைக்கூட மிக எளிதாகச் செய்து முடிப்பார்கள். இவர்கள் மூளை மின்னல் வேகத்தில் செயல்படும். அடுத்தவர்களுக்கு யோசனை சொல்லும் இவர்களைப் பற்றி ஒரு நிமிடம் கூட சிந்திப்பதில்லை. உடல் பலத்தை காட்டிலும் இவர்களுக்கு மூளை பலமே உறுதுணை புரியும். ஆன்மீகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களிடம் காரியம் சாதித்துக் கொள்ள வேண்டுமானால் இவர்களைப் போற்றி புகழ்ந்து பேசினாலே போதும்.

கடகம்:
இவர்கள் மற்றவர்களின் மனமறிந்தும், குணமறிந்தும் பேசுவதில் வல்லவர்களாகவும், எல்லோரையும் தன்னை போல நினைக்க கூடியவர்கள், நம்பியவர்களை ஒரு நாளும் கைவிடாதவர்களாகவும் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அதற்காக எள்ளளவும் கலங்காதவர்களாகவும், ஆயுதங்கள் இல்லாமல் இவர்கள் பேச்சையே ஆயுதமாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். வைராக்கிய மனம் பெற்ற இவர்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள். பணபலம் பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களைச் சுற்றி ஒரு படை பலம் எப்பொழுதும் இருக்கும். பொது நலத்தில் ஈடுபாடு கொண்ட இவர்களை மக்கள் போற்றி கொண்டாடுவார்கள். வயது கூட கூட இவர்கள் வாழ்க்கை வளம் பெருகும். வாழ்வில் மிக வேகமாக முன்னேற்ற வேண்டும் என்ற ஆவலில் மின்னல் வேகத்தில் செயல்படுவார்கள். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குணங்களை பெற்றவர்கள் இவர்கள்.

சிம்மம்:
இவர்கள் அதிக துணிவும், தலைமை பதவி ஆசையும் உடையவர்கள் எவருக்கும் அடங்காத தன்மையும், அன்புக்கு மட்டும் அடங்க கூடியவர்.எல்லாம் தெரிந்தாலும்,மற்றவரை பற்றி அறிந்தாலும் தனக்கு ஒன்றும் தெரியாததுபோல் காட்டிகொள்வார்கள். மற்றவர்கள் மனம் புண்படாமல் இருக்க பொய் சொல்ல தயங்கமாட்டார்கள். அதிகாரத்தை உபயோகித்து காரியம் சாதிப்பதை விட அன்பை உபயோகித்து அதிகம் சாதித்து காட்டுவார்கள். நிர்வாகத் திறமையினால் எண்ணற்ற நெஞ்சங்களின் மனதில் இடம் பிடித்து, கொடுத்து உதவும் தன்மை கொண்ட இவர்கள் கோபம் கொள்வதற்கும் தயங்கமாட்டார்கள். வெளி வட்டாரத்தில் வியக்கும் விதத்தில் செல்வாக்கு பெற்றிருப்பார்கள் வீட்டிற்குள் வாழ்க்கத்துணையையும்,மக்களையும்,பெற்றோர்களையும் அனுசரித்து போகக்கூடியவர்கள்

கன்னி:
இவர்கள் மற்றவர்களின் பாராட்டுதல்களைக் காட்டிலும் பாசத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் புதுமையாகவும், புத்தி சாலித்தனமாகவும் பதில் கூறும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலம் அதிகம். பார்த்த மாத்திரத்தில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது அரிது. ஏனென்றால் அமைதி இவர்கள் முகத்தில் இருக்கும். ஆக்ரோஷம் இவர்கள் மனதில் இடம் பிடிக்கும். ஒருவரைப் பார்த்தால், பார்த்த உடனேயே இவர்கள் இப்படித்தான் என்று கணித்து விடுவார்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். வாழ்க்கை ரகசியங்களையும் மனதிலேயே வைத்துக் கொள்வார்கள். இவர்கள் புத்திசாலித்தனத்திற்கும் வாழ்வில் நடுப்பங்கில் புகழ் கூடும். மதிப்பும் மரியாதையும் உயரும்.இயற்கையிலேயே ஞானம்,பக்குவம்,பொறுமை மிக்கவர்கள்.எல்லாம் தெரிந்தவர்கள் தனக்கு ஒன்னும் தெரியாததுபோல் கடந்துவிடுவார்கள்.

துலாம்:
இவர்கள் கைராசி மிக்கவர்களாகவும், கடமை தவறாதவர்களாகவும், இரக்க சுபாவமும், அரக்க சுபாவமும் கலந்த மனோபாவம் பெற்றிருப்பார்கள். மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். குசேலரும் குபேரர் ஆகும் வாய்ப்பை வழங்குபவர் இவர்கள் ராசி நாதன் சுக்கிரன் எனவே சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள். கோபம் இவர்கள் உடன்பிறப்பு, கொஞ்சம் குறைத்துக் கொண்டால் மனிதருள் மாணிக்கம். வசீகர பார்வையும் கவர்ச்சியான முகத்தோற்றமும் பெற்ற இவர்கள் சமூகத்தில் தனி அந்தஸ்து பெற்று விளங்குபவர்கள். மற்றவர்கள் தொடங்கும் புதுத் தொழிலுக்கு கைராசி மிக்கவர்கள் இவர்கள் என்ற முறையில் குத்துவிளக்கு ஏற்றவும் புது கணக்கு போடவும் இவர்களை அழைப்பர். இவர்கள் தொழிலுக்கு இவர்களே புதுகணக்கு போட்டால் உயர்வான லாபம் ஏற்படும். மனைவி மக்கள் பேரில் இவர்கள் தொழில் செய்யும்போது மகத்தான பலன்களைக் காண்பார்கள்.

விருச்சிகம்:
இவர்கள் விறுவிறுப்பாக செயல்பட்டு காரியத்தில் வெற்றிகளைக் குவிக்கும் கூர்மையான புத்தியும், குணத்தில் இமயமாக விளங்குவார்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் ஈடு இணையற்றவர்களாகவும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் திகழ்வார்கள். இவர்களிடம் ஓர் தெய்வீக சக்தி உள்ளதால் இவர்களை யாரம் எளிதில் அசைக்க முடியாது. விருப்பங்களை நிறைவேற்ற நண்பர்கள் மட்டுமல்லாமல் தெய்வங்களும் இவர்களுக்கு ஆதரவு புரியும். இரவு நேரத்தில் எந்த செயலையும் ஆர்வத்தோடு செய்வார்கள். கற்பனை வளத்தாலும் காரியங்களை எளிதில் முடிக்கும் திறத்தாலும் மக்களைக் கவர்ந்திருப்பார்கள். வாக்கு பலிதமும், கனவு பலிதமும் இவர்கள் வாழ்க்கையை வழி நடத்திச் செல்ல வழிகாட்டியாக விளங்கும், தவறு செய்தவர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் தட்டி கேட்க தயங்க மாட்டார்கள். பத்திரிக்கை, ஆன்மீகம், கலைத்துறை, ஜோதிடம், எழுத்து, விஞ்ஞானம் போன்ற துறைகளெல்லாம் இவர்களுக்கு பொருத்தமான துறைகளாகும்.

தனுசு.
இவர்கள் உதவும் மனதாலும் உழைக்கும் திறத்தாலும், உயர்ந்த நிலையை அடைய முடியும். தெய்வ பக்தியோடு தேச பக்தியும் அதிகம் இருக்கும். அன்பு, பொறுமை, பக்தி, நாணயம் அனைத்தும் இவர்கள் கவரிமான் பரம்பரை என்று தான் சொல்ல வேண்டும். வீரமும், விவேகமும் கொண்டு செயல்படுவதோடு உறுதியோடு நின்று இறுதிவரை போராடுவார்கள். வெளியில் சுதந்திர பறவைகளாகத் திரியும் இவர்களுக்கு வீட்டில் ஏதாவது ஒரு வகையில் நிம்மதியின்மை ஏற்படும். தாரத்தாலும், தனயனாலும் நிம்மதி இழக்காதிருக்க வேண்டுமானால் நல்ல பொருத்தம் பார்த்தே மனம் முடிப்பது அவசியமாகும்.நேர்மையும்,நாணயமும் இவர்களோடு ஒட்டி பிறந்தது.மற்றவர் பொருளுக்கோ,பணத்துக்கோ ஆசைபடாதவர்கள்,இளமையில் வாழ்வில் போராடினாலும் பின் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.

மகரம்:
இனிமைக் குணத்தோடும் காட்சியளிக்கும் இவர்கள் வைராக்கிய மனம் பெற்றவர்கள். நண்பர்கள் வட்டாரத்தில் ஒர் தனி முத்திரையைப் பதித்து விடுவார்கள். இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது அப்படியே நிகழும் என்பதால் நல்ல சிந்தனையாக இருந்தால் தான் அது நற்பலன்களைக் கொடுக்கும். இவர்களுக்கு உறவும் பகையும் தற்காலிகமானது தான். மந்தனுக்குரிய மகர ராசிக்காரர்களாகிய இவர்களுக்கு குடும்பத்திற்குள்ளேயே பகை குடி கொண்டிருக்கும். வெளிவட்டார நட்பு வியக்கும் விதம் அதிகரிக்கும் பொறுமைசாலிகளாக விளங்கும் இவர்கள் வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்பட்ட பிறகு தான் சாதனை உருவாகும். மேதினி போற்றும் வாழ்க்கை பிற்பகுதியில் தான் காணமுடியும். தாரத்தை தேர்ந்தெடுக்கும் போதும், தொழில் அமைக்கும் போதும் ஜாதக பலம் அறிந்து செயல்பட்டால் தான் சாதகம் பெறமுடியும். இவர்களிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மையை அகற்றினால் வாழ்வில் உயர்நிலை அடைய முடியும்.

கும்பம்:
செய்யும் தொழிலே தெய்வமாகக் கருதும் இயல்புடையவர். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க மாட்டார்கள். கொடுத்தால் அதை நிறைவேற்றாமல் இவர்களுக்கு தூக்கம் வராது. சனியின் ஆதிக்கப் பெற்ற இவர்கள் சமுதாயத்தில் ஒரு தனி முத்திரை பதிப்பார்கள். உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்ற பட்டத்தையும் பெற்று வாழ்வார்கள். தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்க தயங்கமாட்டார்கள். தாராள மனப்பான்மை கொண்டவர்கள் இவர்கள். எவ்வளவு உயர்ந்த நிலையில் இவர்கள் இருந்தாலும் எளிமையானவர்கள். தன் வாழ்வில் வரும் சந்தோஷமானாலும் சரி, சங்கடமானாலும் சரி பிறரிடம் சொல்லாமல் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறி தேற்றிக் கொள்வார்கள். படிப்பிலும்,அனுபவத்திலும் உயர்நிலை அடைந்தவர்கள் ். பலரையும் ஏற்றிவிடும் ஏணியாக விளங்கும் இவர்கள் பெற்றோர் வழியில் பிரச்சினைகளை சந்திப்பார்கள். பெற்றோர்கள் தங்களைவிட சகோதர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.கடுமையான கோபக்காரர்கள். இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.இவர்கள் ஒரு கல்லை எடுத்து கொடுத்தால் கோபுரமாகும்.கைராசி கொண்டவர்கள்.

மீனம்:
இவர்கள் இல்லம் தேடி வருபவர்களுக்கு உள்ளம் மகிழ கொடுத்து உதவும் இவர்கள் மற்றவர்கள் செய்ய முடியாத காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் திறமை பெற்றிருப்பார்கள். பிறரது மனநிலையை அறிந்து கொண்டு அதற்கேற்றார்போல் செயல்படுவார்கள்.வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சியை காண்பார்கள். இவர்கள் தவறு செய்தாலும் அதை ஒப்புக் கொள்வார்கள். இவர்களுக்கு பதவி தானே தேடிவரும்.

அதுதான் இவர்களின் தனித்தன்மை. வெளியூருக்கு செல்லுவது அதிக நாட்டம் கொள்வார்கள். அன்னதானம் முதல் ரத்ததானம் வரை செய்யும் மனப்பான்மை பெற்ற இவர்கள் நிதானம் மட்டும் பெற்றிருப்பார்கள். பிறருக்கு நல்ல ஆலோசனைகளை கூறுவார்கள். பிறருடைய சொத்துக்காகவோ, பொருளுக்காகவோ ஆசைப்பட மாட்டார்கள். மனதில் தோன்றும் எண்ணங்களைத் தயங்காமல் எடுத்துரைப்பார்கள். மனதிற்கு எது சரியொன்று தோன்றுகிறதோ அதை உடனடியாக செய்து முடிப்பார்கள். வெளிநாட்டு யோகம் உள்ளது. மீனைப் போன்று துள்ளித் திரியும் குணமும், பயந்த சுபாவமும் பெற்றிருப்பார்கள். எந்த நிலையிலும் எல்லோரையும் மதிப்பார்கள்.

குடும்ப பிரச்சினை அதிகரிக்கும். இவர்களுக்கு நல்ல தாரமும், தனயனும் வாய்க்கும். குழந்தைகளால் சந்தோசத்தை பெறுவார்கள்,வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பை நல்குவார்கள்.

செல்வம் சேர்வதற்கும்,தொழில் சிறப்பதற்கும்..,


*யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.

*பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.

*வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.

*கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச் சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.

*பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

*பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

*கடை அல்லது அலுவலகத்திற்கு

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||"

என்ற மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.இல்லை என்றால் பணப்பெட்டிக்காவது தினமும் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.

*வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு மேற்கு நோக்கி அமர்ந்து

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||"

என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு இவற்றில் தெளிக்கவும்.

எல்லோரும் செல்வத்துடனும்,பணத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...,

நவக்கிரகங்களை வலம் வரும் முறை

நவக்கிரகங்களை மொத்தம் 9 முறை வலம் வரவேண்டும் அதில் 7 முறை இடமிருந்து வலமாகவும் 2 முறை வலமிருந்து இடமாகவும் வலம் வர வேண்டும்.

ஏனென்றால் சூரியன் முதலான ஏழுகிரகங்களும் இடமிருந்து வலமாக செல்கின்றன ராகு,கேது வலமிருந்து இடமாக செல்கின்றனர்.

குரு பகவான் என்பவர் யார்?


ஜோதிடத்தில் சொல்லப்படும் ஒன்பது கிரகங்களில் முதன்மையானவர் பிரகஸ்பதி என சொல்லப்படுகின்ற குருபகவான்தான்.இவர் தொட்டது தொலங்கும்,பார்த்தது விளங்கும்.ஒரு மனிதருக்கு அளப்பறிய நன்மைகளை செய்யக்கூடியவர்.

திருமண யோகத்தை கொடுக்கக்கூடியவர் இவர்தான் இவர் ராசிக்கு 2,5,7,9,11 இருக்கும் போது குருபலம் ஏற்பட்டு திருமண தடை விலகுகிறது.

இவர் தனித்து நிறபதைவிட கிரகங்களுடன் சேர்ந்து இருப்பது சிறப்பு என சொல்லப்பட்டாலும் தனித்து இருந்தாலும் மிகுந்த நன்மைகளையே வழங்குகிறார்.

இவர் பல யோகங்களை ஜாதகருக்கு வழங்கக்கூடியவர் குரு மங்கல யோகம்,கேந்திர யோகம்,கசகேசரி யோகம்,குருசந்திர யோகம் போன்ற மிக முக்கிய யோகங்கள் இவரால் ஏற்படுபவையே.

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனை விட இவர்தான் வலிமையானவர்.இவர் புனர்பூசம்,விசாகம்,பூராட்டாதி நட்சத்திரகாரகளுக்கும் தனுசு,மீனம் ராசிக்காரர்களுக்கும் நெருங்கிய நண்பர்.

மேசம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு,மீனம் போன்ற லக்கின காரர்களுக்கு முழு ராஜயோகத்தை கொடுப்பவர்.ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி ஆகியவை குருவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

சமூக அந்தஸ்து, அரசியல் பதவி, ஆன்மிக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், தர்ம ஸ்தாபனங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரி கட்டுதல், அறங்காவலர் பதவி, நீதிபதி, கவர்னர் போன்ற அரசு உயர் பதவியில் அமர்வதற்கு குருபகவானின் அருள்கடாட்சம் தேவை.

வழிபாடு - பரிகாரம்

குரு பகவானின் அருள் பார்வை கிடைக்க முருகன் கோயிலுக்கு சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குரு பரிகார ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். குரு திசை நடப்பவர்கள், திருமண, குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் தினமும் ‘ஓம்பிம சிவய வசி குரு தேவாய நம’ என்று 108 முறை சொல்லி வரலாம்.

குருவுக்கு உரிய அம்சங்கள்

கிழமை: வியாழன்
தேதிகள்: 3, 12, 21, 30
நட்சத்திரங்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நிறம்: மஞ்சள்
ரத்தினம்: கனக புஷ்பராகம்
தானியம்: கொண்டைக் கடலை
உலோகம்: பொன் (தங்கம்)
ஆடை: தூய மஞ்சள்
ராசி: தனுசு - மீனம்
உச்ச ராசி: கடகம்
நீச்ச ராசி: மகரம்

செவ்வாய் தோஷம்;

கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது. ஆனால் இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம

ஒருவரது ஜனன ஜாதகத்தில் விதி எனப்படும் லக்கினத்திற்கும், மதி எனப்படும் சந்திரனுக்கும் அதாவது ராசிக்கும் சுகம் எனப்படும் சுக்கிரனுக்கும் அந்த ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாயின் இடத்திற்கும் உள்ள உறவைக் கொண்டுதான் செவ்வாயின் தோஷம் எந்த அளவு ஒருவருக்கு வேலை செய்கிறது என்பதை உணரலாம்.

அந்த வகையில் லக்கினம், ராசியில் சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கும் இடத்திற்கு, இரண்டாவது இடம், நான்காவது இடம், ஏழாவது இடம், எட்டாவது இடம் என செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் எனப்படும்.

மேற்கண்ட 2, 4, 7, 8, 12 என ஐந்து இடங்களில் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் என்பது பாமரர்களுக்கும் தெரிய வந்ததால் இன்று ஏழைகளும் சுகமாக வாழ செவ்வாயின் அருள் அவசியம் என்பது புரியும். மேலும் 2, 4, 7, 8, 12-ல் பாபக்கிரகங்கள் இருந்தாலும் இதே நிலைதான். இருந்தாலும் செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகர ராசிகளில் இருந்தால் தோஷம் இல்லை.

மேலும் சூரியன், குரு, சனி ஆகியோருடன் சேர்ந்திருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலே தோஷம் இல்லை. இதே நேரத்தில் செவ்வாய் தோஷ அமைப்பு ஆண் பெண் இரு பாலருக்கும் இருந்தால் தோஷம் இல்லை. மேலும் பல காரணங்கள் தோஷம் இல்லை என்பதை புரிந்து அப்படியும் தோஷம் இருந்தால் அதற்கு எளிய பரிகாரம் உள்ளது.

மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும்.

குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.

சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

2 - இடம் மிதுனம், அல்லது கன்னி ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. தாம்பத்திய, காம வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும்.

பலன் தரும் பரிகாரங்கள்:

துவரை தானம்:

உடைக்காத முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொதி கட்டிக் கொள்ள வேண்டும், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம் இவைகளுடன் கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.

வாழைப்பூத் தானம்:

முழு வாழைப்பூ அதே மரத்தில் காய்த்த பழம், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலை இவைகளை எடுத்துக் கொண்டு இந்த நுனி இலையில் இவைகளை வைத்துத் தானம் வாங்குபவனை நடு வீட்டில் அமரச் செய்து வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் துணி இவைகளுடன் தானம் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களும் திருமணத் தடங்கலைத் தீர்த்து வைக்கும் தானங்கள்.

வழிபாட்டு முறை:

செவ்வாய் தோஷம் ஒரு சிலர் நினைப்பது போல திருமணத் தடங்கலை மட்டும் செய்து போவது அல்ல. பல்வேறு வகையான இடைïறுகளும் இதனால் விளைவதுண்டு.

கோபமான வார்த்தைகளினால் தனக்கு வர வேண்டிய நன்மைகளைத் தானே கெடுத்துக் கொள்வது, கல்யாண வீடுகளில் போன இடங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்கள் பேசப் போனால் தடங்கல் இவராலேயே ஏற்படு வது, இப்படிப் பல கோணங்களில் செவ்வாய் தோஷம் தன்னு டைய குணத்தை வெளிப்படுத்தும்.

இந்த தோஷத்தைத் தன்னிடத்தில் இருந்து விலக்கி கொண்டு விட்டால் இத்தகு தொல்லைகள் வராது. செவ்வாய் தோஷக்காரர்கள் செவ்வாய்க்கிழமையன்று, காலையில் எழுந்ததில் இருந்து 1 மணி நேரம் மௌனம் இருக்க வேண்டும்.

இந்த மௌனம் இருக்க முடியாத படி எத்தனையோ தடங்கல்கள் வரும். தடங்கல்களைத் தோணியாக்கிக் கொண்டு மேலும் அதிலேயே பயணம் செய்யக் கூடாது. தடங்கல்களை எதிர்த்து நின்று மௌனத்தைக் கடைப்பிடிப்பவன் செவ்வாய் தோஷத்தில் இருந்தே விரைவில் விடுபடுவான்.

செவ்வாய் தோஷக் காரர்கள் முருகப் பெருமானையும், வளம் தரும் வயிரவக் கடவுளையும் விடாது வழிபட வேண்டும். காலையில் முருகனையும், இரவில் வயிரவனையும் வழிபடுவது சாலச் சிறந்தது. முருகன் கோலங்கள் பலவாக இருந்தாலும் தண்டபாணியாக விளங்கும் கோலம் செவ்வாய்க்குச் சிறப்பு.

வயிரவ வடிவங்கள் வெகுவாக இருந்தாலும் க்ஷத்ரபாலர் என்ற அவதூத வடிவம் சிறப்பானது. முருகனையும் க்ஷத்ர பாலனையும் அன்றாடம் தோத்திரங்களாலும் அர்ச்ச னைகளாலும் வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார் விஜய்சுவாமிஜி.

பரிகார காலம்:

செவ்வாய்க் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் செய்வது சிறப்பு. பொதுவாகச் செவ்வாய்க் கிழமையிலும் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்வது ஒத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தவிர உள்ள சிறப்பு விதிகளை சுக்குல பக்ஷ பரிகாரத்தில் கூறுவோம்.

பொதுவாகவே செவ்வாய்தோஷம் விசயத்தில் ஜாதகத்தை,நன்றாக ஆராய்ந்து இணப்ப்தே சிற்ப்பாகும்,அப்படி ஆராய்ந்து இணைக்காவிடில் திருமண வாழ்வு பாதிக்கும் என்பது உண்மை.

ஏழரை சனி;



சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. ஜென்ம ராசிக்கு முதல் ராசி, ஜென்ம ராசி(சுயராசி), ஜென்ம ராசிக்கு பின் ராசி ஆகிய மூன்று ராசிகளிலும் சஞ்சரிப்பதை ஏழரைச் சனி என்பார்கள்.

80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர் விருந்தினராகத் தங்கிவிட்டுப்போவார்.

முதல் சுற்று: மங்கு சனி.
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி.
மூன்றாவது சுற்று: அந்திம காலச் சனி(மரணச்சனி)!

இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது! மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்.

சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள். குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள். ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால், அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள்தான் அனுபவிக்க நேரிடும்.அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும்.

பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிபிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும். சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம்.

ஏழரைச் சனியின் முதல் இரண்டரை வருடங்களை விரையச்சனி என்பார்கள். கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். விரையச் சனி காலத்தில் பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால் நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே கழியும்.

அடுத்த இரண்டரை வருடங்களை ஜென்மச் சனி என்பார்கள். அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும் மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.

அடுத்த இரண்டரை வருடங்களை கழிவுச் சனி என்பார்கள். அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும்.

பொங்கு சனியில் (அதாவது இரண்டாவது சுற்றில்) ஜாதகனைச் சனீஷ்வரன் கைதூக்கிவிடுவான். பல கஷ்டமான அனுபவங்களைக் கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.

மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி மேலே அனுப்பி வைத்து விடுவார்..! அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால் அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும், எந்த தசா புத்தியில் அது வரும் என்பதைப் பொறுத்தும் வேறுபடலாம்..! "தசா புத்தி" என்பது என்ன என்பதை விளக்கமாக மற்றொரு பதிவில் தருகிறேன்.
அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும் சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும் கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!

திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு?

பணம் என்பது நம் வாழ்வின் அத்வாசியமான ஒன்றுதான் ஆனால் அதற்க்காக பணமே வாழ்க்கை கிடையாது.நாம் சில நேரங்களில் பணம் இல்லாமல் தடுமாறும் நேரத்தில் நாமே எதிர்பார்க்காமல் பெரிய பணம் நம் கையில் வரும்.

நீண்ட நாட்களாக வராமல் இருந்த நம்முடைய பணமாக இருக்கலாம் அல்லது நம் நண்பர்க:ள் திடிரென்று உதவி செய்வார்கள் அல்லது லாட்டரி,புதையல் கூட கிடைக்கலாம் அதற்கு நம் ஜாதகம் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என பார்ப்போமா?

அஸ்வினி அனுஷம், அவிட்டம் ஆகிய நட்சத்திரம் ஒன்றின் 4-ம் பாதத்தில் செவ்வாய் நிற்க வேண்டும். லக்னம் அல்லது 10-ல் சூரியன் நிற்க வேண்டும். பிறகு செவ்வாயையும் சூரியனையும் சுபரான குரு சந்திரன் பார்த்தால் இந்த அமைப்பு உண்டாகும்.

தனலாப ஸ்தானத்திற்கு 3, 5-ம் இடங்களில் கிரகங்கள் நிற்கக்கூடாது. இந்த அமைப்பு உள்ள ஜாதகர்கள் பல கோடிகளின் அதிபர்களாவர். கடக லக்னத்திற்கு அனுஷம் 4ம் பாதத்தில் செவ்வாய் நிற்க, 10ல் சூரியன் உச்சமாகி சந்திரன் 4-ல் நின்று சூரியனைப் பார்க்க 9-ல் குரு அமர்ந்து செவ்வாயைப் பார்க்க குபேர யோகம் உண்டாகும்.

கும்ப லக்னத்திற்கு அனுஷம் 4-ல் செவ்வாய் நின்று உச்ச சந்திரனால் பார்வையாகி, லக்ன சூரியன் சிம்ம குருவால் பார்வை பெற மிகப்பெரிய குபேர யோகம் வந்து கோடிகளில் புரள்வார்கள். குபேர யோகம் பெற முடியாத ஒரு சில கிரகங்களே மாற்ற மடைந்திருக்கும் ஜாதகர்கள் அதற்கான கிரக யோக வழிபாட்டை கண்டுபிடித்து செய்வதால் நிறைவான யோகம் பெற்று வாழலாம்.

நினைத்தவுடன் ஓடோடி வருபவர்


எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது.

படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார். அதன்பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார்.

இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.

சனியின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள்,அஷ்டமி திதியில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வணங்கினால் துன்பங்கள் விலகி இன்பங்கள் சேரும்.

வீட்டில் செல்வம் செழிக்க..,


1. வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது.
2. வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.
3. வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.
4. வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம் அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.
5. குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வீட்டில் வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் அமர்ந்து செவ்வாய், புதன், கிழக்கே பார்த்து அமர்ந்தும் மற்ற நாட்களில் வடக்கே பார்த்து அமர்ந்தும் படித்தால் படித்தவுடன் மனதில் பதியும் வாய்ப்பு மிக அதிகம்.

அதேபோல் 15 வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

கண் திருஷ்டியை போக்குவது எப்படி?


கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பது அர்த்தம் அதாவது ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுகிறது எனவும் சொல்லலாம்.

சக மனிதர்களை விட நாம் மேன்மை பெறும் நேரம்(புது வீடு கட்டுதல்,புது கார் வாங்குதால் அல்லது ஏதோ ஒன்று)மற்றவர்களின் இயலாமையால் நம் மீது விழும் பொறாமை கலந்த பார்வையே கண் திருஷ்டி அல்ல்து கண்ணேறுதல் ஆகும்.

பரிகாரம் என்பது நம் மீது விழும் ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும்.

வீட்டுக்கு உள்ள திருஷ்டி போக.,
---------------------------------------------------------
*வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைக்கலாம். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை செய்வது நல்லதாகும்.

*தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம்.

*ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும்.

நமக்கும்,வாகனங்களுக்கும்..,
----------------------------------------------------
*திருஷ்டிக்கழிப்பவர் கல் உப்பைக் கையில் வைத்தபடி மூன்று முறை அப்பிரதக்ஷிணமாய் சுற்றி பின் புதரில் போடலாம். ஒருவரும் இதற்குக் கிடைக்கவில்லை என்றால், நமக்கு நாமே செய்துக்கொள்ளலாம்.

*எலும்மிச்சம் பழத்தை வெட்டி, நடுவில் குங்குமம் தடவி இரண்டு கைகளிலும் வைத்துக்கொண்டு நமக்கோ அல்லது புது வாகனத்தின் வலது பக்கமாக மூன்றுதரம் சுழட்டி பின் இடதுப்பக்கமாக மூன்றுதடவை சுழட்டி அந்த எலுமிச்சைப் பழங்களை ஒருவர் காலிலும் படாதபடி எதாவது புதர்ப்பக்கம் வீசிப்போடலாம்.

*உயர்ந்த கட்டடங்களைக் கட்டும்போதும் புது வாகனம் வாங்கினாலும் கண் திருஷ்டி யந்திரம் வைப்பது இன்றியமையாததாகும்.

மகாலட்சுமி அருள் கிடைக்க

*தன்னம்பிக்கை மற்றும் தெய்வ நம்பிக்கை வேண்டும்.

* சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.

* காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.

* வரும் சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாது.

* உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.

* தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.

* செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.

* திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.

* செய்யும் தொழில் உயர்வு, தாழ்வு பார்க்கக்கூடாது.

* லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடையக்கூடாது.

* சுயநலம் அறவே இருக்கக்கூடாது.

மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும்.

பணப்பெட்டி வைக்கும் இடம்;


வாஸ்து என்பது ஒரு நவீன அறிவியல் ஆகும்.இந்த பூமி எண்ணற்ற சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது.நம்முடைய பூமிக்கும்,பிரபஞ்சத்திற்கும் எப்போதும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது.பிரபஞ்சத்தில் எண்ணற்ற கோள்கள் இருந்தாலும்,பூமிக்கு அருகே உள்ள 9 கோள்களின் செயல்பாடுகள் பூமியில் உள்ள மனிதர்களை பாதிக்கக்கூடியவை அதன் அடிப்படையிலேயே ஜோதிட கலை அமைந்த்து.

வீட்டின் தென்மேற்கு திசையில் குபேர திசை என்று சொல்லக்கூடிய வடக்கு திசையை பார்த்து அல்லது நேர் கிழக்கு திசையை பணப்பெட்டியை வைக்க வேண்டும்..அதேபோல் வடகிழக்கு திசையிலும் அமைக்கலாம்.அலுவகத்திலும் இதே முறையை பயன்படுத்தி பணப்பெட்டியை வைக்கலாம்.

மனிதனின் கடைசி நேர ரகசியம்:


ஒருவர் இந்த உலகத்தை விட்டு விடைபெறும்போது அவர் மீண்டும் அந்த குடும்பத்தில் பிறப்பாரா அல்லது நேரடியாக அவரின் ஆத்மா தேவலோகம் போய்விடுமா என எப்படி கண்டுபிடிப்பது!

ஒருவரின் முற் பிறவி ரகசியங்களை ஜாதகத்தை வைத்து கண்டு பிடித்தாலும்,மறு பிறவி ரகசியத்தை அவர் உலகத்தைவிட்டு விடைபெறும் நட்சத்திரத்தை வைத்து கண்டுபிடிக்கலாம்.

நீங்களே பஞ்சாங்கத்தில் கடைசி பக்கம் பார்த்தால் அதில் தனிஷ்டா பஞ்சமி என இருக்கும்.

ஒருவர் பூமியை விட்டு செல்லும் போது அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ரோஹிணிய ,கார்த்திகை, உத்திரம்,
மிருகசீருஷம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் விடைபெற்றால் அதை அடைப்பு என்பார்கள்!

அடைப்பு என்றால் அந்த ஆத்மா தேவலோகம் செல்லாமல் மீண்டும் பிறப்பெடுக்க ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கு சில மாதங்கள் கணக்கில் காத்துக்கொண்டியிருக்கும்.அவர்கள் தங்கள் குடும்பத்திலே மீண்டும் பிறப்பார்கள் இதுதான் முக்கியமான ரகசியமாகும்.

சில பேர் இந்த நட்சத்திரங்களில் விடை பெற்றவர்களை ஆறுமாதம்,மூனு மாதம் பேய்,பிசாசு என முட்டாள்தனமாக கூறுவார்கள் இதல்லாம் மூடநம்பிக்கையாகும்.

பேய்,பிசாசு உண்மையன்றால் எதிரிகளால் உயிரிழந்த வீரர்களே பேயாக எதிரிகளை அழித்திருக்கலாம் அல்லவா!

இனி யாரும் தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் விடபெற்றால் நல்லதுக்கே என நினைத்து கொள்ளுங்கள்!

ஔவையார்_அருளிய #ஸ்ரீ_விநாயகர் அகவல்

குரு அருள்
#ஔவையார்_அருளிய

#ஸ்ரீ_விநாயகர் அகவல்

வாழ்வை வளமாக்கும் விநாயகர் அகவலை துன்பங்களில் இருந்து விடுபட
#தினமும்சொல்லிவரலாம்.

#ஔவையார்_அருளிய <>விநாயகர் அகவல்<>

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில்

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரை கழல் சரணே!.

ஸ்ரீ மகா கணபதியே துணை

குருவே சரணம் சரணம் சரணம்

கொடிய தசைகள்;

ஓம் சரவணபவ!

கொடிய தசைகள்;

மேஷம் - புதன், சனி
ரிஷபம் - குரு,
மிதுனம் - செவ்வாய் , குரு
கடகம் - சனி, புதன்
சிம்மம் - சனி
கன்னி - செவ்வாய் , குரு
துலாம் - குரு
விருச்சகம் - புதன்,
தனுசு - சுக்கிரன் , புதன்
மகரம் - சூரியன், சந்திரன்
கும்பம் - சந்திரன் ,
மீனம் - சுக்கிரன் , புதன்

இந்த தசைகளே மிகவும் கெடுதலை தரும்,

Sunday, August 18, 2019

27 நட்சத்திரங்களின் தமிழ் பெயர்கள் :


1) அசுவினி = பரி, புரவி, வாசி, ஐப்பசி, இரலை, புரவி, ஏறு, யாழ், தலை நாள், மருத்து நாள், சென் பூதம், குதிரை

2) பரணி = காடுகிழவோன், தாழி, அடுப்பு, முக்கூட்டு, வேழம், சோறு, பகடு, பகலவன், தாசி

3) கார்த்திகை = அறுமீன், அழல், ஆரல், அளக்கர், எரி, அங்கி, ஆல், ஆறாமீன், அறுவாய், நாவிதன், அளகு, இறால், நாடன், வாணன், தழல்

4) ரோகிணி = பண்டி, மாட்டு வண்டி, உருள், வையம், ஊறல், பிரமநாள், சதி, அயன் நாள், தேர், விமானம், சகடம்

5) மிருகசீரிடம் = மான் தலை, மாழ்கு, மும்மீன், நரிப்புறம், பாலை வெய்யோன்.

6) திருவாதிரை = செங்கை, யாழ், சடை, இறைநாள்

7) புனர்பூசம் = கழை, கரும்பு, ஆவனம், ஏரி, அதிதி நாள், பிண்டி, மூங்கில், பாலை

8) பூசம் = கொடிறு, வண்டு, காற்குளம், வியாழன் நாள் (புஷ்ய, திஷ்ய என்ற பெயர்கள் உண்டு), அண்டம், குருவின் நாள்

9) ஆயில்யம் (ஆஸ்லேஷா) = அரவு நாள், கௌவை, பாம்பு

10) மகம் = வேள்வி, வேட்டுவன், கொடுங்கம், வாய்க்கால், மாசி, முதலில் வரும் சனி, பிதிர் நாள், எழுவாயெழுஞ்சனி

11) பூரம் (பூர்வ பல்குனி) = எலி, கணை, இடை எழும் சனி, துர்க்கை, பகவதி, நாவிதன்

12) உத்தரம் = மானேறு, கதிர்நாள், கடை எழும் சனி, பாற்குனி, மாரி நாள்

13) அத்தம் (ஹஸ்த) = ஐவிரல், கைம் மீன் , களிறு காமரம், அங்கிநாள், கௌத்துவம், நவ்வி, கயினி

14) சித்திரை =நெய்ம்மீன், பயறு, அறுவை, நடுநாள், ஆடை, தூசு, சுவை, தச்சன், துவட்டா நாள், நேர்வான்

15) சுவாதி = விளக்கு, வீழ்க்கை, வெறுநுகம், மரக்கால், காற்றினாள், முத்து, பவள, சோதி, அனில், காற்று

16) விசாகம் = முறம், முறில், சுளகு, காற்றினாள், வைகாசி, அனில நாள், சேட்டை

17) அனுஷம் = பனை, புள்தேள், நட்புநாள், புல், தாளி, பெண்ணை, தேள், போந்தை, மித்திர நாள்

18) கேட்டை(ஜேஷ்டா) = தழல், துளங்கொளி, வல்லாரை, இந்திரன் நாள், சேட்டை, வேதி, எரி, பின்று

19) மூலம் = அன்றில், வில், குருகு, கொக்கு, தேட்கடை, சிலை, ஆனி, அசுர நாள்

20) பூராடம் (பூர்வாஷாட) = உடைகுளம், முற்குளம், நீர்நாள்

21) உத்திராடம் = ஆடி, கடைக் குளம், ஆனி, விச்சுவ நாள்

22) திருவோணம் = முக்கோல், உலக்கை, மாயோன் நாள், முக்கோல், சிரவணம், சோணை, வயிரம்

23) அவிட்டம் (தனிஷ்டா) = பறவை, காக்கை, வசுக்கள் நாள், புள், ஆவணி

24) சதயம் (சதபிஷக்) = நீர்நாள், செக்கு, குன்று, போர், சுண்டன், வருணன் நாள்

25) பூரட்டாதி = நாழி, முக்கொழுங்கோல் (பூர்வ ப்ரோஸ்தபத), புரட்டை

26) உத்திரட்டாதி = மன்னன், அறிவன் நாள், பிற்கொழுங்கோல்

27) ரேவதி = இரவி நாள், கலம், தோணி, நாவாய், தொழு, பஃறி, ஆ நாள், கடை நாள், சூலம், பெரு நாள், பூடா நாள், கடை மீன்



27 நட்சத்திரங்களின்ஆங்கிலப் பெயர்கள் :

1) Ashwini –Alpha, Beta –Aries அஸ்வினி

2) Bharani – Taurus பரணி

3) Krittika – Pleiades கார்த்திகை

4) Rohini – Aldebaran Hyades, Alpha, Theta, Gama, Delta and Epsilon Taurus ரோஹிணி

5) Mrigashirsha – Lambda, , Orion மிருகசீர்ஷம்

6) Aardraa –Betelgeaux – Alpha Orion திரு ஆதிரை

7) Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively புனர் பூசம்

8) Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம்

9) Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra ஆயில்யம்

10) Maagha – Regulus, Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis மகம்

11) Poorva Phalkuni – Delta and Theta Leo பூரம்

12) Utra Phalkuni – Beta and Leo உத்தரம்

13) Hasta – Delta, Gama, Eta, Virgo ஹஸ்தம்

14) Chitraa – Spica, Alpha Virgo சித்திரை

15) Swaati – Arcturus – Alpha Bootes ஸ்வாதி

16) Vishaakha – Alpha, Beta etc Libra விசாகம்

17) Anuraadha – Beta, Delta, Pi –Scorpia அனுஷம்

18) Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio கேட்டை

19) Mula – Scorpio, tail stars மூலம்

20) Poorvaashadaa – Delta and Epsilon Sagittarius பூராடம்

21) Uttaraashaada – Zeta and Omicron Sagittarius உத்திராடம்

22) Shraavanaa – Altair – Alpha Aquila திரு ஓணம்

23) Dhanishtha – Delphinus அவிட்டம்

24) Shatabhisak – Lambda Aquarius சதயம்

25) Poorva Bhaadrapada – Alpha and Beta Pegasus பூரட்டாதி

26) Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda உத்திரட்டாதி

27) Revathi – Zeta Piscum ரேவதி

Saturday, August 17, 2019

உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய பகவானை காலை பிரம்ம முகூர்த்தத்தில் சூரியனை வழிபட்டால் அனைத்து நலன்களும் நாம் பெறலாம்



சூரியபகவானின் நூற்றி எட்டு போற்றிகளை இப்போது நாம் சூரிய பகவானை மனதில் நிலைநிறுத்தி நாம் வணங்குவோம்

சூரிய பகவானின் 108 போற்றிகள்

1. ஓம் அக்னி பகவானே போற்றி
2 ஓம் அதிதிபுத்திரனே போற்றி
3 ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
4. ஓம் அருணன் சோதரனே போற்றி
5. ஓம் அழகு வடிவானவனே போற்றி
6. ஓம் அறிதற்கு இயலாதவனே போற்றி
7. ஓம் அனைத்திற்கும் மூலம் ஆனவனே போற்றி
8. ஓம் ஆண் கிரகமே போற்றி
9. ஓம் ஆதி வார நாதனே போற்றி போற்றி

10. ஓம் ஆத்ம காரகனே போற்றி
11. ஓம் ஆன்மாவே போற்றி
12. ஓம் ஆதித்ய ஹிருதயமே போற்றி
13. ஓம் ஆதவனே போற்றி
14. ஓம் ஆதி மூலமே போற்றி
15. ஓம் ஆதி சிவனே போற்றி
16 ஓம் இருளை நீக்குவாய் போற்றி
17. ஓம் இயக்க சக்தியே போற்றி
18. ஓம் இணையிலா ஒளியே போற்றி போற்றி

19. ஓம் ஈசனின் வலக் கண்ணே போற்றி
20. ஓம் ஈடில்லா ஒளி உடையாய் போற்றி
21. ஓம் உக்கிரக நாதனே போற்றி
22. ஓம் உஷா நாதனே போற்றி
23. ஓம் உவமை பொருள் இல்லா ஒளியே போற்றி
24. ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
25. ஓம் உத்திர நாதனே போற்றி
26. ஓம் உத்திராட நாதனே போற்றி
27. ஓம் உயிரே கதிரவா போற்றி போற்றி

28. ஓம் எருக்குச் சமித்தனே போற்றி
29. ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
30. ஓம் எண் எழுத்து மந்திரனே போற்றி
32. ஓம் ஏழு தேர் கொண்டவனே போற்றி
33. ஓம் எல்லோரையும் காப்பவனே போற்றி
34. ஓம் ஏற்றம் தரும் நாயகனே போற்றி
35. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
36. ஓம் ஓய்விலா சூரியனே போற்றி போற்றி

37. ஓம் கதிரவனே போற்றி
38. ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
39. உன் கவலைகள் போக்குவாய் போற்றி
40. ஓம் கமலம் இருப்பவனே போற்றி
41. ஓம் கர்ணனின் தந்தையே போற்றி
42. ஓம் கண்ணின் காவலே போற்றி
43. ஓம் கனலே போற்றி
44. ஓம் கடலில் தோன்று பவனே போற்றி
45. ஓம் காசியப்பர் மைந்தனே போற்றி போற்றி

46. ஓம் காயத்திரி தேவனே போற்றி
47. ஓம் காக்கும் கடவுளே போற்றி
48. ஓம் கார்ப்புச் சுவை யானே போற்றி
49. ஓம் காலக்கணக்கே போற்றி
50. ஓம் காலை மாலை கனிவோனே போற்றி
51. ஓம் கிழக்கு திசையில் உதிப்பவனே போற்றி
52. ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
53. ஓம் கிரக தலைவனே போற்றி
54. ஓம் கிருபாகரனே போற்றி போற்றி

55. ஓம் குந்திக்கு அருளியவா போற்றி
56. ஓம் குணங்கள் அருள்வாய் போற்றி
57. ஓம் குறைகள் தீர்ப்பாய் போற்றி
58. ஓம் கோதுமை பிரியனே போற்றி
59. ஓம் கோனார்க்கில் (ஒரிசாவில்) அருள்பவனே போற்றி
60. ஓம் சனீஸ்வரரின் தந்தையே போற்றி
61. ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
62. ஓம் சாட்சியாய் இருப்பவனே போற்றி
63. ஓம் சாட்சாத் எங்கள் சூரிய பகவானே போற்றி போற்றி.

64. ஓம் சிம்மக் கொடியோனே போற்றி
65. ஓம் சிம்ம ராசி அதிபதியே போற்றி
66. ஓம் சிரஞ்சீவி நாதனே போற்றி
67. ஓம் சுயமாய் பிரகாசிப்பவனே போற்றி
68. ஓம் சூரிய நமஸ்கார பிரியனே போற்றி
69. ஓம் சூரியனார் கோயில் சூரிய பகவானே போற்றி
70. ஓம் சிவப்பு நிறமுடையவனே போற்றி
71. ஓம் செம் மேனியனே போற்றி
72. ஓம் செந்தாமரை மலர் ஏந்தியவனே போற்றி போற்றி.

73. ஓம் செம்மலர் பிரியோனே போற்றி
74. ஓம் சூலாயுதனே போற்றி
75. ஓம் செந்நிறக் குடையோனே போற்றி
76. ஓம் சோழர் மூதாதையரே போற்றி
77. ஓம் சுடர் ஒளி நாயகனே போற்றி
78. ஓம் ஞாயிறே போற்றி
79. ஓம் ஞாலக் காவலே போற்றி
80. ஓம் ஞால முதல்வனே போற்றி
81. ஓம் சௌர மதத் தலைவனே போற்றி போற்றி

82. ஓம் தனிக் கோயில் கொண்ட சூரிய பகவானே போற்றி
83. ஓம் தாமிர உலோகனே போற்றி
84. ஓம் தனிப்பெரும் சோதியே போற்றி
85. ஓம் தன்னிகரில்லா ஒளியுடையாய் போற்றி
86 ஓம் நடுநாயகமாய் திகழ்பவனே போற்றி
87. ஓம் நலமே அளிப்பவனே போற்றி
88. ஓம் நளாயினிக்கு அருளியவா போற்றி
89. ஓம் நல்லுலகத் தந்தையே போற்றி
90. ஓம் நித்திய சூரிய பெருமானே போற்றி போற்றி

91. ஓம் பகலவனே போற்றி
92. ஓம் பரிதியே போற்றி
93. ஓம் பரம் ஜோதியே போற்றி
94. ஓம் பரீக்ஷித்துக்கு அருளியவா போற்றி
95 ஓம் புகழ் அளிப்பவனே போற்றி
96. ஓம் பதவி அளிப்பவனே போற்றி
97. ஓம் பார்க்கும் தந்தை வடிவே போற்றி
98.ஓம் புத்தி அளிப்பவனே போற்றி
99. ஓம் முழுமுதற் பொருளே சூரிய பகவானே போற்றி போற்றி

100. ஓம் முப்பது தினத்தில் ராசி கடப்பவனே போற்றி
101. ஓம் பன்னிரு சூரியர்களே போற்றி.
102. ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
103. ஓம் ரவிகுல தலைவனே போற்றி
104. ஓம் ருத்ரன் ப்ரத்யாதி தேவதையே போற்றி
105. ஓம் விடிய செய்பவனே போற்றி
106. ஓம் சித்திரையில் உச்சம் பெறுபவனே போற்றி
107. ஓம் சிவநாதனே போற்றி
108. ஓம் சிவ சூரிய நாராயண பெருமாளே போற்றி போற்றி.

ஆடுதுறை சிவ சூரிய பெருமாள் திருவடிகளே சரணம் சரணம்.

கோனார் சிவ சூரிய பெருமாள் திருவடிகளே சரணம் சரணம்.

ஓம் நமசிவாய.
ஓம் நமோ நாராயணாய.

திருச்சிற்றம்பலம்.

கலங்காதே மனமே.


தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் "பிரஹ்லாதன்" மனம் கலங்கவில்லை..

சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாக்கிய போதும் "ராஜா அரிச்சந்திரன்" மனம் கலங்கவில்லை...

பெற்ற பிள்ளையே கேவலப்படுத்திய போதிலும் "கைகேயி" மனம் கலங்கவில்லை...

உறவினர்களே சபை நடுவே அசிங்கப் படுத்திய போதும் "விதுரர்" மனம் கலங்கவில்லை.

அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும்
"பீஷ்மர்" மனம் கலங்கவில்லை.

இளம் விதவையான சமயத்திலும் "குந்திதேவி" மனம் கலங்கவில்லை...

தரித்ரனாக வாழ்ந்த சமயத்திலும் "குசேலர்"
மனம் கலங்கவில்லை.

ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும்
"கூர்மதாஸர்" மனம் கலங்கவில்லை...

பிறவிக் குருடனாக இருந்தபோதிலும்
"சூர்தாஸர்" மனம் கலங்கவில்லை...

மனைவி அவமானப்படுத்திய போதிலும் சந்த் "துகாராம்" மனம் கலங்கவில்லை...

கணவன் கஷ்டப்படுத்திய போதும்
"குணவதி" பாய் மனம் கலங்கவில்லை...

இருகைகளையும் வெட்டிய நிலையிலும்
"சாருகாதாஸர்" மனம் கலங்கவில்லை...

கைகால்களை வெட்டிப் பாழுங்கிணற்றில் தள்ளியபோதும் "ஜயதேவர்" மனம் கலங்கவில்லை...

மஹா பாபியினிடத்தில் வேலை செய்த போதும் "சஞ்சயன்" மனம் கலங்கவில்லை...

பெற்ற பிள்ளையை பறிகொடுத்த போதும்
"பூந்தானம்" மனம் கலங்கவில்லை...

கூடப்பிறந்த சகோதரனே படாதபாடு படுத்திய போதும் "தியாகராஜர்" மனம் கலங்கவில்லை.

நரசிம்மர் சன்னிதியில் விஷ தீர்த்தம் தந்த போதும் "மஹாராஜா ஸ்வாதித் திருநாள்" மனம் கலங்கவில்லை...

சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும் "கூரத்தாழ்வான்" மனம் கலங்கவில்லை.

எப்படி முடிந்தது இவர்களால்..?

அந்த ரகசியம்...
"""""""""""""""""""'""""

தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்.
கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி? ஆழ்ந்த நம்பிக்கை...

அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?
"""""""""""""""""""""""""""""""""""""""""""""

முதல் வழி... (சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும்
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்.

இரண்டாம் வழி...(சுய அறிவு)

மன அமைதியுடன், நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து, அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின், மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக. தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்.

அந்த பிரார்த்தனைகள்...
"""""""""""""""""""""""""""""""""""""
மந்திரமாக இருக்கலாம். கீர்த்தனைகளாக இருக்கலாம்...

மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் " அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..." இருக்கலாம்.

இவற்றை மாறாமல் கடைபிடித்தால். வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடத்தாலும், எதை இழந்தாலும்,
"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."

அந்த ஆத்ம பலம, எதையும் தாங்கும் சக்தி...

ஆதலால் ...
விடாது நாம ஜபம் செய்வோம்...
திடமாக பகவானை வழிபடுவோம்...
அன்பே கடவுள் என போற்றுவோம்...
உறுதியுடன் உண்மையாக இருப்போம்...

இதனால் பெற்றிடுவோம், மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்...

Friday, August 16, 2019

செல்வ_செழிப்போடு_வாழ_பின்பற்ற #வேண்டியவைகள்



1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.
2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்
3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக் கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண் களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும்.
(இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.)
6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால்,தயிர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடி விடும்.
8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர் களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
9. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.
11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும்நீரில் கலந்துகுளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். இதை 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு,பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.
18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.
20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதி பதி ஆகலாம்.
.

நரசிம்ம பிரபத்தி படித்தால் துன்பங்கள் பறந்தோடும் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்

.

நரசிம்ம பிரபத்தி படித்தால் துன்பங்கள் பறந்தோடும்

மாதா நரசிம்ஹா, பிதா நரசிம்ஹா

ப்(4)ராதா நரசிம்ஹா ஸகா நரசிம்ஹா

வித்(3)யா நரசிம்ஹா, த்(3)ரவிணம் நரசிம்ஹா

ஸ்வாமி நரசிம்ஹா ஸகலம் நரசிம்ஹா

இதோ நரசிம்ஹா பரதோ நரசிம்ஹா,

யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹா,

நரசிம்ஹா தே(3)வாத் பரோ ந கஸ்சித்

தஸ்மான் நரசிம்ஹா சரணம் ப்ரபத்(3)யே

சமஸ்கிருதத்தில் சொல்ல முடியாதவர்கள், இந்த தமிழாக்கத்தைப் படிக்கவும்.

நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.

சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!

அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!

எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!

இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே!

எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!

நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை

அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.

Meaning:

Mother and father is Narasimha

Brother and friend is Narasimha

Knowledge and wealth is Narasimha

My Lord and my Everything is Narasimha.

Narasimha in this world, Narasimha in the other

Wherever I go, there is Narasimha

Narasimha is the only Lord,there is none other

So, I seek refuge in you, Narasimha



கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.

நரசிம்ம பிரபத்தி படித்தால் துன்பங்கள் பறந்தோடும்

இன்பத்தை கண்டால் மகிழ்ச்சியடையும் மனம், துன்பத்தைக் கண்டால் வாடி விடுகிறது. மனிதனுக்கு ஏன் துன்பம் உண்டாகிறது என்பது குறித்து, பாரததேசத்தை ஆண்ட போஜ மகாராஜன் தனது நீதி நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதில்,""ஒருவன் தவறாமல் முன்னோர் வழிபாடு செய்யாவிட்டால் அவனை துன்பம் விரட்டும். இது தவிர, தெய்வ நிந்தனை செய்வது, ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவியைப் பிரிப்பது, கோள் சொல்லி குடும்ப ஒற்றுமையைக் குலைப்பது, வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவது போன்ற பாவங்களை எந்தப் பிறவியில் செய்திருந்தாலும், அது விரட்டி வந்து துன்பத்தைத் தரும்,'' என்று சொல்லியிருக்கிறார்.



ஆனால், பாவம் செய்யாத மனிதர் யார் இருக்கிறார்கள்? ஏதோ, ஒரு பாவத்தை செய்து தொலைத்ததால் தான், இப்போது கஷ்டம் நம்மை வாட்டுகிறது. இவ்வாறு, அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களால், கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். "பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை' என்ற முழுமையான நம்பிக்கையுடன், நரசிம்மரின் திருவடிகளில் சரணாகதி அடைவது, தண்டனையில் இருந்து விடுதலை தரும்.

தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் அவர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள்.

தினமும் நீராடிய பின், "நரசிம்ம பிரபத்தி' ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள்.

அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது.

48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும். கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.

பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்.

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்

தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்.* இது எப்படி சாத்தியமாகும் என்பதை காண்போம்.

🔆🔆🔆🔆🔆🔆
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த முதுமொழி தமிழ்மொழி.
🔰🔰🔰🔰🔰🔰🔰
இதோ சித்தர்கள் தந்த தமிழ்மொழியின் சிறப்புகளில் ஒன்றைக் காண்போம்:-
💮💮💮💮💮
உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில்,
⚜⚜⚜⚜⚜⚜⚜
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, X ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள்,
🤘🤘🤘🤘🤘🤘🤘
நாழிகை ஒன்றுக்கு 360 (15X24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது.
💹💹💹💹💹
இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது
💮💮💮💮💮💮
ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு,ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது.
☮☮☮☮☮
இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது.
💟💟💟💟💟💟
இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன.
⚜⚜⚜⚜⚜⚜
மூச்சை இப்படி 21,600 வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம்.
🔰🔰🔰🔰🔰🔰
மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும்.
✳✳✳✳✳✳
மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!
❇❇❇❇❇❇
1 நிமிடத்திற்கு 15 மூச்சும்,
1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்;
1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது.
💗💗💗💗💗
உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும்.
🧡🧡🧡🧡💛💛
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும்.
💛💛💛💛💛💛
ஆனால், உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன.
💚💚💚💚💚💚
இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.
💜💜💜💜💜
தமிழ் வயிற்று மொழி அல்ல; நீடித்த ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாழ்க்கை நெறிமொழி .
💜💜💜💜💜💜
ஆகவே, தமிழ் மொழியை வாழ்க்கையை வாழும் மொழியாகப் பார்த்துக் கொண்டால், நம்மை விட்டு போகாமல் காத்துக் கொண்டால், அதுவே போதுமானது.
❤❤❤❤❤❤🧡
அப்போது தமிழ் வாழும். தமிழர்களும் வாழ்வோம்!
❤❤❤❤❤❤
தமிழ் என்றும் நிலைத்து இருக்கும். தமிழ் அழிவில்லாதது! அழிக்க முடியாதது.

அருமை ஐயா திரு. Svd Bala அவர்களின் பதிவு.

Thursday, August 15, 2019

பிஸ்கட்_சாப்பிடாதீர்கள்....!! #எச்சரிக்கிறார்கள்_மருத்துவர்கள்...


பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது.

பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில் பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது. 'நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது' என்ற அறிவிப்போடு விற்பனைக்கு வரும் பிஸ்கட்டுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

இப்படி, நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா?

#நிச்சயம்_சாப்பிடக்கூடாது' என்கிறார்கள்
ஊட்டச்சத்து நிபுணர்கள்...

'இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை எல்லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது.

சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர்.

உண்மையில், பிஸ்கட் என்பது கழுத்தைச் சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு என்பதைப் பலர் அறிவதில்லை. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப் படுகிறது.

பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன.

பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (#Hydrogenated_Fat) சேர்க்கப்படும். இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (#TransFat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.

பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச்சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.

`லோ இன் கலோரிஸ்' (Low in Calories) என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டை லோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.

பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

'கட்டாயம் பிஸ்கட்டைத் தவிர்க்க அறிவுறுத்தப் படுகிறவர்கள் தவிர மற்றவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பிஸ்கட் சாப்பிடலாம். க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றோ, இரண்டோ போதும். இது சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பொருந்தும்'' என்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் வீட்டிலேயே பிஸ்கட் செய்து சாப்பிடுவது தான் சிறந்த தீர்வு. அதையுமே அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்றும் அறிவுறுத்துகிறார்.

#குழந்தைகளுக்கு_பிஸ்கட்_கொடுப்பதுசரியா?
-குழந்தைகள்நல சிறப்பு மருத்துவர்.

'பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவது தான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது.

பெரும்பாலானவர்கள், குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகை பிஸ்கட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன.

இவையாவும் செயற்கை ஃப்ளேவர்கள். அதேபோல, க்ரீம் பிஸ்கட்டுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். பெரியவர்களே வெள்ளைச் சர்க்கரை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் பட்டு வரும் நேரத்தில், வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதென்பது, பல்வேறு பிரச்னைகளுக்குத் திறவுகோலாக அமையும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, காலை பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்பும் பெற்றோரைப் பார்க்க முடிகிறது.

இதனால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும்.

பிரேக்கில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும். மாலை நேரத்தில் பிஸ்கட் சாப்பிடுவது, அவர்களை மந்தப்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.'...

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நவரத்னமாலிகா ஸ்தோத்திரம் வாழ்த்துக்கள் ! ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி திருவடிகளே சரணம்



தட்சிணாமூர்த்தி நவரத்னமாலிகா ஸ்தோத்திரம்

1. மூலேவடஸ்ய முனிபுங்கவ ஸேவ்யமானம்

முத்ராவிசேஷ முகுளீக்ருத பாணிபத்மம்

மந்தஸ்மிதம் மதுரவேஷ முதாரமாத்யம்

தேஜஸ்ததஸ்து ஹ்ருதிமே தருணேந்து சூடம்

2. சாந்தம் சாரத சந்த்ர காந்திதவளம்

சந்த்ராபிராமானனம்

சந்த்ரார்கோபம காந்தி குண்டலதரம்

சந்த்ராவதாதாம் சுகம்

வீணாபுஸ்தகமக்ஷஸூத்ரவலயம்

வ்யாக்யான முதராம் கரை:

பிப்ராணம் கலேயே ஹ்ருதா மம ஸதா

சாஸ்தாரமிஷ்டரார்த்ததம்.

3. கர்பூரகாத்ரமரவிந்த தளாயதாக்ஷம்

கர்பூரஸீதளஹ்ருதம் கருணாவிலாஸம்

சந்த்ரார்த்தசேகர மனந்தகுணாபிராமம்

இந்த்ராதிஸேவ்ய பதபங்கஜமீசமீடே.

4. த்யுத்ரோரத ஸ்வர்ணமயாஸனஸ்தம்

முத்ரோல்லஸத்பாஹுமுதாரகாயம்

ஸத்ரோஹிணிநாத களாவதம்ஸம்

பத்ரோதிதம் கஞ்சன சிந்தயாம.

5. உத்யத்பாஸ்கர ஸன்னிபம் த்ரிணயனம்

ச்வேதாங்கராகப்ரபம்

பாலம் மௌஞ்சிதரம் ப்ரஸன்னவதனம்

ந்யக்ரோதமூலேஸ்திதம்

பிங்காக்ஷம் ம்ருகசாபகஸ்திதிகரம்

ஸுப்ரஹ்ம ஸுத்ராக்ருதிம்

பக்தா நாமபயப்ரதம் பயஹரம்

ஸ்ரீதக்ஷிணாமூர்த்திகம்.

6. ஸ்ரீகாந்தத்ருஹிணோபமன்யு தபன

ஸ்கந்தேந்த்ர நந்த்யாதய;

ப்ராகீனா குரவோபியஸ்ய

கருணாலேசாத்கதாகௌரவம்

தம் சர்வாதிகுரும் மனோக்ஞவபுஷம்

மந்தஸ்மிதாலங்க்ருதம்

7. சின்முத்ராக்ருதி முக்தாபாணி நளினம்

சித்தே ஸிவம குர்மஹே.

கபர்தினம் சந்த்ரகளாவதம்ஸம்

த்ரிணேத்ரமிந்துப்ரதிமானநோஜ்வலம்

சதுர்புஜம் க்ஞானதமக்ஷüத்ர புஸ்தாக்னி

ஹஸ்தம் ஹ்ருதிபாவயேச்சிவம்.

8. வாமோரூபரிஸம்ஸ்திதாம் கிரிஸுதா

மன்யோன்யமாலிங்கிதாம்

ச்யாமாமுத்பலதாரிணீம்

சசிநிபாஞ்சாலோகயந்தம் சிவம்

ஆச்லிஷ்டனே கரேண புஸ்தகமதோ

கும்பம்ஸுதாபூரிதம்

முத்ராம் க்ஞானமயீம் ததானமபரை:

9. முக்தாக்ஷமாலாம்பஜே.

வடதருநிகடநிவாஸம் படுதர

விக்ஞான முத்ரிதகராப்ஜம்

கஞ்சளதேசிகமாத்யம்

கைவல்யாநந்த கந்தளம வந்தே.

தட்சிணாமூர்த்தி நவரத்னமாலிகா ஸ்தோத்திரம்,

! வாழ்த்துக்கள் !

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி திருவடிகளே சரணம்

ஆவணி அவிட்டத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரமும் அதன் பலன்களும்...💐

💐

💐ஆவணி அவிட்டத்தின் போது சொல்ல்ப்படும் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கம், பலன்களை இங்கு பார்ப்போம்.


💐ஆவணி அவிட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமி அன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.
ஆவணி அவிட்ட தினத்தில் பூணல் மாற்றும் முக்கிய நிகழ்வு கடைப்பிடிக்கப்படுகின்றது. உபநயனம் செய்துகொண்ட பிராமணர்கள் ஆடி அல்லது ஆவணி அவிட்ட நட்சத்திரத்தினோடு கூடிய பெளர்ணமி நாளில் கடைப்பிடிக்கப்படும் வழிபாடாகும். மேலும் ரிக், யசுர்வேதிகள் கொண்டாடும் நாளாகும். விநாயகர் சதூர்த்தி தினத்தில் சாம வேதிகள் கொண்டாடுவார்கள்.

💐பொதுவாக பிராமணர்கள் 8 வயதான உடன் பூணல் அணிவது வழக்கம், சிலர் 5 வயதில் கூட அணிவிக்கின்றனர்.
இந்த பூணல் மாற்று நிகழ்வின் போது காயத்திரி மந்திரம் கூறுவது வழக்கம். காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் அதன் பயன்கள் குறித்து பார்போம்.

💐ஆவணி அவிட்டம் விரதம் கடைப்பிடிக்கும் முறைகள் மற்றும் பலன்கள்...
காயத்திரி மந்திரம்:
ஓம் பூர் புவஸ்ஸூவதத் சவிதுர்வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ யோ ந: ப்ரசோதயாத்

💐காயத்ரி மந்திரத்தின் விளக்கம்
பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று லோகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்தியவரை நாங்கள் தியானிக்கின்றோம்.
அந்த பரம்பொருள், நாங்கள் மேலான உண்மையை உணரும் அறிவை ஊக்குவிக்கட்டும்.
இந்த மந்திரம், ‘காயத்ரி’ எனும் ஒலியின் அளவைக் கொண்டு உருவானதால் இந்த மந்திரத்திற்கு “காயத்திரி மந்திரம்” என கூறப்படுகிறது.

💐இந்த காயத்திரி மந்திரம் மூல மந்திரமாக பார்க்கப்படுகின்றது. அதே போல் ஒவ்வொரு கடவுளுக்கும், அவரை தியானித்து, வணங்கும் பொருட்டு தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளன.

💐காயத்திரி மந்திரத்தின் பொருளை தான் பாரதியார் தனது பாஞ்சாலி சபதம் பாடல் எண் 153ல் பாடியுள்ளார்.

💐செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்
அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக
இப்படி பாரதியார் பாடியுள்ளார்.

💐காயத்ரி மந்திர பலன்கள்:

காயத்ரி மந்திரம் தினமும் உச்சரிப்பதால் உடல் மற்றும் உள்ளம் பலப்படுகின்றது.

💐காயத்திரி என்றால் ஜெபிப்பவனை காப்பாற்றுவது என்று பொருள். அதனால் இதை தினமும் சொல்லி வந்தால் அவர் இறைவனி அருளால் காப்பாற்றப்படுவார்.

சித்தர்களின் பரிசு படித்ததில்!!! தொப்புளில் எண்ணை போடுங்கள்!


நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.

காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

முழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

அவசியம் பகிருங்கள்.
குறிப்பு :
:D நீங்கள் லைக் போடுவதைவிட பகிர்ந்தால் அனைவரும் பயனடையக்கூடும்.....

தருமரை விட #கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?

#அர்ஜுனன் ஒருநாள்.. கிருஷ்ணரிடம் கேட்டான்.....?

#தருமரை விட #கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?

இரண்டு பேருமே எதையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர்கள்தானே...?

கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ் ?”

சரி, என்னுடன் வா, காட்டுகிறேன் என்று கூறி அர்ஜுனனை அழைத்துச் சென்றார் கிருஷ்ணன்.

இருவரும் பிராமணர்களைப் போல வேடமிட்டுக்கொண்டு தருமரின் அவைக்குச் சென்றார்கள்.

யாகம் நடத்த சந்தனக் கட்டைகள் வேண்டும் என்றார்கள்.

மன்னர் தருமர் உடனே சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு வருமாறு தன் ஆட்களை நாடு முழுவதும் அனுப்பினார்.

ஆனால் அப்போது மழைக்காலம். கொண்டு வந்த மரங்கள் எல்லாம் ஈரமாகி இருந்தன.

அவற்றைக்கொண்டு யாகம் நடத்த முடியாது.

இருவரும் கர்ணனிடம் சென்று அதே கோரிக்கையை வைத்தார்கள்.

கர்ணன் யோசித்தான். “அடாடா... இது மழைக்காலம். இந்த மழைக்காலத்தில் காய்ந்த கட்டைகள் கிடைக்காது. அதனால் என்ன... கொஞ்சம் பொறுங்கள்” என்றான்.

கோடரியை எடுத்து வந்தான்.

மாளிகையின் கதவுகளும் சன்னல்களும் சந்தன மரத்தால் செய்யப்பட்டவை.

கர்ணன் அவற்றை வெட்டி எடுத்துக் கொடுத்தான்.

இருவரும் திரும்பி வரும்போது கிருஷ்ணர் கேட்டார்.

“இப்போது புரிகிறதா அர்ஜுனா... தருமரிடம் கதவையும் ஜன்னல்களையும் உடைத்துத் தாருங்கள் என்று கேட்டிருந்தால் அவரும் உடனே தந்திருப்பார்தான்.

ஆனா் அவர் தானாகவே அவ்வாறு சிந்திக்கவில்லை.

ஆனால் கர்ணன்...

நாம் கேட்கவே இல்லை. அவனாகவே யோசித்துச் செய்தான்.

யுதிஷ்டிரர் கொடுப்பது தர்மம் .......

கர்ணன் கொடுப்பது விருப்பம் ......

எந்த வேலையையும் விருப்பத்துடன் செய்தால் அது போற்றப்படும் செயலாகும்”

இதிலிருந்து தெரிவது என்ன?

கடமைக்காகவோ, நிர்ப்பந்தமோ, தேவையோ, எதுவாக இருந்தாலும் செய்வதை விருப்பத்துடன் செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்..

Wednesday, August 14, 2019

நல்லதங்காள் கதை'' தெரியுமா உங்களுக்கு....?



அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் பொய்க்காத வளமான பூமி.

அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி.

நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான்.

-----------

மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் கட்டிக்கொடுத்தான் அண்ணன் நல்லதம்பி. கல்யாணம் ஆகும்போது நல்லதங்காளுக்கு ஏழு வயது.

காசிராஜன் நல்லதங்காளுக்கு நிறைய பரிசுப் பணம் கொடுத்தார். சித்திரை மாதம் கல்யாணம் நடந்தது. செல்வக் கல்யாணம்.

பனைமரம் பிளந்து பந்தக்கால் நட்டார்கள்.

தென்னைமரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல் இட்டார்கள்.

நல்ல தம்பி தங்கச்சிக்கு நிறைய சீதனங்கள் கொடுத்தான்.

வேலி நிறைய வெள்ளாடுகள்

பட்டி நிறைய பால்மாடுகள்

மோர் கடைய முக்காலி பொன்னால்

அளக்குற நாழி பொன்னால்

மரக்கால் பொன்னால்.

இன்னமும் சீதனங்கள் நிறைய உண்டு. சொல்லிக்கொண்டே போகலாம்.

கல்யாணம் முடிந்தது. விருந்துச் சாப்பாடு முடிந்தது.

----------------

நல்லதங்காளும் காசிராஜனும் மானாமதுரைக்குப் புறப்பட்டார்கள். நல்லதங்காளுக்கு அண்ணனைப் பிரிய மனம் இல்லை.

அழுதுபுரண்டு அழுதாள்...

ஆபரணம் அற்று விழ.

முட்டி அழுதாள்...

முத்து மணி அற்று விழ.

நல்லதம்பி தங்கச்சிக்கு ஆறுதல் சொன்னான். ஒருவழியாக நல்லதங்காள் மானாமதுரைக்குப் புறப்பட்டுப் போனாள்.

நல்லதம்பிக்கு ஒரு மனைவி உண்டு. அவள் பெயர் மூளி அலங்காரி. அவள் கொடுமைக்காரி. நல்லதங்காள் போன பிறகு நல்லதங்காளைப் பார்க்க நல்லதம்பி ஒரு தடவைகூட மானாமதுரை போகவில்லையாம். அதற்கு மூளி அலங்காரிதான் காரணமாம்.

--------------

நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. பிள்ளை குட்டிகளுடன் அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள். இதெல்லாம் கொஞ்ச காலம்தான்.

மானாமதுரையில் மழை இல்லை. 12 வருடமாக நல்ல மழை இல்லை. வயல்களில் விளைச்சல் இல்லை. மக்கள் பசியால் வாடினார்கள். பட்டினியால் தவித்தார்கள்.

பஞ்சமோ பஞ்சம்.

மரக்கால் உருண்ட பஞ்சம்

மன்னவரைத் தோற்ற பஞ்சம்

நாழி உருண்ட பஞ்சம்

நாயகரைத் தோற்ற பஞ்சம்

தாலி பறிகொடுத்து

கணவரைப் பறிகொடுத்து

கைக்குழந்தை விற்ற பஞ்சம்

இப்படி மக்கள் பஞ்சத்தில் செத்தார்கள்.

நல்லதங்காள் வீட்டையும் பஞ்சம் விடவில்லை. தாலி தவிர மற்றது எல்லாம் நல்லதங்காள் விற்றாள். குத்தும் உலக்கை, கூடை, முறம்கூட விற்றுவிட்டாள். எல்லாம் விற்றும் பஞ்சம் தீரவில்லை. குழந்தைகள் பசியால் துடித்தன.

நல்லதங்காள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் பிள்ளைகள் பசியால் செத்துப்போகும் என்று பயந்தாள். ஒரு முடிவு எடுத்தாள். அண்ணன் வீட்டுக்குப் பிள்ளைகளுடன் கொஞ்ச நாள் போய் இருக்கலாம் என்று முடிவு எடுத்தாள்.

காசிராஜனிடம் தன் முடிவைச் சொன்னாள். காசிராஜன் நல்லதங்காள் சொன்ன முடிவை ஒப்புக்கொள்ளவில்லை.

“அடி பெண்ணே! வாழ்ந்து கெட்டுப்போனால் ஒரு வகையிலும் சேர்க்கமாட்டார்கள். கெட்டு நொந்துபோனால் கிளையிலும் சேர்க்க மாட்டார்கள். கை கொட்டிச் சிரிப்பார்கள். நீ போக வேண்டாம். கஷ்டம் வருவது சகஜம். நாம் பிடித்து நிற்க வேண்டும். சாணி எடுத்தாவது தப்பிப் பிழைப்போமடி! வேலி விறகொடித்து விற்றுப் பிழைப்போமடி’’ என்று காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளிடம் பலவாறு சொன்னான்.

காசிராஜன் சொன்னதை நல்லதங்காள் கேட்கவில்லை. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தாள்.

சந்தனம் தொட்ட கையால் - நான்

சாணி தொட காலமோ!

குங்குமம் எடுக்கும் கையால் - நான்

கூலி வேலை செய்ய காலமோ

என்று சொல்லி நல்லதங்காள் அழுதாள்.

இதற்குமேல் நல்லதங்காளைச் சமாதானப்படுத்த முடியாது என்று காசிராஜன் தெரிந்துகொண்டான். “சரி போய் வா. பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.

--------------

நல்லதங்காள் பிள்ளைகளைப் பாசத்தோடு அழைத்தாள். “வாருங்கள் பிள்ளைகளா! உங்கள் மாமன் வீட்டுக்குப் போவோம். அங்கே தின்பதற்கு தேங்காய் கிடைக்கும், மாங்காய் கிடைக்கும், ஓடி விளையாட மான் கிடைக்கும்’’ என்று சொல்லி அழைத்தாள். பிள்ளைகள் ஆசை ஆசையாகப் புறப்பட்டன.

நல்லதங்காளும் பிள்ளைகளும் மானாமதுரையில் இருந்து அர்சசுனாபுரத்துக்குப் புறப்பட்டு வந்தார்கள். காடு மலையெல்லாம் தாண்டி வந்தார்கள். வனாந்திரங்களைக் கடந்து வந்தார்கள்.

அர்ச்சுனாபுரம் பக்கம் வந்துவிட்டார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு நடக்க முடியவில்லை. பசி பசி என்று கத்தினார்கள். அழுதார்கள்.

அந்த நேரம் பார்த்து நல்லதம்பி அந்தப் பக்கம் வந்தான். படை பரிவாரங்களோடு வந்தான். வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் நல்லதங்காளையும் பிள்ளைகளையும் பார்த்தான்.

அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

குதிரை அரிதாச்சோ

குடி இருந்த சீமையிலே!

பல்லக்குதான் பஞ்சமோ

பத்தினியே உனக்கு!

கால்நடையாய் வர

காரணம் ஏன் தங்கச்சி?

என்று அழுது புலம்பினான். நல்லதங்காள் தன் வீட்டு நிலைமைகளைச் சொன்னான். நல்லதம்பி அவளைத் தேற்றினான்.

“சரி தங்கச்சி நம் வீட்டுக்குப் போ. தெற்குமூலையில் தேங்காய் குவிந்திருக்கும் வடக்குமூலையில் மாங்காய் குவிந்திருக்கும். காட்டு யானை வாசலில் கட்டி இருக்கும் காராம் பசுவும் உண்டு. போ தங்கச்சி போ! போய்ப் பிள்ளைகளுடன் பசியாறி இரு’’ என்று நல்லதம்பி சொன்னான்.

நல்லதங்காள் அண்ணன் இல்லாத வீட்டுக்குப் போக தயங்கினாள். அண்ணா! நீயும் கூட வா! என்று அண்ணனைக் கூப்பிட்டாள்.

“அம்மா நல்லதங்காள் நீ முதலில் போ. உன் அண்ணி மூளி அலங்காரி உன்னையும் பிள்ளைகளையும் நன்றாக கவனித்துக்கொள்வாள். நான் பின்னால் வருகிறேன். சீக்கிரன் வந்துவிடுவேன். உன் பிள்ளைகளுக்கு விளையாட புள்ளிமான் கொண்டுவருவேன்’’ என்று சொல்லி சமாதானப்படுத்தினான்.

நல்லதங்காள் அண்ணன் வீட்டுக்கு அரை மனதுடன் புறப்பட்டாள். அப்போது மூளி அலங்காரி வீட்டு மாடியில் இருந்தாள்.

--------------------

நல்லதங்காளும் பிள்ளைகளும் பசியோடு தன் வீடு வருவதைப் பார்த்து விட்டாள். வேகவேகமாக இறங்கி வந்தாள். கதவுகளை அடைக்கச் சொன்னாள். இறுக்கிக் கதவை அடைத்தாள். ஈர மண் போட்டு அடைத்தாள். சோற்றுப் பானையை ஒளித்து வைத்தாள். பழந்துணி ஒன்றை உடுத்திக்கொண்டான். முகத்தில் பத்துப் போட்டு மூலையில் படுத்துக்கொண்டாள்.

நல்லதங்காள் வந்தாள். அண்ணி அண்ணி என்று ஆசையாகக் கூப்பிட்டு கதவைத் தட்டினாள். கதவு திறக்கவில்லை.

''கால் கடுக்குது அண்ணி கதவைத் திற, தண்ணீர் தண்ணீர் என்று தவிக்குறாள் பாலகர். அன்னம் அன்னம் என்று சொல்லி அலையுறார் பாலகர். புத்திரர் பசியாற கதவைத் திறவாயோ?''

என்று அழுது அழுது கூப்பிட்டாள். அதற்கும் கதவு திறக்கவில்லை. நல்லதங்காளுக்கு கோபம் வந்தது.

நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும்

என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன. பிள்ளைகள் உள்ளே ஓடினார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு பண்டமும் இல்லை. மூளி அலங்காரி படுத்திருந்த இடத்தில் தேங்காயும், மாங்காயும் குவிந்து கிடந்தன.

ஓடிச்சென்று ஒரு பிள்ளை தேங்காயை எடுத்தது. தாவிச்சென்று ஒரு பிள்ளை மாங்காயைக் கடித்தது. மூளி அலங்காரி விருட்டென்று எழுந்தாள். மாங்காயைப் பறித்துப் போட்டாள்.

ஆயிரம் அழுகல் மாங்காயில் ஒன்று எடுத்துக் கொடுத்தாள். தேங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் தேங்காயில் அழுகல் தேங்காய் ஒன்று எடுத்துக் கொடுத்தாள்.

பார்த்தாள் நல்லதங்காள். மனம் பதறினாள். ''அண்ணி என் மக்களின் பசியை ஆத்துங்க'' என்று கெஞ்சினாள்.

மூளி அலங்காரி, ஏழு வருசம் மக்கிப்போன கேப்பையைக் கொடுத்தாள். திரிப்பதற்கு உடைந்த திருகையைக் கொடுத்தாள். உலை வைக்க ஓட்டைப் பானையைக் கொடுத்தாள். எரிக்க ஈரமட்டைகளை கொடுத்தாள். நல்லதங்காள் பொறுமையாகக் கேப்பையைக் திருகையில் போட்டு அரைத்தாள்.

எப்படியோ கஷ்டப்பட்டு கஞ்சி காய்ச்சினாள். ஈரமட்டைகளை வைத்து எரித்தாள். கூழும் கொதிக்கணும், குழந்தை பசியாறணும் என்று தெய்வங்களை வேண்டிக்கொண்டாள்.

ஒருவழியாகக் கஞ்சி கொதித்தது. ஆனால் பிள்ளைகள் கஞ்சியைக் குடிக்கப் போகும் நேரத்தில் மூளி அலங்காரி வந்தாள். பானையைத் தட்டிவிட்டாள். பானை உடைந்தது. கூழ் வழிந்து ஓடியது. பிள்ளைகள் அதை வழித்துக் குடித்தார்கள்.

நல்லதங்காளுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்கவில்லை. இனியும் அவமானப்பட வேண்டாம். செத்துவிடலாம் என்று முடிவு எடுத்தாள்.

----------------

பிள்ளைகளைக் கூப்பிட்டு தெருவில் இறங்கினாள். வீதியில் நடந்தாள். அவளைப் பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்கள். சாப்பிடுவதற்கு தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.

''பச்சரிசி குத்தித் தாரோம்

பாலும் கலந்து தாரோம்!

பாலரும் நீயும்

பசியாறிப் போங்க!''

என்று கூப்பிட்டார்கள். நல்லதங்காள் மறுத்துவிட்டாள்.

''அரச வம்சம் நாங்கள்

அண்டை வீட்டில்

தண்ணீர் குடிக்க மாட்டோம்''

என்று சொல்லிவிட்டாள்.

காட்டு வழியே பிள்ளைகளைக் கூட்டிப் போனாள். பாழும் கிணறு தேடிப் போனாள். அண்ணன் வந்தால் அடையாளம் தெரியட்டும் என்று ஆவாரம் செடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே போனாள்.

நல்லதங்காளும் பிள்ளைகளும் நெடுந்தூரம் வந்து விட்டார்கள். ஒரு கிணறும் காணோம்.

அப்போது சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து நல்லதங்காள் கேட்டாள்...

“தண்ணீர் தாகமப்பா. தண்ணீர் குடிக்கணும். பாழும் கிணறு இருந்தால் பார்த்துச் சொல்லுமப்பா!’’ என்று கேட்டாள். ஒரு சிறுவன் ஓடிச்சென்று ஆழமுள்ள பாழும் கிணற்றைக் காட்டினான்.

நல்லதங்காள் பிள்ளைகளோடு அங்கு போனாள்.

கணவன் கண்ணில் படுமாறு தாலியைக் கழற்றி கிணற்றுப் படியில் வைத்தாள்.

அண்ணன் கண்ணில் படுமாறு பாலூட்டும் சங்கை கிணற்று மேட்டில் வைத்தாள்.

அண்ணி கொடுத்த அழுகல் தேங்காயை ஓர் ஓரத்தில் வைத்தாள்.

-------------

ஒவ்வொரு பிள்ளையாக கிணற்றில் தூக்கிப் போட்டாள். ஒவ்வொரு பிள்ளையும் பயந்து பயந்து அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டன.

காலைக் கட்டிய பிள்ளையை பிடித்து இழுத்து கிணற்றில் போட்டாள். இப்படி ஆறு பிள்ளைகளைப் போட்டுவிட்டாள்.

மூத்த பிள்ளை நல்லதங்காளுக்குப் பிடிபடாமல் ஓடினான்.

''என்னை மட்டும் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே!'' என்று கெஞ்சினான்.

''தப்பிப் பிழைத்து அம்மா - நான்

தகப்பன் பேர் சொல்லுவேன்

ஓடிப் பிழைத்து அம்மா - நான்

உனது பேர் சொல்லுவேன்''

என்று சொல்லி தப்பித்து ஓடினான். ஓடிய பிள்ளையை நல்லதங்காள் ஆட்டு இடையர்களை வைத்துப் பிடிக்கச் சொன்னாள்.

இடையர்களுக்கு விசயம் தெரியாது. தாய்க்கு அடங்காத தறுதலைப் பிள்ளை என்று நினைத்து அவனைப் பிடித்துக்கொண்டுவந்து நல்லதங்காளிடம் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

நல்லதங்காள் கதறி அழுத மூத்த மகனையும் பிடித்து கிணற்றுக்குள் போட்டாள். பிறகு தானும் குதித்தாள். நல்லதங்காளும், ஏழு பிள்ளைகளும் இறந்து மிதந்தார்கள்.

நல்லதங்காளுக்கு 16 அடிக் கூந்தல். அவள் கூந்தல் கிணறு பூராவும் பிரிந்து பரந்து கிடந்தது. பிள்ளைகளும் தெரியவில்லை. கிணற்றுத் தண்ணீரும் தெரியவில்லை. நல்லதங்காளின் கூந்தல் மட்டுமே கிணறு பூராவும் தெரிந்தது.

நல்லதங்காள் குடும்பம் இப்படி பட்டினியால் செத்து முடிந்தது.

----------------

நல்லதங்காள் புறப்பட்டு வந்த சில நாட்களிலேயே மானாமதுரையில் நல்ல மழை பெய்தது. பயிர்கள் திகிடுமுகடாக விளைந்தன. நாடு செழிப்பு அடைந்தது.

காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளையும் தன் பிள்ளைகளையும் அழைப்பதற்கு புறப்பட்டு வந்தான்.

நல்லதம்பி வேட்டை முடித்து வீட்டுக்கு வந்தான். தங்கச்சியைக் காணவில்லை. தங்கச்சி பிள்ளைகளையும் காணவில்லை. பதறிப்போனான்.

மூளி அலங்காரியைப் பார்த்து என் தங்கச்சியையும், தங்கச்சி பிள்ளைகளையும் எங்கே என்று கேட்டாள்.

மூளி கூசாமல் பொய் சொன்னாள்.

“சீரகச் சம்பா சோறு ஆக்கிப் போட்டேன்

பத்து வகைக் காய்கறி வைத்தேன்.

சாப்பிட்டுப் போனாங்க’’

என்று பொய் சொன்னாள்.

நல்லதம்பி இதை நம்பவில்லை. பக்கத்து வீடுகளில் போய்க் கேட்டான். அவர்கள் நடந்தது நடந்தபடி சொன்னார்கள். பிள்ளைகளைப் பட்டினி போட்டதைச் சொன்னார்கள்.

அவ்வளவுதான் நல்லதம்பிக்கு மீசை துடித்தது. கண் சிவந்தது. பக்கச் சதை எல்லாம் பம்பரம் போல் ஆடியது. தங்கையைத் தேடி காட்டுவழியே போனான். பதறிப் பதறிப் போனான்.

நல்லதங்காள் ஒடித்துப் போட்ட ஆவாரஞ் செடிகள் வழிகாட்டின. நல்லதம்பி பாழும் கிணற்றின் பக்கம் வந்தான். உள்ளே எட்டிப் பார்த்தான்.

''அய்யோ........'' தங்கையும் பிள்ளைகளும் செத்து மிதந்தார்கள். நல்லதம்பி ஓங்காரமிட்டு அழுதான்.

தங்கச்சி தங்கச்சி என்று தரையில் புரண்டு அழுதான். அம்மா அம்மா என்று அடித்துப் புரண்டு அழுதான். இப்படி அவன் அழுது புரண்டு கொண்டு இருந்தபோது காசிராஜனும் அங்கே வந்து விட்டான்.

பிள்ளைகளையும் மனைவியையும் பிணமாகப் பார்த்தான். மனைவியைக் கட்டிக் கொண்டு கதறி அழுதான்.

நல்லதங்காளையும் பிள்ளைகளையும் வெளியே எடுத்து தகனம் செய்தார்கள்.

நல்லதம்பி தன் மனைவி மூளி அலங்காரியைப் பழிவாங்க நினைத்தான். அவளை மட்டுமல்ல. அவள் குலத்தைப் பழிவாங்க ஏற்பாடு செய்தான்.

தன் மகனுக்கு உடனடியாக திருமணம் ஏற்பாடு செய்தான். மூளி அலங்காரியின் உறவினர்கள் உட்காரும் இடத்தில் இடிப்பந்தல் போட்டான். இடிப்பந்தலைத் தட்டிவிட்டு எல்லோரையும் கொன்றான். மூளி அலங்காரியையும் அரிவாளால் வெட்டிக் கொன்றான்.

இத்துடன் கதை முடியவில்லை. நல்லதம்பி ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். அதேபோல் காசிராஜனும் ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான்.

இவ்வாறு இரண்டு குடும்பங்களும் பூண்டோடு அழிந்தன. இதற்கு அடிப்படையான காரணம் என்ன?

வறுமை ஒரு பக்கம். மூளி அலங்காரியின் கொடுமை மறுபக்கம். வறுமை கொடியது. பசி கொடியது. பட்டினி கொடியது.

அதைவிடக் கொடியது மனிதத்தன்மையற்ற செயல்.

நல்லதங்காள் பட்ட துன்பத்தை இந்த நாடு மறக்காது.