கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, July 9, 2018
தயிர்
தயிர்… உயிர் காக்கும் ஆரோக்கியக் கூறுகள் அடங்கிய உணவுப்பொருள். புரோபயாடிக் நிறைந்த தயிரில் துத்தநாகம், வைட்டமின் இ, பாஸ்பரஸ் ஆகியவை இருக்கின்றன.
உள்ளே…
கெட்டித் தயிரைச் சாப்பிட்டால் ஆயுள் கெட்டிதான். எப்படி என்கிறீர்களா?
சீக்கிரம் செரிமானம் ஆகும்.
நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
ஊட்டச்சத்துக்களை உடல் கிரகிக்க உதவும்.
ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாக்கும்.
எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கவும் உதவும்.
வெளியே…
தயிருடன் மஞ்சள், சந்தனம், வெந்தயத்தூள் கலந்து சருமத்தில் பூசும்போது…
முகத்தில் படிந்த கருமை போயே போச்சு!
தழும்புகள், முகப்பருக்களுக்கு டாட்டா!
எப்போதும் முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று வருத்தப்படுபவர்கள் தயிருடன் பூசு மஞ்சள்தூளையும் சந்தனத்தையும் கலந்து பூசி மென்மையாக மசாஜ் செய்துவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள். அப்புறம் ‘அட, எண்ணெயெல்லாம் எங்கே போச்சு’ என்று ஆச்சர்யப்படுவீர்கள்.்.
தயிரைத் தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால்…
பொடுகு நீங்கும்.
முடியில் பளபளப்பு கூடும்.
மூன்று டேபிள்ஸ்பூன் தயிர், இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், நான்கு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி பஞ்சு மாதிரி மென்மையடையும்.
அரை கப் தயிருடன் இரண்டு டேபிள்ஸ்பூன் பாதாம் எண்ணெய், இரண்டு முட்டையை நன்கு அடித்துச் சேர்த்துத் தலையில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் முடி பொலிவாக இருக்கும்.
முடி உதிர்வதுதான் உங்களுக்கு முக்கியப் பிரச்னையா? கவலையை விடுங்க பாஸ்! ஒரு கப் தயிருடன், சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்துத் தலையில் பூசி, 45 நிமிடங்கள் ஊறவைத்துக் குளிங்க. இனி உங்க முடி ‘நம்பிக் கட்டுற கம்பி’ மாதிரி செம ஸ்ட்ராங்கா இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment