Sunday, August 26, 2018

உடலில் காணப்படும் தோஷத்தின் அறிகுறிகளும் பரிகாரங்களும்

உடலில் காணப்படும் தோஷத்தின் அறிகுறிகளும் பரிகாரங்களும் (இது ஒரு தேவரகசியம்) 1. உடல்கனம் கொடுத்தல் ஆஞ்சநேயர் , சாஸ்தா , நரசிம்மர் , அய்யனார் போன்ற தெய்வத்தின் குற்றத்தால் ஏற்பட்ட தோஷம் இந்த தோஷ நிவர்த்திக்கு குறிப்பிட்ட தெய்வத்திற்கு அபிஷேகம் அர்ச்சனை நைவேத்தியம் செய்ய தோஷ நிவர்த்தி . 2. உடல்தகதகவென்று எறிவது போல் தோன்றல் குல தெய்வத்திற்கு வருஷ கணக்கில் பிரார்த்தனை நிறைவேறாத குற்றம் . இதை நிவர்த்தி செய்ய குடும்பத்து டன் குல தெய்வ கோவிலுக்கு சென்று ஆசார அனுஷ்டானப்படி பிரார்த்தனை செய்தல் 3. தலை ஊரல் எடுத்தல் முடி இறக்க வேண்டி தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்தபின் இறக்காமல் இருக்கும் குற்றத்தால்தோஷம் இதை நிவர்த்தி செய்ய கோவிலுக்கு சென்று முடி இறக்க வேண்டும் 4. இடது கண் துடித்தல் சிவன் கோபத்தால் ஏற்பட்ட தோஷம். இதை நிவர்த்தி செய்ய சிவ ஆலயத்திற்கு பிரதோஷம் தோறும் ஓர் ஆண்டு வரை விளக்கிற்கு எண்ணெய் ஊற்றி அர்ச்சனை அபிஷேகம் செய்ய வேண்டும் 5. வலது கண் துடித்தல் விஷ்ணு கோபத்தால் ஏற்பட்ட தோஷம். இதை நிவர்த்திக்க தொடர்ந்து 9 திருவோண நட்சத்திரங்களில் துளசியால் விஷ்ணுவை அர்ச்சனை செய்து பாயாசம் சுதர்சன ஹோமம் நெய்வேத்தியம் செய்ய வேண்டும் . 6. உள்ளங்கை ஊரல் தெய்வத்திற்கு பிராத்தனை செய்து எடுத்து வைத்த பணத்தை செலவு செய்த தோஷம் இதை நிவர்த்தி செய்ய செலவு செய்த பணத்தை போல் போல் எட்டு மடங்கு பணத்தை எடுத்து பிராத்தனை செய்த தெய்வ கோவிலுக்கு சென்று போட்டுவிட்டு மீதி பணத்தை கோயில் அபிஷேகத்திற்காக செலவு செய்ய வேண்டும் . 1. உள்ளங்கால் ஊறல் சங்கடமான சமயத்தில் தெய்வத்தை வேண்டிய பின் சங்கடம் நிவர்த்தியாகாமல் போனதால் தெய்வத்தை திட்டிய செய்த தோஷம். இதை நிவர்த்தி செய்ய தெய்வ சன்னிதானத்தில் அங்க பிரதட்சனம் செய்து மன்னிப்பை கோர வேண்டும் 8. முகம் வியர்த்தல் மாரியம்மனுக்கு பிரார்த்தனை செய்வதாக வேண்டிய பின் அதை மறந்த தோஷம். இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய மாரியமமனுககு பொங்கலிட்டு குங்குமததால் தொடர்ந்து 5 நாட்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் 9. தாகம் எடுத்தல் பிதுர் தோஷம் இறந்து போன தகப்பர் வழியில் உள்ளவர்களையும் இறந்து போன தாயாரையும், வருஷா வருஷ இறந்து போன தினத்தில் நினைத்து அதற்குரிய சடங்குகளை நிறைவேற்றாத தோஷம். இதை நிறைவேற்ற வருடத்திற்கு ஒருமுறை இறந்த மாத திதியில் அல்லது. அது தெரியா விட்டால் அமாவாசையில் சிரார்தம் செய்து பிதுர்களை நினைத்து வணங்க வேண்டும். அன்றைய தினம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேணடும் அனைதானம் செய்தாலும் தோஷ நிவர்த்தி ஆவதோடு பிதுர்களின் ஆசீர்வாதம் என்றும் கிடைத்து . 10. நாக்கு பல்லில் கடி விழுதல் : சர்ப தோஷம் . இந்த தோஷத்திற்கு சர்ப நாக பிரதிஷ்டை , தில ஹோமம் சாஸ்திரப்படி தெரிந்து செய்ய வேண்டும் 11. மூக்கு ஊரல் பிறர் சொத்தை அபகரித்த தோஷம். இந்த தோஷ, நிவர்த்திக்கு வீட்டுக்கு வரும் பிச்சைகாரர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் முடிந்ததை இயன்ற அளவு கொடுக் வேண்டும் 12. காது ஊரல் , தெய்வ சொத்தை அபகரித்த தோஷம். இந்த நிவர்த்திக்கு ஆயுள் முழுவதும் அபிஷேகத்திற்கு ஜலம் கொடுக்க வேண்டும் திருகார்த்திகை தோறும் 108 விளக்கு தீபம் ஏற்ற வேண்டிய எண்ணெய்க்கு ஆகும் செலவை கொடுத்து சங்கடசதுர்த்தி தோறும் விநாயகருக்கு தோப்பு கரணம் போட்டு அர்ச்சனை செய்து, செய்த தவறுக்கு மன்னிப்பு கோர வேண்டும் 13. முதுகு ஊரல் : கிரக தோஷம். உடனடியாக வேறு வீடு மாறுவதால் தோஷ நிவர்த்தியாகும். வயிறு ஊரல் விருஷ தோஷம் . ஒவ்வொரு கிரகத்திற்கும் கிரஹ விருட்சங்களாக மா, , பலா தென்னை இலுப்பை புளி, நெல்லி, அரசு, அத்தி, ஆல், கொய்யா, எலுமிச்சை, வாழை முதலியவை இருக்கும் இவற்றை காரணமின்றி வெட்டியும், விலைக்கு வித்தும் தண்ணீர் விடாமல் அதை பட்டு போக விட்டும் பச்சை மரத்தை வெட்டி அதை எரி பொருளாக பயன்படுத்துவதாலும் ஏற்பட்ட தோஷம் பலஜாதி விருட்சங்கள் இருந்தாலும் கிரக விருட்சத்தை வெட்டுவதால் தோஷம் இதை நிவர்த்தி செய்ய உங்கள் கிரக விருட்சம் எது என்பதை கேட்டு தெரிந்தும் அவ்விருட்சத்தை வீட்டில் வளர்க்க தோஷம் நீங்கும் 15. உடம்பு புல்லரித்தல் திருப்பதி வெங்கடாசலபதி தோஷம். திருப்பதிக்கு வேண்டி பிரார்த்தனை செய்து அதை நிறைவேற்றாமல் இருக்கும் தோஷ நிவர்த்திக்கு 7 வீடுகளில் பிச்சை த்ெது திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய வேண்டும் விஸ்ணு சகஸ்ர நாமம் சொல்லவேண்டும் 16. ஏழுமலையானுக்கு உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை செலவு செய்த தோஷம் 7 கிரகஸ்தர்கள்,7 சுமங்கலிகள் 7 தெருக்களில் 7 வீடுகளில் மடி ஏந்தி பிச்சை எடுக்க வேண்டும் எடுத்த அரிசி பணத்தில் பிரார்தனை நிறைவேற்ற வேணடும். எவ்வளவு வசதியானவர்களாக இருந்தாலும் திருப்பதி வெங்கடேசபெருமாளை தரிசனம் செய்வதற்கு பிச்சை எடுப்பது வாங்குவது விஷேஷமான ஒன்றாகும். பிச்சை எடுத்து திருப்பதி செல்வதால் ஒருவனுக்கு உள்ள தான் என்ற அகங்காரமே இல்லாமல் போக வேண்டும் என்ற எண்ணதினாலும் தன்னை மிஞ்சினவன் எவனும் இல்லை என்ற எண்ணமே மானிடனுக்கு வரக கூடாது என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்ற கருத்துக்கு இணங்க பிச்சை எடுத்து திருப்பதி செல்வது விசேஷம் என பெரியோர்களால் கூறப்படுகிறது 17. மயக்கம் வரும்போல் தோன்றுதல் துர்தேவதைகளால் ஏற்பட்ட நிவர்த்தி செய்ய ஊர் எல்லையில் உள்ள எல்லை தெய்வத்திற்கு பலி பூஜை செய்ய தீரும் 18. உடலில் மாறி மாறி தினவு எடுத்தல் : நவகிரக தோஷம் , இந்த நவகிரக தோஷம் நிவர்த்திக்கு நவகிரக ரச்சை கட்டி கொள்ளுதல், நவகிரக அர்ச்சனை செய்தல், நவதான்யம், தானம் கொடுத்தல், ஹோமம் நவகிரகம் ஹோமம் செய்தல் , நவரத்தின மோதிரம் அணிந்து கொள்ளுதல் , நவகண்டிமாலை தரித்து கொள்ளுதல், 19. புஜம் வலித்த ல் : முருகனுககு காவடி பிரார்தனை எடுப்பதாக செய்தபின், அதை செய்யாத தோஷம் . முருகன் கோயிலுக்கு பூசம், விசாகம் , ஆகிய கிருத்திகை நட்சத்திரங்களில் காவடி எடுத்து பிரார்த்திக்க தோஷம் நிவர்த்தியாகும் 20.இருமல் வருதல் அபலை ஸ்திரிகளை கெடுத்த தோஷம். பிரசவ காலத்தில் கர்ப்பஸ்திரிகள் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்வதுடன் , அனாதை பெண் திருமணத்திற்கு பண உதவி செய்ய .வேண்டும் 21. கொட்டாவி வருதல் துர்மரணம் அடைந்த சுமங்கலி தோஷம், பெண மீது ஊற்றி நெருப்பு வைத்து விஷ மருந்து வைத்து கொன்றது.தூக்கு போட்டு கொன்றது . கிணற்றில் தள்ளி கொன்ற பாவம் ஆகியவைகளால் ஏற்படும் தோஷத்திற்கு நிவர்த்தி, இல்லை . இந்த விதமாக சுமங்கலி பெண் கொன்றவர்கள். நாய் மலத்தில் 7 ஜெர்மம் முழுவாக பிறப்பார்கள் . மாமியார் கொடுமை, மதினியின் கொடுமை தாங்க முடியாமல் தானாக உடலை எறித்து கொண்டும் விஷம் அருந்திக் கொண்டும், தூக்கு போட்டுக் கொண்டும் கிணற்றில் விழுந்து இறந்த துர்மரணம் அடைந்த சுமங்கலி, கொடுமைப்படுத்தப்பட்ட மாமியார். மதினியர் உயிருடர் இருக்கும்வரை அவர்களே ஆவிரூபமாக அடைநது , எசஷிணி உருவம் அடைந்து பாடாத பாடு படுத்தும். இந்த தோஷ நிவர்த்திக்கு ஆயுள் முழுதும் வெள்ளிக்கிழமை தோறும் சுமங்கலியை அழைத்து மங்கள பொருள்களை கொடுத்து அன்னமிட்டு உபசரிக்க வேண்டும் 22. தும்பல் வருதல் பட்சி தோஷம் இதற்க்கு பறவை களுக்கு உணவு அளித்தால் தோஷம் நீங்கும் 23.