""
இவருக்கு கொடும் சித்தர் என்றும் பெயர் உண்டு.
உதாரணமாக கொடிய பாஷாண வகை மருந்துகளை தயாரித்து அதை தானே சோதித்து பார்ப்பார்.
மிகக் கடுமையான கலைகளையும் விடா முயற்சியாக பயின்று வெற்றி காண்பவர்.
குருவருளே பெரிதென போற்றுபவர். இவரை பய பக்தியுடன் வணங்கி வந்தால் ஆயுளில் தோன்றும் கண்ட நோய்கள் நீங்கவும், நஞ்சு வகைகளால் தோன்றக்கூடிய கொடிய உபாதைகள் நேராமலும் பாதுகாத்து அருளுபவர் .
நாம் இணைந்து இருக்கும் குழுக்களில் தலைமை தாங்கும் ஆற்றலும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
இவரை ஆலயம் வந்து வணங்க- உகந்த நாள் "" திங்கட்கிழமை ""
""கொங்கணவர் சித்தர் போற்றிகள்""
***கொடிதான பாஷாண வகை மருந்துகளின் முதல்வரே கொங்கண சித்தரே போற்றி.
கடிதான ரசவாத வித்தைகளை எளிதாய் புரியும் கொங்கண சித்தரே போற்றி.
முடியாத வித்தை ஏதுமில்லை குருவருள் கூடின் என போதித்த கொங்கண சித்தரே போற்றி.
கொடிதான நச்சு ரோகம் அழிக்கும் செந்தூர பஸ்பம் கண்ட கொங்கண சித்தரே போற்றி **
கொங்கணவர் சித்தர் போற்றியின் பொருள் :-
மிகக் கடுமையான நஞ்சு முறிப்பு மருந்துகளை தயாரிப்பதில் வல்லவர்.
இரசவாதக் கலைகளில் சிறந்தவர். குருவை வணங்க எல்லா கலைகளும் வசப்படும் என உணர்த்தியவர்.
நச்சு வகை நோய்களை அழிக்கக்கூடிய பஸ்ப மருந்துகளை தயாரிக்கும் முறைகளை வகுத்தவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.
தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் ஆலயம் வந்து கொங்கணவரை வணங்க மேற் சொன்னவைகள் எளிதில் கைகூடும்.
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...
-
*ஆண்கள் ஜாதகத்தில் குரு எங்கு உள்ளாரோ அதுவே லக்னமாக வைத்து பலன் காண வேண்டும்.சனி கர்மாவை பத்தி சொல்லும் கிரகமாக பார்க்க வேண்டும்.. *சகோ...