Monday, March 30, 2020

அபிஜித் நக்ஷத்திரம் அறிவோமா?


பல்வேறு சூட்சமங்களை உள்ளடக்கிய உன்னதமான கலை தான் ஜோதிடம்.எந்த மனிதராலும் ஆரூட சூட்சமங்களை அவர்தம் ஆயுளுக்குள் அறிந்து விட முடியாது.அதனாலேயே ஜோதிடத்தை சிலர் பழிக்கிறார்கள். ஆயினும் இது அழிவற்ற சாஸ்திரம் என்பது உறுதி.

சரி... இன்று நாம் அதிகம் கேள்வி படாத ஒரு நக்ஷத்திரம் குறித்து காண்போமா??அந்த நக்ஷத்திரத்தின் பெயர் அபிஜித் என்பதாகும்.இந்த நக்ஷத்திரத்திற்கு துருவ நக்ஷத்திரம், அகத்தியர் நக்ஷத்திரம் மற்றும் திரிசங்கு நக்ஷத்திரம் என்றும் பெயருண்டு.இதை அறிவியல் மற்றும் ஆன்மீக பூர்வமாக அணுக முயற்சி செய்துள்ளேன்.பார்ப்போம் வாருங்கள்.

புராண வரலாறு.

பெரும்பாலும் இந்த கதையை சொல்ல பலருக்கு தயக்கம் உண்டு.இருப்பினும் கதையில் உள்ள நேர்மறை விஷயங்களை உள்வாங்கி கொள்வோம் நீர் கலந்த பாலில் பாலை மட்டும் உறிஞ்சும் அன்னப்பறவை போல.

சந்திரனின் சல்லாபத்தால் குரு பகவானின் மனைவியான தாரையை கவர்ந்து சில காலம் வாழ்ந்து அந்த தாரைக்கு அபிஜித் என்று ஒரு நக்ஷத்திரம் ஒதுக்கினார் என்றும் பிறகு சிவ பெருமான் கோபத்திற்கும் தக்ஷணனின் சாபத்திற்கும் ஆளாகினார் என்றும் தாரை மூலம் புதனிற்கு தகப்பன் ஆனார் என்பதும் புராண வழி செய்தி.தரமிழந்து தாரம் மறந்து தாரையை கவர்ந்ததால் வளர்ந்து தேய்ந்து சந்திரன் அல்லல் படுகிறார் என்று தோன்றுகிறது. இதுவே சந்திரன் கெட்டது பெண்ணாலே என்னும் சொல்லாடலின் சூட்சமம். தாரை குரு பகவானிடமே மன்னிப்பு கேட்டு சென்ற பிறகு அபிஜித் தனது நக்ஷத்திர அந்தஸ்தை இழந்தது என்று உரைப்போரும் உண்டு.

இந்த கதை சொல்லும் சேதி யாதெனில் மனைவியர் இருக்க பிறன் மனை நோக்கிய சந்திரன் செய்ததும் தவறு.குரு பிரஹஸ்பதி லௌகீக வாழ்வில் நாட்டமில்லாமல் சந்நியாசி போல் இருந்தமையும் தவறு. திருமண வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதை போல கவனமாக கையாள வேண்டும் என்பதற்காக இந்த கதை நமக்கு கூறப்படுகிறது.

அபிஜித் நக்ஷத்திரம்.

அறிவியல் பூர்வமாக பார்த்தோமேயானால்
வான்வெளியில் லைரா(lyra) என்னும் நக்ஷத்திர கூட்டத்தில் வேகா என்னும் நக்ஷத்திரம் தான் அபிஜித் என அறியப்படுகிறது.இது நக்ஷத்திர மண்டலங்களில் ஐந்தாவது அதிக ஒளி பொருந்திய நக்ஷத்திரமாக கருத படுகிறது. மகர ராசி மண்டலத்தில் வெறும் நான்கு பாகைகளுக்குள் அடங்கி விடுகிறது.நான்கு வீதிகள் ஒன்றினையும் இணைப்பு போல இந்த நக்ஷத்திரம் அமைந்துள்ளது.

மகர ராசியின் உத்திராடம் மற்றும் திருவோணம் ஆகிய இரண்டிற்கும் இடையில் உள்ள நக்ஷத்திரம் இதுவாகும்.வேத ஜோதிட துவக்க காலகட்டத்தில் தசா புத்தி கணிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியதால் இந்த நக்ஷத்திரம் மேலே கூறிய உத்திராடம் திருவோணம் நக்ஷத்திரங்களில் உள்ளடக்கப்பட்டது.

அபிஜித் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் யார்?

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சந்தேகம் ஏற்படலாம்.நாம் அபிஜித் நக்ஷத்திரத்தில் பிறந்துள்ளோமா என்று.தோராயமாக கூற வேண்டும் என்றால் உத்திராடம் நான்காம் பாதம் மற்றும் திருவோணம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்களாக இருந்து உத்திராடம் நக்ஷத்திரத்தில் பிறப்பு தசையான சூரிய தசை அதிக பட்சம் பதினொன்று மாதங்கள் இருந்தாலோ திருவோணம் நக்ஷத்திரத்தில் பிறந்து பிறப்பு தசையான சந்திர தசை குறைந்த பட்சம் எட்டரை ஆண்டுகள் இருந்தாலோ அவர்கள் அபிஜித் நக்ஷத்திரத்தில் பிறந்துள்ளார்கள் என்று பொருள்.

அபிஜித் நக்ஷத்திரத்தின் சிறப்பம்சங்கள்.

அபிஜித் நக்ஷத்திரத்தின் பொருள் வெல்ல முடியாதவன் என்பதாகும்.மஹா பாரதத்தில் துரியோதனன் குருஷேத்ர போரை அபிஜித் நக்ஷத்திரத்தில் துவங்கவே விரும்பினான்.அதை உணர்ந்து கொண்ட கிருஷ்ண பரமாத்மா அபிஜித் நக்ஷத்திரத்தை வான்வெளியில் கௌரவர்கள் கண்ணில் படாமல் மறைத்து போரை திருவோண நக்ஷத்திரத்தில் கௌரவர்களை துவங்கும் படி சூழ்நிலையை ஏற்படுத்தினார்.ஏனெனில் ஒருவேளை துரியோதனன் அபிஜித் நக்ஷத்திரத்தில் போரை துவக்கி இருந்தால் நிச்சயமாக அவனே போரை வென்று இருப்பான்.அதை கிருஷ்ணரும் உணர்ந்து இருந்தார்.இந்த நக்ஷத்திரத்தை விஷ்ணுவே ஆளுமை செய்கிறார்.

மேலும் படைப்பு கடவுளான பிரம்மதேவன் இந்த நக்ஷத்திரத்தில் அவதரித்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மாத்ரு காரகனியாகிய சந்திரனும் ,பித்ரு காரகனாகிய சூரியனும் ஒருங்கே ஆட்சி செய்யும் நக்ஷத்திரம் இதுவென்று கூறப்படுகிறது. ஆயினும் சூரியனே இந்த நக்ஷத்திரத்தின் நாதன் என்று அறியப்படுகிறது.

மேலும் ஐப்பசி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் கேட்டை நக்ஷத்திரத்தில் குந்தி தேவி தர்மனை தர்ம தேவனை நாதனாய் நினைத்து பெற்றெடுத்தாள் என்று கூறுகிறது பாரதம்.அதனாலேயே பன்னிரண்டு மணிக்கு முன்பு மற்றும் பின்பு வரும் பன்னிரண்டு நிமிடங்களும் அபிஜித் முகூர்த்தம் என்று அறியப்படுகிறது. அந்த முகூர்த்தம் விசேஷமானதாக கருத படுகிறது.

அபிஜித் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்.

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் பிரச்சனைகளை சமாளிக்கும் ஆற்றல் மிக்கவர்களாகவும்,படிப்பளிகளாகவும் படைப்பாளிகளாகவும், பேரும் புகழும் அடையும் அதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள்.பொருளாதார முன்னேற்றம் என்பது 27 வயதிற்கு பின்பாகவே அமையும்.அதாவது குரு தசையின் இரண்டாம் பகுதியில் இருந்து முன்னேற்றங்கள் துவங்கும்.

உயர் பதவி என்பது தானாகவே அமையும்.ஆயினும் சனி சந்திரனோடு கூடினால் கடுமையாக தொழிலில் பிரச்சனைகளை தருவார்.ஆயினும் தூர தேசத்தில் பொருளீட்டும் சூழல் உருவாகும்.எத்துணை குழந்தைகள் இருந்தாலும் மூத்த பிள்ளைகள் மீதே பாசம் அதிகம் இருக்கும்.

பெண்கள் இந்த நக்ஷத்திரத்தில் பிறந்திருந்தால் அவர்கள் ஆளுமைமிக்க பதவியில் இருப்பார்கள்.ஆயினும் முடி முதல் அடி வரை என அனைத்து பணிகளையும் கூச்சமில்லாமல் செய்வார்கள்.துரதிர்ஷ்டவசமாக சில தொல்லைகளுக்கு ஆளாகி ஆண்களை வெறுப்பார்கள்.. இருப்பினும் அது சரிப்படுத்தப்பட்டு இருபத்தியேழு வயதிற்கு மேல் திருமண யோகம் ஏற்பட்டு நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.

குழந்தைகளுக்கு தொல்லைகள் வராத வண்ணம் இருக்க பெருமாள் சந்நிதியில் குழந்தைகளை பெருமாளுக்கு தத்து கொடுத்து வாங்குவது அவர்களுக்கு ஏற்படும் கண்டதை குறைக்கும்.

அபிஜித் நக்ஷத்திரம் குறித்து அறிந்தவற்றை கூறி உள்ளோம்.அடுத்து உப கிரகங்களான மாந்தி,குளிகன் குறித்து காண்போம்.

......நன்றி.......

தடைப்படுகிறதா இதயத் துடிப்பு?



அறிகுறிகள்
இப் பிரச்சினைக்கு மூன்று நிலைகள் உள்ளன. முதலாம் நிலை ஆபத்து இல்லாதது. அப்போது கடுமையான சோர்வு தலைகாட்டும். உடல் பலவீனமாக இருக்கும். கிறுகிறுப்பு ஏற்படும். இவ்வாறான அறிகுறிகள் காணப்படும்போது மருந்து பாவித்தால் அவ்வறிகுறிகள் சீராகிவிடும். அடுத்த கட்டத்தில் சிறிய அளவில் அவ்வப்போது மயக்கம் வரும். மனக்குழப்பமும் ஏற்படலாம். தற்காலிகமாக சுயநினைவை இழக்கலாம். இந்த இரண்டாம் நிலைக்குப் பெரும்பாலும் மருந்து சிகிச்சை பலன் அளிக்கும். இல்லாவிட்டால், ‘பேஸ்மேக்கர்’ (Pacemaker) கருவியைப் பொருத்த வேண்டி இருக்கும்.
மூன்றாம் நிலைதான் ஆபத்தானது. இந்நிலைமையில் இதயம் துடிப்பதைத் திடீரென்று முழுமையாக நிறுத்திவிடும். அப்போது ஆழ்ந்த மயக்கம் வரும். சுயநினைவே இருக்காது. மூச்சுத்திணறல் ஏற்படும். சிலருக்கு இதயத்தின் சில பகுதிகள் தற்காப்புக்காகத் துடிக்கும். அப்போது அவருக்கு மயக்கம் தெளிந்தாலும் அடிப்படைப் பிரச்சினை சரியாகாது. மருத்துவ உதவி அவசரமாகத் தேவைப்படும். பலருக்கு உடனே ‘செயற்கைச் சுவாசம்’ கொடுத்தால்தான் இதயத் துடிப்பு மீளும். அப்போதுகூட இதயம் நிமிடத்துக்கு 30-க்கும் குறைவாகவோ அதிவேகமாகவோ துடிக்கும். இந்த இரண்டு நிலைமைகளும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். அதைத் தவிர்க்க பயனாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எப்படி மாரடைப்பு வந்தவருக்கு முதல் ஒரு மணி நேரம் பொன்னானது, அதுபோன்று இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டவருக்கும் அந்த நேரம் பொன்னானது. அந்த நேரத்துக்குள் சிகிச்சை கிடைத்துவிட்டால் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு.
சிலர் நினைப்பது போன்று மாரடைப்பும் இதயத் துடிப்பு முடக்கமும் ஒன்றல்ல. இதயத் தசைகளுக்கு குருதியை எடுத்துச் செல்லும் தமனி இரத்தக் குழாய்கள் அடைத்துக்கொள்ளப்படுவதால் தான் மாரடைப்பு ஏற்படும். இதயத் தசைகளுக்கு மின்னோட்டம் தடைப்படுவதால் ஏற்படுவது தான் இதயத் துடிப்பு முடக்கம். அதேநேரம் மாரடைப்பு வந்தவருக்கு இதயத் துடிப்பு முடக்கமும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது.
சிகிச்சை
இந்தப் பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களுக்கு மருந்து சிகிச்சையுடன், தற்காலிகமாக ஒரு பேஸ்மேக்கர் கருவியை உடனே பொருத்தி அவரது இதயத் துடிப்பு முறைப்படுத்துகின்றது. பின்னர் நிரந்தரமாகவே ஒரு பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தி இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றன. இதன் பயனாக இயல்பு வாழ்வுக்கு திரும்பிவிடலாம்.
‘பேஸ்மேக்கர்’ என்றால் என்ன?
இதயத் துடிப்பு குறைந்தவர்களுக்கு இதயத்தைச் செயற்கை முறையில் தூண்டி, மீண்டும் அதைச் சீராகத் துடிக்கச் செய்யும் கருவிக்கு ‘செயற்கை இதய முடுக்கியே (Artificial Pacemaker) எனப்படுகின்றது. இதயத்தில் மின்கணு செய்யும் வேலையை இது செய்கிறது. இது பார்ப்பதற்கு ஒரு தீப்பெட்டி போலிருக்கும். எடை 30கிராம். இதில் பேட்டரி, ஜெனரேட்டர், சிறிய மின் சுற்று, மின்கம்பிகள் ஆகியவை இருக்கும்.
இதனை பாதிக்கப்பட்டுள்ளவருக்கு மயக்க மருந்து கொடுத்து, சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மார்பில் இடது அல்லது வலது காரை எலும்புக்கு (Clavicle) அருகில், அதிக ஆழம் இல்லாதவாறு இதைப் புதைத்து, மேற்தோலைத் தையல்போட்டு மூடிவிடுகின்றனர். இதயத்துக்குச் செல்லும் கழுத்துப் பெருஞ்சிரை (Carotid vein) குருதிக் குழாய் வழியாக இதன் மின்கம்பிகள் இதய அறைகளுக்குள் கொண்டுசெல்லப்பட்டு பொருத்தி விடப்படுகின்றன. இது ஒரு கடிகாரத்தைப் போன்று இயங்கிக்கொண்டிருக்கும். இதில் இதயம் எத்தனை தடவை துடிக்க வேண்டும் என்று நிரல் எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ப மின்தூண்டல்களை உருவாக்கி இது இதயத்துக்கு அனுப்பும். அதனால் இதயம் தூண்டப்பட்டு துடிப்பு சீராகிவிடும். இதில் உள்ள மின்கலத்தின் ஆயுள்காலத்தைப் பொறுத்து குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் இதை மாற்றிக்கொள்வது அவசியமானது.

Saturday, March 28, 2020

திடீர் பண வரவிற்கு சித்தர்களால் சொல்லப்பட்டது



(1) தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையைசெய்து வர திடீர் பண வரவு உண்டாகும்-செல்வ நிலை உயரும். என மஹா மந்திர போதிணி எனும் அபூர்வ ரகசிய நூல் கூறுகிறது.

இருபது மொச்சை கொட்டைகளை சிறிது சக்கரை சேர்த்து வேக வைக்கவும். குழைந்து விடக்கூடாது. முழு மொச்சைகளாக தெரிய வேண்டும். அவற்றை ஒரு வெள்ளை துணி அல்லது கைகுட்டையில் இட்டு முடிச்சு அவிழுமாறு லேசாக கட்டிக்கொள்ளவும் பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை ஆறு முறை கூறி முடித்து அதை ஓடும் நீர்நிலைகளில் விட்டு விடவும். கைமேல் பலன் தரும் சிறந்த தாந்த்ரீக பரிகாரம் இது.

மந்திரம் :
***********
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத ஸகல சௌபாக்யம் தேஹி தேஹி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ

Friday, March 27, 2020

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊர்கள்


அச்சுவேலி
அராலி
அரியாலை
அளவெட்டி
ஆவரங்கால்
ஆனைக்கோட்டை
இணுவில்
இடைக்காடு
இருபாலை
இளவாலை
உடுவில்
உரும்பிராய்
ஊரெழு
ஏழாலை
கட்டுடை
கந்தர்மடம்
கந்தரோடை
கரந்தன்
கரையூர்
காங்கேசன்துறை
குப்பிளான்
குருநகர்
கீரிமலை
குரும்பசிட்டி
கொக்குவில்
கொல்லன்கலட்டி
கொழும்புத்துறை
கோண்டாவில்
கோப்பாய்
சங்கானை
சங்குவேலி
சண்டிலிப்பாய்
சித்தன்கேணி
சில்லாலை
சுண்டிக்குழி
சுதுமலை
சுழிபுரம்
சுன்னாகம்
தாவடி
திருநெல்வேலி
தெல்லிப்பழை
தொல்புரம்
நந்தாவில்
நல்லூர்
நவாலி
நாவாந்துறை
நாயன்மார்கட்டு
நீர்வேலி
நீராவியடி
பண்டத்தரிப்பு
பண்ணாகம்
பலாலி
பன்னாலை
பனிப்புலம்
பாசையூர்
புத்தூர்
புன்னாலைக்கட்டுவன்
பொன்னாலை
மல்லாகம்
மயிலிட்டி
மாசியப்பிட்டி
மாதகல்
மாவிட்டபுரம்
மானிப்பாய்
மூளாய்
யாழ்ப்பாண நகரம்
வசாவிளான்
வடலியடைப்பு
வட்டுக்கோட்டை
வண்ணார்பண்ணை
அந்தணன் திடல்
அறுகுவெளி
இடைக்குறிச்சி
உசன்
எழுதுமட்டுவாள்
ஒட்டுவெளி
கச்சாய்
கைதடி
கெருடாவில்
கேரதீவு
கொடிகாமம்
சரசாலை
சாவகச்சேரி
தச்சன்தோப்பு
நாவற்காடு
நாவற்குழி
நுணாவில்
பளை
மட்டுவில்
மந்துவில்
மறவன்புலவு
மிருசுவில்
மீசாலை
முகமாலை
வரணி
விடத்தல்
அம்பன்
அல்வாய்
ஆத்தியடி
ஆளியவளை
உடுத்துறை
உடுப்பிட்டி
உடையார்துறை
கட்டைக்காடு
கரணவாய்
கரவெட்டி
கம்பர்மலை
கற்கோவளம்
குடத்தனை
குடாரப்பு
கெருடாவில்
சுண்டிக்குளம்
செம்பியன்பற்று
வதிரி
வளலாய்
தும்பளை
துன்னாலை
தொண்டமனாறு
நல்லதண்ணித்தொடுவாய்
நாகர்கோயில்
நெல்லியடி
பருத்தித்துறை
புகலிடவனம்
புலோலி
பொலிகன்டி
மணல்காடு
மருதடிக்குளம்
முள்ளியான்
வண்ணான்குளம்
வல்லிபுரம்
வல்வெட்டித்துறை
வல்வெட்டி
வல்லை
வியாபாரிமூலை
வெற்றிலைக்கேணி
இறுப்பிட்டி
குறிகாட்டுவான்
பெருங்காடு
மடத்துவெளி
களபூமி
காரைநகர்
கோவளம்
தங்கோடை
அல்லைப்பிட்டி
ஊர்காவற்றுறை
கரம்பொன்
சரவணை
சுருவில்
நாரந்தனை
பரித்தியடைப்பு
புளியங்கூடல்
மண்கும்பான்
வேலணை
ஆலங்கேணி
களபூமி
காரைநகர்
குந்துவாடி
கோவளம்
சாமித்தோட்டமுனை
தங்கோடை
தீர்த்தக்கரை
நெடுந்தீவு
பெரியான்துறை
பூமுனை
மாவலித்துறை
வெள்ளை
எழுவைதீவு
நயினாதீவு
மண்டைதீவு
கோண்டாவில்
பொற்பதி
கல்வியங்காடு
கரவெட்டி
கூழவடி
அனலைதீவு
சிறுபிட்டி
வட்டுக்கோட்டை
அச்செழு
வறுத்தலைவிளான்
மடத்தடி
மல்லாகம்
நாவாந்துறை

வாயுப் பிரச்சினை.



இது மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைதான். என்றாலும் எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான பிரச்சினை

‘நாகரிக உணவுப் பழக்கம்’என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்சினையாக இது உருமாறிவிட்டது.

வாயுத் தொல்லை எது?

அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப்பாதைப் பிரச்சினையை அலோபதி மருத்துவம் ‘வாயுத் தொல்லை’(Flatulence) என்கிறது.

ஆனால், பொதுமக்கள் வாயுக்குத் துளியும் தொடர்பில்லாத நெஞ்சுவலி, முதுகுவலி, முழங்கால் மூட்டுவலி, விலாவலி, இடுப்புவலி, தோள்பட்டை வலி என்று உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.

உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப் பாதை, உணவுப் பாதை இந்த இரண்டு இடங்களில் மட்டுமே வாயு இருக்க முடியும்.

பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் தலை முதல் பாதம்வரை வாயு சுற்றிக்கொண்டி ருப்பதில்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து.

வாயு எப்படி வருகிறது?

நாம் அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் புட்டிப் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கிவிடுகிறோம்.

இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.

அடுத்ததாக, குடலில் உணவு செரிக்கும்போது அங்கு இயல்பாகவே இருக்கும் தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் எனும் செயல்முறை மூலம் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.

தினமும் சுமார் 2 லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, இது பெரும்பாலும் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது.

சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. வாயுதான் இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் விஷயம்தான். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம்.

கெட்ட வாடை ஏன்?

சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை.

அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது.

சத்தம் ஏன் கேட்கிறது?

பலருக்குச் சத்தமில்லாமல் வாயு வெளியேறுகிறது. சிலருக்குச் சத்தத்துடன் அது வெளியேறுகிறது. காரணம் என்ன? பொதுவாக ஹைட்ரஜனும் மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் ‘புஸ்வாணம் சத்தம்’ மட்டுமே கேட்கும். இந்தக் கலவை அதிகமாகிவிட்டால் ‘அணுகுண்டு வெடியைப் போன்ற சத்தம்’கூடக் கேட்கலாம்.

வாயு அதிகமாகப் பிரிவது ஏன்?

நாளொன்றுக்குச் சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டாலோ என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும்.

பொதுவாக, புரதம் மிகுந்த மொச்சை போன்ற உணவு வகைகளையும் ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவதுதான் இதற்குப் முதன்மைக் காரணம்.

அடுத்து மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பைக் கற்கள் போன்றவையும் வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome) போன்றவற்றால் குடலியக்கம் தடைபடும்போது வாயு அதிகமாகலாம்.

பேதி மாத்திரைகள், ஆஸ்துமா மாத்திரைகள், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதும் வாயுத் தொல்லை அதிகரிப்பது வழக்கம்.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு, அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே வேலை செய்கிறவர்களுக்கு, வயதானவர்களை இது அடிக்கடி சங்கடப்படுத்தும். உடற்பயிற்சி இல்லாதது, உடலியக்கம் இல்லாமல் முடங்கிக் கிடப்பது, தண்ணீரைச் சரியாகக் குடிக்காதது போன்ற காரணங்களால் இவர்களுக்கு வாயுத் தொல்லை அதிகரிக்கிறது.

என்ன சிகிச்சை?

வாயுக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்துக்கொண்டு சிகிச்சை பெறுவது வாயுத் தொல்லையை நிரந்தரமாகத் தீர்க்க உதவும்.

வாயுப் பிரச்சினைக்கு இப்போது நிறைய மாத்திரை, மருந்துகள் வந்துவிட்டன. சீக்கிரத்திலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். என்றாலும், இதை வரவிடாமல் தடுக்கச் சரியான உணவுமுறை முக்கியம்.

வாயுக்கு எதிரிகள்!

மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

வாயுவைக் கட்டுப்படுத்த

எண்ணெய் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஆவியில் தயாரித்த உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா வேண்டாம். மது, புகைப்பழக்கம் ஆகாது. இத்தனையும் சரியாக அமைந்தால், வாயு உங்களைத் தொந்தரவு செய்யாது.

* வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

* சுக்கு மல்லி(தனியா) கசாயம் வாயுக்கு நல்லது.

* பசும்பாலில் 10 பூண்டு பற்களை சேர்த்து காய்ச்சி குடித்தால் வாயு சேராது.

* இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க அனைத்துவித வாயுக்கோளாறும் தீரும்.

* புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி, இதனுடன் உப்பு, புளி, மிளகாய், தேங்காய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் சாப்பிட்டு வர வாயு அகலும்.

* வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான்கீரை போன்ற கீரைகள் வாயுவைப் போக்கும்.

* சமைக்கும் போது இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும்.

* முடக்கற்றான் கீரையை கைப்பிடி அளவு 1 கோப்பை தண்ணீரில் வேக வைத்து அந்த சாற்றுடன் சிறிது விளக்கெண்ணை விட்டுப் பருக வயிற்றில் உள்ள வாயு வெளியேறும்.

* தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

* இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

* ஓமம், கடுக்காய், வால்மிளகு, வெள்ளைப் பூண்டு, மிளகு, சுண்டைக்காய், சாதிப் பத்திரி, வெங்காயம் போன்றவைகளும் வாயுவைப் போக்கும்.

Thursday, March 26, 2020

சிவனை பற்றி அப்துல்காலம்



30 இலட்சம் விஞ்ஞானிகளில் ஒருவரான அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்ச்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், அதன் ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது மேலும் தமிழ் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார் இந்துவாய் இருப்பதில் பெருமிதம் அடைவோம் ! இந்து மதத்தை வெளிநாட்டவர்கள் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த பதிவு கடவுள் துகள் என்ற கண்டுபிடிப்பை கண்டுபிடித்தற்காக அவர்களுக்கு இயற்பியலுக்கு இந்த வருடம் நோபல் பரிசு கிடைத்துள்ளது. கடவுள் துகள் என்ற ஆராய்சியில் உலகத்திலிருந்து மொத்தம் 30 இலட்சம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர் இந்தியாவில் அப்துல் கலாம் உட்பட இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பது தான் அதன் அடிப்படையில் அண்டார்டிக்காவின் அருகில் உள்ள பகுதியை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்காக ஏற்றுக் கொண்டனர் உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ள கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர் ஏனெனில் இந்த ஆய்வை மேற்க்கொள்ள பூமிக்க பல கோடி மீட்டர் கொண்ட ஆழம் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர் உடனடியாக 30 இலட்சம் விஞ்ஞானிகளில் ஒருவான அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், அதன் ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது மேலும் தமிழ் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார் விஞ்ஞானிகள் 1978 ஆம் ஆண்டுதான். அணுவையே கண்டறிந்தனர் அதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தை படைத்தது சிவபெருமான் தான் அந்த சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார் அங்கே சிவபெருமான் நடனமாடுவதை போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர் . அண்ட பிரமாண்ட கோடி ஆளும் நாயகன் மலரடி போற்றி !

Monday, March 23, 2020

தலைமுறை தலைமுறையாக அடைக்க முடியாமல் இருக்கும் கடனை கூட, அடைத்து விடலாம். அமாவாசையன்று இந்த பரிகாரத்தை செய்தால்!

நாம் எல்லோரும் பணக்கஷ்டம் இல்லாமல், கடன் தொல்லை இல்லாமல் வாழவேண்டும் என்றுதான் நினைக்கின்றோம். சிலருக்கு இந்த கடன் தொகை என்பது மிக சிறிய அளவில் இருக்கும். ஆனால் பல பேருக்கு பல தலைமுறையாக கடன் தொல்லை கழுத்தை நெரித்து வந்து கொண்டிருக்கும். அப்பா வாங்கிய கடனுக்கு, மகன் வட்டியை கட்டிக் கொண்டிருப்பார். ‘நம்முடைய குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கின்றோமோ இல்லையோ! கண்டிப்பாக கடனை வைக்கக்கூடாது.’ என்று ஒவ்வொரு பெற்றோரும் நினைத்தால் ‘கடன்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் இருக்காது. கடன் பிரச்சினை உள்ளவர்கள் மட்டும்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டுமா? என்றால், இல்லை. கடன் தொல்லை இருப்பவர்கள், வீட்டில் தன தான்ய லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலனை தரும். அமாவாசை நாள் என்பது நம் பித்ருக்களின் ஆசீர்வாதத்தை நமக்கு பெற்றுத் தரக்கூடிய நாளாக அமைந்திருக்கிறது. இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நாம் தவறாமல் செய்வது, நமக்கு நல்ல பலனைத் தரும். அமாவாசை திதி அன்று நாம் செய்யக்கூடிய கடமைகளையும், வழிபாட்டு முறைகளையும் சரியாக செய்யவில்லை என்றாலும் நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும். இதனால் உங்கள் வீட்டு முறைப்படி அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை தவறாமல் செய்துவிடுங்கள். - Advertisement - இந்த அமாவாசை தினத்தில் நாம் செய்யும் ஒரு சிறிய பரிகாரம், நம்முடைய கடனை தீர்ப்பதற்கு சுலபமான வழியை காட்டும் என்று நாம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அது என்ன வழி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்க்கு தேவையான பொருட்கள் சிகப்பு துணி, 21 உலர்ந்த வெள்ளை பேரிச்சம் பழம், பச்சை நிற நூல். இதை வைத்துதான். இது ஒரு சுலபமான பரிகாரம் தான். நம்பிக்கையுள்ளவர்கள் செய்து பார்க்கலாம். இந்த அமாவாசை தினத்தன்று உங்களுடைய முன்னோர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முறைப்படி செய்து முடித்துவிட்டு, உங்களது வீட்டிலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம். சிறிய அளவிலான சதுர வடிவில் இருக்கும் சிகப்பு துணி ஒன்றை புதியதாக வாங்கிக் கொண்டு, அதில் 21 வெள்ளை பேரிச்சம் பழத்தை வைத்து பச்சைநிற நூலில் மூன்று முடிச்சுகள் போட்டு, கட்டி உங்கள் வீட்டு பீரோவிலோ பணம் வைக்கும் இடத்திலோ அதாவது நீங்கள் எந்த இடத்தில் பணம் வைப்பீர்களா அந்த இடத்தில் இதை வைத்து விட வேண்டும் அவ்வளவுதான். இந்த பரிகாரத்தை செய்து விட்டு, அன்றைய தினமே, உங்களது கடன் தொகையில் ஒரு சிறு தொகையை கடன்காரனுக்கு திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அவ்வளவு தான் பரிகாரம். - Advertisement - வேறு எந்த ஒரு மந்திரமும், தந்திர வித்தைகளும் இதில் இல்லை. இந்த முடிச்சை தயார் செய்யும்போது, உங்களது குல தெய்வத்தையும், உங்களது முன்னோர்களையும், மனதார நினைத்தாலே போதும். உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர்ந்து தன தானியத்திற்க்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது. செல்வ செழிப்போடு நீங்கள் வாழ்வதற்கு இந்த பரிகாரம் ஒரு நல்ல வழிதான். கோடி ரூபாய் கடனை ஒரே நாளில் தீர்த்துவிட முடியுமா என்றால்? இல்லை. அந்த கடனை தீர்ப்பதற்கான மன தைரியம், அந்த கடனை தீர்க்க பணம் வரும் வழி, இவைகளை இந்த பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் காட்டும். நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ள பரிகாரத்தில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் கிடையாது. ஆனால் நீங்கள் வாங்கும் உலர்ந்த பேரீச்சம் பழத்தில் சிறிதளவு தண்ணீர் கூட இருக்கக் கூடாது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒரு முறை இந்த பேரிச்சம் பழத்தை எடுத்து ஓடும் ஆற்றிலோ அல்லது கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதியதாக மாற்றிக் கொள்ளலாம்.

அமாவாசை இரவு, இந்த 4 தீபத்தை ஏற்றினால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி.

மற்ற நாட்களைக் காட்டிலும், அமாவாசை நாளுக்கென்று ஒரு தனி சிறப்பு உண்டு. குல தெய்வ அருளை பெற வேண்டும் என்பதாக இருந்தாலும், பித்ருக்களின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும் என்றாலும், மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும் என்றாலும் இந்த நாளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. எல்லாருடைய ஆசீர்வாதத்தையும் ஒருசேர பெறுவது பாக்கியம் தானே! நாம் எல்லோருடைய வீடுகளிலும் கண்திருஷ்டியை கூட, பெரும்பாலும் அமாவாசை தினத்தன்று தான் கழிப்போம். இப்படியாக பலவகையான நன்மைகளை தரக்கூடிய இந்த தினத்தில் மகாலட்சுமியை நினைத்து, நாம் ஏற்றப்படும் இந்த நான்கு தீபத்திற்கும் பலன் அதிகமாகவே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தன்று இந்த தீபத்தை தொடர்ந்து ஏற்றி வரும் பட்சத்தில், உங்கள் வீட்டில் இருக்கும் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அது சுலபமாக தீருவதற்கு ஒரு வழி கிடைத்து விடும்.தொழிலில் முட்டுக்கட்டையாக இருக்கும் தடைக்கற்களை படிக்கற்களாக மாறும். வீட்டில் இருக்கும் சண்டை சச்சரவுகள் தீர்ந்து சந்தோஷம் அதிகரிக்கும். தேவையற்ற மனக்குழப்பங்கள் நீங்கும். கடன் தொல்லை குறையும். ஆரோக்கியம் அதிகரிக்கும். இப்படி ஒரு அமைதியான சூழ்நிலையில் நாம் செய்யும் எந்த வேலையாக இருந்தாலும் அது நிச்சயம் வெற்றியில் தான் போய் முடியும். லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியமான, மன நிம்மதியான, அளவான வருமானம் இருந்தாலே அது கோடீஸ்வர வாழ்க்கைக்கு சமம். நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி தானே!. உங்களை வாழ்க்கையை கோடீஸ்வரராக்ககும் இந்த தீபத்தை எப்படி ஏற்றலாம், என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். - Advertisement - உங்களது வீட்டில் மொட்டை மாடி இருந்தால், இந்த தீபத்தை கட்டாயம் மாடியில்தான் ஏற்றவேண்டும். மொட்டைமாடி வசதி இல்லாதவர்கள் வீட்டின் வெளிப்புறத்திலோ அல்லது பால்கனியிலோ, தீபத்தை ஏற்றலாம். ஏனென்றால், இந்த தீபம் அமாவாசையின் இருட்டு படும்படி ஏற்றினால் மட்டுமே பலன் தரும். தீபத்தை தரையில்தான் ஏற்றப் போகின்றோம். முதலில் தண்ணீர் தெளித்து தரையை துடைத்துக் கொள்ளவேண்டும். இதற்கு தேவையான பொருட்கள் 4 கைப்பிடி அளவு பச்சரிசி, 4 புதிதாக வாங்கப்பட்ட மண் அகல் தீபம், விளக்கேற்ற சுத்தமான பசு நெய், விளக்கு திரி, ஒரு ரூபாய் நாணயம் 4, சிறிதளவு சிகப்பு பட்டு துணி. முதலில் பச்சரிசியை ஒவ்வொரு கைப்பிடியாக எடுத்து, நான்கு பகுதிகளாக தரையில் வைத்துக்கொள்ளவும். அகல் தீபங்களை மஞ்சள் குங்குமம் வைத்து, பச்சரிசியின் மேல் பகுதியில் வைத்து, நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி விட வேண்டும். இந்த நான்கு தீபங்களும் கிழக்கு பக்கம் நோக்கித்தான் ஏற்றப்பட வேண்டும். (நான்கு தீபங்களும் தனித்தனியாக, பச்சரிசியின் மேல் வைத்து ஏற்றப்பட வேண்டும்.)இந்த நான்கு தீபங்களின் அருகிலும் 1 ரூபாய் நாணயங்களை வைத்து விடுங்கள். - Advertisement - நீங்கள் ஏற்றப்படும் இந்த தீபமானது, கட்டாயம் அமாவாசை இருள் படும்படி தான் ஏற்ற வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரம் தீபம் எரிய வேண்டும். உங்களுடைய மொட்டை மாடியில் இந்த தீபத்தை ஏற்றினால் நான்கு திசைகளிலும் நான்கு தீபத்தை வைத்துக்கொள்ளலாம். இடவசதி இல்லாதவர்கள் 4 தீபத்தையும் சதுர வடிவில் வைத்து ஏற்றுக் கொள்வது சிறப்பானது. இந்த தீபங்களை இரவு முழுவதும் அப்படியே திறந்தவெளியில் விட்டு விட வேண்டும். மறுநாள் காலை எழுந்து சிறிதளவு மஞ்சள் கரைத்த நீர் தெளித்து, விளக்கின் அருகில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து, சிகப்பு பட்டு துணியில் முடிச்சாக கட்டி, நீங்கள் பணம் வைக்கும் இடத்திலோ, அல்லது பூஜை அறையிலோ வைத்துக் கொள்ளலாம். அடுத்த அமாவாசை வரும் வரை இந்த முடிச்சு அப்படியே இருக்க வேண்டும். அடுத்த அமாவாசைக்கும் தொடர்ந்து இந்த பரிகார முறையை பின்பற்றி, பழைய ரூபாய் நாணயத்தை ஏதாவது கோவில் உண்டியலில் போட்டுவிட்டு, புதிய ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை இத்தனை மாதம் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களது பிரச்சினையை பொறுத்துதான் பரிகாரமும் செய்யப்படவேண்டும். எளிதில் தீரக்கூடிய பிரச்சினையாக இருந்தால், மூன்று மாதங்கள் பரிகாரம் செய்தால் போதும். தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தால் 7 மாதங்கள் வரை இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்தால் நல்ல பலனை அடையலாம். இந்த பச்சரிசியையும், அகல் தீபத்தையும் தொடர்ந்து எல்லா அமாவாசைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் மாற்றினால் போதும். தொடர்ந்து ஒரு சுபகாரியம் தடைபட்டு கொண்டிருக்கிறது அல்லது ஒருவருக்கு வேலை தேடுவதில் தொடர் தோல்வி இப்படிப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் கூட தங்கள் கைகளில் இந்த முடிவினை எடுத்து சென்றால், சென்ற காரியம் கட்டாயம் வெற்றி தான். அமாவாசை தினத்திற்கு என்றும், அமாவாசை இருளிலுக்கென்றும் ஒரு தனி சக்தி உண்டு என்பதை இந்த தீபத்தை ஏற்றி பயன் பெற்றால் மட்டுமே உங்களால் உணர முடியும். இதையும் படிக்கலாமே தலைமுறை தலைமுறையாக அடைக்க முடியாமல் இருக்கும் கடனை கூட, அடைத்து விடலாம்.

சித்தர்களின்_ஐம்பொன்_காப்பு....



நம்முடைய முன்னோர்கள் உலோகத்தினை நகைகளாக செய்து உடலில் பல்வேறு இடங்களில் அணிந்தது ,,,,,

உடல் அழகுக்காக மட்டும் அல்ல உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்...

ஐந்து விதமான உலோகத்தினை சரியான அளவில் கலந்து செய்யப்படும்,ஐம்பொன்சிலைகளில் தங்கம்,,,,,,,,வெள்ளி,,,,,,இரும்பு,,,,,,செம்பு,,,,,,,ஈயம் போன்ற உலோகங்கள் சரியான அளவில் கலந்து செய்யப்படும்,

இந்த சிலைகள் பல நூற்றண்டுகள் முன்பு தமிழ் நாட்டில் சிறப்பாக செய்யப்பட்டு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக வைத்தனர்,

காரணம்,நம்முடைய உடலுக்கும் உலோகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது,மண்ணில் உள்ள சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும் ,இந்த உலோக சத்துக்கள் தான் நம்மை இயக்கும் இது அறிவியல் ரீதியான உண்மை,

நம்முடைய நாட்டில் இந்த உலோகங்கள் மண்ணில் குறைந்த அளவுதான் உள்ளது,அதை நிவர்த்தி செய்யவே ஐம்பொன் சிலைகள் செய்து நிறுவப்பட்டது

சிலைகளுக்கு அபிஷகம் செய்து கிடைக்கும் பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்,இந்த சிலைகள் அதிக காந்த ஈர்ப்பு சக்தி உடையது ,

இதில் தங்கம் குருவின் சக்தியையும்,

வெள்ளி சுக்ரனின் சக்தியையும் ,

செம்பு சூரியனின் சக்தியையும்,

இரும்பு சனியின் சக்தியையும்,

ஈயம் கேதுவின் சக்தியையும்

பெற்று மக்களுக்கு வழங்கும்......

இப்படிப்பட்ட அதிசய உலோகத்தினை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து செயல்படுத்தினர்,, #சித்தர்கள்....

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐம்பொன்னை கொண்டு கைகளுக்கு மோதிரமாகவோ ,காப்பாகவோ மற்றும் வேறுபல ஆபரணங்களாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமமாக வைக்கும் ,உடலினை குளிர்ச்சி படுத்தும்,

ராஜ உறுப்புகளான இதயம் ,,,,,மூளை ,,,,,,நுரையீரல் ,,,,,,,,சிறுநீரகம்,,,,,,,,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் ,இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும் ,

இதன் #அறிவியல் விளக்கம்........

மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளது,மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து இராஜ உறுப்புகளுக்கு கடத்துக்கிறது.

இந்த பகுதிகளில் ஐம்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரம்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய #ராஜ உறுப்புகளை நல்ல படியாக இயங்க செய்யும்......

நன்றி,,,,,,,

Thursday, March 19, 2020

உங்க மனசுக்கு பிடிச்சவங்க, உங்களுடைய பேச்சை கேட்க வேண்டுமா? இதுதான் வழி.



நம் கணவனாக இருந்தாலும், நம் குழந்தையாக இருந்தாலும், நம் உடன் பணிபுரிபவர்களாக இருந்தாலும், நம் நண்பர்களாக இருந்தாலும் நம்முடைய பேச்சை அவர்கள் காது கொடுத்து கேட்டு நடக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். இவர்கள் அனைவருமே நமக்கு மனதிற்கு பிடித்தவர்கள் தான். இவர்களுக்கு நாம் கெடுதல் நினைக்கும் வகையில் எதையுமே கூறப்போவதில்லை. எதிர்பாராத வகையில் ஒருவருக்கு கணவரோ, மனைவியோ, குழந்தையோ, நண்பரோ நம் சொல்படி கேட்டு நடக்காமல் இருந்தாலும், நாம் சொல்லும் பேச்சுக்கு கட்டுப்படாமல், அவர்கள் தீய வழியில் செல்பவர்களாக இருந்தால், அவர்களை மாற்ற வேண்டும் என்றுதான் நாம் நினைப்போம். உங்களுடைய வாழ்க்கை சூழலில் உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் யாரேனும் நீங்கள் சொல்லும் நல்லதை தட்டிவிட்டு, கெட்ட வழிக்கு செல்பவர்களாக இருந்தால், நீங்கள் இந்த முறையை பின்பற்றி பார்க்கலாம். இந்த முறையானது நிச்சயமாக நல்லதிற்க்கு மட்டும்தான் பயன்படுமே தவிர, அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைத்து நம்மால் எதையுமே சாதித்துக் கொள்ள முடியாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவரிடம் நேரடியாக சென்று நீ செய்வது தவறு இந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்று சுட்டிக் காட்டினால், சிலர் அதை காதில் வாங்கி கொள்ளமாட்டார்கள். அந்த நபர் ஏதோ ஒரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம். அவர் நமக்கு கெடுதல் செய்பவராக இருந்தாலும் சரி. அவரை நாம் சரி செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது? எடுத்துக்காட்டாக உங்களது கணவரை நீங்கள் ஏதோ ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் கணவர் உங்களை துன்பப்படுத்தும் கணவராக இருந்தாலும் சரி. மனைவி என்ன செய்ய வேண்டும்? கணவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது அவரின் உருவத்தை உங்களது கண்களுக்கு முன்பாக கொண்டுவந்தோ அல்லது அவரின் அருகிலேயே அமர்ந்தோ, அவர் மேல் உங்களுக்கு வெறுப்பு இருந்தாலும் கூட அதையெல்லாம் சுத்தமாக மறந்துவிட்டு, அவர் நன்றாக இருக்கவேண்டும் என்ற முழுமனதோடு, அவரை வாழ்த்த வேண்டும். அதன் பின்பு ‘என் கணவர் கெட்ட பழக்கங்களை விட்டு விட வேண்டும். நான் என்ன சொல்கின்றேனோ அந்த வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். வாழ்க்கையில் அவர் நன்றாக முன்னேற வேண்டும்’ என்று மனதார ஒரு 15 நிமிடம் நினைத்து வேண்டிக் கொண்டால் போதும். இந்த சமயம் உங்களது கணவர் கட்டாயமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும். (உங்கள் கணவர் எந்த சமயம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றார் என்பதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியாதவர்கள், ஒரு மனிதன் கட்டாயம் பிரம்மமுகூர்த்தமான 3 மணிக்கு நன்றாக தூங்குவார்கள் என்பது உறுதி.)உங்களது கணவரை நீங்கள் மனதார நினைத்துக்கொண்டு இந்த வேண்டுதலை வேண்டிக்கொண்டாள் நிச்சயமாக அது உங்கள் கணவரது மனதிற்குள் எதிரொலிக்கும் என்பது அறிவியல் சார்ந்த உண்மை. - Advertisement - அறிவியலில், ஆழ்ந்த உறக்கத்தில் ஒருவர் இருக்கும்போது, உண்மையை வரவைப்பதற்கு ஹிப்னாடிசம் எனும் முறையை மருத்துவ ரீதியாக பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்தது உண்டா? மன ரீதியான பிரச்சனை உள்ளவர்களையும் சரிப்படுத்த, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது பல சிகிச்சைகள் கொடுக்கப்படுவது உண்மை. ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது போதும்கூட அவர்களை நினைத்து சொல்லப்படும் வார்த்தைகள், எண்ணங்கள் அனைத்தும் அவரது உள்ளுணர்வைத் தொடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதை கணவன் மனைவி இருவருக்கும் மட்டும் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா என்று கேட்டால், இல்லை. உங்களுடைய நண்பர்கள் கெட்ட வழியில் செல்பவர்களாக இருந்தால் அவர்களை கூட நம்மால் சரி செய்ய முடியும். நன்றாக தூங்கும் சமயத்தில் அவர் நம்முடைய அருகில் இருக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்காது. நண்பர்கள் என்றால் வேறு வேறு இடத்தில் தங்கிக் கொள்பவர்களாக இருந்தால், அந்த சூழ்நிலையில் அதிகாலை பிரம்ம முகூர்த்தம் என்று கூறப்படும் 3 மணி அளவில் கட்டாயமாக உங்களுடைய நண்பர் நன்றாக உறங்கிக் கொண்டு இருப்பார். அந்த சமயம் உங்களது நண்பரின் புகைப்படம் இருந்தாலும் அதை முன்பாக வைத்து, அவர் எப்படி மாறவேண்டுமோ அதன்படி நாம் தியானம் செய்யலாம். புகைப்படம் உங்கள் கையில் இல்லை என்றாலும் பரவாயில்லை. அவரது உருவத்தை மனதார நினைத்துக்கொண்டு அவர் எப்படி மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை உங்கள் மனதார நினைத்து தியானம் செய்தாலே நல்ல பலனைத் தரும். ஒரு மனிதன் விழித்திருக்கும் போது அவனுக்குள் இருக்கும் மிருக குணமும், கெட்ட குணமும் விழித்திருக்கும். அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது கட்டாயமாக அவன் தன்னிலை மறந்து தான் தூங்குவான். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் மனதார அவரை நினைத்து வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்களானது அவரிடம் போய் செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மை. எவ்வளவு பெரிய கெட்ட மனிதர்களாக இருந்தாலும் தூங்கும் சமயத்தில் அவர்கள் தெய்வத்தன்மை கொண்டவர்களாகவும், புனித தன்மை கொண்டவர்களாகவும் தான் இருப்பார்கள். அந்த நேரத்தில் நாம் வேண்டும் படும் வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் நிச்சயம் அதன் தாக்கம் அவர்களை போய் சேரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நீங்கள் இதை நம்ப வேண்டாம். ஆனால் உங்கள் மனதிற்கு பிடித்தவரை மாற்றுவதற்கு சில தினங்கள் இந்த தியானத்தை பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் யாரை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவருக்குள் ஒரு மாற்றம் வருவதை உங்கள் கண்கூடாக நீங்களே காணமுடியும். ஒரு 48 நாட்கள் என்று கணக்கு வைத்து பாருங்கள். அவர்கள் மாறுவதை நீங்கள் உணர்ந்து விட்டு பின்பு உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த முறையை பரிசீலனை செய்யலாம். எங்கோ இருப்பவர் நம்மை நினைத்துக் கொண்டால், நமக்கு விக்கல் வருகிறது, புரை ஏறுகிறது என்று கூறுவதை நாம் நம்புவது வழக்கம் தானே! சில சமயங்களில் இது உண்மையாகவும் இருக்கும். தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு ஏதாவது ஆபத்து வரப்போகிறது என்றால், நம் மனதிற்கு உண்மையாக பிடித்தவர் என்றால், அது நம் மனதிற்கு முன்பாகவே தெரிய ஆரம்பித்துவிடும். இதுவும் ஒருவகையில் உண்மைதான். இப்படியாக உண்மையான அன்புடன், அக்கறையுடன் ஒருவரை நம் மனதில் நினைத்து, அந்த நபர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்கின்றோமோ அது கண்டிப்பாக பலிக்கும் என்பது உண்மைதான். உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றாலும் இதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கையோடு மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியும் தோல்வி அடைந்தது இல்லை.

Wednesday, March 18, 2020

பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்க, உங்கள் கையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்துக் கொண்டால் போதும்..


அத்தியாவசிய தேவையில் முதலிடம் பிடித்திருப்பது இந்த பணம்தான். பணம் இல்லை எழுந்தால் யாராலும் வாழ்ந்துவிட முடியாது. பணம் மட்டும் இருந்தாலும் யாராலும் வாழ்ந்து விட முடியாது. ஒருவரது வாழ்க்கையில் பணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அந்த அளவிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, அளவுக்கு அதிகமான ஆசையும் பணத்தின் மேல் வைக்கக்கூடாது. ஆசையே இல்லாமலும் இருக்கக்கூடாது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும், இது கட்டாயம் தேவையான அறிவுரை. இதை மனதில் வைத்துக்கொண்டு பணத்தை சேமிக்க பழகுங்கள். வாழ்க்கையில் பிரச்சனை வராமல் தப்பித்துக் கொள்ளலாம். நம் கையில் தேவைக்கு அதிகமாக சேமிப்பு இருப்பை வைத்துக் கொண்டு இருக்கிறோமோ இல்லையோ, ஆனால் தேவைக்கு ஏற்றவாறு பணம் வருவதும் போவதுமாக இருந்தால்கூட வாழ்க்கையை சமாளித்துவிடலாம். கையில் சுத்தமாக ஒரு ரூபாய்கூட இல்லை என்ற தட்டுப்பாடு வராமலிருக்க என்ன செய்யலாம்? பணம், செல்ல வேண்டும். வரவேண்டும். செல்ல வேண்டும். திரும்பவும் நம் கைக்கு வரவேண்டும். இந்த சுழற்சி நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம்? என்பதற்கான தீர்வு பற்றிய பதிவுதான் இது. முதலில் ஒரு சிறிய அளவு பச்சை பட்டு துணியையும், ஒரு பாதாம் பருப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த பாதாமை பச்சை துணியில் ஒரு நூல் கொண்டு சிறிய முடிச்சாக கட்டி, உங்களது சட்டைப் பையிலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ வைத்துக் கொள்ளலாம். பச்சை துணி கொண்டு பாதாமை முடிச்சாக கட்டும் அந்த நேரம் புதன்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிகுள் கட்டிக் கொள்ளலாம் அல்லது மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை கட்டிக்கொள்ள வேண்டும். கட்டாயம் இந்த முடிச்சு, இந்தக் கிழமையில், இந்த நேரத்தில்தான் கட்ட வேண்டுமே தவிர மற்ற நேரங்களில் கட்டினால் பலனளிக்காது. - Advertisement - முடிச்சின் உள்ளிருக்கும் பாதாமை மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்ள வேண்டும். மாற்றும் சமயத்தில் பச்சை துணியை துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பாதாம் முடிச்சை கட்டாயமாக கருநீல பர்ஸ், கருப்பு பர்ஸ், தோல் பர்ஸ், இவைகளில் வைக்கக்கூடாது. இவை அல்லாத மற்ற பர்ஸ்களிலும் வைத்துக் கொள்ளலாம். உங்களிடம் பணவரவு நிரந்தரமாக வந்து தங்குகிறதோ இல்லையோ! கையில் செலவுக்கு பணம் இல்லாமல் கட்டாயமாக இருக்கவே இருக்காது. பாதாமும் பச்சை நிறத்துணியும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் மகாலட்சுமி கலாட்சியம் என்றுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நம் தொழிலுக்கு பண தட்டுப்பாடு ஏற்படாது. கடன் தொல்லையும் வராது. நம்முடைய வாழ்க்கையை பெரிய கஷ்டங்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ள சின்ன பரிகாரம் தான் இது. இந்த இரண்டு பொருட்களை உங்களது சட்டைப் பையிலோ அல்லது பணப்பெட்டியிலோ வைப்பதன் மூலம் கட்டாயம் எந்த பிரச்சனையும் வராது. பணம் வருகிறதா என்பதை சோதித்துப் பார்ப்பதில் எதற்கு தாமதம். நம்பிக்கையோடு செய்து தான் பார்ப்போமே. நல்ல பலன் கிடைக்கிறதா என்பதை.

இந்த 10 ஐ வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைக்கும் என்று தெரியுமா?

ஒரு பக்கம் செல்வம் ஈட்ட வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கிறோம். மறுபக்கம் ஈட்டிய செல்வத்தை காக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம் நம்மிடம் இருக்கும். செல்வம் ஈட்டுவதை விட, ஈட்டிய செல்வத்தை பாதுகாப்பதுதான் கடினமான காரியமாக இருக்கும். செல்வம் நம்மிடம் நிலைக்க வேண்டுமென்றால் மகாலக்ஷ்மியின் அருள் நமக்கு வேண்டும். இல்லையென்றால் ஈட்டிய செல்வம் எல்லாம் தேவையற்ற வழிகளில் கரைந்துவிடும். நம்மிடம் நல்ல குணங்களும், நாம் இறைவனுக்கு தரும் மரியாதையிலும் தான் சுகபோக வாழ்க்கை வாழ முடியும். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதல்ல வாழ்க்கை. இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒவ்வொருவரும் நல்ல வழிகளை கடைப்பிடிப்பதில் சூட்சமம் இருக்கிறது. மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படும் 10 இடங்கள் எவை? என்று இப்பதிவில் நாம் காணலாம். முதலாவதாக லட்சுமி தேவி வாசம் செய்வது விளக்கின் தீப ஜோதியில் தான். தீபத்தின் சுடர் விட்டு எரியும் சுடர் ஆனது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. விளக்கு இல்லாமல் பூஜையும் இல்லை. புனஸ்காரமும் இல்லை. ஜோதி இல்லாமல் இறையும் இல்லை. இறைவனும் இல்லை. ஜோதி வடிவமே இறை ரூபம். எனவே வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். - Advertisement - நமது உள்ளங்கையில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? காலையில் எழுந்ததும் முதலில் உள்ளங்கையை பார்த்துவிட்டு தான் விழிக்க வேண்டும் என்பது காலம் காலமாக கூறப்படும் ஒரு தகவலாகும். அதன் உள்நோக்கம் மகாலட்சுமி உள்ளங்கையில் வாசம் செய்வது தான். எனவே இனிமேல் காலையில் எழுந்ததும் உங்களின் முதல் பார்வை உங்களது உள்ளங்கையில் தான் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கோமாதாவின் பின்புறம் லக்ஷ்மி தேவி வாசம் செய்யும் இடமாக கருதப்படுகிறது. அதனால் தான் கோமாதாவை வணங்கும் போது பின்புறம் தொட்டு வணங்குகிறார்கள். இனி பசுவை காணும் பொழுது பின்புறம் தொட்டு வணங்கி விடுங்கள். லட்சுமியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். மாவிலைகளை தோரணம் ஆகவும், இன்னபிற ஆன்மீக செயல்களுக்கும் பயன்படுத்துகின்றனர். அதற்கு காரணம் மாவிலையில் மகாலக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம் ஒன்று உள்ளது. எனவே சுபநிகழ்ச்சிகளில், நல்ல நாட்களில் தவறாமல் மாவிலையை தோரணம் கட்டி தொங்க விடுங்கள். லட்சுமிதேவி உங்களது இல்லத்தில் மகிழ்ச்சியுடன் வாசம் செய்வாள். குதிரை மற்றும் யானையின் நெற்றிப் பகுதியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. மன்னர் காலத்தில் மன்னர்களின் படை களத்தில் ஏதேனும் ஒரு குதிரையோ, யானையோ மரணிக்க நேர்ந்தால் அது மன்னருக்கு வரும் ஆபத்தை உணர்த்துவதாக கொண்டனர். தெய்வாம்சம் பொருந்திய இந்த இரு உயிரினங்களையும் காப்பது நமது கடமையாகும். தனம் அல்லது நாணயம் என்று கூறப்படும் செல்வத்திற்கு குறி பொருளாக விளங்குவது நாணயங்கள். எனவே பணத்தை அலட்சியமாக எண்ணாமல் அதற்கு உரிய மரியாதை தருவது நல்லது. பணத்தை எண்ணும் பொழுது எச்சில் தொட்டு எண்ணுவது தவறான ஒரு செயல் ஆகும். அது லக்ஷ்மயை அவமதிப்பது போன்றதாகும். அதுபோல் வீட்டில் ஆங்காங்கே நாணயங்களை சேகரித்து வைப்பது வளம் பெருக வழி வகுக்கும். ஒரு சிலர் ஒரு ரூபாய் நாணயம் கூட விட்டு வைக்காமல் துடைத்து வைத்து விடுவார். அதுபோல் செய்யக்கூடாது. உங்களுக்கே தெரியாமல் ஆங்காங்கே சில்லறைகளையும், நோட்டுகளையும் சேகரித்துவைப்பது நல்லது. நெல்லி மற்றும் வில்வ மரத்தாலான லட்சுமிதேவி மிகவும் சிறப்புடன் பார்க்கப்படுகிறது. நெல்லி மரத்திலும், வில்வ மரத்திலும் லக்ஷ்மி தேவி வாசம் செய்கிறாள். இந்த மரங்களில் இருக்கும் எண்ணற்ற குணங்கள் சொல்லில் அடங்காதவை. தெய்வாம்சம் பொருந்திய இந்த இரு மரங்களையும் வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. தினம் ஒரு நெல்லிக்கனி உண்டால் சிரஞ்சீவியாக வாழலாம். 27 முறை இம்மரங்களை வலம் வந்து லக்ஷ்மி துதியை உச்சரித்தால் செல்வவளம் பெருகும். தனம் அடுத்து தானியம். தானியங்களில் மகாலட்சுமி முழுவதுமாக வாசம் செய்கிறாள். எந்த சுப நிகழ்ச்சிகளிலும், முக்கிய இடம் பெறுவது தானியங்கள் தான். கோபுர கலசத்தில் தானியங்கள் சேகரிப்பது, வீடு கட்டும் பொழுது தானியங்களைப் அடித்தளம் இடுவது போன்றவற்றை மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி செய்யப்படும் காரியங்களே. எனவே நவதானியங்களையும் சேகரித்து வையுங்கள். தானியங்களை உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ளுங்கள். பாற்கடலில் உருவான மஹாலக்ஷ்மி கடலில் இருக்கும் உப்பில் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. எனவே உப்பிற்கும் லக்ஷ்மி தேவியின் சக்தி உண்டு. உப்பை வைத்து பல பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. எப்போதும் வீட்டில் கல் உப்பை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அரிசி, உப்பு மற்றும் தானியங்கள் இவற்றை முழுவதுமாக எப்போதும் துடைக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் மூலம் லக்ஷ்மி தேவியின் அருள் உங்களுக்கு கிட்டும். சுமங்கலிப் பெண்களின் நெற்றியின் உச்சி பகுதியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. நெற்றியில் வைக்கப்படும் குங்குமம் ஆனது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுமங்கலி பெண்கள் தினமும் நெற்றியில் குங்குமம் இடுவதால் சகல வளங்களும் வீட்டில் நிலைத்து நிற்கும். குங்குமம் இடாமல் யாருக்கும் எந்த தானமும் அளிக்கக்கூடாது. அது தரித்திரத்தை உண்டாக்கும். ஒருவருக்கு நீங்கள் தானம் வழங்க வேண்டுமென்றால் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறீர்களா என்று ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.

Tuesday, March 17, 2020

உலகமே பயப்படும் கொரானாவை எதிர்கொள்ளும் வழிகள்....


கொராணா வைரஸின் ஆயுட்காலம் 12 மணி நேரம் மட்டுமே.

கொராணா காய்ச்சல் உங்களுக்கு இருக்கிறதா..? எப்படி தெரிந்து கொள்வது.. ரொம்ப சிம்பிள்.

நீள பெருமூச்சை இழுத்து 10 லிருந்து 12 நொடிகள் வரை நிறுத்தி விடவும்.. அப்போது தொண்டையில் வலியோ, தொடர் இருமலோ வந்தால் உங்களுக்கு கொராணாவின் தாக்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். முறையாக சோதித்து பார்ப்பது நல்லது.

கொராணா வந்து விட்டால் பயப்பட வேண்டாம். சூடான தண்ணீரை அதிகமில்லை இரண்டு மடக்கு இருபது நிமிடத்துக்கொருமுறை குடியுங்கள். கொராணா வைரஸ் தொண்டையில் மட்டுமே வாழும்..வயிற்றுக்குள் சென்றால் மரித்துப் போய்விடும்.

சரி வராமலிருக்க...

வெளியில் சென்று வீட்டுக்குள் வந்தவுடன் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.

ரயில், பேருந்து கைப்பிடிகளை தொட நேர்ந்தால் ஒரு sanitizer யை கூடவே வைத்திருந்து கைகளை சுத்தப்படுத்தவும்.

யாரும் இருமினாலோ தும்மினாலோ அவர்களை விட்டு மூன்று அடி தள்ளி செல்லவும். உங்களுக்கு இருமல் தும்மல் வந்தாலோ நீங்களும் மற்றவர்களை விட மூன்று அடி தூரமாய் சென்று விடுங்கள்.

ஹோட்டல்கள் மற்றும் வெளியிட சாப்பாடு வேண்டாம். ஹோட்டல்களின் மெனு கார்டுகளில் கூட இந்த வைரஸ் இருக்கலாம்.

சைவ உணவுகளையே உண்ணுங்கள்.

மிளகு , இஞ்சி கலந்த டீ குடிப்பது நன்று.

Fridge ல் வைத்தவைகள் வேண்டாம். குளிர்ந்த நீர் , ஐஸ்கிரீம் வேண்டாமே.

உடலை கூடுமான வரை சூடாக வைத்துக்கொள்ளுங்கள்.

27 டிகிரி செல்ஷியஸ் க்கு மேல் இந்த வைரஸ் தாங்காது எனவே இந்தியா மாதிரி வெப்ப மண்டல நாடுகளில் இது தாக்கு பிடிப்பது அரிதிலும் அரிது.

இந்தியாவில் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் லிஸ்ட்டை பாருங்கள்.. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள்..
அதுவும் flight யில் AC ஏர்போர்ட்டில் centralized AC அப்புறமாய் AC கார், ஹோட்டலில் AC என்று குளிரில் வாழ்பவர்களையே இது தாக்குகிறது.

கடைசியாய்..

கொராணா உணர்த்துவது இது தான்..
நம் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு திரும்புங்கள்...

வெயிலில் உலாவுங்கள்.
வீட்டில் சாப்பிடுங்கள்...
சுத்தமாக இருங்கள்..

எல்லாவற்றுக்கும் மேலாய் உடல் மற்றும் மனோ திடத்துடன் இருங்கள்..

எதையும் சமாளிக்கலாம்.. கூடவே சாதிக்கலாம்.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Monday, March 16, 2020

திருநள்ளாறு சனிபகவான் வரலாறு..*



சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பதை சனிப் பெயர்ச்சி விழாவாக இத்தலத்தில் வெகுசிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

திருநள்ளாறு கோயிலுக்கு ஒரு காலத்தில் ஆதிபுரி என்பது பெயராகும்.

அங்குள்ள சிவனை வழிபட்டு பிரம்மா பரிகாரம் பெற்றதாக ஸ்தலபுராண வரலாறு சொல்கிறது.

பிரம்மதேவர் பூஜித்த சிவனுக்கு தர்ப்பாரண்யேஸ்வரர் ‘’ என்பது பெயராகும்.

இங்குள்ள ஸ்தல விருட்சம் தர்ப்பை ஆகும்.

இங்குள்ள லிங்கம் சுயம்புவாக தோன்றியதாகும்.முசுகுந்த சக்கரவர்த்தி ஆண்ட காலத்தில் அந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்துள்ளார்.

இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு நளவிடங்கர்’’நளேஸ்வரம்’என்று பற்பல பெயரும் உண்டு.

நளமகாராஜா கலிபுருடனின் அம்சமான சனி பகவானால் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகி, இறுதியில் இக்கோயிலுக்கு வந்து நளதீர்த்தத்தில் நீராடியபின் கலி நீங்கி சகல சம்பத்துகளையும் பெற்றான்.

இங்குள்ள தர்ப்பாராண்யேஸ்வரர் விக்ரகத்தின் கீழ் சனிபகவானால் எழுதி(முனிவர்களாகவும் இருக்கலாம்)பிரதிஷ்டை செய்யப்பட்ட இயந்திரமொன்று இருக்கிறது.

இதுவே இந்த திருத்தலத்தின் பரிகார மகிமைக்கு காரணமாகும்.

கலிபுருடனாகிய சனிபகவான் நளமன்னன் முன் தோன்றி, நீ என்னிடம் விரும்பும் வரத்தை கேட்டு பெற்றுக்கொள்வாயாக’’ என்று கேட்க, நளன் உனது ஆட்சி நடக்கும் காலத்தில் என் வரலாற்றைக் கேட்டாரை நீ அடையாமல் இருப்பாயாக’’ என்று வேண்டினான்.

இதனை நளவெண்பா ,கலி நீங்கு காண்டத்தில்,

‘’உன் சரிதம் சொல்ல உலகாளும் காலத்தும்
மின் சொரியும் வேலாய்!மிக விரும்பி-என் சரிதம்
கேட்டாரைநீயடையேல் என்றாந்கிளர்மணிப்பூண்
வாட்டானை மன்னன் மதித்து’’

என்று கூறுகிறது.

எனவே சனிபகவானின் பிடியில் சிக்கியோர் அக்காலத்தில் நளமன்னனின் சரித்திரத்தை வாசிப்பது சிறந்த பரிகாரமாகும்.

என அக்க்காலம் முதல் நம் பெரியோர் சொல்லி வந்திருக்கின்றனர்.

இதில் உள்ள சூட்சுமம் என்னவெனில், இவனை விட நாம் கஷ்டப்படவில்லை என தைரியம் வரும் அளவுக்கு கஷ்டத்தை நளன் பட்டதுதான்.

சனி தனது சஞ்சாரத்தின் போது ரோகிணி சாரத்தில் நுழையும்போது உலகம் பெரும் அழிவுகளை சந்திக்கும் என்றும்,போர்,வறுமை,வெள்ளம்,பசி,பட்டினி என மக்கள் துன்புறுவர் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

வராஹிமிரர் தனது ப்ருஹத் சம்ஹிதை நூலின் 47 வது அத்தியாயம் 14 வது சுலோகத்தில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

’’ரோஹிணி சகடமர்க்க நந்தனோயதி
பிநத்திருதிரோ(அ)தவாசிகி!
கிம்வதாமியத நிஷ்டசாகரே
ஜகத் சேமுபயதி ஸ்ங்க்சயம்’’

இன்னொரு பாடலில் பிரளய காலத்துக்கு ஒப்பானதொரு நிலையை உலகம் சந்திக்கும்’’என்ரு கூறுகிறது.

மேலும் இக்கருத்தை காஸ்யபர்,பிரம்மகுப்தர் ஆகியோரும் ஒப்புக்கொள்கின்றனர்.

சனி தன் தந்தை சூரியனை விடவும் பலமானவனாக மாற வேண்டும் என்பதற்காக காசியில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அதன்படி சனீஸ்வரர் என் பெயர் பெற்றார் என புராணம் சொல்கிறது.

அதன்படி நாமும் காசி விஸ்வநாதரை வழிபட்டால் சனி தோசத்துக்கு சிறந்த பரிகாரமாக அமையும்.

திருநள்ளாறு சென்று அங்குள்ள தீர்த்தகட்டங்களில் முதலில் நீராட வேண்டும்.

1.பிரம்ம தீர்த்தம்
2.வாணிதீர்த்தம்
3.அன்ன தீர்த்தம்
4.அகத்திய தீர்த்தம்
5.நளதீர்த்தம்
6.நளகூப தீர்த்தம்

இதில் நீராட முடியாதவர் நள தீர்த்தத்தில் மட்டுமாவது நீராடலாம்.

முதலில் குளக்கரையில் உள்ள வினாயகரை மூன்று முறை வலம் வந்து வழிபட்டு,குளத்தை உருவாக்கியோருக்கு நன்றி சொல்லிவிட்டு,தீர்த்தத்தை மூன்று முறை தலையில் தெளித்துவிட்டு,அதன்பின் கறுப்பு நிற வஸ்திரம் கட்டிக்கொண்டு,உடலில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு,மேற்கு பார்த்து நின்று குளிக்கலாம்.

தலையில் நீலோத்பவ மலரை வைத்து மூழ்குவது இன்னும் சிறப்பு.

அதன்பின் புத்தாடை அணிந்து,கறுப்பு நிற வஸ்திரங்களையும்,எள்,எள்சாதம்,முதலியவற்றை தானம் செய்வது விசேஷமாகும்.

நீராடும்போது இந்த மந்திரத்தை சொன்னால் இன்னும் விசேஷம்.

‘’அஷ்ய ஸ்ரீ சனீஸ்வர கிரஹ

மந்த்ரஷ்ய;

அகஸ்த்ய ரிஷி காயத்ரி சந்த;
சனிச்சர தேவதோ
மம கிரஹ பீடா நிவாரணார்த்தே
சனைச்சர கிரக சுப பல
சித்தியர்த்தே ஜெபே விநியோக’’

கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்வது சிறந்த பரிகாரம்.

ஏழரை சனி,அஷ்டம சனி,அர்த்தாஷ்டம சனி போன்றவை நடக்கும் ராசியினர் நவகிரஹ ஹோமம் வீட்டில் செய்வது நல்ல பரிகாரம்.🌺

*ஓம் சனீஸ்வராய நமஹ...*🌺

Sunday, March 15, 2020

மூட்டு வலி நிரந்தரமாக குணமாக இத ஒரு முறை செய்து பாருங்க..!


மூட்டு வலி வருவதற்கு சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காமல் இருப்பது போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது.உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மூட்டுகளில் அசையும் மூட்டு, அசையாமூட்டு என்று இருவகை உண்டு.தலையில் எலும்புகள் கூடி இருக்கும் இடம் அசையா மூட்டு. நாம் பேசும்போது கீழ்தாடை மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு. ஓடுகிறோம் ,விளையாடுகிறோம், வேலைகளைப் பார்க்கிறோம், இவைகளில் நமது அசையும் மூட்டுகள் அதிக பங்காற்றுகிறது.


இந்த மூட்டுகளில் தோள்மூட்டு, முழங்கைமூட்டு, மணிக்கட்டு மூட்டு, இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு போன்றவை முக்கியமானவை.மூட்டுகளில் இத்தனை இருந்தாலும், நாம் முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பெரும்பாலும் மூட்டுவலி என்று சொல்கிறோம்.முழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வசதியாக மடிந்து கொடுக்காது. கடும் வலி ஏற்படும். வீக்கம் தோன்றும்.

இடுப்பில் உள்ள மூட்டு சரியாக இயங்கவில்லை என்றால் முதுகெலும்பின் மூலம் ஓரளவு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். மூட்டுவலிக்கு முக்கியமான காரணம் அதில் ஏற்படும் தேய்மானம்.இந்த மூட்டுகளில் வழுவழுப்பான திசுக்களான குருத்தெலும்பின் வழவழப்புத்தன்மை குறைந்துவிட்டால் மூட்டை அசைக்கும்போது சோர்வும் வலியும் ஏற்படும். அதைத் தான் தேய்மானம் என்கிறோம்.

மூட்டுவலியை தடுக்கும் முறைகள்
உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


உருளைக்கிழங்கு சாறையும் அருந்தலாம், இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

உணவுப் பழக்கம்வாழைப்பழம் அதிகமாக சாப்பிட வேண்டும்.காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும்.கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம்,மனக்கவலைகள், மன அழுத்தம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

Monday, March 9, 2020

உங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப்போகும் வெற்றிலைக்காம்பு தீபம்.



ஒருவர் தொடர்ந்து தோல்வியை சந்தித்துக் கொண்டே வருகிறார் என்றால், அவர்களுக்கு முதலில் கிடைக்கக்கூடிய பெயர் ‘அதிர்ஷ்டம் கெட்டவர்’ என்பது தான். ஆனால் அதிகப்படியான தோல்வியை சந்திப்பவர்கள், வாழ்க்கையில் அதிவேகமாக முன்னேற போகிறார்கள் என்பது அடுத்தவர்களுக்கு தெரியாது. அதாவது அதிக இஷ்டத்தை நாம் எதன் மேல் வைக்கின்றோமோ, அதுவே நமக்கு அதிர்ஷ்டமாக மாறுகிறது என்பதுதான் உண்மை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை இஷ்டப்பட்டு கொண்டே இருங்கள். காலப்போக்கில் அதிர்ஷ்டமாக மாறி உங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும். திருமணமாக வேண்டுமென்றால், அதன் மேல் இஷ்டப்பட்டு கொண்டே இருங்கள். காலப்போக்கில் அதுவும் உங்களுக்கு வசமாகிவிடும். நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றால் அதன்மேல் இஷ்டப்பட்டு கொண்டே இருங்கள். உங்களுக்கு அதுவே அதிர்ஷ்டமாக மாறிவிடும். புரிகிறதா? நீங்கள் இஷ்டப்பட்டு கொண்டே இருக்கும் ஒரு விஷயம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக மாறவேண்டும் என்றால், அதை உடனடியாக நிறைவேற்றிக் கொள்ள ஒரு சிறிய பரிகாரமும் உள்ளது அதைப் பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் வெற்றிலை காம்பில் தீபமா? என்று படித்தவுடன் சிலர் அதிர்ச்சி அடைந்து இருக்கலாம். ஏனென்றால் வெற்றிலை காம்பில் மூதேவி, வாசம் செய்கின்றாள் என்பதும் சிலரின் கூற்று. ஆனால் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வாசம் செய்வதாக மற்றொரு கூற்றும் உள்ளது. சரி. முதலில் வெற்றிலைக்காம்பு எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் சேதாரம் இல்லாத 6 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக நுனிப்பகுதி இருக்க வேண்டும். நுனிப்பகுதி இல்லாத வெற்றிலையை பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. முதலில் கையில் வைத்திருக்கும் 6 வெற்றி இலைகளிலிருந்து காம்புகளை மெதுவாக கிழித்து எடுத்து விட வேண்டும். காம்பு இல்லாத 6 வெற்றிலைகளை ஒரு பலகையின் மீதோ அல்லது ஒரு டேபிளின் மீதோ வைத்துக் கொள்ளுங்கள். 6 வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து, வைத்து விடவேண்டும். அதன்மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு, வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக 6 காம்புகளையும் நல்லெண்ணெய்குல் போட்டுவிடலாம். பின்பு தீபத்தை ஏற்றி விட வேண்டும். ஏற்றிய தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கு அடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றியை இருந்தும் நல்ல நறுமணம் வீசும். இந்த நறுமணத்தை நன்றாக சுவாசம் செய்து தீபத்தை நோக்கியவாறு ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து தியானம் செய்தாலே போதும். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அது விரைவாக தீர்ந்துவிடும். வாரம் ஒரு முறை இப்படி செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி வெற்றிப் பாதையை நோக்கி செல்வதற்கு, அதிர்ஷ்டத்தையும் இந்த பரிகாரம் நமக்கு தேடித்தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்தப் பரிகாரத்தை நீங்கள் எப்படி நினைத்து செய்தாலும் சரி. நம்மிடம் வாசம் செய்யும் மூதேவியானவள் நம்மை விட்டு விலக வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் சரி. அல்லது காம்பில் வாசம் செய்யும் பார்வதிதேவியின் மூலம் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக இருந்தாலும் சரி. இது பார்ப்பவர்களின் கண்களில் உள்ளது. எந்த ஒரு சந்தேகத்துடனும், குழப்பத்துடனும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம். மனத் திருப்தியோடு செய்வதற்கு ஒரு உதாரணத்தை வேண்டுமென்றாலும் இந்த இடத்தில் கூறலாம். இரண்டு பேரிடம் ஒரே கேள்வி கேட்கப்பட்டது? ஸ்ரீதேவி நடந்து செல்வது அழகா? மூதேவி நடந்து செல்வது அழகா? என்ற கேள்வியை கேட்டார்கள். ஒருவன் சொன்னான்! ஸ்ரீதேவியின் நடை தான் அழகு என்று! மற்றொருவன் சொன்னான் மூதேவியின் நடை தான் அழகு என்று! எப்படி? ஸ்ரீதேவி வீட்டின் உள்ளே நடந்து வருவது அழகு. மற்றொருவன், மூதேவி வீட்டை விட்டு வெளியே நடந்து செல்வது அழகு. புரிகிறதா? பரிகாரம் என்பது பார்ப்பவர்களின் கண்களிலும், சிந்திப்பவர்களின் எண்ணத்திலும் தான் உள்ளது. இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் எந்த ஒரு கஷ்டமும் நமக்கு வந்துவிடாது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வர வேண்டும் என்றும், இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களிடம் இருக்கும் துரதிர்ஷ்டம் உங்களை விட்டு செல்ல வேண்டும் என்று நினைத்துமா இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். ஆனால் நன்மை நடக்குமா? என்ற சந்தேகத்தோடு மட்டும் எந்த ஒரு பரிகாரத்தையும் செய்ய வேண்டாம்.

இவரை இப்படி வழிபட்டால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் காண்பது உறுதி.



தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் லாபம் காண போராடிக் கொண்டிருக்கின்றனர். சில ஆண்டுகள் முன்பு வரை கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்த வியாபாரம் கூட தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எந்த தொழிலும் லாபம் காண்பது அரிதாகி போனது. தொழிற்த்துறை போட்டிகள் வழு பெற்று கொண்டிருக்கும் நேரம் இது. ஆனால் எந்த தொழில் செய்தாலும் முதலுக்கே மோசம் என்ற நிலை தான் உள்ளது. மத்திய அரசால் கொண்டு வரபட்ட ஜி‌எஸ்‌டி வரி விகிதத்தில் அதிகளவு பாதிக்கபட்டவர்கள் வியாபாரிகள் மற்றும் தொழில் புரிபவர்களே. அன்றாட கூலிக்கே திண்டாட்டம் என்ற புலம்பல் ஆங்காங்கே ஒலித்த வண்ணம் இருக்கிறது. மனிதர்களுக்கு பிரச்சனை என்றால் தான் இறைவனின் திசை கண்களுக்கு புலப்படும். சரிந்த தொழில் மற்றும் வியாபாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல, இதுவரை இல்லாத லாபம் காண இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யலாம். அதீத சக்தி வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேய பரிகாரம் இது. வாருங்கள் எப்படி இந்த பரிகாரத்தை செய்யலாம் என்று இப்பதிவில் விரிவாக காணலாம். மேலும் உங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க இந்த எளிய வழிபாட்டை மேற்க்கொள்ளலாம். அனுமார் நம் அனைவருக்கும் விருப்பமான கடவுள். வேண்டிய வேண்டுதல்களை உடனே நிறைவேற்றித் தரும் அற்புத கடவுள் அனுமார். அவரை பிரதி வாரம் செவ்வாய் அன்று அதிகாலை நீராடி தூய ஆடை தரித்து 6 மணிக்கு அனுமார் படம் வைத்து அவருக்கு விருப்பமான சுந்தர காண்டம் புத்தகத்தை சந்தன, குங்குமம் இட்டு மலர் சாற்றி படத்திற்கு முன்பாக வைத்து தீபமேற்றி தூபம் காண்பித்து கீழே இருக்கும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.



காலையில் கூற வேண்டிய மந்திரம்: ஓம் ஹம் அனுமதயே நமஹ!! அன்றைய தினம் முழுவதும் பால் மற்றும் பழம் தவிர ஆகாரம் எதுவும் எடுத்து கொள்ளக் கூடாது. பின்னர் அனுமாருக்கு விருப்பமான பொருட்களை நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு எப்போதும் போல் வழக்கமான பணிகளை தொடங்கலாம். மீண்டும் மாலை 6 மணிக்கு செம்பு கலசம் ஒன்றை எடுத்து கொள்ளவும். சிவப்பு துணியினால் கலசத்தை சுற்றி கொள்ளவும். நல்ல தண்ணீரை நிரப்பி சிறிது பச்சை கற்பூரம், 4 ஏலக்காய், ஒரு ரூபாய் நாணயம் ஒன்று போட்டு கொள்ளவும். கலசத்தின் மேல் தேங்காய் வைத்து மலர் கொண்டு அலங்காரம் செய்யவும். பின்னர் இந்த மந்திரத்தை 1008 முறை கூறி பூஜையை நிறைவு செய்யவும். மாலையில் கூற வேண்டிய மந்திரம்: ஓம் நமோ! பகவதே! ஆஞ்சனேயாயை மஹாபலாயை சுவாஹா. இந்த எளிய பரிகாரம் செய்வதனால் உங்களின் தொழிலில் ஏற்பட்டிருக்கும் சரிவு நீங்கி வளர்ச்சி பாதையில் செல்லும். லாபம் அதிகரிக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருப்பவர்களும் இந்த வழிபாட்டை செய்வதால் வாழ்கையில் சகல சௌபாக்கியங்களும் பெற்று வளமுடன் வாழலாம். அதிக சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை மிகுந்த பக்தி சிரத்தையுடன், முழு நம்பிக்கையுடனும் செய்து வாருங்கள். இந்த பரிகாரத்தை இவ்வளவு வாரம் என்று இல்லை எவ்வளவு வாரம் செய்கிறீர்களோ அவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Friday, March 6, 2020

கடனைத் திருப்பித்தர, பணத்தை சீக்கிரம் சேமிக்க வேண்டுமா? ரகசிய சேமிப்பு சூட்சமம்.



பணப் பிரச்சனை இல்லாதவர்கள் யாருமே இந்த உலகத்தில் இருக்க முடியாது. பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, கஷ்டப்படும் சமயத்தில், கடனை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். நாம் வாங்கிய கடன் தொகையானது சின்ன அளவில் இருந்தால், சுலபமாக திருப்பிக் கொடுத்துவிடலாம். அதுவே லட்சக்கணக்கில் இருந்தால், கொஞ்சம் கஷ்டம் தான். கடன் கொடுத்தவர் பணத்தை மொத்தமாக தான் நமக்கு கடனாக தந்திருப்பார். அந்த பணத்தை நாம் சிறு சிறு பகுதிகளாக பிரித்து திருப்பித் தரவேண்டும் என்றால் சிலர் ஒத்துக் கொள்வார்கள். சிலர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். “என்னிடமிருந்து எப்படி மொத்தமாக வாங்கினாயோ, அப்படியே மொத்தமாக திருப்பி தர வேண்டும்”. என்று கூறிவிடுவார்கள். கடன் கொடுத்தவர் பேசுவதில் எந்த தவறும் இல்லையே! கடன் வாங்கியவர் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். கடனை வாங்கிய பின்பும் வட்டியும் கட்ட முடியாமல் அசலையும் கட்டமுடியாமல் தவித்து வரும் பலபேருக்கு இந்த ஒரு சிறிய பரிகாரம். கையில் இருக்கும் பணம் செலவாகாமல் இருக்க வங்கியில் போட்டு வைக்கலாம். இது ஒரு வழி. ஆனால் அந்தப் பணத்தை ஒரு சிறப்பான முறையில் சேர்த்து வைக்கும் போது மேலும் மேலும் சீக்கிரமாக பணம் சேர்ந்து, கடனை முழுமையாக திருப்பி அடைத்து விட முடியும். அது என்ன வழி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முதலில் செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை வரும் குளிகை நேரத்தில் உங்களது கடன் தொகையில் ஒரு பகுதியை திருப்பி கொடுத்து விடுங்கள். செவ்வாய்க்கிழமை பகல் 12.00-1.30 வரை குளிகை நேரம். சனிக்கிழமை காலை 6.00-7.30வரை குளிகை நேரம்.
நமக்கு வரும் வருமானத்தில் இருந்து ஒரு தொகையை, கடனை திருப்பித் தருவதற்காக சேமித்து வைப்போம். அந்தத் தொகையை ஒரு சிவப்பு உண்டியலில் அல்லது சிவப்பு துணியிலோ, தினம் தோறும் வரும் குளிகை நேரத்தில் சேமித்து வைக்க வேண்டும். சிவப்பு உண்டியலாக இருந்தால் குளிகை நேரம் பார்த்து அதில் ஒரு தொகையை போட்டு வைத்துக் கொண்டே வாருங்கள். சிகப்பு துணியாக இருந்தால் குறுகிய நேரத்தில் அந்த பணத்தை அதில் வைத்து நன்றாக மடித்து வைத்துக் கொள்ளலாம். உண்டியலில் பணத்தை போடும் போதோ அல்லது சிவப்புத் துணியில் பணத்தை வைத்து மடிக்கும் போதோ நீங்கள் கடனாக பணம் பெற்று இருப்பீர்கள் அல்லவா, அவரது பெயரை உச்சரித்து சேமித்து வரவேண்டும். இந்த சேமிப்பது நிச்சயம் அதி வேகமாக உயரும். அதாவது கடனை திருப்பித் தரும் தொகையை நீங்கள் சுலபமாக, விரைவாக சேமித்து விட முடியும். உங்களுக்கு எப்போதெல்லாம் வருமானம் வருகிறதோ அதில் சிறு தொகையை இப்படி சேமித்து வைத்து தான் பாருங்களேன்! மூன்று மாதத்திலேயே நல்ல முன்னேற்றம் இருப்பதை உங்களால் உணர முடியும். ஒரு சிகப்பு துணி பணத்தை அதிவேகமாக சேர்த்து விடுமா? என்ற சந்தேகத்தோடு பரிகாரத்தை தயவுசெய்து செய்யாதீர்கள். முடியும் என்ற நம்பிக்கையோடு செய்து பாருங்கள். உங்கள் கடனை நிச்சயமாக சீக்கிரமே திருப்பி கொடுப்பீர்கள்.

உங்களை கோடீஸ்வரராக விடாமல் தடுக்கும் எந்த ஒரு கண்திருஷ்டியையும், கெட்ட சக்தியையும் ஓட ஓட விரட்ட 7 சின்ன வெங்காயம் போதும்.



நம்முடைய தொடர் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு கெட்ட சக்தி இருக்கிறது என்றால், அது அடுத்தவர்களின் வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும் தான். எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைபடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால் சிலரின் முன்னேற்றத்தை சிலரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதாவது குறிப்பாக கண்ணுக்கு தெரியாதவர்கள் வளர்ச்சி அடைந்தால் அதில் நாம் பொறாமை கொள்ள மாட்டோம். நம்முடன் இருப்பவர், நம்முடன் பணிபுரிபவர், நம்முடைய சொந்தக்காரர், நம்மை விட அதிவேகமாக முன்னேற்றம் அடைகிறார் என்றால் நம் மனதில் சிறு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுவிடும். ‘இவரும் நம்மை போலவே தானே இருந்தார். ஆனால் இவரால் மட்டும் இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி அதிவேக முன்னேற்றத்தை அடைய முடிகிறது’ ‘இப்படியே இருந்தால் இவர் கோடீஸ்வரர் ஆகி விடுவாரோ’! என்று உங்களுடைய வளர்ச்சியை கண்டு பெருமூச்சு விட்டாலே போதும். உங்களால் அன்றிலிருந்து அதி வேகமாக செயல்பட முடியாமல் போய்விடும். சோம்பேறித்தனம் ஏற்படும். கண்களில் தூக்கம் வந்து கொண்டே இருக்கும். கொட்டாவி இருக்கும். வேலையை செய்ய முடியாத அளவிற்கு ஏதாவது ஒரு இடைஞ்சல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் இதற்கு முக்கிய காரணம் அடுத்தவர்களின் கண்திருஷ்டி ஆகத்தான் இருக்கும். அடுத்தவரின் கண் திருஷ்டியால் மட்டும் தான் இப்படி ஏற்படும் என்பதை ஊர்ஜிதமாக கூறிவிட முடியாது. அடுத்தவர்கள் தங்களுடைய கண் திருஷ்டியை கழித்து முச்சந்தி, 4ரோடு இப்படிப்பட்ட இடத்தில் போட்டு வைத்திருப்பார்கள். அதை தெரியாமல் நீங்கள் மிதித்து விட்டாலோ, தாண்டி விட்டாலும் அந்தக் கழிப்பானது உங்களை வந்து பிடித்துவிடும். இதுவும் ஒரு கோளாறு தான். இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் நாம் சுலபமாக நீக்கிவிட ஒரு தந்திரம் உள்ளது. அந்த தந்திரத்தை ஏழு சின்ன வெங்காயத்தை வைத்து எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் 7 பல் சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியாக 7 பல் சின்ன வெங்காயம் மட்டும். உங்களது உள்ளங்கையில் சிறிய பேப்பர் அல்லது துணியையோ வைத்து அதன் மேல் ஏழு சின்ன வெங்காயம் களையும் வைத்து விட்டு, அதன்பின் அது கீழே விழாமல் பிடித்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயமானது உங்களது உடலை உரச கூடாது. சின்ன வெங்காயத்தை உடலில் படாமல் தலையிலிருந்து கால் வரை, மேலிருந்து கீழ் பக்கமாக ஐந்து முறை ஏற்றி இறக்க வேண்டும். அதாவது நம் உடம்பில் இருக்கும் திருஷ்டியானது நம் கால் வழியாக வெளியே செல்லும் என்று கூறுவார்கள் அல்லவா? அப்படி இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பிறகு கையில் பேப்பரில் வைத்திருக்கும் அந்த சின்ன வெங்காயத்தை அப்படியே மடித்து முச்சந்தி அல்லது நான்கு சந்து ரோடு, இந்த இடத்தில் தூக்கி வீசி விடலாம். எப்போதும் எக்காரணத்தைக் கொண்டும் எந்த பொருளை வைத்து திருஷ்டியை கழிக்கின்றோமோ, அந்த பொருள் உங்களது உடம்பை உரசாமல் இருப்பது நல்லது. இந்தப் பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று செய்தால் நல்ல பலன் தரும். உங்களுக்கு இருக்கும் கண்திருஷ்டி கோளாறாக இருந்தாலும், அடுத்த வருவது கழிப்பில் நீங்கள் சிக்கி இருந்தாலும், அந்த பிரச்சனைகள் அனைத்தும் அந்த சின்ன வெங்காயத்துடன் சென்றுவிடும். இந்த பரிகாரத்தை இரவு நேரங்களிலும் செய்யலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பரிகாரத்தை செய்து கொள்வதில் எந்த பிரச்சினையும் வராது. நம்பிக்கையோடு செய்து பார்த்தால் பலன் நிச்சயம். மந்திர தந்திரங்கள் எதுவும் இல்லை. உப்பு சுற்றி போடுவது போல், வெங்காயத்தை சுற்றி போடுகின்றோம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். தொழிலில் முடக்கம், பணச் சிக்கல், கடன் தொல்லை, வருமானத்தில் தடை, குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் இன்மை இப்படிப்பட்ட பிரச்சனைகளும் கண் திருஷ்டியால் ஏற்படும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு வருமானம் நன்றாக வந்துகொண்டிருந்தது. ஆனால் சமீபகாலமாக எதனால் கஷ்டம் ஏற்பட்டது என்பதை தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

Monday, March 2, 2020

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?



நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்

குந்தி கூட இறுதியாக தன் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார்.இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் பதிலாக "கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்.என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது.நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.

நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன

நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.

நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?

கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

*வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை.ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்லஅந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது*

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில். போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை

*எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே*

குருபகவானின்_தங்கமும்_நமது_உடலும்......



......தங்க ஆபரணங்களின் அற்புத சக்தியும்,பயன்படுத்தும் முறைகளும்

1.தங்கம் நவக்கிரஹங்களில் பூரண சுபகிரகம் என்று சொல்லப்படும் குரு பகவானின் அம்சம்.வளமும் நலமும் தருவது.

2.சஹஸ்ரார சக்கரத்தை இயக்குகிறது மேலும் தீய சக்திகளை விலக்கும்.

3.மோதிரவிரலில் தங்க மோதிரம் அணிவதால் தடைகள் விலகுவதோடு
தெய்வீகச் சிந்தனை பெருகும்.

4.தங்க மோதிரத்தைப் பெண்கள் இடது கை மோதிர விரலிலும்,ஆண்கள்
வலது கை மோதிர விரலிலும் அணிய வேண்டும்.இது அதிர்ஷ்டம் தருவதோடு குழந்தை பாக்கியமும் தரும்.

5.தங்கம் உடலில் உள்ள வெப்பத்தையும்,விஷத் தன்மையையும் நீக்கக்
கூடியது.

6.காய்ச்சல் மற்றும் சளித் தொல்லையால் தொடர்ந்து அவதிப்படுபவர்கள் தங்க மோதிரத்தை சுண்டு விரலில் அணிந்து கொள்ளப் பாதிப்பு குறையும்.

7.பெயர் புகழ் அந்தஸ்து விஷயங்களில் பிரச்சனை இருந்தால் தங்க மோதிரத்தை நடு விரலில் அணிந்து கொள்ளப் பாதிப்புகள் சரியாகும்.

8. நினைவாற்றல் குறைவு மற்றும் மன உளைச்சல் உள்ளவர்கள் தங்க மோதிரத்தை ஆட்காட்டி விரலில் அணிந்து கொள்ளவும்.

9.தம்பத்திகளுக்குள் அந்நியோன்யம் உண்டாக கழுத்தில் தங்க நெக்லஸ் அணியவும்.

10.முற்றிய வயிற்றுநோய்கள் அல்லது பெரிய அளவில் உடற் பருமன் உள்ளவர்கள் தங்க நகைகள் அணிவதைத் தவிர்க்கலாம் அல்லது மிக குறைந்த அளவில் மட்டும் அணிய நல்லது.

11.சனிக்கிரகத்தின் அம்சமான தொழில்களான எண்ணெய்,நிலக்கரி,கரி,
இரும்பு மற்றும் பழைய பொருள் விற்பனை தொடர்பான தொழில் செய்பவர்கள் தங்கம் அணிவதைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம்.

12.கர்ப்பிணிகளும்,வயதானவர்களும் குறைவான அளவில் தங்க நகைகள் அணிவது உடலுக்கு நலம் தரும்.

13.தங்கத்தைக் #கனவில் காண்பது பணம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுவதைக் குறிக்கும்.,,,,,,
,,,,,,,,,,,பழமையான தங்க நாணயங்களை கனவில் காண்பது வேலை அல்லது தொழிலில் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுவதைக் குறிக்கும்.

14.தங்கம் மகாலட்சுமி மற்றும் #குரு_பகவானின் அம்சமாகக் கருதப்படுவதால் தங்கத்தை இடுப்பிற்குக் கீழ் அணிவது துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.

15.குழந்தைகள் தங்கத்தைச் சிகப்புக் கயிற்றோடு கோர்த்து அணிவது நல்லது.

16.தங்க ஆபரணங்களை சிகப்புப் பட்டு அல்லது காட்டன் துணியில் முடிந்து லாக்கரில் வைக்கவும்.கிழக்கு அல்லது தென் மேற்கில் வைக்கவும்..

நன்றி......

சகுனமும் விஞ்ஞானமுமம்.


வெளியில் செல்லும் போது பூனை குறுக்கே வந்தால் அது நல்லதல்ல என்று முன்னோர்கள் நம்பினார்கள். ஆனால் அது தவறு என்று கார்ப்பரேட் சைன்ஸ் கம்பெனிகள் நம்மை நம்ப வைத்தார்கள். அதன் விளைவு இப்போது நாம் பூனை குறுக்கே மட்டுமல்ல எப்படி வந்தாலும் கண்டுகொள்வதில்லை. நம்மை இப்படி மாற்றிவிட்டு அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா...? மேலும் படியுங்கள். சீனாவை ரகசியமாக கண்காணிப்பதற்காக உளவு செயற்கைக்கோள்களை சீனாவின் மீது நிலைநிறுத்துவது அமெரிக்காவின் வழக்கம். சிலவருடங்களுக்கு முன்னர் அப்படி செய்த போது செயற்கைக் கோள்கள் ஒரு நிமிடம் செயலிழந்து ஸ்தம்பித்தன. பலமுறை முயன்ற போதும் அப்படியே நிகழ்ந்தது. அதை சரி செய்யவே முடியவில்லை. சரி அதன் கீழே சீனாவில் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஆராய்ந்தார்கள். அங்கே அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கே இருந்தது எந்த ஊரும் இல்லை. அது ஒரு பெரும் காடு. அந்தக் காட்டின் நடுவே ஒரு கோயில் இருந்தது. மேலும் ஆய்வு செய்த போது அது சீனாவின் பிரசித்தி பெற்ற பூனைக் கோவில் என்று கண்டறிந்தார்கள். அந்த பூனைக்கோவிலில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுதான் செயற்கைக் கோள்கைளை ஸ்தம்பிக்க வைத்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தார்கள். உடனே பூனைகளை வாங்கி நாசா ஆய்வகத்தில் வைத்து ஆராய தொடங்கினார்கள். பூனையின் வாலில் இருந்து பிரத்யேக மின்காந்த அலைகள் வெளியாவதை நாசாவின் அதிநவீன உபகரணங்கள் படம் பிடித்தன. மனிதர்களை பார்க்கும் போது அந்த கதிர்களின் அலைநீளம் உடனே மாறியது. குறிப்பாக பூனைகள் வாசலில் இருந்து குறுக்காக செல்லும் போது அபாயகரமான காமா கதிர்கள் வெளிப்படுவதை அறிந்து ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே போய்விட்டனர் விஞ்ஞானிகள். இந்த காமா கதிர்கள் மனிதனது சிந்தனையை குழைத்து ஆபத்து ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தவை. இதனாலேயே பூனை குறுக்கே வந்தால் போன காரியம் விளங்காது என்று நம் முன்னோர்கள் கூறி வைத்தனர். நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. உண்மையான தமிழர்கள் அனைவரும் ஆச்சர்யமான இந்த உண்மையை அதிகம் பகிரவும்!
நட்புடன்🙏🙏

தினமும்_கோயிலுக்கு_செல்வதால்_ஏற்படும்_நன்மைகள்



*3 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் பிரம்மா விஷ்ணு சிவன் முதலான மூன்று தெய்வங்களின் அருள் கிட்டும்*

*5 நாட்கள் சென்றால் அனைத்து வியாதிகளும் நீங்கும்*

*7 நாட்கள் தொடர்ந்து சென்றால் திருமணம் ஆகதவர்களுக்கு வரன் கை கூடும்*

*11 நாட்கள் சென்றால் உடலும் மனமும் தூய்மை பெறும்*

*13 நாட்கள் தொடர்ந்து சென்றால் நினைத்த காரியம் கைகூடும்*

*21 நாட்கள் தொடர்ந்து சென்றால் புத்திர பேறு நிச்சயமாக கிட்டும்*

*33 நாட்கள் தொடர்ந்து சென்றால் சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்த பலன் கிட்டும்*

*77 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் ஒரு சத்ர யாகம் செய்த பலன் கிட்டும்*

*108 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் ஒரு தேவேந்திர பூஜை செய்த பலன் கிட்டும்*

*1008 நாட்கள் தினமும் கோயிலுக்கு சென்றால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்*

வாழ் நாள் முழுவதும் தினமும் கோயிலுக்கு செல்பவனுக்கு கிடைக்காத வஸ்து என்று இவ்வுலகில் எதுவும் இல்லை!!

அனைத்து விதமான சுக போகங்கள் அனுபவித்து முக்தி பேரனாந்ததை அடைவது உறுதி!!

#குறிப்பு:

#இப்பதிவை_படிப்பவர்கள்_அவரவர்_வீட்டின்_அருகில்_இருக்கும்_கோவிலுக்கு_தினமும்_சென்று_பயன்_அடையவேண்டுகிறேன்!!!!

Sunday, March 1, 2020

அஷ்டமி..... அதனை பற்றிய தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்......இந்த திதியில் #குழந்தை பிறந்தால் பிரச்சினையா ????



ஒரு மாதத்தில் வளர்பிறைக்காலத்தில் 14 திதிகளும், தேய்பிறைக் காலத்தில் 14 திதிகளும் என 28 நாட்கள் வருகிறது மீதம் இரண்டு தினங்களில் ஒன்று அமாவாசை மற்றொன்று பௌர்ணமி என மொத்தம் 30 நாட்கள் என ஒரு மாதம் பூர்த்தியடைகிறது.

இத்திதிகளில் “அஷ்டமி திதியும்” ஒன்று. இந்த அஷ்டமி திதி சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறைக் காலத்தில் #எட்டாவது தினமாக வருகிறது.

பொதுவாக ஜோதிட மற்றும் எண் கணித சாஸ்திரம் படி 8 என்பது சனிபகவானின் ஆற்றல் கொண்ட ஒரு எண்ணாகும். புராண, #இதிகாசங்களின் படி சனி பகவான் ஒரு நீதி தேவன், அதனால் எவர் ஒருவர் சிறிய அளவு தீவினையை புரிந்திருந்தாலும், அதற்கான தண்டனையை உடனே வழங்கி நீதியை நிலை நாட்டுபவர்.

இதன் காரணமாகவே சனிபகவானையும், அவரின் ஆற்றல் கொண்ட 8 ஆம் எண்ணையும் கண்டு பெரும்பாலானோர் கலக்கம் அடைகின்றனர். அப்படிப்பட்ட சனிபகவானின் தாக்கம் இந்த அஷ்டமி திதியில் ஏற்படுகிறது.

பொதுவாக வளர்பிறை மற்றும் தேய்பிறைக் காலத்தில் வரும் எந்த ஒரு அஷ்டமி திதியிலும் சுபகாரியங்கள் செய்யப்படுவதில்லை. ஆனால் இறைவழிபாடுகள் செய்ய வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி இரண்டுமே சிறப்பான நாட்களாகும். வளர்பிறை அஷ்டமியில் செல்வம் பெருக திருமாலின் இதயத்தில் வீற்றிருப்பவளான “லட்சுமியையும்”, தேய்பிறை அஷ்டமியில் சனி பகவானின் தோஷத்தை நீக்க #பைரவர் வழிபாடும் மேற்கொள்ளபடுகிறது ....

#அஷ்டமி_திதியில் குழந்தை பிறப்பது நல்லதா_கெட்டதா....

ஆவணி மாத அஷ்டமி திதியில் தான் “#கிருஷ்ண_பரமாத்மா” அவதரித்தார். அப்படி அவதரித்த கண்ணன் தன் சொந்த தாய்மாமனான கம்சனை வதம் புரிந்தார். இதன் காரணமாகவே பெரும்பாலானோர் தங்களுக்கு அஷ்டமி திதியில் பிறக்கும் ஆண் குழந்தையால், அக்குழந்தையின் தாய்மாமனுக்கு ஆகாதென்று அஞ்சுகின்றனர்.

முதலில் #கண்ணன் ஒரு தெய்வ அவதாரம், நாம் #மனித அவதாரம் என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இப்படிப்பட்ட அமைப்பில் பிறந்த பெரும்பாலான குழந்தைகளால் அவர்களின் தாய்மாமன்களுக்கு எவ்வொரு பாதிப்பும் ஏற்படாமல் அனைவரும் சுகமாகத் தான் வாழ்கிறார்கள். ஆதலால் அஷ்டமி திதியில் ஆண், பெண் என எந்த குழந்தைப் பிறந்தாலும் எவ்வித பாதகமுமில்லை.

அதையும் மீறி பாதிப்பு ஏற்படுவதாக அஞ்சுபவர்கள் பெருமாள் கோவிலுக்குச் சென்று #விஷ்ணு____சஹஸ்ரநாமம் படித்து வர நலம் ஏற்படும்.