Sunday, September 9, 2018

ஆண்மையை பலப்படுத்தும் பாரம்பரிய உணவு முறைகள்

★ பத்து முருங்கை பூக்களை பசுவின் பாலில் காய்ச்சி வடித்து கற்கண்டு சேர்த்து குடிப்பது. ★ இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேனை பாலில் கலந்து பருகுவது. ★ கொட்டை நீக்கிய பேரீச்சம் பழங்களை பாலில் காய்ச்சி வடித்து அருந்துவது. ★ பேரீட்சம் பழத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடுவது. ★ முருங்கை பிசினை வாங்கி பொடித்து அரைதேக்கரண்டி பாலில் கலந்து வடித்து அருந்தி வருவது. ★ அரைக்கீரையை நெய்விட்டு வதக்கி சாதத்துடன் பிசைந்து உண்பது. ★ வெண்டைக்காயை ஆவியில் வேகவைத்து நறுக்கி உப்புத்தூளும் மிளகுதூளும் சேர்த்து சாப்பிடுவது. ★ வெண்டைக்காய் வேரை சிதைத்து இரவு நீரில் ஊறவைத்து காலையில் வடித்து அருந்தி வருவது. ★ காலையில் இளநீர் அருந்தி வருவது. ★ பாதாம் பருப்பு, சாரப்பருப்பு,பிஸ்தா பருப்பு, சாலாமிசிரி இவற்றை சிறிதளவு எடுத்து காலைமாலை பாலுடன் சாப்பிட்டு வருவது. ★ முருங்கை பிஞ்சை சூப் வைத்து குடிப்பது. ★ காடை ,கௌதாரி இவைகளை சமைத்து உணவுடன் உண்டு வருவது. ★ கோதுமை நொய்,பசும்பால் வாதுமை பருப்பு ஆகியவற்றை கலந்து காய்ச்சி சாப்பிடுவது. ★ பால் சாதத்துடன் செங்கதலி பழத்தை பிசைந்து இரவில் உண்பது. ★ சீமை அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது. ★ ரோஜா பூ குல்கந்து இருவேளை சாப்பிடுவது. ★ வெள்ளை வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி பசுந்தயிரில் ஊறப்போட்டு சாப்பிடுவது. ★ சிறிய வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவது. ★ சண்டை சேவல் மாமிசத்தை சாப்பிட்டு வருவது. ★ உழுவை மீனை சமைத்து சாப்பிட்டு வருவது. ★ இஞ்சி சாற்று தெளிவுடன் தேன்கலந்து பருகி வருவது. ★ பேயன் வாழைப்பழத்தை சுத்தமான விளக்கெண்ணையில் தொட்டு சாப்பிட்டு வருவது. ★ உளுந்தமாவும் வெந்தயமும் சேர்த்து களி செய்து சாப்பிட்டு வருவது. ★ காரட்டில் சாறு எடுத்து தேன் சேர்த்து பருகி வருவது. ★ ஆட்டுமூளையை வேகவைத்து சாப்பிட்டு வருவது. ★ கொத்துமல்லி சாறெடுத்து 50 மில்லி சாற்றுடன் தேன் சேர்த்து குடித்து வருவது. ★ பச்சை பயிரை வேகவைத்து தேங்காய் துருவல் போட்டு உப்பு சேர்த்து சாப்பிடுவது. ★ தினமும் இரவு 20 கொண்டைக்கடலையை இரவு நீரில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது. ★ பருத்திகொட்டையில் பால் எடுதது காய்ச்சி கற்கண்டு சேர்த்து பருகுவது. இந்த முறைகளை எல்லாம் தங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் தொடர்ச்சியாக உண்டுவர ஆண்மை பலம் உண்டாகும், போகசக்தி கூடும்,குழந்தையின்மை நீங்கும்.

No comments: