கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, January 27, 2020
ஆஸ்துமா_விற்கு....#எளிய_பயிற்ச்சி #முறை_வைத்தியம்.
பலருக்கும்பயன் தரும் பதிவு:
பொதுவாக மருத்துவர்கள் தான் நோயாளிகளுக்கு கற்றுத் தருவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இப்போது நீங்கள் படித்து பகிர இருப்பது. ஒரு நோயாளி மருத்துவருக்கு கற்றுத் தந்த அனுபவ உண்மை.
அதாவது மருத்துவர் ஒருவர் ஒரு பழைய ஆஸ்துமா நோயாளியை பல மாதங்களுக் குப் பிறகு சந்திக்க நேர்ந்தது. அவர் 52 வயதுடைய ஆண்.
அவர் மருத்துவம் பார்த்துக் கொண்ட காலங்களில் ஆஸ்துமா நோய் குறிகுணங் கள் ஓரளவு கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது அவர் கிட்டத்தட்ட ஆஸ்துமாவில் இருந்து பூரண குணம் கண்டிருப்பதைக் காண முடிந்தது.
அம் மருத்துவரே அவரிடம் பெரிய மருந்துகள் எதுவும் சாப்பிட்டீர்களா? என்று விசாரித்த போது..........அப்படி மருந்து எதுவும் சாப்பிடவில்லை என்றார்.
இடையில் ஒரு வயது முதிர்ந்த சாதுவை சந்திக்க நேர்ந்தது. அந்த சாதுவிடம் எனது பிரச்சனையை கூறினேன்.
அவரோ..."உனது பிரச்சனைக்கு அவசரத்து க்கு எந்த முறை மருத்துவம் ஆனாலும் எடுத்துக்கொள்.கூடவே நான் சொல்லும் ஒரு பயிற்சியை மட்டும் அன்றாடம் பழக்கப் படுத்து" என்றார்.
அந்த சாது சொன்ன பயிற்ச்சி என்ன என்பதை நாமும் பார்ப்போம்:
அன்றாடம் காலையில் குளிக்கும் போது. ..
1) அன்றாடம் தலைக்கும் சேர்த்து குளி.
2) வெந்நீர் வேண்டாம். அதிக குளிர்ச்சி இல்லாத பச்சை தண்ணீரில் குளி.
3) பொதுவாக குளிக்க ஆரம்பிக்கும் முன்பு உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் தண்ணீரில் நனைத்த பிறகு வாயில் தண்ணீர் விட்டு கொப்பளித்து உமிழ்ந்து, முகம் கழுவிய பிறகு குளிக்க துவங்க வேண்டும்
4) குளிக்கும் முன்பு வாயில் ஒரு மடக்கு தண்ணீர் விட்டு வாயை மூடிக்கொண்டு குளிக்க வேண்டும். குளித்து முடிக்கும் வரை மூடிய வாயைத் திறக்கக்கூடாது.
5) குளித்து முடித்து உடல் முழுவதும் துவட்டி ஈர உடை அவிழ்த்து வேறு உடை இடுப்பில் உடுத்திய பிறகு வாயில் உள்ள நீரை உமிழ்ந்து விட்டு ,ஒரிரு முறை தண்ணீர் விட்டு வாய் கொப்பளித்து விட்டு பின்னர் சகஜமான சுவாசத்திற்கு வரவேண்டும்.
இவ்வளவு தான் உனக்கு பயிற்சி. இதையே பழக்கமாக்கிக் கொள்.....என்றவர்.
பணம் செலவு இல்லை. இதுக்கென்று தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை.
அதாவது குளிக்கும் முழு நேரமும் வாயி னால் சுவாசிப்பதைத் தவிர்த்து மூக்கினால் மட்டுமே சுவாசிப்பதை கட்டாயமாக்கும் ஒரு பயிற்சி தான் இது.
ஆரம்பத்தில் இது கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால் பழகப்பழக எளிமையாக பழக்கப்படும்.இதைமட்டும் பழக்கப்படுத்து என்று சொன்னார் அந்த சாது.
நம்பிக்கையுடனும், வைராக்கியத்துடன் சாது கூறிய பயிற்சியைத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் மிகச் சிரமமாக இருந்தது.சில நேரங்களில் மூக்குக்குள் தண்ணீர் போய் மூச்சு விட பரிதவித்து இருக்கிறேன்.இடையி டையே வாய் நீரைத்துப்பி வாய் மூலமாக சுவாசித்து இருக்கிறேன். இருந்தாலும் சாது கூறியது பொய்யாக இருக்காது என நான் என்ன தவறு செய்கிறேன் என்று யோசித்து பார்த்தேன்.....
எனக்கு ஒரு சூட்சுமம் புரிந்தது..
அதாவது தலையில் இருந்து தண்ணீர் வடியும் போது மூச்சை உள் இழுக்கும் (பூரகம்)போது தான் மூக்குக்குள் தண்ணீர் போய் சிரமப்படுத்துகிறது. தண்ணீர் வடியும் போது சுவாசத்தை வெளியே விடுவதில் (ரேசகம்) சிரமம் ஒன்றும் இல்லை என புரிந்து கொண்டேன்.
எனவே சுவாசத்தை நன்றாக உள் இழுத்ததும் தலையில் தண்ணீர் ஊற்றினேன். தண்ணீர் வடியும் போதே சுவாசத்தை மூக்கின் வழி மெதுவாக வெளியே விட்டேன். என்ன ஒரு
ஆச்சரியம் குளிக்கும் போது மூக்கு வழி சுவாசம் எளிமையானது.
இப்படியே கடந்த ஆறு மாதமாக இந்தப் பயிற்சியை எனது அன்றாடப் பழக்கம் ஆக்கிவிட்டேன். தற்போது எனக்கு ஆஸ்துமா பிரச்சனை இல்லை என்று சொல்லி முடித்தார் அந்த பழைய ஆஸ்துமா நோயாளி.
இல்லை, இல்லை தற்போது அவர் நோயாளி இல்லை.
எனக்கு ஆச்சரியமும், ஆர்வமும் அதிக மானது, என்றார்...அவர் சொல்லியதைக் கேட்ட அம்மருத்துவர்.
எனது புரிதல்.....
நுரையீரலை அதன் இயற்கையான தொழி லான சுவாசித்தின் மூலமாகவே வலிமைப் படுத்த இது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கருதினேன்.
நானே குளிக்கும் போது இதைக்கடை பிடிக்கத் தொடங்கினேன். சிரமம் இல்லை. நுரையீரல் வலிமை பெறுவதாக உணர்கி றேன், நம்புகிறேன். இன்றைய சூழ்நிலையில் எப்பொழுதும் மூக்கின் வழியாகவே சுவாசிக்க வேண்டும் என்ற உண்மையை உணர்த்த உதவுகிறது....என்றார் மருத்துவர்.
பொதுவாக நமது உடலில் தசைகளுக்குத் தெரிந்த, செய்ய முடிந்த ஒரே தொழில் சுருங்குதல் மட்டுமே அல்லவா. சுருங்கும் அல்லது எதிர்வினை தசைகளுக்காக சுருங்காமல் நெகிழ்ந்து கொடுக்கும்.
தசைகளுக்கு தாமாகவே நீள அல்லது விரியத் தெரியாது. உடல் முழுவதும் இயங்கிக்கொண்டு இருப்பதால் தசைகள் மாறி மாறி சுருங்கிக் கொண்டே இருக்கின் றன. அதனால் வெப்பம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. ஆக குளிர்வித்தல் அவசியமாகிறது.
குளிர்ச்சியானது....... தசைகளை அதன் இயற்கை தொழிலான சுருங்கும் தொழில் சிறப்பாக நடை பெற உதவுகிறது.
சூடு ,வெப்பம் தசைகள் இயற்கை தொழிலான சுருங்கும் தன்மையைச் செய்ய விடாமல் எதிரான செயலைச் செய்விக் கிறது..ஆக குளித்தல் /குளிர்வித்தல் என்பது தசைகளை வலிமை படுத்த அவசியம் என்பது புரிகிறது.
நன்றி: முகநூல் பகுதி.
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...