Monday, September 24, 2018

எப்போதுமே செல்வம் கொளிக்க செழிப்புடன் இருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்!

ஜோதிடத்தின் ஒன்பதாவது ராசி தனுசு, இந்த ராசியின் அதிபதி குரு பகவான். தமிழ் மாதங்களில் மார்கழி மாதத் துவக்கம் இந்த ராசியில் தான் தொடங்கும். ஆண் தன்மை நிறைந்த தனுசு ராசி, பஞ்சபூத தத்துவங்களில் நெருப்பு ராசி என கூறப்படுகிறது. அதிகாரம் அடக்குமுறை எண்ணங்கள் இந்த ராசிக்காரர்களிடம் அதிகம் நிறைந்திருக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படும் இவர்களிடம், செல்வம் ஏதாவது ஒருவகையில் கையில் இருந்து கொண்டே இருக்குமாம். உறவினர்களை அனுசரித்து செல்வதுடன், தந்தை மற்றும் குடும்பத்தினர் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பார்கள். கம்பீரமும், கனிவும் கலந்த குரல் வளம் உடையவர்கள், பூஜைகளின் மீது அதீத நம்பிக்கை உண்டு. பலருக்கும் முன் உதாரணமாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பவர்கள், இதனால் அரசியல் தொடர்பு மற்றும் கௌரவமான பதவிகள் கிடைக்கும்.

No comments: