Thursday, April 30, 2020

கொரோனா கொடுத்த படிப்பினை...



எதை எதை எல்லாம் அவர்கள் மூடநம்பிக்கை என்று சொன்னார்களோ அதைத்தான் இன்று உலகம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது.
அதுதான் இந்து தர்மம்.


இந்து சமயம் ஓர் மதமல்ல.
மனித வாழ்வியல் நெறி.

இந்து சமயத்தின் வழிபாட்டு முறைகளை மூட நம்பிக்கை எனக் கூறுகிறார்கள் பகுத்தறிவு வாதிகள்.

எதை எதை எல்லாம் அவர்கள் மூடநம்பிக்கை என்று சொன்னார்களோ அதைத்தான் இன்று உலகம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது.
அதுதான் இந்து தர்மம்.

அதிரடியாக தொடர்ந்து ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியில் பலியெடுக்கின்றது கொரோனா.

கொரோனாவினால் அதிக உயிர்கள் பலியானது சீனாவில். இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் ஈரானும், நான்காம் இடத்தில் தென் கொரியா வும் உள்ளன.

இத்தாலியைத் தொடர்ந்து பிரிட்டன்,ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய நாடுகளில் கொரோனா பரவிக் கொண்டிருக்கின்றது.

தேலயங்களை மூடி விட்டார்கள்.
ஞாயிறு திருப்பலிக்கு வராதது சாவுக்கு ஏதுவான பாவம் என சொல்லும் கிறிஸ்தவம், ஆலயம் வந்து சாகவேண்டாம் என தேவாலயக் கதவுகளை அடைத்துவிட்டது, திருப்பலியும் இல்லை, நற்கருணையும் இல்லை, பாவ மன்னிப்புமில்லை.

கிறிஸ்தவ வழிபாடு யூத வழிபாட்டின் தொடர்ச்சி. அதாவது கூட்டு வழிபாடு,மொத்தமாக கூடித்தான் பிரார்த்திப்பார்ககள், கொஞ்சம் அதிகமாக நேரம் எடுக்கும் விஷயம் என்பதால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது என முடிவெடுத்து தேவாலயங்களை மூடி விட்டார்கள்.

இந்நிலையில் #இந்துக்களின் ஆலய பிரவேசத்தையும் வழிபாட்டு முறைகளையும் கவனியுங்கள்.#ஆச்சரியமான பல விஷயங்கள் புலப்படும்.

இந்துக்களில் கூட்டு வழிபாடு பெரும்பாலும் இல்லை. மாறாக யாரும் எப்பொழுதும் வரலாம். வழிபடலாம்.

🙏இந்து ஆலயங்களில் வழிபாட்டுக்கு முன்பு சம்பிரதாயபடி கால் கையினை கழுவிவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும், இதனால் நோய் பரவும் முதல் வழி தடுக்கப் படுகின்றது.

🙏ஆலயத்தில் சுவாமிக்குக் காட்டும் தீபத்தில் கையினை வைக்கும் பொழுதும், அக்கையினை கண்ணில் வைக்கும் பொழுதும் கிருமிகள் இருந்தால் அழிந்து விடும், கற்பூரம் ஏற்றி கண்ணில் ஒத்துவதன் உண்மைத் தத்துவம் இதுதான்.

🙏கையினால் முகத்தை தொடாதீர்கள், கண்ணை மூக்கை தொடாதீர்கள். அடிக்கடி கழுவுங்கள் என இப்போது உலகம் ஒப்பாரி வைக்கும் வேளையில்....

🙏தீபச் சுடரில் கைகளை காட்டி சூடேற்று. அதை முகத்துக்கும் கொடு நோய் பரவாது என என்றோ சொன்ன மதம் இந்துமதம்.

🙏கர்ப்பக் கிரகத்தின் முன் வழிபாடு முடிந்ததும், கொடுக்கும் விபூதியினை நெற்றியில் பூசினால் நோய்க் கிருமிகள் முகத்தில் அண்டாது. அது கிருமி நாசினி , பசு சாண சாம்பல் இருக்குமிடம் கிருமிகள் வராது.

🙏சாம்பிராணி புகையில் காற்றில் பரவும் கிருமிகள் அழிந்து விடுகின்றன. ஆலயமெங்கும் புகை பரப்பும் அதுதான்.

🙏ஆலயமெங்கும் தீபம் ஏற்றப்படும் தத்துவமும் இதுவே, அதுவும் நெய்யிலும் இன்னும் சில எண்ணெயிலும் எரியும் நெருப்பு கொடுக்கும் சக்தி விஷேஷமானது.

🙏இவை அனைத்தும் வீட்டில் விளக்கேற்றி, சாம்பிராணி போட்டு, கற்பூர தீபம் காட்டி சுவாமியை வழிபடும் போது, வீடும் நோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கப் படுகிறது.

🙏ஆலயங்களில் தரப்படும் சில பொருட்கள் கலந்த தீர்த்தம் மருத்துவ குணம் வாய்ந்தது, சர்வ கிருமி நாசினி, குடித்தால் தொற்று நோய் எளிதில் அண்டாது, அதை கைகளில் தேய்த்து கொண்டால் நோய் தடுக்கப்படும்.

🙏கோயில்களில் பிரச்சாதம் என தரும் தேங்காய் முதல் மிளகு கலந்த பொங்கல் வரை எல்லாமும் மருந்தே.

🙏அது வைஷ்ணவ ஆலயமாக இருந்தால் துளசியும், அம்மன் கோவிலாக இருந்தால் கொடுக்கபடும் வேப்பிலையும் சிறந்த நோய் தடுப்பு மருந்துகள்.

🙏ஆலய மணி ஒலிக்க ஒலிக்க வழிபாடு நடத்துவது ஏன்? ஆலயமணியின் சில அதிர்வுகள் நுண்ணிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள், மெல்லிய எலக்ட்ரிக் ஷாக் சிகிச்சைக்குரிய அதிர்வினை அது கொடுக்கும், ரத்த ஓட்டம் சீர்படும். இசை ஒலிக்கப்படும் தத்துவமும் இதுவே

🙏கோவில் எல்லோரும் வரும் இடம். விக்கிரகங்களையும் ஐயரையும் எப்பொழுதும் மிகவும் சுத்தமாக இருக்கச் சொன்னார்கள். அர்ச்சகர் தள்ளி நிற்பதும் அதிகம் தொட்டுப் பேசாததன் காரணமும் இதுதான்.

🙏மாமிச உணவு உடல் வெப்பத்தை கூட்டும். ஆலயங்களில் கூடுதல் வெப்பம் நிலவும் என்பதாலும் அசைவ உணவினை உண்டவர்க்கு ஆலயத்தில் அனுமதி இல்லை என்றார்கள்.

🙏அடிக்கடி காலையும் மாலையும் சில விக்ரகங்களை அபிஷேகம் என‌ கழுவுகின்றார்களே அதுவும் மருத்துவம் தான்.

🙏அக்காலத்தில் விக்கிரகத்தை தொட்டு வணங்கும் வழக்கம் இருந்தது, பலர் தொட்டு செல்லும் நிலையில் நோய் பரவிவிட கூடாது என்பதற்காக அடிக்கடி நீரும் இன்னும் சில வஸ்துகளும் இட்டு கழுவி சாம்பிராணியிட்டு சுத்தமாக்கி வைத்தார்கள். கற்பூர தீ கூட கிருமி அழிக்கும் தன்மை கொண்டதே,

🙏நறுமண பூக்களால் அலங்கரித்தார்கள், நல்ல மணம் கூட சில நல்ல விஷயங்களை கொண்டுவரும்.

🙏திதி கொடுத்தல் இன்னும் சில விஷயங்களில் அர்ச்சகர் எமது கையில் தர்ப்பை கட்டுகின்றாரே ஏன்? தர்ப்பையில் நோய் கிருமி பரவாது என்பதை அன்றே அறிந்திருந்தது இந்து சமூகம்.

🙏இந்துக்கள் எதெல்லாம் செய்ய சொன்னார்களோ அதெல்லாம் நோய் தடுப்பென்றும், எதெல்லாம் தீட்டு என்றார்களோ அதெல்லாம் நோய் பரப்பும் விஷயம் என்பதை இப்போது மௌனமாக ஒப்புகொள்கின்றது உலகம்.

🙏தொற்றுநோய் என புத்த விகாரை முதல் மேற்கத்திய தேவாலயம் வரை மூடப்பட்ட நிலையில், இந்து ஆலயங்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒழிந்திருக்கும் நோய் தடுப்பு முறையினையும் அக்காலத்திலே மிக நுட்பமாக செய்யபட்டிருக்கும் ஏற்பாடுகளையும் பற்றி வியந்து கொண்டிருக்கின்றது உலகம்.

இங்கு எதுவும் மூட நம்பிக்கை அல்ல, புரிந்து கொள்ள முடியாத மூடர்களின் கூட்டமே அப்படி சொல்லுமே அன்றி,
அறிவுள்ள உலகம் நெருக்கடியான இந்நேரத்தில் இந்து ஆலயங்களின் பெருமையினை உணர்ந்து செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆம், இந்து சமயம் ஓர் மதமல்ல.
மனித வாழ்வியல் நெறி.

வணக்கத்துடன்... #அப்பா! - சிறுகதை


விடியற்காலை ஐந்து மணி. நந்தினியின் செல்போன் விடாமல் அடிக்க... கண்களைக் கசக்கிக்கொண்டே போனை எடுத்த நந்தினி, அண்ணாவின் பெயரைப் பார்த்ததும் பயந்து போனாள்.

“என்னடா, இந்த நேரத்துல... யா... யாருக்கு என்னாச்சு?”

“அப்பாக்கு ஹார்ட் அட்டாக்டி. சாரதா நர்ஸிங் ஹோம்ல சேர்த்திருக்கோம்.”

அவ்வளவுதான்... நந்தினிக்கு அவள் உலகமே சுற்றியது. நிதானத்துக்கு வந்து ஆகாஷிடம் சொல்லிவிட்டு மருத்துவமனைக்குப் பயணித்த அந்த நிமிடங்கள் நரகமானவை.

எட்டு வருடங்களுக்கு முன்னால், அப்பாவின் முன் நின்றது நினைவிலாடியது.

“நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம ஆகாஷை கல்யாணம் பண்ணிண்டு வந்து நிக்கற... இதுக்கு மேல உன் கூட எனக்குப் பேச இஷ்டம் இல்ல...”

“எதுக்கு இப்படி கத்தறேள்... ஆகாஷ் உங்க அக்கா பையன்தானே?'' என்று சப்போர்ட்டுக்கு வந்த அம்மாவை பார்வையாலே எரித்தார் அப்பா.

அன்றிலிருந்து நந்தினியோடு பேசுவதையும் பார்ப்பதையும் அப்பா நிறுத்தி 8 வருடங்களாயிற்று. ஆனாலும், இரண்டு குழந்தை கள் பிறந்தபோதும், கிரஹப்பிரவேசத்தின்போது மறக்காமல் அம்மா, அண்ணா, மன்னி என்று யாராவது ஒருவரை அனுப்பி வைத்துக்கொண்டுதான் இருந்தார்.

“நமக்கு உடம்பு சரியில்லாம வீக்கா இருக்கும்போதுதான் எல்லாரையும் பாக்கணும், பேசணும்னு தோணும். நீ போனா அப்பா கோவிச்சுக்க மாட்டார். போயிட்டு வா” என்று ஆகாஷ் தந்த நம்பிக்கையில் மருத்துவமனை சென்றாள் நந்தினி.

அம்மா, அண்ணாவைப் பார்த்துவிட்டு ஐ.சி.யூ-வுக்கு சென்றபோது மனம் உணர்வுகளால் நிரம்பியிருந்தது. அப்பா இடது பக்க இரண்டாவது கட்டிலில் சுவாசக் கருவிகளின் துணையோடு சுவாசித்துக்கொண்டிருந்தார். தலை நரைத்து, வழக்கமான விபூதி கீற்று இல்லாமல் களையிழந்து, சோர்வாக இருந்த அப்பாவைப் பார்க்கவே வலித்தது. நினைவுகள் கண்ணீராக நிரம்பி வழிய ஆரம்பித்தன நந்தினிக்கு.

`கால் வலிக்குதுப்பா' என்று சொன்ன ஒரே காரணத்துக்காக இரவெல்லாம் கால் அமுக்கிவிட்ட அப்பாவா இது...

`ஹெர்பேரியம் பண்றதுக்கு பிளான்ட்ஸ் இல்லப்பா' என்று கண்களைக் கசக்கியபோது, மூச்சிரைக்க வந்து பிளான்ட்ஸ் கொடுத்த அப்பாவா இது...

`விருப்பப்பட்ட காலேஜ் கிடைக்காது போலப்பா' என்று முகம் சுருங்கியதை பொறுக்காது, தொடர்ந்து ஒரு மாத கடும் முயற்சியின் காரணமாக ஸீட் கிடைக்க வைத்த அப்பாவா இது... என்று அப்பாவை பற்றி நினைக்க நினைக்க கண்ணீர் வழிவதைத் தடுக்க முடியவில்லை நந்தினிக்கு.

அப்பா மெள்ள கண் விழித்து நந்தினியைப் பார்த்து கண்களில் நீர் வழிய மெலிதாக சிரித்து, `இங்கே வா' என்று சைகையால் அழைக்க, ஒரு கணம் இதயம் நின்று துடித்தது நந்தினிக்கு.
``எப்ப வந்தே?''

``இப்பதான்பா'' என்று அப்பாவின் கண்ணீரைத் துடைத்தபோது சோர்வில் அப்பாவின் கண்கள் தானாக மூடிக்கொண்டன. வெளியே வந்து கண்களைத் துடைத்துக் கொண்டே ``எதனால இப்படி ஆச்சு'' என்று அண்ணாவிடம் கேட்டாள் நந்தினி.

``ஆகாஷுக்கு ஒருமாசத்துக்கு முன்னாடி கார் ஆக்ஸிடன்ட் ஆச்சுல்ல... அதைச் சொன்னேன். அப்படியாவது மனசு மாறுவார்னு நினைச்சேன். ஆனா, அந்த நியூஸால அப்பாவுக்கு இப்படி ஆகும்னு நினைக்கலை... ஸாரி நந்தினி'' என்று தலைகுனிந்த அண்ணனின் குற்ற உணர்வை மேலும் கிளற விரும்பாமல் அமைதி காத்தாள் நந்தினி.

“இவர் சொன்னதுலேருந்து அப்பா உடைஞ்சு போயிட்டார் நந்தினி” - மன்னி சொன்னாள். ```ஆகாஷுக்கு ஒண்ணும் இல்லையே, நல்லா இருக்கானா'னு கேட்டுண்டே இருந்தார். சரி நந்தினி, நீ கெளம்பு. டைம் ஆச்சு. நாளைக்கு காத்தால வா'' என்று அனுப்பி வைத்தான் அண்ணன்.

இரண்டு நாட்கள் குழந்தைப் பராமரிப்பை ஆகாஷே முழுவதுமாக எடுத்துக்கொண்டான். நந்தினி வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் சாப்பாடு கட்டி எடுத்துக் கொண்டுபோனாள். அப்பாவை நார்மல் வார்டுக்கு மாற்றியிருந்தார்கள்.

“அப்பா ஏதாவது சாப்பிட்டாளாம்மா?”

“நர்ஸ் வந்து கஞ்சி குடுத்தா. நாளைலேந்து இட்லி சாப்பிடலாம்னு சொல்லிருக்கா” என்றாள் அம்மா.

“இதுல சாப்பாடு இருக்கு” என்று பையை அம்மாவிடம் தந்தாள்.

கொஞ்ச நேரத்தில் அப்பா விழித்துக் கொண்டார். நந்தினியை அருகே அழைத்து பக்கத்தில் இருந்த நாற்காலியைக் காண்பித்து உட்காரச் சொன்னார்.

“ஆகாஷ் வரலையா?” - ஈனஸ்வரத்தில் கேட்டார்.

“வித்யாவையும் வினயாவையும் ஸ்கூல்லேந்து கூட்டிண்டு சாய்ங்காலமா வருவார்ப்பா...”

மாலை ஆகாஷ் மகள்களோடு வந்தான். ஆகாஷைப் பார்த்து சந்தோஷமாகச் சிரித்தார். தன் கைகளை அசைத்துப் பக்கத்தில் வரச் சொன்னார். ஆகாஷ் பக்கத்தில் வர, அவனின் இடது உள்ளங்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

“அந்த ஆக்ஸிடன்ட்ல உனக்கு ஒண்ணும் அடிபடலையேப்பா?”

“இல்ல மாமா, எனக்கு ஒண்ணும் ஆகலை.” தன் கை மேல் இருந்த அவரின் கையை ஆறு தலாக தடவிக்கொடுத்தான். வெகு நாட்களுக்கு பிறகு அப்பாவிடம் பேசியதால் மனது நிறைந் திருந்தது. நிம்மதியாக உறங்கினாள் நந்தினி.

மறுநாள் மருத்துவமனைக்குச் சென்றபோது அப்பா பழையபடி ஃப்ரெஷ்ஷாக நெற்றியில் விபூதிக் கீற்றோடு பார்ப்பதற்கு நிறைவாக இருந்தார்.

“ஆகாஷ் வரலையாம்மா?'' - அப்பா கேட்டார்.

“பிளம்பிங் வேலை நடக்குதுப்பா...”

“நல்ல பெரிய வீடாம்மா?”

“எங்காத்தைப் பாக்கறயா?” என்றபடியே தன் செல்போனில் வீட்டை காட்ட, ரசித்து மகிழ்ந்த அப்பா, ``கார் ஒழுங்கா இருக்காமா?” என்றார்.

“நீ டிஸ்சார்ஸ் ஆகி எங்காத்துக்கு அதுலதான வரப்போற... அப்பப் பாரு'' என்றபோது அப்பா சிரித்தார்.

மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு அப்பா மறைந்து போனார்.

பதின்மூன்றாம் நாள் காரியம் முடிந்த இரவு, ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தார்.

“நந்தினி... அப்பா பீரோ லாக்கர்ல ஏதாவது பணம் இருக்கா பாரு... உங்கப்பா குருவி சேக்கறா மாதிரி ஒவ்வொரு பைசாவும் சேத்துருக்கா. அது வேஸ்ட்டா போயிட போறது. போய் பாரு...”

நந்தினி பீரோவைத் தொடும்போதே அப்பாவைத் தொடுவது போன்ற உணர்வு வர, கைகள் நடுங்கின. அப்பாவுக்கு மாச சம்பளம் வந்ததும் ரூபாயைப் பிரித்து வைக்கும் பழக்கம் உண்டு. நோட்டு கட்டுகளைப் பார்த்தபோது அப்பாவின் எழுத்து தெரிந்தது. உற்றுப் பார்த்த நந்தினி உறைந்தாள்.

`நந்தினி தலை தீபாவளி', `நந்தினி கிரஹப்பிரவேசம்', `நந்தினி வளைகாப்பு', `நந்தினி பொங்கல்' என்று அவளுக்கு தான் செய்ய வேண்டிய சீர் அனைத்துக்கும் பணத்தை பிரித்து வைத்திருந்தார் அப்பா.
ஒரு பெரிய விம்மல் ஒன்று அவள் தொண்டையில் இருந்து எழுந்தது.

“அப்பா...” - பணக்கட்டால் முகத்தை முடிக்கொண்டு பெரிதாக அழத் தொடங்கினாள் நந்தினி

நெய்யின்_நன்மைகள்



நெய் சாப்பிடாதீர்கள் என யாராவது சொன்னால் அவர்களை ஏளனமாகப் பாருங்கள்...!!!

நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாகப் பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில் தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணை மருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

#ஜீரணசக்தியைத் தூண்ட

நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.

நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.

நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இது மூளைக்கு சிறந்த டானிக்.

நெய்யில் Saturated fat - 65%

Mono - unsaturated fat - 32%

Linoleic - unsaturated fat -3% போன்ற அனைத்தும் உள்ளது.

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.

#நெய்உருக்கி மோர் பெருக்கி....

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

நெய்யின் மற்ற மருத்துவப் பயன்கள்:-

* ஞாபக சக்தியை தூண்டும்.

* சரும பளபளப்பைக் கொடுக்கும்.

* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வையை தெளிவடையச் செய்யும்.

#உடல்வலுவடைய

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால் கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

#குடற்புண்குணமாக

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன.

வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.

சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்


பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும்.

சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம்.

ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இவ்வாறு உடலில் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை சீக்கிரமே அறிந்து கொள்ளலாம்.

அவ்வாறு அறிந்து கொண்ட பின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்கக்கூடிய விபரீத விளைவுகளை தவிர்க்கலாம். இப்போது சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா!!!

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ்மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது.

அதீத தாகம்

சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு எழும். உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதினால், அந்த நீர் இழப்பை ஈடுகட்ட வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக, அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு அவஸ்தைகளும் இருப்பின், அது சர்க்கரை வியாதி இருப்பதற்கான உறுதியான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

மங்கலான கண் பார்வை

அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதினால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும். மேலும் இது கண்களின் கூர்ந்து நோக்கும் திறனை பாதிக்கும். சர்க்கரை வியாதிக்கு சரியான மருத்துவ கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், அது கண் பார்வை குறைவை உண்டாக்கும். ஏன் சில சமயங்களில் கண் பார்வையை கூட பறித்து விடும்.

எடை குறைதல்

இது டைப்-1 சர்க்கரை நோயின் மிகப் பொதுவான அறிகுறியாகும். உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததனால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் தான் எடை குறைவு ஏற்படுகிறது.

சோர்வு

சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். உயிரணுக்களால், இரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவியின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து காணப்படும்.

கைகள் மரத்துப் போதல்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்கரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வுகள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும்.

சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள் போன்றவை மெதுவாகவே குணமாகும்

இது சர்க்கரை நோய்க்கான மிகப் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், உடலின் நோய் எதிர்ப்பு மையமானது, சீராக இயங்கும் ஆற்றலை இழந்துவிடும். திசுக்களில் காணப்படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக்காயங்கள் மற்றும் புண்கள் குணமடைவதை தாமதப்படுத்தும்.

சரும வறட்சி

புறநரம்பு மண்டல கோளாறு காரணமாக, வியர்வை சுரப்பியின் சுழற்சி மற்றும் இயக்கம் பாதிக்கப்படும். இதன் காரணமாக மேற்புற சருமம் வறட்சியடைந்து, அரிப்பு ஏற்படும்.

எப்போதும் பசி இருப்பது போல் தோன்றும்

நீங்கள் எவ்வித கடின உடற்பயிற்சியை மேற்கொள்ளாத போதும் அல்லது நிறைவாக சாப்பிட்டிருந்தாலும் கூட, எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி தான். ஏனெனில் சர்க்கரை நோய், குளுக்கோஸை உயிரணுக்களுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். இந்நிலையில் நீங்கள் உண்ணும் உணவை ஆக்க சக்தியாக மாற்றும் திறன் உங்கள் உடலுக்கு இல்லாமல் போய்விடும். அதனால் உங்கள் உயிரணுக்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை உருவாகும்.

வீக்கமடைந்த ஈறுகள்

கிருமிகளில் பெரும்பாலானவை வாய் மூலமாகவே உடலுக்குள் நுழைகின்றன. சர்க்கரை நோய் இத்தகைய கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை குறைக்கும். இந்நோய், வலியும் வீக்கமும் மிகுந்த ஈறுகள், தாடை எலும்புகளின் தேய்மானம் மற்றும் நாளடைவில் பற்சிதைவு போன்ற வாய் தொடர்பான ஏராளமான பிரச்சனைகளை உண்டாக்கும். சில சமயம் வாய்க்குள் புண்களையும் உண்டாக்கும். சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!



கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள்.

பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது.

கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.

இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.

கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.

Tuesday, April 28, 2020

ஆதி சித்தர்கள் வைத்தியத்தில் உள்ள inhale முறையில் எந்த கிருமிக்கும் மாற்று முறிவாக,

இன்றைய கொரானா மூக்கின் வழி or வாய்வழி நுழைந்து உள் நாக்கில் படர்ந்து தொண்டையில்,சம்மணமிட்டு,

3 நாள் கழித்து நுரையீரல் தொற்றாகி அதன்பிறகு சுவாசப்பாதை அடைப்பு என்றகொடூர செயலில் மரணம் தழுவும் செயலை மையப்படுத்தி,,,

ஆதி சித்தர்கள் வைத்தியத்தில் உள்ள inhale முறையில் எந்த கிருமிக்கும் மாற்று முறிவாக,

சிறுதும்பை இலை 5 ஐ பிடுங்கி உள்ளங்கையில் வைத்து உப்புக்கல் ஒன்றை வைத்து கசக்கினால் சாறு திரண்டு வெளிவரும்

அப்படியே அந்த கசக்கிய இலையை ஆட்காட்டி விரல் பெருவிரல் இரண்டின் இடையில் வைத்து அழுத்த

வெளிவரும் இரண்டு சொட்டு சாற்றை மூக்கில் விட
(விட்டு பாருங்கள் புரியும்)

சிறுவயதில் உள் சென்ற dust அலர்ஜீ கிருமி யாக இருந்தால் கூட
தப்பித்தால் போதும் என வெளியேறி

நிரந்தர தீர்வும்,,,, நல்ல கிருமிநாசினியாகவும் (for internal ட்ரம்ப் கேட்டது போல)

செயல்பட்டு ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தும் என்பதால் இந்த கோடையில் சித்த மருத்துவ உலகம்

சிறுதும்பை செடி தேடி அலைகிறது,,

எந்த பக்க விளைவும் இல்லாத நல் மருந்தை ஏற்போம் நலமாக வாழ்வோம்னு, !!!!!

நாம சொன்னா யாரு கேட்கிறா!!

சரி சரி கேட்கறவங்களுக்கு மட்டும் அந்த செடியின் படம் கீழே இருக்கு
பார்த்து அறிந்து கொள்ளுங்கள்

குறிப்பு::- மூக்கின் துவாரத்தே ஒரு சொட்டு மட்டுமே!!
ஒரு 10 நிமி பாடாய் படுத்தும் தும்மல் கண்ணீர் என்று,,,,
பவர் பத்தலை என எண்ணுபவர்கள் தாராளமாக பக்கத்துக்கு 2 சொட்டு விடலாம்

தலைச்சுற்றல்_வாந்தி_நின்றிட..!



* நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

* நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.

* நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.

*நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.

* நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.

* நெல்லிவற்றலை தண்ணீ­ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

* நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி,அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.

* நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.

* நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.

* நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து.... சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ­ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும் நீங்கும்.

* நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க 5 வழிகள் கப நோய்களை கபளீகரம் செய்யும் தூதுவளை!




அன்றாடம் உணவில் சேர்க்கப்படும் கீரை வகைகள் பல உண்டு. அதில் மூலிகை குணங்களை கொண்டிருக்கும் கீரைகள் தனியாக பிரிக்கலாம். அவற்றில்.

கப நோய்களை கபளீகரம் செய்யும் தூதுவளை! கப நோய்களை கபளீகரம் செய்யும் தூதுவளை!
ஹைலைட்ஸ்:
மூச்சுப்பாதையில் இருக்கும் தொற்றுகளை அழித்து சுவாசத்தை சீராக்க தூதுவளை
தொண்டையில் சதை டான்சில்ஸ் என்னும் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் ஆரம்பகட்டத்தில் கண்டறிந்தால்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
கீரைகள் சத்து மிகுந்தவை. உடலை ஆரோக்கியமாகவும் நோயில்லாமலும் காக்ககூடியவை. மூலிகை தன்மை கொண்டு சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட கீரைகளின் பட்டியலில் தூதுவளைக்கீரையும் அடக்கம்.
தூதுவளை கீரையில் இலைகள், தண்டு, காய், இதன் பூக்கள் வரை எல்லாமே மருத்துவ குணங்களைக் கொண்டவையே.
தூதுவளைக்கீரையில் புரதம், கொழுப்பு, தாதுச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம். இரும்புச்சத்து இருக்கிறது. எளிதாக எல்லா இடங்களிலும் பரந்து வளரும் தன்மை கொண்டது இந்த கீரை. இலைகளுக்கு நடுவில் சிறு முட்களை காணலாம். இதை கற்பக மூலிகை என்றும் காயகல்பம் என்றும் அழைக்கிறார்கள்.உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் இருக்கையில் இவை வாதத்தினால் உண்டாகும் நோயையும் கபத்தினால் உண்டாகும் நோயையும் தீர்க்கும்.
பித்தநீர் அதிகரிப்பால் உடலில் கண்களில் நீர் சுரத்தல் என்னும் நோய் உண்டாகும் இதற்கு சிறந்த மருந்தாக தூதுவளை விளங்குகிறது. தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதனால் உடலில் எலும்புகளும் பற்களும் பலமாக இருக்கும்.
தூதுவளை இலையை பறித்து சுத்தம் செய்து அதன் சாறை பிழிந்து தேன் கலந்து ஒரு மண்டலத்துக்கு எடுத்துவந்தால் ஆஸ்துமா குணமடையும். ஆஸ்துமா, ஈஸ்னோபீலியா என்னும் நோய் வராமல் தடுக்க தூதுவளையை அவ்வபோது உணவில் சேர்த்துவரவேண்டும். தூதுவளை இலையை சுத்தம் செய்து அதில் மிளகு, பூண்டு சேர்த்து வதக்கி துவையலாக்கி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இரைப்பு பிரச்சனை நீங்கும்.
சர்க்கரை நோயா? எப்பவும் ஆபத்து நெருங்கா இருக்க ஆவாரை சாப்பிடுங்க!
தூதுவளை கீரையை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துகொண்டு தினமும் இரண்டு முறை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு பிரச்சனைகள் நீங்கும். உடல் பலவீனமாக இருப்பவர்கள் உடலில் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள் தூதுவளை கீரை பொடியை ஒரு மண்டலம் எடுத்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வயிறு மந்தம் வயிற்று கோளாறுகள் இருப்பவர்கள் வாயுப்பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் காலை அரை டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தூதுவளைப்பொடி கலந்து குடித்துவந்தால் வயிறு பிரச்சனை குணமாகும்.
நெஞ்சு சளி, இருமல் விடாமல் இருந்தால் தூதுவளைக்கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து நசுக்கி அதன் சாறை கொதிக்கவைத்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து அருந்தினால் சட்டென்று இருமல் நிற்கும். நெஞ்சு சளி கரையும். சாறுக்கு பதிலாக தூதுவளைக்கீரையை காயவைத்து பொடித்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பாலில் ஒரு டீஸ்பூன் பாலை கலந்து குடித்துவந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை எரிச்சல், மார்பு சளி, மூக்கடைப்பு போன்றவை நிவாரணமடையும்.
தொண்டையில் சதை டான்சில்ஸ் என்னும் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் ஆரம்பகட்டத்தில் இதை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம். கையளவு தூதுவளை இலையை பறித்து இதனுடன் அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு எடுத்து அனைத்தையும் பொடித்து நீர்விட்டு காய்ச்சவும். நீர் 3 பங்காக சுண்டிய பிறகு அதை எடுத்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும். இதை தினம்மூன்று வேளை 50 மிலி அளவு குடித்துவந்தால் தொண்டைச்சதை நிச்சயமாக குறையும். படிப்படியாக கரைந்துவரும்.
நீரிழிவு நோய் இருப்பவர்கள் அவை கட்டுப்படாமல் இருக்கும் போது அதனால் உடலில் வேறு பல பாதிப்புகளையும் சந்திப்பார்கள். அத்தகைய பாதிப்பு நேராமல் காப்பதிலும் நீரிழிவை கட்டுக்குள் வைக்கவும் தூதுவளை உதவு புரிகிறது. வாரத்துக்கு மூன்று நாட்கள் தூதுவளையை உணவில் சேர்த்துவருவதன் மூலம் நீரிழிவு கட்டுக்குள் வைக்கலாம். அல்லது இதன் சாறை குடித்துவருவதன் மூலமும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

தூதுவளைபொடியில்
கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறு உள்ளவர்கள் தூதுவளை பூக்களை தனியாக பிரித்து நிழலில் உலர்த்தி பொடித்துவைத்துகொள்ள வேண்டும். தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டுவந்தால் கல்லீரல் மற்றும் நுரையீரல் நோய்களின் தாக்கம் குறையும். படிப்படியாக அவை பலம் பெறும். மருந்துதயாரிப்பிலும் கூட தூதுவளைக்கீரையின் பூக்களும் விதைகளும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மூச்சுப்பாதையில் இருக்கும் தொற்றுகளை அழித்து சுவாசத்தை சீராக்க தூதுவளை பயன்படுகிறது.
மூக்கில் நீர் வடிவது, வாயில் உமிழ்நீர் சுரப்பு அதிகமாக இருப்பது. பல் ஈறுகளில் குறைபாடு நீர் சுரப்பு போன்றவை இருந்தாலும் தூதுவளைக்காயை வற்றலாக்கி சாப்பிட்டுவந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.
தூதுவளைக்கீரையில் பழங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்கள் அதிகம் கிடைக்கும் போது அதை நிழலில் உலர்த்தி பொடித்துவைத்துகொள்ள வேண்டும். குழந்தைகள் மலம் கழிப்பதில் பிரச்சனை இருந்தால் கால் டீஸ்பூன் அளவு எடுத்து பாலில் குழைத்து கொடுக்கலாம். பெரியவர்கள் அப்படியே தண்ணீரில் கலந்து குடிக்கலாம். ஒரு வயது குழந்தை முதல் இதை கொடுக்கலாம். இப்படி உணவாக செய்தும் அல்லது பொடியாக்கியும் உள்ளுக்குள் எடுத்துகொண்டால் பலவித நன்மைகளை உடல் பெற்றுவிடும்.

உணவில் அடிக்கடி தூதுவளையை சேர்த்துவந்தால் தொண்டை புற்றுநோய், கருப்பை வாய்புற்றுநோய் வராமல் தடுக்கும். அதிகம் மதுகுடிப்பவர்களும் புகைப்பிடிப்பவர்களும் அதன் பாதிப்புகளை வராமல் தற்காத்துகொள்ள தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துவரவேண்டும்.
தூதுவளை இலையை அப்படியே சாறு பிழிந்து சாப்பிட முடியாதவர்கள். பொடியை பயன்படுத்த பிடிக்காதவர்கள் சமைத்து சாப்பிடலாம். கீரையை போன்ற ருசியை கொடுக்கவல்லது இது. இப்போதுதான் இதை மருந்தாக்கி எடுத்துகொள்கிறோம். முன்னோர்கள் காலத்தில் சளி, இருமல் காய்ச்சல் வந்தால் தூதுவளையை ரசம் செய்து குடிப்பார்கள். உடலில் கபத்தை கரைக்க தூதுவளையை துவையலாக்கி சாப்பிடுவார்கள். வளரும் குழந்தைகளுக்கு சிறுவயது முதல் தூதுவளையை கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகமாகும். தூதுவளையை அரைத்து தோசைமாவில் கலந்து தோசையாகவும் செய்யலாம்.
தூதுவளை உடலுக்கு அளவில்லாத நன்மைகளை செய்வதால் தான் முன்னோர்கள் அவ்வபோது இதை உணவில் சேர்த்து நோய் நொடியின்றி நீண்ட ஆயுளோடு வாழ்ந்துவந்தார்கள். இனி உங்கள் உணவிலும் அடிக்கடி தூதுவளைக்கீரை இடம் பிடிக்கட்டும்.


Sunday, April 26, 2020

பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கெட்டு ஸ்ரீ சரஸ்வதி அம்மனின் பிரதிமை...



சரஸ் என்றால் பொய்கை என்று அர்த்தம் #வதி என்றால் வசிப்பவள். மனம் என்னும் பொய்கையில் வசிப்பவள். சரஸ்வதி என்றால் பேச்சின் அதிபதி அல்லது பேச்சை தருபவள் என்று பொருள். சரஸ்வதி சரஸ் என்றால் சமஸ்கிருதத்தில் பேச்சு என்று பொருள். வதி என்றால் வாழ்பவள் அல்லது இருப்பிடமாக கொண்டவர் என்று பொருள். சரஸ்வதி என்பதன் இன்னொரு அர்த்தம் ஈரத்தன்மை கொண்டவர் என்பதாகும். சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் சரஸ்வதி தேவியைப் பற்றியும், சரஸ்வதிக்கு பிடித்த வெள்ளை நிறம் பற்றியும் அவர் கம்பருக்கு உதவி செய்த கதையையும் படிக்கலாம்.

பூஜை என்பது பூஜா என்பதில் இருந்து பிறந்தது."பூ"என்றால் பூர்த்தி."ஜா"என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக இருக்க வேண்டுமென்ற பொறாமை,உலகவாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டி படைக்கின்றான்.இதையே சைவ சித்தாத்தத்தில் கர்மா,மாயை என்கிறார்கள். இதை அகற்றி ,ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை.சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால்,அவளது விழாவை மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது .

சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ அங்கே அடக்கம் இருக்கும். பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.

சரஸ்வதி அணிந்துள்ள ஆடையின் நிறம் வெள்ளை. வானவில்லின் 7வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். தூய வெள்ளை ஆடை அணிபவர்களுக்கு தனிமரியாதை உண்டு. கற்றவர், மரியாதைக்குரியவர் என்பதை எடுத்துகாட்டவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளைஆடை அணிந்திருக்கிறாள்.

வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும்,மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்து இருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து,கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது.

வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும்.இதனால்தான் சரஸ்வதி தேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள். சரஸ்வதிக்கு கலைமகள் என்ற பெயர் உண்டு. கலை என்றால் வளர்வது. கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகும். தன் வாழ்நாளுக்குள்,
ஒருவன் எல்லாக் கலைகளையும் கற்று விட முடியாது.இதைத் தான் கற்றது கைம்மண்ணளவு, உலகளவு என்பர். படிப்பு தவிர பாடல், நாடகம், இசை போன்ற கலைகளையும் சரஸ்வதி தேவி நமக்கு சிறப்புற கிடைக்க அருள்பாவிக்கிறாள்.

கம்பருக்கு அருளிய சரஸ்வதி
அதோடு கம்பரின் பாடலைக் கேட்டு அதை நிரூபிக்கும் வகையில் அன்னை சரஸ்வதி தேவியே வயதான மூதாட்டியாக வந்து அருள்பாலித்திருக்கிறார்.
கம்பரின் மகன் அம்பிகாபதிக்கும் சோழ மன்னன் மகள் அமராவதிக்கும் காதல் ஏற்படுகிறது. இது ஒட்டக்கூத்தருக்கு தெரியவருகிறது. எனவே இருவரையும் சிக்க வைப்பதற்காக அரண்மனையில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

சோழ மன்னன் நடத்திய விருந்தில் அறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர். கம்பர் அவரது மகன் அம்பிகாபதி, ஒட்டக்கூத்தர் ஆகியோர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அம்பிகாபதிக்கு மன்னன் மகள் அமராவதி மீது ஏற்பட்டுள்ள காதல் கம்பருக்கு லேசாக தெரியும். விருந்தில் பரிமாற அமராவதி உணவு எடுத்துக்கொண்டு வந்தாள்.

அப்போது அம்பிகாபதிக்கு பாடல் உதிக்கிறது.
' இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கு அசைய... என்று பாடினார்.
அதாவது, சுமையுடன் வருவதால் மென்மையான உன் பாதம் தரையில் பட்டதும் நோகிறது. மேலும் நடந்தால் கொப்பளம் வருமே என்று கூறினான்.
இதைக்கேட்ட ஒட்டக்கூத்தர் சோழ மன்னனை பார்க்க... சோழ மன்னனுக்கு கோபம் வந்தது. உடனே கம்பர் சரஸ்வதி தேவியை தியானித்து அம்பிகாபதியின் பாடலை தொடர்ந்து பாடினார்
"கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள்
தந்நாவில் வழங்கோசை வையம் பெறும்" என முடித்தார்.

இந்த பாடலுக்கு விளக்கம் கேட்டார் சோழ மன்னன். அதற்கு கம்பரோ, வீதியில் வயோதிக மாது ஒருத்தி வெயிலில் உஷ்ணத்தால் இட்ட அடிநோக எடுத்த அடிகொப்பளிக்க கொட்டிக் கிழங்கு விற்றுக் கொண்டு வீதிவழியாக வருகின்றார் என கூறினார்.
உடனே அரசன் காவலாளியை அழைத்து தெருவில் போய் உண்மை நிலையை அறிந்து வர கூறினார். என்ன ஆச்சரியம் நாமகள் வயோதிகப் பெண்ணாகி கொட்டிக் கிழங்கு விற்று வருகிறாள். அந்த வயோதிகப் பெண்ணை அழைத்து வந்து அரசன் முன் நிறுத்தினர். ஒட்டக்கூத்தரின் கனவு பொய்த்து கம்பரின் மகன் அம்பிகாபதி சரஸ்வதியின் அருளால் காப்பற்றப்படுகிறாள்.
கம்பரின் வார்த்தையை காப்பாற்றவே சரஸ்வதி தேவி வயதான பெண்மணி போல வந்து காப்பாற்றினார். அழகான தமிழுக்கு அன்னை சரஸ்வதி தேவியே அடிபணிவார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.



எந்த ராசிக்காரர் எதை செய்தால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா ?



வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நமது வாழ்வில் அனைத்திலும் நல்ல முன்னேற்றங்களையும், அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு நாம் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் பெறலாம். இங்கு 12 ராசியினருக்கும் அவ்வாறான பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மேஷம்



எதிலும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தும் மேஷ ராசியினர் தங்களின் வாழ்க்கையில் பல நல்ல முன்னேற்றங்களையும், அதிர்ஷ்டங்களை பெறுவதர்குக்கு தங்களின் வலது கரத்தில் பின்னமிலாத, டிசைன் இல்லாத வெள்ளியினால் ஆனா காப்பை அணிந்து கொள்ள வேண்டும்.

ரிஷபம்

அனைத்து இன்பங்களையும் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் ரிஷப ராசியினர் தங்களின் வாழ்வில் முன்னேற்றங்களையும் அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு யாரேனும் ஒரு ஏழைக்கு பால் கறக்கும் பசுமாட்டை தானமளிப்பது சிறந்த பரிகாரமாகும்.

தமிழ் பழமொழிகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மிதுனம்



சிந்தித்து செயல்படும் மிதுன ராசியினர் தங்களின் வாழ்வில் முன்னேற்றங்களையும் அனைத்து நன்மைகளையும் பெறுவதற்கு பணவசதி அதிகம் இல்லாத ஏழை நோயாளிகளுக்கு, அவர்களுக்கு தேவையான மருந்தை வாங்கி தருவது சிறந்த பரிகாரமாகும்.

கடகம்


Kadagam Rasi

சிறந்த மனநிலையை கொண்ட கடக ராசியினர் தங்களின் வாழ்வில் சிறந்த முன்னேற்றங்களையும் அதிர்தஷ்டங்களையும் பெறுவதற்கு குழந்தை பெற்ற ஏழை பெண்களுக்கு ஆடைகள், குழந்தைகளுக்கு பால் போன்றவற்றை தானமளிப்பது சிறந்த பரிகாரம் ஆகும்.

சிம்மம்


simmam

கம்பீரத்தன்மை மிகுந்த சிம்ம ராசியினர் ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரை ஒரு நூலில் கோர்த்து எப்போதும் கழுத்தில் அணிந்து கொண்டிருபதால் அவர்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களையும் அதிர்ஷ்டத்தையும் பெற இயலும்.

கன்னி



Kanni Rasi

மதிநுட்பம் அதிகம் கொண்ட கன்னி ராசியினர் மழைக்காலங்களில் தங்களின் வீடுகளில் ஒழுகும் மழை நீரை சேகரித்து குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தால் அவர்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களையும் அதிர்ஷ்டங்களையும் ஏற்படுத்தும்.

துலாம்


Thulam Rasi

துலாம் ராசியினர் தங்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்களையும் பல நல்ல முன்னேற்றங்களையும் பெறுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் அவ்வர்களின் வீடுகளில் பசுமாட்டின் கோமியத்தை வீட்டின் அனைத்து பகுதிகளிலும் தெளித்து வர நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

புரட்டாசி விரதம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்

விருச்சிகம்


Virichigam Rasi

உண்மையை அதிகம் விரும்பும் விருச்சிக ராசியினர் தங்களின் வாழ்வில் எப்போதும் அதிர்ஷ்டங்களையும், நல்ல மாறுதல்களையும் பெறுவதற்கு அவர்களின் கைகளால் அரச மரங்கள் மரங்களின் கிளைகளையோ வெட்ட கூடாது.

தனுசு


Dhanusu Rasi

நேர்மை குணம் மிகுந்த தனுசு ராசியினர் தங்களின் வாழ்வில் பல நாள் மாறுதல்களையும், அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு ஏழைகளுக்கு உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்து வருவது உங்களின் எதிர்கால வாழ்வில் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

மகரம்



Magaram rasi

ஒவ்வொன்றிலும் விதிமுறையின் படி நடந்து கொள்ளும் மகரம் ராசியினர் தங்களின் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களை பல நல்ல மாறுதல்களையும் பெறுவதற்கு பசும்பாலில் சீனி கலந்து ஆல மரத்தின் வேரில் அப்பாலை ஊற்ற வேண்டும். பின்பு அந்த மண் எடுத்து உங்களின் நெற்றியில் திலகமிட்டு கொள்ள வேண்டும்.

கும்பம்


Kumbam Rasi

எப்போதும் நிதானம் தவறாமல் இருக்கும் கும்ப ராசியினர் தங்களின் வாழ்வில் பல நல்ல மாற்றங்களையும் அதிர்ஷ்டங்களையும், மேன்மைகளையும் பெறுவதற்கு மாதமொருமுறை குளிக்கின்ற நீரில் சில துளிகள் பசும்பாலை கலந்து குளிக்க வேண்டும்.

மீனம்


Meenam Rasi

பிறருக்கு சிறந்த அறிவுரைகளை வழங்கும் மீன ராசியினர் தங்களின் வாழ்வில் நல்ல மாறுதல்களையும் அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு கோவில்களுக்கு தலைமுடியை மொட்டை போடும் போது, பிடரியில் சிறிது முடிகளை எடுக்காமல் விடுவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

பாவங்களின் 42 வகை. வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார் அவைகள்!



1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
8. தருமம் பாராது தண்டிப்பது.
9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.

11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசம் செய்வது.
14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.

16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
19. நட்டாற்றில் கை நழுவுவது.
20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.

21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.
23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.
24. கருவைக் கலைப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.

26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.

31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.
33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.
37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
38. சிவனடியாரைச் சீறி வைவது.
39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.

41. தந்தை தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.
42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

உங்கள் கடன் பிரச்சனை தீர இம்முறையை பின்பற்றுங்கள்



வாழ்க்கைக்கு பணம் அவசியம். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது. உலகில் இருக்கும் பல கோடி மக்களும் வாழ்தலுக்கு தேவையான பணத்தை ஈட்ட கடுமையாக உழைக்கின்றனர். இதில் பலருக்கும் தாங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. எனவே பலரும் தங்களின் தேவைகளுக்கு கடன் வாங்குவதையும், தங்களுக்குரிய பொருட்களை அடகு வைத்தும் பணம் பெறுகின்றனர். இத்தகைய பிரச்சனைகள் தீர ஜோதிடம் கூறும் வழிமுறைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வது தான் அனைவரின் முதன்மையான இலக்காக இருக்கிறது. எனினும் மாறிவரும் கால சூழ்நிலை, நிலையில்லா பொருளாதார நிலை காரணமாக சிலர் தங்களின் அவசிய தேவைகளுக்காகவும், வேறு பல விடயங்களுக்காகவும் கடன் வாங்குகின்றனர். வேறு சிலர் தங்களுக்குரிய சொத்து, நகைகள் போன்றவற்றை அடகு வைத்து கடன் பெறுகின்றனர். இதில் பலர் சரியான காலத்தில் கடனை அடைக்க முடியாமலும், அடகு வைத்த பொருட்களை மீட்க முடியாமலும் வேதனை அடைகின்றனர். இதற்கே ஜோதிட சாஸ்திரம் கூறும் தீர்வுகள் என்ன என்பதை காண்போம்.


கடினமான பொருளாதார சூழ்நிலை காரணமாக கடன் பெறுவதையும், வீட்டின் பத்திரம், நகைகள் போன்றவற்றை அடகு வைத்து பணம் பெறும் போதும் எக்காரணம் கொண்டும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் எந்த ஒரு நாளிலும் வருகிற சனி ஹோரை சமயங்களில் அடமானம் வைப்பது, கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும். ஆனால் இந்த சனி ஹோரை நேரத்தில் உங்களின் பழைய கடன்களை அடைப்பதால் மீண்டும் கடன் வாங்கும் சூழல் ஏற்படாது.


அடகு வைக்கும் போதோ, கடன் பெற முயற்சிக்கும் போதோ அன்றைய தினம் உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு பகையான தினமாக இல்லாதவாறு பார்த்து கொண்டு செல்லுதல் நல்லது. நீங்கள் பிறரிடம் வட்டிக்கு வாங்கிய கடன் தொகையில் வட்டியை மட்டுமோ அல்லது வட்டியுடன் அசல் தொகையையோ மாதத்தில் வரும் கிருத்திகை, கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களிலும், தேய்பிறை நாட்களிலும் திருப்பி செலுத்துவதால் நீங்கள் வருங்காலங்களில் மீண்டும் கடன் வாங்கும் சூழலோ, வீடு, நகைகளை அடமானம் வைக்கும் நிலை ஏற்படாது.

ராஜாப் #பூர் #ஜெகந்நாதர் #ஆலயத்தில் #உள்ள #அன்னை #பார்வதிக்கு #சைதன்ய #மஹாபிரபு #ஹரே #கிருஷ்ணா #மஹா #மந்திரத்தை #உபதேசித்தல் 🙏🙏🙏🙏🙏

சாப விமோசனம்


தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! இந்த உலகில் சில சோதிடர்கள் தங்களிடம் வரும் மக்களை பரிகாரம் என்ற பெயரில் பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்.

அப்படி யாரோ ஒரு சோதிடர் தான் உன்னையும் பரிகாரம் என்ற பெயரில் இவ்வாறு அலைய விட்டு இருக்கிறான் என்று தோன்றுகிறது. அத்தகைய கௌசிகன் என்ற சோதிடன் ஒருவனைப் பற்றியக் கதையை உனக்குக் கூறுகிறேன், கேள்!” என்று சொல்லிவிட்டுக் கதை சொல்லத் தொடங்கியது வேதாளம்.

"திவாகர் என்ற பெரும் செல்வர் மகாதானபுரத்தில் வசித்து வந்தார். அவருடைய ஒரே மகளான கலா திருமணப் பருவத்தை அடைந்தவுடன், அவர் மும்முரமாக வரன் தேடத் தொடங்கினார். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தின் பேரில், திருமணப் பேச்சு வார்த்தைகள் தடைப்பட்டுப் போயின. தன் மகளின் திருமணம் தள்ளிக் கொண்டே செல்வதைக் கண்டு திவாகர் கவலையில் ஆழ்ந்தார். அவருடைய மனைவி பிரபா தன் சகோதரன் கோபியின் உதவியை நாடினான். அவன்

கலாவின் ஜாதகத்தைப் பரிசீலனை செய்ய வேண்டுமென்று சோதிடத்தில் புகழ்பெற்ற தனது நண்பன் கௌசிகனிடம் அவளது ஜாதகத்தை காட்டினான். கலாவின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்தபின், சோதிடன் கௌசிகன், “கலாவின் ஜாதகம் சாட்சாத் சீதா தேவியின் ஜாதகத்தை ஒத்திருக்கிறது. தேவிக்கு வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்பட்டது போல் கலாவிற்கும் பல சோதனைகள் ஏற்படவுள்ளன.

ஆனால் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும். நீ ஒரு காரியம் செய்! உன் சகோதரி குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ஜெயபுரிக்குச் செல்! அங்குள்ள ராமர் கோயிலில் தேவியையும் ராமரையும் கலா தரிசிக்க வேண்டும். அங்கு தரப்படும் பிரசாதத்தை அந்த ஊரிலுள்ள ஒரு புண்ணியவானுக்கு அதை கலா வழங்கினால் விரைவில் அவள் திருமணம் நடைபெறும்!” என்றான்.

“சரிதான்! ஆனால் ஜெயபுரியில் புண்ணியவான் யார் என்று நாங்கள் எப்படிக் கண்டு பிடிப்பது? நீயும் எங்களுடன் வந்து, அந்தப் புண்ணியவானை எங்களுக்கு அடையாளம் காட்டு!” என்றான் கோபி. அதற்கு கௌசிகன் சம்மதித்தான். பிறகு, கோபி அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜெயபுரிக்குச் சென்றான். அங்குள்ள ராமர் கோயிலுக்குச் சென்று, ராமரையும் சீதையையும் அனைவரும் வழிபட்டனர்.

பிறகு, அர்ச்சகர் தந்த பிரசாதத்தைக் கலா எடுத்துக் கொள்ள, அனைவரும் ஒரு குதிரை வண்டியில் ஜெயபுரியின் தெருக்களை வலம் வந்தனர். ஒரு பெரிய வீட்டின் வாயிலில் கௌசிகன் வண்டியை நிறுத்தச் சொன்னான். பிறகு கலாவிடம் அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு பிரசாதத்தை அளிக்குமாறு கூறினான். கலாவும் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தாள்.

அவள் நுழையும்போது, வீட்டுக்குள்இருந்து ஓர் அழகான வாலிபன் வெளியே வந்தான். கலாவைப் பார்த்தவுடன் அப்படியே பிரமித்துப் போய் நின்று அவளைக் கண்இமைக்காமல் பார்த்தபடியே நின்றான். அதனால் வெட்கமடைந்த கலா தலையைக் குனிந்து கொண்டு, “நாங்கள் ராமர் கோயிலில் தரிசனம் செய்ய வந்தோம். பிரசாதம் கொடுக்க வந்தேன். இதை ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள்.

அவள் மீது செலுத்திய பார்வையை அகற்றாமல் அந்த வாலிபன், “என் பெற்றோரிடம் இதைக் கொடு!” என்று கூறிவிட்டு உள்ளே சென்று தன் பெற்றோரை அழைத்தான். அவர்களும் வெளியே வந்தனர். கலாவைக் கண்டு ஆச்சரியமுற்ற அவர்கள் அவளை வரவேற்று உபசரித்தனர்.

பிறகு அவளுடைய நோக்கமறிந்து, வண்டியிலிருந்த அனைவரையும் வீட்டிற்குள் அழைத்தனர். கலாவை மிகவும் பிடித்து விட்டதால், அவர்கள் தாங்களாகவே திருமணப் பேச்சைத் தொடங்க, கௌசிகன் அந்த வாலிபனது ஜாதகத்தைப் பரிசீலனை செய்து, பெண்ணின் ஜாதகம் அவனுடன் பொருந்துவதாக அறிவித்தான். அந்த வாலிபனும் சம்மதிக்க, திருமணம் உடனே நிச்சயிக்கப் பட்டது.

வாலிபன் பெயர் வீரபத்திரன் என்றும், தந்தை பெயர் சிவராமன் என்றும் தாயின் பெயர் காமினி என்றும் அறிந்தனர். திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு மறுநாள் ஊர் திரும்புகையில் இரவில் ஒரு சத்திரத்தில் தங்கினர். மறுநாள் காலை கௌசிகன் அருகிலிருந்த ஆற்றுக்கு நீராடச் சென்றபோது, திடீரென ஒரு ராட்சசன் மரத்திலிருந்து குதித்து, கௌசிகனிடம், “என் கேள்விகளுக்கு பதில் சொல்! இல்லைஎன்றால் கொன்று விடுவேன்!” என்றான்.

கௌசிகன் சோதிடர் மட்டுமன்றி, உலக ஞானமும், துணிச்சலும் உடையவன். அதனால் அவன் சற்றும் பயப்படாமல் ராட்சசனை நோக்கி, “நீ ஏதோ ஒரு சாபத்தினால் இவ்வாறு ராட்சசனாக உலவுகிறாய்! உனக்கு சாப விமோசனம் தான் தேவை! அதற்கான வழியைச் சொல்லுகிறேன். வீணாகக் கேள்வி கேட்காதே!” என்றவுடன் ராட்சசன் அவனை வணங்கி, “நான் மீண்டும் மனிதனாக மாற என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு கௌசிகன், “உனக்கு அபூர்வ சக்தி உள்ளது. அதை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தினால், சாப விமோசனம் கிட்டும்!” என்றான். “ஆம்! எனக்கு ஒரு அபூர்வ மந்திரம் தெரியும். ஒரு பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதை உச்சரித்தால், அந்தப் பழம் சக்தி வாய்ந்ததாகி விடும். அதை உண்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்!” என்றான். “அந்த சக்தியை குழந்தை பாக்கியம்அற்ற ஒரு புண்ணியவதியான பெண்ணுக்குக் கொடு!” என்று கௌசிகன் சொல்ல, “எனக்குப் புண்ணியவதி யார், பாவி யார் என்று தெரியாது. நீங்கள் தான் கூற வேண்டும்” என்றான்.சற்று நேரம் தீவிர சிந்தனையில்ஆழ்ந்த கௌசிகன், “அதற்கு இன்னும் நேரம் வரவில்லை. நீ இன்னும் சில ஆண்டுகள் காத்திரு!” என்று கூறிவிட்டுச் சென்றான். பிறகு அனைவரும் ஊர் திரும்பினர். சில நாள்களுக்குப் பிறகு கலா-வீரபத்திரன் விவாகம் இனிதாக நடந்தது. கலா கணவன் வீடு சென்று தன் இல்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கினாள்.
ஆனால், அவளது மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. மணமாகி ஓராண்டு முடிந்தும் அவளுக்குக் குழந்தைப் பேறு உண்டாகாததால் அவளுடைய மாமியார் அவளை மிகவும் கடுமையான சொற்களால் வாட்டி வதைத்தாள். மாமனாரும் அவளுடைய உதவிக்கு வரவில்லை. கணவனும் அவளை உதாசீனம் செய்தான். இவ்வாறு, மூன்று ஆண்டுகள் கழிந்தன. வீரபத்திரனின் தூரத்து உறவினரான ராமநாதன் என்பவர் தன் பெண்ணை அவனுக்கு இரண்டாம் தாரமாகத் தர விரும்பினார். ஆகையால் அவர், சீதாராமன் என்ற சோதிடரை அணுகி, “நீ சிவராமன் வீட்டிற்குச் சென்று அவருடைய மருமகள் கலாவின் ஜாதகத்தைக் கேட்டு வாங்கு! அதை ஆராய்வது போல் பாசாங்கு செய்தபின் ஜாதகப்படி கலாவிற்குக் குழந்தையே பிறக்காது என்று அடித்துச் சொல்! என் பெண் சுபத்ராவை வீரபத்திரன் மணந்தால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்று சொல்! இதை நீ ஒழுங்காக செய்தால், உனக்கு நிறையப் பணம் தருவேன்!” என்று ஆசை காட்டினார்.

அவர் கூறியதுபோலவே சீதாராமன் வீரபத்திரனிடம் சென்று கூற, ஏற்கெனவே கலாவை விஷமாக வெறுத்த வீரபத்திரன் பெற்றோர் அவனுக்கு இரண்டாம் தாரமாக சுபத்ராவை மணம் முடிப்பதற்குத் தீர்மானித்தனர்.

விஷயமறிந்த கலாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கௌசிகனை அணுக, அவர் வீரபத்திரனின் வீட்டை அடைந்தார். கலாவின் ஜாதகப்படி அவளுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு என்று கூறினார். தொடர்ந்து “அது தாமதமானதற்குக் காரணம் நீங்கள் இருவரும் புரிந்திருக்கும் பாவங்களே! ஆனால், கலாவிற்குக் குழந்தை பிறக்கும் நல்ல வேளை பிறந்து விட்டது” என்றார்.

உடனே சிவராமன் சோதிடர் சீதாராமனின் சோதிடக்கணிப்பை பற்றிக்கூற, கௌசிகன் உடனே சீதாராமனை வரவழைத்தார். அவர் வந்ததும் அவரை நோக்கி, “நாம் இருவரும் பந்தயம் கட்டுவோம். நான் கூறும் சோதிடம் கட்டாயம் பலிக்கும் என்கிறேன். இரண்டு மாதத்தில் அது பலிக்காவிட்டால் நான் தோல்வியை ஏற்பேன். ஆனால் கலா கருவுற்றால், உங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் வரச் செய்வேன்! சம்மதமா?” என்று சவால் விட, பயந்து போன சீதாராமன் ஊரை விட்டே ஓடிப்போனார்.

உடனே கௌசிகன் ராட்சசனை சந்தித்து, “உனக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. அந்த மகிமை வாய்ந்த பழத்தை இப்போது தா!” என்று கேட்க, அவனும் ஒரு பழத்தை மந்திரம் உச்சரித்துக் கொடுத்தான். கொடுத்த மறுகணமே அவன் கீழே விழுந்து உயிர் நீத்தான். அந்தப் பழத்தை எடுத்துக் கொண்டு வந்த கௌசிகன் கலாவிடம் அதைத் தந்து உண்ணச் சொன்னார்.

இரண்டே மாதத்தில் கருத்தரித்த கலா, ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! கலாவிற்கு திருமணம் நடந்தவுடனே மகிமைவாய்ந்த பழத்தை கௌசிகன் கொடுத்து இருந்தால் அவள் துன்பப்பட்டிருக்க மாட்டாள் இல்லையா? அவளை மட்டுமா தவிக்கவிட்டான்?

அந்த ராட்சசனையும் மூன்று ஆண்டுகள் காக்க வைத்தான். அவனை சந்தித்த போதே அந்தப் பழத்தை அவனிடம் இருந்து வாங்கிக் கொடுத்திருந்தால் கலாவும் உடனே கருத்தரித்திருப்பாள். ராட்சசனுக்கும் சாப விமோசனம் கிட்டியிருக்கும். கௌசிகனின் இந்த தாமதத்திற்குக் காரணம் தெரிந்தும் நீ மௌமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

அதற்கு விக்கிரமன், “கௌசிகன் சோதிடர் மட்டுமே! கடவுள் அல்ல! அவனால் விதியைப் பற்றிக் கூற முடியுமே தவிர விதியை மாற்ற முடியாது. ஒருவருடைய ஜாதக ராசிப்படி, சில நல்ல காரியங்கள் குறிப்பிட்ட நல்ல காலம் வரும் போதுதான் நடக்கும். கலாவின் ஜாதகப்படி அவளுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்படும் என்றும், இறுதியில் எல்லாம் சுபமாக முடியும் என்று முன்னமே கௌசிகன் கணித்துக் கூறினான்.

அவளுடைய ஜாதகப்படி அவளுக்கு மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் குழந்தை பிறக்கும் என்றிருந்தால், அதை கௌசிகனால் மாற்றியமைக்க முடியாது. எனவே, அவன் உரிய நல்ல காலம் வரும் வரைக் காத்திருந்து, பிறகே பழத்தை அவளுக்கு அளித்தான். அதேபோல், ராட்சசனுக்கும் அவன் விதிப்படி மூன்று ஆண்டுகள் மேலும் காக்க நேரிட்டது.

ஆகவே கௌசிகன் தாமதம் செய்தான் என்பது தவறு. அவன் நல்ல வேளை கூடி வரும் வரை காத்திருந்தான் என்பதே சரி” என்றான். விக்கிரமனது இந்த சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

#அட்மின்

தன்னுடைய குடும்பத்தை, தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு 3 தந்திர குறிப்புகள்!

நம்முடைய குடும்பத்தில் இன்று அதிகப்படியான பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்க ஒரு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்? முதலில் விட்டுக் கொடுக்காமல் இருப்பது. ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைகள் வராது. இது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இருந்தாலும் ஏனோ, இன்று எல்லோர் மனதிலும் ‘ஈகோ’ ஆணிவேராக பதிந்துவிட்டது. விட்டுக் கொடுப்பதற்கு மனம் வரவில்லை. என்ன தான் செய்வது? சரி. எது எப்படியாக இருந்தாலும், நம்முடைய அம்மாக்கள் அவர்களுடைய மாமியார் இடத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்? அந்த காலத்தில் இருந்த மாமியார்கள், அவர்களுடைய புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொண்டார்கள்! இவைகளை எல்லாம் வைத்து ஆராய்ந்து மூன்று குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த மூன்று குறிப்புகளை பின்பற்றும் குடும்பத்தலைவிகள் கட்டாயம் அவரவர் குடும்பத்தை, அவரவர் வசம் வைத்துக் கொள்ளலாம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. - Advertisement - இந்த காலத்து குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களே! இந்த பதிவை முழுமையாக படிப்பதற்கு முன்பு ஒரு விஷயத்தை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்குப் பிறகு இந்த 3 விஷயங்களை பெண்கள் கடைபிடிப்பது மிக மிக மிக கஷ்டம்தான். ஆயிரம் மடங்கு கஷ்டமான விஷயம். எல்லா வகையான கோபதாபங்களையும் கட்டுப்படுத்திக்கொண்டு, இதை நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாக எடுத்துக் கொண்டோமேயானால், வாழ்க்கையை சுலபமாக வாழ்ந்து விடலாம். எல்லாருக்கும் இது தெரிந்திருக்க கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இவைகளை எல்லாம் தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றுகிறார்களா என்ற சந்தேகம் மட்டும் தான். அது என்ன, அந்த மூன்று தந்திர சூட்சமம்? நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா? முதலில், கணவர் சம்பாதித்து வந்த, அந்த குறிப்பிட்ட தொகையை மனைவி கையில் தான் கொடுக்க வேண்டும். இதுதான் நம்முடைய பாரம்பரிய பழக்கமும் கூட. அந்த காலத்திலெல்லாம் பெண்கள் வெளியில் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தாலும், குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு என்பது பெண்கள் கையில்தான் இருந்தது. இந்த காலத்தில் ஆண்கள் பெண்கள் இடத்தில் சம்பளத்தை கொடுக்கிறார்களா என்பது தெரியவில்லை. இருந்தாலும், உங்கள் கையில், உங்களுடைய கணவர் அவருடைய சம்பளத்தை கொண்டு வந்து கொடுக்கும் போது, அந்த சம்பளம் குடும்பத் தேவைகளுக்கு குறைவாக இருந்தாலும், அதை சந்தோஷமாக பெற்றுக் கொள்ள வேண்டும். ‘இதை வைத்துக்கொண்டு எப்படி குடும்பம் நடத்துவது? இது பத்தாது! இந்த மாதம் எவ்வளவு செலவு காத்திருக்கிறது! இந்த மாதம் இந்த செலவு உள்ளது! அந்த செலவு உள்ளது!’ இப்படி கேள்வியை நீங்கள் எழுப்பினால், உங்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். அவ்வளவுதான்! இந்த பேச்சுக்கு இடமே இருக்கக் கூடாது. - Advertisement - உங்கள் கையில் வந்த வருமானத்தில் உங்களது குடும்பத்தை எப்படி சிக்கனமாக நடத்தமுடியும் என்ற பட்ஜெட்டை போட்டு விட்டு, அதிலிருந்து எவ்வளவு மிச்சம் பிடித்து எடுத்து வைக்கலாம் என்பதை தான் நீங்கள் யோசிக்க வேண்டும். இந்த ஒரு நம்பிக்கையை, நீங்கள் உங்கள் கணவருக்கு கொடுத்தால் உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் இடையில் பொருளாதார பிரச்சனை என்ற ஒன்று வரவே வராது. பிரச்சனையில் பாதி முடிந்ததா?. இரண்டாவதாக, சாஸ்திர சம்பிரதாயங்கள் என்றாலே அது பெண்களுக்குத் தானா! காலையில் எந்திரிக்க வேண்டும் என்றாலும் பெண்தான் எந்திரிக்க வேண்டும். இரவில் தூங்க செல்லும் போது நாங்கள்தான் கடைசியில் தூங்கச் செல்ல வேண்டும். கட்டுப்பாடுகள் எல்லாம் பெண்களுக்கு மட்டுமே! ஆண்களுக்கு இல்லையா? என்ற இந்த விதண்டாவாத கேள்வியை எந்த ஒரு பெண்ணும் வீட்டில் கேட்கக்கூடாது, என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மனதில் எண்ணமே வரக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளும், பொறுப்புகளும் அவர்களை அடக்குவதற்காகவோ, அவர்களை இழிவு படுத்துவதற்காகவோ கிடையாது. அவர்களுடைய பொறுப்புகளை அதிகப்படுத்துவதற்காக மட்டும்தான்! என்பதை முதலில் நாம் மனதில் விதைக்க வேண்டும். பெண்கள் தலையில் சுமக்கும் பொறுப்புகள் ஏராளம் இருக்குது! பொறுப்புகளை சுமக்க கூடிய தகுதி பெண்களுக்கு உண்டு. அவ்வளவுதான். இது நம் தலைக்கு கிரீடம் மாதிரி! மூன்றாவதாக நாம் வாழப்போகும் கணவர் வீட்டு உறவுகளை மதிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் புகுந்த வீட்டு உறவுக்கு ஒரு மரியாதையும், பிறந்த வீட்டு உறவுக்கு ஒரு மரியாதையையும் கொடுக்கக்கூடாது. வீட்டில் இருக்கும் ஒரு பெண் தன் கணவரது உறவுகளை ஆதரித்தால், சுலபமாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடலாம். இதெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமாகுமா? என்று நீங்கள் மனதுக்குள் கேட்கும் கேள்வி, எனக்கு காதில் விழுகிறது. பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கடமைகள் இதுதான். இதை அறிந்து செயல்படுபவர்கள், வாழ்க்கையில் ஜெயித்து உள்ளார்கள். இவையெல்லாம் பெண்களுக்கு உருவாக்கப்பட்ட அநீதி என்று தலைகனத்தோடு செயல்பட்டவர்கள் உடைய வாழ்க்கை, கேள்விக்குறியாகி இருப்பதை நீங்கள் கூட பார்த்திருக்கலாம். பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய மேற்குறிப்பிட்ட மூன்று விஷயங்களை தன்னுடைய வீட்டில் செயல்படுத்தினால் போதும். உங்கள் வாழ்க்கை சொர்க்கம் ஆகும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் 15 நாட்களில் தீர்த்து வைக்கக் கூடிய சக்தி இந்த இலைக்கு உண்டு. அது எந்த இலை என்று நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா?



தீர்க்கமுடியாத பிரச்சினைகள் என்று சொன்னால், அதில் பல வகையான பிரச்சனைகள் அடங்கும். கடன் பிரச்சனை, வருமானத்தில் பிரச்சனை, உடல்நல கோளாறு, திருமணம் தள்ளிப் போவது, கல்வியில் தடை, சொந்தத் தொழிலில் பிரச்சனை, அலுவலகத்தில் பிரச்சனை, இப்படி பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த காலங்களில் எல்லாம் நம்முடைய முன்னோர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மூலிகைகளையும், தாவரங்களையும் தான் பயன்படுத்தி வந்தார்கள். அப்படி நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட ஒரு குறிப்பை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய பிரச்சனைகள் தீர்வதற்காக நாம் பயன்படுத்தப்போகும் அந்த செடியின் பெயர் ‘நாராயண சுள்ளி’ செடி. இந்தச் செடி பல பேருக்கு தெரிந்திருக்கும். பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாராயணரின் அம்சத்தை பெற்றிருக்கும் செடிதான் இந்த நாராயண சுள்ளி செடி. இந்த செடியின் இலையை வைத்துதான், முறையான பரிகாரத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். - Advertisement - அந்த பரிகாரத்தை முறையாக எப்படி செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு காணலாம். முதலில் இந்த நாராயண சுள்ளி செடி எங்கு இருக்கிறது என்பதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். உங்களது வீட்டு அருகில் இல்லை என்றால், நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்தோ அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ ஒரு செடியை வாங்கி உங்களது வீட்டிலேயே தொட்டியில் வளர்த்து வரலாம். உங்களது வீட்டு அருகில் இந்த செடி இருந்தால், தினம்தோறும் நீங்கள் அந்த இடத்திற்குச் சென்று கூட இலையை பறித்து வரலாம். தவறில்லை. முதலில் சூரிய உதயமாகும் காலைவேளையில் 6 மணிக்கு இந்த செடியின் முன்பாக நீங்கள் அமர்ந்து, மனதார உங்களது வேண்டுதலை சொல்லி, அந்த செடியிலிருந்து ஒரு இலையைப் பறித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களது பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றிவைத்து, ஒரு தாம்பூலத் தட்டில் இந்த இலையை மஞ்சள் தண்ணீரால் கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். - Advertisement - அடுத்ததாக, ஒரு பேனாவை எடுத்து அந்த இலையில் உங்களது ஏதாவது ஒரு வேண்டுகோளை, அதாவது நிறைவேறக் கூடிய ஒரு குறிக்கோளை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, அந்த குறிக்கோளை அந்த இலையில் ஒரு முறை எழுதுங்கள். (சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்றெல்லாம் விதாண்டா வாதமாக எழுதக்கூடாது. குறிக்கோள் உண்மையாக இருக்கவேண்டும்). கடன் தீர வேண்டும் என்றால் ‘கடன் பிரச்சனை தீர வேண்டும்’ என்று எழுதிக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் பணம் பிரச்சனையாக இருக்கிறது என்றால், ‘வீட்டிலிருக்கும் பணப்பிரச்சனை தீர வேண்டும்’ என்று எழுதிக் கொள்ள வேண்டும். இவ்வாறு உங்களுடைய பிரச்சனையை ஒரு வரியில் அந்த இலையில் எழுதி அந்த தாம்புல தட்டில் வைத்து விடுங்கள். அதன்பின்பு விநாயகரின் மந்திரத்தை 11 முறை அந்த தீபத்தை பார்த்து உச்சரிக்க வேண்டும். அடுத்ததாக உங்களது குலதெய்வத்தின் மந்திரத்தை 11 முறை உச்சரியுங்கள். விநாயகர் மந்திரம் என்றால், ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’. உங்களது குலதெய்வம் முருகப் பெருமானாக இருந்தால் ‘ஓம் முருகப் பெருமானே போற்றி!’ என்று உச்சரித்தால் மட்டும் போதும். ஆனால் இரண்டு மந்திரங்களையும் 11 முறை உச்சரிக்க வேண்டியது அவசியம். இந்த பரிகாரத்தை 15 நாட்கள் மேற்சொல்லப்பட்ட முறைப்படி செய்ய வேண்டும். பதினைந்து நாட்களும் ஒரே கோரிக்கைதான் இலையில் எழுதப்படவேண்டும். பதினைந்தாவது நாள் நீங்கள் எழுதி வைத்திருக்கும் இலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து சுருட்டி, பூ கட்டுவது போல் கட்டி, உங்கள் வீட்டு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று அந்த கோவிலில் இருக்கும் மரத்தில் மாட்டி விடுங்கள். நீங்கள் அந்த இலையில் எழுதி வைத்திருக்கும், அந்த பிரச்சனைக்கான தீர்வு கூடிய விரைவில் உங்களை வந்து சேரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த காலம் தொட்டே நம் முன்னோர்களால் பின்பற்றி வரப்பட்ட பரிகாரம் இது. நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பார்க்கலாம்.

Saturday, April 25, 2020

ஆதிசங்கரர் ஒரு பிராமணரின் வீட்டுக்குச்

ஒருநாள் ஆதிசங்கரர் ஒரு பிராமணரின் வீட்டுக்குச் சென்று பிக்ஷை கேட்டார். அந்த பிராமணரோ வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர். ஆதிசங்கரர் அந்த வீட்டுக்குச் சென்றபோது பிராமணர் வெளியில் சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவி மட்டும் இருந்தாள். வாசலில் வந்து பிக்ஷை கேட்ட பாலக சங்கரனைப் பார்த்தபோது, சாட்சாத் சிவபெருமானே பாலகன் வடிவில் வந்து பிக்ஷை கேட்பது போல் தோன்றியது. பால்வடியும் முகத்துடன் நின்றிருந்த சங்கரனுக்கு பிக்ஷையிட எதுவும் இல்லையே என்ற தவிப்புடன் அவள் வீடு முழுவதும் தேடிப் பார்த்தாள். அவளுடைய கண்களில் ஒரு தட்டில் உலர்ந்த நெல்லிக்கனி இருப்பது தென்பட்டது.
பிக்ஷையிடத் தகுதியில்லாத பொருளாக இருந்தாலும், அன்பின் மிகுதியால் அந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து பாலக சங்கரனின் தட்டில் போட்டாள். தன்னுடைய நிலையை நினைத்து வேதனையில் துடித்தாள்.

அந்தப் பெண்மணியின் அன்பில் மகிழ்ந்த சங்கரர், அந்தப் பெண்மணியின் வறுமை தீரவேண்டி, மகாலக்ஷ்மியை பிரார்த்தித்து ஸ்லோகங்களைப் பாடினார். அந்த ஸ்லோகங்களே 'கனகதாரா ஸ்தோத்திரம்' ஆகும்.

சங்கரரின் பிரார்த்தனைக்கு இரங்கிய மகாலக்ஷ்மி அவருக்கு தரிசனம் கொடுத்தாள். மகாலக்ஷ்மியை நமஸ்கரித்த சங்கரர், தமக்கு நெல்லிக்கனியை பிக்ஷையிட்ட பெண்மணியின் வறுமை நீங்கச் செய்யவேண்டும் என்று வேண்டினார்.

வறுமை நிலையில் இருப்பவர்கள் தினசரியோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால், வறுமை நீங்கி செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்.

அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் செய்யலாம்!?○




அட்சய’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள்.ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை , 'அட்சயதிரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.

இந்த அட்சயதிரிதியை நாளன்று தங்கம், வெள்ளி போன்ற பொன் பொருள் ஆபரணங்கள் வாங்கினால், செல்வம் பெருகும் என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால், அட்சய திரிதியை அன்று தர்ம சாஸ்திரங்கள் கூறும் வழியைப் பின்பற்றினால் நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல நல்ல பலன்களை அடையலாம். 'அட்சய
திரிதியை’ அன்று நாம் என்ன செய்யவேண்டும் எவ்வாறு இறைவனை வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

அட்சய திரிதியை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காக பெருகி, அழியாத பலன்களைப் பெற்றுத் தரும். அட்சய திரிதியை அன்று நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்கள். கோயிலுக்குச் செல்லுதல், புனித நீராடுதல், பித்ரு காரியம், இறைவனை வழிபடுதல், நாம ஸ்மரணை மற்றும் எளியவர்களுக்கு இயன்ற அளவுக்கு தானம் செய்தல்.

■அட்சயதிரிதியை சிறப்புகள் :

□பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில்தான்.

□பிரளயம் முடிந்து, வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து, சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம்.

□திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதனால்தான், இன்றைய தினத்தில் லட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பர்.

□வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் தவம் இருந்து சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்ற தினம்.

□பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம். இன்றைய தினத்தில் லட்சுமி பூஜை, குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும். இயலாதவர்கள், "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:" என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர்.

□பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள், ஐராவதம், கல்பதரு, காமதேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர். இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை.

□பிட்சாடனரான ஈஸ்வரன், ஸ்ரீஅன்ன பூரணியிடம் பிட்சை பெற்றது இந்த நாளில்தான்.

□கௌரவ சபையில் திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் துகில் தந்து அருளியது போன்ற புராணச் சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்தத் தினத்தில்தான்.

□பரசுராமர் அவதரித்ததும் அட்சய திரிதியையில்தான். இந்த நாளில் பரசுராமர் வழிபாடு நன்மை தரும்.

■அட்சய திரிதியை அன்று நாம் என்ன வாங்கலாம்?.

அன்றைய தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம். அது தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல. பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் நாம் வாங்கலாம். ஏனென்றால் இயற்கை தோன்றும்போது, முதலில் வந்தவை இவைதான்.

■என்னென்ன பொருட்களைத் தானம் தரலாம்?.

□ஒரே இடத்தில் செல்வம் குவிந்திருப்பதை இறைவன் விரும்புவதில்லை. இருக்கப்பட்டவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து இல்லாமை நீங்கப் படைக்கப்பட்ட நாள். ஒரு கையளவு நெல் பல மூட்டை அரிசியை உருவாக்க முடியும். அதே போல நாம் கொடுக்கும் சிறு தானமும் பல மடங்காகத் திரும்ப வரும்.

□வெப்பத்தைத் தணிக்கும் வகையில் உடுக்க உடை, குடை, பானகம், நீர் மோர், விசிறி போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம்.

□குறிப்பாகத் தண்ணீர் நிறைந்த குடம் கொடுத்தால் அழியாத செல்வம் பெறலாம்.

□நோயால் அவதிப்படுபவர்களுக்கு மருத்துவ உதவியும், கிழிந்த ஆடை அணிந்தவர்களுக்கு நல்ல ஆடையையும் அளிக்கலாம்.

□தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும்.

□இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும்.

□அரிசி, கோதுமை முதலான உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள்- அகால மரணம் போன்றவை சம்பவிக்காது.

□அட்சய திரிதியை அன்று அன்னதானம் செய்வதால், இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிட்டும்; குடும்பத்தில் வறுமை நீங்கும். கால்நடைகளுக்குத் தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

■அட்சய திரிதியையும் பித்ருக்கள் காரியமும்...

இன்றைய நாளில் பித்ருக்கள் காரியம் மிகுந்த சிறப்பான ஒன்றாகும். தவிர, அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்த பின், பசுக்களுக்கு வாழைப்பழம் கொடுப்பது சிறப்பு. அட்சய திரிதியை நாளில் இறைவனுக்குப் படைத்து உண்ணும் பிரசாதம் மிகச் சிறந்ததாகும்.

கிராமத்தில் இருந்த வியாபாரி ஒருவன், அட்சய திரிதியை அன்று கங்கையில் நீராடி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, ஏழை மக்களுக்குத் தானியங்களை தானம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அடுத்தப் பிறவியில் ராஜ யோகம் பெற்றார். அரசனான பிறகும் அட்சய திரிதியையில் முற்பிறவியில் செய்த புண்ணிய காரியங்களைச் செய்ததால், வைகுண்டம் அடைந்தார். எனவே அமாவாசை அன்று திதி கொடுக்காதவர்கள் கூட அன்றைய தினத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

■அட்சய திருதியை நாளில் செய்யக்கூடிய காரியங்கள்.

□குழந்தைக்கு அன்னப் பிராசனம் சங்கீதம், கல்வி, கலைகள் பயில்வது.

□சீமந்தம், மாங்கல்யம் செய்ய, விவாகம், தொட்டிலில் குழந்தையை விட, கிரகப்பிரவேசம் செய்ய, காது குத்த உகந்த தினம்.

□நிலங்களில் எரு இட, விதை விதைக்க, கதிர் அறுக்க, தானியத்தைக் களஞ்சியத்தில் சேர்க்க, தானியம் உபயோகிக்க, கால்நடைகள் வாங்க போன்ற விவசாயப் பணிகளில் ஈடுபடலாம்.

□வாகனம் வாங்க, புதிய ஆடை அணிய, மருந்து உட்கொள்ள, பயணம் மேற்கொள்ளலாம்.

இந்தப் புண்ணிய நாளில் அழியாத செல்வமான பல புண்ணியங்களைச் சேகரியுங்கள். அதே நேரத்தில் அறிஞர்களையும் முன்னோர்களையும் மறந்துவிட வேண்டாம்.

ஐயபப்ப பக்தர்கள் ஐயப்பனின் 108 சரணக் கோவையை தினமும் துதித்து வர ஐயப்ப பெருமானின் அருள் ஆற்றல் கிடைக்கும்.


........ சுவாமி சரணம் ஐயப்பா...........
அந்த 108 சரணக் கோவை பின்வருமாறு:

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா

ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா

ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா
ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா

ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா

Also Read: மினி சபரிமலை பற்றி தெரியுமா? சபரிமலைக்கு போகமுடியாத பெண்கள் இங்கே போலாமாம்...

ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா

ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா
ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

ராம_ராம_ஓடமும்_பாடமும்



சில விஷயங்கள் பாரதத்தில் தேடும்போது கிடைக்காது. பாகவதத்தில் கண்ணில் படும். ராமாயண விஷயம் பாகவத்தில் அறியும்போது அட இது எப்படி ராமாயணத்தில் படிக்கவில்லை என்று ஆச்சர்யப்பட வைக்கும்.

அதற்கு எல்லாம் காரணம் காரியம் அவசியமில்லை. அதில் உள்ளடங்கிய நீதி அல்லவோ முக்கியம். ராமனை ஊரே, உலகமே அறியும் எனும்படி அவன் மஹிமை, பெருமை எங்கும் பரவி இருந்தது. ராமன் காட்டிற்கு போக உத்தரவு. சீதை லக்ஷ்மணன் அவன் கூட செல்கிறார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்ல வேண்டும்.

அப்போது தான் முதன் முதலாக குகன் ராமனை பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவனுக்கு தெரியும். நாட்டை இழந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த ராமனை காணமுடியாமல் கண்களில் கண்ணீர்த்திரை. ''என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா?'' என பக்தியோடு கேட்கிறான்.

''கங்கையை கடந்து அக்கரை செல்ல வேண்டும் குஹா.'' அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டு விட்டு புறப்பட தயாராகியது. கேவத் என்பவன் ஓடக்காரன். குகன் அவனை அணுகி ''கேவத் உன் படகை இங்கே கொண்டுவா '' என படகு நெருங்கி வருகிறது.

'கேவத், இதோ நிற்கிறார்களே யார் தெரியுமா அயோத்தி மஹாராஜா, ராமர், அது சீதாதேவி ராணி, அவர் மனைவி, அது லக்ஷ்மணன் அவருடைய வீர சகோதரன்.இவர்களை அக்கரை கொண்டு சேர்'' கேவத் ராமலக்ஷ்மணர்களை சீதாவை வணங்குகிறான்.

அவன் தினமும் காலையில் எழுந்திருக்கும் போதும் இரவில் பாட்டுக்கு முன்பும் ராம நாமம் சொல்பவன். '' ஐயா குகனே, நான் இவர்களை கங்கையின் மறுகரை கொண்டு சேர்க்கிறேன். ஆனால் முதலில் இந்த ராமரின் கால்களை நன்றாக கழுவிவிடவேண்டுமே . தூசு தும்பு இருக்கக்கூடாது ''

' ஓ அவருக்கு பாத பூஜையா, அதை அப்புறம் மறுகரையில் இறக்கி விடும்போது வைத்துக் கொள் ''- குகன்.

''அப்படி இல்லை ஐயா, என் படகில் ஏறுவதற்கு முன்னால் தான் அதை செய்யவேண்டும்.'' குகனின் கண்கள் கோபத்தால் சிவந்தது. என்ன பிடிவாதம் இந்த கேவத்துக்கு.

கேவத் இதை கவனித்துவிட்டு நேராக ராமனை வணங்கி சொல்கிறான். ''மஹாராஜா, நான் ஒரு ஏழை ஓடக்காரன். இந்த பழைய சிறிய ஓடம் தான் எனக்கு ஜீவனோபாயம். இதில் கிடைக்கும் சிறிய வருமானம் என் மனைவியையும் என்னையும் வாழ வைக்கிறது. என்னிடம் வேறு படகு கிடையாது,இன்னொன்று வாங்க வசதியும் இல்லை ''

''எதற்கு இப்படி பேசுகிறாயப்பா '' - ராமர்.

''எனக்கு உங்களை பற்றி தெரியுமய்யா. உங்கள் காலில் உள்ள தூசி பட்டால் போதும் கல்லும் கூட பெண்ணாகும். உங்கள் கால் தூசி பட்டு என் படகும் ஒரு பெண்ணானால் நான் அவளை எப்படி காப்பாற்றுவேன், என் படகு காணாமல் போய்விடுமே!''

அந்த ஆபத்து என் படகுக்கு வரக்கூடாது என்பதற்காகவே நீங்கள் என் படகில் கால் வைக்கும் முன்பே, உங்கள் கால்களை தூசி, இல்லாமல் முதலில் கழுவ ஆசைப்பட்டேன். கேட்டுக்கொண்டேன். என்னையும் என் படகையும் நீங்கள் தான் ரக்ஷிக்க வேண்டும் '

ராமர், சீதை லக்ஷ்மணன் குகன் அனைவரும் கேவத்தின் எளிமை,பக்தி சமயோசிதம் ஆகியவற்றை ரசித்து மனமார மகிழ்கிறார்கள். கேவத் அவன் மனைவி இருவரும் கங்கை ஜலத்தால் ஸ்ரீ ராமரின் பாதங்களை கழுவி வணங்கி அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்கிறார்கள்.

கேவத் தனது வஸ்த்ரத்தால் ஸ்ரீ ராமர் பாதங்களை துளியும் தூசி இல்லாமல் துடைக்கிறான். அவர்களை கங்கை நதியின் மறுகரையில் கொண்டு சேர்க்கிறான். அவர்கள் மறுகரை சேர்ந்ததும், ராமர் பாதங்களை தனது உள்ளங்கையில் முதலில் வைத்து விட்டு இறங்கவேண்டும் சொல்கிறான்.

இவ்வாறு ஸ்ரீ ராம பாத சேவை முழுதும் பெறுகிறான் கேவத். . கையைப் பிடித்து எல்லோரையும் படகில் இருந்து கரை இறக்குகிறான் கேவத். சீதா தேவி மன நிறைவோடு தனது மோதிரம் ஒன்றை கழற்றி ராமனிடம் தருகிறாள் ''இதை அவருக்கு பரிசாக கொடுங்கள் '' என்கிறார்.

''அம்மா ஸ்ரீ ராமனுக்கும் உங்களுக்கும் சேவை செய்ய பரிசு வாங்கினால் என் புண்யம் குறைந்து விடும் '' என பரிசை ஏற்க மறுக்கிறான்.

''ஓ அப்படியா, கேவத், நீ இதை பரிசாக ஏற்கவேண்டாம் எங்களை படகில் ஏற்றி கங்கையை கடக்க செய்ததற்கு கூலியாக ஏற்றுக்கொள் '' என சிரித்துக் கொண்டே அந்த மோதிரத்தை அவனிடம் நீட்டுகிறார் ஸ்ரீ ராமன்.

''ஸ்ரீ ராமா, ஒருவேளை நான் பரிசாகவாவது ஏற்றுக்கொண்டிருப்பேன். நிச்சயம் கூலி வாங்க மாட்டேன் ஐயா ''

''என்னப்பா கேவத் நீ பேசுவதோ விநோதமாகவே இருக்கிறதே. ஏன் என்னிடம் கூலி வாங்கமாட்டாய்?''- ராமர்

''எதற்கு ?''

''தொழில் விசுவாசம் ஐயா''

''அப்பா கேவத் கொஞ்சம் புரியும்படியாக சொல்லேன்'' ''ஒரு நாவிதன் மற்றொரு நாவிதனுக்கு சேவை செய்யும்போது கூலி வாங்கமாட்டான். துணி வெளுப்பவன் அப்படித்தான்.

''புரியவில்லை. விளக்கமாக சொல். நீ துணி வெளுப்பவனோ, நாவிதநோ எனக்கு அவ்வாறு சேவை செய்யவில்லையே. நீ படகோட்டிதானே'' என்கிறார் ராமர்.

''உங்களுக்கா புரியாது.. என்னை சோதிக்கிறீர்கள்.

நாம் இருவருமே ஓடக்காரர்கள். படகோட்டிகள்.

நான் ஒரு கரையிலிருந்து இந்த நீரை மட்டும் கடக்க உதவும் ஓடக்காரன். நீங்களோ எல்லோரையும் ஜனன மரண துன்பங்களிலிருந்து இந்த ஸம்ஸார கடலிலிருந்து கரை சேர்க்கும் தாரக ராமன்.

நாம் இருவரும் படகோட்டிகள் தானே.

நான் சின்ன படகோட்டி. நீங்கள் பெரிய பெரிய படகோட்டி. தொழில் ஒன்றுதானே பகவானே. என்னையும் ஒருநாள் இந்த சம்சார சாகரத்தை கடக்க உதவி செய்து உங்கள் கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள்'' என்று ராமர் காலில் விழுந்து வணங்குகிறான் கேவத்.

ராமர் கண்களின் ஓரத்தில் நீர் கசிகிறது. ஆனந்த பாஷ்பம். என்ன ஒரு அருமையான பக்தன் இவன். பாவத்தோடு நம் பாவம் தீர ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் ஸ்லோகம் பாடுகிறார் காதில் விழுகிறதா?

புனரபி ஜனனம் புனரபி மரணம்.

புனரபி ஜனனி ஜடரே சயனம்.

இஹ சம்சாரி, பஹு துஸ்தாரே ,

க்ரிப்பாயா பாரே பாஹி முராரே.....

நண்பர்களே'

பகவானிடம் எனக்கு சொத்து கொடு, சுகம் கொடு, வீடு,கார் கொடு, பங்களா கொடு என்று கேட்காதீர்கள். மஹா பெரிய தனவந்தனிடம், வள்ளலிடம் ஒரு ரூபாய் காசா எதிர்பார்ப்பது?

நமது துன்பங்களை போக்கி மாய உலகத்தை நீங்கி அவன் திருவடி தர காத்திருக்கிறான். கேவத் சொல்லிக்கொடுக்கிறான் ஒரு படிக்காத ஓடக்காரனிடம் பாடம் படிப்போம்.

சிவாயநம..

Friday, April 24, 2020

சாயி_சத்சரித_பாராயணம்

8

சீரடி சாய்பாபா வாழ்ந்த போது, அவரை நேரில் பார்த்து ஆசி பெறும் பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை. அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் “சாய்சத் சரிதம்” நூலை பாராயணம் செய்தாலே பாபாவின் நேரடி அருள் நமக்குக் கிடைக்கும்.

யார் ஒருவர் ஸ்ரீசாய் சத்சரிதத்தை ஆத்மார்த்தமாக மனதுக்குள் உள்வாங்கிப் படிக்கிறாரோ, அவரது ஆத்மா பலம் பெறும். பாபாவுடனே வாழ்வது போன்ற நிலைக்கு அது அவரை உயர்த்தும்.

ஸ்ரீசாய் சத்சரிதத்தை ஓரிரு நாட்களில் படிக்க கூடாது. அவசரம், அவசரமாகவும் படிக்கக்கூடாது. நிதானமாக 7 நாட்களுக்கு படித்து முடிக்க வேண்டும். அது பாபா மூலம் நிறைவான பலன்களைத் தரும்.

ஏதாவது ஒரு வியாழக்கிழமை பாபாவை வழிபட்டு ஸ்ரீசாய் சத்சரிதத்தை வாசிக்கத் தொடங்குங்கள். அடுத்த புதன்கிழமை வரை 7 நாட்களில் படித்து முடித்து விடலாம். 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாயங்கள் விபரம் வருமாறு:-

முதல் நாள் அத்தியாயம் 1 முதல் 7 வரை
இரண்டாம் நாள் அத்தியாயம் 8 முதல் 15 வரை
மூன்றாம் நாள் அத்தியாயம் 16 முதல் 22 வரை
நான்காம் நாள் அத்தியாயம் 23 முதல் 30 வரை
ஐந்தாம் நாள் அத்தியாயம் 31 முதல் 37 வரை
ஆறாம் நாள் அத்தியாயம் 38 முதல் 44 வரை
ஏழாம் நாள் அத்தியாயம் 45 முதல் முடியும் வரை
வரும் வியாழன் முதல்ஸ்ரீசாய் சத்சரிதம் படிக்கத் தொடங்குங்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் வாழ்வில் நிறைய அற்புதங்கள், மாற்றங்கள் ஏற்படுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

உங்கள் வீட்டு சமையலறையில், அரிசியை எக்காரணத்தைக் கொண்டும் இப்படி எடுக்கவே கூடாது. உண்ணும் உணவிற்கே கஷ்டம் வந்துவிடும்.


ஒரு வீட்டிற்கு வாஸ்து என்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு நம் வீட்டில் குறிப்பிட்ட சில பொருட்களை அந்தந்த இடத்தில் முறையாக வைப்பதும் அவசியம். முக்கியமான சில பொருட்களை சரியான இடத்தில் வைத்து விட்டாலே பிரச்சனையில் பாதி முடிந்து விடும். அந்த வரிசையில் சமையலறையில் அரிசியை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றியும், அந்த அரிசியை தினம்தோறும் சமைப்பதற்காக எப்படி எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பேர் வீட்டில் அரிசியை மூட்டையாக வாங்கி வைப்பார்கள். சில பேர் வீட்டில் மூட்டையில் இருக்கும் அரிசியை ட்ரம்மில் கொட்டியும் வைத்து உபயோகப்படுத்துவார்கள். சிலபேர் அரிசி மூட்டையை சமையலறையில் வைக்காமல், பொருட்களை சேகரித்து வைக்கும் ஸ்டோர் ரூமில் வைத்திருப்பார்கள். சில பேர் அரிசியை அலமாரிகளில் வைத்திருப்பார்கள். இதில் உங்கள் வீட்டில் எந்த இடத்தில் அரிசியை வைத்திருந்தாலும், தரைப்பகுதியில் தான் அந்த அரிசியை வைக்க வேண்டும். உயரமான இடத்தில் வைக்கக்கூடாது. கையை தூக்கி, உயரத்தில் இருந்து அரிசியை எப்போதுமே எடுக்கக்கூடாது. - Advertisement - குறிப்பிட்டு சொல்லப்போனால் தினம்தோறும் சமையலுக்குப் பயன்படுத்தும் அரிசியை சின்ன டப்பாவில் போட்டு, சமையல் அடுப்பு திண்ணைக்கு கீழே வைத்துக் கொள்வது நல்ல பலனை தரும். அதாவது அண்ண லட்சுமியை, நாம் ஒவ்வொரு முறை எடுக்கும்போதும் தலைவணங்கி, தலைகுனிந்து நமஸ்காரம் செய்து எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், நம் முன்னோர்கள் அரிசி மூட்டையை அடுப்புக்கு கீழ் உள்ள இடத்தில் வைத்து வந்தார்கள். ஒவ்வொரு முறையும் குனிந்து அரிசியை எடுப்பது நமஸ்காரம் செய்வதற்கு சமம். ஸ்மார்ட் கிச்சன், ஷெல்ஃப், ரேக் என்று நம்முடைய நாகரீகம் வளர வளர சிலபேர் இந்த அரிசி வைக்கும் இடத்தையும் மாற்றிவிட்டார்கள். எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் தலைக்கு மேல் உள்ள அலமாரியில் அரிசியை வைக்கவே கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த காலத்தில் எல்லாம் ‘குதிர்’ என்று அரிசி சேமிக்கும் பானையில் அரிசியை கொட்டி வைத்திருப்பார்கள். உயரமான அந்தப் குதிரிலும், கீழ் பக்கத்தில்தான் கதவு இருக்கும். குனிந்து அந்தக் கதவைத் திறந்தால், அதனுள்ளே கையை விட்டு அரிசியை எடுத்துக் கொள்ளலாம். - Advertisement - அரிசியை வைப்பதற்கு என்றும், எடுப்பதற்கு என்றும் இருக்கும் முறையை முடிந்தவரை கடைபிடிக்க பாருங்கள்! வீட்டில் தன தானியத்திற்கு எந்த ஒரு பஞ்சமும் ஏற்படாது என்ற தைரியத்தோடு நாம் வாழ்க்கையை நடத்தலாம். அடுத்ததாக சிலரது வீட்டில் அரிசியை அளப்பதற்கு டம்ளர் வைத்திருப்பார்கள். முடிந்தவரை ஆழாக்கு என்று சொல்லப்படும் ஒரு பொருளை, அரிசி அளக்க பயன்படுத்துவது மிகவும் நல்லது. அந்த ஆழாக்கில் எப்போதுமே 4 அரிசி இருக்க வேண்டும். காலியாக வைக்க கூடாது. அந்த ஆழாக்கு எப்போதுமே அரிசி மூட்டையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஆழாக்காக இருந்தாலும் சரி. மரைக்கா என்று சொல்லப்படும் படியாக, இருந்தாலும் சரி. ஏதாவது ஒன்று அரிசியை அளப்பதற்கு மூட்டையிலோ அல்லது ட்ரமிலோ கட்டாயம் இருக்க வேண்டும் என்பதையும் மறக்க வேண்டாம். அரிசியை அளக்காமல் எடுத்து, உலை பானையில் போடவே கூடாது. யார் சொல்லி யார்தான் கேட்பது? கணவன் சொல்ல, மனைவி கேட்பதில்லை. மனைவி சொல்வதை கணவன் கேட்பதில்லை. மாமியார் சொல்லி மருமகள் கேட்பதில்லை. மருமகள் சொல்வதை மாமியார் கேட்பதில்லை. இப்படி, ஒருவர் சொல்லை, ஒருவர் ஏன் கேட்க வேண்டும்? எதற்கு கேட்க வேண்டும்? என்று விதண்டாவாதம் பேசிப்பேசியே, எதையுமே நம் காதுகளில் கேட்காமல் விட்டு விட்டோமோ எண்ணமோ? இன்று நம்முடைய நிலைமை மாறி, சூழ்நிலை மாறி, சந்தோஷம் மாறி, கஷ்டத்தில் தள்ளப்பட்டு இருக்கின்றோம். இனிமேலாவது முன்னோர்கள் சொல்லும் பழக்கத்தை கேட்டு நடந்து தான் பார்ப்போமே!

திருநீறை இப்படி கொடுக்கக் கூடாது! இப்படி வாங்கவும் கூடாது! மகா பாவத்தை சேர்த்துவிடும்.


சைவ சமயத்தின் அடையாளச் சின்னமாக இருப்பது திருநீறு என்று சொல்லப்படும் விபூதி. இந்த திருநீற்றை எப்படி முறையாக அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும், பெறுபவர்கள் அதை முறையாக எப்படிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், சைவம் வைணவம் என்ற பேதமை பார்க்கும் பழக்கம் எல்லாம் சில மனிதர்களுக்கு தான் இருக்கிறது. இந்த பேதம் எல்லாம் கடவுள்களுக்கு இல்லை என்பதையும் உணர்த்துவதற்காக தான் இந்த பதிவு. திருநீற்றை அடுத்தவர்களுக்கு கொடுக்கும்போது, ரிஷப முத்திரையை நம் கையில் வைத்துக் கொண்டு தான் கொடுக்க வேண்டும். அதாவது கட்டைவிரல் நடுவிரல் மோதிரவிரல் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து கொண்டு, சுண்டு விரலையும், ஆள் காட்டி விரலையும் தவிர்த்துவிட்டு வைப்பதுதான் ரிஷப முத்திரை. கீழே கொடுக்கப்பட்டுள்ளன படத்தில் இருக்கும் சின்னத்தை கையில் வைத்து, குறிப்பிட்ட அந்த மூன்று விரலையும் சேர்த்து, திருநீற்றை எடுத்து கொடுப்பது தான் சரியான முறை. இதை விடுத்து ஐந்து விரல்களில் மொத்தமாக எடுத்துக் கொடுத்தால் அது திருநீறு அல்ல. அதற்குப் பெயர் சாம்பல் என்பதை குறிக்கும். இந்த ரிஷப முத்திரையை நம் கையில் வைக்கும்போது ஒரு உருவம் தெரியும். குறிப்பிட்டு சொல்லப்போனால் நிழலில் பார்த்தால் இன்னும் அந்த உருவம் நமக்கு நன்றாகப் புலப்படும். அதாவது ஒரு மாடு வடிவம் இந்த முத்திரையில் மறைந்துள்ளது. நந்திதேவரின் கையாலேயே திருநீற்றைப் பெறுவதாக அர்த்தத்தை குறிப்பதுதான் இந்த ரிஷப முத்திரை. ஆகையால் நீங்கள் திருநீற்றை அடுத்தவர்களுக்கு கொடுப்பதாக இருந்தால், இனி ரிஷப முத்திரையில் கொடுக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக திருநீறை வாங்குபவர்கள் எப்போதுமே ஒரு கையை நீட்டி வாங்கக் கூடாது. வலது கையால் திருநீறு வாங்கும்போது, இடது கை கட்டாயம், வலது கைக்கு கீழே இருக்க வேண்டும். திருநீறு கொடுப்பவரது தலை மேலோங்கி இருக்கவேண்டும். திருநீறை வாங்குபவர் தலைகுனிந்து, பணிவோடு வாங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. - எக்காரணத்தைக் கொண்டும் வாங்கிய திருநீறில் ஒரு துளிகூட கீழே சிந்தக் கூடாது. திருநீற்றை நம்முடைய கால்கலால் மிதித்தால், நமக்கு பெரிய பாவம் வந்து சேர்ந்துவிடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் திருநீரை தினம்தோறும் நெற்றியில் வைத்துக் கொள்பவர்களுக்கு மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்ற ஒரு குறிப்பும் நம்முடைய சாஸ்திரத்தில் உள்ளது. திருநீறை நெற்றியில் வைத்துக்கொண்டால் மகாலட்சுமி கடாட்சம் எப்படி வரும்? மகாலட்சுமி விஷ்ணுவின் மனைவி. திருநீறு வைத்துக் கொள்பவர்கள் சிவபக்தர்களாயிற்றே! என்ற இந்ந குழப்பம் இப்போது நம்மில் பல பேருக்கு எழுந்திருக்கும். இதை இந்த பதிவின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம். அதாவது பசுமாடு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. அந்த பசு மாட்டின் சாணத்திலிருந்து முறையாக பதப்படுத்தி பெறப்பட்டது தான் திருநீறு. அப்போது அந்த திறுநீரில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதுதானே அர்த்தம். இந்த ஒரு விஷயமே போதுமே ஹரியும் ஹரனும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதற்கு! ஹரியும் ஹரனும் ஒன்று என்பதை நம் முன்னோர்கள் நமக்காக எப்போ வலியுறுத்தி விட்டு சென்றுள்ளார்கள். இப்படியிருக்க, மனிதர்களான நாம் தான் பேதத்தை பார்க்கிறோமே தவிர, அந்தக் கடவுள்கள் என்றுமே ஒன்றாகத்தான் இருக்கின்றார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக தான் இந்த எடுத்துக்காட்டு. ஆகையால், இவர்கள் தான் திருநீற்றை பூசிக்கொள்ளவேண்டும். இவர்கள் பூசிக்கொள்ளக் கூடாது என்ற எந்த கட்டாயமும் இல்லை. தினம்தோறும் எல்லோரும், எந்த சமயத்திலும் திருநீறை நெற்றியில் பூசிக் கொள்ளலாம். திருநீறை நெற்றியில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் அருகில் எந்த ஒரு கெட்ட சக்தியும் நெருங்க முடியாது என்ற கூற்றினை முன்வைத்து, இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

காகத்தைப் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது?


சிவாயநம

இந்த 1 பொருளை தினம்தோறும் காகத் திற்கு உணவாக வைத்தால், பல காலமாக தீராத இருந்து வரும் கஷ்டங்கள் கூட தீரும்!நம்முடைய பித்ருக்கள் தான் காகத்தின் ரூபத்தில் இந்த பூலோகத்தில் வலம் வருகிறார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு சாஸ்திரம்.

ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல விஷயங்கள் உள்ளது. இந்த காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது கெட்டதை முன்கூட்டி யே வலியுறுத்தும் சக்தியும் இந்த காகத்திற்கு உண்டு என்பதும்
உண்மையான ஒன்று.

அகத்தியர் கையில் வைத்திருக்கும் கமண்டலத்தில் இருந்த நதி நீரை, விநாயகர் எதற்காக காக த்தின் ரூபத்தில் வந்து தள்ளிவிட வேண்டும். நம்முடைய உலகத் தில் பறவைகளுக்காக பஞ்சம். வேறு ஏதாவது ஒரு பறவை ரூபத் தில் வந்து கூட தட்டி விட்டிருக் கலாமே!

காகத்திற்கு இருக்கும் அபரிமிதமான சக்தியை விநாயகரும் உணர்ந்துள்ளார் என்பதுதான் இதற்கு அர்த்தம். மற்ற பறவைகளிடத்தில் இல்லாத ஒரு குணம் இந்த காகத்திற்கு உள்ளது. பொதுவாக மற்ற பறவைகள் தீட்டுகளை எல்லாம் பார்க்காது. ஆனால் மனிதர்களைப் போலவே காகம் தீட்டை அனுஷ்டிக்கும்.

ஒரு காகமானது ஏதாவது ஒரு இடத்தில் இறந்து விட்டால், அந்த காகத்தை சுற்றி மற்ற காகங்கள் மொத்தமாக நின்று “கா கா கா” என்று குரலெழுப்பி இறந்த அந்த காகத்திற்கு துக்கத்தை அனுஷ்டிக்கும். அதன்பின்பு அந்த காகங்கள் எல்லாம் ஒரு நீர்நிலைக்கு சென்று தன்னுடைய தலையை நீரில் நனைத்து தீட்டை கழிக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

நாம் கூட சில இடங்களில் இந்த காட்சியை கண்டிருப்போம். மனிதர்களுக்கு இணையாக தீட்டை கடைபிடிக்கும் வழக்கமும் காக்கைக்கு உண்டு என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இப்படிப்பட்ட மனிதனுக்கு இணையக பல சாஸ்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கும் இந்த காகம், தீட்டான சாப்பாட்டை சாப்பிடாது என்பதும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பு தான். இப்படிப்பட்ட பல சிறப்புகளைக் கொண்ட இந்த காகத்திற்கு தினம்தோறும் உங்களது கைகளால் ‘உலர் திராட்சையை’ உணவாக வைக்க வேண்டும்.

இப்படி தொடர்ந்து வைத்து வந்தால், அந்தப் புண்ணியம் உங்களுக்கு ஏழேழு ஜென்மத்திற்கும் தொடரப்படும். அதாவது நீங்கள் பிறந்ததிலிருந்து, உங்களது வாழ்வு முடியும் வரை வாழ்க்கையில் எந்தவிதமான, தீர்க்க முடியாத துன்பங்களும் உங்களுக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்ததிலிருந்து, சாகுற வரைக்கும் சந்தோஷமா வாழ வேண்டும் என்றால், இந்த சின்ன காரியத்தை நாம் கடை கடைபிடிப்பதில் என்ன கஷ்டம்! சில பேர் வீடுகளில் காகம் வந்து கத்திக்கொண்டே இருக்கும். அது சாப்பாட்டிற்காக கத்தி கொண்டிருந்தால், நீங்கள் உணவு வைத்ததும் அதை சாப்பிட்டுவிட்டு
அமைதியாகச் சென்று விடும்.

சாப்பாடு வைத்தும், தொடர்ந்து காகம் கரைந்து கொண்டே இருந்தால் உங்கள் வீட்டில் சுப செலவுகள் வரப்போகிறது என்பதை குறிக்கிறது. இதேபோல் சிலருக்கு காகம் தன்னுடைய இறக்கை அல்லது கால்களில் வந்து தலையில் தட்டி விட்டுப் போகும் அல்லது அவர்கள் மேல் எச்சில் போடும்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் உங்களுக்கு உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை வரப் போகிறது என்பதை குறிக்கும். அதாவது மருத்துவ செலவு வரும். சிலபேருக்கு பெண்களினால் பிரச்சினை தேடிவரக்கூடும். உஷாராக இருந்து கொள்வது நல்லது. பெரியதாக ஆபத்து எதுவும் இல்லை. வரப்போகும் சின்ன சின்ன பிரச்சனைகளை

முன் கூட்டியே வலியுறுத்தும் தன்மை இந்த காகத்திற்கு உண்டு என்று சொல்கிறது சாஸ்திரம்.

இதேபோல் நீங்கள் காகத்திற்கு சாதம் வைத்த பின்பு, வரும் ஒரு காகம் மட்டும் உணவை அருந்தாமல் அனைத்து காகங்களையும் அழைத்து, எல்லா காகங்களும் சேர்ந்து மொத்தமாக உணவு அருந்தினால், எல்லா பித்ருக்களின்

ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்து விட்டது என்பதை குறிக்கிறது. காகத்திற்கு தினம்தோறும் உணவு அளிப்பதால் பித்ருக்களின் ஆசீர்வாதம், சனிபகவானின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இவர்கள் இருவருடைய ஆசீர்வாதத்தோடு சேர்த்து எமதர்மனின் ஆசீர்வாதத்தையும்,

விநாயகர் ஆசீர்வாதத்தையும் நம்மால் காகத்திற்கு உணவு வைக்கும் போது பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பலவிதமான அதிசயங்களை உள்ளடக்கிய இந்த காகத்திற்கு பழைய சாப்பாட்டையும், கெட்டுப்போன சாப்பாட்டையும்,

எச்சில் சாப்பாட்டையும் தயவுசெய்து வைக்க வேண்டாம் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

மூக்குத்தி பூ செடியின் இலைகளின் பயன்கள்.:


மூக்குத்திப் பூ செடியை தெரியாதவர்கள் யாரும் கிராமங்களில் இருக்க முடியாது. இது எல்லா கிராமங்களிலும் இருக்கும் இதற்கு தாத்தப் பூ செடி, தலைவெட்டிப் பூ செடி, என பல பெயர்கள் உண்டு.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் காயம் சீக்கிரமாக ஆறாது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்டவர்கள் உடம்பில் ஏற்படும் காயத்தை கூட சரி செய்யும் அளவிற்கு மருத்துவ குணம் கொண்டதுதான் இந்த மூக்குத்திப்பூ இலை என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களாக உடலில் ஆறாத புண் ஏதும் இருந்தால், அதன் மீது இந்த மூக்குத்திப்பூ இலையை சிறிது தண்ணீர் விட்டு அறைத்து, அந்த விழுதை பூசி வந்தால் கூடிய விரைவில் அந்த புண் ஆறிவிடும்.

உடம்பில் ஏற்படும் தோல் பிரச்சனையான தேமல் சொறி இவைகள் சரியாக இந்த மூக்குத்தி பூ இலையின் சாரை கசக்கி தடவி வந்தாலே போதும். இரண்டே நாட்களில் மறையும்.

மூக்குத்தி பூ செடியில் இருக்கும் பூ, வேர், இலை இவற்றையெல்லாம் ஒன்றாக சேகரித்து, ஒரு கடாயில் போட்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி லேசாக வதக்கி கொள்ள வேண்டும். வதங்கிய அந்த விழுதை எடுத்து, முட்டியில் மீது வைத்து வெள்ளைத் துணி போட்டு கட்டி விட்டால் அந்த பிரச்சனை உடனடியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

மூக்குத்திப் பூ செடி இலைகளை பறித்து நன்றாக கழுவி, மிளகு ரசத்தில் போட்டு ஒரு கொதிவிட்டு, அந்த ரசத்தை குடித்தால் உடம்பில் இருக்கும் சீத்தளத்தை வெளியேற்றி விடும். அதாவது சளி பிரச்சனை, தலை பாரம், தலையில் நீர் கோர்த்தல், இப்படிப் பட்ட பிரச்சினைக்கு நிவாரணமாக இந்த ரசம் இருக்கும்.

நம்முடைய உடலில் கீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது வெட்டு காயம் பட்டு ரத்தம் இடைவிடாமல் வந்துகொண்டே இருக்கும் சமயத்தில், இந்த மூக்குத்தி பூவின் செடியின் இலையை பறித்து உள்ளங்கைகளை வைத்து கசக்கினால் சாறு வரும். அந்த சாறை காயத்தின் மீது போட்டால் ரத்தம் உடனடியாக நிற்கும்

117 வகையான (#பாரம்பரிய) பாட்டிவைத்திய குறிப்புகள்...



1) பொன்மேனி தரும் குப்பைமேனி...
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு..
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி..
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை...
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு..
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு..
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி..
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8)குழந்தையை காப்பான் கரிப்பான்..
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்..
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்...
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?...
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு...
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி..
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி...
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு..
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு..
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு...
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல...
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு...
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு..
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்...
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை...
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால்
சுரக்கும்.

23) அரையாப்பு தீர..
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை...
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்...
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக....
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்.
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்...
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு...
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ...
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி..
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர..
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு...
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு...
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு..
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க..
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர...
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு..
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்...
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ...
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை..
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது....
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்...
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர...
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர..
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர..
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு..
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு...
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு...
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய...
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு..
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற..
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க...
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய...
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு...
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக....
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு...
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக...
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக...
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க...
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு....
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு..
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு...
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர..
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்....
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்...
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக...
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு.....
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்துவேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக....
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்துபாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி...
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய..
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய...
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய..
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு...
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க...
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு...
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக..
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு...
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர...
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு.....
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு...
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக...
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக.. .
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக...
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய....
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட.....
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க....
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய....
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய....
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவரகண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு...
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க....
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க....
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய.....
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க....
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர,நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்....
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல..
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

98)நெஞ்சு சளி.....
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

99)தலைவலி......
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

100)தொண்டை கரகரப்பு..
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

101)தொடர் விக்கல்....
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

102)வாய் நாற்றம்....
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

103)உதட்டு வெடிப்பு..
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

104)அஜீரணம்...
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

105)குடல்புண்....
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

106)வாயு தொல்லை....
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

107)வயிற்று வலி....
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

108)மலச்சிக்கல்....
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

109)சீதபேதி....
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

110)பித்த வெடிப்பு...
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

111)மூச்சுப்பிடிப்பு...
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

112)சரும நோய்...
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

113)தேமல்.
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

114)மூலம்...
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

115)தீப்புண்.....
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

116)மூக்கடைப்பு....
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

117)வரட்டு இருமல்...
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்...