Thursday, October 3, 2019

நினைத்தவுடன் வருபவர்.


காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் காலபைரவர்.
ஒருவருக்கு மோசமான காலம் நடந்தாலும் காலச்சக்கரத்தினால் துன்புறும் பக்தர்களை காப்பாற்றக்கூடியவர்ஆதலால்தான் இவரை ஆபதுத்தாரண பைரவர் என்று போற்றப்படுகின்றார்.

ஆபதுத்தாரணர் - என்றால் பக்தர்களின் துன்பத்தை அடியோடு அழிப்பவர் என்றும் பொருள்படும். இவரே மகாகாலர், சட்டநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பைரவர் என்ற பதத்திற்கு பயத்தை போக்குகிறவர் என்று பெயர்.

ஒருவருக்கு வறுமையும்,கஷ்டமும்,தைரிய இழப்பு ஏற்பட்டால் இவரை சனிக்கிழமைகளிலோ அல்லது தேய்பிறை அஷ்டமி,வளர்பிறை அஷ்டமியில் வணங்கி வந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாத கணவன்-மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிகப்பு அரளியால் பைரவருக்கு அர்ச்சனை செய்வதால் விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும்.

*உங்களுக்கு எப்போதாவது கெட்ட கனவோ அல்லது மன பயமோ,எதிர்மறை சிந்தனையோ ஏற்பட்டால் கால பைரவரை மனமுருகி அழையுங்கள் அவர் ஓடோடி வந்து உங்கள் உள்ளத்தில் புகுந்து அசாத்திய தைரியத்தை கொடுப்பார்.