கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Saturday, April 13, 2019
பணவரவை அதிகரிக்கும் தாந்திரீக முறை:ஒரு தடவை முயற்சி செய்து பாருங்கள்…நிச்சயம் உங்கள் வாழ்க்கை மாறும் ..!
இன்றைய காலத்தில் எவ்வளவு உழைத்தாலும் செலவை சமாளிப்பது மிக கடினமாகவே இருக்கிறது. வரவை ஓரளவேனும் சேமிக்க முடிந்தால் எத்தனை நல்லம் என யோசிப்பவர்கள் இதனை முயற்சி செய்து பார்க்கலாம். திருஷ்டி சுற்றி போடுவது, வாசலில் எலுமிச்சை கட்டுவது போல் இதுவும் ஒரு நம்பிக்கை தான். குலதெய்வ வழிபாடு செய்யும் பலர் இதனை நம்பிக்கையுடன் செய்து நம்பிக்கையால் வெற்றி பெற்றும் இருகின்றனர். அந்த வகையில் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..
தேவையான பொருட்கள்: மஞ்சள் துணி , மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள். பச்சை நிற கையில் கட்டும் கயிறு,எலுமிச்சை ஒன்று. இதனை கொண்டு எப்படி செய்வதென பார்க்கலாம்.!
முதலில்மஞ்சள் துணியை விரித்து அதில் அடுப்பு கல் போல் ஒரு ரூபாய் நாணயங்களை வைக்கவும். அதன் மீது அதாவது அடுப்பில் பானை வைப்பது போல் எலுமிச்சையை வைக்கவும். இதனை மூட்டை போல் சுற்றி பச்சை கயிற்றால் கட்டி வாசலில் தொங்க விட வேண்டும். அதாவது வீட்டு வாசல் வேலை செய்யும் உங்கள் நிறுவனம் அல்லது கடையில் அடுத்தவர் பார்வை படும் படி தொங்க விட வேண்டும்.
அவ்வளவு தான். இந்த மூட்டையை கட்டும் போது உங்கள் கஷ்டங்களை மூட்டையிடம் சொல்லி காட்டுங்கள் வாசலில் கட்டும் போது ‘ஓம் குலதேவதாய நமஹ’ என மூன்று தடவை உச்சரித்துக் கொள்ளுங்கள். அதிக செலவும் இல்லை கஷ்டமும் இல்லை முயற்சி செய்து பாருங்கள் முன்னேற்றம் இருந்தால் மாதம் ஒருமுறை இந்த மூட்டையை மாத்திவிடுங்கள். பணத்தை கோயில் உண்டியலிலும் எலுமிச்சையை யாருக்கும் தொல்லை இன்றி தெரு ஓரத்திலும் போட்டு விடுங்கள்..!அப்புறம் பாருங்கள் உங்கள் பணக்கஷ்டம் எப்படி போகிறது
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...