கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, January 31, 2020
கடவுளுக்கு வாழைப்பழம் வைத்து படைப்பது ஏன்?
♥முக்கனிகளான மா, பலா, வாழை இவற்றில் வாழைக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு.
♥ மா, பலா என்று இல்லை, இயற்கையாக விளைந்த எல்லா வகையான பழங்களிலுமே கொட்டை இருக்கும். அப்படி கொட்டை இல்லாத பழம் உண்டென்றால் அது மரபணு மாற்றப்பட்டதாகத்தான் இருக்கும்.
♥ஆனால், இயற்கையாக விளையும் பழமான வாழைப்பழத்தில் கொட்டை என்பதே இல்லை. மாறாக அதில் சிறு கருப்பு விதைகள்தான் இருக்கும்.
♥ எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் பூஜையில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் வைத்து படைக்கிறார்கள்.
♥ மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.
♥ இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டுதலை முன்னிறுத்தி நாம் கடவுளுக்கு வாழைப்பழத்தை படைக்கிறோம்.
♥ அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.
♥ அது மட்டுமல்ல தேங்காய் மற்றும் வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.
♥ மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.
♥அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.
♥ இதனால் தான் கடவுளை வணங்கும்போது வாழைப்பழத்தை வைத்து வணங்குகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment