Monday, October 14, 2019

சொர்க்கம் பூமியில் தான் இருக்கிறது..

வீடு குளிர்ச்சியடைய வேண்டுமா?? விளக்கெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்..

அதிக ஆக்ஸிஜன் வேண்டுமா?? எள்ளெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்..

தொற்று நோய் கிருமிகள் அழியவேண்டுமா?? வேப்பெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்..

பேன் தொல்லை பொடுகு ஸ்கின் அலர்ஜி போக வேண்டுமா??
ஆண்டுக்கு ஒருமுறை ஏதாவதொரு கோவிலுக்கு சென்று மொட்டை அடியுங்கள்..

இது சைனஸ் மற்றும் நுரையீரல் பிரச்சினை உள்ளவர்களுக்கு..
மார்கழி மாதம் முப்பது நாட்களும் விடியற்காலை எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு நடந்து சென்று அரசமரத்தை சுற்றிவிட்டு விநாயகரை வழிபட்டுவாருங்கள்...

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் ஆன்மீகத்தின் வாயிலாக நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள்.

யாரும் நமக்கு விளக்கவேண்டியதில்லை..

மார்கழி மாதம் கடைசியில் தான் சொர்க்கவாசல் திறக்கும்..

சொர்க்கம் பூமியில் தான் இருக்கிறது..