கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Sunday, September 2, 2018
நாயுருவி மூலிகையின் மர்மம்
!!!
சத்துரு வசியம் - நாயுருவி மந்திரம்!!!
மீண்டும் ஓர் சத்துரு வசிய முறை உங்களுக்காக.
இது மிகவும் இலகுவான எளிதான முறையாகும்.
நாயுருவி எனும் மூலிகை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதை பயன்படுத்தி உடனடியாக செய்யும் ஓர் வசிய முறையே இது.
(மந்திரம் மறைக்கப்பட்டுள்ளது )
நாயுருவி செடிக்கு சாபம் நீக்கி அதன் துளிர்களை பறித்து உள்ளங் கையில் வைத்து கசக்கி அதன் சாற்றை பொட்டாக இட்டுச்செல்ல எதிராளிகள் வணங்குவார்கள
மூலிகை மர்மம் - நாயுருவி
நாயுருவி வசியம்
செந்நாயுருவி செடியை சபநிவர்த்தி செய்து சமூலமாக எடுத்து நாற்பத்தியைந்து நாள் அதன் வேரில் பல் துலக்கி வந்தால் முகம் வசிகரமாகும் பின் அனைத்து வேர்களையும் எடுத்து சுட்டு கரியாக்கி அதை திலகமாக இட்டால் வசியம் உண்டகும் !!!
மேலும் இப்படி செய்தால் உடலில் அதிக உஷ்ணம் ஆகும் அதை தவிர்க்க பசும் பால் அருந்த வேண்டும்.
காப்பி, டீ, புகை, புலால் கூடாது.இது முக்கியம்
நாயுருவி இனம்
நாயுருவி (ஆண்)
செந்நாயுருவி (பெண்)
நாயுருவியில் இரண்டு உண்டு
அதில் ஆண் நாயுருவி பச்சையாகவும்
பெண் நாயுருவி சிவப்பாகவும் இருக்கும்
இதில் பெரும்பாலும் வசியத்திற்க்கு பெண் நாயுருவி பயன்படுத்தபடுகிறது
இதை செந்நாயுருவி என்றும் கூறுவர் இதன் படங்களை மேலே கொடுத்துள்ளேன் இது தண்டுபகுதியில் சிவந்த நிறத்தில் இருக்கும்
அதை வைத்து தான் கண்டுபிடிக்க வேண்டும்
இது அட்டகர்ம மூலிகைகளில் ஒன்றாகும் பெரும்பாலும் மருத்துவத்தில் இதையே பயன்படுத்துகின்றனர் இது இல்லை என்றால் தான் அதை பயன்படுத்துகின்றனர்
நாயுருவி மருத்துவப் பயன்கள்
நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.
இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.
இதனை எரித்த சாம்பல் 5 கிராம் தேனில் காலை கொடுக்க மாத விலக்குத்தடை நீங்கும் விலக்காகும்.
இதன் சாம்பலுடன் கடுகெண்ணையும் சிறிது உப்பும் சேர்த்துப் பல் துலக்கினால் பல் பலம் பெரும் வலியிருந்தால் குறையும்.
மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்
நாயுருவி மர்மங்கள்
இதன் விதையை சோறு போல் சமைத்து உண்ண ஒரு வாரத்திற்க்கு பசி எடுக்காது !!!
தேவையானவை இதில் இருந்தே பெறப்படுகிறது.
மீண்டும் பசி எடுக்க மிளகு, சீரகம் வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்கப் பசி உண்டாகும்.
இதன் இலையை மென்று விழுங்கி சிறிது தாடையில் அடக்கி கொண்டு கண்ணாடிகளை கடித்து துப்பலாம் வாய் அறுக்காது.
குறிப்பு :-
சாறு பல்லில் அனைத்து இடங்களிலும் பட வேண்டும் தவறாக செய்து வாய் கிழிந்து விடபோகிறது.கண்ணாடிகளை விழுங்கி விட கூடாது குடல் கிழிந்து விடும்
முக்கிய குறிப்பு :-
இது அனைத்தும் ஒரு தகவல் பகிர்வு தக்க குருவின் உதவியுடன் செய்து பார்க்கவேண்டும் .
விளையாட்டாக செய்தால்
விபரீதமான முடிவு ஏற்ப்படும்
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment