Tuesday, March 3, 2026

செல்வவளம் தரும் அட்சய பாத்திரம்.


 *காசு பணம் சேர,*

*அன்னபாக்கியம்* ( உணவு) குறையாமல் இருக்க, ஒரு நல்ல எளிமையான வழி ஒன்றை சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்காக இந்த பதிவு.


🕉️ மகாபாரதம் மற்றும் சிலப்பதிகாரம் போன்ற புராண இதிகாசங்களில், *அட்சய பாத்திரம்* என்று ஒன்றை நீங்கள் படித்திருப்பீர்கள். அக்ஷய என்ற வடமொழி சொல்லுக்கு "பெருக்குதல்" என்று பொருள்படும் . அட்சய பாத்திரம் என்பது, நாம் என்ன வேண்டுகிறோமோ ? அதை தரும் வல்லமை உடையது. ஸ்ரீ மஹாலட்சுமியின் அம்சம் நிறைந்தது.


🔯 ஐம்பொன், வெண்கலம், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களால் ஆன பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பாத்திரம் போதுமானது. இல்லாவிட்டால், சிறிய அளவிலான ஒன்றை புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள். ஐம்பொன் , வெண்கலத்தால் ஆன பாத்திரம் மிகச் சிறப்புடையது.


✡️ அந்த பாத்திரத்தின் மீது *"ஸ்ரீ ஐஸ்வர்யேஸ்வரர் திருவருள் "* 

" *அட்சய அட்சய* " 

என்ற வார்த்தைகளை பொறித்துக்கொள்ளுங்கள்.


🍨அந்த அட்சயபாத்திரத்தை பஞ்சகவ்வியம் அல்லது கோமியம் கொண்டு சுத்தி செய்து. அதன் பின்பு பால் கொண்டு சுத்தி செய்து விட்டு, அதில் வீட்டில் உள்ள அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ,கோதுமை உள்ளிட்ட நவதானியங்களை தயார் செய்து கொண்டு,


 🌝வளர்பிறை, வெள்ளிக்கிழமை, காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுக்கிர ஓரையில் " *அட்சய அட்சய* " தனம் தானியம் அநேகம் அநேகம் என்று கூறிக்கொண்டே நிரப்புங்கள். அதன்மீது ஒரு வெள்ளி மகாலட்சுமி நாணயம் ஒன்றும், உங்களால் முடிந்த அளவு சில்லறை நாணயங்களையும் வைத்து பூஜை அறையிலோ அல்லது சமையல் மேடையில் வைத்து நீங்கள் வீட்டில் பூஜை செய்யும் நேரத்தில், அட்சய பாத்திரத்திற்கும், தூபம் தீபம் காட்டுங்கள். அப்பொழுது "தனம் தான்யம் சம்பத்து தேஹிமே சதா " என்றோ அல்லது "தனம் தானியம் அநேகம் அநேகம் " ஸ்லோகத்தை உச்சரிக்க தன தானிய சம்பத்து உண்டாகும்.


🍅இப்படி செய்து வர உங்கள் வீட்டில் உணவிற்கு பஞ்சம் இருக்காது, மேலும் உங்கள் நியாயமான கோரிக்கைகளை அந்த அட்சய பாத்திரத்திடம் வைக்க, அந்தக் கோரிக்கைகள் வெகு விரைவில் நிறைவேறும். 


பேராசை கூடாது.


🐄🦜மாதம் ஒருமுறை, அதில் உள்ள அரிசி மற்றும் தானியங்களை ஊற வைத்து,  வெல்லம் கலந்து பசுவிற்கு கொடுக்கலாம் அல்லது பறவைகளுக்கு உணவாக அளிக்கவும்.

மீண்டும் புதிய தானியங்களை அதில் நிரப்பி வைக்கவும்.

உங்கள் இல்லத்தில் எப்போதும் தன தானிய சம்பத்து நிறைந்திருக்கும்.


வாழ்க வளத்துடன்


தயவு செய்து ஷேர் செய்யுங்கள், அனைவரும் பயன் பெறட்டும்.

No comments: