கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, May 24, 2019
மோருடன் எதை கலந்து குடித்தால் எந்த நோய் குணமாகும், தெரியுமா உங்களுக்கு?
* கறிவேப்பிலை இலைகளை மோர் சேர்த்து அருந்தி வர உடல் எடை குறையும்.
* மோர் மற்றும் கேரட் போட்டு அரைத்து குடித்து வர உடல் இளைக்கும்.
* ஓமத்தை மோரில் கலந்து குடிக்க அஜீரணம் குறையும்.
* கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து மோருடன் கலந்து சாப்பிட்டால் எந்த விஷக் கடியாக இருந்தாலும் விஷம் இறங்கும்.
* புளியாரைக் கீரை, வெந்தயம் அரைத்து மோரில் சாப்பிட்டால் வாய்ப்புண் குறையும்.
* பெருங்காயத்தை பொரித்து தூள் செய்து அரை தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.
* 200 மி. லி மோரில், வறுத்த சீரகம் மற்றும் சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.
* சீரகபொடியை மோரில் கலந்து குடிக்க வயிற்று கடுப்பு குறையும்.
* முள்ளங்கி சாறுடன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி வர வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் புள்ளி குறையும்.
* கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட மஞ்சள் காலை குறையும்.
* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் சேர்த்திக்கொள்ள பித்த சூடு தணியும்.
* வில்வ இலைகளை பொடி செய்து,பசு மோரில் ஒரு ஸ்பூன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்திகரிக்கபட்டு, தோல் நோய் குறையும்.
* மோரில் சிறிதளவு வெங்காயச்சாறு விட்டு குடிக்க இருமல் குறையும்.
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...