Monday, September 3, 2018

செலவே இல்லாமல் நோய்களை குணமாக்கும் வீட்டு வைத்தியம் !!

#செலவே_இல்லாமல் #நோய்களை குணமாக்கும் வீட்டு வைத்தியம் !! செலவே இல்லாமல் நோய்களை குணமாக்கும் வீட்டு வைத்தியம் !! 🍀 பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸியில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும். 🍀 வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணமாகி விடும். 🍀 புதினா விதையை வாயில் போட்டு மென்றுகொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். 🍀 தினமும் குடிநீரைக் காய்ச்சும்போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவக் குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும். இந்த தண்ணீர் குடிக்கச் சுவையாக இருக்கும். 🍀 குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டும் நாட்களில் மட்டும், கீரையை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது. 🍀 அடிக்கடி ஏப்பம் வந்தால் வேப்பம் பு+வை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சிச்சாறுடன் கலந்து உட்கொள்ள குணமாகும். 🍀 எறும்புகள் போன்ற பல்வேறு பு+ச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்க குணமாகும். 🍀 உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் ஆகியவை குணமாகும். 🍀 வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். 🍀 எலுமிச்சை பழச்சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும். வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். 🍀 வெந்தயத்தை ஊற வைத்து நன்கு அரைத்து தலைமுடியின் வேர்களில் தடவி வைத்து நன்கு ஊறியப் பின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல் மற்றும் உடல் சு+டு தணியும். 🍀 வாய்ப்புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

No comments: