கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, July 9, 2018
திருநீறு உணர்த்தும் தத்துவம்
இந்த உலகில் மாறாதது மாற்றம் ஒன்று மட்டும் தான். அந்த மாற்றங்களை கடந்தவர் இறைவன். `மாற்றம் மனம் கழிய நின்ற மறையவன்' என்பது திருவாசகத்தின் வாக்கு.
பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாதது, அழியாதது, சாஸ்வதமானது என்று தத்துவ நூல்களும் கூறுகின்றன.
நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும். பஞ்சையோ, கட்டையையோ இட்டால் அது சாம்பலாகும். ஆனால், நெருப்பில் சாம்பலைப் போட்டால் என்னவாகும்? அது சாம்பலாகவே இருக்கும். எந்த மாற்றமும் அடையாது.
இப்படி மாறாமல் இருக்கும் பிரம்ம தத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்கிறோம். கண்ணில் படுவதுதான் மனதில் நிலைத்து நிற்கும். அந்த கண்ணில் இருந்து மறைவது காலப்போக்கில் மறைந்துவிடும்.
அதேபோல், பிரம்மம் பற்றிய நினைப்பு எப்போதும் நம்முள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நெற்றியில் திருநீறு அணிகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment