கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Wednesday, January 29, 2020
பூஜை_அறையில்_சிலை_வழிபாடும்_____சிலை_அளவுகளும்.....
நமது வீட்டில் எத்தனையோ வகையான சுவாமி படங்களை எவ்வளவு பெரிய அளவில் வைத்து வழிபட்டாலும் அதற்கு சுலபமான வழிபாட்டைத்தான் நாம் மேற்கொள்கின்றோம். அதாவது அந்த சுவாமி படங்களுக்கு பொட்டிட்டு, விளக்கேற்றி, தீப, தூப ஆராதனை செய்து, சுத்தமான முறையில் வழிபடுவது அதற்கான சுலபமான முறையாக கருதப்படுகிறது.
ஆனால் சிலரது வீட்டில் சுவாமி சிலைகளை வைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். தெய்வங்கள் சுவாமி படங்களாக இருந்தால், ஒரு வகையான வழிபாட்டையும், அதே தெய்வங்கள் சிலை வடிவில் இருந்தால் அதற்கென்று ஒரு வழிபாட்டையும் நம் சாஸ்திரத்தில் உள்ளது........
முதலில் நம் வீட்டில் இருக்கும் சுவாமி சிலை 6 அங்குலத்திற்கு மேல் இருக்கக் கூடாது. 6 அங்குலத்திற்கு மேலே உள்ள சிலையை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அர்த்தமில்லை. 6 அங்குலத்திற்கு மேல் சுவாமி சிலைகளை வீட்டில் வைக்கலாம். ஆனால் முறைப்படி தினமும் செய்யவேண்டிய வழிபாட்டு முறையை அந்த சிலைக்கு கட்டாயம் செய்ய வேண்டும்.
அதாவது கோவிலில் பெரிய அளவிலான சுவாமி சிலையை எப்படி தினந்தோறும் பராமரிக்கிறார்களோ அதேபோல் நம் வீட்டிலும் முறையான பூஜை புனஸ்காரங்களை செய்து, அபிஷேகமும், நெய்வேதியமும் முறைப்படி செய்ய வேண்டும். நடைமுறை வாழ்க்கையில் வீட்டில் இப்படிப்பட்ட பூஜைகளை செய்வது என்பது சாத்தியமில்லை என்பதால் 6 அங்குலத்திற்கு மேல் உள்ள சிலையை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார்கள்.
6 அங்குலத்திற்கு கீழே உள்ள சிலைக்கு அபிஷேகங்களும், ஆராதனையும், நெய்வேதியம் தேவையில்லையா என்ற கேள்வி அனைவருக்கும் எழும்.
6 அங்குலத்திற்கு கீழே உள்ள சுவாமி சிலைக்கும் நிச்சயமாக அபிஷேகமும், நைய்வேதியம், தீபாராதனையும் அவசியம். ஆனால் தினந்தோறும் இதனை கடைபிடிக்க முடியாதவர்கள் வாரம் ஒரு முறையாவது இப்படிப்பட்ட வழிபாட்டினை செய்யலாம் என்று கூறுகிறது சாஸ்திரம்.
இதேபோல் நம் வீட்டில் இருக்கும் சிலையானது தங்கம், வெள்ளி, பித்தளை, தாமிரம், வெங்கலம் இவை ஐந்தும் கலந்த ஐம்பொன்னாலான சிலையாகவோ அல்லது இவைகளில் ஏதேனும் ஒரு உலகத்தில் செய்த சிலையாகவோ இருக்கலாம்.
#important.....
சில பேர் வீட்டில் கல்லினாலான சிலைகளை வைத்திருப்பார்கள். கல்லில் செய்யப்பட்ட 6 அங்குலத்திற்கு கீழே உள்ள சிலையாக இருந்தாலும் தினந்தோறும் அபிஷேகமும், நைய்வேத்தியமும், ஆராதனையும் மிகவும் அவசியம்.
அடுத்ததாக நம் வீட்டில் ஒரு தெய்வத்தின் சிலை ஒன்று என்ற எண்ணிக்கையில் தான் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது அம்மனுக்கு ஒன்று, சிவனுக்கு ஒன்று, விநாயகருக்கு ஒன்று, முருகருக்கு ஒன்று இப்படி இருக்கலாம்.
அம்மன் சிலை இரண்டு, முருகன் சிலை இரண்டு என்ற கணக்கில் வைத்துக் கொள்ள கூடாது என்று கூறுகிறது சாஸ்திரம். அப்படி வைத்திருப்பவர்களுக்கு பூஜை முறைகள் வேறுபடும்.
வீட்டில் அதைப் பின்பற்றுவது அவ்வளவு சுலபமல்ல. இதனால் வீட்டில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு சிலைகளை மட்டும் வைத்துக் கொள்வது நல்லது.
சிலருக்கு வீட்டில் நடராஜர் சிலை வைக்கலாமா என்ற சந்தேகம் இருந்து வரும். நடராஜர் சிலையையும் 6 அங்குலத்திற்கு கீழ் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். உங்களால் முடிந்தவரை 6 அங்குலத்திற்கு கீழே உள்ள சிலைகளுக்கு தினம் தோறும் அபிஷேகம் செய்ய முடியவில்லை என்றாலும் கூட, தினந்தோறும் நெய்வேதியம் வைப்பது மிகவும் சிறப்பானது.
பழவகைகளையோ அல்லது பேரீச்சம் பழத்தையோ அல்லது கற்கண்டு மட்டுமாவது நைவேத்தியமாக படைப்பது மிகவும் நல்ல முறை. நீங்கள் வீட்டில் தினம்தோறும் செய்யும் சாதத்தில் கூட சிறிதளவு நெய் விட்டு, எச்சில் படுவதற்கு முன்பு அந்த இறைவனுக்கு நெய்வேதியமாக படைக்கலாம்.
உங்களால் பூஜை புனஸ்காரங்களை முறையாக செய்ய முடியும் என்றால் மட்டும் வீட்டில் சுவாமி சிலைகளை வைத்துக்கொள்ளுங்கள். முடியாதபட்சத்தில் சுவாமி படங்களுக்கு மனதார செய்யப்படும் பூஜைகள் கூட அந்த இறைவனை போய்ச்சேரும்.
நன்றி,,,,,,பயனாக இருக்கும் என நினைக்கிறேன்....மற்றவர்களுக்கும் share செய்யுங்கள்.....சில சந்தேகம் தீர்ந்த மாதிரி இருக்கட்டும்.....
Subscribe to:
Post Comments (Atom)
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...
No comments:
Post a Comment