Saturday, January 11, 2020

ராகு தசை ஒரு தெளிவு


ராகு இந்த கிரகமே தற்போதைய யுகத்தில் பிரதான கிரகம், ஜாதகருக்கு ராகு தசை ஆரம்பித்துவிட்டாலே என்ன ஏது என்கிற மன குழப்பம் ஆரம்பித்துவிடும், பலருக்கு தொழில், வேலை, வசதி, வாய்ப்பு, குடும்பம், ஆன்மீகம், இப்படி எல்லாவற்றிலும் மாற்றத்தை தரும் தசை ராகுவின் தசை, ராகு தசையில் திசைமாறியா ஜாதகர்களே அதிகம், ராகு தசையில் உண்மையில் என்ன நடக்கிறது என்கிற புரிதலுக்கே இந்த பதிவு..

ராகு நிழல்கிரகம் சனியை போல் செயல்புரியும், ராகு ஒருவரின் ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறரோ அந்த வீட்டின் கர்மா இந்த பிறவியில் செயல்படபோகிறது என்று அர்த்தம், ராகு தசை ஒரு ஜாதகருக்கு முன் ஜென்ம கர்ம பயனை தரும், இந்த கர்மவினை எப்படிபட்டதாக இருக்கும் என்றால், ஜாதகருக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும், ஜாதகர் தன் கர்மவினையை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கும், ராகு தசையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கும், கர்மா என்பது முன் ஜென்மத்தில் ஒருவர் புரிந்த தீய செயல் மட்டும் அல்ல நல்ல செயலும் சேர்த்தே இருக்கும், தீயவை என்றால் தீய கர்மா, நல்லவை என்றால் நல்ல கர்மா, ஆகவே ராகு தசையில் நடக்கும் நிகழ்வுகளும் உங்கள் தீய/நல்ல கர்மாவை சார்ந்தே இருக்கும், இந்த புரிதல் ஜாதகருக்கு இருந்தால் ராகு தசையை எதிர்கொள்ளும் மன பக்குவம் கிட்டும், ராகு தசையில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புரிதல் கிடைக்கும், அந்த புரிதல் ராகு தசை முடிந்து குரு தசை ஆரம்பிக்கும் பொழுதே விளங்கும், இந்த புரிதல் ஜாதகர் மீதம் உள்ள வாழ்க்கையை எப்படி எடுத்து செல்லவேண்டும் என்று வழிகாட்டும், ஆனால் உண்மை என்ன தெரியுமா, பலர் இந்த புரிதலை குரு தசையில் தவறவிட்டு விடுகிறார்கள் அதனால் தான் மனிதனின் கர்மா இந்த பிறவியுடன் முடிவதில்லை..

ராகு தசை எப்படிபட்ட பலனை தரும், ராகு தசையில் வரும் ஒவ்வொரு புக்தியும் அந்த புக்திக்குரிய கிரகங்கள் ஜாதகத்தில் என்ன நிலையில் உள்ளனவோ அதன் பலன்களையே வழங்கும், ராகு தசையில் ராகுவின் செயல்பாடு ராகு எந்த கிரகத்தின் சாரம் பெற்று உள்ளாரோ அதன் குணாதிசயத்தையே பிரதானமாக பரதிபலிப்பார், ராகு தசையில் ஒருவருக்கு நன்மை நடக்க வேண்டும் என்றால், அந்த ஜாதகத்தில் 5 ம் வீடு(பூர்வபுண்ணியம்) அல்லது சூரியன் வலு பெற்று இருக்கவேண்டும், இவை இரண்டும் வலுப்பெற்ற ஜாதகருக்கு ராகு தசையில் அசுப நிகழ்வு மிக குறைவு, இவை இரண்டில் ஒன்று வலுப்பெற்று ஒன்று வலுகுன்றி அமைந்தால் 50/50 பலன் தான், ராகு தசையில் அடுத்து நன்மை பெறுபவர் 9 ம் வீடு வலு பெற்றவர், அல்லது குரு வலு பெற்றவர், 9 ம் வீடு அல்லது குரு மட்டும் வலு என்றால் ஜாதகர் 40% நண்மைதான், இருவரும் வலு என்றால் 75% நன்மை கிடைக்கும், அடுத்து ராகு அமர்ந்த வீடு ராகுவின் மித்ரனின் வீடாகி, அதில் அவருடன் பொது சுபர் குரு ,சுக்கிரன், பௌர்ணமி சந்திரன், வலுவாக(சுபத்தன்மையில்) சேர்ந்து இருந்தால், அல்லது சுபர் பார்த்தால் ராகு தசையில் அசுப பலன் குறையும், இதுவே ராகு அமர்ந்த வீடு எதிரி வீடு அவருடன் சேர்ந்த பார்த்த கிரகம் எதிரி என்றால் ராகு தசையில் அந்த ஜாதகர் அசுப பலனைதான் அனுபவிப்பார், இதில் அமர்ந்த வீடு எதிரி வீடு, பார்த்த கிரகம் சுபர் என்றால் அசுபம் சிறிது குறையும், இதே போல் தான் அமர்ந்த வீடு மித்ரன் பார்த்த கிரகம் எதிரி எனில் அசுபம் குறையும், அடுத்து ராகு வாங்கிய சாரம் மிக முக்கியம் ஏனெனில் அவரின் தசையில் சாரநாதனின் குணத்தை தான் ராகு அதிகம் பரதிபலிப்பார், சாரநாதன் மித்ரன், சுபர் என்றால் அசுபம் குறைவு, சாரநாதன் எதிரி எனில் அசுபம் நிகழும்..

ராகு திரிகோணத்தில் அமர்ந்தால் அசுபம் குறைவு என்று சொல்வதுண்டு, இதன் காரணம் திரிகோணம் பூர்வ புண்ணியம் ஆகும், அதனால் அதில் அமர்ந்த ராகு தீமை தருவதில்லை, ஆனால் அவ்வாறு பலன் கண்டால் பொருந்தாது, ஏனெனில் பலருக்கு 5 அல்லது 9 ல் இருந்து தசை நடத்திய ராகு நற்பலனை தந்ததில்லை, திரிக்கோணத்தில் ராகு அமர்ந்து திரிகோண ஸ்தானம் எந்த அசுபரின் பார்வையும் இல்லாமல் திரிகோணாதிபதி வலு பெற்றால் தான் திரிகோணத்தில் அமர்ந்த ராகு சுப பலனை தருவார், ராகு கேந்திரத்தில் இருந்தால் தோஷம் குறைவு என்று சொல்வதுண்டு, இதுவும் ஆராயவேண்டும் ஏனெனில் அசுபர் கேந்திரத்தில் நின்றால் நன்மை என்றாலும், கேந்திர ஸ்தானம் என்பது 4, 7 ,10 ஆகும் இதில் ராகு அமரும் போது அதீத ஆசையை தூண்டுவார் அல்லது எதிர்மறையாக வேலைசெய்வார், ஏன் என்றால் கேந்திரம் ஆசை மற்றும் பற்று அதிகம் உள்ள இடங்கள் ஆகும், இங்கே அமரும் ராகு மேலும் இந்த காரகங்களை அதிகரிப்பார், அதனால் தான் 10 ல் ராகு இருப்பவர் ஒரே வேலை/தொழிலில் இருப்பதில்லை, அல்லது பல வேலை தொழில் தெரிந்தும் அதை செயல்படுத்த முடியாமல் தவிப்பார்கள், ராகு 3,6,8,12 ல் இருப்பது அசுபம் குறைவு, ஆனால் 3,6,8,12 ம் அதிபதிகள் ஜாதகத்தில் வலுபெற்று இருக்கக்கூடாது அப்படி வலுபெற்றால் அசுபம் நிகழும், அதே போல் மறைவு ஸ்தானங்களில் அமர்ந்த ராகுவை சனி மற்றும் லக்ன அசுபர்கள் பார்வை செய்ய கூடாது அப்படி பார்வை செய்தால் அசுபம் நிகழும், அதுவே மறைவில் அமர்ந்த ராகுவை பொது சுபர் அல்லது லக்ன சுபர் பார்வை செய்தால் அசுபம் குறையும், 2,11 ல் அமரும் ராகு மித்ரன் வீட்டில் சுபர் பார்வை அல்லது சேர்க்கை பெற்றால் மட்டுமே சுப பலனை தரும், ஒருவேளை அசுபர் சேர்க்கை எதிரி வீடு, பார்வை என்றால் அசுப பலனை தான் தரும், ராகு சனியுடன் சேர்ந்து ஒரு பாவத்தில் அமர்வது ஜாதகர் அந்த பாவத்தில் அதிக கர்மாவை சேர்த்துள்ளார் என்று அர்த்தம், அதே போல் ராகு சனியில் பார்வையில் இருந்தாலும் கர்மா அதிகம் என்றே அர்த்தம்கொள்ள வேண்டும், இதன் பலன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் நிலையை வைத்தே கணிக்க வேண்டும்...

குறிப்பு:

ராகு தன்னுடன் இணைந்த சுபரின் முழு சுபத்தையும் ஈர்த்துக்கொள்வார், ஆகவே அந்த சுபர் அசுபாராக தன் தசையில் பலன் தருவார், சந்திரன் சுக்கிரன் இவர்கள் இருவருடனும் ராகு பார்வை மற்றும் சேர்க்கை பெற்றால் அவர்கள் சுபராக இருந்தால், பெண் மோகம் அல்லது தவறான எண்ணங்கள் இருந்தாலும் அதை அந்த ஜாதகர் தவறான விதத்தில் அனுபவிக்காத வண்ணம் தன்தசையில் ஜாதகரை காப்பார், அதுவே சந்திரன்,சுக்கிரன் அசுபர் அல்லது வலு இல்லாமல்/ நீச்சம் பெற்று என்றால், ஜாதகர் அந்த மோகத்தால் அவமானம், நோய் அல்லது இறப்பு என்கிற வகையில் பலனை அனுபவிப்பார்..

இவை எல்லாவற்றையும் விட ராகு தசையில் யோகம் பெரும் ஜாதகர், பெரும்பாலும் ராகு தசை வரை மிக கஷ்ட நிலையில் இருந்தவராக இருப்பார், ஏனெனில் ராகு சனியின் வேலை ஆள், மேலும் ராகு குருட்டு அதிர்ஷ்ட்டம் தருபவர், ஒரு ஜாதகர் தன் கர்மாவை கஷ்டப்பட்டு கழித்துவிட்டால் அதன் பின்பு வரும் ராகு தசையில், அந்த ஜாதகரை தகுதியே இல்லாத இடத்திற்க்கு ராகு தூக்கி விடுவார், இது சனி கொடுக்கும் யோகம் அது ராகுவின் மூலம் கிடைக்கபெறுகிறார் அவ்வளவே, ஆனால் இப்படி ராகு தூக்கி விடும் போது மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும், இல்லையேல் அடுத்து வரும் குரு தசையில் என்னதான் பூர்வஜென்ம கர்மா கழிந்து இருந்தாலும் குரு நன்றாக பாடம் நடத்துவார்..

பல சுகவாசிகள் ராகு தசையில் மேலும் சுப பலன் பெறுகிறார்களே எப்படி என்று கேள்வி எல்லோருக்கும் வரும், பதில் அவர்கள் கர்ம பலனை ராகு வேறு வழியில் வசூலித்திருப்பார், பல பெரிய மனிதர்களின் வீடுகளில் இதை காணலாம், அவர்கள் வெளிஉலகில் தான் பெரிய மனிதர்கள், உள்ளுக்குள் குடும்ப பிரச்சனை, மகன் மகள் அகால மரணம், மகன் மாகளால் அவமானம், வேலை தொழிலில் எதிரிகள் அவர்களால் உயிருக்கு ஆபத்து, கொடிய நோய் அல்லது தீர்க்க முடியாத நோய், மனைவி கணவன் விவாகரத்து அல்லது மனம் முறிவு, இப்படி பல்வேறு வகையில் அவர்களின் கர்மாவை வசூலித்தே ராகு தன் தசையில் அவர்களை சுகமாக வழவைப்பார்..