கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Wednesday, January 22, 2020
சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்..
கடந்த சில வருடங்களாக நமது நாட்டில் குறிப்பாக
..40.. வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு ( Kidney failure ) அதிகம் நடைபெறுகிறது.. இதற்கு பல பெரிய வைத்தியர்களை கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை..
இங்கு முழுவதுமாய் செயலிழந்த ஒரு நோயாளியை வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒரு நோயாளியை சிறுநீரகத்தின் செயல்பாட்டை ..5% ..இருந்து 80% ..மாக இரண்டே மாதத்தில் மாற்றும் வல்லமை நம்முடைய மருத்துவத்தில் உள்ளது உணருங்கள் அவரது சிறுநீரக செயல்பாடு.. 5%..மட்டுமே செயல்பாட்டில் உள்ளது ஒரு நாளைக்கு.. 50.. மில்லி அளவுகளில் சிறுநீர் வெளியேறிக் கொண்டு இருந்தது .. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை ( Cholesterol ) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் ( statin drugs ) என்பது தனிக்கதை.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை.. பெரிடொனியல் டயாலிசிஸ்.. ( Peritoneal dialysis ).. அவரே செய்து கொண்டார்.. டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் இழந்து துரும்பாய் இளைத்து நடக்க கூட சத்து இல்லாமல்
அவர் இயற்கை வழியின் படி பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை எனக்கும் செய்யலாம் என்றும் கூறினார்..
எனக்கு மருத்துவம் செய்து
இந்த நோய்க்கான ஆய்வையும் கண்டு கொள்ளலாம் என்று இந்த இயற்கை வழியை பரிசோதிக்கச் சொன்னார்.. ஆம் உண்மையிலேயே அவரும் நமது மருத்துவத்தை ஆய்வுதான் செய்தார்
தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து குறித்து வைப்பார்.. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்தார் ..
மேலும் கீழே கொடுக்கப் பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார்.. இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீர் செயல்பாடு தினமும்.. 50 மில்லியில் இருந்து ( 5% ) சிறுநீர் வெளியேற்றத்தில் இருந்து ..600..700 .. மில்லி சிறுநீர் ( 80% ) வெளியேற்றம் என்று தனது நிலைபாட்டை
உணர்ந்து முழுவதும் குணமடைந்துள்ளார்..
இஞ்சி ஒத்தடம்..
இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன்.. எனது நண்பருக்கு சில மாதங்கள் முன் இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்..
1.. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்..
2 .. 130 .. கிராம் அளவுக்கு இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்..
3.. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்..
4.. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்து விட்டு துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்..
5.. அடுப்பை குறைந்த அளவு எரியும் நிலையில் .. 20.. அல்லது ..25 ..நிமிடங்கள் வைக்கவும்..
6.. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே ..5.. நிமிடங்கள் விடவும்..
7.. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்..
8.. பிறகு ஒரு சிறு துணியை கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும்.. அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்..
9.. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து விரித்து தொடரவும்.. இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்..
உணவு முறை..
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமான ஒன்றாகும்..
சோடியம்..
உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம்.. எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும்.. உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும்..
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...