Wednesday, October 16, 2019

மருத்துவ ஜோதிடம். செவ்வாய் தரும் நோய்கள்:


ஜோதிடத்தில் செவ்வாய் க்கு தனி இயல்பு உண்டு.ரத்த ஓட்டம், ரத்தம், தசைகள், தசை நார்கள் ,ஆணுறுப்பு என உடலில் உள்ள பல விஷயங்களுக்கு செவ்வாயே காரகம் வகிக்கிறார்.

ஒருவர் தனது வாழ்க்கையை எவ்வளவு ஆரோக்கியமாக பலசாலியாக வாழ போகிறார் என்பதை செவ்வாய் தான் முடிவு செய்வார்.ஆயினும் அவருக்கும் நோய்களை கொடுக்கும் அமைப்புகள் உள்ளன.

வாகன விபத்தில் ரத்தம் வழிந்து ஏற்படும் காயங்கள் செவ்வாயால் தரப்படுபவை.தசை நார் கிழிதல்,தசை பிடிப்பு, ரத்தம் தொடர்பான நோய்கள் அனைத்தையும் செவ்வாயால் தர முடியும். கொடிய பாபதன்மை உள்ள செவ்வாய் மூளையில் ரத்த கட்டி போன்ற நோய்களை தருவார்.

மற்றொரு பக்கம் தற்கொலைக்கும் ஒருவரை செவ்வாயால் தூண்ட இயலும்.பொதுவாக தற்கொலைக்கு காரகம் வகிக்கும் கிரகங்கள் ராகு கேதுக்கள் தான் என்றாலும் தற்கொலைக்கான காரணம் என்பதை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை விரக்தி,பயம், அவமானம். இதில் செவ்வாய் அவமானம் காரணமாக செய்து கொள்ளும் தற்கொலைகளுக்கு காரணம் ஆவார். ஏனெனில் தன்மானத்தை பெரிதாக கருதும் அனைவரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.

இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவாக மட்டும் பார்ப்பது நல்லது.குறிப்பாக ஜோதிட ஆர்வம் அதிகம் கொண்டவர்கள் இதை படிக்கும் போது இது தொடர்பான மேலும் தகவல்கள் கிடைக்க பெற்று மருத்துவ ஜோதிடம் என்னும் பிரிவு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மற்றபடி இது யாரையும் பயமுறுத்தும் பதிவுகள் அல்ல.

......நன்றி........