கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, March 23, 2020
சித்தர்களின்_ஐம்பொன்_காப்பு....
நம்முடைய முன்னோர்கள் உலோகத்தினை நகைகளாக செய்து உடலில் பல்வேறு இடங்களில் அணிந்தது ,,,,,
உடல் அழகுக்காக மட்டும் அல்ல உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்...
ஐந்து விதமான உலோகத்தினை சரியான அளவில் கலந்து செய்யப்படும்,ஐம்பொன்சிலைகளில் தங்கம்,,,,,,,,வெள்ளி,,,,,,இரும்பு,,,,,,செம்பு,,,,,,,ஈயம் போன்ற உலோகங்கள் சரியான அளவில் கலந்து செய்யப்படும்,
இந்த சிலைகள் பல நூற்றண்டுகள் முன்பு தமிழ் நாட்டில் சிறப்பாக செய்யப்பட்டு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக வைத்தனர்,
காரணம்,நம்முடைய உடலுக்கும் உலோகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது,மண்ணில் உள்ள சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும் ,இந்த உலோக சத்துக்கள் தான் நம்மை இயக்கும் இது அறிவியல் ரீதியான உண்மை,
நம்முடைய நாட்டில் இந்த உலோகங்கள் மண்ணில் குறைந்த அளவுதான் உள்ளது,அதை நிவர்த்தி செய்யவே ஐம்பொன் சிலைகள் செய்து நிறுவப்பட்டது
சிலைகளுக்கு அபிஷகம் செய்து கிடைக்கும் பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்,இந்த சிலைகள் அதிக காந்த ஈர்ப்பு சக்தி உடையது ,
இதில் தங்கம் குருவின் சக்தியையும்,
வெள்ளி சுக்ரனின் சக்தியையும் ,
செம்பு சூரியனின் சக்தியையும்,
இரும்பு சனியின் சக்தியையும்,
ஈயம் கேதுவின் சக்தியையும்
பெற்று மக்களுக்கு வழங்கும்......
இப்படிப்பட்ட அதிசய உலோகத்தினை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து செயல்படுத்தினர்,, #சித்தர்கள்....
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐம்பொன்னை கொண்டு கைகளுக்கு மோதிரமாகவோ ,காப்பாகவோ மற்றும் வேறுபல ஆபரணங்களாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமமாக வைக்கும் ,உடலினை குளிர்ச்சி படுத்தும்,
ராஜ உறுப்புகளான இதயம் ,,,,,மூளை ,,,,,,நுரையீரல் ,,,,,,,,சிறுநீரகம்,,,,,,,,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் ,இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும் ,
இதன் #அறிவியல் விளக்கம்........
மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளது,மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து இராஜ உறுப்புகளுக்கு கடத்துக்கிறது.
இந்த பகுதிகளில் ஐம்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரம்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய #ராஜ உறுப்புகளை நல்ல படியாக இயங்க செய்யும்......
நன்றி,,,,,,,
Subscribe to:
Post Comments (Atom)
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...
No comments:
Post a Comment