Saturday, May 30, 2026

ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்திரம்‌ வாராஹி மந்திரங்களில்‌ சிரேஷ்டமான ஒரு மந்திரம்‌.

 ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்திரம்‌ வாராஹி மந்திரங்களில்‌ சிரேஷ்டமான ஒரு மந்திரம்‌.


இந்த மந்திரத்தை சித்தி செய்து கொண்டால்‌ ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி நம்‌ கனவில்‌ வந்து நம்‌ பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வாள்‌.


ஜெபமுறை :


ஓம்‌ அஸ்ய ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்த்ரஸ்ய| ஈஸ்வர ரிஷிஹி |ஜகதீச்சத்தஹ |ஸ்வப்ன வாராஹி தேவதா | ஓம்‌ பீஜம்‌ |ஹ்ரீம்‌ சக்திட்டஹ ட்டஹ கீலகம்‌ ||


மூல மந்திரம்‌:-


ஓம்‌ ஹ்ரீம்‌ நமோ வாராஹி || அகோரே ஸ்வப்னம்‌ தர்ஷய ட்டஹ ட்டஹ ஸ்வாஹா ||


இதை வளர்பிறை பஞ்சமி திதி அன்றோ ,வளர்பிறை அஷ்டமி அன்றோ ஜெபிக்க ஆரம்பிக்க நன்று .


தினம்‌ 1100 உரு வீதம்‌ தொடர்ந்து 11 நாட்கள்‌ படுக்கையில்‌ அமர்ந்தவாறே ஜெபித்து அங்கேயே உறங்கி விட வேண்டும்‌.ஜெபித்த இடத்தில்‌ மாதுளம்பழம்‌,செவ்வாழைப்பழம்‌,வெண்ணை எடுக்காத தயிர்‌ சாதம்‌ நிவேதனம்‌ செய்யலாம்‌.


ஸ்ரீ வாராஹி வழிபாடு கருணாசாகரி ஓம்‌ ஸ்ரீ மகா வாராஹி பத்மபாதம்‌ நமோஸ்துதே।||


அன்னை ஸ்ரீ மகாவாராஹி ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின்‌ பஞ்சபாணங்களில்‌ இருந்து தோன்றியவள்‌.இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின்‌ படைத்தலைவி (சேனாதிபதி).


ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த வாக்குவன்மை, தைரியம்‌, தருவதோடு எதிர்ப்புகள்‌,எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும்‌ கவசமாகும்‌.அபிச்சாரம்‌ எனப்படும்‌ பில்லி,சூனியம்‌, ஏவல்களை நீக்குவாள்‌.இவளை வழிபடுபவர்கள்‌ எந்த மந்திரவாதிக்கும்‌ அஞ்சத்‌ தேவையில்லை.ஏதிரிகளின்‌ வாக்கை, அவர்கள்‌ செய்யும்‌ தீவினைகளை ஸ்தம்பனம்‌ செய்பவள்‌.வழக்குகளில்‌ வெற்றி தருபவள்‌.


மந்திர சாஸ்திரபழமொழி :- "வாராஹிக்காரனோடு வாதாடாதே" .


ஸ்ரீ வாராஹி வாக்கு சித்தி அருள்வதில்‌ ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியைப்‌ போலவே முதன்மையானவள்‌ .எனவே இவளை உபாசிப்பவர்கள்‌ யாரையும்‌ சபிக்கக்கூடாது அவை உடனே பலிக்கும்‌ ஆனால்‌ அதனால்‌ பாதிப்படைந்தவரின்‌ வேதனைக்கான பாவம்‌ விரைவில்‌ நம்மை வந்தே சேரும்‌ அதில்‌ இருந்து அன்னை நம்மைக்‌ காக்க மாட்டாள்‌.எனவே எவருக்கும்‌ அழிவு வேண்டி வணங்காமல்‌ "எதிரிகளால்‌ துன்பம்‌ ஏற்படாமல்‌ காக்குமாறு" வேண்டி வழிபட வேண்டும்‌.

