கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, April 23, 2019
அதிக_செல்வத்துக்கு_நெல்லி_மரத்துக்கும் #என்ன_சம்பந்தம்...
உலகிலேயே பணக்கார கடவுள்...யார் என்று கேட்டால் திருப்பதி பெருமாள் என்றுதான் சொல்வோம். ஆனாலும் பணம் வேண்டுமென்றால் குபேரனைத்தான் வழிபடுவோம்... குபேரன் மாதிரி பணக்காரனாக வேண்டும் என்னும் ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அந்த குபேரனுக்கே பணத்தட்டுப்பாடு வந்த போது என்ன செய்தார் தெரியுமா?
போர் ஏற்பட்ட காலத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால்தம்மிடம் இருந்த செல்வம அனைத்தையும் இழந்துவிட்டான் குபேரன்.... செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தம்மிடமிருந்த சொத்துக்களை இழந்து தவித்தபோது சிவபெருமானிடம் சென்று முறையிட்டான். 'நெல்லிமரங்களை நட்டு வளர்த்துவிட்டு அது வளர்ந்ததும் என்னை வந்து பார்' என்றார்.
செல்வத்துக்கும் நெல்லிமரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்த குபேரன் சிவபெருமான் சொன்னாததால் எதுவும் பேசாமல் ஆயிரக்கணக்கான நெல்லி மரங்களை வளர்த்தான்.
நெல்லிமரங்கள் பராமரிப்பிலும் குறைவைக்க வில்லை... ஏனெனில் சிவபெருமானின் ஆணையாயிற்றே.. நாள்கள் கடந்து விட்டது...நெல்லிமரங்கள் அனைத்தும் பூ பூத்தது... காய் காய்த்தது... காய்களெல்லாம் இனித்தது... குபேரனின் வாழ்வு பழமையாக திரும்பிற்று...
சூழ்ச்சி செய்து செல்வம் பறித்த வளங்களையெல்லாம் மீண்டும் கொண்டு வந்து குபேரனிடம் கொடுத்தார்கள். இழந்த நாடுகளெல்லாம் திரும்ப கிடைத்தது. குபேரனை விட பெரிய அரசனெல்லாம் ஓடி வந்து கப்பம் கட்ட தொடங்கினார்கள். இழந்த செல்வங்களோடு மீண்டும் புதிய செல்வங்களும் பெருகியது..
குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக்கணைகள்.. எப்படி இது சாத்தியம் மீண்டும் சிவபெருமானிடம் சென்றார்... 'நெல்லிமரங்கள் வளர்ந்ததா.. இழந்த செல்வம் கிடைத்ததா?' என்றார் சிவப்பெருமான். 'நெல்லிமரம் வளர வளர செல்வம் கிடைத்த காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லையே' என்றார் குபேரனும் விடாமல்.. 'நீ வைத்தது நெல்லிமரங்கள் அல்ல லட்சுமி தேவிகள்.. உரிய முறையில் அவற்றுக்கு நீரூற்றினாய் அதனால் நீ செய்த பாவங்களைத் தொலைந்து லட்சுமி தேவியின் அருளை பெற்றாய்'... என்ற சிவபெருமான் நெல்லிமரம் பூலோகத்தில் உருவான கதையை சொல்லலானார்.
தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லி மரம்... அதனால் தான் இது தெய்விக மரம் என்று சொல்கிறார்கள் என்றார்...
லட்சுமி சொரூபமான நெல்லி மரத்தை வளர்த்து லட்சுமி கடாட்சத்தைப் பெற்று மகிழுங்கள்...
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...