அபனா வாயு வெளிப்படல் : தர்ம சொத்தை அபகரித்த தோஷம். இந்த தோஷதிற்கு தினசரி கூன், குருடு, செவிடு போன்ற அங்க குறைபாடு உள்ளவர்களுக்கு அன்னமிட வேண்டும். கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் வைக்க வேண்டும் 24. உடல் நடுங்கல் : வீட்டில் உள்ள விக்கிரகங்களுக்கு பூஜை செய்யாத தோஷம் இத்தோஷ நிவர்த்திக்கு குடும்ப வழக்கப்படி பூஜை செய் வேணடும். அப்படி முடியாத நிலையில் அவ்விக்கிரஹங்களை குல குருவி அனுமதி பெற்று கோவில்களிலோ அல்லது பஜனை மடத்திலே வைதது முடிந்த அளவு பூஜை சிலவுக்கு பணமும் கொடுக்க வேண்டும் அல்லது அனுஷ்டானம் உள்ளவர்கள் விரும்பிக் கேட்டால் தானம் கொடுத்து விடலாம் 25. உடல் எரிவது போல் தோன்றல் கர்பிணி பெண் தோஷம். குடும்பத்தில் சிறு வயதில் எதிர்பாராத விதமாக கர்பிணி பெண் இறந்தால் குடும்பத்தை காப்பதாக ஐதீகம் வருஷத்திற்கு ஒருமுறை அல்லது நவராத்திரி சமயம் இந்த பெண் பெயரால் ஏழை கன்னிப் பெண்ணுக்கு பாவாடை சட்டை மங்கலப் பொருள் கொடுத்தால் தோஷ நிவர்த்தியாகும் 26. மூக்கடைத்தல் துர்மரண தோஷம். குடும்பத்தில் அற்ப ஆயுளில் இறந்தவர்கள் , இடி , விழுநது இறந்தவர்கள் அக்கினி பிரவேசம் செய்து இறந்தவர்கள் , செய்வினை ஆவி தண்ணீர் விஷம், கயிறு இவைகளால் இறந்தவர்கள விஷ ஜந்துக்களால் இறந்தவர்கள் , வெட்டு பட்டு இறந்தவர்கள் , கர்பமாய் இருந்து இறந்தவர்கள் ஆகியவர்களாலும் , துஷ்ட மிருகங்களிடமிருந்து தப்பு முடியாமல் இறந்தவர்களாலும், மேற்படி தோஷம் ஏற்படுகிறது. இப்படி இறந்தவர்களுக்கு குறிப்பிட்ட காலங்களில் அவர் அவர்களின் குல, மத, அனுஷ்டாத்குரிய கிரியைகளை செய்தால் தோஷ நிவர்த்தியாகும் 27. உமிழ் நீர் வாயில் அதிகமாக சுரத்தல் பிறர் சொத்துக்கு அக்னி மூலம் ஆபத்து உணடாக்கிய தோஷம். இத்தோஷத்திற்கு குளம் , கிணறு வெட்டுவது அல்லது அதற்கு பண உதவி செய்வது கோயில் அபிஷேகத்துக்கு தண்ணீர் கொண்டு விட்டாலும் நிவர்த்தி ஆகும் 28. கண் எரிச்சல் பிசாசு பிடித்த தோஷம். இதை நிவர்த்தி செய்து பிசாசு ஒட்டுபவர்கள் உதவியோ , அதர்வண வேதம் தெரிந்தவர்கள் உதவியையோ நாடி பரிகாரம் செய்யவும் . அது முடியாதவரகள் திருச்சி அருகில் உள்ள குண சீலம் என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயிலில் தங்கவும் 29. உடலில் எறும்பு கடித்தல் : செய்வினை தோஷம் வேண்டாதவர் குடும்பத்தை துர்தேவதைகளின் உதவியால் செய்வினை (அல்லது) அபிசார தோஷம் செய்வித்தல், இதை நிவர்த்தி செய்ய விஷயம் தெரிந்த மந்திரவாதியை நாட வேண்டும் 30. உடம்பில் ஈ உட்காருதல் உடம்பில் ஈ உடகாருதல் புத்திர தோஷம் இத்தோஷ நிவர்த்திக்கு ஜாதகத்தை அறிந்து ஆராய்ந்து பரிகாரம் செய்ய வேண்டும் .

No comments: