கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, December 28, 2018
கர்ப்பப்பை #இறக்கம்_ஏன் #ஏற்படுகிறது???.. #அறிகுறி_என்ன??... #தீர்வு_என்ன??
#
பெண்மையின் வரப்பிரசாதமே கர்ப்பப்பைதான். பூப்பெய்துவதில் தொடங்கி, குழந்தை பெறுவது வரை பெண்மையின் அடையாளமாகவும் கவசமாகவும் இருப்பது அதுவே. அப்படிப்பட்ட கர்ப்பப்பை, அதன் இடத்தில் இருக்கும் வரைதான் ஆரோக்கியம்.
இருப்பிடத்திலிருந்து இறங்கினாலோ ஆபத்துதான்!
குழந்தை பெற்ற பெண்கள் பலரையும் பாதிக்கிற பிரச்னைகளில் ஒன்று கர்ப்பப்பை இறக்கம். அதற்கான காரணங்கள், தீர்வுகள், தவிர்க்கும் முறைகள்.
‘சாதாரணமாக 2 செ.மீ. அளவுள்ள கர்ப்பப்பை, வயதுக்கு வரும் போது, 5 முதல் 6 செ.மீ. வரை வளர்கிறது. பிரசவத்தின் போது 5 கிலோ எடையுடன், 30 செ.மீ. நீளத்துக்கு விரிகிறது. குழந்தைப்பேற்றைத் தவிர, கர்ப்பப்பைக்கு வேறு வேலைகள் கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு அது சுருங்கி, மீண்டும் பழைய அளவுக்கு வரும்.
கர்ப்பப்பை இறங்க, அதிக பருமன், வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு போன்றவை முக்கியமான காரணங்களாக இருக்கும். ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம். பிரசவத்தின் போது எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.
பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது, மலச்சிக்கல், இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நரம்புகள் பலவீனமாக இருப்பது போன்ற பிற காரணங்களாலும், ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை இறக்கம் வரலாம். கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும். கர்ப்பப்பை உரசி, புண் உண்டாகும்.
கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப் படலாம். இறங்கிய கர்ப்பப்பையைத் தற்காலிகமாக(ஆங்கில மருத்துவ முறைபடி) மேலே தூக்கி வைக்க, பிளாஸ்டிக் வளையம் உண்டு.
‘#ஸ்லிங்_ஆபரேஷன்’ மூலம் வயிற்றின் வழியே, கர்ப்பப்பையை மேலே தூக்கிப் பொருத்தலாம்.
குழந்தை பெற்று அதிக வயதான பெண்களுக்கு மட்டுமே இப்பிரச்னையின் போது, கர்ப்பப்பையை அகற்ற வேண்டி வரும். பிரசவத்துக்குப் பிறகு இடுப்பெலும்புத் தசைகள் உறுதிபெற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது, அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். பருமன் இந்தப் பிரச்னைக்கான மிக முக்கிய காரணம் என்பதால், எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.
#அடி_இறக்கம்_எனப்படும் #கருப்பை_தளர்வின் #அறிகுறிகள்……!!!! ????
தற்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.
இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கான அறிகுறிகள் என்னவென்று பார்த்தால்...
★இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.
★ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.
★எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.
★பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை
★அடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்
★சிலருக்கு இருமினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு
★அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்
சிறுநீரை அடக்க முடியாத நிலை.
★தன்னை அறியாமல் சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை
★மலச்சிக்கல் போன்ற உணர்வு. அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
★இவற்றில் ஒரு சிலவோ, பல அறிகுறிகளோ இருப்பின், அவர்கள் மருத்துவரை அணுகி உரிய பயிற்சிகளை
மேற்கொள்வது நல்லது.
#_கர்ப்பப்பை
#_இறக்கத்தை
#குணமாக்க....!!!
#தேவையானவை
சாதிக்காயை ---- 1
பசுவெண்ணெய்
தேவையான அளவு
#செய்முறை
சாதிக்காயை எடுத்துக்கொள்ளவும்.
அதை பசுவெண்ணெயால் மூடவும்.
அதை நீளமான கோணி ஊசியில் செருகிப் பிடித்துக்கொண்டு,
நெருப்புச்சுடரில் காட்டி எரிக்கவும்.
சிறிது நேரத்தில்,
வெண்ணெயை உள்வாங்கி சாதிக்காய் எரிய ஆரம்பிக்கும்.
சாதிக்காய் முழுமையாக எரிந்து கருகும் வரை,
மேலும், மேலும்,
பசு வெண்ணெயை கொஞ்சம், கொஞ்சமாக
அதன்மேல் வைத்துக் கொண்டே இருக்கவும்.
இப்படி, சாதிக்காயை முழுமையாக கருக்கவும்.
இறுதியாக மிஞ்சும் அந்த சாதிக்காயின் கரியை,
நன்கு தூளாக்கி பத்திரப்படுத்தவும்.
இந்த சூரணத்தில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து,
காலை, மாலை இரு வேளையும்,
தேனில் உண்டுவர, நாற்பத்தெட்டு நாட்களில்,
இறங்கிய கர்ப்பப்பை மேலேறும்.
வருடக்கணக்கில் அவதிப்படுவோருக்கு,
(90)தொண்ணூறு நாட்களில் குணம் தெரியும்.
#செம்பருத்தி_பூ_நீர்
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து
இறக்கி வைத்து அதில் அடுக்கு
செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து
போட்டுப் பத்து நிமிடம் பாலை
மூடி வைத்து பின்
வடிகட்டி விடவும். பால் சிவப்பாகி இருக்கும்.
இனிப்பு சேர்த்து வடிகட்டி
காலையிலும், மாலையிலும்
குடிக்கவும்.
இது
மாதவிடாய் கோளாறுகளை சரி
செய்கிறது.
குடல் இறக்கம்,
கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும்
தடுக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment