Saturday, February 29, 2020

இந்த காரியம் நிறைவேற, இந்த பிரச்சனை தீர அதற்கேற்ற தெய்வத்தை வணங்க வேண்டும் என குறிப்பு எழுதி வைத்துள்ளனர். அதன் படி எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பார்ப்போம்.


விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்
சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதி
முடி நரைத்தல், உதிர்தல் - மகாலட்சுமி, வள்ளி
கண் பார்வைக் கோளாறுகள் - சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
காது, மூக்கு, தொண்டை நோய்கள் - முருகன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள் - மகாவிஷ்ணு
மாரடைப்பு, இருதய கோளாறுகள் - சக்தி, கருமாரி, துர்க்கை

அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா - தட்சிணாமூர்த்தி, முருகன்

நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு - முருகன்

பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி

மூட்டுவலி, கால் வியாதிகள் - சக்கரத்தாழ்வார்
வாதங்கள் - சனிபகவான், சிவபெருமான்
பித்தம் - முருகன்
வாயுக் கோளாறுகள் - ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள் - சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம் - முருகன், செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு - சங்கர நாராயணன்
அம்மை நோய்கள் - மாரியம்மன்
தலைவலி, ஜீரம் - பிள்ளையார்
புற்று நோய் - சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு - விஷ்ணு

உங்களுக்கான பிரச்சனைகளுக்கு அதற்கென்று கூறப்பட்டுள்ள தெய்வத்தை வணங்கி நலம் பெருக!p

ஜாதகபடி உங்கள் #வளர்ச்சிக்கு யார் அடிப்படையாக இருப்பார்கள்......



,,,,,#ஜாதகரே____லக்னாதிபதி......

லக்னாதிபதி தான் ஒரு ஜாதகர்......

ஒருவர் எப்படியும் மற்றொருவர் உதவி இல்லாமல் மிக பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ வெற்றி பெற்றிருக்க இயலாது......

எனவே,,,,

உங்கள் ஜாதகத்தில் #ல என்ற ஒரு எழுத்து போட்டு இருக்கும்,,,,அது தான் உங்கள் #லக்னம்.....லக்னம் தான் 1 ம் இடம்.....

அந்த லக்னத்திற்கு உள்ள அதிபதிதான் #லக்னாதிபதி......

எனவே,,,,,உங்கள் வளர்ச்சிக்கு....

உங்கள் லக்னாதிபதி,,,,,#லக்னத்திலே இருந்தால் யாரையும் சாராமல் இருக்கும்.....

லக்னாதிபதி,,,,,,#இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்ப உறுப்பினர்கள் காரணமாகவோ அல்லது உங்கள் பேச்சால் இருக்கும்.....

லக்னாதிபதி,,,,,#மூன்றாவது இடத்தில் இருந்தால் சகோதரர்,மாமனார் அல்லது சிறு வயது நன்பர்களால் இருக்கும்....

லக்னாதிபதி,,,,,#நான்காம் இடத்தில் இருந்தால் தாய் அல்லது கல்வி,வாகனங்கள் தான் காரணமாக இருக்கும்.....

லக்னாதிபதி,,,,,,,#ஐந்தாம் இடத்தில் இருந்தால் பிள்ளைகள் மூலம் நடக்கும்....

லக்னாதிபதி,,,,,#ஆறாம் இடத்தில் இருந்தால் எதிரியே காரணமாவார்.....

லக்னாதிபதி,,,,,,#ஏழாம் இடத்தில் இருந்தால் வாழ்க்கை துணை அல்லது கூட்டாளிகள் மூலம் வளர்ச்சி உண்டு....

லக்னாதிபதி,,,,,,#எட்டாம் இடத்தில் இருந்தால் வாழ்க்கை துணை பேச்சு அல்லது நீங்கள் சந்திக்கும் அவமானமே வளர்ச்சிக்கு காரணமாகும்.....

லக்னாதிபதி,,,,,,#ஒன்பதில் இருந்தால் தந்தையால் நடக்கும்......

லக்னாதிபதி,,,,,,,#பத்தில் இருந்தால் நீங்கள் வேலை,தொழில் செய்வதன் மூலம் வளருவீர்கள்......

லக்னாதிபதி,,,,,,#பதினொன்றில் இருந்தால் உங்கள் செயல்பாடு ஒவ்வொன்றையைம் வைத்து வளர்வதாக இருக்கும்,,,,சிலருக்கு இரண்டாம் தாராம் மூலமாக கூட அமையும்.....

லக்னாதிபதி,,,,,,,#பனிரெண்டில் இருந்தால் முகம் தெரியாத நபர்களால் வளருவீர்கள்......

மக்களே,,,,,,மேற்சொன்ன பலன்கள் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் இந்த அடிப்படையில் தான் #நடக்கும்___கிடைக்கும்,,,,,அல்லது நடந்து இருக்கும்......அது minimum ஆகவோ maximum ஆகவோ எப்படியும் இருக்கும்....

,,,,,,இங்கே மேற்கொண்ட பலன் படி உங்களுக்கு இல்லை என்றால் #லக்னாதிபதி சரியில்லை என்று பொருள்... அல்லது லக்னம் கெட்டு உள்ளது என்று அர்த்தம்.....

"மகாபாரதத்தில் ஒரு நிகழ்வ.இதுவரை கேட்டிராதது."


பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர்.
திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை?'' என்று கேட்டான்.
திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் அங்கு தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர்.
கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய். நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, 'ஏன் பதில் கூறவில்லை?’ என்பான்.
உடனே நீ, 'தக்ஷகன் முறை’ என்று சொல். அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான்'' என்றார் பகவான்.
கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி. துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். 'எனக்குப் பதில் கூறவில்லையே... இன்று யாருடைய முறை?'
ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே, இன்று தக்ஷகன் முறை' என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.
திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். ''கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்?'' என்று கேட்டாள்.
கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.
துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால், துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை.
திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது.
ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர்.
பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அன்று பௌர்ணமி. இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான். பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான்.
கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த 'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.
தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது.
உடனே அவன் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள்; துடிதுடித்தாள்.
துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான்.
தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை.
அதே நேரம், அவளின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். 'அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும்’ என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன்.
அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தி யோடு பங்குகொள்கிறான்.
இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். 'இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை’ என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம்'' என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி.
"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்" "

வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்


# புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”
சிம்பிள் ...
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது.

Tuesday, February 25, 2020

மூன்றாம் பிறை தரிசனம் ஸ்பெஷல்*



மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவு
படுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.மூன்றாம் பிறையை பார்த்தல் நமக்கு மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

மூன்றாம்பிறை பிறந்த கதை :

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறு அருளினார்.

மூன்றாம் பிறை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் :

சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.
மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையன்று (சோமவாரத்தில்) வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

அனைத்து மதங்களும் போற்றும் மூன்றாம் பிறை:

மூன்றாம் பிறையை சிறப்பை இன்னும் சொல்வதெ ன்றால் அனைத்து மதங்களுமே இதை ஏற்றுகொ ண்டுள்ளன.
அதாவது இஸ்லாம் மத‌ம், ஜைன‌ம், கிறித்தவம், இந்து மத‌ம் என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம்பொருந்தியது
என தெரிவிக்கிறது . அந்த பிறையைகண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும்.
செல்வங்களை சேர்க்கும். பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும். மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

*பிறை பார்ப்பதன் புண்ணியம்*

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஊர்மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடையும் கரையை அடைத்தார்கள்.
மதுரை மாநகரில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை. அவள் தினமும் வழிபடும் சொக்கநாதப் பெருமானை நினைத்து வருந்தினாள்.
அவளது உண்மையான அன்பிற்கு செவி சாய்த்த இறைவர், தாமே கூலி ஆளாக வந்து அவள் பங்கிற்கு வேலை செய்தார் என்பது திருவிலையாடற்புராணம் கூறும் செய்தியாகும்.
கிழவியின் பங்கினை அடைக்க சிவபெருமானே கூலி ஆளாக வரவேண்டுமா? அப்பெருமான் தன்னிடம் உள்ள பூதக்கணங்களில் ஒன்றை அனுப்பி இருந்தாலே போதுமே! அப்பெருமானே ஆளாக வரும் அளவிற்கு அந்த மூதாட்டியின் தகுதி என்ன என்பது பற்றி சிந்திப்போம்.
திருவிளையாடற் புராணத்தை அருளிய பரஞ்சோதி முனிவர்
*திங்கள் ஆயிரம் தொழுதாள்* என்று கூறுகின்றார். ஆயிரம் பிறையைத் தரிசித்த மேலான புண்ணியம் தான் அவள் பெற்றிருந்த தகுதியாகும்.

பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம்.
பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வார்களாக!

*பிறை பார்க்கும் பயன்*

மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.

நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.

ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.

ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.

ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.

பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.

வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.

நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும் ( முத்திப்பேறு )

மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.

அதற்கான முறைகளையும் காண்க:

ஒரு தாம்புள தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதில் குல விளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து ( வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்,) ஏற்றி வணங்க வேண்டும், அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம்.அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும்.தேவையை கேட்க வேண்டும். இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும். இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார். இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள். பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு. நகை. தானியம். மாங்கல்யம். இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள். தவறாக புரிந்து கொண்டவர்கள் காட்டிய வழி இன்றும் கையாளப்படுகிறது. கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ம பலம், மனதிலே அன்பு பலம், இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார்.

சூரியனிடமும். சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும். அதுவே யாசகம் பெறுவது . ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெறும்போது கையேந்தியே பெற்றார். சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார். இதை படி அளப்பது என்பார்கள்.எனவே இதை உணர்ந்து பவ்யமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள். செல்வ, சந்தோஷ வளம் கிட்டும்.
வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும்.பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு, தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும்.

இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நலம்.ஆயுளுக்கும் செய்து வந்தால் தரித்திரனும். அவனிருக்கும் போதே உயர்ந்த செல்வத்தை பெறுவான். இது உறுதி.மேக மூட்டமாக உள்ள காலங்களில் பிறை தெரியாது.எனினும் கவலை இல்லை.மாலை 6 1/2 மணி முதல் 7 1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை பார்த்து, கூறிய முறைப்படி வழிபட்டால் போதும்.நலம் பயக்கும்.பிறை தரிசனம் செய்யும் போது நிதான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும். குறிப்பாக சந்தோஷ மன நிலையில் பிறையை காண வேண்டும். என்ன மனநிலையில் நாம் பிறையை காண்கிறோமோ அதுவே வரமாக நமக்கு பெருகி கிடைக்கும்.எனவே நல்ல மனதோடு தேவைகளை கேட்க வேண்டும்.அசைவ உணவை விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காணும் நாளில் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

இந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு.அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும். அதே போல் கார்த்திகை,மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும். ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும், கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும்.
திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும்.
திருமணம்ஆகாதவர்கள் பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும்.சூழ்நிலையால் முடியாதவர்கள் தனித்து நின்றும் வழிபடலாம். இந்த பிறை தரிசனம் காண ஆண்,பெண் பேதமில்லை. யாருக்கு செல்வம்,சந்தோஷம், கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும்.

ஓரிரு முறை தரிசனம் கண்டும் இன்னும் கிடைக்கவில்லையே என நினைக்காமல் பொறுமையாக வழிபட்டு வரவேண்டும். அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு இறைவன் யோகத்தை அருளுவார்.எனவே பொறுமையாக உண்மையாக வழிபட்டு வரவேண்டும். சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே கிடைத்து விடும்.சிலருக்கு 12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன் தான் பலன் கிடைக்கும். எனவே இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தரிசனம் காணுங்கள். அளவு கடந்த நன்மைகளை பெறுங்கள் .

வாழ்க வளமுடன் !

🌙திருச்சிற்றம்பலம்🌙

*சிவாய நம: *

Sunday, February 23, 2020

அக்னி_மூலை____தென்கிழக்கு_மூலை.


நம் வீட்டில் இந்த இடத்தை சரிவர கவனிக்கவில்லை எனில் பல பிரச்சினை இங்கு இருந்து தான் ஆரம்பிக்கும்.....

இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும்.

பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும்.
வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணை,எரிவாயு,போன்றவை) இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம்.

அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு,கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி, (செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம்.

சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசையில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.

நன்றி,,,,,,share செய்யுங்கள்......மற்றவர்களுக்கு......

Thursday, February 20, 2020

ஏழரை சனியிலிருந்து தப்பிக்க :


ஏழரை சனி நடப்பவர்கள் கீழ்க்கண்ட முறைகளை பக்தியோடும் நம்பிக்கையோடும் பின்பற்றி வந்தால் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்

1.சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் எண்னை விளக்குகள் இரண்டு ஏற்றி அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வர வேண்டும். நீலோத்தம்பூவால் மாலை தொடுத்து சனீஸ்வரருக்கு சூட்டலாம். இது தொடர்ந்து ஏழரை ஆண்டுகளும் செய்ய வேண்டும்.

2.சனி மிக கடுமையாக இருக்கிறார் மேலும் சனி திசையும் நடக்கிறது என்றால் ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை தோறும் துளசி மாலை சாற்றி நெய் விளக்கேற்றி 27 முறை சுவாமியை வலம் வர வேண்டும்.

3.சனிக்கிழமை தோறும் சமுத்திர ஸ்நானம் செய்து சனீஸ்வரருக்கு பதினெட்டு எலுமிச்சம்பழ மூடியில் நல்லெண்ணய் விளக்கேற்றி நவகிரஹங்களை 27 அல்லது 54 முறை வலம் வர வேண்டும்.

Wednesday, February 19, 2020

சினைப்பையில் நிறைய நீர்க்கட்டிகள்... பூப்பெய்திய பிறகு மாதவிடாய் சரியே இல்லை... என்ன சாப்பிடலாம்?



* காலை பானம்: பால் வேண்டாம். கருப்பட்டி காபி அல்லது எலுமிச்சை/ஆரஞ்சு பழச்சாறு 200 மி.லி (10 மி.லி பழச்சாறு. மீதி 190 மி.லி இளஞ்சூட்டு நீர் - சிறிது தேன்).

* காலை உணவு: பழத்துண்டுகளுடன் கம்பு-சோள தோசை (கம்பு இரும்பு டானிக்; சோளம் புரத டானிக்).

* காலை பள்ளிச் சிற்றுண்டி: கொய்யாப் பழத்துண்டு அல்லது எள் உருண்டை.

* மதியம்: காய்கறி சாலட், கீரைக்கூட்டு அல்லது மீனுடன் சிவப்பரிசி, கறுப்பரிசி அல்லது பழுப்பரிசிச் சோறு.

* மாலை: பால் சேர்க்காத தேநீர், சுண்டல்.

* இரவு: முழுத்தோலுடன்கூடிய கோதுமை ரொட்டி, காய்கறி சிறுதானிய உப்புமா.

பசுவிற்கு அகத்திக்கீரை வாழைப்பழம் கொடுப்பதால் பல தோஷங்கள் அகலும்.


🙏
பசுவை ஆராதனை செய்து வழிபடுவோருக்கு அனைத்து தெய்வங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் .
🙏
ஒருவர் எதை கேட்டாலும் அதை தரும் வல்லமை காமதேனு என்ற இந்திரலோக பசுவிற்கு உள்ளது. பசுக்களை நாம் பூஜை செய்து வழிபடுவதன் மூலம் அற்புத பலன்களை பெற முடியும்.

🙏கோ பூஜை 🙏
ஒரு நல்ல நாளில் பசுவை குளிக்க வைத்து பிள்ளையாரை வேண்டிய பின்பு பசுவின் மீது பன்னீர் தெளித்து, நெற்றியிலும் பின் புறத்திலும் தூய்மையான மஞ்சள் குங்குமம் தடவி, அதன் மீது ஒரு சேலையை போர்த்த வேண்டும். அதன் பிறகு பசுவின் முன்பும் பின்பும் சாம்பிராணி மற்றும் தூப தீபம் காட்ட வேண்டும். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதை நினைவில் கொண்டு பசுவின் பின்புறத்திற்கு உரிய மரியாதை அளிக்கவேண்டும். அதன் பிறகு பசுவை மூன்று முறை வலம் வந்து பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் போன்றவற்றை கொடுங்கள். அதன் பிறகு கீழே உள்ள கோ மந்திரத்தை 9 முறை ஜபிக்கலாம்.
🙏
கோமாதா மந்திரம் :
🙏
சர்வ காமதுகே தேவி சர்வம்ம்
தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே.
🙏
நமது வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும்படி கோமாதாவிடம் வேண்டிக்கொண்டு இறுதியாக பசுவிற்கு ஆரத்தி எடுத்துவிட்டு பசுவின் உரிமையாளருக்கு உங்களால் முடிந்த தட்சணையை கொடுங்கள். அன்றைய தினத்தில் பசுவின் கோமியத்தை வீடு முழுவதும் தெளியுங்கள்.
இந்த பூஜையை ஒருவரோ அல்லது பலரோ சேர்ந்து செய்யலாம். இந்த பூஜை செய்கையில் பசு தன் கன்றோடு இருந்தால் மேலும் சிறப்பு. இந்த பூஜையை 11 வாரங்களோ மாதங்களோ தொடர்ந்து செய்வது சிறப்பு.
🙏
இந்த பூஜையை செய்வதன் மூலம் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும், கடன் தொல்லை நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும், துர் சக்திகள் இருந்தால் வீட்டை விட்டு நீங்கும், தோஷங்கள் மற்றும் சாபங்கள் நீங்கும். அனைத்து நல்ல காரியங்களும் கை கூடி வரும். இந்த பூஜையை செய்ய இயலாதவர்கள் தினமும் காலை வேலையில் பசுவை பார்த்து மேலே உள்ள மந்திரம் அதை 9 முறை ஜபித்து பசுவிற்கு உண்ண ஏதாவது கொடுக்கலாம். கோமாதாவின் அருள் கிடைக்கும்.

Tuesday, February 18, 2020

விஜயா ஏகாதசி.....!!!



இந்த விஜயா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பிரபாவத்தால் அனைத்திலும் தடைகள் நீங்கி வெற்றி கிட்டுகிறது. மேலும் மகிமை வாய்ந்த இந்த விரதத்தின் மகாத்மியத்தை படிப்பதாலோ, கேட்பதாலோ கூட அனைத்து பாவங்களும் அழிந்து விடுகிறது.

ஒருசமயம் தேவரிஷி நாரதர் தனது தந்தையிடம், இந்த விஜயா ஏகாதசியின் மகிமையைப் பற்றி கேட்ட போது, அவர் கூறியதாவது :
மகனே! விஜயா ஏகாதசி விரதத்தின் புண்ணியத்தால் முற்பிறவியின் பாவங்களும், இப்பிறவியின் பாவங்களும் அழிவதோடு, அவர்களுக்கு அனைத்திலும் வெற்றியை அளிக்க வல்லது. எனவே இதன் மகிமையை மிக கவனமாகக் கேள், என்றார்.

திரேதாயுகத்தில் புருஷோத்தமனான பிரபு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தனது 14 வருட வனவாசத்தின் போது, பஞ்சவடியில் அன்னை சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடனும் வசித்து வந்தார். அப்போது இலங்கை வேந்தன் இராவணன் அன்னை சீதையை கடத்திச் சென்றான். அவர்கள் துக்கத்தில் அன்னையை தேடிக் கொண்டிருந்த போது, ஜடாயுவின் மூலம் சீதையைப் பற்றி அறிகின்றனர்.
அவர்கள் அன்னையை தேடும் பயணத்தின் போது, சுக்ரீவனுடன் நட்பு கொண்டு வாலியை வதம் செய்கிறார். அதன் பிறகு, அனுமன் கடல் கடந்து சென்று அன்னை சீதையிடம் விவரத்தைக் கூறி சமாதானம் செய்கிறார். மீண்டும் திரும்பி வந்து பிரபு ஸ்ரீராமரிடம் அன்னை அசோகவனத்தில் இருப்பதாகக் கூறுகிறார்.
அதனை அறிந்ததும் பிரபு ஸ்ரீராமர், அவரை மீட்பதற்காக சுக்ரீவனின் வானர சேனைகளுடன் இலங்கையை நோக்கிப் பயணித்தனர். அவர்களின் பயணம் தென்கோடி சமுத்திரத்தில் வந்து முடிந்தது. அதைக் கண்ட ஸ்ரீராமர் தனது தம்பியிடம், “ஹே லக்ஷ்மணா! முதலைகள், சுறா மீன்கள் போன்ற கொடிய நீர்வாழ் பிராணிகள் நிறைந்த ஆழமான வருண தேவனின் இந்த சமுத்திரத்தை எங்கனம் கடப்பது ?” என்று வியந்து நின்றார்.
அதை கேட்ட லக்ஷ்மணன், “அண்ணா, இங்கிருந்து அரை யோஜனை தூரத்தில் உள்ள குமரி தீபம் என்ற இடத்தில், அனேக பிரம்ம ஜனனங்கள் கண்ட வக்தாலப்ய ரிஷியின் ஆஸ்ரமம் உள்ளது. அவரை அணுகினால் இதற்கொரு உபாயம் கிடைக்கும்” என்று கூறியதை அடுத்து அனைவரும் அங்கே சென்று அவரைப் பணிந்து நின்றனர்.

பிரபு ஸ்ரீராமரை அடையாளம் கண்டு கொண்ட ரிஷி, “ராமா! நீ இங்கு வந்ததன் நோக்கம் என்ன ? “ என்று வினவினார். அதற்கு பிரபு ஸ்ரீராமர், தனது நிலையை எடுத்துக் கூறி, இந்த சமுத்திரத்தைக் கடக்கும் வழியினைக் கேட்கிறார்.
அதற்கு அந்த ரிஷி, “ராமா, இந்த சமுத்திரத்தினைக் கடக்க மட்டுமின்றி யுத்தத்திலும் வெற்றி பெற உனக்கு போதிய புண்ணியம் கிடைக்க மகத்துவம் மிக்கதொரு விரதத்தினைப் பற்றிக் கூறுகிறேன் கேள்” என்று கூறி விஜயா ஏகாதசி விரதத்தைப் பற்றிக் கூறினார்.

அதன்படியே, பிரபு ஸ்ரீராமரும் விஜயா ஏகாதசியினை முறையாகக் கடைபிடித்ததால், அவர்கள் சமுத்திரத்தைக் கடந்து சென்று ராவணனை வதைத்து, சீதையை மீட்டு வந்தார் என பிரம்மதேவர் நாரதருக்கு கூறினார்.
அதோடு, எவரொருவர் இந்த நாளில், இந்த விரதத்தின் மகாத்மியத்தை படிக்கிறாரோ / கேட்கிறாரோ / சொல்கிறாரோ அவருக்கு வாஜ்பேய யக்ஞம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறி முடித்தார்.

ஆலயம்_சென்று_வழிபாடு_செய்பவர்கள்_செய்யவேண்டியதும்____செய்யக்கூடாததும்.....



ஆலய வழிபாடு
ஆலயம் சென்று வழிபாடு செய்பவர்கள், என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

என்பதற்கு பல்வேறு தரிசன விதிமுறைகள் உள்ளன. ஆலய வழிபாட்டின் ரகசியங்கள் இதிலும் அடங்கியுள்ளன.............

ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும். ஆலய கோபுரத்தை கண்டதும் கை கூப்பி வணங்க வேண்டும். அப்படி செய்வதால் தெய்வத்தின் காலடியை தொட்டு கும்பிடுவதாக நம்பிக்கை. கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்று சொல்லப்படுகிறது. பிறகு தல விநாயகரை வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.

கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வழிபட வேண்டும். இதைத் தொடர்ந்து துவார பாலகர்களை வழிபட்டு கருவறை முன்புள்ள விநாயகரை வணங்க வேண்டும்.

பிறகு கருவறையில் இறைவனை கண்ணார கண்டு, மனதில் இருத்தி வழிபட வேண்டும். அர்ச்சகர் தரும் திருநீறை கீழே சிந்தாமல் நெற்றியில் பூசுதல் வேண்டும். கருவறையை 3 தடவை வலம் வந்து வழிபடுதல் வேண்டும். சிவபுராணத்தை அல்லது இறைவன் திருநாமத்தை உச்சரித்தப்படி வலம் வருவது நல்லது.

முதல் முறை வலம் வரும் போது அம்பாள் சன்னதி, உற்சவர், நடராஜரை வழிபட வேண்டும். இரண்டாம் தடவை வலம் வரும்போது, முருகன், நவக்கிரகம், பைரவர், அறுபத்து மூவரை வழிபட வேண்டும். மூன்றாம் முறை வலம் வரும்போது தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டீகேசுவரரை வழிபட வேண்டும்.

சண்டீகேசுவரரை வழிபாடு செய்ததும் ஆலய வழிபாடு முழுமை பெறுவதாக அர்த்தம். இதையடுத்து மீண்டும் கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி, சிறிது நேரம் வடக்கு முகமாக அமர்ந்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.

இது பொதுவான, முறைப்படியான ஆலய தரிசனமாகும். இவை தவிர ரிஷிகளும், முனிவர்களும், நமது முன்னோர்களும் ஆலயங்களில் செய்யத் தக்கவை, தகாதவை என்று பல்வேறு தரிசன விதிகளை உருவாக்கி கொடுத்துள்ளனர்.

ஆகமங்களுக்கு இணையான அந்த விதிகள் வருமாறு:........

அவசர அவசரமாகவோ, கோபமாகவோ பூஜை செய்வதோ, ஆலயம் செல்வதோ கூடாது. குளித்து, தூய உடை அணியாமலும், நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமலும் கோவிலுக்குச் செல்லக்கூடாது. காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது.ஈர உடையுடனோ அல்லது தூய்மைக் குறைவான உடையுடனோ கோவிலுக்குச் செல்லக்கூடாது.

அசைவ உணவு சாப்பிட்டு விட்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது. கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக வலம் வரக்கூடாது. நிறை மாத கர்ப்பிணிப் பெண் தலையில் எண்ணெய் குடத்துடன் நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படி நடக்க வேண்டும். தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது.

சட்டை அணிந்து கொண்டோ அல்லது போர்த்திக் கொண்டோ செல்லக்கூடாது. சட்டை அணியாமல் சென்றால், இறைவனின் ஈர்ப்பு அலைகளை நம் உடம்பு முழுமையாக பெற முடியும். கோவிலில் உள்ள விளக்குகளைக் கையால் தூண்டவோ, தூண்டிய கையில் உள்ள எண்ணை கறையை சுவரில் துடைக்கவோ கூடாது. சிலைகளைத் தொடுவதோ அல்லது சிலைகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றவதோ கூடாது. இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும்போது பார்க்கக்கூடாது.

விபூதி, சந்தனம், அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக்கூடாது. கோவிலின் உள்ளேயோ, மதில் சுவர்களிலோ எச்சில் துப்புதல் கூடாது. கோவிலின் உள்ளே சண்டை போடுதல், தலை வாரி முடித்தல், சூதாடுதல், சிரித்தல், காலை நீட்டிப் படுத்துக் கொள்ளுதல் கூடாது. சுவாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போகக்கூடாது. சிவ நிர்மால்யங்களைத் தூண்டுதல், மிதித்தல் கூடாது. கோபுரம், கொடிமரம், பலிபீடம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் பொருளைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக்கூடாது. வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது. பிறர் வீட்டில் சாப்பிட்ட அன்று கோவிலுக்குச் செல்வது தவறு.

மரணத்தீட்டு உள்ளவர்களை தொட்டபின் குளிக்காமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது. கருப்பு வண்ண உடை அணிந்து கோவிலுக்குச் செல்லக்கூடாது. அர்ச்சகரிடம் இருந்து வாங்கி திருநீறு பூசிக் கொள்ளும் போது, சிவ, சிவ என்று உச்சரித்தப்படி பூச வேண்டும். ஒரு கையால் திருநீறு, குங்குமம் வாங்குதல் கூடாது. விபூதி, குங்குமம் பெறும் முன்பே அர்ச்சருக்கு தட்சனை கொடுத்து விட வேண்டும்.
சண்டிகேசுவரர் சிவ சிந்தனையில் இருப்பவர். எனவே அவர் முன் நின்று கை தட்டுவது, சொடுக்கு போடுவது கூடாது. அவர் மீது நூலினை போடுவதும், விபூதி, குங்குமத்தை போடுவதும் அபசாரம் ஆகும்.

இறைவனுக்கு சாத்தப்பட்ட திருநீறு, வில்வம், மலர்களை மிதித்து விடக்கூடாது. ஆலயத்துக்குள் யார் காலிலும் விழுந்து வணங்க கூடாது. ஆலய வழிபாட்டுக்கு குடும்பத்தோடு சென்று வருவது நல்லது. பரிகார தலத்துக்கு சென்றால் வேறு யார் வீட்டுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும். யாரிடமும் கடன் வாங்கி ஆலயத்துக்கு செல்லாதீர்கள்.

எந்த ஒரு ஆலயத்துக்கு செல்லும் முன்பும் குல தெய்வ வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும். முக்கிய பூஜைகளை நல்ல நேரம், திதி, ஹோரை பார்த்து செய்வது நல்லது. பொழுது போக்கை மனதில் வைத்துக் கொண்டு ஒரு போதும் ஆலயத்துக்கு செல்லாதீர்கள். ஆலயங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும் பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டுக்கு செல்லாதீர்கள்.

பிரகாரத்தை வலம் வரும்போது அந்தந்த இறை சன்னதிக்கு ஏற்ப சுற்றி வழிபடுங்கள். திரை போட்ட பிறகு பிரதட்சணம் வேண்டாம்.
சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரம் சொல்லும் போது, மற்றவர்களின் அமைதி கெடாதபடி மனதுக்குள் உச்சரிக்க வேண்டும்.
நிறைய வேண்டுதல்களை சொல்லாதீர்கள். மற்றவர்களை கெடுக்கும் நோக்கத்துடன் இறைவனிடம் வேண்டாதீர்கள். முழுமையான மன அமைதியுடன் வழிபாடு செய்வது நல்லது.

மூலவருக்கு தீபாராதனை நடக்கும் போது கண்ணை மூடி வணங்காதீர்கள். இறைவனை கண் குளிர தரிசித்து வழிபடுங்கள். காலையில் விஷ்ணுவையும் மாலையில் சிவனையும் வழிபடுவது நல்லது.

ஆலய சன்னதிகளில் சூடம் ஏற்றுவதை தவிர்ப்பது நல்லது. சூடம் புகை மாசு ஏற்படுத்தும். அதற்கு பதில் நெய் தீபம் சிறந்தது.
சன்னதிக்கு பின்புறம் அமர்ந்து தியானம் செய்வது மிகவும் தவறு. அதை செய்யாதீர்கள். அது போல ஆலயத்துக்குள் இருந்து கொண்டு மற்றவர்களிடம் தற்பெருமை பேசுதல் கூடாது. ஆலயத்துக்குள் வந்து விட்டால் மனம் முழுவதும் இறைவனிடமே இருக்க வேண்டும்.
சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க இயலாவிட்டால், ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக வெளியே அமர்ந்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு காசை தானமாக வழங்குங்கள். கோவிலிருந்து வெளியே வரும் போது தானம் செய்யாதீர்கள்.

கருவறையில் இருந்து அருள்பாலிக்கும் தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யப்படும் போதும் திரையிட்டு சுவாமிக்கு பிரசாதம் வழங்கும் போது தெய்வத்தை வணங்கக்கூடாது. காலை நேரத்தில் கோவிலை சுற்றும் போது உடல் நலம் விருத்தியாகும். மாலை நேரத்தில் கோவிலை வலம் வருவதால் செய்த பாவங்கள் எல்லாம் தொலையும். இரவு நேரத்தில் சுற்றுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. கோவில் உண்டியலில் மறக்காமல் காணிக்கை பணம் செலுத்த வேண்டும்.

கோவில் விளக்குகளில் எண்ணை ஊற்றி எரிய வைத்தல், புதிய விளக்குகளை ஏற்றி வைத்தல், சிறியதாக எரியும் விளக்கு திரிகளை சரி செய்து எரிய தூண்டுவது புண்ணிய காரியமாக கருதப்படுகிறது. ஆலயத்தின் பிரதான வாயில் தவிர மற்ற வாயிலில் கோவிலுக்குள்ளே செல்லக்கூடாது. கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் போது தெய்வத்தை வணங்கக் கூடாது. இரு சக்கர வாகனங்களில் மற்றும் காரில் பயணம் செய்யும் போது கோவிலுக்கு உள்ளே செல்லாமல் வெளியே இருந்து தெய்வத்தை கும்பிடுவது உகந்ததல்ல. இம்மாதிரியான செய்கை தெய்வத்தை அவமதிப்பதாகும்.

சிவன் கோவிலில் முதலில் சிவனை வழிபட்ட பிறகே சக்தியை வழிபட வேண்டும். விஷ்ணு கோவிலுக்குச் சென்றால் முதலில் மகாலட்சுமியை வழிபட்ட பிறகே விஷ்ணுவை வணங்க வேண்டும். விஷ்ணுவை வழிபடும் போது முதலில் பாதத்தை பார்த்து படிப்படியாக முகம் வரை பார்த்து வணங்க வேண்டும். மகாலட்சுமியை வணங்கும் போது முதலில் கண்களை பார்த்து படிப்படியாக பாதம் வரை பார்த்து வழிபாடு செய்தல் வேண்டும்.

ஆலயத்தில் இருந்து வீட்டுக்கு புறப்படும் போது சற்று அமர்ந்து செல்ல வேண்டும். ஏனெனில் சிவாலயங்களில் 7 சிரஞ்சீவிகள் தங்கி இருந்து சிவதரிசனம் செய்பவர்களை அவர்கள் வீடு வரை பின்தொடர்ந்து வந்து மரியாதை செய்வதாக சொல்வார்கள்.
எனவே அவர்களை வணங்கி, நீங்கள் இருங்கள். நாங்கள் சென்று வருகிறோம் என்று விடைபெற வேண்டும். இவ்வாறு முறைப்படி ஆலய தரிசனம் செய்தால் முழுப்பயனையும் பெறமுடியும்.

ஆலய வழிபாட்டின் ஒவ்வொரு அம்சமும் நம் வாழ்வியல் நெறிமுறைகளுடன் தொடர்புடையது..

நன்றி,,,,,,,,,,,,,,மற்றவர்களுக்கு share செய்யுங்கள் பயனாகட்டும்.......

சில வகை சாபங்களை தீர்க்க எளிய பரிகார முறைகள்...!!



எந்த காரணத்தினால் சாபம் கொண்டாலும் அதற்கான தீர்வு தரும் சிறப்பான பரிகாரங்களை செய்தால் அந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். பொதுவாகவே 13 சாபங்கள் இருக்கின்றது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பெற்றோர்களால் ஏற்பட்ட சாபதிற்கு பௌர்ணமி அடுத்த பிரதமை திதியில் சிவபெருமானின் காவலராக இருக்கக்கூடிய #சண்டிகேஸ்வரருக்கு பரிகாரம் செய்தால் அந்தப் பாவத்தில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.

இந்த பரிகாரம் செய்யும் பொழுது சண்டிகேஸ்வரரை எந்த ஒரு தடங்கலும் செய்யாமல் அவர் சன்னதியின் முன் அமர்ந்து தியானம் செய்து பாவங்கள் போகும்படி வேண்டிக் கொள்ளுங்கள் பிறகு அவருக்கு அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.

சுமங்கலியால் ஏற்பட்ட சாபங்களை நீக்குவதற்கு சிவபெருமானின் எதிரில் அமர்ந்திருக்கும் அதிகார #நந்தியை பிரதமை அடுத்துவரும் திருதியை திதியில் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

இந்த நந்திக்கு அபிஷேகம் செய்யும் போது எனது பாவத்தை நீக்கி அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

சகோதர சாபம் விலக வேண்டுமானால் அஷ்டமி திதியில் #பைரவருக்கு வழிபாடு செய்யுங்கள். பைரவர் வழிபாடு செய்தால் சகல விதமான பாவங்கள் தோஷங்கள் இருந்து நாம் விடுபடலாம்.

பாவத்திற்கான பரிகாரங்களை செய்யும் போது பொறுமை மிகவும் அவசியம் மேலும் பரிகாரம் செய்தால் பாவங்கள் குறையும் என்று கருதி மேலும் தவறுகளை செய்யாதீர்கள்.

Monday, February 17, 2020

மனோவசிய மந்திரம்



மனம் ஒரு குதிரை அதில் எப்பொழுதும் எதாவது எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.
அப்படி எண்ண ஓட்டத்தோடு ஓடும் மனதை ஒரு நிலையில் நிறுத்தினால்
எண்ணற்ற காரியங்களை சாதிக்க முடியம்.அதற்கான மந்திரத்தை இன்றைய பதிவில் காண்போம்.

எந்த மந்திரம் செபித்தாலும் எக்காரியம் செய்தாலும் மன ஓர் நிலையோடு மன ஒன்றி செய்தால்தான் சித்தி உண்டாகும்.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற
#அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்தவும்.

மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இம்மந்திரம் உதவும்.
சகலவசியங்களுக்கும் மூலமாய் இருப்பது மனோவசியம் ஆகும்.
முதலில் மனதை எவன் வசியமாக்குகிறானோ அவனுக்கு சகல மந்திரங்களும் சித்தியாகும் சகல தேவதைகளும் வசமாகும்.
தன்னை ஆளக்கற்றுக்கொண்டவன் தரணியை ஆள்வான்.
தன் மனதை வசியம் செய்பவன் சகலத்தையும் வசியம் செய்வான்.

🙏
*ஓம் மருமலர் வாசினி
சர்வஜன ரட்சிணி கௌரிபகவதி
மனோவசியம் குரு குரு சுவாகா. *
🙏

இம்மந்திரத்தை 108 உரு செபித்துவர மனம் அடங்கி வசியமாகும்.
மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஓடாமல் மனம் ஓர் நிலைப்படும்.
எந்த மந்திரம் செபிக்கும் முன்பும் இம்மந்திரத்தை 16 உரு செபிக்க
மன ஓர்நிலை ஏற்பட்டு மந்திரம் விரைவில் சித்தியாகும்.

அனுமனின்_வசியக்_கட்டு......




இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை பலிக்காது. என்கிறார் #அகத்திய மா முனி....

அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர்.

திருநீற்றைக் கையில் எடுத்து மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார் அகத்தியர்.

“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று

அனுதினமும் ஓதும் அனுமந்தா லங்காபுரி ராவண சம்ஹாரா சஞ்சீவி ராயா

ஓடிவா உக்கிரமாக ஓடிவா அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய்

பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு

கொட்டு கொட்டு தாக்கு தாக்கு ஓம் ஆம் இளைய ஹனுமந்தா வா வா

சுவாஹா"

Wednesday, February 12, 2020

ஸ்ரீராமகிருஷ்ண_பரமஹம்சரும்.காளி தேவியும்......



ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்’ என்பதை தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர்.

இந்தியாவின் ஆன்மீகப் பேரொளியை, அமெரிக்கா, ஐரோப்பா எனப் பிறநாடுகளுக்கும் கொண்டுசென்று, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பிய சுவாமி விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்தவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதைத் தன் அனுபவத்தின் மூலமாக உணர்ந்து, அதை வலியுறுத்தியதே ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆன்மீகச் சிந்தனைகள்.....

‘ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்’ என அறியப்படும் காதாதர் சாட்டர்ஜி அவர்கள், 1836 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள், இந்தியாவின் மேற்குவங்காளம் மாநிலத்தில் ஹூக்லி மாவட்டதிலுள்ள “காமர்புகூர்” என்ற இடத்தில் ‘குதிராம்’ என்பவருக்கும், தாயார் ‘சந்திரமணி தேவிக்கும்’ நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
_________________^__________

சிறுவயதில், ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு, கல்வி பயில்வதில் ஆர்வம் இல்லை. மேலும், ராமகிருஷ்ணரின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால்,

தன்னுடைய 17 வயதில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக, தமது அண்ணன் வசித்து வந்த கல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார். அங்கு, அவருடைய அண்ணன் ராஜ்குமார், தட்சினேஸ்வர் காளி கோயிலில் ஒரு புரோகிதராக வேலைப் பார்த்து வந்தார். சிறிதுகாலம் தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக அங்கேயே தங்கி வேலைப்பார்த்து வந்த ராமகிருஷ்ணர், ராஜ்குமார் இறந்தவுடன் காளி கோயிலின் பூசாரியானார்.

#ஸ்ரீராமகிருஷ்ண_பரமஹம்சரின்______________ஆன்மீகப்_பயணம.........
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

தட்சினேஸ்வர் காளி கோயிலில் தினந்தோறும் பூஜை செய்துவந்த ராமகிருஷ்ணருக்கு, அவ்வப்போது பல சந்தேகங்கள் எழுவதுண்டு, ‘தாம் கல்லைத்தான் பூஜை செய்கிறோமா கடவுள் என்று’ நினைத்த அவர், ‘காளி கடவுளாக இருந்தால், தனக்குக் காட்சி அளிக்குமாறு தினமும் பிரார்த்தனைகளையும், தியானமும் செய்தார். எனினும் தன்னுடைய முயற்சிக்கு பலனில்லை என்பதை உணர்ந்த அவர், காளியின் கையில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். அத்தருணத்தில், தன்னுடைய சுயநினைவை இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும், பின்னர் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. இவருடைய நடவடிக்கைகளைக் கண்ட ராமகிருஷ்ணரின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்தனர். அதன் விளைவாக காமர்புகூர் அருகில் உள்ள ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற பெண் தனக்காக பிறந்ததாகவும், அப்பெண்ணே தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறி, அவரையே திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும், பக்தி, ஆன்மீக மார்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணர், தாம்பத்தியம் ஏற்காமல் மனைவியைத் தாயாக மதித்து, தெய்வீக வாழ்வு நடத்தினார்.

பைரவி பிரம்மணி என்ற குருமாதாவிடம் தாந்ரிகம் கற்றுத் தேர்ந்த அவர், பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தத்தைக் கற்றார். இந்திய நாட்டினர் மற்றும் இந்து மதத்தினர் என்றில்லாமல், மனித இனம் முழுமைக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் வேதாந்த உண்மைகளைக் கண்டறிந்தவர் மட்டுமல்ல, பிறருக்கு அதை உணர்த்துவதிலும் வல்லமைப் படைத்தவராக விளங்கினார்.

பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரின் மனத்திலும் ஆன்மீக விளக்கெரிய தூண்டுதலாக அமைந்தார். இவரின் ஆன்மீகச் சிந்தனை உலகெங்கும் பரவி, அவதாரப் புருஷர் என்று அனைவராலும் போற்றப்பட்டார். மேலும், பலர் நாடி வந்து சீடர்களானார்கள். இவர்களுள் நரேந்தரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறப்புக்குப் பிறகு, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடம், இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது.

((((((((ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைத் துளிகள்))))))))

.......ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே, பிறருக்கு போதனை செய்ய முன்வர வேண்டும். அப்பொழுது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும்.

........இல்லற வாழ்வில் இருந்தாலும், இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையைத் நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழவேண்டும்.

........உலக வாழ்வில் ஈடுபட்டாலும், இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.

........சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும், அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு ஆன்மீக விஷயம் எதுவும் உள்ளே போகாது.

........மக்களுள் பெரும்பாலோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை........

#இறுதி_வாழ்க்கை...........

தாம் கற்றறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தது மட்டுமல்லாமல், எப்படி பக்தியோடு இருப்பது என்றும், அவற்றைத் தானும் கடைபிடித்து வாழ்ந்துக்காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், இறுதி நாட்களில் தொண்டை புற்றுநோயால் அவதியுற்றார்.

அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவிலுள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். இருந்தாலும், 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு, உயிர் பிரிந்தது.

உலக நன்மைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் துறவறம் பூண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், இந்தியாவில் வாழ்ந்த “ஒப்பற்ற மனித தெய்வம்” ஆவார்.

இயற்கைப் பேரறிவும், செயற்கைப் பேரறிவும் ஒருங்கே பெற்ற அவர், இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆத்மார்த்தமாக வணங்கும் ஆன்மீக குருவாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

நன்றி,,,,,,தொடரும்...

சிவபெருமான்கிட்ட என்ன கேக்கணும்?~குட்டி கதை!



ஒரு "ராஜா" தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார்.திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும்.
மந்திரி கூட நான்குகாவல்காரர்களையும் அழைத்துச் செல்வார். ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது. காட்டு வழியே வரும்போது திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள். மந்திரியும் காவலர்களும் வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நின்று விடுகிறார்கள். எங்கிருந்தோ "ஆறு இளையர்கள்" வந்து அவர்களை காப்பாற்றுகிறார்கள்.மந்திரியுடன் ஆறு இளையர்களும் "ராஜாவிடம்" வருகிறார்கள். "ராஜாவும்" மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம்,
”உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்று கூறுகிறார்.

"முதல்" இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான்!

"இரண்டாவது" இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான்!

"மூன்றாவது" இளைஞன் தான் வசிக்கும் கிராமத்தில் சாலைகள சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான்!

"நான்காவது" இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான்!

"ஐந்தாவது" இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான்!

அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன "ராஜா",

"ஆறாவது" இளைஞனைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்கிறார்..

இளைஞன் சற்று தயங்குகிறான்,

"ராஜா" மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான்,

"அரசே எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம்.வருடம் ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும்” என்று சொன்னான்."ராஜாவும்" இவ்வளவுதானா என்று முதலில் கேட்டார்..பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை. தெரிந்து கொண்டார்..ஆம். "ராஜா" அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால், அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும். அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். வேலைக்காரர்கள் வேண்டும். அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும். சொல்லப் போனால் முதல் "ஐந்து" இளைஞர்களும் கேட்டது எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும். என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,

இந்தக் கதையில் கூறிய "ராஜாதான்" நம்ம சிவபெருமான்.!

பொதுவாக எல்லோரும் "இறைவனிடம்" கதையில் கூறிய , முதல் "ஐந்து" இளைஞர்களைப் போல், தனக்கு வேண்டியதைக் கேட்பார்கள்!

ஆனால் நாம் கடைசி இளைஞனைப் போல் "இறைவனே" நம்முடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால், மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும்!

சரிதானே...

ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!

Tuesday, February 11, 2020

இந்த மூன்று பொருட்களையும் உங்கள் வீட்டில் ஒன்றாக வைத்துப் பாருங்கள். நம்பமுடியாத அதிசயம் நடக்கும்.



ஒரு வீடு என்றாலே அது கோவில் போல இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட வீட்டை கோவிலாக மாற்றக்கூடும் சக்தியானது பெண்களிடம் தான் உள்ளது. ஒரு பெண் வீட்டை சுத்தமாகவும், பொறுப்பாகவும் பார்த்துக் கொண்டாலே போதும் அந்த வீட்டில் மகாலட்சுமி நிச்சயம் நிரந்தரமாக வாசம் செய்வாள். இதோடு சேர்த்து நீங்கள் சின்ன சின்ன பரிகாரங்களையும் செய்து வந்தால் உங்களுக்கு இன்னும் பல வகைப்பட்ட அதிர்ஷ்டங்கள் தேடி வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதெல்லாம் சின்ன சின்ன பரிகாரங்கள் தான். இதை செய்தால் நல்லதைத் தவிர வேறு ஏதாவது நடந்துவிடுமோ என்று பயப்படும் அளவிற்கு இதில் எதுவும் கிடையாது. நம் வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள்தான் இவை பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய். இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு சிறிய டப்பாவில் போட்டு நம் வீட்டின் சமையலறை, பணம் வைக்கும் இடம் இந்த இரண்டு இடத்தில் வைத்துவிட்டால் போதும். உங்களால் முடிந்தால் வீட்டில் குபேர மூலையில் ஒரு டப்பாவை வைப்பது மிகவும் சிறந்தது. பச்சைக் கற்பூரம் 1, ஏலக்காய் 2, சோம்பு சிறிதளவு இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. சோம்பிலும், ஏலக்காயிலும் வண்டுகள் சேரும். பச்சைக் கற்பூரம் கரைந்து போகும் என்பதால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக்கொள்ளலாம். இந்த மூன்று பொருட்களும் நம் வீட்டில் தனித்தனியாக இருந்திருக்கலாம். ஆனால் சேர்ந்து விட்டால், இதற்கு இருக்கும் மகிமையே தனிதான். வீட்டில் மங்களகரம் நிறைந்து இருப்பதற்கு சுபிட்சமான நிலை ஏற்படுவதற்கும் இது ஒரு நல்ல பரிகாரம். - Advertisement - இதோடு சேர்த்து இன்னும் இரண்டு டிப்ஸ்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு பணவரவை அதிகரிப்பதற்கான வழிமுறைகள். பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு, ஒரு சிறிய துண்டு லவங்கப்பட்டை குச்சியை அந்த நோட்டில் வைத்து நன்றாக சுருட்டிவிடுங்கள். நீங்கள் சுருட்டியது பிரியாமல் இருக்க பச்சை நிற நூலை வைத்து கட்டிக் கொள்ளவும். பத்து ரூபாய் உடன் சேர்ந்த அந்த லவங்கம் பட்டை கொண்ட முடிச்சை உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள். பணவரவு என்றும் நிரந்தரமாக இருக்கும். அடுத்ததாக உங்களது பர்ஸ்ஸில் புதினா இலையை வைத்துக்கொள்வது நல்லது. யாருக்காவது பணம் எடுத்துக் கொடுக்கும் முன், அந்த இலையை நீங்கள் பார்த்துவிட்டு ‘நான் செலவு செய்யும் பணம் வேறு ஒரு வழியில் எனக்கு திரும்பி வந்து விட வேண்டும்’ என்ற நினைப்போடு பணத்தை செலவு செய்தால் நிச்சயம் உங்களுக்கு ‘செலவு வரவு செலவு வரவு’ என்ற கணக்கு சீராகவே இருக்கும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படாது. வாடிய புதினாவை பர்ஸ்ஸில் வைத்துக் கொள்ளக் கூடாது. மாற்றிவிட வேண்டும். இந்த பரிகாரங்கள் எல்லாமே சின்ன சின்ன பரிகாரங்கள் தான். இதை செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். எவ்வளவுதான் பணவரவு இருந்தாலும் அதை சேமிக்கும் தந்திரத்தை நாம் கற்றுக் கொண்டால் தானே வாழ்வில் முன்னேற முடியும். இதெல்லாம் செய்தால் பணக்காரராகி விட முடியுமா? என்ற எண்ணத்தோடு எந்த பரிகாரத்தையும் தயவுசெய்து செய்யாதீர்கள். அதனால் உங்களுக்கு பலன் ஏற்படாது. இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நமக்கும் நல்லது நடக்கும் என்ற எண்ணத்தோடு செய்வதன் மூலமே நம்மால் பலனை முழுமையாக அடைய முடியும். ‘இதையெல்லாம் கூட நம்புகிறார்களா? இதையெல்லாம் யார் செய்வார்கள்? என்று கூட சிலர் சிந்திப்பார்கள். ஆனால் பரிகாரத்தை செய்பவர்கள் நல்ல பலன் பெற்றால், நிச்சயம் அதை வெளியில் கூற மாட்டார்கள். பரிகாரத்தை வெளியில் சொன்னால் அதிர்ஷ்டம் போய்விடும் என்று நினைப்பார்கள். இதனாலேயே பல பரிகாரங்கள் பலருக்கு தெரியாமல் போகின்றது.

Saturday, February 8, 2020

அர்ச்சனைக்கு_தேங்காய்__வாழைப்பழம் ,,,,பயன்படுத்தும்____அர்த்தம்.....



கோவிலுக்குச் செல்லும்போது கையில் கொண்டு செல்லும் பொருட்களில் மிக முக்கியமானது தேங்காய் மற்றும் வாழைப்பழம். கோவில்களில் அர்ச்சனை செய்யும் முன் தேங்காய், வாழைப்பழம் வைத்து படைக்கிறோம்.ஏன்,,,,,

#தேங்காய்_மற்றும்_வாழைப்பழம் :

🍌 தேங்காய் மற்றும் வாழைப்பழம் இரண்டும் இயற்கையின் உன்னதமான படைப்புகளாக கருதப்படுகிறது. கலப்படம் இல்லாத இயற்கை சார்ந்த பொருட்களாக இது இன்றும் மதிக்கப்படுகிறது. பெரும்பாலான இயற்கை பொருட்கள் விதைகளை உடையதாக இருக்கிறது, அவை மீண்டும் ஒரு செடியை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஆனால் தேங்காயும், வாழைப்பழமும் அப்படியல்ல. இது மட்டுமின்றி வேறு சில ஆன்மீக காரணங்களும் இதற்கு உள்ளது.

தேங்காயின் சாராம்சம் :

🍌 தேங்காயின் பயன்களை நாம் அனைவரும் அறிந்ததே. தேங்காயை சாப்பிட விரும்பினால் அதனை உடைத்துதான் ஆக வேண்டும். அதை சாப்பிட்ட பிறகு அதன் வெளிப்புறத்தை தூக்கி எறிந்து விடுவோம். அதை வைத்து மற்றொரு மரத்தை உருவாக்க இயலாது. மரத்தை உருவாக்க விரும்பினால் ஒரு முழுத்தேங்காயால் மட்டுமே முடியும்.

வாழைப்பழத்தின் சாராம்சம் :

🍌 வாழைப்பழத்தை சாப்பிடும்போது பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை வீசிவிடுவோம். வாழை மரத்திற்கு தேவையான பொருட்களை கொடுக்கும்போது அது மற்றொரு மரத்தை தானாக உருவாக்குகிறது.

நற்குணங்கள் :

🍌 வாழைப்பழம் கடவுளுக்கு படைக்கப்படுவதன் அர்த்தம் என்னவெனில் எப்படி இனிமையான பழத்தை சுவையே இல்லாத தோலானது மூடியிருக்கிறதோ அதேபோல நமக்கு நன்மைகளை வழங்கக்கூடிய நம்முள் இருக்கும் பல நல்ல குணங்களை தேவையே இல்லாத சில தீய குணங்கள் மூடியிருக்கின்றன. அவற்றை துறந்தால் மட்டுமே நம்மால் வாழ்வில் இனிமையை உணர முடியும்.

கர்வம் :

🍌 தேங்காயின் மேல் இருக்கும் வெளிப்புற ஓடுதான் நமக்குள் இருக்கும் கர்வமும், அகங்காரமும் ஆகும். எப்போது நாம் நம்மை சுற்றியிருக்கும் கர்வம் என்னும் ஓட்டை உடைக்கிறோமோ அப்போதுதான் நம் மனம் திறந்து அதற்குள் இருக்கும் மென்மையான தேங்காய் போன்ற இனிமையான குணம் வெளிப்படும்.

🍌 அதில் இருக்கும் இனிமையான தண்ணீர் நம் மனதில் இருக்கும் பக்தியை குறிக்கும். அதில் இருக்கும் மூன்று கண்களும் நம்முடைய கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தை குறிப்பதாகும்.

🍌 இதை நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்துவிட்டார்கள். அதனால்தான் தேங்காய் மற்றும் வாழைப்பழம் வைத்து இறைவனை வழிபடும் வழக்கம் இன்றும் நம் வழிபாட்டு முறையில் உள்ளது...

Friday, February 7, 2020

தொடங்கியதை_வளர_செய்யும்_ தை பூசம்..............

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்.

இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தைமாதம் உத்தராயண காலத்தின் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும். பௌர்னமி தினத்தில்; சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்க "தைப்பூச திருநாள்" அமைகின்றது.

இச் சிறப்பு மிக்க இத்தினம் இவ் வருடம் 8.02.2020 நாளை கர்ம காரகன் நாளான #சனி கிழமையில் அமைந்துள்ளது......

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர்.

உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூசையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

#தொட்டது_துலங்கும்_தை_பூசம்....
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்' என்பது பழமொழியாக அமைவதால்;

அன்றைய தினம் குழந்தைகளுக்கு காது குத்துதல், வித்யாரம்பம் எனப்படும் கல்வி தொடக்குதல் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்பெறுகின்றன.

இத் தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது.

சிவசக்தி ஜக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாகவும் ஐதீகம்.

பஞ்ச பூதங்கள் உருவான நாள்:
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகின்றது. சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீரென்றும், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்ஆகியவை உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கின்றோம்.

எனவே உலக இயக்கத்திற்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கின்றோம்

பூசத்தின் அதிதேவதை குருபகவான்:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார்.

இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது.

அத்துடன் வாயுபகவானும், வர்ணபகவானும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமை உணர்த்தப்பட்ட புண்ணியநாள் இத் #தைப்பூச நன்னாளாகும்.

#பூசம்.....

இதனை #புஷ்யம் என்றும் குறிப்பிடுவார்கள். சமஸ்கிருதத்தில் ‘புஷ்டி' என்றால் ‘பலம்' என்று பொருள். அதிலிருந்து மருவியது புஷ்யம்.

மூன்று நட்சத்திரங்கள் புடலங்காய் போலத் தோற்றமளிக்கும். 27 நட்சத்திரங்களில், சிறப்பு வாய்ந்த சில நட்சத்திரங்களில் பூசமும் ஒன்று!

பூசம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் பேசப்படுகின்ற 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் ஆகும்.

இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளி, மென்பேச்சு மற்றும் ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள்; அறிவுசார்ந்த வேலைகளில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பார்கள் என்பது சோதிட நம்பிக்கை ஆகும்.

நட்சத்திர சிந்தாமணி எனும் நூலில் பூசநட்சத்திரத்தை பற்றி கூறுகையில் 'பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல மதிப்பு உடையவர்களாகவும், வழக்கறிந்து வழக்காட வல்லவர்களாகவும் குற்றமற்ற ரத்தினங்களும் ஆபரணங்களும் அணிந்து மகிழ்பவர்களாகவும் விளங்குவார்கள் என்கிறது.

இராமாயணத்தில் #பரதன் #பூசநட்சத்திரத்தில் பிறந்தான் என்பது உலகறிந்ததே. இதைக் கம்பரும் உறுதி செய்கிறார்.

''#புகழ்_உச்சம்_தரும்_பூசம்.......

பூசநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணவாழ்வு சற்று ஏறக்குறைய இருந்தாலும் (பூச நட்சத்திர புணர்ப்பு தோஷமும் காரணம் தானே) ஏதோ ஒரு விதத்தில் சாதனையாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.

சிலர் ஆன்மீகத்தில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். சித்தர்களில் கமல முனி சித்தர் தை பூசத்தில் பிறந்தவர் என்கிறது வரலாறு.

சிலர் அரசியலில் புகழ் பெற்றிருக்கிறார்கள். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் பிறந்தது தை பூசம் என்கிறது நூல்கள். சிலர் ஆடல் பாடல் சினிமா கலை துறையில் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.

சிலரோ தியாகத்தில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். தன் உயிரை கூட துச்சமாக மதித்து பலரை காப்பாற்றி புகழின் உச்சியை அடைந்தவர்களும் இந்த தை பூசத்தில் பிறந்தவர்கள் தான்.

இராமாயணத்தில் அண்ணன் இராமனுக்காக ஆட்சியை தியாகம் செய்த பரதன் பூச நட்சத்திரத்தில் பிறந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக சனிக்கிழமையன்று ஏதாவது ஒரு வேலையை தொடங்குவதென்றால் அந்தவேலை வளரும் என்று பலரும் தொடங்க யோசிப்பார்கள். ஆனால் சனியின் ஆதிக்கத்தில் ஒரு நற்காரியத்தை தொடங்கினால் தர்ம கர்மாதியான சனி அதை பலமடங்கு வளர செய்து புகழ்பெற செய்வார் என்பதுதான் உண்மை.

பூசநட்சத்திர அதிபதி சனி. பூச நட்சத்திரத்தின் அதிதேவதை குரு. இவர்கள் இருவரும் இனைந்த தை பூச தினத்தில் வள்ளலார் ஆரம்பித்த அன்னதானம் இன்றும் கொடிகட்டி பறக்கிறது என்பது கண்கூடு.

உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர் கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே சிவசக்தி பேரருளை நாடி வழிபடுவோம்.

நன்றி,

Tuesday, February 4, 2020

லிங்கமும்_பொருட்களும்_பயன்களும்.....


1)புற்றுமண் லிங்கம்-----மோட்சம் தரும்

2)ஆற்றுமண் லிங்கம்----பூமிலாபம் தரும்

3)பச்சரிசி லிங்கம்-----பொன், பொருள் தரும்

4)அன்ன லிங்கம்------அன்ன விருத்தி தரும்

5)பசுவின் சாண லிங்கம்-------நோய்கள் தீரும்

6)வெண்ணெய் லிங்கம்-----மன மகிழ்ச்சி தரும்

7)ருத்ராட்ச லிங்கம்-----அகண்ட அறிவைத் தரும்

8)விபூதி லிங்கம்-------அனைத்து செல்வமும் தரும்

9)சந்தன லிங்கம்-------அனைத்து இன்பமும் தரும்

10)மலர் லிங்கம்-------ஆயுளை அதிகமாக்கும்

11)தர்ப்பைப்புல் லிங்கம்-------பிறவியிலா நிலை தரும்

12)சர்க்கரை லிங்கம்--------விரும்பிய இன்பம் தரும்

13)மாவு லிங்கம்------உடல் வன்மை தரும்

14)பழ லிங்கம்-------சுகத்தைத் தரும்

15)தயிர் லிங்கம்-------நல்ல குணத்தைத் தரும்

16)தண்ணீர் லிங்கம்------மேன்மைகள் தரும்

மேற்கண்ட பொருட்களில் அவரவர் விரும்பிய பலன்களை அடைய தகுந்த பொருட்களைக் கொண்டு லிங்கம் செய்து அதை வழிபாடு செய்து பின்பு அதனை விட்டு விடலாம்.

Monday, February 3, 2020

கிமு 400ஆம் நூற்றாண்டிலேயே கொரோனா வைரஸ் பற்றி சித்தர் போகர் எழுதிய பாடல்..


"சரவணனடி வாழ் அரவும்
விடப்பற் கொண்டு நெளியும்
வெட்டியதை புசிப்பவர் தம்
உடலில் சுவாசம் திணறும்
ரோகம் சேரும் சர்வ நாசம் நேரும்
உடற் மண்டலம் சிதைந்து
உயிர் போகுமே பறந்து.

பொருள்: முருகன் காலடியில் தவழும் விஷப்பல் கொண்ட பாம்பினத்தை கொன்று உண்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.. உடலில் ரோகம் பிடிக்கும் உடலின் நரம்பு மண்டலம் சர்வ நாசமடைந்து துர் மரணம் நிகழும்.

#முளைக்கட்டிய_வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்....!!



வெந்தயம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி ஏற்படுத்தும் குணம் கொண்டது. வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் தேவையற்ற ஊளைசதை என சொல்லப்படும் கொழுப்புகள் முற்றிலுமாக குறைகின்றது.

வெந்தயத்தில் உள்ள காலக்டோமேனன் என்ற கரையும் நார்ச்சத்தானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

வெந்தயத்திலுள்ள சயோனின் என்ற வேதிப்பொருள் ஆண் ஹார்மோன் உற்பத்தியில் பெரும் பங்கு வகித்து ஆண்கள் பிரச்சனைகளை போக்குகிறது. ஸ்டார்ச் இல்லாத பாலிசாக்கரைடு வகை நார்ச்சத்து வெந்தயத்தில் இருப்பதால் குடலில் உள்ள உணவு செரித்தலுக்கு துணைபுரிகிறது.

தொடர்ந்து காலையில் வெந்தயம் சாப்பிட்டு வருவதால் நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றது.

வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் ஒவ்வாமை குணமாக்குகின்றது.

தொண்டையில் ஏற்படும் அல்சர், புண், வலி மற்றும் கொப்பலங்கள் ஆகியவற்றை வெந்தயம் முற்றிலுமாக நீக்குகின்றது. இருமல் மற்றும் தொண்டை கரகரப்பிலிருந்து நல்ல நிவாரணம் தருகின்றது.

வெந்தயத்தை நீரில் ஊறவைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும். ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.

குலதெய்வத்தை ஆசீர்வாதம் கிடைக்க உதவும் இலுப்ப எண்ணெய் தீபம்




நம் வீட்டில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைக்கும் மூல காரணமாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பெரும்பாலானோருக்கு பணமாகத்தான் இருக்கும். அந்தப் பணம் நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்திருக்க வேண்டும். அனேகமானவர்களின் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை மறந்துவிடுகிறார்கள்.

அதாவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது வேறு. தினம்தோறும் நம் வீட்டில் அந்த குலதெய்வத்தை நினைத்து வழிபடுகின்றோமா, என்றால் பலரின் பதில் இல்லை என்றுதான் வரும். குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும். அது என்ன தீபம் என்பதை தெரிந்து கொள்வோம்.



மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கில், ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு, இலுப்பை எண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து திரித்து, கிழக்கு பக்கம் நோக்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தை ஏற்றும்போது உங்கள் குலதெய்வத்தின் பெயரை உங்கள் மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே ஏற்றுவது அவசியமாகும். இந்த தீபமானது உங்கள் குலதெய்வத்திற்க்கு மட்டும் என்ற எண்ணத்தோடு ஏற்றவேண்டும். இந்த தீபத்தை உங்களால் முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.00 மணியிலிருந்து 5.30 மணிக்குள் ஏற்றுவது இன்னும் சிறந்தது. முடியாதபட்சத்தில் காலை ஏழு மணிக்குள்ளாவது இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள்.

இலுப்பை எண்ணெய்க்கு அனைத்து தெய்வங்களின் சக்தியையும் ஈர்க்கும் தன்மை உடையது. சிவன் கோவில்களில் பெரும்பாலும் இலுப்பை எண்ணெயின் மூலம் தான் விளக்கினை ஏற்றி வந்தார்கள். குத்து விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி வெள்ளைதிரி போட்டு வெள்ளிக்கிழமையன்று பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினால் அஷ்டலட்சுமி அருள் கிடைக்கும். இதே போல் மஞ்சள் திரையிட்டால் குபேரன் அருள் கிடைக்கும். சிகப்பு திரையிட்டால் நம் கடன் தொல்லை தீரும். இப்படியாக இலுப்ப எண்ணெயில் முறையாக தீபத்தை ஏற்றும்போது நம்மால் நல்ல பலனை அடைய முடியும்.

எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும் சரி, வழிபடவில்லை என்றாலும் சரி உங்கள் வீட்டு குலதெய்வத்தை மறந்தும்கூட தயவுசெய்து மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நம் குலத்திற்கு எந்த விதமான கஷ்டங்களும் ஏற்படாமல் பாதுகாத்து வர வேண்டும் என்று, நம் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வம் தான் குலதெய்வம். இப்படிப்பட்ட குல தெய்வத்தை மறப்பது என்பது நம் குடும்பத்திற்கு நல்லது அல்ல.

கடன் தொல்லை தீர்க்கும் பதிகம்*



திருச்சிற்றம்பலம்**

உளுந்தூர்பேட்டை- திருவெண்ணெய் நல்லூர் சாலையில் உள்ளது.திருநெல்வெண்ணெய் என்ற சிவத்தலம்.
இத்தலம் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடல் பெற்றுள்ளது.
இத்தலத்து இறைவர் கிணற்றிலிருந்து பொற்குடம் கிடைக்கச்செய்தவர்.ஆதலால் பொற்குடம் கொடுத்த நாதர் என்றே அழைக்கப்படுகிறார்.
இத்தலத்து பதிகத்தை பாராயணம் செய்த பலர் கடன் தொல்லையிலிருந்து பொற்குடம் கிடைக்க செய்த இறைவர் கடன் தீர்வதற்கும் ஏதாவது ஒரு வழியை காட்டியருளுவார் என்று நம்பிப்பாராயணம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
பாடல்;-
*நல்வெணெய் விழுது பெய்து ஆடுதிர் நாள்தோறும்*,,
*நெல்வெணெய் மேவிய நீரே*,,
*நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்தோறும்*,,
*சொல்வணம் இடுவது சொல்லே.(1).*
*நிச்சலும் அடியவர் தொழு தெழு நெல்வெணெய்க்*,
*கச்சிள அரவசைத்தீரே*,,
*கச்சிள அரவசைத்தீர் உமைக்காண்பவர்*,,
*அச்சமொடு அருவினை இலரே.(2).*
*நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய*,,
*அரைவிரிகோவணத்தீரே*,,
*அரைவிரி கோவணத்தீர் உமை அலர்கொடு*,,
*உரைவிரிப்போர் உயர்ந்தோரே*(3)..
*நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய*,,
*ஊர்மல்கி உறையவல்லீரே*,,
*ஊர்மல்கி உறையவல்லீர் உமை உள்குதல்*,,
*பார்மல்கு புகழவர் பண்பே*(4)..
*நீடிளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய*,,
*ஆடிளம் பாப்பசைத்தீரே*,,
*ஆடிளம் பாப்பசைத்தீர் உமை அன்பொடு*,,
*பாடுளம் உடையவர் பண்பே.(5)*..
*நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய*,,
*பெற்றிகொள் பிறைநுதலீரே*,,
*பெற்றிகொள் பிறை நுதலீர் மைப்பேணுதல்*,,
*கற்றறிவோர்கள் தம் கடனே.(6).**
*நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய*,,
*கறையணி மிடறுடையீரே*,,
*கறையணி மிடருடையீர் உமைக்காண்பவர்*,,
*உறைவதும் உம் அடிக்கீழே.(7)*..
*நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்று*,,
*அரக்கனை அசைவு செய்தீரே*,,
*அரக்கனை அசைவு செய்தீர் உமை அன்பு செய்து*,,
*இருக்கவல்லார் இடர் இலரே*(8)..
*நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்று*,,
*இருவரை இடர்கள் செய்தீரே*,,
*இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு*,,
*பரவ வல்லார் பழி இலரே*(9)..
*நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய*,,
*சாக்கியச்சமண் கெடுத்தீரே*,,
*சாக்கியச்சமண் கெடுத்தீர் உமைச்சார்வது*,
*பாக்கியம் உடையவர் பண்பே*(10)..
*நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை*,,
*நலமல்கு ஞானசம்பந்தன்*,,
*நலமல்கு ஞானசம்பந்தன் செந்தமிழ்**
*சொலமல்குவார் துயர் இலரே(11)*..
திருச்சிற்றம்பலம்,
முற்றும்...

Sunday, February 2, 2020

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!


* வெந்தயம். - 250gm
* ஓமம் - 100gm
* கருஞ்சீரகம் - 50gm

* மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

👉 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.

👉 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

👉 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

👉 இருதயம் சீராக இயங்குகிறது.

👉 சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.

👉 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.

👉 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

👉 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.

👉 கண் பார்வை
தெளிவடைகிறது.

👉 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

👉மலச்சிக்கல் நீங்குகிறது.

👉 நினைவாற்றல் மேம்படுகிறது.
கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

👉 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.

👉 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.

👉 ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

👉 நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.

👍 இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

Saturday, February 1, 2020

நீண்ட நேர தாம்பத்தியம் அமைய காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்!


ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், இயற்கை வழிகளை நாடினால் பாலியல் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். அப்படியான வயாகராவை பானமாக தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்:

தர்பூசணி

தர்பூசணியில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் ஏராளமாக உள்ளது. இது ஆண் குறியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும்.

தேவையான பொருட்கள்:

தர்பூசணி – 1 எலுமிச்சை – 3

தயாரிக்கும் முறை

தர்பூசணியை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட வேண்டும். குறிப்பாக தர்பூசணியில் உள்ள வெள்ளைப் பகுதியை தவறாமல் சேர்க்க வேண்டும்.

பின் அதை நன்கு அரைத்து 1 லிற்றர் அளவு ஜூஸ் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, கலவை பாதியானதும் இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து, குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

உட்கொள்ளும் முறை

சக்தி வாய்ந்த இந்த வயாகராவை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூனையும், இரவில் படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூனையும் சாப்பிட வேண்டும்.

குறிப்பு

இந்த நேச்சுரல் வயாகராவில் இனிப்பு இல்லை என்பதற்காக, அதில் சர்க்கரையோ அல்லது தேனையோ தப்பித்தவறியும் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால், இதன் முழு பலனையும் பெற முடியாது.

பக்கவிளைவுகள்

இந்த நேச்சுரல் வயாகரா பானத்தை இதய பிரச்சனைகள், உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம், பக்கவாதம், கண் பிரச்சனைகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளோர் எவ்வித அச்சமும் இல்லாமல் உட்கொள்ளலாம். பக்கவிளைவுகள் ஏதுமற்ற இயற்கை வயாகரா பானம் இது.

பஞ்சலோகத்தை_அணிவதற்கான_பலன்கள்_பயன்கள்


#தெய்வீக #காரணங்கள்..!🔱

ஐம்பொன், பஞ்சலோகம், பஞ்சதாது என்ற பெயர்கள் குறிப்பிடும் பொருட்களின் உள்ளர்த்தம் நமக்கு எளிதாக புரியக்கூடியதுதான்.பஞ்சலோகத்தை அணிவதற்கான தெய்வீக காரணங்கள்..!

பஞ்ச பூதங்கள் மற்றும் ஐம்புலன்களின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய உலோகங்களின் சேர்க்கையாக அது இருக்கிறது.

நமது உடல் மற்றும் ஆன்மிக ரீதியான நல்ல மாற்றங்களுக்கும், அந்த உலோகங்களின் கூட்டுச்சேர்க்கை நம்மால் பல விதங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பஞ்சதாது என்று சொல்லப்படும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட கவசத்தை ஸ்ரீகிருஷ்ணர், அர்ச்சுனனுக்கு தந்ததாக மகாபாரத செய்தி உண்டு.

சாதாரண கவசத்தை விடவும் பஞ்சலோக கவசமானது, உடல், உள்ளம் மற்றும் உயிர் ஆகிய, மூன்று விதங்களிலும் பாதுகாப்பை தரக்கூடிய வகையில் கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு தரப்பட்டது.

#உடல்_நலத்தில்_உலோகங்கள் :

மனித உடலின் நரம்பு இயக்கங்களில் ஏற்படும் மின் தூண்டுதல் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, விரல்களில் அணியும் மோதிரம் அல்லது மணிக்கட்டில் அணியும் காப்பு ஆகிய வடிவங்களில் ஐம்பொன் ஆபரணங்கள் செய்து அணியப்பட்டன.

அதன் மூலம், உடலில் உள்ள குறிப்பிட்ட நரம்பு முடிச்சுகளை தொட்டவாறு இருக்கும் உலோக வடிவங்கள் வாயிலாக ‘எலக்ட்ரிக் ஸ்டிமுலேஷன்’ என்ற மின் தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. அதன் வாயிலாக பிரபஞ்ச ஆற்றலை ஆகர்ஷணம் செய்து ஆத்ம சக்தி, மனோ சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை பெறக்கூடிய அனுபவம் ஏற்பட்டது.

மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி, நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் நம் முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது.

இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து, உடலின் முக்கியமான உறுப்புகளுக்கு கடத்திச் செல்கிறது.

ஐம்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை எடுத்து, ஒரு வேதியியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரம்பு புள்ளிகள் வழியாக அனுப்பி, நம்முடைய உடலின் உறுப்புகளை நல்ல விதமாக இயங்கச் செய்யும்.

குறிப்பாக, ஒருவருக்கு உகந்த நவரத்தின வகைகள் அல்லது உப ரத்தின வகைகள் ஆகியவற்றை, பஞ்சலோகத்தில் பதித்து அணிவது அதிர்ஷ்டத்தை அளிக்கக்கூடிய சிறந்த முறையாகச் சொல்லப்படுகிறது.

உடல் முழுவதும் இயங்கிவரும் பிராண சக்தியை பலப்படுத்தி, உடலில் இருக்கும் உலோக சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்ட, ஐம்பொன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, அதன் பிரசாதத்தை உண்டால், உடலின் பிராண சக்தி முழுமைப் படுத்தப்படும் என்று பெரியோர்கள் கருதினர்.

பொதுவாக நமது உடல் பிண்டம் என்று சொல்லப்படும். பூமி உள்பட பிரபஞ்சம் அனைத்தும் அண்டம் எனப்படும்.

‘அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்’ என்பது சித்தர் வாக்கு. இதனை அன்றே உணர்ந்த அறிவின் வழி சார்ந்த நமது முன்னோர்கள், தங்கள் உடலில் எப்போதும் அந்த உலோகங்கள் பஞ்ச லோகங்கள் வடிவத்தில் இருக்கும் வண்ணம் ஐம்பொன் ஆபரணங்களை அணிந்து பயன்பெற்றனர்.

#கிரக_சக்திகள் :

பஞ்சலோகத்தின் மூலம் ஐந்து கிரகங்களின் சக்தி வெளிப்படுவதாக நமது முன்னோர்கள் கண்டுள்ளனர்.

அவர்களது கருத்தின்படி, பஞ்சலோகத்தில் உள்ள...
1)தங்கம் .....#குருவின்_சக்தியையும்,
2)வெள்ளி ..#சுக்ரனின்_சக்தியையும்,
3)செம்பு ......#சூரியனின்_சக்தியையும்,
4)இரும்பு ....#சனியின்_சக்தியையும்,
5)ஈயம் ........#கேதுவின்_சக்தியையும் வெளிப்படுத்துகிறது.

1 )#வியாழன் எனப்படும் குரு கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும்,

2)#சனி கிரகத்தின் ஆற்றலைபெற இரும்பையும்,

3)#சுக்ரன் என்ற வெள்ளி கிரகத்தின் ஆற்றலை பெற வெள்ளியையும்,

4)#சூரியனின் ஆற்றலை பெற செம்பையும்,

5)#கேது கிரகத்தின் ஆற்றலை பெற ஈயத்தையும் பயன்படுத்துவது நமது முன்னோர்களது அறிவியல் சார்ந்த பார்வையாக இருந்து வந்தது.

நவக்கிரகங்களின் அலை இயக்கமானது மனிதர்களது சுபாவத்தையும், அவர்களது செயல்களையும் தீர்மானிக்கிறது என்பதை,
ஜோதிடம் என்ற விஞ்ஞானத்தின் வாயிலாக அறிகிறோம்.

பஞ்சலோகம் அல்லது அஷ்டலோகம் கொண்டு செய்யப்பட்ட மோதிரம் அல்லது காப்பு வடிவத்தில் அணிந்தால் சம்பந்தப்பட்ட கிரக ஆற்றலை அது ஈர்ப்பதாக அமைகிறது.

‌பஞ்சலோகத்தை அணிந்து நாமும் பலன் பெறலாமே..!.....#ஜெய்_ஸ்ரீராம்

#குறிப்பு:பஞ்சலோக காப்பு...பூம்புகார், மற்றும் காதிகிராப்ட்டில் கிடைக்கலாம்.

ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம். கதை

ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.

அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.

அதிலும் குறிப்பாக..

ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.

வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.

அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.

ஆகவே...

சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்...

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.

ஆனால்...

அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.

முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து...

ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.

எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.

முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.

ஆனால்...

வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது.

அதில் அவனும் காயம் அடைந்தான்.

‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா..?

என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்...

"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது..

அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்..’’

என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.

உடனே பூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.

அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது.

பூனை இருப்பதை அறிந்த எலி..

தயங்கித் தயங்கி வெளியே வந்தது.

கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.

எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது..

மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.

ஆனால்....

இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.

ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.

மறுநாள்....

வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.

சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது.

*சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.*

இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,...

"எப்படி இந்த முரட்டுஎலியைக் கொன்றாய்?

இதில் என்ன சூட்சுமம உள்ளது....?’’

எனக் கேட்டன.

"ஒரு சூட்சுமமும் இல்லை.

*நான் பொறுமையாக காத்திருந்தேன்.*

நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது.

ஆகவே..,

அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.

நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.

ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.

எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.

*"வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான்!’’* என்றது அந்த கிழட்டு பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,...

‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.

என் நகங்கள் கூட கூர்மையானவை.

ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

*’’உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது..."*

எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.

ஆகவே...

ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.

ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.

"ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,

அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.

பலவான் தனது பேச்சிலும்,செயலிலும், அமைதியாகவே இருப்பான்..

உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்..

ஆனால்...

தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’

என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதை பொருந்தக்கூடியதே.

மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் கிழட்டுப் பூனையிடம் கிடையாது.

ஆனால்...

அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது.

காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.

வெற்றியை தீர்மானிப்பது வெறும் ஆயுதங்களில் மட்டுமே இல்லை.

மனத் தெளிவும், நிதானமும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதேயாகும்.

காத்திருக்கப் பழகுங்கள் !

திருக்குறள்;485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்

விளக்கம்
எண்ணிய காரியத்தை வெற்றியுடன் முடிக்கும் திறன் உள்ளவர்கள்,
மனக்கலக்கமின்றி, தமக்கு வலிமை மிகுதியாய் இருப்பினும் தம் வினைக்கேற்ற காலத்தையே சிறப்பாகக் கருதி, அது வரும்வரை அமைதியாகவும் பொறுமையாகவும் காத்திருப்பர்..