கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, April 8, 2019
வெந்தயம்
பல நூறு ஆண்டுகளாக நம் முன்னோர்களால் மதுமேக(சர்க்கரை) நோயை கட்டுப்படுத்த பாரம்பரியமாக வெந்தயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல ஆய்வுகளின் மூலம் வெந்தயத்தில் 4 - ஹைட்ராக்சில் ஐசோலூசின் (4 - Hydroxyisoleucine) எனும் அமினோ அமிலம் நிறைந்துள்ளதாக கண்டறியப்பட்டது.
இந்த 4 - ஹைட்ராக்சில் ஐசோலூசின் (4 - Hydroxyisoleucine) கணயத்தில் உள்ள செல்களை புதுப்பித்து , இன்சுலின் சுரப்பதை மேம்படுத்துகிறது. மேலும் இது தசைகள் மற்றும் கல்லிரலில் உள்ள இன்சலின் தடுப்பை (Insulin resistance)
குறைத்து உடலின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.மேலும் இந்த 4- ஹைட்ராக்சில் ஐசோலூசின்
(4 - Hydroxyisoleucine) இரத்ததில் உள்ள கெட்ட கொழுப்பை ( LDL, TGL) குறைத்து , நல்ல கொழுப்பை (HDL) அதிகப்படுத்துகிறது.இதனால் வெந்தயம் Type ll Diabetes மற்றும் உடல் பருமனுக்கும் வரபிரசாதமாக அமைகிறது.
வெந்தயத்தை முளைகட்டி சாப்பிடும்
போது அதில் உள்ள 4-ஹைட்ராக்சில் ஐசோலூசின் (4 - Hydroxyisoleucine) 40% அதிகமாகிறது என கண்டு அறியப்பட்டுள்ளது.
முளை கட்டிய வெந்தயத்தை, மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன் எடுத்துக்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு
கட்டுப்பாட்டிற்க்குள் இருக்கும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...