கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Wednesday, April 17, 2019
ஆடிய பற்கள் கூட ஈறு பலம்பெற்று நின்று விடும் இந்த பழங்கால கைவைத்தியம் தெரியுமா?
பற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்கத்தான் வேண்டுமா அல்லது அவை விழும் வரை காத்திருக்கனுமா?தேவையில்லை. உங்கள் ஈறுகளை வலுவாக்கினால் ஆடும் பல்லைக் கூட நிறுத்த முடியும்.அனுபவப் பூர்வமாக சிலரருக்கு நடந்துள்ளதால் உங்களுக்காக இந்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
பல் ஆடுவதற்கு என்ன காரணம் ?
உங்கள் பல் ஆடுவதற்கு பலவீனமான ஈறு மற்றும் பற்கள் காரணம். மோசமான பராமரிப்பு மிக முக்கிய காரணம். பற்சொத்தை ஏற்படுவதாலும் பற்கள் ஆடத் தொடங்கும்.எனவே ஆடும் சமயத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் மீது கவனம் செலுத்தினால் பற்கள் ஆடாமல் மேலும் வலுவாக்க முடியும். அப்படியான குறிப்புகளை பார்க்கலாம்.
ஆடும் பற்களை காக்கும் நமது பழங்கால அதிசய மூலிகைகள்
கருவேலப்பட்டை
கருவேலங்குச்சிகள் கிராமத்தில் கிடைக்கும். கருவேல மரத்தின் சிறு இளங்குச்சியை முறித்து அதனைக் கொண்டு பல் துலக்கலாம். இது, ஈறுகளில் உண்டாகும் ரத்தக்கசிவைப் போக்கக்கூடியது. பற்களை பலப்படுத்தும்.
வேப்பங்குச்சி
இன்றும் கிராமங்களில் வேப்பங்குச்சியால் பற்களை விலக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் பற்கள் உறுதியாகின்றன.அதற்குக் காரணம், வேப்பங்குச்சியில் எண்ணற்ற ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபயாடிக் பொருட்கள் இருப்பதுதான். வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக, பளிச்சென்று இருக்கும். துர்நாற்றம் நீங்கும்.
ஆலங்குச்சி
ஆலமரத்தின் குச்சியை உடைத்து அதனைப் பற்களில் தேய்த்துவந்தால் பற்கள் உறுதி பெறும். மேலும், ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...