கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, October 2, 2018
கால் விரல்களை வைத்தே ஒருவரை பற்றி கணிக்க முடியும்! உங்க கால் விரல் இப்படி இருக்கா?
ஒருவரின் கால் பாதத்தில் இருக்கும் விரல்களை வைத்தே அவர்களின் உறவுமுறை, அவர்களின் உடல் நலம் பற்றி கூட கணிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பெரு விரல்
மற்ற விரல்களை விட பெரு விரல் பெரிதாக இருப்பவர்கள் படைப்பு திறம் மிக்கவர்களாக இருப்பார்கள். எல்லா வித பிரச்சனைகளுக்கும் இவர்கள் புத்திசாலிதனமாக தீர்வை எடுப்பார்கள்.
அதே சமயத்தில் மற்ற விரல்களை விட பெரு விரல் சிறிதாக இருப்பவர்கள் ஒரே நேரத்தில் பல விடயங்களை செய்வார்கள்.
திறம்பட பிரதிநிதிப்படுத்தக்கூடிய பல திறமையான இவர்களுக்கு இருக்கும்.
இரண்டாம் விரல்
இரண்டாம் விரல் பெரிதாக உடையவர்கள் தரமான தலைவர்களாக விளங்குவார்கள். இவர்களுக்கு படைப்பு திறன் அதிகம் இருக்கும்.
இரண்டாம் விரல் சிறிதாக உடையவர்கள் எதையுமே சுமையாக பார்பார்கள். ஆனாலும் அந்த விடயங்களை இணக்கமாக கையாள்வார்கள்.
மூன்றாம் விரல்
மூன்றாம் விரல் மற்றதை விட பெரிதாக இருப்பவர்கள் பணியில் தனித்துவமாகவும், துடிப்பாகவும் இருப்பார்கள்.
இதுவே சிறிதாக இருப்பவர்கள் அதிக ஓய்வாகவும், வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள்.
நான்காவது விரல்
நான்காவது விரல் பெரிதாக இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். அதுவே விரல் சுருண்டிருந்தால் அவர்கள் உறவு முறையில் மகிழ்ச்சி இருக்காது.
நான்காவது விரல் சிறிதாக இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள்.
சிறிய விரல்கள்
எல்லா விரல்களும் சிறிதாக இருப்பவர்கள் குழந்தை தனமாக இருப்பார்கள். எந்தவொரு பொறுப்பை விரும்பாமல் இருக்கும் இவர்கள் எளிதில் எல்லாவற்றுக்கும் சலித்து கொள்வார்கள்
விரல் அளவு
விரல்கள் ஒன்றன் பின் ஒன்றாக பெரிதாக இருப்பவர்கள் முறைப்படியான துல்லியமாக எல்லாவற்றையும் செய்வார்கள். நட்புக்கு விசுவாசமாகவும் இவர்கள் திகழ்வார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment