Wednesday, July 25, 2018

பூண்டு

பூண்டு மிகச் சிறந்தது, உடல் ஆரோக்கியத்திற்கு. உடம்பில் கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் தினமும் இரவில் படுக்கும் முன்பு ஒரு பூண்டுப் பல் பச்சையாகவே கடித்து மென்று சாப்பிட கொழுப்பு போயே போய் விடும்! தினமும் தவறாது நாட்கணக்காக, மாதக்கணக்காகச் சாப்பிட வேண்டும். அதுவும் பச்சையாக மென்றுச் சாப்பிட பூண்டின் வாசனை அதிகமாகவே இருக்கும். பூண்டு சாப்பிடுபவர்களின் வியர்வையில் கூட வாசனை நன்கு தெரியும். ஆனால் அநேக வியாதிகளை விரட்ட பூண்டு ஒரு சிறந்த மருந்து. # தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது. # பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். # உணவில் சேர்த்தால் நல்லது தான்; ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே. # நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். # சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. # ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும். # பூண்டில், அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. # கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும். # அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும். # பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும். # பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும். # பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். # பால்+பூண்டு+தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது. # காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். # இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு பாலை நிறுத்திவிட வேண்டும். # ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும். # பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள்சுலபமாக வெளியேறிவிடும். # வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். # நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். # இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். # கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும். # நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். # ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும். # நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.

புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!!

புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!! முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.. புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் . **சோற்று கற்றாழை 400 கிராம் **சுத்தமான தேன் 500 கிராம் **whisky (or) brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக) தயாரிப்பு முறை ------------------------ சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும் நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது. மருந்தை உட்கொள்ளும் விதம் ---------------------------------------------- இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும். பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது . இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது. முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.. பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்... சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்..

முருங்கை கீரையின் 5 மகத்துவங்கள்

முருங்கை கீரையின் 5 மகத்துவங்கள்
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. * மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை. * ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். * குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. * முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. * முருங்கைக்கீரையின் சாறு இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லது. குறிப்பு: மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு சிறப்பு.

கல்லீரல்

மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் ! மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும். இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு. இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம். இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது. அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான். மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும். கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது. கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல். அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது. கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது. கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் ! இத்தகைய கல்லீரலை காப்பாற்ற ~மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.~ ~பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.~ அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம். உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும். நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ~முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.~ கல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்

சக்தி வாய்ந்த ப்ளாஷ் குழந்தைகளின் கண்ணின் கருமணியை பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்..

*குழந்தைகளின் பெற்றோர்களும் மற்றும் குழந்தைக்காக ஏங்கி எதிர்பார்க்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லப்பட வேண்டிய செய்தி இது..! கேமிரா ப்ளாஷ் ஆன் ஆகி இருப்பதை மறந்து , பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தையை க்ளோஸ்-அப்பில் போட்டோ எடுத்துள்ளார்.. அக்குழந்தையின் குடும்ப நண்பர் ஒருவர், ப்ளாஷின் பாதிப்பினால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளது அக்குழந்தை..! புகைப்படம் எடுத்தப்பின் குழந்தையின் கண்களில் ஏதோ மாற்றத்தை கண்ட அப் பெற்றோர்கள் அதிர்ந்து போய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள், குழந்தையை பரிசோதித்துவிட்டு மிக அருகாமையில் ப்ளாஷ் போடப்பட்டு படம் எடுக்கப்பட்டதால் (கிட்டத்தட்ட 10 இன்ச் அருகாமையில்) அதானால் குழந்தையின் வலது கண் பார்வையை இழந்துள்ளது என்று கூறியுள்ளனர்..! மேலும், சக்தி வாய்ந்த ப்ளாஷ் குழந்தைகளின் கண்ணின் கருமணியை பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.. நம்மில் சிலர்கள் குழந்தை பிறந்தவுடனே அக்குழந்தையை செல்போனிலும் ,சக்திவாய்ந்த காமிரா மூலமும் பலக் கோணங்களிலும் அடிக்கடி படம் எடுத்து வெளிநாட்டில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கும் ,அன்பர்களுக்கும் .நண்பர்களுக்கும் ஆர்வக்கோளாரின் காரணத்தினால் அனுப்புகின்றனர். அப்படி படம் எடுப்பதும், குழந்தையின் தாயார் குழந்தைகளின் மிக அருகில் செல் போன்களை வைத்துக்கொண்டு பேசுவதும் அக் குழந்தையின் உடல் நலத்திற்கு கேடுவிளைவிப்பதுடன் ,உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் ,என்பதையும் ஏனோ மறந்து விட்டு செயல் படுகின்றனர். சில மருத்துவமனைகளில் குழந்தைகள் பராமரிப்பு குறித்தும் குழந்தைகளை எளிதில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் கதிர்வீச்சுகள் குறித்தும் பெற்றோர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மறந்துவிட்டு பணம் ஈட்டுவது ஒன்று மட்டுமே குறிக்கோளாய் இருந்து வருகின்றன . எது எப்படிஇருப்பின்,பெற்றோர்களும் மற்றோர்களும் குழந்தைகள் விசயத்தில் கண்னும் கருத்துமாக விழிப்புணர்வுடன் செயல்பட்டு வந்தால் உள்ளமும் இல்லமும் சிறப்புடன் விளங்கும்....

மஞ்சள் & மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்

மஞ்சள் & மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும் இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ – இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள். இதுபோல பேசுகிறார்களே என்று சாதாரணமாக அவர்களை எடைபோட்டு விட முடியாது. சவடால் பேச்சுக்கு ஏற்ப அவர்களிடம் விஷயமும் இருக்கும். நாள்பட்ட சளி, இருமலுக்கு அருமருந்து மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் என்றால் மிகையாகாது. விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள். மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான். பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது. அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது. மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.

Tuesday, July 24, 2018

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? குளிக்கும்போது உத்தம திசைகளான வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்). தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும். குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் 'ஓம்' என்று தியானம் செய்து எழுதுங்கள். அந்த நீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட தியானத்தில் உள்ளிருக்கும் தெய்வத்திற்கு அபிஷேகம் பண்ணிய பலன் கிடைக்கிறது. அக்னி எப்போதும் மேல் நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும். . குளிக்கும் நேரம். மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம். . நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள். நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும். நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை. நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும். உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும். ஆண்கள் புதன், சனி கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் வெள்ளி கிழமைகளிலும் எண்ணை தேய்த்து குளிப்பது நல்லது. .... நன்றி.

குடற்புழுக்கள் (WORMS INFESTATION)

1. கல்யாணபூசணிவிதை 25கிராம் அரைத்து வெறும்வயிற்றில் சாப்பிட்டு, 3 மணிநேரம் கழித்து 2தேகரண்டி வி.எண்ணை சாப்பிட குடல் தட்டை புழுக்கள் வெளியாகும் 2. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10துளி,சிறிது வெந்நீரில் குழந்தைகளுக்கும், 4தேகரண்டி, சிறிது தேனில் பெரியவர்களுக்கும் கொடுக்க குடற்புழுக்கள் வெளியாகும் 3. அதிகாலை சிறிது வெல்லம் உட்கொண்டு, பின்,1சிட்டிகை குடசப்பாலை விதைச்சூரணம் உட்கொள்ள குடல் புழு கட்டுப்படும் 4. 1பிடி குப்பைமேனிவேரை,1லிநீரிலிட்டு கால் லி.ஆகக் காய்ச்சிப் பருக நாடாப் புழுக்கள் வெளியாகும். சிறுவர்களுக்கு 60 மிலி கொடுக்கவும் 5. கொட்டைக்கரந்தை விதைச்சூரணம்1 தேகரண்டி, தேனில் குழைத்துச் சாப்பிட குடல் புழுக்கள் வெளியாகும் 6. இஞ்சி,கோரைக்கிழங்கு,சமனரைத்து, சுண்டைக்காயளவு, சிறிது தேன் சேர்த்து சாப்பிட குடற்புழுக்கள் வெளியாகும் 7. வேப்பம்பட்டைக் கஷாயம் 6தேகரண்டி, தினமிருவேளை பருக குடற்புழு வெளியாகும் 8. வேப்பிலைச்சூரணம் 1தேகரண்டி,தினமிருவேளை பால் அல்லது வெந்நீரில் கொள்ள குடல்புழுக்கள் வெளியாகும் 9. வேப்பங்கொழுந்தை அரைத்து நெல்லிக்காயளவு தினம்காலை வெறும் வயிற்றில் கொள்ள குடற்புழுக்கள் வெளியாகும் 10. மலைவேம்பு இலைச்சாறு 4தேகரண்டி சாப்பிட குடல்புழு வெளியாகும் 11. மலைவேம்பு இலைகளை 2ல்1ன்றாய்க் காய்ச்சிப் பருக வயிற்றுப்புழு வெளியேறும் 12. மலைவேம்புவேர்பட்டை சூரணம் 1தேகரண்டி தினமிருவேளை வெந்நீருடன் கொள்ள வயிற்றுப்புழுக்கள் வெளியாகும் 13. சுண்டைக்காயைவற்றல்செய்து,சூரணித்து,அரைதேகரண்டி,தினமிரு வேளை, வெந்நீருடன் கொள்ள வயிற்றுப்புழுக்கள் வெளியாகும் 14. பிரண்டைத்தண்டுகளை மேல்தோல் நீக்கி, உப்பு,புளி,காரம் சேர்த்து, நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வயிற்றுப்பூச்சி, இரத்தமூலம் கட்டுப்படும்.மூளை,நரம்புகளும் பலப்படும் 15. வாய்விடங்கச்சூரணம்1-2கிராம் தினமிருவேளை 50மிலி வென்னீரில் கொள்ள குடற்புழுக்கள் வெளியாகும் 16. சிவதைசூரணம் 2கிராம் இரவில் 50மிலி வெந்நீரில் கொள்ள வயிற்றுப் புழுக்கள் வெளியேறும் 17. உத்தாமணி இலைக்குடிநீர் 20மிலி கொடுக்க குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்கள் வெளியாகும் 18. 3துளி எருக்கன்இலைச்சாறு,10துளிதேன் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!!!

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!!! உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சி) அதிகம் ஏற்படும். இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டால் நகங்கள் மற்றும் சருமம் வெளுத்துப் போய் இருப்பதோடு, அதிகப்படியான சோர்வு, இரத்த அழுத்த குறைவு, தலைவலி, மூச்சுத்திணறல், கவனச்சிதறல் போன்ற பல அறிகுறிகள் தென்படும். இரத்த சோகையானது இரும்புச்சத்து குறைபாடு, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, வைட்டமின் பி12 குறைபாடு போன்றவற்றால் ஏற்படும். மேலும் இது முற்றினால், நரம்பு பாதிப்பு ஏற்படும். ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம். இங்கு உடலில் உள்ள இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கருப்பு எள்ளு :- இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை உணவின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது எள்ளு மிட்டாய் வாங்கியும் சாப்பிடலாம். இதனால் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும். பேரிச்சம் பழம் :- பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இரவில் 2-3 பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு சாப்பிட்டு வருவது நல்லது. ஆப்பிள் :- ஆப்பிளில் கூட இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவையும் அதிகம் உள்ளது. அத்தகைய ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை நீங்கும். வாழைப்பழம் :- வாழைப்பழத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி, இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இரத்த சோகை மட்டுமின்றி, வேறு சில நன்மைகளும் கிடைக்கும். உலர் திராட்சை :- உலர் திராட்சையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம். பீட்ரூட் :- பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்த ஊறும் என்று சொல்வார்கள். ஏனெனில் பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். வெல்லம் :- வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரைக்கு பதிலாக, டீ போன்ற பானங்களில் வெல்லத்தை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். தேன் :- தேனில் இரும்புச்சத்து மற்றும் இதர வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து கலந்து, குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும். நெல்லிக்காய் :- தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். பார்ஸ்லி :- பார்ஸ்லியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் வளமையாக நிறைந்துள்ளது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள். இதில் வைட்டமின் சி மற்றும் இதர வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், இவை இரத்தம் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும். சிட்ரஸ் பழங்கள் :- சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சையில், இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சி வளமையாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மாதுளை :- மாதுளையில் இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் மற்ற கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை குணமாகும். தக்காளி :- தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபைன் போன்றவை வளமையாக நிறைந்துள்ளது. இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டால் மட்டும் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியாது, இரும்புச்சத்தை உறிஞ்சும் வைட்டமின் சி நிறைந்த உணவையும் சேர்த்து வந்தால் தான் இரத்தத்தின் அளவு அதிகரிக்க முடியும். பச்சை இலைக் காய்கறிகள் :- பச்சை இலைக் காய்கறிகளான பசலை கீரை, அரைக்கீரை, சிறு கீரை போன்றவற்றை டயட்டில் சேர்த்து வருவதன் மூலம், உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து நிவாரணம் பெறலாம்

பச்சை தேங்காயின் பயன்கள்

தேன் காய் = தேங்காய் என்னும் அமிர்தம். #தேங்காய் #உபயோகம் #மாரடைப்பில் #முடியும் #என்று #நிறைய #பேர் #கைவிட்டனர் #உண்மை #இதோ :-- *பச்சை தேங்காயின் பயன்கள்* தேங்காயை பச்சையாக ஒரு வேளை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை.... பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்........ தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்......சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்.... உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்... இரத்தத்தை சுத்தமாக்கும்... உடலை உரமாக்கும்..... உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்...... தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை...... நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல...தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்.... இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்... குறிப்பு : தேங்காய் குருமா தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக(கொலஸ்ட்ரால்) மாறிவிடும். சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்) தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்காள சிற்றுண்டி தந்து பாருங்கள்...அவ்வளவு ஆரோகியம்... பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள், ஆன இப்போது மாட்டு பால் ஊத்தி 🤒 ஊ..ஊ..ஊ.... தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள், ஆன இப்போது பாக்கெட் பால்🤔?.. காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை (அ) கருப்பட்டி (அ) தேன் சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்... ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை... 🎀 *பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களும் தெரிந்து கொள்ளட்டும்* 🎀

இந்து சமயம் சொல்லி வைத்த தெரியாத உண்மைகள்.

இந்து சமயம் சொல்லி வைத்த தெரியாத உண்மைகள். #சித்திரை 1 #ஆடி 1 #ஐப்பசி 1 #தை 1 இவற்றை எல்லாம் விழாவாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் என நினைக்கின்றோம். நம் முன்னோர்கள் இதற்குப் பின்னால் மிகப்பெரிய. அறிவியல் இருக்கின்றது "சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித்தருகிறோம்.... என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? கண்டிப்பாக இல்லை... ஆங்கிலேயர்கள் நமது அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.... சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்.... அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அதன்பிறகு மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அதன் பின் தென்கிழக்கு நோக்கி நகரும்... இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு சென்று மறுபடியும் கிழக்குக்கு வர ஆகின்ற நேரம் சரியாக ஒரு வருடம்..!!!! சரி... இதற்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்? சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் சித்திரை 1.., புத்தாண்டு...!!! (In science it is called Equinox) சரியாக வடகிழக்கு புள்ளி தான் ஆடி 1 .... (solstice) மறுபடியும் கிழக்குக்கு வரும்போது ஐப்பசி 1 (equinox) மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது தை1 (solistice) இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்... சித்திரை (equinox) - புத்தாண்டு ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு ஐப்பசி (equinox)- தீபாவளி தை (winter solstice) - பொங்கல் நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்... நமது முன்னோர்கள்..... "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் மிகவும் மகத்தானவர்கள்.

Monday, July 23, 2018

இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய 9 உணவு வகைகள்

இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய 9 உணவு வகைகள்:- என்றும் ஆரோக்கியம் தான்.. ~~~~~~ 🌺🌸🐝🌺🌸 ~~~~~~ உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல்,சோர்வு, சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.ஷ...ரு🐝 1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். 2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். 3)கேரட், பீட்ரூட், இஞ்சி துண்டு, தேன் சேர்த்து காலையில் உணவுக்கு பிறகு ஜீஸ் போட்டுக் குடித்துவர இளம் இரத்தம் உண்டாகும் சிரஞ்சீவி போன்று சுறுசுறுப்பாக உடல் இருக்கும்... 4)முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். 5) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும். 6) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. 7) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. 8)இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. 9) தினமும் நெல்லிகாய், கொய்யாபழம் இரண்டையும் சாப்பிட்டுவர புது இரத்தம் மட்டும் இல்லை உடலில் அனைத்து பாகங்களுக்கும் புத்துயிர். பெரும் என்றும் இளமையிலேயே இருக்கலாம் .🐝 விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.ஷ...ரு🌳 என்றும் ஆரோக்கியமான தகவல்கள் ....

பகவத் கீதையும் ஜாதியும்

பகவத் கீதையும் ஜாதியும் (ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடலிலிருந்து சிறு பகுதி) ஸாண்டி நிக்ஸன்: பகவத் கீதை இந்த ஜாதி அமைப்பைப் பற்றிக் கூறுகிறதே. ஸ்ரீல பிரபுபாதர்: கீதை ஜாதி அமைப்பைப் பற்றிக் கூறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஸாண்டி நிக்ஸன்: ஆம், நான்கு வர்ணங்களைப் பற்றியும் தீண்டத்தகாதவர்களைப் பற்றியும் கூறுகிறதே. ஸ்ரீல பிரபுபாதர்: சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஸ, செயல்களுக்கும் தன்மைக்கும் ஏற்ப நால்வகை பிரிவுகள் மனிதரில் உள்ளன என்றுதான் பகவத் கீதை (4.13) குறிப்பிடுகிறது. இது ஜாதி அமைப்பு என்று உங்களுக்கு கூறியது யார்? இது ஜாதி அமைப்பு அல்ல. உதாரணத்திற்கு பொறியியல் வல்லுநர்களும் மருத்துவர்களும் சமுதாயத்தில் உள்ளனர். அவர்களை நீங்கள், அவர் பொறியாளர் ஜாதி, அவர் மருத்துவர் ஜாதி.” என்று கூறவியலுமா? ஒருவர் தகுதிவாய்ந்த மருத்துவராக இருந்தால், நாம் அவரை மருத்துவராக ஏற்கிறோம். ஒருவர் தகுதிவாய்ந்த பொறியாளராக இருந்தால், அவரை பொறியாளராக ஏற்கிறோம். அதுபோலவே, பகவத் கீதையில், உயர்ந்த அறிவுடையவர்களின் பிரிவு, ஆளுநர்களின் பிரிவு, உற்பத்தியாளர்களின் பிரிவு, சாதாரண தொழிலாளர்களின் பிரிவு என நால்வகை பிரிவுகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவை ஏற்கனவே சமுதாயத்தில் உள்ளன. இவர் இன்னஇன்ன பிரிவைச் சார்ந்தவர்.” என்பதைக் கண்டறிவது எவ்வாறு எனும் முறையைத்தான் பகவத் கீதை விளக்குகிறது. பிறப்பின் அடிப்படையில் ஒருவன் இன்ன ஜாதியைச் சேர்ந்தவன் என்று கீதை குறிப்பிடவில்லை. நீங்கள் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். இந்த பிரிவுகள் இயற்கையாகவே சமுதாயத்தில் உள்ளன. மனிதரில் ஒருவகையினர் மிகுந்த புத்திசாலிகளாக உள்ளனர். அனைவரும் சமமான அறிவை கொண்டுள்ளனரா என்ன? மிகுந்த புத்திசாலி களான மனிதர்கள் இருக்கவே செய்கின்றனர். அந்த பிரிவினரின் அறிகுறிகள் என்ன? என்பதை கீதை விவரிக்கின்றது. ஒருவனிடம் அந்த அறிகுறிகள் காணப்படும்போது, அவன் முதல்தர மனிதன் எனப்படுகிறான். நாங்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தவே முயற்சி செய்கிறோம். முதல்தர மனிதர்களற்ற சமுதாயத்தினால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆகவே, முதல்தர மனிதர்கள் சமுதாயத்தில் இருக்கின்றனர். நாங்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். உதாரணமாக, புத்திசாலி மாணவன் மருத்துவர் எனும் தகுதியைப் பெற மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெற வேண்டுமல்லவா? அதுபோலவே கிருஷ்ண பக்தி இயக்கத்தில் புத்திசாலியான மனிதர்களுக்கு மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்துவது எவ்வாறு? உண்மை பேசுதல், உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல், சாஸ்திரங்களைக் கற்றல், கற்றதை வாழ்வில் கடைப்பிடித்தல், கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்தல் உள்ளிட்ட அனுஷ்டானங்கள் வழங்கப்படுகின்றன. முதல்தர மனிதர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இவர்களெல்லாம் (அருகிலிருந்த சீடர்களைச் சுட்டிக்காட்டியபடி) தங்களது திறமையை நல்ல முறையில் பயன்படுத்த பயிற்சி எடுத்து வருகின்றனர். இவ்வாறு பயிற்சி பெற்ற புத்திசாலி மனிதனே சமுதாயத்திற்கான தேவை. எனவே, பயிற்சி மிகவும் அவசியமாகிறது. நாங்கள் ஜாதி அமைப்பை அறிமுகப்படுத்தவில்லை. அந்த ஜாதி அமைப்பில் பிராமண குடும்பத்தில் பிறந்த அயோக்கியனும் பிராமணனாகிறான். நாங்கள் அதை ஒப்புக்கொள்வதில்லை. பிராமணனாவதற்கு தரமான பயிற்சியை மேற்கொண்டவனையே நாங்கள் பிராமணராக ஏற்கிறோம். அவர் இந்தியாவில் பிறந்தவரா, ஐரோப்பாவில் பிறந்தவரா, அமெரிக்காவில் பிறந்தவரா என்பனவற்றை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. நாங்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தவே முயற்சி செய்கிறோம். இதுவே பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜாதி அமைப்பின்படி, பிராமண குடும்பத்தில் பிறந்த ஒருவன் மூன்றாம்தர மனிதனுக்குரிய தீய பழக்கங்களைக் கொண்டிருந்தாலும் அவன் பிறப்பின் அடிப்படையில் பிராமணனாக ஏற்கப்படுகிறான். ஆயினும், ஒருவன் மிகுந்த புத்திசாலியாக, முதல்தர மனிதனுக்குரிய பழக்கங்களுடன் பயிற்சிகளைப் பெற தகுதியானவனாக இருந்தாலும், அவன் சூத்திர குடும்பத்தில் பிறந்துள்ள காரணத்தினால் சூத்திரனாக ஏற்கப்படுகிறான்.” நாங்கள் இந்த அபத்தங்களை நிறுத்துவதற்கு விரும்புகிறோம். அவன் இந்தியனா ஐரோப்பியனா, பிறப்பினால் உயர்ந்தவனா தாழ்ந்தவனா என்பதையெல்லாம் நாங்கள் கவனத்தில் கொள்வதில்லை. அவை ஒரு பொருட்டே அல்ல. புத்திசாலி மனிதர்களைத் தேர்ந்தெடுத்து எல்லா வகையிலும் அவர்கள் முதல்தர மனிதராக விளங்குவதற்கான பயிற்சியை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம். நாங்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தவே முயற்சி செய்கிறோம்.

உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.

#அதிகம் #பகிரவும் சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா? அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள். அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள். பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம். இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர் உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார் தமிழா... இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்.!!

Sunday, July 22, 2018

அரிய சித்தர் நூல்களை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்போம்.....

அரிய சித்தர் நூல்களை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்போம்..... இந்த இணைப்பில் 53 சித்தர் நூல்கள் உள்ளன... வேண்டுவோர் பயன்படுத்திப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்... https://drive.google.com/open?id=0B6FVd2lcX-gxNGU4M1c5Y1c1ODg https://drive.google.com/drive/mobile/folders/0B6FVd2lcX-gxNGU4M1c5Y1c1ODg

ஹரே கிருஷ்ண மகாமந்திரம்

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற உச்சரிப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் உன்னத அதிர்வானது, நம்முடைய உன்னத உணர்வுகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான ஒரு மேலான முறையாகும். உயிர் ஆத்மாக்களாக இருப்பதால், நாம் அனைவரும் உண்மையில் கிருஷ்ண உணர்வுள்ள ஆத்மாக்களாவோம். ஆனால் நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து பெளதிக தொடர்பின் காரணத்தினால் நமது உணர்வானது பெளதிக சூழலில் மாசு அடைந்துள்ளது. தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பெளதிக சூழலே மாயை என்று அழைக்கப்படுகிறது. இல்லாத ஒரு பொருள் மாயை என்பதாகும். இந்த மாயை என்பது என்ன? இந்த பெளதிக உடலில் நாம் அனைவரும் எஜமானராக இருக்க முயற்சி செய்கிறோம். ஆனால் உண்மையில் மாயையின் கடுமையான சட்டத்தின் பிடியில் நாம் இருக்கிறோம். ஒரு சேவகன் செயற்கையாக எஜமானரைப் போல் நடிப்பது மாயை. பெளதிக இயற்கையின் வசதிகளை சுயநலத்துக்கு உபயோகிப்பதற்காக நாம் முயன்று கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் மேன்மேலும் மாயையின் சிக்கலான சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆகவே இயற்கையை வெல்வதற்கு கடின உழைப்பில் நாம் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோதிலும் நாம் எப்பொழுதும் அதை நம்பியே இருக்கிறோம். நமது நிரந்தர கிருஷ்ண உணர்விற்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் பெளதிக இயற்கைக்கு எதிரான இந்த மாயையான போராட்டம் உடனடியாக நிறுத்தப்பட முடியும். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற இந்த மகா மந்திரம் உண்மையான தூய உணர்வுக்கு புத்துயிர் அளிப்பதற்கான உன்னத முறையாகும். இந்த உன்னத அதிர்வை உச்சரிப்பதன் மூலம் நமது இதயத்தில் உள்ள அனைத்து அழுக்குகளையும் சுத்தம் செய்து விடலாம். அழுக்கின் அடிப்படை பொய் தன்னுணர்வே. ‘நான் காரணகர்த்தா’ என எண்ணுவது. கிருஷ்ண உணர்வு என்பது செயற்கையான ஒன்றை மனதில் திணப்பது அல்ல. இந்த உணர்வானது உயிர் வாழிகளின் இயற்கையான சக்தியாகும். இந்த திவ்யமான அதிர்வை கேட்கும் போது உணர்வானது புத்துயிர் பெறுகிறது. மிக சுலபமான இந்த யோக முறை இந்த யுகத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. விடுதலைக்கான மிகச் சிறந்த உச்சரிப்பான இந்த மகாமந்திரத்தை உச்சரிப்பதம் மூல ஆன்மீக தளத்திலிருந்து வரும் உன்னத இன்பவெள்லத்தை உணரலாம. பெளதிக சம்பந்தமான வாழ்வில் மிருகம் போன்ற புலன் நுகர்ச்சியாலேயே நாம் காலம் தள்ளுகிறோம். புலன் நுகர்வு நிலையிலிருந்து சிறிது விலகி முன்னேறியவர்கள் ஜடக் கட்டுகளிலிருந்து விடுபட மனக்கற்பனையில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு சிறிது முன்னேற்றமடைய போதிய அறிவு உள்ள ஒருவர் காரணங்களுக்கெல்லாம் காரணமான உன்னதமானவரை கண்டுகொள்ளும்போது மனக்கற்பனை நிலைகளிலிருந்து முன்னேறுகிறார். உண்மையில் ஒருவர் ஆன்மிக அறிவின் தளத்தில் இருக்கும் போது புலன், மனம் மற்றும் புத்தி ஆகிய நிலைகளைக் கடக்கிறார். ஹரே கிருஷ்ண மகா மந்திர உச்சாடனம் ஆன்மிக தளத்திலிருந்து உண்டாவதாகும். இவ்வாறாக இந்த சப்த அதிர்வானது அனைத்து சூழ்நிலை உணர்வுகளையும் கடக்கிறது. அதாவது சிற்றின்பம், மனம் மற்றும் அறிவுபூர்வமான அனைத்து கீழ்நிலை உணர்வுகளையும் கடக்கிறது. ஆகவே மகாமந்திரத்தின் மொழியை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமோ, எவ்வித மனக்கற்பனையோ, அறிவுப்பூர்வமான சரிகட்டும் முறையோ தேவை இல்லை. இது தானாக ஆன்மிக தளத்திலிருந்து உண்டாவதாகும். இவ்வாறாக இந்த சப்த அதிர்வானது அனைத்து சூழ்நிலை உணர்வுகளையும் கடக்கிறது – அதாவது சிற்றின்பம், மனம் மற்றும் அறிவுபூர்வமான அனைத்து கீழ்நிலை உணர்வுகளையும் கடக்கிறது. ஆகவே மகாமந்திரத்தின் மொழியை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமோ, எவ்வித மனக்கற்பனையோ, அறிவுபூர்வமான சரிகட்டும் முறையோ தேவை இல்லை. இது தானாக ஆன்மிக தளத்திலிருந்து வருவதாகும். எவ்வித முன் தகுதியுமின்றி இந்த உன்னத சப்த அதிர்வில் எவரும் பங்கேற்கலாம். ஆனால் இதில் சற்று முன்னேறிய நிலையில் உள்ள ஒருவர் ஆன்மிகத்தை உணர்ந்து கொண்டு பாவகாரியங்கள் செய்யக்கூடாது. ஆன்மிகத்தில் எட்டுவகையான பேரின்ப நிலைகள் உள்ளன. அவைகள் பேச முடியாத நிலை, வியர்த்து போகும் நிலை, ரோமக்கால்கள் உடலில் சிலிர்த்தெழும் நிலை, வாய் உளறுதல், நடுக்கம், உடல் மெலிதல், பேரின்பத்தில் அழுதல், உணர்வற்ற நிலை, ஆரம்பத்தில் இத்தகைய அனைத்து உன்னத நிலைகளும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சிறிது நேரம் மந்திரத்தை உச்சரித்தவுடன் ஒருவர் உடனடியாக ஆன்மிக தளத்தை அடைகிறார். கீர்த்தனத்தின் போது நடனம் ஆடவேண்டும் என்ற வேகத்தின் மூலம் ஒருவர் முதல் அறிகுறியை காண்பிக்கிறார். இதை நடைமுறையில் நாங்கள் பார்க்கிறோம். இத்தகைய நடனத்தில் ஒரு குழந்தைகூட பங்கேற்பதை காணலாம். பெளதிக வாழ்க்கையில் மிகவும் சிக்கியுள்ள ஒருவருக்கு வேண்டுமானால் இவ்விஷயத்திற்கு வர சிறிது காலமாகலாம். ஆனால் அப்படிப்பட்ட மனிதர் கூட மகாமந்திரத்தை உச்சரித்தவுடன் மிக சீக்கிரமாக ஆன்மிக தளத்திற்கு உயர்த்தப்படுகிறார். கடவுளின் தூய பக்தர் அன்போடு இதை பாடும் போது கேட்பவர்கள் மிகச் சிறந்த பயனை அடைகிறார்கள். இவ்வாறாக இக்கீர்த்தனையானது கடவுளின் தூய பக்தரின் உதட்டிலிருந்து பாட கேட்கப்பட வேண்டும். ஏனென்றால் இதற்உ பலன் உடனடியாக கிடைக்கிறது. முடிந்தவரையில் பக்தர் அல்லாதவர் ஒருவர் பாடுவதைக் கேட்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பாம்பின் உதடுபட்ட பால் விஷமாகிறது. ஹரா என்ற வார்த்தை கடவுளின் சக்தியை குறிக்கிறது. கிருஷ்ணா, ராமா போன்ற வார்த்தைகள் கடவுளையே குறிக்கிறது. கிருஷ்ணா, ராமா என்பதற்கு மிக உன்னத ஆனந்தம் என்று பொருள், மேலும் ஹரா என்பது ஹரே என்று விளி வேற்றுமையால் மாறுகிறது. கடவுளின் மிக உன்னத ஆனந்த சக்தியானது அவரை அடைவதற்கு நமக்கு உதவுகிறது. மாயை என்று அழைக்கப்படும் பெளதிக சக்தி கூட கடவுளின் சக்திகளில் ஒன்றே. உயிர்வாழிகளாகிய நாமும் கடவுளின் விளிம்பிலான சக்தியாவோம். உயிர் வாழிகள் பெளதிக சக்தியை விட உயர்ந்தவர்களாக விவரிப்படுகிறார்கள். உயர்ந்த சக்தி கீழான சக்தியோடு தொடர்பு கொள்ளும் போது பொருத்தம் இல்லாத ஒரு சூழ்நிலை உருவாகிறது. ஆனால் உயர்ந்த விளிம்பிலான சக்தியானது ஹரா என்னும் உயர்ந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும்போது சக நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்தப்படுகிறது. ஹரா, கிருஷ்ணா மற்றும் ராமா ஆகிய மூன்று வார்த்தைகளும் மகாமந்திரத்தில் ஆன்மிக விதைகளாகும். மகா மந்திரத்தை உச்சரிப்பது கட்டுண்ட ஆத்மாக்களுக்கு பாதுகாப்பை கொடுப்பதற்காக கடவுளிடமும், அவரின் சக்தியிடமும் விடுக்கும் ஒரு ஆன்மிக அழைப்பாகும். மந்திர உச்சாடனம் உண்மையில் ஒரு குழந்தை தாயை நினைத்து அழும் ஒரு இயற்கையான அழைப்பை போன்றதாகும். தாய் ஹரா, தந்தையான கடவுளின் அருளை பெறுவதற்கு பக்தர்களுக்கு உதவுகிறார். மேலும் இந்த ஹரே கிருஷ்ண மாகாமந்திரத்தை உச்சரிக்கும் பக்தர்களுக்கு கடவுள் தன்மைத்தானே வெளிப்படுத்துகிறார். சண்டையும், கபடமும் நிரைந்த இந்த கலுயுகத்தில் ஆன்மிக உணர்வு பெற ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைப் போல சக்தி வாய்ந்ததாக வேறு எந்த சாதனமும் கிடையாது. ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே (தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் எழுதிய கிருஷ்ண உணர்வு மிக உன்னத யோகம் புத்தகத்திலிருந்து ஒரு கட்டுரை இது)