ஸ்ரீ வாராஹி எலும்பின்‌ அதி தேவதை இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும்‌,வாத,பித்த


வியாதிகளும்‌ தீரும்‌.


ஸ்ரீ மகாவாராஹியை ஆக்ஞா சக்கரத்தில்‌ தியானிக்க வேண்டு .


வழிபாட்டு முறைகள்‌ :-


புதன்‌,சனிக்கிழமைகள்‌,திரயோதசி திதி,பஞ்சமி திதி,நவமி,திருவோண நட்சத்திரம்‌ அன்றும்‌ வழிபடலாம்‌.எல்லா மாதங்களிலும்‌ வரும்‌ வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப்‌ பெறலாம்‌.


ஆடி மாதம்‌ வளர்பிறையின்‌ முதல்‌ 10 நாட்கள்‌ இவளின்‌ நவராத்திரி அந்த நாட்களில்‌ தினமும்‌ அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன்‌ பூஜிக்க வல்வினைகள்‌ யாவும்‌ தீரும்‌ என்று மந்திர சாஸ்திர நூல்கள்‌ கூறுகின்றன.


செல்வம்‌ ,அரசியல்‌ வெற்றி,பதவி,புகழ்‌ வேண்டுவோர்‌ பஞ்சமியிலும்‌,


மனவலிமை,ஆளுமை,எதிர்ப்புகளில்‌ வெற்றியடைய அஷ்டமியிலும்‌ சிறப்பாக வழிபடவேண்டும்‌.


எல்லா ஜெபங்களுக்கும்‌ கிழக்கு நோக்கியும்‌,எதிர்ப்புகள்‌ தீர தெற்கு நோக்கியும்‌ அமர்ந்து ஜெபிக்கலாம்‌.


ஆலயங்களில்‌ உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத்‌ தடைகள்‌ நீங்கும்‌.


வெள்ளைப்‌ பட்டு அணிவிக்க வாக்கு வன்மை ,கல்வியில்‌ மேன்மை உண்டாகும்‌.


மஞ்சள்‌ பட்டு அணிவிக்கக்‌ குடும்பத்தில்‌ மங்கள காரியங்கள்‌ நடைபெறும்‌,திருமணத்தடை நீங்கும்‌.


பச்சைப்‌ பட்டு அணிவிக்கச்‌ செல்வப்பெருக்கு ஏற்படும்‌.


நீலவண்ணப்‌ பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில்‌ வெற்றி கிட்டும்‌.


ஸ்ரீ வாராஹி உபாசகர்கள்‌ விளக்கிற்கு பஞ்சு,தாமரைத்தண்டு,வாழைத்திரி பயன்படுத்தலாம்‌.அதிலும்‌ தாமரைத்தண்டு திரி மிகச்‌ சிறந்தது.


நைவேத்தியங்கள்‌:-


தொலி எடுக்காத உளுந்து வடை,மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர்சாதம்‌,மொச்சை ,சுண்டல்‌,சுக்கு அதிகம்‌ சேர்த்த பானகம்‌,மிளகு சீரகம்‌ கலந்து செய்த தோசை,நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம்‌, லவங்கம்‌,பச்சைகற்பூரம்‌ கலந்த பால்‌,கருப்பு எள்‌ உருண்டை , சர்க்கரை வள்ளிக்கிழங்கு,தேன்‌ படைக்கலாம்‌.


மாதுளம்பழம்‌ மிகச்‌ சிறப்பு. ஸ்ரீ மகா வாராஹியின்‌ மூல மந்திரம்‌:-


ஓம்‌ ஐம்‌ ஹ்ரீம்‌ ஸ்ரீம்‌ ஐம்‌ க்லெளம்‌ ஐம்‌ ||


நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||


அந்தே அந்தினி நமஹ


ருந்தே ருந்தினி நமஹ


ஜம்பே ஜம்பினி நமஹ


மோஹே மோஹினி நமஹ


ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ)


சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம்‌ சர்வேஷாம்‌


சர்வ வாக்சித்த சக்ஷூர்‌ முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம்‌ குரு குரு சீக்ரம்‌ வச்யம்‌,ஐம்‌ க்லெஎம்‌ ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம்‌ அஸ்த்ராய ப்பட்‌ ||


ஸ்ரீ மகாவாராஹியின்‌ அங்க தேவதை -லகு வார்த்தாளி உபாங்க தேவதை :-ஸ்வப்ன வாராஹி


பிரத்யங்க தேவதை :திரஸ்கரணி


ஸ்ரீ லகு வார்த்தாளி மூல மந்திரம்‌ :-


லூம்‌ வாராஹி லூம்‌ உன்மத்த பைரவி பாதுகாப்யாம்‌ நமஹ


இவள்‌ ஸ்ரீ மகாவாராஹியின்‌ அங்க தேவதை ஸ்ரீ மஹாவாராஹி மந்திரம்‌ ஜெபிக்க இயலாதவர்கள்‌ லகு


வாராஹி மந்திரத்தை ஜெபித்து வரலாம்‌.இது எல்லா


நிலைகளிலும்‌ பாதுகாப்பாக விளங்கும்‌. ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மூல மந்திரம்‌ :-


ஓம்‌ ஹ்ரீம்‌ நமோ வாராஹி கோரே ஸ்வப்னம்‌ ட்ட:


ட்ட: ஸ்வாஹா| அல்லது


ஓம்‌ ஹ்ரீம்‌ நமோ வாராஹி அகோரே ஸ்வப்னம்‌ தர்சய


ட்ட: ட்ட: ஸ்வாஹா||


இவள்‌ ஸ்ரீ மகாவாராஹியின்‌ உபாங்க தேவதை.இவளை உபாசனை செய்தால்‌ நமக்கு வரும்‌ நன்மை,தீமைகளைக்‌ கனவில்‌ வந்து அறிவித்து நம்மைக்‌ காப்பாள்‌.இம்மந்திரத்தை நியமங்களுடன்‌ உறங்கும்‌ முன்‌ 11 நாட்கள்‌ தொடர்ந்து தினமும்‌ 1100 முறை ஜெபித்து வந்தால்‌ 11 நாட்களுக்குள்‌ அன்னை ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி கனவில்‌ வந்து நம்‌ மன விருப்பங்களை நிறைவேற்றி பிரச்சனைகளைத்‌ தீர்ப்பாள்‌.இவளுக்குப்‌ பிடித்த நைவேத்யம்‌ இளநீர்‌.


ஸ்ரீ திரஸ்கரணி மூல மந்திரம்‌ :-


ஓம்‌ நமோ பகவதி திரஸ்கரணி மஹாமாயே| மஹாநித்ரேோசகலபசுஜன. மனஸ்‌ கக ச்ரோத்ரம்‌ திரஸ்கரணம்‌ குரு குரு ஸ்வாஹா||


இவள்‌ மாயைக்கு அதிபதி .இவளை வழிபட மாயை நீங்கும்‌.மனகுழப்பங்கள்‌ தீரும்‌.


குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள்‌ :-


1.வாக்கு வன்மை,சபைகளில்‌ பேர்‌ பெற,கல்விஞானம்‌


பெற:-


ஓம்‌ ஸ்ரீம்‌ ஹ்ரீம்‌ க்லீம்‌ நமோ வாராஹி|


மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||


2.எதிரிகளால்‌ தீமை ஏற்படாதிருக்க :-


ஓம்‌ சத்ருசம்ஹாரி| சங்கடஹரணி| மம மாத்ரே [ஹ்ரீம்‌ தும்‌ வம்‌ சர்வாரிஷ்டம்‌ நிவாரய|சர்வ சத்ரூம்‌ நாசய நாசய ||


