கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, April 30, 2019
சிறுநீரக_செயல்யிலப்புக்கு #டயாலிஸ்_நிரந்தர_தீர்வு #ஆகுமா……❓❓❓❗❗❗
உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு.
எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை.
❓சிறுநீரகத்தின் பணிகள்:
❗நெப்ரான்:
இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை
பிரித் தெடுக்கிறது.
சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன.
மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.
சிறுநீரகம் சீராக செயல்படவில்லையென்றால் இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும்.
தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும்.
#மேலும்………
இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் 25 சதவீதம் வரை சிறுநீரகம் பெறுகிறது.
அதிலிருந்து உடலுக்குத் தேவையான……
குளுக்கோஸ்,
அமினோ அமிலம்,
வைட்டமின்கள்,
ஹார்மோன்கள்
போன்றவற்றைத் தேக்கிவைத்துக்கொண்டு தேவையற்ற……
யூரியா,
குளோரைடு
போன்ற கழிவுப்பொருள்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியைச் சிறுநீரகம் செய்கிறது.
★அதேவேளையில்………
சோடியம்,
பொட்டாசியம்
போன்ற தாதுக்கள் அதிகரித்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது.
உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்கிறது.
'ரெனின்' எனும் ஹார்மோனைச் சுரந்து ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக்கொள்கிறது.
ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவைப்படுகின்ற 'எரித்ரோபாய்ட்டின்' எனும் ஹார்மோனைச் சுரக்கிறது.
'வைட்டமின் டி' யைப் பதப்படுத்தி 'கால்சிட்ரியால்'எனும் ஹார்மோனாக மாற்றித் தருகிறது.
இது எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. உணவுச் சத்துகளின் வளர்சிதை மாற்றப் பணிகளுக்கு உதவுகிறது. உடலில் உற்பத்தியாகின்ற நச்சுப்பொருள்களையும் வெளியேற்றுகிறது.
நாம் சாப்பிடுகின்ற மருந்து, மாத்திரைகளில் நச்சுகள் இருந்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது.
நாம் சில மாத்திரைகளைச் சாப்பிட்டதும் சிறுநீர் மஞ்சளாகப் போவது இதனால்தான்.
தினமும் இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து 150 ,180 லிட்டர் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது.
நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது.
♦சிறுநீரகப் பாதிப்பு இரண்டு வகைப்படும்:
1. உடனடி பாதிப்பு
2. நாட்பட்ட பாதிப்பு.
♦என்ன பரிசோதனைகள்?
ரத்த யூரியா அளவு.
ரத்த யூரியா நைட்ரஜன் அளவு.
ரத்த கிரியேட்டினின் அளவு.
சோடியம்,
பொட்டாசியம்,
கால்சியம் அளவுகள்.
♦பரிசோதனை முடிவுகள்:
ரத்த யூரியா அளவு, 20 - 40 மில்லி கிராம்/டெ.சி. லிட்டர் என்று இருக்க வேண்டும்.
இதற்கு மேல் யூரியா அளவு அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
ரத்த யூரியா நைட்ரஜன் சரியான அளவு 7 - 20 மி.கி/.டெ.சி. லிட்டர்.
★ரத்தக் கிரியேட்டினின் அளவு
ஆண்களுக்கு 0.7 - 1.4 மி.கி/.டெ.சி. லிட்டர்,
பெண்களுக்கு 0.6 - 1.3 மி.கி./டெ.லி.,
குழந்தைகளுக்கு 0.5 - 1.2 மி.கி./டெ.லி.,
என்று இருக்க வேண்டும். இதற்கு மேல் அளவுகள் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்
பட்டுள்ளதாகக் கொள்ள
வேண்டும்.
ரத்த யூரியா அளவும் ரத்த யூரியா கிரியேட்டினின் அளவும் பல மடங்கு அதிகம் என்றால், அது உடனடி சிறுநீரகப் பாதிப்பைக் குறிக்கும்.
★சோடியத்தின் அளவு 135 - 142 மில்லிமோல்/லிட்டர்,
★பொட்டாசியத்தின் அளவு 3.5 - 5 மில்லிமோல்/லிட்டர்,
★கால்சியத்தின் அளவு 9 - 11 மி.கி./டெ.லி.
என்று இருக்க வேண்டும்.
♦சிறுநீரகம் பாதிப்படைவது எப்படி?
★கட்டுப்படாத சர்க்கரை நோய்,
★கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம்,
#மற்றும் அதற்க்காக ஆங்கில மருந்து எடுத்தல்…
புகைபிடித்தல்,
மது அருந்துதல்,
சிறுநீரகத் தொற்றுகள்,
சிறுநீரகக் கற்கள்,
உடற்பருமன்,
காசநோய்,
வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு,
உணவு நச்சுகள்,
புராஸ்டேட் வீக்கம்,
புற்றுநோய்
போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.
இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் பிரச்னைகள் குறையும். தவறினால் நாளடைவில் எந்த வேலையும் செய்யமுடியாத அளவுக்குச் சிறுநீரகம் செயலிழந்து விடும்.
உடலில் சுத்தம் குறைவது மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரக் குறைவால் நோய்க்கிருமிகள் சிறுநீர்ப்பாதையைத் தொற்றும்போது
'*சிறுநீரக அழற்சி*' ஏற்பட்டு குளிர்க்காய்ச்சல் வரும்.
சிறுநீர் செல்லும்போது எரிச்சல் வலி ஏற்படும்.
சிறுநீர் கலங்கலாகப் போகும்.
❓யார் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்❓
நீரிழிவு நோயாளிகள்.
உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள்.
பரம்பரைரீதியாகச் சிறுநீரகப் பிரச்சினை உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள்.
சிறுநீரில் ரத்தம் கலந்து வரும் பிரச்சினை உள்ளவர்கள்.
சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருப்பவர்கள்.
அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறவர்கள்.
நீரிழிவு நோயாளிகள் சிறுநீரில் உப்பு அதிகம் போகிறது என்றால் சிறுநீரகத்தை கவனிக்க வேண்டும்.
பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் சிறு நீரில் உப்பு அதிகமாக வெளியேறினால் சிறுநீரகத்தை பரிசோதிக்க வேண்டும்.
கண்ணில் புரை (ரெடினோபதி) வளர்ந்தால் சிறு நீரகத்தையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
❓கவனிக்கப்படாத சிறுநீர்கர்கல் கூடா சிறுநீரக செயல்யிலப்பு செய்து விடும்.....❗❗❗
♐ சிறுநீரகக் கல் தொல்லை:
நாம் குடிக்கின்ற தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும்………
கால்சியம் பாஸ்பேட்,
ஆக்சலேட்
என்று பல தாது உப்புக்கள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும்.
சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும் போது……
சிறுநீரகம்,
சிறுநீரகக் குழாய்,
சிறுநீர்ப்பை
ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து கல் போலத் திரளும். ஒரு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும்.
இதுதான் சிறுநீரகக் கல்.
சிறுநீரில் ரத்தம் வரவே கூடாது. அப்படி வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்கலாம்.
காசநோய்,
புற்றுநோய்
போன்றவை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பாதித்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே சிறுநீரில் ரத்தம் வெளியேறினால் உடனடியாக காரணம் அறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
#என்ன_அறிகுறிகள்?
✴ சிறுநீரகம்
பாதிக்கப்பட்டால்……
சிறுநீர் பிரிவது குறையும்.
சிறுநீர் சரிவர பிரியாததால்…
மூச்சுத் திணறல்,
அதிக இருமல்,
நெஞ்சுவலி,
சளியில் இரத்தம் வருதல்,
விக்கல்,
பசியின்மை,
இரத்த வாந்தி,
நினைவிழத்தல்,
குழப்பம்,
கை நடுக்கம்,
நரம்பு தளர்ச்சி,
தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல்
வாந்தி வரும்.
தூக்கம் குறையும்.
கடுமையான சோர்வு,
உடலில் அரிப்பு,
முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் தோன்றும்
மூச்சிளைப்பு (மூச்சுவாங்கும்)
போன்ற அறிகுறிகளும் தோன்றும்.
சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கவனித்து விட்டால் நோய்க்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம்.
#டயாலிஸிஸ்..!
சிறுநீரகம் வடிகட்டியை போல செயல்பட்டு சிறுநீரகம் தொடர்ந்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
சிறுநீரகம் செயல் இழக்கும்போது ரத்தத்தில் வேதிப்பொருட்கள் சேர ஆரம்பிக்கும். இந்த வேதிப் பொருட்களை செயற்கை முறையில் இயந்திரம் மூலம் ரத்தத்திலிருந்து அகற்றுவதற்கு பெயர்தான் ‘டயாலிஸிஸ்’ இப்போது *ஹுமோ டயாலிஸிஸ்* என்ற கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரிக்கும் முறையும், *பெரிடோனியல்* டயாலிஸிஸ் என்ற வயிற்றில் இருக்கும் ஜவ்வுப் பகுதியை தண்ணீர் செலுத்தி சுத்தப்படுத்தும் முறையும் நடைமுறையில் இருக்கிறது.
சிறுநீரக செயல் இழப்புக்கு உள்ளானவர் தினசரி டயாலிஸ் செய்து கொள்வதுதான் முறையானது என்று நவீன மருத்துவம் சொல்லுகிறது. ஆனால், அதற்கு செலவு மிகவும் அதிகமாகும். வாரம் 3 தடவை டயாலிஸிஸ் உயிர் வாழத் தேவைப்படும்.
#அப்படி……
#டயாலிஸிஸ்_செய்தாலு #மரணத்தை_தள்ளி #போடலாம்_தவிர #நிறந்தர_தீர்வு_இல்லை
#மரணம்_உறுதி…!!!! ????
♦இரத்த பரிசோதனைகளில்……
Creatinine --- கிரியாட்டினின்
Urea. --- யூரியா
Uric Acid. --- யுரிக் ஆசீட்
போன்ற உப்பு சத்துகள் கூடிவிட்டால்……
சிறுநீரகப் பாதிப்பு இருப்பது உறுதி……
நவீன மருத்துவத்தின் மூலம் பழுதடைந்த கிட்னியை டயாலிசிஸ் என்ற பெயரில்
நவின கருவிகளின் மூலம்
உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்து மாற்றுவார்கள்.
டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை மரணம் உறுதி…!!!! ????
வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...
அதுவும் ஆயுள் முழுவதும்………
அப்படியே ஆயுள் முடிந்துவிடும்………
♦சிறுநீரகம் ஏன் நம் உடலுக்கு தேவை?
உங்கள் சிறுநீரகம் என்பது , இரண்டு சிறுநீரகங்களையும் சேர்த்து, உங்களின் உடலின் எடையில் 0.5% மட்டுமே..
ஆனால் சிறுநீரகங்களின் பணிஎன்பது எண்ணிலடங்காதது.
ஒரு நாளில் ஒரு நொடி கூட பணிசெய்ய சிறுநீரகம் மறப்பதில்லை.
மறந்தால் நீங்க பரலோகம்தான்.
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் 1,000,000 நெப்ரான் என்ற சிறுநீர் வடிகட்டிகள் உள்ளன.
ஒரு நெப்ரான் சுமார் 30–55 மி.மீ நீளமுள்ளது.
நெப்ரான்களின் மொத்த நீளம் 160 கி.மீ
ஒவ்வொரு நாளும் 190 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகிறது.
இதயம் துடித்து வெளியேற்றும் இரத்தத்தில் 25% சிறுநீரகத்திற்கு செல்கிறது.
உடலின் இரத்தம் முழுவதும், ஒரு மணி நேரத்திற்கு 12 தடவையில் சென்று சுற்றி வருகிறது. .
ஒவ்வொரு நாளும் சுமார் 200 லிட்டர் இரத்தத்தை சிறுநீரகம் வடிகட்டி சுத்தம் செய்கிறது.
ஒவ்வொரு சிறுநீரகமும் தான் 80% செயலிழப்பு வரை பணிசெய்யும்.
பொதுவாக சிறுநீரகம் ஒரு நாளில் சுமார் 2 லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது.
இது நடக்காவிட்டால் உடலுக்கு ஆபத்துதான்.
சிறுநீரகம் உடலிலுள்ள நச்சுப பொருட்கள் , அதிகமான உப்பு மற்றும் யூரியாவை வெளியேற்றுகிறது.
உடலின் தாது உப்புகள் மற்றும் நீரின் அளவை சமனப்படுத்துகிறது.
உடலின் செயல்பாட்டுக்கு ஒரு சிறுநீரகமே போதும்.
♦நவீன மருத்துவத்தில் மூலம்……
சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு அவர்களின் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை
*ஹீமோடயாலிசிஸ் மெஷின்* மூலம் வெளியேற்றப்படுகிறது.
#சிறுநீரகம் #செயலிழந்துவிட்டால்……
ஆங்கில மாத்திரை,
மருந்துகளின் மூலம்
சரிசெய்ய முடியாது.
சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை மெஷினுக்குள் செலுத்தினால் அது, தேவையற்ற கழிவுகளை நீக்கி நல்ல ரத்தத்தை உடலுக்குள் செலுத்தும்.
#டயாலிஸிஸ்_செய்தாலு…
மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை
மரணம் உறுதி…!!!! ????*
வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...
அதுவும் ஆயுள் முழுவதும்..
அப்படியே ஆயுள் முடிந்துவிடும்………
#நாட்டு_மருந்துக்……… கடைகளில் விற்கும் பொருட்களை வைத்தே கிட்னி பிரச்னையை சரி செய்யலாம் ஆரம்ப நிலையில் மட்டும்.
வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு மிக சிறந்த மருந்து.
செலவில்லாமல் சிரமமும் இல்லாமல் கிட்னி பழுதிலிருந்து எவ்வாறு மீள்வது?…
Creatinine --- கிரியாட்டினின்
Urea. --- யூரியா
Uric Acid. --- யுரிக் ஆசீட்
உப்பு சத்து கூடிவிட்டது
கை, கால், முகம் வீக்கம்……
இரண்டே வாரத்தில் சரி செய்யும் அற்புத மருந்து..!
டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை மரணம் உறுதி…!!!! ????
வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...
அதுவும் ஆயுள் முழுவதும்..
அப்படியே ஆயுள் முடிந்துவிடும்……
#என்ன_தலை_சுத்ததுதா…?!
சரி வராம தடுக்க சில விஷயங்களை சொல்கிறேன்...?
வந்தாலும் சரி செய்ய வழி சொல்லுகிறேன்…?
நவீன காலங்களில் கிட்னி பழுதடைந்துவிட்டால் டயாலிசிஸ் என்ற பெயரில் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்து மாற்றுகிறார்கள்.
createnine level 0.6 முதல் 1.3 வரை இருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை என்றால் அதைத்தான் கிட்னி வேலை செய்யவில்லை, கிட்னி பழுதடைந்து
விட்டது என்று கூறுகிறோம்.
அது போன்ற சூழலில் கிட்னியை மாற்ற வேண்டும் என்று கூறுவார்கள். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும்.
இது நடுத்தர மக்களுக்கு பாரமாக இருக்கும்.
அதேசமயம் வலியாலும் அவதிப்பட வேண்டியிருக்கும்.
#சிறுநீரக_செயலிழப்பு #கிட்னி_பழுதடைந்தவர்கள் #குணமடைய……❓❓❓
மூக்கிரட்டைக் கீரைச் சாறு
கால் தம்ளர்
துத்தி வேர் – பத்துகிராம்
கருஞ்சீரகம் – ஒரு விரற்கடை
அனைத்தையும் சேர்த்துத் தீநீராக்கி நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளை
குடித்துவர சிறுநீரகம் செயல்பட ஆரம்பிக்கும் படிப் படியாகக் குணமாகி முழுமையான குணம் பெறலாம்.
♦♦1, மருந்து
♦சிறுநீரகம்
கட்டி,கற்கள், அதிக உப்பு
குணமாக………
நாயுருவி வேர்,
சிறுபீளை வேர்,
சாரணை வேர்,
சிறுகீரை வேர்,
சிறு நெருஞ்சில்
ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து பால் விட்டு அவித்து உலர்த்திக் கொள்ளவும்.
பின்னர் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் காலை- மாலை இருவேளையும் ஐந்து கிராம் அளவு சாப்பிட்டுவர, சிறுநீரகக் கட்டி, சிறுநீரகக் கற்கள், ரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்றவை அதிசயமாய் குணமாகும்.
♦♦ 2, மருந்து
♦மூக்கிரட்டை கீரை சமூலம் வேருடன் ........100 கிராம்
ஓமம் ...............2 தேக்கரண்டி
ஆகிய இரண்டு பொருட்களையும்
இருநூறு மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து நூறு மில்லி கசாயமாக்கி
குடித்து வர கிட்னி செயலிழப்பு குணமாகும்.
யூரியா 80அளவுக்கு இருந்தாலும்
கிரியாட்டினின் அளவு 2 மேல் இருந்தாலும்
தினமும் அல்லது அடிக்கடி அல்லது வாரம் ஒரு முறை டயாலிசிஸ் செய்பவர்கள்
தொடர்ந்து தினமும் மூன்று வேளைகள் அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வர வேண்டும்.
மற்றவர்கள்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டயாலிசிஸ் செய்பவர்கள்
தினமும் தொடர்ந்து ஒரு வேளை குடித்து வர வேண்டும்.
♦♦ 3, மருந்து
♦சங்கம்வேர் சோம்பு கசாயம்
சங்கம் வேர் பட்டை – 20 கிராம்,
அதிமதுரம் – 10 கிராம்,
சீரகம் – 5 கிராம்,
பெருஞ்சீரகம் (சோம்பு) – 5 கிராம்,
கொள்ளன் உலையில் கிடைக்கும் கிட்டம் 5 கிராம்.
கடைசி மருந்து இரும்பு சத்து உள்ளது. ரத்த விருத்தியை உண்டாக்கும். எல்லா சரக்குகளையும் இடித்து சட்டியில் இட்டு 2 லிட்டர் தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி அரை லிட்டராக சுண்டவைத்து வடிகட்டி காலை – மாலை ஒரு கோப்பை அளவு சாப்பிடவும்.
உப்பு சாப்பிடுவதை அறவே
40 நாட்களுக்கு நிறுத்தவேண்டும்.
40 நாட்கள் வறை மேற்கண்ட கஷாயம் சாப்பிடவும்.
பிறகு இந்துப்பை வறுத்து சேர்த்துக்கொள்ளலாம். இப்படி செய்து வர தங்கள் நோய் பூரண குணமடையும் பயப்படாதீர்கள்.
♦♦4,மருந்து
*நீர்முள்ளிக் குடிநீர்*
★தேவையான பொருட்கள்:
நீர்முள்ளி - 5 கிராம்
நெருஞ்சில் - 5 கிராம்
நெல்லி முள்ளி - 5 கிராம்
பரங்கிப்பட்டை - 5 கிராம்
மணத்தக்காளி வற்றல் - 5 கிராம்
சரகொன்றைப்புளி - 5 கிராம்
சோம்பு - 5 கிராம்
வெள்ளரி விதை - 5 கிராம்
சுரை கொடி - 5 கிராம்
கடுக்காய் - 5 கிராம்
தான்ரிக்காய் - 5 கிராம்
(காய்சுவதற்கு குடிநீர் - 1/2 லிட்டர்)
மேற்கூரிய மூலிகைகளை சிதைத்து 1/2 லிட்டர் நீரில் கலந்து நாலில் ஒன்றாய்க் காய்ச்சி வடித்துக்கொள்ளவும்.
★நீர்முள்ளிக் குடிநீர் மருத்துவ பலன்:
காய்சிய நீர்முள்ளி குடிநீரை காலை - மாலை என 50 மில்லி வீதம் பருகிவந்தால்……
நீர் எரிசல்,
நீர் கட்டு,
நீர் சுருக்கம்
கை, கால் வீக்கம்
சிறுநீர்கல்
சொட்டு மூத்திரம்.
கிட்னியில் நீர் தேக்கம் மற்றும்
நீர் நிற்பது.
சிறுநீர் பிரியாமை
போன்றவற்றிலிருந்து நிவாரனம் பெறலாம்.
♦♦5,மருந்து
*சிறுநீரக கோளாறுக்கு*
சிறியாநங்கை – 25 கிராம்
வெள்ளருகு – 25 கிராம்
ஆடுதின்னாபாளை – 25 கிராம்
அவுரி – 25 கிராம்
மஞ்சள் – 25 கிராம்
நீர்முள்ளி – 50 கிராம்
நெருஞ்சில் – 50 கிராம்
சாரணைவேர் – 50 கிராம்
சிறுபீளை – 50 கிராம்
ஆவாரம்பூ – 50 கிராம்
கீழாநெல்லி – 50 கிராம்
அருகம்புல் – 50 கிராம்
மூக்கிரட்டை– 50 கிராம்
ஆகியவற்றை ஒன்று கலந்து சூரணம் செய்துகொள்ளவும். மேற்படி சூரணத்தில் 2 கிராம் அளவு அதிகாலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர, சிறுநீரக வீக்கம், நீரடைப்பு, கல்லடைப்பு ஆகியன தீரும்.
*தொடர்ந்து சாப்பிட்டு வர*……
ரத்தத்தில் யூரியா,
கிரியாட்டின் சீரான நிலையில், வரும்.
சிறுநீரில் புரதம் ,
அல்புமின்
வெளியேறுவது தடுக்கப்படும்.
♦♦ப்ராஸ்டேட் வீக்கம்
( Prostate enlargement )
★நோயின் அறிகுறிகள்
மொத்த சிறுநீரும் வெளிவராமை.
வெளியேற்றும் சிறுநீரின் அளவு கொஞ்சம் உள்ளே தங்கி விடுவது.
மொத்த சிறுநீரும் வெளியாவதில்லை.
கட்டுப்பாடில்லாத சிறுநீர் கசிவு.
சிறுநீர் கழிக்க ஒரு பரபரப்பு.
கட்டுபடுத்த முடியாமல் சிறுநீர் கசிதல்.
முற்றிய நிலையில் சிறுநீர் சொட்டு சொட்டாக வரும்.
வேகம் குறையும் முக்கி வேகமாகப் போனாலும் மெல்ல ஒழுகும்.
சிறுநீர் சொட்டு சொட்டாக வலியோடும் எரிச்சலோடும் வரும்.
★தேவையானவை
சிறுநெரிஞ்சில் முள் ................ நூறுகிராம்
சிருகண்பீழை சமூலம் .................. நூறுகிராம்
சீரகம் ............... நூறு கிராம்
மூன்று பொருட்களையும் அரைத்து தூளாக்கி கலந்து சூரணமாக எடுத்துக் கொள்ளவும்.
இந்த சூரணத்தில்
ஒரு குழம்புக் கரண்டி அளவு சூரணத்தை எடுத்து
இரண்டு கோப்பை தண்ணீரில் போட்டுக்
கொதிக்க வைத்து
ஒரு கோப்பையாக சுருக்கி கசாயமாக்கி
வடிகட்டி குடித்துவர வேண்டும்.
கசக்காது
தேவைபட்டால் பனை வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்
அனைத்துப் பொருட்களும் நாட்டு மருந்துக் கடைகளில் தாராளமாக் கிடைக்கிறது.
தாராளமாகத் தண்ணீர் குடித்து வர வேண்டும்.
♦♦சிறுநீரகம் என்னும் kidney புத்துயிர் முறை
♦1.சிறுநீர் சூரணம்
★தேவையான பொருட்கள்
01.ஆட்டின் கிட்னிகள் மட்டும் 500 கிராம்.
02.பட்டை 10 கிராம்.
03. கிராம்ப 10கிராம்.
04.ஏலம் 10 கிராம்
05. இஞ்சி 25 கிராம்.
06.பூண்டு 25 கிராம்.
** செய்முறை
இவைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்னிர் ஊற்றி அடுப்பில் வைத்து கிட்னி நன்கு வேகும் வரை வேக வைத்து பின் நீர் சுண்ட நன்கு கிளரி இறக்கி வைத்து வெய்யிலில் நன்கு உலர்த்தி சூரணம் செய்யவும்
★★ தீரும் நோய்கள்
நோயாளியின் கிட்னியை பலப்படுத்தும்.
இத்துடன் பிராண சக்தி சூரணமும் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும் இந்த பிராண சக்தி சூரணம் திசுக்களை புதுப்பித்து சிறு நீரை பிரித்து கிட்னியை பழைய முறையில் இரத்தத்தில் உள்ள மாசுக்களை நல்ல முறையில் சிறு நீரில் வெளியேற்றிவிடும்
டயாலிஸிஸ் என்ற நவீன சிகிட்ச்சை இன்றி நோயாளியை குணப்படுத்திவிடலாம் பட்டை கிராம்பு ஏலம் இஞ்சி பூண்டு ஆகிய 5 சரக்குகளும் கிட்னியின் மாமிச கெடுதலை முறித்து விடும்
♦2.பிராண சக்தி சூரணம் செய்முறை
★தேவையான பொருட்கள்
01சிவகரந்தை(அல்லது)
கொட்டை கரந்தை
02. மஞ்சள் கரிசாலை
இரண்டும் சம அளவு சேர்த்து சூரணம் செய்து வைத்து கொள்ளவும்.
♦3. சிறுநீர் நன்றாக வெளியேறும் கல்டைப்புக்கு
சூரணம்
01.சுத்தி செய்த ரேவல்சின்னி 50 கிராம்.
02.சிறு நாகப்பூ 50 கிராம்.
03.சுத்தி செய்த
பரங்கிப்பட்டை 50 கிராம்
04. .ஏலம் 50 கிராம்
05.சீரகம் 50 கிராம்
06 பட்டை 50 கிராம்
07.சு.செ படிகாரம் 50 கிராம்
08.சு.செ.வெடியுப்பு 50 கிராம்
ஆகிய சரக்குகளை சூரணம் செய்து ஒன்றாக கலந்து
கொள்ளவும் இச்சூரணம் கிட்னி மூத்திரப்பை யில் உள்ள அழுக்குகள் வண்டல்கள் சிறு நீர் கொதிப்பு மற்றும் மூத்திராசய நோய்களை குணமாக்கி சிறு நீர் நன்றாக வெளியேறும் கல்டைப்பு நோய்கள் குணமாகும்.
♦♦ நோயாளிக்கு மருந்து கொடுக்கும் முறை…
01.நீர்குன்டி சூரணம்
02.மூத்திராசய சூரணம்
03.பிராணசக்தி சூரணம்
ஆக 3 ம் சேர்த்து திரிகடி அளவு காலை மாலை வெறும் வயிற்றில் தேன் அல்லது முள்ளங்கி சாறு ,வாழைதண்டு சாறு சிறுபீளை கசாயம் போன்ற அனுபானங்களில் கொடுக்க ஓரிரு மண்டலத்தில் நோயாளி குணமாவார்கள்.
டயாலிஸிஸ் முறைக்கு பதில் மேற்கண்ட மருந்தை கொடுத்து நோயாளியை பூரண குணமாக்கலாம்.
♦சிறுநீர் பிரியாமை நீங்க மஞ்சள் கை,கால், வீக்கம் நீங்க……
1. கடுகையும் மஞ்சளையும் சம அளவில் எடுத்தரைத்து தொப்பூளில் தடவ சிறுநீர் தாராளமாய் இறங்கும்.
♦2. நீர்முள்ளி – 50 கிராம்
நெருஞ்சில் – 50 கிராம்
பாதம்பிசின் – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
சதகுப்பை – 50 கிராம்
1 முதல் 5 வரை உள்ள சரக்குகளை தூளாக்கி கலந்து கொள்ளவும்.
இதில் ஒரு ஸ்பூன் வீதம் காலை – இரவு உணவுக்குப்பின் சாப்பிட சிறுநீர் தாராளமாய் இறங்கும்.
♦→#மேலும் #கடைபிடியுங்கள்
1. எப்பவுமே சிறுநீரையோ, மலத்தையோ அடக்காதீங்க
2. தாகம் எப்பவெல்லாம் எடுக்குதோ அப்பவெல்லாம் தண்ணீர் குடிங்க
3. பசிச்சா மட்டும் உணவை எடுத்துக்கோங்க.
4. உணவை உமிழ்நீரோட சேர்த்து நல்லா வாயை மூடி மென்று சாப்பிடுங்க..
5. கடைகளில் விற்கின்ற பாக்கெட் அயோடின் உப்பை பயன்படுத்தாதீங்க..
தெருவுல கடல் உப்பு கொண்டு வருவாங்க.. அதை பயன்படுத்துங்க
அல்லது இந்துப்பை வருத்து பயன்படுத்தவும் பயன்படுத்துங்க.
6. பிஸ்கட், பாக்கெட்ல அடைச்சது.. கூல்ட்ரிங்ஸ் அறவே தவிர்த்திடுங்க.
7. வசதி இருக்குன்னு கடைல போய் இனிப்பு பண்டங்கள், நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டி உள்ள எந்த பொருளையும் வாங்கி சாப்பிடாதீங்க...
8. ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ணுங்க...
9. மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள் வாங்குவதை அறவே தவிர்த்திடுங்க
10. வலி மாத்திரைகளை தவிர்த்திடுங்க...
தலைவலி காய்ச்சல் வந்தா தாங்கி பழகுங்க..
வீட்டு வைத்தியமே பாருங்க.
11. உடல் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுங்க..
12. டென்ஷன் இல்லாம, சரிவிகித உணவு எடுப்பதன் மூலமே பல்வேறு நோய்களை தவிர்க்க முடியும்.
♦♦சிறுநீரகம் சீராக இயங்க சில எளிய வழிகள்……
1. ஒரு நாளைக்கு குறைந்தது
3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. குளிர் மற்றும் கோடைகாலத்தைப் பொறுத்து அருந்தும் தண்ணீரின் அளவில் மாறுபடலாம். மிகவும் குறைவாக 1 லிட்டர் தண்ணீரோ அல்லது அதிகமாக 5 – 7 லிட்டர் தண்ணீர் குடிப்பதையோ தவிர்க்க வேண்டும்.
2. சிறுநீர் கழிக்க வேண்டிய உந்துதல் வந்தவுடனேயே, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விட வேண்டும்.
3. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளையோ அல்லது வேறு ஏதாவதொரு நோய்க்கு தொடர்ந்து மாத்திரையோ அல்லது மற்ற மருந்துகளோ எடுத்தல் கூடாது. ஏனெனில் அப்படிச் செய்வது சிறுநீரகத்தின் சீரான செயல்பாட்டினை பாதிக்கும்.
4. நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவற்றின் சரியான அளவினை பராமரிப்பது மிகவும் முக்கியம்.
5. சிறு நீரகத்தில் கல் அடைப்பு பிரச்சினை உள்ளவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
6. பெரும்பாலும் கொழுப்பு அதிகம் நிறைந்த வெண்ணெய், இறைச்சி, எண்ணெய் நிறைந்த பொருட்களை தவிர்ப்பது சிறுநீரகத்துக்கு நல்லது. மேலும் சோடியம், உப்பு, கருவாடு, ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
7. தினமும் எளிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் யோகாசனப் பயிற்சிகள் சிறுநீரகம் நன்கு இயங்க உதவும்.
8. புகைத்தல், மதுப்பழக்கம் துரித உணவுகளை தவிர்த்து இளநீர், நீர்மோர், பதநீர், நீர் ஆகாரம் மற்றும் கூழ் வகைகள் போன்ற இயற்கை உணவுகளை உணவாக எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தை பாதுகாக்கும்.
ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வதன் மூலமாக சிறுநீரக சம்பந்தமான பிரச்சினைகளை வரும் முன் காக்கலாம்....
#உணவு_முறை………❓
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
❗சிறுநீரகம்காக்க...❓
1. சர்க்கரை வியாதியிம்,
உயர் ரத்த அழுத்தம் தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களால் சர்க்கரை வியாதியைம்
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
2. உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். நாள் ஒன்றுக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே.
#உப்பு_நிறைந்த……
ஊறுகாய்,
கருவாடு,
அப்பளம்,
உப்புக் கண்டம்,
சமையல் சோடா,
வடாம்,
வத்தல்,
சிப்ஸ்,
சாஸ்,
பாப்கார்ன்,
பாலாடைக்கட்டி,
புளித்த மோர்,
சேவு,
சீவல்,
சாக்லேட்,
பிஸ்கட்,
'ரெட் மீட்' என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளையும்,
பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள்,
துரித உணவுகள்,
உடனடி உணவுகள்,
செயற்கை வண்ண உணவுகளையும்
தவிர்க்க வேண்டும்.
3. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்.
4. சிறுநீரை அடக்கி வைக்கக்கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விட வேண்டும்.
5. தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க வெளி உறுப்புகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.
6. மது அருந்தாதீர்கள்.
7. தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்.
8. புகை பிடிக்காதீர்கள்.
9. தினமும் குறைந்தது 2 முதல்
3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
★காய்கறிகள்:
பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.
★பழங்கள்:
ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணி
★எண்ணெய்:
நல்லெண்ணெய்,
ஆலிவ் எண்ணைய்
❌ தவிர்க்க வேண்டியவை ;
★காய்கறிகள்:
தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
★பழங்கள்:
வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்....
❌ எதை சாப்பிடக்கூடாது?
சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உப்பு பிஸ்கட்,
சிப்ஸ்,
கடலை,
பாப்கான்,
அப்பளம்,
வடகம்,
வற்றல்,
ஊறுகாய்,
கருவாடு,
உப்புக்கண்டம்,
முந்திரிபருப்பு,
பாதாம்,
பிஸ்தா,
கேசரி பருப்பு,
கொள்ளு,
துவரம் பருப்பு,
ஸ்ட்ராங் காபி, டீ,
சமையல் சோடா,
சோடியம் பை & கார்பனேட் உப்பு,
சீஸ், சாஸ்,
க்யூப்ஸ்
ஆகியவைகளை தவிர்க்க வேண்டும்.
கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
#குறிப்பு
♦பரிசோதனைகளில்……
Creatinine --- கிரியாட்டினின்
Urea. --- யூரியா
Uric Acid. --- யுரிக் ஆசீட்
உப்பு சத்து கூடிவிட்டால்……
நவீன கருவி (மெசின்) மூலம் டயாலிஸிஸ் செய்ய தேவையில்லை……
இயற்கையாக சரி செய்யலாம்…
நோயின் ஆரம்பநிலையிலேயே மருந்துகள் மூலம் குணப்படுத்திவிடலாம்.
இதன்மூலம் சிறுநீரகம் கெடுவதைத் தடுத்துக்கொள்ள முடியும்.
சிறுநீரக நோயாளிகளை
டயாலிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்ரமாக சரி செய்யலாம்.
டயாலிஸ் செய்து கொண்டடு இருப்பர்களுக்கு அவர்களுடைய கிட்னி சுருங்கி விடும் அதாவது சிறுநீரகம் சின்னதாக சிறுத்து விடும்.
டயாலிஸ் செய்து கொண்டடு இருப்பவர்களும் மருந்து சாப்பிட்டால் டயாலிஸ் செய்யும் எண்ணிக்கையை குறைத்து கொள்ளளாம்.
வாழ் நாளை நீட்டித்து கொள்ளளாம்.
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...