உடலின் கழிவுகளை வெளியேற்ற...!!!

12 தவறான பொருட்களை உணவாக உண்டதால் ஒரு மனிதனுக்கு செரிமானக்குறைவு ஏற்படுகிறது. அவைகளை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது*. 1. உப்பு 2. புளி 3. வெள்ளை சர்க்கரை 4. வெங்காயம், பூண்டு 5. ஆங்கில மருந்து 6. கெமிக்கல் உணவு 7. உருளைக்கிழங்கு 8. அசைவ கொழுப்பு 9. பால் பதார்த்தங்கள் 10. பச்சை, வர மிளகாய் 11. ரீபைண்டு ஆயில் 12. மைதா, முட்டை மேலே கொடுக்கப்பட்டவைகள் வெகு நாட்கள் கழிவுகளாக உடலிலேயே தேங்குவதால் தான் நோய் என்று மனிதனுக்கு ஒன்று ஆரம்பமாகிறது. சரி, அந்த கழிவுகளை உடலிருந்து வெளியேற்ற முடியாதா ? என்றால் நிச்சயம் முடியும். காய்கறிக்கு அந்த மகத்துவம் உண்டு. *எந்த கழிவை எந்த காய்கறியின் மூலம் நீக்க முடியும் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உண்டு பயன் பெறவும்*. *உப்பை வெளியேற்றும் விதி* தீர்வு : காலை, பிற்பகல், இரவு மூன்று முறை பச்சையாக நான்கு வெண்டைக்காயை உணவுக்கு முன் நன்கு மென்று அரைத்து வாயிலேயே கூழாக்கி பருகவும். *புளி அதிகம் எடுப்பதால் உடல் தளர்ச்சி வேகமாக நடைபெறுகிறது. அதனை வெளியேற்றும் விதி* தீர்வு : ஒரு வாழைக்காயை தோலை நீக்கிவிட்டு பச்சையாக நன்றாக மென்று சாப்பிட வேண்டும். *வெள்ளை சர்க்கரையின் கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் விதி* தினமும் காலை 200 கிராம் பூசணிக்காயை அதன் தோல், விதை, சதை, நார் ஆகியவையுடன் அரைத்து வடிகட்டி சிறிது மிளகு சேர்த்து பருகவும். *வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டின் கழிவுகளை வெளியேற்றும் விதி* தீர்வு : காலை இரவு இருமுறை இரண்டு ஊதா நிறத்தில் வரி வரியாக இருக்கும் நாட்டு கத்திரிக்காய் மற்றும் இரண்டு தக்காளி ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடித்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும். *கடுமையான பின்விளைவுகளை தரும் ஆங்கில மருந்தின் நஞ்சை உடலிருந்து வெளியேற்றும் விதி* காலை இரவு இருமுறை 6 கொத்தவரை மற்றும் முழு எலுமிச்சை தோலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து வடிகட்டாமல் குடிக்கவும். *கடைகளிலும், பாக்கெட்டிலும் உள்ள கெமிக்கல் கொண்ட உணவு மற்றும் முக்கியமாக அரிசியில் கலந்துள்ள நஞ்சை வெளியேற்றும் விதி* தீர்வு : இரவு தூங்கும் முன் 250 கிராம் புடலங்காய் விதையுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பருகவும். *உருளைக்கிழங்கால் குடலில் அதிகம் தேங்கி ஒட்டியுள்ள மாவுச்சத்தை உடலிருந்து வெளியேற்றும் விதி* தினமும் காலை 50 கிராம் அரசாணிக்காய் மற்றும் 50 கிராம் அரசாணிக்காய் விதை ஆகிய இரண்டையும் பச்சையாக மென்று சாப்பிடவும். *நார்சத்தே இல்லாத அசைவ உணவானது குடலில் ஒட்டுக்கொண்டு வராமல் கட்டியாகிறது. அதனை வெளியேற்றும் விதி* காலை, பிற்பகல், இரவு மூன்று முறை 6 கோவைக்காயை பச்சையாக நன்கு மென்று சாப்பிடவும். *அதிகமாக பால், தயிர், மோர் மற்றும் பால் பதார்த்தங்களை உண்ணுவதால் உடலில் புளிப்புத்தன்மை மிகுந்து குடலில் பூச்சிகள் உருவாகிறது. அதனை வெளியேற்றும் விதி* காலை, பிற்பகல், இரவு மூன்று முறை முற்றிய முருங்கை விதை இரண்டை உணவுக்கு பின் 15 நிமிடம் சப்பி விட்டு இறுதியில் மென்று முழுங்கவும். *பச்சை மிளகாய், வரமிளகாய் ஆகிய இரண்டின் உபயோகித்தல் ஏற்பட்ட இழப்பை மாற்றி மீண்டும் உடல் உறுப்புகளை பழைய நிலைக்கு கொண்டு வரும் விதி* தினமும் காலையில் ஒரு முழு பீர்கங்காய் தோலுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை பழம் தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும். *உடலுக்கு தேவையில்லாத ரீபைண்டு ஆயிலை உட்கொண்டதால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. அதனை வெளியேற்றும் விதி* காலை, பிற்பகல், இரவு மூன்று முறை நன்கு எண்ணெய் பதம் கொண்ட 50 கிராம் கொப்பரை தேங்காயை நன்கு மென்று உமிழ் நீருடன் கலந்து பருகவும். *மைதா மற்றும் முட்டையை வெளியேற்றும் விதி* தீர்வு : காலை மற்றும் இரவு இருமுறை ஒரு முழு எலுமிச்சை பழத்தை பச்சையாக தோலுடன் மிக்சியில் நீர் விட்டு அரைத்து வடிக்காமல் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பொருமையாக சப்பி குடிக்கவும்.

Wednesday, July 18, 2018

அரபு மொழி

அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி.அறமைக் மொழி, ஹீப்ரு மொழி என்பவற்றுடன் தொடர்புபட்டது. இன்று 21 நாடுகளின் அரபு ஆட்சி மொழியாகும். ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. 183 மில்லியன் மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது.[6] இஸ்லாமிய சமயத்துடன் தொடர்புபட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்ஜீரியா, பாரேன், எகிப்து, எரித்திரியா, ஈராக், ஜோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு அரசு ஏற்புடைய மொழியாகவும் உள்ளது. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியைத் தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர். அரபு மொழி பல மொழிகளுக்குத் தன் சொற்களைக் கொடை அளித்துள்ளது. அவற்றில் பாரசீக மொழி, துருக்கியம், சோமாலி, போசுனியன், வங்காளி, உருது, இந்தி, மலாய், அவுசா போன்றவை அடங்கும். அதே சமயம் அரபு மொழிக்கும் மற்ற மொழிகள் சொற்கொடை வழங்கியுள்ளன. அவற்றுள் ஹீப்ரு, கிரேக்கம், பாரசீகம், சிரியக்கு போன்ற மொழிகளும் அடங்கும். ஆரம்பக் கால அரபி மொழி ஆரம்பக் காலத்தில் அரபி எழுத்துக்கள் ஒரே எழுத்துருவைக் கொண்டிருந்தாலும் தற்போது உள்ள எழுத்துகளைப் போல் "நுக்தா" புள்ளி அமைப்பிலான எழுத்துகள் இல்லை. உதாரணமாக ع= ஆயின், ع=க்ஹாயின், س=ஸீன், س=ஷீன் இன்னும் பல எழுத்துகள் ஒரே அமைப்பையும், அனால் வெவ்வேறு ஒலி அமைப்பைக் கொண்டுள்ளது. அவற்றை வேறுபடுத்துவது புள்ளிகள் தான். குரான் உலகிற்கே வழங்கப்பட்ட வேதமாக இருபதால் அரபி மொழியைக் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரபி அரபியற்குத் தாய் மொழியாக இருந்ததால் எந்த விதமான சிரமமும் இன்றி பேசினார். அனால் அரபி அல்லாத பிற மொழிக்காரர்களுக்குக் கடினமாக இருந்ததால் குரான் ஓதுவதில் பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் "நுக்தா" என்ற அடையாளப் புள்ளி அமைப்பு கொண்டுவரப்பட்டது {ع=ஆயின், غ=க்ஹயின், س=ஸீன், ش=ஷீன், ص=ஸாத், ض=லாத், د=தால், ذ=த்தால், ب=பா, ت=தா, ث=ஸா} அத்துடன் உயிர் மெய் அடையாளக்குறிகளும் கொண்டுவரப்பட்டது. உயிர் மெய் அடையாளங்கள் எந்த நாடில் உருவான குரானாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக உயிர் மெய் அடையாளம் இடப்படுகிறது, இதைத் தவிர்த்துக் குழந்தைகள் ஆரம்பக் கால கல்வி புத்தகங்களிலும் இடப்படுகிறது. மற்ற எதிலும் உயிர் மெய் அடையாளம் இடுவதில்லை. அரபு மொழி ஒலிப்பு அரபு மொழியில் உள்ள ظ என்ற எழுத்து தமிழில் ழ என்றுதான் பெயர்க்கப்படுகிறது. உதாரணம்: ظهر - ழுஹ்ர் ظلال - ழிலால் (பீ ழிலாலில் குர்ஆன் என்பதில் உள்ளது போல்). அவ்வாறே ض என்ற எழுத்து ள என்று பெயர்க்கப்படுகிறது. உதாரணம்: حضرموت - ஹளரமௌத் مضر - முளர். தமிழில் உள்ள இந்த ழகரம் அரபு மொழியின் ظ ஒலிப்பிற்கும் ளகரம் அரபு மொழியின் ض ஒலிப்பிற்கும் நெருங்கி ஒலிக்கின்றன. மேலும், தமிழில் உள்ள இந்த ழகர, ளகர ஒலிகள் உருது போன்ற மொழிகளில் இல்லை. அதனாற்றான் உருது, இந்தி மற்றும் அவற்றுக்கு நெருங்கிய மொழிக்காரர்கள் ஆங்கிலத்தின் z போல மொழிகின்றனர். தமிழை ஆங்கிலத்துக்கு ஒலிபெயர்க்கும்போதும் இதே குழப்பம் வருகிறது. இந்த ழகரத்துக்குச் சிலர் z என்றும் zh என்றும் ஒலிப்புக் கொடுக்கின்றனர். அவ்வாறே L ஒலிப்பும் Tamil என்பதிற் போலப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தின் z எழுத்தைப் போல மொழியப் பழகிய பின்னர் இந்துசுத்தானி மொழிகளைச் சேர்ந்தோர் தங்களது மொழிகளுக்கு ஏற்றாற் போல அவற்றை ஜ எழுத்தின் ஓசையிலும் மொழிவதுண்டு. அத்துடன், அரபு மொழியை ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கும்போதும் நாட்டுக்கு நாடு வேறுபாடு வருவதுண்டு. உதாரணம்: مسلم - முஸ்லிம் - Muslim, Moslem جمال - ஜமால் - Jamal, Gamal (எகிப்திய வழக்கு) ظاهر - ழாஹிர் - Lahir, Zhahir, Dhahir ذكر - திக்ர் - Zikr, Zekr, Dhikr حافض - ஹாபிள் - Hafil, Hafiz, Hafidh, Hafid. இந்தச் சிக்கல்கள் காரணமாகவே, அரபு மொழியைச் சரிவரக் கல்லாதோர் அவற்றைத் தமிழிற் கூறும்போது பிழை ஏற்படுகிறது. பேச்சு அரபு மொழி பேச்சு அரபு தமிழில் அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் வ அலைக்கும் ஸலாம் உங்களுக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு இறைவன் இடம் பாதுகாவல் தேடுகிறேன், இறைவனின் திருப்பொருத்தத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன் தவ்ஹீத் ஏகத்துவம் (ஓரிறைக் கொள்கை) லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மது ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரராவார்கள் கேஃப் அல் ஹாலுக நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அல்லது உங்கள் நலன் எப்படியுள்ளது? அன பீ ஹைரி நான் நன்றாக இருக்கிறேன். மாஷா அல்லாஹ் இறைவனை நாடியவாரே கலாஸ் முடிவடைந்துவிட்டது நஅம் ஆம் லா இல்லை ஷுக்ரன் நன்றி யல்லா தயாராகு / விரைவு செலுத்து மாய் தண்ணீர் வாஹித் ஒன்று சுலோனிக் எப்படி ஹாம்ஸ் நேற்று அளிஎவ்ம் இன்று பாச்சர் நாளை அசீர் பழரசம் ஓய்னிக் எங்கே மௌஜூத் இருக்கு அன நான் அன்த நீ அன தலிபுன் நான் மாணவன் நஹ்னு ஹுநூது நாங்கள் இந்தியர்கள் அன ஹிந்தி நான் இந்தியன் ஹுவ வலது அவன் சிறுவன் ஹிய பிந்த் அவள் சிறுமி ஷம்ஸ் சூரியன் கமர் சந்திரன் நசாரா/மசீஹீயன கிறிஸ்துவர்கள் யஹுத் யூதர்கள் ஈத் மீளாத் பிறந்த நாள்

Wednesday, July 11, 2018

மின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி!

மின் சிக்கனம் என்பது மின்சார உற்பத்திக்குச் சமம். அதோடு புவி வெப்பமயமாகுதலையும் அதன் மூலம் தடுக்கலாம்!’’ ‘‘மின் சாதனங்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?’’ ‘‘பொதுவாகத் தரமான, ஸ்டார் வேல்யூ பெற்ற தயாரிப்புகளாக வாங்க வேண்டும். மின்சார சிக்கனத்துக்கு வழிகாட்டக்கூடிய அமைப்பிடமிருந்து சான்று பெற்றிருக்கிறதா என்று சரிபார்த்து வாங்க வேண்டும். உதாரணமாக, ஏ.சி-க்களில் நட்சத்திரக் குறியீடு இருக்கும். 5 நட்சத்திரங்கள் பெற்றிருந்தால் குறைந்த அளவு மின்சக்தியை இழுக்கும் என்று அர்த்தம். இவை விலை அதிகம் என்றாலும், இவற்றை வாங்குவதுதான் சிறந்தது.’’ ‘‘மின் கட்டணத்தைக் குறைக்க டிப்ஸ் ப்ளீஸ்...’’ ‘‘டியூப்லைட்டுக்கு மாற்றாக சிஎஃப்எல் பல்பு, எல்இடி பல்பு பயன்படுத்தலாம். இவை குறைந்த மின் நுகர்வில் அதிக வெளிச்சம் தரும். டியூப்லைட்களில் பழைய சோக்குகளை எல்லாம் மாற்றிவிட்டு தற்போது வந்திருக்கும் எலெக்ட்ரானிக் சோக்குகளைப் பயன்படுத்தலாம். இதனால் டியூப்லைட் எரிவதற்கு சில நிமிடங்கள் தாமதம் குறைவதோடு, அதனால் வீணாகும் மின்சாரத்தையும் மிச்சப்படுத்தலாம். மேலும், தூசு படிந்த பல்புகள் மற்றும் அலங்கார விளக்குகளை அவ்வப்போது சுத்தம் செய்வதன் மூலம் வெளிச்சம் குறைவதைத் தடுக்கலாம், மின் விசிறிகளில் எலெக்ட்ரானிக் ரெகுலேட்டர்களை உபயோகிக்கலாம், தினமும் ஒன்றிரண்டு துணிகளை அயர்ன் செய்வதைத் தவிர்த்து மொத்தமாக அயர்ன் செய்யலாம். மின்சாதனங்களை ரிமோட் மூலம் மட்டுமே ஆஃப் செய்யாமல், ஸ்விட்ச் மற்றும் பிளக் பாயின்ட் ஸ்விட்ச்சையும் கண்டிப்பாக ஆஃப் செய்ய வேண்டும்.’’ ‘‘ ‘வாட்ஸ்’ என்பது என்ன?’’ ‘‘வாட்ஸ் என்பது எரிசக்தியின் அளவுகோல். 1000 வாட்ஸ் என்பது 1 யூனிட்.’’ ‘‘ஏ.சி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்ற சாதனங்களை மின்சார விரயம் செய்யாமல் எப்படிப் பராமரிப்பது?’’ ‘‘கிரைண்டர் பெல்ட் தளர்ந்து போயிருந்தாலோ, சில சமயங்களில் அழுக்கு காரணமாகவோ இறுக்கமாக ஓடும். `இறுக்கமாகத்தானே ஓடுகிறது' என்று இல்லாமல், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பெல்ட் மாற்ற வேண்டும். தளர்ந்து போன பெல்ட்டிலேயே கிரைண்டர் ஓடினால் அதிக மின்சாரம் செலவாகும். ஏ.சி அறைகளின் சுவரில் வெப்பம் கடத்தா பெயின்ட் அடிப்பது, தரையில் தரைவிரிப்புகளை பயன்படுத்துவது போன்ற முயற்சிகள் அதிக நேரம் குளிர்ச்சியைத் தக்கவைக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் ஏ.சி-யை சர்வீஸ் செய்ய வேண்டும். ஃப்ரிட்ஜ் மீது நேரடியாக சூரியஒளி படாமலும், ஃப்ரிட்ஜின் பின்புறம் காற்றோட்டம் இருக்குமாறும் வைத்தால் மின்நுகர்வு குறையும். ஃப்ரிட்ஜ் தேவையான குளிர்ச்சியடைந்ததும் தானாகவே ஆஃப் ஆகிவிடும். ஆனாலும் அடிக்கடி திறந்து மூடும்போது மின் செலவு அதிகமாகும். வெயில் காலங்களில் வாஷிங் மெஷின் ட்ரையரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அயர்ன் செய்யும்போது ஃபேன் போடுவதைத் தவிர்க்கலாம்.’’ ‘‘ஸ்விட்ச்போர்டில் இருக்கும் இண்டிகேட்டர் லைட்டால் மின்சாரம் செலவாகுமா?’’ ‘‘தற்போது பலரும் டிஜிட்டல் மீட்டரை மாற்றிவிட்டு, நவீன ஸ்டாட்டிக் மீட்டரைப் பொருத்துகிறார்கள். அது இண்டிகேட்டர் லைட்டுக்கும் கரன்ட் செலவழிக்கிறது. இதுகுறித்து பலரும் புகார் சொல்லி வருகிறார்கள். எனவே, ஸ்டாட்டிக் மீட்டர் பொருத்தியிருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.’’ ‘‘மின்சார அடுப்பு, மின்சார குக்கர் போன்றவற்றைப் பயன்படுத்தலாமா?’’ ‘‘சாதாரண நிக்ரோம் கம்பியிலான ஹீட்டிங் எலிமன்ட் உள்ள மின்சார அடுப்பு, மின்சார குக்கர் அதிக மின் விரயம் செய்யக்கூடியவை. பதிலாக, இன்டக்‌ஷன் அடுப்பு பயன்படுத்தலாம். இதிலும் மின்சார செலவு இருக்கிறது என்றாலும் சமையல் கேஸை மிச்சப்படுத்தலாம்.’’ .

Monday, July 9, 2018

அச்சுவேலி மக்களால் அடித்து துரத்தப்பட்ட வைத்தியனும் மதுவும்

அச்சுவேலி மக்களால் அடித்து துரத்தப்பட்ட வைத்தியனும் மதுவும் தற்பொழுது நீர்வேலியில் வறிய மக்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கவுள்ளதாக சொல்லி வீடு எடுத்து பெண் பிள்ளைகளையும் கணவனை இழந்த பெண்களையும் தங்கள் காம நடவடிக்கைகளுக்கு இரையாக்கி வருவது யாவரும் அறிந்ததே.

கல்லீரல் காவலன்

ஒரு கொடியை தூக்கத் தூக்க ஓராயிரம் பாவக்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய். 'இலைமறைவு காய்மறைவு' என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும்வரை அதன் நிறத்திலேயே கொடியின் நிறமும் (பச்சையாக) இருந்து காயைக் காப்பாற்றும். சட்டென்று பார்த்தால் காய் இருப்பதே தெரியாது. கொடியைத் தூக்கிப் பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும். . 100 கிராம் பாகற்காயில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 25, கால்சியம் 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 70 மி.கிராம், புரோட்டின் 1.6%, கொழுப்பு 0.2%, இரும்புச்சத்து 1.8 மி.கிராம், மினரல்ஸ் 0.8%, பி காம்ளெக்ஸ் 88 மி.கிராம், நார்ச்சத்து 0.8%, கார்போஹைட்ரேட் 4.2%, சிறிதளவு விட்டமின் சி. மருத்துவ குணங்கள்: இதில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது. பாகற்காயின் கசப்பு விஷம் இல்லை. நம் உடல் தனக்கு வேண்டிய அளவு இதன் சத்தை எடுத்துக் கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருளாக வெளியே தள்ளி விடும். இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்கும். பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும். பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும். ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும். பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும். பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும். பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும். நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும். பாக்டீரியா, டயபெடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும் பயனளிக்கக் கூடியது. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள். பாகற்காயின் விதையிலிருந்து எடுத்த எண்ணெயை காயங்களுக்குப் போடுகிறார்கள். சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது. அமேசான் வனவாசிகள் இதை உணவாகவும் மருந்தாகவும் உபயோகித்தனர். பழம் இலைகளை கறி, சூப்பில் கலந்தனர். பெரு நாட்டில் பாகற்காயை அம்மைக்கும், மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள். உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம். சர்க்கரை நோய்: 1லிருந்து 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே தினம் மூன்று வேளை சாப்பிட்டால் சர்க்கரை அளவு மூன்று மாதத்தில் குறையுமாம். மஞ்சள்காமாலை நோய்: 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் உடனே மறையுமாம். கல்லீரல் பிரச்னை: 3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராதாம். மூலநோய்: தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

மூளைக்கு பலன் தரும் தோப்புக்கரணம் பயிற்சி...

தோப்புக்கரணம் போடுங்க! சர்வதேச புகழ் பெற்ற அமெரிக்காவின் யேல் மருத்துவப் பல்கலைக் கழகம் தோப்புக்கரணத்தின் நன்மைகள் பற்றி ஆய்வு செய்தார்கள். தினமும் காலையில் 20 முறை தோப்புக்கரணம் போட்டால் போதும். காது மடல்களைப் பிடித்து நெற்றியில் குட்டிக் கொள்ளும்போது, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம். மூளை ரத்தஓட்டம் சீராகி ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர். இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

விஷம் நீக்கும் புளியம்பழம்

அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் புளி. சுவைக்காக பயன்படுத்தப்படும் புளியில் சத்துக்களும் மருத்துவப்பயன்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளியமரம் இந்தியா முழுவதிலும் வெட்ட வெளிப்பிரதேசங்களிலும், தென்னிந்தியாவிலும், இமயமலைப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்க்கப்படுகிறது. விதையின் பருப்பு, கனிகள், தண்டுப் பட்டை மற்றும் இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை. செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள் விதையின் பருப்பில் பாலசாக்கரைடுகள் உள்ளன. பாலசமைன், கட்டிக்கின், நாஸ்டர்ஷியம் டமரின், ஃபாஸ்ஃபாட்டிக் அமிலம், எத்தனாலமைன், செரீன் ஐனோசிட்டால், மற்றும் ஹார்டனைன் என்னும் இரசாயனப் பொருட்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின்,நியாசின், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. அஜீரணம் போக்கும் புளியானது குளுமைஅகற்றி, வாய்வு அகற்றி, மலமிளக்கி, துவர்ப்பி, ஊக்கமூட்டி. விதையின் பருப்பு பாலுடன் கலந்து பேதி மருந்தாக பயன்படும். ஊக்கமூட்டும். கனிந்த கனிகள் பூச்சிகளை அகற்றும், அஜீரணத்தைப் போக்கும் மிதமான பேதி மருந்தாகும். உடலைக்குளிரச்செய்யும். ஈரலுக்கு நன்மருந்து. இலைகளின் சாறு இரத்த மூலத்திற்கும் சிறுநீர் கழித்தலின் போது வலியையும் குணப்படுத்தும். தண்டுப்பட்டை துவர்ப்புள்ளது காய்ச்சலைப் போக்கும். புளியம்பழம் உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும்,வாதம் தொடர்பான வியாதிகளைத் தணித்துக் குணப்படுத்தும்.புளியம்பழத்தின் உஷ்ண சக்தி 82 காலோரியாகும். புளியம்பழத்தில் பழைய புளி, புதிய புளி என்ற இரண்டு வகை உண்டு. இருவகைப்புளியின் குணமும் ஒன்றே என்றாலும் புதுப்புளியை விட பழைய புளிக்கே வேகம் அதிகம். சூலை தொடர்பான வியாதிகளைக் குணமாக்கும். அதிக அளவு புளியை சாப்பிட்டால் ரத்தம் சுண்டும் தேள்விஷம் இறங்கும் தேள் கடித்தவருக்கு புளியம் பழம் மருந்தாக செயல்படுகிறது. களாக்காய் அளவு நார் இல்லாத புளியம்பழத்தை எடுத்துக்கொண்டு அதே அளவு காரம் உள்ள சுண்ணாம்புடன் சேர்த்து இரண்டையும் நன்றாக அழுத்திப் பிசைந்தால் உடனே அது சூடேறும். சூடு ஆறும் முன் அதை அடையாக எடுத்து தேள் விஷம் உள்ள இடத்தில் வைத்து அழுத்த வேண்டும். இந்த மருந்து அப்படியே ஒட்டிக்கொள்ளும். விஷம் புளியம்பழத்தில் ஏறியவுடன் கடுப்பு நின்றுவிடும். படிப்படியாக குணமடையும். ரத்த கட்டு அகற்றும் உடலில் எங்காவது அடிபட்டு ரத்தம் கட்டி வீக்கம் ஏற்பட்டால் புளியை ஒரு அளவு எடுத்து அதே அளவிற்கு உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து அதை சுண்டக்குழம்பு போல கரைத்து எடுத்து வடிகட்டி ஒரு இரும்புக் கரண்டியில் விட்டு, அதை அடுப்பில் வைத்து,நன்றாக கொதிக்க வைத்து அதை தாளக்கூடிய சூட்டுடன் வீக்கத்தின் மேல் கனமாகப் பற்றுப் போட்டுவிட வேண்டும். தினசரி காலை, மாலை பழைய மருந்தைக் கழுவி விட்டு புதிதாகப் பற்றுப் போட வேண்டும். இந்த விதமான மூன்று நாள் பற்றுப் போட்டால் வீக்கம் வாடிவிடும். வலி தீரும். பல்வலி குணமாகும் பல்வலி ஏற்பட்டால் தேவையான அளவு கொஞ்சம் புளியை எடுத்து அதே அளவு உப்புத்தூளையும் எடுத்து இரண்டையும் நன்றாகப் பிசைந்து பல்லில் வலியுள்ள இடத்தில் அடையாக வைத்து அழுத்திவிட வேண்டும், பின் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வாயில் உமிழ்நீர் ஊறினால் அதை துப்பிவிட வேண்டும். கால் மணி நேரம் கழித்து புளியையும் துப்பிவிட்டு வெது வெதுப்பான வெந்நீர் கொண்டு வாயை பலமுறை கொப்பளிக்க பல்வலி குணமாகும். தினசரி காலை, மாலை தேவையானால் மதியம் கூட இந்த முறையை கையாளலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி!

இனிப்புத் துளசி (Stevia)) ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்புத் துளசி (அ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படுகிறது. மேலும், இப்பயிர் இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது. இனிப்புத் துளசியின் முக்கியத்துவம்: மனிதனின் தினசரி உனவு முறைகளுள் சர்க்கரையானது முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் சர்க்கரையானது, கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதே ஆகும். கரும்பு சர்க்கரையானது அதிகமான கலோரிகளைக் கொண்டுள்ளதால், சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்க்கரையைப் பயன்படுத்த முடியாமல் உள்ளனர். தற்போது இவர்கள் கரும்பு சர்க்கரைக்குப் பதிலாக இனிப்புத் துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரையைப் பயன்படுத்தலாம். ஏனெனில், இனிப்புத் துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை, கலோரிகளை உருவாக்குவதில்லை. ஆகவே இதனைக் கரும்பு சர்க்கரைக்குப் பதிலாகவும், செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாகவும் பயன்படுத்தலாம். இனிப்புத் துளசியில் உள்ள வேதிப்பொருள்கள்: இனிப்புத் துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside) மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside) என்னும் வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணமாகும். இனிப்புத் துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை கரும்பு சர்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால், கரும்பைவிட 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளது. மேலும், ஸ்டீவியோசைடில் உள்ள இனிப்பின் அளவு சர்க்கரையைவிட 200-300 மடங்கு அதிகமாக உள்ளது. இனிப்புத் துளசியின் உலராத இலைகளில் (Fresh leaves) 15-20 சதவிகிதம் என்ற அளவில் ஸ்டீவியோசைடு என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. உலர் இலைகளில் (Dried leaves) ரெபடையோசைடு – ஏ (Rebaudioside-A) 2-4 சதவிகிதமும் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், சோடியம், மெக்னிசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளது. இனிப்புத் துளசியை இனிப்பூட்டியாக (Sweetener) பயன்படுத்துவதால் வரும் நன்மைகள்: இரத்த அழுத்தம் (Blood pressure) மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் (Blood sugar) அளவை அதிகரிக்கச் செய்வதில்லை. இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை (zero Calories) மற்றும் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதில்லை. ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது. சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காபி போன்ற குளிர்பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம். இதைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை. துளசி என்றால் எல்லாருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மிக மகத்துவமும் உள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. எல்லார் வீட்டிலும் இருக்கவேண்டிய செடிகளுள் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில்கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனைக் கவனமாகப் பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் இந்தத் துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். அவற்றில் ஒரு சில... ஆரோக்கியமான மனிதன் துளசி இலையைத் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியையும் புத்துணர்ச்சியையும் துளசி இலைமூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாகத் துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால், நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது. கோடை காலம் வரப் போகிறது. வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றமா? உங்களிடமா? ஜோக் அடிக்காதீங்க என்பார்கள் அருகிலிருப்போர். தோலில் பல நாள்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். எப்படித் தெரியுமா? துளசி இலையை எலுமிச்சை சாறுவிட்டு நன்கு மைபோல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும். சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று தின்னலாம். தொடர்ந்து இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மருந்து மாத்திரை மூலம் செய்ய முடியாததை இந்த அருமருந்தான துளசி செய்துவிடும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொள்ளவேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்குத் தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். முழுமையான ஆரோக்கியத்திற்கு உகந்த, முற்றிலும் இயற்கையான துளசி இலை சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்டு, உடல் நலத்திற்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில் இயற்கையான சர்க்கரை 100 சதவிகிதம் இந்த இனிப்பு துளிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது .

ஸ்டெம் செல்

ஒரு மரத்தின் கிளைகளை வெட்டியெறிந்துவிட்டால் மீண்டும் துளிர்க்கும். புதிய கிளைகள் வளரும். மனிதர்களின் உறுப்புகளில் இத்தகைய வளர்ச்சி சாத்தியமா? சாத்தியம் என்கிறது நவீன உலகின் மறு உற்பத்தி சிகிச்சை முறை (Regenarative Theraphy). இறந்துபட்ட அல்லது செயலிழந்த மனித உறுப்புகளில் அதன் செல் மற்றும் திசுக்களை மறு உற்பத்தி செய்வதன் மூலம் அந்த உறுப்புகளை திரும்பப் பெறும் முறை இது. ஸ்டெம் செல்கள், ஜுன்கள் மற்றும் அதன் வளர்ச்சிக் காரணிகளை தூண்டும் தொழில்நுட்பத்தின் உதவியால் இது சாத்தியம் என்கிறது இன்றைய நவீன மருத்துவம். பழுதுபட்ட மனித உறுப்புகளை வளரச் செய்வதற்கு (வளர்ந்து செயல்படச் செய்வதற்கு) பல்வேறு வழிமுறைகள் நவீன மருத்துவ வல்லுநர்களால் ஆராயப்பட்டு வருகின்றது. இந்த மறு உற்பத்தி சிகிச்சையின் முக்கிய நோக்கம் உறுப்புகளில் செயல்படாத குறிப்பிட்ட செல் வகையினை அவ்வுறுப்பின் உயிருள்ள செல் பகுதியிலோ அல்லது வெளிமூலங்களிலிருந்தோ பெறப்பட்டு அதனை பெருக்கமடையச் செய்வதே. சாதாரணமாக நமக்கு காயம் ஏற்பட்டவுடன் அதில் நோய்க்கிருமிகள் புகா வண்ணம் தடுக்க நோய் காப்பு அரணும் (ஒம்ம்ன்ய்ர் ள்ஹ்ள்ற்ங்ம்) அதன் பின்னர் காயத்தினை சரிப்படுத்தும் செயலும் நடைபெறுகின்றது. இந்த காயத்தினை சரிப்படுத்தும் செயல் அக்காயத்திலுள்ள இறந்துபட்ட பகுதியில் புதிய செல்கள் தோன்றுவதன் மூலம் சாத்தியமாகின்றது. புதிய செல்களை தோற்றுவிக்க செல்களுக்கு ரத்த ஓட்டத்தினை அதிகரிப்பது இன்றியமையாததாகிறது. ஸ்டெம் செல் சிகிச்சையின் வரலாறு முதன் முதலில் ருதால்ஃப் லுட்விக் கர்ல்விர்சோவ் (1821- 1912) என்பவர் ஒரு செல்லிலிருந்து புதிய செல் பிரிந்து வளரும் என்ற நவீன செல் கோட்பாட்டை வெளியிட்டார். இவரே நவீன செல் பற்றிய அறிவியலின் முன்னோடி. இவருடைய மாணவரான ஜூலியஸ் பிரடெரிச் கொஹெய்ம் புண்களில் பழுதுபட்ட செல்களின் மறுசீரமைப்பு புதிய செல்கள் ரத்த ஓட்டத்தின் மூலமாகவே எலும்பு மஜ்ஜை (Bone Marrow)யிலிருந்து புண்களை வந்தடைந்து வளருகின்றது என்பதனையும் கண்டறிந்தார். P.E டொன்னால் தோமஸ் ஆராய்ச்சியில் எலும்பு மஜ்ஜை குறைபாடுள்ள நோயாளியின் ரத்த ஒட்டத்தில் மற்றொருவரிடம் எடுக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை செல்களை செலுத்தி ஆராய்ந்தபோது புதிய எலும்பு மஜ்ஜை உருவாகியதுடன் புதிய ரத்த செல்களும் உருவானது. முதன் முதலில் எலியின் உடலில் மாற்றிவைக்கப்பட்ட எலும்பு மஜ்ஜைதான் செல்களின் இந்த சுய உற்பத்தியினை நிகழ்த்திக் காட்டியது. இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியவர்கள் கனடா ஆராய்ச்சியாளர்களான மக்குல்லாக் மற்றும் ஜேம்ஸ்டில் ஆகியோர்களாவர். அதன் பிறகு 1976-இல் பிரைடென்ஸ்டெய்ன் மற்றும் அவருடைய ஆராய்ச்சிக் குழுவினரும் இணைந்து எலும்பு மஜ்ஜை செல்களை தனிமைப்படுத்தி அதிலிருந்து முழுமையான வளர்ச்சியடைந்த எலும்பு செல்களை உருவாக்க முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டினர். இன்று மருத்துவ உலகில் பல்வேறு வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஸ்டெம் செல்களை உருவாக்கி வருகின்றனர். உண்மையான ஸ்டெம் செல்கள் முடிவிலாத சுய பிரிதலுக்கு உட்படுபவை, மரபொத்த உயிரிகளை உருவாக்க பயன்படுபவை. ஒரு உயிரியின் வாழ்நாள் முழுவதும் பிரிந்து கொண்டே இருப்பவை. அவ்வாறு பிரிவதன் மூலம் புதிய செல் வகைகளை உருவாக்குபவை. சாதாரணமாக மனித செல்கள் பிரிந்து இரு வேறான சேய் செல்களை உருவாக்கும். இவ்விரு சேய் செல்கள் தங்களுள் சமிக்சைகளை (Signals) தூண்டுவதன் மூலம் இரு வெவ்வேறான புதிய சேய் செல்களை உருவாக்கும். இவ்வாறு ஒரு தன்னிச்சையான தொடர் பிரிதலில் செல்கள் ஈடுபட்டுக் கொண்டே இருக்கும். ஸ்டெம் செல்களின் மூலம் ஸ்டெம் செல்களின் பிறப்பிடம் அல்லது மூலமாக விளங்குவது ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையாகும். எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் ஸ்டெம் செல்கள் முறையே ஹேமடோபோயடிக் ஸ்டெம் செல்கள் (HSC) மற்றும் மெசன்கைமல் ஸ்டெம்செல்கள் (MSC) ஆகும். HSC முறையெ எரித்ரோசைட்டுகள், மோனோசைட்டுகள், நியூரோபில்ஸ், ஈசினோபில்ஸ், பேசினோபில்ஸ் போன்ற ரத்த பிரிவுகளை கொடுக்கக் கூடியவை. MSC செல்கள் இவற்றிற்கு இடைப்பட்ட அல்லது முந்தைய நிலை செல்களை உருவாக்குவதுடன் HSC செல்கள் உருவாக்குவதற்கு துணைபுரியவும் செய்கிறது. சமீபத்தில் ஐநஈ மற்றும் MSC ஆகியவற்றின் துணை கணங்களை (Subsets) எலும்பு மஜ்ஜை மற்றும் ரத்தம் ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுத்துள்ளனர் இது மட்டுமின்றி பகுதி திறனுடைய (Multipotent (or) Pluri potent) MSC வகை செல்களை ஈரல் மற்றம் தொப்புள் கொடி ரத்தம், கொழுப்பு திசு மருத்துவ வல்லுனர்கள். மேலும் எபிடெர்மிக் ஸ்டெம் செல்களை தோல்களிலிருந்து (இயற்கையான மறுவளர்ச்சியினை கொண்டது) பிரித்தெடுத்துள்ளனர். இயற்கையான ஸ்டெம் செல்கள் மூளை, இருதயம் (அட்ரியல் பயோப்ஸி) போன்ற நுணுக்கமான பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. பெண்களின் கருப்பையில் கருமுட்டை கருத்தரித்த வுடன் ஒரு செல் கருவானது பிரிந்து 8 செல் இளங் கருவாக மாறும்போது, அந்த 8 செல்களும் முழுமையான திறன் (Toti Potent) கொண்டவைகளாக மாறியிருக்கும். அதன் பின்னர் பிளாஸ்டோஸைட் நிலையை (பல செல்கள்) அடைந்து பின் உயிரியாக வளரத்தொடங்கும் இந்த நிலையிலுள்ள பகுதி திறனுடைய ஸ்டெம் செல்கள் பிரித்து எடுத்து வளரச் செய்வதன் மூலம் ஸ்டெம் செல்களின் எண்ணிக்கையை பெருக்கலாம். இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் ஸ்டெம் செல்களை கொண்டு பல அடுக்கு மனித திசுக்களை உருவாக்க முடியும். மேலும் 8 செல் நிலையில் உருவாகும் முழு திறன் கொண்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு முழு உயிரியினையே உருவாக்க இயலும். மிக சமீபத்தில் பெண்களின் மாதவிடாய் காலங்களில் வெளிப்படும் ரத்தத்திலும் ஆண்களில் விந்து உற்பத்தி செல்களிலும் ஸ்டெம் செல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெண்களின் உடலில் இருந்து தொப்புள் கொடி ரத்தம், பிளசண்டா திரவம் (பனிகுடநீர்) என பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பொருட்கள் பிரசவத்தின்போது சேகரிக்கப்பட்டு உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு தாய் அனைத்தும் ஆனவள் என்பதற்கு இதுவே சான்று. ஸ்டெம் செல்களின் வகைகள் ஸ்டெம் செல்கள் இருவகைபடும். ஒன்று முழு திறன் கொண்டவை. மற்றொன்று பகுதி திறன் கொண்டவை. முழு திறன் கொண்ட ஸ்டெம்செல் உடலின் எந்த வகையான செல்லாக மாறக்கூடிய திறன் கொண்டவை. இது கருசெல் பிரிதலில் 8 செல் நிலையை அடையும் போது உருவாகிறது. பகுதிதிறன் கொண்ட ஸ்டெம் செல்கள் பிளாஸ்டோசைட் நிலையை அடைந்திருக்கும் போது காணப்படும் செல்கள். பகுதி திறன் கொண்ட ஸ்டெம் செல்கள் வளர்ந்து ஒரு இதயம், அல்லது கண் அல்லது எலும்பு போன்ற ஏதாவது ஒரு உறுப்பினை உருவாக்கும் திசுக்களாக வளரக்கூடிய திறன் படைத்தவை. பகுதித் திறன் கொண்ட செல்கள் உறுப்புகளை செப்பனிட உதவுபவை. ஆனால் முழுதிறன் கொண்டவை ஒரு முழு உயிரியையே உருவாக்கும் வல்லமை படைத்தவை. இதுவே குளோனிங் முறையில் உயிரினங்களை (ஒத்த) உருவாக்க பயன்படுத்தப்படும் செல்வகை. ஸ்டெம் செல் சிகிச்சை புற்றுநோய் சிகிச்சையில் நோயாளியின் எலும்பு மஜ்ஜையை முழுவதும் கதிரியக்கத்தின் உதவியால் அழித்துவிட்டு நோயாளியின் திசு வகையினைக் கொண்ட உறவினர்களிடமிருந்து பெற்ற எலும்பு மஜ்ஜையினை நோயாளியின் உடலில் செலுத்தி புதிய ரத்த செல்களை உருவாக்கும் முறையே இதுவரை புற்றுநோய் சிகிக்சையில் இருந்து வருகிறது. தற்போது ஸ்டெம்செல் சிகிச்சையில், தொப்புள்கொடி ரத்தம், எலும்பு மஜ்ஜை ஸ்டெம்செல்கள் போன்றவற்றை நோயாளி உடலில் வளரச் செய்து புதிய ரத்த செல்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை மருத்துவ உலகம் நிரூபித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை எளிதானதாக மாறும். அனீமியா (ரத்தசோகை), லுக்கீமியா (ரத்த புற்றுநோய்) போன்ற நோய் குறைபாடுகளை குணப்படுத்த ஸ்டெம் செல் சிகிச்சைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நோய்க்கு ஆளான நோயாளிகள் சுமார் 95% பேர் முற்றிலும் குணமடைந்து வருகின்றனர். தொப்புள் கொடியிலிருந்து பெறப்படும் ரத்தத்தினை சேமிக்க அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ரத்த வங்கிகள் இயங்கி வருகின்றன. அவை 12000 யுனிட்டுக்கும் அதிக மான தொப்புள்கொடி ரத்தத்தை சேமித்து வருகின்றன. நம்முடைய நாட்டில் மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் தொப்புள்கொடி ரத்தத்தினை சேமிக்கும் வசதியுள்ளது. கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை ரெடினல் ஸ்டெம் செல்களைக் கொண்டும், இருதய கோளாறுகளை போக்க இருதய ஸ்டெம் செல்களைக் கொண்டும், அல்ஷிமர், பார்க்கின்சன் நோய் போன்றவற்றை குணப் படுத்த நரம்பு ஸ்டெம்செல்களும், தசை திசுக்களின் குறைபாடுகளை களைய மஸ்கோஸ்கெலிடல் ஸ்டெம் செல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் சோதனைகளின் பல்வேறு நிலை களைக் கடந்து வெற்றிகரமாக மனிதர்களில் சிகிச்சை யளிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லையென்றே கூறலாம். ஆனால், இதுவரையில் சிறுநீரகக் குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்கான ஸ்டெம்செல் கண்டு பிடிக்கப் படவில்லை. எனினும் ரெனல் ஸ்டெம் செல் என்னும் இச்செல்வகை எலும்பு மஜ்ஜையிலிருந்து தேவைப்படும்போது செயல்படக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்டெம்செல் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை சமீபகாலமாக ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் ஸ்டெம்செல் ஆராய்ச்சிக்கான வரைமுறைகளை இந்திய உயிரி தொழில்நுட்ப பிரிவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிகழகமும் இணைந்து வகுத்துள்ளன. இந்தியாவில் இதுவரை ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி (CMC) எலும்பு மஜ்ஜை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சையில் சரித்திரம் படைத்து வருகிறது. அந்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர் டாக்டர் ரேகா சாமுவேல். இவரின் ஸ்டெம் செல் படம் ஹார்வோல்ட் செல் நிறுவனத்தின் விருதை பெற்றது. மேலும் புதுடெல்லியில் உள்ள ஆஒஙந மருத்துவமனை, டாடா நினைவு மருத்துவமனை ஆகியவை ஸ்டெம் செல் சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றன. திரிவேதி ஆப் டிரான்ஸ்பிளான்டேஷன் சயின்சஸ் (அகமதாபாத்) நீரிழிவு நோய் சிகிச்சையினையும், சர் ஐச மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (மும்பை) இருதய சிகிச்சையினையும், ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை(திருவனந்தபுரம்) ஸ்டெம்செல் முறையில் சிகிச்சையும் அளித்து வருகின்றன. ஒரு வளர் திசுவிலிருந்து மிக குறைந்த எண்ணிக்கை யிலான செல்களை (ஸ்டெம்) பிரித்தெடுக்க இயலும். எனவே வளர்கரு செல்களை உபயோகிப்பதில் மிகப்பெரிய தடை உள்ளது. இதனை நிவர்த்தி செய்ய எந்த ஒரு புதிய தொழில்நுட்ப முறையும் இல்லை. ஒரு ஸ்டெம்செல்லை பாதுகாக்கவும், வளர்க்கவும் தற்போதுள்ள முறைகள் போதுமானதாக இல்லை. இதன் காரணமாகவே சிகிச்சையில் பயன்படுத்துவது மிக சிரமமான காரியமாக உள்ளது. நவீன ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மருத்துவ வல்லுனர்கள் நோய்காப்பு பணியில் ஒருபுறம் ஈடுபட்டிருக்க, அவர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் மூலம் சேவையாற்ற வேண்டிய மருத்துவர்கள் பாதிப்பேர் பணத்தினை கூடைக் கூடையாக அள்ள ஆசை கொண்டுள்ளனர். இந்தியாவில் உண்மையான வருமானவரி கணக்கு காட்டும் மருத்துவர்கள் மிகமிகக் குறைவு. நோயாளிகள் கொடுக்கும் பணத்திற்கு முறையான ரசீது கொடுக்கும் மருத்துவர்கள் குறைவு. வருமானவரி ஏய்க்கும் மருத்துவர்களின் மருத்துவ பதிவெண் ரத்து செய்யப்படுமென்ற நிலை வந்தாலொழிய தற்போதைய இந்த நிலை மாறுவதற்கு வாய்ப்பில்லை. மருத்துவ உலகம் ஒருபுறம் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தாலும் இது போன்ற புரையோடிப்போன புண்களும் மருத்துவ உலகில் இருக்கத்தான் செய்கின்றன.

பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்,,,,,,,,

ரத்த சோகை நோய் இந்தியர்களிடையே பரவலாக காணப்படுகிறது. ரத்த சோகை நோய் என்றால் என்ன? உடலின் ஆரோக்கியத்துக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். சிவப்பு அணுக்குள் இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இது தான் ரத்தத்தில் ஆக்சிஜனை கடத்துகிறது. ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் அனிமியா ஏற்படும். இதைத்தான் ரத்த சோகை நோய் என்கிறோம். ரத்த சோகை நோய் பெரும்பாலும் பெண்களை தாக்கும். குறிப்பாக கிராமப்புற பெண்கள் ரத்த சோகை நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கிராமங்களில் விவசாய வேலை செய்யும் பெண்கள் செருப்பு அணியாமல் நடக்கும் போது அதனால் வயிற்றில் புழு உருவாகி அது ரத்தத்தை உறிஞ்சிவிடுவதால் ரத்த சோகை ஏற்படுகிறது. காலுக்கும் வயிற்றுக்கும் என்ன தொடர்பு என்று நினைக்க தோன்றலாம். கால் வழியாகத்தான் குடல் பூச்சிகள் உருவாகின்றன. எனவே கால்களை சுத்தமாக வைத்து பராமரிப்பது அவசியம். அடுத்ததாக மாதவிடாய் ஒழுங்காக இல்லாத பெண்களுக்கும்; மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் ரத்தம் வெளியேறும் பெண்களுக்கும் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. ஆண்களில் ரத்தசோகை நோயால் குறைந்த அளவிலே பாதிக்கப்படுகிறார்கள். ரத்த பரிசோதனை செய்யாமல் அடிக்கடி ரத்ததானம் செய்பவர்களுக்கும் ரத்த சோகை வர வாய்ப்பு உள்ளது. பன்றிக்கறி சாப்பிடுபவர்களுக்கும் ரத்த சோகை வரும். ரத்த சோகை நோய் இருப்பவர்களுக்கு சோர்வு, கண்ணில் கருவளையம், முடி உதிர்தல், சக்தி இல்லாமல் சோர்வடைதல், எதிலும் சரிவர கவனம் செலுத்த முடியாது, சோம்பல் ஏற்படும், ஒழுங்கற்ற மாதவிடாய், நீண்ட நேரம் வேலை செய்ய முடியாமல் சோர்ந்து விடுதல், தூக்கம் இன்மை, தலைவலி, தலைசுற்றல், வாந்தி மயக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை ரத்தப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் குறைந்தால் ரத்த சோகை நோய் தாக்கி இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ரத்த சோகை நோய் ஏன் வருகிறது என்று பார்த்தோமேயானால் இரும்புச் சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிடாததே காரணம். கிராமப் பகுதியில் இருந்து இப்போது நகர்ப்பகுதி பெண்கள் அதிக அளவில் ரத்த சோகையால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது உணவு பழக்க வழக்கங்கள் மாறிவிட்டது. காய்கறிகள், கீரைகளை அதிகம் சாப்பிடாமல் பாட்டில், டின்களில், பைகளில் அடைத்த உணவை அதிகம் சாப்பிடுகிறார்கள். பெண்கள் 3 வேளையும் காய்கறியுடன் உணவு சாப்பிடுவது அவசியம். இரும்பு சத்து நிறைந்த உணவு மூலம் ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம். ரத்தசோகை உள்ளவர்கள் காய்கறிகள், கீரைவகைகள், பழங்கள் முதலியவற்றை தினமும் சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரைவகைகளில் அதிக அளவு இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளன. கீரை வகைகளை எடுத்துக் கொண்டால் மணத்தக்காளி கீரை, முருங்கை கீரை, பசலை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கருவேப்பிலை, கொத்தமல்லி, ஆரைக்கீரை, புதினா, முலைக் கீரை, அகத்திக் கீரை, வாழைத்தண்டு, வாழைப் பூ ஆகியவற்றை தினமும் சாப்பிட வேண்டும். பழங்களில் ஆப்பிள், திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப் பழம், மாம்பழம், பலா பழம், சப்போட்டா, நெல்லிக்கனி, வாழைப்பழம், பேரிக்காய், மாதுளம் பழம் போன்ற வற்றில் இரும்புச் சத்துக்கள் அதிகம் அடங்கி யுள்ளன. உணவு சமைக்க கைக்குத்தல் அரிசியை பயன்படுத்த வேண்டும். கிராமங்களில் முன்பெல்லாம் கைக்குத்தல் அரிசியைத்தான் பயன்படுத்தி வந்தனர். இப்போது மாறிவிட்டது. அவர்கள் கூட ரைஸ்மில்லில் அரைத்த அரிசியைத்தான் வேக வைத்து சாப்பிடுகிறார்கள். கைக்குத்தல் அரிசியில் பி.காம்ப்ளக்ஸ் சத்து அதிகம் உள்ளது. அவல் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை கோழிக்கறி, மீன் சாப்பிட வேண்டும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு எளிய உடற்பயிற்சி அவசியம். இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உணவு பழக்கங்கள் மாற்றத்தால் இன்றைய கால கட்டத்தில் இளம் பெண்கள் சீக்கிரமே பருவம் அடைகிறார்கள். சிறு வயதிலேயே அவர்களுக்கு மாதா மாதம் ரத்தம் வெளியேறும் நிலை ஏற்படுகிறது. அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ஹீமோ குளோபின் அளவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பெற்றோர் தெரிந்து கொண்டு அனிமியா வராமல் பார்த்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மாதவிடாய் சரியாக வரவில்லை என்றாலும் ரத்த சோகையாக இருக்கலாம். அதையும் சேர்த்து கவனிக்க வேண்டும். ரத்த சோகை நோயை உணவு பழக்க வழக்கங்கள் மூலம் சரி செய்ய 3 மாதம் முதல் 6 மாதம் வரை ஆகும். எனவே சாப்பிட்ட முதல் நாளே சரியாக வில்லையே என்று எதிர்பார்க்கக்கூடாது. ரத்த சோகை அதிகம் இருப்பவர்கள் மருத்து வரை அணுகி அயர்ன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். கிராமங்களில் சத்து மாத்திரைகள் என்று சொல்வார்கள். இது சத்து மாத்திரை தானே என்று தொடர்ந்து அயர்ன் மாத்திரைகளை சாப்பிடக் கூடாது. மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்டு 3 மாதம் முதல் 6 மாதத்தில் நிறுத்தி விடலாமா என்று கேட்க வேண்டும். மீறி நாமாகவே தொடர்ந்து அயர்ன் மாத்திரைகளை சாப்பிட்டால் கல்லீரல், மண்ணீரலில் பாதிப்பு ஏற்படும். அவற்றில் வீக்கம் ஏற்பட்டு வயிற்று வலி உண்டாகும். வலது பக்க வயிற்றிலும், இடது பக்க வயிற்றிலும் வலி ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் பாதிக்கப்பட்டால் உடலின் செயல்பாடு குறைந்து விடும். உணவு ஜீரணம் ஆகாது, வயிற்றுப்போக்கு ஏற்படும், தோல் வறட்சியாக காணப்படும். கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் போலிக் ஆசிட், அயர்ன் மாத்திரைகளுடன் சத்தான உணவு வகைகள் சாப்பிட வேண்டும். ஒரு நாள் கூட விடாமல் 6 மாதம் வரை அவர்கள் சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணிகள் கீரை சூப், காய்கறி சூப், ராகி, ராகி கஞ்சி, முருங்கை கீரை கலந்த ராகி தோசை, கம்பு, கோதுமை, கீரை, வெந்தயக்கீரை, முருங்கை கீரை, புதினா, பேரீட்சம் பழம், மாதுளை, ஆப்பிள் பழங்கள் சாப்பிட வேண்டும். சாதம், சப்பாத்தி, பரோட்டா, கீரை ரைஸ், அரைக்கீரை, பழச்சாறு, மில்க்ஷேக், இஞ்சி மிளகு ரசம், பருப்பு ரசம், பைனாப்பிள் ரசம், கருவேப்பிலை ரசம் செய்து சாப்பிடலாம். இவை ரத்த சோகை வராமல் 100 சதவீதம் தடுக்கும். ரத்த சோகை இருந்தாலும் 100 சதவீதம் நிவர்த்தி ஆகும். காய்கறிகள், கீரைகள் சேர்ப்பதால் ரத்தம் ஊறும். சுறுசுறுப்பு உண்டாகும். குழந்தையின் வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் உதவியாக இருக்கும். ரத்தம் சோகை நோயை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் ரத்த செலுத்தும் நிலை ஏற்படும். அந்த நிலை ஏற்பட விடவேண்டாம். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பு சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ரத்த சோகை வராமல் தடுத்து நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.

உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் உள்ள குங்குமப்பூ!!

குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. இத்தாவரம் வடமேற்கு நாடுகளிலும், இந்தியாவில் காஷ்மீரிலும் பயிர் செய்யப்படுகின்றது. இது வாசனையுடனும், மினுமினுப்பாகவும் இருக்கும். உணவுப் பொருள்களுக்கு நிறம் உண்டாக்கவும் வாசனை உண்டாக்கவும் சேர்க்கின்றனர். குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம். குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள் தான். அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருகிறது.

முகத்தில் உள்ள தழும்புகளைப் போக்கும் சில எளிய வழிமுறைகள்..!

முகத்தில் உள்ள தழும்புகளைப் சமையல் செய்யும் போது எண்ணெய் முகத்தில் பட்டாலோ அல்லது குக்கரை தூக்கும் போது கைகளை சுட்டுக் கொண்டாலோ, முதலில் அவை காயமாகி, பின் அவை தழும்புகளாக சருமத்தில் தங்கிவிடும். பருக்களால் பலருக்கு முகத்தில் கருமையான தழும்புகள் படிந்து, முகத்தின் அழகே பாழாகி இருக்கும். இத்தகைய தழும்புகளானது நிரந்தரம் அல்ல. அவற்றை ஒருசில பொருட்கள் மற்றும் பராமரிப்புக்களின் மூலம் போக்கிவிடலாம். அதிலும் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிமையாக நீக்கிவிடலாம். தழும்பை போக்க சில இயற்கை வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றைப் பின்பற்றி தழும்புகளைப் போக்கி, அழகுடன் திகழுங்கள். * பொதுவாக கற்றாழை ஜெல் அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைக் கொடுக்கும். அதிலும் தினமும் இதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதோடு, மற்ற பிரச்சனைகளும் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும். * பேக்கிங் பவுடரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், விரைவில் தழும்புகளானது மறைந்துவிடும். * தேன் உடலுக்கு மட்டும் நன்மையைக் கொடுப்பதுடன், சருமத்திற்கும் நன்மையை வழங்க வல்லது. அதற்கு அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை தான் காரணம். எனவே தினமும் தேன் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள். * மஞ்சள் தூளை நீரில் கலந்து, அதனை சருமத்தில் தினமும் தடவி ஊற வந்தால், அது சருமத்தில் உள்ள தழும்புகளை போக்குவதுடன், மற்ற சரும பிரச்சனைகளையும் போக்கிவிடும். * பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், சீக்கிரம் தழும்புகளானது மறையும். *அனைவருக்குமே எலுமிச்சை தழும்புகளை மறைக்க உதவும் பொருட்களில் ஒன்று என்பது தெரியும். ஆனால் அதனை தக்காளி ஜூஸ் உடன் சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், அவை இரண்டிலும் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் அது தழும்புகளை மறைத்துவிடும்.

குடைமிளகாய் - பயன்கள்

குடைமிளகாயை பயன்படுத்துங்கள்.. உடலுக்கு மிகவும் நல்லது.. குடைமிளகாய் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது இதனை பெரும்பாலானோர் பயன்படுத்தத் துவங்கி உள்ளனர். குடமிளகாயில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதனைப் பார்ப்போம்.. தக்காளி, குடைமிளகாய், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் 'சி' (C) சத்து அதிகமுள்ளது. இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால்,சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். குடமிளகாயில் உள்ள விட்டமின் ஏ,சி,ஈ,பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்டவிடாமலும் குடமிளகாய் காக்கிறது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது. குடமிளகாயைச் சமைக்கும் முன் நன்கு அலம்ப வேண்டும். குடமிளகாயைத் துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது. ஊசி மிளகாய், குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன. இதே உத்தியைப் பயன்படுத்தி உடலின் பருமனைக் குறைக்க முடியும். காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோஸ், வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு, மிளகு எலுமிச்சை பிழியவும். அருமையான சாலட் தயார். குடைமிளகாயில் நிறைந்துள்ள "வைட்டமின் சி' சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது. வைட்டமின் சி 137 மி.கி., வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும்.

குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி?

குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள். “குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.” என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் ‘அடிக்கிற கை அணைக்கும்’ என்று அடிப்பான்.] படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் “ரிங் மாஸ்டரை”ப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்க” என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது? குழந்தைகள் மீதான வன்முறை : குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் “எதுசரி” “எதுதவறு” என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். “சேட்டை” என்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும் போது குழந்தை சும்மானாச்சுக்கும் மண்ணைத் தொட்டால் கூட “சனியனே, “சனியனே” “பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்கு” என்று திட்டுவோம். ஆக “சேட்டை” என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம். அடுத்து, குழந்தை தன்னையோ, மற்றவரையோ, மற்றவைகளையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்த பிறகு அடிக்காமல் முன்பே “விதிகளை” சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாய்க் கண்டிக்கவேண்டும். நீங்க குழந்தையா இருந்தபோது சேட்டை செய்தீர்களா? இல்லையா? அடிக்காமல் வளர்ப்பது எப்படி? அடிப்பதைத் தாண்டி வேறு எதையுமே யோசிக்க மாட்டீர்களா? அடித்து சரிபடுத்த அவர்கள் என்ன மத்தளமா? கண்டிப்பாக என்பது “இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது” சில குழந்தைகள் “நான் உன் கூட பேசமாட்டேன்” என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக்கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. பெற்றோர்களுக்கும் அவரவர் குழந்தைகளைப்பற்றி நன்கு தெரியும். பொறுமையின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. குழந்தை உரிமை மீறல் என்கிறீர்களே? குழந்தைக்கு என்ன உரிமை? குழந்தை உரிமை என்றெல்லாம் இருக்கா? மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்கு சந்தேகம் உள்ளது. உதாரணமாக ஒரு 8 மாத குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறுஊட்டும் போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத்தாய் எப்படியாது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப் போதுதான் அந்தத்தாய்க்கு மனநிறைவு. மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறுநிறைய சோறு ஊட்டி விட்டதாகத் திருப்தி. ஆனால் அந்தக் குழந் தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிறு நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில் ‘பார் பிடிவாதத்தை. அப்படியே அது அப்பனை கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய். இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்குமீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப் போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக்குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார். ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, அடிபட்டதால் அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை. மற்றோர் வன்முறை அதிகாரத்தால் நிகழக்கூடியது. ஒரு குடும்பத்தில் குடித்துவிட்டு வந்த தந்தை தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை கடைக்கு அனுப்பித் தனக்கு சாப்பாடு வாங்கிவரச் சொல்கிறார். அந்த குழந்தை, தன் தகப்பன் கேட்ட உணவு கடையில் தீர்ந்துவிட்டால், கடையில் இருப்பதை வாங்கி வருகிறான், இதற்காக மகனை கண்மண் தெரியாமல் விளாசித் தள்ளுகிறார் தந்தை. இது அதிகாரத்தினால் நடக்கும் வன்முறை. தகப்பன் குடித்தது முதல் தவறு. தன் குழந்தைகளுக்கு தான் குடித்ததாக காட்டியது இரண்டாவது தவறு. தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் தூக்கத்தை அர்த்தமில்லாமல் கெடுத்தது மூன்றாவது தவறு. அவனை அடித்தது மிக மோசமான தவறு. ஆகிய இத்தனை தவறுகளும் விளைவதற்கு காரணம் அதிகாரம். என்னால் என்னமும் செய்யமுடியும் என்கிற போக்கு, நான்தான் இந்த வீட்டில் முடிவெடுக்கும் நபர் என்ன எண்ணத்தில் எழும் சிந்தனை. இம்மாதிரி குழந்தைகளுக்கு அனுதினமும், நிறைய நேரங்களில், எல்லா நபர்களாலும் குழந்தைகளுக்கான வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதெல்லாம் வன்முறையா? நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் குழந்தையை ஒழுங்காகவும் நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று? இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் பார்த்துப் பார்த்து செய்ய முடியுமா? கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. “குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.” என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் ‘அடிக்கிற கை அணைக்கும்’ என்று அடிப்பான். நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள். ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்து தான் செய்யவேண்டும். நிலத்தில் விதையைத் தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லா? குழந்தைகள் விதையை விட முக்கியமானவர்கள். நல்ல பலன் தரும் விதைகளாக, விருட்சங்களாக வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்கவேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து, பேசி வளர்க்கவேண்டும். குழந்தைகளை திட்டி கண்டித்து வளர்க்கலாமா? இல்லை அதுவும் கூடாதா? சரி குழந்தைகளை அடிக்க கூடாது, திட்டி கண்டித்து வளர்க்கலாமா? இல்லை அதுவும் கூடாதா? ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு சிறுமியை அவள் தாய், ‘நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்’ என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும். அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும். இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம். நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள், குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இத்தகைய சொற்களால் மன அளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் நம் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள். இப்படியெல்லாம் இருக்கா? சரி நாம் கண்டிக்காம விட்டுட்டா ரொம்ப அதிகமாகப் பேசி அனைவரின் மத்தியிலும் கெட்ட பேரெடுக்குமே? திரும்பத்திரும்பச் சொல்கிறேன், கண்டிப்பது என்பது வேறு. அந்தக் குழந்தையை மனரீதியாக தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச்செய்யும் போது நல்லது கெட்டது என்ன என்பதை புரியவைப்பது. அப்படியே அந்தக்குழந்தை தவறு செய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பின் அனுபவத்தைப் புரிய வைப்பது. உதாரணமாகத் தீயைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கிய பின்னும் அந்தக் குழந்தை அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு சுட்டுக்கொண்டால் கூட அதன் விளைவுகளை, அதன் பாதிப்புகளை, காயம் ஆறியபிறகே உணர்த்தவேண்டும். யாரேனும் ஒருவர் பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கும் போதுதான் ‘எனக்கு அப்பவே தெரியும். இப்படியெல்லாம் ஆகுமென்போம். நம் அறிவாற்றலை வெளிப்படுத்தாமல் பக்குவமாக, மனிதமனம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், புரிய வைக்கவேண்டும். விளக்க வேண்டும். ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பதுதான். நாம் என்ன செய்கிறோம் என்றால் இருட்டுக்குள் போனால் பிரச்சனையாகிவிடும். ஆகவே இருட்டுக்குள்ளே போகவே கூடாது என்பதைத்தான் நாம் கற்றுக்கொடுக்கிறோம். மாறாக இருட்டுக்குள்ளே போய் பிரச்சனை வந்தால் எவ்விதம் பாதுகாத்துக்கொள்வது, எப்படி தப்பிப்பது என்பதை சொல்வதில்லை. இதற்குப்பெயர் தான் ‘மதிப்பீட்டுக்கல்வி’ (வேல்யூ எஜீகேசன்) என்று சொல்வார்கள். உங்களது அடுத்த கேள்வி அதிகமாப் பேசி கெட்ட பெயரை குழந்தைகள் எடுப்பார்கள் என்பதுதானே. நாம் பேசும் பேச்சு எல்லோருக்கும் பிடிக்கிறதா? வாய் தவறிப் பேசும் சில பேச்சுக்கள் நமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் ‘இது தவறு’ ‘இது சரி’ என்று எங்கே நாம் திருத்திக்கொண்டோம்? ஒவ்வொரு முறையும் நாம் பேசுவதால் ஏற்படும் பிரச்சனைக்குப் பின்புதானே. அந்த அனுபவத்தைக் கொண்டு குழந்தைகளைப் பேசவிட்டுப் புரியவைக்கவேண்டும். கருத்து சுதந்திரமே நாம் நம் குழந்தைகளுக்குக் கொடுத்ததில்லை. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குக் கொடுத்ததே இல்லை. குழந்தைகள் பேசும் அளவிற்கு வந்ததும் பெரியவர்களாகிய நாம் அமைதி காத்து, பேச்சைக் குறைத்து குழந்தைகளைப் பேச அனுமதிக்கவேண்டும். பேசும்போதே அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்ய வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை. ரூசோவின் வார்த்தைகள் எனக்கு நினைவிற்கு வருகிறது. ‘உன் பேச்சு சுதந்திரத்திற்காக என் உயிரையும் தரத்தயாராயிருக்கிறேன்’ என்கிறார், அவர் எதிரிகளைப் பார்த்து, எதிரிகளின் பேச்சு சுதந்திரத்திற்காக தன் உயிரையும் தரத்தயாராயிருந்தபோது நாம் நம் குழந்தைகளின் பேச்சு சுதந்திரத்தைப் போற்றவேண்டும்தானே. பெண் குழந்தைகளைப் பேச அனுமதிப்பதில்லையா? அவர்கள்தானே நிறையப் பேசுகிறார்கள்? அப்படியே பேசினாலும் கண்டிப்பது தாய்க்குலங்கள் தான். ம்ம்ம். தாய்குலங்களுக்கு, எங்கே தங்கள் குழந்தைகள் வளர்ந்து உரிய வயதில் திருமணமாகிப் போகிற குடும்பங்களில் இப்படிப் பேசி, அந்த வீட்டில் ‘வளர்த்திருக்கிறதைப் பார்’ என்று தங்களைத் திட்டுவார்களோ என்ற ஐயத்தினால் இப்போதிருந்தே அடக்கி ஒடுக்கி வளர்க்கிறார்கள். தங்கள் வளர்ப்பைப் பற்றின விமர்சனத்திற்கு பயந்து இப்போதே பேசவிடாமல் தடுப்பது எந்தவகையைச் சார்ந்தது? கருத்து சுதந்திரம் இல்லாததால்தான் தன் மீது நடக்கும் வன்முறைகளைக் கூட, மௌனமாக ஏற்றுக்கொள்ளும் போக்கினை குழந்தைகள் பெற்று எவ்வித எதிர்ப்பையும் காட்ட மறுக்கிறார்கள். இதுவே நாளடைவில் சமூகத்தில் நடைபெறும் பலவிதமான கேடுகளை எதிர்க்கத் திராணியற்று வன்முறைகளை வளர்க்கும் போக்கிற்கு மௌனமாக ஒத்துழைக்கிறார்கள். அதனால், வீடுகளில் நடக்கும் வன்முறைகளுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்விட்டது. என்ன? வன்முறையா? குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வன்முறையாளர்களா? பெற்ற குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம்? வன்முறை செலுத்துகிறோம் என்கிறீர்கள்? சரி. நான் அன்றாடம் நடக்கும் சில செய்திகளை சொல்லிக்கொண்டே வருகிறேன். இது வன்முறையா? இல்லையா என்று பாருங்கள். பெண் குழந்தைகளை உடலளவிலும் மன அளவிலும் பெரும்பாதிப்பை உண்டாக்கும் குழந்தைத் திருமணங்கள் நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் கரூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஊட்டி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடந்து வருவதாக சமூக நலத்துறை பட்டியலிட்டிருக்கிறது. புள்ளவிபரங்கள் வெளியிட்டிருந்தால் எங்கே பிரச்சனையாகுமோ என்று வெளியிடவில்லை. இது ஒரு வன்முறையில்லையா? குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 மாதக் குழந்தை விற்கப்பட்டுள்ளது. இதற்காக பெறப்பட்டுள்ள தொகை அரிசி, மஞ்சள் கிழங்கு. (தினமணி 10-5-05) இது போன்ற பல செய்திகளைச் செய்திதாள்களில் காணமுடியும் இது வன்முறையில்லையா? இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நடுத்தரக் குடும்பங்களில் 1 கோடி கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தை என்பதால் இவை நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த உலகத்தில் ஆண்குழந்தைகள் தான் இருக்கவேண்டும் என்ற கருத்தாக்கத்தால் எழுந்து இந்த வன்முறை. இவை வன்முறையில்லாமல் வேறென்ன? ஒரு வருடத்திற்குத் திருட்டுத்தொழில் செய்ய 50 ஆயிரத்திற்கு பெற்ற மகனை விற்ற செய்தி (தினத்தந்தி 27-10-05) எதை வெளிப்படுத்துகிறது.? குழந்தை தனது சொத்து என்ற அடிப்படையில் நடந்த இந்த நிகழ்வு வன்முறையில்லையா?. குழந்தைகளை ஆசையோடும் அன்போடும் அரவணைத்து வளர்ப்பவர்கள் பெற்றோர்கள் என்பதுதான் நம் பொதுவான கருத்து. ஆனால் பெற்ற பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு நடக்கும் நிகழ்வுகள் ஏராளம். இவைகளை வன்முறை என்று சொல்லலமா? கூடாதா? குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 6 முதல் 7 லட்சம் சிறுமிகள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இவை வன்முறைதானா? இல்லையா? ஆக, குழந்தைகளுக்கு அங்கிங்கெணாதபடி எல்ல இடங்களிலும் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதன் அடிப்படையான காணத்தைத் தோன்டும் போதுதான் சங்கிலித்தொடர் போன்று சமூகப் பிரச்சனையாகவும், அரசியல் பிரச்சனையாகவும் வடிவமெடுக்கின்றன. பாரபட்சமான, ஏற்றத்தாழ்வான சாதிய அடுக்குமுறைகளும் இதற்குக் காரணமாகின்றன என்று புலப்படுகிறது. இவற்றைக் களைய வேண்டும் என்றால் பல கட்டங்களில் நம் போராட்டம் தொடரவேண்டும். ஒட்டு மொத்தமாக குடும்பத்தில் உள்ள வன்முறைகளை சொல்கிறீர்கள்? ஆனால் எங்கள் வீட்டில் அவ்வாறு நடப்பதில்லை… எவ்வளவு ஆழமாக நம்புகிறீர்கள். பெரியவர்கள் வீடுகளில் சண்டை போடுவது கூட குழந்தைகளின் மனநிலையை மிக ஆழமாக பாதிக்கிறது. நான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குழந்தையிடம் படம் வரையச்சொன்னேன். தன் அப்பாவும் அம்மாவும் சண்டையிடுவதால் தனக்குப் படிப்பும் வரவில்லை, இருக்கவும் பிடிக்கவில்லை என்று குழந்தை சொல்வதான கார்ட்டூன் அது. அந்தக் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளாள் என்று தெரிந்தது. “யார் யாரோடு சண்டை போட்டாலும் கடைசியில் பாதிக்கப்படுவது நான் தான். எனக்குத்தான் அடி கிடைக்கும். திட்டு கிடைக்கும். அப்போதெல்லாம் நான் அழுவேன். அழுதால் அதற்கும் அடி கிடைக்கும். அதனால் கஷ்டப்பட்டு அடங்குவேன். தொண்டையெல்லாம் அமுக்கி வலிப்பது போல இருக்கும். நெஞ்சுவலிக்கும். நிற்க வைத்து ஜெயிலுக்குள் இருப்பவர்கள் கிட்ட கேள்வி கேட்பது போல் கேட்பார்கள். நிறைய தடவை நினைப்பேன். சுனாமி வந்தப்ப இவங்க செத்து போயிருக்க கூடாதா?… என்று. அப்புறம் உடனே சாமிகிட்ட மன்னிப்பும் கேட்பேன். நான் அவங்க கிட்ட அடியும் உதையும் வாங்கறப்ப எல்லாம் எங்கயாவது ஓடிப்போலாம் போல இருக்கும். அப்படி போனா பொம்பளைப் பிள்ளங்கள யாரோ பிடிச்சுக்கிட்டு போயிருவாங்கன்னு எங்க பக்கத்து வீட்டு பெரியம்மா சொல்லும். நான் எங்கப்பாரு அடிக்கும் போதெல்லாம் கெஞ்சுவேன். என் சத்தம் எதையும் காதில வாங்க மாட்டாங்க. எனக்கு எங்கம்மாவும் அப்பாவும் அன்பு செய்ய மாட்டாங்களான்னு இருக்கும். பக்கத்துல உட்கார்ந்து பேசமாட்டாங் களான்னு இருக்கும். அவங்க மடியில் படுத்து கத்தணும் போல இருக்கும். கோபமா இருக்கும்போது அவங்களைப் பாத்தாலே எனக்கு பயம். இதனால சரியாவே படிக்க முடியலை. பள்ளிக் கூடத்திலே டீச்சரும் படிக்காட்டி அடிப்பாங்க. எங்கம்மாவும், எங்கப்பாவும் கையில அடிச்சாங்கன்னா எங்க டீச்சர் குச்சியில அடிப்பாங்க. எல்லா பிள்ளைகளும் சிரிக்கும். சிரிக்கிறப்ப செத்து போகலாம்னு இருக்கும். ஏன் பொறந்தோம்னு இருக்கு. நான் யாருக்கும் பிரயோசனமில்லை. ஒண்ணு சுனாமில நா செத்திருக்கணும்” என்று கேவிக்கேவி அழுதாள் அந்தக் குழந்தை. மனசே தாங்கவில்லை. இப்படிப்பட்ட சின்னச்சின்ன விசயங்கள் கூட அந்தக் குழந்தைகளை எப்படிப் பாதிக்கிறது. ஒரு வார்த்தையைக் கூட தாங்க முடியாத அளவு அவ்வளவு மெல்லியதா இவர்கள் உள்ளம்? பூ என்று சொல்வார்களே, அதைப்போன்றதா? எங்களின் சொல்லும் செயலும் உங்களை அவ்வளவாகவா பாதிக்கிறது? எங்களின் நடவடிக்கை உங்களை உட்சுருக்கி சுக்குநூறாக நொறுக்கி விடுகிறதா? என் போன்றோர் திருந்தாத வரையில் ஒட்டுமொத்த பெற்றோர்கள் சார்பாக உங்களிடம் மன்னிப்பு மட்டும் தான் கேட்கமுடிகிறது என்னால். ஆனால் இதை வாசிக்கும் ஒவ்வொரு நபரும் கண்டிப்பாகத் திருந்துவார்கள். எனக்கு நம்பிக்கையிருக்கிறது. யார் குழந்தைகளின் சுதந்திரத்தை யோசிக்கப்போகிறார்கள்? மனதுக்கு துயரமாகத்தான் உள்ளது. ஆனால், இவ்வளவு பெரியவர்களாகிய நமக்கே சுதந்திரம் கிடைக்கலை. யார் குழந்தைகளின் சுதந்திரத்தை யோசிக்கப்போகிறார்கள்? இங்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்து என்னென்ன சுதந்திரங்கள் உள்ளன? (பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி கற்க, இந்தியாவில் எங்கும் சுதந்திரமாக போய்வர… இப்படி கொஞ்சம் தெரியும். ஆனா எங்க…. (!?) இதெல்லாம் இருந்தும் நம்மால் செய்ய முடிகிறதா என்ன?) உங்கள் ஆதங்கமா இது? சரி, சுதந்திரம் என்பதை இப்படியாகப் புரிந்துகொள்ள வேண்டும். குடைபிடித்துப் போவது சுதந்திரம் என்றால் அந்தக் குடையின் கம்பி அடுத்தவரது கண்ணைக் குத்தாதவரை என்பதாக அர்த்தம் கொள்ளவேண்டும். எல்லா சதந்திரமும் அனுபவிக்க முடியாதவரை நம்மைத் தடுப்பது எது? என்பதை நாம் யோசிக்கவேண்டும். நமது கல்வி அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். விஞ்ஞானத்தைப் படித்தவர்கள் அந்தப்படிப்பின் தன்மையும் பயனும் உண்மைகளும் தெரிவதற்கு பதிலாக பாம்புப் பால்குடிக்கும் என்று புத்துக்கு பால்வார்ப்பது, போன்ற மூட நம்பிக்கைகளை வளர்ப்பதில் பெரும்பாலும் முன்னணியில் நிற்கும் அளவிற்கு தான் கல்வி முறைகள் உள்ளன. கல்வி என்பது தீயவற்றை எதிர்க்கும் சிந்தனையை வளர்த்தெடுக்கவும், மனிதம் வளர்க்கும், மனம் வளர்க்கும், உடல் வளர்க்கும், சுதந்திரமான, அடிமைத்தனம் அற்ற, மனித ஆளுமைகளை வளர்க்கிற கல்வியாக இருக்கவேண்டும். குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்ளாதவரை நமக்கு நாமே பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பது நிச்சயம். ஒவ்வொரு குழந்தைக் கல்வியாளர்களிடமும் கேட்டுப் பாருங்கள். தன்னிடம் படிக்கும் மாணவர்கள் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதாகத்தான் அவர்களின் எண்ணம் இருக்கும். ஆனால் வெளிப்படுத்தும் விதம்தான் மாறுபடுகிறது. மாணவர்களைத் ‘திருத்துவது’ என்பது அடித்து திருத்துவது, தண்டித்து திருத்துவது, பிற மாணவர்கள் மத்தியில் மனம் புண்படுகிறவரை திட்டித் திருத்துவது அல்ல. அதன் விளைவு எதுவாக இருக்கும்? ஒரு மாணவன் எந்த நிலைக்கு வரவேண்டும் என்ற ஈடுபாட்டில் ஆசிரியர்கள் யோசித்தார்களோ அந்த நிலை மாறி அம்மாணவன் தன் ஆசிரியரை ஒரு எதிரியாகப் பாவிப்பான். வகுப்பில் சரியாகக் கவனிக்காத மாணவனை ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்கள் மத்தியிலும் சத்தம் போட்டு திட்டி ‘வெளியே போ” என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அம்மாணவன் மிகச் சாதாரணமாக வகுப்பை விட்டு வெளியேறினால் ஆசிரியரின் நோக்கம் வீணாகிவிடும். மாறாக, அம்மாணவனைத் தனியாக அழைத்து நேரத்தின் முக்கியத்துவத்தையும், அவன் வீட்டில் எந்த அளவு கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைக்கிறார்கள் என்பதையும், வகுப்பு நேரத்தில் கவனிப்பு எந்த அளவிற்கு பிரயோசனமானது என்பதையும் உணர்த்தினால் நிச்சயமாக சிறிதளவு பயன் இருக்கும். அம்மாணவனின் உள்ளத்தில் ஆசிரியரைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் எண்ணமும் உயரும். ஏனென்றால் நாம் சொல்லக்கூடிய கருத்துக்களைப் பிறர் ஏற்கவேண்டும் என்றால் கேட்பவர் மத்தியில் கருத்து சொல்பவர்களைப் பற்றிய மதிப்பீடு சிறந்த முறையில் இருக்கவேண்டும். சொன்னபடி கேட்காத பிள்ளையை என்ன செய்வது? கொஞ்சநாளாக நானும் குழந்தைகளை அடிப்பதை நிறுத்தினேன். எவ்வளவு கோபம் வந்தாலும் பரவாயில்லை என்று என்னைக் கட்டுப்படுத்தினேன். ஆனால் என் மகன் சொன்னபடியே கேட்பதில்லை. இவனை என்ன செய்யலாம்? அதை உங்கள் குழந்தையிடமே கேட்டுப்பாருங்கள். பலன் கிடைக்கும். நான் உன்னை அடிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். நீ இப்படி செய்தால் கண்டிப்பாக அடிப்பேன். உனக்கு அடி கொடுக்கட்டுமா? என்று கேட்டுப்பாருங்கள்… குழந்தைகள் எப்போதும் நிறைய விசயங்களை உள் வாங்குகிறார்கள். உங்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள். உட்கார்ந்து பேசினால் போதும். நாம் நம் குழந்தைப்பருவத்தைக் கொஞ்சம் திரும்பி பார்ப்பது அவசியம். நாம் நம் சிறுவயதில் என்னவெல்லாம் செய்திருப்போம். எப்போது பார்த்தாலும் தெருவில் ஆடிக்கொண்டிருக்கவில்லையா? வெயிலும், மழையும், பனியும் நம்மை பாதிக்குமா? எப்போது பார்த்தாலும் ஒரே துள்ளல்தான். இந்த நிலையை நாம் நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோமா? எப்போது பார்த்தாலும் படிப்பத்தான். விளையாடுவது கூட அடைக்கப்பட்ட கூண்டுக்குள் தான். போதாதற்கு டி.வி. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்முடைய குழந்தைப் பருவம் எவ்வளவு நன்றாக இருந்தது? இப்போதுள்ள குழந்தைகளைப் பாருங்கள். எவ்வளவு இன்பத்தை இழக்கிறார்கள்? இவர்கள் பெரியவர்களானதும் இதைவிட இன்னும் இறுகலாகி இயந்திரங்களைப் போல ஒரு வாழ்க்கையை மேற்கொள்வார்கள். விளையாட்டு என்ற பதமே நம் அகராதியிலிருந்து இல்லாமல் போய்விடும். பெரியவர்களுக்குத்தான் எதையும் எளிதில் சொல்லிப் புரியவைக்க முடியாது. எல்லாவற்றிற்கும் ஒரு உதாரணம் வேண்டும். அதை விளக்கிச்சொல்ல வேண்டும். காரணம் சொல்லவேண்டும். குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.