3.செல்வவளம்‌ பெருக:-


க்லீம்‌ வாராஹமுகி [ஹ்ரீம்‌ சித்திஸ்வரூபிணி | ஸ்ரீம்‌


தனவசங்கரி தனம்‌ வர்ஷய ஸ்வாஹா| 4.சர்வ சித்திகளும்‌ செல்வமும்‌ பெற :-


ஸ்ரீம்‌ பஞ்சமி சர்வசித்திமாதா மம கிரகம்‌ மே தனசம்ருத்திம்‌ தேஹி தேஹி நம||


5.எல்லா வகையான பயமும்‌ நீங்க :-

ஓம்‌ ஹ்ரீம்‌ பயங்கரி| அதிபயங்கரி|ஆச்சர்ய பயங்கரி| சர்வஜன பயங்கரி|சர்வ பூதப்‌ பிரேத பிசாச பயங்கரி [சர்வ பயம்‌ நிவாரய சாந்திர்ப்பவது மே சதா[||


6.வறுமை நீங்க :-


ஓம்‌ ஸ்ரீம்‌ க்லீம்‌ ஹ்ரீம்‌ நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம்‌ த்வம்சய த்வம்சய॥


ஸ்ரீ மகாவாராஹியின்‌ பன்னிரு திருநாமங்கள்‌:மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள்‌,ஜெபிக்க இயலாதவர்கள்‌ யாவரும்‌ கீழ்க்காணும்‌ ஸ்ரீ மஹாவாராஹியின்‌ 12 நாமங்களைக்‌ காலையில்‌ குளித்து முடித்ததும்‌ சொல்லி வணங்க அவள்‌ அருள்‌ துணை நிற்கும்‌.


1.பஞ்சமி 2.தண்டநாதா 3.சங்கேதா 4.சமயேச்வரி 5.சமயசங்கேதா 6.வாராஹி 7.போத்ரிணி 8.சிவா 9.வார்த்தாளி 10.மகாசேனா 11.ஆக்ஞா சக்ரேச்வரி 12.அரிக்னீ

ஸ்ரீ வாராஹி மாலையில்‌ உள்ள பாடல்கள்‌ யாவும்‌ மிகுந்த மந்திர சக்தி உடையவை .சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத்‌ தெரியாதவர்களும்‌, மற்றும்‌ யாவரும்‌ நலம்‌ பெற வேண்டி ஸ்ரீ வாராஹி மாலையில்‌ உள்ள 32 பாடல்களையும்‌ தினம்‌ படித்து வரலாம்‌.அல்லது அதில்‌ உள்ள ஒவ்வொரு பாடலும்‌ ஒரு குறிப்பிட்ட பலனைத்தரும்‌ அதில்‌ உங்கள்‌ தேவைக்கான பாடலை மட்டும்‌ தேர்ந்தெடுத்துத்‌ தினமும்‌ படித்து வரத்‌ தேவை நிச்சயம்‌ நிறைவேறும்‌.


காரியசித்தி ஏற்பட,பயம்‌ நீங்க மற்றும்‌ பல காரியங்களுக்கும்‌ சிறப்பு பூஜை,யந்திர,மந்திர ஹோமம்‌ ரக்ஷை, உள்ளது ஸ்ரீ அச்வாரூடா , ஸ்ரீ அபராஜிதா மந்திரங்கள்‌ ,அரசாங்க காரியங்களில்‌ வெற்றி தருவதுடன்‌ ,எத்தகைய வழக்கு, எதிர்ப்புகளையும்‌ தீர்க்கும்‌ பதிப்பின்‌ நீளம்‌ கருதி இத்துடன்‌ ஸ்ரீ மஹாவாராஹி உபாசனை பற்றிய விளக்கத்தை நிறைவு செய்கிறேன்‌.


வராஹி உபாசனை பல நன்மைகளையும்‌ ,உடனடி பலனையும்‌ தருவது.இதில்‌ பல பிரயோக ரகசியங்கள்‌ உள்ளன.எனவே, முறைப்படி சாப நிவர்த்தி செய்து தீக்ஷை பெற்று ஜெபிப்பது உத்தமம்‌.

கருணாசாகரி ஓம்‌ ஸ்ரீ மஹா வாராஹி பத்மபாதம்‌ நமோஸ்துதே।|


வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம்‌|| வார்த்தாளி வார்த்தாளி வார்த்தாளி ரக்ஷமாம்‌ ||


ஓம் சிவ சிவ ஓம் 🪷🙏🏻.

No comments: